அத்தியாயம் 6:
கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டில் ஒரு பங்கிருக்குமா? இல்லை அதற்கும் குறைவா? சரியாக கணிக்க முடியவில்லை அவர்களால். கண்ணை மூடி திறக்கும் முன் மாபெரும் அரண்மணை ஒன்றின் மாடத்தில் மீது நின்றிருந்தனர் அவர்கள் அறுவரும். வெயினியுடன் அந்த பறக்கும் குதிரையில் ஏறி அமர்ந்தது மட்டுமே இப்போதும் அவர்களுக்கு நினைவிருக்கிறது. ஆனால், அது பறந்தததையோ மீண்டும் தரை இறங்கியதையோ அவர்கள் உணரவேயில்லை. அதை அவர்கள் உணர்வதற்கான நேரம் வழங்கபடவில்லை என்பதே சால பொருத்தும்.
"ம்ம்ம்... இன்னும் எத்தனை நேரம் தான் அனைவரும் இப்படியே அமர்ந்திருப்பதாய் உசிதம்... விரைந்து வாருங்கள்... விழுப்புண்ணிற்கு மருந்திட வேண்டாமா..?" என்றாள் வெயினி சற்றே உரத்த குரலில்.
அக்குரலில் தன்னிலை அடைந்தவர்களாய் அவர்கள் அவளைப் பார்க்க, அவளோ இடையில் ஒரு கரம் பதித்து இதழில் குறுநகை சுமந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன அதுக்குள்ள வந்துட்டோமா..?" என நேமி வியந்து வினவ,
"நீங்கள் புதியவர்கள் என்பதால் தான் இத்தனை நிதானமாக வந்திருக்கிறார்கள் நீலனும் நீலாவும்... இல்லையென்றால் இதற்கும் பாதி நேரத்திலுயே இங்கே அழைத்து வந்திருப்பார்கள்..." வெயினி நீலனை பிடறி முடியை நீவிவிட்டபடியே முறுவலுடன் மொழிய, அதுவும் தலையை சிலுப்பி அவள் முகத்தோடு உரசியது.
"அம்மாடியோவ்... இத விட வேகமாகவா..?" சுமன் நெஞ்சில் கை வைத்துக் கொள்ள,
"பறக்கும் பரிகளின் வேகத்தை உங்களால் கனவிலும் வரையறுக்க இயலாது... அவை நினைத்தால் பஃருளியையும் குமரியையும் கூட கணிச நேரத்தில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டவை..." என்றவளிடன் முறுவல் இப்போது புன்னகையாக விரிந்திருந்தது.
"என்னது பல்லுவலியா..." என்ற டேவிட், உண்மையிலேயே சந்தேகம் கொண்டு அவளை நோக்க, அவளோ அவனை கொன்றுவிடும் நோக்குடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.
"தங்களின் செவிகள் சற்று மந்தமோ..? என்ன உரைத்தாலும் தவறாக புரிந்துக் கொண்டு என்னுடன் வீண் மொழியாடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறீர்களே ஏன்..?" என்றவளை இடையிட்டு,
"இந்தாம்மா இளநீ... நீ சொன்னது புரியலையேனு தெரியா தனமா ஒரு கேள்வி கேட்டடது ஒரு குத்தமா..? அதுக்குனு இவ்வளவு பேசனுமுனு ஒன்னும் இல்ல... புடிக்கலனா பதில் சொல்லமாலேயே கூட இருக்கலாம்... எந்த குதிரைக்கு கபல்லுவலி வந்தா எனக்கு என்ன... தலவலிய வந்தா எனக்கு என்ன... எனக்கே கால் வலி உசுர் போகுது... பத்தாததுக்கு நீ வேற பேசி பேசியே என் உசுர மொத்தமா வாங்கிடுவ போல..." பேசிக் கொண்டே போனவனின் வார்த்தைகள் சட்டென்று நின்றுப் போயின. இல்லை இல்லை நிறுத்தி இருந்தாள் வெயினி. பின்னே கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி பிடித்திருக்கும் போது யாருக்கு தான் பேச வரும்.
"யார்..? நானா தேவையற்று வார்த்தையாடி உங்களை வதைத்துக் கொண்டிருக்கிறேன்..." என்றவள் விழிகளை விரித்து, அவனின் முகத்திற்கு நேர் நெருங்கி, உற்று நோக்கி, உக்கிரமாய் அவனை முறைத்துப் பார்க்க, அவனின் அனுமதியின்றியே விரித்திருந்த விழிகளின் வழியே கொஞ்சமாய் இடறி விழுந்தது அவனின் இதயம்.
மொழிகளற்று அவன் அவளையை ஆழ்ந்து நோக்குவதைக் கண்டவள் என்ன நினைத்தாளோ, சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
"இதோ பாருங்கள்... இதுவே உங்களுக்கு நான் உறுதியுடன் இறுதியாய் மொழிவது... தங்கள் குறுபுத்தியில் அதை நன்கு புகுத்திக் கொண்டீர்களானால், உங்கள் உடலுக்கும் உயிருக்கும் நலம்... அன்றி என் பெயர் இளநீ அல்ல... வெயினி... இளவெயினி... இத்தேசத்தின் இளவரசி... என் பெயரை தாங்கள் பரிகாசம் செய்வதை எம் நேசத்தில் வேறு எவரேனும் கேட்டிருந்தால் இந்நேரம் உங்கள் சிரம் மண்ணில் புரண்டிருக்கும்... பின்பு நான் உங்களை வார்த்தையாடி வதைக்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும்... என்ன புரிந்ததா..?" என்றவளின் குரலில் முன்பிருந்த வன்மை கொஞ்சம் குறைந்திருந்தது என்னவோ உண்மை.
"ஏன்... புரியலைனா தனியா எதுவும் கோச்சிங் கிளாஸ் எடுப்பீங்களா... இளநீ..." இறுதியாய் வேண்டுமென்றே அவளின் பெயரை இழுத்து அழுத்தி உச்சரித்தவனின் கழுத்தில் கைப் போட்டு இறுக்கி பிடித்து வாயை அழுந்த மூடி தலையிலேயே இரண்டு கொட்டு வைத்தான் சுமன்.
"அட எடுபட்ட பாவி பயலே... இது வாயா இல்ல காவாயாடா... நீ சாகறதும் இல்லாம எங்க உயிருக்கும் உலை வச்சுடுவ போல... கொஞ்ச நேரம் பேசமா தான் இருந்து தொலையேன்.. நீ பேசற பேச்சுக்கு அந்த புள்ள பாட்டுக்கு ஐஞ்சு பேர் தலையையும் ஒரே சீவா இளநீ சீவற மாதிரி சீவிட்டு போய் கிட்டே இருக்க போவுது..." என சுமன் டேவிட்டின் காதில் வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருக்க, வெயினி அவர்கள் இருவரைருயும் ஒருசேர முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுமன் மட்டும் கடை வாய் பல் தெரியும் அளவிற்கு அசட்டு தனமாய் சிரித்து வைக்க, டேவிட்டே இன்னும் ஊடுறுவி அவளை ஆழமாய் பார்த்துக் கொண்டிருக்க,
"வலி அதிகமாகிட்டே இருக்கு... நிக்க முடியல... மருந்துப் போடலாமே... ப்ளீஸ்..." என கடைசியில் சாரா தான் வெயினியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டி இருந்தது.
"நானும் அதைத் தான் இத்தனை நேரமாய் தாங்கள் நண்பருக்கு விளக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்... ஆனால் அவர் தான் அதை விடுத்து வீணே இங்கே நின்று என்னுடன் விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்..." ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அவளின் பார்வை அவனை குற்றம சாற்றும் விதமாக அவன் மீது பட்டு மீண்டது.
அதற்குள் அவர்கள் அறுவரின் கவனத்தையும் ஒருங்கே சிதைக்கும் வண்ணம் மெல்லிசையாய் எழுந்து வன்மையாய் அவர்களின் செவியை நிறைத்தது நூபுர (சலங்கை) நாதம் ஒன்று.
"அப்பப்பா... அடேயேப்பா... ஒரு வழியாக இன்று நீ சீக்கிரமே வந்து விட்டாய் போல... இனி நீயாயிற்று... உன் அன்பு தந்தையாயிற்று... இனிமேல் எப்போது நீ எங்கு செல்வதாய் இருந்தாலும் உன் அன்பு தந்தையிடமே சொல்லிவிட்டு செல்லம்மா... இனிமேல் அவருக்கு பதில் சொல்லி என்னால் ஆகாது... அப்பப்பா... அடேயப்பா... 'எங்கே என் மகள்..? எங்கே என் மகள்..?' என்ற ஓரே கேள்வியை ஓயாது கேட்டு வண்டாய் தான் என்னை குடைகிறார் போ... அப்பப்பா..! அடேயேப்பா..! மூத்த மகள் ஒருத்தி தங்க சிலைப் போல், மரகத பேழைப் போல், மாணிக்க ரதம் போல் கண்ணெதிரே நிற்பதுக்கூட தெரியவில்லை... அப்படி என்னதான் இளைய மகள் மீது மட்டும் தீராத பேரன்போ... நானும் சலிக்காமல், 'உறங்குகிறாள், உண்கிறாள்... நீராடுகிறாள்...' என சொல்லி சொல்லி அலுத்து சலித்து களைத்து தான் போய் விட்டேனடி... இனி உன் பொருட்டு ஒரு நொடி கூட நான் அவரை சாமளிக்க மாட்டேன்... ஆமான் இப்பொழுதே சொல்லிவிட்டேன்... உங்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மத்தளம் போல் இடிபட நான் ஆளில்லை... அப்பப்பா... அடேயப்பா... ஆனாலும் சரியான கள்ளி தானடி நீ.. உன்னில் மூத்தவள், இத்தனை புலம்புகிறேனே என்று கொஞ்சமேனும் என்னில் இரக்கம் கொண்டு வாயை திறக்கிறாயா பார்... அதுசரி என்ன இன்று இத்தனை விரைவாய் வந்துவிட்டாய்..? சென்ற இடத்தில் யாராவது உன்னை அடையாளம் கண்டுக் கொண்டார்களா..? அப்படி எதுவும் இல்லை தானே..? அடியே... என்னவென்று சொல்லி தான் தொலையேன்டி... நீ மௌனம் சாதிக்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் தான் மாறி மாறி மத்தளம் வாசிக்கிறது... ஏன் அமைதியாய் இருக்கிறாய்... யாராவது உன்னை அடையாளம் கண்டுக் கொண்டார்களா..? அப்படி மட்டும் என்றால், அதை நம் தந்தையிடமும் சொல்லி விட்டால், அவ்வளவு தான்... என் தோலை உரித்து மத்தளம் கட்டி விடுவார் தந்தை... அடியே இவளே...! இது யாரடி இவர்கள் புதிதாய் இருக்கிறார்கள்... இங்கெதற்கு அழைத்து வந்திருக்கிறாய்... பார்த்தால் நம் தேசத்தவர்கள் போல் தெரியவில்லையே... அதுவும் நேரே அந்தபுர மாடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்... ஐய்யோ..! யாரும் அறியாமலா அழைத்து வந்திருக்கிறாய்... இது மட்டும் நம் தந்தைக்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா..? ஆமான் இவர்கள் ஆடை ஏன் இத்தனை விசித்திரமாய் இருக்கிறது..? இப்படி ஒரு ஆடையை இதுவரை நான் நாவலன் தீவு எங்கிலும் கண்டதில்லையே..? ஆனாலும் நன்றாக தான் இருக்கிறது... ஆமான் இதென்ன இவர்களின் கால்களிலிருந்து குறுதி பெருக்கெடுக்கிறது... நீதான் காயப்படுத்தினாயா..? கேட்கிறேன் அல்லவா..? ஏதாவது ஒன்றிற்காவது பதில் சொல்லடி..." அவள் வெயினியின் தோளில் தொங்கியபடியே மூச்சு விடவும் மறந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க, அவளின் அந்த பேச்சை கேட்டு நம்வர்கள் ஐவருக்கும் மயக்கம் வராத குறைதான். அவள் வெயினியின் தமக்கை இளவேனில்.
படபடவென பொறிந்தவளை தனக்கு முன்னால் பிடித்து இழுத்து நிறுத்தினாள் வெயினி. "அப்பப்பா... அடேயேப்பா... ஒரே மூச்சில் எத்தனை கேள்விகள் கேட்பாய் நீ... பேசும் போது மட்டும் சோர்வெனும் பிணி உன்னை அண்டவே அண்டாதோ..? முதலில் எனக்கு பதிலளிக்கவும் கொஞ்சம் அவகாசம் தந்தால் தானே நான் உனக்கு விளக்க... இதையெல்லாம் விடு... முதலில் நம் தந்தை எங்கிருக்கிறார்..? அதை சொல்..." என்றாள் வெயினி.
"அவர் எல்லை பாதுகாப்பை கண்காணிக்க சென்றிருக்கிறார்..." பதிலை வெயினிக்கு சொன்னாலும் வேனிலின் பார்வை ஐவரின் மீது தான் படிந்திருந்தது.
"மிகவும் நல்லாதாய் போயிற்று... இவர்கள் எம்மால் தான் காயப்பட்டார்கள்... அதற்கு மருந்திடவே இவர்களை இங்கை அழைத்து வந்திருக்கிறேன்... முதலில் இவர்களின் காயங்களுக்கு மருந்துட்டு விட்டு பின்பு உன் கேள்விகளுக்கு நீண்டதொரு பெரும் விளக்கம் தருகிறேன் நான்... போதுமா... இப்போது செல்லலாம் தானே..." என்றவள் அவளை தள்ளிக் கொண்டு விறுவிறுவென முன்னேற, நம்மவர்கள் ஐவரும் அவளை பின்தொடர, இளாவும் தன் கேள்விகளை தொடர்ந்தபடியே அவளை தொடர்ந்தாள்.
"அப்படியா... ஏன் இவர்களை காயப்படுத்தினாய்... பார்க்க அனைவரும் நல்வவர்கள் போல் அல்லவா தெரிகிறார்கள்... அன்றி அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இருப்பதை போன்றும் தெரியவில்லை... அப்படியென்றால் நிராயுதபாணிகளையா நீ தாக்கினாய்... இது எத்தனை பெரும் தவறு என்று நீ அறிவாய் தானே... ஐய்யையோ... தந்தை மட்டும் இதை அறிந்தால்...."
"உன் தோலை உறித்து மத்தளம் கட்டி விடுவார்... அதானே... தள்ளி நில்லடி முதலில்... அடிக்கடி முன்னே முன்னே வந்து முகத்தை முகத்தை காட்டிக் கொண்டு..."
அவளை விலக்கிக் கொண்டு முன்னே சென்றவளை, இழுத்து பிடித்து நிறுத்தி, பேசத் தொடங்கி இருந்தாள் இளா. "தமக்கை என்ற மரியாதை உன்னிடம் கொஞ்சமாவது இருக்கிறதா..? உனக்கும் ஆறு நிமிடங்களுக்கு முன்னால் பிறந்தவள் நான்... அதற்காக மதிக்கவில்லை என்றாலும் நீ உரைக்கும் பொய்களுக்கெல்லாம் இட்டுகட்டி தந்தையிடமிருந்து உன்னை காப்பாற்றுகிறேனே... அதற்காகவாவது மதித்து பதிலளிக்கலாம் அல்லவா... அடியே... உன்னை தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... நீ காதில் விழாததுப் போல் முன்னேறிக் கொண்டிருந்தாள் என்ன அர்த்தம்..." அத்தனை எளிதில் அவள் வெயினியை விடுவதாய் இல்லை போலும்.
"ம்ம்ம்ம்... இவர்கள் காயங்களுக்கு மருந்திடுவது அவசியமென்று அர்த்தம்... இதோ பார் இளா! அவர்கள் ஐவரும் நம் விருந்தினர்கள்... விழுப்புண்ணாலும் பசி பிணியாலும் அவதியுறுகிறாய்கள்... முதலில் அவர்களை உபசரித்துவிட்டு பின்பு உன் விசாரணையை வைத்துக் கொள்ளலாம்... சரிதானே..!" அவளை வழியில் இருந்து விலக்கிக் கொண்டு வெயினி மீண்டும் நடக்க, மற்றவர்கள் அவளை அமைதியாய் பின் தொடர்ந்தனர்.
"எல்லாம் சரிதான்... ஆனால்..." என்ற இளா ஐவரையும் சந்தேகமாய் நோக்கிவிட்டு மீண்டும் தன் தங்கையிடம் பார்வையை பதித்தாள்.
"அடியே... இன்னொரு முறை ஆனால் என்று மட்டும் சொல்லிக் கொண்டு என் முன்னால் நின்றாயால், நீ தான் தினம் தினம் என்னை வழி அனுப்பி வைத்தாய் என்று தந்தையிடம் சொல்லிவிடுவேன் பார்த்துக் கொள்... பிறகென்ன தந்தை உன் தோலை உறித்து மத்தளம் கட்டி விடுவார்..." என்றாள் தீவிர முக பாவத்துடன்.
"எது நான் உன்னை வழி அனுப்பி வைத்தேனா..? அது எப்போது..?" விழிகள் விரித்து வினவியவளைக் கண்டு உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி,
"ம்ம்ம்... எப்போதா..? இதுவும் கேட்பாய்..? இன்னமும் கேட்பாய்..? நமக்கு ஒன்பது அகவை இருக்கும் போது அல்லி மலர் வேண்டுமென்று அழுது அழுது கரைந்தாயே... அத்தனையும் மறந்து விட்டதா உனக்கு... ஏதோ உடன் பிறந்த தமைக்கையாயிற்றே... கேவலம் அல்லி மலருக்காக அழுதழுதே இறந்துப் போனாய் என சரித்திரம் இகழ்ந்துரைக்குமே என்று உன்மீது இரக்கம் கொண்டு நான் கூட தந்தை அறியாமல் சென்று பறித்து வந்தேனே... கொஞ்சமும் நினைவில்லையா உனக்கு..."
"அப்பப்பா... அடேயேப்பா... இதென்னடி இது... பெரும் கூத்தாய் அல்லவா இருக்கிறது... அது நடந்து முழுதாய் பன்னிரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டதடி... அதற்கும் இப்பொது நீ செல்வதற்கும் என்ன சம்பந்தம்டி..." என்றாள் இளா அல்லியாய் விரிந்திருந்த தனது விழிகளை தாமரையாய் விரித்து அதில் இன்னும் கொஞ்சமும் ஆச்சரியத்தை கூட்டி.
"அப்பப்பா.... அடேயப்பா... நன்றாக கேட்டாய் போ... முதல் ஆரம்ப புள்ளி வைத்து என்னை வழியனுப்பி வைத்தவழ் நீயல்லவா... அதை தொடர் புள்ளியாக்கி நானின்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறான்... இது ஒரு குற்றமா... அடிப்படையில் இதற்கு காரணகர்த்தாவே நீ தானே... அப்படி பார்த்தால் இன்று வரை என்னை வழியனுப்பி வைப்பதும் நீதானே..." என வெயினி புருவத்தை ஏற்றி இறக்கி வேனிலைப் போலவே பாவனையாக சொல்லவும்,
"அப்பாப்பா... அடேயப்பா... இதென்ன பெரும் பித்தலாட்டமாக அல்லவா இருக்கிறது..." என நெஞ்சில் கை வைத்தபடியே பெத்தென்று அங்கிருந்த பஞ்சனையில் அமர, பேசியபடியே அவர்களின் தனி அறைக்கு வந்திருந்தனர் அனைவரும்.
மற்றவர்களை எதிரில் இருக்கும் நீள் சாய்விருக்கையில் அமரும்படி சமிக்ஞை செய்தவள், "இளா, விரைந்து சென்று வீராவிடம் இவர்கள் ஐவருக்கும் தேவையான உணவுகளை கொண்டு வரச் சொல்... அப்படியே நாமாய் அழைக்கும் வரை யாரும் இந்த அறைக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய கூடாது என்றும் வலியுறுத்தி சொல்லி வா... என்ன சொல்வது புரிகிறது தானே..." பேசியபடியே வெட்டு காயங்களை குணப்படுத்தும் மூலிகைகளை தேடிக் கொண்டிருந்தாள் வெயினி.
"புரியவில்லை என்றால் விடவா போகிறாய்... ஆனாலும் எனக்கு இந்த வீராவின் மீது கொஞ்சம் சந்தேகமாய் தான் இருக்கிறது... நம் தந்தைக்கு உன்னைப் பற்றிய தகவல்களை தருவது அவனாக தான் இருக்குமென்று நான் எண்ணுகிறேன்... நீ என்ன எண்ணுகிறாய்..?" என்றாள் யோசனையாய் வேனில்.
நிமிர்ந்தே பாராமல், பதபடுத்தபட்ட மூலிகைகளை கருங்கல் குழவியில் வைத்துக் இடித்துக் கொண்டிருந்தவள், "எனக்கென்னவோ... இந்த விடயத்தில் உன் மீதுதான் பெரும் ஐயப்பாடெழுகிறது..." என உரைத்திட,
"அப்பப்பா... அடேயப்பா... இது தான் வரம் கொடுத்தவன் சிரத்தையே சோதனைக்கு உள்ளாக்குவதா..? இதைப் போய் உன்னிடம் சொன்னேன் பார்... இனி நீ ஆயிற்று... அந்த வீராவாயிற்று... எனக்கென்ன வந்தது... இருவரும் எக்கேடோ கெட்டு ஒழிந்துப் போங்கள்..."
"நாங்கள் இருவரும் ஒழிந்துப் போவது இருக்கட்டும்... இப்போது முதலில் நீ இங்கிருந்து புறப்படம்மா..." என்றவள் உண்மைக்குமே அவளை அனுப்பி வைப்பதற்குள் ஒரு வழியாகிதான் போனாள்.
வெயினி மூலிகைகளை பிழிந்து நால்வருக்கும் மருந்திட்டு, தூய வெள்ளை துணிக் கொண்டு கட்டிட்டு முடித்த போது வீராவும் இளாவும் உணவுப் பதார்த்தங்களோடு வந்து விட்டிருந்தனர். அந்த வீரா எனப்பட்டவனின் உடலை தழுவி இருந்த கவசமும் வலிமையும் இடையில் தரித்திரிந்த நீண்ட வாளின் தங்க பிடியுமே சொல்லியது அவன் ஒரு முக்கிய பணியில் இருப்பவனென்று.
தன் கைகளில் இருந்த பதார்த்தங்கள் அத்தனையும் கீழே வைத்தவள், கைகளை உதறிக் கொண்டே, "அப்பப்பா... அடேயேப்பா... நீ செய்வது உனக்கே நன்றாய் இருக்கிறதா வீரா... உன் தோழி உனக்கு வேலை ஏவினால், அதை நீ தான் செய்ய வேண்டுமே தவிர, இப்படி என் தோள்களில் தூக்கி சுமத்த கூடாது..." என்றாள் வீராவை முறைத்துக் கொண்டே.
"இல்லை வெயினி... யாரும் அனுமதியின்றி உள்ளே நுழைய வேண்டாமென உத்தரவிட்டாயாமே... அதனால் தான் பணிப்பெண்களை தவிர்த்து நாம் இருவருமே எடுத்து செல்லமாம் என்றேன்... அதுவும் அறை வாயிலில் இருந்து தான்... அதற்கே வருங்கால மகாராணியாருக்கு கைகள் நோகிறது என்கிறார்.. ம்ம்ம்... இவரெங்கே வாள் சுமந்து போர் புரிந்து தேசம் காக்க போக்கிறாரோ..? நினைக்கையில் உள்ளுக்குள் பெரும் ஐயமெழுகிறது எனக்கு..." இளாவின் குற்றச்சாட்டுக்கு வெயினியிடம் நீண்டதொரு விளக்க உரை வாசித்துக் கொண்டிருந்தான் வீரா.
"கத்திக் கொண்டு தான் தேசம் காக்க வேண்டும் என்றில்லை... புத்திக் கொண்டும் காக்கலாம்... இதை உன் நண்பனுக்கு புரியும்படி விளக்கி சொல்லிவிடு வெயினி..."
"காக்கலாம் தான்... ஆனால் அந்த புத்தி தான் நம் வருங்கால மகாராணியாருக்கு இருப்பதுப் போல் எனக்கு தெரியவில்லை வெயினி..."
"அப்பப்பா... அடேயேப்பா...இவர் புத்தியில் உயர்ந்த பெரும் சீமான் தான்... நான் தான் புத்திக் கெட்டுப் போய் ஆடையை கிழித்துக் கொண்டு விதியில் திரிகிறேன் பாருங்கள்... இத்தோடு உன் நண்பரின் கேலியை நிறுத்திக் கொள்ள சொல் வெயினி... இல்லையென்றால்..."
"இல்லை என்றால்... என்ன செய்வார்களாம் வெயினி..? உண்மை உரைத்தால் கேலி செய்வது போலிருக்கிறதா இந்நாட்டின் வருங்கால மகாராணியாருக்கு..? நல்ல கதைதான்..."
"இருவரும் கொஞ்சம் அமைதியாய் இருக்கிறீர்களா... எப்பொழும் இதே வேலைதானா உங்கள் இருவருக்கும்... புதிதாய் ஐவர் இங்கிருப்பது கூட உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போலும்... அதெப்படி தெரியும்? உங்களுக்கு தான் சண்டை என்று வந்துவிட்டால், தந்தை இருந்தால் கூட கண்ணுக்கு தெரியாதே..!" சற்றே அதட்டல் தோனியில் வெயினி குரல் உயர்த்தவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி அமைதியாகி விட்டனர் அவர்கள்.
ஐவருக்கும் தானே உணவுகளை பரிமாறியவள்,
"என்ன ஐவரும் இங்கு வந்ததிலிருந்து இத்தனை அமைதியாய் இருக்கிறீர்கள்... இதைக் காண்கைளில் எனக்கு பெரும் ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது..." வினா அனைவருக்கும் பொதுவானது தான் என்றாலும் அவளின் பார்வை என்னவோ கேலியாய் ஒரே ஒருவரை தான் துளைத்துக் கொண்டிருந்தது. அது டேவிட் தானென்று விளக்கி கூறவும் அவசியமில்லை.
"அப்படி குறிப்பிட்டு கூறும் அளவிற்கு காரணம் எதுவுமில்லை இளவரசி..." என்றான் நேமி.
"ஆம்... இளவரசி... நீங்க உங்களுக்குள்ள பேசிட்டு இருந்ததால எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்கல இளவரசி..." வேண்டுமென்றே இளவரசியை அவன் அழுத்தி அழுத்தி சொல்ல, புன்முறுவலுடன் கண்டுக் கொண்டிருந்தவள் மறுத்து எதுவும் சொல்லவில்லை.
"ம்ம்ம்... தாங்கள் எங்கிருந்து வருவதாக சொன்னீர்கள்..."
"மியாமி... இளவரசி..." என்றது சாரா.
"அத்தேசம் எங்கிருக்கிறது..."
"அமெக்க கடற்கரை ஓரத்தில் இருக்கிறது இளவரசி..."
"என்ன கடற்கரை ஓரங்களில் தேசமிருக்கிறதா..." வியந்து கேட்டது இளா.
அவள் கண்களில் மின்னிய அளவுக்கதிகமான ஆச்சரியத்தில் ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அது ஆச்சரியம் வீராவின் கண்களிலும் தென்பட, வெயினியின் முகம் மட்டும் யோசனையில் மூழ்கி இருந்தது.
"அத்தேசம் மட்டும் தான் அங்கிருக்கிறதா..."
"இல்லையே இன்னும் நிறைய நாடுகள் இருக்கு... ஏன் கேக்கறீங்க..."
"நீங்கள் படகில் வந்ததாக தானே கூறினீர்கள்... அப்படியென்றால் அந்த தேசங்கள் எல்லாம் கடல் மட்டத்திற்கும் மேல் இருக்கிறது..." என வெயினி வினவ, இதென்ன கேள்வி என்றபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் ஆம் என்னும் விதமாய் ஒன்றாய் தலையை ஆட்டி வைத்தார்கள்.
"பார்த்தாயா வீரா... எத்தனை முறை நான் உங்களிடம் சொல்லி இருப்பேன்... கடலுக்கு மேலும் நிலப்பரப்பும் தேசங்களும் இருக்க கூடுமென்று... ஒருவராவது என்னை நம்பினீர்களா..? இப்போது பார் அத்தேசத்திலிருந்து ஐவரை அழைத்து வந்துவிட்டேன்..." என்ற வெயினியின் குரலில் இப்போது துள்ளலென்றால், மற்ற இருவரும் இவர்களை விநோதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எனக்கு என்னவோ இவர்கள் ஐவரும் சித்தம் கலங்கியவர்கள் போல் தெரிகிறது... இவர்கள் உரைப்பதில் உண்மை இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை..." யோசனையாய் வீரா சொல்ல,
"உனக்கு தான் சித்தம் கலங்கிவிட்டது... நிச்சயம் இவர்கள் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தேசத்தில் இருந்து தான் வந்திருக்கிறார்கள்... ஆனால் ஒன்று மட்டும் தான் என்னால் விளக்கிக் கொள்ள முடியவில்லை... இந்த இரண்டு தேசங்களுக்கும் மாறி மாறி பயணம் செய்யக்கூடிய மார்க்கம் எதுவென்று தான் எனக்கு விளங்கவில்லை..." என்றாள் வெயினி.
"நீங்க என்ன சொல்லறீங்கனு எங்களுக்கு தான் புரியல... கடலுக்கு மேல தான எல்லா நாடும் இருக்கும்... இதில அதிசயம் என்ன... என்னமோ கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிச்ச மாதிரி குதிக்கறீங்க..."
"அதுதான் இல்லை... இம்மாபெரும் நாவலன் தீவு எங்கிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்..."
"எங்க இருக்கு..." ஐவரும் ஒன்றாய் கண்களில் தோன்றிவிட்ட ஐத்துடனே வினவ,
"கடலுக்கு அடியில்... நாவலன் தீவை தவிர இந்த பரந்த உலகெங்கிலும் மனிதர்களே இல்லை என்று எண்ணி இருந்தோம்... ஏன் அந்த பூமித்தாய் முழுவதும் கடலால் தான் சூழ்ந்திருக்கிறது என்றிருந்தோம்... நிலபரப்பரப்பு என்பதே மொத்தமாய் அழிந்து கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாய் எண்ணியிருந்தோம்... ஆனால் அப்படி இல்லை... கடலுக்கு மேலும் தேசங்கள் இருக்கிறது... அங்கேயே மனிதர்கள் வாழ்கிறார்கள்..." என அவள் சொல்ல சொல்ல, "என்ன இப்ப நாம கடலுக்குள்ள இருக்கோமா..?" என நால்வர் மட்டுமே அதிர்ந்து வினவும் ஒலிக் கேட்டது. ஏனெனில் அவள் ஆரம்பத்த உடனேயே அதிர்ச்சி தாளாது மயக்கத்திற்கு சென்றிருந்தான் டேவிட்.
- காத்திருப்பு தொடரும்...