Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீராத காதல்

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-6



வீட்டு தோட்டத்தில் இருந்தாள் நித்யா.

அவளுக்கு பிடித்த இடம் இது.பல பூக்களால் நிரப்பிய தோட்டம் அது.



மஞ்சள்செம்பருத்தி,சிவப்புசெம்பருத்தி,ரோஸ்செம்பருத்தி, என மூன்று வகை செம்பருத்திகள்; சந்தனஅரளி,செவ்வரளி;நான்கு வண்ணசாமந்திகள்;மணமான அடுக்குமல்லி;அவளுக்கு பிடித்த பல வண்ண பட்டனரோஸ் செடிகள்;வெள்ளை மற்றும் ரோஸ் நிற சாமந்தி.



தோட்டத்தில் அங்கும் இங்கும் உலாவி கொண்டு இருந்தாள்.மனம் முழுக்க கார்த்தியின் நினைவுகள் நிரம்பி இருந்தது.மனம் லேசாக வலித்தது.



கடந்த நான்கு மாதம் அவள் வாழ்க்கை நரகமாக இருந்தது.ஓவ்வொரு நொடியும் ரணமாக இருந்தது. கார்த்தியின் நினைவு என்பது அவளின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக இருத்தது.அவனின் நினைவுகளோடு வாழந்து கொண்டு இருக்கிறாள்.



நேற்று கதிர் அவளிடம் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.



கார்த்தி பத்தி என்னை விட உனக்கு நல்ல தெரியும்.நீ இப்படி இருந்த அவனுக்கு புடிகும்மா.



அவன் சொன்னது உண்மையே. கார்த்திக்கு "தோல்வி,என்னால் முடியாது" போன்ற வார்த்தைகள் அறவே பிடிக்காது.சோகமாக இருந்தாலும் பிடிக்காது.



அவனின் துணிச்சல், தெளிவு, தன்னம்பிக்கையில், பாதி கூட நமக்கு இல்லையே என்று வெட்க்கபட்டாள்.



கண்களை மூடினாள். கார்த்தியின் உருவம் தெரிந்தது. மனதில் ஒரு தெளிவு வந்தது.



ஓரு நன்னாளில், குறித்த முகூர்த்தத்தில், கதிர் நித்யா திருமணம் முடிந்தது.



மெல்ல மெல்ல கதிர் நித்யாவின் மனதை நெருங்கினான்.கதிர் பெரிதாக அவளை கவர ஒன்றும் செய்யவில்லை.இயல்பாகவே அவனின் குணமும் கார்த்தியின் குணமும் ஒன்றாகவே இருந்தது.



நித்யா வாழ தொடங்கினாள்.கதிர் ஒரு நல்ல தோழனாக இருத்தான். அவளுக்கு பலமாக இருத்தான். அவளுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லி கொடுத்தான்.வாழ்க்கையை புரிய வைத்தான்.அவளுக்கு நன்றாக வரைய கற்று கொடுத்தான்.



நித்யா வரைய ஆரம்பித்தாள்.நன்றாக சமைக்க செய்தாள். ஒரு வீட்டு தோட்டம் போட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தாள்.அதை கதிர்க்காக செலவு செய்தாள்.குடும்பம் மகிழ்ச்சியாக சென்றது.



ஒருவருடம் கழித்து கதிர் மற்றும் நித்யாவின் முயற்சியில் " கே. கே பவுண்டேஷன்" ஆரம்பிக்கப்பட்டது.



வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே நிலையானது.இன்பமும் நிலையானது அல்ல. துன்பமும் நிரந்தரம் அல்ல.ஆக, நாம் அனைத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.



காதலுக்கு அழிவே இல்லை.

தீராத காதல்…



சுபம்.
 

Latest posts

New Threads

Top Bottom