- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அத்தியாயம் 10
தன் இறுதி மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலே அறைக்கு ஓடி வந்தவள் தன் கணவனைத் தேடினாள்.
பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, "மாமூஊ" என உயிரே போகுமளவிற்கு கத்தி, வேகமாக ஓடிச்சென்று அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
யாரும் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவனுள் புக முயன்றாள்.
"அத்த என்ன சொல்றாங்கனு பாருங்க. நான் இந்த வீட்டை விட்டு போகணுமாம். நம்ம குழ.. குழந்தையையும் உங்களையும் விட்டுட்டு போகணுமாம். அதுக்கு.. அதுக்குத் தான் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாம் வர வச்சிருக்காங்களாம். ஏதோ? ஏதோ? மெஷினாம் நான். இல்ல, இல்ல, நான் போகமாட்டேன். போகமாட்டேன்" என எங்கே நாச்சியம்மை பின்னேயே வந்துவிடுவாரோ? என்ற பயத்தில் திக்கித்திணறி படபடவென்று தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தவள், ஆணாகிய அவனுக்கே வலிக்கும் அளவிற்கு அவனை மேலும் மேலும் இறுக்கி அணைத்தாள்.
அனைத்தையும் கேட்டவன் நெஞ்சில் பதிந்து இதயத்தை உருவப் பார்க்கும் அவளின் கைகளை பிரிக்க முயன்றான்.
எங்கே? முடியவில்லை. காந்தத் துண்டிலிருந்து தென்துருவத்தையும் வட துருவத்தையும் கூட பிரித்து விடலாம் போல. ஆனால், அவள் கைகளைப் பிரிக்க முடியவில்லை.
பெருமுயற்சியெடுத்து தன் இடக்கையால் அவள் கையை தன் மீதிலிருந்து பிரித்தெடுத்து அவளை தன் முன் கொண்டு வந்தவன், அவளை ஸ்தம்பிக்கச் செய்தான்.
அவனின் வலக்கையில் இருந்த சிகரெட்டை கண்டு அதிர்ந்தவளை சிறிதும் பொருட்படுத்தாமல் புகைத்துக் கொண்டே, "ப்ச் என்னாச்சு?" என கடுகடுக்க, அதிதிக்கே சந்தேகம் வந்தது இது என்னுயிரா என்று.
உறுதி செய்ய தன் ஆதார் விழிகளை அதிகம் விரித்தாள்.
பின், தைரியமெடுத்து நெருங்கி நின்று, "மாமூ, எனக்கு நீங்க வேணும். நம்ம அம்முலு வேணும். என்ன பிரச்சனையிருந்தாலும் அதைப் பேசி தீர்த்துக்குவோம். பழைய பகையை மனசுல வச்சி என்னை வெளிய அனுப்பிடாதீங்க மாமூ" எனக்கெஞ்சி நெஞ்சில் சாய, கல்லாய் இறுகியவனிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை.
அவளுடைய கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்தது கல்லில் ஈரம் உண்டாக்கும் பொருட்டு.
"என்னங்க? நான் இவ்ளோ சொல்றேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க?" என நேராய் அவன் முகம் பார்த்துக் கேட்டவளிடம்,
"ஆமா உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு?" என அவளை உயிருடன் கொன்று புதைக்கும் அவ்வம்பை எய்தான் விக்ரமன்.
"அன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்தப்போ, நான் இல்லாம வேற யார் உன் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் நீ அவன் கூடவும் அப்படி இருந்திருப்ப தானே?" என சிகரெட்டை தூக்கியெறிந்தான். அவன் சிகரத்தையும் தான்.
அவன் கேட்ட கேள்வியில் நெருப்பை மிதித்தது போல் துடிதுடித்து போனவள், தன்னிரு செவிகளையும் மூடிக்கொண்டு பின்னோக்கி நகர்ந்தாள்.
தன் இறுதி மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலே அறைக்கு ஓடி வந்தவள் தன் கணவனைத் தேடினாள்.
பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, "மாமூஊ" என உயிரே போகுமளவிற்கு கத்தி, வேகமாக ஓடிச்சென்று அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
யாரும் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவனுள் புக முயன்றாள்.
"அத்த என்ன சொல்றாங்கனு பாருங்க. நான் இந்த வீட்டை விட்டு போகணுமாம். நம்ம குழ.. குழந்தையையும் உங்களையும் விட்டுட்டு போகணுமாம். அதுக்கு.. அதுக்குத் தான் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாம் வர வச்சிருக்காங்களாம். ஏதோ? ஏதோ? மெஷினாம் நான். இல்ல, இல்ல, நான் போகமாட்டேன். போகமாட்டேன்" என எங்கே நாச்சியம்மை பின்னேயே வந்துவிடுவாரோ? என்ற பயத்தில் திக்கித்திணறி படபடவென்று தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தவள், ஆணாகிய அவனுக்கே வலிக்கும் அளவிற்கு அவனை மேலும் மேலும் இறுக்கி அணைத்தாள்.
அனைத்தையும் கேட்டவன் நெஞ்சில் பதிந்து இதயத்தை உருவப் பார்க்கும் அவளின் கைகளை பிரிக்க முயன்றான்.
எங்கே? முடியவில்லை. காந்தத் துண்டிலிருந்து தென்துருவத்தையும் வட துருவத்தையும் கூட பிரித்து விடலாம் போல. ஆனால், அவள் கைகளைப் பிரிக்க முடியவில்லை.
பெருமுயற்சியெடுத்து தன் இடக்கையால் அவள் கையை தன் மீதிலிருந்து பிரித்தெடுத்து அவளை தன் முன் கொண்டு வந்தவன், அவளை ஸ்தம்பிக்கச் செய்தான்.
அவனின் வலக்கையில் இருந்த சிகரெட்டை கண்டு அதிர்ந்தவளை சிறிதும் பொருட்படுத்தாமல் புகைத்துக் கொண்டே, "ப்ச் என்னாச்சு?" என கடுகடுக்க, அதிதிக்கே சந்தேகம் வந்தது இது என்னுயிரா என்று.
உறுதி செய்ய தன் ஆதார் விழிகளை அதிகம் விரித்தாள்.
பின், தைரியமெடுத்து நெருங்கி நின்று, "மாமூ, எனக்கு நீங்க வேணும். நம்ம அம்முலு வேணும். என்ன பிரச்சனையிருந்தாலும் அதைப் பேசி தீர்த்துக்குவோம். பழைய பகையை மனசுல வச்சி என்னை வெளிய அனுப்பிடாதீங்க மாமூ" எனக்கெஞ்சி நெஞ்சில் சாய, கல்லாய் இறுகியவனிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை.
அவளுடைய கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்தது கல்லில் ஈரம் உண்டாக்கும் பொருட்டு.
"என்னங்க? நான் இவ்ளோ சொல்றேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க?" என நேராய் அவன் முகம் பார்த்துக் கேட்டவளிடம்,
"ஆமா உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு?" என அவளை உயிருடன் கொன்று புதைக்கும் அவ்வம்பை எய்தான் விக்ரமன்.
"அன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்தப்போ, நான் இல்லாம வேற யார் உன் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் நீ அவன் கூடவும் அப்படி இருந்திருப்ப தானே?" என சிகரெட்டை தூக்கியெறிந்தான். அவன் சிகரத்தையும் தான்.
அவன் கேட்ட கேள்வியில் நெருப்பை மிதித்தது போல் துடிதுடித்து போனவள், தன்னிரு செவிகளையும் மூடிக்கொண்டு பின்னோக்கி நகர்ந்தாள்.