- Messages
- 1,024
- Reaction score
- 1,132
- Points
- 113
ஒரு மணி நேரம் கழித்து, ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் தீட்டப்பட்ட காரிகை உயிர்பெற்று வந்தது போல், தயாராகி வந்த ரதிதேவியைக் கண்டு, மெய் மறந்து நின்றான் கலாரசிகன்.
பின்புறம் ஒலித்த காரின் ஹாரன் ஒலியிலேயே சுய நினைவிற்கு வந்தவன், "ம்! வா, வா, டைம் ஆகிடுச்சு பாரு" என்று அவளின் கரம் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.
சரியாய் பதினொன்றரை மணிக்கு அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, ரிஜிஸ்திரர் கொடுத்த புத்தகத்தில் கையெழுத்துப் போட்டவன், "ம்! சைன் பண்ணு பேபி" என அவளிடம் பேனாவை நீட்ட,
அதை வாங்கியவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.
"ம்!" என்றவனின் அதட்டல் நிறைந்த உறுமலில், மறுகணம் தானும் கையெழுத்து போட்டுவிட்டு அவன் கையெழுத்தைப் பார்த்தாள்.
சத்தியமாக அவன் கிறுக்கி வைத்திருந்த கோழிக்கிறுக்கலில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
"கங்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ் அக்னிமித்ரன்" என ரிஜிஸ்திரர் வாழ்த்த, கண்களில் நன்றியுணர்வுடன் அவரை நிமிர்ந்துப் பார்த்த ரதிதேவி, இனி காலம் முழுமைக்கும் தன் பெயரின் பின்னால் பயணிக்கப் போகும் அப்பெயரை மனதிற்குள் உருப்போட ஆரம்பித்தாள்.
"தான்க்யூ சார்" என்று புன்முறுவல் பூத்தவன்,
"என்ன யோசனை பேபி? இந்தா மாலையைப் பிடி" என அவளின் கையில் மாலையை கொடுத்து புகைப்படக்காரரின் முன்னிலையில் அவள் கழுத்தில் அந்த வெள்ளை ரோஜாக்கள் நிறைந்த மாலையை அணிவித்தான்.
பதிலுக்கு அவளும் அவனுக்கு மாலையை அணிவிக்க, அதனை தலை குனிந்து வாங்கிக்கொண்டான். நேற்று மாலை நடந்ததென்ன? இப்போது நடப்பதென்ன? என்று வாழ்வே கசந்தது அவளுக்கு.
அவர்களின் அருகில் வந்த அவனின் பி.ஏ சூர்யா, "சார் இந்தாங்க தாலி" என நீட்ட, அதை வாங்கி அவளின் கழுத்தில் கட்டுவது போல் கைகளை விரித்து முன்னோக்கி வந்தவன், அவள் தலை குனிந்து அதை ஏற்கப்போகும் சமயத்தில் தாலியை கட்டாமல் கைகளை கீழிறக்கினான்.
அவள் ஏன் எனும் விதமாய் குழம்பிப்போய் பார்க்க, "இல்ல பேபி, நான் இப்படியொரு இடத்துல உன் கழுத்துல தாலிக்கட்ட மாட்டேன். உன் குடும்பமும் என் குடும்பமும் சுத்தி நின்னு, மொத்த கூட்டமும் நம்ம தலைல அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் செய்யறப்ப தான் தாலிக் கட்டுவேன். அதனால இப்ப இது உனக்கு வேணாம் பேபி. ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்குப் போவோம்" என்று அவளை காருக்குள் ஏற்றி, எஞ்சினை இயக்கினான்.
கார் அசுர வேகத்தில் வழுக்கிக்கொண்டு நேரே சந்தானத்தின் வீட்டின் முன்பு போய் நின்றது.
ஒரு கையில் மாலையும் மறுகையில் ரதியையும் பிடித்துக்கொண்டு புது மாப்பிள்ளை மிடுக்குடன், அவ்வீட்டிற்குள் நுழைந்தான் அக்னிமித்ரன்.
வரவேற்பறையில் உட்கார்ந்து அச்சடிக்கப்பட்டு வந்திருந்த திருமணப் பத்திரிக்கைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்விஹாசன், சந்தானம், கல்பனா, பிரகாஷ் மற்றும் அவர்களின் ஒன்றிரண்டு குடும்பத்தினர் முதலானோர், உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு, அதிர்ந்துப்போய் எழுந்து நின்றனர்.
நாலு கால் பாய்ச்சலில் அவர்களை நோக்கி ஓடி வந்த கல்பனா, ரதியின் கன்னத்தில் அறைய தன் கையை ஓங்க, ஓங்கிய கை ஓங்கியபடியே அந்தரத்தில் நின்றது.
காரணம், தன் மனைவிக்கும், மாமியாருக்கும் இடையே புகுந்து, தன் மனைவிக்கு கவசமாய் நின்றிருந்தான் அக்னிமித்ரன்.
"ஹலோ மாமியாரே, என்ன இப்படி கோபப்படுறீங்க? ரொம்பத் தப்பாச்சே. இப்ப அவ மேல கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏன்னா அவ இப்போ மிஸ் ரதிதேவி சந்தானம் இல்ல. மிசஸ் ரதிதேவி அக்னிமித்ரன். ஞாபகம் இருக்கட்டும்!” என செருக்குடன் கூறினான்.
தன்னை கொலைவெறியுடன் பார்த்தவரை துச்சமாக ஒதுக்கிவிட்டு, சந்தானத்தின் அருகே சென்றவன், "அன்னைக்கு என்ன சொன்னீங்க?" என தன் நாடியில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தான்.
பின், "ஓ! யா, ஆலமரம், ஆலமரம். இன்னைக்கு இந்த அக்னிமித்ரன் அடிச்ச ஒத்த ஆப்புல அந்த ஆலமரம் மல்லாக்க விழுந்துருச்சே. ஹாஹாஹா! இதுக்கு தான் ஓவரா அலம்பக் கூடாதுனு சொல்றது மாமனாரே. ப்ரித்வி ப்ரோ உங்களுக்கு தான் என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியல. எனிவே நவ் ஷீ இஸ் மை வைஃப். சோ சேன்ஜ் யுவர் மைண்ட்" என்றவன் டீபாயில் இருந்த பத்திரிக்கைகளை தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த லைட்டரை கொண்டு பற்ற வைத்து, லைட்டரை மேல் நோக்கி தூக்கி எறிந்தான்.
அனைத்தும் பிடித்து எரிந்து கருகியது, பிரித்வியின் வயிற்றை போன்று.
"டேய்! யாரு முன்னாடி வந்து என்ன பேசுற? கல்யாணம் ஆகிட்டா ஒன்னும் பண்ண முடியாதுனு நெனச்சியா? இதை எப்படி மேனேஜ் பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்டா. எங்களை சின்ன பப்பானு நெனச்சியா? எங்கப் பொண்ணு நாங்க என்ன சொன்னாலும் செய்வாடா. பார்க்கறியா?" என்று பிரகாஷ் நின்ற வாக்கிலே குதிக்க,
"ரதி பேபி இப்ப உன் குடும்பத்துக்கிட்ட அத்தான் கொஞ்சம் தனியா டீலிங் பேச வேண்டியிருக்கு. நீ கொஞ்சம் உன் ரூமுக்குப் போறியா?" என்றவன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணியம்மை மற்றும் பிரகாஷின் மனைவி மீனாக்ஷியிடம், ரதியை மேலே அழைத்துச்செல்லுமாறு சைகை காட்டினான்.
அவர்களும் அவளை மேலே அழைத்துச் செல்ல, நேற்றிரவு நடந்ததை அவன் அவர்களிடம் சொல்லி விடுவானோ எனப் பயந்த ரதிதேவி, அக்னிமித்ரனைப் பார்த்து வேண்டாம் எனும் விதமாய் தலையாட்டிக்கொண்டே மாடிப் படியேறி மேலே சென்றாள்.
தொடரும்...
பின்புறம் ஒலித்த காரின் ஹாரன் ஒலியிலேயே சுய நினைவிற்கு வந்தவன், "ம்! வா, வா, டைம் ஆகிடுச்சு பாரு" என்று அவளின் கரம் பிடித்து உள்ளே இழுத்துச் சென்றான்.
சரியாய் பதினொன்றரை மணிக்கு அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்து, ரிஜிஸ்திரர் கொடுத்த புத்தகத்தில் கையெழுத்துப் போட்டவன், "ம்! சைன் பண்ணு பேபி" என அவளிடம் பேனாவை நீட்ட,
அதை வாங்கியவள் ஒரு கணம் தயங்கி நின்றாள்.
"ம்!" என்றவனின் அதட்டல் நிறைந்த உறுமலில், மறுகணம் தானும் கையெழுத்து போட்டுவிட்டு அவன் கையெழுத்தைப் பார்த்தாள்.
சத்தியமாக அவன் கிறுக்கி வைத்திருந்த கோழிக்கிறுக்கலில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
"கங்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ் அக்னிமித்ரன்" என ரிஜிஸ்திரர் வாழ்த்த, கண்களில் நன்றியுணர்வுடன் அவரை நிமிர்ந்துப் பார்த்த ரதிதேவி, இனி காலம் முழுமைக்கும் தன் பெயரின் பின்னால் பயணிக்கப் போகும் அப்பெயரை மனதிற்குள் உருப்போட ஆரம்பித்தாள்.
"தான்க்யூ சார்" என்று புன்முறுவல் பூத்தவன்,
"என்ன யோசனை பேபி? இந்தா மாலையைப் பிடி" என அவளின் கையில் மாலையை கொடுத்து புகைப்படக்காரரின் முன்னிலையில் அவள் கழுத்தில் அந்த வெள்ளை ரோஜாக்கள் நிறைந்த மாலையை அணிவித்தான்.
பதிலுக்கு அவளும் அவனுக்கு மாலையை அணிவிக்க, அதனை தலை குனிந்து வாங்கிக்கொண்டான். நேற்று மாலை நடந்ததென்ன? இப்போது நடப்பதென்ன? என்று வாழ்வே கசந்தது அவளுக்கு.
அவர்களின் அருகில் வந்த அவனின் பி.ஏ சூர்யா, "சார் இந்தாங்க தாலி" என நீட்ட, அதை வாங்கி அவளின் கழுத்தில் கட்டுவது போல் கைகளை விரித்து முன்னோக்கி வந்தவன், அவள் தலை குனிந்து அதை ஏற்கப்போகும் சமயத்தில் தாலியை கட்டாமல் கைகளை கீழிறக்கினான்.
அவள் ஏன் எனும் விதமாய் குழம்பிப்போய் பார்க்க, "இல்ல பேபி, நான் இப்படியொரு இடத்துல உன் கழுத்துல தாலிக்கட்ட மாட்டேன். உன் குடும்பமும் என் குடும்பமும் சுத்தி நின்னு, மொத்த கூட்டமும் நம்ம தலைல அர்ச்சதை தூவி ஆசிர்வாதம் செய்யறப்ப தான் தாலிக் கட்டுவேன். அதனால இப்ப இது உனக்கு வேணாம் பேபி. ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்குப் போவோம்" என்று அவளை காருக்குள் ஏற்றி, எஞ்சினை இயக்கினான்.
கார் அசுர வேகத்தில் வழுக்கிக்கொண்டு நேரே சந்தானத்தின் வீட்டின் முன்பு போய் நின்றது.
ஒரு கையில் மாலையும் மறுகையில் ரதியையும் பிடித்துக்கொண்டு புது மாப்பிள்ளை மிடுக்குடன், அவ்வீட்டிற்குள் நுழைந்தான் அக்னிமித்ரன்.
வரவேற்பறையில் உட்கார்ந்து அச்சடிக்கப்பட்டு வந்திருந்த திருமணப் பத்திரிக்கைகளை சரி பார்த்துக் கொண்டிருந்த ப்ரித்விஹாசன், சந்தானம், கல்பனா, பிரகாஷ் மற்றும் அவர்களின் ஒன்றிரண்டு குடும்பத்தினர் முதலானோர், உள்ளே நுழைந்தவர்களைக் கண்டு, அதிர்ந்துப்போய் எழுந்து நின்றனர்.
நாலு கால் பாய்ச்சலில் அவர்களை நோக்கி ஓடி வந்த கல்பனா, ரதியின் கன்னத்தில் அறைய தன் கையை ஓங்க, ஓங்கிய கை ஓங்கியபடியே அந்தரத்தில் நின்றது.
காரணம், தன் மனைவிக்கும், மாமியாருக்கும் இடையே புகுந்து, தன் மனைவிக்கு கவசமாய் நின்றிருந்தான் அக்னிமித்ரன்.
"ஹலோ மாமியாரே, என்ன இப்படி கோபப்படுறீங்க? ரொம்பத் தப்பாச்சே. இப்ப அவ மேல கை வைக்க உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஏன்னா அவ இப்போ மிஸ் ரதிதேவி சந்தானம் இல்ல. மிசஸ் ரதிதேவி அக்னிமித்ரன். ஞாபகம் இருக்கட்டும்!” என செருக்குடன் கூறினான்.
தன்னை கொலைவெறியுடன் பார்த்தவரை துச்சமாக ஒதுக்கிவிட்டு, சந்தானத்தின் அருகே சென்றவன், "அன்னைக்கு என்ன சொன்னீங்க?" என தன் நாடியில் கை வைத்து யோசிப்பது போல் பாவனை செய்தான்.
பின், "ஓ! யா, ஆலமரம், ஆலமரம். இன்னைக்கு இந்த அக்னிமித்ரன் அடிச்ச ஒத்த ஆப்புல அந்த ஆலமரம் மல்லாக்க விழுந்துருச்சே. ஹாஹாஹா! இதுக்கு தான் ஓவரா அலம்பக் கூடாதுனு சொல்றது மாமனாரே. ப்ரித்வி ப்ரோ உங்களுக்கு தான் என்ன ஆறுதல் சொல்றதுனே தெரியல. எனிவே நவ் ஷீ இஸ் மை வைஃப். சோ சேன்ஜ் யுவர் மைண்ட்" என்றவன் டீபாயில் இருந்த பத்திரிக்கைகளை தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த லைட்டரை கொண்டு பற்ற வைத்து, லைட்டரை மேல் நோக்கி தூக்கி எறிந்தான்.
அனைத்தும் பிடித்து எரிந்து கருகியது, பிரித்வியின் வயிற்றை போன்று.
"டேய்! யாரு முன்னாடி வந்து என்ன பேசுற? கல்யாணம் ஆகிட்டா ஒன்னும் பண்ண முடியாதுனு நெனச்சியா? இதை எப்படி மேனேஜ் பண்ணனும்னு எங்களுக்கு தெரியும்டா. எங்களை சின்ன பப்பானு நெனச்சியா? எங்கப் பொண்ணு நாங்க என்ன சொன்னாலும் செய்வாடா. பார்க்கறியா?" என்று பிரகாஷ் நின்ற வாக்கிலே குதிக்க,
"ரதி பேபி இப்ப உன் குடும்பத்துக்கிட்ட அத்தான் கொஞ்சம் தனியா டீலிங் பேச வேண்டியிருக்கு. நீ கொஞ்சம் உன் ரூமுக்குப் போறியா?" என்றவன், ஓரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மணியம்மை மற்றும் பிரகாஷின் மனைவி மீனாக்ஷியிடம், ரதியை மேலே அழைத்துச்செல்லுமாறு சைகை காட்டினான்.
அவர்களும் அவளை மேலே அழைத்துச் செல்ல, நேற்றிரவு நடந்ததை அவன் அவர்களிடம் சொல்லி விடுவானோ எனப் பயந்த ரதிதேவி, அக்னிமித்ரனைப் பார்த்து வேண்டாம் எனும் விதமாய் தலையாட்டிக்கொண்டே மாடிப் படியேறி மேலே சென்றாள்.
தொடரும்...