Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
பகுதி 11
மறுநாள் காலை வழக்கம் போல் அனுபூதியிடம் அஸ்வ சாஸ்திரம் கற்றனர் சகோதரர்கள் இருவரும்.ஆதித்தன் மோகினியை மெல்ல பழக்கப்படுத்த கற்றிருந்தான்.ஓய்ந்த நேரத்தில் வண்ண பூச்சு தயாரிக்கிறேன் பேர்வழி என்று விதவிதமான வண்ணங்களை உருவாக்கி கோட்டை சுவர்களை வண்ண மயமாக்கி கொண்டிருந்தான்.தினமும் ஆதித்தன் தரும் ஒரு குவளை மது அனுபூதியின் மொத்த நம்பிக்கையையும் பெற்று தந்திருந்தது.லாயத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த தடங்கலும் சோதனையும் இன்றி சகோதரர்கள் இருவரும் புரவியில் வந்து போய் கொண்டிருந்தனர்.அன்று மாலை அரிஞ்சயன் அனுபூதிக்கான மது குவளையை வாங்கி வர கிளம்பினான்.
கிளம்பிக் கொண்டிருந்த அரிஞ்சயனின் அருகில் வந்த ஆதித்தன் “அண்ணா! இன்று நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! “என்றான்.
“ஆபத்து எதாவது நெருங்கும் என்கிறாயா? “என்ற அரிஞ்சயனின் கைகள் வாளை தடவின.
“ஆம்! ஆனால் வேறு விதமான ஆபத்து நெருங்கலாம்! “
“எந்த மாதிரியான ஆபத்து என்று யூகித்தாயா? “
“ஒரளவுக்கு யூகித்திருக்கிறேன்.நீ வாங்கி வரும் ஒரு குவளை மது தண்டநாயக்கனின் மூளையை பிறாண்டியிருக்கும்.அதில் எதாவது சதி உள்ளதோ என்று அவன் சந்தேகிக்கலாம்! “
“அதற்கான பதில் என்னிடம் உண்டு! அனுபூதி மதுவை இருப்பு வைத்தால் நேரம் கெட்ட நேரத்தில் குடித்து விட்டு மட்டையாகி விட்டால் நம் பாடம் பாதிக்கப்படும் என்பதால் தினமும் இரவில் மட்டும் ஒரு குவளை வாங்கி தருவதாக கூறுவேன்! “
“பொருத்தமான காரணம்தான்.தண்ட நாயக்கன் இதை நம்ப வாய்ப்பிருக்கிறது.ஆனாலும் சந்தேகம் தீர சோதிப்பான்! “
“எப்படி? “
“ஒரு குவளை மதுவை கூடுதலாக்கி சோதிப்பான்!”
“அப்படி செய்தால் அவனுக்கு பாடம் கற்பிப்பேன்! இதை எல்லாம் எப்படி ஊகிக்கிறாய் ஆதித்தா? “
“நான் தண்ட நாயக்கனின் மூளையிலிருந்து யோசிக்கிறேன்.அதனால் அவனை சமாளிக்க முடிகிறது! “
“சரி! நான் இதை சமாளிக்கிறேன்! “என்ற அரிஞ்சயன் மதுவிடுதியை நோக்கி நடை போட்டான்.
மதுவிடுதியின் உரிமையாளனுக்கு தண்டநாய்க்கனின் கட்டளை தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவன் அரிஞ்சயனின் வருகைக்கு காத்திருந்தான்.இரண்டு நாட்களாக அரிஞ்சயன் மதுவிடுதிக்கு வந்து போய் கொண்டிருந்ததால் உரிமையாளனுக்கு ஓரளவு பரிச்சையமாகி நட்பாகியிருந்தான்.
“வாரும் வேங்கியின் விருந்தினரே! இன்றும் வழக்கம் போல் ஒரு குவளைதானா? “
“இன்றும் அதே! “
“நிறைய வாங்கி இருப்பு வைத்தால் நடை மிச்சமாகுமே? “
“குரு நினைத்த நேரத்தில் குடித்துவிட்டு மட்டையாகி விடுவாரே! வித்தை கற்பது சிரமமாகுமே? அதனால்தான் மாலை வருகிறேன்.காற்றாட உலாவியது போலவும் இருக்கும்! “
“நல்லது! இன்று உமக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை! இரண்டு பணத்திற்கு மூன்று குவளைகள் தருகிறேன்! “
“நட்டத்திற்கு வியாபாரம் செய்ய போகிறீரா? “
“இல்லை! தண்ட நாயக்கர் நட்டத்தை ஈடு கட்டுவார்.!”
“ஓ! அவரின் உத்தரவா இது? “
“ஆம்! “
“மற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.அப்படித்தானே? “
“கண்டிப்பாக! “
நெருக்கியடித்த கூட்டத்தை பார்த்த அரிஞ்சயன் “உமது கோரிக்கை ஏற்கப்படுகிறது.இதற்காக நீர் வருந்துவீர்! “என்றான் விசம சிரிப்புடன்.
அதே நேரம் தண்டநாயக்கனின் மாளிகையில் “அவர்களை சாதாரணமாக எண்ணி விடாதே வீர சிம்மா! அபாயமானவர்கள்! “என்றான் தண்ட நாயக்கன்.எதிரே நின்றிருந்த தளபதி வீரசிம்மன் “நீங்கள் மிகையாக பயப்படுகிறீர்கள்! நான் இருக்கும்வரை அவர்களின் எண்ணம் ஈடேறாது! “
“எனக்கே இப்போது குழப்பமாக இருக்கிறது.அவர்களின் குறி குதிரையா இல்லை வேறு எதாவதா என்று.ஓவியம் கற்க போனவன் பாதை மாறி வர்ணகலவை என்று போகிறான்.இன்னொருவன் ஒரு குவளை மது வாங்கி குழப்புகிறான்.”
“அந்த குழப்பம் தீரத்தான் வழி செய்து விட்டீர்களே? “என்று வீர சிம்மன் கூறிய போது கதவு தட்டப்பட்டது.
தண்ட நாயக்கன் கதவை திறந்த போது மதுவிடுதியின் உரிமையாளன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.
“என்னாயிற்று? ஏன் இந்த அழுகை? “என்றான் தண்டநாயக்கன்.
“என் மதுபான விடுதியில் ஒரு சொட்டு மதுகூட இல்லை மந்திரியாரே! அந்த அரிஞ்சயன் தெருவில் போவோருக்கெல்லாம் இரண்டு காசுக்களை வாங்கி கொண்டு மூன்று குவளை மதுவை கொடுத்து கடையை காலி செய்து விட்டான்.!”
“அந்த சலுகையில் அவனுக்கு மட்டும்தானே தர சொன்னேன்? “
“அவன் வாங்கி அதை மற்றவர்களுக்கு விற்று விட்டான்! “
“வேறு தகவல் எதாவது? “
“அனுபூதி அளவிற்கு மீறி குடித்துவிட்டு மட்டையாகி விட கூடாது என்பதற்காகவே தினமும் ஒரு குவளை வாங்கினானாம் “
“புரிகிறது.நல்ல சமாளிப்பு! சரி நீ கிளம்பு! “
“அந்த நஷ்ட ஈடு? “
“விளக்கு வைத்த பின் நான் பணம் தர மாட்டேன்.காலையில் வா! எவ்வளவு பணம் தர வேண்டும்? “
“நூறு பொற்காசுகள்! “
“சரி! காலையில் வா! “
வியாபாரி கிளம்பிய பின் வீர சிம்மனிடம் திரும்பிய தண்டநாயக்கன் “தண்ணீரிலும் தடம் பார்த்து நடக்கக் கூடிய திறமை சாலிகள்! எனக்கு நூறு பொற்காசுகளை நஷ்டமாக்கி விட்டார்கள்! “என்றான் வெறுப்புடன்.!
“இருவரும் அபாயமானவர்கள்! “என்றான் வீர சிம்மன்.
மறுநாள் காலை வழக்கம் போல் அனுபூதியிடம் அஸ்வ சாஸ்திரம் கற்றனர் சகோதரர்கள் இருவரும்.ஆதித்தன் மோகினியை மெல்ல பழக்கப்படுத்த கற்றிருந்தான்.ஓய்ந்த நேரத்தில் வண்ண பூச்சு தயாரிக்கிறேன் பேர்வழி என்று விதவிதமான வண்ணங்களை உருவாக்கி கோட்டை சுவர்களை வண்ண மயமாக்கி கொண்டிருந்தான்.தினமும் ஆதித்தன் தரும் ஒரு குவளை மது அனுபூதியின் மொத்த நம்பிக்கையையும் பெற்று தந்திருந்தது.லாயத்தின் உள்ளேயும் வெளியேயும் எந்த தடங்கலும் சோதனையும் இன்றி சகோதரர்கள் இருவரும் புரவியில் வந்து போய் கொண்டிருந்தனர்.அன்று மாலை அரிஞ்சயன் அனுபூதிக்கான மது குவளையை வாங்கி வர கிளம்பினான்.
கிளம்பிக் கொண்டிருந்த அரிஞ்சயனின் அருகில் வந்த ஆதித்தன் “அண்ணா! இன்று நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! “என்றான்.
“ஆபத்து எதாவது நெருங்கும் என்கிறாயா? “என்ற அரிஞ்சயனின் கைகள் வாளை தடவின.
“ஆம்! ஆனால் வேறு விதமான ஆபத்து நெருங்கலாம்! “
“எந்த மாதிரியான ஆபத்து என்று யூகித்தாயா? “
“ஒரளவுக்கு யூகித்திருக்கிறேன்.நீ வாங்கி வரும் ஒரு குவளை மது தண்டநாயக்கனின் மூளையை பிறாண்டியிருக்கும்.அதில் எதாவது சதி உள்ளதோ என்று அவன் சந்தேகிக்கலாம்! “
“அதற்கான பதில் என்னிடம் உண்டு! அனுபூதி மதுவை இருப்பு வைத்தால் நேரம் கெட்ட நேரத்தில் குடித்து விட்டு மட்டையாகி விட்டால் நம் பாடம் பாதிக்கப்படும் என்பதால் தினமும் இரவில் மட்டும் ஒரு குவளை வாங்கி தருவதாக கூறுவேன்! “
“பொருத்தமான காரணம்தான்.தண்ட நாயக்கன் இதை நம்ப வாய்ப்பிருக்கிறது.ஆனாலும் சந்தேகம் தீர சோதிப்பான்! “
“எப்படி? “
“ஒரு குவளை மதுவை கூடுதலாக்கி சோதிப்பான்!”
“அப்படி செய்தால் அவனுக்கு பாடம் கற்பிப்பேன்! இதை எல்லாம் எப்படி ஊகிக்கிறாய் ஆதித்தா? “
“நான் தண்ட நாயக்கனின் மூளையிலிருந்து யோசிக்கிறேன்.அதனால் அவனை சமாளிக்க முடிகிறது! “
“சரி! நான் இதை சமாளிக்கிறேன்! “என்ற அரிஞ்சயன் மதுவிடுதியை நோக்கி நடை போட்டான்.
மதுவிடுதியின் உரிமையாளனுக்கு தண்டநாய்க்கனின் கட்டளை தெரிவிக்கப்பட்டிருந்ததால் அவன் அரிஞ்சயனின் வருகைக்கு காத்திருந்தான்.இரண்டு நாட்களாக அரிஞ்சயன் மதுவிடுதிக்கு வந்து போய் கொண்டிருந்ததால் உரிமையாளனுக்கு ஓரளவு பரிச்சையமாகி நட்பாகியிருந்தான்.
“வாரும் வேங்கியின் விருந்தினரே! இன்றும் வழக்கம் போல் ஒரு குவளைதானா? “
“இன்றும் அதே! “
“நிறைய வாங்கி இருப்பு வைத்தால் நடை மிச்சமாகுமே? “
“குரு நினைத்த நேரத்தில் குடித்துவிட்டு மட்டையாகி விடுவாரே! வித்தை கற்பது சிரமமாகுமே? அதனால்தான் மாலை வருகிறேன்.காற்றாட உலாவியது போலவும் இருக்கும்! “
“நல்லது! இன்று உமக்கு மட்டும் ஒரு சிறப்பு சலுகை! இரண்டு பணத்திற்கு மூன்று குவளைகள் தருகிறேன்! “
“நட்டத்திற்கு வியாபாரம் செய்ய போகிறீரா? “
“இல்லை! தண்ட நாயக்கர் நட்டத்தை ஈடு கட்டுவார்.!”
“ஓ! அவரின் உத்தரவா இது? “
“ஆம்! “
“மற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது.அப்படித்தானே? “
“கண்டிப்பாக! “
நெருக்கியடித்த கூட்டத்தை பார்த்த அரிஞ்சயன் “உமது கோரிக்கை ஏற்கப்படுகிறது.இதற்காக நீர் வருந்துவீர்! “என்றான் விசம சிரிப்புடன்.
அதே நேரம் தண்டநாயக்கனின் மாளிகையில் “அவர்களை சாதாரணமாக எண்ணி விடாதே வீர சிம்மா! அபாயமானவர்கள்! “என்றான் தண்ட நாயக்கன்.எதிரே நின்றிருந்த தளபதி வீரசிம்மன் “நீங்கள் மிகையாக பயப்படுகிறீர்கள்! நான் இருக்கும்வரை அவர்களின் எண்ணம் ஈடேறாது! “
“எனக்கே இப்போது குழப்பமாக இருக்கிறது.அவர்களின் குறி குதிரையா இல்லை வேறு எதாவதா என்று.ஓவியம் கற்க போனவன் பாதை மாறி வர்ணகலவை என்று போகிறான்.இன்னொருவன் ஒரு குவளை மது வாங்கி குழப்புகிறான்.”
“அந்த குழப்பம் தீரத்தான் வழி செய்து விட்டீர்களே? “என்று வீர சிம்மன் கூறிய போது கதவு தட்டப்பட்டது.
தண்ட நாயக்கன் கதவை திறந்த போது மதுவிடுதியின் உரிமையாளன் கண்ணீரோடு நின்று கொண்டிருந்தான்.
“என்னாயிற்று? ஏன் இந்த அழுகை? “என்றான் தண்டநாயக்கன்.
“என் மதுபான விடுதியில் ஒரு சொட்டு மதுகூட இல்லை மந்திரியாரே! அந்த அரிஞ்சயன் தெருவில் போவோருக்கெல்லாம் இரண்டு காசுக்களை வாங்கி கொண்டு மூன்று குவளை மதுவை கொடுத்து கடையை காலி செய்து விட்டான்.!”
“அந்த சலுகையில் அவனுக்கு மட்டும்தானே தர சொன்னேன்? “
“அவன் வாங்கி அதை மற்றவர்களுக்கு விற்று விட்டான்! “
“வேறு தகவல் எதாவது? “
“அனுபூதி அளவிற்கு மீறி குடித்துவிட்டு மட்டையாகி விட கூடாது என்பதற்காகவே தினமும் ஒரு குவளை வாங்கினானாம் “
“புரிகிறது.நல்ல சமாளிப்பு! சரி நீ கிளம்பு! “
“அந்த நஷ்ட ஈடு? “
“விளக்கு வைத்த பின் நான் பணம் தர மாட்டேன்.காலையில் வா! எவ்வளவு பணம் தர வேண்டும்? “
“நூறு பொற்காசுகள்! “
“சரி! காலையில் வா! “
வியாபாரி கிளம்பிய பின் வீர சிம்மனிடம் திரும்பிய தண்டநாயக்கன் “தண்ணீரிலும் தடம் பார்த்து நடக்கக் கூடிய திறமை சாலிகள்! எனக்கு நூறு பொற்காசுகளை நஷ்டமாக்கி விட்டார்கள்! “என்றான் வெறுப்புடன்.!
“இருவரும் அபாயமானவர்கள்! “என்றான் வீர சிம்மன்.