Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வரைமீறும் இவளின் ஆசை - Tamil novel

ஆசை - 5



சிறிது நேரம் கழித்து கண்களைத் திறந்தவனின் அருகே நதியின் ரிப்போர்ட் வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த அவளின் பெயரை வருடியவன் மெல்ல பிரித்தான். உள்ளே அவளின் வயிற்றில் இருந்த சிசுவின் அழகான சிறிய புகைப்படங்கள் இருந்தது. அதனையே உற்று பார்த்தவனின் கண்கள் மெல்லக் கலங்கியது. தனது கைபேசியை எடுத்தவன் அந்தப் படங்களை எடுத்துக்கொண்டான். அன்றைய மற்ற வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினான். நதியிடமே அதனைக் கொடுத்து அனுப்பியிருக்கலாம். ஆனால் இதன் மூலம் அவளுடன் சிறிது நேரம் செலவிட முடியும். அதனாலேயே பிறகு தருகிறேன் என்றும் கூறியிருந்தான். தங்கள் வீட்டின் முன் காரினை நிறுத்தியவன், தனது கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். பின் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு நதியின் வீட்டிற்கு சென்றான்.



இன்னும் கொஞ்சம் கொடுங்க கனகாம்மா பால் கொழுக்கட்டை ரொம்ப நல்ல இருக்குது. பாருங்க நான் ஒவ்வொரு வாய் சாப்பிடும் போதும் குட்டியும் என்ஜோய் பண்ணுது என்று கனகாவிடம் கூறியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள் நதி. அந்த நேரத்தில் வீட்டின் மணி அடிக்கவும் நதிக்கு ஊட்டிக்கொண்டிருந்தவர், யாரு வந்துருப்பாங்க என்று கதவை திறக்கச்சென்றார்.



கதவை திறந்தவுடன் அங்கு நின்றிருந்த எட்வர்டை கண்டவர், இன் முகத்துடன் உள்ளே அழைத்துச் சென்றார். அவருக்கு ஒரு சிறிய புன்னகையை வழங்கியவன் அவர் பின் சென்றான். அங்கு சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருந்தவள், எட்வர்டை கண்டதும் சரியாக அமர முயன்றாள். நதி ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேணாம், என்று கூறிவிட்டு தனது கையில் இருந்த ரிப்போர்ட்டை அவளிடம் கொடுத்தான்.



அந்நேரம் அவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த கனகாம்மா, நதியிடம் இருந்த ரிப்போர்ட்டை பார்த்துவிட்டு, நதியின் உடல் நலனை பற்றி எட்வர்டிடம் கேட்டார். எட்வர்டுக்கு சிறிது தமிழ் புரியும், சிறிது காலமாக கற்க ஆரம்பித்திருந்தான். அதுவும் நதியின் உபயம். ஒருநாள் நதியிடம் வந்து தனக்கு தமிழ் சொல்லித்தருமாறு கேட்டான்.



அவனை ஆச்சர்யமாக பார்த்தவளிடம், தமிழ் ஒரு கிளாசிக்கல் லாங்குவேஜ்னு தெரியும். இப்போ இந்தியால நடக்குற எக்ஸ்கேவஷன்ல நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. அதுனால எனக்கு தமிழ் படிக்க ஆர்வமா இருக்கு என்று கூறினான். அவனுக்குத் தெரியும் நதிக்கு தமிழ் என்றால் உயிரென்று. அவளிடம் நெருங்கவே இப்படி கூறியிருந்தான். முதலில் அவளுக்காக அவளின் மொழியை கற்க ஆரம்பித்தவன், சிறிது நாளில் அவனுக்கே மிகுந்த ஆர்வம் தோன்றிவிட்டது. தானும் நிறைய தேடி படிக்கத்தொடங்கியிருந்தான்.



கனகாம்மாவிடம் அவளுக்கு ஏதும் இல்லை, உடல் நன்றாக இருப்பதாக கூறியவன், நதியின் புறம் திரும்பினான். அவன் வருவதற்கு முன்பு தான் பால்கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால், அவள் உதடுகளின் மேல் சிறிது கோடு போல இருந்தது அது. அவளின் அருகில் டீபாய் மேல் இருந்த கிண்ணத்தையும் அப்போதுதான் பார்த்தான்.



நதியிடம் பேசியபடி, தன் கையில் இருந்த தண்ணீர் தம்ளரை அதன் அருகில் வைப்பவன் போல் சென்று, அந்த கிண்ணத்தில் இருந்த ஸ்பூனை லேசாக இடறிவிட்டான் யாரும் பார்க்காதபடி. உடனே அது அவன் மேல் கவிழ்ந்தது. அதில் இருந்த சிறிது பால் அவன் கையில் கொட்டியது. ஐயோ பார்த்து வைக்க கூடாதா உங்க கையில் எல்லாம் ஆகிடுச்சு என்று சற்று பதறினர் நதியும், கனகாம்மாவும். ஹேய் ஈசி ஈசி என்று சற்று கூறியவனின் கைகளை கழுவுவதற்காக சமையலறைக்கு போக சொன்னார் கனகா.



வேகமாக சென்றவன் தன் கடைக்கண்ணால் லேசாக பார்த்தான். யாரும் வரவில்லை என்றதும், தன் கையில் பட்டிருந்ததை அப்படியே வாய்க்கு எடுத்து சென்றான். ஒரு நொடி கண்களை மூடியவன் நினைவில் வந்தது நதியின் உதட்டின் மேல் இருந்த மெல்லிய கோடு. நினைவில் கரைந்தபடியே கையில் இருந்ததை உண்டு அந்தக் கணத்தை விரும்பி ரசித்தவன், விருப்பமே இல்லாமல் கண்களைத்திருந்தான்.



கைகளை கழுவி, வெளியே வரும்போது கனகா கொட்டியதை சுத்தப்படுத்திக்கொண்டு இருந்ததார். இருவரிடமும் விடைபெற்று அங்கிருந்து வெளியேறியவன், அழகிய முறுவல் ஒன்றை முகத்தில் தவளவிட்டபடி தன் வீட்டிற்கு சென்றான். குளித்து உடை மாற்றி தனது அறைக்கு உணவை அழைத்து உண்டவனுக்கு, இந்த உணவு சுவைக்கவே இல்லை.



தனது படுக்கையில் வந்து படுத்தவன், தனது கைபேசியை எடுத்து, இன்று எடுத்த குழந்தையின் படத்தையும், முன்னர் வைத்திருந்த நதியின் படத்தையும் இணைத்தான். குழந்தையின் படத்தையும் மிருதுவாக வருடியவன், மெல்லிய முத்தம் வைத்தான். பின்பு அந்த படத்தை பெரியதாக்கி நதியின் முகம் அந்த கைபேசியின் திரை முழுவதும் வருமாறு வைத்தவன், என்னை பைத்தியமாக்குற ஏஞ்சல். உன்கிட்ட நிறைய பேசணும். ஆனா இப்போ முடியாது, அதுக்கான காலம் சீக்கிரம் வரும். நீ என்கிட்டே வந்த அப்பறம் என்றவனின் பழுப்பு நிறக்கண்கள் பல மின்னல்களையும், இதயம் பல இடிகளையும் தோற்றுவித்தது.



அந்த உணர்வுகளுடன் தனது கைபேசியில் இருந்த ஒரு தமிழ்ப் பாடலை தேடினான். பக்கமாகத் தான் அந்த பாட்டை கேட்டிருந்தான். அதுவும் தமிழ் கற்கும் ஆவலில். பாடலை ஒலிக்கவிட்டான். தனக்கு பிடித்த வரிகள் வந்தவுடன், வார்த்தைகள் வராமல் போனாலும் அந்த வரிகள் புரிந்தவன், ஹம் செய்தபடியே உறங்கிப்போனான்.



" தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்"
 

New Threads

Top Bottom