தமிழ் வெண்பா
New member
- Messages
- 18
- Reaction score
- 19
- Points
- 3
காத்திருப்பு 5:
குதிரையை விட்டு இறங்கிய அவ்வீரன், ஜெகன் இருந்த திசையையே கூர்ந்து நோக்கியபடியே, முன்னெச்சரிக்கையாய் ஈட்டியை முன்னே நீட்டி பிடித்தபடி, மிகவும் கவனமாய் மெல்ல ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்து ஜெகனை நெருங்கிக் கொண்டிருந்தான்.
இன்னும் சில அடி தூரங்களே மீதமிருக்கிறது ஜெகனை நெருங்க. ஒருவேளை அவனின் பாதுகாப்புக்காக ஈட்டியைக் கொண்டு தாக்கிவிட்டால், நினைக்கவே உள்ளம் நடுங்கியது மற்ற நால்வருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் ஜெகனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? அவனின் சொல் கேளாமல் வெடவெடவென நடுங்கும் கால்கள் ஒன்றே போதுமானது அவனை காட்டிக் கொடுக்க. 'பேசாமல் கையைத் தூக்கிட்டு சரண்டர் ஆகிடலாமா..? இப்போது அப்படி செய்யறது தான் நல்லது... இல்லனா அவன் பாட்டுக்கு ஏதாவது விலங்குனு நினைச்சு ஈட்டிய ஒரே சொறுவா சொறுகிட்டானா..?' என எண்ணியவன், கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி மறைந்திருந்த இடத்தை விட்டு மெல்ல வெளியே வந்தான்.
அவன் நிராயுதபாணியாக வெளியே வருவதைக் கண்ட அவ்வீரனும் நீட்டிய ஈட்டியை சற்றே தளர்த்திப் பிடிக்க, அதுவரை நல்லதொரு சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்த நம்மவர்கள் நால்வரும் கண பொழுதில் கண்களாலேயே தங்களுக்குள் சமிக்ஞையை பரிமாறிக் கொண்டு நொடியும் தாமதிக்காமல் அவ்வீரனின் மீது பாய்ந்திருந்தனர்.
நால்வரும் ஒரே நேரத்தில் பாய, அத்தாக்குதலை எதிர்பாராத அவ்வீரனோ, நிலை தடுமாறி அவர்களுடன் சேர்ந்து தரையில் உருண்டி விழ, அவன் பற்றியிருந்த ஈட்டியோ அதே வேகத்தில் சற்றே தூர சென்று விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத ஜெகனோ அதிர்ச்சி நீங்காமல் அவர்களையே பார்த்திருக்க, "அடேய்... தீவிட்டி தடியா... அந்த ஈட்டிய எடுடா முதல..." என கத்திக் கொண்டிருந்தான் டேவிட்.
அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் நால்வரும் தங்களின் காலைப் பற்றிக் கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கம் வலிப் பொறுக்க முடியாமல் கத்தியபடியே உருண்டுக் கொண்டிருக்க, கிண்கிணி நாதமாய் எழுந்தது நகைப்பொலி ஒன்று. அவள் தான் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன்னிடமிருந்த குறுவாள் கொண்டு அனைவரின் காலிலும் காயத்தை ஏற்படுத்தி இருந்தாள்.
"அச்சச்சோ... பாவம்... நால்வர் சேர்ந்துமா என் ஒருத்தியை வீழ்த்த முடியவில்லை... நால்வருமே மாவீரர்கள் தான் போங்கள்..!" என்றவளின் குரலில் எள்ளலும் துள்ளலும் நக்கலும் சரிவிகித சமமாய் கலந்திருக்க, அப்போது தான் கண்டுக் கொண்டனர் அவள் ஒரு பெண் என்பதையே.
"டேய்... பொண்ணுடா..." காலைப் பற்றிக் கொண்டே டேவிட் சொல்ல,
அவன் சொல்லிய விதத்திலேயே வேகமாய் தலையிலிருந்த கவசத்தை கழட்டியவள், அதே வேகத்தில் அவன் இதயத்தின் அருகே அந்த குறுவாளை அழுத்திப் பிடித்திருந்தாள்.
"பெண் என்றால் அத்தனை இளப்பாமா தாங்களுக்கு..?" கண்களில் மின்னல் வெட்டியதோ? தீப்பிழம்பு சொட்டியதோ? அப்படிதான் நினைத்தான் அருகே அவளைக் கண்ட டேவிட்.
"ஐய்யையோ... அவன் அப்படி சொல்லல... நாங்க நீங்க ஒரு பையனு நினைச்சோம்... அதனால அப்படி சொல்லிட்டான்... ப்ளீஸ் அவன எதுவும் பண்ணிடாதீங்க..." என்றாள் சாரா வேகமாக அவளை நெருங்கி சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்.
" தாங்களும் என்னை பொருத்தருள வேண்டுகிறேன்... என்னை தாக்க வருகிறீர்கள் என்றெண்ணி தான் பதில் தாக்குதல் நடத்திவிட்டேன்..." என சாரவிடம் தன்மையாக மொழிந்தவள்,
"சக்தியை பயன்படுத்தும் முன்பு கொஞ்சமே கொஞ்சம் புத்தியை பயன்படுத்த வேண்டும் நண்பர்களே..! அதோ நின்கிறாரே அவரைப் போன்று..." என இறுதியாக ஜெகனை தொட்டு மீண்ட அவளின் வேள்விழிகள் டேவிட்டைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது.
"டேய் அந்த பொண்ண இன்னும் நாலு தடவ வேணுமுனாலும் கத்தியல குத்த சொல்லுடா... ஆனா அந்த பக்கி பயல மட்டும் அறிவாளினு சொல்ல சொல்லத... செம கடுப்பாகுது எனக்கு..." என்றான் டேவிட்
"என்னமோ நான் சொல்லிதான் அந்த புள்ள உன்ன குத்த போற மாதிரி சொல்லற... நீ பேசற பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கட வாய்க்குள்ளேயே கத்திய விட்டு ஆட்ட போகுது பாரு..." என்றான் நேமி.
"அதுகூட பரவயில்லடா... அவன பாரேன்... அவனால தான் நாம எல்லாம் கத்தி குத்து வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடக்கோம்... அத கொஞ்சம் கூட கண்டுக்காம, என்னமோ காணத கண்ட மாதிரி அந்த புள்ளயவே பாத்து ஈனு முத்திரெண்டு பல்லையும் காட்டிட்டி இருக்கான்..." என்றான் டேவிட்.
"டேய் கொஞ்சம் சும்மா இருங்கடா அந்த பொண்ணு நம்ம இரண்டு பேரையும் தான்டா முறைச்சு பாத்துட்டு இருக்கு..." என்றான் சுமன்.
"நீங்கள் ஐவரும் யார்..? எத்தேசத்தை சேர்ந்தவர்கள்..? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்..? இங்கிருப்பவர்கள் யாரையாவது அறிவீர்களா..? இப்பகுதி மானுடர்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதிகளாயிற்றே... பலமான பாதுகாப்பு வேறு இருக்கிறது... இப்படி இருக்க அத்தனை காவலை மீறி எப்படி உள்ளே நுழைந்தீர்கள்..?" வரிசையாய் அவள் கேள்விகளை அடுக்க அவர்கள் ஐவரும் மலைத்துப் போய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அம்மா தாயே... ஒவ்வொரு கேள்வியா கேளுமா... நீ பாட்டுக்கு மூச்சுவிடாம கேட்டுட்டே இருந்தீனா நாங்க எப்ப பதில் சொல்லறது..." என்றான் சுமன்.
"டேய் சும்மா இருடா... நீ பாட்டுக்கு ஏதாவது பேசப் போய் கத்தி எடுத்து அந்த பொண்ணு கழுத்துலையே சொறுகிட போகுது..." என்றான் நேமி மெல்ல எழுந்து நின்றபடியே.
ஆண்கள் நால்வரும் அமைதியாக இருக்க சாராதான் பதிலளிக்க வேண்டி இருந்தது. "நான் சாரா..." என்றவள் மற்ற நால்வரையும் அறிமுகப் படுத்த, டேவிட்டை மட்டும் இன்னும் முறைத்துப் பார்த்தாள் அவள்.
"அந்த புள்ள ஏன்டா உன்னைய இவ்வளவு அன்பா பாக்குது..." சுமன் டேவிடின் காதுகளில் கிசுகிசுக்க,
"அது எப்படிதான் எந்த பொண்ணா இருந்தாலும் அத்தான் மேல டக்குனு அட்டாச்மெண்ட் வந்துடும்..." என்றான் அவனும் சுமனைப் போலவே கிசுகிசுப்பாக.
"ஆமான்... ஆமான்... அந்த அட்டாச்மெண்ட்ல தான் உன் கழுத்துல கத்தி வச்சுச்சா... எனக்கு என்னமோ அந்த பொண்ணுக்கு உன் மொசரகட்டையே புடிக்கலனு நினைக்கறேன்... எப்படா உன்ன கத்தியால குத்தலாங்கற மாதிரியே பாத்திட்டு இருக்கு... எதுக்கும் ஜாக்கிரதையாவே இருக்கு... அசந்த நேரம் பாத்து சங்குல ஒரே சொறுகா சொறுகிட போகுது..." என்றான் நேமியும் அதே கிசுகிசுப்பு குரலில் நக்கலுடன்.
"யாருடா இவன்... உன் வாயில நல்லா வார்த்தையே வராதா... கூட்டிட்டு வந்து கொல்லறதுலேயே இருக்க..." என டேவிட்டும் அம்முறையிலேயே பதிலளிக்க,
தங்களுக்குள்ளேயே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்போது தான் அனைவரையும் அறிமுகபடுத்திவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்த சாராவையும் புதியவளையும் கவனித்தனர். இருவரும் தங்களை முறைப்பதை கவனித்துவிட்டு கடைவாய் பல் தெரியும் அளவிற்கு இளித்து வைத்தனர்.
"கொல்ல வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் அசந்த நேரம் முதுகில் குத்துபவள் அல்ல நான்... நேர் நின்று போர் புரிந்து நெஞ்சில் வாள் பாய்ச்சுபவள்..." கோவம் தெரிக்க அவள் சொன்ன விதத்திலேயே, அவள் அவர்களின் விளையாட்டு பேச்சை எத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என புரிந்துப் போனது.
"சரியான பாம்பு காதுடா..." மீண்டும் டேவிட் கிசுகிசுக்க,
"பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லை... மீண்டும் இதுப் போன்று தாங்கள் மூவரும் புறம் பேசினால் பேசும் திறத்தை இழக்க நேரிடலாம்..." என்றாள் அவள் அவர்களை முறைத்துக் கொண்டே.
"என்னடா சொல்லுது அந்த புள்ள... அதுசரி அது ஏன் அப்போ இருந்து பராசக்தி சிவாஜி மாதிரியே பேசிட்டு இருக்கு..." என கேள்வியாய் மற்ற இருவரையும் டேவிட் பார்க்க,
"ம்ம்ம்... அதுவும் உன்ன மாதிரி நட்டு கழன்ட கேஸா இருக்கும்..." என்றான் சுமன்.
"அது என்ன சொல்லுதுனா இப்படியே நமக்குள்ள பேசிட்டு இருந்தா பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துடுவேனு சொல்லது..." என்றான் நேமி.
நேமியை தவிர மற்ற நால்வருமே தமிழ் திரைபடங்களின் வழியே தான் தமிழைப் பயின்றிருந்தனர். நேமி ஒருவன் மட்டுமே அவன் அன்னையிடம் பயின்ற தமிழின் ஈடுபாடால் முயன்று சங்க தமிழ் இலங்கியங்களை படித்து உணர்ந்துக் கொள்ளும் அளவிற்கு தமிழைக் கற்று தேர்ந்திருந்தான்.
"தயசெஞ்சு மன்னிசுடுங்க... நாங்க நண்பர்களுக்குள்ள ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தோமே தவிர... உங்கள கஷ்டப் படுத்தனுமுனு நினைக்கல.. நீங்க யாருனு நாங்க தெரிஞ்சுக்கலாமா..? இது எந்த இடம்..?" என்றான் நேமியோன் மிகவும் பணிவுடன். ஏனோ அவளின் உடை நடை பாவனைகள் அத்தனையும் அதிகாரவர்கமென்று பறைசாற்றியது.
"தங்களில் ஒருவருக்காவது மரியாதை என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறதே... மிக்க மகிழ்ச்சி... நான் இளவெயினி... ஆம், நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்..?" என்றாள் அவளும் கேள்வியாய்.
"நாங்க மியாமில இருந்து ஒரு படகுல கிளம்பினோம்... வர வழியில பெரிய நீர் சுழல மாட்டிக்கிட்டோம்... படகும் சேதமாகிட்டு... அப்படியே மயங்கியும் போய்ட்டோம்... திரும்ப கண்ணு முழிச்சப்ப இங்க இருக்கோம்..." என்றான் நேமி.
"மியாமியா..? அப்படி ஒரு தேசம் இருக்கிறாதா என்ன... இதுவரை நான் கேள்வியுற்றதே இல்லையே..?" என்றாள் இளவெயினி யோசனையாய்.
"ஏன்ம்மா... நீயென்ன அமெரிக்க அதிபரா..? உனக்கு சொல்லிட்டு தான் எல்லா ஊருக்கும் பேரு வைக்கனுமா... இல்ல உனக்கு தெரியாம அமெரிக்காவுல ஒரு ஊரும் இருக்க கூடாதா..?" என்றது டேவிட்.
"நான் தாங்களிடம் மொழியாடவில்லை... நீங்கள் என்னிடம் நவிழாதிருப்பதே நலம்..." அவள் பார்வையிலேயே அனலைக் கக்க, கப்பென்று வாயை மூடிக் கொண்டான் டேவிட்.
"படகென்றால்... நீங்கள் கடலிலா பயணம் செய்தீர்கள்... ஆனால் கடலில் பயணம் செய்யதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே..."
"ஏம்மா... என்ன உன் பேரு... ஹான்... இளநீ... இன்னும் இந்த நாட்டுல எது எதுக்கெல்லாம் தடை போட்டு இருக்கீங்கனு ஒரு லிஸ்ட் குடுத்தா உனக்கு கோடி புன்னியமா போகும்..." வாயை அடக்க முடியாது டேவிட் மீண்டும் பேச, இம்முறை குறுவாளை அவன் கழுத்தில் பதித்திருந்தாள் அவள்.
"இத்தேசத்தின் இளவரசியின் பெயரை உரக்க உச்சரிக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது தான்... ஆனால் தாங்களோ கேலியே செய்கிறீர்கள்... அதற்கு தண்டனை என்ன தெரியுமா..? சிரசேதம்... ம்ம்ம்... என்ன செய்யட்டும் நான்... தண்டனையை நிறைவேற்றி விடட்டும்மா..?" அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அவள் வினவ,
"ஐய்யையோ... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... அவன் ஏதோ தெரியாம பேசிட்டான்... விட்டுடுங்க..." என்றான் நேமியோன் அவசரமாக,
"ஏன்டா வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ... பேசாம தான் இருந்து தொலையேன்..." என முதுகில் நான்கு வைத்து, சற்றே தள்ளி சாரா அவனை இழுத்து வரவும் தான் சுயநினைவே திரும்பியது அவனுக்கு. கழுத்தில் கத்தியை வைத்தப்பின் சர்வமும் ஒரு நிமிடம் அடங்கிதான் போனது அவனுக்கு.
"ஆமான்... இப்ப என்னத்துக்குடா அந்த புள்ள கத்திய வச்சு என் கழுத்துல அமுக்குது..." என்றான் இன்னும் குறையாத படபடப்புடன்.
"அது நீ அவங்க பேர சத்தமா சொன்னதும் இல்லாம கிண்டல் பண்ணிட்டீயாம்..." என்றான் நேமி நக்கலாக.
"அப்ப மெதுவா சொல்லலாமா..?" என்றான் டேவிட் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.
"அட விளங்காத பயலே... அவங்க பேர சொன்னாலே சங்கறுத்து போட்டுட்டு போய்டே இருப்பேனு சொல்லுது அந்த புள்ள... நீ தான் கொஞ்சம் வாய வச்சுட்டு சும்மா இரேன்டா... உன்ன பாத்தாலே அந்த பொண்ணு தான் கடுப்பாகுதுல... அப்படிதானே மேடம்..." என சுமன் இம்முறை வெயினியிடமே வினவ, அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.
"குறுதி பெருகிக் கொண்டே இருக்கிறது... இதற்கு விரைந்து மருந்திட வேண்டும்... அதற்கான மருந்து என்னிடமில்லை... இப்போதே இங்கிருந்து சென்றால் தான் அதிக பாதிப்பிலிருந்து தப்பலாம்..." என்றாள் அவர்களின் நால்வரின் கால்களிலும் இன்னும் நிற்காமல் வழிந்தோடும் இரத்தத்தைப் பார்த்தபடியே.
"ஆனா... இது என்ன இடம்னு நீங்க இன்னும் சொல்லலையே..." என்றது சாரா. காயம் ஏற்படுத்தியவளே அதற்கு மருந்தும் ஈடுகிறேன் என்றால், இன்னும் முழுதாக அவளை நம்ப முடியவில்லை சாராவால். அன்றி நொடிக்கு நொடி கோபத்தில் கத்தியை தூக்கியபவளின் குணத்தையும் அத்தனை எளிதில் வரையறுக்க முடியவில்லை. அப்படி இருக்க எப்படி அவளுடன் கிளம்பி செல்வதாம்.
சொல் கொண்டு விவரிக்கவில்லை என்றாலும், தயக்கமும் தடுமாறும் பார்வையுமே அவளின் நம்பிக்கை இன்மையை வெயினிக்கு உணர்த்திவிட்டது. "இது சங்கம் வளர்த்த தென் மதுரை... இதன் தற்போதைய வேந்தர் கொற்கை நெடுமாற பாண்டியர்... நான் அவரது புத்திரி இளவெயினி... எம்மை நம்பி தாங்கள் தாராளமாய் உடன் வரலாம்... தாங்கள் ஐவரும் இனி எம் விருந்தினர்... உமக்கு சிறு ஊரும் ஏற்படாது காப்பது என் கடமை..." என்றாள் அவள் பணிவாக.
"மதுரைனா அது இந்தியா தானே... ஆனா இந்தியா இன்டிபெண்ட் கன்ட்ரீ தானே... இவ என்னடானா இவங்க அப்பாதான் அதுக்கு ராஜானு சொல்லறா..." டேவிட் சந்தேகமாக சுமனை வினவ, அவனோ, "எனக்கு என்னமோ இன்னைக்கு உன் உயிர் அந்த பொண்ணு கையால தான் போக போகுதுனு தோணுது..." என்றான் எள்ளலாக.
"இன்னும் இங்கிருப்பது உசிதமல்ல... செல்லலாம் தானே..." அவள் ஐவருக்கும் பொதுவாக வினா தொடுக்க, டேவிட்டை தவிர மற்ற நால்வருமே ஒப்புதலாக தலையசைத்தனர்.
"குதிரையில போனாலும் இரண்டு பேரு தான போக முடியும்... மத்தவங்க..." சாரா சந்தேகமாக வினா எழுப்ப,
மெல்ல நகைத்தவள், தன் குதிரையின் அருகில் சென்று அதன் பிடறி முடியை நீவி விட்டபடியே அதன் காதில் ஏதோ உரைக்க, சட்டென்று தன் பலம் மொத்தத்தையும் ஒருங்கிணைத்து முன்னங்கால்களை மேலே தூக்கி கணைத்தது அது.
அதன் கணைப்பே சிங்கத்தின் கர்ஜனையை ஒத்திருக்க, அதன் உடலே நீல நிறத்தில் ஒளிரத் துவங்கியது. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அதன் இருபுறமும் இறக்கைகள் விரிய துவங்க, இங்கே நம்பவர்கள் கண்களோ ஆச்சரியத்தில் விரிய துவங்கியது.
அதே நேரம் வானில் தங்க நிறத்தில் ஒளிப் பிளம்பொன்று தோன்றி, சட்டென்று தரையிரங்க, அதேப் போன்றே மற்றொரு குதிரை சிறகுகளை விரித்துக் கொண்டு தங்க நிறத்தில் ஜொலித்தது.
"இவன் நீலன்... என்னுடைய இணைப்பிரியா தோழன்... நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் அழைத்துச் செல்லும் வல்லமை உண்டு... இவள் அவன் இணை நீலா... இப்போது நாம் செல்லலாம் தானே..." என்றாள் வெயினி.
"ஆனா... ஆனா... எப்படி இது சாத்தியம்... குதிரைகளுக்கு இறக்கை எப்படி..." வியந்து கேட்டது நேமியோன்.
"இதிலென்ன ஆச்சரியம்... பரிகள் பறக்குமென்பதை தாங்கள் அறிகிலரா... அன்றி பறக்க வேண்டுமென்றால் சிறகுகள் அவசியம் தானே..." என்றாள் வெயினி.
"என்ன பறக்குமா..?" என்றான் டேவிட் கண்களை விரித்து அந்த குதிரையை நடுங்கும் விரல்களால் தடவிப் பார்த்தபடி.
"ஆம்... நிச்சயமாக... இப்போது நீங்களும் அதைக் காணத் தானேப் போகிறீர்கள்..." என்றாள் வெயினி புன்முறுவலுடன்.
"ஆனா... இது எப்படி இத்தனை சீக்கரமா இங்க வந்தது..."
"பரிகளின் நுண் உணர் திறன் மிக அதிகம்... தன் இணையின் ஒற்றை கணைப்பொலியை எத்தனை தூரத்தில் இருந்தாலும் உணர்ந்து நொடிப் பொழுதில் அங்கே வந்துவிடும் வல்லமை கொண்டவை..." என்றாள் இன்னும் புன்னகை மாறாமல்.
"சரி செல்வோமா..." என அவள் வினவ, மற்ற ஐவரும் தலையும் தானாய் ஆடியது. வெயினி, சாரா, ஜெகன் மூவரும் நீலனில் ஏறிக் கொள்ள, நேமியோன், டேவிட், சுமன் மூவரும் நீலாவில் ஏறிக் கொண்டனர். அவர்கள் அறுவரும் ஏறிய அடுத்த நொடி, வானில் தோன்றி மறையும் வாள் நச்சத்திரம் போல நீல நிறத்திலும் தங்க நிறத்திலும் இரண்டு ஒளிக்கற்றைகள் மண்ணில் தோன்றி விண்ணில் மறைந்தது.
- காத்திருப்பு தொடரும்...
குதிரையை விட்டு இறங்கிய அவ்வீரன், ஜெகன் இருந்த திசையையே கூர்ந்து நோக்கியபடியே, முன்னெச்சரிக்கையாய் ஈட்டியை முன்னே நீட்டி பிடித்தபடி, மிகவும் கவனமாய் மெல்ல ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்து ஜெகனை நெருங்கிக் கொண்டிருந்தான்.
இன்னும் சில அடி தூரங்களே மீதமிருக்கிறது ஜெகனை நெருங்க. ஒருவேளை அவனின் பாதுகாப்புக்காக ஈட்டியைக் கொண்டு தாக்கிவிட்டால், நினைக்கவே உள்ளம் நடுங்கியது மற்ற நால்வருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் ஜெகனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? அவனின் சொல் கேளாமல் வெடவெடவென நடுங்கும் கால்கள் ஒன்றே போதுமானது அவனை காட்டிக் கொடுக்க. 'பேசாமல் கையைத் தூக்கிட்டு சரண்டர் ஆகிடலாமா..? இப்போது அப்படி செய்யறது தான் நல்லது... இல்லனா அவன் பாட்டுக்கு ஏதாவது விலங்குனு நினைச்சு ஈட்டிய ஒரே சொறுவா சொறுகிட்டானா..?' என எண்ணியவன், கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி மறைந்திருந்த இடத்தை விட்டு மெல்ல வெளியே வந்தான்.
அவன் நிராயுதபாணியாக வெளியே வருவதைக் கண்ட அவ்வீரனும் நீட்டிய ஈட்டியை சற்றே தளர்த்திப் பிடிக்க, அதுவரை நல்லதொரு சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்த நம்மவர்கள் நால்வரும் கண பொழுதில் கண்களாலேயே தங்களுக்குள் சமிக்ஞையை பரிமாறிக் கொண்டு நொடியும் தாமதிக்காமல் அவ்வீரனின் மீது பாய்ந்திருந்தனர்.
நால்வரும் ஒரே நேரத்தில் பாய, அத்தாக்குதலை எதிர்பாராத அவ்வீரனோ, நிலை தடுமாறி அவர்களுடன் சேர்ந்து தரையில் உருண்டி விழ, அவன் பற்றியிருந்த ஈட்டியோ அதே வேகத்தில் சற்றே தூர சென்று விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத ஜெகனோ அதிர்ச்சி நீங்காமல் அவர்களையே பார்த்திருக்க, "அடேய்... தீவிட்டி தடியா... அந்த ஈட்டிய எடுடா முதல..." என கத்திக் கொண்டிருந்தான் டேவிட்.
அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் நால்வரும் தங்களின் காலைப் பற்றிக் கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கம் வலிப் பொறுக்க முடியாமல் கத்தியபடியே உருண்டுக் கொண்டிருக்க, கிண்கிணி நாதமாய் எழுந்தது நகைப்பொலி ஒன்று. அவள் தான் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன்னிடமிருந்த குறுவாள் கொண்டு அனைவரின் காலிலும் காயத்தை ஏற்படுத்தி இருந்தாள்.
"அச்சச்சோ... பாவம்... நால்வர் சேர்ந்துமா என் ஒருத்தியை வீழ்த்த முடியவில்லை... நால்வருமே மாவீரர்கள் தான் போங்கள்..!" என்றவளின் குரலில் எள்ளலும் துள்ளலும் நக்கலும் சரிவிகித சமமாய் கலந்திருக்க, அப்போது தான் கண்டுக் கொண்டனர் அவள் ஒரு பெண் என்பதையே.
"டேய்... பொண்ணுடா..." காலைப் பற்றிக் கொண்டே டேவிட் சொல்ல,
அவன் சொல்லிய விதத்திலேயே வேகமாய் தலையிலிருந்த கவசத்தை கழட்டியவள், அதே வேகத்தில் அவன் இதயத்தின் அருகே அந்த குறுவாளை அழுத்திப் பிடித்திருந்தாள்.
"பெண் என்றால் அத்தனை இளப்பாமா தாங்களுக்கு..?" கண்களில் மின்னல் வெட்டியதோ? தீப்பிழம்பு சொட்டியதோ? அப்படிதான் நினைத்தான் அருகே அவளைக் கண்ட டேவிட்.
"ஐய்யையோ... அவன் அப்படி சொல்லல... நாங்க நீங்க ஒரு பையனு நினைச்சோம்... அதனால அப்படி சொல்லிட்டான்... ப்ளீஸ் அவன எதுவும் பண்ணிடாதீங்க..." என்றாள் சாரா வேகமாக அவளை நெருங்கி சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்.
" தாங்களும் என்னை பொருத்தருள வேண்டுகிறேன்... என்னை தாக்க வருகிறீர்கள் என்றெண்ணி தான் பதில் தாக்குதல் நடத்திவிட்டேன்..." என சாரவிடம் தன்மையாக மொழிந்தவள்,
"சக்தியை பயன்படுத்தும் முன்பு கொஞ்சமே கொஞ்சம் புத்தியை பயன்படுத்த வேண்டும் நண்பர்களே..! அதோ நின்கிறாரே அவரைப் போன்று..." என இறுதியாக ஜெகனை தொட்டு மீண்ட அவளின் வேள்விழிகள் டேவிட்டைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது.
"டேய் அந்த பொண்ண இன்னும் நாலு தடவ வேணுமுனாலும் கத்தியல குத்த சொல்லுடா... ஆனா அந்த பக்கி பயல மட்டும் அறிவாளினு சொல்ல சொல்லத... செம கடுப்பாகுது எனக்கு..." என்றான் டேவிட்
"என்னமோ நான் சொல்லிதான் அந்த புள்ள உன்ன குத்த போற மாதிரி சொல்லற... நீ பேசற பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கட வாய்க்குள்ளேயே கத்திய விட்டு ஆட்ட போகுது பாரு..." என்றான் நேமி.
"அதுகூட பரவயில்லடா... அவன பாரேன்... அவனால தான் நாம எல்லாம் கத்தி குத்து வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடக்கோம்... அத கொஞ்சம் கூட கண்டுக்காம, என்னமோ காணத கண்ட மாதிரி அந்த புள்ளயவே பாத்து ஈனு முத்திரெண்டு பல்லையும் காட்டிட்டி இருக்கான்..." என்றான் டேவிட்.
"டேய் கொஞ்சம் சும்மா இருங்கடா அந்த பொண்ணு நம்ம இரண்டு பேரையும் தான்டா முறைச்சு பாத்துட்டு இருக்கு..." என்றான் சுமன்.
"நீங்கள் ஐவரும் யார்..? எத்தேசத்தை சேர்ந்தவர்கள்..? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்..? இங்கிருப்பவர்கள் யாரையாவது அறிவீர்களா..? இப்பகுதி மானுடர்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதிகளாயிற்றே... பலமான பாதுகாப்பு வேறு இருக்கிறது... இப்படி இருக்க அத்தனை காவலை மீறி எப்படி உள்ளே நுழைந்தீர்கள்..?" வரிசையாய் அவள் கேள்விகளை அடுக்க அவர்கள் ஐவரும் மலைத்துப் போய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"அம்மா தாயே... ஒவ்வொரு கேள்வியா கேளுமா... நீ பாட்டுக்கு மூச்சுவிடாம கேட்டுட்டே இருந்தீனா நாங்க எப்ப பதில் சொல்லறது..." என்றான் சுமன்.
"டேய் சும்மா இருடா... நீ பாட்டுக்கு ஏதாவது பேசப் போய் கத்தி எடுத்து அந்த பொண்ணு கழுத்துலையே சொறுகிட போகுது..." என்றான் நேமி மெல்ல எழுந்து நின்றபடியே.
ஆண்கள் நால்வரும் அமைதியாக இருக்க சாராதான் பதிலளிக்க வேண்டி இருந்தது. "நான் சாரா..." என்றவள் மற்ற நால்வரையும் அறிமுகப் படுத்த, டேவிட்டை மட்டும் இன்னும் முறைத்துப் பார்த்தாள் அவள்.
"அந்த புள்ள ஏன்டா உன்னைய இவ்வளவு அன்பா பாக்குது..." சுமன் டேவிடின் காதுகளில் கிசுகிசுக்க,
"அது எப்படிதான் எந்த பொண்ணா இருந்தாலும் அத்தான் மேல டக்குனு அட்டாச்மெண்ட் வந்துடும்..." என்றான் அவனும் சுமனைப் போலவே கிசுகிசுப்பாக.
"ஆமான்... ஆமான்... அந்த அட்டாச்மெண்ட்ல தான் உன் கழுத்துல கத்தி வச்சுச்சா... எனக்கு என்னமோ அந்த பொண்ணுக்கு உன் மொசரகட்டையே புடிக்கலனு நினைக்கறேன்... எப்படா உன்ன கத்தியால குத்தலாங்கற மாதிரியே பாத்திட்டு இருக்கு... எதுக்கும் ஜாக்கிரதையாவே இருக்கு... அசந்த நேரம் பாத்து சங்குல ஒரே சொறுகா சொறுகிட போகுது..." என்றான் நேமியும் அதே கிசுகிசுப்பு குரலில் நக்கலுடன்.
"யாருடா இவன்... உன் வாயில நல்லா வார்த்தையே வராதா... கூட்டிட்டு வந்து கொல்லறதுலேயே இருக்க..." என டேவிட்டும் அம்முறையிலேயே பதிலளிக்க,
தங்களுக்குள்ளேயே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்போது தான் அனைவரையும் அறிமுகபடுத்திவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்த சாராவையும் புதியவளையும் கவனித்தனர். இருவரும் தங்களை முறைப்பதை கவனித்துவிட்டு கடைவாய் பல் தெரியும் அளவிற்கு இளித்து வைத்தனர்.
"கொல்ல வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் அசந்த நேரம் முதுகில் குத்துபவள் அல்ல நான்... நேர் நின்று போர் புரிந்து நெஞ்சில் வாள் பாய்ச்சுபவள்..." கோவம் தெரிக்க அவள் சொன்ன விதத்திலேயே, அவள் அவர்களின் விளையாட்டு பேச்சை எத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என புரிந்துப் போனது.
"சரியான பாம்பு காதுடா..." மீண்டும் டேவிட் கிசுகிசுக்க,
"பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லை... மீண்டும் இதுப் போன்று தாங்கள் மூவரும் புறம் பேசினால் பேசும் திறத்தை இழக்க நேரிடலாம்..." என்றாள் அவள் அவர்களை முறைத்துக் கொண்டே.
"என்னடா சொல்லுது அந்த புள்ள... அதுசரி அது ஏன் அப்போ இருந்து பராசக்தி சிவாஜி மாதிரியே பேசிட்டு இருக்கு..." என கேள்வியாய் மற்ற இருவரையும் டேவிட் பார்க்க,
"ம்ம்ம்... அதுவும் உன்ன மாதிரி நட்டு கழன்ட கேஸா இருக்கும்..." என்றான் சுமன்.
"அது என்ன சொல்லுதுனா இப்படியே நமக்குள்ள பேசிட்டு இருந்தா பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துடுவேனு சொல்லது..." என்றான் நேமி.
நேமியை தவிர மற்ற நால்வருமே தமிழ் திரைபடங்களின் வழியே தான் தமிழைப் பயின்றிருந்தனர். நேமி ஒருவன் மட்டுமே அவன் அன்னையிடம் பயின்ற தமிழின் ஈடுபாடால் முயன்று சங்க தமிழ் இலங்கியங்களை படித்து உணர்ந்துக் கொள்ளும் அளவிற்கு தமிழைக் கற்று தேர்ந்திருந்தான்.
"தயசெஞ்சு மன்னிசுடுங்க... நாங்க நண்பர்களுக்குள்ள ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தோமே தவிர... உங்கள கஷ்டப் படுத்தனுமுனு நினைக்கல.. நீங்க யாருனு நாங்க தெரிஞ்சுக்கலாமா..? இது எந்த இடம்..?" என்றான் நேமியோன் மிகவும் பணிவுடன். ஏனோ அவளின் உடை நடை பாவனைகள் அத்தனையும் அதிகாரவர்கமென்று பறைசாற்றியது.
"தங்களில் ஒருவருக்காவது மரியாதை என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறதே... மிக்க மகிழ்ச்சி... நான் இளவெயினி... ஆம், நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்..?" என்றாள் அவளும் கேள்வியாய்.
"நாங்க மியாமில இருந்து ஒரு படகுல கிளம்பினோம்... வர வழியில பெரிய நீர் சுழல மாட்டிக்கிட்டோம்... படகும் சேதமாகிட்டு... அப்படியே மயங்கியும் போய்ட்டோம்... திரும்ப கண்ணு முழிச்சப்ப இங்க இருக்கோம்..." என்றான் நேமி.
"மியாமியா..? அப்படி ஒரு தேசம் இருக்கிறாதா என்ன... இதுவரை நான் கேள்வியுற்றதே இல்லையே..?" என்றாள் இளவெயினி யோசனையாய்.
"ஏன்ம்மா... நீயென்ன அமெரிக்க அதிபரா..? உனக்கு சொல்லிட்டு தான் எல்லா ஊருக்கும் பேரு வைக்கனுமா... இல்ல உனக்கு தெரியாம அமெரிக்காவுல ஒரு ஊரும் இருக்க கூடாதா..?" என்றது டேவிட்.
"நான் தாங்களிடம் மொழியாடவில்லை... நீங்கள் என்னிடம் நவிழாதிருப்பதே நலம்..." அவள் பார்வையிலேயே அனலைக் கக்க, கப்பென்று வாயை மூடிக் கொண்டான் டேவிட்.
"படகென்றால்... நீங்கள் கடலிலா பயணம் செய்தீர்கள்... ஆனால் கடலில் பயணம் செய்யதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே..."
"ஏம்மா... என்ன உன் பேரு... ஹான்... இளநீ... இன்னும் இந்த நாட்டுல எது எதுக்கெல்லாம் தடை போட்டு இருக்கீங்கனு ஒரு லிஸ்ட் குடுத்தா உனக்கு கோடி புன்னியமா போகும்..." வாயை அடக்க முடியாது டேவிட் மீண்டும் பேச, இம்முறை குறுவாளை அவன் கழுத்தில் பதித்திருந்தாள் அவள்.
"இத்தேசத்தின் இளவரசியின் பெயரை உரக்க உச்சரிக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது தான்... ஆனால் தாங்களோ கேலியே செய்கிறீர்கள்... அதற்கு தண்டனை என்ன தெரியுமா..? சிரசேதம்... ம்ம்ம்... என்ன செய்யட்டும் நான்... தண்டனையை நிறைவேற்றி விடட்டும்மா..?" அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அவள் வினவ,
"ஐய்யையோ... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... அவன் ஏதோ தெரியாம பேசிட்டான்... விட்டுடுங்க..." என்றான் நேமியோன் அவசரமாக,
"ஏன்டா வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ... பேசாம தான் இருந்து தொலையேன்..." என முதுகில் நான்கு வைத்து, சற்றே தள்ளி சாரா அவனை இழுத்து வரவும் தான் சுயநினைவே திரும்பியது அவனுக்கு. கழுத்தில் கத்தியை வைத்தப்பின் சர்வமும் ஒரு நிமிடம் அடங்கிதான் போனது அவனுக்கு.
"ஆமான்... இப்ப என்னத்துக்குடா அந்த புள்ள கத்திய வச்சு என் கழுத்துல அமுக்குது..." என்றான் இன்னும் குறையாத படபடப்புடன்.
"அது நீ அவங்க பேர சத்தமா சொன்னதும் இல்லாம கிண்டல் பண்ணிட்டீயாம்..." என்றான் நேமி நக்கலாக.
"அப்ப மெதுவா சொல்லலாமா..?" என்றான் டேவிட் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.
"அட விளங்காத பயலே... அவங்க பேர சொன்னாலே சங்கறுத்து போட்டுட்டு போய்டே இருப்பேனு சொல்லுது அந்த புள்ள... நீ தான் கொஞ்சம் வாய வச்சுட்டு சும்மா இரேன்டா... உன்ன பாத்தாலே அந்த பொண்ணு தான் கடுப்பாகுதுல... அப்படிதானே மேடம்..." என சுமன் இம்முறை வெயினியிடமே வினவ, அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.
"குறுதி பெருகிக் கொண்டே இருக்கிறது... இதற்கு விரைந்து மருந்திட வேண்டும்... அதற்கான மருந்து என்னிடமில்லை... இப்போதே இங்கிருந்து சென்றால் தான் அதிக பாதிப்பிலிருந்து தப்பலாம்..." என்றாள் அவர்களின் நால்வரின் கால்களிலும் இன்னும் நிற்காமல் வழிந்தோடும் இரத்தத்தைப் பார்த்தபடியே.
"ஆனா... இது என்ன இடம்னு நீங்க இன்னும் சொல்லலையே..." என்றது சாரா. காயம் ஏற்படுத்தியவளே அதற்கு மருந்தும் ஈடுகிறேன் என்றால், இன்னும் முழுதாக அவளை நம்ப முடியவில்லை சாராவால். அன்றி நொடிக்கு நொடி கோபத்தில் கத்தியை தூக்கியபவளின் குணத்தையும் அத்தனை எளிதில் வரையறுக்க முடியவில்லை. அப்படி இருக்க எப்படி அவளுடன் கிளம்பி செல்வதாம்.
சொல் கொண்டு விவரிக்கவில்லை என்றாலும், தயக்கமும் தடுமாறும் பார்வையுமே அவளின் நம்பிக்கை இன்மையை வெயினிக்கு உணர்த்திவிட்டது. "இது சங்கம் வளர்த்த தென் மதுரை... இதன் தற்போதைய வேந்தர் கொற்கை நெடுமாற பாண்டியர்... நான் அவரது புத்திரி இளவெயினி... எம்மை நம்பி தாங்கள் தாராளமாய் உடன் வரலாம்... தாங்கள் ஐவரும் இனி எம் விருந்தினர்... உமக்கு சிறு ஊரும் ஏற்படாது காப்பது என் கடமை..." என்றாள் அவள் பணிவாக.
"மதுரைனா அது இந்தியா தானே... ஆனா இந்தியா இன்டிபெண்ட் கன்ட்ரீ தானே... இவ என்னடானா இவங்க அப்பாதான் அதுக்கு ராஜானு சொல்லறா..." டேவிட் சந்தேகமாக சுமனை வினவ, அவனோ, "எனக்கு என்னமோ இன்னைக்கு உன் உயிர் அந்த பொண்ணு கையால தான் போக போகுதுனு தோணுது..." என்றான் எள்ளலாக.
"இன்னும் இங்கிருப்பது உசிதமல்ல... செல்லலாம் தானே..." அவள் ஐவருக்கும் பொதுவாக வினா தொடுக்க, டேவிட்டை தவிர மற்ற நால்வருமே ஒப்புதலாக தலையசைத்தனர்.
"குதிரையில போனாலும் இரண்டு பேரு தான போக முடியும்... மத்தவங்க..." சாரா சந்தேகமாக வினா எழுப்ப,
மெல்ல நகைத்தவள், தன் குதிரையின் அருகில் சென்று அதன் பிடறி முடியை நீவி விட்டபடியே அதன் காதில் ஏதோ உரைக்க, சட்டென்று தன் பலம் மொத்தத்தையும் ஒருங்கிணைத்து முன்னங்கால்களை மேலே தூக்கி கணைத்தது அது.
அதன் கணைப்பே சிங்கத்தின் கர்ஜனையை ஒத்திருக்க, அதன் உடலே நீல நிறத்தில் ஒளிரத் துவங்கியது. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அதன் இருபுறமும் இறக்கைகள் விரிய துவங்க, இங்கே நம்பவர்கள் கண்களோ ஆச்சரியத்தில் விரிய துவங்கியது.
அதே நேரம் வானில் தங்க நிறத்தில் ஒளிப் பிளம்பொன்று தோன்றி, சட்டென்று தரையிரங்க, அதேப் போன்றே மற்றொரு குதிரை சிறகுகளை விரித்துக் கொண்டு தங்க நிறத்தில் ஜொலித்தது.
"இவன் நீலன்... என்னுடைய இணைப்பிரியா தோழன்... நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் அழைத்துச் செல்லும் வல்லமை உண்டு... இவள் அவன் இணை நீலா... இப்போது நாம் செல்லலாம் தானே..." என்றாள் வெயினி.
"ஆனா... ஆனா... எப்படி இது சாத்தியம்... குதிரைகளுக்கு இறக்கை எப்படி..." வியந்து கேட்டது நேமியோன்.
"இதிலென்ன ஆச்சரியம்... பரிகள் பறக்குமென்பதை தாங்கள் அறிகிலரா... அன்றி பறக்க வேண்டுமென்றால் சிறகுகள் அவசியம் தானே..." என்றாள் வெயினி.
"என்ன பறக்குமா..?" என்றான் டேவிட் கண்களை விரித்து அந்த குதிரையை நடுங்கும் விரல்களால் தடவிப் பார்த்தபடி.
"ஆம்... நிச்சயமாக... இப்போது நீங்களும் அதைக் காணத் தானேப் போகிறீர்கள்..." என்றாள் வெயினி புன்முறுவலுடன்.
"ஆனா... இது எப்படி இத்தனை சீக்கரமா இங்க வந்தது..."
"பரிகளின் நுண் உணர் திறன் மிக அதிகம்... தன் இணையின் ஒற்றை கணைப்பொலியை எத்தனை தூரத்தில் இருந்தாலும் உணர்ந்து நொடிப் பொழுதில் அங்கே வந்துவிடும் வல்லமை கொண்டவை..." என்றாள் இன்னும் புன்னகை மாறாமல்.
"சரி செல்வோமா..." என அவள் வினவ, மற்ற ஐவரும் தலையும் தானாய் ஆடியது. வெயினி, சாரா, ஜெகன் மூவரும் நீலனில் ஏறிக் கொள்ள, நேமியோன், டேவிட், சுமன் மூவரும் நீலாவில் ஏறிக் கொண்டனர். அவர்கள் அறுவரும் ஏறிய அடுத்த நொடி, வானில் தோன்றி மறையும் வாள் நச்சத்திரம் போல நீல நிறத்திலும் தங்க நிறத்திலும் இரண்டு ஒளிக்கற்றைகள் மண்ணில் தோன்றி விண்ணில் மறைந்தது.
- காத்திருப்பு தொடரும்...