- Messages
- 1,011
- Reaction score
- 1,132
- Points
- 113
இவ்வளவு நேரம் மெல்லிய இரவு உடையில் தெரிந்த அவளின் தேகத்தங்க தரிசனத்தில் சொக்கி நின்றவன், அவள் உள்ளே சென்றதும் ஏமாற்றமடைந்தான்.
உள்ளே சென்றவளோ, "ஹேய் சோனா! இன்னைக்கு உனக்கு பெர்த்டேவாடி? ம்? போன மாசம் தானே கொண்டாடின? உனக்கு மட்டும் மாசா மாசம் பிறந்த நாள் வருதாக்கும்? நீ பெர்த்டேனு சொன்னனு அவன் கையில பொக்கேவோட வந்து நிற்கிறான்டி. ஒழுங்கு மரியாதையா அவனை வெளிய அனுப்பு. இல்லைனா நீயும் உன் வீக்கு கூடவே சேர்ந்து வெளிய போயிரு. என்னடி சொல்ற?" என அனுஷா தன் ஏமாற்றத்தை கோபமாய வெளிக்காட்ட,
"ஹேய்! அவரு வீக்கு இல்லடி, ஸ்ட்ராங். உன் ஃப்ரெண்ட் லவ்வுக்கு இந்த ஒரு சின்ன ஹெல்ப் கூட நீ பண்ணமாட்டியாடி அனுஷா?" என சீறினாள் சோனா.
"என்னது லவ்வா?" என அதிர்ந்தவள்,
"லவ் பண்றதுக்காடி நீ இங்க லண்டனுக்கு வந்த? அதுவும் இவனைப்போய் லவ் பண்றியேடி? அவன் ஆளும் மூஞ்சும்" என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவள் கேட்க,
"ஹே! அவருக்கென்னடி குறை? அவரோட கலரு பார்க்க அப்படியே ஃபெர்ரரோ ரோச்சர் சாக்லேட் மாதிரி இருக்குடி? என்னை விட்டா அவரை அப்படியே கடிச்சி தின்றுவேன்டி" எனத் தன் கற்பனை உலகில் மிதந்துகொண்டே கூறியவளிடம்,
"ஹே! ச்சீ! ச்சீ! நிப்பாட்டு. நீ எக்கேடோ கெட்டுப்போ. இன்னைக்கு மட்டும் தான் நான் அவனை நம்ம போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போக அலோவ் பண்றேன். பட் அவன் அடிக்கடி இங்க வரக்கூடாது ஓகேவா?" எனக் கறாராய் கூறினாள்.
"ம், ஓகேடி. அப்பறம் தான்க்ஸ்டி செல்லம். இப்பவே போய் நான் என் ஃபெர்ரரோ ரோச்சரை பார்க்கறேன்" என சிட்டாகப் பறந்தாள் சோனா.
அவனை கண்டதும், "அடடே! வாங்க வீ.கே சார். வந்து ரொம்ப நேரம் ஆகுதா? சாரி உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சதுக்கு" என்று சந்தோஷ உற்சாகத்தில் பொரிய,
"ச்சே, ச்சே, நான் இப்போ தான் வந்தேன் சோனா. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே" என அவளருகில் வந்தவன், பூச்செண்டை அவள்புறம் நீட்டி வாழ்த்தினான்.
"தான்க் யூ வீ.கே சார்" என்றவள் அவனை மரியாதைக்காய் கட்டியணைத்தாள்.
பின், அனுஷாவின் கைவண்ணத்தால் நொறுங்கிய கண்ணாடி பூச்சாடியின் கதறலில் அவனை விட்டு பிரிந்தாள்.
"ம்! உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேனே? இவ அனுஷா. நாங்க எல்லாரும் இங்க ஒன்னா தான் தங்கியிருக்கோம். அப்பறம் இப்ப நம்ம கூட இவளும் வருவா" என சோனா கூடுதல் தகவலாய் கூற,
"ஓ அப்படியா? வரட்டுமே" என்று தன் நாக்கை கன்னக்குழியில் பதுக்கி குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான் வீ.கே.
அதில் அனுஷாவின் காதுகளிரண்டும் இட்லி குக்கராகின.
அன்றைய நாளை ஒன்றாகவே கழித்தவர்கள் இறுதியில் பேரங்காடி ஒன்றிற்கு செல்ல, அனுஷா முதல் ஆளாய் தனக்கு பிடித்த மாடர்ன் உடைகளை தேர்வு செய்து ட்ரையல் ரூமிற்கு சென்றாள்.
விஜய்குமாரோ தங்கள் உடைகளை தேர்வு செய்து வந்தவர்களிடம், சோனாவின் பிறந்தநாளிற்கு தான் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, அனைவரின் பில்லையும் தானே மனமுவந்து கட்டினான்.
"வீ.கே சார் இதுல எனக்கு எந்த ட்ரெஸ் நல்லாயிருக்கும்?" என சோனா திடீரென கேட்க,
"ம்? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சோனா. சோ செலக்ட் பண்ணவும் தெரியாது" என்று அவளிடமிருந்து நைசாக நழுவிக்கொண்டான்.
அவனின் பதிலில் வேறு வழியில்லாமல் தனக்கு பிடித்த உடையை தேர்ந்தெடுத்துவிட்டு வெளியே வந்தாள் சோனா.
ரயிலில் தங்களின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போதோ, "வீ.கே சார், இந்த ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்காதுனா, அப்போ வேற எந்த மாதிரி ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்கும்?" என சோனா ஆர்வமாய் வினவினாள்.
அவன் கனவில் மிதந்தபடி பதிலளித்தான்.
"ம்? எனக்கு பொண்ணுங்க சேலை கட்டினா ரொம்பப் பிடிக்கும் சோனா. அதுவும் நெத்தியில பொட்டு வச்சு, தலை நிறைய பிச்சிப்பூ வச்சா ரொம்பப் பிடிக்கும். என் அம்மா அப்படி தான் இருப்பாங்க" என்று ரசனையுடன் கூறினான்.
"அதாவது நீ அருக்கானி கெட்டப்ல, என் புருஷன் தான்; எனக்கு மட்டும் தான்னு பாட்டு பாடிக்கிட்டு திரிஞ்சன்னா, உன்னைய உன் வீ.கே சாருக்கு ரொம்ப பிடிக்குமாம் சோனா.” என அனுஷா வம்பிழுக்க,
இடையில் புகுந்த சோனா, "சாரீஸ்லாம் எனக்கு செட்டாகாது வீ.கே சார். இருந்தாலும் உங்களுக்காக ஒரு நாள் ட்ரை பண்றேன்" என்று கூறி, நேரம் போகவென அவனுடன் பலவற்றை கதைத்துக்கொண்டே வந்தாள்.
அனுஷாவிற்கு அவர்களின் வாய் ஓயாதா என்றிருந்தது.
ஒவ்வொரு வார இறுதியிலும் லண்டனில் உள்ள சுற்றுலா தளங்களையெல்லாம் கூடுமானவரை சுற்றிப் பார்த்தவர்கள், இறுதியாக லண்டன் மாநகரத்தின் மத்தியில் உள்ள ரீஜன்ட் பார்க்கிற்கு வந்தனர்.
கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் ரோஜாக்களை கொண்ட குயின் மேரிஸ் கார்டன், நூறு வகை விலங்குகளை கொண்ட வனவிலங்கு காப்பகம், உலகின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு திடல், சர்வ வசதிகளும் கொண்ட காபி கஃபே, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் வானவெளியில் ஒரு திரையரங்கம் என அனைத்தையும் காணக் காண வியப்பில் அவர்கள் அனைவரது கண்களும் விரிந்துகொண்டே சென்றன.
வீட்டிற்கு கிளம்பும் வேளையில் அனைவரும் ரீஜண்ட் பார்க்கிற்கு சற்றே வடக்குத் திசையில் உள்ள லண்டன் மாநகரத்தின் மொத்த அழகையும் இரு நூற்றி பதின்மூன்று அடி உயரத்தில் நின்று காண ஏதுவாய் அமைந்திருக்கும் ப்ரிம்ரோஸ் ஹில்லிற்குச் சென்றனர்.
அங்கு ஜோடி ஜோடியாக நெருங்கி அமர்ந்து தங்கள் இணையின் உடல் வெப்பத்தை தங்கள் உடலிற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை கண்டதும் சோனாவிற்கு என்ன தோன்றியதோ, ஒரு ரோஜாப்பூவை கையில் ஏந்திக்கொண்டு வீ.கேவின் முன் முட்டிபோட்டமர்ந்து அவனை நோக்கி, "ஐ லவ் யூ வீ.கே சார்" என்று தன் காதலை தெரிவித்தாள்.
இவன் அனுஷாவைப் பார்த்தான். எழில் பொங்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளைப் பார்த்து, ‘ச்சே! இங்க ஒருத்தி ப்ரோபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. லூசு எங்க வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கு பாரு? அடியே குஸ்கா, இந்தா வரேன்டி’ என்று வீறு கொண்டவன்,
சோனாவின் புறம் திரும்பி, "நீ ஏன் என்னை லவ் பண்றனு நான் தெரிஞ்சிக்கலாமா சோனா?" என்றான்.
"அதுவந்து ஃபர்ஸ்ட் உங்க அப்பியரன்ஸ் பார்த்து தான் நான் அட்ராக்ட் ஆனேன் வீ.கே சார். ஆனா நீங்க இப்ப எங்க எல்லோரையும் ரொம்ப கேரிங்கா பார்த்துகறதைப் பார்த்து இது மாதிரி லைப் ஃபுல்லா என்னை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கையில தான் லவ் ப்ரொபோஸ் பண்ணினேன்" என அவன் முகத்தை பார்த்து சொல்ல,
"சாரி சோனா, நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்." என நிஜமாகவே வருத்தப்பட்டான் விஜய்குமார்.
அவனின் பதிலில் மனம் உடைந்து போனாலும், அவன் விரும்பும் அந்த அதிர்ஷ்டசாலிப்பெண் யாரென்று அறியும் நோக்கில், "அவங்க எந்த மூவி ஹீரோயின் வீ.கே சார்? அவங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் சோனா.
"இந்தா காட்டுறேன்" என்றவன் நடுவிலிருந்த புல் குன்றை எகிறி குதித்து தாவி, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஒரு மோதிரத்தை கையில் பிடித்துக்கொண்டு,
அனுஷாவின் முன் முட்டிபோட்டமர்ந்து, "ஐ லவ் யூ அனுஷா" என்று சொல்ல, அவனிடமிருந்து இப்படியொரு செய்கையை எதிர்பாராதவள், அதிர்ச்சியில் மொழியற்று நின்றாள்.
தொடரும்...
உள்ளே சென்றவளோ, "ஹேய் சோனா! இன்னைக்கு உனக்கு பெர்த்டேவாடி? ம்? போன மாசம் தானே கொண்டாடின? உனக்கு மட்டும் மாசா மாசம் பிறந்த நாள் வருதாக்கும்? நீ பெர்த்டேனு சொன்னனு அவன் கையில பொக்கேவோட வந்து நிற்கிறான்டி. ஒழுங்கு மரியாதையா அவனை வெளிய அனுப்பு. இல்லைனா நீயும் உன் வீக்கு கூடவே சேர்ந்து வெளிய போயிரு. என்னடி சொல்ற?" என அனுஷா தன் ஏமாற்றத்தை கோபமாய வெளிக்காட்ட,
"ஹேய்! அவரு வீக்கு இல்லடி, ஸ்ட்ராங். உன் ஃப்ரெண்ட் லவ்வுக்கு இந்த ஒரு சின்ன ஹெல்ப் கூட நீ பண்ணமாட்டியாடி அனுஷா?" என சீறினாள் சோனா.
"என்னது லவ்வா?" என அதிர்ந்தவள்,
"லவ் பண்றதுக்காடி நீ இங்க லண்டனுக்கு வந்த? அதுவும் இவனைப்போய் லவ் பண்றியேடி? அவன் ஆளும் மூஞ்சும்" என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவள் கேட்க,
"ஹே! அவருக்கென்னடி குறை? அவரோட கலரு பார்க்க அப்படியே ஃபெர்ரரோ ரோச்சர் சாக்லேட் மாதிரி இருக்குடி? என்னை விட்டா அவரை அப்படியே கடிச்சி தின்றுவேன்டி" எனத் தன் கற்பனை உலகில் மிதந்துகொண்டே கூறியவளிடம்,
"ஹே! ச்சீ! ச்சீ! நிப்பாட்டு. நீ எக்கேடோ கெட்டுப்போ. இன்னைக்கு மட்டும் தான் நான் அவனை நம்ம போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போக அலோவ் பண்றேன். பட் அவன் அடிக்கடி இங்க வரக்கூடாது ஓகேவா?" எனக் கறாராய் கூறினாள்.
"ம், ஓகேடி. அப்பறம் தான்க்ஸ்டி செல்லம். இப்பவே போய் நான் என் ஃபெர்ரரோ ரோச்சரை பார்க்கறேன்" என சிட்டாகப் பறந்தாள் சோனா.
அவனை கண்டதும், "அடடே! வாங்க வீ.கே சார். வந்து ரொம்ப நேரம் ஆகுதா? சாரி உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சதுக்கு" என்று சந்தோஷ உற்சாகத்தில் பொரிய,
"ச்சே, ச்சே, நான் இப்போ தான் வந்தேன் சோனா. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே" என அவளருகில் வந்தவன், பூச்செண்டை அவள்புறம் நீட்டி வாழ்த்தினான்.
"தான்க் யூ வீ.கே சார்" என்றவள் அவனை மரியாதைக்காய் கட்டியணைத்தாள்.
பின், அனுஷாவின் கைவண்ணத்தால் நொறுங்கிய கண்ணாடி பூச்சாடியின் கதறலில் அவனை விட்டு பிரிந்தாள்.
"ம்! உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேனே? இவ அனுஷா. நாங்க எல்லாரும் இங்க ஒன்னா தான் தங்கியிருக்கோம். அப்பறம் இப்ப நம்ம கூட இவளும் வருவா" என சோனா கூடுதல் தகவலாய் கூற,
"ஓ அப்படியா? வரட்டுமே" என்று தன் நாக்கை கன்னக்குழியில் பதுக்கி குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான் வீ.கே.
அதில் அனுஷாவின் காதுகளிரண்டும் இட்லி குக்கராகின.
அன்றைய நாளை ஒன்றாகவே கழித்தவர்கள் இறுதியில் பேரங்காடி ஒன்றிற்கு செல்ல, அனுஷா முதல் ஆளாய் தனக்கு பிடித்த மாடர்ன் உடைகளை தேர்வு செய்து ட்ரையல் ரூமிற்கு சென்றாள்.
விஜய்குமாரோ தங்கள் உடைகளை தேர்வு செய்து வந்தவர்களிடம், சோனாவின் பிறந்தநாளிற்கு தான் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, அனைவரின் பில்லையும் தானே மனமுவந்து கட்டினான்.
"வீ.கே சார் இதுல எனக்கு எந்த ட்ரெஸ் நல்லாயிருக்கும்?" என சோனா திடீரென கேட்க,
"ம்? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சோனா. சோ செலக்ட் பண்ணவும் தெரியாது" என்று அவளிடமிருந்து நைசாக நழுவிக்கொண்டான்.
அவனின் பதிலில் வேறு வழியில்லாமல் தனக்கு பிடித்த உடையை தேர்ந்தெடுத்துவிட்டு வெளியே வந்தாள் சோனா.
ரயிலில் தங்களின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போதோ, "வீ.கே சார், இந்த ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்காதுனா, அப்போ வேற எந்த மாதிரி ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்கும்?" என சோனா ஆர்வமாய் வினவினாள்.
அவன் கனவில் மிதந்தபடி பதிலளித்தான்.
"ம்? எனக்கு பொண்ணுங்க சேலை கட்டினா ரொம்பப் பிடிக்கும் சோனா. அதுவும் நெத்தியில பொட்டு வச்சு, தலை நிறைய பிச்சிப்பூ வச்சா ரொம்பப் பிடிக்கும். என் அம்மா அப்படி தான் இருப்பாங்க" என்று ரசனையுடன் கூறினான்.
"அதாவது நீ அருக்கானி கெட்டப்ல, என் புருஷன் தான்; எனக்கு மட்டும் தான்னு பாட்டு பாடிக்கிட்டு திரிஞ்சன்னா, உன்னைய உன் வீ.கே சாருக்கு ரொம்ப பிடிக்குமாம் சோனா.” என அனுஷா வம்பிழுக்க,
இடையில் புகுந்த சோனா, "சாரீஸ்லாம் எனக்கு செட்டாகாது வீ.கே சார். இருந்தாலும் உங்களுக்காக ஒரு நாள் ட்ரை பண்றேன்" என்று கூறி, நேரம் போகவென அவனுடன் பலவற்றை கதைத்துக்கொண்டே வந்தாள்.
அனுஷாவிற்கு அவர்களின் வாய் ஓயாதா என்றிருந்தது.
ஒவ்வொரு வார இறுதியிலும் லண்டனில் உள்ள சுற்றுலா தளங்களையெல்லாம் கூடுமானவரை சுற்றிப் பார்த்தவர்கள், இறுதியாக லண்டன் மாநகரத்தின் மத்தியில் உள்ள ரீஜன்ட் பார்க்கிற்கு வந்தனர்.
கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் ரோஜாக்களை கொண்ட குயின் மேரிஸ் கார்டன், நூறு வகை விலங்குகளை கொண்ட வனவிலங்கு காப்பகம், உலகின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு திடல், சர்வ வசதிகளும் கொண்ட காபி கஃபே, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் வானவெளியில் ஒரு திரையரங்கம் என அனைத்தையும் காணக் காண வியப்பில் அவர்கள் அனைவரது கண்களும் விரிந்துகொண்டே சென்றன.
வீட்டிற்கு கிளம்பும் வேளையில் அனைவரும் ரீஜண்ட் பார்க்கிற்கு சற்றே வடக்குத் திசையில் உள்ள லண்டன் மாநகரத்தின் மொத்த அழகையும் இரு நூற்றி பதின்மூன்று அடி உயரத்தில் நின்று காண ஏதுவாய் அமைந்திருக்கும் ப்ரிம்ரோஸ் ஹில்லிற்குச் சென்றனர்.
அங்கு ஜோடி ஜோடியாக நெருங்கி அமர்ந்து தங்கள் இணையின் உடல் வெப்பத்தை தங்கள் உடலிற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை கண்டதும் சோனாவிற்கு என்ன தோன்றியதோ, ஒரு ரோஜாப்பூவை கையில் ஏந்திக்கொண்டு வீ.கேவின் முன் முட்டிபோட்டமர்ந்து அவனை நோக்கி, "ஐ லவ் யூ வீ.கே சார்" என்று தன் காதலை தெரிவித்தாள்.
இவன் அனுஷாவைப் பார்த்தான். எழில் பொங்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவளைப் பார்த்து, ‘ச்சே! இங்க ஒருத்தி ப்ரோபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. லூசு எங்க வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கு பாரு? அடியே குஸ்கா, இந்தா வரேன்டி’ என்று வீறு கொண்டவன்,
சோனாவின் புறம் திரும்பி, "நீ ஏன் என்னை லவ் பண்றனு நான் தெரிஞ்சிக்கலாமா சோனா?" என்றான்.
"அதுவந்து ஃபர்ஸ்ட் உங்க அப்பியரன்ஸ் பார்த்து தான் நான் அட்ராக்ட் ஆனேன் வீ.கே சார். ஆனா நீங்க இப்ப எங்க எல்லோரையும் ரொம்ப கேரிங்கா பார்த்துகறதைப் பார்த்து இது மாதிரி லைப் ஃபுல்லா என்னை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கையில தான் லவ் ப்ரொபோஸ் பண்ணினேன்" என அவன் முகத்தை பார்த்து சொல்ல,
"சாரி சோனா, நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்." என நிஜமாகவே வருத்தப்பட்டான் விஜய்குமார்.
அவனின் பதிலில் மனம் உடைந்து போனாலும், அவன் விரும்பும் அந்த அதிர்ஷ்டசாலிப்பெண் யாரென்று அறியும் நோக்கில், "அவங்க எந்த மூவி ஹீரோயின் வீ.கே சார்? அவங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் சோனா.
"இந்தா காட்டுறேன்" என்றவன் நடுவிலிருந்த புல் குன்றை எகிறி குதித்து தாவி, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஒரு மோதிரத்தை கையில் பிடித்துக்கொண்டு,
அனுஷாவின் முன் முட்டிபோட்டமர்ந்து, "ஐ லவ் யூ அனுஷா" என்று சொல்ல, அவனிடமிருந்து இப்படியொரு செய்கையை எதிர்பாராதவள், அதிர்ச்சியில் மொழியற்று நின்றாள்.
தொடரும்...