ஆசிரியர் : ரமணிச்சந்திரன்
நாவல் : சிவப்பு ரோஜா
நாயகன் : ஆனந்தன்
நாயகி : உமா
உமாவின் குடும்பம் வட இந்தியாவில் வாழ்ந்து வரும். அங்கே அவளுடைய பெற்றோர் அவள் சிறு வயதாக இருக்கும் போதே இறந்துவிடுவார்கள். அதன் பிறகு அவள் ஒரு ஆசிரமத்தில் வளர்வாள். ஒரு கட்டத்தில் அவள் ஆசிரமத்திலிருந்து வெளியேறி தமிழ்நாட்டில் இருக்கும் அவளுடைய பெரியம்மா வீட்டுக்கு வருவாள்.
அங்கே அவளுக்கு பெரிய துன்பம் காத்திருக்கும். அவளுடைய பெரியம்மா பெண்கள் தொழில் செய்வாள். உமாவை அந்த தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்வாள்.
ஆனந்தன் பணக்கார முதலாளி. திருமணத்தில் ஈடுபாடு இருக்காது. அம்மா சொன்னதற்காக மாலினியை திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்வான். ஒருநாள் உமாவை அவளுடைய பெரியம்மா வீட்டில் சந்தித்து, அவளை காப்பாற்றி தன்னுடைய பண்ணை வீட்டில் குடிவைப்பான். அவனும் அப்பப்போ அங்கே வந்து போவான்.
அவன் தனக்கு உதவி செய்து கூட்டி வந்தது நிம்மதி. ஆனால் திருமணம் செய்யாமல் அவனோடு வாழ உமாவுக்கு மனம் வராது. அதனால் அவனுடைய நெருக்கத்தை தவிர்ப்பாள்.
ஆனந்தன் நெருங்கி பழக முயற்சி செய்வான். அதனால் வீட்டைவிட்டு ஓடிவிடுவாள். அப்போது பெரியம்மாவிடம் மீண்டும் மாட்டிக்கொள்வாள். அதில் மாலினியின் சூழ்ச்சியும் இருக்கும்.
மீண்டும் ஆனந்தன் உமாவை அங்கிருந்து காப்பாற்றி கொண்டு வருவான். ஆனால் அவளை நம்ப மாட்டான். அடித்துவிடுவான். அவளுக்கு ஜுரம் வந்து புலம்பி மனதில் இருந்த எல்லாத்தையும் சொல்லிவிடுவாள்.
அவனுடைய அம்மா புரிந்துகொண்டு உதவி செய்ய, அவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கும். உமா தயங்குவாள். பயப்படுவான். ஆனால் ஆனந்தன் அவளை சமாதானப்படுத்தி திருமணம் செய்துகொள்வான். சுபமான முடிவு.