Risha John
New member
- Messages
- 4
- Reaction score
- 1
- Points
- 1
அன்பர்களே.நான் ரிஷா,இது சிறுகதையில் என் முதல் முயற்சி.படித்து விட்டு நிறை குறைகளைச் சுட்டிக்காட்டவும்.
அஞ்சுவது பேதைமை
சென்னை வி.ஜே.டி கலைக் கல்லூரி
இளநிலை இறுதி ஆண்டு கணித பிரிவு
காலை 11 மணி
Convergence, in mathematics, property (exhibited by certain infinite series and functions) of approaching a limit more and more closely as an argument (variable) of the function increases or decreases or as the number of terms of the series increases.
என்று கன்வெர்ஜன்ஸ் தியரியை விளக்கிக் கொண்டிருந்தார் பேராசிரியர் பாலகிருஷ்ணன்.
ஆனால் என் கவனம் அந்த கன்வெர்ஜன்ஸ் தியரியில் இல்லை.கடினமான என் சூழலை நினைத்து கலங்கிக் கொண்டே அமர்ந்திருந்தேன் நான்.
நான் யாரென்று நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லவா?நான் தான் பூமிகா.இக்கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயில்கிறேன்.எனக்கு ஒரு சகோதரி.அவள் திருமணம் முடிந்து அயர்லாந்தில் வசிக்கிறாள்.அவளின் பேறு காலத்திற்காக என் பெற்றோர் அயர்லாந்து சென்று ஒரு மாதமாகி விட்டது.நான் இப்பொழுது மகளிர் விடுதியில் தங்கி பயில்கிறேன் என் பெற்றோர் என்னை தனியே விட விரும்பாததால்..!
விடுதியில் தங்க எனக்கு விருப்பம் இல்லை.ஆனாலும் சூழ்நிலை என்னை விடுதியில் தங்க வைத்து விட்டது.இந்த சூழ்நிலை தான் என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது. இப்பொழுதுள்ள சூழ்நிலை என்னை கொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக.
"கிர்ர்ர்ர்" என்னுடைய பையில் இருந்த மொபைல் வைப்ரேட்டியது.பேராசிரியருக்கு தெரியாமல் பையினுள் கையை விட்டு தலையைக் குனியாமல் கண்களை மட்டும் கீழே விட்டு பார்த்தேன்.
திருநாவுக்கரசிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது "மாலைக்காக தயாராக இரு" என்று..
என் கண்களுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் எரித்திருப்பேன் இந்த மெசேஜை அல்ல.இதை அனுப்பியவனை!
நீசன்!சதை வெறி பிடித்து அலையும் மிருகம்.பிணத்தை கூட விட்டு வைக்காமல் அதனோடும் கூடும் பிண்டம் அவன்!இன்னும் என்னென்னவோ சொல்லி அவனைத் திட்டத் துடிக்கிறது எனது நாவு.அதை வாய் பெட்டகத்தில் அடக்கி வைத்து அமர்ந்திருக்கிறேன்.
சற்றாய் தலையை திருப்ப என்னைப் பார்த்து கோணலாக சிரித்தான் அந்த கயவன்!ஆம் அவன் என் வகுப்பில் உடன் பயில்பவன் தான்.அவன் பயில்வது பாடத்தை அல்ல பெண்களை எப்படி வீழ்த்தி அவன் வலையில் விழ வைக்கலாம் என்பதை!
எல்லாம் நான் சென்ற பெங்களூர் டூரினால் வந்த வினை.இறுதி வருடம் என்பதால் கல்லூரி சுற்றுலா அழைத்துச் செல்ல மகிழ்வாகவே கிளம்பினேன் நானும் ஒரு வாரத்திற்கு முன்பு..
அலைபேசி வழியாய் ஆயிரம் பத்திரம் சொன்னார்கள் அன்னையும் தந்தையும்.இந்த வயதின் வழக்கம் போல் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு மகிழ்ந்து பறந்தேன் பெங்களூர் முழுவதும்.
என் சிறகை வெட்டவென்றே வேடன் அவன் எனக்கு கண்ணி வைத்ததை அறியாமல்!
பெங்களூர் சென்று வந்த அலுப்பில் முன்மதியம் நான் உறங்கி இருக்க உறக்கமே உனக்கு இனி இல்லை என்பது போல் வந்தது அந்த காணொளி.
பெங்களூர் சென்று வந்து சென்னை திரும்பிய அன்று முன்மதிய உறக்கத்தில் நான் இருக்க என் அலைப்பேசிக்கு வாட்ஸ் அப்பில் வந்தது அந்த காணொளி.
உறக்கம் கலைந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க என் உயிரை உருவி எடுத்தது அந்த காணொளி.
நான் குளிக்கும் காட்சியை எவனோ ஒரு நீசன் படம்பிடித்து எனக்கு அனுப்பி இருந்தான்.நான் குளித்து உடை மாற்றி குளியல் அறையை விட்டு வெளியேறும் வரை இருந்தது அந்த காணொளி.
நிச்சயம் இது அந்த பெங்களூர் பயணத்தில் எடுத்தது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.நாங்கள் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் தான் அது எடுக்கப்பட்டது என்பதை பார்த்தவுடன் புரிந்துக் கொள்ள இயலாத அளவு நான் ஒன்றும் பாலகி அல்லவே!
இந்த ஈனச்செயலை செய்தது யாரென்று நான் எண்ண அந்த நீசனே தன்னை யாரென்று வெளிப்படுத்தினான் அலைப்பேசி மிரட்டல் மூலம்.
"என்ன பூமிகா..உன்னோட கவர்ச்சிகரமான குளியல் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியாகி இருக்க போல.என்ன உடம்பு என்ன ஸ்ட்ரக்சரு சன்னி லியோன் ,சில்க் ஸ்மிதாலாம் உன்கிட்ட தோத்துடுவாங்க போ.ப்பாஆஆ உன் வீடியோவை பார்த்ததிலிருந்து ரெண்டு நாளா எனக்கு தூக்கத்துல கூட உன் உடம்பு தான் ஞாபகம் இருக்கு" என்று தொடங்கி அருவெருக்தக்க அத்தனை வார்த்தையையும் அலைப்பேசி வாயிலாய் சொன்னான் அந்த நீசன்.
'கடவுளே என் காதுகள் செவிடாய் மாறிவிடாதா' என்று ஆயிரம் முறையாவது அந்த பரம்பொருளிடம் மன்றாடி இருப்பேன்.
"உன் வீடியோ இப்ப என் மொபைல்ல நான் பார்க்குறதுக்கு மட்டும் பத்திரமா இருக்கு.நீ மட்டும் நான் சொல்லுறதைக் கேட்கலை நெட்ல போட்டு ஊருல இருக்க அத்தனை பேரும் கனவுலயே உன்கூட குடும்பம் நடத்துற மாதிரி செஞ்சுடுவேன்" வக்கிரமாய் சொன்னான் அந்த கேடுகெட்டவன்.
அவன் நோக்கம் என்ன என்பது அவன் சொல்லாமலே புரிந்து விட்டது.'என் சம்மதத்துடன் எனக்கு நடக்கப் போகும் பாலியல் வன்கொடுமை'.
என் மானத்திற்கு பயந்து குடும்ப கவுரவம் கெடக்கூடாது என்பதற்காக அவன் சொல்படி நடந்து அவன் உடல் இச்சையை நான் தீர்க்க வேண்டும்.இதைத் தான் அவன் சொல்லாமல் சொன்னான்.யோசிக்க இரண்டு நாள் அவகாசம் வேறு தந்தான்.எப்படியும் எனக்கு தப்பிக்க வேறு மார்க்கம் இருக்க போவதில்லை.இரண்டு நாளில் எப்படி அவனிடம் இருந்து தப்புவது என்று நான் சிந்திக்க நேரம் கொடுத்தானோ அல்லது இவனிடம் சென்று சீரழிவதற்கு உலகை விட்டே நான் செல்வது மேல் என்று என் உயிரை நானே மாய்த்துக் கொள்ள நேரம் கொடுத்தானோ..!அவன் எதற்காக வேண்டுமானாலும் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கட்டும்.ஆனால் நான் அது இரண்டையும் செய்யவில்லை இனி செய்யப் போவதுமில்லை.
என் அந்தரங்கத்தை அவன் வாயிலாய் சொல்லக் கேட்டு காணொளியாய் கண்டு உயிர்த்துடித்து வெந்து மடிந்தேன் தான்.இல்லையென்று சொல்ல மாட்டேன்.ஆனால் நான் தற்கொலை செய்யும் அளவிற்கு இதில் என் தவறு என்ன?
'இந்தா படம்பிடித்துக் கொள்' என்று அவனிடம் சொன்னேனா?இல்லை தானே!ஒரு பெண் குளிப்பதை உடைமாற்றுவதை படம்பிடித்து அவளை மிரட்டி உடல் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அந்த பிண்டமே இந்த அண்டம் தனில் வாழும் போது என்னை அறியாமல் எனக்கு நேர்ந்த துன்பத்திற்கு போய் நான் ஏன் என் உயிரை மாய்த்துக் கொள்வானேன்?
அவனின் மிரட்டலில் முதல் ஒரு மணிநேரம் நான் அழுதேன்,துடித்தேன்,பயந்தேன் தான்.ஆனால் அடுத்து என்ன என்பதை யோசிக்கத் துவங்கி விட்டேன்.
நான் ஒரு கணித மாணவி என்பதால் எனக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதையே நான் யோசிக்கத் துவங்கினேன். ஆங்கிலத்தில் இதை ப்ராப்ளம் சால்விங் என்பார்கள்.கணிதம் பயின்றவர்களின் நடத்தையில் இது இயல்பாகவே வெளிப்படும் .
பொதுவாக ஒரு கணக்கை தீர்ப்பதற்கு ஒரு வழி மட்டும் இருக்காது.மாற்று வழியும் இருக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட வழியும் இருக்கும்.அந்த ஒன்றுக்கு மேற்பட்ட வழியையே நான் தேடத்தொடங்கினேன்.
முதல் வழி காவல்துறையிடம் புகார் செய்வது.ஆனால் இது பயன்தராது.ஏனெனில் திருநாவுக்கரசின் தந்தையே இன்ஸ்பெக்டர் தான்.அவரிடமே சென்று அவர் மகனைப் பற்றி நான் புகார் தந்தால்?அவர் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும்.இல்லையேல் என் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற விசாரணை நடக்கும்.சோ திஸ் மெதட் இஸ் டஸ் நாட் சூட்டபிள்.
மீடியாவிற்கு செல்லலாம் என்றால் என்னை வைத்து அவர்களின் டி.ஆர்.பியை ஏற்றிக் கொள்வார்கள்.மேலும் என்னுடைய வீடியோவை வெளியிட்டு அவர்களின் சேனல் ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வார்கள்.சொந்த செலவில் நானே வைத்துக் கொள்ளும் சூனியம்.சோ திஸ் மெதட் ஆல்சோ ரிஜக்டட்.
இப்படி ஒவ்வொரு வழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டைகள்.என்ன செய்வது?என்று நான் யோசித்து முடிக்கவே இரண்டு நாள் ஓடிவிட்டது.
என் குடும்பம் மான,அவமானங்களுக்கு பயந்து அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்று பயந்து அடுத்தவர் கண்ணோட்டத்திலேயே வாழ்க்கையை வாழும் அக்மார்க் மிடில் கிளாஸ் குடும்பம்.என்னுடைய நிலையைச் சொன்னால் குடும்பத்துடன் சேர்ந்து விசம் தின்று சாகலாம் அல்லது நீயே செத்துவிடு என்று சொல்வார்களே ஒழிய அந்த கயவனுக்கு தண்டனை தருவது என்பது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்வதைப் போல் கடவுள் தண்டிப்பான் என்று விட்டு விடுவார்கள்.
கடவுள் அவனை எப்பொழுது வேண்டுமானாலும் தண்டிக்கட்டும்?ஆனால் இப்பொழுது அந்த சதைப்பசி மிகுந்த பிண்டத்திடமிருந்து நான் தப்பிக்க வேண்டுமே?இன்று மாலை அவன் சொல்லும் இடத்திற்கு அவனோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறான்.
முரண்டு பிடிக்காமல் வந்தால் சேதாரம் கம்மியாக இருக்குமாம்! தொடர்ந்து வரும் குறுஞ்செய்திகள் என் குருதியை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தன.
இதில் பாலகிருஷ்ணன் நடத்திய எதுவும் என் கபால ஓட்டைக் கடந்து மூளைக்குள் நுழையவில்லை.
எனக்கு இப்பொழுது தேவை சொல்யூஷன்.அதை அடைவதற்கான ஸ்டெப்ஸ்.இருக்கும் நேரம் மிகவும் சொற்பம்.கணித மாணவி என்பதை நிருபிக்க வேண்டிய இடமல்லவோ இது?
அஞ்சுவது பேதைமை
சென்னை வி.ஜே.டி கலைக் கல்லூரி
இளநிலை இறுதி ஆண்டு கணித பிரிவு
காலை 11 மணி
Convergence, in mathematics, property (exhibited by certain infinite series and functions) of approaching a limit more and more closely as an argument (variable) of the function increases or decreases or as the number of terms of the series increases.
என்று கன்வெர்ஜன்ஸ் தியரியை விளக்கிக் கொண்டிருந்தார் பேராசிரியர் பாலகிருஷ்ணன்.
ஆனால் என் கவனம் அந்த கன்வெர்ஜன்ஸ் தியரியில் இல்லை.கடினமான என் சூழலை நினைத்து கலங்கிக் கொண்டே அமர்ந்திருந்தேன் நான்.
நான் யாரென்று நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லவா?நான் தான் பூமிகா.இக்கல்லூரியில் இளநிலை இறுதி ஆண்டு பயில்கிறேன்.எனக்கு ஒரு சகோதரி.அவள் திருமணம் முடிந்து அயர்லாந்தில் வசிக்கிறாள்.அவளின் பேறு காலத்திற்காக என் பெற்றோர் அயர்லாந்து சென்று ஒரு மாதமாகி விட்டது.நான் இப்பொழுது மகளிர் விடுதியில் தங்கி பயில்கிறேன் என் பெற்றோர் என்னை தனியே விட விரும்பாததால்..!
விடுதியில் தங்க எனக்கு விருப்பம் இல்லை.ஆனாலும் சூழ்நிலை என்னை விடுதியில் தங்க வைத்து விட்டது.இந்த சூழ்நிலை தான் என் வாழ்வில் எப்படியெல்லாம் விளையாடுகிறது. இப்பொழுதுள்ள சூழ்நிலை என்னை கொன்று விழுங்கிக் கொண்டிருக்கிறது கொஞ்சம் கொஞ்சமாக.
"கிர்ர்ர்ர்" என்னுடைய பையில் இருந்த மொபைல் வைப்ரேட்டியது.பேராசிரியருக்கு தெரியாமல் பையினுள் கையை விட்டு தலையைக் குனியாமல் கண்களை மட்டும் கீழே விட்டு பார்த்தேன்.
திருநாவுக்கரசிடம் இருந்து மெசேஜ் வந்திருந்தது "மாலைக்காக தயாராக இரு" என்று..
என் கண்களுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் எரித்திருப்பேன் இந்த மெசேஜை அல்ல.இதை அனுப்பியவனை!
நீசன்!சதை வெறி பிடித்து அலையும் மிருகம்.பிணத்தை கூட விட்டு வைக்காமல் அதனோடும் கூடும் பிண்டம் அவன்!இன்னும் என்னென்னவோ சொல்லி அவனைத் திட்டத் துடிக்கிறது எனது நாவு.அதை வாய் பெட்டகத்தில் அடக்கி வைத்து அமர்ந்திருக்கிறேன்.
சற்றாய் தலையை திருப்ப என்னைப் பார்த்து கோணலாக சிரித்தான் அந்த கயவன்!ஆம் அவன் என் வகுப்பில் உடன் பயில்பவன் தான்.அவன் பயில்வது பாடத்தை அல்ல பெண்களை எப்படி வீழ்த்தி அவன் வலையில் விழ வைக்கலாம் என்பதை!
எல்லாம் நான் சென்ற பெங்களூர் டூரினால் வந்த வினை.இறுதி வருடம் என்பதால் கல்லூரி சுற்றுலா அழைத்துச் செல்ல மகிழ்வாகவே கிளம்பினேன் நானும் ஒரு வாரத்திற்கு முன்பு..
அலைபேசி வழியாய் ஆயிரம் பத்திரம் சொன்னார்கள் அன்னையும் தந்தையும்.இந்த வயதின் வழக்கம் போல் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு மகிழ்ந்து பறந்தேன் பெங்களூர் முழுவதும்.
என் சிறகை வெட்டவென்றே வேடன் அவன் எனக்கு கண்ணி வைத்ததை அறியாமல்!
பெங்களூர் சென்று வந்த அலுப்பில் முன்மதியம் நான் உறங்கி இருக்க உறக்கமே உனக்கு இனி இல்லை என்பது போல் வந்தது அந்த காணொளி.
பெங்களூர் சென்று வந்து சென்னை திரும்பிய அன்று முன்மதிய உறக்கத்தில் நான் இருக்க என் அலைப்பேசிக்கு வாட்ஸ் அப்பில் வந்தது அந்த காணொளி.
உறக்கம் கலைந்து கைப்பேசியை நோண்டிக் கொண்டிருக்க என் உயிரை உருவி எடுத்தது அந்த காணொளி.
நான் குளிக்கும் காட்சியை எவனோ ஒரு நீசன் படம்பிடித்து எனக்கு அனுப்பி இருந்தான்.நான் குளித்து உடை மாற்றி குளியல் அறையை விட்டு வெளியேறும் வரை இருந்தது அந்த காணொளி.
நிச்சயம் இது அந்த பெங்களூர் பயணத்தில் எடுத்தது என்பது எனக்கு உறுதியாகத் தெரிந்தது.நாங்கள் தங்கி இருந்த விடுதியின் குளியலறையில் தான் அது எடுக்கப்பட்டது என்பதை பார்த்தவுடன் புரிந்துக் கொள்ள இயலாத அளவு நான் ஒன்றும் பாலகி அல்லவே!
இந்த ஈனச்செயலை செய்தது யாரென்று நான் எண்ண அந்த நீசனே தன்னை யாரென்று வெளிப்படுத்தினான் அலைப்பேசி மிரட்டல் மூலம்.
"என்ன பூமிகா..உன்னோட கவர்ச்சிகரமான குளியல் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியாகி இருக்க போல.என்ன உடம்பு என்ன ஸ்ட்ரக்சரு சன்னி லியோன் ,சில்க் ஸ்மிதாலாம் உன்கிட்ட தோத்துடுவாங்க போ.ப்பாஆஆ உன் வீடியோவை பார்த்ததிலிருந்து ரெண்டு நாளா எனக்கு தூக்கத்துல கூட உன் உடம்பு தான் ஞாபகம் இருக்கு" என்று தொடங்கி அருவெருக்தக்க அத்தனை வார்த்தையையும் அலைப்பேசி வாயிலாய் சொன்னான் அந்த நீசன்.
'கடவுளே என் காதுகள் செவிடாய் மாறிவிடாதா' என்று ஆயிரம் முறையாவது அந்த பரம்பொருளிடம் மன்றாடி இருப்பேன்.
"உன் வீடியோ இப்ப என் மொபைல்ல நான் பார்க்குறதுக்கு மட்டும் பத்திரமா இருக்கு.நீ மட்டும் நான் சொல்லுறதைக் கேட்கலை நெட்ல போட்டு ஊருல இருக்க அத்தனை பேரும் கனவுலயே உன்கூட குடும்பம் நடத்துற மாதிரி செஞ்சுடுவேன்" வக்கிரமாய் சொன்னான் அந்த கேடுகெட்டவன்.
அவன் நோக்கம் என்ன என்பது அவன் சொல்லாமலே புரிந்து விட்டது.'என் சம்மதத்துடன் எனக்கு நடக்கப் போகும் பாலியல் வன்கொடுமை'.
என் மானத்திற்கு பயந்து குடும்ப கவுரவம் கெடக்கூடாது என்பதற்காக அவன் சொல்படி நடந்து அவன் உடல் இச்சையை நான் தீர்க்க வேண்டும்.இதைத் தான் அவன் சொல்லாமல் சொன்னான்.யோசிக்க இரண்டு நாள் அவகாசம் வேறு தந்தான்.எப்படியும் எனக்கு தப்பிக்க வேறு மார்க்கம் இருக்க போவதில்லை.இரண்டு நாளில் எப்படி அவனிடம் இருந்து தப்புவது என்று நான் சிந்திக்க நேரம் கொடுத்தானோ அல்லது இவனிடம் சென்று சீரழிவதற்கு உலகை விட்டே நான் செல்வது மேல் என்று என் உயிரை நானே மாய்த்துக் கொள்ள நேரம் கொடுத்தானோ..!அவன் எதற்காக வேண்டுமானாலும் எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்திருக்கட்டும்.ஆனால் நான் அது இரண்டையும் செய்யவில்லை இனி செய்யப் போவதுமில்லை.
என் அந்தரங்கத்தை அவன் வாயிலாய் சொல்லக் கேட்டு காணொளியாய் கண்டு உயிர்த்துடித்து வெந்து மடிந்தேன் தான்.இல்லையென்று சொல்ல மாட்டேன்.ஆனால் நான் தற்கொலை செய்யும் அளவிற்கு இதில் என் தவறு என்ன?
'இந்தா படம்பிடித்துக் கொள்' என்று அவனிடம் சொன்னேனா?இல்லை தானே!ஒரு பெண் குளிப்பதை உடைமாற்றுவதை படம்பிடித்து அவளை மிரட்டி உடல் இச்சையை தீர்த்துக் கொள்ளும் அந்த பிண்டமே இந்த அண்டம் தனில் வாழும் போது என்னை அறியாமல் எனக்கு நேர்ந்த துன்பத்திற்கு போய் நான் ஏன் என் உயிரை மாய்த்துக் கொள்வானேன்?
அவனின் மிரட்டலில் முதல் ஒரு மணிநேரம் நான் அழுதேன்,துடித்தேன்,பயந்தேன் தான்.ஆனால் அடுத்து என்ன என்பதை யோசிக்கத் துவங்கி விட்டேன்.
நான் ஒரு கணித மாணவி என்பதால் எனக்கு கொடுக்கப்பட்ட பிரச்சினையில் இருந்து எப்படி விடுபடுவது என்பதையே நான் யோசிக்கத் துவங்கினேன். ஆங்கிலத்தில் இதை ப்ராப்ளம் சால்விங் என்பார்கள்.கணிதம் பயின்றவர்களின் நடத்தையில் இது இயல்பாகவே வெளிப்படும் .
பொதுவாக ஒரு கணக்கை தீர்ப்பதற்கு ஒரு வழி மட்டும் இருக்காது.மாற்று வழியும் இருக்கும்.ஒன்றுக்கு மேற்பட்ட வழியும் இருக்கும்.அந்த ஒன்றுக்கு மேற்பட்ட வழியையே நான் தேடத்தொடங்கினேன்.
முதல் வழி காவல்துறையிடம் புகார் செய்வது.ஆனால் இது பயன்தராது.ஏனெனில் திருநாவுக்கரசின் தந்தையே இன்ஸ்பெக்டர் தான்.அவரிடமே சென்று அவர் மகனைப் பற்றி நான் புகார் தந்தால்?அவர் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில் எனக்கு நியாயம் கிடைக்கும்.இல்லையேல் என் மரணத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற விசாரணை நடக்கும்.சோ திஸ் மெதட் இஸ் டஸ் நாட் சூட்டபிள்.
மீடியாவிற்கு செல்லலாம் என்றால் என்னை வைத்து அவர்களின் டி.ஆர்.பியை ஏற்றிக் கொள்வார்கள்.மேலும் என்னுடைய வீடியோவை வெளியிட்டு அவர்களின் சேனல் ரேட்டிங்கை ஏற்றிக் கொள்வார்கள்.சொந்த செலவில் நானே வைத்துக் கொள்ளும் சூனியம்.சோ திஸ் மெதட் ஆல்சோ ரிஜக்டட்.
இப்படி ஒவ்வொரு வழியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டைகள்.என்ன செய்வது?என்று நான் யோசித்து முடிக்கவே இரண்டு நாள் ஓடிவிட்டது.
என் குடும்பம் மான,அவமானங்களுக்கு பயந்து அடுத்தவர் என்ன சொல்வார்களோ என்று பயந்து அடுத்தவர் கண்ணோட்டத்திலேயே வாழ்க்கையை வாழும் அக்மார்க் மிடில் கிளாஸ் குடும்பம்.என்னுடைய நிலையைச் சொன்னால் குடும்பத்துடன் சேர்ந்து விசம் தின்று சாகலாம் அல்லது நீயே செத்துவிடு என்று சொல்வார்களே ஒழிய அந்த கயவனுக்கு தண்டனை தருவது என்பது தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சம்பந்தப்பட்டவர்கள் மனதை சமாதானப்படுத்திக் கொள்வதைப் போல் கடவுள் தண்டிப்பான் என்று விட்டு விடுவார்கள்.
கடவுள் அவனை எப்பொழுது வேண்டுமானாலும் தண்டிக்கட்டும்?ஆனால் இப்பொழுது அந்த சதைப்பசி மிகுந்த பிண்டத்திடமிருந்து நான் தப்பிக்க வேண்டுமே?இன்று மாலை அவன் சொல்லும் இடத்திற்கு அவனோடு வரவேண்டும் என்று சொல்லி இருக்கிறான்.
முரண்டு பிடிக்காமல் வந்தால் சேதாரம் கம்மியாக இருக்குமாம்! தொடர்ந்து வரும் குறுஞ்செய்திகள் என் குருதியை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தன.
இதில் பாலகிருஷ்ணன் நடத்திய எதுவும் என் கபால ஓட்டைக் கடந்து மூளைக்குள் நுழையவில்லை.
எனக்கு இப்பொழுது தேவை சொல்யூஷன்.அதை அடைவதற்கான ஸ்டெப்ஸ்.இருக்கும் நேரம் மிகவும் சொற்பம்.கணித மாணவி என்பதை நிருபிக்க வேண்டிய இடமல்லவோ இது?