- Messages
- 998
- Reaction score
- 1,132
- Points
- 93
அவன் திடீரென எதுவோ ஞாபகம் வந்தவன் போல் உள்ளே சென்று பூர்ணிமாவின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.
நண்பர்கள் காரணம் கேட்டதற்கு, "பாவம்லேய் எங்கம்மை. என் தங்கச்சி அந்த எத்து எத்துதா. அவியளுக்கு அது வலிக்கும்லா? அதான் முத்தம் கொடுத்தேன்" என்றதும், நண்பர்கள் சரி தான் என ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அவர்கள் இருவரும் அறியாத இன்னொரு உண்மை பூர்ணிமா தூக்கத்திலிருக்கும் போது மட்டுமே அக்னியால் அவளை நெருங்கி முத்தமிட முடியும் என்பது. அவள் சுயநினைவில் இருந்தால் தான் ராட்சசியாய் மாறிவிடுவாளே.
நண்பர்கள் வீட்டிற்கு வெளியே வந்ததும், "ஏலேய் அக்னி…" என விஜய்குமார் இழுக்க,
"என்னலேய்? எம்பாட்டிக்கும் முத்தம் கொடுக்கணுமா?" என்றான் அவன்.
அலறி மறுத்தவன், “உன் தங்கச்சிய நானே கட்டிகிடவாலேய்? நான் நீ கேட்கறதெல்லாம் வாங்கித் தரேன்" என்றான்.
விஜய்குமாரின் வேண்டுகோளை கேட்டு லாபக்கணக்கை போட்ட அக்னிமித்ரன், தனக்கு வேண்டியதையெல்லாம் கேட்டு விஜய்குமாருடன் உடன்படிக்கை ஒன்றை போட்டான்.
அதன்படி விஜய்குமாரும் தன்னிடமிருக்கும் பொம்மைகளனைத்தையும் அவனுக்கு தருவதாக ஒப்புக் கொண்டான்.
ஆனால், இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் தன்னை எரிமலையாய் பொங்கச்செய்யும் என்பதை அறிந்திருந்தால் பொம்மைகளுக்கு ஆசைப்பட்டிருக்க மாட்டானோ அக்னிமித்ரன்?
விஜய்குமார் அவனிடம், "உங்கப் பாப்பாவை எனக்கு தான் கட்டிக் கொடுப்பேனு பகவதியம்மன் கோவில்ல வச்சு எனக்கு சத்தியம் பண்ணி கொடுலேய்" என விவரமாய் கேட்கவும், பின் விளைவுகளை அறியாத அக்னிமித்ரனும் சத்தியம் செய்து கொடுத்தான்.
அன்று ஒரு பந்தம் முடிவானது. கருவிலிருக்கும் போதே தன் அண்ணனால் தாரை வார்க்கப்பட்டாள் அவ்வீட்டின் இளவரசி.
பின் ஒரு நாள் பலரும் எதிர்பார்த்தது போல் மாலை நேரத்தில் ஸ்ட்ராவ்பெர்ரி சிற்பமாய் இவ்வுலகில் அவதரித்தாள் அந்த கால்பந்தாட்டக்காரி.
தொடரும்...
நண்பர்கள் காரணம் கேட்டதற்கு, "பாவம்லேய் எங்கம்மை. என் தங்கச்சி அந்த எத்து எத்துதா. அவியளுக்கு அது வலிக்கும்லா? அதான் முத்தம் கொடுத்தேன்" என்றதும், நண்பர்கள் சரி தான் என ஒப்புக்கொண்டனர்.
ஆனால், அவர்கள் இருவரும் அறியாத இன்னொரு உண்மை பூர்ணிமா தூக்கத்திலிருக்கும் போது மட்டுமே அக்னியால் அவளை நெருங்கி முத்தமிட முடியும் என்பது. அவள் சுயநினைவில் இருந்தால் தான் ராட்சசியாய் மாறிவிடுவாளே.
நண்பர்கள் வீட்டிற்கு வெளியே வந்ததும், "ஏலேய் அக்னி…" என விஜய்குமார் இழுக்க,
"என்னலேய்? எம்பாட்டிக்கும் முத்தம் கொடுக்கணுமா?" என்றான் அவன்.
அலறி மறுத்தவன், “உன் தங்கச்சிய நானே கட்டிகிடவாலேய்? நான் நீ கேட்கறதெல்லாம் வாங்கித் தரேன்" என்றான்.
விஜய்குமாரின் வேண்டுகோளை கேட்டு லாபக்கணக்கை போட்ட அக்னிமித்ரன், தனக்கு வேண்டியதையெல்லாம் கேட்டு விஜய்குமாருடன் உடன்படிக்கை ஒன்றை போட்டான்.
அதன்படி விஜய்குமாரும் தன்னிடமிருக்கும் பொம்மைகளனைத்தையும் அவனுக்கு தருவதாக ஒப்புக் கொண்டான்.
ஆனால், இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் தன்னை எரிமலையாய் பொங்கச்செய்யும் என்பதை அறிந்திருந்தால் பொம்மைகளுக்கு ஆசைப்பட்டிருக்க மாட்டானோ அக்னிமித்ரன்?
விஜய்குமார் அவனிடம், "உங்கப் பாப்பாவை எனக்கு தான் கட்டிக் கொடுப்பேனு பகவதியம்மன் கோவில்ல வச்சு எனக்கு சத்தியம் பண்ணி கொடுலேய்" என விவரமாய் கேட்கவும், பின் விளைவுகளை அறியாத அக்னிமித்ரனும் சத்தியம் செய்து கொடுத்தான்.
அன்று ஒரு பந்தம் முடிவானது. கருவிலிருக்கும் போதே தன் அண்ணனால் தாரை வார்க்கப்பட்டாள் அவ்வீட்டின் இளவரசி.
பின் ஒரு நாள் பலரும் எதிர்பார்த்தது போல் மாலை நேரத்தில் ஸ்ட்ராவ்பெர்ரி சிற்பமாய் இவ்வுலகில் அவதரித்தாள் அந்த கால்பந்தாட்டக்காரி.
தொடரும்...