- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
"அட! இதுக்கெல்லாம் அசருற ஆள் நானில்ல" என உணவில் கவனமானாள் அதிதி.
அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பியவன் கண்டது கட்டிலில் தனியே மல்லாக்கப் படுத்து கை கால்களை ஆட்டிக் கொண்டு, “ஆ ஊ” வென சத்தம் போட்டு விளையாடி கொண்டிருக்கும் தன் மகள் அம்முலுவை தான்.
அவளை நெருங்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டியவன், திடீரென அவள் பசி கொண்டு அழவும் சண்டையையும் மறந்து அதிதியென சத்தமாக கத்தினான்.
தன் கணவனின் அழைப்பிலும் குழந்தையின் அழுகை சத்தத்திலும் பால்கனியிலிருந்து அறைக்கு ஓடி வந்தாள் அதிதி.
வந்தவள் தன் கணவனை முறைத்துப் பார்த்துவிட்டு நேரே சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
குழந்தையைத் தூக்குவாள் என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவள் சோபாவில் சென்று அமரவும் கோபம் எல்லையைக் கடந்தது.
குழந்தையைக் கைகளில் ஏந்தி நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, சோபாவில் அவளுக்கருகில் போய் அமர்ந்தான்.
தன்னருகில் அமர்ந்தவனிடம், "இதுக்கெல்லாம் ஆள் ரெடி பண்ணியாச்சா?" என்றாள் அதிதி.
குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே, "எதுக்கு?" என்று கேட்டான் விக்ரமன்.
"அதான் குழந்தைக்கு பால் கொடுக்கவும், பார்த்துக்கிறதுக்கும் ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா?" என்றாள்.
பதில் சொல்லவில்லை விக்ரமன்.
"இவ்வளவு பிளான் பண்ணியிருக்கீங்க. ஆனா மெயின் மேட்டரை இன்னும் ஏற்பாடு பண்ணலையா? ஒரு அஞ்சு நிமிஷம் என் பொண்ணோட அழுகையை உங்களால நிப்பாட்ட முடியுமா? இந்த லட்சணத்துல மொத்தக் குடும்பமும் என் தாத்தாவை பழி வாங்கப் போகுதாம்?"
குழந்தையின் அழுகை அதிகமானதும் அதன் பசியறிந்து பால் கொடுக்க தொடங்கியவள், "உங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன பகை? எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க? எங்கப்பா யாரையோ கொலை பண்ண மூலக்காரணமா இருந்ததால ஜெயில்ல இருக்காருனு மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனா யாரை எதுக்கு கொன்னாருனு எனக்கு சத்தியமா தெரியாது. என்ன நடந்தது சொல்லுங்க?" என நிதானமாக கேட்க, அவளிடம் எதையுமே கூற விரும்பாதவன் வாயை இறுக மூடிக் கொண்டான்.
"அப்போ எதையுமே சொல்ல மாட்டீங்க? அப்படி தானே?" என அவள் கோபம் கொள்ள, பசியாறிய குழந்தை தன் பெற்றோர் இருவருக்குமிடையே நடக்கும் வாக்குவாதத்தை அறியாமல் தன் தாயின் மார்பில் வாய் வைப்பதும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது.
இவ்வளவு கேட்டும் பதில் கூறாமல் அமைதியாக இருப்பவனை கண்டு பொறுமை இழந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.
பின், தலையாட்டிக் கொண்டே குழந்தை பால் அருந்தியதை உணர்ந்து ரவிக்கையின் கொக்கிகளை பொருத்த, தன் கைப்பொருள் பறிக்கப்பட்ட ஏமாற்றத்தில் கைகால்களை ஆட்டி சிணுங்கியது அம்முலு.
அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பியவன் கண்டது கட்டிலில் தனியே மல்லாக்கப் படுத்து கை கால்களை ஆட்டிக் கொண்டு, “ஆ ஊ” வென சத்தம் போட்டு விளையாடி கொண்டிருக்கும் தன் மகள் அம்முலுவை தான்.
அவளை நெருங்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டியவன், திடீரென அவள் பசி கொண்டு அழவும் சண்டையையும் மறந்து அதிதியென சத்தமாக கத்தினான்.
தன் கணவனின் அழைப்பிலும் குழந்தையின் அழுகை சத்தத்திலும் பால்கனியிலிருந்து அறைக்கு ஓடி வந்தாள் அதிதி.
வந்தவள் தன் கணவனை முறைத்துப் பார்த்துவிட்டு நேரே சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.
குழந்தையைத் தூக்குவாள் என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவள் சோபாவில் சென்று அமரவும் கோபம் எல்லையைக் கடந்தது.
குழந்தையைக் கைகளில் ஏந்தி நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, சோபாவில் அவளுக்கருகில் போய் அமர்ந்தான்.
தன்னருகில் அமர்ந்தவனிடம், "இதுக்கெல்லாம் ஆள் ரெடி பண்ணியாச்சா?" என்றாள் அதிதி.
குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே, "எதுக்கு?" என்று கேட்டான் விக்ரமன்.
"அதான் குழந்தைக்கு பால் கொடுக்கவும், பார்த்துக்கிறதுக்கும் ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா?" என்றாள்.
பதில் சொல்லவில்லை விக்ரமன்.
"இவ்வளவு பிளான் பண்ணியிருக்கீங்க. ஆனா மெயின் மேட்டரை இன்னும் ஏற்பாடு பண்ணலையா? ஒரு அஞ்சு நிமிஷம் என் பொண்ணோட அழுகையை உங்களால நிப்பாட்ட முடியுமா? இந்த லட்சணத்துல மொத்தக் குடும்பமும் என் தாத்தாவை பழி வாங்கப் போகுதாம்?"
குழந்தையின் அழுகை அதிகமானதும் அதன் பசியறிந்து பால் கொடுக்க தொடங்கியவள், "உங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன பகை? எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க? எங்கப்பா யாரையோ கொலை பண்ண மூலக்காரணமா இருந்ததால ஜெயில்ல இருக்காருனு மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனா யாரை எதுக்கு கொன்னாருனு எனக்கு சத்தியமா தெரியாது. என்ன நடந்தது சொல்லுங்க?" என நிதானமாக கேட்க, அவளிடம் எதையுமே கூற விரும்பாதவன் வாயை இறுக மூடிக் கொண்டான்.
"அப்போ எதையுமே சொல்ல மாட்டீங்க? அப்படி தானே?" என அவள் கோபம் கொள்ள, பசியாறிய குழந்தை தன் பெற்றோர் இருவருக்குமிடையே நடக்கும் வாக்குவாதத்தை அறியாமல் தன் தாயின் மார்பில் வாய் வைப்பதும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது.
இவ்வளவு கேட்டும் பதில் கூறாமல் அமைதியாக இருப்பவனை கண்டு பொறுமை இழந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.
பின், தலையாட்டிக் கொண்டே குழந்தை பால் அருந்தியதை உணர்ந்து ரவிக்கையின் கொக்கிகளை பொருத்த, தன் கைப்பொருள் பறிக்கப்பட்ட ஏமாற்றத்தில் கைகால்களை ஆட்டி சிணுங்கியது அம்முலு.