உறவின் தேடல் -11.1
பண்ணையாரின் குடும்பம்
மட்டுமின்றி, ஊர் முக்கியஸ்தர்கள் பெரிய மனிதர்கள் தலைக்கட்டுக்காரர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்து இருந்ததால் கலவரம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது... எதிரெதிர் தரப்பினர் கைகலப்பை விட்டு விட்டு பிரிந்து நின்றனர்.
அனைவரையும் ஒரு அழுத்தமான பார்வையோடு எதிர்கொண்ட பண்ணையார், குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடக்கும் தன் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு துக்கத்தை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவர் தன் ஆட்களிடம், “என்னடே வேடிக்கை பார்த்துக்கிட்டு மச மசன்னு நிக்கிறீக? மொதல்ல இவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கடே.. என் மகனுக்கு ஏதாவது ஆச்சு நான் யாருன்னு அம்புட்டு பேரும் தெரிஞ்சுக்குவானுகடே. இந்த பஞ்சாயத்தை சுமூகமாக தீர்த்துப்புட்டு போலாம்னுதே வந்தேன். ஆனா எம்மவனுக்கு எதாவது ஆச்சு நானே அம்புட்டு பேரையும் வெட்டி சாச்சுப்புடுவேன்டே. என்னடே நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன் மசமசன்னு நின்னுகிட்டே இருக்கவனுங்க. இப்ப எம்மவனைத் தூக்கிட்டு போறியலா இல்ல நானே தூக்கிட்டு போகவாடே..” என்று தன் கணீர் குரலில் சொன்னதும் பரபரவென்று அங்கிருந்தவர்கள் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் நின்றிருந்தவர்களுள் நால்வர் வேகமாக ஓடிவந்து கைத்தாங்கலாக தேவேஷ்வரை தூக்கி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றனர். அந்த வண்டியின் பின்னே அவனது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சென்றார்கள்.
ஆனால், சிவசுப்பிரமணியமோ அவர்களுடன் செல்லாமல் பஞ்சாயத்து தலைவர்களின் முன்னால் தன் புகாரை முன் வைத்தார்.
“நான் இதுநாள் வரைக்கும் இங்க நடக்குற எந்த விடயத்துலையும் நேர்மையாத்தேன் இருந்துருக்கேன். எது செஞ்சாலும் நேர்மையாத்தேன் செஞ்சேன், என் நடவடிக்கையில பொய்யோ, பிராடோ இருந்ததில்லை, அது உங்க எல்லாருக்கும் தெரியும். என் பையன் செஞ்சது தப்பாவே இருக்கட்டுமே, அவன் தப்பு செஞ்சா, அதை அப்பங்குறன் முறையில எங்கிட்ட தானே சொல்லிருக்கோணும். இல்லையா பஞ்சாயத்தைக் கூட்டியாவது சொல்லி இருக்கலாமே? அதை விட்டுப்புட்டு இப்படி என் புள்ளையைக் கொலை பண்ற அளவுக்கு போயிருக்காங்கன்னா அவிங்களுக்கு எம்முட்டு தகிரியம் இருக்கோணும். இதெல்லாம் தப்பில்லைங்களா? இதுக்கு நீங்களே ஒரு ஞாயத்தை சொல்லுங்க...” என்று கேட்டிட.
அங்கிருந்த யாருக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
தேவேஷ்வரின் நண்பர்கள் கூட்டமும் சரி, புது மாப்பிள்ளையான கார்த்திக் மற்றும் அவனது மனைவியான கீதாவும் சரி, ஊர் மக்களும் சரி அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்புடனே செய்வதறியாது நின்றிருந்தனர்.
வெளியூரில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்று விட்டு அப்போதுதான் வீடு திரும்பி இருந்த கார்த்திக்கின் பெற்றோர்களும் தகவல் அறிந்து அவசர அவசரமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு குழுமியிருந்தக் கூட்டத்தை கண்டு அவர்களுக்கு பயம் இல்லை, ஆனால் தேவேஷ்வரின் நிலையை அறிந்து மனமுடைந்து விட்டனர். தன் மகனுக்காக உயிரை கூட இழக்கத் துணிவான் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கும் இரு குடும்பத்துக்கும் இடையே பல வருடங்களாக பேச்சு வார்த்தையே இல்லை. சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தாரும் பேசிக் கொள்வதில்லை அப்படி இருக்கும் போது தன் மகனுக்காக இந்த அளவிற்கு இறங்கி, தன் உயிரை கூட துச்சமென மதித்து அவன் நேசித்தவளை கட்டி வைத்திருக்கிறானே என்று தேவேஷ்வரின் மேல் அவர்களுக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் பெருகியது.
அனைவரும் வந்து விட்டதை உறுதிசெய்த பஞ்சாயத்து குழுவினர் கோவிலிலேயே இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையைத் துவங்கினார்கள். முதலில் இரு தரப்பினரிடமும் பொத்தாம் பொதுவாக, “ஐயா உங்க பொண்ணும், இவங்க பையனும் கல்யாணம் பண்ணிட்டாங்க இதுல கூட பழகுனவங்கங்குற முறையில, கூட நின்ன பசங்கள்ல ஒருத்தரை குத்தி கொலை பண்ற அளவுக்கு போயிருக்கீங்களே, இதெல்லாம் நல்லாவா இருக்கு, இந்த ஊர் பஞ்சாயத்துல இது மாதிரிரியான புகார் வந்ததே கிடையாது..” என்று ஆரம்பிக்கும் போது இடையில் குறுக்கிட்டனர் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அவளைச் சார்ந்தோர்கள்.
“சரிதானுங்க... உங்க ஊரு பஞ்சாயத்துல இந்த மாதிரி வந்துருக்க வாய்ப்பு இல்லை தானுங்க, ஏன்னா வழக்கமா இங்கிருக்க பசங்க தானுங்க எங்க ஊரு பொம்பளை புள்ளைகளை கூட்டியாந்துடுறானுங்க, இதெல்லாம் என்ன பொழப்புங்களோ?” என்று வரைமுரையின்றி பேசவும் இருதரப்பினர் இடையேவும் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இரு ஊர்க்காரர்களும் வாயிக்கு வந்ததை சொல்லி திட்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் வாய்ச்சண்டை முற்றி இரு தரப்பினரிடையேயும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வாய்ச்சண்டை கைகலப்பாகி மீண்டும் கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே அதகளப்பட்டது.
மீண்டும் அவர்களை அடங்குவதற்குள் பஞ்சாயத்து குழுவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ”இங்க பாருங்க ஒழுங்கு முறையா நீங்க சொல்ல வந்ததை சொல்ற மாதிரி இருந்தா சொல்லுங்க, இல்லன்னா பேசாம ஒதுங்கி நில்லுங்க, கூட்டத்துல பிரச்சினையை உருவாக்காதீங்க” என்று கொஞ்சம் கறாராக சொன்னதும் தான் அடங்கினார்கள்.
“சரிங்க ஐயா, நாங்க சொல்ல வந்ததை சொல்லிப்புடுறோம். நாங்க பக்கத்து ஊர்க்காரவுக, எங்க ஊரு எந்த அளவு கட்டுப்பாடும் பாரம்பரியம் கொண்டதுன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது நாங்க ஏங்கய்யா வேணும்னே பிரச்சினை பண்ண போறோம். இன்னைக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருந்தேனுங்க. கல்யாணத்தன்னைக்கு எம்பொண்ணைத் தூக்கி இருக்காங்க, இதை எப்டீங்க ஐயா எங்களால சும்மா விட முடியும்..?” என்று ஒரு பெற்றோராய் நியாயமான முறையில் தங்களது எண்ணத்தை முன் வைத்தார் பெண்ணின் தந்தை.
அதை போல் நடுநிலையாக அமர்ந்து இருப்பவர்களும் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி,
“ஏம்மா நீ ஒருத்தனை விரும்பி இருந்தா வீட்டுல தாராளமா சொல்லி இருக்கலாமே? உனக்கு மாப்ளை பார்த்து, எல்லாமே முடிவாகி, ஊரு உறவுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, கடனை உடனை வாங்கி எல்லாத்தையும் செஞ்சதுக்கு பிறகு கடைசி நேரத்துல இப்படி பண்றது சரியாம்மா? உன்னோட குடும்பம் இன்னைக்கு நாலு பேரு முன்னாடி அசிங்கப்பட்டு நிக்கிதே அது உனக்கு பரவாயில்லையா? உன்னை பெத்து, வளர்த்து, படிக்க வெச்சு, இவ்வளவு நாளா உன்னை பொத்தி பொத்தி பார்த்துக்கிட்டவங்களுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க தெரியாதா.?” என்று கேட்டதும் மௌனமாய் தலை குனிந்து நின்றாள் கீதா.
சிறிது நேரம் கழித்து அவர்களை நிமிர்ந்து பார்த்தவள், “அவங்க எனக்கு எல்லாமே செஞ்சாங்க தான் நான் இல்லைன்னு சொல்லலைங்க ஐயா. ஆனா நான் இவரை நேசிக்கிறேன்னு சொன்னா, அவங்க எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? கண்டிப்பா வைக்க மாட்டாங்க, என்னை துண்டு துண்டா வெட்டி போடுவாங்களே தவிர இவருக்கு கட்டிக்குடுக்க மாட்டாங்க, ஏன்னா நாங்க வேற வேற ஜாதியாம், அவங்க சொல்ற முதல் காரணமே இதுதான். ஏங்கய்யா தெரியாமத்தேன் கேட்குறேன் காதல் என்ன ஜாதி பார்த்து, அந்தஸ்து பார்த்து, கலரைப் பார்த்தா ஐயா வருது. அது மனசோட சம்மந்தப்பட்டது. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புடிச்சு இருந்துச்சு, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் ஐயா காதலிச்சோம், இதுல என்ன தப்பைக் கண்டுட்டாங்களாம்?
பிடிச்சவங்களோட வாழ்றது தானே ஐயா வாழ்க்கை. பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டு எப்படி ஐயா காலம் முழுக்க வாழ முடியும். ஆனா பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் சொல்லுறது என்னவோ போகப் போக பழகிடும், போக போக எல்லாமே சரியாகிடுங்குறது தான். எங்க அவங்களை மனசாட்சியைத் தொட்டு சொல்ல சொல்லுங்க பாக்கலாம், அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு. அவங்களால சொல்ல முடியாது ஐயா, ஏன்னா அவங்க ஊருக்காக வேணா நடிக்கலாம் ஆனா உண்மையாவே அப்படிப்பட்டவங்க யாரும் சந்தோஷமா இருக்கமாட்டாங்க.
குடும்பத்துக்காகவும், கௌரவத்துக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிற ஒரு பொண்ணுக்கு, எந்தவொரு சூழ்நிலையிலும் தான் நேசிச்சவனை மறுபடியும் நினைச்சு பாக்காம இருக்குற அளவுக்கு நல்லா பார்த்துக்குற கணவன் கிடைப்பானா? கண்டிப்பா கிடைக்கமாட்டான் ஐயா. எங்காவது ஆயிரத்துல ஒன்னு ரெண்டு பேர் இருக்கலாம். இங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது. ஒருவேளை அவ ஏற்கனவே ஒருத்தனை நேசிச்சாங்குற விடயம் கணவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ தெரிய வந்தா அந்த பொண்ணோட நிலமை என்னாகும்னு இதுவரைக்கும் நீங்க யாராவது யோசிச்சு பார்த்துருக்கீங்களா? பெத்தவங்களுக்கு அவங்களோட கௌரவம் முக்கியம். பொண்ணை பெத்தோமா,வளர்த்தோமா, கல்யாணம் பண்ணி வச்சுட்டா நம்மளோட கடமை முடிஞ்சுரும்னு நினைக்கிறீங்க, ஆனா அதுக்கப்புறம் எங்களோடு வாழ்க்கை என்ன ஆகும்னு ஒரு நாளாவது, எந்த பெத்தவங்களாவது எங்களோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாத்திருக்கீங்களா..?” என்று தன் மனக்குமுறல்களை இறக்கி வைத்தாள் கீதா.
“என்னம்மா நீ சொல்றதைப் பார்த்தா, பெத்தவங்க அக்கறையே இல்லாம ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி பேசுற? பெத்தவங்க பிள்ளைகளுக்காக எவ்வளவு பண்றாங்கன்னு உனக்கு தெரியுமா? அவங்க போடுற நகையில இருந்து, அங்க புகுந்த வீட்ல போய் அவங்க பயன்படுத்துற பொருட்கள் வரை அத்தனையும் வாங்கி குடுக்குறாங்க. துணிமணி, நகை நட்டு, சீர்சினத்திங்க, பண்ட பாத்திரங்க, மாப்பிள்ளைக்கு உண்டான நகை, வண்டி வாகனம் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குறாங்க. வீட்டை அடமானம் வெச்சு கடன் வாங்கியாவது தன் பொண்ணோட கல்யாணத்த நல்ல முறையில நடத்தணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் எதுக்கு உங்க சந்தோஷத்துக்காகத் தானே, அப்படி இருக்கும் போது நீயே இப்படி பெத்தவங்களை குறை சொல்லலாமாம்மா?” என்று முதியவர் ஒருவர் கேட்டார்.
“பணங்காசு யாருக்கு வேணும் ஐயா. எவ்வளவு பணம் இருந்தாலும் புகுந்த வீட்ல நல்ல மனுஷங்க அமையலன்னா அந்த வாழ்க்கை நரகம் ஐயா. எனக்கு இவரை புடிச்சிருக்கு அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்ல சொன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க பெரிய பிரச்சினை வரும்னு தான் இந்த முடிவு எடுத்தோம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஐயா நேத்து மதியம் வரைக்குமே எனக்கு கல்யாணம்னு இவருக்குத் தெரியாது. தெரிஞ்சதுக்கு அப்புறம் சாக துணிஞ்சுட்டாரு. இவரோட நண்பர்கள் தான் இவரைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்து என் முன்னால நிறுத்துனாங்க. அப்ப கூட நான் இவரோட போக நினைக்கலை, எங்குடும்பத்தை நினைச்சு தயங்குனேன்.
ஆனா இவங்க தான் பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இல்லன்னா நானும் சராசரியான சாதாரண ஒரு பொண்ணா அப்பா அம்மா பார்த்து வச்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடனேன்னு உதட்டளவுல மட்டும் சிரிச்சுக்கிட்டு, உள்ளுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டு புதைச்சுக்கிட்டு மீதியிருக்க வாழ்க்கை வாழ்ந்திருப்பேன் ஐயா. என் குடும்பத்துக்கு கெட்ட பேரைக் கொண்டு வரணும்னு நான் ஒருநாள் கூட நெனைச்சது கிடையாது அதனால தான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். ஆனா எனக்காக அவரு உயிரை விட தயாரா இருக்கும் போது அவருக்காக நான் இதைக்கூட செய்யலன்னா என்னோட நேசம் இந்த இடத்துல தப்பாகிடும் ஐயா, அதனால தான் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு துணிஞ்சு இவங்களோட வந்துட்டேன். எங்களுக்காக அவரோட நண்பர் இப்ப சாக கிடக்கிறாரு. நாங்க இதுக்கு மேல யாருக்கும் பாரமா இருக்க விரும்பல ஐயா எங்களை விட்ருங்க” என்று அழுகையோடு சொன்னாள் கீதா.
அவள் பேசி முடித்ததும் அதன் தொடர்ச்சியாக கார்த்திக் பேசினான். “ஆமாங்கய்யா என் குடும்பமும் சரி இவளோட குடும்பமும் சரி என்னைக்கும் ஒன்னு சேர வாய்ப்பே கிடையாது. ஏன்னா இரண்டு பக்கமும் ஜாதிதான் பெருசா இருக்கு. ஒருத்தன் பணக்காரனா, ஏழையாங்குறதை விட முன்னுக்கு வந்து நிக்கிறது அவங்க ஜாதி தான். அதனால தான் சொல்றேன் கண்டிப்பா அவங்க எங்களை ஏத்துக்க மாட்டாங்க, இனிமே ஏத்துக்கவும் வேணாம். நாங்க இந்த ஊரை விட்டு எங்கையாவது போயிடுறோம். நல்லா வாழுறமோ, கஷ்டப்படுறமோ ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து மீதி இருக்க வாழ்க்கையை வாழ்ந்துக்குறோம்... இதோட எங்களை விட்டுட சொல்லுங்க"
என்று சொன்ன கார்த்திக் கீதாவின் கரங்களோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி தன் தாய் தந்தையைப் பார்த்தான். அவனது தந்தையோ விரைப்பாக நின்று இருந்தார். அந்த கோலமே அவர் அதீத கோபத்துடன் இருக்கிறார் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவனது தாயோ கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்.
பண்ணையாரின் குடும்பம்
மட்டுமின்றி, ஊர் முக்கியஸ்தர்கள் பெரிய மனிதர்கள் தலைக்கட்டுக்காரர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் கோயிலுக்கு வந்து சேர்ந்து இருந்ததால் கலவரம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டது... எதிரெதிர் தரப்பினர் கைகலப்பை விட்டு விட்டு பிரிந்து நின்றனர்.
அனைவரையும் ஒரு அழுத்தமான பார்வையோடு எதிர்கொண்ட பண்ணையார், குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து கிடக்கும் தன் மகனை ஒரு பார்வை பார்த்து விட்டு துக்கத்தை தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவர் தன் ஆட்களிடம், “என்னடே வேடிக்கை பார்த்துக்கிட்டு மச மசன்னு நிக்கிறீக? மொதல்ல இவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கடே.. என் மகனுக்கு ஏதாவது ஆச்சு நான் யாருன்னு அம்புட்டு பேரும் தெரிஞ்சுக்குவானுகடே. இந்த பஞ்சாயத்தை சுமூகமாக தீர்த்துப்புட்டு போலாம்னுதே வந்தேன். ஆனா எம்மவனுக்கு எதாவது ஆச்சு நானே அம்புட்டு பேரையும் வெட்டி சாச்சுப்புடுவேன்டே. என்னடே நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன் மசமசன்னு நின்னுகிட்டே இருக்கவனுங்க. இப்ப எம்மவனைத் தூக்கிட்டு போறியலா இல்ல நானே தூக்கிட்டு போகவாடே..” என்று தன் கணீர் குரலில் சொன்னதும் பரபரவென்று அங்கிருந்தவர்கள் அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
கூட்டத்தில் நின்றிருந்தவர்களுள் நால்வர் வேகமாக ஓடிவந்து கைத்தாங்கலாக தேவேஷ்வரை தூக்கி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றனர். அந்த வண்டியின் பின்னே அவனது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களும் சென்றார்கள்.
ஆனால், சிவசுப்பிரமணியமோ அவர்களுடன் செல்லாமல் பஞ்சாயத்து தலைவர்களின் முன்னால் தன் புகாரை முன் வைத்தார்.
“நான் இதுநாள் வரைக்கும் இங்க நடக்குற எந்த விடயத்துலையும் நேர்மையாத்தேன் இருந்துருக்கேன். எது செஞ்சாலும் நேர்மையாத்தேன் செஞ்சேன், என் நடவடிக்கையில பொய்யோ, பிராடோ இருந்ததில்லை, அது உங்க எல்லாருக்கும் தெரியும். என் பையன் செஞ்சது தப்பாவே இருக்கட்டுமே, அவன் தப்பு செஞ்சா, அதை அப்பங்குறன் முறையில எங்கிட்ட தானே சொல்லிருக்கோணும். இல்லையா பஞ்சாயத்தைக் கூட்டியாவது சொல்லி இருக்கலாமே? அதை விட்டுப்புட்டு இப்படி என் புள்ளையைக் கொலை பண்ற அளவுக்கு போயிருக்காங்கன்னா அவிங்களுக்கு எம்முட்டு தகிரியம் இருக்கோணும். இதெல்லாம் தப்பில்லைங்களா? இதுக்கு நீங்களே ஒரு ஞாயத்தை சொல்லுங்க...” என்று கேட்டிட.
அங்கிருந்த யாருக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
தேவேஷ்வரின் நண்பர்கள் கூட்டமும் சரி, புது மாப்பிள்ளையான கார்த்திக் மற்றும் அவனது மனைவியான கீதாவும் சரி, ஊர் மக்களும் சரி அடுத்து என்ன நடக்குமோ என்ற பதை பதைப்புடனே செய்வதறியாது நின்றிருந்தனர்.
வெளியூரில் இருக்கும் ஒரு கோயிலுக்கு சென்று விட்டு அப்போதுதான் வீடு திரும்பி இருந்த கார்த்திக்கின் பெற்றோர்களும் தகவல் அறிந்து அவசர அவசரமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கு குழுமியிருந்தக் கூட்டத்தை கண்டு அவர்களுக்கு பயம் இல்லை, ஆனால் தேவேஷ்வரின் நிலையை அறிந்து மனமுடைந்து விட்டனர். தன் மகனுக்காக உயிரை கூட இழக்கத் துணிவான் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. இதற்கும் இரு குடும்பத்துக்கும் இடையே பல வருடங்களாக பேச்சு வார்த்தையே இல்லை. சொத்து பிரச்சனை காரணமாக இரு குடும்பத்தாரும் பேசிக் கொள்வதில்லை அப்படி இருக்கும் போது தன் மகனுக்காக இந்த அளவிற்கு இறங்கி, தன் உயிரை கூட துச்சமென மதித்து அவன் நேசித்தவளை கட்டி வைத்திருக்கிறானே என்று தேவேஷ்வரின் மேல் அவர்களுக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் பெருகியது.
அனைவரும் வந்து விட்டதை உறுதிசெய்த பஞ்சாயத்து குழுவினர் கோவிலிலேயே இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தையைத் துவங்கினார்கள். முதலில் இரு தரப்பினரிடமும் பொத்தாம் பொதுவாக, “ஐயா உங்க பொண்ணும், இவங்க பையனும் கல்யாணம் பண்ணிட்டாங்க இதுல கூட பழகுனவங்கங்குற முறையில, கூட நின்ன பசங்கள்ல ஒருத்தரை குத்தி கொலை பண்ற அளவுக்கு போயிருக்கீங்களே, இதெல்லாம் நல்லாவா இருக்கு, இந்த ஊர் பஞ்சாயத்துல இது மாதிரிரியான புகார் வந்ததே கிடையாது..” என்று ஆரம்பிக்கும் போது இடையில் குறுக்கிட்டனர் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அவளைச் சார்ந்தோர்கள்.
“சரிதானுங்க... உங்க ஊரு பஞ்சாயத்துல இந்த மாதிரி வந்துருக்க வாய்ப்பு இல்லை தானுங்க, ஏன்னா வழக்கமா இங்கிருக்க பசங்க தானுங்க எங்க ஊரு பொம்பளை புள்ளைகளை கூட்டியாந்துடுறானுங்க, இதெல்லாம் என்ன பொழப்புங்களோ?” என்று வரைமுரையின்றி பேசவும் இருதரப்பினர் இடையேவும் வாய்ச்சண்டை ஆரம்பித்தது. இரு ஊர்க்காரர்களும் வாயிக்கு வந்ததை சொல்லி திட்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் வாய்ச்சண்டை முற்றி இரு தரப்பினரிடையேயும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. வாய்ச்சண்டை கைகலப்பாகி மீண்டும் கூச்சலும் குழப்பமுமாக அந்த இடமே அதகளப்பட்டது.
மீண்டும் அவர்களை அடங்குவதற்குள் பஞ்சாயத்து குழுவிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. ”இங்க பாருங்க ஒழுங்கு முறையா நீங்க சொல்ல வந்ததை சொல்ற மாதிரி இருந்தா சொல்லுங்க, இல்லன்னா பேசாம ஒதுங்கி நில்லுங்க, கூட்டத்துல பிரச்சினையை உருவாக்காதீங்க” என்று கொஞ்சம் கறாராக சொன்னதும் தான் அடங்கினார்கள்.
“சரிங்க ஐயா, நாங்க சொல்ல வந்ததை சொல்லிப்புடுறோம். நாங்க பக்கத்து ஊர்க்காரவுக, எங்க ஊரு எந்த அளவு கட்டுப்பாடும் பாரம்பரியம் கொண்டதுன்னு உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும். அப்படி இருக்கும் போது நாங்க ஏங்கய்யா வேணும்னே பிரச்சினை பண்ண போறோம். இன்னைக்கு என் பொண்ணுக்கு கல்யாணம் வச்சுருந்தேனுங்க. கல்யாணத்தன்னைக்கு எம்பொண்ணைத் தூக்கி இருக்காங்க, இதை எப்டீங்க ஐயா எங்களால சும்மா விட முடியும்..?” என்று ஒரு பெற்றோராய் நியாயமான முறையில் தங்களது எண்ணத்தை முன் வைத்தார் பெண்ணின் தந்தை.
அதை போல் நடுநிலையாக அமர்ந்து இருப்பவர்களும் அந்த பெண்ணின் பக்கம் திரும்பி,
“ஏம்மா நீ ஒருத்தனை விரும்பி இருந்தா வீட்டுல தாராளமா சொல்லி இருக்கலாமே? உனக்கு மாப்ளை பார்த்து, எல்லாமே முடிவாகி, ஊரு உறவுக்கெல்லாம் சொல்லி அனுப்பி, கடனை உடனை வாங்கி எல்லாத்தையும் செஞ்சதுக்கு பிறகு கடைசி நேரத்துல இப்படி பண்றது சரியாம்மா? உன்னோட குடும்பம் இன்னைக்கு நாலு பேரு முன்னாடி அசிங்கப்பட்டு நிக்கிதே அது உனக்கு பரவாயில்லையா? உன்னை பெத்து, வளர்த்து, படிக்க வெச்சு, இவ்வளவு நாளா உன்னை பொத்தி பொத்தி பார்த்துக்கிட்டவங்களுக்கு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்க தெரியாதா.?” என்று கேட்டதும் மௌனமாய் தலை குனிந்து நின்றாள் கீதா.
சிறிது நேரம் கழித்து அவர்களை நிமிர்ந்து பார்த்தவள், “அவங்க எனக்கு எல்லாமே செஞ்சாங்க தான் நான் இல்லைன்னு சொல்லலைங்க ஐயா. ஆனா நான் இவரை நேசிக்கிறேன்னு சொன்னா, அவங்க எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறி எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா? கண்டிப்பா வைக்க மாட்டாங்க, என்னை துண்டு துண்டா வெட்டி போடுவாங்களே தவிர இவருக்கு கட்டிக்குடுக்க மாட்டாங்க, ஏன்னா நாங்க வேற வேற ஜாதியாம், அவங்க சொல்ற முதல் காரணமே இதுதான். ஏங்கய்யா தெரியாமத்தேன் கேட்குறேன் காதல் என்ன ஜாதி பார்த்து, அந்தஸ்து பார்த்து, கலரைப் பார்த்தா ஐயா வருது. அது மனசோட சம்மந்தப்பட்டது. எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் புடிச்சு இருந்துச்சு, ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா எதிர்கால வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுச்சு அதான் ஐயா காதலிச்சோம், இதுல என்ன தப்பைக் கண்டுட்டாங்களாம்?
பிடிச்சவங்களோட வாழ்றது தானே ஐயா வாழ்க்கை. பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டு எப்படி ஐயா காலம் முழுக்க வாழ முடியும். ஆனா பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிற எல்லாரும் சொல்லுறது என்னவோ போகப் போக பழகிடும், போக போக எல்லாமே சரியாகிடுங்குறது தான். எங்க அவங்களை மனசாட்சியைத் தொட்டு சொல்ல சொல்லுங்க பாக்கலாம், அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு. அவங்களால சொல்ல முடியாது ஐயா, ஏன்னா அவங்க ஊருக்காக வேணா நடிக்கலாம் ஆனா உண்மையாவே அப்படிப்பட்டவங்க யாரும் சந்தோஷமா இருக்கமாட்டாங்க.
குடும்பத்துக்காகவும், கௌரவத்துக்காகவும் கல்யாணம் பண்ணிக்கிற ஒரு பொண்ணுக்கு, எந்தவொரு சூழ்நிலையிலும் தான் நேசிச்சவனை மறுபடியும் நினைச்சு பாக்காம இருக்குற அளவுக்கு நல்லா பார்த்துக்குற கணவன் கிடைப்பானா? கண்டிப்பா கிடைக்கமாட்டான் ஐயா. எங்காவது ஆயிரத்துல ஒன்னு ரெண்டு பேர் இருக்கலாம். இங்க எல்லாரும் நல்லவங்க கிடையாது. ஒருவேளை அவ ஏற்கனவே ஒருத்தனை நேசிச்சாங்குற விடயம் கணவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ தெரிய வந்தா அந்த பொண்ணோட நிலமை என்னாகும்னு இதுவரைக்கும் நீங்க யாராவது யோசிச்சு பார்த்துருக்கீங்களா? பெத்தவங்களுக்கு அவங்களோட கௌரவம் முக்கியம். பொண்ணை பெத்தோமா,வளர்த்தோமா, கல்யாணம் பண்ணி வச்சுட்டா நம்மளோட கடமை முடிஞ்சுரும்னு நினைக்கிறீங்க, ஆனா அதுக்கப்புறம் எங்களோடு வாழ்க்கை என்ன ஆகும்னு ஒரு நாளாவது, எந்த பெத்தவங்களாவது எங்களோட இடத்துல இருந்து யோசிச்சுப் பாத்திருக்கீங்களா..?” என்று தன் மனக்குமுறல்களை இறக்கி வைத்தாள் கீதா.
“என்னம்மா நீ சொல்றதைப் பார்த்தா, பெத்தவங்க அக்கறையே இல்லாம ஏதோ கடமைக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற மாதிரி பேசுற? பெத்தவங்க பிள்ளைகளுக்காக எவ்வளவு பண்றாங்கன்னு உனக்கு தெரியுமா? அவங்க போடுற நகையில இருந்து, அங்க புகுந்த வீட்ல போய் அவங்க பயன்படுத்துற பொருட்கள் வரை அத்தனையும் வாங்கி குடுக்குறாங்க. துணிமணி, நகை நட்டு, சீர்சினத்திங்க, பண்ட பாத்திரங்க, மாப்பிள்ளைக்கு உண்டான நகை, வண்டி வாகனம் வரைக்கும் எல்லாத்தையும் பார்த்து பார்த்து வாங்குறாங்க. வீட்டை அடமானம் வெச்சு கடன் வாங்கியாவது தன் பொண்ணோட கல்யாணத்த நல்ல முறையில நடத்தணும்னு நினைக்கிறாங்க. இதெல்லாம் எதுக்கு உங்க சந்தோஷத்துக்காகத் தானே, அப்படி இருக்கும் போது நீயே இப்படி பெத்தவங்களை குறை சொல்லலாமாம்மா?” என்று முதியவர் ஒருவர் கேட்டார்.
“பணங்காசு யாருக்கு வேணும் ஐயா. எவ்வளவு பணம் இருந்தாலும் புகுந்த வீட்ல நல்ல மனுஷங்க அமையலன்னா அந்த வாழ்க்கை நரகம் ஐயா. எனக்கு இவரை புடிச்சிருக்கு அதனால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். வீட்ல சொன்னா கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க பெரிய பிரச்சினை வரும்னு தான் இந்த முடிவு எடுத்தோம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ஐயா நேத்து மதியம் வரைக்குமே எனக்கு கல்யாணம்னு இவருக்குத் தெரியாது. தெரிஞ்சதுக்கு அப்புறம் சாக துணிஞ்சுட்டாரு. இவரோட நண்பர்கள் தான் இவரைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்து என் முன்னால நிறுத்துனாங்க. அப்ப கூட நான் இவரோட போக நினைக்கலை, எங்குடும்பத்தை நினைச்சு தயங்குனேன்.
ஆனா இவங்க தான் பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணி வெச்சாங்க. இல்லன்னா நானும் சராசரியான சாதாரண ஒரு பொண்ணா அப்பா அம்மா பார்த்து வச்ச பையனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கடனேன்னு உதட்டளவுல மட்டும் சிரிச்சுக்கிட்டு, உள்ளுக்குள்ளையே எல்லாத்தையும் போட்டு புதைச்சுக்கிட்டு மீதியிருக்க வாழ்க்கை வாழ்ந்திருப்பேன் ஐயா. என் குடும்பத்துக்கு கெட்ட பேரைக் கொண்டு வரணும்னு நான் ஒருநாள் கூட நெனைச்சது கிடையாது அதனால தான் வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். ஆனா எனக்காக அவரு உயிரை விட தயாரா இருக்கும் போது அவருக்காக நான் இதைக்கூட செய்யலன்னா என்னோட நேசம் இந்த இடத்துல தப்பாகிடும் ஐயா, அதனால தான் என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு துணிஞ்சு இவங்களோட வந்துட்டேன். எங்களுக்காக அவரோட நண்பர் இப்ப சாக கிடக்கிறாரு. நாங்க இதுக்கு மேல யாருக்கும் பாரமா இருக்க விரும்பல ஐயா எங்களை விட்ருங்க” என்று அழுகையோடு சொன்னாள் கீதா.
அவள் பேசி முடித்ததும் அதன் தொடர்ச்சியாக கார்த்திக் பேசினான். “ஆமாங்கய்யா என் குடும்பமும் சரி இவளோட குடும்பமும் சரி என்னைக்கும் ஒன்னு சேர வாய்ப்பே கிடையாது. ஏன்னா இரண்டு பக்கமும் ஜாதிதான் பெருசா இருக்கு. ஒருத்தன் பணக்காரனா, ஏழையாங்குறதை விட முன்னுக்கு வந்து நிக்கிறது அவங்க ஜாதி தான். அதனால தான் சொல்றேன் கண்டிப்பா அவங்க எங்களை ஏத்துக்க மாட்டாங்க, இனிமே ஏத்துக்கவும் வேணாம். நாங்க இந்த ஊரை விட்டு எங்கையாவது போயிடுறோம். நல்லா வாழுறமோ, கஷ்டப்படுறமோ ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருந்து மீதி இருக்க வாழ்க்கையை வாழ்ந்துக்குறோம்... இதோட எங்களை விட்டுட சொல்லுங்க"
என்று சொன்ன கார்த்திக் கீதாவின் கரங்களோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி தன் தாய் தந்தையைப் பார்த்தான். அவனது தந்தையோ விரைப்பாக நின்று இருந்தார். அந்த கோலமே அவர் அதீத கோபத்துடன் இருக்கிறார் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவனது தாயோ கண்ணீரும் கம்பலையுமாக நின்றிருந்தார்.