Karthikeyan Jayaraman
Saha Writer
- Messages
- 111
- Reaction score
- 52
- Points
- 28
ரத்தமும் ..சேரும். வேட்டி சட்டையிலும் கரையாக பதிந்து இருப்பதை பார்த்து சந்திரனும் பரந்தாமனும் பயந்து போனார்கள்
தம்பிக்கு எப்படி இதுபோல நிலைமை ஆனது என்று குழம்பினார்கள் ..
அப்போது சாந்தி... தம்பி என்ன ஆச்சு என்று தீனாவின் கையை பிடித்து குலுக்கியபடி அழுதாள்
உடனே பரந்தாமன் சந்திரனும் தீனாவை தூக்கிக்கொண்டு உள்ளே பாத்ரூமில் உட்கார வைத்து ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து அவன் தலையில் ஊற்றி உடம்பெல்லாம் சேராக இருப்பதை இருவரும் கழுவினார்கள்.. அப்போது அவன் லேசாக கண்விழித்து பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்து அழுதான் ..அண்ணே அண்ணே என்று சொல்லிக்கொண்டே .
தீனாவின் சட்டையை கழட்டி பார்த்த போது உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள் . அப்போது சந்திரனுக்கு மனம் கலங்கியது . தம்பி உயிர்ப்பிப்பான என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அவன் பாத்ரூமில் அழுவதை கேட்டு வெளியே நின்றிருந்த சாந்திக்கு மேலும் பயம் அதிகமானது ..
தம்பி தம்பி என்று புலம்பிக்கொண்டே அழுதாள் அருகில் அவளுடைய மகனும் அப்பா சித்தப்பா என்று சொல்லிக்கொண்டே அவன் அம்மாவின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தான்
மறுபடியும் தீனா மயங்கி விட்டான்
பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கை கால்கள் நடுங்கியது . அப்போது அவன் மேலும் ஒரு பக்கெட் தண்ணி எடுத்து தீணாவின் தலையில் ஊற்றி உடலை சுத்தம் செய்தான் பிறகு வேட்டி சட்டையை கழட்டி போட்டுவிட்டு அவனை நன்றாக சுத்தம் செய்து . வேறு உடை மாற்றி அவனது அறையில் களத்தினார்கள்
அப்போது தீனா கண்விழித்து பார்த்தபோது அவனை சுற்றி சாந்தி பரந்தாமன் சந்திரன் மற்றும் பரந்தாமனின் மகன் . அழுதபடி நின்று கொண்டிருந்தார்கள்.
சாந்தியை பார்த்தவுடன் தீனா சற்று சுதாரித்துக் கொண்டான் அண்ணியிடம் நடந்ததை சொல்லக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தனது உடல் வலியை தாங்கிக்கொண்டு
வலி இல்லாதவன் போல சற்று பொறுமையாக சொன்னான் ....
அண்ணி அழுவாதிங்க. குழந்தையும் அழுகிறான் பாருங்க என்று பொறுமையாக சொன்னான்
சாந்தி கண்களை துடைத்துக்கொண்டு கேடாள்..
என்ன ஆச்சு தம்பி ஏன் இப்படி உனக்கு அடிபட்டு இருக்கு உடம்பெல்லாம் சேறாக இருந்ததே என்னாச்சு தம்பி என்று அழுத்தமான குரலில் பரிதாபமாக கேட்டாள் சாந்தி.
நான் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல அண்ணி என்னால நம்ம குடும்பத்துக்கு பெரிய நஷ்டம் வந்துடுச்சு அண்ணி என்று சொல்லியபடி தீனா லேசாக கண் கலங்கினான்.
பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
நம் குடும்பத்திற்கு பெரிய நஷ்டம் வந்து விட்டது என்று தம்பி சொல்கிறானே அப்படி என்றால் என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் பரந்தாமன் தீனாவின் தலையை தடவி விட்டபடி பொறுமையாக கேட்டான்.
என்னப்பா சொல்ற... நீ எப்படி நம்ம குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்த முடியும் . எனக்கு புரியலடா என்று சோகத்தோடு கேட்டான் பரந்தாமன்.
அண்ணே ...எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க அண்ணா ..
நான் ராத்திரி பம்பு செட்டுக்கு போயிட்டு தண்ணி மோட்டாரை ஆன் செய்தேன் ..
அது தவறுதலாக வேறு ஒரு பட்டனை ஆன் செய்து விட்டேன் போல் தெரிகிறது .. அப்போது எலக்ட்ரிக்கல் போர்டு பற்றிக்கொண்டது வயர்கள் எரிந்து
உடனே பம்புசெட்டு ஆரை தீப்பிடித்து கொண்டது. அதில் மெல்ல மெல்ல கரும்புத் தோட்டம் பற்றிக்கொண்டது தீயில் . பிறகு ஒவ்வொரு தோட்டமாக பற்றி எரிந்து விட்டது அண்ணே .நம்ம தோட்டம் எல்லாம் மொத்தம் வீணாக பொச்சி அண்ணே.
அங்கிருந்து தீயில் மாட்டிக்கொள்ளாமல் விழுந்து எழுந்து ஓடி வந்துவிட்டேன் அண்ணே . என்று கதறி அழுதான் தீனா .
உடனே சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் .
என் குடும்பத்திற்கு நல்லதே நடக்காதா . நாங்கள் என்ன பாவம் செஞ்சோம் இப்படி எங்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறாய் கடவுளே . என்று அழுதால் சாந்தி
உடனே சந்திரன் சாந்தியை சமாதானம் செய்து
அந்த அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து விட்டான் .
அண்ணி அவனே நொந்து போய் இருக்கான் . அவன் எதிரே இப்படி நீங்கள் அழுதால் அவன் மனம் மேலும் வருத்தப்படாத என்று சொன்னான் சந்திரன் .
என்னால தாங்க முடியலப்பா நம்ம குடும்பத்துக்கு இப்படியெல்லாம் சோதனை வரும் என்று .
யாருக்கும் நம்ம எந்தப் பாவமும் செய்யலையே . கடவுள் நமக்கு மட்டும் இப்படி அடுக்கடுக்காய் சோதனையை கொடுக்கிறாரே என்று புலம்பினாள் சாந்தி..
நாங்கள் செய்த பாவத்திற்கு கடவுள் இப்போதுதான் தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் .
ஒரு பாவமும் செய்யாமல் இருக்கும் உங்களுக்கும் கடவுள் சேர்த்து தண்டிக்கிறார்.. என்று மனதில் நினைத்துக்கொண்டான் சந்திரன்
பிறகு என்னதான் நடந்தது என்று தம்பியிடம் கேட்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரன் தீனாவின் அறைக்குச் சென்றான் .
சந்திரனும் பரந்தாமனும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.
மெதுவாக தீனாவின் அருகில் சென்று வலது புறம் பரந்தாமனும் இடதுபுறம் சந்திரனும் அமர்ந்துகொண்டு தீனாவிடம் மெதுவாக கேட்டார்கள்.
தம்பி நேற்று இரவு என்னதான் நடந்தது உண்மையை சொல் என்று பதட்டத்தோடு கேட்டான் பரந்தாமன்.
அப்போது தீனா படுத்தபடியே பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் .
அண்ணே இனி நம்ம நிம்மதியா வாழ முடியாது அண்ணே என்று கதறிக் கதறி அழுதான் தீனா.
தீனாவின் பேச்சு சந்திரனுக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
என்னப்பா சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல என்றான் பரந்தாமன் .
அண்ணே நான் பம்புசெட்டுக்கு சென்றதும் அங்கு சங்கரும் ரேகாவும் பேய் யாக வந்து என்னை அடிச்சாங்க .
நான் அங்கிருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன் . அப்போ பம்புசெட்டு
தீ பிடித்து நம்ம தோட்டம் எல்லாம் எரிஞ்சு போச்சு அண்ணா.
இந்த சங்கரும் ரேகாவும் இனிமே நம்மை வாழ விட மாட்டாங்க அண்ணா
சங்கர் சொன்னான் ...உனக்கு எவ்வளவு தைரியம் இங்க வரதுக்கு இனிமேல் உங்களை வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொன்னான் சங்கர் .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பயத்துல அங்கிருந்து ஓடி வந்துட்டேன்
அப்போது நம்ம தோட்டத்துல
பச்சை வாழைத்தோப்பு . நல்லா மளமளவென எரிஞ்சதை நான் பார்த்தேன் அண்ணா . இனிமேல் அந்த சங்கரும் ரேகாவும் நம்மை வாழ விடமாட்டாங்க அண்ணே என்று அழுதுகொண்டே தீனா சொன்னான்.
பரந்தாமனும் சந்திரனும் அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள் சங்கரும் ரேகாவும் பேயாக வருகிறார்களா என்று நினைத்து
அப்போது பரந்தாமன் தீனாவிடம் தயக்கத்தோடு கேட்டான் .
தம்பி பம்பு செட்டுல நம்ம அம்மா படம் இருக்கும் அறையும் எரிஞ்சு போச்சா என்று நடுக்கத்தோடு கேட்டான் .
அம்மா படம் இருக்கும் அரை எரியவில்லை அண்ணா .
பம்பு செட்டு எலக்ட்ரிக்கல் போர்டு இருக்கும் அரை மட்டும் தான் எரிந்தது என்றான் தீனா .
அப்போது பரந்தாமனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது .
நாம் சேர்த்து வைத்த பணத்தை நம்ம அம்மா பாதுகாப்பாக . காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து சற்று ஆறுதல் அடைந்தான் பரந்தாமன்
இருந்தாலும் எல்லாம் தோட்டமே எரிந்துவிட்டதே என்று நினைத்து கவலையில் . கட்டில் மேல் இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டு தலைமிது இரண்டு கைகளை வைத்துக்கொண்டு . சோகத்தில் சாய்ந்துவிட்டான் பரந்தாமன் .
நம்மை இனி கடவுள் சும்மா விடமாட்டான் . சங்கரின் ரூபத்தில் நமக்கு சரியான தண்டனை கிடைக்கப் போகுது என்று நினைத்துக்கொண்டான் சந்திரன்.
அப்போது சாந்தி ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் .
உடனே சந்திரன் கட்டில் மீது இருந்து எழுந்து நின்று கொண்டான் .
சாந்தி சுடுதண்ணி ஒத்தரம் கொடுப்பதற்காக தீனாவை திரும்பி படுக்கச்சொன்னாள் .
தீனாவும் திரும்பி படுத்துக் கொண்டான் .
அப்போது அவன் முதுகில் பட்டை பட்டையாக காயங்கள் இருந்ததை பார்த்து மேலும் சாந்திக்கு மனம் நொந்து போனது .
பிறகு தீனாவுக்கு ஒத்தரம் கொடுத்தால் சாந்தி .
அப்போது மெதுவாக கேட்டாள்...தம்பி உண்மையை சொல் உனக்கு என்ன நடந்தது என்று .நீயும் என் இடம் மறைக்காதே என்றாள் சாந்தி.
பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது சாந்தியின் கேள்வி .
என்ன தம்பி... நான் கேட்கிறது உனக்கு புரியலையா உண்மையை சொல் நேற்று இரவு என்ன நடந்தது என்று மறுபடியும் கேட்டால் சாந்தி.
உடனே பரந்தாமன் குறுக்கிட்டு சொன்னான் ....அவனை தொந்தரவு பண்ணாதே அத்தான் புரியும்படி சொல்லிட்டனே தவறுதலா வேறொரு ஸ்விட்ச் ஆன் செய்ததால் பம்ப் செட்டும் தோட்டமும் தீப்பிடித்து எரிந்து விட்டது என்று .
மேலும் மேலும் அவனை தொந்தரவு செய்யாதே என்று பரந்தாமன் சொன்னான்.
இதையெல்லாம் நம்புவதற்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இவரு ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்து விட்டாராம் . அதனால பம்புசெட்டும் தோட்டமும் எரிஞ்சு போச்சாம் . சரி இதையெல்லாம் கூட நம்பலாம் இவரோட உடம்பை பாருங்க . பட்ட பட்டையாக வீங்கி இருக்கு இது எப்படி ஆச்சு . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நீங்க மூணு பேருமே எதையோ மறைக்கிறீங்க. நம்ம தோட்டத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வரல உங்க அப்பா பாத்துக்கிட்டு இருக்கும்போது . என்னைக்கி நீங்க மூணு பேரும் தோட்டத்தை கவனிச்சீங்களோ அன்னையிலிருந்து நம்ம தோட்டத்துல புது புது பிரச்சனையா வந்துகிட்டு இருக்கு .
ஆனா எந்த பிரச்சனையும் இதுவரைக்கும் வெளிய வரல யாருக்குமே தெரியல .
ஆனால் உங்க மூணு பேருக்கும் இந்த பிரச்சனையின் ரகசியம் தெரியும் . அதை நீங்க மறைக்கிறீங்க நம்ம தோட்டத்துல ஏதோ ஒரு மர்மம் நடக்குது அதை நீங்க மறைக்கிறீங்க இப்ப நடந்து இருக்கிற இந்த விஷயம் எனக்கு ஆணித்தரமா புரியுது அதனால தான் கேட்கிறேன் மறைக்காம நேத்து இரவு என்ன நடந்ததுன்னு சொல்லிடு என்று சாந்தி மனதுக்குள் பட்டதை பளிச்சென்று தைரியமாக கேட்டாள்.
என்ன சாந்தி... யாரு கிட்ட என்ன கேட்கணும்னு தெரிஞ்சுதான் பேசுறியா என்று பரந்தாமன் சற்று எரிச்சலாக கேட்டான்.
ஆமாங்க இனிமேலும் சும்மா இருந்தா நம்ம குடும்பத்துல நிம்மதி இருக்காது . பிரச்சனை என்னன்னு தெரிஞ்சாதன் அதுக்கு ஏத்தமதிரி முடிவு பண்ணனும் .
இல்லன்னா இப்படியே அழுதுகிட்டு தான் இருக்கணும் என்று துணிச்சலாய் சொன்னால் சாந்தி.
கட்டிலுக்கு கீழே உட்கார்ந்திருந்த பரந்தாமன் உடனே ஆவேசமாக எழுந்து நின்றான்.
வாய மூடு எல்லாம் எனக்குத் தெரியும் ...நீ ஒன்னும் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாது . கொஞ்சம் பொறுமையாக இருந்தால் வாய்க்கு வந்தபடி பேசுவியா எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம் அவன் தான் சொல்றானே தவறுதலாய் ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்துவிட்டேன் என்று . அதோடு கம்முனு இரு எல்லாம் தெரிந்தது போல சத்தம்பொட்டு பேசுற இதுக்கு மேல ஏதாவது கேட்டா அதுக்கப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபத்தோடு ஆவேசமாக சாந்தியை முறைத்தபடி சொன்னான் பரந்தாமன் .
அப்போது சாந்தி வாயடைத்துப் போனாள் ... இவ்வளவு நாளா இதுபோல முகத்தை இதுவரைக்கும் இவரிடம் பார்த்ததில்லையே இவ்வளவு கோபக்கார மனிதனாய் இருக்கிறாரே நம் கணவர் .
என்று நினைத்து அதிர்ச்சியாக நின்றால் . ஒரு பக்கம் வேதனையால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அப்போது அவளால் அங்கு நிற்க முடியவில்லை உடனே அழுதுகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் பூஜை அறைக்கு.
இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தோம் .
ஆனால் இப்படி இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொண்டோமே .
நம் மனைவி நம்மை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு பிரச்சனை வளர்ந்துவிட்டதே என்று நினைத்து சோகத்தில் பரந்தாமன் தலை குனிந்து கொண்டான்.
அண்ணி சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் இனி ரகசியத்தை நீண்ட நாள் மறைக்க முடியாது என்று நினைத்து சந்திரனும் தினாவும் என்ன சொல்வது . இனி எப்படி அண்ணி முகத்தை பார்ப்பது என்று நினைத்து சோகத்தில் மூவரும் அமைதியாக இருந்தார்கள் .
அப்போது வீட்டு வாசலில் ஊரே கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டு அழுதார்கள் . உடனே சந்திரனும் பரந்தாமனும் மெதுவாக வெளியே வந்து பார்த்தால் ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் கண் கலங்கி நின்றார்கள் .
அப்போது ஒரு பெரியவர் சொன்னார் ...ஐயா நாளையிலிருந்து முழு நாள் வேலை செய்யுங்கள் என்று சொன்னீங்களே .
இப்படி எல்லாம் தோட்டமே தீயில் எரிந்து வீணாக போச்சே இப்படிப்பட்ட கஷ்டத்தை நீங்கள் எப்படி ஐயா தாங்க கொண்டிங்க எங்களாலே தாங்க முடியலையே என்று ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.
யாரும் வருத்தப்படாதீங்க ஏற்கனவே நீங்க உங்க
முத்தையாவையும் .
பண்ணையாரையும் இழந்துவிட்டு வாடிக்கொண்டு இருக்கீங்க .
இந்த நேரத்துல நம்ம தோட்டமும் எரிஞ்சு போச்சு மேலும் உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும் .
இனி பிழப்பதற்கு என்ன செய்வது என்று நினைத்து கஷ்டப்படாதிர்கள் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு நான் வேலை கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் . என் உயிர் இருக்கும் வரை விவசாயத்தை விட்டு நான் விலக மாட்டேன் . உங்களுக்காக நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .
என் தம்பி தவறுதலாக தண்ணீர் மோட்டாரை ஆன் செய்வதற்கு பதிலாக வேறொரு பட்டனை ஆன் செய்ததில் எலக்ட்ரிக்கல் போர்டு தீப்பிடித்து எரிந்து இப்படி எல்லாம் தோட்டமும் வீணாகப் போனது. கொஞ்சநாள் யாரும் தோட்டத்துக்கு வரவேண்டாம் .
நிலைமை சரியானதும் நானே உங்களை வேலைக்கு வர வைக்கிறேன் அதுவரைக்கும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தைரியமாக செல்லுங்கள் என்று ஊர் மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன்.
பிறகு ஊர் மக்கள் கலைந்து சென்றார்கள் ..பரந்தாமனும் சந்திரனும் சோகத்தோடு வீட்டுக்கு உள்ளே சென்றார்கள்.
அப்போது பரந்தாமனின் மகன் சோகத்தோடு வந்து அப்பா பசிக்குது என்று சொன்னான்.
அப்போதுதான் பரந்தாமனுக்கு நினைவுக்கு வந்தது காலையில் இருந்து யாரும் சாப்பிடவில்லை என்று.
தொடரும்......
தம்பிக்கு எப்படி இதுபோல நிலைமை ஆனது என்று குழம்பினார்கள் ..
அப்போது சாந்தி... தம்பி என்ன ஆச்சு என்று தீனாவின் கையை பிடித்து குலுக்கியபடி அழுதாள்
உடனே பரந்தாமன் சந்திரனும் தீனாவை தூக்கிக்கொண்டு உள்ளே பாத்ரூமில் உட்கார வைத்து ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து அவன் தலையில் ஊற்றி உடம்பெல்லாம் சேராக இருப்பதை இருவரும் கழுவினார்கள்.. அப்போது அவன் லேசாக கண்விழித்து பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்து அழுதான் ..அண்ணே அண்ணே என்று சொல்லிக்கொண்டே .
தீனாவின் சட்டையை கழட்டி பார்த்த போது உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள் . அப்போது சந்திரனுக்கு மனம் கலங்கியது . தம்பி உயிர்ப்பிப்பான என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அவன் பாத்ரூமில் அழுவதை கேட்டு வெளியே நின்றிருந்த சாந்திக்கு மேலும் பயம் அதிகமானது ..
தம்பி தம்பி என்று புலம்பிக்கொண்டே அழுதாள் அருகில் அவளுடைய மகனும் அப்பா சித்தப்பா என்று சொல்லிக்கொண்டே அவன் அம்மாவின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தான்
மறுபடியும் தீனா மயங்கி விட்டான்
பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கை கால்கள் நடுங்கியது . அப்போது அவன் மேலும் ஒரு பக்கெட் தண்ணி எடுத்து தீணாவின் தலையில் ஊற்றி உடலை சுத்தம் செய்தான் பிறகு வேட்டி சட்டையை கழட்டி போட்டுவிட்டு அவனை நன்றாக சுத்தம் செய்து . வேறு உடை மாற்றி அவனது அறையில் களத்தினார்கள்
அப்போது தீனா கண்விழித்து பார்த்தபோது அவனை சுற்றி சாந்தி பரந்தாமன் சந்திரன் மற்றும் பரந்தாமனின் மகன் . அழுதபடி நின்று கொண்டிருந்தார்கள்.
சாந்தியை பார்த்தவுடன் தீனா சற்று சுதாரித்துக் கொண்டான் அண்ணியிடம் நடந்ததை சொல்லக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தனது உடல் வலியை தாங்கிக்கொண்டு
வலி இல்லாதவன் போல சற்று பொறுமையாக சொன்னான் ....
அண்ணி அழுவாதிங்க. குழந்தையும் அழுகிறான் பாருங்க என்று பொறுமையாக சொன்னான்
சாந்தி கண்களை துடைத்துக்கொண்டு கேடாள்..
என்ன ஆச்சு தம்பி ஏன் இப்படி உனக்கு அடிபட்டு இருக்கு உடம்பெல்லாம் சேறாக இருந்ததே என்னாச்சு தம்பி என்று அழுத்தமான குரலில் பரிதாபமாக கேட்டாள் சாந்தி.
நான் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல அண்ணி என்னால நம்ம குடும்பத்துக்கு பெரிய நஷ்டம் வந்துடுச்சு அண்ணி என்று சொல்லியபடி தீனா லேசாக கண் கலங்கினான்.
பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
நம் குடும்பத்திற்கு பெரிய நஷ்டம் வந்து விட்டது என்று தம்பி சொல்கிறானே அப்படி என்றால் என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் பரந்தாமன் தீனாவின் தலையை தடவி விட்டபடி பொறுமையாக கேட்டான்.
என்னப்பா சொல்ற... நீ எப்படி நம்ம குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்த முடியும் . எனக்கு புரியலடா என்று சோகத்தோடு கேட்டான் பரந்தாமன்.
அண்ணே ...எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க அண்ணா ..
நான் ராத்திரி பம்பு செட்டுக்கு போயிட்டு தண்ணி மோட்டாரை ஆன் செய்தேன் ..
அது தவறுதலாக வேறு ஒரு பட்டனை ஆன் செய்து விட்டேன் போல் தெரிகிறது .. அப்போது எலக்ட்ரிக்கல் போர்டு பற்றிக்கொண்டது வயர்கள் எரிந்து
உடனே பம்புசெட்டு ஆரை தீப்பிடித்து கொண்டது. அதில் மெல்ல மெல்ல கரும்புத் தோட்டம் பற்றிக்கொண்டது தீயில் . பிறகு ஒவ்வொரு தோட்டமாக பற்றி எரிந்து விட்டது அண்ணே .நம்ம தோட்டம் எல்லாம் மொத்தம் வீணாக பொச்சி அண்ணே.
அங்கிருந்து தீயில் மாட்டிக்கொள்ளாமல் விழுந்து எழுந்து ஓடி வந்துவிட்டேன் அண்ணே . என்று கதறி அழுதான் தீனா .
உடனே சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் .
என் குடும்பத்திற்கு நல்லதே நடக்காதா . நாங்கள் என்ன பாவம் செஞ்சோம் இப்படி எங்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறாய் கடவுளே . என்று அழுதால் சாந்தி
உடனே சந்திரன் சாந்தியை சமாதானம் செய்து
அந்த அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து விட்டான் .
அண்ணி அவனே நொந்து போய் இருக்கான் . அவன் எதிரே இப்படி நீங்கள் அழுதால் அவன் மனம் மேலும் வருத்தப்படாத என்று சொன்னான் சந்திரன் .
என்னால தாங்க முடியலப்பா நம்ம குடும்பத்துக்கு இப்படியெல்லாம் சோதனை வரும் என்று .
யாருக்கும் நம்ம எந்தப் பாவமும் செய்யலையே . கடவுள் நமக்கு மட்டும் இப்படி அடுக்கடுக்காய் சோதனையை கொடுக்கிறாரே என்று புலம்பினாள் சாந்தி..
நாங்கள் செய்த பாவத்திற்கு கடவுள் இப்போதுதான் தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் .
ஒரு பாவமும் செய்யாமல் இருக்கும் உங்களுக்கும் கடவுள் சேர்த்து தண்டிக்கிறார்.. என்று மனதில் நினைத்துக்கொண்டான் சந்திரன்
பிறகு என்னதான் நடந்தது என்று தம்பியிடம் கேட்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரன் தீனாவின் அறைக்குச் சென்றான் .
சந்திரனும் பரந்தாமனும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.
மெதுவாக தீனாவின் அருகில் சென்று வலது புறம் பரந்தாமனும் இடதுபுறம் சந்திரனும் அமர்ந்துகொண்டு தீனாவிடம் மெதுவாக கேட்டார்கள்.
தம்பி நேற்று இரவு என்னதான் நடந்தது உண்மையை சொல் என்று பதட்டத்தோடு கேட்டான் பரந்தாமன்.
அப்போது தீனா படுத்தபடியே பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் .
அண்ணே இனி நம்ம நிம்மதியா வாழ முடியாது அண்ணே என்று கதறிக் கதறி அழுதான் தீனா.
தீனாவின் பேச்சு சந்திரனுக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
என்னப்பா சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல என்றான் பரந்தாமன் .
அண்ணே நான் பம்புசெட்டுக்கு சென்றதும் அங்கு சங்கரும் ரேகாவும் பேய் யாக வந்து என்னை அடிச்சாங்க .
நான் அங்கிருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன் . அப்போ பம்புசெட்டு
தீ பிடித்து நம்ம தோட்டம் எல்லாம் எரிஞ்சு போச்சு அண்ணா.
இந்த சங்கரும் ரேகாவும் இனிமே நம்மை வாழ விட மாட்டாங்க அண்ணா
சங்கர் சொன்னான் ...உனக்கு எவ்வளவு தைரியம் இங்க வரதுக்கு இனிமேல் உங்களை வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொன்னான் சங்கர் .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பயத்துல அங்கிருந்து ஓடி வந்துட்டேன்
அப்போது நம்ம தோட்டத்துல
பச்சை வாழைத்தோப்பு . நல்லா மளமளவென எரிஞ்சதை நான் பார்த்தேன் அண்ணா . இனிமேல் அந்த சங்கரும் ரேகாவும் நம்மை வாழ விடமாட்டாங்க அண்ணே என்று அழுதுகொண்டே தீனா சொன்னான்.
பரந்தாமனும் சந்திரனும் அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள் சங்கரும் ரேகாவும் பேயாக வருகிறார்களா என்று நினைத்து
அப்போது பரந்தாமன் தீனாவிடம் தயக்கத்தோடு கேட்டான் .
தம்பி பம்பு செட்டுல நம்ம அம்மா படம் இருக்கும் அறையும் எரிஞ்சு போச்சா என்று நடுக்கத்தோடு கேட்டான் .
அம்மா படம் இருக்கும் அரை எரியவில்லை அண்ணா .
பம்பு செட்டு எலக்ட்ரிக்கல் போர்டு இருக்கும் அரை மட்டும் தான் எரிந்தது என்றான் தீனா .
அப்போது பரந்தாமனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது .
நாம் சேர்த்து வைத்த பணத்தை நம்ம அம்மா பாதுகாப்பாக . காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து சற்று ஆறுதல் அடைந்தான் பரந்தாமன்
இருந்தாலும் எல்லாம் தோட்டமே எரிந்துவிட்டதே என்று நினைத்து கவலையில் . கட்டில் மேல் இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டு தலைமிது இரண்டு கைகளை வைத்துக்கொண்டு . சோகத்தில் சாய்ந்துவிட்டான் பரந்தாமன் .
நம்மை இனி கடவுள் சும்மா விடமாட்டான் . சங்கரின் ரூபத்தில் நமக்கு சரியான தண்டனை கிடைக்கப் போகுது என்று நினைத்துக்கொண்டான் சந்திரன்.
அப்போது சாந்தி ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் .
உடனே சந்திரன் கட்டில் மீது இருந்து எழுந்து நின்று கொண்டான் .
சாந்தி சுடுதண்ணி ஒத்தரம் கொடுப்பதற்காக தீனாவை திரும்பி படுக்கச்சொன்னாள் .
தீனாவும் திரும்பி படுத்துக் கொண்டான் .
அப்போது அவன் முதுகில் பட்டை பட்டையாக காயங்கள் இருந்ததை பார்த்து மேலும் சாந்திக்கு மனம் நொந்து போனது .
பிறகு தீனாவுக்கு ஒத்தரம் கொடுத்தால் சாந்தி .
அப்போது மெதுவாக கேட்டாள்...தம்பி உண்மையை சொல் உனக்கு என்ன நடந்தது என்று .நீயும் என் இடம் மறைக்காதே என்றாள் சாந்தி.
பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது சாந்தியின் கேள்வி .
என்ன தம்பி... நான் கேட்கிறது உனக்கு புரியலையா உண்மையை சொல் நேற்று இரவு என்ன நடந்தது என்று மறுபடியும் கேட்டால் சாந்தி.
உடனே பரந்தாமன் குறுக்கிட்டு சொன்னான் ....அவனை தொந்தரவு பண்ணாதே அத்தான் புரியும்படி சொல்லிட்டனே தவறுதலா வேறொரு ஸ்விட்ச் ஆன் செய்ததால் பம்ப் செட்டும் தோட்டமும் தீப்பிடித்து எரிந்து விட்டது என்று .
மேலும் மேலும் அவனை தொந்தரவு செய்யாதே என்று பரந்தாமன் சொன்னான்.
இதையெல்லாம் நம்புவதற்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இவரு ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்து விட்டாராம் . அதனால பம்புசெட்டும் தோட்டமும் எரிஞ்சு போச்சாம் . சரி இதையெல்லாம் கூட நம்பலாம் இவரோட உடம்பை பாருங்க . பட்ட பட்டையாக வீங்கி இருக்கு இது எப்படி ஆச்சு . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நீங்க மூணு பேருமே எதையோ மறைக்கிறீங்க. நம்ம தோட்டத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வரல உங்க அப்பா பாத்துக்கிட்டு இருக்கும்போது . என்னைக்கி நீங்க மூணு பேரும் தோட்டத்தை கவனிச்சீங்களோ அன்னையிலிருந்து நம்ம தோட்டத்துல புது புது பிரச்சனையா வந்துகிட்டு இருக்கு .
ஆனா எந்த பிரச்சனையும் இதுவரைக்கும் வெளிய வரல யாருக்குமே தெரியல .
ஆனால் உங்க மூணு பேருக்கும் இந்த பிரச்சனையின் ரகசியம் தெரியும் . அதை நீங்க மறைக்கிறீங்க நம்ம தோட்டத்துல ஏதோ ஒரு மர்மம் நடக்குது அதை நீங்க மறைக்கிறீங்க இப்ப நடந்து இருக்கிற இந்த விஷயம் எனக்கு ஆணித்தரமா புரியுது அதனால தான் கேட்கிறேன் மறைக்காம நேத்து இரவு என்ன நடந்ததுன்னு சொல்லிடு என்று சாந்தி மனதுக்குள் பட்டதை பளிச்சென்று தைரியமாக கேட்டாள்.
என்ன சாந்தி... யாரு கிட்ட என்ன கேட்கணும்னு தெரிஞ்சுதான் பேசுறியா என்று பரந்தாமன் சற்று எரிச்சலாக கேட்டான்.
ஆமாங்க இனிமேலும் சும்மா இருந்தா நம்ம குடும்பத்துல நிம்மதி இருக்காது . பிரச்சனை என்னன்னு தெரிஞ்சாதன் அதுக்கு ஏத்தமதிரி முடிவு பண்ணனும் .
இல்லன்னா இப்படியே அழுதுகிட்டு தான் இருக்கணும் என்று துணிச்சலாய் சொன்னால் சாந்தி.
கட்டிலுக்கு கீழே உட்கார்ந்திருந்த பரந்தாமன் உடனே ஆவேசமாக எழுந்து நின்றான்.
வாய மூடு எல்லாம் எனக்குத் தெரியும் ...நீ ஒன்னும் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாது . கொஞ்சம் பொறுமையாக இருந்தால் வாய்க்கு வந்தபடி பேசுவியா எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம் அவன் தான் சொல்றானே தவறுதலாய் ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்துவிட்டேன் என்று . அதோடு கம்முனு இரு எல்லாம் தெரிந்தது போல சத்தம்பொட்டு பேசுற இதுக்கு மேல ஏதாவது கேட்டா அதுக்கப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபத்தோடு ஆவேசமாக சாந்தியை முறைத்தபடி சொன்னான் பரந்தாமன் .
அப்போது சாந்தி வாயடைத்துப் போனாள் ... இவ்வளவு நாளா இதுபோல முகத்தை இதுவரைக்கும் இவரிடம் பார்த்ததில்லையே இவ்வளவு கோபக்கார மனிதனாய் இருக்கிறாரே நம் கணவர் .
என்று நினைத்து அதிர்ச்சியாக நின்றால் . ஒரு பக்கம் வேதனையால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அப்போது அவளால் அங்கு நிற்க முடியவில்லை உடனே அழுதுகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் பூஜை அறைக்கு.
இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தோம் .
ஆனால் இப்படி இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொண்டோமே .
நம் மனைவி நம்மை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு பிரச்சனை வளர்ந்துவிட்டதே என்று நினைத்து சோகத்தில் பரந்தாமன் தலை குனிந்து கொண்டான்.
அண்ணி சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் இனி ரகசியத்தை நீண்ட நாள் மறைக்க முடியாது என்று நினைத்து சந்திரனும் தினாவும் என்ன சொல்வது . இனி எப்படி அண்ணி முகத்தை பார்ப்பது என்று நினைத்து சோகத்தில் மூவரும் அமைதியாக இருந்தார்கள் .
அப்போது வீட்டு வாசலில் ஊரே கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டு அழுதார்கள் . உடனே சந்திரனும் பரந்தாமனும் மெதுவாக வெளியே வந்து பார்த்தால் ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் கண் கலங்கி நின்றார்கள் .
அப்போது ஒரு பெரியவர் சொன்னார் ...ஐயா நாளையிலிருந்து முழு நாள் வேலை செய்யுங்கள் என்று சொன்னீங்களே .
இப்படி எல்லாம் தோட்டமே தீயில் எரிந்து வீணாக போச்சே இப்படிப்பட்ட கஷ்டத்தை நீங்கள் எப்படி ஐயா தாங்க கொண்டிங்க எங்களாலே தாங்க முடியலையே என்று ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.
யாரும் வருத்தப்படாதீங்க ஏற்கனவே நீங்க உங்க
முத்தையாவையும் .
பண்ணையாரையும் இழந்துவிட்டு வாடிக்கொண்டு இருக்கீங்க .
இந்த நேரத்துல நம்ம தோட்டமும் எரிஞ்சு போச்சு மேலும் உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும் .
இனி பிழப்பதற்கு என்ன செய்வது என்று நினைத்து கஷ்டப்படாதிர்கள் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு நான் வேலை கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் . என் உயிர் இருக்கும் வரை விவசாயத்தை விட்டு நான் விலக மாட்டேன் . உங்களுக்காக நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .
என் தம்பி தவறுதலாக தண்ணீர் மோட்டாரை ஆன் செய்வதற்கு பதிலாக வேறொரு பட்டனை ஆன் செய்ததில் எலக்ட்ரிக்கல் போர்டு தீப்பிடித்து எரிந்து இப்படி எல்லாம் தோட்டமும் வீணாகப் போனது. கொஞ்சநாள் யாரும் தோட்டத்துக்கு வரவேண்டாம் .
நிலைமை சரியானதும் நானே உங்களை வேலைக்கு வர வைக்கிறேன் அதுவரைக்கும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தைரியமாக செல்லுங்கள் என்று ஊர் மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன்.
பிறகு ஊர் மக்கள் கலைந்து சென்றார்கள் ..பரந்தாமனும் சந்திரனும் சோகத்தோடு வீட்டுக்கு உள்ளே சென்றார்கள்.
அப்போது பரந்தாமனின் மகன் சோகத்தோடு வந்து அப்பா பசிக்குது என்று சொன்னான்.
அப்போதுதான் பரந்தாமனுக்கு நினைவுக்கு வந்தது காலையில் இருந்து யாரும் சாப்பிடவில்லை என்று.
தொடரும்......