- Messages
- 583
- Reaction score
- 588
- Points
- 93
அத்தியாயம் – 5
"தேங்க் யூ... மித்ரா..." - மித்ராவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அவளுடைய வேலை இங்கு முடிந்துவிட்டது என்பதை அவளுக்கு சுட்டிக்காட்ட முயன்றான் நரேன்.
ஆனால் அவளுடைய பார்வை அபிமன்யுவின் முகத்திலிருந்து இம்மி கூட நகரவில்லை. "இட்ஸ் ஓகே சார்... நோ ப்ராப்லம்..." என்று அவன் ஏதோ அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது போல் பெருந்தன்மையுடன் கூற, அதுவரை மிருதுளாவின் பெயரை ஃபைலில் மும்மரமாக தேடி கொண்டிருந்த அபிமன்யு நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அவள் பார்வை தன்னை ஆராய்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து எரிச்சலடைந்தவன், 'கெட் அவுட்' என்று கத்தினான்.
திடுக்கிட்டுப் போனாள் மித்ரா. கொஞ்சம் மூளையை பயன்படுத்தியிருந்தாலும் நரேன் குறிப்பாக சொன்ன போதே அந்த அறையைவிட்டு சென்றிருக்கலாம். இப்படி திட்டு வாங்க நேர்ந்திருக்காது. முகத்தை ஏழு முழத்திற்கு தொங்கவிட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் அப்படி சென்றது நரேனுக்கு பிடிக்கவில்லை. "ஏண்டா இப்படி ரூடா பேசற? ஷி ஸ் அவர் எம்ப்லாயி மேன். நாட் எனிமி" என்று அண்ணனை கண்டித்தான்.
"அப்போ உன் எம்ப்லாயிகிட்ட சொல்லி வை. ஐ ஆம் நாட் எ ஷோ பீஸ். சும்மா 'ஆஆஆ'ன்னு வாயை பிளந்து பார்த்துகிட்டு " - கடுப்படித்தான்.
நரேனுக்கு சுருக்கென்று உள்ளே குத்தியது. 'கவனித்திருக்கிறானே! அவனை பார்த்ததை மட்டும் கவனிதானா இல்லை நம்மை பார்க்காததையும் கவனித்தானா!' - தேவையில்லாத ஆணி தான். ஆனால் மனதிற்குள் இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.
"நீ பெரிய ஆணழகன். உன்னை பார்க்கறா! நெனப்புதாண்டா... முதல்ல முடியை ஒழுங்கா வெட்டு" என்று நரேன் அபிமன்யுவை அலட்சியப்படுத்த முயல, அவன் முயற்சியை ஒரு நக்கல் சிரிப்பில் ஒதுக்கிவிட்டு தன் வேலையில் மூழ்கினான் மூத்தவன்.
அவனுடைய முதல் தேவை மிருதுளாவை பற்றி தெரிந்துகொள்வது தான். திரும்ப திரும்ப அந்த லிஸ்டை மூன்று முறை சளித்துப் பார்த்தும் அவள் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.
"முழு லிஸ்டும் கேட்டா என்னடா கொடுக்கறீங்க?" என்று கையிலிருந்த கோப்பை தூக்கி நரேனிடம் வீசினான்.
அதை எடுத்து எண்ணிக்கையை சரி பார்த்துவிட்டு "சரியா இருக்க மாதிரி தானே இருக்கு!" என்றான் நரேன்.
"இல்ல... நேம்ஸ் மிஸ் ஆகற மாதிரி இருக்கே!"
"நோ அபி, மிஸ் ஆக வாய்ப்பு இல்ல. நீ ஏன் அப்படி நினைக்கிற? ஸ்பெஸிஃபிக்கா ஏதாவது பெயரை தேடுறியா என்ன?" - அவன் நாடியை சரியாக பிடித்தான்.
ஒரு நொடி அபிமன்யு திகைத்தான். தன்னை பற்றி வெளிப்படுத்துவதில் அவனுக்கு எப்பொழுதுமே விருப்பம் இருந்ததில்லை. அதிலும் மிருதுளாவை பற்றிய விஷயம் என்றால் இன்னும் கூடுதல் சென்சிட்டிவாக இருப்பான். எனவே இல்லை என்பது போல் தலையை அசைத்ததோடு வேறு எதுவும் பேசவில்லை அவன்.
'அவளை பற்றி எப்படி தெரிந்துகொள்வது? எப்படி தெரிந்துகொள்வது?' அது மட்டும் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து ஸ்மோக்கிங் ஏரியா பக்கம் சென்றான். டென்சன் சற்று குறைந்ததும் கேஃப்டீரியா பக்கம் சென்றான். அங்கே மிருதுளா கண்ணில் படுவாளா என்று அவன் பார்வையால் அலச மித்ரா எதிரில் வந்து நின்றாள்.
"ஹலோ... என்னை நியாபகம் இல்லையா? நொய்டா... பப்... ஃபைட்... நான் தான்... மித்ரா..." என்று அவனுக்கு தன்னை நியாபகப்படுத்த முயன்றாள். அவளுடைய முயற்சி வீணாகவில்லை. தெரிந்துகொண்டதன் அடையாளமாக அபிமன்யுவின் புருவம் மேல் ஏறி கீழிறங்கியது.
"வாட் யு வாண்ட் நௌ?" - அதட்டினான்.
"நத்திங், ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லலாம்னு வந்தேன். இங்க என்ன பண்றீங்க? நொய்டா டு அந்தமான்... லாங் டிராவலாச்சே!" - பேச்சை வளர்க்க அவள் விருப்பம் காட்ட அவன் முகம் கடுத்தது.
"பேரென்ன?"
"மித்ரா"
"ஹும்.. லுக் மித்ரா... நா பிஸியா இருக்கேன். லீவ் மீ அலோன்" - பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
"ஸுர்... ஸுர்... ஐ'ல் டேக் எ லீவ். அதுக்கு முன்னாடி... தேங்க் யு. அன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணினதுனாலதான் நான் இன்னிக்கு இங்க இருக்கேன்"- கொஞ்சம் வழிசல் தான்..
'என்னவோ இந்த வேலையை ரசித்து ருசித்து செய்வது போல் ஸீன்… ம்ம்ம்? மானங்கெட்டவளே!’ - மனசாட்சி மனசாட்சியே இல்லாமல் கழுவி ஊற்றியது.
அதை துடைத்துக் கொண்டு அபிமன்யுவை பார்த்து அவள் பல்லை காட்ட, "தப்புதான்... அன்னைக்கு உனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க கூடாது. எப்படியோ அடிபட்டு சாக்குன்னு விட்டுருக்கணும்." என்று அவன் மூக்கை விடைத்துக் கொண்டு கண்களை உருட்ட, மிரண்டு போனாள் மித்ரா.
'ஏதே! சாகுறதா!' - ஜெர்க்காகி ஓர் அடி பின்னால் வைத்தாள்.
'தடி தாண்டவராயா! உன் காதலி செத்து போயிட்டான்னா... ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் அடிபட்டு சாகணுமா! லூசு பயலே! உன்கிட்ட பேச வந்தேன் பாரு! சைக்கோ.. சைக்கோ..!' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றவள் எதிரில் வந்த நரேனை கவனிக்கவில்லை. அதற்கான பலனை விரைவிலேயே அனுபவித்தாள் மித்ரா.
அந்த அலுவலகத்தில் அபிமன்யுவிற்கு ஒரு தனி அறை அவன் கேட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அறையில் அமர்ந்தபடியே அவனால் கிட்டத்தட்ட முழு அலுவலகத்தையும் கண்காணிக்க முடியும். சிசிடிவி கண்ட்ரோல் ரூம் பாதுகாப்பாக மூன்றாம் தளத்தில் இருந்தாலும், அபிமன்யுவின் அறையில் உள்ள கணினி திரையில், மீட்டிங் ஹால், வரவேற்பு பகுதி, கேஃப்டீரியா போன்ற பொது இடங்களுக்கான லைவ் வீடியோவை பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருபத்தி நான்கு மணிநேரமும் அவன் அந்த வீடியோவில் தான் மூழ்கி இருந்தான். அப்படி அவன் அப்சஸ்ட்டாக மிருதுளாவை காணும் நோக்கில் வீடியோவில் மூழ்கி இருக்கும் நேரம் யாராவது அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தல் கூட போதும்... தொலைந்தார்கள். மித்ராதான் அடிக்கடி மாட்டுவாள். காரணம் சாக்ஷத் நரேனே தான்.
நரேனுக்கு ஒரு பழக்கம். மாதத்திற்கு ஓரிரு முறை கம்பெனியை முழுவதுமாக சுற்றி வருவான். இன்ஸ்பெக்ஷன் செய்வது போல்... அப்படி அவன் அன்று கேஃபிடீரியா பக்கம் வந்த போது அபிமன்யுவை அங்கே பார்த்தான். உடன் மித்ரா... அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில். எப்படியாவது அவனோடு பழக வேண்டும் என்று அவள் பிரயத்தனப்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அவனோ கரடி போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளை பார்த்தான். அப்போதும் அவளுக்கு புத்தி வரவில்லை. சுற்றம் சூழ்நிலையெல்லாம் மறந்து அவனிடம் ஏதோ இளித்துக் கொண்டே பேசி வாங்கி கட்டிக் கொண்டாள்.
அப்போது நரேனுக்கே கூட பாவமாக தான் இருந்தது. இதெல்லாம் இவளுக்கு தேவையா என்று. ஆனால் அடுத்து நடந்ததைத்தான் அவனால் மன்னிக்கவே முடியவில்லை.
அபிமன்யுவிடம் வலிய வலிய பேசி வாங்கி கட்டிக் கொண்டு அவள் திரும்பி நடந்த போது, நரேன் வழியில் தான் நின்றான். இவள் அவனை கடந்து தான் சென்றாள். விட்டால், 'ந்தாப்பா... கொஞ்சம் தள்ளி நில்லு' என்று சொல்லிவிட்டுக் கூட போயிருப்பாள். அப்படிதான் தோன்றியது அவனுக்கு.
அப்படி என்ன அவன் குறைந்துவிட்டான்! அவள் கண்ணில்... கருத்தில் எதிலுமே பதியாத அளவுக்கு! கோபமாக வந்தது. அவனை பார்க்க ஆயிரம் பெண்கள்... ஆனால் இவள் ஏன் பார்க்கவில்லை! அதுதான் அவனை குடைந்தது. அது எப்படி என்னை கவனிக்காமல் நீ போவாய் என்கிற கேள்வி அவனை உறங்கவிடவில்லை.
'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா! இருடி... பக்கத்துலேயே தூக்கி போடறேன். அப்பறம் தெரியும், அவன் பெட்ரோமாக்ஸ் லைட்டா இல்ல பெட்ரோல் பாமான்னு' என்று எண்ணினான். எண்ணியபடியே அவளை ஹெச்ஆர் டிப்பார்ட்மென்டிலிருந்து தூக்கி அபிமன்யுவின் செகரட்ரியாக போட்டான். பொறி வைத்த பொந்துக்குள் சிக்கிய எலி போல் முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் வர முடியாமல் அவனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள் மித்ரா.
"தேங்க் யூ... மித்ரா..." - மித்ராவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அவளுடைய வேலை இங்கு முடிந்துவிட்டது என்பதை அவளுக்கு சுட்டிக்காட்ட முயன்றான் நரேன்.
ஆனால் அவளுடைய பார்வை அபிமன்யுவின் முகத்திலிருந்து இம்மி கூட நகரவில்லை. "இட்ஸ் ஓகே சார்... நோ ப்ராப்லம்..." என்று அவன் ஏதோ அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது போல் பெருந்தன்மையுடன் கூற, அதுவரை மிருதுளாவின் பெயரை ஃபைலில் மும்மரமாக தேடி கொண்டிருந்த அபிமன்யு நிமிர்ந்து அவளை பார்த்தான்.
அவள் பார்வை தன்னை ஆராய்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து எரிச்சலடைந்தவன், 'கெட் அவுட்' என்று கத்தினான்.
திடுக்கிட்டுப் போனாள் மித்ரா. கொஞ்சம் மூளையை பயன்படுத்தியிருந்தாலும் நரேன் குறிப்பாக சொன்ன போதே அந்த அறையைவிட்டு சென்றிருக்கலாம். இப்படி திட்டு வாங்க நேர்ந்திருக்காது. முகத்தை ஏழு முழத்திற்கு தொங்கவிட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் அப்படி சென்றது நரேனுக்கு பிடிக்கவில்லை. "ஏண்டா இப்படி ரூடா பேசற? ஷி ஸ் அவர் எம்ப்லாயி மேன். நாட் எனிமி" என்று அண்ணனை கண்டித்தான்.
"அப்போ உன் எம்ப்லாயிகிட்ட சொல்லி வை. ஐ ஆம் நாட் எ ஷோ பீஸ். சும்மா 'ஆஆஆ'ன்னு வாயை பிளந்து பார்த்துகிட்டு " - கடுப்படித்தான்.
நரேனுக்கு சுருக்கென்று உள்ளே குத்தியது. 'கவனித்திருக்கிறானே! அவனை பார்த்ததை மட்டும் கவனிதானா இல்லை நம்மை பார்க்காததையும் கவனித்தானா!' - தேவையில்லாத ஆணி தான். ஆனால் மனதிற்குள் இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.
"நீ பெரிய ஆணழகன். உன்னை பார்க்கறா! நெனப்புதாண்டா... முதல்ல முடியை ஒழுங்கா வெட்டு" என்று நரேன் அபிமன்யுவை அலட்சியப்படுத்த முயல, அவன் முயற்சியை ஒரு நக்கல் சிரிப்பில் ஒதுக்கிவிட்டு தன் வேலையில் மூழ்கினான் மூத்தவன்.
அவனுடைய முதல் தேவை மிருதுளாவை பற்றி தெரிந்துகொள்வது தான். திரும்ப திரும்ப அந்த லிஸ்டை மூன்று முறை சளித்துப் பார்த்தும் அவள் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.
"முழு லிஸ்டும் கேட்டா என்னடா கொடுக்கறீங்க?" என்று கையிலிருந்த கோப்பை தூக்கி நரேனிடம் வீசினான்.
அதை எடுத்து எண்ணிக்கையை சரி பார்த்துவிட்டு "சரியா இருக்க மாதிரி தானே இருக்கு!" என்றான் நரேன்.
"இல்ல... நேம்ஸ் மிஸ் ஆகற மாதிரி இருக்கே!"
"நோ அபி, மிஸ் ஆக வாய்ப்பு இல்ல. நீ ஏன் அப்படி நினைக்கிற? ஸ்பெஸிஃபிக்கா ஏதாவது பெயரை தேடுறியா என்ன?" - அவன் நாடியை சரியாக பிடித்தான்.
ஒரு நொடி அபிமன்யு திகைத்தான். தன்னை பற்றி வெளிப்படுத்துவதில் அவனுக்கு எப்பொழுதுமே விருப்பம் இருந்ததில்லை. அதிலும் மிருதுளாவை பற்றிய விஷயம் என்றால் இன்னும் கூடுதல் சென்சிட்டிவாக இருப்பான். எனவே இல்லை என்பது போல் தலையை அசைத்ததோடு வேறு எதுவும் பேசவில்லை அவன்.
'அவளை பற்றி எப்படி தெரிந்துகொள்வது? எப்படி தெரிந்துகொள்வது?' அது மட்டும் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து ஸ்மோக்கிங் ஏரியா பக்கம் சென்றான். டென்சன் சற்று குறைந்ததும் கேஃப்டீரியா பக்கம் சென்றான். அங்கே மிருதுளா கண்ணில் படுவாளா என்று அவன் பார்வையால் அலச மித்ரா எதிரில் வந்து நின்றாள்.
"ஹலோ... என்னை நியாபகம் இல்லையா? நொய்டா... பப்... ஃபைட்... நான் தான்... மித்ரா..." என்று அவனுக்கு தன்னை நியாபகப்படுத்த முயன்றாள். அவளுடைய முயற்சி வீணாகவில்லை. தெரிந்துகொண்டதன் அடையாளமாக அபிமன்யுவின் புருவம் மேல் ஏறி கீழிறங்கியது.
"வாட் யு வாண்ட் நௌ?" - அதட்டினான்.
"நத்திங், ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லலாம்னு வந்தேன். இங்க என்ன பண்றீங்க? நொய்டா டு அந்தமான்... லாங் டிராவலாச்சே!" - பேச்சை வளர்க்க அவள் விருப்பம் காட்ட அவன் முகம் கடுத்தது.
"பேரென்ன?"
"மித்ரா"
"ஹும்.. லுக் மித்ரா... நா பிஸியா இருக்கேன். லீவ் மீ அலோன்" - பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொன்னான்.
"ஸுர்... ஸுர்... ஐ'ல் டேக் எ லீவ். அதுக்கு முன்னாடி... தேங்க் யு. அன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணினதுனாலதான் நான் இன்னிக்கு இங்க இருக்கேன்"- கொஞ்சம் வழிசல் தான்..
'என்னவோ இந்த வேலையை ரசித்து ருசித்து செய்வது போல் ஸீன்… ம்ம்ம்? மானங்கெட்டவளே!’ - மனசாட்சி மனசாட்சியே இல்லாமல் கழுவி ஊற்றியது.
அதை துடைத்துக் கொண்டு அபிமன்யுவை பார்த்து அவள் பல்லை காட்ட, "தப்புதான்... அன்னைக்கு உனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க கூடாது. எப்படியோ அடிபட்டு சாக்குன்னு விட்டுருக்கணும்." என்று அவன் மூக்கை விடைத்துக் கொண்டு கண்களை உருட்ட, மிரண்டு போனாள் மித்ரா.
'ஏதே! சாகுறதா!' - ஜெர்க்காகி ஓர் அடி பின்னால் வைத்தாள்.
'தடி தாண்டவராயா! உன் காதலி செத்து போயிட்டான்னா... ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் அடிபட்டு சாகணுமா! லூசு பயலே! உன்கிட்ட பேச வந்தேன் பாரு! சைக்கோ.. சைக்கோ..!' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றவள் எதிரில் வந்த நரேனை கவனிக்கவில்லை. அதற்கான பலனை விரைவிலேயே அனுபவித்தாள் மித்ரா.
அந்த அலுவலகத்தில் அபிமன்யுவிற்கு ஒரு தனி அறை அவன் கேட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அறையில் அமர்ந்தபடியே அவனால் கிட்டத்தட்ட முழு அலுவலகத்தையும் கண்காணிக்க முடியும். சிசிடிவி கண்ட்ரோல் ரூம் பாதுகாப்பாக மூன்றாம் தளத்தில் இருந்தாலும், அபிமன்யுவின் அறையில் உள்ள கணினி திரையில், மீட்டிங் ஹால், வரவேற்பு பகுதி, கேஃப்டீரியா போன்ற பொது இடங்களுக்கான லைவ் வீடியோவை பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருபத்தி நான்கு மணிநேரமும் அவன் அந்த வீடியோவில் தான் மூழ்கி இருந்தான். அப்படி அவன் அப்சஸ்ட்டாக மிருதுளாவை காணும் நோக்கில் வீடியோவில் மூழ்கி இருக்கும் நேரம் யாராவது அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தல் கூட போதும்... தொலைந்தார்கள். மித்ராதான் அடிக்கடி மாட்டுவாள். காரணம் சாக்ஷத் நரேனே தான்.
நரேனுக்கு ஒரு பழக்கம். மாதத்திற்கு ஓரிரு முறை கம்பெனியை முழுவதுமாக சுற்றி வருவான். இன்ஸ்பெக்ஷன் செய்வது போல்... அப்படி அவன் அன்று கேஃபிடீரியா பக்கம் வந்த போது அபிமன்யுவை அங்கே பார்த்தான். உடன் மித்ரா... அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில். எப்படியாவது அவனோடு பழக வேண்டும் என்று அவள் பிரயத்தனப்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அவனோ கரடி போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளை பார்த்தான். அப்போதும் அவளுக்கு புத்தி வரவில்லை. சுற்றம் சூழ்நிலையெல்லாம் மறந்து அவனிடம் ஏதோ இளித்துக் கொண்டே பேசி வாங்கி கட்டிக் கொண்டாள்.
அப்போது நரேனுக்கே கூட பாவமாக தான் இருந்தது. இதெல்லாம் இவளுக்கு தேவையா என்று. ஆனால் அடுத்து நடந்ததைத்தான் அவனால் மன்னிக்கவே முடியவில்லை.
அபிமன்யுவிடம் வலிய வலிய பேசி வாங்கி கட்டிக் கொண்டு அவள் திரும்பி நடந்த போது, நரேன் வழியில் தான் நின்றான். இவள் அவனை கடந்து தான் சென்றாள். விட்டால், 'ந்தாப்பா... கொஞ்சம் தள்ளி நில்லு' என்று சொல்லிவிட்டுக் கூட போயிருப்பாள். அப்படிதான் தோன்றியது அவனுக்கு.
அப்படி என்ன அவன் குறைந்துவிட்டான்! அவள் கண்ணில்... கருத்தில் எதிலுமே பதியாத அளவுக்கு! கோபமாக வந்தது. அவனை பார்க்க ஆயிரம் பெண்கள்... ஆனால் இவள் ஏன் பார்க்கவில்லை! அதுதான் அவனை குடைந்தது. அது எப்படி என்னை கவனிக்காமல் நீ போவாய் என்கிற கேள்வி அவனை உறங்கவிடவில்லை.
'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா! இருடி... பக்கத்துலேயே தூக்கி போடறேன். அப்பறம் தெரியும், அவன் பெட்ரோமாக்ஸ் லைட்டா இல்ல பெட்ரோல் பாமான்னு' என்று எண்ணினான். எண்ணியபடியே அவளை ஹெச்ஆர் டிப்பார்ட்மென்டிலிருந்து தூக்கி அபிமன்யுவின் செகரட்ரியாக போட்டான். பொறி வைத்த பொந்துக்குள் சிக்கிய எலி போல் முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் வர முடியாமல் அவனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள் மித்ரா.