உறவின் தேடல் -17
கணவர் சென்றபின் மகனின் அருகில் நெருங்கிய அஞ்சலை,
“அப்பாரு சொல்றபடி கேளு கண்ணா உனக்காக எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா. அவுக பேச்சை கேட்கலன்னா உன்னை மறுக்கா மறுக்கா வஞ்சிக்கிட்டே இருப்பாங்க, வெளியே போவாத ராசா அப்பா சொல்ற வேலையை செஞசுடுலே. எதுக்காக நீ தெனமும் கோவிலுக்கு போறவென், அப்பாரு சொல்றது மாதிரி யாரையாவது தேடிக்கிட்டு இருக்கவனா, அது பொண்ணா?” என்று கேட்டார்.
சட்டென்று அதிர்வுடன் தன் தாயை திரும்பிப் பார்த்தான் தேவேஷ்வர். தந்தை பேசும் போது 'பெண்' என்ற வார்த்தையை உபயோகபடுத்தவே இல்லை ஆனால் தாய் சொல்கிறாரே, ஒரு வேளை உண்மை தெரிந்திருக்குமோ என்ற பதைபதைப்பில், “அப்பாரு எங்கம்மா பொண்ணுன்னு சொன்னாரு, நீங்க பாட்டுக்கு எதையாவது உளறி வைக்காதீக” என்று மழுப்பலாக பதிலுரைத்து அவர் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முயன்றான்.
“அவுக சொல்லித்தேன் தெரியோணுமாக்கும். தெரியாமத்தேன் கேட்குறேன் அவருக்குத்தேன் உன்னை பத்தி சொல்றதுக்கு ஆளுக இருப்பாகளா, எனக்கெல்லாம் தெரிந்தவுக இருக்க மாட்டாகளா, இல்ல அவுகதேன் உன்னிய பத்தி எங்கிட்ட சொல்லாம போயிடுவாகளா. ஒரு வாரத்துக்கு முன்னுக்கவே தெரியும் உன்னோட நடவடிக்கை ஏதோ சரியில்லைன்னு. பூசாரியில இருந்து, கோயிலை கூட்டி பெருக்குறவுக வரைக்கும் அம்புட்டு பேரும் சொல்றாவுக, ஒரு பொண்ணோட அடையாளத்தை சொல்லி விசாரிக்கிட்டு இருக்கவென்னு. அப்படி உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே ராசா, நீயே போய் தேட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு, நான் பார்த்து கட்டி வெச்சுருக்கமாட்டேனா?” ஆதங்கத்தோடு கேட்டார்.
“அம்மா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் ஆனா எந்த ஊருன்னு தெரியல அவங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும், கூடவே அவங்களோட பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்குது அதை கொடுக்கணும் அதுக்காண்டி தான் தேடுனேன், நீ பாட்டுக்கு எதையாவது நினைச்சுக்கிட்டு இருக்காத சரியா. நான் அப்பாரு சொன்ன வேலையைச் செய்ய போறேன் இல்லைனா அதுக்கும் வந்து சாயந்திரம் திட்டுவாக” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
மகன் மழுப்பலாய் பதில் உரைத்ததும், இப்போதும் பதற்றத்துடன் இங்கிருந்து தப்பித்து ஓடுவதையும் கண்டு, தான் நினைத்தது தான் உண்மை என்றுணர்ந்த அஞ்சலை,’அந்த பொண்ணு யாருன்னு தெரியல, தெரிஞ்சா அந்த பிள்ளையை நம்ம பையனுக்கு கட்டி வச்சுடணும். ஒரு பொண்ணுக்காக இம்புட்டு தூரம் மெனக்கெடுறான்னா கண்டிப்பா அந்த புள்ளையும் இவனை நல்லா பார்த்துக்கிடும். அந்த பிள்ளை மேல உசுர இருக்கவும் தானே இப்படி தேடி திறியிறியான், கண்டிப்பா அந்த புள்ளைய எம்மவனுக்கு நான் கட்டி வெப்பேன்' என்று நினைத்தவராய் தான் விட்டு விட்டு வந்த சமையல் வேலையை கவனிக்க சென்றார்.
தாயிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவந்த தேவேஷ்வரும் அவசர அவசரமாகத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து முதலில் தோட்டத்துக்கு சென்றவன், அங்கு வேலை ஆட்கள் எல்லாம் வேலை செய்வதை எட்ட நின்று பார்த்து விட்டு வயலில் கூட நுழையாது குடோனுக்கு சென்றுவிட்டான். குடோனில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் ஒருமுறை மேற்பார்வை கண்டு விட்டு இரண்டு மணி ஆனபோது மீண்டும் வீட்டிற்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு கரூருக்கு கிளம்பினான். ஏனோ அவனது சிந்தனையில் வாணி தான் நிறைந்திருந்தாள். அவளை ஒரு முறையேனும் எங்காவது கண்டு விட மாட்டோமா என்று அவன் உள்ளம் தவிப்புடன் துடித்தது.
அலைந்து திரிந்து தோட்டத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தையும் வாங்கி ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தை அவன் உதைத்துக் கிளப்பிய போது மணி நான்கை தாண்டியிருந்தது. சலிப்புடன் மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை ஒருமுறை குனிந்து பார்த்து விட்டு வண்டியை இயக்கியவன் மிதமான வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தான்.
சரியாக அந்த கலைக் கல்லூரியின் அருகே வந்தபோது அவனது மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. ‘ஒருவேளை அவ காலேஜ் படிக்கிற பொண்ணா இருந்தா என்ன பண்றது?’ என்ற எண்ணம் எழுந்ததும் அவனது விழிகள் அந்த கல்லூரியின் முகப்பு வாயிலேயே நோட்டமிட்டது. வாயிலைப் பார்த்து விட்டு அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். அந்த கல்லூரியை விட்டு சற்று தள்ளி எதிர்ப்புறம் இருந்த பேருந்து நிலையத்தை பார்த்தவனது விழிகள் அப்படியே நிலை குத்தி நின்றது.
நிச்சயம் தன் மனம் கவர்ந்தவளை அங்கு பார்ப்போம் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. விழியகலாது, இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.
வாணியோ இதை அறியாமல் அருகிலிருந்த மலரிடம் எதையோ சொல்லி சிரித்தவாறு நின்றிருந்தாள். அதுவும் ஆகாய வண்ண நிறத்தில் உடை அணிந்து அவ்வப்போது வெண்பற்கள் தெரிய சிரித்து கண்களை சிமிட்டி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளது பாவனையில் சத்தியமாக தன் மனதை பறிகொடுத்து விட்டான் தேவேஷ்வர். தன்னிலை மறந்து அவளையே பார்த்திருந்தவன் ஒரு உந்துதலில், அவள் முன்னால் தான் சென்று நின்றால் அவளது முக பாவனைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அருகில் சென்று தன் வண்டியை நிறுத்தினான்.
மலரிடம் எதையோ சொல்லி விட்டு பைக்குள் இருந்த சாக்லேட்டை தேடிக் கொண்டிருந்தாள் வாணி. அதே நேரத்தில் அவர்கள் அருகே வந்து நின்றான் தேவேஷ்வர். பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த மலர் அவனைக் கண்டதும் அகமும் முகமும் மலர,
“ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றாள் ஒருவித குதூகலத்துடன்.
அவனும் அப்போது தான் மலரைப் பார்த்தவனாய்,
“ஓஓ இந்த காலேஜ்ல தான் படிக்கிறியா, நான் சூப்பரா இருக்கேன்டா நீ எப்படி இருக்குற?” என்று கேட்டான்.
“நான் நல்லா இருக்குறேன் அண்ணா நீங்க இப்ப எப்படி இருக்கீங்க, உங்க உடம்பு பரவாயில்லையா. காலேஜ் படிச்சு முடிச்சுட்டு வந்ததும் வராததுமா வம்பு வளர்த்து வச்சிருக்கீங்க. ஆனாலும் உங்களுக்கு செம தில்லு தான் அண்ணா ஒரு லவ் ஜோடி சேர்த்து வைக்க உங்க உயிரையே பணயம் வச்சிருக்கீங்களே நீங்க கிரேட் தான்” என்றாள் பூரிப்புடன்..
தேவேஷ்வருக்கோ அவள் பாராட்டியதில் தன்னையும் மறந்து வெட்கம் வர தலைகுனிந்து சிரித்தவன்,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா, நட்புக்காக எதையும் செய்யலாம் அவ்வளவுதான்” என்றான்.
அப்போதுதான் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த வாணி அந்த குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்றெண்ணி அவனிடம் பார்வையைத் திருப்பிவள் அவனைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் அவளது விழிகளில் ஒரு நிமிடம் வந்துபோன மின்னல் ஒளியை கண்டு அவனது உள்ளம் குதூகலித்தது. அவளும் தன்னை மறக்கவில்லை என்ற உணர்வே அவனை மெய்மறக்கச் செய்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட மலர் தயக்கத்துடன்,
“இவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என கேட்டாள்.
அதன் பிறகே தான் கேட்ட கேள்வி தவறு என்பது போல் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், “எதிரெதிர் வீட்டுல இருக்கீங்க அப்படி இருக்கும் போது உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாம இருக்குமா” என்றாள்.
அப்போது தான் இருவருக்கும் எதிர் எதிர் வீட்டில் தாங்கள் இருக்கிறோம் என்பதே தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தனர்.
“எனக்கு இவரை தெரியாது” என்றாள் வாணி மெல்லிய குரலில்.
அதே போல் அவனும் அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு, “எனக்கும் இவங்களை தெரியாது மலர், இவங்க யாரு உன் பிரண்டா?” என்று கேட்டான்.
“ஆமாணா என்னோட பிரண்டு தான் பேர் மதுரவாணி, இப்ப இவ என்னோட பெஸ்ட் பிரென்ட்டாகிட்டா தெரியுமா!”
”சரிம்மா உங்களுக்கு பஸ் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து நகர,
‘நாளைக்கு ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற எண்ணம் மலரினுள்ளும் எழாமல் இல்லை. அதேநேரம் ‘தனக்காகத் தான் இப்படியொரு வார்த்தையை சொல்லி விட்டு செல்கிறானோ?’ என்ற கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள் வாணி.
அவளது பார்வையின் பொருள் புரியாமல் குழம்பிய மலரோ,
“ஏய் உண்மைய சொல்லுடி தேவ் அண்ணாவ உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டாள்.
சட்டென்று பதற்றமடைந்த வாணி,“ இல்லை.. இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஜஸ்ட் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் பார்த்தனே தவிர வேற ஒன்னும் இல்லை” என்று மழுப்பலாக பதிலுரைத்தாள்.
ஆனால் அவளையே குறுகுறுவென்று பார்த்த மலர்,
“ம்ஹூம் நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தெளிவா தெரியுது, ஆனா ஏன் மறைக்கிறன்னு தான் தெரியல. ஆனா கூடிய சீக்கிரம் அதையும் கண்டுபிடிச்சுருவேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
‘அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்’ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வாணியும் மலரின் பின்னே சென்றாள். ஆனால் பேருந்தில் ஏறுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேவேஷ்வரை பார்த்து விட்டு அதன் பிறகு தான் படியேறினாள்.
மலரும் ஓரவிழியால் அதை கவனித்தாலும் எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டாள்.
தன் இரு சக்கர வாகனத்தில் மிதமாக பயணித்த தேவேஷ்வருக்கு சிறகின்றி விண்ணில் பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்து விட்ட மகிழ்விலும், அவளுக்கும் தன்னை ஞாபகம் இருக்கிறது என்ற உணர்வும் அவனை மகிழ்ச்சியான ஒரு உணர்வு குவியலுக்குள் தள்ளி இருந்தது.
அதிலும் தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் வந்து போன மின்னலும், மகிழ்வும் அவனை இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது.
இப்பொழுதே அவளிடம் தன் மனதில் இருப்பதை தெரிவித்து விடும் ஆவலும் அதிகரித்தது, பரபரப்பும் தொற்றிக்கொண்டது ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலை கருதி அமைதி காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படியே அவளை கூட்டிக்கொண்டு எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது. இருந்தும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்து விட்டதால், இனிமேலாவது அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து அவளிடம் பழகிய பின்னர், அவள் மனதில் உள்ளதையும் அறிந்து கொண்ட பின்னர் தன் மனதில் உள்ளதை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் மலர் வாணி இருவரும் சென்ற பேருந்து அவனைக் கடக்க முயன்றது. ஜன்னலின் ஓரம் அமர்ந்து இருந்த வாணியோ எட்டி எட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவனை முந்திச் செல்ல பேருந்து முயன்ற வேளையில் அவனை ஓர விழியால் பார்க்காமல் நேரடியாகவே பார்த்தாள் வாணி. அவனோ எதேச்சையாக நிமிர்ந்து அவள் இருந்த ஜன்னல் இருக்கையைப் பார்த்தவன் தன் பற்கள் தெரியும் அளவிற்கு புன்னகைத்து, “எப்படி இருக்க?” என்று கேட்டான் இதழ் அசைவில்..
அவன் அவ்வாறு கேட்டதும் ஒருவித உணர்வுக் குவியலுக்கு உட்பட்ட வாணி சட்டென்று முகத்தை மடியில் இருந்த கல்லூரி பையின் மீது புதைத்துக் கொண்டாள், ஆனால் சில நிமிடங்களில் ஓர விழியால் அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் புன்னகைக்க முயன்றாள். ஆனால் அவள் முகமோ அவன் செய்த செயலால் அடுத்த நிமிடம் செக்கச்செவேலென்று சிவந்து போனது.
அவளிடமிருந்து பதில் வராது போக ஒருவித தவிப்புக்குள்ளான தேவேஷ்வர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவளிருந்த இருக்கைக்கு நேராக வந்ததும் வேகத்தை சமநிலைப்படுத்தியவன் அவளிடம், “எப்படி இருக்குறன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டியா, என்னை ஞாபகம் இருக்குதா?” என்று மீண்டும் இதழ் அசைவில் கேட்டான்.
ஓர விழியால் அவனைப் பார்த்தவளோ அப்போதும் பதில் பேச முற்படவில்லை. ஆனால் அவளது கன்னங்கள் இரண்டும் செம்மையுற்றன. அதைக் கண்டவன் ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து முத்தமிடுவது போல் சைகை காண்பித்து விட, அதைக் கண்ட வாணி செங்கொழுந்தாக சிவந்து போனாள். இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தாள் மலர்.
‘நிச்சயம் இருவருக்குள்ளும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது' என்று அவளுக்கு தெளிவாகப் புரிந்து போனது. ஆனால் எப்படி என்றுதான் அவளால் கணிக்க முடியவில்லை. கல்லூரி படிப்பை முடித்து விட்டு தேவேஷ்வர் இந்த ஊருக்கு வந்த அன்று தான் அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருந்தான். சொல்லப்போனால் அந்த நிகழ்வுக்கு பிறகு இப்போது தான் அவன் வெளியில் நடமாட ஆரம்பித்திருப்பதாக பக்கத்து வீட்டு அக்கா பேசிக் கொண்டதை அவள் காலையில் தான் கேட்டு விட்டு வந்தாள். அப்படி இருக்கும் போது இருவருக்குள்ளும் எப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்கும் என்ற வினாவிற்கான விடை தெரியாமல் குழம்பித் தவித்தாள்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு குழப்பமும் இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து அவனை கடந்து முன்னே சென்று விட்டதால் அவன் பின் தங்கிவிட்டான். ஆனால் இந்த நிகழ்வு அவனை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தியது. அவளிடம் தான் இப்படி பேசுவோம், நடந்து கொள்வோம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அவளை மீண்டும் சந்தித்ததே கனவு போல் இருக்க, இப்போது அவளிடம் தன்னை மீறி முத்தச் சைகை காட்டி விட்டதை எண்ணி தவித்துப் போனான்.
ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிசைய மீண்டும் முன்னால் செல்ல முயன்றான். ஆனால் அதற்குள் பேருந்து அசுர வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டிருந்தது. இவனும் வேகமாக செல்லத்தான் முயன்றான் ஆனால் அவள் கூட மலர் இருப்பதால் தான் ஏதேனும் செய்யப் போய், அது அவளுக்கு தெரிந்து மீண்டும் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்ததால் அவன் அப்பேருந்தை பின்தொடவில்லை. அதுவும் தனக்கு பிரச்சினைகள் வந்தால் கூட ஏதாவது செய்து விடலாம், அவளுக்கு வந்தால் என்ன செய்வது என்று எண்ணி தான் பின் தங்கினான்.
பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றதும் மலர்,வாணி இருவரும் இறங்கினார்கள். மலர் அங்கிருந்து செல்ல முயன்ற வேளையில் வாணி, “மலர் ஒரு நிமிஷம்” என்று அழைத்து தடுத்து நிறுத்தினாள்.
என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த மலரிடம், “நாளைக்கு நான் கோயிலுக்கு போகணும், அதனால நாளைக்கு நான் காலேஜ் வரலடி” என்றாள் நா தந்தியடிக்க, படபடப்பு கலந்த பயத்துடன்.
“அப்படியா. எப்பவும் காலேஜ் வந்துட்டு அதுக்கப்புறம் தானே கோயிலுக்கு போவ, நாளைக்கு என்ன லீவு போட்டுட்டு கோயிலுக்கு போற, எதாவது விஷேஷமா?” என்றதும் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த வாணி சட்டென்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்ல முடிவு செய்தவளாய், “இல்ல நாளைக்கு அம்மாவோட பொறந்தநாளு அதான்”, என்று மழுப்பலாக பதில் உரைத்தாள்.
“சரி சரி தாராளமா போ நான் வேணான்னு சொல்லலை. ஆமா அதை சொல்றதுக்கு ஏன் இப்படி பயப்படுற, நீ எதுக்கும் கவலைப்படக் கூடாது. அம்மா அப்பா எங்க இருந்தாலும் உன்னை பார்த்து பெருமைப்படுவாங்க, சந்தோஷப்படுவாங்க சரியா. ஆமா நீ மட்டும் தனியா போயிட்டு வந்துடுவியா இல்ல நானும் லீவு போட்டுட்டு கூட வரட்டுமா?”
“இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல நீ லீவ் போட்டுட்டு எல்லாம் வர வேண்டாம் நாளைக்கு லேப் டெஸ்ட் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு ஏதாவது வொர்க் கொடுத்தா என்ன பண்றது, நானும் லீவ் போட்டுட்டேன் நீயும் லீவு போட்டா நமக்கு யாரு நோட்ஸ் தருவாங்க, அதனால நீ காலேஜ் போடி நான் கோயிலுக்கு போறேன். ஈவினிங் நானே உங்க வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் வாணி.
செல்லும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்த மலர், “பொய் சொல்றடி. என்கிட்ட மொத மொத பொய் சொல்ற வாணி நீ, அதனால தான் இப்படி பயந்து நடுங்குகிற. எனக்கு என்னமோ எங்கேயோ நீ லாக் ஆகிட்டன்னு தான் தோணுது பார்ப்போம் விஷயம் வெளிய வராமலா போயிரும். உங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஏதோ சம்திங் சம்திங் ஓடுற மாதிரி இருக்குது, எத்தனை நாள் தான் என்கிட்ட இருந்து இதை மறைக்கிறிங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு இவளும் வீட்டிற்கு செல்ல திரும்பிய வேளையில் அவளை இடிப்பது போல் வந்து நின்றது அகிலனின் கார்.
அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. பயத்தில் வேகமாக துடித்த நெஞ்சை சமன்செய்யும் பொருட்டு வலது கையை இடது நெஞ்சின் ஓரம் வைத்து அழுத்தி விட்டு கொண்டவள் இரண்டடி தள்ளி நின்றவாறு காரையே வெறித்துப் பார்த்தாள், ஏனெனில் அது அகிலனின் கார்.
அதைக்கண்ட பின்னும் எதுவும் பேசத் தோன்றாமல் அங்கிருந்து அவள் நகர்ந்த வேளையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த அகிலன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
அவளோ அவனை முறைத்துப் பார்த்து விட்டு, “உங்கக்கிட்ட பேசணும்ணு எனக்கு எந்த அவசியமும் கிடையாது”, என்று சொல்லிவிட்டு இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவளது கையை பிடித்து இழுத்து சென்று காரினுள் தள்ளி கதவை லாக் செய்தவன் தானும் மறுபக்கம் ஏறி அமர்ந்து வண்டியை மீண்டும் கரூர் செல்லும் ரோட்டில் திருப்பி இருந்தான். அதற்குள் மழை வேற பெய்ய துவங்கியிருந்தது..
அவனது செயலில் உருவாகியிருந்த உச்சகட்ட கோபத்தோடு காருக்குள் தாறுமாறாகக் கிடந்த மலர் எழுந்து நன்றாக அமைந்தவாறு,
“மரியாதையா காரை நிறுத்தியிருங்க, நான் வீட்டுக்கு போகணும் மழை வேற பெய்து”, என்றாள் படபடப்போடு.
“உன்கிட்ட நான் பேசணும். அஞ்சு நிமிஷம் தான், நான் பேச வேண்டியதை பேசி முடிச்சுடுறேன் அதுக்கப்புறம் நீ எங்கேயோ போ” என்றான் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு.
“மழை பெய்யுது நான் வீட்டுக்கு போகணும், இப்ப காரை நிறுத்துறீங்களா, இல்ல நான் கார்ல இருந்து கீழே குதிக்கட்டுமா?” என்றவள், சொன்னவாறே காரின் கதவை திறக்க முயல, அடுத்த கணம் அவளது கையிரண்டும் அகிலனின் ஒற்றைக் கையிக்குள் சிறைப்பட்டிருந்தது.
- தேடல் தொடரும்...
கணவர் சென்றபின் மகனின் அருகில் நெருங்கிய அஞ்சலை,
“அப்பாரு சொல்றபடி கேளு கண்ணா உனக்காக எவ்வளவு பெரிய காரியமெல்லாம் செஞ்சிருக்காரு தெரியுமா. அவுக பேச்சை கேட்கலன்னா உன்னை மறுக்கா மறுக்கா வஞ்சிக்கிட்டே இருப்பாங்க, வெளியே போவாத ராசா அப்பா சொல்ற வேலையை செஞசுடுலே. எதுக்காக நீ தெனமும் கோவிலுக்கு போறவென், அப்பாரு சொல்றது மாதிரி யாரையாவது தேடிக்கிட்டு இருக்கவனா, அது பொண்ணா?” என்று கேட்டார்.
சட்டென்று அதிர்வுடன் தன் தாயை திரும்பிப் பார்த்தான் தேவேஷ்வர். தந்தை பேசும் போது 'பெண்' என்ற வார்த்தையை உபயோகபடுத்தவே இல்லை ஆனால் தாய் சொல்கிறாரே, ஒரு வேளை உண்மை தெரிந்திருக்குமோ என்ற பதைபதைப்பில், “அப்பாரு எங்கம்மா பொண்ணுன்னு சொன்னாரு, நீங்க பாட்டுக்கு எதையாவது உளறி வைக்காதீக” என்று மழுப்பலாக பதிலுரைத்து அவர் மனதில் இருப்பதை அறிந்து கொள்ள முயன்றான்.
“அவுக சொல்லித்தேன் தெரியோணுமாக்கும். தெரியாமத்தேன் கேட்குறேன் அவருக்குத்தேன் உன்னை பத்தி சொல்றதுக்கு ஆளுக இருப்பாகளா, எனக்கெல்லாம் தெரிந்தவுக இருக்க மாட்டாகளா, இல்ல அவுகதேன் உன்னிய பத்தி எங்கிட்ட சொல்லாம போயிடுவாகளா. ஒரு வாரத்துக்கு முன்னுக்கவே தெரியும் உன்னோட நடவடிக்கை ஏதோ சரியில்லைன்னு. பூசாரியில இருந்து, கோயிலை கூட்டி பெருக்குறவுக வரைக்கும் அம்புட்டு பேரும் சொல்றாவுக, ஒரு பொண்ணோட அடையாளத்தை சொல்லி விசாரிக்கிட்டு இருக்கவென்னு. அப்படி உனக்கு அந்த பொண்ணைப் புடிச்சிருந்தா நீ என்கிட்ட சொல்லி இருக்கலாமே ராசா, நீயே போய் தேட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு, நான் பார்த்து கட்டி வெச்சுருக்கமாட்டேனா?” ஆதங்கத்தோடு கேட்டார்.
“அம்மா அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லம்மா அவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான் ஆனா எந்த ஊருன்னு தெரியல அவங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும், கூடவே அவங்களோட பொருள் ஒண்ணு என்கிட்ட இருக்குது அதை கொடுக்கணும் அதுக்காண்டி தான் தேடுனேன், நீ பாட்டுக்கு எதையாவது நினைச்சுக்கிட்டு இருக்காத சரியா. நான் அப்பாரு சொன்ன வேலையைச் செய்ய போறேன் இல்லைனா அதுக்கும் வந்து சாயந்திரம் திட்டுவாக” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக தன் இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
மகன் மழுப்பலாய் பதில் உரைத்ததும், இப்போதும் பதற்றத்துடன் இங்கிருந்து தப்பித்து ஓடுவதையும் கண்டு, தான் நினைத்தது தான் உண்மை என்றுணர்ந்த அஞ்சலை,’அந்த பொண்ணு யாருன்னு தெரியல, தெரிஞ்சா அந்த பிள்ளையை நம்ம பையனுக்கு கட்டி வச்சுடணும். ஒரு பொண்ணுக்காக இம்புட்டு தூரம் மெனக்கெடுறான்னா கண்டிப்பா அந்த புள்ளையும் இவனை நல்லா பார்த்துக்கிடும். அந்த பிள்ளை மேல உசுர இருக்கவும் தானே இப்படி தேடி திறியிறியான், கண்டிப்பா அந்த புள்ளைய எம்மவனுக்கு நான் கட்டி வெப்பேன்' என்று நினைத்தவராய் தான் விட்டு விட்டு வந்த சமையல் வேலையை கவனிக்க சென்றார்.
தாயிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவந்த தேவேஷ்வரும் அவசர அவசரமாகத் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து முதலில் தோட்டத்துக்கு சென்றவன், அங்கு வேலை ஆட்கள் எல்லாம் வேலை செய்வதை எட்ட நின்று பார்த்து விட்டு வயலில் கூட நுழையாது குடோனுக்கு சென்றுவிட்டான். குடோனில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் ஒருமுறை மேற்பார்வை கண்டு விட்டு இரண்டு மணி ஆனபோது மீண்டும் வீட்டிற்கு வந்து மதிய உணவை உண்டு விட்டு கரூருக்கு கிளம்பினான். ஏனோ அவனது சிந்தனையில் வாணி தான் நிறைந்திருந்தாள். அவளை ஒரு முறையேனும் எங்காவது கண்டு விட மாட்டோமா என்று அவன் உள்ளம் தவிப்புடன் துடித்தது.
அலைந்து திரிந்து தோட்டத்திற்கு தேவையான உரங்கள் அனைத்தையும் வாங்கி ஆட்டோ ஒன்றை பிடித்து அதில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு தன் இரு சக்கர வாகனத்தை அவன் உதைத்துக் கிளப்பிய போது மணி நான்கை தாண்டியிருந்தது. சலிப்புடன் மணிக்கட்டில் இருக்கும் கடிகாரத்தை ஒருமுறை குனிந்து பார்த்து விட்டு வண்டியை இயக்கியவன் மிதமான வேகத்தில் அங்கிருந்து நகர்ந்தான்.
சரியாக அந்த கலைக் கல்லூரியின் அருகே வந்தபோது அவனது மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. ‘ஒருவேளை அவ காலேஜ் படிக்கிற பொண்ணா இருந்தா என்ன பண்றது?’ என்ற எண்ணம் எழுந்ததும் அவனது விழிகள் அந்த கல்லூரியின் முகப்பு வாயிலேயே நோட்டமிட்டது. வாயிலைப் பார்த்து விட்டு அதன் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தான். அந்த கல்லூரியை விட்டு சற்று தள்ளி எதிர்ப்புறம் இருந்த பேருந்து நிலையத்தை பார்த்தவனது விழிகள் அப்படியே நிலை குத்தி நின்றது.
நிச்சயம் தன் மனம் கவர்ந்தவளை அங்கு பார்ப்போம் என்று அவன் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. விழியகலாது, இமைக்கொட்டாது அவளையே பார்த்தான்.
வாணியோ இதை அறியாமல் அருகிலிருந்த மலரிடம் எதையோ சொல்லி சிரித்தவாறு நின்றிருந்தாள். அதுவும் ஆகாய வண்ண நிறத்தில் உடை அணிந்து அவ்வப்போது வெண்பற்கள் தெரிய சிரித்து கண்களை சிமிட்டி கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அவளது பாவனையில் சத்தியமாக தன் மனதை பறிகொடுத்து விட்டான் தேவேஷ்வர். தன்னிலை மறந்து அவளையே பார்த்திருந்தவன் ஒரு உந்துதலில், அவள் முன்னால் தான் சென்று நின்றால் அவளது முக பாவனைகள் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்கள் அருகில் சென்று தன் வண்டியை நிறுத்தினான்.
மலரிடம் எதையோ சொல்லி விட்டு பைக்குள் இருந்த சாக்லேட்டை தேடிக் கொண்டிருந்தாள் வாணி. அதே நேரத்தில் அவர்கள் அருகே வந்து நின்றான் தேவேஷ்வர். பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்த மலர் அவனைக் கண்டதும் அகமும் முகமும் மலர,
“ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க?” என்றாள் ஒருவித குதூகலத்துடன்.
அவனும் அப்போது தான் மலரைப் பார்த்தவனாய்,
“ஓஓ இந்த காலேஜ்ல தான் படிக்கிறியா, நான் சூப்பரா இருக்கேன்டா நீ எப்படி இருக்குற?” என்று கேட்டான்.
“நான் நல்லா இருக்குறேன் அண்ணா நீங்க இப்ப எப்படி இருக்கீங்க, உங்க உடம்பு பரவாயில்லையா. காலேஜ் படிச்சு முடிச்சுட்டு வந்ததும் வராததுமா வம்பு வளர்த்து வச்சிருக்கீங்க. ஆனாலும் உங்களுக்கு செம தில்லு தான் அண்ணா ஒரு லவ் ஜோடி சேர்த்து வைக்க உங்க உயிரையே பணயம் வச்சிருக்கீங்களே நீங்க கிரேட் தான்” என்றாள் பூரிப்புடன்..
தேவேஷ்வருக்கோ அவள் பாராட்டியதில் தன்னையும் மறந்து வெட்கம் வர தலைகுனிந்து சிரித்தவன்,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லமா, நட்புக்காக எதையும் செய்யலாம் அவ்வளவுதான்” என்றான்.
அப்போதுதான் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு நிமிர்ந்த வாணி அந்த குரலை எங்கோ கேட்டது போலிருக்கிறதே என்றெண்ணி அவனிடம் பார்வையைத் திருப்பிவள் அவனைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதிலும் அவளது விழிகளில் ஒரு நிமிடம் வந்துபோன மின்னல் ஒளியை கண்டு அவனது உள்ளம் குதூகலித்தது. அவளும் தன்னை மறக்கவில்லை என்ற உணர்வே அவனை மெய்மறக்கச் செய்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க அதை கண்ட மலர் தயக்கத்துடன்,
“இவளை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என கேட்டாள்.
அதன் பிறகே தான் கேட்ட கேள்வி தவறு என்பது போல் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவள், “எதிரெதிர் வீட்டுல இருக்கீங்க அப்படி இருக்கும் போது உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியாம இருக்குமா” என்றாள்.
அப்போது தான் இருவருக்கும் எதிர் எதிர் வீட்டில் தாங்கள் இருக்கிறோம் என்பதே தெரிந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தனர்.
“எனக்கு இவரை தெரியாது” என்றாள் வாணி மெல்லிய குரலில்.
அதே போல் அவனும் அவளையே குறுகுறுவென்று பார்த்தவாறு, “எனக்கும் இவங்களை தெரியாது மலர், இவங்க யாரு உன் பிரண்டா?” என்று கேட்டான்.
“ஆமாணா என்னோட பிரண்டு தான் பேர் மதுரவாணி, இப்ப இவ என்னோட பெஸ்ட் பிரென்ட்டாகிட்டா தெரியுமா!”
”சரிம்மா உங்களுக்கு பஸ் வந்துருச்சுன்னு நினைக்கிறேன் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவன் அங்கிருந்து நகர,
‘நாளைக்கு ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற எண்ணம் மலரினுள்ளும் எழாமல் இல்லை. அதேநேரம் ‘தனக்காகத் தான் இப்படியொரு வார்த்தையை சொல்லி விட்டு செல்கிறானோ?’ என்ற கேள்வியோடு அவனையே பார்த்திருந்தாள் வாணி.
அவளது பார்வையின் பொருள் புரியாமல் குழம்பிய மலரோ,
“ஏய் உண்மைய சொல்லுடி தேவ் அண்ணாவ உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என்று கேட்டாள்.
சட்டென்று பதற்றமடைந்த வாணி,“ இல்லை.. இல்லை இல்லை அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ஜஸ்ட் எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு அதான் பார்த்தனே தவிர வேற ஒன்னும் இல்லை” என்று மழுப்பலாக பதிலுரைத்தாள்.
ஆனால் அவளையே குறுகுறுவென்று பார்த்த மலர்,
“ம்ஹூம் நீ எதையோ என்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தெளிவா தெரியுது, ஆனா ஏன் மறைக்கிறன்னு தான் தெரியல. ஆனா கூடிய சீக்கிரம் அதையும் கண்டுபிடிச்சுருவேன்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
‘அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்’ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட வாணியும் மலரின் பின்னே சென்றாள். ஆனால் பேருந்தில் ஏறுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை தங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த தேவேஷ்வரை பார்த்து விட்டு அதன் பிறகு தான் படியேறினாள்.
மலரும் ஓரவிழியால் அதை கவனித்தாலும் எதுவும் தெரியாதது போல் இருந்து கொண்டாள்.
தன் இரு சக்கர வாகனத்தில் மிதமாக பயணித்த தேவேஷ்வருக்கு சிறகின்றி விண்ணில் பறப்பது போலிருந்தது. அவளைப் பார்த்து விட்ட மகிழ்விலும், அவளுக்கும் தன்னை ஞாபகம் இருக்கிறது என்ற உணர்வும் அவனை மகிழ்ச்சியான ஒரு உணர்வு குவியலுக்குள் தள்ளி இருந்தது.
அதிலும் தன்னைக் கண்டதும் அவள் முகத்தில் வந்து போன மின்னலும், மகிழ்வும் அவனை இன்னதென்று சொல்ல முடியாத ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது.
இப்பொழுதே அவளிடம் தன் மனதில் இருப்பதை தெரிவித்து விடும் ஆவலும் அதிகரித்தது, பரபரப்பும் தொற்றிக்கொண்டது ஆனால் இருக்கும் இடம் சூழ்நிலை கருதி அமைதி காத்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
அப்படியே அவளை கூட்டிக்கொண்டு எங்காவது சென்றுவிட வேண்டும் என்ற எண்ணமும் மனதில் எழுந்தது. இருந்தும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்து விட்டதால், இனிமேலாவது அவளைப் பற்றிய விவரங்களை சேகரித்து அவளிடம் பழகிய பின்னர், அவள் மனதில் உள்ளதையும் அறிந்து கொண்ட பின்னர் தன் மனதில் உள்ளதை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மெதுவாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
சற்று நேரத்தில் மலர் வாணி இருவரும் சென்ற பேருந்து அவனைக் கடக்க முயன்றது. ஜன்னலின் ஓரம் அமர்ந்து இருந்த வாணியோ எட்டி எட்டி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவனை முந்திச் செல்ல பேருந்து முயன்ற வேளையில் அவனை ஓர விழியால் பார்க்காமல் நேரடியாகவே பார்த்தாள் வாணி. அவனோ எதேச்சையாக நிமிர்ந்து அவள் இருந்த ஜன்னல் இருக்கையைப் பார்த்தவன் தன் பற்கள் தெரியும் அளவிற்கு புன்னகைத்து, “எப்படி இருக்க?” என்று கேட்டான் இதழ் அசைவில்..
அவன் அவ்வாறு கேட்டதும் ஒருவித உணர்வுக் குவியலுக்கு உட்பட்ட வாணி சட்டென்று முகத்தை மடியில் இருந்த கல்லூரி பையின் மீது புதைத்துக் கொண்டாள், ஆனால் சில நிமிடங்களில் ஓர விழியால் அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் புன்னகைக்க முயன்றாள். ஆனால் அவள் முகமோ அவன் செய்த செயலால் அடுத்த நிமிடம் செக்கச்செவேலென்று சிவந்து போனது.
அவளிடமிருந்து பதில் வராது போக ஒருவித தவிப்புக்குள்ளான தேவேஷ்வர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தியவன் அவளிருந்த இருக்கைக்கு நேராக வந்ததும் வேகத்தை சமநிலைப்படுத்தியவன் அவளிடம், “எப்படி இருக்குறன்னு கேட்டா பதில் சொல்ல மாட்டியா, என்னை ஞாபகம் இருக்குதா?” என்று மீண்டும் இதழ் அசைவில் கேட்டான்.
ஓர விழியால் அவனைப் பார்த்தவளோ அப்போதும் பதில் பேச முற்படவில்லை. ஆனால் அவளது கன்னங்கள் இரண்டும் செம்மையுற்றன. அதைக் கண்டவன் ஒற்றைக் கண் சிமிட்டி இதழ் குவித்து முத்தமிடுவது போல் சைகை காண்பித்து விட, அதைக் கண்ட வாணி செங்கொழுந்தாக சிவந்து போனாள். இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தாள் மலர்.
‘நிச்சயம் இருவருக்குள்ளும் ஏற்கனவே பழக்கம் இருக்கிறது' என்று அவளுக்கு தெளிவாகப் புரிந்து போனது. ஆனால் எப்படி என்றுதான் அவளால் கணிக்க முடியவில்லை. கல்லூரி படிப்பை முடித்து விட்டு தேவேஷ்வர் இந்த ஊருக்கு வந்த அன்று தான் அவனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருந்தான். சொல்லப்போனால் அந்த நிகழ்வுக்கு பிறகு இப்போது தான் அவன் வெளியில் நடமாட ஆரம்பித்திருப்பதாக பக்கத்து வீட்டு அக்கா பேசிக் கொண்டதை அவள் காலையில் தான் கேட்டு விட்டு வந்தாள். அப்படி இருக்கும் போது இருவருக்குள்ளும் எப்படி பழக்கம் ஏற்பட்டு இருக்கும் என்ற வினாவிற்கான விடை தெரியாமல் குழம்பித் தவித்தாள்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் எந்த ஒரு குழப்பமும் இல்லை இருவரும் ஒருவரை ஒருவர் விழிகளால் ரசித்துக்கொண்டிருந்தார்கள். அதற்குள் பேருந்து அவனை கடந்து முன்னே சென்று விட்டதால் அவன் பின் தங்கிவிட்டான். ஆனால் இந்த நிகழ்வு அவனை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தியது. அவளிடம் தான் இப்படி பேசுவோம், நடந்து கொள்வோம் என்று அவன் கனவில் கூட நினைத்ததில்லை. அவளை மீண்டும் சந்தித்ததே கனவு போல் இருக்க, இப்போது அவளிடம் தன்னை மீறி முத்தச் சைகை காட்டி விட்டதை எண்ணி தவித்துப் போனான்.
ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிசைய மீண்டும் முன்னால் செல்ல முயன்றான். ஆனால் அதற்குள் பேருந்து அசுர வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டிருந்தது. இவனும் வேகமாக செல்லத்தான் முயன்றான் ஆனால் அவள் கூட மலர் இருப்பதால் தான் ஏதேனும் செய்யப் போய், அது அவளுக்கு தெரிந்து மீண்டும் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்ததால் அவன் அப்பேருந்தை பின்தொடவில்லை. அதுவும் தனக்கு பிரச்சினைகள் வந்தால் கூட ஏதாவது செய்து விடலாம், அவளுக்கு வந்தால் என்ன செய்வது என்று எண்ணி தான் பின் தங்கினான்.
பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றதும் மலர்,வாணி இருவரும் இறங்கினார்கள். மலர் அங்கிருந்து செல்ல முயன்ற வேளையில் வாணி, “மலர் ஒரு நிமிஷம்” என்று அழைத்து தடுத்து நிறுத்தினாள்.
என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த மலரிடம், “நாளைக்கு நான் கோயிலுக்கு போகணும், அதனால நாளைக்கு நான் காலேஜ் வரலடி” என்றாள் நா தந்தியடிக்க, படபடப்பு கலந்த பயத்துடன்.
“அப்படியா. எப்பவும் காலேஜ் வந்துட்டு அதுக்கப்புறம் தானே கோயிலுக்கு போவ, நாளைக்கு என்ன லீவு போட்டுட்டு கோயிலுக்கு போற, எதாவது விஷேஷமா?” என்றதும் ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த வாணி சட்டென்று ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்ல முடிவு செய்தவளாய், “இல்ல நாளைக்கு அம்மாவோட பொறந்தநாளு அதான்”, என்று மழுப்பலாக பதில் உரைத்தாள்.
“சரி சரி தாராளமா போ நான் வேணான்னு சொல்லலை. ஆமா அதை சொல்றதுக்கு ஏன் இப்படி பயப்படுற, நீ எதுக்கும் கவலைப்படக் கூடாது. அம்மா அப்பா எங்க இருந்தாலும் உன்னை பார்த்து பெருமைப்படுவாங்க, சந்தோஷப்படுவாங்க சரியா. ஆமா நீ மட்டும் தனியா போயிட்டு வந்துடுவியா இல்ல நானும் லீவு போட்டுட்டு கூட வரட்டுமா?”
“இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல நீ லீவ் போட்டுட்டு எல்லாம் வர வேண்டாம் நாளைக்கு லேப் டெஸ்ட் இருக்குன்னு சொல்லி இருக்காங்க. நாளைக்கு ஏதாவது வொர்க் கொடுத்தா என்ன பண்றது, நானும் லீவ் போட்டுட்டேன் நீயும் லீவு போட்டா நமக்கு யாரு நோட்ஸ் தருவாங்க, அதனால நீ காலேஜ் போடி நான் கோயிலுக்கு போறேன். ஈவினிங் நானே உங்க வீட்டுக்கு வந்து நோட்ஸ் வாங்கிக்கிறேன்” என்று சொல்லி விட்டு வேக வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள் வாணி.
செல்லும் அவளையே சில நிமிடங்கள் குறுகுறுவென்று பார்த்த மலர், “பொய் சொல்றடி. என்கிட்ட மொத மொத பொய் சொல்ற வாணி நீ, அதனால தான் இப்படி பயந்து நடுங்குகிற. எனக்கு என்னமோ எங்கேயோ நீ லாக் ஆகிட்டன்னு தான் தோணுது பார்ப்போம் விஷயம் வெளிய வராமலா போயிரும். உங்க ரெண்டு பேருக்குள்ளையும் ஏதோ சம்திங் சம்திங் ஓடுற மாதிரி இருக்குது, எத்தனை நாள் தான் என்கிட்ட இருந்து இதை மறைக்கிறிங்கன்னு நானும் பார்க்கிறேன்’ என்று நினைத்துக்கொண்டு இவளும் வீட்டிற்கு செல்ல திரும்பிய வேளையில் அவளை இடிப்பது போல் வந்து நின்றது அகிலனின் கார்.
அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அவளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும் போலிருந்தது. பயத்தில் வேகமாக துடித்த நெஞ்சை சமன்செய்யும் பொருட்டு வலது கையை இடது நெஞ்சின் ஓரம் வைத்து அழுத்தி விட்டு கொண்டவள் இரண்டடி தள்ளி நின்றவாறு காரையே வெறித்துப் பார்த்தாள், ஏனெனில் அது அகிலனின் கார்.
அதைக்கண்ட பின்னும் எதுவும் பேசத் தோன்றாமல் அங்கிருந்து அவள் நகர்ந்த வேளையில் காரில் இருந்து கீழே இறங்கி வந்த அகிலன், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் எடுத்த எடுப்பிலேயே.
அவளோ அவனை முறைத்துப் பார்த்து விட்டு, “உங்கக்கிட்ட பேசணும்ணு எனக்கு எந்த அவசியமும் கிடையாது”, என்று சொல்லிவிட்டு இரண்டு அடி கூட எடுத்து வைத்திருக்க மாட்டாள் அவளது கையை பிடித்து இழுத்து சென்று காரினுள் தள்ளி கதவை லாக் செய்தவன் தானும் மறுபக்கம் ஏறி அமர்ந்து வண்டியை மீண்டும் கரூர் செல்லும் ரோட்டில் திருப்பி இருந்தான். அதற்குள் மழை வேற பெய்ய துவங்கியிருந்தது..
அவனது செயலில் உருவாகியிருந்த உச்சகட்ட கோபத்தோடு காருக்குள் தாறுமாறாகக் கிடந்த மலர் எழுந்து நன்றாக அமைந்தவாறு,
“மரியாதையா காரை நிறுத்தியிருங்க, நான் வீட்டுக்கு போகணும் மழை வேற பெய்து”, என்றாள் படபடப்போடு.
“உன்கிட்ட நான் பேசணும். அஞ்சு நிமிஷம் தான், நான் பேச வேண்டியதை பேசி முடிச்சுடுறேன் அதுக்கப்புறம் நீ எங்கேயோ போ” என்றான் காரை வேகமாக ஓட்டிக்கொண்டு.
“மழை பெய்யுது நான் வீட்டுக்கு போகணும், இப்ப காரை நிறுத்துறீங்களா, இல்ல நான் கார்ல இருந்து கீழே குதிக்கட்டுமா?” என்றவள், சொன்னவாறே காரின் கதவை திறக்க முயல, அடுத்த கணம் அவளது கையிரண்டும் அகிலனின் ஒற்றைக் கையிக்குள் சிறைப்பட்டிருந்தது.
- தேடல் தொடரும்...