Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (NN - பாகம் 2)

அத்தியாயம் - 12
காலம் - காயத்தை ஆற்றும் அருமருந்தாம்! கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று வரை அதை நம்பிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஐந்து ஆண்டுகால கடும் பயணம் அவளை கொஞ்சம் கூட மாற்றவில்லை. வெளியே என்ன வேஷமிட்டு ஊரை ஏமாற்றினாலும் உள்ளுக்குள் இன்னும் அவள் அதே பழைய மிருதுளா தான்.

அவளை பெற்றவர்கள் தலை சிதறி மண்ணில் சாய்ந்த காட்சி இன்னும் அவள் கண்ணைவிட்டு விலகவில்லை. அதற்கு காரணமானவனை மறக்கவும் இல்லை... மன்னிக்கவும் இல்லை.

அவள் நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் வலி... வேதனை... ஏமாற்றம்... துரோகம்... வேறு ஒன்றுமே இல்லை. எப்படி தங்குவாள் அந்த சின்ன பெண்! அவளை ஆற்றவோ தேற்றவோ இந்த பறந்து விரிந்த உலகத்தில் அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவளும் தான் யாருக்காக வாழ வேண்டும்! யாருக்காக இந்த துயரத்தை எல்லாம் தாங்க வேண்டும்! எத்தனையோ முறை வாழ்க்கையின் விளிம்புவரை சென்று மீண்டிருக்கிறாள்.

இந்த துன்பத்தை எல்லாம் அவளுக்கு கொடுக்க அவன் கொஞ்சம் கூட தயங்கவில்லை. அவளால் மீள முடியாது என்று தெரிந்தும் அவளை உடைத்து நொறுக்கியவன், இன்று அவள் கண் எதிரில் வந்து நிற்கிறான்! காயம்பட்டு புரையோடி போன அவள் இதயத்தை மீண்டும் கீறிவிட்டு அவள் துடிப்பதை ரசிக்க வந்திருக்கிறான்! அவளால் தாங்க முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு விம்மி வெடித்து அழுதாள். நெஞ்சுக்குள் பாறை போல் இறுகி போயிருக்கும் துக்கத்தை கரைத்து கண்ணீராக வெளியேற்றி விடும் தவிப்பில் அழுது தீர்த்தாள். நேரம் தான் கரைந்தது. மனபாரம் அப்படியேதான் இருந்தது. அவள் தான் அந்த பாரத்தோடு வாழ பழகியிருந்தாளே! கண்களை துடைத்துக் கொண்டு காரை எடுத்தாள்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் அவளை தேடி வந்தான்! அவள் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடித்தான்! முன்பு போல அவளிடம் ஏதேனும் டிராக்கிங் டிவைஸ் வைத்திருப்பானோ! மீண்டும் அவளை பிணையாக வைத்து ஏதேனும் சாதிக்க நினைக்கிறானோ! - பதில் இல்லா கேள்விகள் மண்டையை குடைந்தன.

அப்போதுதான் இன்னொரு விஷயமும் அவள் சிந்தனையில் மின்னல் வெட்டியது போல் உரைத்தது. ஆமாம்... மித்ராவோடு என்ன செய்து கொண்டிருந்தான்! கழுத்தை பிடித்து நெரித்து... அவளை... கொல்ல பார்த்தானா! யோசிக்கும் போதே தன்னையும் ஒருமுறை இதே போல் கழுத்தை பிடித்து நெரித்து மூச்சுமுட்ட வைத்தது நினைவிற்கு வந்தது. நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெறுக துவங்கியது.

அன்று அவளை எப்படி நம்பவைத்து ஏமாற்றி துரோகம் செய்தானோ... அதே போல் இன்று மித்ராவிடம் நடந்துகொள்கிறானோ! - இந்த சிந்தனை வந்ததும் அவள் மனம் நூறு மடங்கு அதிகமாக வலித்தது. அவன் மாறவில்லை! இன்னும் மாறவில்லை!

நெஞ்சுக்குள் ஈட்டி பாய்வது போல் இருந்தது. அவன் மாறி இருப்பான் என்று நினைத்தாளா! எப்போது அந்த எண்ணம் அவளுக்குள் வந்தது! ஏன் இந்த ஏமாற்றம்! ஏன் இந்த புது வலி! மீண்டும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கினாள். மூச்சு முட்டியது. வீடு போய் சேர முடியும் என்று தோன்றவில்லை.

மேல் மூச்சு வாங்கியபடி கார் கதவை அடித்து சாத்திவிட்டு அதன் மீதே சரிந்து தரையில் அமர்ந்தாள். உள்ளே அலைபேசி அழைக்கும் ஒளி கேட்டது. அவளால் எடுக்க முடியாது. பேச முடியாது.

"என்னம்மா ஆச்சு?" - யாரோ உதவிக்கு வந்தார்கள்.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை புரிந்து கொண்டு, "இட்ஸ் ஓகே... ரிலாக்ஸ்... ப்ரீத்... எஸ்... ப்ரீத் வித் மீ" என்று அவளுடைய மூச்சு சீராக உதவினார்கள்.

'அன்று அவனும் இப்படித்தானே செய்தான்!' - மீண்டும் அவன் நியாபகம் வந்தது. மேலும் இருவர் உதவிக்கு வந்தார்கள். அவளுக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அவளை கை கொடுத்து தூக்கி, கார் சீட்டில் வசதியாக அமர வைத்தார்கள். உதவிக்கு யாரையாவது அழைக்கட்டுமா என்று கேட்டார்கள்.

'யார் இருக்கிறார்கள்!' - அவள் விரக்தியாக உதட்டை பிதுங்கும் போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. உதவிக்கு இருந்தவர்கள் எடுத்து பேசினார்கள். ரகோத்தமன் தான் அழைத்தார். விஷயம் அவரிடம் சென்று சேர்ந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் நஸீம் அவளை தேடி வந்தான்.
***************

அன்று நஸீம் அலுவலகத்தில் பிஸியாக இருந்தான். கடற்கரையோர ரெஸ்டாரண்டில் டேபிள் புக் செய்யும்படி அபிமன்யு கூற அதை நரேனும் ஒப்புக் கொண்டிருந்தான். டூரிஸ்ட் அதிகம் வரும் ஏரியாக்களில் பாதுகாப்பு பணி சற்று சிரமம் என்பதால் அவன் வெகு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை. எனவே தன்னுடைய உதவியாளன் கொண்டு வந்து கொடுத்திருந்த உணவகங்களின் பட்டியலையும் அதன் கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் வடிகட்டி அனுப்பும் பட்டியல் அபிமன்யுவின் டேபிளுக்கு செல்லும். அவனோ ஒரு நொடியில் பத்து பிழைகளை கண்டுபிடிக்கக் கூடியவன். எனவே வெகு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு ரகோத்தமனிடமிருந்து அழைப்பு வந்தது.

அவருடைய அழைப்பை அவன் ஒருபோதும் அலட்சிய படுத்துவதில்லை. எனவே உடனே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான். அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தியில், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய கார் சீறி பாய்ந்து வந்து மிருதுளாவிடம் நின்றது.

அவன் அங்கே வந்து சேர்ந்த போது, சுற்றியிருந்த பொதுமக்களின் கரிசனத்தாலும் உதவியாலும் மிருதுளா வெகுவாக தன்னிலைக்கு மீண்டிருந்தாள். நஸீமை பார்த்ததும், அவள் முகத்தில் கடுமை ஏறியது.

"வை ஆர் யு ஹியர்?" - எரிச்சலுடன் கேட்டாள்.

அவளுடைய கோபமும் எரிச்சலும் அவனை சங்கடப்படுத்தியது. ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. "ரகோத்தமன் சார் கால் பண்ணி இருந்தார்" என்றான் தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முயன்றபடி.

அவள் முகம் உடனே கடுமையை தொலைத்து கனிந்தது. பிடிவாதத்துடன் இறுக்கி பிடித்திருந்த அவளுடைய கடுமை கரைந்து கண்களில் கண்ணீர் திரையிட்டது. எத்தனை முயன்றும் இந்த மனம் இளகுவதை தவிர்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளுடைய அந்த போராட்டம் அவனுக்கு வலித்ததோ என்னவோ... நஸீமின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.

"ஐ திங்க் ஷி காட் பேனிக் அட்டாக்" - "நீங்க அவங்களோட ஃபேமிலியா?" - "கொஞ்ச நேரத்துல சீரியலா ஆயிட்டாங்க. பத்திரமா பார்த்திக்கோங்க" என்று பல கேள்விகளையும் ஆலோசனைகளையும் நஸீமிடம் வீசி, கிடைத்த பதிலில் திருப்தியடைந்த பிறகு அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு சுற்றிநின்ற கூட்டம் விலக, அவன் அவளிடம் நெருங்கி, "வா?" என்று கை நீட்டினான்.

நீட்டிய அவன் கையை பிடிக்காமல் எழுந்து தன்னுடைய காரில் ஏறி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தாள் மிருதுளா.

அவளை இயலாமையுடன் பார்த்த நஸீம் "யு ஆர் நாட் வெல் மிருதுளா. இப்போ இந்த பிடிவாதம் வேண்டாமே ப்ளீஸ்" என்றான்.

" நான் உங்கள கூப்பிடல. நீங்க என்னை கேர் பண்ணணும்ங்கற அவசியம் இல்ல. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று கடுப்படித்துவிட்டு ஸ்டியரிங்கை பிடித்தவள் தன் கை கட்டுப்பாடில்லாமல் நடுங்குவதை கண்டு திகைத்தாள். அவனும் அப்போதுதான் அவளுடைய நிலை எத்தனை தீவிரமாக உள்ளது என்பதை கவனித்தான்.

"ஓ நோ..." - சட்டென்று காரை சுற்றிக் கொண்டு வந்து, ட்ரைவர் சீட் பக்கம் கதவை திறந்தவன், அவள் கையை பிடித்து, "இறங்கு மிருதுளா" என்று பிடிவாதமாக அவளை வெளியே இறங்க செய்தான்.

அதற்கு மேல் பிடிவாதம் செய்ய அவளுக்கும் விருப்பம் இல்லை. தான் ‘ட்ரைவ்’ செய்யும் நிலையில் இல்லை என்பது தெளிவான பிறகு வறட்டு பிடிவாதம் எதற்கு உதவும்! அமைதியாக அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள்.
**************

மித்ரா முழுதாக நினைவிழக்க வில்லை. ஆனால் செயல்பட முடியாமல் தளர்ந்து துவண்டு போனாள். மிருதுளா கத்தியது. நஸீம் அவளை தூக்கிச் சென்றது... எல்லாம் மங்கலாக... தேய்ந்து போன பழைய டிவிடியில் படம் பார்ப்பது போல் தெரிந்தது. அவளை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. வழியில் நரேன் நின்றான். அவளை தொட்டான்... கன்னத்தில்... பிறகு மங்கலாக தெரிந்த காட்சிகளெல்லாம் இன்னும் மங்கியது... மேலும் மேலும் மங்கி இருள் சூழ்ந்தது... அவ்வளவுதான்... மீண்டும் அவள் கண்விழித்த போது... அதற்கு முன் அவள் பார்த்திடாத... அறிமுகமற்ற ஒரு அறையில்... வசதியான படுக்கையில் இருந்தாள்.

'எங்க இருக்கோம்!' - தனக்குள் கேட்டபடி அறையை விழிகளால் அலைந்தாள்.

"எப்படி இருக்க?" - தலைக்கு பின்னால் இருந்து ஒலித்தது அந்த குரல்.

'யார்ரா அது?' – சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்..." - முன்பக்கம் வந்தான் நரேன். முகம் களையிழந்து போயிருந்தது.

'செத்து பொழச்சது நாம. இவன் எதுக்கு எங்கேயோ செமத்தியா வாங்கின மாதிரி மூஞ்ச வச்சிருக்கான்!' - மனதிற்குள் கமெண்ட் அடித்தவள், மீண்டும் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜன்னலை தவிர, படுக்கை அறையில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இருந்தன. மற்றபடி அங்கே அவர்களை தவிர வேறு யாரும் இல்லை.

'அட கடவுளே!' - பதட்டத்துடன் எழுந்தாள். 'சுரீர்' என்று கழுத்துப் பகுதியில் ஒரு வலி. தடுமாறி மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.

" யு ஓகே? ரொம்ப வலிக்குதா?" - பதறி அவளிடம் நெருங்கினான் நரேன்.

மித்ராவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. " ஹி அல்மோஸ்ட் கில்ட் மீ" என்றாள் ஆத்திரத்துடன். ஆனால் குரல் தான் எழும்பவில்லை. தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்கீச் என்றது.

'அச்சோ...' - கலவரத்துடன் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்னவோ அவன் தான் அவளுடைய சேவியர் போல. அந்த பார்வை அவனுக்குள் ஓர் அழகிய உணர்வை ஏற்படுத்தியது.

"ஐ ஆம் சாரி..." என்றான் முகம் கனிந்து.. குரல் குழைந்தது.

“மை வாய்ஸ்!” - பயத்துடன் கேட்டாள்.

"யு ஆர் ஆல்ரைட். டாக்டர் வந்து பார்த்தாங்க. மெடிசன் கொடுத்திருக்காங்க. ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்" என்றான்.

அவள் முகம் சுருங்கியது. அவனுக்கு சங்கடமாக இருந்தது. மீண்டும் "சாரி மித்ரா... இப்படி நடந்திருக்க கூடாது. ஐ ஆம் ரியலி சாரி" என்றான்.

"அம்மா... ரொம்ப ஸ்ட்ரிக்ட்... மாட்டிக்க போறேன்" - கவலையோடு சொன்னாள். என்னவோ அவளுடைய முக பாவத்தில் அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.

"நா பேசுறேன். உன் மேல தப்பு இல்லன்னு எக்ஸ்ப்லைன் பண்ணறேன்" என்றான்.

என்னது!' - பதறியவள், 'இவன் நம்மை கோர்த்துவிடாம விடமாட்டான் போலருக்கே!' என்று எண்ணினாள்.

அவள் சட்டென்று தன்னை அப்படி திரும்பி பார்த்ததும், "என்ன ஆச்சு?" என்றான் அவன்.

அவள் தலையை குறுக்காக அசைத்துவிட்டு, "பேச முடியல... நா கிளம்புறேன்" என்று எழுந்தாள்.

"நா டிராப் பண்ணறேன்" என்று அவனும் கூட வர தயாராக, 'ஐயோ... சாமி.. ஆள விடுங்கடா...' என்று நொந்து போய் நினைத்தவள், அதை வெளியே சொல்ல முடியாமல், "வண்டி இருக்கு. நான் போயிக்குவேன்" என்றாள் பட்டென்று.

"நீ மெடிசன் எஃபட்ல இருக்க. தனியா போக முடியாது" - விடாக்கண்டன் என்று நிரூபித்தான் அவன்.

வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி அவனை கன்னாபின்னாவென்று திட்ட வேண்டும் போல் இருந்தது. ‘அவன் என்னடாவென்றால் கழுத்தை நெரித்து கொல்ல பார்க்கிறான். இவன் என்னடாவென்றால் டயலாக் பேசியே டார்ச்சர் பண்றான்! என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க என்னைய?’ - மேல்மூச்சு வாங்க... நுனிநாசி சிவக்க அவனை முறைத்தாள். யாருக்கு வந்த விருந்தோ என்று அவன் அப்படியே நின்றான்.

‘'எனக்குன்னே வருவீங்களாடா!' - உள்ளுக்குள் குமுறினாள்.

அந்த நிலையிலும் அவள் கோபத்தை அவன் மனம் ரசிக்க, "போலாமா?" என்றான் மின்னும் கண்களோடு.

'வேற வழி? வந்து தொலையுறேன்' வாதம் செய்யும் நிலையிலா இருக்கிறாள். ஒன்றும் சொல்ல முடியாமல் அவனோடு கூட நடந்தாள்.

அந்த அறையில் அவள் கண்டது இரண்டு கதவுகள் ஒன்று ரெஸ்ட்ரூம் கதவு. மற்றொன்று வெளியே செல்லும் கதவு. இப்படித்தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அந்த மற்றொரு கதவை திறக்கும் போது அங்கே ஒரு மின்தூக்கியை தான் காண முடிந்தது.

'இது என்னடா கொடுமை! கரண்ட் இல்லன்னா எப்படி வெளியே போறது!' என்கிற யோசனையோடு மின்தூக்கிக்குள் நுழைந்தாள். அது நேராக அவர்களை கராஜுக்கு கொண்டு சேர்ந்தது. அங்கே நான்கைந்து கார்கள் மட்டுமே இருக்க, பிரைவேட் கராஜ் போல் தெரிந்தது.

' இது என்ன ஒரு மார்க்கமான இடமா இருக்கு! இந்த பில்டிங்ல இப்படி ஒரு ரூம்... அதுக்கு இப்படி ஒரு என்ட்ரன்ஸ்!' - அவளுடைய கியூரியாசிட்டி தலைதூக்க, 'இவனோடு வந்தது கூட நல்லதாகிவிட்டது. இல்லையென்றால் இந்த இடத்தையெல்லாம் பார்த்திருக்கவே முடியாதே!' என்கிற எண்ணம் எழுந்தது.

எதிர்பார்த்தது போலவே வீட்டுக்கு வந்ததும் அம்மா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

"என்ன சீக்கிரம் வந்துட்ட? வண்டி எங்க? யார் கார் அது? இன்னிக்கு என்ன பிரச்னையை இழுத்துட்டு வந்த?"

"அது கால் டாக்சி ம்மா. வண்டி ரிப்பேர் ஆயிடிச்சு. சர்வீஸ்க்கு விட்டுருக்கேன்" - தன்னுடைய வழக்கமான சாமர்த்தியத்தை அவரிடம் காட்டினாள். உடனே அவர் மகளின் குரல் மாற்றத்தை கவனித்துவிட்டு என்ன ஆச்சு என்று விசாரித்தார். அதற்கும், "உடம்பு சரியில்லம்மா... அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று சொல்லி சமாளித்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.​
 
ஹாய் கண்மணீஸ் 😍😍😍,
லாஸ்ட் டைம் சர்ப்ரைஸ் எபிஸோடு கொடுத்தேன். ஆனா லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் ஜாஸ்தி இல்ல. என்ன ஆச்சு? ஸ்டோரி போர் அடிக்குதா? இல்ல நல்லா தான் போகுதா? 🤔

கரெக்ட்டான ரூட்ல தான் போறேனா தெரியல. இன்டெராக்ஷன் இல்லாம தெரிஞ்சுக்கறதும் கஷ்ட்டம் இல்லையா? ஸோ கெமெண்ட் செக்ஷனை கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க.... 😎😎

அடுத்த எபிஸோட் திங்கள் அன்று எதிர்பார்க்கலாம்.

நன்றி... நன்றி... நன்றி...
நித்யா
 
Hey Beautiful Ladies,
The episode will be updated in an hour. Meanwhile, can you guess who this guy is?

 
அத்தியாயம் - 13

Abhi3.jpg

'எக்ஸ்பெக்ட் த வொர்ஸ்ட்' - கோர்த்தாவில் மட்டும் அல்ல... டிஃபன்ஸ் அகாடமியிலும் அவன் படித்த முதல் பாடம் அதுதான். டபுள் ட்ரைனிங்... அண்டர் கவர் எக்ஸ்பீரியன்ஸ்... மாஃபியா மூளையின் மாஸ்டர் பிளான் எல்லாம் தரைதட்டி நின்ற தருணம் அது. பிளான்-ஏ, பிளான்-பி என்று பல கோண திட்டங்களோடு எப்போதும் தயார்நிலையில் இருக்கக் கூடியவன் தலைகுப்புற கவிழ்ந்த தருணம் என்று கூட சொல்லலாம்.

பல கசப்பான அனுபவங்கள்... விரும்பத்தகாத சம்பவங்கள் அனைத்தையும் கடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய தேவதையை நேருக்கு நேர் சந்திக்க போகிறான். அது அவன் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய ஸ்பெஷல் மொமண்ட்!

அந்த சந்திப்பு ஒரு ரம்யமான சூழ்நிலையில் அமைய வேண்டும் என்று விரும்பினான். அதை ஒரு மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவமாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டான். கடந்த முறை அவளிடம் காட்ட முடியாத அன்பை... ஆசையை... காதலை... இம்முறை கொட்டித் தீர்த்துவிட வேண்டும்... அவளை ஒரு பூ போல ரசிக்க வேண்டும்... குழந்தை போல கையில் ஏந்தி கொஞ்ச வேண்டும். ஆசை தீர அவள் கையை பிடித்துக் கொண்டு கடற்கரையோரம் நடக்க வேண்டும்... முகத்தை கையில் அள்ளியெடுத்து கண்ணோடு கண்கலங்க வேண்டும்.. நெற்றியோடு நெற்றி முட்ட வேண்டும்... சேர்ந்து சிரிக்க வேண்டும்... கூந்தலை வருட வேண்டும். அவள் வாசத்தை நுகர வேண்டும். இன்னும்... இன்னும்... இன்னும்... மொத்தத்தில் நொடி கூட விலகாமல் அவளோடு பசைபோட்டு ஒட்டிக்கொள்ள வேண்டும்! - மழைமேகத்தை கண்ட பாலைவனம் போல, அவளை தொலைதூரத்தில் கண்டதுமே அவளோடு ஒட்டி உறவாடி... ஒன்றுக்குள் ஒன்றாய்... கலந்து.. கரைந்து... காணாமல் போக தயாரானான்.

ஆனால் அவனுடைய திட்டங்கள் அனைத்தையும் ஒரே நொடியில் தகர்த்து தரைமட்டமாக்கினாள் மிருதுளா. அவள் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை... ஒரு கதவை திறந்தாள் அவ்வளவுதான். அவனுடைய கனவு கோட்டை உடைந்து நொறுங்கியது.

இம்முறை அவள் தன்னை எப்படி பார்க்க வேண்டும் என்று அவன் விரும்பினானோ, அதற்கு நேர் எதிராக மிக மோசமான சூழ்நிலையில் அவள் அவனை பார்த்தாள். அவனுடைய கோபமும் வன்முறையும் அவள் கண் எதிரில் பட்டவர்த்தனமாகிவிட்டது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவனை அப்படி ஒரு சூழ்நிலையில் பார்த்தும் அவள் ஏன் ரியாக்ட் செய்யவில்லை? கோபம்… அதிர்ச்சி... ஆச்சர்யம்... வருத்தம்... அழுகை... எதுவுமே இல்லையே! அது என்ன பார்வை! ஏதோ ஜடப்பொருளை பார்ப்பது போன்றதொரு வெற்றுப் பார்வை! எப்படி முடிந்தது அவளால்! அந்த அளவுக்கு கூட அவன் அவளை பாதிக்கவில்லையா!

அவளுடைய அருகாமையில் அவன் நிலைகுலைந்து அல்லவா போனான்! திரும்பி பார்க்க கூட முடியாமல் திகைத்து நின்றானே! அதில் ஒரு துளி பாதிப்பு கூட இல்லாமல் எப்படி அவள் கல்லாக மாறினாள்!

ஒருவேளை நம்மை மொத்தமாக மறந்துவிட்டு புது வாழ்க்கைக்கு பழகிவிட்டாளோ! ஆனால் அது எப்படி முடியும்! அவனால் முடியவில்லையே! ஒரு நொடி கூட அவளை மறந்து அவனால் செயல்பட முடியவில்லையே! கடந்த ஐந்தாண்டு காலமும் அவளை நினைத்து நினைத்தே அவன் தன்னை அழித்துக் கொண்டானே! அவளால் மட்டும் எப்படி முடியும்! - அவன் தன்னை தேற்றிக்கொள்ள முயலும் போதே அவள் பார்த்த பார்வை மீண்டும் நினைவிற்கு வந்தது.

மனதில் கொஞ்சமேனும் ஓட்டுதல் இருந்தால் எப்படி அவளால் அப்படி பார்க்க முடியும்! - இன்னொரு மனம் கேள்வி கேட்டது.

அவள் தன்னை ஒதுக்கிவிட்டாள்... அந்நியப் படுத்திவிட்டாள் என்கிற எண்ணம் நெறுஞ்சி முல்லை விழுங்கியது போல் உள்ளே குத்திக் கிழித்தது. அதை ஜீரணிக்க முடியாமல் சென்று சேரில் அமர்ந்தான்.

கணினி திரையில் மிருதுளாவின் உருவம் தெரிந்தது. அவனுடைய அறைக்கு வெளியே மித்ராவை தாங்கி பிடிக்க முயன்று கொண்டிருந்தாள். நஸீம் ஓடி வந்தான். மித்ராவை தூக்கிக் கொண்டு அங்கிருந்து போனான். மிருதுளா அவர்களோடு செல்லவில்லை. அங்கேயே தேங்கி நின்றாள். பிறகு திரும்பி பார்த்தாள். அவனுடைய அறையை தான் பார்த்தாள். அந்த பார்வையில் அவன் எதிர்பார்த்த கோபம்... ஆத்திரம்... அழுகை எல்லாம் இருந்தது... அவளுடைய அந்த ஒற்றை பார்வை பற்றுக்கோளாக மாறி துக்க கடலில் மூழ்கிக் கொண்டிருந்தவனை மீட்டெடுத்தது.

**************
மிருதுளா கம்பெனியில் இருந்து வெளியேறி ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அவளுடைய காயத்தின் ஆழத்தையும் கோபத்தின் வீரியத்தையும் எண்ணிப்பார்த்தபடி அமர்ந்திருந்த அபிமன்யு சட்டென்று உடல் விரைத்தான்.

'ஒருவேளை அவள் இங்கிருந்தும் சென்றுவிட்டால்! தன்னை இங்கு பார்த்த பிறகு, அதுவும் அப்படி ஒரு நிலையில் பார்த்த பிறகு... அவளுடைய கோபமும் வெறுப்பும் இன்னும் அதிகமாயிருக்க கூடும். அவனிடமிருந்து விலகி கண்காணாத இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று நிச்சயம் யோசிப்பாள்' - இந்த எண்ணம் தோன்றியதும் கார் சாவியை எடுத்துக் கொண்டு எழுந்தான்.

அவளை கண்டுபிடித்த முதல் நாளே அவள் வசிக்கும் முகவரியும் அவனுக்கு மனனமாகி இருந்தது. பல முறை அந்த பக்கம் வட்டமடித்தும் இருக்கிறான். இப்போதும் நேராக அங்குதான் சென்றான். பிஸியான நகர்புறத்தை தாண்டி... மரங்கள் அடர்ந்த பகுதியில், ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத குடியிருப்பு ஏரியாவில் அமைந்திருந்தது அந்த அழகிய தனி வீடு. சந்தேகம் வராத அளவில் தூரத்தில், ஏற்கனவே நின்று கொண்டிருந்த இரண்டு கார்களுக்கு மத்தியில் தன்னுடைய காரையும் நிறுத்திவிட்டு காத்திருந்தான். வாசலில் அவளுடைய கார் இல்லை.

'அப்போதே கிளம்பிவிட்டாளே! இன்னும் வீட்டுக்கு வரவில்லையா! அல்லது நாம் இங்கு வருவதற்கு முன்பே பொருட்களை பேக் செய்து கொண்டு பறந்துவிட்டாளா!' - யோசனை எங்கெங்கோ ஓடியது. காத்திருக்க முடியாமல், காரை ஸ்டார்ட் செய்து அந்த ஏரியாவை வட்டமிட்டான். ஏதாவது ஜன்னல்... கதவு திறந்திருக்கிறதா? நடமாட்டம் தெரிகிறதா என்று வீட்டை சுற்றி சுற்றி வந்தான்.

சற்று நேரத்தில் ஒரு கார் வந்து அவளுடைய வீட்டுக்கு எதிரில் நின்றது. மிருதுளா தான் இறங்கினாள். ஆனால் பேஸஞ்சர் சீட்டிலிருந்து. அவன் முகம் இறுகியது. புருவம் சுருங்கியது. 'யார் அது! அவனுடைய மிருதுளாவுக்கு அருகில்!' - பார்வையை கூர்மையாக்கினான். ட்ரைவர் சீட்டிலிருந்து இறங்கிய நஸீம் அவசரமாக காரை சுற்றி கொண்டு வந்து மிருதுளாவை தோளோடு அணைத்து பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றான்.

அடிநெஞ்சில் இருந்து பொங்கி எழுந்த ஆத்திரம் கழுத்துவரை நிறைந்துவிட மூச்சு முட்டியது அவனுக்கு. அப்படியே காரை அவன் மீது ஏற்றி கொல்ல வேண்டும் போல் வெறி எழுந்தது. அதற்குள் அங்கே இன்னொரு கார் வந்து நிற்க அதிலிருந்து ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க மனிதர் இறங்கி வீட்டுக்குள் சென்றார். அவர் முகத்தை பார்த்ததுமே அபிமன்யுவின் முகம் மாறியது.

'ரகோத்தமன்!' - தோற்றத்தில் கொஞ்சம் மாற்றம் இருந்தாலும், அவனால் அடையாளம் காண முடிந்தது.

மிருதுளா ரகோத்தமன் என்பவருக்கு கீழ் வேலை செய்கிறாள் என்று தெரியும். அவருடைய பெயரில் தான் கீப்-லாக் அக்ரிமெண்ட் சைன் ஆக போகிறது என்றும் தெரியும். ஆனால் அந்த ரகோத்தமன் இவராக இருக்கக் கூடும் என்று அவன் யோசிக்கவில்லை.

சற்று நேரம் கழித்து நஸீம் மற்றும் ரகோத்தமன் இருவரும் வெளியே வந்தார்கள். இருவருக்கும் மிக நெருக்கமான பழக்கம் என்று பார்க்கும் போதே தெரிந்தது. சட்டென்று தன்னுடைய அலைபேசியை எடுத்து ஒரு படம் பிடித்துக் கொண்டான்.

அவர்கள் அங்கிருந்து செல்லும் வரை அவர்களுடைய உடல்மொழியை அவதானித்துக் கொண்டிருந்தவன், அதன் பிறகு அந்த புகைப்படத்தை பினு தாமஸுக்கு அனுப்பிவிட்டு அவனை அழைத்தான்.

எடுத்ததுமே அவன் கேட்ட முதல் கேள்வி, "நீ இன்னும் நான் கொடுத்த ஃபைலை படிக்கலையா?" என்பது தான்.
**************

ரகோத்தமன் டிஃபென்ஸில் இருந்த போது ஐந்து ஆண்டுகள் பகவான் இருந்த ரெஜிமெண்ட்டில் தான் இருந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தது பலரும் அறிந்த உண்மை. அதன் பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து தான் பகவான் கோர்த்தாவில் முக்கியமான ஆள் என்கிற விஷயம் வெளியே தெரிந்தது. அப்போது அவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் பல கட்ட விசாரணைக்கு ஆளாக்க பட்டார்கள். அதில் ரகோத்தமனும் ஒருவர். அவருடைய ரெக்காட் க்ளீனாக இருந்ததால், அவரால் தொடர்ந்து ஆர்மியில் வேலை செய்ய முடிந்தது. ஓய்வு பெற்ற பிறகு ‘கீப்-லாக் செக்யூரிட்டி சர்வீசஸ்’ நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தார்.

பகவான் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி தெரிந்த பிறகு இவராகத்தான் மிருதுளாவை தேடி கண்டுபிடித்து அவளுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதை பினு அவனுடைய கோப்பில் அடிக்கோடிட்டு குறிப்பிட்டிருந்தான்.

நஸீம் ஆர்மியில் ரகோத்தமனுக்கு கீழ் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்திருக்கிறான். திறமையானவன். அதனால் அவருக்கு மிக நெருக்கமான சிஷ்யனாக மாறியதில் வியப்பு ஏதும் இல்லை.

பிரமிளாவுக்கு நம்பிக்கையான அதிகாரி ஒருவர் நஸீமை ரெக்கமண்ட் செய்ததால் அவர் அவனை நரேனுக்கு பாதுகாப்பு அதிகாரியாக அனுப்பி இருந்தார். இப்போது நஸீமுடைய பரிந்துரையின் பெயரில் தான் ரகோத்தமன் நரேன் கம்பெனியில் என்ட்ரி கொடுத்திருந்தார். மேலோட்டமாக பார்த்தால் இந்த சங்கிலி தொடர் இணைப்புகள் எதிலும் தவறு கண்டுபிடிக்க முடியாது ஆனால் பினு பல இடங்களை அடிகோட்டிருந்தான்.

அதில் முதலாவது, பகவானுக்கும் ரகோத்தமனுக்குமான பழக்கம். இரண்டாவது அவர் தானாக முன்வந்து மிருதுளாவை தேடி கண்டுபிடித்து உதவிகரம் நீட்டியது. மூன்றாவது... மிக முக்கியமானது... நஸீம் மிருதுளாவிடம் காட்டும் நெருக்கத்தை ஊக்குவிப்பது.

ஆம், நஸீமிற்கு மிருதுளாவின் மீது விருப்பம் இருந்தது. அதை ஓரிரு முறை அவளிடம் வெளிப்படுத்தியும் இருக்கிறான். அவளுக்கு அதில் பெரிய ஈடுபாடு ஒன்றும் இல்லை என்றாலும், அவள் மீது அதீத அக்கறை கொண்டிருக்கும் ரகோத்தமன் அவர்கள் இருவரையும் திருமணத்தில் இணைத்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்.

படித்து முடித்த கோப்பை மீண்டும் டிராயரில் வைத்துவிட்டு, நரேனை தேடி அவனுடைய அலுவலக அறைக்கு சென்றான் அபிமன்யு.

பினு அடி கோடிட்டிருந்த விஷயங்கள் எல்லாம் சரியானவை தான். ஆனால் அவன் எதிர்பார்த்த அளவுக்கு அபிமன்யு பெரிதாக கலங்கிவிடவில்லை.

ரகோத்தமனுக்கு பகவானோடு பழக்கம் இருந்திருக்கலாம்.. ஆனால் கோர்த்தாவுடனான தொடர்பு உறுதிப்படுத்தப்படாதது. அதை கணக்கில் எடுத்துக் கொண்டானே தவிர கவலைப்படவில்லை. ரகோத்தமனின் விஷயத்தை அவன் பார்த்த கோணம் வேறு விதமாக இருந்தது. மிருதுளாவை அவன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது ஒரு வகையில் அவர் தானே. அதுதான் அவனுக்கு முதன்மையாக பட்டது.

அடுத்து நஸீம் விஷயம். அது கொஞ்சம் உறுத்தத்தான் செய்தது. ஆனால் மிருதுளாவுக்கு ஈடுபாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தது ஆறுதல். அதனால் அதுவும் அவனை பெரிய அளவில் அசைக்கவில்லை.

ஆனால் இன்று எதிர்பாராமல் அவனை அவள் பார்த்துவிட்டு சென்ற பிறகு அடுத்து அவள் என்ன செய்வாள் என்றுதான் அவனால் ஊகிக்க முடியவில்லை. அதை உறுதி செய்து கொள்ளத் தான் இப்போது நரேனை தேடி வந்தான்.

"சார் வெளியே போயிருக்காங்க" என்றான் அவனுடைய செகரட்டரி.

அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது, "ஆன் மை வே" என்கிற இறுகிய குரல் பதிலாக வந்தது.

சொன்னபடியே அடுத்த சில நிமிடங்களில் அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்தான் நரேன்.

"நீ இப்போ கோர்த்தா மேனும் இல்ல... இன்டெலிஜெண்ட்ஸ் ஏஜெண்டும் இல்ல... யு ஆர் ஜஸ்ட் எ காமன் மேன்... அது நியாபகம் இருக்கா உனக்கு?" - சாதுவான அவன் முகம் இப்போது மாறியிருந்த விதம் அவனை வேறொரு மனிதனாக காட்டியது.

சட்டென்று சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு எழுந்து, "கம் அகைன்... என்ன சொன்ன? திரும்ப சொல்லு?" என்று அவனிடம் நெருங்கினான் அபிமன்யு. வேட்டை மிருகத்தின் குரூரம் தெரிந்தது அவன் கண்களில்.

நரேனிடம் துளியும் சலனமில்லை. அவன் மீது பதித்த பார்வையை விலக்காமல், "மித்ரா இந்த கம்பெனி எம்பலாயி. யு காண்ட் ட்ரீட் ஹர் லைக் தட்" என்றான்.

"என்னை நோய்டாலேருந்து ஃபாலோ பண்ணினா... என்னோட கம்ப்யூட்டரை ஸ்பை பண்ண ட்ரை பண்ணினா... நா அப்படிதான் ரியாக்ட் பண்ணுவேன். என்ன செய்வ?" என்றான் அபிமன்யு சவால் விடுவது போல.

நரேன் முகத்தில் ஒரு சின்ன அதிர்வு... ஒரே கணம் தான்... மீண்டும் இயல்பு நிலைக்கு மீண்டுவிட்டான். இப்போது அவனிடம் பழைய கோபம் இல்லை. ஆனால் முகத்தில் கண்டிப்பு இருந்தது.

"உனக்கு சந்தேகம் இருந்தா ப்ரூவ் பண்ணு. அதுக்கு முன்னாடி யார் மேலையும் கை வைக்காத" என்றான்.

அபிமன்யு அவனை ஏற இறங்க பார்த்தான். முகத்தில் ஒரு கோணல் புன்னகை. பிறகு ட்ரையரை திறந்து ஒரு டாக்குமெண்டை எடுத்து டேபிளில் போட்டான்.

"நியாபகம் இருக்கா? நீ சைன் பண்ணின டாகுமெண்ட். இந்த காம்ப்ஸ் உள்ள... ம்ஹும்... நீ இருக்க எந்த இடத்துலயும் செக்யூரிட்டி த்ரெட் இருக்குனு எனக்கு தோணினா... நான் என்னோட ஸ்டைல்ல ஒர்க் பண்ணலாம். நீ அந்த பவர் எனக்கு கொடுத்திருக்க" என்றான்.

இப்போது நரேன் மீண்டும் சூடானான். "உன்னோட அட்ராஸிட்டியை நான் அப்ரூவ் பண்ணலாம். ஆனா இந்த கண்ட்ரியோட ப்ளாடி ‘லா’ டாலரேட் பண்ணாது புரியுதா?"

"ஹா... லைக் ஐ கேர்" - தோளை குலுக்கி அலட்சியமாக கூறியபடி மீண்டும் சென்று தன் நாற்காலியில் அமர்ந்தான்.

ஒன்றும் செய்ய முடியாத இயலாமையுடன் பல்லை கடித்தான் நரேன். பிறகு, "ஷி வோண்ட் ஒர்க் ஃபார் யு எனிமோர். உன்னோட உதவிக்கு வேற யாரையாவது அரேஞ் பண்றேன்" என்றான்.

"அப்பவும் என்னுடைய ஒரு கண் அவள் மீது இருக்கும்" என்றான்.

அதை சொல்லும் பொழுது அவன் முகத்தில் இருந்த தீவிரம் நரேனை அச்சுறுத்தியது. அபிமன்யுவின் வார்த்தைகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடியவை அல்ல என்று அவனுக்கு தெரியும்.

அவன் மித்ரா மீது ஒரு கண் வைத்தால் தான் இரண்டு கண்களையும் வைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

"பிரதர்... அந்த கீப்-லாக் எம்பலாயி... மிருதுளா... நாளைக்கு மீட்டிங்ல இருக்கணும். அதை மேக் ஸூர் பண்ணிக்கோ" என்றான். உள்ளுக்குள் அவள் வராமல் போய்விடுவாளோ என்கிற அச்சம் இருந்தது. அதிலும் அந்த நஸீம் விஷயம் தெரிந்த பிறகு, அவளிடமிருந்து தள்ளி இருக்கும் பொறுமை சிறிதும் இல்லை அவனுக்கு.​
 
Last edited:

New Threads

Top Bottom