Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 11
ஆதித்தனை கைதியாக கயிற்றால் பிணைத்து கட்டியபடி குதிரையின் பின்னால் நடக்க வைத்தபடி சோதனை சாவடியை நெருங்கினான் எதிர்காலம்.
ஏற்கனவே இளவரசர் அபயவர்மருடன் இதே வழியில் இரண்டு முறை பயணம் செய்திருந்ததால் அங்கிருந்த காவல் வீரர்களுக்கும், சோதனை சாவடியின் தலைவனுக்கும் வெகு பரிச்சயமான நபராக எதிர்காலம் அறிமுகமாகிமாகியிருந்தான். தன் அறையின் சன்னல் வழியாக வெளியே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சோதனை சாவடியின் பொறுப்பதிகாரி தன் பருத்த உடலை சுமந்து கொண்டு ஓடி வந்து முகமன் கூறினான்.
" வாருங்கள். மெய் காவல் படை தலைவரே! என்ன இந்த பக்கம் தனியாக வந்திருக்கிறீர்கள்? இளவரசரும் மன்னரும் நலமா?" என்று கேட்டு தன் ராஜ விசுவாசத்தை காட்டினான்.
"அனைவரும் நலம். நான் தனியாக வரவில்லை தலைவரே! இதோ இந்த கள்வனுடன் துவந்த யுத்தம் புரிந்து அவனை கைதியாக பிடித்து வந்திருக்கிறேன்” என்றான் எதிர்காலம் பெருமிதத்துடன் .
"இவன்?" என்று ஆதித்தனை கேள்விக்குறியுடன் பார்த்தான் தலைவன்.
"ஆதித்தன் - நேற்று நம் மன்னரிடம் அதிகப் பிரசங்கித்தனமாக பேசி அதிகாலைக்குள் சிறையிலிருந்து தப்பி செல்வதாக சவால் விட்டவன். இவனை பிடிக்க சொல்லி மன்னர் அனுப்பிய ஓலை இன்னுமா உமக்கு வந்து சேரவில்லை?”
"ஓ! அந்த கள்வன் இவன் தானா? மன்னர் அனுப்பி வைத்த ஓலை காலையிலேயே வந்து விட்டது.இவன் இந்தப் பக்கம் வந்தால் பிடிப்பதற்காகத்தான் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.” என்றான் தலைவன்.
"எமகாதகன் இவன். இவனை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வங்கி லிருக்கும் எலியைப் போல் பல வழிகளில் என்னை வீழ்த்தி விட்டு ஓடப் பார்த்தான்.
இறுதியில் என்னிடம் அகப்பட்டுக் கொண்டான்.”
"ஓடுபவனுக்கு பல வழி. துரத்துபவனுக்கு ஒரே வழி என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது உண்மை தான் போல.”
" ஆனால் கடம்ப நாட்டிடம் இவனது திறமை செல்லுபடியாகவில்லை. பரிதாபமாக பிடிபட்டு விட்டான்.இவனது அகம்பாவத்திற்கு தண்டனையாக இவனை கால்நடையாக கட்டி இழுத்து வந்திருக்கிறேன். இவனை இங்கே ஆப்படைத்து விட்டு நான் எல்லைப்புறத்திற்கு இளவரசரை காண செல்ல வேண்டும்” என்றான் எதிர்காலம்.
"அதற்கென்ன? இவனை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள். பயலை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் தலைவன்.
"இவன் அதிகம் பேசுவான்”
" பேசவே முடியாதபடி செய்து விடுகிறேன். கவலையை விடுங்கள்." என்ற தலைவன் ஆதித்தனை நெருங்கி பயங்கரமாக முறைத்தான் -
"உமது பார்வையை கண்டு எனக்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து என்னை அப்படி பார்த்து பயமுறுத்தாதீர்கள்" என்றான் ஆதித்தன் பயப்படுவது போல் நடித்த படி.
"பார்த்தீர்களா? என் பார்வையை கண்டே ப யல் பயந்து விட்டான். இன்னும் என் கையால் அடி வாங்கினால் இவனது நிலைமை என்னாவது?" என்றான் தன் மீசையை முறுக்கியபடி.
"அய்யா எதிர்காலம் ! என்னை தயவு செய்து இவரிடம் ஒப்படைத்து விட்டு போய் விடாதீர்கள். இவரைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது." என்று இறைஞ்சினான் ஆதித்தன்.
அதே நேரம் புதரில் கிடந்த துணி தீப்பிடித்து எரியத் துவங்கியது. புதரில் பற்றிய தீ மெல்ல காய்ந்து கிடந்த கோரை புற்களில் படர்ந்து முன்னேற ஆரம்பித்தது. சோதனை சாவடிக்கு வெளியே நின்றிருந்த இரு காவலர்களில் ஓருவன் அதைப் பார்த்து விட்டு "அதோ!அங்கே பார்!திடிரென அந்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது “ என்றான். இருவரும் உள்ளே நுழைந்து தலைவனின் உரையாடலில் குறுக்கிட்டனர்.
" என்ன? எதற்காக இங்கே ஓடி வருகிறீர்கள்?”
"வெளியே கோரைப் புற்கள் திடிரென தீப்பிடித்து எரிகின்றன.”
"திடிரென தீப்பிடித்து எரிகிறதா?" என்று சந்தேக கண்களுடன் ஆதித்தனைப் பார்த்தவன் "இங்கே தீயை அணைக்க போதுமான அளவு தண்ணீர் இல்லையே?" என்றான்.
"தண்ணீர் இல்லாவிட்டால் என்ன?கோரைப் புற்களையே பிடுங்கி பரவி வரும் நெருப்பை அணைத்து விடலாமே?" என்ற ஆதித்தனை முறைத்த தலைவன் "சரி. சரி. இவன் சொன்னதை செய்து தொலையுங்கள். போதுமான ஆட்களை கூட்டிச் செல்லுங்கள்" என்றான்.
சற்று நேத்தில் த ப த ப வென ஒரு கூட்டம் தீப்பிடித்த இடத்தை நோக்கி கூச்சலிட்டபடி ஓடியது.
" இப்படி நீ யோசனை கூறியதால் நான் உன் மீது கருணை காட்டுவேன் என்று நம்பி விடாதே" என்றான் தலைவன் முறைப்புடன்.
'உங்களின் கருணை எனக்கு தேவையேயில்லை" என்ற ஆதித்தன் மின்னல் வேகத்தில் தன் கைகட்டை அவிழ்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி பாய்ந்தான். தலைவன் கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் எதிர்காலத்தின் கழுத்தில் தன் கு றுவாளை வைத்திருந்தான் ஆதித்தன்.
" உன் இளவரசரின்ஆப் த நண்பன் இப்போது என் வாள்முனையில் . இப்போது என்ன செய்வதாக உத்தேசம். நான் சொல்வதை கேட்டு நடப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை" என்றான் ஆதித்தன்.
எதிர்பாராது நடந்த இந்த செயலால் கல்லாய் சமைந்து நின்றான் தலைவன்.
ஆதித்தனை கைதியாக கயிற்றால் பிணைத்து கட்டியபடி குதிரையின் பின்னால் நடக்க வைத்தபடி சோதனை சாவடியை நெருங்கினான் எதிர்காலம்.
ஏற்கனவே இளவரசர் அபயவர்மருடன் இதே வழியில் இரண்டு முறை பயணம் செய்திருந்ததால் அங்கிருந்த காவல் வீரர்களுக்கும், சோதனை சாவடியின் தலைவனுக்கும் வெகு பரிச்சயமான நபராக எதிர்காலம் அறிமுகமாகிமாகியிருந்தான். தன் அறையின் சன்னல் வழியாக வெளியே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த சோதனை சாவடியின் பொறுப்பதிகாரி தன் பருத்த உடலை சுமந்து கொண்டு ஓடி வந்து முகமன் கூறினான்.
" வாருங்கள். மெய் காவல் படை தலைவரே! என்ன இந்த பக்கம் தனியாக வந்திருக்கிறீர்கள்? இளவரசரும் மன்னரும் நலமா?" என்று கேட்டு தன் ராஜ விசுவாசத்தை காட்டினான்.
"அனைவரும் நலம். நான் தனியாக வரவில்லை தலைவரே! இதோ இந்த கள்வனுடன் துவந்த யுத்தம் புரிந்து அவனை கைதியாக பிடித்து வந்திருக்கிறேன்” என்றான் எதிர்காலம் பெருமிதத்துடன் .
"இவன்?" என்று ஆதித்தனை கேள்விக்குறியுடன் பார்த்தான் தலைவன்.
"ஆதித்தன் - நேற்று நம் மன்னரிடம் அதிகப் பிரசங்கித்தனமாக பேசி அதிகாலைக்குள் சிறையிலிருந்து தப்பி செல்வதாக சவால் விட்டவன். இவனை பிடிக்க சொல்லி மன்னர் அனுப்பிய ஓலை இன்னுமா உமக்கு வந்து சேரவில்லை?”
"ஓ! அந்த கள்வன் இவன் தானா? மன்னர் அனுப்பி வைத்த ஓலை காலையிலேயே வந்து விட்டது.இவன் இந்தப் பக்கம் வந்தால் பிடிப்பதற்காகத்தான் வீரர்களை தயார் நிலையில் வைத்திருக்கிறேன்.” என்றான் தலைவன்.
"எமகாதகன் இவன். இவனை தேடி கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வங்கி லிருக்கும் எலியைப் போல் பல வழிகளில் என்னை வீழ்த்தி விட்டு ஓடப் பார்த்தான்.
இறுதியில் என்னிடம் அகப்பட்டுக் கொண்டான்.”
"ஓடுபவனுக்கு பல வழி. துரத்துபவனுக்கு ஒரே வழி என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தது உண்மை தான் போல.”
" ஆனால் கடம்ப நாட்டிடம் இவனது திறமை செல்லுபடியாகவில்லை. பரிதாபமாக பிடிபட்டு விட்டான்.இவனது அகம்பாவத்திற்கு தண்டனையாக இவனை கால்நடையாக கட்டி இழுத்து வந்திருக்கிறேன். இவனை இங்கே ஆப்படைத்து விட்டு நான் எல்லைப்புறத்திற்கு இளவரசரை காண செல்ல வேண்டும்” என்றான் எதிர்காலம்.
"அதற்கென்ன? இவனை எங்களிடம் விட்டு விட்டு உங்கள் பயணத்தை தொடருங்கள். பயலை நான் பார்த்து கொள்கிறேன்" என்றான் தலைவன்.
"இவன் அதிகம் பேசுவான்”
" பேசவே முடியாதபடி செய்து விடுகிறேன். கவலையை விடுங்கள்." என்ற தலைவன் ஆதித்தனை நெருங்கி பயங்கரமாக முறைத்தான் -
"உமது பார்வையை கண்டு எனக்கு பயமாக இருக்கிறது. தயவு செய்து என்னை அப்படி பார்த்து பயமுறுத்தாதீர்கள்" என்றான் ஆதித்தன் பயப்படுவது போல் நடித்த படி.
"பார்த்தீர்களா? என் பார்வையை கண்டே ப யல் பயந்து விட்டான். இன்னும் என் கையால் அடி வாங்கினால் இவனது நிலைமை என்னாவது?" என்றான் தன் மீசையை முறுக்கியபடி.
"அய்யா எதிர்காலம் ! என்னை தயவு செய்து இவரிடம் ஒப்படைத்து விட்டு போய் விடாதீர்கள். இவரைப் பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கிறது." என்று இறைஞ்சினான் ஆதித்தன்.
அதே நேரம் புதரில் கிடந்த துணி தீப்பிடித்து எரியத் துவங்கியது. புதரில் பற்றிய தீ மெல்ல காய்ந்து கிடந்த கோரை புற்களில் படர்ந்து முன்னேற ஆரம்பித்தது. சோதனை சாவடிக்கு வெளியே நின்றிருந்த இரு காவலர்களில் ஓருவன் அதைப் பார்த்து விட்டு "அதோ!அங்கே பார்!திடிரென அந்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது “ என்றான். இருவரும் உள்ளே நுழைந்து தலைவனின் உரையாடலில் குறுக்கிட்டனர்.
" என்ன? எதற்காக இங்கே ஓடி வருகிறீர்கள்?”
"வெளியே கோரைப் புற்கள் திடிரென தீப்பிடித்து எரிகின்றன.”
"திடிரென தீப்பிடித்து எரிகிறதா?" என்று சந்தேக கண்களுடன் ஆதித்தனைப் பார்த்தவன் "இங்கே தீயை அணைக்க போதுமான அளவு தண்ணீர் இல்லையே?" என்றான்.
"தண்ணீர் இல்லாவிட்டால் என்ன?கோரைப் புற்களையே பிடுங்கி பரவி வரும் நெருப்பை அணைத்து விடலாமே?" என்ற ஆதித்தனை முறைத்த தலைவன் "சரி. சரி. இவன் சொன்னதை செய்து தொலையுங்கள். போதுமான ஆட்களை கூட்டிச் செல்லுங்கள்" என்றான்.
சற்று நேத்தில் த ப த ப வென ஒரு கூட்டம் தீப்பிடித்த இடத்தை நோக்கி கூச்சலிட்டபடி ஓடியது.
" இப்படி நீ யோசனை கூறியதால் நான் உன் மீது கருணை காட்டுவேன் என்று நம்பி விடாதே" என்றான் தலைவன் முறைப்புடன்.
'உங்களின் கருணை எனக்கு தேவையேயில்லை" என்ற ஆதித்தன் மின்னல் வேகத்தில் தன் கைகட்டை அவிழ்த்துக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி பாய்ந்தான். தலைவன் கண்ணை மூடி திறக்கும் நேரத்தில் எதிர்காலத்தின் கழுத்தில் தன் கு றுவாளை வைத்திருந்தான் ஆதித்தன்.
" உன் இளவரசரின்ஆப் த நண்பன் இப்போது என் வாள்முனையில் . இப்போது என்ன செய்வதாக உத்தேசம். நான் சொல்வதை கேட்டு நடப்பதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை" என்றான் ஆதித்தன்.
எதிர்பாராது நடந்த இந்த செயலால் கல்லாய் சமைந்து நின்றான் தலைவன்.