அற்புதமான கதை. இக்கதையின் மூலம், சமூகத்தில் நிகழும் அவலங்களை தோலுறித்து காட்டியுள்ளீர்கள். இதில் வெளிப்படும் உங்களது கோப உணர்வையும் சமூக அக்கரையையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது!
வாழாவெட்டியாய் வந்துள்ள சுடரழகியை கண்டு என் மனம் கணமாகி போனது. கதாசிரியர் மனமிறங்கி அவளை உத்தமனுடன் ஜோடி சேர்த்து வைத்தால் கொஞ்சம் எனக்கு நிம்மதி கிடைக்கும்.
சாரதியின் கேரக்டரை அற்புதமாக வெளிப்படுத்தி நல்ல திருப்பத்தை ஏற்படுத்திய உங்களது நுண்ணறிவு பாராட்டப்பட கூடியது. சிங்காரம் சேனாதி ஆகியவர்களுக்கு நல்ல நியாயமான தண்டனை கொடுத்துள்ளீர்கள்!
"தங்கம், தேன்தமிழ், சுடரழகி என்று ஆண்களின் வரட்டு கௌரவத்திற்கு இன்னும் எத்தனை எத்தனையோ பெண்கள் கால காலமாய் பழியாகி கொண்டிருக்கின்றனர். இவர்கள் கௌரவ பழிவாங்கல் சட்டத்தில் ஆண்கள் பெயர்கள், பட்டியலில் வருவதே இல்லை" என்று ஆசிரியர் பொங்கி இருக்கிறார். ஆசிரியரின் முற்போக்கு சிந்தனை உணர்வை மதிக்கிறேன்.
இதில் ஒரு படி மேலே போய் யோசித்தால், சமூக அவலங்கள் என்று வந்துவிட்டாலே.. அங்கே ஆண் பெண் என்ற பேதம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை! கலாச்சார மேலாண்மை வழியாகவே எல்லா நல்ல/கெட்ட நிகழ்வுகள் அரங்கேற வழிசெய்யப் படுகிறது! அங்கே ஆண் பெண் என்ற பேதம் மறைந்து, சமூக கலச்சார மேலாண்மை என்ற ஓர் கருவியை, (சமூகத்தை வழிநடத்தும் அல்லது சமூகத்தின் ஆதிக்கம் செலுத்தும்) ஓர் சக்தி தம் சுயநலத்துக்காக பயன்படுத்துகிறது. இவற்றில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் பகடைகாய்களாக பயன்படுத்தப் படுகிறார்கள். இதி் பொறாமை கொண்ட மனோபாவம், கௌரவம் என்ற போலியான மனோபாவம் கொண்டவர்களே பலியாகிறார்கள்.
இதற்கு தீர்வு ஒவ்வொருவரும், அதிலும் குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள்,
தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும், தன்சுய மதிப்பீட்டில் தேவையான பலம்பெற்றவர்களாகவும் இருப்பது ஒன்றுதான் இன்றைய சமூக அவலங்களிலிருந்து தப்பிக்கும் ஒரே வழியாகும்.