- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அவனுக்கு தண்டனை வழங்கிய நேரத்தில் நீதிமன்றத்தில் தன் குடும்பத்துடன் நின்றிருந்த சங்கரப்பாண்டியனை பார்த்து, மண்ணள்ளி தூற்றியபடியே சபதம் செய்தார் நாச்சியம்மை.
"ஐயா பெரிய மனுஷா! தேர்தல்ல ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. உன் குடும்பத்தோட நிம்மதியை அழிக்காம ஒரு நாளும் நான் ஓய மாட்டேன்." என்றார்.
அவரின் அந்த குரோதத்தில் நடுங்கித்தான் போனார் சங்கரப்பாண்டியன்.
ஆனால், முழுதாய் இருபது வருடங்கள் கழித்தே பண்ணைபுரத்தில் தன் காலடித் தடத்தைப் பதித்தார் நாச்சியம்மை.
தன் மகன் சிறை சென்ற நாளிலிருந்தே சங்கரப்பாண்டியனுக்கு சரியான தூக்கமில்லை.
என் வார்த்தைகளால் தான் சந்திரன் இப்படி முருகேசனைக் கொண்டு முத்துப்பாண்டியனை கொலை செய்தானா? என் ஆணவத்தால் தான் இரு உயிர்கள் போய்விட்டதா? என் மகன் வாழ்க்கையை நானே அழித்துவிட்டேனா? என மனம் வெதும்பித் துடித்தார்.
அதன்பின் தன் தவறுகளுக்கு பிராயசித்தமாய், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் மரியாதையாய் நடத்த ஆரம்பித்தார். தன் எம்.எல்.ஏ பதவியிலிருந்து மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தானோ?
சிறையில் தன்னைக் காண வந்த பிரபுவிடம் பரிதாபமாய் கேட்டான் உதயச்சந்திரன்.
"அன்னைக்கு என்ன நடந்துச்சி பிரபு? நான் எப்போ முத்துப்பாண்டியனை வெட்டச் சொன்னேன்?" என போதையில் தான் கூறியதனைத்தையும் மறந்துவிட்டு கேட்டான்.
"அய்யோ மச்சான்! நீங்க தான் அவனை வெட்டி வீசப்போறேனு போதையில கத்தி அரிவாளையெல்லாம் தூக்குனீங்க. நான் தான் உங்களை சமாதானப்படுத்தி அரிசி குடவுனுக்கு கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்தவங்கக்கிட்ட நீங்க தான் அவனை வெட்டிருங்கனு சொன்னீங்க. அதை தான் அந்தப் பயலுகளும் கோர்ட்டுல சொன்னானுக." என்றதும்,
"ஆமா எல்லாரும் நீங்க தான்யா அவனை கொல்ல சொன்னீங்கனு சொன்னதால தான் எங்கப்பாக்கிட்ட கூட நடந்த எதையும் சொல்லாம, நான் தான் ஆள் வச்சி தூக்க ஏற்பாடு பண்ணினேனு மட்டும் சொன்னேன் பிரபு" என்று வேதனைகொண்டான் உதயச்சந்திரன்.
"மச்சான், அவனுக உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முருகேசனை வச்சி முத்துப்பாண்டியனைத் தூக்க ஏற்பாடு பண்ணியிருக்கானுக. ஆனா, முருகேசனோட லாரி பாதியிலேயே பிரேக்டவுனாகி நின்னுடுச்சாம். அதாவது நம்ம முருகேசன் போய் மோதல. அந்தக் காரா வந்து தான் லாரியில மோதியிருக்கு. ஆனா, இந்தப் போலீஸ்காரப் பயலுக வேற யார்கிட்டயோ செமத்தியா காசு வாங்கிக்கிட்டு, கேஸை இப்படி முடிச்சி விட்டானுக" எனத் தான் வருத்தப்படுவதை போல் நடித்தான்.
"உண்மையா பிரபு?" என வினவியவனிடம், பிரபு மேற்கொண்டு எதையும் விளம்ப விரும்பாமல் அமைதியாய் நின்றான்.
விரக்திப் புன்னகை சிந்திய உதயச்சந்திரன், "இது என் குடிப்பழக்கத்துக்கு கிடைச்ச பரிசு பிரபு. அவனை கொல்லணும்னு நெனச்சதுக்கு கிடைச்ச பரிசு." எனத் தான் சிறை தண்டனையை ஏற்க தயாராகி விட்டதை அறிவித்து விட்டு, திரும்பி நின்று கொண்டான்.
உதயச்சந்திரனை உள்ளே அனுப்பியாகிற்று. இனி சங்கரப்பாண்டியனை இசக்கி பின், தனது தங்கச்சி புருஷன் ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிட வேண்டியது தான் என்று சிந்தித்துக் கொண்டே சிறையை விட்டு வெளியே வந்த பிரபு, ரோட்டைக் கடந்து செல்லும் போது, டிரைவர் ஒருவரின் குடிபோதையில் தள்ளாடியபடியே வந்த தண்ணி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரலோகம் போனான்.
இது தான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ?
தொடரும்...
"ஐயா பெரிய மனுஷா! தேர்தல்ல ஜெயிச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசப்பட்டுக்காத. உன் குடும்பத்தோட நிம்மதியை அழிக்காம ஒரு நாளும் நான் ஓய மாட்டேன்." என்றார்.
அவரின் அந்த குரோதத்தில் நடுங்கித்தான் போனார் சங்கரப்பாண்டியன்.
ஆனால், முழுதாய் இருபது வருடங்கள் கழித்தே பண்ணைபுரத்தில் தன் காலடித் தடத்தைப் பதித்தார் நாச்சியம்மை.
தன் மகன் சிறை சென்ற நாளிலிருந்தே சங்கரப்பாண்டியனுக்கு சரியான தூக்கமில்லை.
என் வார்த்தைகளால் தான் சந்திரன் இப்படி முருகேசனைக் கொண்டு முத்துப்பாண்டியனை கொலை செய்தானா? என் ஆணவத்தால் தான் இரு உயிர்கள் போய்விட்டதா? என் மகன் வாழ்க்கையை நானே அழித்துவிட்டேனா? என மனம் வெதும்பித் துடித்தார்.
அதன்பின் தன் தவறுகளுக்கு பிராயசித்தமாய், தான் சந்திக்கும் பெண்களை எல்லாம் மரியாதையாய் நடத்த ஆரம்பித்தார். தன் எம்.எல்.ஏ பதவியிலிருந்து மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார். மனம் ஒரு குரங்கு என்பது உண்மை தானோ?
சிறையில் தன்னைக் காண வந்த பிரபுவிடம் பரிதாபமாய் கேட்டான் உதயச்சந்திரன்.
"அன்னைக்கு என்ன நடந்துச்சி பிரபு? நான் எப்போ முத்துப்பாண்டியனை வெட்டச் சொன்னேன்?" என போதையில் தான் கூறியதனைத்தையும் மறந்துவிட்டு கேட்டான்.
"அய்யோ மச்சான்! நீங்க தான் அவனை வெட்டி வீசப்போறேனு போதையில கத்தி அரிவாளையெல்லாம் தூக்குனீங்க. நான் தான் உங்களை சமாதானப்படுத்தி அரிசி குடவுனுக்கு கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்தவங்கக்கிட்ட நீங்க தான் அவனை வெட்டிருங்கனு சொன்னீங்க. அதை தான் அந்தப் பயலுகளும் கோர்ட்டுல சொன்னானுக." என்றதும்,
"ஆமா எல்லாரும் நீங்க தான்யா அவனை கொல்ல சொன்னீங்கனு சொன்னதால தான் எங்கப்பாக்கிட்ட கூட நடந்த எதையும் சொல்லாம, நான் தான் ஆள் வச்சி தூக்க ஏற்பாடு பண்ணினேனு மட்டும் சொன்னேன் பிரபு" என்று வேதனைகொண்டான் உதயச்சந்திரன்.
"மச்சான், அவனுக உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு தான் முருகேசனை வச்சி முத்துப்பாண்டியனைத் தூக்க ஏற்பாடு பண்ணியிருக்கானுக. ஆனா, முருகேசனோட லாரி பாதியிலேயே பிரேக்டவுனாகி நின்னுடுச்சாம். அதாவது நம்ம முருகேசன் போய் மோதல. அந்தக் காரா வந்து தான் லாரியில மோதியிருக்கு. ஆனா, இந்தப் போலீஸ்காரப் பயலுக வேற யார்கிட்டயோ செமத்தியா காசு வாங்கிக்கிட்டு, கேஸை இப்படி முடிச்சி விட்டானுக" எனத் தான் வருத்தப்படுவதை போல் நடித்தான்.
"உண்மையா பிரபு?" என வினவியவனிடம், பிரபு மேற்கொண்டு எதையும் விளம்ப விரும்பாமல் அமைதியாய் நின்றான்.
விரக்திப் புன்னகை சிந்திய உதயச்சந்திரன், "இது என் குடிப்பழக்கத்துக்கு கிடைச்ச பரிசு பிரபு. அவனை கொல்லணும்னு நெனச்சதுக்கு கிடைச்ச பரிசு." எனத் தான் சிறை தண்டனையை ஏற்க தயாராகி விட்டதை அறிவித்து விட்டு, திரும்பி நின்று கொண்டான்.
உதயச்சந்திரனை உள்ளே அனுப்பியாகிற்று. இனி சங்கரப்பாண்டியனை இசக்கி பின், தனது தங்கச்சி புருஷன் ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிட வேண்டியது தான் என்று சிந்தித்துக் கொண்டே சிறையை விட்டு வெளியே வந்த பிரபு, ரோட்டைக் கடந்து செல்லும் போது, டிரைவர் ஒருவரின் குடிபோதையில் தள்ளாடியபடியே வந்த தண்ணி லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரலோகம் போனான்.
இது தான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ?
தொடரும்...