Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவனுக்கு தண்டனை வழங்கிய நேரத்தில் நீதிமன்றத்தில் தன் குடும்பத்துடன் நின்றிருந்த சங்கரப்பாண்டியனை பார்த்து, மண்ணள்ளி தூற்றியபடியே சபதம் செய்தார் நாச்சியம்மை.


"ஐயா பெரிய மனுஷா! தேர்தல்ல ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. உன் குடும்பத்தோட நிம்மதியை அழிக்காம ஒரு நாளும் நான் ஓய மாட்டேன்." என்றார்.


அவரின் அந்த குரோதத்தில் நடுங்கித்தான் போனார் சங்கரப்பாண்டியன்.


ஆனால், முழுதாய் இருபது வருடங்கள் கழித்தே பண்ணைபுரத்தில் தன் காலடித் தடத்தைப் பதித்தார் நாச்சியம்மை.


தன் மகன் சிறை சென்ற நாளிலிருந்தே சங்கரப்பாண்டியனுக்கு சரியான தூக்கமில்லை.


என் வார்த்தைகளால் தான் சந்திரன் இப்படி முருகேசனைக் கொண்டு முத்துப்பாண்டியனை கொலை செய்தானா? என் ஆணவத்தால் தான் இரு உயிர்கள் போய்விட்டதா? என் மகன் வாழ்க்கையை நானே அழித்துவிட்டேனா? என மனம் வெதும்பித் துடித்தார்.


அதன்பின் தன் தவறுகளுக்கு பிராயசித்தமாய், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் மரியாதையாய் நடத்த ஆரம்பித்தார். தன் எம்.எல்.ஏ பதவியிலிருந்து மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தானோ?


சிறையில் தன்னைக் காண வந்த பிரபுவிடம் பரிதாபமாய் கேட்டான் உதயச்சந்திரன்.


"அன்னைக்கு என்ன நடந்துச்சி பிரபு? நான் எப்போ முத்துப்பாண்டியனை வெட்டச் சொன்னேன்?" என போதையில் தான் கூறியதனைத்தையும் மறந்துவிட்டு கேட்டான்.


"அய்யோ மச்சான்! நீங்க தான் அவனை வெட்டி வீசப்போறேனு போதையில கத்தி அரிவாளையெல்லாம் தூக்குனீங்க. நான் தான் உங்களை சமாதானப்படுத்தி அரிசி குடவுனுக்கு கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்தவங்கக்கிட்ட நீங்க தான் அவனை வெட்டிருங்கனு சொன்னீங்க. அதை தான் அந்தப் பயலுகளும் கோர்ட்டுல சொன்னானுக." என்றதும்,


"ஆமா எல்லாரும் நீங்க தான்யா அவனை கொல்ல சொன்னீங்கனு சொன்னதால தான் எங்கப்பாக்கிட்ட கூட நடந்த எதையும் சொல்லாம, நான் தான் ஆள் வச்சி தூக்க ஏற்பாடு பண்ணினேனு மட்டும் சொன்னேன் பிரபு" என்று வேதனைகொண்டான் உதயச்சந்திரன்.


"மச்சான், அவனுக உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முருகேசனை வச்சி முத்துப்பாண்டியனைத் தூக்க ஏற்பாடு பண்ணியிருக்கானுக. ஆனா, முருகேசனோட லாரி பாதியிலேயே பிரேக்டவுனாகி நின்னுடுச்சாம். அதாவது நம்ம முருகேசன் போய் மோதல. அந்தக் காரா வந்து தான் லாரியில மோதியிருக்கு. ஆனா, இந்தப் போலீஸ்காரப் பயலுக வேற யார்கிட்டயோ செமத்தியா காசு வாங்கிக்கிட்டு, கேஸை இப்படி முடிச்சி விட்டானுக" எனத் தான் வருத்தப்படுவதை போல் நடித்தான்.


"உண்மையா பிரபு?" என வினவியவனிடம், பிரபு மேற்கொண்டு எதையும் விளம்ப விரும்பாமல் அமைதியாய் நின்றான்.


விரக்திப் புன்னகை சிந்திய உதயச்சந்திரன், "இது என் குடிப்பழக்கத்துக்கு கிடைச்ச பரிசு பிரபு. அவனை கொல்லணும்னு நெனச்சதுக்கு கிடைச்ச பரிசு." எனத் தான் சிறை தண்டனையை ஏற்க தயாராகி விட்டதை அறிவித்து விட்டு, திரும்பி நின்று கொண்டான்.


உதயச்சந்திரனை உள்ளே அனுப்பியாகிற்று. இனி சங்கரப்பாண்டியனை இசக்கி பின், தனது தங்கச்சி புருஷன் ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிட வேண்டியது தான் என்று சிந்தித்துக் கொண்டே சிறையை விட்டு வெளியே வந்த பிரபு, ரோட்டைக் கடந்து செல்லும் போது, டிரைவர் ஒருவரின் குடிபோதையில் தள்ளாடியபடியே வந்த தண்ணி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரலோகம் போனான்.


இது தான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ?




தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட், லைக் செய்ய மறக்கவேண்டாம் காஜூகத்லீஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 20



பண்ணைபுரத்திலிருந்து செங்குளத்திற்கு இடம் பெயர்ந்த நாச்சியம்மை தன் மொத்த வெறியையும் தொழிலில் காட்டினார்.


மும்பையிலுள்ள தொழில்கள் முழுவதையும் தன் தம்பியை நிர்வகிக்கச் சொன்னவர், தமிழ்நாடு முழுவதும் தான் ஆட்சி செய்தார்.


இவ்வளவு நாள் ஆள்விட்டு பார்த்துக் கொண்டிருந்த தொழில்களை எல்லாம் தன் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வந்தவர், தொழிலில் என்னை அடித்துக்கொள்ள ஆளில்லை என மீசை முறுக்கிய ஆண்களையே மிரளும்படி செய்தார்.


வீட்டில் யாரையும் பண்ணைபுரத்து கதையைப் பற்றி பேச அனுமதியாதவர், விக்ரமனை வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி படிக்க வைத்தார்.


விடுமுறைக்கு மட்டும் வீட்டிற்கு வருபவனிடம் அன்பை வாரி வாரி இரைத்தார். ஆயினும் யாருடனும் ஒட்டாத தன்மையுடனே வளர்ந்து வந்தான் விக்ரமன்.


சங்கரப்பாண்டியனை கூனிக்குறுகி நிற்க வைக்க வேண்டும் என்ற வன்மத்தை மனதில் மேலும் மேலும் வளர்த்திருந்த நாச்சியம்மை, சங்கரப்பாண்டியனுக்கு தெரியாமலேயே அவரின் தொழில்கள் ஒவ்வொன்றாய் கைப்பற்றினார்.


இறுதியில் அவரின் செல்லப்பெயர்த்தியின் மேல் தன் பார்வையை பதித்து சங்கரப்பாண்டியன் மற்றும் உதயச்சந்திரன் ஆகிய இருவரையுமே ஒரு சேர வீழ்த்த திட்டம் தீட்டினார்.


ஆனால், அந்த திட்டத்தில் எதிர்பாராத விதமாய் விக்ரமனை இணைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.


வெளிநாட்டில் வேலை பார்ப்பவன் இந்த பொம்மை கல்யாணத்தையெல்லாம் பெரிதாக எண்ணமாட்டான் என நினைத்து, அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.


ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி அதிதியின் மேல் நிஜமாய் நேசம் கொண்டான் விக்ரமப்பாண்டியன்.


எந்த உண்மையையும் விக்ரமனிடம் கூற விரும்பாத நாச்சியம்மை, திருமணம் நடந்த இரவில் அவனை தன்னறைக்கு அழைத்து, "நான் ஏன் இந்தப் பொண்ணை உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சிருக்கேனு நேரம் வரும் போது சொல்றேன் விக்ரமா. ஆனா, அதுவரை நீ அந்தப் பொண்ணைப் பத்தியும் அவக் குடும்பத்தைப் பத்தியும் வெளிய விசாரிக்கக் கூடாது. அவளைப் பத்தின விபரத்தை மட்டும் நாளைக்கு கண்ணன்கிட்ட சொல்லி கொண்டு வர சொல்றேன். இந்த நாச்சூம்மா எது செஞ்சாலும் நம்ம குடும்பத்தோட நன்மைக்காகத் தான் செய்வேனு என்னை நம்புறல்ல விக்ரமா?" என அவனிடம் தாலிக்கட்டுவதற்கு முன்பு கேட்ட அதே கேள்வியை மறுபடியும் கேட்கவும்,


"நான் உங்களை நூறு சதவீதம் நம்புறேன் நாச்சூம்மா" என அருகில் வந்து ஆதரவாய் கைகளைப் பற்றினான் விக்ரமன்.


அவனிடம் அவர் இன்னொரு கோரிக்கையையும் வைத்தார்.


"இனி நீ தனி மனுஷன் இல்ல விக்ரமா. குடும்பஸ்தனாகிட்ட. உங்கிட்ட இருக்க அந்த குடிப் பழக்கத்தையும் சிகரெட் பழக்கத்தையும் நீ விட்டுடனும்." என்றதும்,


"என்னது சிகரெட் குடிக்கக்கூடாதா? அது மட்டும் கொஞ்சம் கஷ்டமாச்சே" என ஒற்றைக் கண்ணை சிமிட்டியவனை, அடிப்பேன் என கைக்காட்டினார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
சிரித்துக்கொண்டே தன் தாய் தந்தை புகைப்படத்தை வணங்கியவன், "இன்னும் பத்து மாசத்துல உங்க அலமு மறுபடியும் உங்கக்கிட்டயே வந்து தொந்தரவு கொடுக்கப்போறா நாச்சூம்மா. அவளை சமாளிக்கத் தயாராகுங்க" என்று உல்லாசமாய் கூறிவிட்டு அதிதியைத் தேடி மாடிக்குச் சென்றான்.


பல தருணங்களில், ஏன் இந்தத் திருமணம் நமக்கு நடைபெற்றது? என யோசிக்க முயற்சிப்பவளிடம், தனக்கே தெரியாத விடையை அவளிடம் எப்படி கூறுவதென சாதூரியமாய் பேச்சைப் மாற்றி அவளை திசை திருப்பி விடுவான் விக்ரமன்.


அம்முலுவுக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, விக்ரமனை அழைத்த நாச்சியம்மை தனது விரோதிகளை வீழ்த்த இது தான் சரியான நேரம் என கணக்கிட்டு, அனைத்து உண்மைகளையும் அவனிடம் கூறி, அதிதியை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற தனது எண்ணத்தையும் கூற, விக்ரமனுக்கு சிறிது நேரம் ஒன்றும் ஓடவில்லை.


அனைத்தையும் கேட்டு மௌனம் காத்தவன் பின், என்னால் முடியாது நாச்சூம்மா என்றான்.


அவனின் இந்த மறுப்பை சற்றும் எதிர்பாராதவர் நெடுஞ்சாண் கிடையாய் அவன் காலில் விழுந்தார்.


"முதலும் கடைசியுமா நான் உன்கிட்ட கேட்கறது இது தான் விக்ரமா. நீ எதுவும் பண்ண வேணாம். அவளை இந்த வீட்டை விட்டு வெளியப் போன்னு ஒரு தடவை சொன்னா மட்டும் போதும்." என்றார் கெஞ்சலாக.


வளர்த்த பாசத்தில் அவர் சொல்லைத் தட்ட முடியாதவனும் அவர் சொன்னதை செய்ய பாடாதபாடுபட்டான்.


கிளிப்பிள்ளையாய் அவர் சொன்னது போல் வீட்டை விட்டு வெளியேப்போ என சொன்னால் மட்டும் உடனே அவள் சென்று விடுவாளா என்ன? அவன் அவளின் காதலை சந்தேகிப்பதாய் கூறியபோது கூட, மறுபடியும் என் அன்பை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் என்று தான் கேட்டாள் அதிதி?


ஆதலால், அக்கணம் வெளியேறாமல் தன்னை சோதிப்பவளை வெளியேற்ற பொய்யாய் தாய்ப்பாலில் குற்றத்தை கண்டுபிடித்தான் விக்ரமன்.


அவளின் ஒழுக்கத்தை சந்தேகிப்பதாய் கூறியவுடன் வீறு கொண்டு, நீ வேண்டாம் என அவனை தூக்கியெறிய தயாரானாள் அதிதி.


வெளியே கிளம்பிய அதிதியையும், தொங்கிய முகத்துடன் நின்ற சங்கரப்பாண்டியனையும் கண்ட நாச்சியம்மைக்கு இவ்வளவு நாட்கள் எட்டாத வெற்றி கனி கையில் கிட்டியது போல் இருந்தது.


ஆனால், அவரின் மகிழ்ச்சியை துணி கொண்டு துடைக்க வீறிட்டழுதாள் அவரின் செல்ல ராட்சசி அலமேலுமங்கை.


பகையுணர்வு சற்றுத் தணிந்து அவர் சந்தோசமாய் இருந்ததற்கு காரணமே மீண்டும் தன் தங்கையின் சிரிப்பைப் பார்த்தது தான்.


ஆனால், இப்போது அதிதி அம்முலுவை அவரிடம் தராமல் தானே வைத்துக்கொள்ள, அவள் மேல் ஏற்கனவேயிருந்த கோபக்கனல் கொழுந்து விட்டெரிந்தது அவருக்கு.


அம்முலுவிற்காக ரொம்பவே ஏங்கினார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
*

அனைத்தையும் நினைத்துப் பார்த்த நாச்சியம்மை, கண்களில் ஓடிய கண்ணீரை தடயமின்றி அழுந்தத்‌ துடைத்தார்.


மணி ஒன்று எனக்காட்ட, மறுபடியும் கண்களை மூடி தூங்க முயற்சி செய்தார்.


விக்ரமன் கொலையாளியை போலீசில் மாட்டிவிட தக்க ஆதாரங்களை சேகரிக்க வேண்டி இருந்ததால், தினமும் தன் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு வீட்டிற்கு வர வெகுநேரம் எடுத்துக் கொண்டான்.


அந்த வாரத்தில் ஒரு நாள் காலையில் தன் பெட்டியில் தனக்கு ஒரு வாரத்திற்கு தேவையான உடைகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு, வீட்டிலுள்ள யாரிடமும் கூறாமல், அலைபேசியை அணைத்து அலமாரிக்குள் போட்டு விட்டு, காஷ்மீர் புறப்பட்டுவிட்டான்.


காஷ்மீர் சென்றவனுக்கு அங்குள்ள இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வீரப்பாண்டியனின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்க இரண்டு நாட்கள் எடுத்தது.


அங்கிருந்த நாட்களில் நாற்புறம் சூழ்ந்திருந்த சுவரும் பனிமலையாய் மாற, அவனின் இரத்தத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் அதிதி என்று ஜபித்து, அவனை தவமிருக்கும் மாமுனியாய் உணரச் செய்தது.


அம்மலைப்பகுதியின் காட்டுமல்லிச் செடியிலிருந்து வரும் நறுமணமும் மஞ்சள் பூசிய அம்மயிலின் மன்மத வாசனைகளை நினைவூட்ட மறை கழண்டவனானான்.


அவளுடன் இணைந்த தருணங்களை எல்லாம் இப்போது நினைத்து தனிமையில் சிரித்தான்.


அவளின் தேக வெப்பத்தை தன் நினைவில் கொண்டுவந்து கொண்டுவந்தே அங்கிருந்த இரண்டு நாட்களும் உயிர் பிழைத்தான்.


விதை இப்புவியில் உயிர்கொள்ள காலம் தேவைப்படுவது போல், உள்ளிருக்கும் அவன் காதல் உயிர்கொள்ளவும் காலம் தேவைப்பட்டது. அது அழகாய் உணர்த்தியது அவர்களின் கண்ணாமூச்சி காதலை.


பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கியவன், நேரே துபாயில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கும் முருகேசனை சந்திக்கச் சென்றான்.


அவன் தான் தன் பெற்றோரின் கார் மோதிய லாரிக்குச் சொந்தக்காரன் என்று அவனை சந்திக்கச் சென்றான்.


காலை பத்து மணியளவில் அவனை சந்திக்க அப்பாலைவனத்தில் மணலில் பாதம் புதைய புதைய நடந்து சென்றான். அங்கு கானல் நீர் தெரிவது வியப்பல்ல. ஆனால், அதிதிதாசனுக்கு கானல் நீராய் ரதியானவளின் வட்ட முகம் தெரிந்தது வியப்பு தானே?


முருகேசனிடம் முதலில் என்ன நடந்தது என விசாரித்தவன் பின், ஒவ்வொன்றாக அவன் கூற ஆரம்பிக்கவும், தன் கேமராவில் ஒளிப்பதிவு செய்தான்.


"இங்கப் பாருங்க தம்பி, நான் எந்தத் தப்பும் செய்யல. முத்துப்பாண்டியனையும் அவரோட மனைவியையும், நான் லாரி ஏத்திக் கொல்லவே இல்ல. பாதி தூரத்துலயே என் லாரி ப்ரேக்டவுனாகி நின்னுருச்சி. அப்போ அந்தக் கார் தான் என் லாரி மேல வந்து மோதுச்சு. அதுல அடிச்ச அடியில தான் எனக்கு ஒரு பக்க காது கேட்காமப் போயிருச்சி. அன்னைக்கு போலீஸ்காரங்க என்னை அடிச்சி மிரட்டி தான், நான் கார் மேல லாரியைக் கொண்டு மோதின மாதிரி பொய் வாக்குமூலம் எழுதி வாங்கினாங்க. அது மூலமா உதயச்சந்திரன் ஐயாவுக்கும் தண்டனை வாங்கி கொடுத்தாங்க.. இத நான் பிரபு ஐயாக்கிட்ட ஏற்கனவே சொன்னேன். ஆனா, அப்போ அவரு அதை கண்டுக்கவே இல்ல. யார்கிட்டயும் மூச்சுவிடாத சொல்லிட்டாரு. நானும் என் பத்து வருஷ கடுங்காவல் தண்டனை முடிஞ்சதும் குடும்ப கஷ்டத்தால இங்க துபாய்க்கு வந்துட்டேன். இதை நீங்க எங்க வந்து சொல்லச் சொன்னாலும் நான் சொல்லுவேங்க." என முருகேசன் கூறிய வாக்கு மூலத்தை காணொளியாக பதிவு செய்த விக்ரமன், இரவில் அவனுடனேயே விருந்தில் கலந்துகொண்டான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom