Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ரெளத்திரம் பழகு - மீனாக்ஷி சிவக்குமார்

Meenakshi sivakumar

Saha Writer
Messages
21
Reaction score
4
Points
3
ரெளத்திரம் பழகு


அரசியல்வாதிகளின் மீது கோபம், ஏன் வாக்குறுதியை மட்டும் வழங்குகிறார்கள் என்று......!

அரசாங்கத்தின் மீது கோபம், ஏன் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வழி செய்யாமல் இருக்கிறீர்கள் என்று........!

ஆசைகளின் மீது கோபம், ஏன் பெருகிக்கொண்டே போகிறாய் என்று..........!

ஜீவநதிகளின் மீது கோபம், ஏன் ஜீவன் அற்று போகிறாய் என்று.........!

மழையின் மீது கோபம், ஏன்
பொழிய மறுக்கிறாய் என்று..........!

மனிதர்களின் மீதும் கோபம், ஏன் மரங்களின் மரணத்திற்கு நாள்குறித்தீர்கள் என்று..........!

சமூகத்தின் மீது கோபம், ஏன் பெண்களை காட்சி பொருளாக மட்டுமே எண்ணுகிறீர்கள் என்று........!

செல்வத்தின் மீது கோபம், ஏன் ஏழைகளின் கைகளில் செல்ல மறுக்கிறாய் என்று.........!

தாய்மையின் மீது கோபம், ஏன் இடைவிடாது அன்பை தாங்கள் ஈன்ற குழந்தைகளின் மீது இரட்டிப்பாக கொடுக்கிறீர்கள் என்று.........!

தோழமையின் மீதும் கோபம், ஏன் நான் தோற்று போகும் போதெல்லாம் தோள் கொடுக்கிறீர்கள் என்று........!

எதற்கெடுத்தாலும், கோபித்துக்கொள்கிறேன் என்கிறார்கள்,

நான் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்கிறேன் என்பதை விட,

ஏட்டில் எழுதி வைத்ததால் கோபித்துக்கொள்கிறேன் எனலாம்...........!

எழுதியதை ஏற்றுக்கொண்டேன், முதலில் பழக தொடங்கினேன், பிறகு பழக்கப்பட்டேன்,

பழகியதையே பயன்படுத்தினேன், அது பலிக்கவும் செய்தது,

என் கவிதையின் சூத்திரம் பாரதி பழக்கிய ரெளத்திரம்.

-மீனாக்ஷி சிவக்குமார்
 
ரெளத்திரம் பழகு


அரசியல்வாதிகளின் மீது கோபம், ஏன் வாக்குறுதியை மட்டும் வழங்குகிறார்கள் என்று......!

அரசாங்கத்தின் மீது கோபம், ஏன் படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வழி செய்யாமல் இருக்கிறீர்கள் என்று........!

ஆசைகளின் மீது கோபம், ஏன் பெருகிக்கொண்டே போகிறாய் என்று..........!

ஜீவநதிகளின் மீது கோபம், ஏன் ஜீவன் அற்று போகிறாய் என்று.........!

மழையின் மீது கோபம், ஏன்
பொழிய மறுக்கிறாய் என்று..........!

மனிதர்களின் மீதும் கோபம், ஏன் மரங்களின் மரணத்திற்கு நாள்குறித்தீர்கள் என்று..........!

சமூகத்தின் மீது கோபம், ஏன் பெண்களை காட்சி பொருளாக மட்டுமே எண்ணுகிறீர்கள் என்று........!

செல்வத்தின் மீது கோபம், ஏன் ஏழைகளின் கைகளில் செல்ல மறுக்கிறாய் என்று.........!

தாய்மையின் மீது கோபம், ஏன் இடைவிடாது அன்பை தாங்கள் ஈன்ற குழந்தைகளின் மீது இரட்டிப்பாக கொடுக்கிறீர்கள் என்று.........!

தோழமையின் மீதும் கோபம், ஏன் நான் தோற்று போகும் போதெல்லாம் தோள் கொடுக்கிறீர்கள் என்று........!

எதற்கெடுத்தாலும், கோபித்துக்கொள்கிறேன் என்கிறார்கள்,

நான் எதற்கெடுத்தாலும் கோபித்துக்கொள்கிறேன் என்பதை விட,

ஏட்டில் எழுதி வைத்ததால் கோபித்துக்கொள்கிறேன் எனலாம்...........!

எழுதியதை ஏற்றுக்கொண்டேன், முதலில் பழக தொடங்கினேன், பிறகு பழக்கப்பட்டேன்,

பழகியதையே பயன்படுத்தினேன், அது பலிக்கவும் செய்தது,

என் கவிதையின் சூத்திரம் பாரதி பழக்கிய ரெளத்திரம்.

-மீனாக்ஷி சிவக்குமார்
👌👌👌sis
 

New Threads

Top Bottom