உறவின் தேடல் -08
அழும் தன் தாயைத் தேற்ற வழியறியாது செல்லும் அவர்களையேப் பார்த்திருந்தான் அகில். அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் மலர்விழியும் கண்ணாடியின் வழியாக தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அகிலைப் பார்த்தவளுக்கு இன்னும் கோபம் அனலாகத் தகித்தது.
‘கடந்து சென்ற அனைத்தையும் இல்லை என்று அவனால் மறுக்க முடியுமா? என் தோழியை அவமானப்படுத்த எண்ணி அவன் செய்த செயலை, எதுத்து ஏன் செய்தாய்? என்று கேட்ட ஒரே காரணத்துக்காக தன் வாழ்வையும் அல்லவா, பாலுங் குழியில் தள்ளி விட்டான். அவனது செயல், எங்கள் இருவரது வாழ்க்கையை நிர்மூலமாக்கியது என்றால், அவனுரைத்த வார்த்தைகள் என் தாய் தந்தையின் உயிரையும் அல்லவா குடித்து விட்டது. இப்போது தாங்கள் இருக்கும் இந்த நிலைக்கு காரணம் இவன் ஒருவன் தானே?’ என்று எண்ணியவளுக்கு இப்போதே அவனைக் கொன்று புதைத்து விடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
ஆனால் வாணியின் ஒற்றைச் சொல்லிற்கிணங்கி இதுவரை அமைதி காக்கிறாள். எதிரில் அவனைப் பார்த்தாலும் கடந்து செல்ல பழகிவிட்டாள் தான், ஆனால் அவனை மன்னிக்கும் எண்ணம் துளியும் அவள் மனதில் இல்லை.
அமைதியாக வாகனத்தை ஓட்டினாலும் அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள், என்ன என்ன விதமான எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கும் என்பதை உணர்ந்த வாணி அவளது தோள் பட்டையில் கரம் பதித்து,
“என்னால தானடி உனக்கு இத்தனைக் கஷ்டமும்?” என்று சொன்னாள்.
சட்டென்று தான் ஓட்டிக் கொண்டிருந்த எக்ஸலை நிறுத்திய மலர்விழி,“கீழே இறங்குடி..” என்றாள்.
வாணி கீழே இறங்கி நின்றதும் தானும் கீழே இறங்கியவள், சட்டென்று வாணியின் புறம் திரும்பி சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தாள்.
“இது மாதிரி பேசாதன்னு நான் உங்கிட்ட பலதடவை சொல்லிட்டேன், ஆனாலும் நீ கேட்கமாட்டேங்குறியேடி”
“நீயும் தான் நான் சொல்றதை கேட்கமாட்டேங்குற, வேணான்டி இந்த கோவத்தை விட்ரு, அதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்லதுடி”
“எதுடி நல்லது, அவனோட காலுல நான் போயி விழுறதா? இல்ல உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்துனவனை நம்பி அவன் வீட்டுக்கு போறதா?” என்று கோபத்தோடு மலர் கேட்டாள்.
“இல்ல, மலர் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி.. ஆயிரந்தா இருந்தாலும் இனிமே அது தான்டி உன் குடும்பம்”
“வேணா வாணி இனி அப்படி சொல்லாத, எனக்கு கோவமா வருது. என்னைக்கு நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நாசம் பண்ணுனானோ,அந்த நிமிஷமே புருஷனாவது, மண்ணாவதுன்னு விட்டுட்டு வந்துட்டேன். மறுபடியும் மறுபடியும் அதை பத்தி பேசாத, நடந்ததை எல்லாம் கெட்டக்கனவா நெனச்சு மறக்கணும், அதுல இருந்து வெளியே வரணும்னு ரொம்ப சிரமப்பட்டு முயற்சி பண்ணி, இப்ப வெளியவும் வந்துட்டேன், மறுபடியும் அதுக்குள்ள என்னைப் போக வைக்காத அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று நா தழுதழுக்க சொன்னாள் மலர்.
“நீ ஏன் மலர் இப்படி இருக்க? நீயாவது கொஞ்சம் அனுசரிச்சு போலாமேடி. நடந்ததை மாத்த முடியாது தான், அதுக்காக எத்தனை நாள் அதையே பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்குறது? உனக்குக் கெடச்ச நல்ல வாழ்க்கையை நீ மிஸ் பண்ற மலர்..”
“பரவால்ல உனக்கு துரோகம் பண்ண நினைச்ச அவனோட வாழணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது, அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவையும் இல்லை. ஏன் பணம் இருந்தா தான் நல்ல வாழ்க்கை அமையுமா? இப்ப என்ன அவன் தாலி மட்டும் தானே கட்டுனான், அதை தூக்கி தூர போட்டுட்டு போறதுக்கு எனக்கு கொஞ்ச நேரம் ஆகுதுடி. ஆனா அதை செய்யாம நான் இன்னமும் அதை கழுத்துல சுமக்குறதுக்கு காரணம் அவங்கிட்ட இருந்து சட்டப்படி டிவோர்ட்ஸ் வாங்குறதுக்காக மட்டும் தான். வேறு எதையும் நீ மனசுல நினைச்சுக்காத. அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தா அதை அடியோட அழிச்சுடு, என்னைக்கும் அவனோட போய் நான் வாழ மாட்டேன்..” என்றாள் தீர்க்கமாக.
“நீ தப்பு பண்ற மலர். சும்மா வாய் வார்த்தைக்காக எது வேணாலும் பேசலாம் ஆனா, நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரணுமேடி?”
“அதெல்லாம் ஒத்து வரும். வராம எப்படி போகும்? நீ என்னை அவங்கூட போய் வாழுன்னு கட்டாயப்படுத்துனா நான் போயிருவேன்னு நெனைக்கிறியா, அது நான் உசுரோட இருக்க வரைக்கும் நடக்காது.. ”
“வேற என்ன தாண்டி பண்ணனுங்குற? அதான் ஊரறிய உங்கழுத்துல தாலி ஏறிடுச்சே, அப்புறமும் ஏன்டி இப்படி அடம் புடிக்கிற? அவரைப் பார்த்தாலும் பாவமா இருக்குடி. அஞ்சு வருஷமா உனக்காக காத்துருக்காரு. போதாக்குறைக்கு செய்யிற பிஸ்னஸ்ஸை விட்டுட்டு உன்னைப் பாக்குறதுக்காகவே தெனமும் இங்க வர்றாரு. அதைப் பார்த்துமாடி உன் மனசு இறங்கலை?”
“எதுக்குடி இத்தனை நாள் இல்லாம இப்ப என் மனசு மாறணும்னு நினைக்கிறவ, அந்த வீட்டுக்கு போயி நான் வாழணும்னு நெனைக்கிறவ?”
“இதென்னடி கேள்வி. நீ நல்லாருக்கணும்னு நினைக்கிறேன் அதனால தான் நீ அங்க போய் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன்..”
“ஓஓஓ.. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியா? சரி நான் நல்லாருக்கணும்னு நீ ஏன்டி நெனைக்கணும்? நான் என்ன உனக்கு உறவா?”
“ஏய் மலர் இதென்னடி பேச்சு?நீ எனக்கு உறவில்லடி அதைவிட உசந்தவ, என் உயிர்த்தோழிடி.. அப்படி இருக்கும் போது நீ நல்லாருக்கணும்னு நான் நினைக்கிறதுல என்னடி தப்பு இருக்கு?”
“ஓஓஓ...நீ அப்படி வர்றியா? சரிடி உம்பேச்சுக்கே வர்றேன். நீ எப்படி உன் தோழியான நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியோ, அதே மாதிரி தானே என்னோட தோழியான நீயும் நல்லாருக்கணும்னு நான் நினைப்பேன், அதை ஏன்டி நீ புருஞ்சுக்க மாட்டேங்குற?”
“அடியேய் மலர் நான் எதைப் பத்தி பேசுனா நீ எதைப் பத்திடி பேசுற? நான் உன் வாழ்க்கை நல்லாருக்கணும்னு அதைப் பத்திப் பேசுனா எதுக்கு நீ தேவையில்லாம இதைப் பத்தி பேசிட்டு இருக்க?” என்று சற்று கோவமாகவே கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தபடி, “உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ நெனைக்கலாம். ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் நினைக்க கூடாது அப்படி தானே! இங்க பாருடி என்னோட முடிவு ஒன்னே ஒன்னு தான், என் வாழ்க்கை எப்படி போகுதுன்னு நீ கேட்க கூடாது. மனசை மாத்திக்கன்னு சொல்லக்கூடாது. அப்படி கேட்கணும்னு நீ நெனச்சா, இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சரின்னு சொல்லு நல்ல மாப்ளையா நான் பார்க்குறேன்” என்றாள் மலர்.
“எல்லாமே தெரிஞ்சும் நீயே இப்படி பேசுறியேடி, என்னால எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“இப்ப இதை சொல்றவளுக்கு அன்னைக்கு புத்தி எங்கடி போச்சு? இப்ப எனக்கு தாலிகட்டி இருக்காரே ஒரு பெரிய மனுஷன், அன்னைக்கு அந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி மணமேடை வரைக்கும் வந்தியேடி அப்ப மட்டும் எப்படி உனக்கு தைரியம் வந்துச்சு. அப்ப எந்த முகத்தை வெச்சிகிட்டு மணவறையில வந்து உட்கார்ந்த? இதையெல்லாம் உன்னைக் குத்திக் காட்டனுங்குறதுக்காக பேசுறேன்னு நினைக்காத வாணி உன்னால எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு தனியா வாழ முடியும் தான். ஆனா நீ இப்படி இருக்குறதை என்னால பார்க்க முடியாது. உன்னால எல்லாத்தையும் மறக்க முடியும் முயற்சி பண்ணுடி. அவரே எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழும் போது நீ மட்டும் ஏன்டி இப்படி தனி மரமா நிக்கணும்?”
“என்னோட விதி இதுதான், அதை மாத்த யாராலும் முடியாது. அதனால இதோட இந்த பேச்சை விட்ரு மலர். இனிமே நான் உன்னைப் பத்தியும், உன் வாழ்க்கையைப் பத்தியும் எதுவும் பேச மாட்டேன். ஆனா தினமும் உன்னோட புருஷனும், உன்னோட மாமியாரும் நம்ம இருக்க இடத்துக்கு வர்றாங்க. முடிஞ்சா அவங்களை வரக் கூடாதுன்னு சொல்லிடு. அவங்களப் பாக்க கூட எனக்கு பிடிக்கல, நான் எல்லாருக்கும் நல்லது செய்யணும்னு தாண்டி நினைச்சேன். ஆனா கடைசியில எனக்கு எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லது செஞ்சுட்டாங்க. இதோட இந்த பேச்சை விட்டுடு” என்று சொல்லி விட்டு இந்த முறை தான் வண்டி எடுத்தாள் வாணி .
பின்னால் ஏறி அமர்ந்த மலரோ,
‘போடி போ எத்தனை நாளைக்கு இப்படியே முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறேன்னு நானும் பார்க்குறேன்டி’ என்று நினைத்துக் கொண்டவள் அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
இப்போது வாணியின் மனது நிலையில்லாமல் தவித்தது..
இருவரும் சலசலத்து ஓடும் காவிரி ஆற்றின் கிளை பிரிவான அந்த சிறிய வாய்க்காலின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நின்றார்கள். சுற்றி முற்றிலும் ஆட்கள் யாருமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அனைத்தும் பச்சை பசேலென்ற வயல்களாகவே நிறைந்திருந்தன. வாய்க்காலின் இரு புறமும் கோரை புற்கள் உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்திருந்தன.
பெரும்பாலும் அப்பகுதியில் இருக்கும் பெண்கள் குளிப்பதற்கும், அழுக்குத் துணிகளையும் துவைப்பதற்கும் இவர்களைப் போல் இந்த கால்வாயைத் தேடி வருவது உண்டு. அதனால் அமர்ந்து குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பெரிய பெரிய தட்டையான பாறைகளைப் பெயர்த்து கொண்டு வந்து கரையோரம் போட்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரும் வாய்க்காலுக்குள் இறங்கி நின்றவர்கள் துணி அலசுவதற்காகக் கொண்டு வந்த பக்கெட்டில் துணிகளை அள்ளிப் போட்டு நீருக்குள் முக்கி எடுத்து வெளியில் வைத்தார்கள். பின்பு போட்டு இருந்த தாவணியை துவைப்பதற்காக அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.பெரும்பாலும் கிராமப்புறங்களில் அனைவரும் தாவணி பாவாடை அணிவது தான் வழக்கம். இப்போது காலம் மாறி விட்ட நிலையில் எங்கே அனைவரும் தாவணி பாவாடை அணிகிறார்கள்? எல்லாம் சுடிதார் தான் போடுகிறார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் இவர்கள் இருவரும் தாவணி பாவாடை தான் அணிவார்கள். அதிலும் சுடிதார் போட்டால் ஊர் மக்கள் பேசும் பேச்சை காது குடுத்து கேட்க முடியாது, அதை தவிர்ப்பதற்காகவே இருவரும் இப்படி தாவணிப்பாவாடையை போட்டுக்கொள்கிறார்கள்.
இருவரது வாழ்விலும் தெரிந்தோ தெரியாமலோ கழுத்தில் தாலி ஏறி விட்ட காரணத்தினால் அவர்கள் பெரும்பாலும் சுடிதார் அணிவதில்லை. எப்போதும் தாவணி பாவாடை தான் அணிகிறார்கள், கோவிலுக்கு போகும் போது மட்டும் தான் புடவை அணிவார்கள். அதுவும் தங்களிடம் இருக்கும் நாலே புடவையைத் தான் மாத்தி மாத்தி அணிவார்கள். தேவைக்கு அதிகமாக அவர்கள் துணிமணிகளும் எடுத்துக் கொண்டது கிடையாது பணத்தையும் சேர்த்துக் கொண்டது கிடையாது. சம்பாதிக்கும் பணம் மொத்தமும் பேங்கில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.
முதலில் பெண்கள் இருவரும் தாவணியைக் கழட்டி அந்த பக்கெட்டுக்குள் போட்டவர்கள் இடுப்பில் இருந்த பாவாடையை எடுத்து மார்பில் முடிந்து கொண்டு மற்ற உடைகளையும் அவிழ்த்து ஒன்றாக போட்டவாறு துவைக்க ஆரம்பித்தார்கள். மலர் இருவரது துணிகளைத் துவைத்து வைக்க, வாணி அவற்றை அலசி நன்றாகப் பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டாள். இவ்வாறே அனைத்து துணிகளையும் துவைத்து அலசி அலசி பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டு ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு பெண்கள் இருவரும் வாய்க்காலில் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் தனித்தனியாக சோப்பு தேய்த்து குளித்து விட்டு இறுதியாக, ஒருவருக்கொருவர் தெரியாமலேயே மஞ்சள் கிழங்கை உரசி முகத்திற்கு போடுவது போல் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றுக்குப் போட்டார்கள்.
மலரின் கழுத்தில் இருக்கும் தாலியைப் பற்றி வாணிக்குத் தெரியும். ஆனால் வாணியின் கழுத்தில், ஐந்து வருடங்களாக கிடக்கும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை கூட மலர் பார்த்தது கிடையாது. இப்போது குளிக்கும் போது கூட எங்கே மலர் பார்த்து விடுவாளோ என்று கயிற்றை பின்னுக்குத்தள்ளி பாவாடையை நன்றாக மேலே ஏற்றி முடிந்து கொண்டு தான் குளித்தாள். அதுவும் தன்னை நோக்கி மலர் திரும்பும் போதெல்லாம் சட்டென்று தண்ணீருக்குள் அமர்ந்து விடுவாள். இதுவரை மலரால் அந்த கயிற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. உடை மாற்றும் போது கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டார்கள். கூச்சம் என்று சொல்வதை விட சீக்கிரம் குளித்து விட்டு இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்பதாலேயே அவர்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. ஏனெனில் கரையோரம் செல்லும் பாதையை ஊர் மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். அருகிலிருக்கும் வயலுக்கு செல்வோரும், வீடு திரும்புவோரும் இந்த பாதையில் தான் போவார்கள் அதனாலேயே இருவரும் குளித்து முடித்து, மாற்றிக் கொள்ள கொண்டு வந்த உடையை அணிந்துகொண்டு வாய்க்காலை விட்டு வெளியேறியவர்கள் எக்ஸலை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
தங்களுக்கென்று தாங்களே முயன்று எவரது உதவியுமின்றி போட்டுக்கொண்ட கூரை வீட்டை அடைந்த போது, அவர்கள் வீட்டருகே கார் ஒன்று நின்று இருந்தது.
அதைக் கண்டதும் அது யாருடையது என்பதை புரிந்து கொண்டவள் போல், “அவர் இங்கிருந்து போகலை போல மலர், உன்கிட்ட அவர் ஏதோ பேச நினைக்கிறாருடி. போ போய் பேசிட்டு வா என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போம்” என்று சொன்ன வாணியை முறைத்தாள் மலர்.
கூடவே அவள் ஏதோ பேச வருவதற்குள்ளாகவே அவர்களை நெருங்கி இருந்த அகில் பிரசாத்தின் கையில் காகிதம் ஒன்றும் இருந்தது. அகில் மலரே நெருங்கிய அடுத்த நிமிடம் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து இருந்தாள் வாணி. அந்தக் கூரை வீட்டிற்குப் பின்புறமாக துணி காயவைக்க, கொடிக்கயிறு கட்டப்பட்டிருக்க துவைத்த துணிகளை அதில் காயப் போட்டுக் கொண்டிருந்த அவளது மனதில் ஏதேதோ ஓடியது.
‘இப்ப என்ன சொல்ல வந்துருக்காருன்னு தெரியலையே? அந்த வீட்டுல இருக்க எல்லார் மேலையும் நான் பாசமா தானே இருந்தேன். அப்புறம் எதுக்கு எல்லாரும் சேர்ந்து எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனாங்க. சத்தியமா அப்பா அம்மா இல்லாம ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா என்னென்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு இந்த வயசுலையே என்னை உணர வெச்சிட்டாங்க?
யார் என்ன சொன்னாலும் சரி அந்த குடும்பத்தாளுங்களை நான் நம்ப போறது கிடையாது. ஆனா என்னோட ஃபிரண்ட்டை மிஸ்டர் அகில் நல்லா பார்த்துக்குவாருன்னு தான் தோணுது. இந்த அஞ்சு வருஷத்துல அவளை விட்டுட்டு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணாம, அவளைத் தேடி வர்றாருன்னா, அதுலையே எனக்கு புரிஞ்சுருச்சு அவரு மலரை வொய்ஃபா ஏத்துக்கிட்டாருன்னு. என் பிரண்டுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா போதும் வேற எதுவும் எனக்கு வேணாம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டு இங்கிருந்து எங்காவது கண்காணாத இடத்துக்கு போயிடணும். ஏன்னா என்னால இந்த ஊர்ல இருக்க முடியாது. அப்படி இருந்தேன்னா பழைய நினைவுகள்ல மூழ்கி செத்துருவேன் போல’ என்று மனதில் நினைத்தவாறே அனைத்து துணிகளையும் காயப்போட்டு விட்டு மாட்டு கொட்டகைக்கு சென்றுவிட்டாள்.
மாடுகள் அனைத்தும் வரிசையாக கட்டப்பட்டிருக்க ஆங்காங்கே ஒரு சில மாடுகள் சாணி போட்டிருந்தன. தாவணியின் முனையையும், பாவாடையையும் எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, கட்டை விளக்குமாத்தை எடுத்து அவற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
இங்கே மலரை நெருங்கிய அகில் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்க? நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, முழுசா அஞ்சு வருஷமாகிடுச்சு ஆனா அப்பவும் வீட்டுக்கு வரணும்னு உனக்கு தோணவே இல்லையா? சரி தப்பு எங்க பேருலையே இருக்கட்டும். அதுக்காக இப்படியே ரெண்டு பேரும் யாரும் இல்லாத அனாதை மாதிரி இருந்தா எல்லாம் சரியா போயிடுமா? இந்த உலகத்துல யாரும் தப்பு பண்ணுறதே இல்லையா, தப்பை உணர்ந்து அவங்க திருந்துறதுக்கு ஒரு வாய்ப்பு கூட குடுக்காம இப்படி ஒரேயடியா தண்டனை கொடுத்தா என்னடி அர்த்தம்" என்றான் உரிமையாக.
நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “தப்பு செஞ்சா மன்னிக்கலாம். ஏன் அவங்க திருந்துறதுக்கும் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கலாம். ஆனா துரோகம் செஞ்சவங்களை எப்படி மன்னிக்க முடியும்? அதுவும் சொந்தக்காரங்களுக்கு துரோகம் செய்த உங்களை என்னால எப்படி மன்னிக்க முடியும்..”
“சரி நாங்க துரோகம் செஞ்சோம்னே வெச்சுக்க, ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டோம். ஆனா அது தப்புன்னு இப்ப புரிஞ்சுகிட்டோமே! இப்பவாவது நாங்க திருந்த ஒரு வாய்ப்பு தரலாம் இல்லையா?”
“காலம் கடந்ததுக்கு அப்புறம் வாய்ப்பு கொடுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அன்னைக்கு நீங்க அதை செய்யாம இருந்திருந்தா இப்ப எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்..”
“உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்னா என்ன அர்த்தம்? இப்போ உன் வாழ்க்கையும் என்னால நாசமா போச்சுன்னு சொல்ல வர்றியா?” என்று, அவளது வலது கையில் முழங்கைக்கு மேலே அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி இழுத்து நிறுத்தி கோபத்தோடு கேட்டான்.
அவனிடமிருந்து தன் கைகளை கடினப்பட்டு பிரித்தெடுத்து தள்ளி நின்று கொண்ட மலர், “உங்களால தான் என் வாழ்க்கை நாசமா போச்சு. நீங்க உங்க கோபத்தை வேற வழியில காட்டி இருக்கலாம். இல்ல நான் பேசுனது தப்பா இருந்துருந்தா நாலு பேர் முன்னாடி என்னை அடிச்சுருக்கலாம், தேவை இல்லாம எதுக்கு எங்கழுத்துல தாலி கட்டுனீங்க?” என்று அவனிடம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டாள்...
எட்டி நின்ற அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்,
“ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்டி. ரொம்ப ரொம்ப லவ் பண்ணுனேன் அதனால தான் தாலி கட்டுனேன் போதுமா!” என்று சொல்ல.
அவன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்தவள் ஆவென்று வாய் பிளந்தவாறு அவனைப் பார்க்க, அவனும் “நிஜமா நான் சொல்றது உண்மை தான்டி. நான் உன்னை விரும்புறேன் ரொம்ப ரொம்ப விரும்புறேன்” என்றான்.
அவன் மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையை சொன்னதில் இதழோரம் வருத்த முறுவல் ஒன்றைச் சிந்தியவள்,
“எத்தனை பொண்ணுக்கிட்ட இதே வார்த்தையை சொல்லி இருக்கீங்க? இதே வார்த்தையை, இதே டோன்ல நீங்க இன்னொருத்தருக்கிட்ட சொல்லி, அதை நான் எங்காதல கேட்டிருக்கேன். அதனால மறுபடியும் இப்படி சொல்லிக்கிட்டு என் முன்னாடி வந்து நிற்காதீங்க, அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரப் பார்க்க..
மீண்டும் அவளது கையை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்தியவன், “இப்ப கடைசியா என்ன தான்டி சொல்லுற?” என்க.
“இன்னுமா உங்களுக்கு புரியல? இதுக்கு மேல என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்றேன். நீங்க எத்தனை தடவை நடையா நடந்தாலும் என்னோட பதில் இதுதான், தயவு செஞ்சு எங்களோட வாழ்க்கையை விட்டுப் போயிடுங்க. இப்ப தான் கொஞ்ச நாளா அவ நிம்மதியா இருக்கா, மறுபடியும் அவளை அதே நிலமைக்கு கொண்டு போயி விட்டுடாதீங்க. நானும் இல்லைன்னா இந்நேரம் அவ செத்து சுண்ணாம்பா போயிருப்பா..”
“அப்ப இது தான் உன்னோட முடிவு இல்லையா?”
“இதுதான் என்னோட முடிவு. இனிமேலாவது என்னை விட்டு விலகிடுங்க” என்றாள்..
“சரி இது தானே உன் முடிவு, அப்ப இந்த டிவோர்ட்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போடி” என்றான் அகில்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் மறு பேச்சு பேசாமல் பத்திரத்தை வாங்குவதற்காக அவன் முன்பு கையை நீட்டினாள். அவனும் சலனமே இல்லாமல் விவாகரத்து பத்திரத்தை அவள் கையில் வைத்தான்.
அந்தப் பத்திரத்தின் மேல் இருந்த பேனாவை எடுத்து கொட்டை எழுத்தில் அழகாக மலர்விழி என்று கையெழுத்திட்டவள், அதை அவன் கையில் கொடுத்து விட்டு,
“இனிமே எக்காரணத்தைக் கொண்டும் நீங்களும் உங்க அம்மாவும் இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போங்க”, என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி விட்டாள்.
எங்கே அங்கேயே நின்று இருந்தால் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து தன் நிலையை அவனுக்கு உணர்த்தி விடுமோ என்ற பயத்தில்.
அந்த குடிசை வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.
அதேநேரம் அவள் செல்லும் போது எந்த இடத்தில் நின்றிருந்தானோ அதே இடத்தில் நின்றிருந்த அகிலின் கண்ணில் நீர் துளிர்த்திருந்தது. புறங்கையால் கண்ணீரை துடைத்தவன், “என்னோட காதலை சொன்ன பிறகும், என்னை வேணான்னு சொல்லிட்டு போறியில்லடி. போ போ இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்படி”என்று சொல்லி விட்டு கோபத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
தாமதமானாலும்
உள்ளத்தில் உருவாகி
ஊனுயிராய் உடலில் கலந்திருக்கும் உன் மீதான நேசத்தைக் கொட்டி விட்டேனடி..
கொட்டி விட்ட நேசத்திற்கு
பதிலாய் கொடுந்தேளின்
விஷத்தைப் போல்...
கனலென தகிக்கும்
நெருப்புக் கங்கினைப் போல்
வார்த்தை கொண்டு வதைப்பதேனடி..?
- தேடல் தொடரும்....
https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615..
அழும் தன் தாயைத் தேற்ற வழியறியாது செல்லும் அவர்களையேப் பார்த்திருந்தான் அகில். அந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லும் மலர்விழியும் கண்ணாடியின் வழியாக தங்களையே பார்த்துக்கொண்டிருக்கும் அகிலைப் பார்த்தவளுக்கு இன்னும் கோபம் அனலாகத் தகித்தது.
‘கடந்து சென்ற அனைத்தையும் இல்லை என்று அவனால் மறுக்க முடியுமா? என் தோழியை அவமானப்படுத்த எண்ணி அவன் செய்த செயலை, எதுத்து ஏன் செய்தாய்? என்று கேட்ட ஒரே காரணத்துக்காக தன் வாழ்வையும் அல்லவா, பாலுங் குழியில் தள்ளி விட்டான். அவனது செயல், எங்கள் இருவரது வாழ்க்கையை நிர்மூலமாக்கியது என்றால், அவனுரைத்த வார்த்தைகள் என் தாய் தந்தையின் உயிரையும் அல்லவா குடித்து விட்டது. இப்போது தாங்கள் இருக்கும் இந்த நிலைக்கு காரணம் இவன் ஒருவன் தானே?’ என்று எண்ணியவளுக்கு இப்போதே அவனைக் கொன்று புதைத்து விடும் அளவிற்கு ஆத்திரம் வந்தது.
ஆனால் வாணியின் ஒற்றைச் சொல்லிற்கிணங்கி இதுவரை அமைதி காக்கிறாள். எதிரில் அவனைப் பார்த்தாலும் கடந்து செல்ல பழகிவிட்டாள் தான், ஆனால் அவனை மன்னிக்கும் எண்ணம் துளியும் அவள் மனதில் இல்லை.
அமைதியாக வாகனத்தை ஓட்டினாலும் அவள் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாள், என்ன என்ன விதமான எண்ணங்கள் அவள் மனதை ஆக்கிரமித்திருக்கும் என்பதை உணர்ந்த வாணி அவளது தோள் பட்டையில் கரம் பதித்து,
“என்னால தானடி உனக்கு இத்தனைக் கஷ்டமும்?” என்று சொன்னாள்.
சட்டென்று தான் ஓட்டிக் கொண்டிருந்த எக்ஸலை நிறுத்திய மலர்விழி,“கீழே இறங்குடி..” என்றாள்.
வாணி கீழே இறங்கி நின்றதும் தானும் கீழே இறங்கியவள், சட்டென்று வாணியின் புறம் திரும்பி சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தாள்.
“இது மாதிரி பேசாதன்னு நான் உங்கிட்ட பலதடவை சொல்லிட்டேன், ஆனாலும் நீ கேட்கமாட்டேங்குறியேடி”
“நீயும் தான் நான் சொல்றதை கேட்கமாட்டேங்குற, வேணான்டி இந்த கோவத்தை விட்ரு, அதான் உன்னோட வாழ்க்கைக்கு நல்லதுடி”
“எதுடி நல்லது, அவனோட காலுல நான் போயி விழுறதா? இல்ல உன்னையும் என்னையும் அசிங்கப்படுத்துனவனை நம்பி அவன் வீட்டுக்கு போறதா?” என்று கோபத்தோடு மலர் கேட்டாள்.
“இல்ல, மலர் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுடி.. ஆயிரந்தா இருந்தாலும் இனிமே அது தான்டி உன் குடும்பம்”
“வேணா வாணி இனி அப்படி சொல்லாத, எனக்கு கோவமா வருது. என்னைக்கு நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நாசம் பண்ணுனானோ,அந்த நிமிஷமே புருஷனாவது, மண்ணாவதுன்னு விட்டுட்டு வந்துட்டேன். மறுபடியும் மறுபடியும் அதை பத்தி பேசாத, நடந்ததை எல்லாம் கெட்டக்கனவா நெனச்சு மறக்கணும், அதுல இருந்து வெளியே வரணும்னு ரொம்ப சிரமப்பட்டு முயற்சி பண்ணி, இப்ப வெளியவும் வந்துட்டேன், மறுபடியும் அதுக்குள்ள என்னைப் போக வைக்காத அதுக்கப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று நா தழுதழுக்க சொன்னாள் மலர்.
“நீ ஏன் மலர் இப்படி இருக்க? நீயாவது கொஞ்சம் அனுசரிச்சு போலாமேடி. நடந்ததை மாத்த முடியாது தான், அதுக்காக எத்தனை நாள் அதையே பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்குறது? உனக்குக் கெடச்ச நல்ல வாழ்க்கையை நீ மிஸ் பண்ற மலர்..”
“பரவால்ல உனக்கு துரோகம் பண்ண நினைச்ச அவனோட வாழணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது, அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு தேவையும் இல்லை. ஏன் பணம் இருந்தா தான் நல்ல வாழ்க்கை அமையுமா? இப்ப என்ன அவன் தாலி மட்டும் தானே கட்டுனான், அதை தூக்கி தூர போட்டுட்டு போறதுக்கு எனக்கு கொஞ்ச நேரம் ஆகுதுடி. ஆனா அதை செய்யாம நான் இன்னமும் அதை கழுத்துல சுமக்குறதுக்கு காரணம் அவங்கிட்ட இருந்து சட்டப்படி டிவோர்ட்ஸ் வாங்குறதுக்காக மட்டும் தான். வேறு எதையும் நீ மனசுல நினைச்சுக்காத. அப்படிப்பட்ட எண்ணம் ஏதாவது இருந்தா அதை அடியோட அழிச்சுடு, என்னைக்கும் அவனோட போய் நான் வாழ மாட்டேன்..” என்றாள் தீர்க்கமாக.
“நீ தப்பு பண்ற மலர். சும்மா வாய் வார்த்தைக்காக எது வேணாலும் பேசலாம் ஆனா, நீ சொல்றதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வரணுமேடி?”
“அதெல்லாம் ஒத்து வரும். வராம எப்படி போகும்? நீ என்னை அவங்கூட போய் வாழுன்னு கட்டாயப்படுத்துனா நான் போயிருவேன்னு நெனைக்கிறியா, அது நான் உசுரோட இருக்க வரைக்கும் நடக்காது.. ”
“வேற என்ன தாண்டி பண்ணனுங்குற? அதான் ஊரறிய உங்கழுத்துல தாலி ஏறிடுச்சே, அப்புறமும் ஏன்டி இப்படி அடம் புடிக்கிற? அவரைப் பார்த்தாலும் பாவமா இருக்குடி. அஞ்சு வருஷமா உனக்காக காத்துருக்காரு. போதாக்குறைக்கு செய்யிற பிஸ்னஸ்ஸை விட்டுட்டு உன்னைப் பாக்குறதுக்காகவே தெனமும் இங்க வர்றாரு. அதைப் பார்த்துமாடி உன் மனசு இறங்கலை?”
“எதுக்குடி இத்தனை நாள் இல்லாம இப்ப என் மனசு மாறணும்னு நினைக்கிறவ, அந்த வீட்டுக்கு போயி நான் வாழணும்னு நெனைக்கிறவ?”
“இதென்னடி கேள்வி. நீ நல்லாருக்கணும்னு நினைக்கிறேன் அதனால தான் நீ அங்க போய் சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன்..”
“ஓஓஓ.. நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியா? சரி நான் நல்லாருக்கணும்னு நீ ஏன்டி நெனைக்கணும்? நான் என்ன உனக்கு உறவா?”
“ஏய் மலர் இதென்னடி பேச்சு?நீ எனக்கு உறவில்லடி அதைவிட உசந்தவ, என் உயிர்த்தோழிடி.. அப்படி இருக்கும் போது நீ நல்லாருக்கணும்னு நான் நினைக்கிறதுல என்னடி தப்பு இருக்கு?”
“ஓஓஓ...நீ அப்படி வர்றியா? சரிடி உம்பேச்சுக்கே வர்றேன். நீ எப்படி உன் தோழியான நான் நல்லாருக்கணும்னு நினைக்கிறியோ, அதே மாதிரி தானே என்னோட தோழியான நீயும் நல்லாருக்கணும்னு நான் நினைப்பேன், அதை ஏன்டி நீ புருஞ்சுக்க மாட்டேங்குற?”
“அடியேய் மலர் நான் எதைப் பத்தி பேசுனா நீ எதைப் பத்திடி பேசுற? நான் உன் வாழ்க்கை நல்லாருக்கணும்னு அதைப் பத்திப் பேசுனா எதுக்கு நீ தேவையில்லாம இதைப் பத்தி பேசிட்டு இருக்க?” என்று சற்று கோவமாகவே கேட்டாள்.
அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைத்தபடி, “உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நீ நெனைக்கலாம். ஆனா உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நான் நினைக்க கூடாது அப்படி தானே! இங்க பாருடி என்னோட முடிவு ஒன்னே ஒன்னு தான், என் வாழ்க்கை எப்படி போகுதுன்னு நீ கேட்க கூடாது. மனசை மாத்திக்கன்னு சொல்லக்கூடாது. அப்படி கேட்கணும்னு நீ நெனச்சா, இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு நீ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சரின்னு சொல்லு நல்ல மாப்ளையா நான் பார்க்குறேன்” என்றாள் மலர்.
“எல்லாமே தெரிஞ்சும் நீயே இப்படி பேசுறியேடி, என்னால எப்படி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”
“இப்ப இதை சொல்றவளுக்கு அன்னைக்கு புத்தி எங்கடி போச்சு? இப்ப எனக்கு தாலிகட்டி இருக்காரே ஒரு பெரிய மனுஷன், அன்னைக்கு அந்த மனுஷனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லி மணமேடை வரைக்கும் வந்தியேடி அப்ப மட்டும் எப்படி உனக்கு தைரியம் வந்துச்சு. அப்ப எந்த முகத்தை வெச்சிகிட்டு மணவறையில வந்து உட்கார்ந்த? இதையெல்லாம் உன்னைக் குத்திக் காட்டனுங்குறதுக்காக பேசுறேன்னு நினைக்காத வாணி உன்னால எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு தனியா வாழ முடியும் தான். ஆனா நீ இப்படி இருக்குறதை என்னால பார்க்க முடியாது. உன்னால எல்லாத்தையும் மறக்க முடியும் முயற்சி பண்ணுடி. அவரே எல்லாத்தையும் மறந்துட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழும் போது நீ மட்டும் ஏன்டி இப்படி தனி மரமா நிக்கணும்?”
“என்னோட விதி இதுதான், அதை மாத்த யாராலும் முடியாது. அதனால இதோட இந்த பேச்சை விட்ரு மலர். இனிமே நான் உன்னைப் பத்தியும், உன் வாழ்க்கையைப் பத்தியும் எதுவும் பேச மாட்டேன். ஆனா தினமும் உன்னோட புருஷனும், உன்னோட மாமியாரும் நம்ம இருக்க இடத்துக்கு வர்றாங்க. முடிஞ்சா அவங்களை வரக் கூடாதுன்னு சொல்லிடு. அவங்களப் பாக்க கூட எனக்கு பிடிக்கல, நான் எல்லாருக்கும் நல்லது செய்யணும்னு தாண்டி நினைச்சேன். ஆனா கடைசியில எனக்கு எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லது செஞ்சுட்டாங்க. இதோட இந்த பேச்சை விட்டுடு” என்று சொல்லி விட்டு இந்த முறை தான் வண்டி எடுத்தாள் வாணி .
பின்னால் ஏறி அமர்ந்த மலரோ,
‘போடி போ எத்தனை நாளைக்கு இப்படியே முரட்டுப் பிடிவாதம் பிடிக்கிறேன்னு நானும் பார்க்குறேன்டி’ என்று நினைத்துக் கொண்டவள் அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகவே வந்தாள்.
இப்போது வாணியின் மனது நிலையில்லாமல் தவித்தது..
இருவரும் சலசலத்து ஓடும் காவிரி ஆற்றின் கிளை பிரிவான அந்த சிறிய வாய்க்காலின் அருகில் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி நின்றார்கள். சுற்றி முற்றிலும் ஆட்கள் யாருமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அனைத்தும் பச்சை பசேலென்ற வயல்களாகவே நிறைந்திருந்தன. வாய்க்காலின் இரு புறமும் கோரை புற்கள் உயர்ந்து அடர்த்தியாக வளர்ந்திருந்தன.
பெரும்பாலும் அப்பகுதியில் இருக்கும் பெண்கள் குளிப்பதற்கும், அழுக்குத் துணிகளையும் துவைப்பதற்கும் இவர்களைப் போல் இந்த கால்வாயைத் தேடி வருவது உண்டு. அதனால் அமர்ந்து குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பெரிய பெரிய தட்டையான பாறைகளைப் பெயர்த்து கொண்டு வந்து கரையோரம் போட்டிருந்தார்கள்.
இவர்கள் இருவரும் வாய்க்காலுக்குள் இறங்கி நின்றவர்கள் துணி அலசுவதற்காகக் கொண்டு வந்த பக்கெட்டில் துணிகளை அள்ளிப் போட்டு நீருக்குள் முக்கி எடுத்து வெளியில் வைத்தார்கள். பின்பு போட்டு இருந்த தாவணியை துவைப்பதற்காக அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.பெரும்பாலும் கிராமப்புறங்களில் அனைவரும் தாவணி பாவாடை அணிவது தான் வழக்கம். இப்போது காலம் மாறி விட்ட நிலையில் எங்கே அனைவரும் தாவணி பாவாடை அணிகிறார்கள்? எல்லாம் சுடிதார் தான் போடுகிறார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலும் இவர்கள் இருவரும் தாவணி பாவாடை தான் அணிவார்கள். அதிலும் சுடிதார் போட்டால் ஊர் மக்கள் பேசும் பேச்சை காது குடுத்து கேட்க முடியாது, அதை தவிர்ப்பதற்காகவே இருவரும் இப்படி தாவணிப்பாவாடையை போட்டுக்கொள்கிறார்கள்.
இருவரது வாழ்விலும் தெரிந்தோ தெரியாமலோ கழுத்தில் தாலி ஏறி விட்ட காரணத்தினால் அவர்கள் பெரும்பாலும் சுடிதார் அணிவதில்லை. எப்போதும் தாவணி பாவாடை தான் அணிகிறார்கள், கோவிலுக்கு போகும் போது மட்டும் தான் புடவை அணிவார்கள். அதுவும் தங்களிடம் இருக்கும் நாலே புடவையைத் தான் மாத்தி மாத்தி அணிவார்கள். தேவைக்கு அதிகமாக அவர்கள் துணிமணிகளும் எடுத்துக் கொண்டது கிடையாது பணத்தையும் சேர்த்துக் கொண்டது கிடையாது. சம்பாதிக்கும் பணம் மொத்தமும் பேங்கில் தான் உறங்கிக் கொண்டிருக்கிறது.
முதலில் பெண்கள் இருவரும் தாவணியைக் கழட்டி அந்த பக்கெட்டுக்குள் போட்டவர்கள் இடுப்பில் இருந்த பாவாடையை எடுத்து மார்பில் முடிந்து கொண்டு மற்ற உடைகளையும் அவிழ்த்து ஒன்றாக போட்டவாறு துவைக்க ஆரம்பித்தார்கள். மலர் இருவரது துணிகளைத் துவைத்து வைக்க, வாணி அவற்றை அலசி நன்றாகப் பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டாள். இவ்வாறே அனைத்து துணிகளையும் துவைத்து அலசி அலசி பிழிந்து பக்கெட்டுக்குள் போட்டு ஓரமாக நகர்த்தி வைத்து விட்டு பெண்கள் இருவரும் வாய்க்காலில் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தார்கள். எதுவும் பேசிக் கொள்ளாமல் இருவரும் தனித்தனியாக சோப்பு தேய்த்து குளித்து விட்டு இறுதியாக, ஒருவருக்கொருவர் தெரியாமலேயே மஞ்சள் கிழங்கை உரசி முகத்திற்கு போடுவது போல் கழுத்திலிருந்த மஞ்சள் கயிற்றுக்குப் போட்டார்கள்.
மலரின் கழுத்தில் இருக்கும் தாலியைப் பற்றி வாணிக்குத் தெரியும். ஆனால் வாணியின் கழுத்தில், ஐந்து வருடங்களாக கிடக்கும் மஞ்சள் கயிற்றை ஒருமுறை கூட மலர் பார்த்தது கிடையாது. இப்போது குளிக்கும் போது கூட எங்கே மலர் பார்த்து விடுவாளோ என்று கயிற்றை பின்னுக்குத்தள்ளி பாவாடையை நன்றாக மேலே ஏற்றி முடிந்து கொண்டு தான் குளித்தாள். அதுவும் தன்னை நோக்கி மலர் திரும்பும் போதெல்லாம் சட்டென்று தண்ணீருக்குள் அமர்ந்து விடுவாள். இதுவரை மலரால் அந்த கயிற்றை கண்டு பிடிக்க முடியவில்லை. உடை மாற்றும் போது கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டார்கள். கூச்சம் என்று சொல்வதை விட சீக்கிரம் குளித்து விட்டு இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும் என்பதாலேயே அவர்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. ஏனெனில் கரையோரம் செல்லும் பாதையை ஊர் மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்துவார்கள். அருகிலிருக்கும் வயலுக்கு செல்வோரும், வீடு திரும்புவோரும் இந்த பாதையில் தான் போவார்கள் அதனாலேயே இருவரும் குளித்து முடித்து, மாற்றிக் கொள்ள கொண்டு வந்த உடையை அணிந்துகொண்டு வாய்க்காலை விட்டு வெளியேறியவர்கள் எக்ஸலை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
தங்களுக்கென்று தாங்களே முயன்று எவரது உதவியுமின்றி போட்டுக்கொண்ட கூரை வீட்டை அடைந்த போது, அவர்கள் வீட்டருகே கார் ஒன்று நின்று இருந்தது.
அதைக் கண்டதும் அது யாருடையது என்பதை புரிந்து கொண்டவள் போல், “அவர் இங்கிருந்து போகலை போல மலர், உன்கிட்ட அவர் ஏதோ பேச நினைக்கிறாருடி. போ போய் பேசிட்டு வா என்ன தான் சொல்றாருன்னு பார்ப்போம்” என்று சொன்ன வாணியை முறைத்தாள் மலர்.
கூடவே அவள் ஏதோ பேச வருவதற்குள்ளாகவே அவர்களை நெருங்கி இருந்த அகில் பிரசாத்தின் கையில் காகிதம் ஒன்றும் இருந்தது. அகில் மலரே நெருங்கிய அடுத்த நிமிடம் வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்து இருந்தாள் வாணி. அந்தக் கூரை வீட்டிற்குப் பின்புறமாக துணி காயவைக்க, கொடிக்கயிறு கட்டப்பட்டிருக்க துவைத்த துணிகளை அதில் காயப் போட்டுக் கொண்டிருந்த அவளது மனதில் ஏதேதோ ஓடியது.
‘இப்ப என்ன சொல்ல வந்துருக்காருன்னு தெரியலையே? அந்த வீட்டுல இருக்க எல்லார் மேலையும் நான் பாசமா தானே இருந்தேன். அப்புறம் எதுக்கு எல்லாரும் சேர்ந்து எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனாங்க. சத்தியமா அப்பா அம்மா இல்லாம ஒரு பொண்ணு தனியா வாழ்ந்தா என்னென்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு இந்த வயசுலையே என்னை உணர வெச்சிட்டாங்க?
யார் என்ன சொன்னாலும் சரி அந்த குடும்பத்தாளுங்களை நான் நம்ப போறது கிடையாது. ஆனா என்னோட ஃபிரண்ட்டை மிஸ்டர் அகில் நல்லா பார்த்துக்குவாருன்னு தான் தோணுது. இந்த அஞ்சு வருஷத்துல அவளை விட்டுட்டு வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணாம, அவளைத் தேடி வர்றாருன்னா, அதுலையே எனக்கு புரிஞ்சுருச்சு அவரு மலரை வொய்ஃபா ஏத்துக்கிட்டாருன்னு. என் பிரண்டுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சா போதும் வேற எதுவும் எனக்கு வேணாம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டு இங்கிருந்து எங்காவது கண்காணாத இடத்துக்கு போயிடணும். ஏன்னா என்னால இந்த ஊர்ல இருக்க முடியாது. அப்படி இருந்தேன்னா பழைய நினைவுகள்ல மூழ்கி செத்துருவேன் போல’ என்று மனதில் நினைத்தவாறே அனைத்து துணிகளையும் காயப்போட்டு விட்டு மாட்டு கொட்டகைக்கு சென்றுவிட்டாள்.
மாடுகள் அனைத்தும் வரிசையாக கட்டப்பட்டிருக்க ஆங்காங்கே ஒரு சில மாடுகள் சாணி போட்டிருந்தன. தாவணியின் முனையையும், பாவாடையையும் எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு, கட்டை விளக்குமாத்தை எடுத்து அவற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
இங்கே மலரை நெருங்கிய அகில் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “எத்தனை நாளைக்குத்தான் இப்படியே இருக்கலாம்னு நினைச்சுகிட்டு இருக்க? நமக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆச்சு. ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இல்ல, முழுசா அஞ்சு வருஷமாகிடுச்சு ஆனா அப்பவும் வீட்டுக்கு வரணும்னு உனக்கு தோணவே இல்லையா? சரி தப்பு எங்க பேருலையே இருக்கட்டும். அதுக்காக இப்படியே ரெண்டு பேரும் யாரும் இல்லாத அனாதை மாதிரி இருந்தா எல்லாம் சரியா போயிடுமா? இந்த உலகத்துல யாரும் தப்பு பண்ணுறதே இல்லையா, தப்பை உணர்ந்து அவங்க திருந்துறதுக்கு ஒரு வாய்ப்பு கூட குடுக்காம இப்படி ஒரேயடியா தண்டனை கொடுத்தா என்னடி அர்த்தம்" என்றான் உரிமையாக.
நிமிர்ந்து அவனை நேருக்கு நேராக பார்த்தவள், “தப்பு செஞ்சா மன்னிக்கலாம். ஏன் அவங்க திருந்துறதுக்கும் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கலாம். ஆனா துரோகம் செஞ்சவங்களை எப்படி மன்னிக்க முடியும்? அதுவும் சொந்தக்காரங்களுக்கு துரோகம் செய்த உங்களை என்னால எப்படி மன்னிக்க முடியும்..”
“சரி நாங்க துரோகம் செஞ்சோம்னே வெச்சுக்க, ஏதோ கோபத்துல அப்படி பண்ணிட்டோம். ஆனா அது தப்புன்னு இப்ப புரிஞ்சுகிட்டோமே! இப்பவாவது நாங்க திருந்த ஒரு வாய்ப்பு தரலாம் இல்லையா?”
“காலம் கடந்ததுக்கு அப்புறம் வாய்ப்பு கொடுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அன்னைக்கு நீங்க அதை செய்யாம இருந்திருந்தா இப்ப எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்..”
“உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லா இருந்திருக்கும்னா என்ன அர்த்தம்? இப்போ உன் வாழ்க்கையும் என்னால நாசமா போச்சுன்னு சொல்ல வர்றியா?” என்று, அவளது வலது கையில் முழங்கைக்கு மேலே அழுத்தமாக பற்றி தன்னை நோக்கி இழுத்து நிறுத்தி கோபத்தோடு கேட்டான்.
அவனிடமிருந்து தன் கைகளை கடினப்பட்டு பிரித்தெடுத்து தள்ளி நின்று கொண்ட மலர், “உங்களால தான் என் வாழ்க்கை நாசமா போச்சு. நீங்க உங்க கோபத்தை வேற வழியில காட்டி இருக்கலாம். இல்ல நான் பேசுனது தப்பா இருந்துருந்தா நாலு பேர் முன்னாடி என்னை அடிச்சுருக்கலாம், தேவை இல்லாம எதுக்கு எங்கழுத்துல தாலி கட்டுனீங்க?” என்று அவனிடம் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கேட்க வேண்டிய கேள்வியை இப்போது கேட்டாள்...
எட்டி நின்ற அவளை இழுத்து தன் அருகில் நிற்க வைத்தவன்,
“ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்டி. ரொம்ப ரொம்ப லவ் பண்ணுனேன் அதனால தான் தாலி கட்டுனேன் போதுமா!” என்று சொல்ல.
அவன் சொன்ன தகவலைக் கேட்டு அதிர்ந்தவள் ஆவென்று வாய் பிளந்தவாறு அவனைப் பார்க்க, அவனும் “நிஜமா நான் சொல்றது உண்மை தான்டி. நான் உன்னை விரும்புறேன் ரொம்ப ரொம்ப விரும்புறேன்” என்றான்.
அவன் மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையை சொன்னதில் இதழோரம் வருத்த முறுவல் ஒன்றைச் சிந்தியவள்,
“எத்தனை பொண்ணுக்கிட்ட இதே வார்த்தையை சொல்லி இருக்கீங்க? இதே வார்த்தையை, இதே டோன்ல நீங்க இன்னொருத்தருக்கிட்ட சொல்லி, அதை நான் எங்காதல கேட்டிருக்கேன். அதனால மறுபடியும் இப்படி சொல்லிக்கிட்டு என் முன்னாடி வந்து நிற்காதீங்க, அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது"என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகரப் பார்க்க..
மீண்டும் அவளது கையை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்தியவன், “இப்ப கடைசியா என்ன தான்டி சொல்லுற?” என்க.
“இன்னுமா உங்களுக்கு புரியல? இதுக்கு மேல என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்றேன். நீங்க எத்தனை தடவை நடையா நடந்தாலும் என்னோட பதில் இதுதான், தயவு செஞ்சு எங்களோட வாழ்க்கையை விட்டுப் போயிடுங்க. இப்ப தான் கொஞ்ச நாளா அவ நிம்மதியா இருக்கா, மறுபடியும் அவளை அதே நிலமைக்கு கொண்டு போயி விட்டுடாதீங்க. நானும் இல்லைன்னா இந்நேரம் அவ செத்து சுண்ணாம்பா போயிருப்பா..”
“அப்ப இது தான் உன்னோட முடிவு இல்லையா?”
“இதுதான் என்னோட முடிவு. இனிமேலாவது என்னை விட்டு விலகிடுங்க” என்றாள்..
“சரி இது தானே உன் முடிவு, அப்ப இந்த டிவோர்ட்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போடி” என்றான் அகில்.
இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்தது போல் மறு பேச்சு பேசாமல் பத்திரத்தை வாங்குவதற்காக அவன் முன்பு கையை நீட்டினாள். அவனும் சலனமே இல்லாமல் விவாகரத்து பத்திரத்தை அவள் கையில் வைத்தான்.
அந்தப் பத்திரத்தின் மேல் இருந்த பேனாவை எடுத்து கொட்டை எழுத்தில் அழகாக மலர்விழி என்று கையெழுத்திட்டவள், அதை அவன் கையில் கொடுத்து விட்டு,
“இனிமே எக்காரணத்தைக் கொண்டும் நீங்களும் உங்க அம்மாவும் இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சிடாதீங்க தயவு செஞ்சு இங்கிருந்து போங்க”, என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாக அங்கிருந்து ஓடி விட்டாள்.
எங்கே அங்கேயே நின்று இருந்தால் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கன்னத்தில் வழிந்து தன் நிலையை அவனுக்கு உணர்த்தி விடுமோ என்ற பயத்தில்.
அந்த குடிசை வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணம் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள் மலர்விழி.
அதேநேரம் அவள் செல்லும் போது எந்த இடத்தில் நின்றிருந்தானோ அதே இடத்தில் நின்றிருந்த அகிலின் கண்ணில் நீர் துளிர்த்திருந்தது. புறங்கையால் கண்ணீரை துடைத்தவன், “என்னோட காதலை சொன்ன பிறகும், என்னை வேணான்னு சொல்லிட்டு போறியில்லடி. போ போ இதுக்கு நீ கண்டிப்பா அனுபவிப்படி”என்று சொல்லி விட்டு கோபத்தோடு தன் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.
தாமதமானாலும்
உள்ளத்தில் உருவாகி
ஊனுயிராய் உடலில் கலந்திருக்கும் உன் மீதான நேசத்தைக் கொட்டி விட்டேனடி..
கொட்டி விட்ட நேசத்திற்கு
பதிலாய் கொடுந்தேளின்
விஷத்தைப் போல்...
கனலென தகிக்கும்
நெருப்புக் கங்கினைப் போல்
வார்த்தை கொண்டு வதைப்பதேனடி..?
- தேடல் தொடரும்....
https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615..