Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
⬇️அத்தியாயம் ...20 👇
......மாலை நேரம்...
முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவின் திருமணத்தைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள் திண்ணை மீது அமர்ந்தபடி.
சங்கர் ரேகாவும் வீட்டுக்குள்ளே கட்டில் மீது இருவரும் ஓட்டிக்கொண்டு ஆசையோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மாமா ..இன்னைக்கு நீங்கதான் சமைக்கணும் உங்களுடைய கைப்பக்குவம் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன் என்று ரேகா செல்லமாக சொன்னாள்.
இன்னைக்கு நீ சமைக்க போவதில்லையா . நான் தான் சமைக்கனும்மா. என்றான் சங்கர்.
ஆமாம் ..நீங்கதான் ரொம்ப வித்தியாசமா வீட்டு வாசலில் மலாக்கா படுத்துக்கொண்டே சமையல் செய்வீங்களே.
அந்த வித்தியாசமான சமையலின் ருசியை இன்னைக்கு எப்படி இருக்குன்னு பாக்குறேன் என்று கிண்டலாக சொன்னாள் ரேகா.
என்னோட சமையலைப் பத்தி உனக்கு தெரியாது .
நான் படுத்துக்கொண்டே சமையல் செய்தாலும் அதனோட ருசியே வேற தான் . ஆனா இப்போது நான் சமையல் செய்தாள் உங்க அம்மா உன்னை தான் திட்டுவாங்க அதனால ஒழுங்கா போயிட்டு சமையல் செய் என்று சொல்லிவிட்டு ரேகாவின் கன்னத்தை செல்லமாக கடித்தான் சங்கர்.
ஆமாம்மா .. நீங்க வைக்கிற குழம்பு சாம்பாரா
இல்லை ரசமா என்று தெரியாமல் தாத்தா தவித்தது எனக்குத் தெரியும் என்று கிண்டலாய் சொல்லி சிரித்தாள் ரேகா.
வீட்டுக்குள்ளே ரேகாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு லட்சுமி அம்மாளுக்கும் முத்தையாவுக்கும் சந்தோஷமாக இருந்தது அப்போது லட்சுமி அம்மாள் முத்தையாவிடம் .
நான் காபி போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன் அப்பா என்று சொல்லி விட்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்றால் லட்சுமி அம்மாள்.
சிறிது நேரம் கழித்து ரேகா சந்தோஷமாக வெளியே வந்து வாசலில் இருக்கும் அடுப்பை விரகு வைத்து தீ பற்ற வைத்து சமையல் செய்வதற்கு
தயார்றனால் .
அப்போது . திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பாசமாக பார்த்தாள் ரேகா. அப்போது முத்தையாவின் முகம் சோகமாக இருப்பதை உணர்ந்தால் ரேகா.
சற்று நேரத்தில் சமையலை செய்து முடித்தவுடன்
சுடசுட முத்தையாவுக்கு சாப்பாடு கொடுத்தால் ரேகா சிரித்த முகத்தோடு..
மறுபடியும் ரேகாவும் சங்கரும் கட்டிலில் படுத்தபடி நடந்ததையெல்லாம் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
உன்னை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று என் அப்பா சொல்லி இருக்கிறார் . அதனால் நீ ரொம்ப கடுமையாக உழைக்க வேண்டும் உன்னை நம்பி இனிமேல் இரண்டு குடும்பங்கள் இருக்கிறது என்று அப்பா சொல்லியிருந்தார் ஆனால் இந்த நேரம் பார்த்து பண்ணையார் தோட்டத்திற்கு யாரும் வேலைக்குப் போவதற்கு பயப்படுகிறார்கள் . காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது என்று முடிவு செய்துகொண்டு
வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் இந்த நிலைமை எப்போது மாறுவது என்று சற்று வருத்தத்தோடு சொன்னான் சங்கர்.
நான் இந்த வீட்டு மருமகளாக வந்ததே எனக்கு பெரிய சந்தோஷம் இதற்கு மேல எனக்கு எந்த சந்தோஷமும் கிடையாது தாத்தா என் மீது உள்ள அக்கறையில் அப்படி உங்களிடம் சொல்லி இருப்பார்
அதனால் நீங்கள் அதையே நினைத்து வருத்தப்பட வேண்டாம் . என்னை பொறுத்தவரை எப்போதுமே உங்கள் கூடவே இருப்பது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் அதனால் நீங்கள் தாத்தா சொன்னதை நினைத்து வருத்தப்படாதிங்க மாமா தாத்தாவுக்கு ஒரு பேரனோ பேத்தியோ வந்துவிட்டால் அவர் நம்மைப் பற்றி கண்டுக்கவே மாட்டார் எல்லாம் பாசத்தையும் பேரன் மீதும் பேத்தி மீதும் காட்டுவார் அதனால் அவர் சொன்னதை நினைத்து கவலைப் படாதீங்க எல்லோரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பயப்படுவார்கள் ஒருநாள் எல்லோரும் வேலைக்கு கிளம்புவார்கள் அப்போது நீங்களும் தாராளமாக வேலைக்கு சென்று சம்பாதித்து நம்ம குடும்பத்தை சந்தோசமா பாத்துக்குங்க .
இப்போ இருக்கிற வேலையை பாருங்க என்று சிரித்துக்கொண்டே சங்கரன் கட்டியணைத்தாள் ரேகா.
உங்க அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்தாயா என்று சங்கர் கேட்டான்.
அவங்க எப்ப வேணாலும் வந்து சாப்பிடுவாங்க என்று சொன்னாள்.
அப்படியெல்லாம் சொல்லாதே முதலில் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கொடுத்து விட்டு வா என்று சங்கர் சொன்னதும் .
ரேகாவும் சாப்பாடு எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்று சாப்பாடு அம்மாவிடம் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது திண்ணைமீது அமர்ந்திருந்த முத்தையாவை பார்த்தாள் ரேகா
அப்போது முத்தையா சாப்பாடு சரிவர சாப்பிடாமல் இருந்தார்.
ஏன் தாத்தா சாப்பாடு வச்சுட்டீங்க என்று முத்தையாவின் அருகில் அமர்ந்து ரேகா பாசமாக கேட்டாள்.
என்னன்னு தெரியலம்மா சாப்பாடு பிடிக்கலை என்று வருத்தத்தோடு சொன்னார் முத்தையா.
மனதில் எதையோ நினைத்துக்கொண்டு கவலைப்படுகிறார் தாத்தா என்று புரிந்துகொண்டு ரேகா தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
என்ன புள்ள ..உங்க அம்மாவுக்கு சாப்பாடு வேண்டாமா ..அப்படியே எடுத்துக் கொண்டு வந்துட்டா என்று சங்கர் கேட்டான்.
இந்த சாப்பாடு தாத்தாவுக்கு போட்டது ..
என்னனு தெரியல திருமணம் ஆனதிலிருந்து அவர் எதையோ நினைத்து ரொம்பவே கவலைப்படுகிறார் சரியாகவே சாப்பிடுவதே கிடையாது ஒருவேளை என் மீது ஏதாவது கோபமா தாத்தாவிற்கு எதுவுமே தெரியலையே என்று வருத்தத்தோடு சொன்னாள் ரேகா.
உடனே சங்கர் முகம் சற்று சோகமாக மாறியது எதனால் அப்பா கவலையோடு இருக்கிறாய் என்று யோசித்தபடியே வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பார்த்தான் சங்கர்.
என்னப்பா ஆச்சு ..ரெண்டு நாளா சரியாவே சாப்பிடல உடம்புக்கு ஏதாவது முடியலையா என்று சங்கர் முத்தையாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை மனசு சரியில்லை அதனால சாப்பிட பிடிக்கலை என்றார் முத்தையா.
தாத்தா நான் ஏதாவது தவறாக நடந்துக் கொண்டேனா என்று ரேகாவும் முத்தையாவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
எனக்கு யார் மீதும் கோபம் இல்லை நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தாலே அதுவே எனக்கு போதும் என்னோட வருத்தம் .
என் நண்பன் பண்ணையார் இப்போது மிகவும் கவலையோடு இருக்கிறான்
இந்த நிலைமையில் என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொல்லி தலையை குனிந்தார் முத்தையா.
அவரோட மகன் திருமணம் நின்றுவிட்டதால் அவர் வருத்தத்தோடு இருக்கிறார் அதனால் நீங்களும் அதை நினைத்து படுத்தப்படுவதால் பிரச்சனை சரியாகி விடுமா என்று சங்கர் சொன்னான்.
அவனுக்கு இரண்டு பிரச்சனை... அவனுடைய மகன் திருமணம் நின்று போனதை விட இந்த ஊர் மக்கள் வேலை இல்லாமல் பயந்துகொண்டு பசியால் இருப்பதை நினைத்து தான் அவனுக்கு பெரும் கவலை என்றார் முத்தையா.
ஊர்மக்கள் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்த குடும்பம் மர்மமான முறையில் காணாமல் போனதை நினைத்து பயந்து கொண்டு யாரும் வேலைக்கு போகாமல் இருக்கிறார்கள்
இந்த நிலைமை மாறுவதற்கு சிறிது காலம் ஆகும் இதை நினைத்து கவலைப்படுவதால் யாருக்கும் பயனில்லை அப்பா என்று சங்கர் சொன்னான்.
ஊர் மக்கள் பயப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பண்ணையார் தோட்டத்திற்கு நீ வேலைக்குப் போவதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று முத்தையா கேட்டார்.
எனக்கு ஒரு பயமும் கிடையாது ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி காணாமல்போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யக் கூடாது என்று முடிவு செய்ததால். நானும் அதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்றான் சங்கர்.
எல்லோரும் பயப்படுவது இயல்பான விஷயம் தான் அதனால் வேலைக்குப் போகாமல் இப்படி கஷ்டத்தோடு வாழ்வதைவிட பயத்தை ஓரங்கட்டிவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவது தான் புத்திசாலித்தனம் என்றார் முத்தையா.
இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க அப்பா.
எல்லோரும் போலவே நீயும் வேலைக்கு போகாமல் இருக்க வேண்டாம் நீயும் உன்னுடைய நண்பர்களும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று நல்லபடியாக வேலை செய்து பண்ணையார் தோட்டத்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான் என் மனமும் பண்ணையார் மனமும் ஒரு அளவுக்கு நிம்மதியாக இருக்கும் என்று முத்தையா சங்கரின் கையை பிடித்து சொன்னார்.
நீங்க சொன்னதைப் போலவே நாளையிலிருந்து நான் என் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகிறேன் நீங்கள் கவலைப்படாமல் இருங்கப்பா என்று முத்தையா வை சமாதானம் செய்துவிட்டு ரேகாவும் சங்கரும் வீட்டுக்குள்ளே சென்றார்கள்.
பொழுது விடிந்தது...🌄
சாந்தி காலையில் பரபரப்பாக பரந்தாமனை ..என்னங்க என்ற படி குரல் கொடுத்துக்கொண்டே எழுப்பினாள்.
என்னங்க சீக்கிரம் எழுந்திரிங்க.. தோட்டத்துக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் காத்துகிட்டு இருக்காங்க நீங்க இன்னும் இங்கேயே இருந்தால் எப்படி என்று பரந்தாமனிடம் சொன்னாள் சாந்தி.
சாந்தியின் வார்த்தை பரந்தாமனுக்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
என்னடி சொல்ற ...வேலைக்கு ஆட்கள் வந்து இருக்காங்களா உண்மையாகவா சொல்ற என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் பரந்தாமன்.
ஆமாங்க ...இன்னைக்கு நம்ம சங்கர் அவரோட நண்பர்கள் எல்லோரும் நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருக்காங்களாம் இப்பத்தான் எனக்கு தகவல் தெரிந்தது நீங்க உடனே கிளம்பி தோட்டத்துக்கு போங்க என்று சொல்லி விட்டு சந்தோஷமாக வந்தாள் சாந்தி அப்போது பண்ணையார் சாந்தியின் சந்தோஷத்தைப் பார்த்து.
என்னம்மா... காலையிலே ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிற என்றார் பண்ணையார்.
மாமா ...நான் சொன்னதைப் போலவே சங்கர் திருமணம் முடிந்ததும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று சொன்னேனே... இன்னைக்கு நம்ம தோட்டத்திற்கு சங்கரும் அவருடைய நண்பர்களும் வேலைக்கு வந்து இருக்காங்க இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பிரச்சனையேல்லம் சரியாகிவிடும் என்று சந்தோஷமாக பண்ணையாரிடம் சொன்னால் சாந்தி.
பண்ணையாருக்கு சற்று சந்தோஷமாக இருந்தது.... கண்டிப்பாக இது முத்தையாவின் ஏற்பாடுதான் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் பண்ணையார்.
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் உற்சாகமாக தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.
கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் வெறிச்சோடிக் கிடந்த பண்ணையார் தோட்டம் சங்கர் அவனுடைய நண்பர்கள் நிலத்தில் மும்முரமாக வேலை செய்து இருப்பதை பார்த்து பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.
அண்ணே இதுபோல ஊர் மக்கள் வேலை செய்ததை பார்த்து எத்தனை நாளாச்சு இனிமேல் இதேபோல ஊர் மக்கள் வேலைக்கு வந்தாள் நன்றாக இருக்கும் . நம்முடைய குடும்ப கௌரவம் இந்த விவசாயத்தில் தான் இருக்கிறது
நம்ம தோட்டத்தைப் பற்றி எல்லா கிராமத்திலும் பெருமையாக பேசுவார்கள் . இப்படிப்பட்ட நம்முடைய தோட்டம் கொஞ்ச நாளாக வாடி இருப்பதை பார்த்து அப்பாவுக்கு கவலையாக இருந்தது ஆனால் இனிமேல் சங்கரின் முயற்சியால் நம்முடைய தோட்டம் மெல்ல மெல்ல பழைய நிளமைக்கு வந்துவிடும் என்று சந்திரன் சந்தோஷமாக பரந்தாமனிடம் சொன்னான்.
ஆமாம் தம்பி இனிமேல் நம்ம இந்த ஊர் மக்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும் இன்னொரு முறை நம்மால் ஊர் மக்களுக்கு எந்த ஒரு திங்கும் ஏற்படுத்த கூடாது என்று பரந்தாமன் சொன்னான்.
அண்ணே... நாங்களும் குடிப்பதை நிறுத்தி விட்டோம் இனிமேல் நாங்கள் தேவையில்லாமல் எந்த ஒரு தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம் அண்ணே. இந்த ஊர் மக்கள் ஏதோ ஒரு புதிய முயற்சியோடு நம்முடைய தோட்டத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் அவர்களின் சந்தோசத்தை இனிமேல் குறையாமல் நம்மா பார்த்துக்கொள்ளவேண்டும் அண்ணா என்று தீனா சொன்னான்.
சங்கரும் அவனுடைய நண்பர்களும் மும்முரமாக தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்து பரந்தாமனுக்கு எல்லை இல்லா சந்தோஷம்
அதே சமயத்தில் தம்பிகளும் இனிமேல் நாம் என்ன சொல்கிறோமோ அதை தான் கேட்பார்கள் அந்த அளவுக்கு நம்மிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இனிமேல் நம்முடைய திட்டத்திற்கு எந்த தடங்களும் இருக்காது மெல்லமெல்ல விவசாயத்தை பெருக்கி அதில் வரும் லாபத்தை நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டியை எப்படியாவது இன்னும் சில மாதங்களில் நிரப்பிவிட வேண்டும் என்று நினைத்து பரந்தாமன் சந்தோஷமாக ஒரு உற்சாகத்தோடு வேலை செய்யும் தொழிலாளர்களை பார்த்துக்கொண்டு கம்பீரமாக நின்றான்.
⛺மழைக்காலம் வந்தாலே நமக்கு தொழில் செய்யறதுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்ன சிஷ்யா என்று சாட்டையடி சாமியார் சொன்னார்.
ஆமாம் குருவே ..நம இந்த ஊர் மக்களை பேய் இருப்பது போல பயமுறுத்தி வருகிறோம் ஆனால் இந்த மழைக்காலம் வந்தால் நம்ம நினைத்தபடி செல்போனை ஒளித்து வைப்பதில் சிரமமாக இருக்கிறது மழை வந்தால் நம்முடைய செல்போன் நினைந்துவிடும் அதன் பிறகு நம்மால் தொழில் செய்வதற்கு கஷ்டமாகவே இருக்கும்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் மழை வரும் பிறகு வெயில் காலம் ஆரம்பித்து விடும் அதுக்கப்புறம் நம்முடைய செல்போனுக்கு வேலையும் வந்துவிடும் என்று சிஷ்யன் சொன்னான்.
இந்த ஊர் மக்கள் என்னைக்கு நம்முடைய பித்தலாட்டத்தை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு லேசாக இருக்கிறது சிஷ்யா என்றார் சாட்டையடி சாமியார்.
குருவே நீங்க எதுக்குமே பயப்படாதீங்க நாம்மா செல்போனை வச்சித்தான் பொழப்பு நடத்தனும் என்ற அவசியம் கிடையாது ஏனென்றால் உங்களுடைய செல்வாக்கு இந்த ஊருக்குள்ளே பெருகிவிட்டது நீங்கள் சொல்வதுதான் நடக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள் அதனால் இனிமேல் நமக்கு வருமானம் சற்று கூடுதலாக கிடைக்கும் அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருங்க குருவே என்று மற்றொரு சிஷ்யம் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் அதேபோல நம்மா செல்போன் விஷயத்துல கொஞ்சம் கவனமாக இருக்கணும் மொதல்ல ஒரு வீட்டின் அருகில் செல்போனை ஒளிச்சு வைக்கிற வேலையை கவனமா பார்க்கணும் அதுக்கப்புறம்
12 மணிக்கு நம்ம செல்போனுக்கு போன் செய்யணும்
நம்முடைய செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது பக்கத்துல இருக்கிற குடும்பம் பேய் இருப்பதாய் நெனச்சி பயந்து போவாங்க அதுக்கப்புறம் மறு நாளைக்கு நம்மிடம் வந்து முறையீடு வாங்க
நான் பேயை ஓட்டுவது போல மறுநாள் ராத்திரிக்கு போகும் அப்போது ஒருத்தர் நம்ம பூஜை அறையிலேயே இருந்துகிட்டு 12 மணிக்கு மேல் செல்போனுக்கு போன் செய்வீங்க
நானும் உங்களில் ஒருவரை கூட்டிக்கொண்டு
பேய் விரட்டுவது போல செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வந்து விடுவோம் இதில் எந்த ஒரு தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்ளனும் இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிந்தால் நம்மை மூன்று பேரையும் பண்ணையார் பசங்க உண்மையாகவே சாகடித்து பேயாக மாத்திடுவாங்க அதனால இந்த செல்போனை ஒளித்து வைக்கும் போது கவனமா நடந்துக்கணும் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யர்களிடம் சொன்னார்.
அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் குருவே இப்போது எங்களுக்கு பசிக்குது என்றான் சிஷ்யன்.
எனக்கும்தான் பசிக்குது நீங்கள் இருவரும் வழக்கமான கடைக்கு சென்று நான் சொன்னேன் என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு எனக்கும் வாங்கிக் கொண்டு வாங்க என்று தனது இரண்டு சிஷ்யன் களையும் அனுப்பி வைத்தார் சாட்டையடி சாமியார்.
தம்பி ...நம்மா கொடுக்கிற ஐடியா வைச்சுகிட்டு அந்த ஆளு இந்த ஊரில் நல்லா ஏமாற்றுகிறார் ஆனால் நமக்கு மட்டும் காசு கொடுக்காமல் இந்த ஊர் மக்களைப் போலவே நம்மையும் ஏமாற்றுகிறார் குரு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும தம்பி என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
அவரை மீறி நம்மால் என்ன செய்ய முடியும் அண்ணா
நம்ம குரு நம்மிடம் வேலையையும் ஐடியாவையும் வாங்கிக் கொள்கிறார் ஆனால் பணம் கொடுப்பதில் மட்டும் நம்மிடம் கஞ்சதனம் பார்க்கிறார் அவரை விட்டுவிட்டு வேறு எங்கும் நம்மால் பொழப்பு நடத்த முடியாது அதனால்தான் அவரிடமே இருக்கிறோம்
ஏதோ நிம்மதியாக சாப்பிடுகிறோம் என்று இரண்டாவது சிஷ்யன் சொன்னான்.
இப்படியே நம்ம குருவுக்கு ரெண்டு பேரும் ஐடியா சொல்லிக் கொடுத்து அவரை பெரிய
ஆளக்கி விட்டோம் ஆனால் நம்ம ரெண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவரைதான் கையேந்தும் நிலைமையை மாற்ற வேண்டும் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் முக்கால்வாசி வேலையை நம்ம தான் செய்கிறோம் ஆனால் எல்லாம் பணத்தையும் அவரே தான் வசிக்கிறார் நம்மால் அவரை மீறி என்ன செய்ய முடியும் என்றான் இரண்டாவது சிஷ்யன்.
அந்த செல்போனை நம்ம குருவுக்கு தெரியாமல் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வீட்டின் அருகில் ஒளிக்கவைத்து நள்ளிரவில் அந்த செல்போனுக்கு நம்மிடம் இருக்கும் இன்னொரு செல்போனில் போன் செய்யலாம் அப்போது ஒளிக்க வைத்த செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது அந்த குடும்பம் பேய் வந்துவிட்டது என்று நினைத்து நம் குருவிடம் காலையில் ஓடி வருவார்கள் அவர்களை நாம் இருவரும் பாதிவழியில் மடக்கி நாங்கள் அந்த பேயை விரட்டுகிறோம் எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று பேசி விடலாம் பிறகு மறுநாள் நான் பேய் ஓட்டுவது போல அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன் நீ குருவுக்கு தெரியாமல் செல்போனுக்கு போன் செய்து கொண்டிரு
நானும் பேய் விரட்டுவது போல விரட்டிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு அந்த குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் இப்படி நம் குருவுக்கு தெரியாமலே நம்ம இரண்டு பேரும் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
நீ சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது நாமும் நாலு காசு பார்க்கலாம் என்றால் நம் குருவுக்கு தெரியாமல் இந்த ஊரை ஏமாற்ற வேண்டும் என்று இரண்டாவது சிஷ்யனும் சொன்னான்
சரி சரி நம்ம இப்போதைக்கு குருவுக்கு நல்ல சிஷ்யனா நடந்து கொள்ளணும் சமயம் பார்த்து நம்ம ரெண்டு பேரும் நம்முடைய திட்டத்தை ஒரு நாளைக்கு செய்யலாம் என்று இரண்டு சிஷ்யர்களும் ஒன்றுகூடி பேசி குருவுக்கு தெரியாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை தீர்மானித்தார்கள்.
நாட்கள் நகர்ந்தது.....
ஆரம்பத்தில் சங்கரும் அவனுடைய நண்பர்களும் பண்ணையார் தோட்டத்தில் வேலைக்குச் சென்று வந்த நிலையில் மெல்ல மெல்ல ஊர்மக்களும் ஒவ்வொரு குடும்பமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்கள் ரேகாவின் அம்மா லட்சுமி அம்மாள் ஊரில் உள்ள பெண்களிடம் .
தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம் முதலில் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகலாம் பிறகு காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது பற்றி பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி பெண்களை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றால் லட்சுமி அம்மாள் இப்படி ஊர்மக்கள் பழையபடி எல்லோரும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்பினார்கள்.
ஊர் மக்கள் பழையபடி எல்லோரும் வேலைக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்து சாதாரணமாக இருந்து விடாதே இனிமேல்தான் நீ கவனமாக இருக்க வேண்டும் என்றார் பண்ணையார் ..பரந்தாமனிடம்.
நீங்கள் சொல்வதும் சரிதான் அப்பா இனிமேல் நம்ம தோட்டத்தில் ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதபடி நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்று பரந்தாமன் தனது அப்பாவிடம் சொன்னான்.
இப்ப ஊர் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையை இனிமேல் சிறிதளவுகூட குறையாமல் பார்த்துக் கொள்ளனும்.
சரி அப்பா அப்படியே பார்த்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு சின்ன வருத்தம் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்றான் பரந்தாமன்.
ஏன் என்ன ஆச்சு ..எல்லோருக்கும் வேலை இல்லையா என்று கேட்டார் பண்ணையார்.
பம்புசெட்டில் தங்கி இரவு முழுக்க நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சினால் தான் காலையில் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை இருக்கும்
ஆனால் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்யாததால் பகலில் மட்டும் தண்ணீர் பாய்வதால் பாதி நிலத்திற்கு மட்டுமே தண்ணீர் பாய்கிறது அதனால் ஊர் மக்களுக்கும் பாதி பேருக்கு மட்டுமே வேலை இருக்கிறது அதனால் அனைவருக்கும் வேலை கொடுப்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்றான் பரந்தாமன்.
இப்போதைக்கு அனைவருக்கும் வேலையை சமமாக கொடுத்து எல்லோருக்கும் பணமும் கொடுத்துவிடு பிறகு மெல்ல மெல்ல நிலைமை சரியாகிவிடும் என்று பண்ணையார் சொன்னார்.
நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன் அப்பா என்று பரந்தாமன் சொன்னான்.
இன்னைக்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் அதனால் இன்று இரவு நமது ஊர் மக்களை வரச்சொல் என்று சங்கரிடம் முத்தையா சொன்னார்.
என்ன முக்கியமான முடிவு அப்பா என்றான் சங்கர்.
பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதைப் பற்றி ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் அதனால் நீ நம்ம ஊரில் உள்ளவர்களிடம் இன்று இரவு வரச்சொல் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முத்தையா சொன்னார்.
தாத்தா ஏதோ ஒரு பெரிய திட்டத்தை வச்சிருக்காரு அதனால் தான் எல்லோரையும் இன்று இரவு நம் வீட்டுக்கு கூப்பிடுகிறார் . அதனால் நீங்க எல்லோரிடமும் தகவலை சொல்லிடுங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.
முத்தையாவின் திட்டத்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....
தொடரும்....
......மாலை நேரம்...
முத்தையாவும் லட்சுமி அம்மாளும் சங்கர் ரேகாவின் திருமணத்தைப் பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்கள் திண்ணை மீது அமர்ந்தபடி.
சங்கர் ரேகாவும் வீட்டுக்குள்ளே கட்டில் மீது இருவரும் ஓட்டிக்கொண்டு ஆசையோடு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
மாமா ..இன்னைக்கு நீங்கதான் சமைக்கணும் உங்களுடைய கைப்பக்குவம் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன் என்று ரேகா செல்லமாக சொன்னாள்.
இன்னைக்கு நீ சமைக்க போவதில்லையா . நான் தான் சமைக்கனும்மா. என்றான் சங்கர்.
ஆமாம் ..நீங்கதான் ரொம்ப வித்தியாசமா வீட்டு வாசலில் மலாக்கா படுத்துக்கொண்டே சமையல் செய்வீங்களே.
அந்த வித்தியாசமான சமையலின் ருசியை இன்னைக்கு எப்படி இருக்குன்னு பாக்குறேன் என்று கிண்டலாக சொன்னாள் ரேகா.
என்னோட சமையலைப் பத்தி உனக்கு தெரியாது .
நான் படுத்துக்கொண்டே சமையல் செய்தாலும் அதனோட ருசியே வேற தான் . ஆனா இப்போது நான் சமையல் செய்தாள் உங்க அம்மா உன்னை தான் திட்டுவாங்க அதனால ஒழுங்கா போயிட்டு சமையல் செய் என்று சொல்லிவிட்டு ரேகாவின் கன்னத்தை செல்லமாக கடித்தான் சங்கர்.
ஆமாம்மா .. நீங்க வைக்கிற குழம்பு சாம்பாரா
இல்லை ரசமா என்று தெரியாமல் தாத்தா தவித்தது எனக்குத் தெரியும் என்று கிண்டலாய் சொல்லி சிரித்தாள் ரேகா.
வீட்டுக்குள்ளே ரேகாவின் சிரிப்பு சத்தத்தை கேட்டு லட்சுமி அம்மாளுக்கும் முத்தையாவுக்கும் சந்தோஷமாக இருந்தது அப்போது லட்சுமி அம்மாள் முத்தையாவிடம் .
நான் காபி போட்டு எடுத்துக்கொண்டு வருகிறேன் அப்பா என்று சொல்லி விட்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்றால் லட்சுமி அம்மாள்.
சிறிது நேரம் கழித்து ரேகா சந்தோஷமாக வெளியே வந்து வாசலில் இருக்கும் அடுப்பை விரகு வைத்து தீ பற்ற வைத்து சமையல் செய்வதற்கு
தயார்றனால் .
அப்போது . திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பாசமாக பார்த்தாள் ரேகா. அப்போது முத்தையாவின் முகம் சோகமாக இருப்பதை உணர்ந்தால் ரேகா.
சற்று நேரத்தில் சமையலை செய்து முடித்தவுடன்
சுடசுட முத்தையாவுக்கு சாப்பாடு கொடுத்தால் ரேகா சிரித்த முகத்தோடு..
மறுபடியும் ரேகாவும் சங்கரும் கட்டிலில் படுத்தபடி நடந்ததையெல்லாம் சந்தோசமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
உன்னை எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று என் அப்பா சொல்லி இருக்கிறார் . அதனால் நீ ரொம்ப கடுமையாக உழைக்க வேண்டும் உன்னை நம்பி இனிமேல் இரண்டு குடும்பங்கள் இருக்கிறது என்று அப்பா சொல்லியிருந்தார் ஆனால் இந்த நேரம் பார்த்து பண்ணையார் தோட்டத்திற்கு யாரும் வேலைக்குப் போவதற்கு பயப்படுகிறார்கள் . காணாமல் போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு போகக்கூடாது என்று முடிவு செய்துகொண்டு
வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் இந்த நிலைமை எப்போது மாறுவது என்று சற்று வருத்தத்தோடு சொன்னான் சங்கர்.
நான் இந்த வீட்டு மருமகளாக வந்ததே எனக்கு பெரிய சந்தோஷம் இதற்கு மேல எனக்கு எந்த சந்தோஷமும் கிடையாது தாத்தா என் மீது உள்ள அக்கறையில் அப்படி உங்களிடம் சொல்லி இருப்பார்
அதனால் நீங்கள் அதையே நினைத்து வருத்தப்பட வேண்டாம் . என்னை பொறுத்தவரை எப்போதுமே உங்கள் கூடவே இருப்பது தான் எனக்கு ரொம்ப சந்தோஷம் அதனால் நீங்கள் தாத்தா சொன்னதை நினைத்து வருத்தப்படாதிங்க மாமா தாத்தாவுக்கு ஒரு பேரனோ பேத்தியோ வந்துவிட்டால் அவர் நம்மைப் பற்றி கண்டுக்கவே மாட்டார் எல்லாம் பாசத்தையும் பேரன் மீதும் பேத்தி மீதும் காட்டுவார் அதனால் அவர் சொன்னதை நினைத்து கவலைப் படாதீங்க எல்லோரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பயப்படுவார்கள் ஒருநாள் எல்லோரும் வேலைக்கு கிளம்புவார்கள் அப்போது நீங்களும் தாராளமாக வேலைக்கு சென்று சம்பாதித்து நம்ம குடும்பத்தை சந்தோசமா பாத்துக்குங்க .
இப்போ இருக்கிற வேலையை பாருங்க என்று சிரித்துக்கொண்டே சங்கரன் கட்டியணைத்தாள் ரேகா.
உங்க அம்மாவுக்கு சாப்பாடு கொடுத்தாயா என்று சங்கர் கேட்டான்.
அவங்க எப்ப வேணாலும் வந்து சாப்பிடுவாங்க என்று சொன்னாள்.
அப்படியெல்லாம் சொல்லாதே முதலில் அம்மாவுக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கொடுத்து விட்டு வா என்று சங்கர் சொன்னதும் .
ரேகாவும் சாப்பாடு எடுத்துக்கொண்டு எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு சென்று சாப்பாடு அம்மாவிடம் கொடுத்துவிட்டு திரும்பி வரும்போது திண்ணைமீது அமர்ந்திருந்த முத்தையாவை பார்த்தாள் ரேகா
அப்போது முத்தையா சாப்பாடு சரிவர சாப்பிடாமல் இருந்தார்.
ஏன் தாத்தா சாப்பாடு வச்சுட்டீங்க என்று முத்தையாவின் அருகில் அமர்ந்து ரேகா பாசமாக கேட்டாள்.
என்னன்னு தெரியலம்மா சாப்பாடு பிடிக்கலை என்று வருத்தத்தோடு சொன்னார் முத்தையா.
மனதில் எதையோ நினைத்துக்கொண்டு கவலைப்படுகிறார் தாத்தா என்று புரிந்துகொண்டு ரேகா தட்டில் இருந்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
என்ன புள்ள ..உங்க அம்மாவுக்கு சாப்பாடு வேண்டாமா ..அப்படியே எடுத்துக் கொண்டு வந்துட்டா என்று சங்கர் கேட்டான்.
இந்த சாப்பாடு தாத்தாவுக்கு போட்டது ..
என்னனு தெரியல திருமணம் ஆனதிலிருந்து அவர் எதையோ நினைத்து ரொம்பவே கவலைப்படுகிறார் சரியாகவே சாப்பிடுவதே கிடையாது ஒருவேளை என் மீது ஏதாவது கோபமா தாத்தாவிற்கு எதுவுமே தெரியலையே என்று வருத்தத்தோடு சொன்னாள் ரேகா.
உடனே சங்கர் முகம் சற்று சோகமாக மாறியது எதனால் அப்பா கவலையோடு இருக்கிறாய் என்று யோசித்தபடியே வெளியே வந்து திண்ணையில் அமர்ந்து இருக்கும் முத்தையாவை பார்த்தான் சங்கர்.
என்னப்பா ஆச்சு ..ரெண்டு நாளா சரியாவே சாப்பிடல உடம்புக்கு ஏதாவது முடியலையா என்று சங்கர் முத்தையாவின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
அதெல்லாம் ஒன்றுமில்லை மனசு சரியில்லை அதனால சாப்பிட பிடிக்கலை என்றார் முத்தையா.
தாத்தா நான் ஏதாவது தவறாக நடந்துக் கொண்டேனா என்று ரேகாவும் முத்தையாவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டு கேட்டாள்.
எனக்கு யார் மீதும் கோபம் இல்லை நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தாலே அதுவே எனக்கு போதும் என்னோட வருத்தம் .
என் நண்பன் பண்ணையார் இப்போது மிகவும் கவலையோடு இருக்கிறான்
இந்த நிலைமையில் என்னால் மட்டும் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று சொல்லி தலையை குனிந்தார் முத்தையா.
அவரோட மகன் திருமணம் நின்றுவிட்டதால் அவர் வருத்தத்தோடு இருக்கிறார் அதனால் நீங்களும் அதை நினைத்து படுத்தப்படுவதால் பிரச்சனை சரியாகி விடுமா என்று சங்கர் சொன்னான்.
அவனுக்கு இரண்டு பிரச்சனை... அவனுடைய மகன் திருமணம் நின்று போனதை விட இந்த ஊர் மக்கள் வேலை இல்லாமல் பயந்துகொண்டு பசியால் இருப்பதை நினைத்து தான் அவனுக்கு பெரும் கவலை என்றார் முத்தையா.
ஊர்மக்கள் பண்ணையார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தங்கி வேலை செய்த குடும்பம் மர்மமான முறையில் காணாமல் போனதை நினைத்து பயந்து கொண்டு யாரும் வேலைக்கு போகாமல் இருக்கிறார்கள்
இந்த நிலைமை மாறுவதற்கு சிறிது காலம் ஆகும் இதை நினைத்து கவலைப்படுவதால் யாருக்கும் பயனில்லை அப்பா என்று சங்கர் சொன்னான்.
ஊர் மக்கள் பயப்படுவது ஒரு பக்கம் இருக்கட்டும் பண்ணையார் தோட்டத்திற்கு நீ வேலைக்குப் போவதைப் பற்றி என்ன நினைக்கிறாய் என்று முத்தையா கேட்டார்.
எனக்கு ஒரு பயமும் கிடையாது ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி காணாமல்போனவர்கள் கிடைக்கும் வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யக் கூடாது என்று முடிவு செய்ததால். நானும் அதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்றான் சங்கர்.
எல்லோரும் பயப்படுவது இயல்பான விஷயம் தான் அதனால் வேலைக்குப் போகாமல் இப்படி கஷ்டத்தோடு வாழ்வதைவிட பயத்தை ஓரங்கட்டிவிட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவது தான் புத்திசாலித்தனம் என்றார் முத்தையா.
இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க அப்பா.
எல்லோரும் போலவே நீயும் வேலைக்கு போகாமல் இருக்க வேண்டாம் நீயும் உன்னுடைய நண்பர்களும் பண்ணையர் தோட்டத்திற்கு வேலைக்கு சென்று நல்லபடியாக வேலை செய்து பண்ணையார் தோட்டத்தை மறுபடியும் பழைய நிலைமைக்கு மாற்ற வேண்டும் அப்போது தான் என் மனமும் பண்ணையார் மனமும் ஒரு அளவுக்கு நிம்மதியாக இருக்கும் என்று முத்தையா சங்கரின் கையை பிடித்து சொன்னார்.
நீங்க சொன்னதைப் போலவே நாளையிலிருந்து நான் என் நண்பர்களோடு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகிறேன் நீங்கள் கவலைப்படாமல் இருங்கப்பா என்று முத்தையா வை சமாதானம் செய்துவிட்டு ரேகாவும் சங்கரும் வீட்டுக்குள்ளே சென்றார்கள்.
பொழுது விடிந்தது...🌄
சாந்தி காலையில் பரபரப்பாக பரந்தாமனை ..என்னங்க என்ற படி குரல் கொடுத்துக்கொண்டே எழுப்பினாள்.
என்னங்க சீக்கிரம் எழுந்திரிங்க.. தோட்டத்துக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் காத்துகிட்டு இருக்காங்க நீங்க இன்னும் இங்கேயே இருந்தால் எப்படி என்று பரந்தாமனிடம் சொன்னாள் சாந்தி.
சாந்தியின் வார்த்தை பரந்தாமனுக்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
என்னடி சொல்ற ...வேலைக்கு ஆட்கள் வந்து இருக்காங்களா உண்மையாகவா சொல்ற என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் பரந்தாமன்.
ஆமாங்க ...இன்னைக்கு நம்ம சங்கர் அவரோட நண்பர்கள் எல்லோரும் நம்ம தோட்டத்துக்கு வேலைக்கு வந்திருக்காங்களாம் இப்பத்தான் எனக்கு தகவல் தெரிந்தது நீங்க உடனே கிளம்பி தோட்டத்துக்கு போங்க என்று சொல்லி விட்டு சந்தோஷமாக வந்தாள் சாந்தி அப்போது பண்ணையார் சாந்தியின் சந்தோஷத்தைப் பார்த்து.
என்னம்மா... காலையிலே ஒரே பரபரப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிற என்றார் பண்ணையார்.
மாமா ...நான் சொன்னதைப் போலவே சங்கர் திருமணம் முடிந்ததும் ஒரு திருப்பம் ஏற்படும் என்று சொன்னேனே... இன்னைக்கு நம்ம தோட்டத்திற்கு சங்கரும் அவருடைய நண்பர்களும் வேலைக்கு வந்து இருக்காங்க இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய பிரச்சனையேல்லம் சரியாகிவிடும் என்று சந்தோஷமாக பண்ணையாரிடம் சொன்னால் சாந்தி.
பண்ணையாருக்கு சற்று சந்தோஷமாக இருந்தது.... கண்டிப்பாக இது முத்தையாவின் ஏற்பாடுதான் என்று நினைத்து சந்தோஷப்பட்டார் பண்ணையார்.
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் உற்சாகமாக தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.
கனகா குடும்பம் காணாமல் போன நாள் முதல் வெறிச்சோடிக் கிடந்த பண்ணையார் தோட்டம் சங்கர் அவனுடைய நண்பர்கள் நிலத்தில் மும்முரமாக வேலை செய்து இருப்பதை பார்த்து பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் சந்தோஷமாக இருந்தது.
அண்ணே இதுபோல ஊர் மக்கள் வேலை செய்ததை பார்த்து எத்தனை நாளாச்சு இனிமேல் இதேபோல ஊர் மக்கள் வேலைக்கு வந்தாள் நன்றாக இருக்கும் . நம்முடைய குடும்ப கௌரவம் இந்த விவசாயத்தில் தான் இருக்கிறது
நம்ம தோட்டத்தைப் பற்றி எல்லா கிராமத்திலும் பெருமையாக பேசுவார்கள் . இப்படிப்பட்ட நம்முடைய தோட்டம் கொஞ்ச நாளாக வாடி இருப்பதை பார்த்து அப்பாவுக்கு கவலையாக இருந்தது ஆனால் இனிமேல் சங்கரின் முயற்சியால் நம்முடைய தோட்டம் மெல்ல மெல்ல பழைய நிளமைக்கு வந்துவிடும் என்று சந்திரன் சந்தோஷமாக பரந்தாமனிடம் சொன்னான்.
ஆமாம் தம்பி இனிமேல் நம்ம இந்த ஊர் மக்களிடம் பாசமாக நடந்து கொள்ள வேண்டும் இன்னொரு முறை நம்மால் ஊர் மக்களுக்கு எந்த ஒரு திங்கும் ஏற்படுத்த கூடாது என்று பரந்தாமன் சொன்னான்.
அண்ணே... நாங்களும் குடிப்பதை நிறுத்தி விட்டோம் இனிமேல் நாங்கள் தேவையில்லாமல் எந்த ஒரு தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம் அண்ணே. இந்த ஊர் மக்கள் ஏதோ ஒரு புதிய முயற்சியோடு நம்முடைய தோட்டத்திற்கு வேலைக்கு வந்திருக்கிறார்கள் அவர்களின் சந்தோசத்தை இனிமேல் குறையாமல் நம்மா பார்த்துக்கொள்ளவேண்டும் அண்ணா என்று தீனா சொன்னான்.
சங்கரும் அவனுடைய நண்பர்களும் மும்முரமாக தோட்டத்தில் வேலை செய்வதைப் பார்த்து பரந்தாமனுக்கு எல்லை இல்லா சந்தோஷம்
அதே சமயத்தில் தம்பிகளும் இனிமேல் நாம் என்ன சொல்கிறோமோ அதை தான் கேட்பார்கள் அந்த அளவுக்கு நம்மிது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் இனிமேல் நம்முடைய திட்டத்திற்கு எந்த தடங்களும் இருக்காது மெல்லமெல்ல விவசாயத்தை பெருக்கி அதில் வரும் லாபத்தை நம் பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டியை எப்படியாவது இன்னும் சில மாதங்களில் நிரப்பிவிட வேண்டும் என்று நினைத்து பரந்தாமன் சந்தோஷமாக ஒரு உற்சாகத்தோடு வேலை செய்யும் தொழிலாளர்களை பார்த்துக்கொண்டு கம்பீரமாக நின்றான்.
⛺மழைக்காலம் வந்தாலே நமக்கு தொழில் செய்யறதுக்கு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்ன சிஷ்யா என்று சாட்டையடி சாமியார் சொன்னார்.
ஆமாம் குருவே ..நம இந்த ஊர் மக்களை பேய் இருப்பது போல பயமுறுத்தி வருகிறோம் ஆனால் இந்த மழைக்காலம் வந்தால் நம்ம நினைத்தபடி செல்போனை ஒளித்து வைப்பதில் சிரமமாக இருக்கிறது மழை வந்தால் நம்முடைய செல்போன் நினைந்துவிடும் அதன் பிறகு நம்மால் தொழில் செய்வதற்கு கஷ்டமாகவே இருக்கும்
இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் மழை வரும் பிறகு வெயில் காலம் ஆரம்பித்து விடும் அதுக்கப்புறம் நம்முடைய செல்போனுக்கு வேலையும் வந்துவிடும் என்று சிஷ்யன் சொன்னான்.
இந்த ஊர் மக்கள் என்னைக்கு நம்முடைய பித்தலாட்டத்தை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு லேசாக இருக்கிறது சிஷ்யா என்றார் சாட்டையடி சாமியார்.
குருவே நீங்க எதுக்குமே பயப்படாதீங்க நாம்மா செல்போனை வச்சித்தான் பொழப்பு நடத்தனும் என்ற அவசியம் கிடையாது ஏனென்றால் உங்களுடைய செல்வாக்கு இந்த ஊருக்குள்ளே பெருகிவிட்டது நீங்கள் சொல்வதுதான் நடக்கும் என்று எல்லோரும் நம்புகிறார்கள் அதனால் இனிமேல் நமக்கு வருமானம் சற்று கூடுதலாக கிடைக்கும் அதனால் நீங்கள் கவலைப்படாமல் இருங்க குருவே என்று மற்றொரு சிஷ்யம் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் அதேபோல நம்மா செல்போன் விஷயத்துல கொஞ்சம் கவனமாக இருக்கணும் மொதல்ல ஒரு வீட்டின் அருகில் செல்போனை ஒளிச்சு வைக்கிற வேலையை கவனமா பார்க்கணும் அதுக்கப்புறம்
12 மணிக்கு நம்ம செல்போனுக்கு போன் செய்யணும்
நம்முடைய செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது பக்கத்துல இருக்கிற குடும்பம் பேய் இருப்பதாய் நெனச்சி பயந்து போவாங்க அதுக்கப்புறம் மறு நாளைக்கு நம்மிடம் வந்து முறையீடு வாங்க
நான் பேயை ஓட்டுவது போல மறுநாள் ராத்திரிக்கு போகும் அப்போது ஒருத்தர் நம்ம பூஜை அறையிலேயே இருந்துகிட்டு 12 மணிக்கு மேல் செல்போனுக்கு போன் செய்வீங்க
நானும் உங்களில் ஒருவரை கூட்டிக்கொண்டு
பேய் விரட்டுவது போல செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு வந்து விடுவோம் இதில் எந்த ஒரு தவறும் நடக்காமல் பார்த்துக் கொள்ளனும் இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரிந்தால் நம்மை மூன்று பேரையும் பண்ணையார் பசங்க உண்மையாகவே சாகடித்து பேயாக மாத்திடுவாங்க அதனால இந்த செல்போனை ஒளித்து வைக்கும் போது கவனமா நடந்துக்கணும் என்று சாட்டையடி சாமியார் சிஷ்யர்களிடம் சொன்னார்.
அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் குருவே இப்போது எங்களுக்கு பசிக்குது என்றான் சிஷ்யன்.
எனக்கும்தான் பசிக்குது நீங்கள் இருவரும் வழக்கமான கடைக்கு சென்று நான் சொன்னேன் என்று இருவரும் சாப்பிட்டுவிட்டு எனக்கும் வாங்கிக் கொண்டு வாங்க என்று தனது இரண்டு சிஷ்யன் களையும் அனுப்பி வைத்தார் சாட்டையடி சாமியார்.
தம்பி ...நம்மா கொடுக்கிற ஐடியா வைச்சுகிட்டு அந்த ஆளு இந்த ஊரில் நல்லா ஏமாற்றுகிறார் ஆனால் நமக்கு மட்டும் காசு கொடுக்காமல் இந்த ஊர் மக்களைப் போலவே நம்மையும் ஏமாற்றுகிறார் குரு இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டணும தம்பி என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
அவரை மீறி நம்மால் என்ன செய்ய முடியும் அண்ணா
நம்ம குரு நம்மிடம் வேலையையும் ஐடியாவையும் வாங்கிக் கொள்கிறார் ஆனால் பணம் கொடுப்பதில் மட்டும் நம்மிடம் கஞ்சதனம் பார்க்கிறார் அவரை விட்டுவிட்டு வேறு எங்கும் நம்மால் பொழப்பு நடத்த முடியாது அதனால்தான் அவரிடமே இருக்கிறோம்
ஏதோ நிம்மதியாக சாப்பிடுகிறோம் என்று இரண்டாவது சிஷ்யன் சொன்னான்.
இப்படியே நம்ம குருவுக்கு ரெண்டு பேரும் ஐடியா சொல்லிக் கொடுத்து அவரை பெரிய
ஆளக்கி விட்டோம் ஆனால் நம்ம ரெண்டு பேரும் சாப்பிடுவதற்கு அவரைதான் கையேந்தும் நிலைமையை மாற்ற வேண்டும் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
நீ சொல்வதும் சரிதான் முக்கால்வாசி வேலையை நம்ம தான் செய்கிறோம் ஆனால் எல்லாம் பணத்தையும் அவரே தான் வசிக்கிறார் நம்மால் அவரை மீறி என்ன செய்ய முடியும் என்றான் இரண்டாவது சிஷ்யன்.
அந்த செல்போனை நம்ம குருவுக்கு தெரியாமல் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வீட்டின் அருகில் ஒளிக்கவைத்து நள்ளிரவில் அந்த செல்போனுக்கு நம்மிடம் இருக்கும் இன்னொரு செல்போனில் போன் செய்யலாம் அப்போது ஒளிக்க வைத்த செல்போன் பேய் சிரிப்பது போல ரிங்டோன் அடிக்கும் அப்போது அந்த குடும்பம் பேய் வந்துவிட்டது என்று நினைத்து நம் குருவிடம் காலையில் ஓடி வருவார்கள் அவர்களை நாம் இருவரும் பாதிவழியில் மடக்கி நாங்கள் அந்த பேயை விரட்டுகிறோம் எங்களுக்கு பணம் கொடுங்கள் என்று பேசி விடலாம் பிறகு மறுநாள் நான் பேய் ஓட்டுவது போல அவர்கள் வீட்டுக்கு செல்கிறேன் நீ குருவுக்கு தெரியாமல் செல்போனுக்கு போன் செய்து கொண்டிரு
நானும் பேய் விரட்டுவது போல விரட்டிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்டு அந்த குடும்பத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன் இப்படி நம் குருவுக்கு தெரியாமலே நம்ம இரண்டு பேரும் பணம் சம்பாதிக்கலாம் என்று முதல் சிஷ்யன் சொன்னான்.
நீ சொல்வதெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது நாமும் நாலு காசு பார்க்கலாம் என்றால் நம் குருவுக்கு தெரியாமல் இந்த ஊரை ஏமாற்ற வேண்டும் என்று இரண்டாவது சிஷ்யனும் சொன்னான்
சரி சரி நம்ம இப்போதைக்கு குருவுக்கு நல்ல சிஷ்யனா நடந்து கொள்ளணும் சமயம் பார்த்து நம்ம ரெண்டு பேரும் நம்முடைய திட்டத்தை ஒரு நாளைக்கு செய்யலாம் என்று இரண்டு சிஷ்யர்களும் ஒன்றுகூடி பேசி குருவுக்கு தெரியாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை தீர்மானித்தார்கள்.
நாட்கள் நகர்ந்தது.....
ஆரம்பத்தில் சங்கரும் அவனுடைய நண்பர்களும் பண்ணையார் தோட்டத்தில் வேலைக்குச் சென்று வந்த நிலையில் மெல்ல மெல்ல ஊர்மக்களும் ஒவ்வொரு குடும்பமாக பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார்கள் ரேகாவின் அம்மா லட்சுமி அம்மாள் ஊரில் உள்ள பெண்களிடம் .
தேவையில்லாமல் யாரும் பயப்பட வேண்டாம் முதலில் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகலாம் பிறகு காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது பற்றி பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லி பெண்களை பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றால் லட்சுமி அம்மாள் இப்படி ஊர்மக்கள் பழையபடி எல்லோரும் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்பினார்கள்.
ஊர் மக்கள் பழையபடி எல்லோரும் வேலைக்கு வந்து விட்டார்கள் என்று நினைத்து சாதாரணமாக இருந்து விடாதே இனிமேல்தான் நீ கவனமாக இருக்க வேண்டும் என்றார் பண்ணையார் ..பரந்தாமனிடம்.
நீங்கள் சொல்வதும் சரிதான் அப்பா இனிமேல் நம்ம தோட்டத்தில் ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாதபடி நான் கவனமாக பார்த்துக் கொள்கிறேன் என்று பரந்தாமன் தனது அப்பாவிடம் சொன்னான்.
இப்ப ஊர் மக்களுக்கு இருக்கிற நம்பிக்கையை இனிமேல் சிறிதளவுகூட குறையாமல் பார்த்துக் கொள்ளனும்.
சரி அப்பா அப்படியே பார்த்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு சின்ன வருத்தம் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது என்றான் பரந்தாமன்.
ஏன் என்ன ஆச்சு ..எல்லோருக்கும் வேலை இல்லையா என்று கேட்டார் பண்ணையார்.
பம்புசெட்டில் தங்கி இரவு முழுக்க நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சினால் தான் காலையில் ஊர் மக்கள் அனைவருக்கும் வேலை இருக்கும்
ஆனால் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்யாததால் பகலில் மட்டும் தண்ணீர் பாய்வதால் பாதி நிலத்திற்கு மட்டுமே தண்ணீர் பாய்கிறது அதனால் ஊர் மக்களுக்கும் பாதி பேருக்கு மட்டுமே வேலை இருக்கிறது அதனால் அனைவருக்கும் வேலை கொடுப்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது என்றான் பரந்தாமன்.
இப்போதைக்கு அனைவருக்கும் வேலையை சமமாக கொடுத்து எல்லோருக்கும் பணமும் கொடுத்துவிடு பிறகு மெல்ல மெல்ல நிலைமை சரியாகிவிடும் என்று பண்ணையார் சொன்னார்.
நானும் அந்த நம்பிக்கையில் தான் காத்திருக்கிறேன் அப்பா என்று பரந்தாமன் சொன்னான்.
இன்னைக்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் அதனால் இன்று இரவு நமது ஊர் மக்களை வரச்சொல் என்று சங்கரிடம் முத்தையா சொன்னார்.
என்ன முக்கியமான முடிவு அப்பா என்றான் சங்கர்.
பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதைப் பற்றி ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டும் அதனால் நீ நம்ம ஊரில் உள்ளவர்களிடம் இன்று இரவு வரச்சொல் அனைவரும் ஒன்றுகூடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று முத்தையா சொன்னார்.
தாத்தா ஏதோ ஒரு பெரிய திட்டத்தை வச்சிருக்காரு அதனால் தான் எல்லோரையும் இன்று இரவு நம் வீட்டுக்கு கூப்பிடுகிறார் . அதனால் நீங்க எல்லோரிடமும் தகவலை சொல்லிடுங்க என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.
முத்தையாவின் திட்டத்தால் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்பட போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்....
தொடரும்....