Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
கூத்தும் கொண்டாட்டமுமாய் ஒரு வாரம் கழிந்த நிலையில் காஷ்மீர் புறப்பட்டான் வீரப்பாண்டியன்.


அப்போது திடீரென அவனுக்கு தலை சுற்றுவது போலிருக்க அதனை சாதாரண தலைவலியென நினைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான். தான் அப்போதே மருத்துவமனை சென்றிருந்தால் தன் இறப்பை அவன் தடுத்திருக்கலாமோ என்னவோ?


கிளம்பும் முன் தன் மனையாளிடம், "மும்பைல இருக்க உன் தம்பி ஹரியை அலமேலு கல்யாணத்துல பார்த்தப்போ, இங்க பண்ணைபுரத்துல வந்து தங்கிக்கோனு சொன்னேன். அவனும் சரிங்க மாமானு சொன்னான். அலமேலு போயிட்டால்ல? இனி ராதா உனக்கு கொஞ்சம் ஒத்தாசையாயிருப்பா" என்று சொல்லிவிட்டு இராணுவத்துக்கு செல்லத் தயாரானான்.


நாச்சியம்மையால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.


“மாமா, என்னால முடியல" எனக் கதறவும் அவளை அணைத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவன்,


"ஏய் ரவுடி! ஏன்டி இப்படி அழுது என்னை பலவீனமாக்குற? நான் என்ன பந்து விளையாடவா அங்கப்போறேன்? உயிர் போறதெல்லாம் அங்க சகஜம். இதெல்லாம் எதிர்பார்த்து தானே போறேன்? ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும்.."


"மாமா.." எனப் பதறி அவனின் வாயை மூடினாள் நாச்சியம்மை.


அவளின் கையை அகற்றியவன், "ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும் அங்க இருக்கற பத்து பேரோட தலையை மண்ணுல சாய்ச்சிட்டு தான் என் உயிர் போகும். எனக்கப்புறம் நீ தான் இந்த வீட்டைப் பார்த்துக்கணும். எந்த ஒரு நிலையிலயும் தவறான முடிவு எடுத்துறாத. என் உயிர் போனாலும் உயிரோட இருக்கும் போது உன்கூட இருக்க முடியலையேனு ஏக்கத்துல உன்னையே தான் சுத்தி சுத்தி வரும்" என தன் இறப்பை முன்பே அறிந்த ஞானி போல் பேசினான்.


"இப்படியெல்லாம் பேசாதீங்க மாமா எனக்கு பயமாயிருக்கு" என அவன் நெஞ்சில் விழுந்து விக்கி விக்கி அழுதாள் நாச்சியம்மை.


"சரி, சரி, என் பம்பரமிட்டாய் இல்ல? சீனிமிட்டாயில்ல?" எனக் கொஞ்சி சமாதானப்படுத்தி இறுதியாக பல நாட்களுக்குத் தாங்கும்படியாக முத்தம் ஒன்றையும் வைத்துவிட்டே புறப்பட்டான்.


அவன் சுவைத்த சீனிமிட்டாயின் சுவை உள்நாக்கு வரை தித்தித்தது.


மறுபுறம் தன்னை முத்துப்பாண்டியன் தேனிலவிற்கு பட்டணம் அழைத்துச் செல்வான் என்ற ஆசையிலிருந்த அலமேலுமங்கைக்கு தற்போது அவன் வயலுக்கு அழைத்து வந்ததும் ஏமாற்றமாக இருந்தது.


"என்ன மாமா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா, உங்க தோட்டத்து வீட்டுல தங்கியிருக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ஆனா, இந்த இடமும் குடிலைச் சுத்தி தோட்டம்னு நல்லாத்தான் இருக்கு" என்றதும்,


"அம்முலு இங்கயிருக்க தோட்டத்துல பயிர் மகசூலை அதிகரிக்கிற விதமா, குறைஞ்ச செலவுல இராசயனப்பொருட்கள் எதுவும் கலக்காத உரத்தை நான் பயன்படுத்தியிருக்கேன். கூடவே குறைஞ்ச அளவு மட்டுமே தண்ணீரை உறிஞ்சக்கூடிய பயிரையும் கண்டுபிடிக்க, ஆராய்ச்சி அறை கட்டியிருக்கேன். அந்த ஆராய்ச்சியில ஒரு நாள் வெற்றியும் அடைவேன் பாரேன். ஒவ்வொரு நாளும் நம்ம இந்தியாவுல வறட்சியினால எவ்வளவு விவசாயிங்க தற்கொலை செஞ்சு இறந்துப் போறாங்கத் தெரியுமா? என்ன போரடிக்கிறேனா?" என்றதும், மையமாக தலையசைத்தாள் அலமேலு.


அவன் பாவம் பார்க்கவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அதான் இங்க வந்தா விளைநிலத்தோட நம்ம பருவத்தையும் பயிர் செய்யலாம்னு உன்னை என்னோட கூட்டிட்டு வந்துட்டேன்" எனத் தான் எப்போதும் இயற்கைக்கு நண்பன் என்பதை நிரூபித்தான்.


அவர்களின் மனப்பூர்வமான தாம்பத்யத்தில் திருமணம் முடிந்த மூன்றாம் மாதம் அலமேலுமங்கை கர்ப்பமாக அவளை நடக்க சம்மதிக்கவில்லை நாச்சியம்மை.


அனைவரும் சந்தோசமாகயிருந்தது அந்த விதிக்கு பொறுக்கவில்லையோ என்னவோ, இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டையே நடுநடுங்க வைக்கும் செய்தி ஒன்று வந்தடைந்தது.


எதிரி நாட்டுடன் நடந்த போரில் நாட்டுக்காக சண்டையிட்டு, தன் இன்னுயிரை நீத்துவிட்டார் வீரப்பாண்டியன் என்பது தான் அந்த அதிர்ச்சி செய்தி.


அவன் உடல் வரும் போதே அவனின் உடலை பற்றின பரிசோதனை விபரங்களும் வர, அதில் சம்பந்தப்பட்ட ஒரு உருவம் மட்டும் நைசாக அந்த விபரங்களை அனைவரின் கண்களிலும் இருந்து மறைத்து வைத்தது.


தற்போது அந்த பிரேத பரிசோதனை விபரம் தான் விக்ரமனுக்கு அவனின் துப்பறிவாளரின் மூலம் கிடைத்தது.


வீரப்பாண்டியனின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டதும் தன் தமக்கைக்காக தன் இருப்பிடத்தை செங்குளத்திலிருந்து பண்ணைபுரத்திற்கு மாற்றிக்கொண்டாள் அலமேலுமங்கை.


முதலில் இனி தனக்கு வாழ்க்கையே இல்லையென பித்துப்பிடித்தாற் போல் திரிந்த நாச்சியம்மை பின், தன் கணவனின் வார்த்தையைக் காப்பாற்ற அனைத்துப் பொறுப்புகளையும் கையிலெடுத்துக் கொண்டாள்.


அவளுக்கு உதவியாக அவள் மகன்களை தன் மகன்கள் போலவே உடனிருந்து பார்த்துக் கொண்டாள் அலமேலுமங்கை.


நாச்சியம்மைக்கு வீட்டிலிருந்த ஒரே சந்தோஷம் தன் பிள்ளைகளும், அடிக்கடி குறும்பு செய்து தன்னை சிரிக்க வைக்கும் தன் தங்கை அலமேலுவும் தான்.


தன் கவலைகளை மறக்கும் விதமாக தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டாள் நாச்சியம்மை. முத்துப்பாண்டியனும் தன் அண்ணிக்கு உறுதுணையாக நின்றான்.


ஒன்பதாம் மாத இறுதியில் அனைவரையும் துன்பக் கடலிலிருந்து மீட்கவென தங்க விக்ரகமாக பிறந்தான் விக்ரமப்பாண்டியன்.


நாட்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்க சரியாக ஏழு வருடங்கள் கழித்து மறுபடியும் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது விதி.


பண்ணைபுரத்தின் தெற்குப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அந்தப் பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் கிடைக்க வேண்டும் என அரசை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார் நாச்சியம்மை.


இறுதியில் அவரின் விடாமுயற்சியால் மக்களுக்கு தண்ணீரும் கிடைக்க, மக்களிடையே அவர் பெயரின் மதிப்பும் உயர்ந்தது.


மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறும் அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்க்குமாறும் பலமுறை அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினார் நாச்சியம்மை. அதில் அனைவரும் அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.


ஒருமுறை எப்போதும் போல் தன் போராட்டத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவரிடம் தன் அன்னையைப் பற்றி புகார் கடிதம் வாசித்தான் விக்ரமப்பாண்டியன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"நாச்சூம்மா அம்முலு இன்னைக்கு எனக்குத் தராம சிக்கன் சாப்ட்டுட்டாங்க." என்று போட்டுக் கொடுத்தான்.


'பயபுள்ள என்னை எப்படி போட்டுக் கொடுக்கிறான் பாரு?' என தனக்குள்ளேயே புலம்பிய அலமேலு வெளியே தைரியமாக,


"ஐயோ! நாச்சூக்கா இன்னைக்கு சனிக்கிழமை. பெருமாளுக்கு விரதம். நான் எதுவுமே சாப்பிடல. இவன் பொய் சொல்றான்" என அவனை அடிக்கப் பாய்ந்தாள்.


அவரோ, "அலமு, உனக்கு எத்தனை தடவை சொல்றது? உன்னைப் பார்த்து தான் சின்னப்பசங்களும் கெட்டுப்போறாங்கனு" என திட்டவும்,



பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு, “சாரிக்கா” என்றாள்.


அதற்கு மேலும் கோபமாக இருப்பது போல் நடிக்க முடியாமல் சிரித்துவிட்டார் நாச்சியம்மை.


"என்னவோ செய். ஆனா, என் பிள்ளையை அடிக்கிற வேலையை மட்டும் வச்சிக்கிறாத" என்று விக்ரமனை அவள் கையிலிருந்து காப்பாற்றி தன்னறைக்கு அழைத்துச் சென்றார்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
எனது நாவலை புத்தகமாகப் பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 18



ஊர் மக்கள் அனைவரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தான் செய்யும் சமூக சேவையை பெரிய பதவியிலிருந்தால் இன்னும் சிறப்புற செய்யலாம் என நினைத்து, சங்கரப்பாண்டியனை எதிர்த்து பண்ணைபுரத்துத் தொகுதியில் போட்டியிட தயாரானார் நாச்சியம்மை.


ஆனால், தான் எடுத்த அம்முடிவினால் தன் தங்கையையும் கொழுந்தனையும் தான் பறிகொடுக்கப் போவதை அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.


சட்டமன்றத் தேர்தலில் பெண்சிங்கத்தின் தோரணையுடன் சுயேட்சை வேட்பாளராக சங்கரப்பாண்டியனை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தார் நாச்சியம்மை.


அதனைத் தொடர்ந்த நாட்களில், தன் மனைவி மற்றும் மகனுடன் தன் சொந்த ஊரான செங்குளத்திற்கு வந்திருந்தான் முத்துப்பாண்டியன்.


தன் சொந்தபந்தங்களுடன் குலாவிவிட்டு பின், தன் மனைவி மகனுடன் தோட்டத்து வீட்டிற்குச் சென்றான்.


தன் பயிர்களை ஆய்வு செய்யும் பகுதியை அடைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.


அவன் பல வருடங்களாக மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்பாராத விதமாய் அன்று பலன் கிடைத்திருந்தது.


ஆம், குறைந்த அளவு நீரினை மட்டுமே உறிஞ்சி அதிக அளவு மகசூல் தரும் பயிரை கண்டறிய, பல முறைகளில் நெல்மணிகளை பயிரிட்டிருந்தான். அதில் ஒரு குறிப்பிட்ட முறையில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் மட்டும் அசுர வளர்ச்சியை அடைந்திருந்தது. அதனைக் கண்டு தான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போய் நின்றான்.


இனி தண்ணீர் பற்றாக்குறையால் எந்தப் பயிரும் பாழாகாது, எந்த கயிறும் இனி விவசாயிகளின் கழுத்தை நெரிக்காது என்று நினைத்தவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.


நேராக தன் குடிலுக்குச் சென்றவன் தன் ஆராய்ச்சிக் குறிப்பை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்து பத்திரப் படுத்திவைத்தான்.


பின், குடிலை விட்டு வெளியே வந்து தன் மனைவியையும் மகனையும் தேடினான். அவர்கள் தூரத்திலிருந்த ஆலமரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள்.


"அம்முலு!" என்று கத்திக்கொண்டே அவர்களை நெருங்கியவன் தன் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.


முத்துப்பாண்டியனும் வார்த்தைகளால் புரிய வைக்க முயலவில்லை. தன் உணர்ச்சியை அவர்களுக்கு கடத்தவேண்டி தானே அவர்களின் ஊஞ்சலை தள்ளிவிட்டு ஆனந்தமடைந்தான்.


சிறிது நேரத்திலேயே அந்த ஊஞ்சல் ஆட்டம் சலித்து விட, பனைவோலை காத்தாடியை ஒரு கையிலும், நுங்கு வண்டியை மறுகையிலும் பிடித்துக்கொண்டு காற்றிருக்கும் திசையை பார்த்து ஓட ஆரம்பித்தான் விக்ரமன்.


அவன் ஓடியதும் ஆலமரத்தடியில் புடவையின் தலைப்பை காற்றில் அலையென மிதக்கவிட்டிருந்த தன் மனைவியை ஆசையுடன் நெருங்கினான் முத்துப்பாண்டியன்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom