Meerajo
Member
- Messages
- 33
- Reaction score
- 6
- Points
- 8
RD-22- சிவதாசன் எனும் நான்!...- அத்தியாயம்-25
வீரபாண்டியன் தென்காஞ்சி தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.
புலவர் ஒருவர் வீரபாண்டியனின் ஆட்சி சிறப்பைக் கேள்விப்பட்டு, வீரபாண்டியனின் புகழ்பாடி, பரிசில்கள் பெறலாம் என்று எண்ணி, தென்காஞ்சி தேசத்திற்குச் சென்றார்.
அங்கே, பார்ப்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் கம்பீரமாக நின்றிருந்தது வீரபாண்டியனின் அரண்மனை.
அரண்மனையின் முன் மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
'அரண்மனையில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது! மக்கள் கூட்டமாக நிறைந்திருக்கிறார்கள். நல்லது! இந்தச் சந்தர்ப்பத்தில் வீரபாண்டியரைப் புகழ்ந்து பாடினால், பரிசில் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.' என்று நினைத்தபடியே அங்கு நின்றிருந்த மக்களில் ஒரு குழுவினர் அருகில் சென்று,
“இன்று என்ன விசேஷம்?" என்று கேட்டார்.
"பார்ப்பதற்குப் புலவர்போல் தெரிகிறீர்கள். தாங்கள் இந்தத் தேசத்திற்குப் புதியவரோ?" என்று ஒருவர் கேட்க,
"ஆமாம்!" என்றார் புலவர்.
"இன்று ஆலோசனைக் கூட்டம் கூடும் தினம்! அதனால் தான் மக்கள் இங்குக் குழுமி இருக்கின்றனர்" என்றார் ஒருவர்.
"ஆலோசனைக் கூட்டம் எதற்கு? உங்கள் தேசத்தில் ஏதேனும் விழா எடுக்கப் போகிறீர்களா?" என்ற புலவர் கேட்க,
"இல்லையில்லை!... தென்காஞ்சியை, திருவளர் வீரபாண்டியர் கைப்பற்றிய பிறகு, அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அறிஞர்கள், மக்களின் எண்ணங்களைத் தெரிந்து அதற்கேற்ப நாட்டை ஆள்கிறார்…"
"அருமையான யோசனையாக இருக்கிறதே!" என்ற புலவர் பாராட்ட,
"இது என்ன பெரிய விஷயம் எங்கள் தேசத்தில் நாணயங்களை மக்கள் புழக்கத்தில் வெளியிட்டு விட்டார் தெரியுமா?"
"அப்படியா?" என்று புலவர் ஆச்சரியப்பட,
"தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை மக்களாகிய நாங்கள், அரசர் வீரபாண்டியன் முன் எடுத்து வைத்தோம். இதையே மூத்த அமைச்சர்களும் அரசர் வீரபாண்டியனிடம் கூறினார்.
"ஒரு சாராருக்கு, தங்களிடம் உள்ள பொருளைக் கொடுத்தாலும், அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் கிடைப்பதே இல்லை என்று மக்கள் வருந்துகின்றனர்." என்றார் மூத்த அமைச்சர்களில் ஒருவர்.
"ஏன்" என்று அரசர் கேட்டதற்கு,
"அரிசி வைத்திருப்பவருக்குப் பழங்கள் தேவைப்படுகிறது என்றால், பழங்கள் வைத்து இருப்பவருக்கு அரிசி தேவைப்பட்டால் மட்டுமே, அரிசி வைத்திருப்பவர்களுக்குப் பழங்களும், பழங்கள் வைத்திருப்பவருக்கு அரிசியும் கிடைக்கிறது. அதனால் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டால், எல்லாத்தரப்பு மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பயன்பெற முடியும்" என்று மூத்த அமைச்சர் வழியுறுத்தினார் அதன்பயனாக, எங்கள் அரசர் நாணயங்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்…"
"அருமை! அருமை!" என்று புலவர் புகழ,
முக்கியமான விஷயத்தை விட்டு விட்டோமே? தென்காஞ்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீர் வளம் குன்றும். அதனால், மக்கள் வாழ்வாதாரத்திற்காக மற்றத் தேசங்களுக்குச் சென்றனர். அதை ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள்மூலம் அறிந்து, பாசனத்திற்குத் தேவையான நீரைப் பலவகைகளில் சேமித்து, வளம் குன்றாமல் காக்கிறார் எங்கள் மன்னர்."
"இதெல்லாம் சரி! எங்களைப் போன்ற புலவரை உங்கள் மன்னவர் ஆதரிக்கிறாரா?" என்று புலவர் கேட்டார்.
"நிச்சயமாக! காஞ்சி தேச மக்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கப் புதுப்புது கல்விக்கூடங்கள் கட்டி பலதேசங்களில் இருந்தும் ஆச்சாரியார்களை வரவழைத்திருக்கிறார். கல்வி மீது இவ்வளவு ஆர்வம் காட்டுபவர், புலவரை ஆதரிக்காதவரா?"
"மக்களையும், புலவர்களையும் தினமும் நேரில் சந்தித்து, தங்கள் குறைகளைக் கூறுவதற்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்." என்று ஒருவர் மாற்றி ஒருவர் வீரபாண்டிய மன்னனைப் பற்றிப் புகழ்ந்து பேச,
"மக்களின் தேவையை ஆற்றுவதே, ஓர் அரசனின் முதல் கடமை! அதைச் செயலில் காட்டியுள்ள உங்கள் மன்னராம் வீரபாண்டியரைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் படைக்க ஆவலாக இருக்கிறேன்!" என்று சிறந்த மன்னனைக் காண வந்த சந்தோஷத்துடன், வீரபாண்டியனைக் காண காத்திருந்தார்.
சில திங்களுக்குப் பிறகு,
பாண்டிய பேரர்சர் குலசேகரப் பாண்டியரிடமிருந்து, அமாவாசைக்கு அடுத்த நன்நாளில் நடைபெரும் அரசவையில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஓலை வந்தது.
அரசவைக்கு, தான் வரும் விசயத்தை ஓர் ஓலையில் எழுதி, தூதுவனிடம் வீரபாண்டியன் கொடுத்தனுப்பினான்.
ஒலை கொண்டு வந்த தூதுவனிடம், “வீரபண்டியனின் ஆட்சி எவ்விதம் உள்ளது?” என்று குலசேகரப் பாண்டியர் கேட்க,
“தெய்வத்தாய், காஞ்சி மக்களுக்காக அர்ப்பணித்த, கருணை மனம் கொண்ட எங்கள் மன்னவராம், திருமகள்வளர் வீரபாண்டியரின் நல்லாட்சியில் மக்களும், காஞ்சி தேசமும் வளம் பெற்று விளங்குகிறது… வீரபாண்டியர் ஆளும் தென்காஞ்சி தேசத்தில் நீதி வழுவா நெறிமுறையும், நிலக்குலத்தகை முறையும் கடைபிடிக்கப்படுகிறது. பல கலைகள் வளர்ப்பதிலும் சிறந்து விளங்குகிறது…
மிகக்குறுகிய காலத்திலேயே காஞ்சி தேச மக்களின் மனதில் அழியாப் புகழைப் பெற்றுவிட்டார்…" என்று தூதுவன் சொல்லிக்கொண்டே போக, பெருமித்தால் நெஞ்சம் நிறைந்த குலசேகரப் பாண்டியர்,
“என் மனம் மகிழும்படி இனிய மொழி கூறினாய்...” என்று கூறி தூதுவனுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மதுரை பாண்டியர் அரண்மனையில் அரசவை கூடியது. பாண்டி சிம்மாசனத்தில்
குலசெகரப் பாண்டியரின் அருகில் பட்டத்தரசி வீற்றிருக்க, அடுத்து இருந்த ஆசனத்தில் இளவரசர் சுந்தரன் அமர்ந்திருந்தான்.
ஒருபுறம், பாண்டிய தேசத்தின் சிற்றசர்கள் அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவனாய் வீரபாண்டியன் அமர்ந்திருந்தான்.
மறுபுறம் அமைச்சர்களும், புலவர்களும் அமர்ந்திருந்தனர்.
அடுத்து, மக்கள் பிரதிநிதிகள், ஒற்றர்கள் அமர்ந்திருந்தனர்.
குலசேகரப்பாண்டியரின் தலைமை அமைச்சர் எழுந்து, "பாண்டியதேசத்தின் நலனை முன்னிட்டு, வீராதிவீரர், ஈழம்வரை சென்று மீன்கொடி பறக்கவிட்ட தென்னகத்தின் பேரரசர் குசேகரப் பாண்டியருக்குப் பின், இப்பெருமை வாய்ந்த பாண்டியப் பேரரசைச் சிறப்பாக ஆட்சிபுரிய, தலைசிறந்த அரசரைத் தேர்ந்தெடுக்க விளைகிறார் நம் அரசர்." என்று கூறியதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
இப்பெரும் பணியில், பாண்டிய அரசைக் கட்டியாளும் அரசர்களும், அறிஞர்களும், பெரியோர்களும் தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறிவிட்டு, அரசவைக்கு வருகை புரிந்தோரை வரவேற்கும் விதமாக அவை முழுவதையும் பார்வையால் அளந்துவிட்டு அமர்ந்தார்.
அடுத்துப் பெருங்கிள்ளிப்பாண்டியர் எழுந்து அனைவரையும் வணங்கிவிட்டு, அடுத்த அரசராகப் போகிறவர்களை அவையிலிருக்கும் தாங்களும் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நமது பேரரசரின் விருப்பம்…" என்றதும்,
"தேர்வு செய்வதற்கு என்ன இருக்கிறது? பட்டத்தரசியின் ஒரே புதல்வர் இளவரசர் சுந்தரர்தானே?" என்று ஒரு சிலர் கேட்டார்கள்.
இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் விவாதம் செய்ததால், சபையில் சின்னச் சளசளப்பு உண்டானது.
பெருங்கிள்ளிப் பாண்டியரை அமரச் சொல்லிவிட்டு, பேரரசர் குலசேகரப் பாண்டியர் சபைக்கு வணக்கம் தெரிவித்தார்.
"எனக்கு அடுத்த வாரிசு என்று பார்த்தால் பட்டத்தரசியின் மகன் இளவரசர் சுந்தரனே, ஆனால் என்னுடைய விருப்பம் என்னவென்றால், எனக்குப் பின் இந்தப் பாண்டிய தேசத்தை ஆள, என்னைப் போல் ஒரு வீரன் வர வேண்டும். உங்களைப் போல் தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும். வரப்போகும் அரசன் தன்னலத்தை விட மக்களின் நலத்தையேப் பெரிதாகக் கருத வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல அரசனை, என் மனம் கண்டுகொண்டது. அரசு ஏற்று நடத்தும் திறன் படைத்தவனை அரசனாக்கப் போகிறோமா? அல்லது எனக்கும் பட்டத்தரசிக்கும் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமா? என்பதை அறிய, உங்கள் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பதற்காகவே தங்களை எல்லாம் அழைத்து இருக்கிறேன்." என்றதும்,
சட்டென்று தனது ஆசனத்திலிருந்து எழப்போன சுந்தரனை பட்டத்தரசியார் கண்களாளேயே அடக்கி, அமரவைத்தார்.
சபையில் இருந்த அனைவருக்குமே, பேரரசர் குலசேகரபாண்டியன். சுந்தரனை அடுத்த அரசராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அப்படி என்றால் அவர் தேர்ந்தெடுத்தது யாரை? என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் வர, மீண்டும் சபையில் சலசலப்பு உண்டானது.
பேரரசர் குலசேகரப் பாண்டியன் தலைமை அமைச்சரைப் பார்க்க, தலைமை அமைச்சர் அரசரின் அனுமதி பெற்று, எழுந்து நின்று, இரு கரங்களையும் உயர்த்திச் சபையை அமைதி காக்குமாறு கூறிவிட்டு,
"முதலில் அவரவர் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். இதை ஆரம்பித்து வைப்பதற்குப் பேரரசர் குலசேகரப் பாண்டியரின் புதல்வரான தென் காஞ்சி சிற்றரசர் திருவளர் வீரபாண்டியன் அவர்களைக் கருத்துக்கள் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவருக்கான ஆசனத்தில் அமர்ந்தார்.
வீரபாண்டியன் எழுந்து, அரியணையில் வீற்றிருக்கும் குலசேகரபாண்டியன், பட்டத்தரசியாரையும் வணங்கி, பெருங்கிள்ளிப்பாண்டியர் மற்றும் அமைச்சரையும் வணங்கிவிட்டுச் சபையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் கூறி பேச ஆரம்பித்தான்.
"தமையனார் இருக்க, இன்னொருவரை தேர்வு செய்வது, என் மனதுக்கு ஒவப்பானதாக இல்லை. எனவே இளவரசர் சுந்தரரே அடுத்த அரசராக வெண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன்." என்று கூறிவிட்டு தனது தந்தையையும், சபையிரையும் மீண்டும் வணங்கி விட்டு அமர்ந்தான்.
பெருங்கிள்ளி பாண்டியர் சுந்தரனை, 'பார்த்தாயா மாறனை? நீ அரசாள வேண்டும் என்கிறான்!' என்பதுபோல் பார்க்க,
'அவன் என்ன சொல்வது? நான் அரசாள வேண்டும் என்று." என்பதுபோல் இளக்காரமாக ஒரு சிரிப்புச் சிரித்தான் சுந்தரன்.
கவலை தோய்ந்த முகத்துடன் பெருங்கிள்ளிப்பாண்டியர் சபையினரை கவனிக்க ஆரம்பித்தார்.
இந்த நாடகங்களைப் பேரரசர் குலசேகரபாண்டியனும், குலசேகரபாண்டியன் கவனிப்பதை, பட்டத்தரசியாரும் கவனித்தனர்.
"சபையின் முன் அமர்ந்து இருக்கிறோம் என்பதை மறந்து சுந்தரனின் செயல்கள், அவனுக்கு இருக்கும் குறைந்த அளவு வாய்ப்பையும் தவற விட்டுவிடும் போலிருக்கிறது!" என்று மிகவும் வருத்தமாகத் தன் மகனை திரும்பிப் பார்த்தார்.
அதன்பிறகு ஒவ்வொருவராக எழுந்து, சுந்தரனை ஒரு சாராரும், வேறு ஓர் அரசரைத் தேர்வு செய்யுமாறு மற்றொரு சாராரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
மாற்று அரசனாகத் திருவளர் வீரபாண்டியனைத் தேர்வு செய்யலாமா?" என்று அரசர் சபையை நோக்கி வினவவும் சபை மிகவும் அமைதியாக இருந்தது.
திடுக்கிட்டு எழுந்த வீரபாண்டியனை, தலைமை அமைச்சர் அழைத்து வந்து சுந்தரன் அருகில் இருந்த ஆசனத்தில் அமர வைத்ததும்,
சுந்தரன் கொதிநிலைக்கே சென்றான்.
குலசேகரபாண்டியன் தேர்ந்தெடுத்தது வீரபாண்டியன் என்பதை அறிந்ததும், சுந்தரனுக்கு ஆதரவாகப் பேசிய ஒரு சில சிற்றரசர்களும், வீரபாண்டியன் பக்கம் சேர, சுந்தரருக்குக் குறைந்த அளவு ஆதரவும், வீரபாண்டியனுக்குப் பெருமளவு ஆதரவும் கிடைத்தது.
முடிவு தெரிந்து விட்ட நிலையில் குலசேகரபாண்டியர், முடிவை அறிவிக்குமாறு அமைச்சரைக் கூற,
அமைச்சர் எழும் முன் வீரபாண்டியன் எழுந்தான். "அமைச்சர் அவர்களும், அரசரும், பெருங்கிள்ளி பாண்டியரும், சபையினரும் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள், என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தயைகூர்ந்து இச்சிறியவனின் வார்த்தைகளுக்கும் சற்று செவிசாயுங்கள்… வருங்காலப் பாண்டிய பேரரசை இளவரசர் சுந்தரர் ஆள்வதே பல குழப்பங்களுக்கு விடையாகும். அவ்வாறு இல்லை என்றாலும், மதுரையை ஆளும் பொறுப்பைச் சுந்தரரும், மற்ற பகுதிகளை, அவரின் பிரதிநிதியாக நானுமாக ஆள்வதே சிறந்தது எனக் கருதுகிறேன்" என்று கூறிவிட்டு அமர்ந்தான்.
மாறனின் தெளிவான பேச்சும் கூர்நோக்குப் பார்வையும் அனைவரையும் கவர, `இவனே வருங்காலத்தில் பாண்டியப் பேரரசை ஏற்று நடத்தத் தகுதியானவன்` என்று முழுமனதாக வீரபாண்டியனை அனைவரும் தேர்ந்தெடுத்தனர்.
இறுதியாக, சபையில் எழுந்து நின்ற பெருங்கிள்ளிப்பாண்டியர், "தங்களின் பேராதரவோடு பாண்டிய தேசத்தின் அடுத்த அரசராகப் போகும் தகுதியைத் திருவளர் வீரபாண்டியன் பெற்றிருப்பதால், ஒரு நன்னாளில் பட்டத்துஇளவரசன் பட்டத்தை வீரபாண்டியனுக்கு அளிக்க இருக்கிறோம். அந்த இனிய செய்தியைத் தாங்கி, எல்லோருக்கும் ஓலை வரும். இதேபோல் அனைவரும் வந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
அதிகாலை சூரியனின் செங்கதிர்கள் இதமான வெப்ப மூச்சோடு எழுந்துகொண்டிருந்தான்…
அலங்கரித்த குதிரையின் மீதேறி வரும் அந்த இரு இளைஞர்களும் காண்பதற்கு, ஒரு தேசத்தின் உயரிய குலத்தவர்கள் போல் அணிமணிகள் அணிந்திருந்தனர்… பதினைந்து வயதிற்கே உரிய இளமையும், பற்பல பயிற்சிகளின் விளைவில் முறுக்கேறிய தோள்களும், மாநிறத்தில் பளபள வென்றிருந்த தோலும்… இராச கலையுடன் கூடிய வதனமும், நெருப்புப் பறந்த கண்களும், அடர்ந்த சுருள் சிகையும், குதிரையைக் கையாண்ட லாவகமும், புல்லினங்களையே கண்ணிமைக்க மறந்து ரசிக்க வைத்தன.
அவர்களோ குதிரையை வேகமாக ஓடவிடாமல் மெல்ல நடத்தி வந்தனர்…
"இவர்கள் இப்போதைக்கு இங்கிருந்து போவது போல் தெரியவில்லை… இவ்வளவு மெதுவாக நடந்து வருவதற்கு எதற்காகக் குதிரைகள்மீது வர வேண்டும்? குதிரையை விடுத்து, இவர்கள் இருவருமே நடந்து வந்து இருக்கலாமே!" என்று தங்களுக்குள் அவ்விருவரையும் கிண்டல் செய்தபடி, "சரி வாருங்கள் நாம் கிளம்புவோம்!" என்று சொல்லிப் பறவைகள் பறந்தன…
"என்ன மாறா? எதுவும் பேசாமல் வந்து கொண்டிருக்கிறாய்?" என்று இரு இளைஞர்களில் ஒருவன் கேட்டான்.
"எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை விக்ரமா!"...
முகத்தில் கதிரவனின் கதிர்கள் தாக்க இந்திரன் மேல் சாய்ந்தவாறு சாய்ந்தவாறே உறங்கி, இதுவரை நடந்தவற்றை நினைத்துப் பார்த்த (மையக்கதைக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றைக் காட்டும் பின்னிகழ்ச்சிப் பகுதி; மீள்காட்சி. அத்தியாயம் -2 ஃப்ளாஷ்பேக் ப்பா!) விக்ரமசீலன், இருவரும் தில்லியின் அருகில் இருந்த கிராமத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தான்.
இங்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நீ தில்லி நகரின் உள்ளே சென்று யாழ்நிலாவையோ, இரும்பொறையையோ, சைந்தவனையோ சந்தித்து, நான் வந்திருப்பதைக் கூறு. அடுத்து என்ன செய்யலாம்? என்பதையும் கேட்டு வா! என்று கூறி, அதையே ஓலையிலும் எழுதி இந்திரனை பகைவன் கோட்டைக்குள் அனுப்பி வைத்தான்.
இடத்திற்குத் தகுந்தவாறு, தில்லிவாழ் மக்கள் `இது யாருடைய குதிரை?` என்பதுபோல் பார்க்கும்பொழுது, இயல்பாக நடந்தும், அல்லது புற்களை உண்பது போல் நின்றும், வீரர்களைக் கண்டதும் மறைவான இடங்களில் பதுங்கியும், குதிரைப்படை கொட்டிலுக்குள் சென்றது இந்திரன்.
கொட்டிலில் நின்று கொண்டிருந்த சைந்தவன், இந்திரனைக் கண்டதும் சப்தம் வெளியே கேட்காத வண்ணம் கனைத்து, தான் இருக்கும் இடத்தை இந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.
இந்திரன் சைந்தவனின் அருகில் சென்று சைந்தவனோடு சேர்ந்து வரிசைப்படியே நின்றதும், தனது சிரத்தை குலுக்கி, தனது நெற்றியில் அணிந்திருந்த 'உத்திரியப் பிடி' யை மட்டும் அசைத்துக் காட்டியது.
இந்திரன் வந்ததுமே, சீலனுக்காகத் தூது வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட சைந்தவன், இந்திரன் உத்திரியப்பிடி யை அசைத்ததும், ஓலை உத்திரியப் பிடியில் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு, இளம்பொறையைத் தன் சங்கேத ஒலியால் அழைத்தது.
அரை நாழிகைக்குள் சைந்தவன் அருகில் வந்த இளம்பொறை, இந்திரனைக் கண்டு கொண்டான்.
"ஏதேனும் முக்கியமான விஷயமா?" என்று இளம்பிறை இந்திரனிடம் கேட்க, அது "ஆமாம்!" என்பது போல் தலையை அசைத்தது.
"இளவரசர் விக்ரமசீலன் நன்றாக இருக்கிறார்தானே? உன் கண்கள் மகிழ்ச்சியைக் காட்டுவதால் இளவரசர் நலமாக இருக்கிறார் என்பது சரிதானே?" என்று கேட்டதும்,
"சரி" என்பதைப் போல் தலையசைத்தது.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக மற்றொரு குதிரை படை வீரன் வந்தான்.
"என்ன இளம்பொறை இங்கே தனியாக நிற்கிறாய்?" என்று அவன் கேட்டான்.
"ஏதோ சப்தம் கேட்டது. அதனால்தான் வந்து பார்த்தேன். ஆனால் எதுவும் வித்தியாசமாக இல்லை." என்று பதிலளித்தவாறே இந்திரனிடமிருந்து விலகி, வந்தவனை நோக்கிச் சென்றான்.
"யாருடனோ பேசுகிறாய் என்று நினைத்தேன்." என்று அந்தப் படைவீரன் சிரிக்க,
"யாரிடம் பேசுவது? தனியாகப் புலம்பினேன்!" என்று சிரித்தபடி அந்தப் படைவீரனுடன் சென்றான்.
ஆனால் சைந்தவனின் சங்கேத ஒலியைக் கேட்டு யாழ்நிலா குதிரை கொட்டிலுக்குள் வந்தாள்.
அவளைப் பார்த்துவிட்ட குதிரை படை வீரன், "அதோ உன் தங்கை வருகிறாள் பார்! உன்னைத் தேடி தான் வருகிறாள் என்று நினைக்கிறேன். போய்ப் பேசிவிட்டு வா!! நான் அறைக்குப் போகிறேன்." என்று கூறிவிட்டு இளம்பொறையை விட்டுச் சென்றான்.
சைந்தவனைப் பார்க்க வந்தவள், இளம்பொறையுடன் மாற்றான் ஒருவன் இருக்கக் கண்டு, நேராக இளம்பொறையை நோக்கி வந்தவள், "சைந்தவன் சத்தம் கேட்டு வந்தேன்". என்று கூறினாள்.
"இந்திரன் வந்திருக்கிறான்!" என்று இளம்பொறை கூற,
இதயம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாலும், பகல் பொழுதில் வீண் அரட்டை கூடாது என்பது அரண்மனையின் விதி என்பதால்,
"சரி இரவு, பணி முடிந்து வந்து பேசுகிறேன். அல்லது நீங்கள் பேசிவிட்டு வந்து கூறுங்கள்." என்று கூறிவிட்டு மீண்டும் அரண்மனை நோக்கிச் சென்றாள்.
தன்னைக் கடந்து யாழ்நிலா செல்வதைப் பார்த்த இந்திரன், யாழுக்குப் புரியும் படி சங்கேத ஒலி எழுப்பினான். இந்திரனின் சங்கேத ஒலி கேட்டவளுக்குக் கண்களில் நீர் முட்டியது.
இந்திரனுடன் தான் கழித்த இன்ப காலங்கள் நினைவுக்கு வந்ததோடு, இந்திரனை, யாழ்நிலாவிற்கு வழங்கியது மாறன் ஆயிற்றே! மாறன் நினைவில் ஒரு நிமிடம் கண்மூடி நின்றவள், கண்களைத் திறந்து இந்திரனைப் பார்த்தாள்.
இந்திரன் தனது உத்திரியப் பிடியை அசைத்துக் காட்டியது.
'மிகவும் அவசரமான விஷயமாக இருக்குமோ? என்று நினைத்தவள், சுற்றிலும் பார்த்துவிட்டு, பாதத்தை அருகில் கிடந்த முள்ளில் வைத்துவிட்டு, முள் குத்தியதை எடுப்பதற்காக இந்திரன் அருகில் உள்ள திண்டில் அமர்ந்து, இந்திரனின் உத்திரியப்பிடியில் இருந்த ஓலையை எடுத்துத் தனது ஆடைக்குள் மறைத்துவிட்டு லேசாக மேல் தோளில் செருகியிருந்த முள்ளை எடுத்து, ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு, குளியலறை நோக்கிச் சென்றாள்.
யாழ்நிலா செல்லும்வரை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த இளம்பொறையும் தனது அறையை நோக்கி நடந்தான்.
யாழ்நிலா குளியலறைக்குள் செல்வதற்காக உள்ளே நுழையும்போதே சற்றுத் தொலைவில் ஓடி வந்துகொண்டிருந்த பணிப்பெண்,
“சமீதா! உன்னைச் சுல்தானின் பாதுகாவலர் அழைக்கிறார்! விரைந்து வா!" என்று கத்தினாள்.
ஆடையில் செருகியிருந்த ஓலையை ஒருமுறை சோதித்து விட்டு, அந்தப் பணிப் பெண்ணை நோக்கி ஓடினாள் யாழ்நிலா.
“என்ன ஆயிற்று! எதற்காக அவசரமாக அழைக்கிறார்கள்?" என்று யாழ்நிலா கேட்க,
சுல்தானுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். உன்னை அழைத்து வரச்சொன்னார்கள்" என்று கூற,
மறுக்க வழி இல்லாமல் அந்தப் பணிப்பெண்ணின் பின்னால் சென்றாள் யாழ்நிலா.
சுல்தானின் படுக்கையைச் சுற்றிலும், அவர்மீது அக்கறை கொண்டவர்கள் பதற்றமாக நின்றனர்.
யாழ்நிலா வருவதைப் பார்த்ததும், அரண்மனை வைத்தியர், "வாம்மா! சுல்தான் அவர்களின் திருமேனி முழுவதும் கொப்புளங்களாக இருக்கின்றன… என்ன காரணம் என்று அறியமுடிகிறதா பார்! நானும் எனக்குத் தெரிந்த வகையில் மருந்து கொடுத்திருக்கிறேன்." என்று கூறினார்.
சீலன் கொடுத்தனுப்பிய உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் குளிகையாலோ? இந்து ஆலயங்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிய பாவத்தினாலோ உடல் முழுவதும் "அம்மை" போட்டிருந்தது.
சுல்தானின் உடலில் இருந்த கொப்புளங்கள் 'அம்மை' என்பதைப் புரிந்து கொண்ட யாழ்நிலா, 'வைத்தியர் என்ன நினைக்கிறார்? அவர் என்ன மருந்து கொடுத்தார்?' என்பதை அறிய,
வைத்தியரை நிமிர்ந்து பார்த்து, "நீங்கள் என்ன மருந்து கொடுத்தீர்கள்?" என்று கேட்டாள்.
அவர், தான் கொடுத்த மருந்தின் பெயர் கூற,
'உடல் சூட்டை குறைக்கும் மருந்து தானே கொடுக்க வேண்டும்?' என்று நினைத்ததை மறைத்து,
"திடீரென்று எப்படி இவ்வளவு கொப்பளங்கள் வந்தது?" என்று அறியாதவள் போல் கேட்டாள்.
அனைவருமே, "தெரியவில்லை!" என்ற ஒரே பதிலைக் கூற,
"வைத்தியர் கொடுத்திருக்கும் மருந்து சரியானதுதான். இருந்தாலும் நானும் கசாயம் கலந்து வந்து கொடுக்கிறேன்." என்று கூறியபடி சமையலறையை நோக்கி ஓடினாள்.
"யாழ்நிலா ஓடியதைப் பார்த்த அந்த அறையில் இருந்தவர்கள், 'இந்தப் பெண்ணுக்குத்தான் சுல்தான்மீது எவ்வளவு விசுவாசம்? இப்படித் தலை தெறிக்க ஓடுகிறாளே!' என்று நினைத்தார்கள்.
அவர்களுக்கு என்ன தெரியும்? யாழ்நிலா ஓடியது சீலனின் ஓலையில் இருப்பதைப் படிக்கத்தான் என்று!!
சமையல் அறைக்குள் நுழைந்த யாழ்நிலாவுக்குப் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் சமையல் அறை முழுவதும் பணிப்பெண்கள் நிறைந்திருந்தனர்.
'இங்கே வைத்து எப்படிப் படிப்பது?' என்று யோசித்தவள், வேறு வழியின்றிக் கைக்கு வந்த கசாயத்தைக் கலந்து, மீண்டும் வேகமாகச் சுல்தானின் அறையை நோக்கி ஓடினாள்.
ஆனால் சுல்தானின் அறைக்குள் மாலிக்காபூர் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் யாழ்நிலாவிற்குத் தனது இளவரசி நங்கையின் இறுதி நேரம் கண்களில் நிழலாட, அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.
அவளைப் பார்த்த, அந்த அறையில் இருந்தவர்கள், "வாம்மா! இவர் படைத்தலைவர். நம் சுல்தானின் விருப்பத்திற்குரியவர். நீ பயப்படத் தேவையில்லை. வந்து உன் கசாயத்தைக் கொடு!' என்று அழைத்தனர்.
விரைந்து சென்று, வைத்தியர் கையில் கசாயத்தைக் கொடுத்துவிட்டு, மாலிக்காபூர் கண்களில் நேரடியாகப் படாதவண்ணம் சற்று மறைந்து நின்று கொண்டாள்.
வழக்கம்போல் பரிசோதனைக்காக, ஒரு பணியாளுக்கு அந்தக் கசாயத்தைக் கொடுக்க.
அதை மாலிக்காபூர் வாங்கிப் பார்த்தான். "இது என்ன புதுப் பழக்கம்?' என்று மாலிக்கபூர் கேட்டதும்,
"இந்தப் பெண் நன்றாகக் கை வைத்தியம் தெரிந்தவள். அவள் கொடுக்கும் கசாயம் சுல்தானுக்குப் பலமுறை, பல வேதனைகளைத் தீர்த்து இருக்கிறது." என்று வைத்தியரும், அமைச்சரும் ஒருங்கே கூறினர்.
உடன் நிமிர்ந்து யாழ்நிலாவைப் பார்த்தவன், "இதெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. அரச வைத்தியர் கொடுக்கும் மருந்துகளே போதும்!" என்று கூறி, கஷாயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், யாழ்நிலாவை வருத்தமுடன் பார்த்து, "சரிம்மா! நீ போ! தேவைப்பட்டால் கூப்பிட்டு அனுப்புகிறோம்." என்று கூறினர்.
'தப்பித்தோம்! பிழைத்தோம்!' என்று நினைத்து, தனது அறையை நோக்கி யாழ்நில் ஓடும்பொழுது அவள் ஆடையில் செறுகி இருந்த சீலன் அனுப்பிய ஓலை, தவறிக் கீழே விழுந்தது. அதை அறியாமல் அவள் தனது அறையை நோக்கி ஓடினாள்.
அந்த ஓலையை ஒரு கரம் எடுத்தது.
வார்த்தைகளின் எண்ணிக்கை -1981
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
வீரபாண்டியன் தென்காஞ்சி தேசத்தைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.
புலவர் ஒருவர் வீரபாண்டியனின் ஆட்சி சிறப்பைக் கேள்விப்பட்டு, வீரபாண்டியனின் புகழ்பாடி, பரிசில்கள் பெறலாம் என்று எண்ணி, தென்காஞ்சி தேசத்திற்குச் சென்றார்.
அங்கே, பார்ப்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும் பேரழகுடன் கம்பீரமாக நின்றிருந்தது வீரபாண்டியனின் அரண்மனை.
அரண்மனையின் முன் மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.
'அரண்மனையில் ஏதோ விசேஷம் போலிருக்கிறது! மக்கள் கூட்டமாக நிறைந்திருக்கிறார்கள். நல்லது! இந்தச் சந்தர்ப்பத்தில் வீரபாண்டியரைப் புகழ்ந்து பாடினால், பரிசில் அதிகம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.' என்று நினைத்தபடியே அங்கு நின்றிருந்த மக்களில் ஒரு குழுவினர் அருகில் சென்று,
“இன்று என்ன விசேஷம்?" என்று கேட்டார்.
"பார்ப்பதற்குப் புலவர்போல் தெரிகிறீர்கள். தாங்கள் இந்தத் தேசத்திற்குப் புதியவரோ?" என்று ஒருவர் கேட்க,
"ஆமாம்!" என்றார் புலவர்.
"இன்று ஆலோசனைக் கூட்டம் கூடும் தினம்! அதனால் தான் மக்கள் இங்குக் குழுமி இருக்கின்றனர்" என்றார் ஒருவர்.
"ஆலோசனைக் கூட்டம் எதற்கு? உங்கள் தேசத்தில் ஏதேனும் விழா எடுக்கப் போகிறீர்களா?" என்ற புலவர் கேட்க,
"இல்லையில்லை!... தென்காஞ்சியை, திருவளர் வீரபாண்டியர் கைப்பற்றிய பிறகு, அடிக்கடி ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அறிஞர்கள், மக்களின் எண்ணங்களைத் தெரிந்து அதற்கேற்ப நாட்டை ஆள்கிறார்…"
"அருமையான யோசனையாக இருக்கிறதே!" என்ற புலவர் பாராட்ட,
"இது என்ன பெரிய விஷயம் எங்கள் தேசத்தில் நாணயங்களை மக்கள் புழக்கத்தில் வெளியிட்டு விட்டார் தெரியுமா?"
"அப்படியா?" என்று புலவர் ஆச்சரியப்பட,
"தன்னிடம் உள்ள பொருளைக் கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல்களை மக்களாகிய நாங்கள், அரசர் வீரபாண்டியன் முன் எடுத்து வைத்தோம். இதையே மூத்த அமைச்சர்களும் அரசர் வீரபாண்டியனிடம் கூறினார்.
"ஒரு சாராருக்கு, தங்களிடம் உள்ள பொருளைக் கொடுத்தாலும், அவர்களுக்குத் தேவைப்படும் பொருள்கள் கிடைப்பதே இல்லை என்று மக்கள் வருந்துகின்றனர்." என்றார் மூத்த அமைச்சர்களில் ஒருவர்.
"ஏன்" என்று அரசர் கேட்டதற்கு,
"அரிசி வைத்திருப்பவருக்குப் பழங்கள் தேவைப்படுகிறது என்றால், பழங்கள் வைத்து இருப்பவருக்கு அரிசி தேவைப்பட்டால் மட்டுமே, அரிசி வைத்திருப்பவர்களுக்குப் பழங்களும், பழங்கள் வைத்திருப்பவருக்கு அரிசியும் கிடைக்கிறது. அதனால் நாணயங்களைப் புழக்கத்தில் விட்டால், எல்லாத்தரப்பு மக்களும் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் பயன்பெற முடியும்" என்று மூத்த அமைச்சர் வழியுறுத்தினார் அதன்பயனாக, எங்கள் அரசர் நாணயங்களைப் புழக்கத்திற்குக் கொண்டுவந்தார்…"
"அருமை! அருமை!" என்று புலவர் புகழ,
முக்கியமான விஷயத்தை விட்டு விட்டோமே? தென்காஞ்சியில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நீர் வளம் குன்றும். அதனால், மக்கள் வாழ்வாதாரத்திற்காக மற்றத் தேசங்களுக்குச் சென்றனர். அதை ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள்மூலம் அறிந்து, பாசனத்திற்குத் தேவையான நீரைப் பலவகைகளில் சேமித்து, வளம் குன்றாமல் காக்கிறார் எங்கள் மன்னர்."
"இதெல்லாம் சரி! எங்களைப் போன்ற புலவரை உங்கள் மன்னவர் ஆதரிக்கிறாரா?" என்று புலவர் கேட்டார்.
"நிச்சயமாக! காஞ்சி தேச மக்கள், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கப் புதுப்புது கல்விக்கூடங்கள் கட்டி பலதேசங்களில் இருந்தும் ஆச்சாரியார்களை வரவழைத்திருக்கிறார். கல்வி மீது இவ்வளவு ஆர்வம் காட்டுபவர், புலவரை ஆதரிக்காதவரா?"
"மக்களையும், புலவர்களையும் தினமும் நேரில் சந்தித்து, தங்கள் குறைகளைக் கூறுவதற்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கியிருக்கிறார்." என்று ஒருவர் மாற்றி ஒருவர் வீரபாண்டிய மன்னனைப் பற்றிப் புகழ்ந்து பேச,
"மக்களின் தேவையை ஆற்றுவதே, ஓர் அரசனின் முதல் கடமை! அதைச் செயலில் காட்டியுள்ள உங்கள் மன்னராம் வீரபாண்டியரைப் பற்றி அதிகமாகக் கவிதைகள் படைக்க ஆவலாக இருக்கிறேன்!" என்று சிறந்த மன்னனைக் காண வந்த சந்தோஷத்துடன், வீரபாண்டியனைக் காண காத்திருந்தார்.
சில திங்களுக்குப் பிறகு,
பாண்டிய பேரர்சர் குலசேகரப் பாண்டியரிடமிருந்து, அமாவாசைக்கு அடுத்த நன்நாளில் நடைபெரும் அரசவையில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஓலை வந்தது.
அரசவைக்கு, தான் வரும் விசயத்தை ஓர் ஓலையில் எழுதி, தூதுவனிடம் வீரபாண்டியன் கொடுத்தனுப்பினான்.
ஒலை கொண்டு வந்த தூதுவனிடம், “வீரபண்டியனின் ஆட்சி எவ்விதம் உள்ளது?” என்று குலசேகரப் பாண்டியர் கேட்க,
“தெய்வத்தாய், காஞ்சி மக்களுக்காக அர்ப்பணித்த, கருணை மனம் கொண்ட எங்கள் மன்னவராம், திருமகள்வளர் வீரபாண்டியரின் நல்லாட்சியில் மக்களும், காஞ்சி தேசமும் வளம் பெற்று விளங்குகிறது… வீரபாண்டியர் ஆளும் தென்காஞ்சி தேசத்தில் நீதி வழுவா நெறிமுறையும், நிலக்குலத்தகை முறையும் கடைபிடிக்கப்படுகிறது. பல கலைகள் வளர்ப்பதிலும் சிறந்து விளங்குகிறது…
மிகக்குறுகிய காலத்திலேயே காஞ்சி தேச மக்களின் மனதில் அழியாப் புகழைப் பெற்றுவிட்டார்…" என்று தூதுவன் சொல்லிக்கொண்டே போக, பெருமித்தால் நெஞ்சம் நிறைந்த குலசேகரப் பாண்டியர்,
“என் மனம் மகிழும்படி இனிய மொழி கூறினாய்...” என்று கூறி தூதுவனுக்குப் பரிசுகள் வழங்கினார்.
மதுரை பாண்டியர் அரண்மனையில் அரசவை கூடியது. பாண்டி சிம்மாசனத்தில்
குலசெகரப் பாண்டியரின் அருகில் பட்டத்தரசி வீற்றிருக்க, அடுத்து இருந்த ஆசனத்தில் இளவரசர் சுந்தரன் அமர்ந்திருந்தான்.
ஒருபுறம், பாண்டிய தேசத்தின் சிற்றசர்கள் அமர்ந்திருக்க, அவர்களில் ஒருவனாய் வீரபாண்டியன் அமர்ந்திருந்தான்.
மறுபுறம் அமைச்சர்களும், புலவர்களும் அமர்ந்திருந்தனர்.
அடுத்து, மக்கள் பிரதிநிதிகள், ஒற்றர்கள் அமர்ந்திருந்தனர்.
குலசேகரப்பாண்டியரின் தலைமை அமைச்சர் எழுந்து, "பாண்டியதேசத்தின் நலனை முன்னிட்டு, வீராதிவீரர், ஈழம்வரை சென்று மீன்கொடி பறக்கவிட்ட தென்னகத்தின் பேரரசர் குசேகரப் பாண்டியருக்குப் பின், இப்பெருமை வாய்ந்த பாண்டியப் பேரரசைச் சிறப்பாக ஆட்சிபுரிய, தலைசிறந்த அரசரைத் தேர்ந்தெடுக்க விளைகிறார் நம் அரசர்." என்று கூறியதும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது.
இப்பெரும் பணியில், பாண்டிய அரசைக் கட்டியாளும் அரசர்களும், அறிஞர்களும், பெரியோர்களும் தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறிவிட்டு, அரசவைக்கு வருகை புரிந்தோரை வரவேற்கும் விதமாக அவை முழுவதையும் பார்வையால் அளந்துவிட்டு அமர்ந்தார்.
அடுத்துப் பெருங்கிள்ளிப்பாண்டியர் எழுந்து அனைவரையும் வணங்கிவிட்டு, அடுத்த அரசராகப் போகிறவர்களை அவையிலிருக்கும் தாங்களும் தேர்வு செய்ய வேண்டும் என்பதே நமது பேரரசரின் விருப்பம்…" என்றதும்,
"தேர்வு செய்வதற்கு என்ன இருக்கிறது? பட்டத்தரசியின் ஒரே புதல்வர் இளவரசர் சுந்தரர்தானே?" என்று ஒரு சிலர் கேட்டார்கள்.
இதனால், ஒவ்வொருவரும் தங்களுக்குள் விவாதம் செய்ததால், சபையில் சின்னச் சளசளப்பு உண்டானது.
பெருங்கிள்ளிப் பாண்டியரை அமரச் சொல்லிவிட்டு, பேரரசர் குலசேகரப் பாண்டியர் சபைக்கு வணக்கம் தெரிவித்தார்.
"எனக்கு அடுத்த வாரிசு என்று பார்த்தால் பட்டத்தரசியின் மகன் இளவரசர் சுந்தரனே, ஆனால் என்னுடைய விருப்பம் என்னவென்றால், எனக்குப் பின் இந்தப் பாண்டிய தேசத்தை ஆள, என்னைப் போல் ஒரு வீரன் வர வேண்டும். உங்களைப் போல் தேசத்தின் மீது பற்று இருக்க வேண்டும். வரப்போகும் அரசன் தன்னலத்தை விட மக்களின் நலத்தையேப் பெரிதாகக் கருத வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நல்ல அரசனை, என் மனம் கண்டுகொண்டது. அரசு ஏற்று நடத்தும் திறன் படைத்தவனை அரசனாக்கப் போகிறோமா? அல்லது எனக்கும் பட்டத்தரசிக்கும் பிறந்தவர் என்ற ஒரு தகுதி மட்டும் போதுமா? என்பதை அறிய, உங்கள் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுப்பதற்காகவே தங்களை எல்லாம் அழைத்து இருக்கிறேன்." என்றதும்,
சட்டென்று தனது ஆசனத்திலிருந்து எழப்போன சுந்தரனை பட்டத்தரசியார் கண்களாளேயே அடக்கி, அமரவைத்தார்.
சபையில் இருந்த அனைவருக்குமே, பேரரசர் குலசேகரபாண்டியன். சுந்தரனை அடுத்த அரசராகத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. அப்படி என்றால் அவர் தேர்ந்தெடுத்தது யாரை? என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் வர, மீண்டும் சபையில் சலசலப்பு உண்டானது.
பேரரசர் குலசேகரப் பாண்டியன் தலைமை அமைச்சரைப் பார்க்க, தலைமை அமைச்சர் அரசரின் அனுமதி பெற்று, எழுந்து நின்று, இரு கரங்களையும் உயர்த்திச் சபையை அமைதி காக்குமாறு கூறிவிட்டு,
"முதலில் அவரவர் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். இதை ஆரம்பித்து வைப்பதற்குப் பேரரசர் குலசேகரப் பாண்டியரின் புதல்வரான தென் காஞ்சி சிற்றரசர் திருவளர் வீரபாண்டியன் அவர்களைக் கருத்துக்கள் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறிவிட்டு அவருக்கான ஆசனத்தில் அமர்ந்தார்.
வீரபாண்டியன் எழுந்து, அரியணையில் வீற்றிருக்கும் குலசேகரபாண்டியன், பட்டத்தரசியாரையும் வணங்கி, பெருங்கிள்ளிப்பாண்டியர் மற்றும் அமைச்சரையும் வணங்கிவிட்டுச் சபையில் உள்ள அனைவருக்கும் வணக்கம் கூறி பேச ஆரம்பித்தான்.
"தமையனார் இருக்க, இன்னொருவரை தேர்வு செய்வது, என் மனதுக்கு ஒவப்பானதாக இல்லை. எனவே இளவரசர் சுந்தரரே அடுத்த அரசராக வெண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன்." என்று கூறிவிட்டு தனது தந்தையையும், சபையிரையும் மீண்டும் வணங்கி விட்டு அமர்ந்தான்.
பெருங்கிள்ளி பாண்டியர் சுந்தரனை, 'பார்த்தாயா மாறனை? நீ அரசாள வேண்டும் என்கிறான்!' என்பதுபோல் பார்க்க,
'அவன் என்ன சொல்வது? நான் அரசாள வேண்டும் என்று." என்பதுபோல் இளக்காரமாக ஒரு சிரிப்புச் சிரித்தான் சுந்தரன்.
கவலை தோய்ந்த முகத்துடன் பெருங்கிள்ளிப்பாண்டியர் சபையினரை கவனிக்க ஆரம்பித்தார்.
இந்த நாடகங்களைப் பேரரசர் குலசேகரபாண்டியனும், குலசேகரபாண்டியன் கவனிப்பதை, பட்டத்தரசியாரும் கவனித்தனர்.
"சபையின் முன் அமர்ந்து இருக்கிறோம் என்பதை மறந்து சுந்தரனின் செயல்கள், அவனுக்கு இருக்கும் குறைந்த அளவு வாய்ப்பையும் தவற விட்டுவிடும் போலிருக்கிறது!" என்று மிகவும் வருத்தமாகத் தன் மகனை திரும்பிப் பார்த்தார்.
அதன்பிறகு ஒவ்வொருவராக எழுந்து, சுந்தரனை ஒரு சாராரும், வேறு ஓர் அரசரைத் தேர்வு செய்யுமாறு மற்றொரு சாராரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
மாற்று அரசனாகத் திருவளர் வீரபாண்டியனைத் தேர்வு செய்யலாமா?" என்று அரசர் சபையை நோக்கி வினவவும் சபை மிகவும் அமைதியாக இருந்தது.
திடுக்கிட்டு எழுந்த வீரபாண்டியனை, தலைமை அமைச்சர் அழைத்து வந்து சுந்தரன் அருகில் இருந்த ஆசனத்தில் அமர வைத்ததும்,
சுந்தரன் கொதிநிலைக்கே சென்றான்.
குலசேகரபாண்டியன் தேர்ந்தெடுத்தது வீரபாண்டியன் என்பதை அறிந்ததும், சுந்தரனுக்கு ஆதரவாகப் பேசிய ஒரு சில சிற்றரசர்களும், வீரபாண்டியன் பக்கம் சேர, சுந்தரருக்குக் குறைந்த அளவு ஆதரவும், வீரபாண்டியனுக்குப் பெருமளவு ஆதரவும் கிடைத்தது.
முடிவு தெரிந்து விட்ட நிலையில் குலசேகரபாண்டியர், முடிவை அறிவிக்குமாறு அமைச்சரைக் கூற,
அமைச்சர் எழும் முன் வீரபாண்டியன் எழுந்தான். "அமைச்சர் அவர்களும், அரசரும், பெருங்கிள்ளி பாண்டியரும், சபையினரும் என்ன முடிவு எடுத்திருக்கிறீர்கள், என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தயைகூர்ந்து இச்சிறியவனின் வார்த்தைகளுக்கும் சற்று செவிசாயுங்கள்… வருங்காலப் பாண்டிய பேரரசை இளவரசர் சுந்தரர் ஆள்வதே பல குழப்பங்களுக்கு விடையாகும். அவ்வாறு இல்லை என்றாலும், மதுரையை ஆளும் பொறுப்பைச் சுந்தரரும், மற்ற பகுதிகளை, அவரின் பிரதிநிதியாக நானுமாக ஆள்வதே சிறந்தது எனக் கருதுகிறேன்" என்று கூறிவிட்டு அமர்ந்தான்.
மாறனின் தெளிவான பேச்சும் கூர்நோக்குப் பார்வையும் அனைவரையும் கவர, `இவனே வருங்காலத்தில் பாண்டியப் பேரரசை ஏற்று நடத்தத் தகுதியானவன்` என்று முழுமனதாக வீரபாண்டியனை அனைவரும் தேர்ந்தெடுத்தனர்.
இறுதியாக, சபையில் எழுந்து நின்ற பெருங்கிள்ளிப்பாண்டியர், "தங்களின் பேராதரவோடு பாண்டிய தேசத்தின் அடுத்த அரசராகப் போகும் தகுதியைத் திருவளர் வீரபாண்டியன் பெற்றிருப்பதால், ஒரு நன்னாளில் பட்டத்துஇளவரசன் பட்டத்தை வீரபாண்டியனுக்கு அளிக்க இருக்கிறோம். அந்த இனிய செய்தியைத் தாங்கி, எல்லோருக்கும் ஓலை வரும். இதேபோல் அனைவரும் வந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம" என்று கூறிவிட்டு அமர்ந்தார்.
அதிகாலை சூரியனின் செங்கதிர்கள் இதமான வெப்ப மூச்சோடு எழுந்துகொண்டிருந்தான்…
அலங்கரித்த குதிரையின் மீதேறி வரும் அந்த இரு இளைஞர்களும் காண்பதற்கு, ஒரு தேசத்தின் உயரிய குலத்தவர்கள் போல் அணிமணிகள் அணிந்திருந்தனர்… பதினைந்து வயதிற்கே உரிய இளமையும், பற்பல பயிற்சிகளின் விளைவில் முறுக்கேறிய தோள்களும், மாநிறத்தில் பளபள வென்றிருந்த தோலும்… இராச கலையுடன் கூடிய வதனமும், நெருப்புப் பறந்த கண்களும், அடர்ந்த சுருள் சிகையும், குதிரையைக் கையாண்ட லாவகமும், புல்லினங்களையே கண்ணிமைக்க மறந்து ரசிக்க வைத்தன.
அவர்களோ குதிரையை வேகமாக ஓடவிடாமல் மெல்ல நடத்தி வந்தனர்…
"இவர்கள் இப்போதைக்கு இங்கிருந்து போவது போல் தெரியவில்லை… இவ்வளவு மெதுவாக நடந்து வருவதற்கு எதற்காகக் குதிரைகள்மீது வர வேண்டும்? குதிரையை விடுத்து, இவர்கள் இருவருமே நடந்து வந்து இருக்கலாமே!" என்று தங்களுக்குள் அவ்விருவரையும் கிண்டல் செய்தபடி, "சரி வாருங்கள் நாம் கிளம்புவோம்!" என்று சொல்லிப் பறவைகள் பறந்தன…
"என்ன மாறா? எதுவும் பேசாமல் வந்து கொண்டிருக்கிறாய்?" என்று இரு இளைஞர்களில் ஒருவன் கேட்டான்.
"எப்படி ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியவில்லை விக்ரமா!"...
முகத்தில் கதிரவனின் கதிர்கள் தாக்க இந்திரன் மேல் சாய்ந்தவாறு சாய்ந்தவாறே உறங்கி, இதுவரை நடந்தவற்றை நினைத்துப் பார்த்த (மையக்கதைக்கு முன்னர் நிகழ்ந்த ஒன்றைக் காட்டும் பின்னிகழ்ச்சிப் பகுதி; மீள்காட்சி. அத்தியாயம் -2 ஃப்ளாஷ்பேக் ப்பா!) விக்ரமசீலன், இருவரும் தில்லியின் அருகில் இருந்த கிராமத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தான்.
இங்குச் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு நீ தில்லி நகரின் உள்ளே சென்று யாழ்நிலாவையோ, இரும்பொறையையோ, சைந்தவனையோ சந்தித்து, நான் வந்திருப்பதைக் கூறு. அடுத்து என்ன செய்யலாம்? என்பதையும் கேட்டு வா! என்று கூறி, அதையே ஓலையிலும் எழுதி இந்திரனை பகைவன் கோட்டைக்குள் அனுப்பி வைத்தான்.
இடத்திற்குத் தகுந்தவாறு, தில்லிவாழ் மக்கள் `இது யாருடைய குதிரை?` என்பதுபோல் பார்க்கும்பொழுது, இயல்பாக நடந்தும், அல்லது புற்களை உண்பது போல் நின்றும், வீரர்களைக் கண்டதும் மறைவான இடங்களில் பதுங்கியும், குதிரைப்படை கொட்டிலுக்குள் சென்றது இந்திரன்.
கொட்டிலில் நின்று கொண்டிருந்த சைந்தவன், இந்திரனைக் கண்டதும் சப்தம் வெளியே கேட்காத வண்ணம் கனைத்து, தான் இருக்கும் இடத்தை இந்திரனுக்குத் தெரியப்படுத்தியது.
இந்திரன் சைந்தவனின் அருகில் சென்று சைந்தவனோடு சேர்ந்து வரிசைப்படியே நின்றதும், தனது சிரத்தை குலுக்கி, தனது நெற்றியில் அணிந்திருந்த 'உத்திரியப் பிடி' யை மட்டும் அசைத்துக் காட்டியது.
இந்திரன் வந்ததுமே, சீலனுக்காகத் தூது வந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்ட சைந்தவன், இந்திரன் உத்திரியப்பிடி யை அசைத்ததும், ஓலை உத்திரியப் பிடியில் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு, இளம்பொறையைத் தன் சங்கேத ஒலியால் அழைத்தது.
அரை நாழிகைக்குள் சைந்தவன் அருகில் வந்த இளம்பொறை, இந்திரனைக் கண்டு கொண்டான்.
"ஏதேனும் முக்கியமான விஷயமா?" என்று இளம்பிறை இந்திரனிடம் கேட்க, அது "ஆமாம்!" என்பது போல் தலையை அசைத்தது.
"இளவரசர் விக்ரமசீலன் நன்றாக இருக்கிறார்தானே? உன் கண்கள் மகிழ்ச்சியைக் காட்டுவதால் இளவரசர் நலமாக இருக்கிறார் என்பது சரிதானே?" என்று கேட்டதும்,
"சரி" என்பதைப் போல் தலையசைத்தது.
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்பொழுது அந்த வழியாக மற்றொரு குதிரை படை வீரன் வந்தான்.
"என்ன இளம்பொறை இங்கே தனியாக நிற்கிறாய்?" என்று அவன் கேட்டான்.
"ஏதோ சப்தம் கேட்டது. அதனால்தான் வந்து பார்த்தேன். ஆனால் எதுவும் வித்தியாசமாக இல்லை." என்று பதிலளித்தவாறே இந்திரனிடமிருந்து விலகி, வந்தவனை நோக்கிச் சென்றான்.
"யாருடனோ பேசுகிறாய் என்று நினைத்தேன்." என்று அந்தப் படைவீரன் சிரிக்க,
"யாரிடம் பேசுவது? தனியாகப் புலம்பினேன்!" என்று சிரித்தபடி அந்தப் படைவீரனுடன் சென்றான்.
ஆனால் சைந்தவனின் சங்கேத ஒலியைக் கேட்டு யாழ்நிலா குதிரை கொட்டிலுக்குள் வந்தாள்.
அவளைப் பார்த்துவிட்ட குதிரை படை வீரன், "அதோ உன் தங்கை வருகிறாள் பார்! உன்னைத் தேடி தான் வருகிறாள் என்று நினைக்கிறேன். போய்ப் பேசிவிட்டு வா!! நான் அறைக்குப் போகிறேன்." என்று கூறிவிட்டு இளம்பொறையை விட்டுச் சென்றான்.
சைந்தவனைப் பார்க்க வந்தவள், இளம்பொறையுடன் மாற்றான் ஒருவன் இருக்கக் கண்டு, நேராக இளம்பொறையை நோக்கி வந்தவள், "சைந்தவன் சத்தம் கேட்டு வந்தேன்". என்று கூறினாள்.
"இந்திரன் வந்திருக்கிறான்!" என்று இளம்பொறை கூற,
இதயம் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தாலும், பகல் பொழுதில் வீண் அரட்டை கூடாது என்பது அரண்மனையின் விதி என்பதால்,
"சரி இரவு, பணி முடிந்து வந்து பேசுகிறேன். அல்லது நீங்கள் பேசிவிட்டு வந்து கூறுங்கள்." என்று கூறிவிட்டு மீண்டும் அரண்மனை நோக்கிச் சென்றாள்.
தன்னைக் கடந்து யாழ்நிலா செல்வதைப் பார்த்த இந்திரன், யாழுக்குப் புரியும் படி சங்கேத ஒலி எழுப்பினான். இந்திரனின் சங்கேத ஒலி கேட்டவளுக்குக் கண்களில் நீர் முட்டியது.
இந்திரனுடன் தான் கழித்த இன்ப காலங்கள் நினைவுக்கு வந்ததோடு, இந்திரனை, யாழ்நிலாவிற்கு வழங்கியது மாறன் ஆயிற்றே! மாறன் நினைவில் ஒரு நிமிடம் கண்மூடி நின்றவள், கண்களைத் திறந்து இந்திரனைப் பார்த்தாள்.
இந்திரன் தனது உத்திரியப் பிடியை அசைத்துக் காட்டியது.
'மிகவும் அவசரமான விஷயமாக இருக்குமோ? என்று நினைத்தவள், சுற்றிலும் பார்த்துவிட்டு, பாதத்தை அருகில் கிடந்த முள்ளில் வைத்துவிட்டு, முள் குத்தியதை எடுப்பதற்காக இந்திரன் அருகில் உள்ள திண்டில் அமர்ந்து, இந்திரனின் உத்திரியப்பிடியில் இருந்த ஓலையை எடுத்துத் தனது ஆடைக்குள் மறைத்துவிட்டு லேசாக மேல் தோளில் செருகியிருந்த முள்ளை எடுத்து, ஓர் ஓரமாகப் போட்டுவிட்டு, குளியலறை நோக்கிச் சென்றாள்.
யாழ்நிலா செல்லும்வரை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்த இளம்பொறையும் தனது அறையை நோக்கி நடந்தான்.
யாழ்நிலா குளியலறைக்குள் செல்வதற்காக உள்ளே நுழையும்போதே சற்றுத் தொலைவில் ஓடி வந்துகொண்டிருந்த பணிப்பெண்,
“சமீதா! உன்னைச் சுல்தானின் பாதுகாவலர் அழைக்கிறார்! விரைந்து வா!" என்று கத்தினாள்.
ஆடையில் செருகியிருந்த ஓலையை ஒருமுறை சோதித்து விட்டு, அந்தப் பணிப் பெண்ணை நோக்கி ஓடினாள் யாழ்நிலா.
“என்ன ஆயிற்று! எதற்காக அவசரமாக அழைக்கிறார்கள்?" என்று யாழ்நிலா கேட்க,
சுல்தானுக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். உன்னை அழைத்து வரச்சொன்னார்கள்" என்று கூற,
மறுக்க வழி இல்லாமல் அந்தப் பணிப்பெண்ணின் பின்னால் சென்றாள் யாழ்நிலா.
சுல்தானின் படுக்கையைச் சுற்றிலும், அவர்மீது அக்கறை கொண்டவர்கள் பதற்றமாக நின்றனர்.
யாழ்நிலா வருவதைப் பார்த்ததும், அரண்மனை வைத்தியர், "வாம்மா! சுல்தான் அவர்களின் திருமேனி முழுவதும் கொப்புளங்களாக இருக்கின்றன… என்ன காரணம் என்று அறியமுடிகிறதா பார்! நானும் எனக்குத் தெரிந்த வகையில் மருந்து கொடுத்திருக்கிறேன்." என்று கூறினார்.
சீலன் கொடுத்தனுப்பிய உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் குளிகையாலோ? இந்து ஆலயங்களை எல்லாம் இடித்துத் தரைமட்டமாக்கிய பாவத்தினாலோ உடல் முழுவதும் "அம்மை" போட்டிருந்தது.
சுல்தானின் உடலில் இருந்த கொப்புளங்கள் 'அம்மை' என்பதைப் புரிந்து கொண்ட யாழ்நிலா, 'வைத்தியர் என்ன நினைக்கிறார்? அவர் என்ன மருந்து கொடுத்தார்?' என்பதை அறிய,
வைத்தியரை நிமிர்ந்து பார்த்து, "நீங்கள் என்ன மருந்து கொடுத்தீர்கள்?" என்று கேட்டாள்.
அவர், தான் கொடுத்த மருந்தின் பெயர் கூற,
'உடல் சூட்டை குறைக்கும் மருந்து தானே கொடுக்க வேண்டும்?' என்று நினைத்ததை மறைத்து,
"திடீரென்று எப்படி இவ்வளவு கொப்பளங்கள் வந்தது?" என்று அறியாதவள் போல் கேட்டாள்.
அனைவருமே, "தெரியவில்லை!" என்ற ஒரே பதிலைக் கூற,
"வைத்தியர் கொடுத்திருக்கும் மருந்து சரியானதுதான். இருந்தாலும் நானும் கசாயம் கலந்து வந்து கொடுக்கிறேன்." என்று கூறியபடி சமையலறையை நோக்கி ஓடினாள்.
"யாழ்நிலா ஓடியதைப் பார்த்த அந்த அறையில் இருந்தவர்கள், 'இந்தப் பெண்ணுக்குத்தான் சுல்தான்மீது எவ்வளவு விசுவாசம்? இப்படித் தலை தெறிக்க ஓடுகிறாளே!' என்று நினைத்தார்கள்.
அவர்களுக்கு என்ன தெரியும்? யாழ்நிலா ஓடியது சீலனின் ஓலையில் இருப்பதைப் படிக்கத்தான் என்று!!
சமையல் அறைக்குள் நுழைந்த யாழ்நிலாவுக்குப் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால் சமையல் அறை முழுவதும் பணிப்பெண்கள் நிறைந்திருந்தனர்.
'இங்கே வைத்து எப்படிப் படிப்பது?' என்று யோசித்தவள், வேறு வழியின்றிக் கைக்கு வந்த கசாயத்தைக் கலந்து, மீண்டும் வேகமாகச் சுல்தானின் அறையை நோக்கி ஓடினாள்.
ஆனால் சுல்தானின் அறைக்குள் மாலிக்காபூர் நின்றிருந்தான். அவனைப் பார்த்ததும் யாழ்நிலாவிற்குத் தனது இளவரசி நங்கையின் இறுதி நேரம் கண்களில் நிழலாட, அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்.
அவளைப் பார்த்த, அந்த அறையில் இருந்தவர்கள், "வாம்மா! இவர் படைத்தலைவர். நம் சுல்தானின் விருப்பத்திற்குரியவர். நீ பயப்படத் தேவையில்லை. வந்து உன் கசாயத்தைக் கொடு!' என்று அழைத்தனர்.
விரைந்து சென்று, வைத்தியர் கையில் கசாயத்தைக் கொடுத்துவிட்டு, மாலிக்காபூர் கண்களில் நேரடியாகப் படாதவண்ணம் சற்று மறைந்து நின்று கொண்டாள்.
வழக்கம்போல் பரிசோதனைக்காக, ஒரு பணியாளுக்கு அந்தக் கசாயத்தைக் கொடுக்க.
அதை மாலிக்காபூர் வாங்கிப் பார்த்தான். "இது என்ன புதுப் பழக்கம்?' என்று மாலிக்கபூர் கேட்டதும்,
"இந்தப் பெண் நன்றாகக் கை வைத்தியம் தெரிந்தவள். அவள் கொடுக்கும் கசாயம் சுல்தானுக்குப் பலமுறை, பல வேதனைகளைத் தீர்த்து இருக்கிறது." என்று வைத்தியரும், அமைச்சரும் ஒருங்கே கூறினர்.
உடன் நிமிர்ந்து யாழ்நிலாவைப் பார்த்தவன், "இதெல்லாம் கொடுக்கத் தேவையில்லை. அரச வைத்தியர் கொடுக்கும் மருந்துகளே போதும்!" என்று கூறி, கஷாயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
அதிர்ச்சியடைந்த மற்றவர்கள், யாழ்நிலாவை வருத்தமுடன் பார்த்து, "சரிம்மா! நீ போ! தேவைப்பட்டால் கூப்பிட்டு அனுப்புகிறோம்." என்று கூறினர்.
'தப்பித்தோம்! பிழைத்தோம்!' என்று நினைத்து, தனது அறையை நோக்கி யாழ்நில் ஓடும்பொழுது அவள் ஆடையில் செறுகி இருந்த சீலன் அனுப்பிய ஓலை, தவறிக் கீழே விழுந்தது. அதை அறியாமல் அவள் தனது அறையை நோக்கி ஓடினாள்.
அந்த ஓலையை ஒரு கரம் எடுத்தது.
வார்த்தைகளின் எண்ணிக்கை -1981
சிவதாசனின் கர்ஜனை தொடரும்…
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️