- Messages
- 112
- Reaction score
- 53
- Points
- 28
எல்லோரும் அழுவதை வேடிக்கை பார்த்து இருந்த பரந்தாமனின் பத்து வயது மகன் . தாத்தா இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் பரந்தாமன்
அப்போது பண்ணையாரை பார்த்து தாத்தா தாத்தா என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதான் .
பிறகு சாந்தி பண்ணையாரை பார்த்து .... மாமா எதுவாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்லிவிடுவீர்களே இப்படி எங்களையெலலாம் விட்டு விட்டு போகப்போறேன் என்பதை மட்டும் எனக்கு ஏன் சொல்லவில்லை மாமா என்று பண்ணையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சாந்தி
எனக்கு ஆதரவாக நீங்கள் தானே இருந்தீங்க ...
எந்த விஷயமானாலும் என்கிட்ட யோசனை கெட்பிங்களே இன்னைக்கு மட்டும் என்கிட்ட எதையுமே சொல்லாமல் இப்படி உயிரை விட்டுட்டீங்களே மாமா என்று அவள் கதறி அழுவதை பார்த்து ஊர் மக்களும் அழுதார்கள்
பிறகு சந்திரனும் தீனாவும் அப்பா எங்களை மன்னித்துவிடு அப்பா நாங்கள் எந்த தவறு செய்து இருந்தாலும் எங்களை மன்னித்துவிடு அப்பா ...
நாங்கள் என்ன சொல்லி அழுவது என்று எங்களுக்கு தெரியவில்லையே இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டியே அப்பா என்று இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கதறினார்கள் .
அப்போது பரந்தாமன் சற்று சுதாரித்துக் கொண்டான் ..
தம்பிகள் நடந்ததையெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு உண்மையை சொல்லி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு.
சந்திரனின் தோள்மீது தட்டிக்கொடுத்து கண்ணசைத்தான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விடாதீர்கள் என்பது போல தம்பிகளுக்கு சிக்னல் செய்தான் பரந்தாமன் அழுதுகொண்டே...
அடப்பாவமே சினேகிதன் மீது இவ்வளவு பாசமா .... முத்தையாவின் மேல் இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் இந்த மனுஷன் ..
அப்படியென்றால் முத்தையா அந்த அளவுக்கு நட்பாக பழகியிருக்கிறார் நமக்கு தெரியாது ...நம்மா இந்த ஊருக்கு வந்து மூணு வருஷம் தானே ஆகுது ..
அதனால இவங்களோட நட்பு நமக்குத் தெரியவில்லை என்று சாட்டையடி சாமியார் பெருமையாக நினைத்தார். பண்ணையாரையும் முத்தையாவையும்.
மகள் . மருமகன் காணவில்லையே என்று நினைத்து அழுவதா ...
பெத்த அப்பா போல நம் குடும்பத்தை பார்த்துக்கொண்ட முத்தையா இறந்துவிட்டார் என்பதற்காக அழுவதா .....
இல்லை எல்லோருக்கும் தெய்வமாக இருந்த பண்ணையார் இறந்துவிட்டார் இதை நினைத்து அழுவதா .......
என்று புரியாமல் அரைமயக்கத்தில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் லட்சுமி அம்மாள்.
பிறகு அங்கு இருந்த பெரியவர்கள் சிலபேர் பண்ணையாரின் கையிலிருக்கும் முத்தையாவின் தடிக்கொம்பை எடுக்க முயற்சி செய்தார்கள் ...
ஆனால் தடிக்கொம்பை எடுக்க முடியவில்லை ....
பண்ணையார் உறுதியாக இரண்டு கைகளால் தடிக்கொம்பை கட்டியணைத்தபடி இறந்துவிட்டார்
தடிக்கொம்பை எடுக்கமுடியாமல் என்ன செய்வது என்று முழித்தார்கள் ..
அப்போது சாந்தி சொன்னாள் ....
அவர் கையில் இருக்கும் தடிக்கொம்பு எடுக்கவேண்டாம் அவர் நண்பன் மீது வைத்திருந்த பாசம் எனக்கு தெரியும் ..
அதனால் அந்த கொம்பை எடுக்க வேண்டாம் என்றாள் சாந்தி ...
பிறகு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அழுதுகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் சொன்னார் .... பண்ணையாரை உங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போறீங்களா என்றார்...
வேண்டாம் இப்போது சூரியன் மறைய போகுது ....
நேரமில்லை அவருக்கு அவருடைய நண்பரும் இந்த ஊர்தான் முக்கியமாக கருதினார் ...
அதனால் அவர் நண்பருடைய வீட்டில்லிருந்தே அவருக்கு நாங்கள் இறுதிச்சடங்கு செய்யப்போகிறோம் என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன் ..
பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முத்தையாவுக்கு தனியாக படை அமைத்து....
பிறகு பண்ணையாருக்கும் தனியாக படை அமைத்தார்கள் ....
அப்போது பரந்தாமன் ஊர் பெரியவர்களிடம் சொன்னான்....
என் அப்பாவுக்கு என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் ..
அதேபோல முத்தையாவும் என் அப்பா போலதான் நீங்கள் விருப்பப்பட்டால் முத்தையாவுக்கும் என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்...
அப்போது அதில் ஒரு பெரியவர் சொன்னார் ....
ஐயா முத்தையாவுக்கு இருந்தது ஒரே ஒரு மகன் சங்கர்தான்..
பாவம் அவன் இப்போது இல்லை அவருக்கென்று சொந்தம் இப்போது இருப்பது ..
அவர் சம்பந்தி லட்சுமி அம்மாள் தான் .அவரை கேட்டு நாங்கள் முடிவு சொல்கிறோம் என்றார்கள் பெரியவர்கள் ...
பிறகு லட்சுமி அம்மாளும் பண்ணையார் மகன்களே கொல்லி வைக்கட்டும் என்று அழுதபடி சொன்னார் ...
பிறகு ஊர் பெரியவர்கள் இறுதிச் சடங்கை செய்ய தயாரானார்கள்.
பண்ணையாரையும் ...
முத்தையாவையும் சுடுகாட்டுக்கு பாடையில் எடுத்துச் சென்றார்கள் ஊர்மக்கள்.
ஊர்மக்கள் முத்தையாவயும் பண்ணயாரையும் நல்லபடியாக அடக்கம் செய்து ....
தீனா பண்ணையாருக்கும் முத்தையாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு சோகத்தோடு சுடுகாட்டில் இருந்து திரும்பினார்கள்
சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பியவர்கள். சுடுகாட்டை திரும்பி பார்க்கக் கூடாது என்பது ஊர் வழக்கம் ..
ஆனால் எல்லோரும் ..
முத்தையாவையும்
பண்ணையாரையும் நினைத்து மனம் நொந்து போய் ....
இப்படி அவர்களை எரித்துவிட்டு வருகிறோமே என்று நினைத்து வேதனையில் வரும்போது அப்போது எல்லோரும் மனதில் கடைசியாக ஒருமுறை
பண்ணையாரையும் ..
முத்தையாவையும் திரும்பிப் பார்க்கலாமா என்று அவர்கள் மனம் சொல்லியது ..
அப்போது கூட்டத்தில் நிறையபேர் சுடுகாட்டை திரும்பிப் பார்த்தார்கள்
பண்ணையாரும் முத்தையாவும் மளமளவென எரிந்து கொண்டிருந்தார்கள் ...
மேலும் அழுது கத்தினார்கள் இதைப் பார்த்த பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் ஊர்மக்களின் சந்தோசத்தை கெடுத்து விட்டோமே என்று நினைத்து கவலைப் பட்டார்கள்
பிறகு எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டார்கள் ..... பாவம் லட்சுமி அம்மாள் அனாதை போல முத்தையாவின் வீட்டு வாசலில் படுத்து கொண்டு இருந்தாள். பித்துப் பிடித்தவள் போல்..
நாட்கள் நகர்ந்தது ......
ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.
சோகத்திலிருந்து ஊர் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்தார்கள்.
பண்ணையாரும் முத்தையாவும் இறந்து மூன்று வாரங்கள் ஆனது..
பண்ணையார் வீட்டில் ...
சாந்தி கவலையோடு இருந்தாள் பரந்தாமன் சந்திரன் தீனா மூவருமே பேசிக்கொள்ளவில்லை சோகத்தோடு காணப்பட்டார்கள்..
ஊர் மக்களும் ..பண்ணையார் முத்தையா இறந்ததில் இருந்து பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை .. சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது ஊர்மக்கள் எல்லோரும் பட்டினியால் வாடினார்கள்...
பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல ஊர் மக்களுக்கு விருப்பமில்லை ...
ஊரை விட்டு போகவும் மனமில்லை கடைசியாக சொன்ன முத்தையாவின் வார்த்தை அவர்களை தடுத்தது..
என்ன செய்வதென்று குழப்பத்தோடு பசியால் வாடினார்கள் ஊர்மக்கள்...
பச்சைப் பசுமையாக இருந்த பண்ணையார் தோட்டம் ஒரு மாதம் காலமாக பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கியது ...
சிறுசிறு பயிர்கள் எல்லாம் காய்ந்து போனது .,
வாழைமரம் கரும்பு தோட்டம் போன்ற பயிர்கள் எல்லாம் வதங்கத் தொடங்கியது ...
இப்படி வெறிச்சோடி காணப்பட்டது பண்ணையார் தோட்டம்.
பரந்தாமன் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்தான். தனது வீட்டு மொட்டை மாடியில்..
அப்போது பரந்தாமனின் உள்மனசு சொன்னது..
இன்னும் எதற்கு நம் வருத்தப்பட வேண்டும் .
நமக்கு எதிரியாக இருந்த சங்கர் அவனது மனைவி ரேகாவை கொன்று விட்டோம் ...
அடுத்த எதிரியாக இருந்த நம் அப்பா இறந்துவிட்டார் ...
இப்போது இந்த ஊருக்கே நம்ம தான் பெரிய மனுஷன் ....
நம் குடும்பத்திலும் இனி நம்ம சொல்றதுதான் நடக்கும் இப்படி எல்லாமே நூல் இடையில் நமக்கு சாதகமாக திரும்பி விட்டது ... நம்முடைய வாழ்க்கையை சங்கர் முடித்து விடுவான் என்று நினைத்து இவ்வளவு நாளாக பயந்துகிட்டு இருந்தோம் ..
ஆனால் இப்போதுதான் நமக்கு சாதகமாக எல்லாமே மாறிவிட்டதே
இனி...சந்திரனுக்கும் தீணாவுக்கும் திருமணமே கிடையாது ....
நம்மை மீறி அவர்களுக்கு யார் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று நினைத்து சந்தோசப்பட்டான் பரந்தாமன்.
நம் அம்மாவிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டது நமக்கு பலன் கிடைத்துவிட்டது ...
அம்மா என்னைக்குமே நமக்கு துணையாக இருப்பாங்க
இனி எதற்கு நம்ம சோகத்தோடு இருக்கணும் என்று நினைத்து யோசித்தான் பரந்தாமன்.
ஆனால் இனி பம்புசெட் வேலைக்கு யாருமே வர மாட்டார்கள் ..
இப்போது இருக்கும் நிலைமைக்கு தோட்டத்திற்கு எந்த வேலைக்கும் ஊர் மக்கள் இதுவரைக்கும் வரவில்லை எல்லோரும் ரொம்ப பயந்து போய்விட்டார்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று மீண்டும் குழம்பினான் பரந்தாமன்.
இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து விட்டோம ..
இப்போது ஊர் மக்களை தோட்டத்திற்கு வேலைக்கு வர வைக்க வேண்டும் . இதுக்கும் ஒரு வழி கிடைக்காமலா போகும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அம்மா உன்னை பார்த்து ஒரு மாதம் காலம்மாகிறது விரைவில் தோட்டத்திற்கு வந்து உன் காலில் விழுந்து கும்பிடுகிறேன் ..அம்மா என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் பரந்தாமன்.
பிறகு பரந்தாமன் தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான் அப்போது சந்திரனின் வருங்கால மாமியார் ..மாமனார் ..வந்து சாந்தியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து சற்று எரிச்சலானான்.
சந்திரனும் தீனாவும் மௌவுனமாக நின்றிருந்தார்கள்.
இப்படி திடீரென்று இவ்வளவு பெரிய அதிர்ச்சியை நீங்கள் எப்படித்தான் தாங்கிக் கொண்டீர்களோ என்று சாந்திக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.. சந்திரனின் வருங்கால மாமியார்.
அவசரத்துல உங்களுக்கு தகவல் சொல்ல முடியல .மன்னிச்சுக்குங்க என்று பரந்தாமன் சொல்லிக்கொண்டே இரு கைகளால் கும்பிட்டான் நல்லவன் போல.
பரவாயில்லை தம்பி ...இனி நீதான் உங்க அப்பா பொறுப்பிலிருந்து இந்த குடும்பத்தையும் ..
இந்த ஊர் மக்களையும் கவலையில்லாமல் பார்த்துக் கொள்ளனும் என்று ஆறுதல் சொன்னார்.. சந்திரனின் வருங்கால மாமியார்..
எல்லாம் எனக்குத் தெரியும் முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு ..
பரந்தாமன் எரிச்சலாய் சந்திரனை பார்த்தான்.
மாமனார் மாமியாரை பார்த்து அடக்கமாக நின்றிருந்தான் சந்திரன் சற்று சோகத்தோடு.
நாங்கள் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காகதான் வந்தோம் நாங்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் யாரும் வருத்தப்படக்கூடாது என்றார் சந்திரனின் வருங்கால மாமனார்.
அப்போது சாந்திக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனுக்கு புதிராக இருந்தது சந்திரனின் மாமனாரின் பேச்சு.
தொடரும்.......
அப்போது பண்ணையாரை பார்த்து தாத்தா தாத்தா என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதான் .
பிறகு சாந்தி பண்ணையாரை பார்த்து .... மாமா எதுவாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்லிவிடுவீர்களே இப்படி எங்களையெலலாம் விட்டு விட்டு போகப்போறேன் என்பதை மட்டும் எனக்கு ஏன் சொல்லவில்லை மாமா என்று பண்ணையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சாந்தி
எனக்கு ஆதரவாக நீங்கள் தானே இருந்தீங்க ...
எந்த விஷயமானாலும் என்கிட்ட யோசனை கெட்பிங்களே இன்னைக்கு மட்டும் என்கிட்ட எதையுமே சொல்லாமல் இப்படி உயிரை விட்டுட்டீங்களே மாமா என்று அவள் கதறி அழுவதை பார்த்து ஊர் மக்களும் அழுதார்கள்
பிறகு சந்திரனும் தீனாவும் அப்பா எங்களை மன்னித்துவிடு அப்பா நாங்கள் எந்த தவறு செய்து இருந்தாலும் எங்களை மன்னித்துவிடு அப்பா ...
நாங்கள் என்ன சொல்லி அழுவது என்று எங்களுக்கு தெரியவில்லையே இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டியே அப்பா என்று இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கதறினார்கள் .
அப்போது பரந்தாமன் சற்று சுதாரித்துக் கொண்டான் ..
தம்பிகள் நடந்ததையெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு உண்மையை சொல்லி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு.
சந்திரனின் தோள்மீது தட்டிக்கொடுத்து கண்ணசைத்தான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விடாதீர்கள் என்பது போல தம்பிகளுக்கு சிக்னல் செய்தான் பரந்தாமன் அழுதுகொண்டே...
அடப்பாவமே சினேகிதன் மீது இவ்வளவு பாசமா .... முத்தையாவின் மேல் இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் இந்த மனுஷன் ..
அப்படியென்றால் முத்தையா அந்த அளவுக்கு நட்பாக பழகியிருக்கிறார் நமக்கு தெரியாது ...நம்மா இந்த ஊருக்கு வந்து மூணு வருஷம் தானே ஆகுது ..
அதனால இவங்களோட நட்பு நமக்குத் தெரியவில்லை என்று சாட்டையடி சாமியார் பெருமையாக நினைத்தார். பண்ணையாரையும் முத்தையாவையும்.
மகள் . மருமகன் காணவில்லையே என்று நினைத்து அழுவதா ...
பெத்த அப்பா போல நம் குடும்பத்தை பார்த்துக்கொண்ட முத்தையா இறந்துவிட்டார் என்பதற்காக அழுவதா .....
இல்லை எல்லோருக்கும் தெய்வமாக இருந்த பண்ணையார் இறந்துவிட்டார் இதை நினைத்து அழுவதா .......
என்று புரியாமல் அரைமயக்கத்தில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் லட்சுமி அம்மாள்.
பிறகு அங்கு இருந்த பெரியவர்கள் சிலபேர் பண்ணையாரின் கையிலிருக்கும் முத்தையாவின் தடிக்கொம்பை எடுக்க முயற்சி செய்தார்கள் ...
ஆனால் தடிக்கொம்பை எடுக்க முடியவில்லை ....
பண்ணையார் உறுதியாக இரண்டு கைகளால் தடிக்கொம்பை கட்டியணைத்தபடி இறந்துவிட்டார்
தடிக்கொம்பை எடுக்கமுடியாமல் என்ன செய்வது என்று முழித்தார்கள் ..
அப்போது சாந்தி சொன்னாள் ....
அவர் கையில் இருக்கும் தடிக்கொம்பு எடுக்கவேண்டாம் அவர் நண்பன் மீது வைத்திருந்த பாசம் எனக்கு தெரியும் ..
அதனால் அந்த கொம்பை எடுக்க வேண்டாம் என்றாள் சாந்தி ...
பிறகு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அழுதுகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் சொன்னார் .... பண்ணையாரை உங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போறீங்களா என்றார்...
வேண்டாம் இப்போது சூரியன் மறைய போகுது ....
நேரமில்லை அவருக்கு அவருடைய நண்பரும் இந்த ஊர்தான் முக்கியமாக கருதினார் ...
அதனால் அவர் நண்பருடைய வீட்டில்லிருந்தே அவருக்கு நாங்கள் இறுதிச்சடங்கு செய்யப்போகிறோம் என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன் ..
பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முத்தையாவுக்கு தனியாக படை அமைத்து....
பிறகு பண்ணையாருக்கும் தனியாக படை அமைத்தார்கள் ....
அப்போது பரந்தாமன் ஊர் பெரியவர்களிடம் சொன்னான்....
என் அப்பாவுக்கு என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் ..
அதேபோல முத்தையாவும் என் அப்பா போலதான் நீங்கள் விருப்பப்பட்டால் முத்தையாவுக்கும் என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்...
அப்போது அதில் ஒரு பெரியவர் சொன்னார் ....
ஐயா முத்தையாவுக்கு இருந்தது ஒரே ஒரு மகன் சங்கர்தான்..
பாவம் அவன் இப்போது இல்லை அவருக்கென்று சொந்தம் இப்போது இருப்பது ..
அவர் சம்பந்தி லட்சுமி அம்மாள் தான் .அவரை கேட்டு நாங்கள் முடிவு சொல்கிறோம் என்றார்கள் பெரியவர்கள் ...
பிறகு லட்சுமி அம்மாளும் பண்ணையார் மகன்களே கொல்லி வைக்கட்டும் என்று அழுதபடி சொன்னார் ...
பிறகு ஊர் பெரியவர்கள் இறுதிச் சடங்கை செய்ய தயாரானார்கள்.
பண்ணையாரையும் ...
முத்தையாவையும் சுடுகாட்டுக்கு பாடையில் எடுத்துச் சென்றார்கள் ஊர்மக்கள்.
ஊர்மக்கள் முத்தையாவயும் பண்ணயாரையும் நல்லபடியாக அடக்கம் செய்து ....
தீனா பண்ணையாருக்கும் முத்தையாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு சோகத்தோடு சுடுகாட்டில் இருந்து திரும்பினார்கள்
சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பியவர்கள். சுடுகாட்டை திரும்பி பார்க்கக் கூடாது என்பது ஊர் வழக்கம் ..
ஆனால் எல்லோரும் ..
முத்தையாவையும்
பண்ணையாரையும் நினைத்து மனம் நொந்து போய் ....
இப்படி அவர்களை எரித்துவிட்டு வருகிறோமே என்று நினைத்து வேதனையில் வரும்போது அப்போது எல்லோரும் மனதில் கடைசியாக ஒருமுறை
பண்ணையாரையும் ..
முத்தையாவையும் திரும்பிப் பார்க்கலாமா என்று அவர்கள் மனம் சொல்லியது ..
அப்போது கூட்டத்தில் நிறையபேர் சுடுகாட்டை திரும்பிப் பார்த்தார்கள்
பண்ணையாரும் முத்தையாவும் மளமளவென எரிந்து கொண்டிருந்தார்கள் ...
மேலும் அழுது கத்தினார்கள் இதைப் பார்த்த பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் ஊர்மக்களின் சந்தோசத்தை கெடுத்து விட்டோமே என்று நினைத்து கவலைப் பட்டார்கள்
பிறகு எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டார்கள் ..... பாவம் லட்சுமி அம்மாள் அனாதை போல முத்தையாவின் வீட்டு வாசலில் படுத்து கொண்டு இருந்தாள். பித்துப் பிடித்தவள் போல்..
நாட்கள் நகர்ந்தது ......
ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.
சோகத்திலிருந்து ஊர் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்தார்கள்.
பண்ணையாரும் முத்தையாவும் இறந்து மூன்று வாரங்கள் ஆனது..
பண்ணையார் வீட்டில் ...
சாந்தி கவலையோடு இருந்தாள் பரந்தாமன் சந்திரன் தீனா மூவருமே பேசிக்கொள்ளவில்லை சோகத்தோடு காணப்பட்டார்கள்..
ஊர் மக்களும் ..பண்ணையார் முத்தையா இறந்ததில் இருந்து பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை .. சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது ஊர்மக்கள் எல்லோரும் பட்டினியால் வாடினார்கள்...
பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல ஊர் மக்களுக்கு விருப்பமில்லை ...
ஊரை விட்டு போகவும் மனமில்லை கடைசியாக சொன்ன முத்தையாவின் வார்த்தை அவர்களை தடுத்தது..
என்ன செய்வதென்று குழப்பத்தோடு பசியால் வாடினார்கள் ஊர்மக்கள்...
பச்சைப் பசுமையாக இருந்த பண்ணையார் தோட்டம் ஒரு மாதம் காலமாக பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கியது ...
சிறுசிறு பயிர்கள் எல்லாம் காய்ந்து போனது .,
வாழைமரம் கரும்பு தோட்டம் போன்ற பயிர்கள் எல்லாம் வதங்கத் தொடங்கியது ...
இப்படி வெறிச்சோடி காணப்பட்டது பண்ணையார் தோட்டம்.
பரந்தாமன் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்தான். தனது வீட்டு மொட்டை மாடியில்..
அப்போது பரந்தாமனின் உள்மனசு சொன்னது..
இன்னும் எதற்கு நம் வருத்தப்பட வேண்டும் .
நமக்கு எதிரியாக இருந்த சங்கர் அவனது மனைவி ரேகாவை கொன்று விட்டோம் ...
அடுத்த எதிரியாக இருந்த நம் அப்பா இறந்துவிட்டார் ...
இப்போது இந்த ஊருக்கே நம்ம தான் பெரிய மனுஷன் ....
நம் குடும்பத்திலும் இனி நம்ம சொல்றதுதான் நடக்கும் இப்படி எல்லாமே நூல் இடையில் நமக்கு சாதகமாக திரும்பி விட்டது ... நம்முடைய வாழ்க்கையை சங்கர் முடித்து விடுவான் என்று நினைத்து இவ்வளவு நாளாக பயந்துகிட்டு இருந்தோம் ..
ஆனால் இப்போதுதான் நமக்கு சாதகமாக எல்லாமே மாறிவிட்டதே
இனி...சந்திரனுக்கும் தீணாவுக்கும் திருமணமே கிடையாது ....
நம்மை மீறி அவர்களுக்கு யார் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று நினைத்து சந்தோசப்பட்டான் பரந்தாமன்.
நம் அம்மாவிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டது நமக்கு பலன் கிடைத்துவிட்டது ...
அம்மா என்னைக்குமே நமக்கு துணையாக இருப்பாங்க
இனி எதற்கு நம்ம சோகத்தோடு இருக்கணும் என்று நினைத்து யோசித்தான் பரந்தாமன்.
ஆனால் இனி பம்புசெட் வேலைக்கு யாருமே வர மாட்டார்கள் ..
இப்போது இருக்கும் நிலைமைக்கு தோட்டத்திற்கு எந்த வேலைக்கும் ஊர் மக்கள் இதுவரைக்கும் வரவில்லை எல்லோரும் ரொம்ப பயந்து போய்விட்டார்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று மீண்டும் குழம்பினான் பரந்தாமன்.
இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து விட்டோம ..
இப்போது ஊர் மக்களை தோட்டத்திற்கு வேலைக்கு வர வைக்க வேண்டும் . இதுக்கும் ஒரு வழி கிடைக்காமலா போகும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அம்மா உன்னை பார்த்து ஒரு மாதம் காலம்மாகிறது விரைவில் தோட்டத்திற்கு வந்து உன் காலில் விழுந்து கும்பிடுகிறேன் ..அம்மா என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் பரந்தாமன்.
பிறகு பரந்தாமன் தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான் அப்போது சந்திரனின் வருங்கால மாமியார் ..மாமனார் ..வந்து சாந்தியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து சற்று எரிச்சலானான்.
சந்திரனும் தீனாவும் மௌவுனமாக நின்றிருந்தார்கள்.
இப்படி திடீரென்று இவ்வளவு பெரிய அதிர்ச்சியை நீங்கள் எப்படித்தான் தாங்கிக் கொண்டீர்களோ என்று சாந்திக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.. சந்திரனின் வருங்கால மாமியார்.
அவசரத்துல உங்களுக்கு தகவல் சொல்ல முடியல .மன்னிச்சுக்குங்க என்று பரந்தாமன் சொல்லிக்கொண்டே இரு கைகளால் கும்பிட்டான் நல்லவன் போல.
பரவாயில்லை தம்பி ...இனி நீதான் உங்க அப்பா பொறுப்பிலிருந்து இந்த குடும்பத்தையும் ..
இந்த ஊர் மக்களையும் கவலையில்லாமல் பார்த்துக் கொள்ளனும் என்று ஆறுதல் சொன்னார்.. சந்திரனின் வருங்கால மாமியார்..
எல்லாம் எனக்குத் தெரியும் முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு ..
பரந்தாமன் எரிச்சலாய் சந்திரனை பார்த்தான்.
மாமனார் மாமியாரை பார்த்து அடக்கமாக நின்றிருந்தான் சந்திரன் சற்று சோகத்தோடு.
நாங்கள் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காகதான் வந்தோம் நாங்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் யாரும் வருத்தப்படக்கூடாது என்றார் சந்திரனின் வருங்கால மாமனார்.
அப்போது சாந்திக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனுக்கு புதிராக இருந்தது சந்திரனின் மாமனாரின் பேச்சு.
தொடரும்.......