Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.
உறவின் தேடல் -04

சமையலறைக்குள் சென்றவள் மளமளவென்று சமையல் வேலையை ஆரம்பித்தாள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அப்பளம், வடை, போண்டா, பஜ்ஜி கூடவே கொழுக்கட்டை என அனைத்தையும் செய்து முடித்து விட்டு அவள் அப்பாடா என்று கீழே அமரும் போது மணி எட்டை கடந்திருந்தது.

அவ்வளவு நேரமும் சமையல் அறையை விட்டு வெளியே வரவில்லை. சமைத்து முடித்து வெளியே வரும் போதும் கூட அந்த வீட்டில் வசிப்பவர்கள் யாரும் கீழே வரவும் இல்லை.‌ ஒற்றை ஆளாக அனைத்தையும் சமைத்து முடித்தவளுக்கு எப்போதும் போல் களைப்பாக இருந்தாலும், அதையும் மீறி இவ்வீட்டினர் தன்னிடம் நாலு வார்த்தை பாசமாக பேசி விட மாட்டார்களா? என்ற எண்ணமே அவளை ஏங்க வைத்தது. சமைத்த அனைத்தையும் கொண்டு வந்து ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த உணவு மேஜையில் பரப்பி வைத்தாள்..

அந்த வீடு சின்ன வீடு என்று சொல்ல முடியாது. அதே சமயம் மிகப் பெரிய கோட்டை என்றும் சொல்லிட முடியாது. வெளியில் அந்த வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இருந்தது.‌ அலங்காரமான பெரிய இரும்பு கேட் ஒன்று கார் உள்ளே நுழைவதற்காக பொருத்தப்பட்டிருந்தது. சற்று தள்ளி சிறிய கேட் ஒன்றும் இருந்தது.அந்த கேட்டைத் திறந்தால் சிறிய அளவிலான நடைபாதை வீட்டின் நுழைவாயில் வரை செல்லும்.

அந்நடை பாதையின் இரு புறமும் அழகழகான பூக்கள் தாங்கியிருக்கும் பூச்செடிகளை வைத்திருந்தனர்.‌அவற்றில் மலர்ந்திருந்த அழகான பூக்கள் அழகோடு வாசனையையும் பரப்பிக் கொண்டிருந்தன. அடுத்து வீட்டின் முகப்பில் பனிரெண்டு தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரை போடப்பட்டிருந்தது. அதோடு வீட்டினுள் நுழைவதற்கான நுழைவாயிலின் இருபுறமும்
வருவோர் அமர்வதற்காக திண்ணை அமைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் நுழைவாயில் தேக்கு மரத்தால் இழைக்கப்பட்டு, கடவுளின் உருவ சிலைகள் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வேலைப்பாடுகளைக் கொண்ட கதவுகளை உடைய வாசல்..‌ அதுவும் இரண்டு கதவுகளைக் கொண்டதாக இருந்தது..

அடுத்து நூறு பேர் ஒன்றாக அமரும் அளவிற்கு பெரிய ஹால். ஹாலின் ஒரு மூலையில் டைனிங் டேபிளும் அதனருகில் கை கழுவுவதற்கான வாஸ்பேஷன் வைக்கப்பட்டிருந்தது. ஹாலின் வலது மூலையில் சமையலறையும் இடது மூலையில் பூஜை அறையும் இருக்க, இடது மூலையை ஒட்டி மேலே செல்லும் படியும், வலது மூலையில் சமையல் அறையை விட்டு சற்று தள்ளி ஒரு பெரிய அறையும் இருந்தது.

மேலே வலது புறம் மூன்று அறையும் இடதுபுறம் மூன்று அறையும் இருக்க. அதே இடது புறத்தில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளும் இருந்தன..
வலது பக்கம் இருந்த அந்த ஒற்றை அறையை ஒட்டி சிறிய சந்தொன்று பின்வாசலுக்கு செல்வதற்காக விடப்பட்டிருக்க அதில் சென்றால் பின்னால் கிணறும் அதையொட்டி துணி துவைப்பதற்கான கல்லும் போடப்பட்டிருந்தன. யாராவது விருந்தினர் வந்தால் உபயோகப் படுத்திக் கொள்வதற்காக பின்னே ஒரு கழிவறையும். குளியலறையும் கட்டப்பட்டிருந்தது. அந்த கழிவறைக்கு சிறிது தூரத்தில் அந்த வீட்டை ஒட்டி வலது ஓரத்திலேயே சிறிய அறை ஒன்றும் இருந்தது. அது உபயோகமில்லாத பழைய சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக இருந்தது. என்று மதுரவாணி இங்கு வந்து சேர்ந்தாளோ அன்றிலிருந்து அதுதான் அவளது அறை..

சமைத்த உணப் பதார்த்தங்கள் அனைத்தையும் உணவு மேஜையில் எடுத்து வைத்து விட்டு அவள் பரிமாறுவதற்காக அங்கேயே நின்று இருந்த வேளையில் அந்த வீட்டின் நபர்கள் ஒவ்வொருத்தராக தங்களது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள்.

முதலில் வந்தது அந்த வீட்டின் பெரிய மனிதரும் அந்த ஊரின் முன்னாள் தலைவருமான ஆதிவிநாயகம். அவரை அடுத்து இறங்கி வந்தது அவரது தர்மபத்தினி பூங்கோதை நாச்சியார்.

அதற்கடுத்து தம்பதி சமேதராக இறங்கி வருவது இவர்களது மூத்த மகன் சுந்தரேசன், அவரது மனைவி மீனாட்சி.
அதற்கடுத்து ஆதிவிநாயகம்
பூங்கோதை நாச்சியாரின் இரண்டாவது மகன் கதிரேசன் அவரது மனைவி ஆனந்தவள்ளி.

ஆறு பேரும் நேராக பூஜை அறையின் முன்பு வந்து நிற்க கடைசி மருமகளான ஆனந்தவள்ளி பூஜையை முடித்து அனைவருக்கும் ஆரத்தி காட்டும் வேளையில் தான் அவர்களது வாரிசுகள் கீழே இறங்கி வந்தனர்.

சுந்தரேசன் - மீனாட்சி தம்பதியரின் மூத்த புதல்வன் அகில் பிரசாத்..
இரண்டாவது பெண் பிள்ளை
ஆஷ்விதா.

கதிரேசன் - ஆனந்தவள்ளி தம்பதியருக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் தான்.
மூத்தவன் - புகழேந்தி
இளையவன் - ஆதவ்..

அகில் தந்தை செய்யும் எக்ஸ்போர்ட் பிசினஸ்ஸைக் கையிலெடுத்து திறம்பட செயலாற்றி கொண்டிருக்கும் ஒரு வளர்ந்துவரும் பிசினஸ்மேன். ஆஷ்விதா லண்டனில் புகழ்பெற்ற கல்லூரியில் தனக்குப் பிடித்த பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்டை முதலாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

புகழேந்தி- அவனும் தன் அண்ணன் அகிலின் வழிகாட்டுதலின் படி தன் தந்தையோடு சேர்ந்து தங்களது எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் நிறுவனத்தை கவனித்துக் கொண்டே, கற்றுக் கொண்டிருக்கிறான்.

ஆதவ் தற்போது தான் கல்லூரி படிப்பை முடிக்க உள்ளான். அந்த வீட்டின் கடைக்குட்டி ஆஷ்விதா தான்.

ஆஷ்விதா லண்டனில் இருப்பதால் மற்ற அனைவரும் பூஜையறையின் முன்பு கூடி இருந்தார்கள். அன்று மீனாட்சியின் பிறந்தநாள் இதற்காகத்தான் வாணி தேவைக்கு அதிகமாகவே சமைத்து வைத்திருந்தாள். அனைவரும் பூஜையை முடித்துக் கொண்டு நேராக உணவு மேஜையில் வந்து அமர்ந்தார்கள்.

அவர்கள் வருவதைக் கண்டவள் வேகவேகமாக அனைவருக்கும் அவரவர் இருக்கையின் முன்பு தட்டை நகர்த்தி அதன் மீது வாழை இலையைப் பரப்பி வைத்தவள் சமைத்த உணவுகளை பரிமாற ஆரம்பித்தாள்.

அவர்கள் அனைவரும் டேபிளை நெருங்குவதற்குளாகவே பரிமாறி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று மறைய முயன்ற வேளையில், “நில்லுடி..” என்ற மீனாட்சியின் குரல் கேட்டு அப்படியே நின்றாள்.

“இங்கே வாடி” என்று மீண்டும் அதிகாரமாய் ஒலித்தது மீனாட்சியின் குரல்.. மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி சாந்த சொரூபி என்றால், இந்த மீனாட்சி அடிக்கடி கோபத்தில் பத்திரகாளி அவதாரம் எடுப்பவர்.

அவரது குரல் கேட்டு பொங்கி வந்த பயத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவள் தலை நிமிராது இரண்டு அடி எடுத்து வைத்து அவர் அருகில் வந்து நின்றாள்.

“யாரைக் கேட்டுடி நீ இவ்வளவு சமைச்ச?” என்றாள் மீனாட்சி அதிகாரமாய்..

அதற்கு அவளோ மெலிதான குரலில், ”இன்னைக்கு உங்க பிறந்த நாள் அம்மா அதனாலதான்” என்ற வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே அவளது கன்னத்தில் அறை விழுந்திருந்தது. அதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்போதும் அடியை வாங்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் தான் நின்று கொண்டிருந்தாள் வாணி. கண்களில் கண்ணீர் துளிர் விட்டிருந்தது.

“இதெல்லாம் யாரு உங்க அப்பன் சம்பாதிச்சுக் குடுத்ததுன்னு நெனச்சிட்டு இருக்கியா? உன் இஸ்டத்துக்கு கண்டதையும் சமைக்கிறதுக்கு. எப்பவும் யார் என்ன சாப்பிடுவாங்களோ, அதையே நீ சமைக்க வேண்டியது தானே. நீ ஒரு வேலைக்காரி,‌ வேலைக்காரியா தான் இருக்கணுமே தவிர இந்த வீட்டுக்கு எஜமானியாக நினைச்சா இப்படி தான் அவமானப்பட வேண்டி வரும்.. ” என்று சொன்னவள் அகிலின்,
“மாம் எனக்கு லேட் ஆகுது” என்ற குரலில்..

“இதோ வந்துட்டேன் கண்ணா..” என்று அன்பொழுக பேசியவாறு தன் இருக்கையில் சென்று அமர்ந்து அவள் பரிமாறி வைத்த உணவை உண்ண ஆரம்பித்தார். அவர் ஒருப்பிடி உணவை எடுத்து வாயில் வைத்து மறுகணம் மற்றவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள்.

அழுது கொண்டே சமையலறைக்குள் நுழைந்த வாணிக்கு எப்போதும் கிடைக்கும் அதே ஏமாற்றம்..
மனம் முழுமையாக ஏமாந்த வேதனையில் வலித்தது. தன்னைத் தவிக்க விட்டு விட்டு சென்ற பெற்றோர்களை எண்ணி மனம் ஊமையாய் அழுதது. அவர்களோடவே தன்னையும் கூட்டிக் கொண்டு சென்றிருந்தால் தனக்கு இத்தனை இன்னல்களும், வேதனைகளும், வலிகளும் வந்திருக்காதே என்றவள் தினமும் நினைக்காத நிமிடங்கள் கிடையாது.
இப்பவும் அதையே நினைத்தவளுக்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.. ஆனால் அவளுக்கு அந்த குடுப்பினைக் கூட இல்லை. சுதந்திரமாக அழக்கூட முடியவில்லை. அடுத்து அதிகாரமாய் அழைத்தான் அகில்,“ஏய் இதை வந்து எடுத்துட்டு போ” என்று சொல்லி சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விட்டு, அவன் கையை துடைத்தவாறு எழுந்து சென்று விட. இவளோ எதுவும் பேசாமல் இலையை டஸ்ட்பின்னில் போட்டு விட்டு தட்டைக் கொண்டு வந்து பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்தில் வைத்து விட்டு மதிய சமையலுக்கான வேலையை ஆரம்பித்தாள்.

அனைவரும் உணவருந்தி முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருக்க தயக்கத்துடன் ஆரம்பித்தார் பூங்கோதை..
“அம்மா மீனாட்சி இந்த வாணி பனிரெண்டாவது முடிச்சிட்டா ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடலாமா?” என்று கேட்க.

சட்டென்று நிமிர்ந்து தன் மாமியாரை முறைத்தவள்,
“என்ன அத்தை மறந்துட்டீங்களா? அவ அப்பன் யாரு, இவ யாரு எதுக்கு இங்க வந்துருக்கான்னு தெரிஞ்சும் அவளை காலேஜ் படிக்க வைக்கணும்னு சொல்றீங்க. போதும் போதும் ஒரு வீட்டுக்கு வேலைக்காரியா போறதுக்கு அவளுக்கு இந்தப் படிப்பு போதும்” என்றார் சுள்ளென்று.

அதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் முகம் சுருக்கிய சுந்தரேசன் மெதுவாக வாயை திறந்தார்.‌ “என்னமா இது ஆயிரம் இருந்தாலும் அவ உன்னோட அண்ணன் பொண்ணு இல்லையா? அவகிட்ட ஏன் இப்படி நடந்துக்குற. அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா? பாவம் மா சின்ன பொண்ணு” என்றார்.

“அவங்கப்பா செஞ்சதை நான் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் மாமா.‌எதுவும் இவளோட தப்பு கிடையாது தான். ஆனா அவருக்கு பொண்ணா பொறந்துட்டாளே அதான் அவ செஞ்ச தப்பு. அன்னைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு உதவி கேட்க போனதுக்கு, அவர் சொன்ன வார்த்தைகளை என்னால எப்பவுமே மறக்கவே முடியாது மாமா. அவரை மட்டுமில்ல அவரைச் சேர்ந்த யாரையுமே நான் மன்னிக்க மாட்டேன். அப்ப என்ன காரணத்துக்காக இவளை இங்க கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிறீங்களா, கண்டிப்பா அவளை நல்லபடியா பாத்துக்கணும்னு மட்டும் நினைச்சு கூட்டிட்டு வரக் கிடையாது.‌சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்குறதுக்கு மட்டும் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்..

சாகும்போது கூட அவர் செஞ்ச தப்பை உணரலை. என்ன சொல்லிட்டு இறந்து போனாரு தெரியுமா?எனக்கு கடன் நிறைய இருக்கு, சொத்தை வித்து கடனையெல்லாம் கட்டிடு. ஆனா கடைசி வரைக்கும் என் பொண்ண மட்டும் கைவிட்டுடாதமா. உனக்கு நான் செஞ்சதுக்கெல்லாம் நன்றிக்கடனா இதை மட்டும் செய்யின்னு சொல்லிட்டு அவர் செத்துப் போனார். அவர் செஞ்சது நல்லது கிடையாது எனக்கு கெட்டது தான் செஞ்சிருக்காரு. அதான் அதோட பலனை மகளுக்குக் குடுக்குறேன். அவரை பழிவாங்க முடியாது அதான் இவளை கொடுமை பண்றேன். அப்பா செஞ்ச தப்புக்கு மக தண்டனை அனுபவிக்கட்டும். இதைப்பத்தி இனிமே யாரும் பேசாதீங்க. இந்த வீட்டுல நான் யாரையும் மரியாதை குறைவாக நடத்துனது கிடையாது.இந்த விஷயத்துல மட்டும் நீங்க என்னை எதுவும் சொல்லக்கூடாதுன்னு இவளைக் கூட்டிட்டு வந்த அன்னைக்கே சொல்லியிருந்தேன். அதை விட்டுட்டு மறுபடியும் எதுக்கு இந்த பேச்சை எடுக்குறீங்க? அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் புருஞ்சுக்கங்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றவர் அலுவலகம் செல்ல தயாராகி வந்தார்..

ஆம் சுந்தரேசன். மீனாட்சி இருவரும் அலுவலகத்திற்கும் செல்வார்கள். தற்போது அலுவலத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் தன் பிறந்தநாளை முன்னிட்டு புது உடையும், ஒரு மாத சம்பளத்தை போனசாகவும் வழங்க ஏற்பாடு செய்து இருந்ததால் தற்போது கணவரோடு கிளம்புகிறார்.

தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உடையும், பணமும் வழங்க நினைக்கும் மீனாட்சியின் மனதிற்கு சொந்த அண்ணன் மகளுக்கு ஒரு உடை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கிழிந்து போன பழைய உடைகள் தான் அவளுக்கு எப்போதுமே புது ஆடைகள். இதோ இப்போது கூட நைந்து,‌ வெளுத்துப்போன சுடிதார் ஒன்றைத் தான் போட்டிருக்கிறாள்.

மீனாட்சி வேறு எந்த விஷயத்திலும் இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிப்பது கிடையாது. 'அவள் தன் அண்ணன் மகள். தான் பட்ட கஷ்டத்திற்கும், அவமானத்திற்கும் அவளை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படித்தான் நடத்துவேன். நீங்கள் யாரும் என்னைக் கேள்வி கேட்க கூடாது. மீறி கேட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு வாணியை இங்கு அழைத்து வரும்போது சொல்லி இருந்த காரணத்தினால் இதுவரை யாரும் மீனாட்சியை இந்த விஷியத்தில் எதிர்த்து பேசியது கிடையாது.

ஏனோ, இப்போது இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதற்கு முன்பு இவர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அகில், புகழேந்தி இருவரும் கல்லூரி படிக்கும் போது மிகவும் வறுமையான சூழல் தான். அப்போதெல்லாம் உதவி செய்யாத மாமன் மீது அகிலுக்குமே கோபம் இருந்தது. அதனால் தான் அந்த கோபம் அப்படியே அவர்களின் மகள் மீதும் பிரதிபலிக்கிறது.

பெரிதாக அவளிடம் மற்றவர்கள் யாரும் பேசமாட்டார்கள். பெரியவர்கள் கூட ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வார்கள். ஆதவ் மட்டும் தான் அவளிடம் சற்று கலகலப்பாக பேசுவான்.

அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் மதிய உணவினை சமைத்து முடித்து விட்டு பின்புறம் இருக்கும் தன் அறைக்கு செல்லலாம் என்று அவள் நகர முயன்ற வேளையில் அவள் முன்னால் வந்து நின்றான் ஆதவ்.

என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டவளிடம், ”இந்தா..” என்று ஒரு கவரை நீட்டினான் ஆதவ்.

“என்னது இது?“ என்று அவள் கேட்டதும், சுற்றியும் முற்றியும் யாராவது இருக்கிறார்களா என்று விழியால் அலசி ஆராய்ந்து பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “உனக்காக ஒரு சுடிதார் கொண்டு வந்துருக்கேன் போட்டுக்கோ” என்றான்.

“எனக்கா? ஏது? முதலாளியம்மா குடுத்தாங்களா?”என்று ஆர்வம் மின்ன ஒருவித எதிர்பார்ப்போடு அவள் கேட்க.

அவனோ இல்லை என்று தலையை அசைத்தவாறு,
“என்னோட பாக்கெட் மணியில இருந்து மிச்சம் புடிச்சு சேர்த்து வச்சு உனக்காக வாங்கிட்டு வந்தேன். நானும் நீ எங்க வீட்டுக்கு வந்த மூனு மாசமா பார்க்குறேன். நீட்டாவே டிரஸ் பண்ண மாட்டேங்குற. ஏன்னு தெரியாம தலையை பிச்சுக்கிட்டேன்.கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், பெரியம்மா தான் உன்னை வேற டிரஸ் போட விடமாட்டேங்குறாங்கன்னு. அவங்க உன்னை இப்படி நடத்துறது எனக்கு பிடிக்கல வாணி.. உனக்கும் ஆஷ்விக்கும் ஒரே ஏஜ் தான்.‌ அவ லண்டன் போய் காலேஜ் படிக்கிறா, ஆனா நீ இப்படி இருக்க. அதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இதைப் போட்டுக்க, ப்ளீஸ் எனக்காக போட்டுக்க வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத” என்றான் கெஞ்சலாய்.

வேண்டாம் என்று சொல்ல வாய் எடுத்தவள் அவன் பாவனையில்,
“சரி வாங்கிக்கிறேன்.. தேங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அதைக் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். மீண்டும் தன் அறைக்குச் சென்றவள் உடையை வைத்து விட்டு கிணற்றடிக்கு வந்தாள். பின்புறத்திற்கு யாரும் அவ்வளவாக வருவது கிடையாது என்பதால் அவள் விருப்பம் போல் மலர் செடிகளை வளர்க்கிறாள். வளர்க்கிறாளே ஒழிய அவள் பூ வைப்பதற்கு அனுமதி கிடையாது. கிணற்றில் இருந்து நீரை இறைத்து அங்கு இருந்த குளியலறையில் குளித்து முடித்து தன்னறைக்கு வந்து அந்த புது உடையை வெகு மாதங்களுக்கு அணிந்து கொண்டாள். ஈரக்கூந்தலை துவட்டி தளர்வாகப் பின்னியவள் வாங்கி வைத்திருந்த ரவையை வைத்து உப்புமா செய்தாள்.அதை ஒரு டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல தயாரானாள்.

மற்றவர்கள் அனைவருக்கும் அவரவர் அறையிலேயே குளியலறை, கழிவறை உள்ளது. ஆனால் இவள் இங்கிருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் பயன்படுத்த வேண்டும். பின்புறமிருக்கும் கழிவறையைத் தான் பயன்படுத்த வேண்டும்,‌ அங்கிருக்கும் குளியலறையைத் தான் பயன்படுத்த வேண்டும். ஏன் உணவு கூட அவளே தனியாகத் தான் சமைத்து உண்ண வேண்டும். அந்த வீட்டுக்குள் சமைக்கும் உணவை சாப்பிட மட்டுமல்ல, உப்பு, காரம் கூட பார்க்கக் கூடாது என்பது மீனாட்சியின் கட்டளை. ஏனோ வாணி இதுவரை அங்கிருக்கும் யாரையும் எதற்காகவும் எதுர்த்து பேசியதில்லை. மீனாட்சி எது சொன்னாலும் கேட்டுக்கொள்வாள். காரணம் என்ன என்பதை அவள் மட்டுமே அறிவாள்..

தனக்கு இருக்கும் ஒரே சொந்தம் தன் அத்தையும்,அத்தை குடும்பமும் தான் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டுவதற்காகத் தான் இப்போது கோவிலுக்கு செல்கிறாள்.‌ அங்கு தன் வாழ்வை புரட்டிப் போடப் போகும் சம்பவம் நிகழப் போவதை அறியாமல் வீட்டில் இருந்து பறித்த மலர்களை எடுத்துக் கொண்டு நடந்தே கோவிலுக்கு சென்றாள் மதுர வாணி.

மணம் பரப்பும் மலர்களை சூடிடக்கூட மங்கையவளுக்கு அனுமதியில்லையாம்..
ஆனால் விதி செய்த சதியினால்
சிகையை அலங்கரிக்க வேண்டிய மலர்கள் அவள்
குறுங்கழுத்தை அலங்கரிக்க....
மாலை சூட்டிய கரங்களே
பேதையிவளின் மார்பில் உயிருள்ள வரை தவழும் உன்னதப் பொருளையும் உரிமையுடன் சூட்டிடுதே..!

- தேடல் தொடரும்....




கருத்துத்திரி

 
உறவின் தேடல் -05

வேகவேகமாக கோயிலுக்கு நடந்து சென்றவள் கோவில் இருக்கும் தெருவில் நுழையும் போது அதன் மூலையில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமர்ந்திருந்த பெரியவரை நெருங்கினாள். தன் கையிலிருந்த டிபன் பாக்சை அந்த பெரியவரிடம் நீட்ட, அவரும் அதில் இருந்த உப்புமாவை வாங்கி தன்னிடம் இருந்த தட்டில் கொட்டி கொண்டு டிபன் பாக்சை அவளிடமே திருப்பிக் கொடுத்தவர், “நீ நல்லா இருக்கணும் தாயி. இந்த உலகத்துல எத்தனையோ பேரு என்னை மாதிரி இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் யாருமே, உன்ன மாதிரி உதவி செய்யிறது கிடையாது தாயி. என்னைக் கடந்து எத்தனையோ பேர் போறாங்க. அவங்க எல்லாம் என்னை பரிதாபமா பாப்பாங்க, சிலபேர் கேவலமா பாப்பாங்க, சில பேர் அருவருப்பா பார்ப்பாங்க. ஆனா நீ சக மனுஷனா பார்த்த தாயி. அதுமட்டுமில்லாம மறக்காம இந்த மூனுமாசமா தினமும் எனக்கு சோறு போடுறது நீதான் தாயி.நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் தாயி. அந்த சாமி உன்னை நல்லா வெச்சிருக்கணும்னு வேண்டிக்கிறேன் தாயி” என்று சொல்லி அவளைக் கையெடுத்து கும்பிட்டார்.

அவர் கையைப் பிடித்து கீழே இறக்கி விட்டவள், “இங்க யாருக்கும் யாரும் உசந்தவங்க கிடையாது ஐயா. சாமி மட்டும்தான் எல்லாத்தை விட உசந்தது. ஏதோ என்னால முடிஞ்சதை உங்களுக்கு நான் செய்யறேன் அவ்வளவு தான். சரி நீங்க சாப்பிடுங்க ஐயா” என்று சொல்லி விட்டு கோவிலுக்கு திரும்பினாள்.

அவள் அந்த பெரியவரை நெருங்கியதில் இருந்து அங்கு நடந்த அத்தனையும் கண்ட ஒரு ஜோடி விழிகள் ஆச்சரியத்திலும் அதேநேரம் பெருமிதத்திலும் மின்னி மறைந்தது. “என்ன பொண்ணுடா” என்ற வார்த்தையை உச்சரித்தன அந்த உருவத்தின் இதழ்கள் கூடவே அவளைப் பின்பற்றி அவள் பின்னேயே நடந்தது அந்த விழிகளுக்கு சொந்தக்காரரின் பாதங்கள் இரண்டும்...

சுற்றுமுற்றும் விழிகளால் சுற்றுப்புறத்தை அளந்தவாறு கோயிலின் அருகில் வந்தவள் பூக்கடைக்காரப் பெண்மணியிடம் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து அர்ச்சனை தட்டும்,‌மாலையும் வாங்கிக் கொண்டவள் கோயிலின் நுழைவாயிலை நெருங்கி, குனிந்து வாசற்படி நிலையை கைகளால் தொட்டு வணங்கி கண்களில் ஒத்திக் கொண்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.‌ அவளைப் பின்பற்றி அவளை கண்காணித்தவாறு பின்தொடர்ந்து வந்த நபரும் அதே போல் செய்தது. கூடவே தன்னையும் தன் உடையையும், மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு புன்சிரிப்போடு தானும் கோவிலுக்குள் நுழைந்தது...

உள்ளே நுழைந்த வாணி நேராக கர்ப்பகிரகத்தில் ஒயிலாக வீற்றிருக்கும் அம்மன் சந்நிதிக்கு சென்றவள் அய்யரிடம் அர்ச்சனை தட்டைக் கொடுத்து விட்டு,‌“மீனாட்சி அப்படிங்கற பெயருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க சாமி”என்றாள் எப்போதும் போல்.

அவள் புறம் திரும்பி புன்னகையொன்றை அவளுக்கு கொடுத்தவர். “நானும் நீ இங்க வந்த இந்த மூணு மாசமா பார்க்குறேன் கண்ணு,‌அந்த குடும்பத்துல இருக்கவங்களுக்காக வேண்டிக்கிறியே தவிர உனக்காக ஒரு நாள் கூட நீ வேண்டியதில்லையே?” என்று கேட்டார்.

“அந்த குடும்பத்துல இருக்கவங்க நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன் சாமி.‌ நீங்க அர்ச்சனையை ஆரம்பிங்க” என்று சொல்லிவிட்டு கண்மூடி கடவுளிடம் தன்னை திட்டிய, தன்னை வெறுக்கும் அத்தையும், அத்தை குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினாள் ..

சிறிது தூரம் தள்ளி நின்று அவள் செய்கையை கவனித்துக் கொண்டிருந்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ அவளது செய்கையில் பூரித்து போனார் என்று தான் சொல்ல வேண்டும். “உன்னோட ஒவ்வொரு செய்கையும் என்னை இம்ப்ரஸ் பண்ணுதே! ஓ மை காட் உங்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு பியூட்டி” என்று இதழ் அசைவில் சொல்லி விட்டு புன்னகைத்தது.

அய்யர் அர்ச்சனை தட்டைக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து விட்டு, ஆரத்தித் தட்டையும் அவள் முன்பு நீட்டிட, கைகளால் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். பின் தன் கையில் இருந்த இருபது ரூபாய் நோட்டைத் தட்டில் இட்டு விட்டு,
“உங்க குட்டி பாப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க சாமி கண்ணுலையே பட மாட்டேங்குறா?” என்று சொல்லி விட்டு அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றுவதற்கு சென்றாள்‌ அவள் பின்னே நூல் பிடித்தது போல் அந்த உருவமும் சென்றது...

கையில் இருக்கும் அர்ச்சனை தட்டைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவள் இரு கைகளை கூப்பி கண் மூடிய நிலையில் அடிமேல் அடிவைத்து கோயில் பிரகாரத்தை சுற்றி வர ஆரம்பித்தாள். அவள் மனதில் தோன்றிய எண்ணங்களும் சரி, வேண்டுதலும் சரி எப்பவும் மீனாட்சியின் குடும்பம் நல்லா இருக்கணும் என்பது பற்றியதாகத்தான் இருந்தது. இப்போதும் இருக்கிறது. 'அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும், அவங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தந்துடாத. அதையும் சேர்த்து எனக்கே கொடுத்துரு’ என்பது தான் அவளது ஜெப மந்திரமாகவே இருக்கும்.

இப்போதும் அதையே வேண்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அதே நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்த அந்த உருவமும் அவளைப் பின்பற்றி அடி மேல் அடி வைத்து நடந்தது. அவள் பின்னல் அழகையும், அவள் நடை நளினத்தையும் கண்டு ரசித்த உருவத்தின் மனதில் அப்போது தோன்றிய ஒன்று,

கருநாகப் பாம்பை போல்
பின்னி நெளிந்து
வளைந்து நீண்டு இருக்கும்
உந்தன் கருமைநிற கூந்தலில்
குடி கொள்ள எந்த மலர்கள் புண்ணியம் செய்ததோ?
என்பதுதான்.


அவளைப் பின்பற்றி நடந்த அந்த உருவம் தங்களை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. சற்று முன்னே சென்று அவள் கண்மூடி நடந்து செல்லும் உருவத்தை நெஞ்சில் பதிக்க விரும்பிய அந்த உருவம் வேகவேகமாக அவளைக் கடந்து முன்னே சென்று அவள் முகத்தை பார்த்தவாறே நடந்தது. பின்னால் அடிமேல் அடி வைத்து அவளை பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்த அந்த உருவம் திடீரென்று எதன் மீதோ இடித்து தடுமாறி கீழே விழ சென்ற வேளையில் அதன் கையில் இருந்த மாலை எதிரே வந்து கொண்டிருந்த வாணியின் கழுத்தில் விழுந்தது. அதில் பதறி விழிகளைத் திறந்தாள் வாணி. அவளை விட அதிக பதற்றத்தில் இருந்தான் கீழே விழுந்து கிடந்த தேவேஷ்வர்.

கீழே விழுந்து கிடந்தவனோ எழக்கூட தோன்றாமல் மாலையும் கழுத்துமாக நிற்பவளை தன் விழி வழியே நெஞ்சில் நிறைத்துக் கொண்டிருந்தான். கோவில் மணியோசையில் தன்னிலை பெற்றவன் ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தேடி வந்த அவனது நண்பன் ஒருவன் கீழே கிடந்த அவனை தூக்கி நிறுத்தி,
“எங்கடா போய் தொலைஞ்ச? ஆமா மாலை எங்கடா?” என்று கேட்டான்.

அதே சமயம் அவர்களது எதிரில் நின்றிருந்த வாணி தன் கழுத்திலிருந்த மாலையையும், தேவேஷ்வரையும் மாறிமாறி பார்த்தவள் குழப்பத்துடன் அதை கழற்ற முயன்ற அதே நேரம் அவனது நண்பனும் அதை பார்த்துவிட்டு, “டேய் மாலை இங்க இருக்கு தாலி எங்கடா?” என்று கேட்க. அவசரமாக அக்கம் பக்கத்தில் தாலியைத் தேடினார்கள். அங்கே எங்கையுமே தாலி இல்லை என்றதும் வேகமாக வாணியை நெருங்கிய தேவேஷ்வர் மாலையைக் கழற்ற முயன்றவளை, மாலையை கழட்டி விடாமல் செய்தவன் அவள் கைகளைத் தட்டி விட்டவாறு கவனமாக அந்த மாலையைத் தூக்கி பார்த்தவன் அதிர்ந்து போனான்.

கீழே விழுந்த வேகத்தில் மாலையில் இரு ஓரத்திலும் பொன் தாலி கோர்க்கப்பட்டிருந்த மஞ்சள் நாணின் இரு முனையும் சொருகி இருந்ததால், சரியாக அந்த தாலி அவளது கழுத்தில் விழுந்திருந்தது. ஆனால் பின்னால் முடிச்சு மட்டும் போடாமல் இருக்க, சரியாக அவள் நெஞ்சு பகுதியில் பொன்னாலான மாங்கல்யம் தொங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்து அதிர்ந்தது தேவேஷ்வரும் அவனது நண்பனும் மட்டுமல்ல வாணியும் தான். தன் மார்பைத் தொட்டு கொண்டிருந்த அந்த பொன் தாலியைக் கண்டு அதிர்ந்து போனாள். அடுத்து அவளால் எதுவும் பேச முடியவில்லை. கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் கசிந்தோடியது.

அவனது நண்பனும், “நாம ஏற்கனவே யாருக்கும் தெரியாம காதல் திருமணம் பண்ணி வைக்க தான் இங்க வந்திருக்கோம்.இப்ப நீ வேற இப்படி ஒரு ஏழறையைக் கூட்டி வைக்கிறியே? ஏன்டா. போனம்மா மாலையை வாங்குனமான்னு வந்துருக்க வேண்டியது தானே. ஏன்டா இப்படி பண்ணி வெச்சுருக்க? அடுத்து என்ன ஆகப்போகுதோ. ஆனா ஒன்னு மட்டும் புரியுதுடா சீக்கிரம் எனக்கு பாடைய கட்டிருவீங்கடா” என்று புலம்பிக்கொண்டே வாணிய நெருங்கியவன்,
“சிஸ்டர் அதை கழட்டிக் கொடுங்க சிஸ்டர். நேரமாகுது எங்களுக்கு வேற வொர்க் இருக்கு” என்றான்.

அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிய விழிகளோடு தேவேஷ்வரை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் மூன்று முடிச்சுப் போடவில்லை என்றாலும் அவன் கரத்தால் அவள் கழுத்தில் தாலி விழுந்திருக்கிறது எப்படி அதை கழட்டு என்று அவனால் சொல்ல முடியும். என்ன செய்வது? இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று மூவருக்குமே தெரியவில்லை‌.

ஒரு வழியாக மனதை கல்லாக்கிக்கொண்ட தேவேஷ்வர் தங்களுக்கு நேரமாவதை உணர்ந்து வாணியை நெருங்கியவன், “ப்ளீஸ் அதை கழட்டிக் கொடுங்க” என்றவன் பின் ஏதோ தோன்ற, “இல்ல வேணா விடுங்க நானே கழட்டிக்கிறேன்” என்று சொல்லி விட்டு அவள் கழுத்திலிருந்த மாலையைக் கழற்ற முயன்றான். ஆனால் அது அவளது கழுத்தில் இருந்து வர மறுத்தது. அப்போது தான் கவனித்தான் வாணியின் வலதுகை இறுக்கமாக அந்த மாலையை பற்றியிருந்தது..


அவளது மனநிலை என்ன என்பது தேவேஷ்வருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதைப் பார்த்தால் கண்டிப்பாக தன் நண்பனுக்கு திருமணம் நடைபெறாது என்பதால்,
“ப்ளீஸ்ங்க கையை எடுங்க. எங்களுக்கு இந்த மாலையும், தாலியும் தேவை.இது இருந்தா தான் என் நண்பனோட மேரேஜ் நடக்கும். ப்ளீஸ்ங்க” என்று கெஞ்சும் குரலில் சொல்ல. வாணியோ மாலையை விட மறுத்தாள்.

அவளது செய்கை சிறுகுழந்தை தன்னிடமிருந்து மிட்டாயை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்துடன் அதை தன்னுடன் இறுக்கி பிடித்துக் கொண்டு நிற்குமே அப்படி இருந்தது. அவளோ பயம் கலந்த பரிதாபமான முக பாவனையோடு நின்றிருப்பதை உணர்ந்தவன் மென்மையான குரலில்,“ப்ளீஸ்ங்க இது எதார்த்தமா விழுந்தது தானே குடுங்க ப்ளீஸ்” என்று சொன்னவாறு அவளது வலது கையை எடுத்து விட்டவன் வேகமாக மாலையை அவள் கழுத்தில் இருந்து எடுத்தான்.

ஆண்டவனின் நிர்பந்தமோ! அல்லது விதியின் முடிவோ! ஏதோவொன்று அவர்கள் இணைந்தே தீர வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது. இதுதான் நடக்க வேண்டுமென்று விதி இருக்கிறது போலும். மாலை மட்டுமே அவன் கையோடு வந்தது. ஆனால் தாலி அவள் கழுத்தில் இருந்து வரவில்லை. அவள் சுடிதார் அணிந்து, துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி இருந்ததால், ஒரு புறம் குத்தப்பட்டிருந்த பின்னில் மஞ்சள் கயிற்றின் ஒருபக்கம் மாற்றிக் கொண்டிருக்க, மறுபுறம் கீழே விழச்சென்றது. சட்டென்று அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டாள் வாணி.

தேவேஷ்வருக்கும் அவனது நண்பனுக்கும் இது இன்னமும் அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.
'என்னடா இது?' என்று போல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தேவேஷ்வரோ இன்னும் அவளருகில் நெருங்கி நின்றவன், “ப்ளீஸ்ங்க மத்தவங்க யாராவது இதைப் பார்க்கறதுக்கு முன்னாடி தாலியைக் கழட்டி குடுத்துடுங்க” என்று சொல்லி விட்டு தாலியில் கை வைக்கச் சென்றான்.

அதை உணர்ந்து ஈரடி பின்னால் தள்ளி நின்ற வாணி தாலியை தர மறுப்பது போல் தலையை இடவலமாக அசைத்தாள். ‘கடவுளே எல்லாம் நாசமா போச்சு’ என்று நினைத்தவாறு தலையை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான் தேவேஷ்வர்.

‘எல்லாம் என்னை சொல்லணும். பேசாம கடைக்கு போயி மாலை வாங்கி வந்து இருக்கணும். அத விட்டுட்டு ஒரு பொண்ணை சைட் அடிச்சதும் இல்லாம அவ பின்னாலேயே வந்ததுக்கு நல்ல கூலியைக் கொடுத்துட்டாரு ஆண்டவன். கடவுளே இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனது மற்ற தோழர்களும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். அனைவரையும் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த தேவேஷ்வர் அப்போதுதான், தாங்கள் யாருக்கு திருமணம் செய்ய இங்கு அழைத்து வந்தோமோ, அவர்களுக்கு திருமணம் முடிந்து இருந்ததைக் கண்டான்.
‘அப்பாடா ஒரு வழியா மேரேஜ் முடிஞ்சுது' என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் சட்டென்று திரும்பி வாணி நின்றிருந்த இடத்தைப் பார்க்க. அந்த இடம் காலியாக இருந்தது.
ஆம் அவன் கீழே அமர்ந்து கையில் தலையை தாங்கிய மறு நிமிடமே அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று இருந்தாள். அவனது நண்பனும் மற்றவர்களை அழைத்து வரச்சென்றிருந்ததால் அவள் சென்றதைக் கவனிக்கவில்லை.

தேவேஷ்வர் வர தாமதமானதால் வேகமாக வெளியில் சென்ற இன்னொரு நண்பன் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்து கட்டி வாங்கி கொண்டு வந்தான். கூடவே சாதாரண ரோஜா மாலைகளையும் வாங்கிக் கொண்டு வந்ததால் அவர்களுக்கு திருமணம் எளிமையாக முடிந்திருந்தது.. திருமணம் முடிந்து விட்டது என்று நினைத்தவன் அடுத்த நிமிடம் வாணியை தேட அங்கிருந்து நகர்ந்த வேளையில் அந்த மணப் பெண்ணின் வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து இருந்தனர்.

அதே ஊரை சேர்ந்த பண்ணைக்காரர்
சிவசுப்ரமணியம் மற்றும்
அஞ்சலை தம்பதியரின்
மூத்த மகன் தான்- தேவேஷ்வர்..இரண்டாம் மகன்- விக்னேஷ்வர். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன்.
கடைக்குட்டி - எழிலரசி. இப்போதுதான் பன்னிரண்டாவது முடித்துவிட்டு கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இளஞ்சிட்டு.


தேவேஷ்வர் ஐடியில் பணிபுரிவதற்கான பட்டப்படிப்பை முடித்துவிட்டு இன்று தான் ஊருக்கு வந்து சேர்ந்தான். வந்து சேரும் போதே பிரச்சினை ஒன்றையும் கையோடு இழுத்துக்கொண்டு வந்து இருந்தான். ஆம் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன் நெருங்கிய நண்பனும் தன் அத்தை மகனுமான கார்த்திக் காதலிக்க, அப்பெண் கல்லூரி படிப்பை முடித்து இருந்ததால் அவளுக்கு வரன் பார்த்து திருமணமும் நிச்சயம் செய்திருந்தனர்.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் கடைசி நேரத்தில் தான் கார்த்திக்குக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதனால ஊரிலிருந்து நண்பனோடு கிளம்பி வரும் போது தற்கொலை செய்ய முயன்றான் கார்த்திக். தேவேஷ்வர் தான் கஷ்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான். விஷியத்தை அறிந்தவன் அதன் பிறகு தான் மீதமிருக்கும் தன் நண்பர்கள் அனைவரையும் வரவழைத்தான்.

விடியும் வேளையில் மணப்பெண்ணைத் தூக்கியவர்கள் இந்த கோவிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அனைவரையும் கோயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நகைக்கடைக்கு சென்று தாலி வாங்கிக் கொண்ட தேவேஷ்வர் அதை மஞ்சள் கயிற்றில் கோர்த்தான். பின்பு மாலைகளையும் வாங்கிக் கொண்டு வரும் போதுதான் வாணியைக் கண்டான்..
அவளைக் கண்டதும் ஏனோ அவளது செயல் அவனை ஈர்க்க அவள் பின்னாலையே வந்தவன். தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து இருந்தான். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் சத்தியமாக அவனே நினைக்காதவை தான். கனவில் கூட இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று அவன் எதிர்பார்த்தது கிடையாது..

இப்போது இங்கு தான் திருமணம் நடக்கிறதென்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு பெண்ணின் குடும்பத்தார்கள் அடியாட்களுடன் அங்கே கூடிவிட்டார்கள். அதிலும் கார்த்திக் வேறு சமூகத்தை சேர்ந்தவன், அதேபோல் அந்த பெண்ணான தேன்மொழியும் வேறு சமூகத்தை சேர்ந்தவள். இது இரு குடும்பத்துக்கு இடையான பிரச்சினை என்பதையும் மாறி, இப்போது இரு சமூகத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறிப் போனதால் இரு தரப்பினரும் கம்பு கத்திகளுடன் கோயிலை முற்றுகையிட்டனர்..

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தேவேஷ்வர் வாணியைத் தேடுவதை விட்டுவிட்டு அவசரமாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தவன் இருதரப்புக்கு இடையே புகுந்து நடுவில் நின்று இரு தரப்பினரிடையேயும் பேச முயற்சித்த வேளையில் கூர்மையான ஆயுதம் ஒன்றை அவன் தலையை தாக்கிட இடதுபுற தலையில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. கூடவே அவனது நெற்றியில் ஏதோ ஒரு கம்பி கடிமாகத் தாக்கியது. அவன் தலையை பிடிப்பதற்குள்ளாகவே பளபளவென மின்னிய கூரிய கத்தியொன்று அவனது வயிற்றின் இடது புறத்தில் அடி ஆழத்தில் இறங்கிய அடுத்த நிமிடம் மூச்சு பேச்சின்றி கீழே சரிந்து விழுந்தான் தேவேஷ்வர். இதை தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வாணியின் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது. தன் கழுத்தில் இருக்கும் தாலியை அழுந்தப் பற்றியவள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே தன் கைகள் இரண்டையும் பின்புறம் கொண்டு சென்று தாலிக் கயிற்றை மூன்று முடிச்சிட்டவள், அருகில் தூணின் மீது இருந்த குங்குமத்தை எடுத்து பொன் தாலியின் மீது வைத்துக் கொண்டவள் தாலியை உடைக்குள் மறைத்தாள். கலவரம் அதிகமாவதை உணர்ந்தாலும் அங்கிருந்து நகராமல் கீழே விழுந்து கிடக்கும் தேவேஷ்வரையே பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.‌ ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அர்ச்சகர் வேகமாக அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கோவிலுக்கு பின்புறம் இருந்தப் படிக்கட்டு வழியாக இறங்கத் துவங்கினார்.அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றாலும் அவளது விழிகள் கலங்கிய நிலையில் தேவேஷ்வரின் மீதே நிலைத்திருந்தது.


காட்டாயப்படுத்தி
கட்டவில்லை..
காதலோடும் கட்டவில்லை..
கடமைக்கென்றும் கட்டவில்லை
ஊரறிய கட்டவில்லை.
உரிமையோடும் கட்டவில்லை.
உணர்வின்றியும் கட்டவில்லை.
எதிர்பாராமல் இறைவன் சித்தத்தால் சிரமமின்றி
இவள் கழுத்தத்தை அலங்கரித்த பொன்தாலியானது பூவையவளின் வாழ்வில் வளம் சேர்க்குமா? வலி சேர்க்குமா?

- தேடல் தொடரும்…



 
உறவின் தேடல் -6.1

கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அவனை தட்டி எழுப்பினாள் அம்முக்குட்டி.. குழந்தையின் சிணுங்கலில் விழிகளைத் திறந்தவன் அழுவதற்கு உதடுகளை பிதுக்கி கொண்டு தன் முகத்தை பார்த்திருக்கும் மகளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்‍, “அச்சச்சோ அம்மு குட்டி எதுக்கு அழுகுறீங்க? என்னடா ஆச்சு செல்லம்? யாரு உங்களை அடிச்சது?” என்று கொஞ்சிக் கேட்டவாறு மகளைச் சமாதானப்படுத்தினான்.

அவனருகில் இருந்த அவன் தந்தையோ, “விமானம் தரையிறங்க போகுது போல அதான் பாப்பா பயந்துட்டா” என்றதும் அதிர்ந்தவன், 'என்ன அதுக்குள்ள வந்துட்டமா?ம்ம்.. அவளை மட்டுமில்ல அவளைப் பத்துன நினைவுகளை நினைச்சுப் பார்த்தா கூட நேரம் போறதே தெரியமாட்டேங்குது’ என்று மனதில் நினைத்தவன் விமானம் தரையிறங்க தயாராவதை உணர்ந்து தன் மகளை இன்னும் அழுத்தமாக தன்னுடன் அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கிட பயணிகள் வெளியே செல்வதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டதும் தங்களது அனைத்து உடமைகளையும் எடுத்துக் கொண்டு பறக்கும் அந்த இயந்திர விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள் பயணியர்கள்.

தேவேஷ்வர், சிவசுப்ரமணியம், அஞ்சலை சுடர்மதி நால்வரும் வெவ்வேறான மனநிலையோடு கோவையில் பாதம் பதித்தார்கள். கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து தரை இறங்கிய அந்த விமானத்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி செக்கிங் முடித்து கொண்டு தங்கள் உடமைகளோடு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

“அப்பா பஸ்ல போலாமா? இல்ல ட்ரெயின்ல போலாமா?” என்று தேவ் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சிவசுப்ரமணியம் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

‘ஆமா அப்படியே விஜபிக்கிட்ட பேசப்போறாரு. எப்படியும் ஊராளுங்க யாருக்காவது கூப்டு இங்க வந்ததை சொல்லியிருப்பாரு. பெருமை பீத்திக்கலன்னா இவருக்கெல்லாம் பொழுதே போகாது.. ம்ஹூம் எப்ப தான் இவர் திருந்துவாரோ?' என்று நினைத்தவன் மகளுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கலாம் என்று அங்கிருந்து நகர்ந்து கடைகள் இருக்கும் பக்கம் சென்றவன் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வந்த போது கார் ஒன்று தன் தாய் தந்தையின் அருகில் நின்றிருக்க, யாரோ ஒருவனிடம் தன் தந்தை பேசிக்கொண்டிப்பதைப் பார்த்தான்.

‘யாராய் இருந்தா நமக்கு என்ன?’ என்று யோசனையோடு அவர்கள் அருகில் வந்தவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான். அங்கே நின்றிருந்தது அவனது தம்பி விக்னேஸ்வர் தான். ஒரு நிமிடம் தம்பியை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தான். ஐந்து வருடத்தில் அவனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.கொஞ்சம் சதை போட்டிருந்தான். முகமெல்லாம் தாடி வைத்து, முகம் முதிர்ந்து பெரிய மனிதன் போல் இருந்தான்‌. சந்தன நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தவன் அவர்களிடம் இருந்து லக்கேஜை வாங்கி காரினுள் வைத்துக் கொண்டே தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான்.

வேகமாக தம்பியை நெருங்கியவன், “எப்படி இருக்க விக்கி?” என்றான்.

அண்ணனின் குரல் கேட்டு அவசரமாக தேவேஷ்வரின் புறம் திரும்பிய விக்கி, “நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா” என்றான். தன் தம்பியின் அதே குரல் ஆனால் சற்று கணீரென்று ஒலித்தது.‌ அப்போது அவன் கொடுக்கும் மரியாதை இப்போதும் குறையாமல் இருந்ததை உணர்ந்தான்.

“நல்லா இருக்கேண்டா” என்று சொன்னவாறு காரை திறந்து முன்புறம் தன் மகளுடன் ஏறிக்கொள்ள சிவசுப்பிரமணியம் அஞ்சலை இருவரும் பின்னால் ஏறியதும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான் விக்கி. அங்கிருந்து முதலில் ஈரோடு ஈரோட்டில் இருந்து கொளத்துப்பாளையம் செல்ல முடிவெடுத்து கார் கிளம்பியது. எப்போதும் அவர்கள் செல்லும் வழி இதுதான் என்பதால் லாவகமாகக் காரை ஓட்டிய விக்கி மறந்தும் கூட தேவ்வின் புறம் திரும்பவில்லை. அவ்வபோது அலைபேசியில் அலனை யாரோ அழைப்பதும், இவன் அதற்கு கொஞ்சலாகப் பதில் சொல்வதுமாக இருந்தான். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தாலும் கேள்வி கேட்க மனம் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் தேவ். அவனுள்ளேயே ஏகப்பட்ட நினைவுகள். அந்த ஊருக்கு செல்வதற்கு அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை விட தன்னால மீண்டும் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடுமோ? என்று ஒருவித அவஸ்தை உடனே அமர்ந்திருந்தான்.

பாதி வழியில் மகளுக்கு உண்ண திண்பண்டங்கள் கொடுத்தவன் பழச்சாறை அருந்தக் கொடுத்து விட்டு மகளைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான். அதன் பின்பு தன் அலைபேசியில் பாட்டை ஓடவிட்டு விட்டு ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு கண்மூடி அமர்ந்து விட்டான். பழையவற்றையும் நினைக்க மனம் இல்லை. நினைத்தால் அதிலிருந்து மீள முடியாது என்பதால் அதை அவன் நினைக்க விரும்பவில்லை. இப்போது தனக்கு அந்த ஊரில் என்ன காத்திருக்கிறதோ? என்று எண்ணவும் அவனால் முடியவில்லை. ஏனெனில் எதிர்காலம் அவனை அச்சுறுத்தியது. அதனால் இப்போது இருக்கும் இந்த மனநிலை ஒன்றே தனக்கு போதும் என்று எண்ணியவன் பாட்டை கேட்டவாறு அமர்ந்திருந்தவன் தன்னையறியாமல் அயர்ந்து உறங்கி விட்டான்..

அண்ணன் உறங்கி விட்டதை உறுதி செய்து விட்டு பின்னால் அமர்ந்திருந்த தந்தையிடம் பேச்சு கொடுத்தான் விக்கி. “அண்ணங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களாப்பா?”

“ம்ஹூம் உண்மைய சொன்னா உங்க அண்ணன் வருவான்னு நினைச்சியாடே விக்கி. கண்டிப்பா வர மாட்டான்டே. அவங்கிட்ட நாங்க எதையும் சொல்லல, அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லேன்னு மட்டுந்தேன் சொல்லியிருக்கோம். நீங்க யாரும் எதுவும் சொல்ல வேணாம்டே அவனே இங்க வந்துருக்கானுல்ல அவனாவே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிடட்டும். உண்மைய தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் அவந்தேன் நல்ல முடிவா எடுக்கோணும். ஆனா அவன் என்ன முடிவெடுத்தாலும் அவனுக்கு நாம துணையா இருக்கோணும்டே. மறுபடியும் நம்ம வீட்டு பையனை அவ்வளவு தூரத்துக்கு அனுப்பி வெச்சிட்டு நம்மளால இங்கன நிம்மதியா இருக்க முடியாதுடே விக்கி. அதனால யாரும் சட்டுனு கோபப்படாதீயடே பொறுமையா இருங்க எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்டே” என்றார்.

“சரிங்க அப்பா வீட்டிலையும் நான் இதை சொல்லிதிடுதேன்” என்றவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தை இணைத்து வீட்டிற்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தவன் இன்னும் வேகமாகக் காரை செலுத்தினான்..

அடுத்த மூன்று மணி நேரத்தில் கொளத்துப்பாளையம் ஊருக்குள் விக்கியின் கார் நுழைந்தது. சரியாக அதே நேரம் கண்திறந்த தேவ் விழிகளால் அவ்வூரை நோட்டம் விட்டான். அவன் செல்லும் போது இருந்த ஊருக்கும் இப்போது இருக்கும் ஊருக்கும் அதிக அளவு மாற்றம் இல்லை என்றே அவன் எண்ணினான். ஆனால் அவனே அறியாத அளவிற்கு பெரும் மாற்றத்தை அந்த ஊர் அடைந்திருக்கிறது என்பதை போகப்போக அவனே அறிய நேரிடும்.

சரியாக அவன் வீடு இருந்த தெருவில் கார் நுழைந்த போது சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான்.‌ தன் மடியில் உறங்கி கொண்டிருக்கும் மகளை கெட்டியாக பிடித்து கொண்டான். அந்த திசையில் திரும்பக்கூடாது என்று அவசரமாக விழிகளுக்கு கட்டளையிட்டான்.‌ ஆனால் மூளை வெளியிட்ட கட்டளையை ஏற்க மறுத்த அவன் விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஓர விழியால் பார்த்தவாறே தான் மூவரும் அமர்ந்திருந்தனர். ஆனால் அவனைக் கவனிக்காமல் இருப்பது போல் தங்களைக் காட்டிக் கொண்டனர்.


அவர்களின் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் விக்கி. காரை நிறுத்தியவன் தன் தாய் தந்தையை பார்த்து தலையசைத்து முதலில் அவர்களை கீழே இறங்க சொன்னான். அவர்களும் பதிலுக்கு தலையசைத்து விட்டு கீழே இறங்கினார்கள். கார் வந்து நின்ற மறுநிமிடம் ஆங்காங்கே நின்றிருந்த ஊர் மக்கள் சட்டென்று கூடிவிட்டார்கள். வீட்டில் இருந்தவர்களும் வெளியே ஓடி வந்தார்கள்.

பெரும் தயக்கத்துடனும் பயத்துடனும் அமர்ந்திருந்தான் தேவ். ஏதோ ஒரு பொருளைத் திருடிக்கொண்டு ஓடிய ஒருவன் மீண்டும் அதே ஊருக்கு திரும்பி வரும் போது எந்த மனநிலையில் இருப்பானோ, அதைவிட அதிகமான பதட்டத்துடனும், பயத்துடனும் இயலாமையோடும் கீழே இறங்கத் தயங்கியவாறு காரிலேயே அமர்ந்திருந்தான் தேவ். ஆனால் இறங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தான். தாய் தந்தை தனக்காக காத்து இருக்கிறார்கள். அதை விட அவனை சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பத்தா தனக்காக காத்து இருக்கிறார் என்ற உண்மை உரைக்க மெதுவாக கதவை திறந்து கொண்டு மகளை தூக்கியவாறு கீழே இறங்கி நின்றான்.

எவ்வளவு முயன்றும் அவன் விழிகள் கலங்கின. இருந்தும் கடினப்பட்டு கலங்கிய விழிகளை கண்சிமிட்டி சரி செய்தவன் காரை விட்டு நகர்ந்து இரண்டடி முன்னால் தள்ளி நின்றான். விக்கியோ காரை இயக்கி காலியாக இருந்த இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். அங்கே நின்றிருந்த ஊர் மக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை கண்ட போதும் அவர்கள் புறம் திரும்ப விரும்பாமல், தான் சென்ற போது இருந்தது போலில்லாமல் இப்போது பெரிதாக கட்டப்பட்டு இருந்த தன் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். முன்புறம் தாழ்வாரம் வைத்து அழகாக அதேநேரம் பழமை மாறாத விதத்தில் கட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாக முழுவதும் இடிக்காமல் ஆல்டர்நேசன் தான் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டான்...

முன்னோக்கிச் செல்ல இரண்டடி எடுத்து வைத்தவன் சட்டென்று பின்புறம் திரும்பி எதிர் வீட்டை பார்த்தான். அவன் விழிகளில் ஏக்கமும் ஆர்வமும் போட்டியிட விழிகள் அந்த வீட்டையே சுற்றி சுற்றி அலைபாய்ந்தது. சுற்றுவட்டாரத்தில் விழிகளால் எதையோ தேடிக் களைத்த அவனது விழிகள் அந்த வீட்டின் மீதே நிலைத்து நின்று விட்டது.

“அண்ணா..” என்ற விக்கியின் அழைப்பில் தன்னிலை மீண்டவன் சடாரென்று முன் புறம் திரும்பி நின்று கொள்ள. ஏதோ பேச வாய் திறந்த விக்கியை கண்களாலேயே வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார் சிவசுப்ரமணியம்.

பின்பு அவனை மட்டும் தனியே விடாமல் தேவ்வின் ஒருபுறம் விக்கி நடந்து வர மறுபுறம் அவன் தந்தையும் தாயும் இணைந்து நடந்து வர வீட்டின் வாயிலை நோக்கி நடந்தான் தேவேஷ்வர். வீட்டின் முன்புறம் காலியாக இருந்த இடத்தில் கால் பதித்த நேரம் அவனுள் ஏகப்பட்ட மாற்றங்கள். அவனுள்ளம் நிலை கொள்ளாமல் தவிக்க மனதை சமன்படுத்த வழியறியாது தட்டுத்தடுமாறி நின்றிருந்தான். அதேநேரம் ஆரத்தி தட்டோடு உள்ளேயிருந்து வந்தாள் ஒரு பெண்.

அவளை இதுக்கு முன்னால் பார்த்த ஞாபகம் சுத்தமாகவே தேவ்வுக்கு கிடையாது. குழப்பத்துடன் அப்பெண்ணையும் தன்னருகே இருப்பவர்களையும் மாறி மாறி பார்த்தவன் யார் என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டான். எதுவா இருந்தாலும் அவர்களே சொல்லட்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக நின்றான்.

அந்த பெண்ணும், தேவ்வையும், அவன் கையில் இருந்த சுடர்மதியையும் சேர்த்து ஆரத்தி எடுத்தாள். இருவரது நெற்றியிலும் திலகமிட்டு விட்டு ஆரத்திக் கரைசலை வாசலில் கொண்டு போய் கொட்டி விட்டு வந்தாள்.

அதேநேரம் தேவேஷ்வரின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் விக்கி.
ஹாலில் அவனது குடும்பத்தார்கள் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். கூடவே ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அமர்ந்து இருப்பதை கண்டாலும் தேவோ யாரைப் பற்றியும் யோசிக்காமல் தன் மகளுடன் நேராக அப்பத்தாவின் அறைக்கு சென்றான். படுத்த படுக்கையாகக் கிடந்தார் அவனது அப்பத்தா இளவஞ்சி..

அப்பத்தாவைக் கண்டதும் அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வேகமாக மதியை கீழே இறக்கி விட்டு விட்டு கட்டிலை நெருங்கினான்.‌ கட்டிலில் வாடிய சருகாய், வதங்கிய கொடியாய் கிடந்தவரை கண்கலங்க பார்த்தான். தரையில் முட்டியிட்டு அமர்ந்து அவரது கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தமாக பிடித்துக் கொண்டவன், “அப்பத்தா” என்று அழைத்தான் உருகிய குரலில்.

அப்போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை. உயிருடன் இருப்பதற்கான எந்த வித வெளிப்புற அசைவுகளும் அவரிடமில்லை. அந்த அறையில்,அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் அருகே பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களில் மட்டுமே அவர் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கண்ணில் வழியும் கண்ணீருடன் அவரது செவியருகே குனிந்தவன், “வஞ்சி... இளவஞ்சி, என்ன கட்டிக்கிறியா? உனக்காகத்தேன் அம்புட்டு தொலவுல இருந்து வந்துருக்கேன்” என்றான் அளவு கடந்த அன்புடன்.

அந்தக் குரலும், அந்த வார்த்தைகளும் அவரது செவியில் நுழைந்து இதயத்தை இதமாக மீட்டியதோ, என்னவோ! அவரது விரல்கள் அசைந்தன. மூடிய விழிகளுக்குள் கருவிழிக்கோளங்கள் இரண்டும் அங்குமிங்கும் அசைவது போல் தெரிந்தது.

அதைக் கண்டு அந்த அறையில் நின்றிருந்த அனைவருக்குமே கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. ‘பெரும்பாலும் அவர் விழிப்பதற்கு வாய்ப்பில்லை கண்டிப்பாக இறந்துவிடுவார். சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி விடுங்கள்’ என்று மூன்று தினங்களுக்கு முன்பு சொல்லி மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர். அதனால் தான் தேவ்வின் தாய் தந்தையர் அவனைத் தேடி சென்றிருந்தார்கள். ஒரு வழியாக அவனை அழைத்தும் வந்தாயிற்று.

ஆனால் இப்போது அவனது குரல் கேட்டதுமே அந்த மூதாட்டியிடம் அசைவு தெரிந்ததும் அனைவரும் மகிழ்வுடன் அவர்களையே பார்த்திருக்க, மெல்ல விழிகளைத் திறந்தார் இளவஞ்சி.
 
உறவின் தேடல் -6.2

அவர் விழிகளைத் திறந்து விட்டதை அங்கிருந்த யாராலும் நம்ப முடியவில்லை. அனைவரும் மகிழ்வுடனும், இன்பமான அதிர்வுடனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தேவ்வோ சட்டென்று தன் அப்பத்தாவின் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணீர் விட்டவன், “அப்பத்தா உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்றான்.

அதற்குள் தனித்து நின்றிருந்த சுடர்மதி, “அப்பா..” என்று சொன்னவாறு ஓடி வந்து அவன் கால்களை கட்டிக் கொள்ள, பிஞ்சுக் குழந்தையின் அந்த குரல் இன்னும் இளவஞ்சியை எழுந்து அமரத் தூண்டியது...

ஆனால் பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்ததால் அவரால் சட்டென்று எழுந்து அமர முடியவில்ல. இருந்தும் விழிகளைத் திருப்பி அச்சிறு குழந்தையைப் பார்த்தார்.
பார்த்தவரது முகமும் அகமும் மலர்ந்தது. ஆனால் அதே நேரம் ஏதோ தோன்ற கேள்வியாக தன் பேரனை திரும்பிப் பார்த்தார்.

அவனோ அவரது கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் விழிகளை வேறு புறம் திரும்பினான். அதிலேயே அவன் எதையோ தன்னிடம் இருந்த மறைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவர்,
“நீயும், உம்புள்ளையும்தேன் வந்துருக்கீக.எங்க உம்பொஞ்சாதி வரலியோ?” என்றார்.

“இல்ல அப்பத்தா பாப்பா பிறந்ததுமே அவ இறந்துட்டா.‌ நானும் பாப்பாவுந்தேன் அங்கன தனியா இருக்கோம்” என்றான்.

“ஒஒஒ.. அப்புறம் ஏன் கண்ணு இம்புட்டு நாளா தனினா இருந்தவென்? இங்கன வந்துருக்கு வேண்டியது தானடே. உனக்கு என்ன சாதி சனம் இல்லையா? இல்ல சொந்தக்காரவுக இல்லையா? இல்ல வீடுவாசல் இல்லையா? நீ நிலபுலன்தேன் இல்லையா? ஏன் ராசா நீ அங்க போயி தனியா அநாதைப்பய மாதிரி இருக்கோணும்.‌ அப்பவே பிள்ளையை தூக்கிக்கிட்டு நீ இங்கன வந்திருக்கலாம்ல. எதுக்கு இம்புட்டு நாளா எங்களைப் பிரிஞ்சு இருக்கோணும். யாருக்கோ நல்லது செய்யப்போயி கடைசியா சொந்த குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கியே ராசா, ஏன்டே உனக்கு தலையெழுத்தா. அன்னைக்கே” என்றவர் எதையோ சொல்ல முயல சட்டென்று அவர் கைகளில் அழுத்தம் கொடுத்து 'சொல்லாதே' என்பது போல் விழியால் சைகை செய்தவன்,

“வேணாம் அப்பத்தா முடிஞ்சு போனதைப் பத்தி பேசறது ரொம்ப தப்பு. அதனால எத்தனை பேருடைய வாழ்க்கை அந்தரத்துல நிக்கிமோ? இந்த பாவத்தை நான் எங்க போயி முழுகி எழுந்தாலும் கரைக்க முடியாது அப்பத்தா. அதைப் பத்தி பேசாதீக. இப்ப உங்களுக்கு உடம்புக்கு பரவால்லயா? அப்படி உங்களுக்கு என்ன தான் ஆச்சு அப்பத்தா. நல்லாதானே இருந்தீக, நான் போகும் போது கூட தெம்பா இருந்தீகளே.” என்று கேட்டான்.

“நீங்க இங்கன இருந்து போனது தான் அவுகளை இப்படி படுக்கையில தள்ளிடுச்சு பெரிய தம்பி” என்ற குரல் கேட்டு சடாரென்று வாயிலின் புறம் திரும்பினான்.

அங்கே 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது கையோ முந்தானையை இறுக்கமாக பற்றியிருக்க, அதை வாயில் வைத்து அடைத்தவாறு அவர் விம்மலையும், கண்ணீரையும் அடக்குவது அவனுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்தது.

கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை சமன் செய்தவன், “எப்படி இருக்கீக மல்லிக்கா” என்றான்.

“நீங்க போனதிலிருந்து இங்க ஆருமே நல்லா இல்ல பெரிய தம்பி. எங்க தம்பி போனீக? யாருக்காகவோ நீங்க” என்று எதையோ சொல்ல வந்த அவரையும் அவசரமாகத் தடுத்தவன், “வேணாக்கா மேக்கொண்டு எதையும் பேசாதீய. இதைப்பத்திதேன் அப்பத்தாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். பழைசைப் பத்தி பேசாதீக. முடிஞ்சு போனது முடிஞ்சதாவே இருந்துட்டு போகட்டுமே. அதேன் நான் வந்துட்டேன்ல அந்தப் பேச்சை விட்டுடுக. அப்பத்தா கண்ணு முழிச்சிட்டாக யாராவது டாக்டருக்கு போன் பண்ணி வரச் சொல்லுங்க” என்றான்.

அடுத்த நிமிடம் விக்கி மருத்துவரை அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
மருத்துவர் வந்து இளவஞ்சியைப் பரிசோதித்து பார்த்து விட்டு, “நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் தொந்தரவு பண்ணாதீங்க” என்று மற்றவர்களிடம் சொல்லி விட்டு அவருக்கு ஊசி செலுத்தி உறங்க வைத்து விட்டு சென்றார்.
அதன் பின் அனைவரும் ஹாலில் கூடியிருந்தார்கள். ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் மகளை தன் மடியில் இறுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் தேவ்.

அவனது மடியில் அமர்ந்திருந்த அம்மு புதிதாக இருந்தவர்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்க, கண்மூடி அமர்ந்து இருந்தான் தேவ். கடந்த கால நினைவுகள் அவனை அலைக்கழிக்கிறது என்பதை பார்த்த எவரும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனது முக பாவனைகள். அதே நேரம் அவன் காலை யாரோ சுரண்டுவது போல் இருக்க கீழே குனிந்து பார்த்தான்.

கொழுக்கு மொழுக்கென்று இருந்த ஒரு ஆண்குழந்தை அவன் காலை சுரண்டி கொண்டிருந்தது.‌ எப்படியும் இரண்டு வயது இருக்கும் அந்த குழந்தைக்கு.‌ அவனை தூக்கச் சொல்லி கைகளை மேலே நீட்டியது. “அம்மு குட்டி தம்பியைத் தூக்கலாமா?” என்றதும் குழந்தை சரி என்று தலையை அசைத்தவாறு தந்தையின் மடியிலிருந்து இறங்கி நிற்க. எழுந்து நின்று அக்குழந்தையை தூக்கினான் தேவ்.

அதே நேரம் அவன் அருகில் வந்த விக்கி ஓரமாக நின்றிருந்த ஒரு பெண்ணைத் தன்னை நோக்கி அழைத்து, “அண்ணா இவ என்னோட மனைவி பிரகதி. உங்க கைல இருக்குறது என்னோட பையன் சத்ய தேவ். எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க அண்ணா” என்று சொன்னவாறு மகனை தன் கையில் வாங்கிக் கொண்டு மனைவியோடு தேவ்வின் காலில் விழ சட்டென பின்னால் நகர்ந்து நின்றான் தேவ்.

“டேய் என்னடா பண்றவென். மொதல்ல எந்திரி விக்கி” என்றான் பதற்றத்துடன்.

“இல்லணே எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. எனக்கு நீயும் அப்பா மாதிரிதேன், பண்ணுன்ணே” என்றான்.

“சரி நல்லாருங்க. மொதல்ல மேல எந்திரிச்சு நில்லுங்க” என்றதும் தான் எழுந்து நின்றனர் இருவரும்.

இப்போது தன் தம்பியின் மகன் என்ற மகிழ்வோடு சத்யதேவ்வை கையில் வாங்கிக் கொண்டு மறு கையால் தன் மகளை தூக்கியவாறு, “அம்மு குட்டி இது யாரு தெரியுமா? தம்பிடா. உனக்கு தம்பி. எங்க சொல்லு தம்பி” என்றான்.

புதிதாக ஒரு உறவு கிடைத்த மகிழ்ச்சியில், “ப்பா நான் தம்பி கூட விளையாடுறேன்” என்று சொல்லி கீழே இறங்க முயன்றாள்.‌ தேவே இருவரையும் இறக்கி விட்டான். இறங்கும் முதன் சத்யதேவ் தேவ்வின் கன்னத்தை எச்சிலால் ஈரமாக்கி இருந்தான்.‌ கீழே இறக்கி விட்டதும் அம்முக்குட்டி சத்யதேவ்வின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அந்த ஹாலின் மற்றொரு மூலையில் சென்று அமர்ந்துவிட்டாள்.

இப்போது அங்கே இருந்த அனைவரது பார்வையும் தேவ்வின் மேல் தான் இருந்தது. எதுவும் பேசாமல் அமைதி காத்தவன் சில நிமிட நேர யோசனைக்குப் பிறகு, “ஏன் போனேன், எதுக்கு போனேங்குறதை யாரும் கேட்க வேண்டாம். இங்க எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல ஆனா இருக்கிற வரைக்கும் யாரும் பழைசை பத்தி பேசாம இருக்கறது நல்லது” என்றவன் விக்கியிடம், “என்னோட ரூம் ரெடியா இருக்கா விக்கி” என்று கேட்க.

“உங்க ரூம் நீங்க போகும் போது எப்படி இருந்துச்சோ இப்பவும் அதே மாதிரி தான் இருக்கு நீங்க மேல போங்கணா. பாப்பாவ நான் பாத்துக்குறேன்” என்றதும் எதுவும் பேசாமல் தனிமையை தேடி தன் அறைக்குள் புகுந்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் இருந்த அதே அறை. அதே பொருட்கள் அதே இடத்தில் சுத்தமாக துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன் கட்டிலில் விழுந்தான். அவனை அறியாமலேயே அவன் விழிகள் ஜன்னலைத்தான் தேடி ஓடியது. எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தான்..

நேராக ஜன்னலுக்கு எதிரே நெற்கதிர்களை அடித்து, நெல்மணிகள் தனியாக, பதர் தனியாக பிரிக்கப் பயன்படும் களம் என்று சொல்லப்படும் இடம் இருந்தது. அதன் அருகில் உயரமாக வளர்ந்து இருந்த ஐந்தாறு, வேப்ப மரங்களும் அடுத்தடுத்து வளர்ந்து நின்று அகல விரிந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. அதனருகில் அரசமரம் இரண்டும் இருந்தன. அரசமரத்தின் கீழே பிள்ளையார் சிலை ஒன்று அதைச் சுற்றி சற்று மேடை எழுப்பி அதன் மீது அமர வைக்கப்பட்டிருந்தது.

சிறிது தூரத்தில் வளைந்து நெளிந்து ஓடும் காவிரி ஆற்றின் ஓடை ஒன்றும் கிளைப்பிரிவாக சென்று கொண்டிருந்தது. அதன் வளத்தால் தான் இப்பகுதி எங்கும் செழிப்பாக இருக்கின்றது. சிறுவர் சிறுமிகள் விளையாடுவதற்கு ஏற்றார்போல் சிறுசிறு ஊஞ்சல்களும் அந்த ஆலமரத்தில் கட்டப்பட்டிருந்தன. மீன் பிடிப்பதற்கான இடமாகவும் அந்த ஓடை இருந்தது. எத்தனை நாட்கள் அந்த ஓடையில் அமர்ந்து தன்னவளை எண்ணி கனவு கண்டிருப்பான். எத்தனை நாள் அந்த அரச மரத்தின் மறைவில் நின்று அவளை ரசித்திருப்பான். எத்தனை நாள் அவளுக்கென்று பார்த்து பார்த்து பரிசுப்பொதிகைளை வாங்கிக்கொண்டு காத்திருப்பான். எத்தனை நாள் அதை கொடுக்காமலேயே திரும்பி சென்று இருப்பான். அவளிடம் சொல்ல வேண்டியவற்றை சிந்தித்து எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பான். அதையெல்லாம் நினைத்தவனுக்கு நீங்காத வலியும் வேதனையும் தான் நெஞ்சில் எழுந்தது. அவனுக்கு அந்த வலி,வேதனையைக் கொடுத்தவள் அதே வலியையும், வேதனையையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவனைச் சார்ந்தவர்கள் அனைவரும் அதை அறிந்திருந்தார்கள்..

நினைவுகளெல்லாம்
நின் பிம்பம் தானடி..
ஏனோ நினைவுகளாய்
என்னுள் நிறைந்தவள்
நிஜத்தில் நிராதரவாய்
எனை நிற்க வைத்ததேனடி..!

- தேடல் தொடரும்…




கருத்துத்திரி

 
உறவின் தேடல் -07

தேவேஷ்வர் எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அந்த ஜன்னலின் அருகிலேயே நின்றிருந்தானோ கதவு திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அப்பா என்று குரல் கொடுத்தவாறு உள்ளே ஓடி வந்த தன் மகளின் குரலில் தன்னிலை பெற்றவன், தன் விழிகளில் இருந்த கண்ணீரை அவசர அவசரமாக துடைத்துக்கொண்டு மகளின் புறம் திரும்பினான்.

ஓடிவந்து தன் தந்தையின் காலை கட்டிக் கொண்ட அந்த அழகுச் செல்லத்தை அள்ளி தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவனுக்கு 'தான் இன்னும் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் இவள் மட்டும்தான்' என்றே தோன்றியது. இவள் மட்டும் இல்லையென்றால் தன் வாழ்வு என்னவாகி இருக்குமோ? என்று நினைத்தவனுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. ஆனால் தான் அழுவதைக் கண்டால் தன் மகள் பயந்து விடுவாள் என்பதால் சட்டென்று தன் முகபாவனைகளை மாற்றியவன்,
“அம்முக்குட்டிக்கு இந்த வீடு பிடிச்சுருக்கா?, இந்த ஊர் பிடிச்சுருக்கா? இங்க இருக்கவங்களை பிடிச்சுருக்கா?” என்று கேட்க.

“இந்த ஊர் எப்படின்னு எனக்கு தெரியலப்பா. ஆனா இந்த வீட்ல இருக்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாரும் என்கிட்டே ரொம்ப பாசமா பேசுறாங்கப்பா. ஆனா ஒரே ஒரு ஆன்டி மட்டும் என்கிட்ட பேச மாட்டேங்குறாங்கப்பா" என்று தன் தந்தையிடம் புகார் வாசித்தாள் அந்த குட்டி அழகு தேவதை.

மகளின் சொல்லில் தன்னை மீறி இதழில் துளிர்த்தப் புன்னகையை இதழுக்குள்ளேயே ஒளித்து வைத்தவன், “என் தங்க குட்டிக்கிட்ட யாரு பேசமாட்டேன்னு சொன்னது வாங்க அவங்கக்கிட்ட போயி கேள்வி கேட்கலாம். எப்படி உங்கிட்ட அவங்க பேசாம போகலாம் இதையெல்லாம் சும்மா விடக்கூடாது வாங்க செல்லம் போலாம்” என்று சொன்னவாறு அவளை தூக்கி கொண்டு கீழே வந்தான்.

ஹாலில் அமர்ந்து அனைவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் அனைவரும் அமைதியாகி விட்டனர். இவ்வளவு நேரம் சத்தமாக இருந்த இடம் திடீரென்று ஒரு குண்டூசி கீழே விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக மாறியிருந்தது. அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை.

ஹாலின் மத்தியில் வந்து நின்றவன், “சொல்லுங்க அம்மு குட்டி செல்லம் யாரு உங்க கிட்ட பேச மாட்டேன்னு சொன்னது” என்று கேட்க. அந்த வீட்டின் மூலையில் ஒரு ஓரமாக நின்று சத்யதேவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பெண்ணை கைநீட்டி காட்டினாள் சுடர் மதி.

அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்த தேவ் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான். ஆனால் தன் மகளிடம் பேசாததால், தன் செல்ல மகள் குற்றம்சாட்டி விட்டாளே! அவள் வைத்த புகாருக்கு நீதி கேட்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தன் தங்கை எழிலரசியை நெருங்கினான்

ஐந்து வருடம் கழித்து வீட்டிற்கு வந்த தன் பெரிய அண்ணனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அண்ணன் மகளையும் கண்டு கொள்ளவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள் எழிலரசி

வந்த நொடியில் இருந்து தன் தங்கையைக் காணாமல் தேடினான் தான். ஆனால் அப்போது அவன் கண்ணில் எழிலரசி படவில்லை. ஆனால் தற்போது தன் கண்ணில் படவும் வேகமாக அவள் அருகே சென்றவன்,“எப்படி இருக்க எழில்?” என்றான்.

அவன் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்த எழிலரசி எதுவும் பேசாமல் மீண்டும் குனிந்து கொண்டவள் நன்றாக மசித்த உருளைக்கிழங்கை சோற்றில் வைத்து பிசைந்து சத்யதேவுக்கு ஊட்டினாள். குழந்தையும் அவள் ஊட்டியதை ஆ காண்பித்து கவனமாக வாங்கிக் கொண்டது. குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்து விட்டு அங்கிருந்து நகர முற்பட்ட வேளையில் மீண்டும் அவளை வழிமறித்து நின்ற தேவ், “என்கிட்ட ஏன் பேச மாட்டேங்குற எழில்?” என்று கேட்டான்.

மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.மீண்டும் அவள் கையை எட்டி பிடித்தவன்,
“அண்ணன் கிட்ட பேச கூட உனக்கு பிடிக்கலையா எழில்” என்றான். பட்டென்று அவன் கையில் இருந்த தன் கையை உதறிக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் எழில்.

அவள் அது போல் செய்தது தேவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே எதோ போல் இருக்க வேகமாக அவனை நெருங்கிய விக்கி, “அண்ணா எழில் வேணும்னே எதையும் பண்ணலண்ணா.‌ நீங்க இங்க இருந்து போனதுக்கப்புறம் எவ்வளவோ நடந்துருச்சுன்ணா. அதுல நம்மளால மாத்த முடியாத ஒரு விஷயம் நம்ம எழிலோடு நாக்கு கட்டாகி அவளால பேச முடியாம போயிருச்சு அண்ணா‘ என்றதும் தேவ் அதிர்ந்தான்.

பின்,‌“அப்படி என்னதான் ஆச்சு விக்கி?” என்று கேட்க.

“வேணாம்னா இந்த அஞ்சு வருஷத்துல எவ்வளவோ நடந்துருச்சு. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டா நீங்க தாங்க மாட்டீங்கண்ணா. நடந்து முடிஞ்சது நடந்ததாவே இருக்கட்டும் இதை இத்தோட விட்டுடுங்க, வாங்க சாப்பிடலாம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து விலகி சென்றான்.

தன் அழகு தங்கையின் குரலையும் அவள் இனிமையாகப் பாடும் பாடலையும் இனிமேல் கேட்க முடியாதா? என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் அடைப்பது போலிருந்தது. இருந்தும் தங்கையிடம் ஓரிரு வார்த்தைகள் பேச எண்ணி எழிலரசி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

கட்டிலில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே தெரியும் வானத்தை விழி வழியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் எழில். அவள் அருகில் சென்று நின்றவன் அவள் தலையைக் கோதியவாறு, “அண்ணனை மன்னிச்சுடு எழில். என்னோட சுயநலம் தான் முக்கியம்னு நான் உன்னை அப்படியே விட்டுட்டு போய் இருக்க கூடாது. அண்ணா மேல இன்னும் கோவமா இருக்கியா?” என்றான்.

தன் தலையில் இருந்த அவன் கையைத் தட்டி விட்டவள் எதுவும் பேசாமல் தலையணைக்கு அடியிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவன் கையில் கொடுத்தவள் எதுவும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினாள். அந்த டைரியின் அட்டையையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்த தேவ், ' நிச்சயமாக இதில் தன் தங்கையின் மனக்குமுறல்கள் இடம் பெற்று இருக்கும்' என்பதை அறிந்தவன் அதை தன் அறையில் கொண்டு சென்று வைத்து விட்டு உணவுண்ண கீழே வந்தான்.

அனைவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க. தன் மகளை மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்தான் தேவ். அதேநேரம் வீட்டு வாயிலில் இருந்து,“வீட்ல யாருங்க?” என்ற குரல் கேட்டது.

அந்தக் குரலை எங்கயோ கேட்டது போல் இருக்கிறது என்று உணர்ந்தாலும் தன் மகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டிருக்கும் கேமில் தன் கவனத்தை பதித்தான் தேவ். ஆனால் வேகவேகமாக வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரகதி,
“என்னடி மலர் இன்னைக்கு என்னமோ நேரமே வந்த மாதிரி தெரியுது. இன்னும் மணி அஞ்சு ஆகலையே?” என்று கேட்க.

“எனக்கு புரியுது அக்கா நான் கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் கா. ஆனா அதுக்கு காரணம் இருக்குக்கா. அவ இனிமே உங்க வீட்டுக்கு என்னை பால் ஊத்த சொல்லிட்டா ஏன்னு தெரியல” என்று தலை குனிந்து கொண்டே சொன்னாள்.

“அவ அப்படி சொன்னதுக்கான காரணம் என்னன்னு எனக்கும் தெரியாம இல்ல மலர். எல்லாம் விதிப்படி தான் நடக்கும். சரி இரு பால் பாத்திரத்தை எடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற பிரகதி பால் பாத்திரத்தோடு வெளியே வந்தாள். கவனம் தன் மகள் கையிலிருக்கும் அலைபேசியில் இருந்தாலும், தேவ்வின் செவி அந்த சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டுதான் இருந்தது. அனைவரும் தேவ்வை தான் ஓரவிழியால் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தற்போது மலர் என்ற பெயரை கேட்டதும் அவள் யார் என்பது தெரிந்துவிட சட்டென்று அவனது மனதில் ஒரு மின்னல் தாக்குதல். தனக்கு நெருக்கமான உயிரும் வந்திருக்குமோ என்று எண்ணியவன் எழ முயன்றான். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பேச்சு வார்த்தையைக் கேட்டிருந்தவன் எழத் தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.

வெளியே வந்த பிரகதியிடம்,
“எப்பவும் போலவே ஊத்தவா இல்ல கொஞ்சம் சேர்த்து ஊத்தவாக்கா?” என்று கேட்டாள் மலர்.

”இல்லை எப்பவும் போல ஊத்துனா பத்தாது ஒரு அரை லிட்டர் சேர்த்து ஊத்து” என்றதும் அவர்கள் கேட்ட பாலை ஊற்றி விட்டு அங்கிருந்து நகர சென்றாள் மலர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மலர்விழி.

அவள் கேட்டை தாண்டி செல்ல முயன்ற வேளையில்,
“அம்மாடி மலர் தங்கச்சி எப்படி இருக்கமா?” என்ற குரல் கேட்டு சட்டென்று அப்படியே நின்றாள். அவளது முகம் அந்த செவ்வானத்தை விட அதிக அளவு கோபத்தில் சிவந்தது. வார்த்தைகள் தாறுமாறாக வெளிவரத் துடித்தது. ஆனால் தான் பேசும் வார்த்தைகள் சென்று சேர்வது இந்த வீட்டின் பையனை மட்டுமின்றி தன் உயிர் தோழியின் நேசமிகு மன்னனையும் தான். தான் பேசிய வார்த்தைகள் தெரிய வந்தால் அவள் தன்னைக் கொன்றாலும் கொன்று விடுவாள் என்பதை நினைத்த மலர் பொறுமையாக தன்னை சமன் செய்து கொண்டு அவனின் புறம் திரும்பிவள், “உங்களுக்கும் பால் வேணுமா சார். எத்தனை லிட்டர் வேணும்?” என்றாள்.

எப்போதும் தான் அழைத்ததும் அண்ணா என்று அழைக்கும் தங்கை, 'சார்' என்றதும் குழம்பியவன், “அம்மாடி மலர்விழி என்னை அடையாளம் தெரியலையாடா. நான் தான் தேவேஷ்வர்” என்று அவன் சொல்ல.

“உங்களை அடையாளம் தெரியுது சார் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும், பால் வேணுமா? உங்க வீட்டாளுங்க தான் பால் வாங்கிட்டாங்களே சார்” என்று சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் குழம்பியவன், “ நீ ஏன்மா பால் ஊத்த வர்ற?
இதை உங்க அப்பா தானே செஞ்சுகிட்டு இருந்தாரு, இப்ப ஏன் நீ செய்யிற? இன்னும் படிச்சுக்கிட்டு தான் இருக்கியா, இல்ல கல்யாணம் ஆயிடுச்சா?” என்று அன்பாகக் கேட்டான்.

அவன் கேட்க கேட்க சுறுசுறுவென்று மலர்விழிக்கு கோபம் ஏறியது. இருந்தும் கடினப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவள், “தெரியாதவங்கக்கிட்ட இதெல்லாம் சொல்லணும்னு அவசியம் கிடையாது சார். உங்களுக்கு பால் வேணுமா, வேணாமா சீக்கிரம் சொல்லுங்க எனக்கு வேலை இருக்குது” என்றாள் கடுப்பாக.

“நீ கூட என்னைப் புரிஞ்சிக்காம பேசுற மாதிரி தெரியுதேமா?” என்றான்.

“ நாங்க யாரும் உங்களை புரிஞ்சுக்க வேண்டிய அவசியம் கிடையாது சார். இதுக்கு மேல என்கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க. இப்ப கொடுத்த மரியாதை இன்னொரு தடவை பேசும்போது இருக்குமான்னு எனக்கே தெரியல” என்று சொல்லிவிட்டு தன் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் கண்ணிலிருந்து மறையும் வரை நின்றிருந்தவன், ‘இங்க என்னமோ தப்பா இருக்குது’ என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தான்.


அடங்காத கோபத்துடன் தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பகுதியை நோக்கி விரைந்தாள். சற்று தள்ளி தள்ளி நான்கைந்து வீடுகள் இருந்த இடத்திற்கு வந்தாள் மலர். வெளியே பார்ப்பதற்கு குப்பத்து மக்கள் வசிக்கும் இடம் போலவும், சற்று சுத்தம் இல்லாதது போலவும் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இடது புறம் இருந்த மண் ரோட்டில் இருசக்கர வாகனத்தை செலுத்தியவள் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி தேவ்வைத் திட்டி கொண்டே வந்தாள்..

சரியாக வரிசையாய் மாடுகள் நிற்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையின் முன்பு வண்டியை நிறுத்தியவள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கொட்டகையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த வேலிப்படலின் வேலிக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.‌

அங்கே மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து , “அடியேய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி?” என்று கேட்டாள் மலர்விழி.

“அப்படி என்னடி எனக்கு தெரியாத விடயம்? அப்படி என்ன புதுசா பாத்துட்டன்னு இந்த கத்து கத்துற?” என்று கேட்டவாறு மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி.‌

“உண்மையாலுமே நான் எதைப் பத்தி கேக்க போறேன்னு உனக்கு தெரியாதா வாணி” என்று கேட்ட மலர்விழியின் பார்வை கூர்மையாக வாணியை மொய்த்தது.

“நீ எதைப் பற்றிக் கேட்டாலும் சரிடி நீ எதை கேட்க வரேன்னு தெரிஞ்சா தானே நான் பதில் சொல்ல முடியும். நீ பாட்டுக்கு மொட்டையா எனக்கு ஒரு விஷயம் தெரியும், அதைப்பத்தி கேட்க போறேன், உனக்கு அதைப்பத்தி தெரியுமான்னு கேட்டா எனக்கு என்னடி தெரியும். எதா இருந்தாலும் நேரடியா சொல்லித் தொலையேன் சுத்தி வளைச்சு பேசுனா எனக்கு எப்படிடி தெரியும்” என்று சொன்னவாறு மாட்டுக்கு புண்ணாக்கு கலந்து வைத்துக் கொண்டு இருந்தவள் மெதுவாக மலர்விழியைத் திரும்பிப்பார்த்தாள்.
மலரின் முகம் அனலென தகித்தது.

கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக் கொண்டு வேலைப்படல் தட்டியின் மேல் சாய்ந்து நின்றவள், “தேவேஷ்வர் அண்ணா ஊருக்கு வந்திருக்காருடி” என்றாள் மெல்லிய குரலில்.

நீளமாக இருந்த மாட்டுத் தொட்டியில் தவிடு, கழனி நீர் இரண்டையும் சேர்த்து கலக்கி விட்டு மற்றொரு மாட்டு தொட்டியின் அருகில் சென்ற மதுரவாணி மலர் சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் அடித்தது போல் நின்றாள். அவள் அவ்வாறு நின்றது ஒரு நிமிடம் தான் மறுநிமிடமே எதுவும் நடவாதது போல், தான் எதையும் கேட்கவில்லை என்பது போல் சாதாரணமாக அனைத்து மாடுகளுக்கும் தீவனங்களை வைத்து விட்டு, மீண்டும் மற்றொரு தொட்டியில் தண்ணீரை நிறைத்து விட்டு மாடுகளுக்கு தண்ணீர் காட்டியவள், அவற்றை மறுபடியும் இழுத்து அது அதுக்கு உண்டான இடத்தில் கட்டி விட்டு, அவை மேய்வதற்கு வைக்கோலை அள்ளி போட்டு விட்டு மலர்விழியை நெருங்கினாள்.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு நின்றவளை நெருங்கிய வாணி, “யார் வந்தா நமக்கு என்ன, யார் வராட்டி போனா நமக்கென்னடி. நம்ம ஏன் தேவையில்லாம இந்த விஷயத்தை பத்தி பேசணும். முதல்ல மத்தவங்களைப் பத்தி நாம ஏன்டி பேசணும். நமக்கே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் போது நாம ஏன் தேவையில்லாம அந்த டென்ஷன் தலைவலியை ஏத்துக்கணும். நம்ம வேலையை பார்க்கலாம் வா” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.

“நிஜமாவே உன் மனசுல வேற எதுவும் இல்லையாடி. அவர் மேல கோபம், வருத்தம், இயலாமைன்னு எதுவுமே இல்லையாடி. நெஜமாவே நீ எல்லாத்தையும் மறந்துட்டியா" என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் மலர்விழி.

திரும்பி மலர்விழியை அனலென முறைத்த வாணி,
“முடிஞ்சுப் போனதை பத்தி மறுபடியும் பேச நினைக்காத மலர் அதுக்கப்புறம் நான் அமைதியா இருக்க மாட்டேன். மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வரலாம்” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்த அவளின் முன்பு வந்து நின்றார் அவர்.

அவரைக் கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் இன்னும் அதிகரிக்க கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தன் இடது புறம் இருந்த வேலிப்படலை காலால் எட்டி உதைத்தவள் திரும்பி மலரைப் பார்த்து, “வாயிக்காலுக்கு குளிக்க போறேன் நீ வரியா மலர்?” என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

மலரும் தங்களின் அருகில் நின்றவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ போய் ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வாடி நான் வண்டியைத் திருப்பி வெச்சுட்டு நிக்கிறேன்” என்று சொன்னாள்.

தன் எதிரில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், அவரது கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிகிறது,
அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் தன் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவரைத் தாண்டி சென்றாள் வாணி. செல்பவளை விழிகளில் வழியும் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் மீனாட்சி.

ஆனால் அவர் நிற்பதைக் கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்த வாணி சுற்றிலும் தென்னைங்கீற்றால் படல் அமைக்கப்பட்டு, மேலே மேற்கூரையும் கீற்றால் வேயப்பட்டிருந்த குடிலுக்குள் நுழைந்தவள் தனக்கும் மலருக்கும் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வெளியே திண்ணை போன்று இருந்த இடத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய பிளாஸ்டிக் பேரலை நெருங்கி அதன் மீது இருந்த குளியல் சோப்பையும், துணி துவைக்கும் சோப்பையும் எடுத்துக் கொண்டாள். பிறகு மூங்கில் மூலம் செய்யப்பட்டிருந்த அந்த குடிசையின் தட்டிக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டியவள், மாட்டு கொட்டகையையும் பூட்டி விட்டு நகர்ந்தவள் எக்ஸலை இயக்கி விட்டு தயாராக நின்றிருக்கும் மலரின் பின்னால் ஏறி அமர, மலர்விழியும் அங்கிருந்து வண்டியை நகர்த்தினாள். திரும்பி மீனாட்சியை ஒரு பார்வை கூட பார்க்காமல் அவளுடன் சென்றாள் வாணி ...
அந்த வண்டியின் பின்னே அவர்கள் வளர்க்கும் நாய் பிளாக்கியும் ஓடியது.

அவர்கள் செல்வதையே அழுகையோடு பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி அந்த இடம் சுத்தமில்லாத மண்தரை, சகதியோடு இருக்கிறது என்பதை எல்லாம் உணர மறந்தவராய் அங்கேயே மடங்கி அமர்ந்து கதறியழுதிட.. சிறிது நேரத்தில் அவரது தோள்ப்பட்டையில் ஒரு கரம் பதிந்தது.. அழுத விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவரை தாங்க முடியாத வேதனையுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் அவரது மூத்த மகன் அகில் பிரசாத்..


தவறிழைத்தவன் நான்..
ஆனால் அதற்கான
தண்டனை மட்டும் எனை ஈன்றவருக்கா?
குப்பையென்று அவளை
ஒதுக்கி தள்ளினேன்..
சாக்கடை என்று பெயரிட்டே
அவள் தோழமையை அசிங்கப்படுத்தி அப்புறப்படுத்தினேன்...

ஆனால் குப்பையென்று எண்ணியவள் இன்று
கோகினூர் வைரத்திற்கு
ஈடாய் மிளிர்கிறாள்..
சாக்கடை என்று அழைக்கப்பட்டவளின்
கடைக்கண் பார்வைக்காக இன்று பரிதவித்து நிற்கிறேன்
அதே சாக்கடை ஓடும்
மண் தரையினில்..!

- தேடல் தொடரும்..



 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom