தொழிலாளர் இழப்பீடு சட்டம்.
பொருள் விளக்கங்கள்:
சார்ந்திருப்பவர்கள்(dependant):
பிரிவு 2(1):
i). இறந்தவரின் விதவை மனைவி, 18 வயது பூர்த்தியடையாத மகன் அல்லது மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் அல்லது விதவைத் தாயார்;
ii). தொழிலாளி இறக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக சார்ந்து இருக்கும் 18 வயது பூர்த்தியடையாத உடல் அல்லது மன வலிமை குன்றிய மகன் அல்லது மகள்;
iii). தொழிலாளி இருக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக அல்லது பகுதி அளவு சார்ந்து இருக்கும்
a.மனைவியை இழந்தவர்
b. விதவைத் தாயார் தவிர்த்து இறந்தவரின் பெற்றோர்
c. இளவர் ஆக இருக்கும் சகோதரர் அல்லது மணமாகாத சகோதரி அல்லது இளவராக இருக்கும் விதவை சகோதரி;
d. விதவை மருமகள்;
e.முன்னதாக இறந்து விட்ட மகனின் இளவர் குழந்தை;
f. முன்னதாக இறந்து விட்ட மகனின் இலவர் குழந்தைக்குப் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லாதிருந்தால் அக்குழந்தை;
g. தொழிலாளியின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை எனில் அவரது தந்தை வழி தாத்தா பாட்டி;
பிரிவு 2(i) (e):
முதலாளி:
i. கூட்டு உருவாக்கப்பட்ட அல்லது கூட்டு உருவாக்கப்படாத நபர்களின் குழு
ii. முதலாளியின் நிர்வாக முகவர்
iii. இறந்துவிட்ட முதலாளியின் சட்ட பிரதிநிதிகள்
iv.தொழிலாளியாக அல்லது வேலை பழகுனர் ஆக பணி ஒப்பந்தம் செய்து கொண்டவர் தனது தொழிலாளியை மற்றொருவருக்கு தற்காலிகமாக இரவல் கொடுத்து இருக்குமிடத்தில் இரவல் பணியை செய்யும் போது அம்மற்றொரு தொழிலாளியின் முதலாளி ஆவார்.
தகுதி இழப்பு(Disablement):
இச்சட்டத்தின் கீழ் முதலாளியிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டுமெனில் பணியின் மூலம் அல்லது பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் உடல் தீங்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். அவ்வுடல் தீங்கினால் தொழிலாளிக்கு மரணம் அல்லது தகுதியிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். தகுதியிழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.
பகுதி தகுதி இழப்பு: (partial disablement)பிரிவு 2(1)(g):
விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீங்கினால் ஒருவரது சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் இழப்பு தகுதியிழப்பு எனப்படும். பிரிவு 2(1)(g) பகுதி தகுதி இழப்பினை இரண்டு வகையாக பிரிக்கிறது. அவை
i. தற்காலிக பகுதி தகுதி இழப்பு:
விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் அவர் விபத்தின்போது செய்துவந்த குறிப்பிட்ட வேலையை பொறுத்து மட்டும் அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அது தற்காலிக பகுதி தகுதி இழப்பாகும்.
ii. நிரந்தர பகுதி தகுதி இழப்பு:
விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் விபத்துக்கு முன்னர் தான் ஏற்று செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பொருத்து அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு நிரந்தர பகுதி தகுதி இழப்பாகும்.
சட்டத்தில் வரும் மற்ற பிரிவுகளை வரும் பதிவுகளில் காணலாம்.
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
ReplyQuoteLikeReportUnapproveEditDelete
யாழ் மொழி
(
@Saranya-venkatesh)
Estimable MemberWriter
Joined: 2 years ago
Posts: 121
26/10/2020 2:41 pm
பேறு கால பயன்கள் சட்டம் 1961 (the Maternity Benefits Act 1961)
கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான சட்டங்கள் மகளிர் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது. இது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
இச்சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 1948 ஆம் ஆண்டு ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மகப்பேறு சலுகைகள் வழங்கப்பட்டன
பிரிவு 1: இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.
பிரிவு2:
A. அரசாங்கத்திற்கு சொந்தமான
தொழிற்சாலை மற்றும் சுரங்கம் உட்பட அனைத்து தொழிற்சாலை மற்றும் சுரங்கம் அல்லது நிறுவனங்களுக்கும்,
2.பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்
3. அரசு காப்பீட்டு சட்டம் பொருந்தக்கூடிய தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் அந்த சட்டத்தின் கீழ் பேறுகால உதவி வகை பெற தகுதியற்றவர்களாக இருந்து இச்சட்டத்தின் முக்கிய பேறுகால பயன்களை பெற தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
4. மாநில அரசாங்கம் மத்திய அரசின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வேறு நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பொருந்தும் வகையில் நீட்டிக்கலாம்.
5. மத்திய அல்லது மாநில அரசின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இச்சட்டம் பொருத்தும்.
பெண் தொழிலாளர்கள் சில காலங்களில் வேலை செய்ய தடை:பிரிவு (4)(1):
எந்த ஒரு முதலாளியும் நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெண் தொழிலாளி அவருக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து அல்லது கருச்சிதைவு நிகழ்ந்த நாளிலிருந்து அல்லது கருக்கலைப்பு செய்த நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என பிரிவு 4 கூறுகிறது.
கடினமான வேலைகள் எப்பொழுது தரக்கூடாது(பிரிவு 4(3):
பெண் தொழிலாளி எதிர்நோக்கும் பிரசவ நாளிலிருந்து முந்தய 6 வாரங்களுக்கு முன்னால் நல்ல ஒரு மாத காலத்தினுள் அல்லது பிரசவ நாளில் இருந்து முந்தைய ஆறு வாரங்களில் அப்பெண் பெண் தொழிலாளியை
1. கடினமான வேலை
2. நீண்ட நேரம் நின்று கொண்டே செய்ய கூடிய வேலை
3. ஏதேனும் ஒரு வகையில் கருவை யோ அல்லது கரு வளர்ச்சியை பாதிக்கும் வேலைகள் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் வேலைகள் அல்லது தொழிலாளியின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேலைகளை செய்யுமாறு கூறுவதோ செய்வதற்கு அனுமதிப்பது கூடாது என இப்பிரிவு கூறுகிறது.
பேறுகால பயன்கள்:
பேறுகால பயன்கள் சட்டத்தின்கீழ் பெண் தொழிலாளி ஒருவர் தன் பேறுக்காலத்தில் பிரசவத்திற்கு முன் ஆறு வாரம் பிரசவத்திற்குப் பின்னர் ஆறு வாரம் மொத்தம் 12 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு மருத்துவ செலவுத் தொகையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சலுகைகளையும் பேறுகால பயன்களாக பெறமுடியும்.
பிரிவு 5 (1)ன் படி ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் பேருகால பயன்களை கோரி பெரும் உரிமையும் நிர்வாகத்திற்கு அதனை தர வேண்டிய கடமையும் உண்டு.
அவை
1. பேருகால பயன் தொகை,
2. மருத்துவ மீதூதியம்,
3.கருச்சிதைவிற்கான விடுப்பு
4. பேறுகால விடுப்பு
5. கூடுதல் இடைவேளை
6. வேலை நீக்கம் செய்ய தடை
7. கூலியை குறைக்க தடை
1. பேறுகால பயன் தொகை: செக்ஷன் 5(1):
ஒரு பெண் தொழிலாளி பேறுகால விடுப்பில் செல்லும் போது அவரது பிரசவ நாளில் உள்ளடக்கி பிரசவத்திற்கு முன்பு ஆறு வாரங்களும் அதன்பின்பு சராசரியாக 6 வாரங்கள் விடுப்பில் இருக்கும் ஒவ்வொரு நாளும் உரிய சம்பள தொகையானது பேறு கால பயன் தொகையாக வழங்கப்படும்.
பேறு கால பயன் தொகையை பெறுவதற்கு அப்பெண் தொழிலாளி 80 நாட்கள் குறிப்பிட்ட தொழில் சாலையில் வேலை செய்திருக்கவேண்டும்.
2. மருத்துவ மீதூதியம்: (medicial bonus) செக்ஷன் 8:
இச்சட்டத்தின் கீழ் பேறுகால பயன்கள் பெற தகுதி உடைய பெண்கள் ஒவ்வொருவரும் பிரசவத்திற்கு முன்னரும் பிரசவத்திற்கு பின்னரும் அவர்கள் நிர்வாகத்தால் இலவச மருத்துவ பராமரிப்பு செய்யப்படாத பட்சத்தில், தங்களது பேருகால தொகையுடன் கூடுதலாக மருத்துவ மீதூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இத்தொகையை மத்திய அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசிதழில் அறிவிக்கை மூலம் 20 ஆயிரம் வரை உயர்தலாம்.
கருச்சிதைவிற்கான விடுப்பு: section 9:
ஒரு பெண் தொழிலாளி கருச்சிதைவு ஏற்பட்ட நாளிலிருந்து அல்லது கருக்கலைப்பு செய்து கொண்ட நாளிலிருந்து ஆறு வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறைக்கு பின்னர் பெண் தொழிலாளி வேலைக்கு வரும்போது அவருக்கு கடினமான வேலைகளை கொடுக்கக்கூடாது. இந்த பயனைப் பெறுவதற்கு அவர் கருசிதைவு ஏற்பட்டதை சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். கருச்சிதைவுக்கான விடுப்பிற்கு வழங்கப்படும் சம்பளம் பேறுகால பயன் தொகை வழங்கப்படும் அதே சரிவிகிதத்தில் வழங்கப்பட வேண்டும்.
கருத்தடை அறுவை சிகிச்சைக்கான விடுப்பு: செக்ஷன் 9A:
கருத்தடை அறுவை சிகிச்சை (tubectomy opeartion) செய்துகொண்ட பெண் தொழிலாளி ஒருவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து சிகிச்சை செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு பேறுகால பயணிக்கான அதே விதத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு பெறலாம்.
பேறுகால விடுப்பு: செக்ஷன் 10:
ஒரு பெண் தொழிலாளி பேறுகால சமயத்தில் கருவுற்றிருப்பது அல்லது
உடல்நலக்குறைவு அல்லது பிரசவம் குறை பிரசவம் கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஆகியவற்றால் அல்லது வேறு ஏதாவது உடல் நலக் கோளாறு பாதிக்கப்படும் போது அவர் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தால் 12 வாரங்களுக்கு சேர்த்து கூடுதலாக ஒரு மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். இது பேறுகால விடுப்பு எனப்படும்.
கூடுதல் இடைவேளை: செக்ஷன் 11:
பேறுகால விடுப்பிற்கு பின் பெண் பணியில் சேர்ந்த தாய்க்கு அனைவரும் வழங்கப்படும் இடைவெளியை விட கூடுதல் இடைவேளை பட வேண்டும். இச்சலுகை குழந்தை பிறந்த 15 மாத காலம் வரை வழங்கப்பட வேண்டும். இக்கூடுதல் இடைவேளை பெண் தொழிலாளி தனது குழந்தையை பராமரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
வேலை நீக்கம் செய்ய தடை: செக்ஷன் 12:
பேறுகாலத்தில் பெண் தொழிலாளி எடுக்கும் விடுப்பினை காரணம் காட்டி அவரை வேலை நீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு வேலை நீக்கம் செய்வது சட்டவிரோதமாகும்.
கூலியையை குறைக்க தடை செக்ஷன் 13:
1.கர்ப்பிணிப் பெண் தொழிற்சாலைக்கு கருவுற்றிருக்கும் காலங்களில் மாற்று வேலை தரும்போது அவர் ஏற்கனவே வாங்கி வந்த கூலியை விட குறைவான கூலியைத் தரக்கூடாது.
2. குழந்தையை கவனிப்பதற்காக தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் கூடுதல் இடைவேளை நேரத்திற்கு சமமான தொகையை அவரது கூலியிலிருந்து கழிக்கக்கூடாது, இச்சலுகை குழந்தை பிறந்த 15 வாரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.