Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed பண்ணையார் தோட்டம் மர்மம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...10 👇


என்ன குருவே ஆரம்பத்துல இருந்த வருமானம் இப்போதைக்கு இல்லையே என்றான் சிஷ்யன்.

அவசரப்படாத டா கொஞ்சம் கொஞ்சமா தான் .பிடிக்கணும் ஒரேடியா இந்த ஊரை மிரட்டினாள் அப்புறம் ஊருல பேய் தொல்லை அதிகமாயிடுச்சு அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டணும் என்று ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி பண்ணையார்றிடம் சொல்லிட்டா. அதுக்கப்புறம் அந்தப்
பண்ணையாரு உண்மையான மந்திரவாதியை அழைத்து வந்து பார்க்கச் சொல்வார் . உண்மையான மந்திரவாதி நம்முடைய செட்டப்பை கண்டுபிடித்துவிட்டால் அப்புறம் நம்மளால இந்த ஊர்ல இருக்க முடியாது .

பேயே இல்லாத ஊர்ல நம்ம செல்போன் வச்சுக்கிட்டு பேய் இருக்கிறதா மிரட்டி பணம் சம்பாதிக்கிறோம் இப்படிப்பட்ட விஷயத்தை எல்லாம் கொஞ்சம் பொறுமையா தான் கையாள னும் சிஷ்யா .

இதில் பணத்துக்கு ஆசைப்பட்டு அவசரப்படக்கூடாது . தங்க முட்டை போடும் வாத்து கதை போல நம்முடைய கதையும் ஆகிவிடும் என்றார் சாட்டையடி சாமியார்.

நீங்கள் சொல்வதும் சரிதான் குருவே . இதுக்கு முன்னாடி நம்ம இருந்த ஊருல அந்த ஊர் மக்கள் முட்டாளாக இருந்தாலும் .
கேள்வி கேட்பதில் வல்லவனாக இருக்கிறாங்க . ஆனா இந்த ஊருல அப்படி யாருமே இல்லை .
நம்ம பேய் இருக்குதுன்னு சொன்னதும் மறு பேச்சு பேசாமல் பணத்தை கொடுக்குறாங்க என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.

ஒரு குடும்பத்தில் குழந்தை பிறந்தால் . அந்த குழந்தை அவன் தாத்தா ஜாடையில் இருப்பான் இல்லை அவன் அப்பா ஜாடையில் இருப்பான் அப்படியும் இல்லை என்றால் . அவன் சொந்தங்களில் யாராவது ஒருவர் ஜாடையில் இருப்பான் இதுதான் வழக்கம் இதை மையமாக வைத்துதான் நான் அந்த ஊரில் பூஜை செய்து உன் அப்பா மீண்டும் உன் வயிற்றில் பிறப்பார் என்று சொல்லி பணம் சம்பாதித்து இருந்தோம் .
ஆனால் அந்த முட்டாள் பசங்கள் நம் பூஜையை நம்பி பணமும் கொடுத்தார்கள் . ஆனால் கேள்விகளும் அதிகமாக கேட்கிறாங்க .
அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியவில்லை அந்த தொல்லையால் இங்கு இந்த ஊருக்கு ஓடி வந்து விட்டோம் ஆனால் இந்தப்
பண்ணையார்புறத்தில் யாரும் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கவில்லை அதனால் இந்த ஊர் மக்களை சாதாரணமாக நினைக்கக்கூடாது .
இந்த ஊர் மக்களுக்கு எல்லாம் தலைவன் .பண்ணையார் .அடுத்தது அவருடைய நண்பன் முத்தையா . இந்த இரண்டு பேரின் பேச்சுதன் இந்த ஊர் மக்கள் கேட்பாங்க . அதனால் நம்ம கொஞ்சம் உஷாராக இருக்கணும் இந்த பண்ணையாரும் இந்த முத்தையாவும் நம்மை மதிக்கிறது கிடையாது. எல்லோரும் நம்மளை பார்த்தால் கையெடுத்து கும்பிடுகிறார்கள் ஆனா இந்த பண்ணையாரும் . பண்ணையார் பசங்களும் நம்மள மதிக்கிறதே கிடையாது . அதேபோல இந்த முத்தையாவும் அவனுடைய மகன் சங்கரும் நம்மள மதிக்கிறதே கிடையாது அதனால இந்த ஊர் மக்களிடம் நம்ம உஷாரா இருக்கணும் . இன்னும் முழுசா இந்த ஊர் மக்கள் நம்மை நம்பள அப்படிதான் நம்ம எடுத்துக்கணும் என்னைக்கி பண்ணையார் பசங்களும் முத்தையாவின் மகன் நம்மள மதிக்கிறார்களோ அன்னைக்குத்தான் இந்த ஊரே நம்ம கைக்கு அடங்கிடாங்க என்று நினைச்சுகணும் .
அதுவரைக்கும் நம்ம இந்த ஊர் மக்களிடம் கொஞ்சம் உஷாராக தான் இருக்கணும் .
என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

ஆமாம் குருவே பண்ணையார் பசங்க பாக்குறதுக்கு தேவர் மகன் கமலைப் போலவே மூன்று பேரும் இருக்கானுங்க .அவனுங்க நம்மல ஒரு அடி அடிச்சா கூட நம்மால தாங்க முடியாது . அதேபோலத்தான் முத்தையாவின் மகன் நம்ம விஜயகாந்த் மாதிரி இருக்கான் அவன் அடிச்சாலும் நம்மள தாங்க முடியாது . அதனால இந்த ஊருல நம்ம கொஞ்சம் அடங்கித்தான் இருக்கணும் குருவே என்று அந்த சிஷ்யன் சொன்னான்.

சிறிது நாட்கள் போகட்டும் ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையார் மகன் திருமணத்தைப் பற்றியும் முத்தையாவின் மகன் திருமணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு சந்தோஷமா இருக்காங்க .
இந்த நேரத்தில நம்ம பயமுறுத்தின அவ்வளவு நல்லா இருக்காது கொஞ்ச நாள் போகட்டும் என்றார் சாட்டையடி சாமியார்.


பம்புசெட்டில் ஏற்கனவே காணாமல் போன குடும்பத்தை தேடுவதற்காக பரந்தாமனும் அவனது தம்பிகளும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

மூன்று பேரும் ஒரே இடத்தில் தேடாமல் ஆளுக்கொரு திசையில் தேடுங்க . அப்பத்தான் ஏதாவது ஒரு தகவல் கிடைக்கும் என்றால் சாந்தி.

சற்று சோர்வாக இருந்த பரந்தாமன் சாந்தியின் பேச்சு மேலும் எரிச்சலை உண்டாக்கியது .இவளுக்கும் என் அப்பனுக்கும் வேற வேலையே இல்ல . எப்ப பார்த்தாலும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்ற நெனப்பவே இருக்காங்க .
என்று மனதில் நினைத்துக்கொண்டு எரிச்சலோடு சாந்தியை பார்த்தான் பரந்தாமன்.


நீ சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் மூன்று பேரும் ஆளுக்கு ஒரு திசையில் தான் தேடுகிறோம் நிச்சயம் சீக்கிரத்துல அவங்க கிடைத்திடுவாங்க என்று சாந்தியிடம் சொன்னான் பரந்தாமன்.

என் மகன்களுக்கு எல்லாமே தெரியும் . இருந்தாலும் நீங்கள் கொஞ்சம் நேரமானாலும் பரவாயில்லை அவர்களை தேடுவதை நிறுத்தாதீங்க என்று பண்ணையார் சொல்லிக்கொண்டே தனது அறையிலிருந்து வெளியே வந்தார்.

சந்திரனின் திருமணத்திற்குல் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் ஏனென்றால் ஊரே நம்ம வீட்டு திருமணத்தைப் பற்றியும் என் நண்பனோட மகன் திருமணத்தைப் பற்றியும் நினைத்து சந்தோஷப் படுகிறார்கள் . ஆனால் . பாவம் அந்த வயதான பெரியவரும் அவர் மனைவியும் நமது மகன் இல்லையே என்ற ஏக்கத்தில் அவர்கள் யாரிடமும் பேசுவதே இல்லையாம் . அதனால் நீங்கள் அந்தப் பெரியவரின் மகனையும் மருமகளையும் திருமணத்துக்கு முன் கண்டுபிடித்துவிட்டால்
இந்த ஊரே சந்தோஷமாக இருக்கும் எனக்கும் மன நிறைவாக இருக்கும் அப்படியில்லையென்றால்
என் மனசுக்கும் ஒரு வருத்தம்தான் நமது பம்புசெட்டில் தங்கி வேலை செய்த ஒரு குடும்பம் காணாமல் போய்விட்டது . அதைப்பற்றி கவலை இல்லாமல் பண்ணையார் அவருடைய மகன் திருமணத்தை சிறப்பாக நடத்துகிறார் என்று ஒரு சிலர் மனதுக்குள் நினைப்பார்கள் அவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ . என் மனது அப்படிதான் நினைக்கும் என்று பண்ணையார் சற்று வருத்தமாக சொன்னார்.

நிச்சயம் தம்பி திருமணத்திற்குல் அவர்களை நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அப்பா என்று சொல்லிவிட்டு பரந்தாமனும் அவனது தம்பிகளும் புல்லட் பைக்கில் கிளம்பிவிட்டார்கள்.

பரந்தாமன் பைக்கை ஓட்டிக்கொண்டு சிறிது தூரம் சென்றதும் . அப்போது சந்திரனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தான்.

தம்பி உனக்கு இந்த பெண்ணை பிடித்து இருக்கா என்றான் பரந்தாமன் மோட்டார் பைக்கை ஓட்டியபடி.

சந்திரன் சற்று கூச்சத்தோடு பிடிச்சிருக்கு நா என்று மெதுவாக சொன்னான்.

பயப்படாத சொல்லு தம்பி . உனக்கு இந்தப் பெண்ணை விட இன்னும் அழகான பெண்ணை பார்த்து நான் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் . நீ உன் மனசுல பட்டதை என்னிடம் சொல்லு தம்பி என்றான் பரந்தாமன்.

அப்பாவுக்கும் . அன்னிக்கும் எல்லோருக்குமே இந்தப் பெண்ணை பிடித்து விட்டது அண்ணா என்றான் சந்திரன்.

அவர்களைப் பற்றி நீ கவலைப் படாதே . உனக்கு பிடித்திருக்கிறதா அதை மட்டும் சொல் . ஏனென்றால் உன் மனதில் நல்ல அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று நீ மனதில் நினைத்து இருப்பாய் அதனால் தான் கேட்கிறேன் உனக்கு அந்தப் பெண் பிடிக்கவில்லை என்றால் என்னிடம் சொல் .
நான் உனக்கு அடுத்த வாரத்திலேயே இவளைவிட அழகான பெண்ணை பார்க்கிறேன் என்று சொல்லி.
பரந்தாமன் .சந்திரனின் மனதை மாற்றுவதற்கு முயற்சி செய்தான்.


அண்ணே .....அண்ணன் எப்ப பார்த்தாலும் அந்த பெண்ணோட போட்டோவை வச்சுக்கிட்டு சிரிச்சுகிட்டே இருக்காரு .
அவருக்கு அந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணே என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்.

தீனா உனக்கு இதெல்லாம் புரியாது சந்திரன் சொல்லட்டும் அந்தப் பெண் அவனுக்கு பிடிச்சிருக்கு என்று சொன்னான் பரந்தாமன்.

எனக்கு இந்தப் பொண்ணு ரொம்பவே பிடிச்சிருக்கு அண்ணா அவள் முகத்தைப் பார்த்ததுமே எனக்கு அவளுடன் ஏற்கனவே பழகியது போல உணர்வு ஏற்பட்டுவிட்டது அண்ணா . எனக்கு இந்தப் பெண்ணை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அண்ணா என்று ஆணித்தரமாக பளிச்சென்று சொல்லிவிட்டான் சந்திரன்.

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு மேலும் கோபம் தலைக்கேறியது . தம்பியிடம் ஏதாவது சொல்லி மனதை மாற்றி விடலாம் என்று நினைத்தாள் .இவன் அந்த பெண்மீது இவ்வளவு ஆசையோடு இருக்கிறானே என்று நினைத்து பரந்தாமனுக்கு எரிச்சலும் கோபமும் அதிகமானது அப்போது அவன் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினான் கோபத்தில்.

அப்போது பரந்தாமனின் கண்ணுக்கு ஒரு மதுக்கடை தெரிந்தது உடனே பைக்கை அந்த மதுக்கடை அருகில் பைக்கை நிறுத்தினான் பரந்தாமன்.

பைக்கை விட்டு இறங்கியதும் பரந்தாமன் காணாமல் போனவர்களை தேடுவது போல சுற்றுமுற்றும் திரும்பித் திரும்பி பார்த்தபடி நின்றான்.

சந்திரனும் தீனாவும் அவர்களும் சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்ததில் மதுக்கடை அவர்களின் கண்களில் பட்டது.

அண்ணன் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று சொல்லி இருக்காரே என்று தீனா மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தான்.

இன்னும் கொஞ்ச நாளுல நமக்கு திருமணம் ஆகப்போகிறது இனிமேல் குடிப்பதை நிறுத்திவிட வேண்டும் . அப்போதுதான் நம் மீது நம் மனைவி பாசமாக இருப்பாள் என்று சந்திரன் நினைத்துக்கொண்டு அவனும் அமைதியாக இருந்தான்.

மதுக்கடையை பார்த்ததும் தம்பிகள் மது வேண்டும் என்று நம்மிடம் கேட்கவில்லையே . ஒருவேளை போனமுறை குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று திட்டி விட்டதால் .
அதனால் தயங்குகிறார்கள என்று நினைத்தான் பரந்தாமன்.


பரந்தாமன் சுற்றும்முற்றும் பார்ப்பதை தீனா கவனித்தான்.

உண்மையாகவே காணாமல்போனவர்களை தேட வேண்டுமா அண்ணா . என்றான் தீனா.

இல்லை இல்லை.. இங்கு அவர்கள் இருந்தாலும் நம்மால் அவர்களை அழைத்துச் செல்ல முடியாது ஏனென்றால் அவர்களுக்கு எதிரியே நம்ம மூணு பேரும் தான் . நம்மளை நமக்கே தெரியாமல் யாராவது கவனிப்பார்கள் .அதனால்தான் அவர்களை தேடுவது போல சுற்றும் முற்றும் பார்க்கிறேன் அப்போதுதான் நம் மீது யாருக்கும் சந்தேகம் வராது என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனும் தீனாவும் அவர்களும் தேடுவதை போல சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஆனால் மது வேண்டும் என்று பரந்தாமனிடம் அவர்கள் கேட்கவே இல்லை.

தம்பிகள் நம்மிடம் மது வேண்டும் என்று கேட்க மாட்டாரகள். நம் திட்டியதை நினைத்து பயந்து விட்டார்கள் . அதனால் நாமே அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து இப்போதைக்கு குடிப்பழக்கத்திற்கு அவர்களை ஆளாக்கி விட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு .
பரந்தாமன் தீனாவிடம் பணத்தை கொடுத்து மது வாங்கிக் கொள் தம்பி என்று சொன்னான் பரந்தாமன்.

வேண்டாம் அண்ணா என்றான் தீனா.

பரவாயில்லை இருவரும் மது வாங்கிக் கொள்ளுங்கள் நான் திட்டியதை நினைத்து பயந்து விட்டீர்களா என்று பாசமாக சொன்னான் பரந்தாமன்.

பரவாயில்லை அண்ணா இன்னைக்கு வேண்டாம் என்றான் சந்திரன்.

இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு திருமணம் நடக்கப் போகுது அதுக்கப்புறம் உன்னால குடிக்க முடியாது. அப்படி குடித்தாலும் சிறிதளவு தான் குடிக்க முடியும் அதுவும் உன் மனைவிக்குத் தெரியாமல் . அதனால்தான் சொல்கிறேன் இப்போது நன்றாக குடித்துவிடுங்கள் ஆசைதீர என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சு சந்திரனுக்கும் தீனாவுக்கும் சரியாகப்பட்டது அண்ணன் சொல்வதை போல் இப்போது குடித்து விடலாம் திருமணத்திற்கு பிறகு குடிப்பழக்கத்தை நிறுத்தி விடலாம் என்று இருவரும் நினைத்து மதுக்கடைக்கு சென்று மதுவை வாங்கிக் கொண்டார்கள் .

பிறகு மூவரும் வழக்கம்போல வீட்டுக்கு திரும்பினார்கள் அப்போது மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினார்கள்.


பரந்தாமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது சந்திரனும் தீனாவும்
மது குடிக்க சம்மதித்தது.

பிறகு மூவரும் வழக்கமாக பசுமையாக காணப்படும் வயல்பகுதியில் தண்ணீர் தொட்டி மேலே அமர்ந்தபடி மூவரும் தனிமையில் மது அருந்தினார்கள் அப்போது பரந்தாமன் மது அருந்தினான் . ஏனென்றால் அவன் மனம் சோகத்தில் இருந்ததால் .

பிறகு மூவரும் அந்த தண்ணீர் தொட்டி மேலே மல்லாக்காக படுத்துக் கொண்டார்கள் .
சந்திரன் மனதில் அவன் வருங்கால மனைவியே நினைத்தபடியே உளறிக்கொண்டு படுத்திருந்தான் போதையில் . பரந்தாமன் தம்பியின் திருமணத்தை இந்த முறை நம்மால் நிறுத்த முடியாது என்று நினைத்து வருத்தத்தில் புலம்பினான் . தீனாவின் மனதில் அழகாக நமது கட்டழகி கனகா தீனாவின் மனதில் நிரம்பி இருந்தால் கவர்ச்சியாக . இப்படி மூவரும் போதையில் படுத்திருந்தார்கள்.

முத்தையா ..லட்சுமி அம்மாள் ..ரேகா மூவரும் திண்ணை மீது அமர்ந்தபடி பேசினார்கள்.


கல்யாணத்துக்கு கொஞ்ச நாள் முன்னாடியே உன் அம்மா அப்பா உன் தம்பியை வர வச்சிடு என்று முத்தையா லட்சுமி அம்மாள் இடம் சொன்னார்.

ஆமாம் அப்பா முன்கூட்டியே வந்து ரேகாவுக்கு செய்யவேண்டிய முறையெல்லாம் என் தம்பி செய்யணும் . என்று லட்சுமி சொன்னாள்.

நம்ம ஊர் வழக்கப்படி எல்லோருடைய திருமணமும் நம்ம ஊர் அம்மன் கோவிலில் தான் நடக்கும் . இதை உன் அம்மா அப்பாவிடம் சொல்லிட்டியா.

நம்ம ஊரு பழக்கவழக்கம் எல்லாமே என் அப்பா அம்மாவுக்கு தெரியும் என்றால் லட்சுமி.

நம்ம ஊர் மக்களுக்கு கல்யாண சாப்பாடு ரொம்ப அற்புதமா செய்யணும் . எல்லோரும் வயிறார சாப்பிடணும் கல்யாணம் முடிந்த மறு நாளும் இந்த ஊர் மக்களுக்கு சாப்பாடு கொடுக்கணும் . இப்படி இரண்டு நாட்களுக்கு இந்த ஊர் மக்கள் வயிறார சாப்பிடனும் என்று முத்தையா சொன்னார்.


இப்படி முத்தையாவும் லட்சுமி அம்மாள் கல்யாணத்தைப் பற்றி சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்கள் .
ரேகா ஒன்றுமே பேசாமல் அமைதியாக அவர்களின் பேச்சை கவனிப்பது போல அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் .ஆனால் உண்மையில் ரேகாவின் மனதுக்குள் சங்கரையே நினைத்துக் கொண்டிருந்தது எப்போது வேலை செஞ்சு முடித்துவிட்டு வருவாரோ என்ற ஏக்கத்தில் அவள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது .

அப்போது சங்கர் சைக்கிளில் திடீரென்று வந்து நின்றான் .
உடனே ரேகாவுக்கு சங்கரை பார்த்ததும் சந்தோசத்தில் முகம் பளிச்சென்று ஆனது
கூடவே வெட்கம் அவளை கவ்விக்கொண்டது .
உடனே அங்கிருந்து எழுந்து எதிரே இருக்கும் தனது வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

ரேகா வெக்கப்பட்டு ஒடுவதை பார்த்த லட்சுமி அம்மாள் சிரித்தாள்.

இவ்வளவு நாளா இங்கதான் சுத்திகிட்டு வேலை செஞ்சுகிட்டு இருப்பா. கல்யாண பேச்சு ஆரம்பித்ததிலிருந்து . தம்பியை பார்த்தாலே வீட்டுக்குள்ள ஓடிப் போயிர வெட்கப்பட்டு கிட்டு என்று சொல்லிக்கொண்டு சிரித்தாள் லட்சுமி அம்மாள்.

சங்கர் சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு ரேகா அமர்ந்திருந்த இடத்தில் சங்கர் அமர்ந்துகொண்டான்.

அப்பா அடுத்த வாரம் பண்ணையார் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வர போறாராம் சொல்லி அனுப்பினார் என்றான் சங்கர்.

அப்படியா வரட்டும் அவனை பார்த்து ரொம்ப நாளாச்சு .

எதுக்குப்பா குடும்பத்தோடு வரறு பண்ணையார்.

அவன் ஏற்கனவே சொல்லியிருந்தான் .
உன் மகனுக்கு திருமணம் முடிவு செய்தாள் . உன் மருமகளுக்கு நான்தான் சீர் செய்வேன்
இது என்னோட முடிவு இதற்கு நீ மறுப்புத் தெரிவிக்க கூடாது
அவள் உனக்கு மட்டும் மருமகள் அல்ல . எனக்கும் மருமகள்தான் அதனால் என் மருமகளுக்கு என் விருப்பம் போல நான் சீர் செய்வேன் என்று சொல்லியிருந்தான் அதனால் அவன் ரேகாவுக்கு சீர் கொண்டு வருவதற்குத்தான் அப்படி சொல்லியிருப்பான் என்று முத்தையா சொன்னார்.


அப்போது லட்சுமி அம்மாளுக்கு மனசு மேலும் சந்தோஷமானது பண்ணையார் குடும்பத்தோடு வந்து நம் மகளுக்கு சீர் செய்யப் போகிறார் . அதேசமயம் நமது மகள் திருமணம் இந்த ஊரே சந்தோசமாக கொண்டாடப் போகிறது என்று நினைத்து பெருமைப் பட்டாள்.


ஒரு நாள் ...கனகா ஏற்கனவே பம்புசட்டில் வேலை செய்து காணாமல் போனவர்களை பற்றி யோசித்திருந்தால் . எதனால் அவர்கள் இங்கிருந்து ஓடிவிட்டார்கள் என்று.

அப்படி என்ன அவர்களுக்கு இந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் எதற்காக துணிமணிகளையும் பாத்திரங்களையும் குழிதோண்டி புதைக்க வேண்டும் . என்று யோசித்தாள்
இவர்கள் காணாமல் போனதாள் பண்ணையாரும் ரொம்ப வருத்தப்படுகிறார் . ஊர் மக்களும் வருத்தப்படுகிறார்கள் இப்படி எல்லோருமே அவர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார்கள் ஆனால் இவர்கள் எதற்காக பாத்திரங்களையும் துணி மணியும் புதைத்துவிட்டு இங்கிருந்து ஓடினார்கள் என்ற சந்தேகத்தில் அங்குமிங்குமாக ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என்று சந்தேகப் பார்வையோடு பம்பு செட்டின் அறையில் எல்லாம் இடத்திலும் தேடிப்பார்த்தால்

அப்போது பக்கத்து அறையில் பண்ணையாரின் மனைவியின் படம் இருக்கும் பூஜை அறையிலும் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தால் அப்போது அவளுக்கு எந்த தடயமும் கிடைக்கவில்லை .

பிறகு வெளியே வந்து குழப்பத்தோடு நின்றாள் .அப்போது அவள் கணவன் ஊமையன் இரண்டு கைகளில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு வருவதை கவனித்தாள் .
ஊமையன் கனகாவிடம் மது பாட்டில்களை காண்பித்தான்.

கனகாவுக்கு சந்தேகம் மேலும் அதிகமானது . வேலை செய்யும் இடத்தில் யாரும் குடிக்க மாட்டார்கள் இதை யார் குடித்துவிட்டு போட்டிருப்பார்கள் என்று யோசித்தாள் . ஒரே மர்மமாக இருக்கிறதே இங்கு நடப்பதெல்லாம் புதிராகவே தெரிகிறதே இனிமேல் எதையும் நம்ம சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முடிவு செய்தாள் கனகா.


மர்மத்தை கண்டுபிடித்து விடுவாளா கனகா .....பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் .... 11👇


தாத்தா உங்கள் பிள்ளைக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லை சரியாவே பேசுவதும் கிடையாது என்று ரேகா வீட்டை சுத்தம் செய்து கொண்டே வெளியே திண்ணை மீது அமர்ந்திருக்கும் முத்தையா விடம் சொன்னாள் .

ஏம்மா அப்படி சொல்ற.. உன் மேல அவனுக்கு நிறைய பாசம் இருக்கு உனக்குத்தான் அது தெரியவில்லை என்று முத்தையா சொன்னார்

தாத்தா.. பொய் சொல்லாதீங்க என் மேல பாசம் இருந்தா வேலையை முடித்து விட்டு வரும்போது .எனக்கு பூ வாங்கிட்டு வந்து இருக்கணும் ஆனால் அவர் அப்படி செய்யலையே . நேரா வீட்டுக்கு வர வேண்டியது சாப்பிட வேண்டியது . தூங்க வேண்டியது மறுபடியும் வேலைக்கு போக வேண்டியது இப்படியே தான் இருக்கிறார் . நமக்குன்னு ஒருத்தி இருக்கிறாளே என்ற பாசம் கொஞ்சம்கூட இல்லை என்று சொல்லிக்கொண்டே வீட்டை சுத்தம் செய்தால்.

அவனைப் பத்தி உனக்கு எல்லாமே தெரியும் . இருந்தாலும் அவனை நீ பொறுப்போடு இருக்கணும் என்று நீயே சொல்லு .
இனிமேல் அவனை உன் வழிக்கு நீதான் கொண்டுவரணும் . என்கிட்ட சொன்னா நான் என்ன பண்ணுவேன் என்றார் முத்தையா.

ஆமாம் தாத்தா.. நீ சொல்றதும் சரிதான் . இனிமேல் வாய மூடிக்கிட்டு இருந்தா அவர் இஷ்டத்திற்கு வருவாரு போவாரு இனிமேல்பாரு என்னோட வேலையை காட்டுகிறேன் .
என்று வீட்டை சுத்தம் செய்து கொண்டு நிமிர்ந்தவள் சற்று அதிர்ச்சி அடைந்தாள். வாசலில் சங்கர் நின்றுகொண்டு இருப்பதை பார்த்து.


ரேகாவுக்கு சங்கரை பார்த்ததும் மனசு பட பட பட வென அடித்தது
நம் பேசியது எல்லாம் கேட்டு இருக்குமோ. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக சற்று பயந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு . வெளியே வாசலை பெருக்கினாள்.

அப்போது சங்கர் ரேகாவை பார்த்தபடியே வீட்டுக்குள்ளே சென்றான்.

இதோ வந்துட்டான் பாரு ..போயிட்டு இவ்வளவு நேரம் எங்க போயிருந்த என்று போயிட்டு கேளும்மா என்றார் முத்தையா ரேகாவிடம்.

ரேகாவுக்கு சங்கரை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியாமல் முழிததாள்.

சென்னம்மா தயங்குற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் வரட்டும் இன்னிக்கே எல்லாத்தையும் கேட்கிறேன்னு சொன்னா . போம்மா உள்ள . போயிட்டு கேள் என்றார் முத்தையா.

ரேகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தயங்கிக்கொண்டே வீட்டுக்குள்ளே சென்றாள் .

சங்கர் சட்டையை கழட்டிவிட்டு பனியனையும் கழட்டிவிட்டு
ஒரு லுங்கி அணிந்து கொண்டு தண்ணீர் குடித்து இருந்தான் திரும்பிக்கொண்டு.

ரேகா அமைதியாக சங்கரின் முதுகைப் பார்த்தபடி நின்றிருந்தாள்

சங்கர் தண்ணி குடித்துவிட்டு திரும்பியதும் ரேகா நின்றிருப்பதை பார்த்து உடனே பக்கத்திலிருந்த டவலை எடுத்து உடம்பின் மீது போட்டுக்கொண்டான் .

என்ன புள்ள நான் வந்தா அப்போ இன்னிக்கி வரட்டும் ஆவார் என்று ஏதோ சொல்லிக்கிட்டு இருந்த என்று கேட்டான் சங்கர்.

நான் என்ன சொன்னேன் நான் எதுவுமே சொல்லலையே .
நான் தாத்தா கிட்ட பேசிகிட்டு இருந்தேன் என்று தரையைப் பார்த்தபடி மெதுவாக சொன்னாள் ரேகா.

இல்லையே ...என் மேல பாசமே இல்ல ....அதுக்கு அப்புறம்
வாய மூடிக்கிட்டு இருந்தா இஷ்டத்துக்கு போ வாங்க வருவாங்க ......அதுக்கப்புறம் வேற எதோ சொன்னியே என்று சங்கர் சொன்னான்.

ஆமாம் சொன்னேன் ...நான் தான் சொன்னேன் ...உங்களுக்கு என் மேல பாசமே இல்ல ன்னு நான் தான் தாத்தாவிடம் சொன்னேன் என்று சங்கர் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்து சொன்னாள் ரேகா.

அப்போது ரேகாவின் வெகுளித்தனமான பேச்சும் குழந்தைபோல பேசியதும் அவனுக்கு ரொம்பவே பிடித்தது.

எனக்கு உன் மேல பாசம் இல்லையா ...எனக்கு உன்னை விட்டா வேற யாரு இருக்கா புள்ள என்று சங்கர் பளிச்சென்று சொல்ல இதைக்கேட்டதும் ரேகா உடனே தலையை நிமிர்ந்து சங்கர் முகத்தை பார்த்தாள்.

காலையில் எழுந்தவுடன் உன்னை பார்த்துவிட்டு தான்
நான் வேலைக்கு போவேன்
என்நேரமும் உன்னை என் மனதில் நினைத்துக் கொண்டுதான் இருப்பேன் . இப்படி நான் உன் மீது உயிரே வச்சிருக்கேன் .
ஆனா நீ என்னை புரிஞ்சுக்காம சொல்றியே என்றான் சங்கர்.

எனக்கும் தெரியும் என் மேல நீங்க உயிரே வச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு .
நான் தாத்தாவிடம் சும்மா சொன்னேன் நீங்க தினமும் வேலைக்கு போயிட்டு வரும்போது வெறும் கையோடு வர்றீங்க .
என்னை பத்தி நினைச்சுகிட்டு இருந்தா மட்டும் போதுமா .
எனக்கு பூ வாங்கிட்டு வர மாட்டேங்கிறீங்களே . அதனாலதான் தாத்தா கிட்ட சொன்னேன் அவர் உங்க கிட்ட சொல்லுவரு னு நினைச்சு தான் சொன்னேன் மாமா என்று பாசமாய் சொன்னாள் ரேகா.

ஆமாம் புள்ள எனக்கு இந்த யோசனையே வரல .உன்ன பத்தி நினைச்சுக்கிட்டே இருக்கேனே தவிர உன்னோட ஆசையை நான் புரிஞ்சுக்கல . இனிமேல் தினமும் பூ வாங்கிட்டு வரேன் என்றான் சங்கர்.

அப்போது ரேகாவுக்கு சற்று லேசாக கூச்சம் குறைய தொடங்கியது சங்கர் முகத்தை நன்றாக பார்த்துக்கொண்டே சற்று அவன் அருகில் சென்று நின்றாள் .

பாசமாக டீ போடவா மாமா என்று ஏக்கத்தோடு கேட்பதைப் போல கேட்டாள் ரேகா.

டீ அப்புறம் போடுவ ..தாத்தா வேற என்ன உன் கிட்ட சொன்னாரு .

தாத்தா என்னிடம் வேறு எதுவும் சொல்லலையே.

என்கிட்ட உன்ன பத்தி நிறைய சொல்லி இருக்காரு.

தாத்தா என்ன பத்தி அப்படி என்ன உங்க கிட்ட சொன்னாரு என்று சங்கர் முகத்தை ஆசையாய் பார்த்துக்கொண்டே கேட்டால்.

உன்ன ராணி போல நான்
பார்த்துகணமா . இந்த ஊரே ஆச்சரியப்படும் அளவுக்கு உன்னை சந்தோஷமா பாத்துக்கணுமா உனக்கு நிறைய துணிமணி நகை எல்லாத்தையும் வாங்கி கொடுக்கணுமா . உன் மனசு கவலைப்படும் படி . நான் இருக்கக் கூடாதா இப்படி நிறைய உன்னை பத்தி என்கிட்ட சொன்னாரு.

நான் இந்த வீட்டு மருமகளா வருவதே நான் செஞ்ச புண்ணியம் இதுவே எனக்கு போதும் .
உங்ககூட நான் சேர்ந்து இருந்தாலே நான் ராணி போலதான்
எனக்கு உங்க கூடவே இருக்கணும் அதுதான் என் ஆசை
மற்றபடி புடவை மீது நகைகள் மீது எனக்கு ஆசை இல்லை
நான் உங்களை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் இதுதான் என் ஆசை என்று சொல்லிக்கொண்டே இன்னும் நெருக்கமாக நின்றாள் ரேகா.

ரேகாவின் பேச்சும் .
அவள் ஆசையோடு நெருக்கமாக நின்று இருபதும் . சங்கருக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது அவனுக்கு ரேகாவை கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் மனசு துடித்தது ஆனால் திண்ணை மீது அப்பா இருக்கிறார் என்ற எண்ணம் அவனை தடுத்தது ..
அப்போது அவன் பாசமாக ரேகாவின் தலைமிது கை வைத்து தடவியபடி சொன்னான்.

இன்னும் கொஞ்ச நாள்ல பண்ணையார் மகன் சந்திரனின் திருமணம் முடிந்துவடும் .
அதன் பிறகு நம்முடைய திருமணமும் முடிந்துவிடும்
அதுக்கு அப்புறம் இந்த ராணி சொல்வதைத்தான் இந்த வீட்டில் சட்டம் என்று ரேகாவின் கண்களை பார்த்து ஏக்கத்தோடு அவள் தலையை தடவியபடி சொன்னான் சங்கர்.

உடனே ரேகா வெட்கத்தில் சிரித்துக்கொண்டு .வெளியே ஓடிவந்து தனது வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.

இவ்வளவு நேரமா எங்க போயிருந்தீங்க என்று சண்டை போடுவாள் என்று பார்த்தால் சிரிச்சுகிட்டே போராளே.
என்று முத்தையா மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.


பண்ணையார் குடும்பத்தோடு பெண் வீட்டிற்கு சென்று பெண்ணை நேரில் பார்த்தார்கள் .அவர்களுக்கும் பெண்ணை ரொம்பவே பிடித்துவிட்டது போட்டோவில் பார்த்ததை விட நேரில் தேவதை போல் இருந்தாள் .

சந்திரனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ...நேரில் பெண் தேவதை போல இருப்பதை பார்த்து மிரண்டு போனான் சந்தோசத்தில் அதேசமயம் நன்றாக படித்து இருக்கிறாள் ஆனால் நாம் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து இருக்கிறோம் இந்த உண்மை அவளுக்கு தெரியுமா என்று நினைத்து வருத்தப்பட்டான்

எங்களுக்கு பெண்ணை ரொம்ப புடிச்சு போச்சு அடுத்த மாதத்தில் திருமணத்தை வச்சுக்கலாம் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லுங்கள் என்றார் பண்ணையார்.

எங்களுக்கு உங்கள் குடும்பத்தைப் பற்றி நல்லாவே தெரியும் உங்கள் பிள்ளைகள் உங்களை போலவே குணம் கொண்டவர்கள் உங்களுடைய குடும்பத்தின் பெருமை இந்த சுத்து வட்டாரத்தில் இருக்கும் எல்லா ஊர்களுக்கும் தெரியும் . உங்கள் குடும்பத்தில் நாங்கள் சம்பந்தம் வைத்துக் கொள்வது எங்களுக்குத்தான் பெருமை .அதோடு மாப்பிள்ளை பத்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறார் என்று நாங்கள் எங்கள் பெண்ணிடம் சொன்னோம் .
அதற்கு அவள் ..படிப்பைவிட ஒழுக்கம்தான் முக்கியம் என்று சொல்லி அவள் விருப்பத்தை சொல்லிவிட்டாள் அவள் பட்டப்படிப்பு படித்திருக்கிறாள் அவளுக்கு எல்லாமே புரியும் அதனால் நீங்கள் தாராளமாக திருமண வேலையை ஆரம்பிக்கலாம் என்று பெண்ணோட அம்மா சொன்னார்

பிறகு அனைவரும் சந்தோஷமாக உணவு அருந்தினார்கள் .
அப்போது சந்திரனுக்கு பாசமாக உணவு பரிமாறினால் சந்திரனின் வருங்கால மனைவி .

இதை கவனித்த பரந்தாமனுக்கு இனிமேல் நம்மால் திருமணத்தை நிறுத்த முடியாது என்று நினைத்து சோர்வடைந்தான் பரந்தாமன்.


பிறகு வழக்கம்போல பரந்தாமனும் அவனது தம்பிகளும் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள்.

களத்துமேட்டில் பைக்கை நிறுத்தி விட்டு மூவரும் நடந்து சென்றார்கள் அப்போது எதிரே கனகாவின் மகன் பள்ளிக்கூடத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தான் .
அவனை பரந்தாமன் முறைத்தபடி பார்த்தான் . பதிலுக்கு கனகாவின் மகனும் பரந்தாமனை பார்த்து வணக்கம் சார் என்று நெற்றியில் கை வைத்து சொன்னான்.

அவனுடைய பணிவு ...எரிச்சலாக இருந்த பரந்தாமனின் மனம் சற்று அமைதி கொண்டது .
பதிலுக்கும் பரந்தாமனும் வணக்கம் சின்ன பண்ணையார் என்று சொன்னான் .
அப்போது அந்த சிறுவனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது நம்மளை சின்ன பண்ணையார் என்று அந்த அண்ணன் சொல்கிறாரே என்று நினைத்துக்கொண்டு சந்தோசத்தில் துள்ளி குதித்து ஓடினான் பள்ளிக்கூடத்திற்கு.

பிறகு வழக்கம்போல ஆளுக்கொரு திசையில் தோட்டத்தை சுற்றிப் பார்க்க சென்று விட்டார்கள்.

தம்பியின் மனைவி நன்றாக படித்து இருக்கிறாள் ..கண்டிப்பா அவள் விவசாயத்தில் ஈடுபடுவாள் அப்பாவும் அவள் சொல்வதற்கெல்லாம்
தலையட்டுவார். இனிமேல் நம்முடைய திட்டங்கள் எல்லாமே எடுபடாது . பம்புசெட்டில் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டி இன்னும் கொஞ்சம் பணம் போட்டால் நிரம்பிவிடும் . ஆனால் இப்போது நடக்கும் சம்பவத்தை எல்லாம் பார்க்கும் போது
அந்த பெட்டியை நிரப்ப முடியாது போல்தெரிகிறது என்று நினைத்து வருத்தப் பட்டான் பரந்தாமன்

ஆனால்..அவன் மனம் ஏதாவது செய்து திருமணத்தை நிறுத்தி விடவண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது ஆவணும் நன்றாக யோசித்துப் பார்த்தான் . தம்பிகளை எந்த விஷயத்தில் சிக்க வைப்பது என்று அவர்களை குடி காரணங்களாக மாற்றிவிடலாம் என்று நினைத்தாலும் இப்போதெல்லாம் குடிப்பதற்கு தயங்குகிறார்கள் அவர்களை எப்படி குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குவது அதுவும் முடியாத காரியம்

அடுத்தபடியாக பெண்களுக்கு அடிமையாக்கி விடலாம் என்று பார்த்தாலும் . அவர்களுக்கு கனகா மீது தான் ஆசை இருக்கிறது ஆனால் கனகா இதுபோன்ற விஷயத்திற்கு அவள்
ஒத்துக்கொள்ள மாட்டாள் .
இப்படி எந்த விஷயமும் சரியாகப் படவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

உடனே பரந்தாமன் பாம்பு சட்டை நோக்கி வேகமாக நடந்து வந்தன் நேரம் ஆகிவிட்டது என்பதால் அப்போது பம்பு செட்டின் அருகில் இருக்கும் பலா மரத்தின் பின்னால் சந்திரனும் தினாவும் மறைந்து நின்று . பம்பு செட்டின் தண்ணீர்தொட்டியில் கனகா குளித்து இருப்பதை பார்த்து கொண்டு இருந்தார்கள் .

சந்திரனுக்கு கனகா குளிப்பதை ஒளிந்திருந்து பார்ப்பது தவறு என்று நினைத்தான் .
ஆனால் கனகாவின் கட்டழகு அவனை இழுத்தது .
அவனால் கனகாவின் அழகை பார்க்காமல் இருக்க முடியவில்லை.

இதை பரந்தாமன் கவனித்தான்... அப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது .
கனகாவை எப்படியாவது தம்பிகளிடம் ஒன்று சேர வைத்துவிட வேண்டும் .
அதன் பிறகு கனகா விருப்பப்பட்டால் அவளுக்கு நிறைய பணம் கொடுத்து சந்திரனை மயக்கி கனகாவிடம் அடிமையாக்கி விட வேண்டும். பிறகு இந்த விஷயம் பெண் வீட்டுக்கு தெரிந்துவிடும் திருமணமமும் நின்றுவிடும். என்று பரந்தாமன் திட்டம் போட்டான்.

கனகா குளித்துவிட்டு பம்பு செட்டுக்கு உள்ளே சென்று கதவை சாத்திக் கொண்டாள் துணி மாற்றுவதற்கு.

அப்போது சந்திரனுக்கும் தீனாவுக்கும் . கனகா மீது இருந்த மோகம் . மேலும் அதிகமாகியது அவளை பாவாடையில் பார்த்தது அவர்களுக்கு மேலும் காமப்பசியை தூண்டியது . இருந்தாலும் அவளை நம்மால் அனுபவிக்க முடியாது அவள் அழகை ரசித்தது நம்முடைய அதிர்ஷ்டம் என்று இருவரும் நினைத்துக்கொண்டு பம்பு செட்டின் அருகே நின்றார்கள்

பரந்தாமன் எதையும் கவனிக்கவில்லை என்பது போல சாதாரணமாக வந்து ....என்னப்பா கிளம்பலாமா என்றான்.

போலாம் அண்ணா ...என்ன இவ்வளவு நேரமா தோட்டத்தை பார்த்துகிட்டு இருந்தீங்க அண்ணா என்றான் தீனா.

ஆமாம்பா ...இன்னைக்கு நேரம் போனதே தெரியவில்லை இன்னும் கொஞ்ச நேரம் இருங்க
நான் அம்மாவின் பூஜை அறைக்கு சென்று திருநீரை வச்சுக்கிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டினான் .

அம்மா தம்பியின் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று எனக்கு தெரியவில்லை . நான் தம்பியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று துடிப்பதை பார்த்து நீ கோபப்படாதே . எனக்கு தம்பிகள் மீது எந்த கோபமும் கிடையாது தம்பிகள் மீது மட்டும் இல்லை
யார் மீதும் எனக்கு கோபம் கிடையாது . என்னுடைய ஒரே லட்சியம் . இந்த எல்லாம் நிலங்களையும் நானே ஆள வேண்டும் இதுதான் என்னுடைய லட்சியம் .இதற்கு இடஞ்சலாக யார் வந்தாலும் நான் அவர்களை சும்மா விடமாட்டேன் . அதனால் தான் இப்போது தம்பியின் திருமணத்தை நான் நிறுத்துவதற்கு துடிக்கிறேன் மற்றபடி தம்பிகள் மீது எனக்கு எந்த கோபமும் கிடையாது
அவர்களை நான் சந்தோஷமாக பார்த்துக்கொள்வேன் . இந்த ஒரு முறை மட்டும் எனக்கு நீ உதவி செய்தால் போதும் . ஏனென்றால் என் விருப்பத்தை சிறுவயதில் நீ தான் பூர்த்தி செய்வே .
தம்பி அழுதாலும் பரவாயில்லை என்று நினைத்து அவனிடம் இருக்கும் பொருளை பிடிங்கி நீ என்னிடம் கொடுத்து விடுவாய் ஏனென்றால் என் பிடிவாதத்தை பற்றி உனக்கு நல்லாவே தெரியும்

அதனால் இப்போது சந்திரன் திருமணத்தை நிறுத்தினால் தான் நான் சந்தோஷமாக இந்த எல்லாம் நிலங்களையும் ஆள முடியும்
தம்பி களையும் நான் சந்தோஷமாக பார்த்துக் கொள்வேன் அதனால் இப்போது எனக்கு ஒரு யோசனை சரியாகப் படுகிறது
இந்த கனகாவை வைத்து தம்பியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன் இதற்கு நீயும் எனக்கு துணையாக நின்று என் திட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் தாயே . நான் உன்னை நம்பித்தான் இந்த விஷயத்தில் இரங்குகிறேன் என்று மனமுருக கும்பிட்டு விட்டு வெளியே வந்தவன் . உடனே சந்திரனையும் தீனாவையும் பார்த்து குரல் கொடுத்தான்.

சந்திரனும் தீனாவும் அண்ணனின் குரலை கேட்டு கிளம்பும்போது பம்புசெட்டின் கதவை சாத்திக்கொண்டு இருந்த கனகா புடவை கட்டிக்கொண்டு பளிச்சென்று பார்ப்பதற்கு மிகவும் அழகாக வெளியே வந்தாள்.

கனகா மூவரையும் பார்த்தாள் உடனே பரந்தாமனிடம் ...ஐயா சிறிது பணம் கொடுங்கள் கத்திரிசெடியில் பூச்சி அதிகமாக இருக்கிறது
உடனே மருந்து வாங்கிக் கொண்டு வந்து தெளித்தால்தான் செடி நன்றாக வளரும் என்று பரந்தாமனை பார்த்து கேட்டாள் கனகா.

பரந்தாமனும் கனகாவின் முகத்தை பார்த்தபடி . சர்ட் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

கனகா பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்தாள்.

ஐயா இவ்வளவு பணம் எதற்கு வேண்டாம் . வெறும் ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்றாள் கனகா.

பரவாயில்லை மீதி பணத்தை நீயே வச்சுக்க மா என்றான் பரந்தாமன்.

இவ்வளவு பணம் வேண்டாம் ஐயா.

பரவாயில்லை வேறு ஏதாவது மருந்து செலவுக்கு வச்சுக்கம்மா என்று பாசமாய் சொல்வதைப் போல நடித்தான் பரந்தாமன்.

அப்போது சந்திரனும் தீனாவும் கனகாவின் பின்னழகை ரசித்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.


மீதிப் பணத்தை நானே எடுத்துக் கொள்கிறேன் ஐயா ...அடுத்த மாத சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்றாள் கனகா.

சரி சரி ...உன் விருப்பப்படியே செய் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

பண்ணையார் வீட்டிலும் முத்தையா வீட்டிலும் கல்யாண வேலை சிறப்பாக துவங்கியது .
இரண்டு குடும்பத்திலும் கல்யாணத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

நம்ம சந்திரன் திருமணத்துக்கு முன்னாடியே நம்ம ஊரு மக்களுக்கு எல்லோருக்குமே புது துணி எடுத்துக்கொடுத்து திருமணத்துக்கு கட்டிக் கொண்டு வரவேண்டும் என்று சொல்லிவிடலாம் என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

நல்ல யோசனை தான் மாமா ஆனால் இந்த வேலையெல்லாம் உங்கள் நண்பரிடம் விட்டுவிடுங்கள் அப்போதுதான் அவருக்கும் கௌரவமாக இருக்கும் என்று சாந்தி சொன்னாள்.

பரவாயில்லையே எனக்கே இந்த யோசனை தோணலையே
என் நண்பன் மீது உனக்கும் அக்கறை இருக்கு .
நீ சொன்னபடியே என் நண்பன் முத்தையாவின் தலைமையில் இந்த ஊர் மக்களுக்கு புது துணி எடுத்துக் கொடுத்து . அவன் கையால் என் மகனுக்கு தாலி எடுத்துக்கொடுத்து இந்த திருமணத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பண்ணையார் சொன்னார்.

என் மனசுக்கு இப்பதன் ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா
நான் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்து என் குடும்பத்தில் என் மைத்துனருக்கு இப்படி .யோசித்து யோசித்து .திருமணத்தை செய்வது எனக்கு சந்தோஷமகவும் பெருமையாகவும் இருக்குது மாமா என்று சாந்தி பண்ணையாரிடம் சொல்லி பெருமைப் பட்டாள்.


ஒரு நல்ல நாள் பார்த்து குடும்பத்தோடு ஜோசியரிடம் சென்று திருமணத் தேதியை குறிக்க வேண்டும் என்று லட்சுமி அம்மாள் இடம் முத்தையா சொன்னார்.

இனிமேல் எல்லாமே உங்க விருப்பம் தான் அப்பா ..
நீங்கள் என்னைக்கு சொல்கிறீர்களோ அன்னைக்கு குடும்பத்தோடு ஜோசியரிடம் போகலாம் என்றார் லட்சுமி அம்மாள்.

அப்போது சங்கரை அழைத்தார் முத்தையா ..
வருகிற வெள்ளிக்கிழமை குடும்பத்தோடு ஜோசியரை பார்த்து திருமணத் தேதியை குறித்து விடலாம் . அதன் பிறகு திருமணத்துக்கு இரண்டு நாள் இந்த ஊருக்கே விருந்து அளிக்க வேண்டும் .
அதற்கு சமையல்காரரை பார்த்து திருமண தேதியை சொல்லி விடு இனிமேல் உனக்கு நிறைய வேலை இருக்கு . திருமணத் தேதியை குறித்ததும் . நமது வீட்டிலும் ரேகாவின் வீட்டிலும் பச்சைப் பந்தல் போட வேண்டும் . அந்த வேலையை உன் நண்பர்களை அழைத்துக்கொண்டு முடித்து விடு என்று முத்தையா சொன்னார்.

சங்கருக்கு அவன் அப்பாவின் பேச்சில் திருமண கலை அவன் முகத்தில் தெரிந்தது .
இனிமேல் நமக்கு ஒரு புது வாழ்க்கை ஆரம்பமாக போகிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டான்.


ஊரில் உள்ள மக்கள் ....ஒரே சந்தோசத்தில் ஆட்டம் ஆடிக் கொண்டும் .பாட்டுப் பாடிக் கொண்டும் .துள்ளிக் குதித்தார்கள்.


தொடரும்...
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்.... 12 👇


பண்ணையார் காலையில் எழுந்ததும் பரபரப்பாக காணப்பட்டார்.

அம்மாடி உன் வீட்டுக்கரனும் சந்திரனும் தினாவும் வந்துட்டாங்களா . இன்னைக்கு என் நண்பனோட வீட்டுக்கு போக போறோம் என்ற விஷயத்தை
நீ உன் கணவனிடம் சொல்லிட்டியா என்று பண்ணையார் சாந்தியிடம் கேட்டார்.

ராத்திரியே சொல்லிட்டேன் மாமா காலையில சீக்கிரமா எழுந்து கிளம்புங்க என்று சொல்லிக் கொண்டே பரந்தாமனை எழுப்புவதற்காக சென்றாள்.

என்னங்க ...என்னங்க.. என்று இரண்டு முறை குரல் கொடுத்தால் சாந்தி.

என்னமா வேணும் உனக்கு .. கொஞ்ச நேரம் தூங்க விட . என்று பரந்தாமன் சொன்னான்.

நான்தான் ராத்திரியே உங்க கிட்ட சொல்லியிருந்தேனே . இன்னைக்கி உங்க அப்பாவோட நண்பர் வீட்டுக்கு போகணும் முன்னு சீக்கிரம் எழுந்திரிங்க.

நான் வரல ..நீங்க போயிட்டு வாங்க என்று பரந்தாமன் கண்களை மூடிக் கொண்டே சொன்னான்.

நீங்க வரலையா ...அங்கே உங்க அப்பா கத்திக்கிட்டு இருக்காரு நீங்க இன்னும் கிளம்பலையா என்று. நீங்களே வந்து அவர்கிட்ட சொல்லிடுங்க நான் வரலைன்னு.

சரி சரி ...நான் அப்பாவிடம் சொல்கிறேன் நீ போ என்றான் பரந்தாமன்.

என்னம்மா சொல்ற ...
உன் வீட்டுக்காரன் வரவில்லை என்றால் . அவன் தம்பிகளும் வரமாட்டாங்க இவனுங்க எங்க போனாலும் மூணு பேரும் ஒன்னாதான் போவானுங்க வருவானுங்க . இப்போ உன் கணவன் வரவில்லை என்றால் எப்படி .

குடும்பத்தோடு போயிட்டு சந்தோசமா சீர் கொடுத்துட்டு
வந்தாதானே நமக்கு கௌரவமாக இருக்கும் . நம்மை நம்பி தானே நம்ம ஊர் மக்கள் இருக்கிறார்கள் அவர்கள் வீட்டு விசேஷம் என்றால் நம்ம குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டாமா .
என்று பண்ணையார் சாந்தியிடம் சொல்லிவிட்டு .
உடனே பரந்தாமா என்று குரல் கொடுத்தார்.

உடனே பரந்தாமன் அப்பா கூப்பிடுகிறார் என்று. எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டு வெறும் உடம்போடு வெளியே வந்து என்னப்பா என்றான்.

என் நண்பனோட வீட்டுக்கு குடும்பத்தோடு போகலாம் என்று இருந்தேன் . நீ வரவில்லை என்று சொன்னியாமே என்றார் பண்ணையார்.

ஆமாம் அப்பா... இன்னைக்கு காணாமல்போனவர்களை தேடுவதற்காக போலாம் என்று முடிவு செய்திருக்கிறேன் ..அப்பா என்றான் பரந்தாமன்.


வாரத்தில் இரண்டு நாட்கள் தானே காணாமல் போனவர்களை
தேட போவீர்கள்.. இரண்டு நாளுக்கு முன்னாடி தானே போய்ட்டு வந்தீங்க அதுக்குள்ள இன்னைக்கு கிளம்பிட்டீங்களா என்றார் பண்ணையார்.

நீங்கதானே சொன்னீங்க அப்பா திருமணத்துக்குள் காணாமல் போனவர்களை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அதனால் தான் இன்று காணாமல் போனவர்களை தேடுவதற்காக போகலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் அப்பா என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் பண்ணையாருக்கு சற்று சந்தோஷமாக இருந்தது .
எப்படியும் காணாமல் போனவர்களை நமது மகன்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டது.

சரிப்பா ...நீ சொல்வதும் சரிதான் நீங்கள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக கிளம்புங்கள். நானும் என் மருமகளும் என் பேரனும் . என் நண்பன் வீட்டுக்கு கல்யாண சீர் கொடுத்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு பண்ணையார் முத்தையாவின் வீட்டுக்கு கிளம்பினார் .

அப்போது அவர் தங்க நகைகளையும் துணிமணிகளையும் எடுத்து பரந்தாமனிடம் காட்டினார் இதை தான் திருமண பரிசாக கொடுத்து விட்டு வருகிறோம் என்று பண்ணையார் சொன்னார்.

பரந்தாமனுக்கு தங்க நகைகளை பார்த்ததும் அவன் மனம் கோபத்தில் துடித்தது. 20 பவுன் நகை இருக்கும் போல் தெரிகிறதே இவ்வளவு பணத்தை அந்த கிழவன் முத்தையாவுக்கு கொடுக்கணுமா இப்படியே ஒவ்வொரு குடும்பத்திற்கும் சீர் என்று கொடுத்தாள் . நமது விவசாயத்தில் கிடைக்கும் லாபம் எல்லாம் இப்படி வீணாக போய் விடுமே என்று நினைத்து கோபப்பட்டான் . இருந்தாலும் முகத்தை சற்று இயல்பாக மாற்றிக்கொண்டு நன்றாக இருக்குது அப்பா நீங்கள் இந்த சீரை முறைப்படி உங்கள் நண்பர் வீட்டுக்கு கொடுத்து விட்டு வாருங்கள் . என்று சொல்லிவிட்டு பரந்தாமன் எரிச்சலோடு தனது அறைக்கு சென்று விட்டான்.


ஊர் மக்கள் அனைவரும் முத்தையாவின் வீட்டு வாசலில் ஒன்று கூடி இருந்தார்கள் .
இன்று பண்ணையார் வருவதால் அவருக்கு எல்லோரும் ஒன்று கூடி மரியாதை செய்ய வேண்டும் என்பதால் அனைவரும் ஒற்றுமையாக முத்தையாவின் வீட்டு வாசலில் நிரம்பி இருந்தார்கள் .

அப்போது அவர்கள் எதிர்பார்த்தபடியே பண்ணையாரும் சாந்தியும் அவளுடைய மகன் சிறுவன் சுரேஷ்ம் வந்தார்கள் அவர்களைப் பார்த்ததும் முத்தையாவுக்கு சங்கருக்கும் மற்றும் லட்சுமி அம்மாள் ரேகாவுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது அனைவரும் அவரை கைகூப்பி வணங்கி வரவேற்றார்கள்.

பண்ணையார் வந்தவுடனே திண்ணை மீது அமர்ந்திருக்கும் முத்தையாவின் அருகில் உட்கார்ந்து அவரை கட்டி அணைத்துக்கொண்டார்.

எப்படி இருக்க முத்தையா ...
நான் உன் மகனைப் பார்த்தாள் உன்னை பற்றி விசாரித்துக் கொண்டே இருப்பேன்.

நானும் உன்னைப்பற்றி என் மகனிடம் விசாரித்துக் கொண்டு தான் இருக்கிறேன் டா என்று பாசமாய் இருவரும் பேசினார்கள் அப்போது இரண்டு பேருக்கும் பழைய நினைவுகள் மலர தொடங்கியது . வாலிப வயதில் சுற்றித்திரிந்து. பிறகு திருமணமாகி பிள்ளைகளோடு விளையாடியதும் இருவருக்கு நினைவில் வந்தது

இவர்களின் நட்பை பார்த்து ஊர் மக்களும் சாந்தியும் பொறாமைபட்டார்கள் வயசானாலும் இவர்களின் நட்புக்கு இன்னும் வயசாகவில்லை என்று நினைத்து பெருமை பட்டார்கள்.

பிறகு பண்ணையார் எடுத்துவந்த சீரை தனது மருமகளிடம் கொடுத்து ரேகாவுக்கு கொடுக்க சொன்னார்

சாந்தியும் சந்தோஷமாக கொண்டுவந்த சீர் ரேகாவிடம் கொடுத்தால் சாந்தி . பிறகு பண்ணையார் ரேகாவிடம் சொன்னார்.

அம்மாடி நீ என் நண்பன் முத்தையாவுக்கு மட்டும் மருமகள் கிடையாது . எனக்கும் தான் நீ மருமகள் . நீ இந்த வீட்டில் வாழ்ந்தாலும் நீ எங்க வீட்டு மருமகள்தான் என்று சொன்னதும் அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்போது ரேகாவும் சங்கரும் பண்ணையாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டார்கள் .
பண்ணையாரும் சாந்தியும் அனைவரும் முத்தையாவின் வீட்டில் உணவு அருந்திவிட்டு கிளம்பினார்கள் . அப்போது பண்ணையார் சங்கரிடம் சொன்னார்.

நான் உன் திருமணத்திற்கு நான்தன் தாலி செய்து கொண்டு வருவேன் . இது நானும் முத்தையாவும் ஏற்கனவே முடிவு செய்ததுதான் என்று சொல்லிவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு கிளம்பினார்கள்.


🏍️அண்ணா ...இன்னைக்கு எதுக்காக காணாமல்போனவர்களை தேட வேண்டும் என்று அப்பாவிடம் சொன்னீங்க என்று தீனா கேட்டான்.

🏍️மோட்டார் பைக்கை ஒட்டியபடியே பரந்தாமன் சொன்னாள் இன்னைக்கு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு .
அதனால கொஞ்சம் மது குடிக்கலாம் என்று நினைத்தேன் அதனாலதான் அப்பாவிடம் பொய் சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என்றான் பரந்தாமன்.

அப்படியா அண்ணே ...
நான் என்னமோ ஏதோ என்று குழம்பி விட்டேன் . அண்ணன் காணாமல் போனவர்களை உண்மையாகவே தேட போகிறாரா என்று நினைத்தேன் என்றால் சந்திரன்.

ஒருவேளை காணாமல்போனவர்கள் நம் கண்ணுக்கு தென்பட்டாலும் அவர்களை மிரட்டி இன்னும் வெகு தூரத்திற்கு தூரத்தி விட வேண்டும் அப்போதுதான் நம்ம தப்பிக்க முடியும் . என்று பரந்தாமன் சற்று லேசாக சிரித்துக் கொண்டே சொன்னான்.

வழக்கம்போல மதுக்கடை அருகில் பைக்கை நிறுத்திவிட்டு பரந்தாமனே மது வாங்குவதற்கு சென்றான் . இது சந்திரனுக்கும் தீனாவுக்கும் ஆச்சரியமாக இருந்தது . நம்மை இனிமேல் மது குடிக்கக்கூடாது என்று போன மாதம் சண்டை போட்டார் அண்ணன் ஆனால் இப்போது கொஞ்ச நாளாகவே மது குடிப்பதற்கு அவரே பணம் கொடுக்கிறார் என்று சந்திரனும் தீனாவும் ஆச்சரியத்தோடு பேசிக்கொண்டு மோட்டார் பைக்கின் அருகிலியே நின்று இருந்தார்கள்.

பரந்தாமன் மதுக்கடையில் இருந்து திரும்பி வரும்போது அவன் அளவுக்கு அதிகமான மது பாட்டில்களை வாங்கி வருவதை சந்திரனும் தினாவும் கவனித்தார்கள்.

அண்ணன் ஒருவாரத்துக்கு தேவையான மதுவை வாங்கிக்கொண்டு வருகிறாரே இது என்ன ஆச்சரியம் என்று தீனா சொன்னான்.

எனக்கும் ஒண்ணுமே புரியல டா என்றால் சந்திரன்.

என்ன தம்பி அப்படி பாக்குறீங்க அண்ணன் எதுக்கு இவ்வளவு மதுபாட்டில்களை வாங்கி வருகிறார் என்று தானே ...ஆமாம் தம்பி இனிமேல் சந்திரனின் திருமண வேலைகள் நிறைய இருக்கிறது அதனால் நம்ம காணாமல்போனவர்களை இனிமேல் தேடுவதற்காக எப்போவாவது ஒரு முறைதன் வரவேண்டும் . மற்ற நாட்களில் கல்யாண வேலையை பார்க்க வேண்டும் . அப்போது நமக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த மதுவை குடிக்கலாம் இதை நம்ம விவசாய தோட்டத்தில் இருக்கும் கரும்பு தோப்பு ஒளித்து வைத்து விடலாம் தேவைப்படும்போது எடுத்து குடித்து விடலாம் என்று பரந்தாமன் சொல்லிவிட்டு மது பாட்டில்களை தீனா விடம் கொடுத்துவிட்டு மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டுக்கு திரும்பினார்கள் . அப்போது வழக்கம்போல வீட்டுக்குப் போகாமல் பம்பு செட்டுக்கு சென்றார்கள்.

வழக்கமாக மது அருந்தும் இடத்தில் மூவரும் அமர்ந்து மது அருந்துவதற்கு தயாரானார்கள்.

பரந்தாமன் ஒரு டம்ளரில் மதுவை ஊற்றி முதலில் சந்திரனுக்கு கொடுத்தான்.

அண்ணே இன்னைக்கு நீங்க தான் சந்தோசமா இருக்குது என்று சொல்லி மது வாங்கிக் கொண்டு வந்தீங்க. அதனால் நீங்கள் முதலில் குடிங்க. எனக்கு வேண்டாம் என்றால் சந்திரன்.

நான் எனக்கு மட்டும் மது வாங்கிக் கொண்டு வரவில்லை .
நம் மூவருக்கும் சேர்த்து தான் வாங்கி வந்து இருக்கேன் என்று சொல்லி மதுவை நீட்டினான் பரந்தாமன்.

எனக்கு மது குடிப்பதற்கு இப்போதெல்லாம் தோன்றல அண்ணா . அது மட்டும் இல்லை இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கும் திருமணம் நடக்கப் போகுது அதனால் இப்போது இதையெல்லாம் நிறுத்திக் கொண்டாள் எனக்கும் நல்லது என்றால் சந்திரன்.

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது .
நான் மது வாங்கிக்கொண்டு வந்ததே உங்கள் இருவரையும் குடிகாரனாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்
ஒரு வாரத்திற்கு சேர்த்து மது வாங்கி வந்து இருக்கேன் .
ஆனால் நீ இந்த அளவுக்கு நல்லவனாக இருக்கிறானே என்று மனதில் நினைத்துக்கொண்டு மறுபடியும் சந்திரனிடம் பேச்சுக் கொடுத்தான் பரந்தாமன்.

என்ன..தம்பி ..
நான் உனக்காகத்தான் மது வாங்கி வந்தேன் . இன்னும் கொஞ்ச நாள் தான் உன் திருமணம் இருக்கிறது அதுக்குள்ள நீ நிறைய மது குடித்து ஆசையை தீர்த்துக் கொள்வேன் என்று நினைத்து தான் மது வாங்கி வந்தேன் .
நீ ஒன்றும் கவலைப்படாதே திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நீ குடிப்பதை நிறுத்தி விடு .
அது வரைக்கும் நீ நன்றாக மது குடித்து சந்தோசமாக இரு என்றான் பரந்தாமன்.

அண்ணா ...நீங்கள் கையில் வைத்திருக்கும் மதுவை எனக்குக் கொடுங்கள் . முதலில் நான் குடித்து விடுகிறேன் பிறகு நீங்கள் இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே . தீனா பரந்தாமனின் கையில் இருந்த மதுவை வாங்கி மட மட மடவென குடித்துவிட்டான் தீனா .

நான் இதுக்கு முன்னாடி உங்களை மது குடிக்கக்கூடாது என்று திட்டினேன். ஏன் தெரியுமா நீங்கள் எப்போதுமே குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அப்படி திட்டினேன். பிறகு நானும் யோசித்துப் பார்த்தேன் தம்பிகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதுதானே அண்ணனுடைய கடமை என்று நினைத்துதான் இப்போது உங்களுக்கு நான் மது வாங்கி வந்து இருக்கேன் .
அதனால் நீ தயங்காமல் மது குடி தம்பி என்று மறுபடியும் ஒரு டம்ளரில் மதுவை ஊற்றி சந்திரனிடம் கொடுத்தான் பரந்தாமன்.

அண்ணன் சொல்வதைப் போலவே திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னாடியே குடிப்பதை விட்டு விடலாம் . அதுவரைக்கும் நன்றாக குடித்து சந்தோஷமாக இருக்கலாம் என்று சந்திரனுக்கு மனதில் பட்டது நமது அண்ணனும் நம் வாழ்க்கையை பற்றி இந்த அளவுக்கு கவனமாக இருக்கிறாரே என்று நினைத்து சந்திரன் பெருமை பட்டான்.

பிறகு அண்ணன் ஊற்றிக் கொடுத்த மதுவை வாங்கி அவனும் மடமடவென குடித்தான்.

சந்திரன் மது குடித்ததும் .. பரந்தாமனுக்கு. சற்று ஆறுதலாக இருந்தது . தம்பி திருந்திவிட்டானோ என்று நினைத்து அவன் ஒரு கணம் பயந்துவிட்டான் பிறகு அவனும் லேசாக மது அருந்தினான்.

தீனாவும் சந்திரனும் அதிகமான மது குடித்து விட்டார்கள் . அப்போது அவர்களுக்கு சுயநினைவு தெரியவில்லை பேச்சும் உலறியது.

பரந்தாமன் சந்திரனையும் தீனாவையும் கவனித்தான் இருவரும் நிதானத்தில் இல்லை என்று புரிந்து கொண்டு மெதுவாக பேச்சு கொடுத்தான்.

உங்களுடைய ஆசை இன்னும் ஒன்றுதான் பாக்கி . அதையும் நிறைவேற்றி விட்டால் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும் தம்பிகளின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வைத்தேன் என்ற பெருமை எனக்கு இருக்கும் என்று பரந்தாமன் சொன்னான்.

நீங்க சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியல அண்ணா ...என்று சந்திரன் உலறியபடி சொன்னான்.

வேறொன்றுமில்லை நீங்கள் இருவரும் நம்ம பம்புசெட்டில் இருக்கும் கனகா மீது கொள்ளை ஆசை வச்சுருகிங்க என்று எனக்கும் தெரியும் என்றான் பரந்தாமன்.

சந்திரனுக்கும் தீனாவுக்கும் சற்று போதை தேளிந்தது போல ஆனது அண்ணனுக்கு எப்படி தெரியும் நாம் கனகாவை பார்ப்பது என்று நினைத்து மிரண்டு போனார்கள்.

நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் . நான் அந்த கனகாவிடம் பேசி சம்மதிக்க வைக்கிறேன்.

அதெல்லாம் வேண்டாம் அண்ணா ஏற்கனவே . இதே போலதான் நாங்கள் அந்த பெரியவரின் மருமகள் மீது ஆசைப்பட்டோம் என்பதற்காக நீங்களும் அந்தப் பெண்ணை அனுபவைக்க சொன்னீங்க . நாங்களும் ஆசையில் அந்தப் பெண்ணை கெடுத்து விட்டோம் . ஆனால் அந்தப் பிரச்சனை இப்போது இன்னும் தீரவில்லை . எதனால் காணாமல் போனகள் என்ற மர்மம் நமது குடும்பத்திலும் இந்த ஊர் மக்களும் கண்டுபிடிக்க வேண்டும் என்று உறுதியாய் இருக்கிறார்கள் இப்போது இந்த கனகாவை கெடுத்துவிட்டால் பிரச்சனை மேலும் நமக்குத்தான் . அதனால் வேண்டாம் அண்ணா என்று தீனா சொன்னான்.

தீனாவின் பேச்சு பரந்தாமனுக்கு சற்று சவாலாக இருந்தது இருந்தாலும் எப்படியாவது நமது வழிக்கு இவர்களை வர வைக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தான் பரந்தாமன் ...மறுபடியும் பேச்சு கொடுத்தான்.

ஏற்கனவே ஓடிப் போன அந்த பெரியவரின் மருமகள் இதில் அவளுக்கு விருப்பமில்லை அதனால்தான் அவள் ஓடி விட்டாள் ஆனால் கனகா அப்படி இல்லை அவள் பார்ப்பதற்கு நிச்சயம் அவள் உங்கள் ஆசைக்கு ஒத்துழைப்பு கொடுப்பாள் என்று நினைக்கிறேன் அதனால் நீங்கள் உங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள் என்றான் பரந்தாமன்.

வேண்டவே வேண்டாம் அண்ணா எனக்கு இன்னும் கொஞ்ச நாள்ல திருமணம் நடக்கப் போகுது இந்த நிலைமையில் நான் என் மனைவிக்கு துரோகம் செய்ய என் மனம் விரும்பவில்லை அதனால் எனக்கு இந்த விஷயத்தில் துளியும் ஆசை இல்லை என்றான் சந்திரன்.

பரந்தாமனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது திருமணத்தை நிறுத்துவதற்கு வேறு எதுவும் வழி கிடையாது இந்த ஒரு வழியை பயன்படுத்தி தான் சந்திரனில் திருமணத்தை நிறுத்த வேண்டும் . ஆனால் இருவருமே இப்படி நல்லவனாக இருக்கிறார்களே அதுவும் திருமணத்திற்கு முன்னாடியே மனைவின் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறானே சந்திரன் . இவன் காலப்போக்கில் மனைவியின் பேச்சை கேட்டுக்கொண்டு நமது திட்டத்திற்கு எதிரியாக மாறி விடுவான் போல் தெரிகிறதே. இதை இப்படியே விடக்கூடாது எப்படியாவது தம்பியின் திருமணத்தை நிறுத்திவிட வேண்டும் என்று உறுதியோடு பரந்தாமன் மனதில் நினைத்துக்கொண்டான் ... மறுபடியும் தம்பிகளிடம் பேச்சுக் கொடுத்தான்.

இதில் ஒரு தவறும் இல்லை தம்பி திருமணம் நடந்த பிறகுதான் நீ உன் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்க வேண்டும் . ஒருவேளை திருமணத்திற்கு பிறகு நீ குடிப்பதற்கும் மற்றபடி வேறொரு பெண் மீதும் ஆசைப்பட்டால் நானே உன்னை கண்டிப்பேன் . ஆனால் இப்போது உனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை அதனால் இதில் ஒரு தவறும் இல்லை நீயும் உன் ஆசைப்படி இந்த கனகாவை அனுபவைத்துவிட்டால் உனக்கு எந்த ஏக்கமும் உன் மனதில் இருக்காது . ஒருவேளை திருமணம் முடிந்த பிறகு கனகாவை அனுபவைக்காமல் விட்டு விட்டோமே என்ற ஏக்கம் உனக்கு இருக்கும் . அதனால் தான் சொல்கிறேன் இப்போதே அவளை அனுபவைத்து விடுங்கள் என்று பரந்தாமன் சொன்னான்.

நீங்கள் சொல்வதுதான் சரி அண்ணா ....எனக்கு சம்மதம் என்று தீனா சொன்னான்.

கனகாவின் அழகு எனக்கு ரொம்பவே பிடிக்கும் . ஆனால் அவளை அனுபவிக்க வேண்டும் என்று நான் நினைத்தது இல்லை என்று சந்திரன் சொன்னான்.

தம்பிக்கு அவள் மீது ஆசை ஆவணும் சம்மதம் தெரிவித்து விட்டான் . உனக்கு சம்மதம் என்று சொன்னால் நாளைக்கே நான் கனகாவிடம் பேசி . அவளிடம் சம்மதத்தை வாங்கி விடுவேன் இதனால் உனக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது .
நிச்சயம் கனகா உங்களுக்கு பணிந்து விடுவாள் . ஏனென்றால் அவள் பார்ப்பதற்கு அப்படிதான் தெரிகிறாள் சென்ற முறை அவளிடம் நான் பணம் கொடுத்தேன் அதை அவள் மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் அதனால் அவள் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டாள் நீ பயப்படாமல் உன் ஆசையை தீர்த்துக் கொள் என்றான் பரந்தாமன்.

அண்ணன் வேண்டாம் ..வேண்டாம் என்று சொன்னால் கூட பிடிவாதம் பிடிக்கிறாரே ஒருவேளை கனகா மீது அவருக்கு ஆசை இருக்கிறதோ அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல். நம்முடைய சம்மதத்தை வாங்கிக்கொண்டு அவரும் கனகாவை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா என்று யோசித்தான் சந்திரன் .
சரி பரவாயில்லை அண்ணனுக்காக நாம் சம்மதம் தெரிவிக்கலாம் என்று நினைத்து சந்திரனும் உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் அண்ணா என்று சொன்னான்.

பரந்தாமனுக்கு ...சந்திரன் பேச்சைக் கேட்டதும் ஒரு பெரிய சவாலை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் என்று மனதில் நினைத்துக்கொண்டு பெருமுச்சி விட்டான். அப்போது அவன் எதுவும் பேசாமல் எழுந்து நின்றான் சந்திரனும் தீனாவும் போதையில் வழக்கம் போல படுத்துக் கொண்டார்கள்.

எப்படியோ தம்பிகளை கனகாவை கெடுப்பதற்கு சம்மதம் வாங்கி விட்டோம் . ஆனால் இந்த கனகா என்ன செய்வாள் என்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டே
தோட்டத்தை சுற்றி வந்தான்.

அப்போது கனகா சற்று தூரத்தில் வேர்கடலை செடிகளுக்கு கலை எடுத்துக்கொண்டுருந்தால் இதை கவனித்த பரந்தாமன் அவளிடம் சென்றான்.

இந்த ஊரே நம்ம தோட்டத்தில் வேலை செய்யறாங்க . நீ மட்டும் ஏன் தனியா கஷ்டப்படுகிற என்று பாசமாய் கேட்டான் பரந்தாமன்.

இன்னைக்கு ராத்திரி இந்த செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும் . அதனால் தான் நான் அவசரமாக காலை எடுக்கிறேன் ஐயா என்று சொல்லிவிட்டு தனது. முந்தானையில் முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்து பரந்தாமனிடம் கொடுத்தாள் கனகா.

என்ன பணமா இது ...என்று தெரியாததைப் போல கேட்டான் பரந்தாமன்.

செடிக்கு மருந்து வாங்குவதற்காக கொடுத்தீங்களே அதில் மீதி பணம் ஐயா இது என்றாள் கனகா.

பரவாயில்லை நீயே வச்சுக்கோ என்று தானே நான் சொன்னேன் அதை எதுக்கு எனக்கு திருப்பிக் கொடுக்கிறா மா.

வேண்டாம் ஐயா வேலை செய்வதற்கு மட்டும் தான் கூலி வாங்கணும் . மற்றபடி யாரிடமும் பணத்தை வாங்க கூடாது என்று முத்தையா அப்பா அடிக்கடி சொல்லுவாரு . நம்ம ஊரு மக்களும் அப்படிதான் இருக்காங்க இதுவரைக்கும் எந்த ஒரு குறை இல்லாமல் உங்கள் குடும்பம் இந்த ஊரை காப்பாற்றி வருகிறீர்கள் அதுவே எங்களுக்கு பெருமை அதனால் உழைப்புக்கு அதிகமான கூலி வேண்டாம் ஐயா . என்று பிடிவாதமாக கொடுத்துவிட்டால் கனகா.

கனகாவின் செயல் பரந்தாமனின் திட்டத்திற்கு பெரும் முற்றுப்புள்ளியாக அமைந்தது.

நிச்சயம் இவள் நம் திட்டத்திற்கு ஒத்துழைக்க மாட்டாள் . இவளை நம்பி நம்மா பெரிய மனக்கோட்டை கட்டி இருந்தோம் . இவள் எப்படியாவது தம்பியை மயக்கி
தன் வசத்தில் வைத்துக்கொள்வாள் திருமணத்தை எப்படியாவது
இவள் மூலமாக நிறுத்திவிடலாம் இவளுக்கும் நிறைய பணத்தைக் கொடுத்து . நம்முடைய காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம் ஆனால் இவள் நிச்சயம் நம் திட்டத்திற்கு ஒத்துழைக்க மாட்டாள் . அதனால் தம்பிகளிடம் கனகா சம்மதம் தெரிவித்து விட்டாள் என்று பொய் சொல்லி இவளை கெடுத்துவிட வேண்டும். இதனால் நமக்கு அசிங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை திருமணம் நின்று விடும் . என்று பரந்தாமன் ஒரு முடிவு செய்து கொண்டு கிளம்பும்போது மறுபடியும் ஐயா என்று குரல் கொடுத்தாள் கனகா.

மீண்டும் பணத்தை வாங்குவதற்கு தான் கனகா கூப்பிட்டாள் என்று நினைத்து சற்று சந்தோசமாக பரந்தாமன் கனகாவின் முகத்தை பார்த்து ...என்னமா தயங்காம கேளு பணம்தானே வேண்டும் என்றான் பரந்தாமன்.

பணம் வேண்டாம் ஐயா ...ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் சொல்ல வேண்டும் என்றாள் கனகா.

முக்கியமான விஷயமா ....என்ன விஷயமா என்று பதட்டமாய் கேட்டான் பரந்தாமன்.

இந்த ஊருக்கே சோறு போடும் இந்த விவசாய நிலத்தில் .
யாரோ ஒருவன் சாராயம் குடித்துவிட்டு அந்த பாட்டிலை நம்ம தெய்வமாக மதிக்கும் இந்த நிலத்தில் கண்டபடி போட்டுவிட்டு போயிருக்காங்க . இதை அந்த மனசாட்சி இல்லாமல் இந்த காரியத்தை செய்தவரை கண்டுபிடித்து அவரை கடுமையாக கண்டிக்க வேண்டும் ஐயா
இந்த செயல் கோவிலில் குடித்துவிட்டு மது பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு வருவதைப்போல இருக்கிறது
இந்த காரியம் . என்று சற்று கோபத்தோடு சொன்னாள் கனகா.

பரந்தாமனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது கனகாவின் செயல்பாடு . நிச்சயம் இன்னும் கொஞ்ச நாட்களில் நம் மூன்று பேரும் தான் குடிக்கிறோம் என்ற ரகசியத்தை இவள் கண்டுபிடித்துவிடுவாள் அதனால் உடனே இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் . நாளைக்கே இவளை கெடுப்பதற்கு தம்பிகளை தூண்டிவிட வேண்டும் .
இவள் நமக்கு அடங்கி வருகிறாளா இல்லை நமக்கு எதிராக செயல்படுகிறளா என்று உடனே தெரிந்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் இவள் நம்முடைய ரகசியத்தை தெரிந்து கொண்டால் யாருக்கும் பயப்படாமல் நம்முடைய அப்பாவிடம் குடி பழக்கத்தை சொல்லிவிடுவாள் . இவள் ஒரு தைரியமான பெண்ணாக இருக்கிறாளே இவளை நம்பி நம்முடைய திட்டத்தை எப்படி நிறைவேற்ற போகிறோமோ என்று நினைத்து அதிர்ச்சியடைந்தான் பரந்தாமன் . பிறகு சற்று சோகமாக கனகாவிடம் சொன்னான்.
நீ சொல்வதை என்னால் நம்பவே முடிய வில்லையே நம்முடைய நிலத்தில் இவ்வளவு தைரியமாக யார் இந்த காரியத்தை செய்திருப்பார்கள் . நான் இதற்கு சீக்கிரமாகவே ஒரு முடிவு கட்டுகிறேன் என்று கனகாவை பார்த்தபடி சொன்னாள் பரந்தாமன்

அப்போது அவன் உள்மனதில் சீக்கிரம் முடிவு கட்டுகிறேன் உன்னுடைய துணிச்சலுக்கு என்று நினைத்துக்கொண்டு ஆத்திரத்தோடு அங்கிருந்து கிளம்பினான் .பரந்தாமன்.



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்... 13 👇


பண்ணையார் வீட்டிலும் . முத்தையா வீட்டிலும் திருமணத் தேதியை குறித்து விட்டார்கள் முதலில் சந்திரன் திருமணம்
மறு வாரத்தில் . சங்கர் திருமணம் இப்படி ஒரு வார இடைவெளியில் இரண்டு திருமணத்தையும் சிறப்பாக நடத்த திட்டம் போட்டுருந்தார்கள் இரண்டு குடும்பத்தாரும்.

ஊர் மக்களும்... இந்த இரண்டு திருமணத்தையும் நமது ஊரில் ஒரு திருவிழாவைப் போல நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்கள் அனைவரும் சந்தோசமாக . முத்தையாவின் வீட்டிற்கு ஊர் மக்கள் வருவதும் போவதுமாக கலகலப்பாக இருந்தார்கள்.

பரந்தாமன் தனது வீட்டின் மையப்பகுதியில் அமர்ந்துகொண்டு . ஒரு பெரிய நோட்டு புத்தகத்தில் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தான்.

என்னங்க வீட்டில எவ்வளவு வேலை இருக்கு . இப்படி காலையிலே உட்கார்ந்துகொண்டு எதையோ எழுதிக் கொண்டிருக்கிறீர்களே என்றால் சாந்தி.

சாந்தியின் வார்த்தைக்கு பதில் சொல்லாமல் பரந்தாமன் மும்மரமாக கணக்கு போட்டு இருந்தான்.

என்ன இவர் நம்ம சொல்றதை காதில் வாங்காமல் அப்படி என்ன கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கிறார் என்று சாந்தி பரந்தாமன் எழுதுவதை கவனித்தாள்.

திருமணத்திற்கு ..ஊரில் உள்ள அனைவருக்கும் புது துணி அவர்களுக்கு தாம்பூல பை .மற்றும் மூன்று நாட்களுக்கு அவர்களின் விருப்பப்படியான விருந்து அளிப்பதற்கு தேவையான மளிகை பொருட்கள். காய்கறிகள் போன்றவற்றை திருமணத்திற்கு எவ்வளவு தேவைப்படும் என்ற கணக்கினை பரந்தாமன் மும்முரமாக கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்.

இதை கவனித்த சாந்திக்கு சந்தோஷமாக இருந்தது . நம்முடைய கணவர் திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் என்று நினைத்து சந்தோசப்பட்டாள்.

அப்போது பண்ணையாரும் பரந்தாமனை கவனித்தார் ...

திருமணத்திற்கு தேவையானவை என்னென்ன என்று எழுதிக் கொண்டிருக்கிறார் என்று பண்ணையாரிடம் சொன்னாள் சாந்தி.

எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விட்டாள் . அப்போது நம்மீது யாருக்குமே சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பரந்தாமன். இப்படி வீட்டின் மையப்பகுதியில் அமர்ந்துகொண்டு அனைவரும் பார்க்கும்படி . திருமண வரவு செலவு கணக்கை எழுதிக்கொண்டு இருந்தான். அதேசமயம் திருமணத்தில் தனக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பதனை புரிய வைப்பதற்காக பரந்தாமன் இப்படி வீட்டின் மையப் பகுதியில் அமர்ந்துகொண்டு வரவு செலவு கணக்கு எழுதிக்கொண்டும் நடித்துக்கொண்டும் இருந்தான்.

இன்னும் என்ன நமது தம்பிகள் நம்மை கவனிக்க வில்லையே என்று நினைத்து பரந்தாமன் எழுதி கொண்டிருந்ததை நிறுத்தவில்லை அப்போது பரந்தாமன் எதிர்பார்த்ததை போலவே சந்திரனும் தீனாவும் வெளியே வந்தார்கள்.

என்ன அண்ணா காலையிலே மும்முரமாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். என்று தீனா கேட்டான்.

எல்லாம் சந்திரனின் திருமணத்திற்கு என்னென்ன தேவைப்படும். எவ்வளவு தேவைப்படும் என்பதையெல்லாம் இப்போது எழுதி வைத்துக் கொண்டால்தான் திருமணத்தன்று வாங்குவதற்கு சுலபமாக இருக்கும் இல்லையென்றால் ஒரு சில பொருள்களை நாம் மறந்து விடுவோம் என்று பரந்தாமன் பாசமாக சொன்னான்.

அண்ணன் எப்போதுமே நம்முடைய எதிர்காலத்தை பற்றியே நினைத்திருக்கிறார். உங்களுக்கு தம்பியாக பிறந்தது எங்களுக்கு பெரும் புண்ணியம் என்று சந்திரனும் தீனாவும் மனதில் நினைத்துக்கொண்டார்கள்.


சங்கரும் அவனுடைய நண்பர்களும் கல்யாண பந்தல் போடுவதில் மும்முரமாக இருந்தார்கள் .

ரேகா வீட்டின் முன்பும் கல்யாண பந்தல் போட்டார்கள் .
திருமணம் நடைபெறும் அம்மன் கோவிலிலும் பெரிய பந்தல் போட்டார்கள் . இப்படி கல்யாண வேலை மும்முரமாக நடந்தது

ரேகாவுக்கு சங்கருக்கும் எல்லையில்லா சந்தோஷம்
நமது திருமணத்தை ஊரே சந்தோஷமாக நடத்தப் போகிறார்கள் என்று நினைத்து.


குருவே ஊர்ல ஒரு திருவிழா போல எல்லோரும் பரபரப்பா இருக்காங்க குருவே ..என்றான் சிஷ்யன்.

நானும் கவனித்துதான் வருகிறேன் இந்த பண்ணையார் வீட்டு திருமணமும் . முத்தையாவின் வீட்டு திருமணமும் இந்த ஊரில் உள்ளவர்கள் தலைமீது தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறாங்க .
நம்மளை பத்தி யவனம் கண்டுக்கறதே இல்லை இருக்கட்டும் நமக்குன்னு ஒரு நேரம் வரும் போது . இந்த ஊருல இருப்பவர்களை நம்ம அடக்கி
நம்மா சொல்வதுதான் இந்த ஊருக்கு தெய்வ வாக்கு என்ற காலத்தை நம்ம உருவாக்க வேண்டும் என்று சாட்டையடி சாமியார் தனது சிஷ்யனிடம் சொன்னான்.

அதுவரைக்கும் இந்த ஊரை நீங்க சும்மாதான் விடப் போறீங்களா குருவே ..என்றான் மற்றொரு சிஷ்யன்.

என்னடா பண்றது ...எல்லோரும் கல்யாண சந்தோஷத்துல துள்ளி குதித்துக் கொண்டு இருக்கானுங்க இந்த நேரத்தில எவனும் சரியா கூட தூங்க மாட்டானுங்க . நாமளும் செல்போனை ஒளித்து வைக்கிறதுக்கு கஷ்டமா இருக்கும் அவனுங்க நிம்மதியா .
தூங்கினாள்தான் அந்த நேரம் பார்த்து அவன் வீட்டு பக்கத்துல நம்ம செல்போனை ஒளித்து வைக்க சௌக்கிர்யமா இருக்கும் .
ஆனால் இவனுங்க இந்த திருமணம் முடியும் வரை எவனும் தூங்க மாட்டானுங்க. அதனால கொஞ்ச நாள் போகட்டும் என்றார் சாட்டையடி சாமியார்.

குருவே எல்லோரும் சந்தோஷமா இருக்கிறாங்க என்பதால் நம்முடைய கௌரவத்தை நாமே குரசிக்க கூடாது . இந்த மாதிரியான சமயத்துலதான் நம்முடைய பவரை காட்டணும் குருவே . ஊருக்குள்ள எல்லோரும் சந்தோஷமா இருந்தா அதற்கு எதிர்மறையாக நம்ம ஏதாவது சொல்லணும் . அப்போதுதான் நம்முடைய பேச்சுக்கு ஒரு மதிப்பு இருக்கும் குருவே . என்றான் ஒரு சிஷ்யன்.

நீ சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் இந்த நேரத்தில நம்ம என்ன சொல்றது . அப்படி ஏதாவது சொல்லி வம்புல மாட்டி கிட்டா இந்த பண்ணையார் பசங்க நம்மளை சும்மா விட மாட்டாங்க . அதனால தான் வாய மூடிக்கிட்டு கம்முனு இருக்கேன் . இல்லன்னா எதையாவது சொல்லி இந்த ஊரை மிரட்டி விடுவேன் என்று சற்று தில்லாக பேசினார் சாட்டையடி சாமியார்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க குருவே ... கைவசம் ஒரு ஐடியா இருக்குது . நமக்கு கண்டிப்பா
ஒர்க்கட்டாகும் அதனால நீங்க தைரியமா இந்த ஊர் மக்கள் நம்மைப் பற்றி பேசும்படி எதையாவது சொல்லுங்க குருவே என்றான் மற்றொரு சிஷ்யன்.

என்ன ஐடியா வச்சிருக்கடா எனக்குத் தெரியாமலே.. என்றார் சாட்டையடி சாமியார்.

குருவே நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க ..
இந்த ஊருக்கே சோதனைக்கலம் வரப்போகுதுன்னு ஆணித்தரமா சொல்லுங்க . உங்களுடைய பேச்சு சிலர் நம்புவாங்க சிலர் நம்ப மாட்டாங்க இருந்தாலும் நீங்க இந்த வார்த்தையை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருங்க அதுக்கப்புறம் இந்த ஊருல ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடக்கும் . அப்போது நம்ம சொன்ன வார்த்தை பலித்துவிடும்
அப்போது நம் மீது நம்பிக்கை வைத்து இருந்தவர்களுக்கு மேலும் நம்மீது அசையாத நம்பிக்கை ஏற்படும் . நம்மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சாமியாரின் வார்த்தை பளித்து விட்டதே என்று நினைத்து அவர்களும் நம்மை நம்புவதற்கு தயாராகி விடுவார்கள் .
ஊர் என்றாலே நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும் . அதனால் நீங்கள் தைரியமாக இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுது என்று சொல்லிக்கிட்டே இருங்க குருவே
இதுதான் குருவே ...என்னோட திட்டம் எப்படி நம்முடைய தொழிலுக்கு ஒத்துப் போகுதா என்றான் அந்த சிஷ்யன்.

நீ சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனால் நடைமுறைக்கு இதெல்லாம் ஒத்து வருமா டா ஒருவேளை எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்றால் .
இந்த பண்ணையார் கிழவனும் இந்த முத்தையா கிழவனும் நம்மை பத்தி எளக்காரமாக பேசி ஊர் மக்களை திசை திருப்பி விடுவார்களே . அதை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்றால் சாட்டையடி சாமியார்.

குருவே அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீங்க . அதுக்கு நான் ஒரு யோசனை வச்சிருக்கேன் என்றான் மற்றொரு விஷயம்.

பரவாயில்லையே ...உங்களை என் சிஷ்யனாக வைத்திருப்பது எனக்குத்தான் பெருமை இப்படி இருவரும் எனக்கு ஐடியா கொடுப்பதில் வல்லவனாக இருக்கிறீர்களே . உங்களை நான் சாதாரணமாக நினைத்துவிட்டேன் சரி என்ன யோசனை சொல் சிஷ்யா என்றார் சாட்டையடி சாமியார்.

இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுது என்று நீங்கள் சொல்லியும் . இந்த ஊரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றால் அதற்கு என்னிடம் ஒரு நல்ல ஐடியா ஒன்று இருக்கிறது குருவே . நம்ம பண்ணையார் தோட்டத்துல இருக்கிற கரும்பு தொப்பை யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் சென்று தீ வச்சி எரித்துவிடுகிறோம் . அதன் பிறகு இந்த ஊருக்கு வேலையில்லாமல் திண்டாடுவார்கள் ஏனென்றால் பண்ணையார் தோட்டத்தில் அதிக அளவில் கரும்புத் தோட்டம் தான் இருக்கிறது .
அந்த வேலையைத்தான் பாதிப்பேர் செய்து வருகிறார்கள்
அந்தத் தோட்டம் எறிந்து விட்டால் இந்த ஊர் மக்கள் கவலையோடு இருப்பார்கள் . அப்போது நீங்கள் சொன்ன வார்த்தை
நிஜம்மாகிவிடும்
உங்கள் பேச்சுக்கும் மதிப்புக் கூடும் என்று .. அந்த சிஷ்யன் பொறுமையாக எடுத்துச் சொன்னான்.

அடேங்கப்பா .....ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு திட்டத்தை அருமையாக போடுறீங்க இது போதும்டா எனக்கு
உங்களை என் பக்கத்திலே வைத்துக்கொண்டு இந்த ஊரையே என் கைக்குள் வர வைக்கிறேன் என்று ஆவேசமாக சொன்னார் சாட்டையடி சாமியார்.


கல்யாண வேலைகள் எவ்வளவு இருக்கு . இந்த நேரத்துல தோட்டத்துக்கு போயிட்டு வரணுமா என்றார் பண்ணையார்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் தோட்டத்திற்கு கிளம்பும்போது தனது தந்தை சொன்ன வார்த்தை பரந்தாமனுக்கு சற்று எரிச்சலாக இருந்தது . இருந்தாலும் மனதை அமைதிப் படுத்திக் கொண்டு சொன்னான்.

தோட்டத்திற்கு நேற்றும் போகல அதனால்தான் இன்னிக்காச்சும் போயிட்டு வரலாம் என்று கிளம்புகிறோம் அப்பா என்றான் பரந்தாமன்.

அவரவர் வேலையை பொறுப்பா ஊர் மக்கள் செய்யப் போறாங்க நீங்கள் கல்யாண வேலையை பார்க்காமல் தேவையில்லாமல் எதுக்குப்பா போறீங்க என்றார் பண்ணையார்.

நம்ம பம்புசெட்டில் வேலை செய்யும் ஊமையனை இங்கு வர வைத்து வீட்டைச்சுற்றி ஒரு ஃபுல் புதராக இருக்கிறது . அதனால் உமையன்னை வரவைத்து இந்த வேலை எல்லாம் பார்க்க சொல்லலாம் என்று அவனிடம் நேரில் சொல்லலாமே என்றுதான் கிளம்புகிறேன் அப்பா என்றான் பரந்தாமன்.

சரியா சொன்ன ...எனக்கு கூட இந்த யோசனை வரல கல்யாணம் நடக்கப் போகும் வீடு
திருமண மண்டபம் போல ஜொலிக்கனம் நீ சொல்றதும் சரிதான் அந்த ஊமையனை
வரவச்சு வீட்டை சுத்தி சுத்தம் செய்ய சொல் . அவனோடு மேலும் 2 ஆட்களை வச்சுக்க சொல்லு என்றார் பண்ணையார்.

உடனே பரந்தாமன் தனது தம்பிகளுடன் தோட்டத்திற்கு கிளம்புவதற்கு தயாரானார்கள் மறுபடியும் என்னங்க என்று குரல் கொடுத்தபடி சாந்தி வந்தாள்.

என்னங்க தோட்டத்துக்கு போயிட்டு சீக்கிரமா வந்துடுங்க.
வந்ததும் ...பெண்ணோட வீட்டுக்கு போயிட்டு அவளுடைய அளவு ஜாக்கெட்டை வாங்கிட்டு வாங்க பெண்ணுக்கு தேவையான துணிகளை நம்மதான் தட்சு
தர வேண்டும் . அதனால நீங்க மூணு பேரும் போயிட்டு அவலது ஜாக்கெட்டை வாங்கிக்கொண்டு பத்திரிக்கையை எப்போது கொண்டு வரட்டும் என்பதையும் கேட்டுகிட்டு வந்துருங்க என்றாள் சாந்தி.

சாந்தியின் பேச்சு மேலும் பரந்தாமனுக்கு எரிச்சலை உண்டாக்கியது ...அப்போது அவன் சாந்தியை பார்த்தபடி தலை மட்டும் அசைத்துவிட்டு பம்பு செட்டுக்கு கிளம்பினார்கள்.

வழக்கம்போல களத்துமேட்டில் பைக்கை நிறுத்தி விட்டு சிறிது தூரம் நடந்து சென்றார்கள் வரப்பு மேட்டில் . பம்பு செட்டை நோக்கி.


ஜாக்கெட் . துணி வாங்கிட்டு வர போகும்போது ஏதாச்சும் சாப்பிட வாங்கிக்கொண்டு போலாமா அண்ணா என்றால் சந்திரன்.

உன் விருப்பம் போல ...
எது வேணாலும் வாங்கிக்கோள் உன் மாமியார் வீட்டுக்கு . என்றான் பரந்தாமன்.

அண்ணே.... சின்ன அண்ணிக்கு பால்கோவாதான் பிடிக்கும் அதனாலதான் . அண்ணன் ஏதாவது வாங்கிக்கொண்டு போலாமா என்று ஜாடை மாடையா கேட்கிறார் என்று தீனா சிரித்துக்கொண்டே சொன்னான்.

இன்னைக்கு நீ என்னை கிண்டல் பண்ற . உனக்கும் திருமணம் நடக்கும்போது நீயும் இப்படிதான் உன் மனைவிக்கு பிடித்ததை வாங்கிக் கொடுப்பே.
அதனால இதைப்பற்றி அண்ணியிடம் சொல்லாத அவங்களும் என்னை கிண்டல் பண்ணுவாங்க என்று சொல்லிக்கொண்டே அவனும் சிரித்தான்.

முன்னே சென்று கொண்டிருக்கும் பரந்தாமனுக்கு ....சந்திரனின் சிரிப்பும் தீனாவின் சிரிப்பும் எரிச்சலாக இருந்தது.

நீங்கள் இருவரும் தோட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு வாருங்கள் நான் இங்கேயே சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறேன். என்று சொல்லிவிட்டு பரந்தாமன் பம்புசெட்டின் அருகில் இருக்கும் கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்துகொண்டான் பரந்தாமன்

சந்திரனும் தீனாவும் ஆளுக்கு ஒரு திசையில் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பினார்கள்.

சின்ன அண்ணனுக்கு திருமணம் முடிந்ததும் அடுத்ததாக நமக்குத்தான் திருமணம்
நம்ம திருமணத்தையும் அண்ணன் இப்படிதான் சிறப்பாக நடத்துவார் அதுவரைக்கும் நம்மா கனகாவிடம் தேவைப்படும் போதெல்லாம் சந்தோஷமாக உல்லாசமாக அவளிடம் இருக்கலாம் என்று நினைத்து தீனா சந்தோசமாக வயல் பகுதியை சுற்றி வந்தான்.

என்னேரமும் சந்திரனுக்கு தனது வருங்கால மனைவியை நினைத்துக் கொண்டே இருந்தான் எதைப் பார்த்தாலும் அவனுக்கு தனது மனைவி முகம் போலவே தெரிகிறது . அந்த அளவுக்கு அவன் வருங்கால மனைவியை நினைத்து கொண்டு தோட்டத்தை சுற்றிப் பார்த்தபடி சென்றான் சந்திரன்.

கனகா நம் விருப்பப்படி ஒத்துக் கொள்வாளா .... இவளை நம்பி திருமணத்தை நிறுத்தி விடவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இவள் என்ன செய்வாளோ என்று தெரியவில்லையே .
ஒருவேளை நம் மூன்று பேரையும் நம் அப்பாவிடம் காட்டிக்கொடுத்து விடுவாள கனகா. என்று யோசித்துக்கொண்டு பரந்தாமன் கிணற்று தடுப்பு சுவர் மீது சோகத்தோடு அமர்ந்திருந்தான்.

நம்ம நேரடியாக கனகாவிடம் இதைப்பற்றி பேசினாள் .
அவள் கோபமடைந்து உடனே அப்பாவிடம் சென்று . உங்கள் பெரிய மகன் என்னை தவறான செயலுக்கு வற்புறுத்துகிறார் .
நான் திருமணம் ஆனவள் என்பதைக்கூட மறந்துவிட்டு உங்கள் பெரிய மகன் என்னை தவறான உறவுக்கு அழைக்கிறார் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டால் அத்தோடு நம்முடைய மரியாதை போய்விடும் . நம்முடைய மனைவி நம்மை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டாள் அது மட்டுமா நடக்கும் இன்னும் எவ்வளவோ பிரச்சனைகள் உருவாகும்

இப்படி இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது இந்த கனகாவிடம் அவளை நம்பி எப்படி இந்த காரியத்தை நிறைவேற்ற போகப்போகிறோம் என்று தெரியாமல் குழம்பினான் பரந்தாமன்.


பார்ப்பதற்கு துணிச்சலான பெண்ணாக இருக்கிறாள்
இந்த கனகா .ஒருவேளை தம்பிகள் அவளை கற்பழித்து விட்டதும் கனகா இதைப்பற்றி ஊர் மக்களிடம் சொல்லி விடுவாளா
தம்பிகள் பயத்தில் நம்மை காட்டிக் கொடுத்து விடுவார்களா அண்ணன்தான் வற்புறுத்தினார் என்று சொல்லி.

இப்படி நாலாபுறமும் யோசனை செய்துகொண்டு . பரந்தாமன் பெரும் சோகத்தில் அமர்ந்திருந்தான்.

உடம்புக்கு முடியலையா ஐயா என்று பரந்தாமனை பார்த்து சொல்லிக்கொண்டே கனகா வந்தாள் . அவள் பின்னால்
ஊமையனும் இருந்தான்.

எனக்கு ஒன்றும் இல்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றான் பரந்தாமன்.

பார்ப்பதற்கு ரொம்ப சோர்வாக இருக்கீங்க ஐயா ...அதனால் தான் அப்படி கேட்டேன் என்றாள் கனகா ஊமையனும் தலையை ஆட்டினான்.

இனி உன் கையில் தான் இருக்கிறது . நான் சோர்வாக இருப்பதா இல்லை தெம்பாக இருப்பதா என்று மனதில் நினைத்துக் கொண்டான் பரந்தாமன்.

இன்னும் கொஞ்ச நாள்ல சந்திரனுக்கு திருமணம் நடக்கப்போகிறது உங்களுக்கு தெரியும் வீட்டைச் சுத்தி ஒரே புல் புதிராக இருக்கிறது அதனால் நாளைக்கு காலையில் நம்ம ஊமையனை நீ எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடு .
நாளை முழுக்க அவனுக்கு அங்கேயேதான் வேலை என்றான் பரந்தாமன்.

நாளை காலைல அவர் நீங்க சொன்ன வேலையை செய்யறதுக்கு வந்துடுவாரு இதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தீங்களா ஐயா என்றாள் கனகா.

அப்புறம் ...ஒரு முக்கியமான விஷயம் ... ஊமையனோடு மேலும் இரண்டு ஆட்களை வச்சுக்க சொல்லு ஏனென்றால் வேலை அங்கு நிறைய இருக்கு பாவம் அவன் ஒருவனால் செய்ய முடியாது அவனுக்கு நாளைக்கு சாப்பாடு எங்கள் வீட்டிலேயே சாப்பிடுவான் அதனால் நீ ஒன்றும் அவனுக்கு சாப்பாடு எடுத்து வர வேண்டாம் என்றான் பரந்தாமன்.

சரிங்க அய்யா ...நான் நாளைக்கு நான் மட்டும் பம்புசெட்டு வேலையை பார்த்துக் கொள்கிறேன் என்று புன்னகையோடு சொல்லிவிட்டு சிறிது தயக்கத்தோடு நின்றாள் கனகா.

என்னம்மா ஏதோ கேக்கணும் போல தயங்கி கேட்டு நிற்கிறே என்றான் பரந்தாமன்.

எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் ஐயா இன்னைக்கு என் மகன் படிக்கும் பள்ளிக்கு டீச்சர் வர சொல்லி இருந்தாங்க என்னை நானும் பள்ளிக்கூடத்துக்கு போயிருந்தேன் அப்போது அவங்க சொன்னாங்க என்னுடைய மகன் நன்றாக படிக்கிறான் அவன் புத்திசாலித்தனம் அவங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறதாம் அவனின் திறமையைப் பார்த்து அவங்க எனக்கு சில யோசனைகளை சொன்னாங்க அவனுக்கு மேலும் நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் அந்த நோட்டுப் புத்தகங்களை அழகாக எடுத்துக் கொண்டு வருவதற்கு ஒரு பேக் ஒன்று வாங்கிக் கொடுங்கள் அப்போதுதான் அவன் படிப்பதற்கு எளிதாக இருக்கும் இந்த சிறிய மஞ்சள் பையில் நோட்டுப் புத்தகங்களை எடுத்து வருவதால் அது கசங்கிப் போய் விடுகிறது அவனுக்கு படிப்பதற்கும் சிரமமாக இருக்கிறது அதனால் அவனுக்கு சிறிது பணம் செலவு செய்து நோட்டுப் புத்தகங்களையும் பேக் வாங்கிக் கொடுங்கள் .

மற்றபடி அவன் வருங்காலத்தில் நிச்சயம் ஒரு படித்த இளைஞனாக இந்த ஊருக்கு நல்லது செய்வான் என்று அவனுடைய டீச்சர் எனக்கு சொன்னாங்க அதனால எனக்கு கொஞ்சம் பணம் வேண்டும் ஐயா என்று பொறுமையாக தனது மகனின் பெருமையை பரந்தாமனிடம் சொன்னால் கனகா.

கனகாவின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சிறிது கவலை ஏற்பட்டது . மகனை நன்றாக படித்து வைத்து பெரிய ஆளாகி விட வேண்டும் என்று கனகா துடிப்பது அவளின் கண்களில் தெரிகிறது இப்படி நல்ல சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் கனகாவின் வாழ்க்கையை நாம் கெடுக்க வேண்டுமா என்று சிறிது யோசித்தான் பரந்தாமன்.

குறுக்கு வழி முன்னேற வேண்டுமென்றால் இப்படிப்பட்ட தவறுகளை செய்துதான் ஆகவேண்டும் இதற்கெல்லாம் கவலைப்பட்டாள் முன்னேற முடியாது ஒருவரை மிதித்துதான் மற்றொருவர் முன்னேற முடியும் அதனால் நாம் இறக்கப்பட்டாள் நம்முடைய லட்சியம் தோல்வி அடைந்துவிடும் அதனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட கூடாது என்று முடிவு செய்துகொண்டு . பரந்தாமன் சற்று சிரித்த முகத்தோடு பணம்தானே வேண்டும் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள் . நான் இன்று பணம் கொண்டு வரவில்லை நாளைக்கு நான் வந்து உனக்கு நிறைய பணம் கொடுக்கிறேன் என்று சிரித்த முகத்தோடு சொன்னான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சு கனகா விற்கும் ஊமையனுக்கும் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியது இவ்வளவு பாசமாக இருக்கிறாரே பண்ணையார் மகன்கள் என்று நினைத்து பெருமைப் பட்டாள் அப்போது கனகா எனக்கு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் போதும் ஐயா என்று சொன்னால் கனகா.

அதைப்பற்றி நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று சிரித்தான் பரந்தாமன்.

அப்போது சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்தார்கள்

அப்போது கனகா சிரித்துக் கொண்டே போவதை கவனித்தார்கள் . அதேசமயம்
பரந்தாமனும் சந்தோஷமாக
சிரித்ததையும் .சந்திரனும் தீனாவும் கவனித்துக் கொண்டே வந்தார்கள் பம்பு செட்டை நோக்கி.

அண்ணா ...என்ன கனகாவும் நீங்களும் ஒரே சந்தோசமா சிரித்து கொண்டு இருந்தீர்கள் என்று தீனா கேட்டான். பரந்தாமனிடம்

நம்ம நெனச்சபடி கனகா சம்மதித்து விட்டால். அவளுக்கு இதில் மனப்பூர்வமாக சம்மதம் இந்த விஷயத்தைப் பற்றி யாரிடமும் அவள் சொல்ல மாட்டாள் அதனால் நாளைக்கு நீங்கள் உங்கள் விருப்பப்படி இந்த கனகாவை அனுபவித்து கொள்ளுங்கள் என்று ரகசியமாக மெதுவாக சொன்னான் பரந்தாமன்.

தீனாவுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி இனிமேல் கனகாவை நம் விருப்பப்படி அனுபவிக்கலாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டான் தீனா.

கனகா இப்படி இவ்வளவு சீக்கிரத்தில் சம்மதம் தெரிவித்து விட்டாலே இவளைப் பற்றி நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லையே பார்ப்பதற்கு துணிச்சலான பெண்போல தெரிகிறாள் .ஆனால் இவளும் ஒரு சாதாரண பெண்தான் என்று கொஞ்ச நேரத்தில் புரிய வைத்து விட்டாலே . சரி பரவாயில்லை அவரவர் விருப்பப்படியே வாழ்க்கையை வாழட்டும் நாளைக்கு இவளை நாம் அனுபவிக்க வேண்டாம் . தீனாவும் அண்ணனும் இவளை அனுபவித்து கொள்ளட்டும் இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று நினைத்துக்கொண்டு சந்திரன் அமைதியாக இருந்தான்.

என் கனகாவிடம் பேசினாள் நமது வழிக்கு அவள் வர மாட்டாள் அதனால் தம்பிகளுக்கு நிறைய மது ஊற்றிக்கொடுத்து கனகாவை கெடுத்துவிட சொல்லவேண்டும் தம்பிகளும் கனகா சம்மதத்தோடுதான் அவளை அனுபவிக்க போகிறோம் என்ற தைரியத்தில் கனகாவை கெடுத்து விடுவார்கள் பிறகு எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடலாம் ஆனால் எப்படியாவது இந்த பிரச்சனையை மையமாக வைத்து திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் அதனால் எப்படிப்பட்ட பிரச்சனை கனகா உருவாக்கினாளும் அதை சமாளித்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டே பரந்தாமன் தனது தம்பிகளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.


பரந்தாமன் .....நிச்சயம் தனது திட்டத்தை செயல்படுத்த துணிந்து விட்டான் . ஆனால் இதில் வெற்றி கனகாவுக்க ...,
இல்லை பரந்தாமனுக்க என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்.... 14 👇


அதிகாலை.. 3... மணி...

பரந்தாமன் விழித்துக்கொண்டான்..

எழுந்து சாந்தியை பார்த்தான் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் . பக்கத்தில் தன்னுடைய மகன் சுரேஷ் அவனும் நன்றாக உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு பரந்தாமன் . வழக்கம்போல தனது வீட்டு மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்.

இன்று நம் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளாக அமையப்போகிறது. நம்முடைய திட்டமும் பெரிய அளவில் ஒன்றும் இல்லை எல்லாமே பிரச்சனையாக தான் இருக்கிறது இந்த பிரச்சனையிலிருந்து நம் திட்டத்தை எப்படி வெற்றிபெற செய்வது என்று பரந்தாமன் அதிகாலையிலே யோசிக்க ஆரம்பித்தான்.

கனகாவை.. நம்பக்கூடாது ..அவள் நிச்சயம் நம்முடைய எண்ணத்திற்கு அவள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாள். அதனால் நமது தம்பிகளை எப்படியாவது கனகாவிடம் ஒன்றுசேர வைத்துவிட வேண்டும் . பிறகு கனகா எந்த முடிவு செய்தாலும் அதை நாம் எதிர்த்து நம்முடைய வழிக்கு அவளை வர வைக்க வேண்டும் அப்படி செய்தால்தான் கனகா ஓரளவுக்கு நம்மை பார்த்து பயப்படுவாள்.

கனகா எந்த பிரச்சனை செய்தாலும் அதை திருமணத்தை நிறுத்துவதற்கான வழியில் நாம் அந்த பிரச்சனையை கொண்டு செல்லவண்டும் அப்போதுதான் தம்பியின் திருமணம் இன்று போகும் . இப்படி பரந்தாமன் யோசித்துக் கொண்டிருந்ததில்

பொழுதும் விடிந்தது..🌄

பரந்தாமன் மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்தான்.
அப்போது ஊமையனும் .அவனுடன் இரண்டு கூலித் தொழிலாளிகளும் வீட்டின் பின்புறமாக உள்ள புல்புதர்களை சுத்தம் செய்து இருந்தார்கள் . இதை பார்த்ததும் பரந்தாமனுக்கு நம்முடைய திட்டத்திற்கு முதல் வழி தெரிந்து விட்டது . நாம் நினைத்தபடி ஊமையானை பம்புசெட்டில் இருந்து இங்கு வர வைத்துவிட்டோம் அடுத்தது . கனகா பம்புசெட்டில் தனிமையில் இருப்பாள். இன்று நமக்கு நல்ல நாளாக அமையட்டும் என்று உற்சாகத்தோடு பரந்தாமன் தம்பிகளை எழுப்பிவிட்டு அவனும் குளிப்பதற்கு தயாரானான்.

சந்திரன் வழக்கமான உற்சாகத்தோடு புது மாப்பிள்ளை என்ற எண்ணத்தோடு சந்தோஷமாக தன்னை சிறப்பாக அலங்கரித்துக் கொண்டான். தீனாவுக்கும் ரொம்ப சந்தோஷம் நமது வீட்டில் எல்லோரும் கலகலப்பாக இருக்கிறார்கள் இன்னும் கொஞ்ச நாளில் சின்ன அண்ணி வரப்போறாங்க நம்ம வீட்டுக்கு...
நம் வாழ்வில் புதுபுது சொந்தங்கள் வருவதை நினைத்து சந்தோஷமாக அவனும் குளித்து முடித்துவிட்டு அலங்கரித்துக் கொண்டான்.

பரந்தாமனும் சந்திரனும் தினாவும் காலை உணவு அருந்திவிட்டு தோட்டத்திற்கு கிளம்பினார்கள் அப்போது வீட்டின் பின்புறமாக சாந்தியும் பண்ணையாரும் சத்தமாக பேசிக்கொண்டிருப்பது பரந்தாமனின் காதில் விழுந்தது.

அண்ணே.... அப்பாவும் அண்ணியும் கோவமாக பேசுவது போல தெரிகிறது என்றாலும் சந்திரன்.

ஆமாம் தம்பி.... எனக்கும் அப்படித்தான் தெரிகிறது
எதனால் அப்பா இப்படி கோபப்படுகிறார் என்று தெரியவில்லையே . வாங்க என்னென்னு பார்க்கலாம் என்று பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பைக்கிலிருந்து இரங்கி வீட்டின் பின்பக்கமாக சென்றார்கள்.

ஏதோ போனா போகுதுன்னு விட்டாள். இந்த சாமியாருக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிடுச்சு தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் என் கோபத்திற்கு அந்த சாமியார் ஆளாகி விடுவார் என்று பண்ணையார் கோபத்தோடு சொன்னார்.

என்னப்பா ஆச்சு .....எதுக்கு இப்படி காலையிலே கோபத்தோடு பேசிக்கொண்டு இருக்கீங்க என்றான் பரந்தாமன்.

என்னங்க.... இந்த சாமியார் நம்ம ஊருக்குள்ள என்ன சொல்லிக்கிட்டு திரிகிறார் என்றுதெரியுமா என்றாள் சாந்தி.

என்ன சொல்றான் அந்த சாமியார் ... நம்மளை பத்தி ஏதாவது தரக்குறைவாக பேசினான என்று சற்று கோபத்தோடு கேட்டான் பரந்தாமன்.

இந்த ஊருக்கு சோதனைக் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது என்று இந்த சாமியார் .
ஊர் முழுக்க சொல்லிக்கிட்டு வாரான் . அந்த ஆளுக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் நம்ம திருமணம் நெருங்கிக்கொண்டு வந்திருக்கும் இந்த சமயத்தில் இந்த ஊருக்கே சோதனைக் காலம் நெருங்கிக் கொண்டு வருகிறது என்று சொல்லுவான் . அவனை இப்படியே விட்டாள் . அவன் இந்த ஊரையே கெடுத்து விடுவான் உடனே அந்த சாமியாரை நீங்கள் மூவரும் சென்று கண்டித்து வையுங்கள் என்றாள் சாந்தி ஆவேசமாக.

பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது .. உண்மையாகவே இந்த சாமியார் சக்தி வாய்ந்தவனாக இருப்பான என்று ...
நாம் செய்யப்போகும் இந்த காரியத்தை அவன் சக்தியால் முன்கூட்டியே தெரிந்துகொண்டு இப்படி பேசுகிறாரான என்று பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

என்னடா திரு திருன்னு முழிக்கிற... உடனே அந்த சாமியாரை கண்டிச்சு வையுங்க ...இல்லையென்றால் அவனுக்கு இந்த ஊரில் நம்மதான் எல்லாமே என்பது போல எதையாவது பேசிக் கொண்டு இருப்பான் . என்று பண்ணையார் கோபத்தோடு பரந்தாமனை பார்த்து சொன்னார்.

பரந்தாமனுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தயக்கத்தோடு நின்றான் . சாமியாரை நாம் திட்டினால் அவன் சக்தியால் நம்மை ஏதாச்சும் செய்து விடுவானோ என்ற பயம் பரந்தாமனுக்கு ஏற்பட்டது அந்த சாமியார் உண்மையிலேயே சக்தி படைத்தவன்தான் அதனால்தான் அவனுக்கு நாம் இன்று செய்யப்போகும் தந்திரத்தைப் பற்றி தெரிந்துகொண்டு இப்படி பேசி இருக்கிறான் . மேலும் அவனை நாம் திட்டினால் பிரச்சனை நமக்குத்தான் ஏற்படும்
என்று பரந்தாமன் மனதுக்குள் நினைத்துக்கொண்டு சற்று அமைதியாக நிதானமாக தனது அப்பாவிடம் சொன்னான்..

ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க அதுக்கெல்லாம் நம்ம கோபப்பட்டால் நன்றாக இருக்காது அப்பா . நம்மைப்பற்றி இந்த ஊர் மக்கள் பெரும் மதிப்பை வைத்திருக்கிறார்கள் அதேபோல ஒரு சில குடும்பம் அந்த சாட்டையடி சாமியாரை வணங்குகிறார்கள் காரணம் அவர் நம்மூரில் உள்ள பேய் பிசாசுகளை விரட்டி அடிப்பதில் வல்லவனாக இருக்கிறாராம்
இப்படி அவருடைய செல்வாக்கு நமது ஊரில் பரவி இருக்கு
இந்த நிலைமையில் சாட்டையடி சாமியாரை நம்ம
அசிங்கப்படுத்தினால் அதனால் ஒரு சில குடும்பங்கள் வருத்தப்படுவார்கள் .
அந்த சாமியார் எதையாவது பேசிக்கொண்டு போகட்டும் நம்ம திருமண வேலையை சிறப்பாக செய்துவிட்டு . அதன் பிறகு அந்த சாமியாரை கேள்வி கேட்கலாம் இந்த ஊருக்கு என்ன சோதனைக்காலம் வந்தது என்று அவரை கேள்வி கேட்கலாம் அதுவரைக்கும் யாருடைய பேச்சையும் நம்மா கண்டு கொள்ளக் கூடாது என்று பரந்தாமன் பொறுப்போடு சொன்னான்.

சற்று கோபத்தோடு இருந்த பண்ணையாரும் . சாந்தியும் பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் அவர்களின் கோபம் சற்று குறைய தொடங்கியது.

பரந்தாமா ....நீ சொல்வதுதான் சரி நான்தான் தேவையில்லாமல் கோபப்பட்டு விட்டேன்
நம்ம குடும்பத்துல திருமண வேலையை வைத்துக் கொண்டு இருக்கும் போது . இந்த சாமியார் இப்படிப்பட்ட வார்த்தையை சொன்னது எனக்கு ரொம்ப கோபத்தை உண்டாக்கிவிட்டது அதனால்தான் சற்று நான் கோபப்பட்டு விட்டேன் . ஆனால் நீ சொல்வதைப் போலவே யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல் நம்முடைய வேலையை மட்டும் பார்க்கணும் .
அப்படி செய்தால்தான் நமக்கும் கவுரவம் என்றார் பண்ணையார்.

அந்த சாமியார் இது போல பேசிக்கொண்டு இருக்கிறார் என்று உங்களுக்கு யார் சொன்னது என்றான் பரந்தாமன்.

ஐயா எங்களை மன்னித்துவிடுங்கள் .
நாங்கள்தான் சொன்னோம்
அந்த சாமியார் நேற்றிலிருந்து இது போல இந்த ஊருக்கு சோதனை காலம் நெருங்கிக் கொண்டே வருகிறது என்று சொன்னார்
இந்த செய்தியை கேட்டதும் எங்களுக்கு மனம் கஷ்டமாக இருந்தது . நமது பண்ணையார் வீட்டு திருமணமும்
நமது முத்தையா வீட்டு திருமணமும் நடக்க இருக்கும் இந்த நேரத்தில் இந்த சாமியார் இப்படிப்பட்ட வார்த்தையை சொல்கிறாரே என்று நினைத்து கவலைப்பட்டோம்

பண்ணையாரை பார்த்ததும் எங்களால் இந்த விஷயத்தை சொல்லாமல் இருக்க முடியவில்லை அதனால்தான் அவரிடம் இந்த விஷயத்தை சொல்லிவிட்டோம் ஐயா ...எங்களை மன்னித்து விடுங்கள் என்று ஊமையனோடு வேலைக்கு வந்த இரண்டு கூலித் தொழிலாளிகள் . பணிவாக சொன்னார்கள்.

சரி சரி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் . நீங்கள் எதிர்பார்த்தபடி எல்லாமே நல்லபடியாக முடியும். நீங்கள் உங்களுடைய வேலையை பாருங்கள் என்று. ஊமையனையும் மற்ற இரண்டு கூலித்தொழிலாளி களையும் வேலையை செய்ய சொன்னான்.பரந்தாமன்

அப்பா... நாங்கள் தோட்டத்திற்கு கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு பரந்தாமன் புறப்பட தயாரானான்.

என்னங்க ... நீங்க சொன்னபடி அந்த சாமியாரை நம்ம எதுவுமே கேட்க வேணாம் . ஆனால் அவர் நம்ம ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுதுன்னு சொல்லியிருக்காரு . அவர் எதனால அப்படி சொன்னாரு என்று தெரியல அதனால் நம்ம வீட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி இந்த ஊரையே சந்தோசப்படுத்த வேண்டும் அதனால இன்னைக்கு நீங்கள் மூன்று பேரும் டவுனுக்கு போயிட்டு ஊர் மக்களுக்கு தேவையான துணிமணிகளை ஆர்டர் செய்துவிட்டு வாங்க அப்போதுதான் அந்த சாமியாருக்கு நம்ம பதிலடி கொடுத்தது போல இருக்கும் என்று சாந்தி சொன்னாள்.

ஆமாம்பா ...சாந்தி சொல்றதும் சரிதான் ...நீங்க தோட்டத்திற்கு இப்போது போக வேண்டாம்
உடனே இன்னிக்கே ஊர் மக்கள் எல்லோருக்கும் புது துணியை ஆர்டர் செய்துவிட்டு வாங்க
அந்த சாமியாருக்கும் சேர்த்து துணியை எடுத்துகிட்டு வாங்க அப்போதுதான் அந்த சாமியாருக்கு தேவையில்லாத பேச்சை பேசக்கூடாது என்று புரியும் .
என்று பண்ணையார் பரந்தாமனிடம் சொன்னார்.

ஆரம்பமே இப்படி நம்முடைய திட்டத்திற்கு எதிர்றாகிவிட்டதே என்று நினைத்து பரந்தாமன் ஒரு நிமிடம் கண்களை மூடியபடி தனது கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டான் . நம்முடைய திட்டத்திற்கு முதல் எதிரியாக
நம் மனைவிதான் இருக்கிறாள் என்று நினைத்து சாந்தியின் மீது கோபப்பட்டான் பரந்தாமன்.

சரி அப்பா ..நீங்க சொல்வதைப் போலவே இன்னைக்கு நாங்கள் தோட்டத்திற்கு போகல .
நேரா டவுனுக்கு போயிட்டு ஊர் மக்களுக்கு தேவையான வேட்டி சர்ட் புடவை ஜாக்கெட் போன்ற துணிகளை இன்று ஆர்டர் செய்து இன்றே வீட்டுக்கு வரும்படி சொல்லிவிட்டு வருகிறேன் .
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பரந்தாமன் .சந்திரன் .தீனா மூவரும் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.


இன்னைக்கு உங்களை இந்த கனகா சந்தோச படுத்துவதற்கு சம்மதம் தெரிவித்து இருந்தாள் ஆனால் நமக்குத்தான் இன்னைக்கு முக்கியமான வேலையை கொடுத்திருக்கிறார் அப்பா .
இந்த ஊர் மக்களுக்கு புது துணிகளை எடுத்து வரும்படி என்று பரந்தாமன் 🏍️மோட்டர் பைக்கை ஓட்டிக்கொண்டே சொன்னான்.

நிஜமாகவா சொல்றீங்க அண்ணா கனகா இன்று எங்களை வரச் சொல்லி இருந்தாள. என்று சற்று சந்தோஷமாக கேட்டான் தீனா.

இன்று என் கணவர் உங்கள் வீட்டு வேலைக்கு வந்து விடுவார் .
நான் மட்டும் தனியாக பம்புசெட்டில் இருக்கிறேன் . உங்கள் தம்பிகளை வர சொல்லுங்கள் என்று சொன்னால் கனகா .
ஆனால் நமக்குத்தான் சந்தர்ப்பம் அமையவில்லை என்றான் பரந்தாமன்.

இதுக்காகத்தான் ஊமையன் நம் வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறாள கனகா
அவள் ரொம்ப மோசமான பெண்ணாக இருப்பாள் போல் தெரிகிறது என்றான் சந்திரன்.

அவளை குறை சொல்லாதே தம்பி அவள் ஆரம்பத்தில் சம்மதிக்கவே இல்லை . நான் தான் என் தம்பிகள் உன் மீது ஆசைப்பட்டு விட்டார்கள் அவர்களின் ஆசையை நான் எப்படியாவது நிறைவேற்றி வைப்பேன் . அதனால்தான் நான் உன்னிடம் கேட்கிறேன் எனக்காக நீ சம்மதிக்க வேண்டும் என்று அவளிடம் நீண்ட நேரம் பேசி தான் . இந்த சம்மதத்தை அவளிடம் நான் வாங்கினேன் அதனால் அவளை நீ தவறாக எடுத்துக் கொள்ளாதே தம்பி
ஏதோ என் மீது உள்ள மரியாதையில் அவள் சம்மதம் தெரிவித்தாள். என்று பொய் சொல்லி சந்திரன் மனதை திசை திருப்பினான் பரந்தாமன்.


அப்படியென்றால் இன்னைக்கு கனகாவை சந்திக்க முடியாத அண்ணா என்று ஆர்வமாக கேட்டான் தீனா.

அது ஒன்றும் பெரிய விஷயம் ஒன்றும் கிடையாது . நம்ம மூன்று பேரும் இப்போது ஊர் மக்களுக்கு புதுத் துணியை ஆர்டர் செய்துவிட்டு இங்கிருந்து நேராக பம்பு செட்டுக்கு போய்விடலாம் . அதற்குள் நேரம் எப்படியும் நான்கு மணி ஆகிவிடும் பிறகு நீங்கள் இருவரும் கனகாவிடம் சந்தோசமாக இருந்துவிட்டு . அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பி விடலாம்

அப்போது அப்பாவிற்கு நம்மிது எந்த சந்தேகமும் வராது நம்மா புது துணியை ஆர்டர் செய்து விட்டு வருகிறோம் என்று நினைத்துக் கொள்வார் அப்பா . எப்படி என் யோசனை என்று பரந்தாமன் சொன்னான்.

நீங்கள் சொல்வதைப் போலவே செய்யலாம் ஆனா என்று உற்சாகமாக சொன்னான் தீனா.

சந்திரன் எதுவுமே பேசாமல் இருக்கிறானே அவனுக்கு விருப்பம் இல்லையா. என்றான் பரந்தாமன்

உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள் அண்ணா என்று சலிப்போடு சொன்னான் சந்திரன்.

பரந்தாமனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது ....எப்படியோ இன்று நம்முடைய திட்டத்தை நிறைவேற்றி விட வேண்டும் .
இன்னைக்கு நம்முடைய திட்டத்தை தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம் அமைவது கஷ்டமாகிவிடும் அதனால் இன்று பிரச்சனையை உருவாக்கி விட வேண்டும் என்று பரந்தாமன் மனதில் நினைத்துக்கொண்டு 🏍️மோட்டார் பைக் ஒட்டிச்சென்றான்.


பரந்தாமன் நினைத்தது போல ஊர் மக்களுக்கு புதுத்துணி ஆர்டர் செய்துவிட்டு. மூவரும் பம்பு செட்டுக்கு வந்துவிட்டார்கள்.

வழக்கமாக மது குடிக்கும் இடத்தில் மூவரும அமர்ந்தார்கள்
அப்போது பரந்தாமன் ஏற்கனவே கரும்புத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை எடுத்து வந்து . மூவரும் மது அருந்துவதற்கு தயாரானார்கள்.

அண்ணே ...எனக்கு இன்னைக்கு கனகா மீது ஆசை ஏற்படவில்லை அதனால் நான் இன்னொரு நாளைக்கு கனகாவிடம் சந்தோஷமாக இருக்கிறேன் என்று சந்திரன் சொன்னான்.

இந்த திட்டத்தை போட்டிருப்பது உனக்காக தானடா ...... நீயே வேண்டாம் என்றாள் எப்படி உன்னை விட்டுவிடுவேனா என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு பரந்தாமன் சற்று சிரித்துக் கொண்டே சொன்னான் ..தம்பி உன் விருப்பப்படியே செய்
ஆனால் இப்போதைக்கு கொஞ்சம் மது குடித்து விடு . ஏனென்றால் நம் மூன்று பேரும் மது குடித்துவிட்டு இந்த பாட்டில்களை கண்டபடி போட்டு விட்டோம் . இது நம்ம தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பார்த்துவிட்டார்கள் யார் இந்த வேலையை செய்வது என்று கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள் . அதனால் இன்று இந்த மதுக்கலை அனைத்தையும் குடித்து தீர்த்துவிட வேண்டும் .
பிறகு இனிமேல் நாம் மூவரும் மது குடிக்கக்கூடாது . அதேபோல இந்த கனகாவையும் இன்று மட்டும் தான் நீங்கள் விரும்பினால் சந்தோசமாக இருக்கலாம் . நாளை முதல் அவள் சம்மதித்தாலும் நான் சம்மதிக்க மாட்டேன் .
இது போன்ற விஷயத்திற்கு .
ஏதோ நீங்கள் அவள் மீது ஆசைப்பட்டு விட்டீர்களே என்பதற்காகத்தான் இன்று உங்களை நான் இதுபோன்ற விஷயத்திற்கு அனுமதிக்கிறேன் இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்வதற்கு நான் அனுமதிக்க மாட்டேன் . என்று தம்பிகளை கண்டிப்பதை போல மிரட்டினான் பரந்தாமன்.

சரி அண்ணா... நீங்கள் சொல்வதைப்போல இன்றோடு கடைசி நாளாக இருக்கட்டும் மது குடிப்பது . என்று சொல்லிவிட்டு சந்திரன் தீனா பரந்தாமன் மூவரும் மது குடிக்க ஆரம்பித்தார்கள்.

பரந்தாமன் மட்டும் வழக்கம்போல தம்பிகள் பார்க்காத நேரம் பார்த்து மதுவை கீழே ஊற்றி விட்டான் பிறகு அவனும் சமமாக மது குடிப்பதை போல நடித்தான் பரந்தாமன்.

சந்திரனும் தீனாவும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டார்கள் ..

தீனாவுக்கு போதை தலைக்கேறியது . அவன் நினைவில் கனகா புன்னகையோடும் சிரிப்பதைப் போல வந்தாள்.

எனக்காக கனகா காத்துக் கொண்டிருப்பாள் . நான் போகட்டுமா அண்ணா என்றான் தீனா.

கனகாவை பற்றி நீ பயப்படாதே உன்னுடைய சந்தோசத்தை இன்று தீர்த்துக் கொள் என்று சொல்லி தீனாவை பம்பு செட்டுக்கு அனுப்பி வைத்தான் பரந்தாமன்.

மாலை நேரம் என்பதால் கனகா
பம்பு செட்டின் வெளியே இருக்கும் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தாள் ..அப்பொழுது தீனா வருவதை கவனித்தாள் கனகா.

கனகாவை காமப் பார்வையோடு முறைத்துப் பார்த்தான் தீனா.


எதற்கு நம்மை முறைத்துப் பார்க்கிறார் ..சின்ன ஐயா ... ஒருவேளை தண்ணி கேட்பதற்காக தயங்குகிறார என்று மனதில் நினைத்துக்கொண்டு .
கனகா சற்று தீனாவின் அருகில் சென்று. ஐயா தண்ணி வேணுமா என்றாள் கனகா.

கனகா அருகில் வந்து நின்ற உடன் தீணாவுக்கு மேலும் போதை தலைக்கு ஏறியது . அப்போது கனகாவை முறைத்தபடி ..ஆமாம் தண்ணி வேண்டும் என்று சொன்னான் தீனா.

தீனா வாய்தறந்து பேசும் போது கனகாவிற்கு குப்பென்று நாற்றம் அடித்தது ...அப்போது கனகா விற்கு அதிர்ச்சியாக இருந்தது
இவர் மேல் சாராயம் நாற்றம் அடிக்கிறதே இவர்தான் இங்கு குடித்துவிட்டு பாட்டில்களை போட்டு இருக்கிறாரா என்று நினைத்து அதிர்ந்து போனாள் கனகா .
பிறகு பொறுமையாக பம்பு செட்டுக்கு உள்ளே நுழைந்து தண்ணீரை எடுத்துக்கொண்டு திரும்பினால் .

அப்போது அவள் மனம் அதிர்ந்து போனது ...தீனா கதவை சாத்தி தாழ்பல் போட்டுக் கொண்டிருந்தான் இதை பார்த்த கனகாவிற்கு கை கால் நடுங்கியது.


அய்யா... எதுக்கு கதவை
சாத்திரிங்க எனக்கு ரொம்ப பயமாக இருக்குது கதவை திறங்க ஐயா இன்று பதட்டத்தோடு சொன்னால் கனகா.

நான் உன் மேலே எவ்வளவு ஆசை வச்சிருக்கேன் தெரியுமா
அதை இன்னும் கொஞ்ச நேரத்துல நீ புரிஞ்சுக்குவ என்று சொல்லிக்கொண்டே கனகாவின் தோள் மீது கை வைத்தான் தீனா.

கையில் வைத்திருந்த தண்ணீர் சொம்பை கீழே போட்டு விட்டாள் கனகா அதிர்ச்சியில்.

ஐயா இது மட்டும் உங்க அண்ணனுக்கு தெரிந்தால் .அப்புறம் பிரச்சனை உங்களுக்குத்தான் என்று சொல்லிக்கொண்டே தோள் மீது இருந்த தீனாவின் கையை தட்டி விட்டாள் கனகா சற்று பயத்தோடு

உன்னைப்பற்றி என் அண்ணன் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டார் அவர்தான் என்னை இப்போது அனுப்பி வைத்தார் அதனால் நீ கவலைப்படாமல் என்னோடு சந்தோஷமக இருக்கலாம் என்று சொல்லிக்கொண்டே கனகாவின் அருகில் சென்றான் தீனா.

எல்லோருக்கும் நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு இப்படிப்பட்ட கேவலமான காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் இந்த பண்ணையாரின் மகன்கள் இவர்களால்தான் ஏற்கனவே இங்கு தங்கி வேலை செய்த குடும்பம் காணாமல் போய்விட்டார்கள
இது போன்ற காரியத்தை அந்த பெண்ணிடமும் செய்து இருப்பார்கள் . அதனால் தான் அவள் இவர்களுக்கு பயந்துகொண்டு ஓடி விட்டாளா என்று புரிந்துகொண்டால் கனகா.

ஐயா நீங்கள் நினைப்பதெல்லாம் தவறு ...நான் அந்த மாதிரியான பெண் கிடையாது என்னை விட்டுவிடுங்கள் ஐயா
உங்களை எதிர்க்கும் தைரியம் எனக்கு கிடையாது உங்களை இதுவரைக்கும் நான் கடவுளாக தான் பார்க்கிறேன் .ஆனால் நீங்கள் இப்படிப்பட்ட காரியத்தை செய்யும்போது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அந்த அளவுக்கு உங்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது ஐயா என்னை விட்டு விடுங்கள் ஐயா என்று சொல்லிக்கொண்டு கனகா அழுதாள். அப்போது அவள் தீனாவின் காலில் விழுந்து கதறினாள்.

தீனாவுக்கு போதை தலைக்கேறியதில் கனகாவின் காதறல் அவன் காதில் கேட்கவில்லை . கனகா தீனாவின் காலை பிடித்துக்கொண்டு அழுது கொண்டிருக்கும் போது
அவளின் இடுப்பை ரசித்தான் தீனா.

அப்போது தீனாவுக்கு காம போதை மேலும் அதிகரித்தது .
உடனே கனகாவை தனது இரண்டு கைகளால் தூக்கி அவளை இருக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான் தீனா.

தீனா கட்டி அணைத்ததும் கனகாவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது . அவள் உடலில் தீப்பற்றி எரிவதை போல உணர்ந்தாள் கனகா.

காம வெறி பிடித்தவன் போல கனகாவை வெறித்தனமாக கற்பழித்தான் தீனா
அவன் குடிபோதையில் இருந்ததால் அவனுடைய காம வெறி மேலும் அதிகமானது அப்போது கனகாவை கண்ட இடத்தில் வெறி நாய் போல கடித்து குதறினான் தீனா.

துணிச்சலான பெண்ணாக இருந்தாலும் கனகா தெய்வமாக பார்த்திருந்த பண்ணையார் மகன்கள் இப்படிப்பட்ட கொடூரமான காரியத்தை செய்கிறார்களே என்று நினைத்து அவள் மனம் சுக்குநூறாக வெடித்ததில்
அவள் துணிச்சலும் கோபமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.



தொடரும்....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...15 👇

நமது திட்டப்படி தீனா கனகாவை கெடுத்து இருப்பானா என்ற சந்தேகம் பரந்தாமனுக்கு லேசாக தோன்றியது .

இந்த திட்டத்தை சந்திரனுக்காகவே போட்டோம். ஆனால் சந்திரன் நம்முடைய சூழ்ச்சியில் சிக்காமல் தப்பித்து விட்டான் இவனை எப்படியாவது கனகாவிடம் ஒன்றுசேர வைக்க வேண்டும் என்று மனதில் நினைத்தான் பரந்தாமன்.

அளவுக்கு மீறி குடித்திருந்ததால் சந்திரன் சுயநினைவின்றி படுத்து தூங்கிக்கொண்டிருந்தான் அப்போது பரந்தாமன் அவனை மெதுவாக எழுப்பினான்.

தம்பி... தம்பி ...எழுந்திருடா தீனா இன்னும் வரவில்லை என்னாச்சு என்றும் தெரியவில்லை
கொஞ்சம் நீ பம்பு செட்டுக்கு போயிட்டு அங்கு தம்பி எப்படி இருக்கான் என்று பார்த்துவிட்டு வா சந்திரா என்று பரந்தாமன் மெதுவாக சந்திரனிடம் சொன்னான்.

சந்திரன்... பரந்தாமன் சொன்னதை புரிந்துகொண்டான்.

அண்ணே ..நீங்க இங்கேயே இருங்க நான் பம்பு செட்டுக்கு போயிட்டு தம்பியை கூட்டிக்கொண்டு வருகிறேன் . நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க என்று உளறிக்கொண்டே சந்திரன் பம்புசெட்டை நோக்கி தள்ளாடியபடி சென்றான்.

என்னோட கவலை எல்லாம்
இந்த திட்டத்தில் நீ ஒதுங்கி இருப்பது தான் டா என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரந்தாமன்.

பரந்தாமனுக்கு ஒரே பதட்டமாக இருந்தது ...கனகா இன்னேரம் தம்பியை அடித்து இருப்பாளா இல்லை அவனிடம் கெஞ்சி கொண்டு அழுது இருப்பாளா இல்லையென்றால் ஊருக்குள்ளே ஓடி யாரையாச்சும் கூட்டிக்கொண்டு வந்து இருப்பாளா .
அப்படி இல்லை என்றால் தம்பியின் ஆசைக்கு இணங்கி இருப்பாளா என்று பல கோணங்களில் கற்பனை செய்து கொண்டு பரந்தாமன் ஒரே பதட்டமாக இருந்தான் .

சந்திரன் சென்றிருக்கிறான் அவனும் நாம் நினைத்தபடி கனகாவிடம் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் .
ஆனால் அதற்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான் . இருந்தாலும் சந்திரன் மதுபோதையில் சென்றிருக்கிறான் . கனகாவை பார்த்ததும் அவன் மனம் மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கு என்று பரந்தாமன் யோசித்துக்கொண்டு மது அருந்தினா இடத்திலே.
இங்கும் அங்குமாக நடந்துகொண்டு பதட்டமாக காணப்பட்டான் பரந்தாமன்.

சந்திரனுக்கு மதுபோதையில் பார்க்கும் இடமெல்லாம் அவன் வருங்கால மனைவியின் முகங்கள் தெரிந்தது .
இப்படி சுயநினைவின்றி பாம்பு செட்டை நோக்கிச் சென்றான் சந்திரன்.

குடிபோதையில் கனகாவை கற்பழித்துவிட்டு . பம்பு செட்டின் அறையில் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான் தீனா...

குடிபோதையில் காட்டுமிராண்டி போல் தீனா.
கனகாவை கற்பழித்தது அவளின் ஊடலில் சில இடங்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டிருந்தது .
முகங்கள் எல்லாம் வீங்கியிருந்தது உதடுகள் ரத்த காயத்தில் வீங்கியிருந்தது இப்படி அலங்கோலமான நிலையில் கிணற்றின் தடுப்பு சுவரின் அருகில் அமர்ந்துகொண்டு கனகா தனது வாழ்க்கை இப்படி கொஞ்ச நேரத்தில் தலைகீழாக மாறிவிட்டதே என்று நினைத்து அழுதாள்.

இந்த நிலைமையில் நம் கணவன் நம்மை பார்த்தால் .
அவர் மனம் சுக்குநூறாக வெடித்து விடுமே இந்த கோலத்தை அவரால் தாங்க முடியாது .
நடந்த உண்மையை தெரிந்து கொண்டாலும் அவரால் பண்ணையார் மகன்களை எதிர்த்து போராட முடியாது .
அவருக்கு எல்லாமே நாம்தான் நமக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுருப்பதை பார்த்துவிட்டு அவரால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும் . இப்படி இக்கட்டான நிலைமையில் நம் குடும்பம் சீரழிந்து விட்டதே என்று நினைத்து அழுதாள். அப்போது சந்திரன் தள்ளாடியபடி வருவதை பார்த்தாள் கனகா. மறுபடியும் அவளுக்கு பயம் அதிகரித்தது.

சந்திரன் தள்ளாடியபடியே பம்பு செட்டின் அருகில் வந்து நின்றான் அப்போது கனகா கிணற்றின் தடுப்பு சுவர் அருகில் உட்கார்ந்துகொண்டு அழுது இருப்பதை பார்த்தான் சந்திரன் அப்போது அவன் கண்களுக்கு சந்திரனின் வருங்கால மனைவியின் முகம் போல தெரிந்தாள் கனகா.

ஐயையோ ...எதுக்கு செல்லம் இப்படி அழுகுற .
உனக்கு என்ன ஆச்சு செல்லம் என்று ஆசையோடு சந்திரன் கேட்டான் அவன் கண்களுக்கு அவனின் வருங்கால மனைவி போல் தெரிந்ததால்.

ஐயா ...உங்கள் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் என்னை ஒன்றும் செய்யாதீங்க ஏற்கனவே நான் அவமானத்தில் .
என் உயிர் பாதி பிரிந்துவிட்டது மேலும் என்னை தொட்டு என்னை அசிங்கபடுத்தி விடாதீங்க என்று சொல்லிக்கொண்டே இரு கைகளால் கும்பிட்டபடி அழுதால் கனகா.

சந்திரன் குடிபோதையில்...
நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் . நீ அழுவாதே செல்லம்
நீ அழுதால் என் மனம் தாங்காதம்மா உன்னை நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று பாசமாக தனது வருங்கால மனைவி என்று நினைத்து சந்திரன் கனகாவிடம் சொன்னான்.

உங்களை எதிர்த்து போராடும் துணிவு எனக்கு கிடையாது ஐயா என்னை விட்டு விடுங்கள் என்று தரையில் விழுந்து கும்பிட்டபடி அழுதாள் கனகா.

இன்னும் கொஞ்ச நாள்ல .
உனக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது . நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்
உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் என்னிடம் சொல்லுடா செல்லம் . நீ எதுக்காக அழுகுற என்று எனக்கு தெரியவில்லை கல்யாணம் நடக்கப்போகும் இந்த நேரத்தில் இப்படி அழுதாள் என் மனம் தாங்காதுடா செல்லம்
நீ அழுவாதே என்று பாசமாக தனது வருங்கால மனைவி என்று நினைத்துக் கொண்டு கனகாவிடம் சொன்னான் சந்திரன் குடிபோதையில்.

சந்திரனின் பேச்சைக் கேட்டதும் கனகாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது ...நமக்கு திருமணமா என்று நினைத்து.

நமக்கு திருமணம்மாகி குடும்பம் நடத்தி வருகிறோம் .
இது தெரிந்தும் இந்தச் சந்திரன் நம்மை திருமண செய்துகொள்ள போகிறேன் என்று சொல்கிறானே எப்படிப்பட்ட கேவலமானவர்கள் பண்ணையாரின் மகன்கள் என்று நினைத்து கனகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது .
அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போனாள்.

நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன் வா நம்ம போகலாம் என்று பாசமாக சந்திரன் கனகாவை அழைத்தான்.

ஐயா ...என்னை விட்டுடுங்க நீங்கள் பேசும் பேச்சு எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது . தயவுசெய்து என்னை விட்டு விடுங்கள் என்று மறுபடியும் கையெடுத்து கும்பிட்டாள் சந்திரனைப் பார்த்து கனகா.

அப்போது தள்ளாடியபடி இருந்த சந்திரன்.. கீழே ஒரு கல் .
காலில் பட்டு தடுக்கி கீழே விழுந்து அவனும் போதையில் மயங்கி விட்டான்.

பம்புசெட்டில் தீனா போதையில் மயங்கி உறங்கிக் கொண்டிருந்தான் .
அதேபோல இப்போது சந்திரனும் வெளியே போதையில் மயங்கி விழுந்து அவனும் உறங்கினான்.

ஏற்கனவே கசங்கி போயிருந்த கனகாவுக்கு சந்திரனின் பேச்சு மேலும் அவள் மனதை பாதித்தது அப்போது இந்த பிரச்சனையை எப்படி செய்யலாம் என்று அழுதுகொண்டே யோசித்தாள் கனகா.

இனிமேல் நம்மை பண்ணையார் மகன்கள் சும்மா விட மாட்டாங்க நாமளும் இனிமேல் சந்தோஷமாக குடும்பம் நடத்த முடியாது. அதேசமயம் இவர்களை ஊர் மக்களிடமும் பண்ணை யாரிடமும் காட்டிக் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் இவர்கள் மூவரும் ஒவ்வொரு குடும்பமாக கெடுத்து கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தாள் கனகா.

அப்போது பரந்தாமன் வருவதை கவனித்தால் கனகா ...

உடனே எழுந்து நின்று .
அவள் தலைமுடியை சரி செய்துகொண்டு சற்று கோபத்தோடு பரந்தாமனை பார்த்தபடி நின்றாள் கனகா.

என்ன நடந்திருக்குமோ எந்த அளவுக்கு நம்முடைய திட்டம் கைகூடி வந்திருக்கிறது என்ற படபடப்போடு பரந்தாமன் பம்புசெட்டின் அருகே வந்து நின்று பார்த்தான் .அப்போது பம்புசெட்டு குள்ளே தீனா படுத்து இருப்பதையும் வெளியே சந்திரன் படுத்து இருப்பதையும் கவனித்தான் பரந்தாமன் . பிறகு கனகா முறைத்தபடி கோபத்தோடு பார்ப்பதை கவனித்தான் பரந்தாமன்.

அம்மாடி ...கனகா ...இனிமேல் உனக்கு நல்ல காலம்தான்
நீ நினைச்ச படியே உன் மகனை நன்றாக படிக்க வைக்கலாம்
இதோ நீ கேட்ட பணத்தை விட நிறையவே எடுத்துக்கொண்டு வந்து இருக்கேன் என்று சொல்லிக்கொண்டே இடுப்பிலிருந்த இரண்டு கட்டு பணத்தை எடுத்து கனகாவிடம் நீட்டினான் சிரித்த முகத்தோடு பரந்தாமன்.

வாயா பெரிய மனுஷா ....
உன் தம்பிங்ககிட்ட என்னப்பத்தி என்ன சொல்லி அனுப்பினே
உன் கடைசி தம்பி வந்து உன்னைப் பத்தி எல்லாமே என் அண்ணன் சொல்லிட்டாரு என்று சொல்லி கேவலமான வேலையை செஞ்சுட்டான் . அதுக்கப்புறம் உன் இரண்டாவது தம்பி வந்து உனக்கும் எனக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் நடக்கப் போகிறது என்று வாய் கூசாம சொல்றான் .
இப்படி கேவலமான வேலையை உன் தம்பிங்க செய்யறாங்க .உன்னை இந்த ஊரே பண்ணையாருக்கு அடுத்தபடியாக உன்னைத்தான் தெய்வமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனா நீ இப்படிப்பட்ட கேவலமான செயலை செஞ்சுகிட்டு இருக்க

நாங்க என்ன பாவம் செஞ்சும் .. எங்க வழுத்துப் பொழப்புக்காக இந்த பம்புசெட்டுல தங்கி வேலை செஞ்சு குடும்பம் நடத்தி வருகிறோம் . இது உங்களுக்கு கேவலமாக தெரியுதா இங்கு வந்து தங்கி வேலை செய்யுற பொம்பளைங்கள இப்படி கேவலப்படுத்துவிங்களா இதனால்தான் ஏற்கனவே இருந்த குடும்பம் இங்கிருந்து ஓடி விட்டார்களா . இது தெரியாம உங்க அப்பா . திருடன் கிட்டயே சாவி கொடுத்து காவலுக்கு வச்சதை போல .
உங்களை காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு அனுப்பி வச்சிருக்காரு .
பாவம் அந்த பெரிய மனுஷன் அவருக்கு இப்படிப்பட்ட பிள்ளைகளா . இதையெல்லாம் செய்யறதுக்கு உங்களுக்கு வெக்கமா இல்லை என்று துணிச்சலோடு கேட்டாள் கனகா.

கனகாவின் பேச்சைக் கேட்டதும் பரந்தாமனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது ...இருந்தாலும் அவன் எதிர்பார்த்ததுதான் கனகா துணிச்சலான பெண் இது பொன்ற விஷயத்திற்கு அவள் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாள் என்று ஏற்கனவே கணித்தது தானே .
என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் மறுபடியும் கனகாவிடம் பேச்சு கொடுத்தான்.

ஏற்கனவே ஓடிப்போன அந்த பெண்ணைப் போல நீயும் முட்டாள்தனமான முடிவை எடுக்காதே .அவளுக்கு பிழைக்கத் தெரியவில்லை ஆனால் நீ புத்திசாலித்தனமாக நடந்து கொண்டாள் . உனக்கு நிறைய பணம் கிடைக்கும் .
நான் சொல்வதைப்போல கேள். எப்படியாவது சந்திரனை மயக்கி உன் கைவசத்தில் வச்சிக்க அவனிடம் நீ திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லி எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடு . இதை மட்டும் நீ செய்து விட்டாள் உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் . நீ இந்த இடத்தில் உள்ளசமாக உன் கணவனோடு குழந்தைகளோடு சந்தோஷமாக வாழலாம் என்று பரந்தாமன் பொறுமையாக கனகாவிடம் எடுத்துச் சொன்னான்.


ஏதோ பெண்ணாசையால் தான் நீங்கள் மூன்று பேரும் இப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்து கொண்டிருக்கிறிர்கள் என்று நினைத்தேன் .
ஆனால் இப்போதுதான் புரிகிறது
நீ ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு தான் . இதுபோன்ற வேலைகளை செய்கிற என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது.
ஆனால் நானும் உன்னோட எண்ணப்படி இணங்கி போவேன் என்று கனவு கூட காணாதே.
இன்று உன்னை எதிர்ப்பதற்கு ஆளில்லாமல் இருக்கலாம்
ஆனால் எல்லாம் கெட்ட செயலுக்கும் ஒரு முடிவு இருக்கு அது உனக்கு வெகுதரத்தில் இல்லை . நிச்சயம் உன்னோட எண்ணம் பலிக்காது ஏனென்றால் ஒரு குடும்பத்தை கெடுத்து நீண்டநாள் சந்தோஷமக யாராலும் வாழ முடியாது . இதை தெய்வமும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது .
இப்போது இரண்டாவது குடும்பத்தை நீங்கள் எடுத்து விட்டீர்கள் . உங்களின் இந்த கேவலமான செயலுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல தண்டனையை அனுபவைப்பீங்க என்று ஆவேசத்துடன் சொன்னாள் கனகா.

பொறுமையாக பேசினாள் நம் எண்ணப்படி நடந்து கொள்ள மாட்டாள் கனகா .
இவளை இனிமேல் மிரட்டுவதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்துகொண்டு பரந்தாமன் சற்று குரலை உசத்தி...
அடியே கனகா ...
என்று ஆவேசத்துடன் குரல் கொடுத்தான் பரந்தாமன்.

என்னடி ...விட்டா பேசிக்கொண்டே போற ...மரியாதையா நான் சொல்றபடி கேட்டால் உனக்கு நல்லது . இல்லையென்றால் உன்னோட வாழ்க்கை வீணாகிப் போய்விடும் நீ எங்களைப் பற்றி இந்த ஊருக்குள்ள எதை சொன்னாலும் நம்ப மாட்டார்கள் ஏனென்றால் நாங்கள் மூவரும் இந்த ஊருக்குள் அப்படி நல்ல பெயரை எடுத்து இருக்கிறோம் அதனால் நீ சொல்வதை எல்லாம் யாரும் நம்ப மாட்டார்கள் .அதேபோல நீ தான் இதுபோன்ற கேவலமான செயலுக்கு என் தம்பிகளை அழைத்தாய் என்று நான் எல்லோரிடமும் சொல்லுவேன் அப்போது எல்லோரும் என் பேச்சை தான் கேட்பார்கள் தேவையில்லாமல் பிரச்சனை செய்யாமல் ஒரு நல்ல முடிவை நாளைக்கு சொல் நான் கிளம்புகிறேன் . இதையும் மீறி முட்டாள்தனமான முடிவை எடுத்தாள் . அது உனக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தி விடும் அதனால் நான் சொல்வதை போல கேட்டு குடும்பம் நடத்துற வழியைப் பார் .. இல்லையென்றால் என்னுடைய உண்மையான முகத்தை நீ பார்க்க வேண்டியதிருக்கும் என்று ஆவேசத்துடன் சொல்லிவிட்டு சந்திரனையும் தீனாவையும் எழுப்பினான் பரந்தாமன்.

தீனாவும் சந்திரனும் எழுந்து பாதி போதையில் பரந்தாமனின் பின்னாடியே சென்றார்கள் .பிறகு மூவரும் களத்துமேட்டில் இருக்கும் பைக்கில் வீட்டுக்கு சென்றுவிட்டார்கள்.

பரந்தாமனின் மிரட்டலான பேச்சு கனகாவின் ஆவேசத்தை அடக்கியது.

இவர்களை பற்றி ஊர் மக்களிடம் சொன்னால் . யாரும் நம்ப மாட்டார்கள்
அவர்கள் சொல்வதைத்தான் நம்புவார்கள் .இவர்களை எதிர்த்துக் கொண்டு இந்த ஊரில் நம்மால் குடும்பம் நடத்த முடியாது .
இனிமேல் நம்மால் சந்தோஷமாக இன்னும் கணவரிடம் இருக்க முடியாது . இதைப்பற்றி அவரிடம் சொல்வதற்கும் தைரியம் இல்லை பாவம் வாய்பேச முடியாதவர் நம்முடைய கணவர் .
அவர் இவர்களை எதிர்த்தும் போராட முடியாது. என்று நினைத்துப் பார்த்து கனகா மறுபடியும் அழுதாள்.

அப்போது தீனா காட்டு மிராண்டித்தனமாக கற்பழித்ததை நினைத்துப்பர்த்து மேலும் கதரி கதரி அழுதால் . இப்படிப்பட்ட கொடுமையான அனுபவத்தை நம்மால் எப்படி மறக்க முடியும் இனிமேல் நம்மை இதுபோன்ற கேவலமான காரியத்திற்கு பண்ணையார் மகன்கள் வற்புறுத்துவார்கள் .
என்று நினைத்து அழுதால் அப்போது அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் . இவர்களை காட்டியும் கொடுக்க முடியாது .
நம் சந்தோஷமாகவும் குடும்பம் நடத்த முடியாது . அதனால் நாம் உயிரை விட்டுவிடலாம் .
இன்னும் சிறிது நேரத்தில் நம் மகனும் . பண்ணையார் வீட்டுக்கு வேலைக்கு சென்றிருக்கும் நம்முடைய கணவனும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் அதற்குள் நம் உயிரை விட்டுவிட வேண்டும் என்று முடிவுக்கு வந்தாள் கனகா.

எப்படி நம் உயிரை விடுவது என்று யோசித்துக்கொண்டே பம்புசெட்டின் உள்ளே சென்று பூச்சி மருந்து பாட்டிலை தேடினாள் அவள் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை .
பிறகு தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்று நினைத்து . தனது புடவையை அவிழ்த்தாள் கனகா .

நம் தூக்கில் தோங்கியிருப்பதை நம்முடைய கணவனும் நம் மகனும் பார்த்தாள் அவர்களால் அந்த காட்சியை கடைசி வரைக்கும் அவர்களால் மறக்க முடியாமல் வேதனையில் துடிப்பார்கள் .
என்று நினைத்து மனம் மாறினால் கனகா .

வேறு ஏதாவது வழி இருக்கிறதா நம் தற்கொலை செய்துகொள்ள
என்று யோசித்தாள் .
அப்போது அவள் கண்களுக்கு எதிரே பம்பு செட்டின் பெரிய கிணறு தெரிந்தது . உடனே சிறிதும் தயங்காமல் கிணற்றின் அருகில் வந்து தடுப்புச்சுவர் மீது கை வைத்துக் கொண்டு கிணற்றை பார்த்தாள்.

பாதி கிணறுவரை தண்ணீர் நிரம்பியிருந்தது .
இதுதான் சரியாக இருக்கும் நம் உயிரை விட்டுவிடலாம் இந்த கிணற்றில் குதித்து என்று முடிவு செய்தாள் கனகா.

உடனே சிறிதும் தயங்காமல் கிணற்றில் தடுப்பு சுவர் மீது ஏறி நின்றாள் . அப்போது அவள் தனது இரண்டு கைகளால் கும்பிட்டு கடவுளிடம் வேண்டினாள்.
என் கணவரையும் என் மகனையும் இனி நீதான் காப்பாற்ற வேண்டும் கடவுளே என்று வேண்டினாள்

பிறகு தனது கணவனை நினைத்துப் பார்த்தால் அவன் சந்தோஷமாக அவளை பார்த்துக்கொண்டது அதேசமயம் தனது மகனின் இனிப்பான பேச்சை நினைத்துப்பார்த்தால் ஒரு நிமிடம் பிறகு என்னை மன்னித்து விடுங்கள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு கிணற்றில் குதிப்பதற்கு முயற்சித்தால் அப்போது அம்மா என்ற குரல் கேட்டது கனகாவிற்க்கு.

உடனே கனகா திரும்பிப் பார்த்தாள் தனது மகன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிட்டான்.

கிணற்றுமேல ஏறிக்கிட்டு என்னம்மா பாக்குறீங்க என்றான் அந்த சிறுவன்.

அவன் பேச்சைக் கேட்டதும் கனகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் உடனே கீழே இறங்கி வந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.

என்னம்மா ஆச்சு ...முகத்துல எல்லாம் ஒரே சத்தமா இருக்கு அப்பா அடித்தாரா.. எதுக்குமா அழுவுற என்று சோகத்தோடு கேட்டான் அந்த சிறுவன்.

கனகாவால் அழுகையை நிறுத்த முடியவில்லை . கடவுளே என்னை வாழவும் விடவில்லை. இப்போது சாகலாம் என்று நினைத்தாலும் அதற்கும் வழி கிடைக்கவில்லையே என்று நினைத்து தன் மகனை கட்டி அணைத்தபடியே குலுங்கி குலுங்கி அழுதாள் கனகா.

உன்னை பத்தியும் அப்பாவைப் பற்றியும் என்னுடைய டீச்சர் எல்லோர்கிட்டயும் பெருமையா சொன்னாங்க . அதேபோல நான் நன்றாக படித்து உங்களை நல்லபடியா பாத்துக்குவேன் அப்படின்னு எங்க டீச்சர் என்னிடம் சொன்னாங்க . ஆனா நீங்க இப்படி அழுதுகிட்டே இருக்கிங்க மா என்று வெகுளித்தனமாக சொன்னான் அந்த சிறுவன்.

தன் மகனின் புத்திசாலி தனத்தை நினைத்து ஒரு முடிவுக்கு வந்தாள் கனகா . இனிமேல் நம்ம
நம் மகனுக்காக வாழவேண்டும் இவனை நல்லபடியாக படிக்க வைத்து பெரிய ஆளாக்கி இந்த பண்ணையாரின் மகன்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று நினைத்து கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு தன் மகனிடம் கேட்டாள்.

ஐயா உன்னை ..இதைவிட பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்கிறேன் நீ நன்றாக படிப்பாய என்றாள் கனகா.

ஓ நல்லாவே படிப்பேன் ஆம்மா..

சரி உங்க அப்பா வந்ததும் நம்ம ஒரு நல்ல பெரிய பள்ளிக்கூடமா இருக்கிற ஊருக்கு போயிட்டு உன்னை அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடுகிறேன் . நீ நன்றாக படிக்க வேண்டும் உன்னை நம்பி தான் . நானும் அப்பாவும் இருக்கிறோம் என்று பாசமாக சொல்லிவிட்டு ஒரு புதிய முயற்சியோடு கனகா மீண்டும் துணிச்சலான பெண்ணாக மாறினாள் கனகா.


வழக்கம்போல பரந்தாமன் தனது தம்பிகளுடன் பைக்கில் வீட்டுக்குச் சென்றான். தம்பிகள் இருவரும் குடிபோதையில் நிதானத்தில் இல்லாமல் இருப்பதை
தனது மனைவி . அப்பா கவனித்துவிட்டாள் பிரச்சனை பெரிதாகி விடும் என்று நினைத்துக்கொண்டு .
உடனே வாசலில் பைக்கை ஓரங்கட்டிவிட்டு தனது தம்பிகளை யாரும் கவனிக்காத படி அழைத்துச் சென்று அவரவர் அறையில் களத்தி விட்டான் பரந்தாமன்.

காலையில போனீங்க... ஊர்மக்களுக்கு துணி எடுத்துக்கிட்டு வரத்துக்கு .
நீங்க ஆர்டர் பண்ண துணிகள் எல்லாம் வீட்டுக்கே வந்துடுச்சு ஆனால் நீங்கள் மூன்று பேரும் இப்போது தான் வரீங்க ..
சரி சரி வாங்க சாப்பிடலாம் உங்க தம்பிகளையும் கூப்பிடுங்க என்று சிரித்த முகத்தோடு சொன்னாள் சாந்தி

நீ ஒன்னும் இப்போதைக்கு எங்களை தொல்லை பண்ண வேண்டாம் .நாங்கள் மூன்று பேரும் வெளியில் சாப்பிட்டு விட்டோம் தம்பிங்க வெயிலில் சுற்றித் திரிந்ததால் ரொம்ப சோர்வாக இருக்காங்க அவங்கள நீ தொந்தரவு பண்ணாத . அதே போல எனக்கும் ரொம்ப களைப்பா இருக்கு கொஞ்சம் தண்ணி மட்டும் கொடு எனக்கும் சாப்பாடு வேண்டாம் என்று சற்று பதட்டமாய் சொன்னான் பரந்தாமன்.

இதுக்கு எங்க முகமெல்லாம் இப்படி வேர்க்குது ..ஏதோ போலீசுக்கு பயந்துகிட்டு ஓடி வந்தவர் போல படபடவென பேசுறீங்க என்றாள் சாந்தி.

அதெல்லாம் ஒன்றுமில்லை நான் எப்பவும் போல தான் பேசுறேன் அப்பா எங்களைப் பத்தி கேட்டாள் மூன்று பேரும் களைப்பாக இருக்காங்க . அதனால தூங்க போயிட்டாங்க என்று சொல்லிவிடு என்று சாந்தியிடம் பரந்தாமன் சொல்லிவிட்டு முகத்தை சற்று சந்தோசமாக மாற்றிக்கொண்டு சாந்தியின் கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு ...உடனே தனது அறைக்கு சென்றுவிட்டான் பரந்தாமன்.


எப்படியோ பிரச்சினையை உருவாக்கி விட்டோம் . கண்டிப்பா நாளைக்கு கனகா ஏதோ ஒரு பிரச்சினையை செய்வாள்
அவள் செய்யப்போகும் பிரச்சனை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற குழப்பத்தில் பரந்தாமன் தனது அறையில் கட்டில் மெத்தை மேல் படுத்துக்கொண்டு யோசித்தான்.

நம் மிரட்டியதில் கனகா பயந்து இருப்பாளா . இல்லை நம்மை பழி வாங்குவதற்கு ஏதாவது திட்டம் போட்டு இருப்பாளா என்று தெரியவில்லையே .
இந்த பிரச்சனையில் கனகா ஊர் மக்களிடம் நடந்த உண்மையை சொல்லி மூன்று பேரையும் காட்டிக் கொடுத்து விட்டால் என்ன செய்வது என்று குழப்பத்தில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டு தவித்தான் பரந்தாமன்.


கனகா எடுத்திருக்கும் முடிவில் எப்படிப்பட்ட பிரச்சனை வெடிக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...16 👇


இயற்கை வழக்கம்போல தனது அழகான விடியலை 🌄தொடங்கியது .


அழகான காலைப் பொழுதில் பறவைகளின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் ரேகா உடனே எழுந்து வீட்டின் வாசலில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்🛖🏠⛺🏘️

பொழுது விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் தூங்கிக் கொண்டுருக்கிறார் மாமா என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசலை சுத்தம் செய்துவிட்டு உடனே எதிரே இருக்கும் சங்கரின் வீட்டு வாசலை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் ரேகா.

சங்கரை பார்ப்பதற்காக அவள் மனம் துடியாய் துடித்தது
ஆனால் சங்கர் எழுந்து வரவே இல்லை . ரேகாவும் வாசலை சுத்தம் செய்து முடித்துவிட்டால் அவனால் சங்கரை பார்க்காமல் வீட்டுக்கு போக முடியவில்லை அவளால் உடனே ரேகா வீட்டுக்குள் நுழைந்தாள் அப்போது சங்கர் நன்றாக இழுத்து போத்தி கொண்டு தூங்கி கொண்டு இருந்தான் அப்போது ரேகாவுக்கு மேலும் கடுப்பாக இருந்தது வீட்டுக்குள்ளே வந்தும் முகத்தை பார்க்க முடியவில்லை என்று .
பிறகு வீட்டில் உள்ள பாத்திரங்களை சுத்தம் செய்வதற்காக எடுத்தாள் அப்போது பாத்திரங்களை வேண்டும் என்றே சத்தம் போடும் படி எடுத்தாள் . அப்போதும் சங்கர் எழுந்திரிக்கவில்லை
அவளால் பொறுக்க முடியவில்லை.

கல்யாணம் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது .ஆனால் எந்த கவலையும் இல்லாமல் இப்படி பொழுது விடிந்தது கூட தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தாள் கல்யாண வேலை எல்லாம் யார் பாப்பாங்க என்று சத்தமாக பேசிக்கொண்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

ரேகாவின் குரல் கேட்டதும் முத்தையா விழித்துக்கொண்டார்.

என்னம்மா காலையிலே யாருக்கு நிறைய வேலை இருக்கிறது என்று முத்தையா ரேகாவிடம் கேட்டார்.

தாத்தா பொழுது விடிந்து எவ்வளவு நேரம் ஆச்சு ..இன்னும் ஏன் எழுந்திரிக்கல மாமா ..
கல்யாண வேலை எல்லாம் யார் பாப்பாங்க. இப்படி இவ்வளவு நேரம் தூங்கினாள் மற்ற வேலைகளை எல்லாம் யார் பாப்பாங்க என்று உரிமையோடு சங்கரின் காதில் விழும் படி சொன்னாள் ரேகா.

ரேகாவின் குரல் கேட்டதும் சங்கர் எழுந்து உட்கார்ந்து கொண்டான் போர்வையை தலைமீது போட்டபடி ரேகாவை உற்றுப்பார்த்தான் ரேகாவும் சங்கரை வச்ச கண் வாங்காமல் உற்றுப் பார்த்தாள் அப்போதுதான் ரேகாவுக்கு சற்று மனம் சந்தோசமாக மாறியது உடனே புன்னகையோடு சங்கரை பார்த்து லேசாக வேக்கத்தோடு சிரித்தாள்.

காலங்காத்தாலேயே வந்து யாருக்கு நிறைய வேலை இருக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்க புள்ள என்றான் சங்கர்.

உங்களுக்குத்தான் ...இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது கல்யாணத்துக்கு நீங்க இப்படி இவ்வளவு நேரம் தூங்கலாமா என்றாள் ரேகா.

முதல்ல பண்ணையார் ஓட மகன் சந்திரனின் திருமணம் முடிந்ததும் அதற்கு அடுத்த வாரம் தான் நம்முடைய திருமணம் அதுக்குள்ள திருமண வேலை அப்படியே இருக்குதுன்னா . இப்போ என்ன பண்ண சொல்ற
சமையல்காரருக்கும் அட்வான்ஸ் கொடுத்தாச்சு கோவிலிலும் சொல்லியாச்சு
பந்தலும் போட்டாச்சு இனிமேல் கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னாடி தான் வேலையை ஆரம்பிக்கணும்
அதுக்கு முன்னாடியே இப்படி குதித்தாள் என்ன வேலை செய்ய முடியும் என்றான் சங்கர்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது.. இனிமேல் இவ்வளவு நேரம் தூங்கக் கூடாது . இதுக்கு முன்னாடி ஒன்பது மணி வரைக்கும் தூங்குவீங்க இனிமேல் 6 மணிக்கெல்லாம் எந்திரிக்கணும் வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்று அதிகாரமாக சொல்லிக்கொண்டு பத்திரத்தை வீட்டு வாசலில் சுத்தம் செய்து கொண்டே சொன்னாள் ரேகா.

இதுக்கு முன்னாடி நானும் எத்தனையோ முறை சொல்லி பார்த்துட்டேன் அவன் விருப்பம் போல தூங்கிக் கொண்டுதான் இருக்கிறான் இனிமேல் நீதான் அவனை சீக்கிரமாக எழுப்பி பயக்கம் பண்ணனும் என்றார் முத்தையா.

தாத்தா ....இனிமேல் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைப்படாதீங்க என்று ரேகா சொல்லிக்கொண்டு இருக்கும்போது வீட்டு வாசலில் சங்கரின் நண்பன் 🚲சைக்கிளில் வந்து பெல் அடித்தபடி சங்கர் என்று குரல் கொடுத்தான்.

என்னடா விஷயம் காலையிலேயே வந்துட்ட என்றான் சங்கர்.

ஆமாண்டா மாப்பிள்ளை.... இன்னைக்கு கபடி மேட்ச் இருக்குது இன்னும் கொஞ்ச நேரத்துல பக்கத்து தெரு பசங்க வரப்போறாங்க அதனாலதான் காலையிலே வந்து தகவல் சொல்லலாம் என்று வந்தேன்டா.

அப்படியா விஷயம் ...அவனுங்க எத்தனை முறை தோற்றாலும் நம்மள வம்புக்கு இழுத்து கிட்டே தான் இருக்கானுங்க .
இன்னைக்கு அவனுங்கள தோற்கடித்து இனிமேல் கபடி மேட்ச் ஆடக்கூடாதபடி ஆவணங்களை மாத்திடணும்
நீ போ நான் அஞ்சு நிமிஷத்துல துணியை மாத்திகிட்டு வருகிறேன் என்றான் சங்கர்.

அதெல்லாம் முடியாது நீ இப்பவே வா அவனுங்க கிளம்பிட்டாங்க என்று சங்கரின் நண்பன் சொன்னான்.

சரி சரி இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் என்று சங்கர் எழுந்து சுறுசுறுப்பாக கபடி உடையை தேடினான்.

காலையிலேயே கபடி விளையாடுவதற்கு கிளம்புவதை பார்த்த முத்தையாவுக்கு இவனை எப்படி மாற்றுவது என்று யோசித்தார்.
வாசலில் பாத்திரம் சுத்தம் செய்து இருக்கும் ரேகா விடம் பொறுமையாக சொன்னார் .அம்மாடி காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஏழுப்புவது முக்கியமில்லை இன்னும் நிறைய விஷயத்தில் அவனை மாத்தணும் என்று முத்தையா மறைமுகமாக சொன்னார்.

முத்தையாவின் பேச்சு ரேகா புரிந்து கொண்டாள் . காலையிலே கபடி விளையாட போகணுமா இவரை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யோசித்தாள் ரேகா.

அண்ணே.... அவரு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு நீங்க போங்க என்று சங்கரின் நண்பரிடம் சொன்னாள் ரேகா.

பரவாயில்லை தங்கச்சி...
நான் கொஞ்ச நேரம் இருந்தே மாப்பிள்ளையை கூட்டிகிட்டு போறேன். ஏன்னா அவன்தான் கேப்டன் அதனால கொஞ்ச நேரம் இருந்தே அவனை கூட்டிட்டு போறேன் தங்கச்சி என்றான் சங்கரின் நண்பர்.

உடனே ரேகா பாத்திரத்தை சுத்தம் செய்வதை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளே நுழைந்தாள் அப்போது சங்கர் கபடி உடையை தேடிக்கொண்டே இருந்தான்.

இங்கதானே வச்சேன் ..அதுக்குள்ள எங்க போச்சு இந்த துணி அவசரத்துக்கு கிடைக்கதே என்று முனகிக்கொண்டே சங்கர் துணியை தேடினான்.

சங்கர் துணையைத் தேடுவதை பார்த்ததும் ரேகாவுக்கு எப்படி இவரை விளையாட போகாமல் தடுப்பது என்று யோசித்தாள் அப்போது அவள் மெதுவாக சங்கரின் அருகில் சென்றாள் . சங்கர் திரும்பிக்கொண்டு துணியை தேடிக்கொண்டிருந்தான் அப்போது திடீரென்று ரேகா சங்கரை கட்டி அணைத்துக் கொண்டாள் பின்பக்கமாக.

சங்கருக்கு இனம்புரியாத உணர்வு அவன் உடம்பில் பாய்ந்தது
ஒரு கணம் அப்படியே நின்று விட்டான்.

முதல் முதலில் ஒரு பெண்
கட்டியணைத்ததும் அந்த முதல் அனுபவம் அவன் உடம்பில் ஏதோ ஒரு மாற்றத்தை செய்தது அவனால் அப்போது எதுவும் பேசவும் முடியவில்லை அப்படியே சிலைபோல நின்றான் சங்கர்.

சங்கரை பின்பக்கமாக கட்டி அணைத்தபடி இருந்த ரேகா மெதுவாக அவன் காதில் அருகில் மெதுவாக சொன்னாள்.

மாமா எனக்கு கூட கபடி விளையாடனும் போல ஆசையா இருக்கு மாமா
எப்படி விளையாடனும் சொல்லித் தறியா மாமா என்று பாசமாக சொன்னாள் ரேகா.

சரி புள்ள நான் உனக்கு இப்பவே சொல்லி கொடுக்கிறேன் கபடி எப்படி விளையாடனும் என்று பித்துப் பிடித்தவன் போல் ரேகாவின் இறுக்கமான அணைப்பில் மெய்மறந்து சொன்னான்.

டேய் மாப்பிள்ளை சீக்கிரம் வாடா எவ்வளவு நேரம் ஆச்சு இன்னுமா துணி தேடிக்கிட்டு இருக்கே என்றான் வாசலில் சங்கரின் நண்பன்.

மெதுவாக சங்கரை தனது இரக்கமான அணைப்பிலிருந்து விடுவித்தால் ரேகா
அப்போது சங்கர் உடனே திரும்பி ரேகவின் முகத்தை முதல் முதலில் ஒரு ஏக்கத்தோடு பார்த்தான் ரேகாவும் சங்கரை வெட்கத்தோடு பார்த்தபடி சட்டென்று தலை குனிந்து கொண்டாள்.

மாப்பிள்ளை சீக்கிரம் வாடா என்று மறுபடியும் குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.

உடனே சங்கர் வெளியே வந்து இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துட்டேன்டா இரு என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான் சங்கர்.

மாமா ..நம்ம ரெண்டு பேரும் இங்கேயே கொஞ்ச நேரம் கபடி விளையாடலாமா என்று ஒரு ஏக்கத்தோடு கேட்டாள் ரேகா.

ஓ ...விளையாடலாமே என்று ரேகாவின் கண்களை உற்றுப் பார்த்தபடியே சொன்னான் சங்கர்.

என்னை நீங்க படிக்கிறீங்களா இல்ல உங்கள நான் படிக்கட்டும்மா மாமா என்றாள் ரேகா.

நீயே என்னைப் பிடி புள்ள என்றான் சங்கர்.

கபடி ..கபடி ..கபடி என்று மெதுவாக சொல்லிக்கொண்டேன் ரேகாவின் கண்களை பார்த்தபடியே சங்கர் ரேகாவின் அருகில் சென்றான்.

உடனே ரேகா சங்கரை கட்டிப்பிடித்துக் கொண்டாள் அப்போது அவனை கீழே தள்ளி மேலே படுத்துக்கொண்டாள்.

அடேய் மாப்பிள்ளை எவ்வளவு நேரமாச்சுடா நான் வந்து
அரை மணி நேரம் ஆயிடுச்சு இவ்வளவு நேரமா உனக்கு துணி கிடைக்கல என்று வாசலில் நின்றுகொண்டு குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.

உடனே சங்கர் வெளியே வந்து இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன் கோவிச்சுக்காதடா என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்றான் சங்கர்.

மாமா ...எப்போ நீங்க என்னை பிடிக்கணும் என்று சொல்லிவிட்டு ரேகா கபடி ...கபடி என்று சொல்லிக்கொண்டு சங்கரின் அருகே சென்றாள் .
அப்போது சங்கர் ரேகாவை இழுத்து அணைத்துக் கொண்டான் அப்போது சங்கரின் அணைப்பில் ரேகாவுக்கு வெட்கமும் கூச்சமும் மெல்ல மெல்ல விலகிப் போவதை உணர்ந்தாள் ரேகா.

மாப்பிள்ளை நீ ரொம்ப என்னை கடுப்பேத்துறா உனக்காக எவ்வளவு நேரம் நான் காத்துகிட்டு இருக்கிறேன் . என்னதான் கேப்டன்னாக இருந்தாலும் எனக்கும் கொஞ்சம் மரியாதை கொடுடா சீக்கிரம் வாடா நேரம் ஆச்சு என்று மறுபடியும் குரல் கொடுத்தான் சங்கரின் நண்பன்.

உடனே சங்கர் வெளியே வந்து அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் இருடா என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே சென்றான் சங்கர்.

மருமகள் அவளுடைய வேலையை தொடங்கி விட்டாள்
இன்னைக்கு கபடி விளையாட போகமாட்டான் நம்முடைய மகன் இனிமேல் ரேகாவின் பேச்சை தான் கேட்பான் என்று மனதில் நினைத்துக்கொண்டார் முத்தையா .

திண்ணையில் அமர்ந்த படியே...
நீ போப்பா அவனை நான் அனுப்பி வைக்கிறேன் என்று முத்தையா சங்கரின் நண்பரிடம் சொன்னார்.

சரி சரி நான் கிளம்புகிறேன் அவனை சீக்கிரமாக அனுப்புங்க என்று சொல்லிவிட்டு சங்கரின் நண்பன் கபடி விளையாட சென்று விட்டான்.

வழக்கம்போல் செத்துக் கபடி இரண்டு அணியினரும் மோதிக் கொண்டார்கள் இதுவரைக்கும் தோல்வியே காணாத சங்கர் அணியினர் முதல் முறை தோல்வி அடைந்தார்கள் . காரணம் சங்கர் கபடி விளையாட வரவில்லை அதனால் சங்கரின் அணி முதல் முறையாக தோற்றுப்போனது சங்கரின் நண்பர்கள் சோகத்தோடு குளிக்காமல்கூட உடம்பெல்லாம்
சேரோடு தெருவில் நடந்து வந்தார்கள் .அப்போது சங்கர் வீடு வந்ததும் அவர்கள் சற்று கோபத்தோடு . அடேய் சங்கர் ... வாடா வெளியில இன்று குரல் கொடுத்தார்கள்.

சங்கரும் ரேகாவும் கட்டியணைத்தபடி முத்தங்களை பரிமாறிக் கொண்டிருக்கும்போது நண்பர்களின் குரல் கேட்டதும் சங்கர் உடனே வெளியே ஓடி வந்து அஞ்சு நிமிஷத்துல வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் உள்ளே ஓடி விட்டான்.

சங்கரின் நண்பர்களுக்கு ஒரே எரிச்சல் என்ன இவன் காலையிலிருந்து அஞ்சு நிமிஷத்துல வருகிறேன் என்று மூன்று மணி நேரமாக சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான்
கபடி விளையாடியே முடித்துவிட்டு வந்துவிட்டோம் இதைக் கூட கவனிக்காமல் மறுபடியும் அஞ்சு நிமிஷத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி விட்டானே இனிமேல் இவன் நம்முடன் கபடி விளையாட மாட்டான்
அவன் மனைவியுடன் தான் இனிமேல் கபடி விளையாடுவான் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் சங்கரின் நண்பர்கள்.

சங்கரின் நண்பர்களைப் பார்த்து முத்தையாவுக்கு ஒரே சிரிப்பு
பாவம் காலையிலிருந்து அவனை கூப்பிட்டு விட்டு கோபத்தோடு போறானுங்க என்று நினைத்து சிரித்தார் முத்தையா.

தாத்தா ..இனிமேல் அவர் கபடி விளையாட போனால் என் கிட்ட சொல்லுங்க என்று சிரித்தபடி சொன்னாள் ரேகா.

இனிமேல் இவனும் கபடி விளையாட மாட்டான்
அவனுடைய நண்பர்களும் கபடி விளையாட மாட்டார்கள் இன்னைக்கு இவனோட நண்பர்கள் அப்படிப்பட்ட வேதனையை அனுபவித்து விட்டார்கள் என்று சொல்லி முத்தையாவும் ரேகாவும் சிரித்தார்கள்.

அப்போது ஊர் மக்கள் ஒடி வருவதை கவனித்தால் ரேகா..

தாத்தா ...எல்லோரும் வேகமா ஓடி வராங்க என்ன ஆச்சுன்னு தெரியலையே என்று பதட்டமாய் சொன்னாள் ரேகா.

ரேகாவின் பேச்சைக் கேட்டதும் சங்கர் உடனே வெளியே வந்து பார்த்தான் . ஊர்மக்கள் பதட்டமாக ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.

சந்தோசமாக இருந்த முத்தையாவுக்கு சற்று மனம் குழப்பமானது . எதுக்காக ஊர்மக்கள் ஓடி வருகிறார்கள் என்று நினைத்து.

ஐயா நம்ம ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகுதுன்னு சாட்டையடி சாமியார் சொன்னதைப் போலவே நடந்துடுச்சு ஐயா ...என்று ஊர் மக்கள் முத்தையா விடம் அழுதபடி சொன்னார்கள்.

முத்தையாவுக்கு மேலும் கவலை அதிகமானது . என்ன நடந்தது பொறுமையா சொல்லுங்கப்பா இப்படி எல்லோரும் அழுதாள் எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது யாராவது ஒருத்தர் என்ன ஆச்சி என்று சொல்லுங்கள் என்று முத்தையா சொன்னார்.

ஐயா.. பண்ணையார் தோட்டத்தில் பம்புசெட்டில் தங்கி வேலை செய்த நம்ம கனகா குடும்பம் காணாம போயிட்டாங்க ஐயா ..அவங்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை நம்ம ஊர் முழுக்க தேடிப் பார்த்து விட்டோம்
பண்ணையார் தோட்டத்தில் எல்லா இடத்திலும் தேடி பார்த்து விட்டோம் கனகா குடும்பம் காணவில்லை ஐயா . பம்புசெட்டில் கனகாவின் துணி. பாத்திரங்கள் .எதுவுமே இல்லை எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது ஐயா என்று ஒருவர் அழுதுகொண்டே சொன்னார்.

முத்தையாவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போய்விட்டார்கள் அவர்கள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை இந்த நிலைமையில் மறுபடியும் இன்னொரு குடும்பம் காணாமல் போயிருக்கிறார்களே. இதில் கண்டிப்பாக ஏதோ ஒரு பெரிய சதித்திட்டம் நடந்திருக்கிறது என்று நினைத்து கவலையில் தலைகுனிந்தார் முத்தையா.

சங்கருக்கும் ரேகாவுக்கும் கவலையில் மனம் நொந்து போனார்கள்.

ஐயா ..கனகா குடும்பம் காணாமல் போனதில் ஏதோ மர்மம் இருக்கிறது இதை நம்ம சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது
உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் இதேபோல ஒவ்வொரு குடும்பமாக காணாமல் போய்க்கொண்டே இருபார்கள் . அதனால் இதற்கு ஒரு முடிவு தெரியும் வரை பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய கூடாது காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய கூடாது இதுதான் எங்களுக்கு சரியாக படுகிறது என்று ஒரு கூலித்தொழிலாளி முத்தையா விடம் சொன்னார்.

நீங்கள் சொல்வது நியாயம்தான் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு இனிமேல் எல்லோருக்குமே பயம் ஏற்படும் அதனால் நீங்கள் சொன்னபடி காணாமல் போனவர்களை கண்டுபிடித்து . என்ன நடந்தது என்ற உண்மை தெரியும் வரை யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய வேண்டாம் அதேசமயம் இந்த முடிவை பண்ணையாரிடம் தெரிவிக்க வேண்டும் அதுதான் முறை என்றார் முத்தையா.

நீங்க சொன்னபடியே எல்லோரும் பண்ணையார் வீட்டுக்கு சென்று நம்முடைய முடிவை சொல்லிவிடலாம் பிறகு அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போம் என்று ஒரு கூலித்தொழிலாளி முத்தையா விடம் சொன்னார்.

உடனே அங்கு கூடியிருந்த பெரியவர்கள் அனைவரும் முத்தையாவை அழைத்துக்கொண்டு பண்ணையார் வீட்டுக்கு சென்றார்கள்.

💒பொழுது விடிந்ததும் தோட்டத்துக்கு கிளம்புங்க ஆனால் இன்னைக்கு எவனுமே இதுவரைக்கும் எழுந்திரிக்கல சாப்பிடவும் வரல என்ன ஆச்சும்மா இவனுங்களுக்கு என்று பண்ணையார் சாந்தியிடம் கேட்டார்.

என்னன்னு தெரியல மாமா ..நேத்து நைட்டு மூணு பேரும் வெளியல சாப்பிட்டு விட்டோம் சாப்பாடு எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு . எங்களுக்கு ஒரே களைப்பா இருக்கு நாங்கள் தூங்க போறோம் என்று சொல்லிட்டாங்க. ஆனால் இதுவரைக்கும் சந்திரனும் தீனாவும் எழுந்திரிக்கல
உங்க பெரிய பிள்ளை மட்டும் எழுந்திருச்சு உடனே 💒மொட்டை மாடிக்கு போயிட்டாரு என்றாள் சாந்தி.

நேத்து வேலை கொஞ்சம்
அதிகம்தான் . அதனால கலைப்பில் தூங்கி இருப்பானுங்க தூங்கட்டும் என்று சொல்லிவிட்டு பண்ணையார் சாப்பிடுவதற்கு தயாரானார்.

பரந்தாமனுக்கு ஒரே குழப்பம் தோட்டத்திற்கு செல்லலாமா வேண்டாமா . கனகா ஏதாவது பிரச்சனையை உருவாக்கி இருப்பாளா என்ற குழப்பத்தோடு மொட்டை மாடியில் இங்கும் மங்கும்மாக நடந்து கொண்டிருந்தான் பரந்தாமன் அப்போது ஊர் மக்கள் அனைவரும் திரளாக நடந்து வருவதை மொட்டை மாடியில் இருந்து கவனித்தான் பரந்தாமன் .
அப்போது அவனுடைய இதயம் வேகமாக துடித்தது பயத்தில்
ஊர் மக்கள் அனைவரும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் கண்டிப்பாக கனகா நடந்ததையெல்லாம் ஊர் மக்களிடம் சொல்லிவிட்டாள் போல் தெரிகிறது என்று நினைத்து பயத்தில் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மாடியிலிருந்து கிளே இறங்கி வந்தான்.

பண்ணையார் வீட்டு வாசல் நிரம்பி இருந்தார்கள் ஊர்மக்கள் அவர்களை பரந்தாமன் இருகைகளால் கும்பிட்டு வாங்க வாங்க என்று சொன்னான்.

வெளியில ஏதோ சத்தம் கேட்பதுபோல தெரியுது. என்னன்னு போயிட்டு பாருமா என்றார் சாந்தியிடம் பண்ணையார்.

சரி மாமா ..என்று சொல்லிவிட்டு சாந்தி வெளியே வந்து பார்த்தால் ஊர் மக்கள் அனைவரும் சாந்தியைப் பார்த்து கும்பிட்டார்கள் பதிலுக்கு சாந்தியும் ஆச்சரியத்தோடு கும்பிட்டாள்.

அப்பாவிடம் ஒரு முக்கியமான தகவலை சொல்லிவிட்டுப் போகலாம் என்று நாங்கள் அனைவரும் வந்திருக்கிறோம் என்று முத்தையா சற்று சோகத்தோடு சொன்னார்.

உடனே சாந்தி உள்ளே சென்று.. மாமா உங்களை பார்ப்பதற்கு
ஊர் மக்கள் எல்லோரும் வந்திருக்காங்க . உங்க நண்பர் முத்தையாவும் வந்திருக்காரு ஆனால் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள் சென்று சாந்தி பண்ணையாரிடம் சொன்னாள்.

சாப்பிடுவதற்கு உட்கார்ந்த பண்ணையார் உடனே எழுந்து கொண்டு வெளியே வந்தார்.

ஊர்மக்களின் சத்தத்தை கேட்டு சந்திரனும் தீனாவும் கண்விழித்து உடனே எழுந்து அவர்களும் வெளியே வந்து பார்த்தார்கள்.

என்ன முத்தையா ...எல்லோரும் ஒன்றுகூடி வந்து இருக்கீங்க
வாங்க உள்ளேன் என்று அழைத்தார் பண்ணையார்.

இருக்கட்டும் டா ...நாங்கள் நிறைய பேர் வந்து இருக்கும் அதனால வாசலிலே இருக்கிறோம் என்று சற்று சோகத்தோடு தலை இறங்கிக்கொண்டே சொன்னார் முத்தையா.

ஏன் எல்லோரும் சோகமாக இருக்கீங்க. என்ன ஆச்சு சொல்லு முத்தையா என்று ...முத்தையாவின் அருகில் சென்று கேட்டார் பண்ணையார்.

சொல்றதுக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . இருந்தாலும் சொல்லித்தானே ஆக வேண்டும் நம்ம பம்புசெட்டில் தங்கி வேலை செய்த கனகா என்று சொல்லும்போது முத்தையாவுக்கு கவலையில் வார்த்தை சிக்கியது.

பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் பயம் அதிகரித்தது வசமாக மாட்டிக்கொண்டோம் கனகா நம்மை காட்டிக்கொடுத்து விட்டாள் என்று நினைத்து மூவரும் பயத்தில் நடுங்கினார்கள். ஆனால் ஒன்றுமே தெரியாதவர்கள் போல நின்றிருந்தார்கள்.

கனகாவுக்கு என்ன ஆச்சு சொல்லு முத்தையா ...என்ன ஆச்சு என்று பதட்டமாய் கேட்டார் பண்ணையார்.

அப்போது ஒரு கூலித் தொழிலாளி அழுதபடி சொன்னார் ...
ஐயா கனகா குடும்பம் காணவில்லை ஐயா
எல்லா இடத்திலும் தேடிப் பார்த்து விட்டோம் . கனகாவும் அவள் கணவன் ஊமையனும் அவர்களின் மகன் யாருமே தென்படவில்லை எல்லா இடத்திலும் தேடி விட்டோம் பம்புசெட்டில் . துணி பாத்திரங்கள் எதுவுமே இல்லை ஐயா
என்று சொல்லிக்கொண்டே குலுங்கி குலுங்கி அழுதார் அந்த தொழிலாளி.

பண்ணையாருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது
அவரால் எதுவுமே பேச முடியவில்லை அதிர்ச்சியில்
ஒரு நிமிடம் வானத்தைப் பார்த்தபடியே நின்றார்.

ஊர் மக்கள் எல்லோரும் பயந்து விட்டார்கள் இனிமேல் என்ன செய்யலாம் என்று அவர்களை அழைத்து வந்தேன் என்று சோகத்தோடு சொன்னார் முத்தையா.

நீங்கள் பயந்தது போலவே இந்த விஷயம் சாதாரணமான விஷயம் இல்லை . கனகா குடும்பம் காணாமல் போனதில் ஏதோ ஒரு பெரிய சதி திட்டம் நடந்திருக்கிறது என்று பண்ணையார் யோசித்தபடியே கண்களை இமைக்காமல் சொன்னார்.

பரந்தாமனுக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் .மேலும் பயம் அதிகரித்தது அப்பா ஏதோ பெரிய சதி திட்டம் நடந்து இருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டார் மெல்ல மெல்ல எல்லாம் உண்மையே கண்டுபிடித்து விடுவாரா என்று நினைத்து நடுங்கினார்கள் உள்ளுக்குள்ளே.

நிச்சயம் இதில் ஏதோ சதி திட்டம் இருக்கிறது. நமக்கு ஒரு பெரிய எதிரி இருக்கிறான் என்பது இதன் மூலமாக தெரிகிறது .
ஏற்கனவே ஒரு குடும்பம் காணாமல் போனபோது .
ஏதோ அவர்களுக்குள் பிரச்சனை இருந்திருக்கும் அதனால் தான் இங்கிருந்து சொல்லாமல் ஓடி விட்டார்கள் என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிட்டேன் ஆனால் இப்போது கனகா குடும்பம் அதேபோல காணாமல் போயிருப்பது . நிச்சயம் இது சதி திட்டம் தான் . இதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது நம்முடைய எதிரி நம் பக்கத்திலேயே தான் இருக்கிறான் .
அவனுடைய திட்டம் ஏதோ ஒரு பெரிய திட்டமாக தான் இருக்கும் அவனுடைய திட்டத்தினால் நிச்சயம் இந்த ஊருக்கும் என் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் இதை சாதாரணமாக நான் விட போவதில்லை .
என்று பண்ணையார் ஒரு முடிவோடு உறுதியோடு ஊர் மக்களிடம் சொன்னார்.


நம்முடைய திட்டத்தை சரியாக புரிந்து கொண்டார் அப்பா இனிமேல் ரொம்ப கவனமாக நம்முடைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் . என்று மனதில் நினைத்துக் கொண்டான் பரந்தாமன்


தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...17 👇


இனிமேல் நாம் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் எதிரி நம்முடைய நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருப்பான் . அதனால் நாம் எல்லோரும் இனிமேல் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் புதிய முயற்சியை எடுக்க வேண்டும் அப்போதுதான் எல்லாம் விஷயங்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்று பண்ணையார் ஊர் மக்களிடம் சொன்னார்.

ஊர் மக்கள் எல்லோரும் ரொம்ப பயப்படுகிறார்கள் . அவர்களுக்கு வேலைக்கு போவதில் நிறையவே பயம் இருக்கிறது இருந்தாலும் இதைப்பற்றி உங்களிடம் சொன்னாள் நீங்கள் தவறாக புரிந்து கொள்ள போகிறீர்கள் என்று ஊர் மக்கள் வருத்தப்படுகிறார்கள் என்று முத்தையா பண்ணையாரிடம் சொன்னார்.

நிச்சயம் இனிமேல் எல்லோருக்குமே பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு சற்று
பயமாகதான் இருக்கும் .அதேசமயம் உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் என்னிடம் நீங்கள் சொல்லலாம் . உங்களுடைய சந்தேகம் என் மகன்கள் மீது இருந்தாலும் அதை நீங்கள் தைரியமாக சொல்லலாம் ஏனென்றால் ஊர் மக்கள் நீங்கள் அனைவரும் அதிக நேரம் தோட்டத்தில்தான் இருக்கிறீர்கள் அதனால் உங்கள் பார்வையில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் நீங்கள் பயப்படாமல் சொல்லலாம் . அப்போதுதான் இந்த விஷயத்திற்கு சீக்கிரமாகவே முடிவு ஏற்படும் என்று பண்ணையார் தனது மகன்களை பார்த்தபடியே ஊர் மக்களிடம் சொன்னார்.

பரந்தாமனுக்கும் .சந்திரனுக்கும் தீனாவுக்கும் .பண்ணையாரின் பேச்சு மேலும் அவர்களுக்கு பயத்தை உண்டாக்கியது கடைசியில் அப்பா நம் மீதும் சந்தேகப்படுகிறார் என்று பயந்தார்கள்.

ஐயா... உங்கள் குடும்பத்தின் மீது எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது . உங்களைப்போலவே உங்கள் மகன்களும் எல்லோரிடமும் பாசமாக தான் பழகுகிறார்கள் அதேபோல கனகாவும் ஊமையனும் சந்தோஷமாகத்தான் வேலை செய்து வந்தார்கள் . அவர்களுக்குள் இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இருந்ததாக இதுவரைக்கும் யாரும் பார்த்ததில்லை . இருந்தாலும் அவர்கள் காணாமல் போனது நீங்கள் சொன்னது போல சதி திட்டத்தால்தான் அவர்கள் காணாமல் போயிருக்கவேண்டும் அதனால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் வரை நாங்கள் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யப்போவதில்லை .
இதை சொல்வதற்காகத்தான் நாங்கள் அனைவரும் முத்தையா அண்ணனை அழைத்துக்கொண்டு வந்திருக்கும் .
ஆனால் முத்தையா அண்ணாள் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்வதற்கு மனம் வரவில்லை அதனால் சுற்றிவளைத்து பேசிக் கொண்டிருக்கிறார் . எங்களுடைய இந்த முடிவை நீங்களும் முத்தையா அண்ணனும் தவறாக எடுத்துக்கொள்ளாமல் எங்களுடைய நிலைமையை புரிந்துகொண்டு எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா ...என்று ஒரு கூலித் தொழிலாளி பண்ணையாரிடம் வருத்தத்தோடு சொன்னார்.

ஊர்மக்களின் முடிவு பண்ணையாருக்கும் சாந்திக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை இதை நான் எதிர்பார்த்ததுதான் . நானாக இருந்தாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்பேன் மர்மமான முறையில் இரண்டு குடும்பங்கள் காணாமல் போன இடத்தில் யாருமே வேலை செய்வதற்கு பயப்படுவது இயல்பானதுதான் அதனால் உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை .
நான் விவசாயம் செய்வது நீங்கள் வயிறார சாப்பிடுவதற்கு தான்
நான் விவசாயத்தை செய்து வருகிறேன் . மற்றபடி வேற நோக்கம் எதுவுமே கிடையாது ஆனால் உங்களுக்கு அந்த இடத்தில் வேலை செய்வதற்கு உங்கள் மனம் சங்கடம் படுகிறது என்றால் நிச்சயம் நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை அதேபோல என் தோட்டத்தில் வேலை செய்த இரண்டு குடும்பங்கள் காணாமல் போயிருப்பது . அந்த பொறுப்பு என்னைத்தான் சேரும் அவர்களுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும் .
அதனால் அவர்களை கண்டுபிடித்து உண்மையை கண்டறிவது என்னோட பொறுப்பு .
நீங்கள் எடுத்து இருக்கும் இந்த முடிவு சரியானதுதான் என்று பண்ணையார் சற்று சோகத்தோடு சொன்னார்.

எல்லாம் நிலங்களும் நாமே ஆள வேண்டும் . அதில் கிடைக்கும் வருமானத்தை நாம் மட்டும்
அனுபவைக்க வேண்டும் என்பதற்காகத்தான். தம்பியின் திருமணத்தை ஏதாவது சூழ்ச்சி செய்து நிறுத்திவிட வேண்டும் என்று . இந்த கனகாவை கற்பழிக்க சொன்னோம் தம்பிகளிடம் ஆனால் இப்போது இந்த பிரச்சனையால் ஊர் மக்கள் தோட்டத்திற்கு வேலை செய்வதற்கு பயப்படுகிறார்களே. இனிமேல் யாரும் பம்புசெட்டில் தங்கி வேலை செய்ய மாட்டோம் என்று முடிவுசெய்து இருக்கிறார்களே இனிமேல் எப்படி விவசாயம் நன்றாக நடக்கும் .
இந்த பிரச்சனை இப்படி மாறிவிடும் என்று தெரிந்திருந்தால் வேறு ஏதாவது வழியில் தம்பியின் திருமணத்தை நிறுத்தி இருக்கலாம் ஆனால் நம்முடைய திட்டம் நமக்கே ஆபத்தாக முடிந்துவிட்டதே என்று நினைத்து பரந்தாமன் சோகத்தில் இருந்தான்.

கனகா விருப்பத்தோடு தானே அவளை நம் அனுபவித்தோம் ஆனால் அவள் இப்படி யாருக்கும் தெரியாமல் ஓடி விட்டாளே இதனால் குடும்பத்திற்கும் இந்த ஊர் மக்களுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தால் இந்த விஷயத்திற்கு சம்மதம் தெரிவித்திருக்க மாட்டோம் என்று நினைத்துக்கொண்டு தீனா சோகத்தோடு நின்றான்.

அண்ணன் நம்மீது உள்ள பாசத்தினால் கனகாவை அனுபவிப்பதற்கு கட்டாயப்படுத்தினார்
கனகாவும் சம்மதித்து விட்டாள் ஆனால் எதற்காக கனகா இந்த முடிவை எடுத்தாள் என்று தெரியவில்லையே என்ற குழப்பத்தோடு சந்திரன் சோகத்தோடு நின்றிருந்தான்.

பரந்தாமன் .சந்திரன் .தீனா .மூவரும் சோகத்தில் இருப்பதை சாந்தி கவனித்தாள். இவர்களின் சோகம் உண்மையானதா . இதற்கு முன்னாடி தோட்டத்தை மாமா கவனித்து இருக்கும்போது எந்த ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை மாமாவிற்கு பிறகு இவர்கள் மூவரும் தோட்டத்தை கவனிப்பதற்கு பொறுப்பேற்ற சில மாதங்களில் அந்த பெரியவரின் மருமகளும் .மகனும் .பம்புசட்டில் இருந்து காணாமல் போய்விட்டார்கள் இப்போது கனகாவும் ஊமையன் கானாமல் போய்விட்டார்கள் இந்த மர்மத்திற்கு இவர்கள் மூவருக்கும் தொடர்பு இருக்குமா . என்ற சந்தேகத்தோடு சாந்தி மூவரையும் பார்த்தாள் அப்போது அவள் உள்மனசு சொன்னது ...ஒருவேளை இவர்கள் தவறு செய்திருந்தால் இந்த ஊர்மக்களின் கண்களில் எப்படியாவது மாட்டி இருப்பார்கள் ஆனால் இவர்கள் மீது யாருக்குமே சந்தேகம் இல்லையே என்று சாந்தியின் உள் மனது சொன்னது.

ஐயா.. நம்ம ஊரில் இருக்கும் சாட்டையடி சாமியார் சொன்னதைப் போலவே நம்ம ஊருக்கு சோதனைக்காலம் வந்துவிட்டது அதனால் நீங்கள் அவரிடம் சென்று காணாமல் போனவர்களை எப்படி தேடினாள் கிடைப்பார்கள் என்ற யோசனையை நீங்கள் அவரிடம் கேட்கலாம் என்று கூட்டத்தில் ஒருவர் பணிவாக சொன்னார் பண்ணையாரிடம்.

அவர் எதைக் கணித்து இந்த ஊருக்கு சோதனைக்காலம் வரப்போகிறது என்று சொன்னார் எனக்கு தெரியவில்லை
ஆனால் அவர் சொன்னபடியே நமக்கு சோதனைகள் வந்துவிட்டது ஆனால் எனக்கு கடவுள் மேல்தான் எனக்கு நம்பிக்கை. மற்றபடி யார் மீதும் நம்பிக்கை கிடையாது நிச்சயம் கடவுள் எனக்கு கை கொடுப்பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு .அதே போல நான் ஒரு முக்கியமான முடிவை எடுத்திருக்கிறேன் . இந்த முடிவு கோபத்தில் எடுத்த முடிவு இல்லை நான் இப்போது நன்றாக யோசித்துப் பார்த்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று பண்ணையார் உருக்கமாக சொன்னார்.

ஊர் மக்களும் ..முத்தையாவும் சாந்தியும் ..பரந்தாமன் சந்திரன் தீனா இப்படி அனைவரும் அதிர்ச்சியோடு பண்ணையாரை பார்த்தார்கள் . என்ன முடிவு எடுத்து இருப்பார் என்று நினைத்து.


ஏற்கனவே காணாமல் போனவர்களை என் மகன்கள் தேடிக் கொண்டு இருப்பது உங்கள் அனைவருக்குமே தெரியும் இப்போது இரண்டாவது குடும்பம் காணாமல் போய்விட்டார்கள் அதனால் இந்த விஷயத்தை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள போவதில்லை .
நீங்கள் அனைவரும் காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை பம்புசெட்டில் தங்கி யாரும் வேலை செய்ய மாட்டோம் என்ற முடிவை எடுத்ததை போலவே .
நானும் காணாமல் போனவர்கள் இரண்டு குடும்பமும் கிடைக்கும்வரை என் இரண்டாவது மகன் சந்திரன் திருமணத்தை நடத்தப் போவதில்லை
இதுதான் என்னோட முடிவு
நான் கோபத்தில் இந்த முடிவை எடுக்கவில்லை . என் தோட்டத்தில் இரண்டு குடும்பங்கள் தொலைந்து போயிருக்கும் இந்த நிலைமையில் நான் மட்டும் என் குடும்பத்தோடு சந்தோஷமாக திருமண வேலையை எப்படி செய்ய முடியும் .
அதனால் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அது என் குடும்பப் பிரச்சனையாக தன்
நான் எப்போதுமே பார்ப்பேன் என்று சோகத்தோடு பண்ணையார் ஊர் மக்களிடம் சொன்னார்.

பண்ணையாரின் பேச்சு அங்கு கூடியிருந்த அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நீ அவசரப்பட்டு முடிவு பண்ணிட்ட இந்த முடிவில் எங்களுக்கு துளியும் விருப்பமில்லை தயவுசெய்து உன்னோட முடிவை மாற்றிக் கொள் என்று கண் கலங்கியபடி முத்தையா பண்ணையாரிடம் சொன்னார்.

என்னுடைய முடிவு உங்கள் எல்லோருடைய மனதை ரொம்பவே பாதித்திருக்கும் . இருந்தாலும் என்னுடைய இந்த முடிவுக்கு நீங்கள் எல்லோரும் நிச்சயம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்
என் சந்திரனின் திருமணத்தை காணாமல் போனவர்கள் வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் அதுதான் என்னோட முடிவு இதனால் எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை அதுவரைக்கும் திருமணத்தை தள்ளிப் போடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை .
என் மகனோட திருமணத்தன்று யாருக்குமே சிறிதளவுகூட கவலை இருக்கக்கூடாது அதனால் தான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பண்ணையார் சோகத்தோடு நின்றார்.

பண்ணையாரின் முடிவு அனைவருக்கும் கவலையாக இருந்தது அப்போது முத்தையா எதுவுமே பேசாமல் தலைகுனிந்தபடி வீட்டுக்கு திரும்பினார் ஊர்மக்களும் சோகத்தோடு வீட்டுக்கு திரும்பினார்கள்.

பண்ணையார் ...சாந்தியின் முகத்தை பார்த்தார்
பிறகு பரந்தாமனையும் பார்த்தார் அப்போது சந்திரன் கவலையோடு இருப்பதை பார்த்த பண்ணையார் உடனே அவன் அருகில் சென்று கட்டி அணைத்துக் கொண்டார் .
அப்போது அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

என்னை மன்னித்துவிடு சந்திரா எனக்கு வேறு வழி தெரியவில்லை நிச்சயம் கடவுள் என்னை கைவிட மட்டார் . உன் திருமணத்தையும் தீனாவின் திருமணத்தையும் பார்த்துவிட்டுதான் நான் கண் மூடுவேன் நீ ஒன்றும் கவலைப்படாதே சந்திரா என்று அழுதபடி சொன்னார் பண்ணையார்.

சந்திரனால் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப் போனான். இனிமேல் நம்முடைய திருமணம் நடப்பது கஷ்டம்தான் என்று நினைத்து சந்திரனின் கண்களில் கண்ணீர் வடியத் தொடங்கியது.

நேற்றுவரை சந்தோசமாக இருந்த குடும்பம் . இன்று இப்படி தலைகீழாக மாறிவிடும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லையே கடவுளே இனிமேல் எங்களை நீதான் நிம்மதியாக மாற்ற வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வாசலிலே அமர்ந்து அழுதாள் சாந்தி.

தம்பியின் திருமணம் நின்று விட்டதை நினைத்து சந்தோசப் படுவதா . விவசாய வேலையும் நின்றுவிட்டது என்று நினைத்து கவலைப்படுவதா என்ற மன நிலைமையில் பரந்தாமன் இருந்தான்.


.........நாட்கள் நகர்ந்தது....


குருவே நான் சொன்னபடியே நடந்திருச்சு பார்த்தீங்களா என்று சாட்டையடி சாமியாரின் சிஷ்யன் உற்சாகமாக சொன்னான்.

ஆமாண்டா சிஷ்யா ...நமக்கு இனிமேல் நல்ல நேரம் வரப்போகுதுன்னு இந்த விஷயத்திலேயே நான் புரிந்து கொண்டேன் நம்ம சொன்னபடியே இந்த ஊருக்கு சோதனை காலம் வந்துடுச்சு ஊர் மக்கள் எல்லோரும் நம்மைப் பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இப்படியே நம்முடைய கவுரவத்தை இந்த ஊரில் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் கூடிய சீக்கிரத்தில் இந்த உரை நம் கைக்குள்ள போட்டுக்க முடியும் என்று உற்சாகமாக சாட்டையடி சாமியார் தனது சிஷ்யர்களிடம் சொன்னார்.

குருவே பண்ணையார் தோட்டத்தில் காணாமல் போனவர்களை பற்றி நமக்கு தகவல் தெரிந்தால் இன்னும் நமக்கு பெருமையாக இருக்கும் ஏனென்றால் எல்லோரும் நம் மீது ஒரு அளவுக்கு நம்பிக்கை வச்சிருக்காங்க
ஆனால் இந்தப் பண்ணையார் இந்த முத்தையா கியவன் நம்மை கண்டு கொள்வதே இல்லை குருவே அதனால காணாமல்போனவர்களை பற்றி நமக்கு ஏதாவது தகவல் கிடைத்தால் பண்ணையாரையும் நம் கைவசத்தில் போட்டுக் கொள்ளலாம் என்றான் மற்றொரு சிஷ்யன்.

அது தெரிந்தால் நமக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்மே.
காணாமல் போனவர்களை நாம் கண்டுபிடித்து விட்டால் இந்த ஊர் மக்கள் நமக்கு கோவிலை கட்டி கொடுப்பார்கள் . ஆனால் நம்மால் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பது முடியாத காரியம் நம்ம ஏதோ பண்ணையார் தோட்டத்தில் இருக்கும் கரும்பு தோட்டத்தை கொளுத்தி விடலாம் என்று திட்டம் போட்டு தான்
இந்த ஊருக்கே சோதனைக்காலம் வரப்போகுது என்று சொல்லியிருந்தோம்
ஆனால் நிஜமாகவே இந்த ஊருக்கு சோதனைக் காலம் வந்து என்னுடைய வாக்கை நிறைவேற்றி விட்டது . பரவாயில்லை எப்படியோ நம்முடைய திட்டம் மெல்லமெல்ல கைகூடி வருகிறது என்று சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார்கள்.

..... நாட்கள் நகர்ந்தது....


எந்த ஒரு பிரச்சனையும் நடக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்திரனின் திருமணம் நன்றாக நடந்திருக்கும் . என்ன செய்வது யார் யாருக்கு எப்போது வாழ்க்கை அமையும் என்று கடவுள் கணக்கு போட்டு வைத்திருக்கிறார் .
நம்ம கையில் எதுவுமே இல்லை என்று வருத்தத்தோடு பண்ணையாருக்கு காப்பியை கொடுத்துவிட்டு சாந்தி சொன்னாள்.

நம்ம வீட்டு திருமணம் தான் நடப்பதற்கு கடவுள் சம்மதம் தரவில்லை . என்னுடைய நண்பன் முத்தையாவின் மகன் சங்கரின் திருமணம்மாவது நல்லபடியாக நடக்க வேண்டும் . இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது திருமணத்திற்கு நாம் குடும்பத்தோடு சென்று வரவேண்டும் என்று பண்ணையார் காபி குடித்துக்கொண்டே சாந்தியிடம் சொன்னார்.

நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க மாமா ..கடவுள் முதல்ல கஷ்டத்தை கொடுத்துட்டாரு இனிமேல் நமக்கு ஒரு நல்ல வழி பிறக்கும் நிச்சயம் நம்ம சந்திரன் திருமணமும் நம்ம திட்டம் போட்டது போலவே நடத்தலாம் மாமா என்று சாந்தி பண்ணையாரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அப்போது பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

என்னங்க ...மூணு பேரும் எங்க கிளம்பிட்டீங்க என்று பரந்தாமனை பார்த்து சாந்தி கேட்டாள்.

தோட்டத்துக்கு போயிட்டு வந்து ரொம்ப நாளாச்சு அதனாலதான் தோட்டத்துக்கு போயிட்டு எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாம் முன்னு கிளம்புகிறோம் என்றான் பரந்தாமன்.

அங்க எப்படி இருக்கப் போகுது... தண்ணி இல்லாம எல்லாமே வீணாக போயிருக்கும் இதைப் பார்த்து என்ன பண்ண போறீங்க என்று சொன்னாள் சாந்தி.

பரவாயில்லை மா அவனுங்க போயிட்டு தோட்டத்தை சுத்தி பார்த்துட்டு வரட்டும் .
வீட்டுக்குள்ளே இருந்தால் எதையாவது மனசுல நினைச்சுகிட்டு கவலையோடு இருப்பானுங்க என்று பண்ணையார் சொன்னார்.

நாங்க தோட்டத்துக்கு போயிட்டு வரும் அப்பா என்று சொல்லிவிட்டு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பைக்கில் சென்றார்கள்.

வழக்கம்போல மூவரும் பம்புசெட்டின் அருகில் இருக்கும் மரத்து நிழல்களில் மூவரும் நின்றார்கள் .
அப்போது பரந்தாமன் எரிச்சலோடு சந்திரனையும் தீனாவையும் முறைத்தபடி பார்த்தான்.

உங்களால எவ்வளவு பெரிய பிரச்சனை பார்த்தீங்களா... தேவையில்லாமல் நீங்கள் இந்த கனகா மீது ஆசைப்பட்டதால் இப்படிப்பட்ட நிலைமைக்கு நம் குடும்பம் வந்துவிட்டது என்று கோபத்தோடு திட்டினான் பரந்தாமன்.

அண்ணே.... நீங்கதானே சொன்னீங்க ..கனகா இதற்கு சம்மதம் சொன்னால் என்று அதனால் தான் நான் அவளிடம் இப்படி நடந்து கொண்டேன் என்றான் தீனா.

வாயை மூடு ...உன்னால தான் இவ்வளவு பெரிய பிரச்சனை
நான் என்ன சொன்னேன் .அவளை அனுபவைத்துவிட்டு வாடா என்று சொன்னேன் ..ஆனால் நீ அவளை குடிபோதையில் கடித்து குதரி இருக்க . அவள் உடம்பு முழுக்க ஒரே ரத்தம் இப்படியா காட்டுமிராண்டி போலவ நடந்து கொள்வே. அதனால் அவள் பயந்து போய் விட்டாள்
இப்படி தேவையில்லாமல் உங்களுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது . இனிமேல் இந்த விவசாயத்தை பழைய நிலைமைக்கு எப்படி கொண்டு வருவது . இதோ பாருங்கள் எல்லாமே பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வீணாக போய்க்கொண்டு இருக்கிறது என்று கோபத்தோடு திட்டினான் பரந்தாமன்.

கனகாவின் அழகை ரசித்தோம்
அதை தவிர அவளை அனுபவிப்பதற்கு எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை இருந்தாலும் நீங்கள் சொன்னதால்தான் நான் சம்மதித்தேன் ஆனால் அது இந்த அளவுக்கு பெரிய பிரச்சனை ஆகும் என்று எனக்கு தெரியாது என்னுடைய திருமணமும் நின்று போய்விட்டது நம்முடைய விவசாயமும் நின்று போய்விட்டது இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால்
தம்பி கனகாவை கெடுத்து இருக்க மாட்டான் என்று சந்திரன் சொன்னான்.

வாயை மூடு .. நீ மட்டும் ஒழுக்கமா.. நீயும் தான் கனகாவிடம் சென்று உனக்கும் எனக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல திருமணம் நடக்கப் போகுது என்று சொல்லி அவளை மேலும் பயமுறுத்தி இருக்க .
அவள் நீ சொன்ன வார்த்தையைக் கேட்டு அங்கிருந்து குடும்பத்தோடு ஓடிவிட்டாள். திருமணம் ஆன பெண்ணை இப்படி சொன்னாள் பயப்படாமல் என்ன செய்வாள் அவள் . இப்படி இரண்டு பேருமே எல்லையை மீறி தப்பு செஞ்சுட்டிங்க என்று ஆவேசத்துடன் சந்திரனை திட்டினான் பரந்தாமன்.

நான் அப்படியா சொன்னேன் எனக்கு நினைவில்லை அண்ணா என்றால சந்திரன்.

நீ நிறைய குடித்து இருந்ததால் உனக்கு எல்லாமே மறந்து போயிருக்கும் . நான் பம்பு செட்டுக்கு வந்தபோது நீங்கள் இருவரும் போதையில் மயங்கி தூங்கிக் கொண்டு இருந்தீர்கள் பாவம் கனகா அழுதுகொண்டே இருந்தாள் . நான் அவளுக்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிவிட்டு வந்தேன் அப்படியும் அவள் இந்த முடிவை எடுத்து விட்டால் இனிமேல் பிரச்சனை மேலும் பெரியதாகி வீடும் அப்பா காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் வரை உனக்கு திருமணம் நடத்தப் போவதில்லை என்று சொல்லிவிட்டார் .
காணாமல் போனவர்கள் கிடைத்தாலும் உனக்கு திருமணம் நடக்காது ஏனென்றால் அவர்கள் நடந்த உண்மையை சொன்னாள் அப்பா நம்ம மூன்று பேரையும் கொன்றுவிடுவார் என்று பரந்தாமன் சொன்னான்.

நான் ஏன் வருங்கால மனைவி என்று நினைத்து அப்படி சொல்லி இருப்பேன் அண்ணா ..
அதை தவறாக புரிந்துகொண்டு கனகா இப்படி ஒரு முடிவை எடுத்து விட்டாள் . என்னோட குடிப்பழக்கத்தினால் இவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகி விட்டது என்னை மன்னித்துவிடு அண்ணா இனிமேல் நாங்கள் குடிக்க மாட்டோம் என்று சந்திரன் சொன்னான்.

சரி சரி இனிமேல் நம்ம மூன்று பேரும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் சிறிதளவுகூட நம் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது இனிமேல் கவனமாக இருங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வாங்க நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கிறேன் எனக்கு மனசு சரியில்லை என்று சொல்லிவிட்டு கிணற்றின் தடுப்பு சுவர் மீது அமர்ந்தான் பரந்தாமன்

சந்திரனும் தீனாவும் சோகத்தோடு ஆளுக்கொரு திசையில் சென்றார்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்க.


நடந்த இப்பிரச்சனைக்கு நீங்கள் இருவரும்தான் காரணம் என்பது போல தம்பிகளை நம்பவைத்து விட்டான் பரந்தாமன்.


சிறிது நேரம் கழித்து பரந்தாமன் பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்னால் நின்று வேண்டினான்..

அம்மா... நான் நினைத்தபடியே என்னுடைய சூழ்ச்சியால் தம்பியின் திருமணத்தை நிறுத்தி விட்டேன் அதேசமயம் நான் செய்த சூழ்ச்சியால் என்னுடைய விவசாயமும் நின்று போய்விட்டது நான் இந்த விவசாயத்துக்காக தான் இதுபோன்ற தவறுகளை செய்து வருகிறேன் என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்
இப்போது இந்த விவசாய நிலங்களை மறுபடியும் சிறப்பாக மாறுமா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது . காரணம் இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதால் ஊர் மக்கள் பயந்து யாருமே இதுவரைக்கும் வேலைக்கும் வரவல்லை . இனிமேல் இந்த விவசாயத்தை என்னால் பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியுமா என்ற நம்பிக்கை எனக்கு குறைந்துகொண்டே வருகிறது எனக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நான் உன்னிடம் மட்டும் தான் சொல்லி வேண்டிக் கொள்வேன் நீயும் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாய் அதேபோல இந்த விவசாய நிலங்களை பழையபடி செழிப்பாக மாற்ற வேண்டும் தாயே இதற்கு நீதான் எனக்கு உதவி செய்ய வேண்டும் அம்மா
எனக்கு உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை
நீ உதவி செய்வே என்ற நம்பிக்கையில்தன் துணிந்து பல திட்டங்களை போட்டு அதில் பெற்றியும் அடைந்திருக்கிறேன் அதேபோல இந்த நிலங்களையும் நீதான் சிறப்பாக மாற்றி என்னுடைய லட்சியத்திற்கு துணையாக இருக்க வேண்டும் தாயே . என்று இருக்கைகளால் கும்பிட்டு மனமுருக வேண்டிக் கொண்டு . பிறகு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தனது படத்தின் பின்னால் சேர்த்து வைத்திருக்கும் பணப்பெட்டி சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டு வெளியே வந்தான் பரந்தாமன்.



தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம் ...18 👇


கனகா குடும்பம் காணாமல் போனா நாள் முதல் பண்ணையார் தோட்டம் வெறிச்சோடி காணப்பட்டது
ஊர் மக்கள் யாரும் வேலைக்கு போகாததால் எல்லாம் பயிர்களும் காய்ந்து வீணாகி போனது
ஊர் மக்களும் வேலை இல்லாததால் குடும்பம் நடத்துவதற்கு கஷ்டப்பட்டார்கள் செலவுக்கு பணம் இல்லாமல் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தார்கள்.

வழக்கம்போல வாரத்தில் இரண்டு நாள் காணாமல் போனவர்களை தேடுவதற்காக பரந்தாமனும் சந்திரனும் தீனாவும் கிளம்பினார்கள்.

பரந்தாமா ...தோட்டத்துக்க கிளம்புறீங்க என்றார் பண்ணையார்..

தோட்டத்துக்கு இல்லை அப்பா இன்னைக்கு காணாமல் போனவர்களை தேடுவதற்காக கிளம்புகிறோம் என்று பரந்தாமன் மெதுவாக சொன்னான்.

காணாமல் போனவர்களை நீங்கள் தேடப் போவதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை எதற்கு தேவையில்லாமல் நேரத்தை வீணாக்க வேண்டும் . என்று சற்று வருத்தத்தோடு பண்ணையார் சொன்னார்.

பண்ணையாரின் பேச்சு கேட்டதும் சமையல் அறையிலிருந்து
சாந்தி சற்று வியப்போடு வந்து பார்த்தாள்.

மாமா ..அவங்க முடிந்தவரை தேடிக் கொண்டே இருக்கட்டும் எதுக்காக தேடுவதை நிறுத்த வேண்டும் மாமா என்று சாந்தி கேட்டாள்.

அம்மாடி ...உன் கணவன் மீது நான் எந்தக் குறையும் சொல்லவில்லை இதுவரைக்கும் காணாமல் போனவர்களை தேடுவதற்கு இவர்கள் சென்று வந்தார்கள் ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு தகவல் கூட அவர்களைப் பற்றி தெரியவில்லை .
ஒருவேளை அவர்கள் வெகுதூரத்தில் இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது . அதனால் இவர்கள் தேவை இல்லாமல் எதற்கு நேரத்தை வீணடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி சொன்னேன் . மற்றபடி இவர்களை குறை சொல்லவில்லை என்று பண்ணையார் சொன்னார்.

அப்படி என்றால் இனிமேல் அவர்களை தேட வேண்டாமா என்று பரந்தாமன் கேட்டான்.

நீங்கள் தேட போக வேண்டாம் அதற்கு நான் வேறொரு யோசனை செய்திருக்கிறேன் . அதனால் நீங்கள் மூவரும் இனிமேல் காணாமல் போனவர்களை தேடுவதற்கு போக வேண்டாம் என்று பண்ணையார் சொன்னார்.

பரந்தாமனுக்கும் சந்திரன் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது . அப்பா காணாமல் போனவர்களை தேடுவதற்கு வேறு ஒரு திட்டம் வச்சிருக்கார் என்று நினைத்து பயந்து போனார்கள்.

அப்படியென்றால் காணாமல் போனவர்களை தேடுவதற்கு வேறொரு நல்ல திட்டத்தை வச்சிருக்கீங்களா மாமா ...
என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் சாந்தி.

ஆமாம்... நேரம் வரும்போது அதைப்பற்றி நானே சொல்கிறேன் அதற்கு முன்னாடி நான் இவர்களிடம் ஒரு கேள்வி கேட்கணும் போல தோணுது என்று சாந்தியிடம் பண்ணையார் சொன்னார்.

எதுவாக இருந்தாலும் மறைக்காம கேளுங்க மாமா.. அவங்க யாரு உங்களோட பிள்ளைங்க அவங்க கிட்ட உங்களுக்கு எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது அப்படியிருந்தால் அது அப்பாவுக்கும் பிள்ளைகளுக்கும் விரிசலை ஏற்படுத்தும் . உங்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் தாராளமாக கேளுங்கள் மாமா என்று சாந்தி சொன்னாள்.

பரந்தாமனுக்கும் சந்திரன் தீனாவுக்கும் மேலும் பயம் அதிகரித்தது . அப்பா நம்மீது சந்தேகப்படுவதற்கு ஆரம்பித்துவிட்டார் என்று நினைத்து முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு மூவரும் சொல்லுங்கப்பா . என்ன கேட்கப் போறீங்க என்றான் பரந்தாமன்.

நீங்க மூணு பேரும் என்னைக்கி தோட்டத்தை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பேற்றுக் கொண்டீர்களோ அன்னையிலிருந்து பிரச்சனைகள் உருவாக தொடங்கிவிட்டது
இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பண்ணையார் தனது மூன்று மகன்களையும் பார்த்து கேட்டார்.

நம்ம நினைச்ச படியே ..
அப்பா நம்மிது சந்தேகப்பட்டு விட்டார் என்று மனதில் நினைத்துக்கொண்டு . நிங்கள் எங்கள் மீது சந்தேக படுகிறீர்களா அப்பா.. என்றான் பரந்தாமன்.

நான் உங்கள் மீது சந்தேகப்பட்டு இந்த கேள்வியை கேட்கவில்லை நீங்கள் இவ்வளவு நாளாக தோட்டத்தை கவனித்துக்கொண்டு வருகிறீர்கள் . ஆனால் நமது பம்புசெட்டில் தங்கி வேலை பார்த்து வந்தா இரண்டு குடும்பங்கள் காணாமல் போய்விட்டார்கள் இதைப்பற்றி உங்களுக்கு ஒரு சின்னத் தகவல் கூட கிடைக்கவில்லை என்றால் .
நீங்கள் மூவரும் எப்படிப்பட்ட முறையில் மக்களிடம் பழகுகிறீர்கள் நீங்கள் மூவரும் நேராக தோட்டத்துக்குச் சென்று தோட்டத்தை மட்டும் கவனித்துவிட்டு வருகிறீர்களா
நம்ம தோட்டத்தில் தங்கி வேலை செய்யும் குடும்பத்தை பற்றி விசாரிப்பது கிடையாது அவர்களிடம் மனம் விட்டு பேசியதும் கிடையாது . அப்படித்தானே என்றார் பண்ணையார்.

அவர்களும் எங்களிடத்தில் எதையும் சொல்வது கிடையாது நாங்களும் அவர்களை எதையும் கேட்டது கிடையாது
நாங்கள் தோட்டத்தை கவனிப்பதோடு வந்துவிடுவோம் என்று பரந்தாமன் சொன்னான்.

இதுதான் நீங்கள் செய்த தவறு எல்லோரிடமும் மனம் விட்டு பேசினால் அவர்களின் மன நிலைமையை புரிந்துகொண்டு என்ன நடந்திருக்கும் என்று இப்போது கணித்து இருக்கலாம் ஆனால் நீங்கள் யாரிடமும் எதுவுமே பேசியதில்லை
அதனால் உங்களுக்கு நடந்த சம்பவத்தை பற்றி சின்னத் தகவல் கூட உங்களுக்கு தெரியவில்லை நமது தோட்டத்தில் வேலை செய்து இருக்கும் போதே அவர்களைப் பற்றின தகவல் உங்களுக்கு தெரியாத போது .
இப்போது அவர்கள் எங்கேயோ வெகுதூரத்தில் ஓடிவிட்டார்கள் இப்போது மட்டும் அவர்களை உங்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும் . அருகில் இருக்கும்போதே அவர்களைப்பற்றி புரிந்துகொள்ள முடியவில்லை உங்களால்
இப்போது எப்படி அவர்களை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் .
அதனால் தான் உங்களை நான் காணாமல் போனவர்களை இனிமேல் தேடுவதற்கு போக வேண்டாம் என்று சொன்னேன் இதில் தவறு இருந்தால் நீங்களே சொல்லுங்கள் என்றார் பண்ணையார்.

பரந்தாமனும் சந்திரன் தீனா மூவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக தலைகுனிந்து நின்றார்கள்.

மாமா ...சொல்றதும் நியாயம்தான் ஊர் மக்கள் நம்மைப் பற்றி பெருமையாக நினைத்தாலும் யாராவது ஒருவருக்கு
இந்த கேள்வி மனதில் இருக்கும் தினமும் பண்ணையார் மகன்கள் தோட்டத்திற்கு வந்து போகிறார்கள் அவர்களுக்கும்மா எந்தத் தகவலும் கிடைக்கவில்லை . என்ற சந்தேகம் யாராவது ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் . இதை நம்மிடம் கேட்பதற்கு தயங்குவார்கள் அதேபோல தான்
இப்போது மாமா உங்களிடம் இந்த கேள்வியை கேட்டிருப்பது நியாயம்தன் என்று சாந்தியும் மூவரை பார்த்து கேட்டாள்.

நாங்கள் என்ன செய்வது அப்பா.. எங்களுக்கு இது போல நடக்கும் என்று தெரியாது அதனால் நாங்கள் தோட்டத்தை மட்டும் கவனித்தோம் ஆனால் இப்படிப்பட்ட பிரச்சனை உருவாகும் என்பது எங்களுக்கு தெரியாது அப்பா
என்று சந்திரன் சொன்னான்.

சரி சரி... நான் மேலும் பேசி உங்கள் மனதை புண்படுத்தவில்லை இனிமேலாவது கவனமாக நடந்து கொள்ளுங்கள் . நம் குடும்பத்திற்கு ஒரு பெரிய எதிரி இருக்கிறான் அவனை நீங்கள் கண்டுபிடிப்பதில் இனிமேல் கவனமாக இருங்கள் காணாமல் போனவர்களை கண்டுபடிக்கும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் உஷாராக இனிமேல் இருக்க வேண்டும் . நம்முடைய எதிரி நிச்சயம் நம்மை தினமும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது அதற்காகத்தான் உங்களை நான் கோபமாக பேசினேன்
இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளாமல் இனிமேல் கவனமாக இருங்கள் என்று பண்ணையார் சொன்னார்.

மாமா... சொல்வதைப்போல இனிமேல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்
இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனையாள் நம்ம வீட்டு திருமணம் தள்ளிப் போயிருச்சு அதனால இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் நீங்கள்தன் பார்த்துக் கொள்ள வேண்டும் . இன்னொரு முறை இது போன்ற பிரச்சனை ஏற்பட்டால் நம் குடும்பம் தாங்காது . என்று பொறுப்போடு சொன்னால் சாந்தி.

நீங்க சொன்னபடியே இனிமேல் நாங்கள் கவனமாக நடந்து கொள்கிறோம் அப்பா நடந்த தவறுக்கு எங்களை மன்னித்து விடுங்கள் என்று பரந்தாமன் சொன்னான்.

இதுக்கெல்லாம் எதுக்குப்பா மன்னிப்பு கேட்கிற நீங்கள் கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அப்படி பேசிவிட்டேன். இப்போது நீங்கள் மூவரும் ஒரு முக்கியமான வேலையை செய்யனும் என்றார் பண்ணையார்.

என்ன வேலை சொல்லுங்க அப்பா..

நம்ம சந்திரன் திருமணத்திற்காக ஊர் மக்களுக்கு புது துணியை வாங்கி வந்து விட்டோம்
ஆனால் திருமணம் தள்ளிப் போய்விட்டது . அதனால் இந்த புது துணியை நம்ம ஊர் மக்களுக்கு நீங்கள் மூவரும் கொடுத்துவிட்டு வாங்க ஏனென்றால் இன்னும் கொஞ்ச நாளில் முத்தையாவின் மகன் சங்கர் திருமணம் நடக்கப்போகிறது .
அப்போது ஊர் மக்கள் எல்லோரும் இந்த புது துணியை உடித்துக் கொள்வார்கள்
நம்ம வீட்டு திருமணம்தான் தள்ளிப் போய்விட்டது என் நண்பன் வீட்டு திருமணத்தையாவது சிறப்பாக செய்யலாம் என்று பண்ணையார் சொன்னார்.

நீங்க சொன்னபடியே செய்கிறோம் அப்பா என்றான் பரந்தாமன்.


தனது நண்பனின் மகன் திருமணம் நின்று போய்விட்டது என்று நினைத்து முத்தையா சோகத்தோடு காணப்பட்டார் . அதேசமயம் பண்ணையார் தோட்டமும் இப்படி வீணாகி போய்க்கொண்டிருக்கிறதே இதுவரைக்கும் இதுபோல நிலைமை வந்தது கிடையாது
ஊர் மக்களும் வேலைக்குப் போவதில் பயப்படுகிறார்கள் இந்த நிலைமை எப்போதுதான் மாறப்போகிறதோ என்று நினைத்து சோகத்தில் இருந்தார் முத்தையா.

தாத்தா வருத்தத்தோடு இருக்கிறார் என்னன்னு தெரியல
பண்ணையார் மகன் திருமணம் நின்று விட்டதை நினைத்து தாத்தா வருத்தப்படுகிறார் என்று ரேகா சங்கரிடம் சொன்னாள்.

அவருக்கு மட்டுமில்லை வருத்தமில்லை புள்ள . ஊர் மக்கள் அனைவருக்கும் தான் வருத்தமாக இருக்கிறது . ஏற்கனவே ஒருமுறை இப்படி தான் திருமணம் நின்றுபோனது இப்போது இரண்டாவது முறையும் திருமணம் நின்றுவிட்டது இதனால் ஊர் மக்களுக்கும் கவலையாகத்தான் இருக்கிறது இந்த ஊரே அவரால் நிம்மதியாக குடும்பம் நடத்தி வருகிறோம் ஆனால் பாவம் அந்த குடும்பத்தில் திருமணம் நடைபெறுவதில் தடங்கல் வந்து கொண்டே இருக்கிறது.
யார் செய்த பாவமோ தெரியவில்லை அதனால் தான் எல்லோரும் வருத்தமாக இருக்கிறார்கள் என்று சங்கர் ரேகாவிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது பண்ணையார் மகன்கள் ஊர் மக்களுக்கு புது துணியை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

பண்ணையாரின் மகன்களை பார்த்ததும் முத்தையாவுக்கு சங்கருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது ..அவர்களை கும்பிட்டு வரவேற்றர்கள் .

அப்பா அனைவருக்கும் புது துணியை கொடுத்துவிட்டு வரச் சொன்னார் என்று பரந்தாமன் நல்லவனைப் போல சிரித்தபடி சந்தோஷமாக முத்தையா விடம் சொன்னான்.

முத்தையாவுக்கு புரிந்தது... திருமணத்துக்காக வாங்கிய புதுத்துணி என்று நினைத்துக் கொண்டார். பிறகு உங்கள் விருப்பப்படியே கொடுங்கள் என்று முத்தையா அனைவரையும் அழைத்து புது துணியை கொடுத்தார்.

ஊர் மக்களும் எந்த ஒரு உற்சாகமின்றி துணிகளை வாங்கிச் சென்றார்கள்
இந்த திருமணத்தை திருவிழா போல கொண்டாட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் இப்படி நிலைமை மாறிவிட்டதே என்ற வருத்தத்தோடு ஊர் மக்கள் சோகத்தோடு துணிகளை வாங்கிச் சென்றார்கள்.

பரந்தாமன் உற்சாகத்தோடு அனைவருக்கும் புது துணியை கொடுத்தான். ஏனென்றால் அவன் திட்டம் ஜெயித்து விட்டது எப்படியாவது தம்பியின் திருமணத்தை நிறுத்தவேண்டும் என்ற அவனுடைய திட்டம் ஜெயித்ததால் அந்த உற்சாகத்தில் அனைவருக்கும் புது துணியை கொடுத்தான் பரந்தாமன்.

சந்திரனுக்கும் . தீனாவுக்கும் மனம் வருத்தமாக இருந்தது .
அப்பா நம் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டம்போட்டு பல நல்ல நல்ல காரியங்களை செய்திருந்தார். ஆனால் நம்முடைய திருமணத்தை நாமே கெடுத்துக்கொண்டோம் என்று நினைத்து வருத்தமாக இருந்தார்கள்.


........நாட்கள் நகர்ந்தது....


இப்படியே எல்லோரும் சோகத்தில் இருந்தாள் நிளமை மாறவா போகிறது நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு நம்ம முத்தையாவின் மகன் திருமணத்தை சிறப்பாக நடத்தலாம் என்று ஊர் மக்கள் ஆர்வத்தோடு கல்யாண வேலைகளை ஆரம்பித்தார்கள்.

சங்கரின் நண்பர்களும் உற்சாகத்தோடு திருமண வேலைகளை பார்த்தார்கள் ரேகாவின் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம் நம்முடைய மகள் திருமணத்தை இந்த ஊரே சந்தோஷமாக ஒன்றுகூடி நடத்தப் போகிறார்கள் என்று நினைத்து ஆனந்தமாக இருந்தால் லட்சுமி அம்மாள்.

முத்தையாவும் திட்டமிட்டபடி
ஊர் மக்களுக்கு கல்யாணத்திற்கு முன் கூட்டியே விருந்து அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். ஊர்மக்களும் சந்தோஷமாக உணவருந்தினார்கள் இப்படி அந்த ஊரில் சங்கர் ரேகாவின் திருமணம் களைகட்ட தொடங்கியது.


என் நண்பன் வீட்டு திருமணத்திற்கு நாளைக்கு நாம் குடும்பத்தோடு போக வேண்டும் அதனால் காலையில் எல்லோரையும் அதிகாலையில் எழுப்பி விட வேண்டும் என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

ஆமாம் மாமா ...இப்போதுதான் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது நம்ம வீட்டு திருமணம் நின்று போனாலும் உங்கள் நண்பர் முத்தையாவின் வீட்டு திருமணம் மாவது நல்லபடியாக நடக்கிறது இதை நினைத்தால் மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது மாமா என்றாள் சாந்தி.

என் நண்பன் முத்தையாவும் நானும் ஆரம்பத்தில் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து வந்தோம் அப்போது எங்களுக்கு இருவருக்குமே திருமணம் ஆகவில்லை இந்த நிலங்களை எல்லாம் பக்கத்து ஊரில் இருப்பவர்கள் என்னிடம் ஏமாற்றி எடுப்பதற்கு எத்தனையோ முயற்சிகள் செய்தார்கள்
ஆனால் அதையெல்லாம் நானும் என் நண்பன் முத்தையாவும் முறியடித்து அவர்களை இந்த ஊரை விட்டு விரட்டினோம் அப்படியெல்லாம் பிரச்சனைகளையும் சமாளித்து வந்தோம் ஆனால் இப்போது உருவாகியிருக்கும் இந்த சின்ன பிரச்சனை கூட எங்களால் சரி செய்ய முடியவில்லை .
எங்கள் மனம் பிரச்சனையை நினைத்து துடிக்கிறது
ஆனால் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது வயதாகிவிட்டதால் எங்களால் சின்ன பிரச்சினையைக் கூட இப்போது தீர்க்க முடியவில்லை என்று சொல்லி வருத்தப்பட்டார் பண்ணையார்.

நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீங்க மாமா ...நம்முடைய கஷ்டங்கள் எல்லாம் மெல்ல மெல்ல சரியாகிவிடும் . ஒரு பிரச்சனை எப்போது உச்சத்தை அடைந்து விட்டதோ . அப்போது அந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் . இதுதான் காலத்தின் கட்டாயம் அப்படிதான் நமக்கும் இப்போது இரண்டு குடும்பங்கள் காணாமல் போனதால் எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள் இனிமேல் இதுபோன்ற பிரச்சனைகளை வராமல் இருப்பதற்கு எல்லோரும் தயாராகி விட்டார்கள் . உங்களுடைய பிள்ளைகளும் இப்போதுதான் சரியாக புரிந்துகொண்டு ஊர் மக்களிடம் பாசமாக பழகுகிறார்கள் இனிமேல் நமக்கு நல்ல காலம் பிறக்கும் என்றாள் சாந்தி.

நீ சொன்னபடி நடந்தால் அதுவே எனக்கு போதும் . காணாமல்போன இரண்டு குடும்பங்களும் கிடைக்க வேண்டும். ஏன் இரண்டு மகன்களுக்கும் திருமணம் நடக்க வேண்டும் அதுவரைக்கும் கடவுள் என்னை கூப்பிடாமல் இருந்தால் போதும் என்றார் பண்ணையார்.

அப்படியெல்லாம் பேசாதீங்க மாமா உங்கள் நல்ல மனசுக்கு நிச்சயம் எல்லாமே நல்லபடியாக தான் முடியும். நீங்க வேணா பாருங்க உங்க நண்பர் வீட்டு திருமணம் முடிந்ததும் நம்ம குடும்பத்திலும் இந்த ஊருக்கும் ஒரு திருப்பம் ஏற்படப்போகிறது என்று சாந்தி சொன்னாள்.

எனக்கும் அப்படிதான் தெரிகிறது ஏதோ ஒரு மாற்றம் நடக்கப்போகிறது என்று என் உள் மனசு சொல்லிக் கொண்டே இருக்கிறது அதே போல தான் நீயும் சொல்கிறாய் உன் வாக்கு நிச்சயம் பலிக்கட்டும் சென்று பண்ணையார் சாந்தியிடம் மனமுருகி சொன்னார்.


பரந்தாமனுக்கு தோட்டத்திற்கு போகாமல் இருக்க முடியவில்லை ஏனென்றால் பம்புசெட்டில் பக்கத்து அறையில் தனது தாய் படத்தின் பின்னால் நிறைய பணத்தை மறைத்து வைத்திருப்பதால்
அவனால் தோட்டத்திற்கு போகாமல் இருக்க முடியவில்லை.

அப்பா இன்னைக்கு நாங்க தோட்டத்துக்கு போயிட்டு வரலாம்னு இருக்கிறோம் என்றான் பரந்தாமன்.

எல்லாமே காஞ்சி வீணா போச்சு... ஊர்மக்கள் என்னைக்கி காணாமல் போனவர்கள் கிடைக்கிறார்களோ அன்னைக்குத்தன் வேலைக்கு வருவோம் என்று சொல்லிவிட்டார்கள் நீங்கள் தோட்டத்திற்கு சென்று என்ன பண்ணப் போகிறீர்கள் என்றார் பண்ணையார்.

உங்கள் எல்லோருக்கும் நம்முடைய தோட்டம் ஒரு விவசாய
நிலமாகதான் தெரிகிறது
ஆனால் அந்த இடத்தில் என் அம்மா ஒரு தெய்வமாக பம்புசெட்டில் இருப்பது எனக்கு மட்டும்தான் தெரியும் அப்பா . அதனால்தான் நான் தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் அம்மா படத்தை பார்த்துவிட்டு வாரனும் போல தோன்றுகிறது என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சை கேட்டதும்.. பண்ணையார்.. சாந்தி ..சந்திரன் ..தீனா அனைவரும் ஆச்சரியத்தோடு பரந்தாமனை பார்த்தார்கள்.

பண்ணையாருக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டார்.

ஐயா ...உன்னுடைய தாய்ப் பாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் எல்லோரும் நீ சொன்னது போல நம்முடைய தோட்டத்தை ஒரு விவசாய நிலமாக தான் பார்த்து வருகிறோம் இந்த ஊர் மக்களுக்காகத்தான் விவசாயத்தையும் செய்து வருகிறோம் என்று நினைப்பதோடு நான் இருந்துவிட்டேன்
ஆனால் நீ உன்னுடைய தாயை தெய்வமாக பார்க்கிறாய்
நம்முடைய பம்பு செட்டை நீ கோவிலாக பார்க்கிறாய் உன்னுடைய நல்ல மனசுக்கு நிச்சயம் உன்னுடைய அம்மா இனிமேல் உனக்கு துணையாக இருப்பாள் என்று பண்ணையார் பரந்தாமனை கட்டியணைத்தபடி உருக்கமாக சொன்னார்.

அண்ணன் ..அம்மாவை தெய்வமாக பார்க்கிறாரே என்று நினைத்து பெருமை பட்டார்கள். சந்திரன் தீனா

மாமா.. இனிமேல் அவர் விருப்பப்படி தோட்டத்திற்கு எப்போது வேண்டுமானாலும் மூவரையும் அனுப்பிவையுங்கள் மாமா அவருடைய நம்பிக்கை நிச்சயம் கைகூடிவரும் என்று சாந்தி பண்ணையாரிடம் சொன்னாள்.

பரந்தாமா ..இனிமேல் நீ உன் விருப்பப்படி தம்பிகளை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்கு சென்று வா .
விவசாயம் நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் உன்னுடைய தாய்ப் பாசத்தின் நம்பிக்கை உனக்கு கைகொடுக்கும் என்று சொல்லி மூவரையும் தோட்டத்திற்கு அனுப்பி வைத்தார் பண்ணையார்.


வழக்கம்போல பரந்தாமன் தம்பிகளை தோட்டத்தை சுற்றிவர சொல்லிவிட்டு பம்புசெட்டில் இருக்கும் தனது தாய் படத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் பணப்பெட்டியை சரி பார்த்தான் அப்போது பணப்பெட்டியின் இரண்டு போட்டும் சரியாக இருந்தது . அப்போது அவனுக்கு சற்று மனம் நிம்மதியாக இருந்தது இது நாள் வரைக்கும் விவசாயத்தில் கிடைத்த லாபத்தை யாருக்கும் தெரியாமல் இந்த பெட்டியில் சேர்த்து வைத்திருக்கிறோம் இன்னும் சில லட்சங்களை இந்தப் பெட்டியில் போட்டால் . பெட்டி நிரம்பி விடும் இதை நிரப்புவதற்குல் .
விவசாயம் நின்று போய்விட்டது என்று நினைத்து பரந்தாமன் சற்று வருத்தப்பட்டான்.

அப்போது அவன் தாயிடம் நம்பிக்கையோடு வேண்ட ஆரம்பித்தான்...

அம்மா .. தம்பியின் திருமணத்தை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்று நான் உன்னிடம் வேண்டினேன் . அதேபோல நீயும் என் வேண்டுதலை எப்படியோ நிறைவேற்றி விட்டாய்
ஆனால் நம்முடைய விவசாயம்மும் சேர்ந்து நின்றுவிட்டது
என்னுடைய லட்சியமே எல்லாம் நிலங்களும் நானே ஆளவேண்டும் அதில் கிடைக்கும் வருமானத்தை நானே அனுபவிக்க வேண்டும் இதுதான் என்னுடைய லட்சியம் இது உனக்கே தெரியும் ஆனால் இப்போது விவசாயம் நின்றுபோய்விட்டது ஊர் மக்கள் பயந்து கொண்டு யாரும் வேலைக்கு வருவதில்லை இந்த நிலைமையை நீதான் சரி செய்ய வேண்டும் தாயே
நான் இதுவரைக்கும் வேண்டியதை எல்லாவற்றையும் நீ நிறைவேற்றி விட்டாய் . அதே போல இந்த ஒரு வேண்டுதலையும் நீ நிறைவேற்றி வைக்கவேண்டும்
அதன் பிறகு நான் எல்லோரிடமும் பாசமாக இருப்பேன்
தம்பிகளை நல்லபடியாக பார்த்துக்கொள்வேன் திருமணம் மட்டும் தம்பிகளுக்கு வேண்டாம் தாயே அது என்னுடைய லட்சியத்திற்கு எதிராக அமைந்துவிடும் மற்றபடி தம்பிகளை நான் சந்தோசமாக பார்த்துக் கொள்கிறேன் தாயே அதேபோல இந்த ஊர் மக்களையும் இனிமேல் சந்தோசமாக பார்த்துக் கொள்கிறேன் ஏனென்றால் என்னுடைய லட்சியத்திற்கு இனிமேல் எந்த தடையும் இருக்காது அதனால் நான் எல்லோரிடமும் பாசமாக நடந்து கொள்கிறேன் தாயே . எப்படியாவது நம்முடைய விவசாயத்தை மறுபடியும் செழிப்பாக மாற்றுவதற்கு நீ தான் உதவி செய்ய வேண்டும் தாயே என்று வழக்கம் போல தனது ஆசையை வேண்டுதலாக தனது தாயிடம் உருக்கமாக சொன்னான் பரந்தாமன்.


பரந்தாமனின் வேண்டுதல் .
கை கூடி வரும்மா என்று.
பொறுத்திருந்து பார்க்கலாம்.


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
⬇️அத்தியாயம்... 19 👇


அதிகாலை 4 மணி அளவில் அந்த அழகிய கிராமத்தில்
அம்மன் கோவிலில் மங்களகரமான மேளச்சத்தம் ஒலித்தது
ஊர் மக்கள் அனைவரும் விழித்துக் கொண்டார்கள் . உடனே எல்லோரும் சந்தோஷமாக சங்கரின் திருமணத்திற்கு கிளம்பினார்கள்.

அம்மன் கோவிலில் மாவிலை தோரணம்கட்டி வாழைமரம் வளைத்துக் கட்டி கொத்துக்கொத்தாக தென்னன கொலை .பனங்காய் கொலை. ஈச்சம்பழம் கொலை. போன்றவைகளால் தோரணமாக கட்டி அம்மன் கோவிலில் சிறப்பாக அலங்கரித்து சங்கரின் திருமணம் அதிகாலையில் அழகாக ஆரம்பித்தார்கள்.

பண்ணையார் திட்டமிட்டபடி சங்கரின் திருமணத்திற்கு தாலி செய்து கொண்டு குடும்பத்தோடு வந்திருந்தார்.

ஊர் மக்களும் அனைவரும் பண்ணையார் கொடுத்த புது துணியை உடித்துக்கொண்டு பளிச்சென்று அனைவரும் சந்தோஷமாக அம்மன்கோவிலில் நிரம்பி இருந்தார்கள்
இப்படி சிறப்பான முறையில் சங்கர் ரேகாவின் திருமணம் நடைபெற்றது.

மணமகன் சங்கர் பட்டு வேட்டி
பட்டு சட்டை அணிந்து கொண்டு மாப்பிள்ளை கோலத்தில் ஜொலித்தான் சங்கர் .
மணமகள் ரேகா கூரை புடவையில் அற்புதமாக புன்னகை சிரிப்போடு மணமகள் கோலத்தில் அமர்ந்து இருந்தாள்.

சங்கர் ரேகாவின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து 🤵👰சந்தோசத்தில் பூரித்துப் போனாள் பண்ணையாரின் மருமகள் சாந்தி.

நமது மகள் திருமணம் இந்த அளவுக்கு சிறப்பாக நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை .
இப்படிப்பட்ட வாழ்க்கையை நம் மகளுக்கு கொடுத்த முத்தையா அப்பாவிற்கு நாம் என்ன செய்தாலும் அவருக்கு நன்றி கடன் தீராது . என்று நினைத்தபடி லட்சுமி அம்மாள் லேசாக கண் கலங்கினாள்.

எல்லோரின் முகத்திலும் சந்தோஷம் பொங்கியது... பண்ணையாருக்கு அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சந்தோஷமாக திருமணத்தை நடத்துவதை நினைத்து பெருமைப் பட்டார்.

ஏதோ கடமைக்கு வந்தது போல பரந்தாமன் திருமணத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

சந்திரனுக்கு சங்கரின் திருமணத்தை பார்த்ததும் அவனுக்கு தன்னுடைய திருமணமும் நடந்திருந்தால் இதேபோல ஊர் மக்கள் ஒன்று கூடி சந்தோஷமாக நடந்திருக்கும் ஆனால் நமக்கு அந்த கொடுப்பினை கைகூடவில்லை என்று நினைத்து சற்று வருத்தமாக இருந்தான் சந்திரன்
அப்போது அவன் தனது வருங்கால மனைவியை நினைத்து கவலைப்பட்டான் நமக்கே இந்த அளவுக்கு வருத்தமாக இருக்கிறதே பாவம் அவள் தன்னுடைய திருமணத்தை பற்றி எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பாள் என்று நினைத்து வருத்தத்தோடு இருந்தான் சந்திரன்.

கோவிலில் மங்கல இசை ஒளித்திருக்கும் வேளையில் பண்ணையார் அம்மனை வேண்டிக் கொண்டு தாலியை எடுத்து சங்கரிடம் கொடுக்க ...
சங்கர் ..தாலியை பண்ணையாரிடம் இருந்து வாங்கி ..
ரேகாவின் கழுத்தில் கட்டிவிட்டான் அனைவரும் உற்சாகத்தோடு சங்கரையும் ரேகாவயம் ஆசீர்வதித்தார்கள் . மலர் தூவியும் கைத்தடியும் அவர்களை வாழ்த்தினார்கள் .
இப்படி சந்தோஷமாக சங்கரின் ரேகாவின் திருமணம் நல்லபடியாக முடிந்தது .

பிறகு சங்கரும் ரேகாவும் முத்தையாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள்
பிறகு லட்சுமி அம்மாளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் .
அப்போது சங்கரும் ரேகாவும் பண்ணையாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள் .
இப்படி எல்லோருடைய ஆசீர்வாதத்தை சங்கரும் ரேகாவும் பெற்றார்கள்.

பிறகு அனைவரும் கோவிலில் அமர்ந்து கல்யாண விருந்து சாப்பிடுவதற்கு தயாரானார்கள் சாந்தியும் அவளது கணவன் பரந்தாமனும் மற்றும் மகன் சுரேஷ் சந்திரன் தீனா அனைவரும் அமர்ந்து உணவு அருந்தினார்கள்.

பண்ணையார் முத்தையாவின் தோள் மீது கை போட்டபடி இருவரும் கோவிலில் தனியாக மனம் விட்டு பேசினார்கள்.

நம்ம ரெண்டு பேரும் வாலிப வயசில் எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறோம் .
நம்ம இருவரும் யாருக்கும் பயந்தது கிடையாது . எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை சமாளித்து ஜெயித்து விடுவோம்
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை
நமக்கும் வயசாகிவிட்டது சின்ன பிரச்சனை என்றாலும் மனசு ரொம்பவே சங்கடம் படுகிறது என்றார் பண்ணையார்.

ஆமாண்டா ...காலம் செல்ல செல்ல நம்ம எதிர்பார்க்காத விஷயங்கள் எல்லாம் நடக்கிறது .
என் அனுபவத்தில் இதுவரைக்கும் நம்முடைய தோட்டம் இப்படி பராமரிப்பு இல்லாமல் வீணாக போனதே கிடையாது
நம்முடைய தோட்டத்தைப் பற்றி சுற்றியிருக்கும் கிராம மக்கள் பெருமையாக பேசுவார்கள் அப்படியிருந்த நம்முடைய தோட்டம் இப்போது வீணாக இருப்பதை பார்த்தால் மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது
நமக்கும் வயதாகிவிட்டதால் இதையெல்லாம் பார்த்து கவலைப்பட தான் முடியும்
வேறு எதுவும் நம்மால் செய்ய முடியாது என்று முத்தையா வருத்தத்தோடு சொன்னார்.

விவசாயம் நடக்கவில்லை என்ற கவலையை விட
ஊர்மக்கள் வேலை இல்லாமல் இருப்பதுதான் எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது
இந்த ஊர் மக்களுக்கு இது வரைக்கும் நான் வேலை இல்லை என்ற சூழலை ஏற்படுத்தியதே கிடையாது . அவர்கள் விருப்பப்படி வேலையை கொடுத்துக் கொண்டேதான் இருந்தேன்
ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை .
நமக்கு தெரியாமலே ஏதேதோ நடக்கிறது நம்முடைய ஊரில்
என்ன காரணத்தால் இந்த இரண்டு குடும்பங்களும் காணாமல் போனார்கள் என்ற கவலை எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது இதனால் என் மகன் திருமணத்தை நான் தள்ளிப் போட்டுவிட்டேன் இதற்கெல்லாம் எப்போது தான் விடிவு காலம் வருமோ என்று பண்ணையார் சற்று வருத்தத்தோடு மனம் விட்டு தனது நண்பன் முத்தையா விடம் சொன்னார்.

நீ ஒன்றும் கவலைப்படாதே உன்னுடைய குறைகளை எல்லாம் இந்த அம்மன் சன்னதியில் சொல்லியிருக்க .
நிச்சயம் இந்த அம்மன் உன்னுடைய கஷ்டத்தை தீர்த்து வைப்பாள் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் உனக்கு எந்த குறையும் இல்லை .
உன் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை
ஊர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சினையை
உன்னோட குடும்ப பிரச்சனையாக நினைத்து வருத்தப்படுகிறாய் உண்மையிலேயே உன் குடும்பத்தில் பிரச்சனை எதுவும் இல்லை .உன்னை கடவுள் நல்ல படியாகத்தான் வச்சிருக்காரு ஆனால் நீதான் ஊர் மக்கள் மீது உள்ள பாசத்தினால் இப்படி உன் மகன் திருமணத்தை நீயே தள்ளிப்போட்டு உன் குடும்பத்தில் உள்ளவர்களையும் கஷ்டப் படுகிறாய் உன்னுடைய எண்ணம் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் போது . நம்முடைய மகன் திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய் .
உன்னுடைய நல்ல மனசுக்கு நிச்சயம் கடவுள் கை கொடுப்பார் என்று பண்ணையாருக்கு ஆறுதல் சொன்னார் முத்தையா.

பண்ணையாரும் முத்தையாவும் மனம் விட்டு பேசியதில் நேரம் கடந்தது. பிறகு அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள் அப்போது பண்ணையாரும் குடும்பத்தோடு வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

வழக்கம்போல பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பம்புசெட்டுஅருகில் இருக்கும் கிணற்று தடுப்பு சுவர் மீது அமர்ந்தபடி கவலையோடு இருந்தார்கள்.

அண்ணே ....என்னை மன்னித்துவிடுங்கள் என்னால் தான் உங்கள் திருமணம் நின்று போய்விட்டது .நான் குடிபோதையில் கனகாவிடம் தவறாக நடந்து கொண்டதால் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட்டுவிட்டது .
என்னை மன்னித்துவிடு அண்ணா என்று சந்திரனிடம் வருத்தத்துடன் சொன்னான் தீனா.

என்னையும் மன்னித்துவிடு சந்திரா நானும் உங்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்ததால் .
உங்களுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி வைக்கவேண்டும் என்ற எண்ணத்தால் நானும் தவறான விஷயத்திற்கு உங்களை வற்புறுத்தி விட்டேன் .
எனக்கு உங்களுடைய சந்தோஷம்தன் முக்கியமாக தெரிந்ததே தவிர . அதில் இருக்கும் பிரச்சனை அப்போது எனக்கு தெரியவில்லை உங்களுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று நினைத்து இப்படிப்பட்ட தவறினை நான் செய்துவிட்டேன்
என்னை மன்னித்துவிடு சந்திரா என்று பரந்தாமனும் சந்திரனிடம் மன்னிப்பு கேட்டான்.

அண்ணே ...நீங்க போய் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா
எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் என்னை முதுகிலும் மார்பிலும் சுமந்து சிறுவயதில் என்னையும் தம்பியையும் சந்தோஷமாக பார்த்துக் கொண்டீர்கள் .இப்போது எங்களை மனதில் சுமந்துகொண்டு எங்களை சந்தோசமாக பார்த்துக் கொள்கிறீர்கள். எங்களை பொறுத்தவரை அப்பா அம்மா எல்லாமே நீங்கள் தான் அண்ணா நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கலாமா என்று பாசத்தோடு சொன்னான் சந்திரன்.

அண்ணா ...நாங்கள் இனிமேல் குடிப்பதை நிறுத்தி விடுகிறோம் அதேபோல எந்த பெண் மீதும் இனிமேல் தேவையில்லாமல் ஆசை பட மாட்டோம் இனிமேல் உங்கள் விருப்பப்படி நாங்கள் நடந்து கொள்கிறோம் அண்ணா
நாங்கள் செய்த தவறினால் உங்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டுவிட்டது எங்களால் இந்த ஊர் மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விட்டது இதை நினைத்துப் பார்க்கும்போது என் மனம் ரொம்ப வருத்தப்படுகிறது அண்ணா என்று தீனா வருத்தத்தோடு பரந்தாமனிடம் சொன்னான்.

சாதாரண சின்ன பிரச்சனை தான் இந்த கனகா தான் தேவையில்லாமல் இங்கிருந்து ஓடி விட்டாள் இதனால் உன் திருமணமும் நின்று விட்டது நம்முடைய விவசாயமும் நின்று விட்டது இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்திருந்தால் நாம் ஏன் இந்த தவறு செய்யப் போறோம் ஏதோ தெரியாமல் தவறை மூன்றுபேரும் செய்துவிட்டோம் இனிமேல் எந்தத் தவறையும் செய்யக்கூடாது அப்போதுதான்
நம்ம அப்பா நம்மிது நம்பிக்கை ஏற்படும் என்று பரந்தாமன் தம்பிகளிடம் நல்லவன் போல சொன்னான்.

அண்ணனின். திருமணத்தை மறுபடியும் எப்படியாவது நடத்த வேண்டும் அண்ணா என்று தீனா பரந்தாமனிடம் சொன்னான்.

நான் சந்திரன் திருமணத்தை ரொம்ப சிறப்பா நடத்தலாம் என்று ஆசையாக இருந்தேன்
அதற்காக நிறைய திட்டத்தை எல்லாம் போட்டு வைத்திருந்தேன் வரவு செலவுக் கணக்கையும் தயாராக எழுதி வைத்திருந்தேன் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும்
ஆனால் இப்படி நிலைமை மாறும் என்று எனக்கு தெரியாதே
இனிமேல் நம்ம தோட்டத்தை செழிப்பாக மாற்றுவதற்கு முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்
பிறகு மெல்ல மெல்ல அப்பாவின் மனதை மாற்றி சந்திரன் திருமணத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம் அதனால் இனிமேல் நம்ம எந்த தேவையில்லாத வேலையும் செய்யக்கூடாது என்று பொறுப்போடு தம்பிகளிடம் சொன்னான் பரந்தாமன்.

காணாமல் போனவர்கள் கிடைக்கும்வரை திருமணத்தை தள்ளி போடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அப்பா உறுதியாக இருக்கிறாரே அண்ணா அவர் சொன்னபடி காணாமல் போனவர்களை கண்டு பிடித்து விட்டாலும் பிரச்சனை நமக்குத்தானே அண்ணா அப்போதும் என் திருமணம் தான் நின்று போகுமே என்று வருத்தத்தோடு சந்திரன் சொன்னான்.

நிச்சயம் காணாமல் போனவர்கள் கிடைக்க மாட்டார்கள்..
அதனால் நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம்
நான் சொன்னதுபோலவே அப்பாவின் மனதை மெல்ல மெல்ல மாற்றி உன்னுடைய திருமணத்தை எப்படியாவது நான் நடத்தி வைக்கிறேன் நீ ஒன்றும் கவலைப்படாதே தம்பி என்று பாசத்தோடு நடித்துக் கொண்டு சொன்னான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சைக் கேட்டதும் சந்திரனுக்கும் தீணாவுக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டது .
நம்முடைய வாழ்க்கையை அண்ணன் இனிமேல் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்பட்டது
அதே சமயம் நமக்கு எல்லாமே அண்ணன் தான் அவர் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையும் இல்லை என்ற அளவிற்கு பரந்தாமன் மீது பாசமும் நம்பிக்கையும் சந்திரன் மனதில் தீனாவின் மனதில் நிரம்பியது.


சங்கர் ரேகா ஜோடி பொருத்தம் நல்லாவே இருக்குது .
ரேகா ரொம்ப அழகா இருக்கா என்று சாந்தி தனது மாமனாரிடம் சொன்னாள்.

ஆமாம் ...சங்கர் திருமணத்திற்கு சென்று வந்தது எனக்கு மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது ஊர் மக்களையும் என் நண்பனையும் பார்த்து மனம்விட்டு பேசியதில் என்னுடைய பாரம் கொஞ்சம் குறைந்தது போல இருக்குது என்று பண்ணையார் சாந்தியிடம் சொன்னார்.

எனக்கும் அப்படித்தான் இருக்குது மாமா ...கூடிய சீக்கிரத்தில் சந்திரனின் திருமணத்தையும் இதேபோல ஊர் மக்களும் ஒன்றுகூடி சந்தோஷமாக நடத்த வேண்டும் என்றாள் சாந்தி.

கண்டிப்பா... சந்திரன் தீனா இவர்களின் திருமணத்தை... முடிந்தால் ஒரே மேடையில் கூட நடத்தலாம் ஏனென்றால் தீனாவுக்கும் வயது கூடிக்கொண்டே போகிறது அதனால் அவனுக்கும் சந்திரனுக்கும் ஒரே மேடையில் திருமணத்தை நடத்தி விடலாம்
என் ஆசைப்படி காணாமல் போன இரண்டு குடும்பங்கள் கிடைத்த உடனே இவர்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்த வேண்டும் என்று நம்பிக்கையோடு சொன்னார் பண்ணையார்.

நீங்கள் காணாமல் போனவர்களை உங்கள் மகன்களையும் தேட வேண்டாம் என்று சொல்லிட்டீங்க ஏதோ புது திட்டம் வச்சிருக்கிறதா சொன்னீங்களே மாமா ..அது என்ன திட்டம் அந்த திட்டத்தினால் காணாமல்போனவர்களை சீக்கிரமாக கண்டுபிடிக்க முடியுமா மாமா என்றாள் சாந்தி.

நிச்சயம் கிடைப்பாங்க..
அந்த திட்டத்தை பற்றி நான் உனக்கு நேரம் வரும்போது சொல்கிறேன் என்று பண்ணையார் சொன்னார்.

சரி மாமா அவங்க சீக்கிரமாகவே கிடைக்கட்டும் .. ஆனால் இந்த இரண்டு குடும்பமும் எதனால் காணாமல் போனார்கள் என்ற விவரம் சிறிதளவுகூட தெரியவில்லையே அப்படியென்றால் இதை யாரோ நீண்ட நாட்களாக திட்டம் போட்டு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் சாந்தி.

எனக்கும் இதைப்பற்றி மர்மமாகவே இருக்கிறது எப்படி யோசித்துப் பார்த்தாலும் சின்ன சந்தேகம் கூட யார்மிதும் ஏற்படவில்லை
என்னா பிரச்சனைக்காக ஓடினார்கள் இல்லை அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்ற பயம் எனக்கு ஒரு பக்கமும் இருக்கிறது
அவர்கள் காணாமல் போய் இருந்தாலே நன்றாக இருக்கும் என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக அவர்களை நாம் கண்டுபிடித்து விடுவோம்
ஆனால் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற எண்ணம் என் மனதில் இப்போது ஏற்பட்டிருக்கிறது இந்த மர்மம் என்னைக்கு தான் தெளிவாக மாறப்போகிறதோ.
என்று ஏக்கத்தோடு சொன்னார் பண்ணையார்.

நம்ம குடும்பத்தோடு உங்கள் நண்பர் வீட்டு திருமணத்திற்கு சென்றோம் . அதே சமயம் நம்ம குடும்பத்தோடு கோவிலுக்கும் சென்று இருக்கிறோம் திருமணத்திற்கும் கோவிலுக்கும் ஒரே சமயத்தில் குடும்பத்தோடு சென்று இருக்கிறோம்
நிச்சயம் அந்த அம்மன் இந்த மர்மத்திற்கு ஒரு தெளிவான முடிவை கொடுப்பாள் அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்குது மாமா ..நான் சொன்னபடி உங்கள் நண்பரின் திருமணம் முடிந்து விட்டது இனிமேல் ஒரு திருப்பம் ஏற்பட போகிறது பாருங்கள் என்று ஒரு புது உற்சாகத்துடன் சொன்னாள் சாந்தி.


சாந்தியின் நம்பிக்கையும் பண்ணையாரின் நம்பிக்கையும் எந்த அளவுக்கு கைக்கூடி வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


தொடரும்......
 
Top Bottom