Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நெருங்கி வந்ததோ நெஞ்சம் - Bhagya Sivakumar

bhagyasivakumar

New member
Messages
5
Reaction score
0
Points
1
5

கதிருக்கும் தீப்திக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் சற்று நேரம் கடலையே வெறுத்து நோக்கினர். என்ன ஆச்சு? இவ ஏன் சொல்லாம கொள்ளாம வந்துட்டா இவ பாட்டுக்கு என்னை விட்டு பிரிய அவ்ளோ மனசு இல்லையா? என்று யோசித்தபடி இருந்தான் கதிர்.

“என்ன கதிர் எதையோ ரொம்ப யோசிக்கிற போலருக்கு?”என்றாள் தீப்தி.

“ஒன்னுமில்லை தீப்தி ஆமா உங்க வீட்ல எப்படி அனுமதிச்சாங்க. ப்ரண்டுன்னு சொன்னதுனால விட்டாங்களோ அப்ப கூட உங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரீட் ஆச்சே”

“ஆமா ஸ்ட்ரிட் தான் என்ன பண்றது எனக்கு உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு அதான் எப்படியோ வந்துட்டேன். சரி உனக்கு பிடிக்கலைன்னு சொல்லு நான் வேணும்னா இப்பவே கிளம்பி போயிடுறேன்”என்றாள் தீப்தி.

“அட இப்படி புசுக்கு பொசுக்குன்னு கிளம்புறேன்னு சொல்லாத சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் பர்ஸ்னலா கேக்குறேன். உனக்கு ஏன் என் மேல அவ்ளோ பிரியம் “என்றான் கதிர்.

“ஒருத்தர் மேல பிரியம் வைக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன சின்ன வயசுல இருந்தே நம்ம ஒண்ணா பழகுறோம் அது என்னமோ தெரியல உன் கூட இருந்து பழகிடுச்சது திடீர்னு நீ கொஞ்ச நாள் வெளியூர் வந்தவுடனே ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு அதான் வந்துட்டேன்” என்றாள் தீப்தி.

“கரெக்ட் தான். ஆனால் வெளில இருந்து பாக்குறவங்க நீயும் நானும் ஏதோ இணை பிரியாத காதலர்கள்னு தானே நினைப்பாங்க நம்ம பண்றது எல்லாம் பார்த்தா.” என்றான் கதிர்.

“யாரு எப்படி வேணாலும் நினைச்சுட்டு போகட்டும் கதிர், ஆனால் எனக்கு இந்த ஃபீல் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒருவேளை இதுக்கு பேரு காதல்னு சொன்னாலும் எனக்கு எதுவும் பெருசா வருத்தம் கிடையாது. எனக்கு ஒரே ஒரு ஆசை தான்,உன்னை விட்டு பிரியாம கடைசி வரை ஒன்றாகவே இருக்கனும்”என்றபடி கதிரின் கையைப் பிடித்துக் கொண்டாள் தீப்தி.

“தீப்தி நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் நாளைக்கு உனக்கும் கல்யாணம் காட்சி என்று நடக்கும்போது நம்ம ரெண்டு பேரும் இதே போல நண்பர்களா இருக்கிறது சாத்தியம் இல்லை” என்று நிறுத்தினான்.

“ஏன் கல்யாணம் ஆன அப்புறமாகவும் ஆண் பெண்ணை இரண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்குறது இல்லையா என்ன?” இன்று கேள்வியாய் எழுப்பினாள் தீப்தி.

“சரி உனக்கு கல்யாணம் ஆகி , உன் புருஷன் நம்ம ப்ரண்ட்ஷிப்க்கு ஒத்துக்குறாங்கன்னே இருக்கட்டும் ஆனா எனக்கு கல்யாணம் ஆனபிறகு என் மனைவி ஒத்துக்கலைன்னா என்ன பண்றது? பொண்ணுங்களோட பொசசிவ் எப்படி இருக்கும்னு உனக்கே தெரியும் தானே தீப்தி என்றான் கதிர்.

“நீ சொல்றது சரிதான் கதிர் ஆனா எதார்த்தம் தாண்டி சுயநலமாக யோசிக்கிறப்ப எனக்கு நம்ம ப்ரண்ட்ஷிப் முக்கியம்னு தோணுது” என்றாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தீப்தியின் கைபேசி மணி முதலில் எடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவள் ஃபோனை அணைத்துவிட்டு அவனிடம் மீண்டும் பேசத் தொடங்கினால் ஆனால் அவனோ “ தீப்தி முதல்ல எடுத்து பேசு ஒருவேளை ஏதாவது முக்கியமான காலா கூட இருக்கலாம் இல்ல எப்பவுமே கால் வந்தா அவாய்ட் பண்ணவே கூடாது ஓகேவா எடுத்து பேசு” என்றான்.

அவன் சொன்ன பிறகு தான் போனை எடுத்து டயல் செய்து பேசினாள். ரொம்ப பரிச்சயமான குரல் என்றாலும் அவளுக்கு சற்று வெறுப்பாக தான் இருந்தது பேசுவதற்கு.
“ஹலோ சொல்லுங்க யார் இது” என்று ஆரம்பித்தாள்.

“என்ன தெரியலையா உனக்கு தீப்தி நான் தான் ராஜேஷ்” என்றான் எதிர்முனையில்.

“ஓ….நீங்களா சரி சொல்லுங்க “

“இல்ல எங்க அம்மா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம்…இல்லை இல்லை ஒன்னுமில்லை விடு”என்றான் ராஜேஷ்.

அவன் எதைப் பற்றி பேச நினைக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“ராஜேஷ் உங்க அம்மா நம்ம கல்யாணம் பத்தி பேசினதை தானே கேக்குறீங்க “

“ஆமாம்” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“ஹலோ இருக்கீங்களா என்ற மீண்டும் குரல் கொடுத்தாள் தீப்தி.

“இருக்கேன் இருக்கேன். ஆமா தீப்தி உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?” என்றான் ராஜேஷ்.

இந்த முறை இவ்வளவு மௌனமாக இருந்தாள் என்ன பதில் சொல்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

“எனக்கு….. எனக்கு கல்யாணம் பத்தி பெருசா கனவு எதுவும் கிடையாது ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான்” என்றாள்.

“அப்படி என்ன கண்டிஷன் ஒருவேளை மேற்கொண்டு ஏதாவது படிக்கணும்னு ஆசைப்படுறியா இல்ல உங்க அப்பா அம்மாவை நம்ப கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறியா எதுனாலும் சரி பரவாயில்லை” என்றான் ராஜேஷ்.

‘அடடா இவ்வளவு நல்லவனா இருக்காங்க நம்மள அந்த அளவுக்கு புடிச்சிருக்கு போல இருக்கு எந்த கண்டிஷன்னாலும் ஓகேங்குற மாதிரி சொல்றாரு ஆனா நான் சொல்ல போற கண்டிஷனுக்கு ஒத்துப்பாரா தெரியலையே’ என்ற மனதுக்குள் கூறிக் கொண்டிருந்தாள் தீப்தி.

“தீப்தி சொல்லு” என்றான் ராஜேஷ்.

“அது அது வந்து….சரி நான் நேர்ல நேசிக்கிறேன் பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

“லுக் கதிர்,ராஜேஷ் என் மேல அவ்ளோ பிரியமா இருக்காரு அவரை கல்யாணம் பண்ணா லைஃப் நல்லாருக்கும் தோணுது ஆனால் அதே சமயம் அதை விட ஒரு படி அதிகமா நீ எனக்கு முக்கியம்னு தோணுது எனக்கு என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியலை “ என்றாள் தீப்தி
.

இது வெறும் நட்பா இல்லை காதலா பார்ப்போம்.

தொடரும்.
 

Latest posts

New Threads

Top Bottom