Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
எல்லோரும் அழுவதை வேடிக்கை பார்த்து இருந்த பரந்தாமனின் பத்து வயது மகன் . தாத்தா இறந்து விட்டார் என்று சொல்லிக்கொண்டே தன் மகனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் பரந்தாமன்

அப்போது பண்ணையாரை பார்த்து தாத்தா தாத்தா என்று சொல்லிக்கொண்டே தேம்பித்தேம்பி அழுதான் .

பிறகு சாந்தி பண்ணையாரை பார்த்து .... மாமா எதுவாக இருந்தாலும் என்னிடம் மறைக்காமல் சொல்லிவிடுவீர்களே இப்படி எங்களையெலலாம் விட்டு விட்டு போகப்போறேன் என்பதை மட்டும் எனக்கு ஏன் சொல்லவில்லை மாமா என்று பண்ணையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதாள் சாந்தி

எனக்கு ஆதரவாக நீங்கள் தானே இருந்தீங்க ...
எந்த விஷயமானாலும் என்கிட்ட யோசனை கெட்பிங்களே இன்னைக்கு மட்டும் என்கிட்ட எதையுமே சொல்லாமல் இப்படி உயிரை விட்டுட்டீங்களே மாமா என்று அவள் கதறி அழுவதை பார்த்து ஊர் மக்களும் அழுதார்கள்

பிறகு சந்திரனும் தீனாவும் அப்பா எங்களை மன்னித்துவிடு அப்பா நாங்கள் எந்த தவறு செய்து இருந்தாலும் எங்களை மன்னித்துவிடு அப்பா ...
நாங்கள் என்ன சொல்லி அழுவது என்று எங்களுக்கு தெரியவில்லையே இப்படி எங்களை தவிக்க விட்டுட்டு போயிட்டியே அப்பா என்று இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கதறினார்கள் .

அப்போது பரந்தாமன் சற்று சுதாரித்துக் கொண்டான் ..
தம்பிகள் நடந்ததையெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு உண்மையை சொல்லி விடப் போகிறார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு.
சந்திரனின் தோள்மீது தட்டிக்கொடுத்து கண்ணசைத்தான் அவசரப்பட்டு உண்மையை சொல்லி விடாதீர்கள் என்பது போல தம்பிகளுக்கு சிக்னல் செய்தான் பரந்தாமன் அழுதுகொண்டே...

அடப்பாவமே சினேகிதன் மீது இவ்வளவு பாசமா .... முத்தையாவின் மேல் இந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் இந்த மனுஷன் ..
அப்படியென்றால் முத்தையா அந்த அளவுக்கு நட்பாக பழகியிருக்கிறார் நமக்கு தெரியாது ...நம்மா இந்த ஊருக்கு வந்து மூணு வருஷம் தானே ஆகுது ..
அதனால இவங்களோட நட்பு நமக்குத் தெரியவில்லை என்று சாட்டையடி சாமியார் பெருமையாக நினைத்தார். பண்ணையாரையும் முத்தையாவையும்.


மகள் . மருமகன் காணவில்லையே என்று நினைத்து அழுவதா ...
பெத்த அப்பா போல நம் குடும்பத்தை பார்த்துக்கொண்ட முத்தையா இறந்துவிட்டார் என்பதற்காக அழுவதா .....
இல்லை எல்லோருக்கும் தெய்வமாக இருந்த பண்ணையார் இறந்துவிட்டார் இதை நினைத்து அழுவதா .......
என்று புரியாமல் அரைமயக்கத்தில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் லட்சுமி அம்மாள்.

பிறகு அங்கு இருந்த பெரியவர்கள் சிலபேர் பண்ணையாரின் கையிலிருக்கும் முத்தையாவின் தடிக்கொம்பை எடுக்க முயற்சி செய்தார்கள் ...
ஆனால் தடிக்கொம்பை எடுக்க முடியவில்லை ....
பண்ணையார் உறுதியாக இரண்டு கைகளால் தடிக்கொம்பை கட்டியணைத்தபடி இறந்துவிட்டார்

தடிக்கொம்பை எடுக்கமுடியாமல் என்ன செய்வது என்று முழித்தார்கள் ..
அப்போது சாந்தி சொன்னாள் ....
அவர் கையில் இருக்கும் தடிக்கொம்பு எடுக்கவேண்டாம் அவர் நண்பன் மீது வைத்திருந்த பாசம் எனக்கு தெரியும் ..
அதனால் அந்த கொம்பை எடுக்க வேண்டாம் என்றாள் சாந்தி ...

பிறகு பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் அழுதுகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் சொன்னார் .... பண்ணையாரை உங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போறீங்களா என்றார்...

வேண்டாம் இப்போது சூரியன் மறைய போகுது ....
நேரமில்லை அவருக்கு அவருடைய நண்பரும் இந்த ஊர்தான் முக்கியமாக கருதினார் ...
அதனால் அவர் நண்பருடைய வீட்டில்லிருந்தே அவருக்கு நாங்கள் இறுதிச்சடங்கு செய்யப்போகிறோம் என்று உருக்கமாக சொன்னான் பரந்தாமன் ..

பிறகு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி முத்தையாவுக்கு தனியாக படை அமைத்து....
பிறகு பண்ணையாருக்கும் தனியாக படை அமைத்தார்கள் ....

அப்போது பரந்தாமன் ஊர் பெரியவர்களிடம் சொன்னான்....
என் அப்பாவுக்கு என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் ..
அதேபோல முத்தையாவும் என் அப்பா போலதான் நீங்கள் விருப்பப்பட்டால் முத்தையாவுக்கும் என் தம்பி தீனா கொள்ளி வைப்பான் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்...

அப்போது அதில் ஒரு பெரியவர் சொன்னார் ....
ஐயா முத்தையாவுக்கு இருந்தது ஒரே ஒரு மகன் சங்கர்தான்..
பாவம் அவன் இப்போது இல்லை அவருக்கென்று சொந்தம் இப்போது இருப்பது ..
அவர் சம்பந்தி லட்சுமி அம்மாள் தான் .அவரை கேட்டு நாங்கள் முடிவு சொல்கிறோம் என்றார்கள் பெரியவர்கள் ...
பிறகு லட்சுமி அம்மாளும் பண்ணையார் மகன்களே கொல்லி வைக்கட்டும் என்று அழுதபடி சொன்னார் ...

பிறகு ஊர் பெரியவர்கள் இறுதிச் சடங்கை செய்ய தயாரானார்கள்.

பண்ணையாரையும் ...
முத்தையாவையும் சுடுகாட்டுக்கு பாடையில் எடுத்துச் சென்றார்கள் ஊர்மக்கள்.


ஊர்மக்கள் முத்தையாவயும் பண்ணயாரையும் நல்லபடியாக அடக்கம் செய்து ....
தீனா பண்ணையாருக்கும் முத்தையாவுக்கு கொள்ளி வைத்துவிட்டு சோகத்தோடு சுடுகாட்டில் இருந்து திரும்பினார்கள்

சுடுகாட்டில் இருந்து வீடு திரும்பியவர்கள். சுடுகாட்டை திரும்பி பார்க்கக் கூடாது என்பது ஊர் வழக்கம் ..

ஆனால் எல்லோரும் ..
முத்தையாவையும்
பண்ணையாரையும் நினைத்து மனம் நொந்து போய் ....
இப்படி அவர்களை எரித்துவிட்டு வருகிறோமே என்று நினைத்து வேதனையில் வரும்போது அப்போது எல்லோரும் மனதில் கடைசியாக ஒருமுறை
பண்ணையாரையும் ..
முத்தையாவையும் திரும்பிப் பார்க்கலாமா என்று அவர்கள் மனம் சொல்லியது ..
அப்போது கூட்டத்தில் நிறையபேர் சுடுகாட்டை திரும்பிப் பார்த்தார்கள்
பண்ணையாரும் முத்தையாவும் மளமளவென எரிந்து கொண்டிருந்தார்கள் ...
மேலும் அழுது கத்தினார்கள் இதைப் பார்த்த பரந்தாமன் சந்திரன் தீனா மூவருக்கும் ஊர்மக்களின் சந்தோசத்தை கெடுத்து விட்டோமே என்று நினைத்து கவலைப் பட்டார்கள்

பிறகு எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சென்று விட்டார்கள் ..... பாவம் லட்சுமி அம்மாள் அனாதை போல முத்தையாவின் வீட்டு வாசலில் படுத்து கொண்டு இருந்தாள். பித்துப் பிடித்தவள் போல்..

நாட்கள் நகர்ந்தது ......

ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.

சோகத்திலிருந்து ஊர் மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வந்தார்கள்.


பண்ணையாரும் முத்தையாவும் இறந்து மூன்று வாரங்கள் ஆனது..


பண்ணையார் வீட்டில் ...
சாந்தி கவலையோடு இருந்தாள் பரந்தாமன் சந்திரன் தீனா மூவருமே பேசிக்கொள்ளவில்லை சோகத்தோடு காணப்பட்டார்கள்..


ஊர் மக்களும் ..பண்ணையார் முத்தையா இறந்ததில் இருந்து பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லவில்லை .. சேர்த்து வைத்திருந்த பணம் எல்லாம் செலவாகி விட்டது ஊர்மக்கள் எல்லோரும் பட்டினியால் வாடினார்கள்...


பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல ஊர் மக்களுக்கு விருப்பமில்லை ...
ஊரை விட்டு போகவும் மனமில்லை கடைசியாக சொன்ன முத்தையாவின் வார்த்தை அவர்களை தடுத்தது..
என்ன செய்வதென்று குழப்பத்தோடு பசியால் வாடினார்கள் ஊர்மக்கள்...


பச்சைப் பசுமையாக இருந்த பண்ணையார் தோட்டம் ஒரு மாதம் காலமாக பராமரிப்பு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாடி வதங்கியது ...
சிறுசிறு பயிர்கள் எல்லாம் காய்ந்து போனது .,
வாழைமரம் கரும்பு தோட்டம் போன்ற பயிர்கள் எல்லாம் வதங்கத் தொடங்கியது ...
இப்படி வெறிச்சோடி காணப்பட்டது பண்ணையார் தோட்டம்.


பரந்தாமன் யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்தான். தனது வீட்டு மொட்டை மாடியில்..

அப்போது பரந்தாமனின் உள்மனசு சொன்னது..
இன்னும் எதற்கு நம் வருத்தப்பட வேண்டும் .
நமக்கு எதிரியாக இருந்த சங்கர் அவனது மனைவி ரேகாவை கொன்று விட்டோம் ...
அடுத்த எதிரியாக இருந்த நம் அப்பா இறந்துவிட்டார் ...
இப்போது இந்த ஊருக்கே நம்ம தான் பெரிய மனுஷன் ....
நம் குடும்பத்திலும் இனி நம்ம சொல்றதுதான் நடக்கும் இப்படி எல்லாமே நூல் இடையில் நமக்கு சாதகமாக திரும்பி விட்டது ... நம்முடைய வாழ்க்கையை சங்கர் முடித்து விடுவான் என்று நினைத்து இவ்வளவு நாளாக பயந்துகிட்டு இருந்தோம் ..
ஆனால் இப்போதுதான் நமக்கு சாதகமாக எல்லாமே மாறிவிட்டதே

இனி...சந்திரனுக்கும் தீணாவுக்கும் திருமணமே கிடையாது ....
நம்மை மீறி அவர்களுக்கு யார் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று நினைத்து சந்தோசப்பட்டான் பரந்தாமன்.

நம் அம்மாவிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டது நமக்கு பலன் கிடைத்துவிட்டது ...
அம்மா என்னைக்குமே நமக்கு துணையாக இருப்பாங்க
இனி எதற்கு நம்ம சோகத்தோடு இருக்கணும் என்று நினைத்து யோசித்தான் பரந்தாமன்.

ஆனால் இனி பம்புசெட் வேலைக்கு யாருமே வர மாட்டார்கள் ..
இப்போது இருக்கும் நிலைமைக்கு தோட்டத்திற்கு எந்த வேலைக்கும் ஊர் மக்கள் இதுவரைக்கும் வரவில்லை எல்லோரும் ரொம்ப பயந்து போய்விட்டார்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று மீண்டும் குழம்பினான் பரந்தாமன்.


இதுவரைக்கும் எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து விட்டோம ..
இப்போது ஊர் மக்களை தோட்டத்திற்கு வேலைக்கு வர வைக்க வேண்டும் . இதுக்கும் ஒரு வழி கிடைக்காமலா போகும் என்று மனதில் நினைத்துக்கொண்டு அம்மா உன்னை பார்த்து ஒரு மாதம் காலம்மாகிறது விரைவில் தோட்டத்திற்கு வந்து உன் காலில் விழுந்து கும்பிடுகிறேன் ..அம்மா என்று மனதுக்குள் நினைத்து கொண்டான் பரந்தாமன்.

பிறகு பரந்தாமன் தனது வீட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்குள் நுழைந்தான் அப்போது சந்திரனின் வருங்கால மாமியார் ..மாமனார் ..வந்து சாந்தியிடம் துக்கம் விசாரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து சற்று எரிச்சலானான்.

சந்திரனும் தீனாவும் மௌவுனமாக நின்றிருந்தார்கள்.

இப்படி திடீரென்று இவ்வளவு பெரிய அதிர்ச்சியை நீங்கள் எப்படித்தான் தாங்கிக் கொண்டீர்களோ என்று சாந்திக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.. சந்திரனின் வருங்கால மாமியார்.

அவசரத்துல உங்களுக்கு தகவல் சொல்ல முடியல .மன்னிச்சுக்குங்க என்று பரந்தாமன் சொல்லிக்கொண்டே இரு கைகளால் கும்பிட்டான் நல்லவன் போல.

பரவாயில்லை தம்பி ...இனி நீதான் உங்க அப்பா பொறுப்பிலிருந்து இந்த குடும்பத்தையும் ..
இந்த ஊர் மக்களையும் கவலையில்லாமல் பார்த்துக் கொள்ளனும் என்று ஆறுதல் சொன்னார்.. சந்திரனின் வருங்கால மாமியார்..

எல்லாம் எனக்குத் தெரியும் முதல்ல இங்கிருந்து கிளம்பு என்று மனதில் நினைத்துக்கொண்டு ..
பரந்தாமன் எரிச்சலாய் சந்திரனை பார்த்தான்.

மாமனார் மாமியாரை பார்த்து அடக்கமாக நின்றிருந்தான் சந்திரன் சற்று சோகத்தோடு.

நாங்கள் இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்வதற்காகதான் வந்தோம் நாங்கள் சொல்வதைக் கேட்டு நீங்கள் யாரும் வருத்தப்படக்கூடாது என்றார் சந்திரனின் வருங்கால மாமனார்.

அப்போது சாந்திக்கும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் பரந்தாமனுக்கு புதிராக இருந்தது சந்திரனின் மாமனாரின் பேச்சு.



தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
சந்திரனுக்கு முகம் மாறியது மாமனார் கவலைப்படும் படி என்ன சொல்லப்போகிறார் என்று குழப்பத்தோடு நின்றான் சந்திரன்.


அப்போது சந்திரனின் மாமனாரும் மாமியாரும் மெதுவாக பரந்தாமனிடம் வந்து சொன்னார்கள்.

தம்பி எங்களை மன்னிச்சிடுங்க .,.. நான் சுத்தி வளச்சி பேச விரும்பல நாங்க எங்க பொண்ணுக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பாத்துட்டோம். அதனால எங்கள நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம் தம்பி.
எங்க நிலைமையில நீங்க இருந்தலும். நீங்களும் இந்த முடிவை தான் செஞ்சு இருப்பீங்க அதனால இந்த விஷயத்தை பெருசா எடுத்துக்காம நீங்க உங்க தம்பிக்கு வேறு ஒரு இடத்தில பெண் பார்த்து. நல்லபடியா திருமணத்தை நடத்தணும் எங்கள மன்னிச்சிடு என்று சொன்னார்கள்.

பரந்தாமனுக்கு மனமெல்லாம் குறுகுறுவென ஆனது....
இனிமேல் நமக்கு எல்லாமே சாதகமாகவே அமைந்து விடும் திருமணத்தை நாமே எதையாவது சொல்லி நிறுத்தி விடலாம் என்று நினைத்தோம்...
ஆனால் அவர்களே திருமணத்தை நிறுத்தி விட்டார்கள்.. பரவாயில்லை இனி நம்ம பக்கம் காத்து விசா தொடங்கிடுச்சி என்று நினைத்துக் கொண்டு முகத்தை கவலையோடு இருப்பது போல காட்டிக் கொண்டு இருந்தான் பரந்தாமன்.


அவர்களின் பேச்சைக் கேட்டதும் ,.... சாந்தி வேதனையால் துடித்தாள் அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இப்படி அடி மேல் அடி விழுகிறதே நம் குடும்பத்தில் என்று நினைத்து ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு மனதை சமாதானப் படுத்தினாள்.

எங்கள் குடும்பத்தை வழிநடத்திச் சென்ற என் மாமனார் இப்போது எங்களை விட்டு பிரிந்து விட்டார் இப்படி இக்கட்டான நிலைமையில் நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம் .
நீங்கள் சொல்லும் வார்த்தை எங்களை மேலும் கலங்கபட செய்கிறதே அம்மா...
தயவுசெய்து நீங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியாதா என்று கெஞ்சுவதை போல கேட்டாள் சாந்தி..

உங்களுடைய கவலை எங்களுக்கும் புரிகிறது..
ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஏற்கனவே கொஞ்ச நாள் திருமணத்தை தள்ளிப் போட்டிங்க அதையும் நாங்கள் சமாளித்து விட்டோம். இப்போது இருக்கிற நிலைமை பார்த்தா எங்க பொண்ணுக்கு திருமணம் கேள்விக்குறியாகிவிடும் .. இப்போது இருக்கிற நிலைமைக்கு உங்களால் திருமணத்தை நடத்த முடியுமா....
நிச்சயமாக முடியாது ...மீண்டும் திருமணத்தை தள்ளிப் போட்டாள்
எங்கள் பெண்ணை ராசி இல்லாதவள் என்று அக்கம் பக்கத்தினர் பேசுவார்கள் ..
அதனால்தான் நாங்கள் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள் என்று மீண்டும் சொன்னார்கள்.

அம்மா இந்த ஒரு முறை நீங்கள் உங்கள் முடிவை மாத்திக்குங்க என்று மீண்டும் கெஞ்சினார் சாந்தி.

அப்போது சந்திரன் குறுக்கிட்டு பேசினான்..
அண்ணி அவங்கள வற்புறுத்தாதிங்க அவங்க விருப்பப்படியே செய்யட்டும் .எனக்கு அதிர்ஷ்டம் இல்ல அதனால அவங்க பெண்ணாவது எங்கேயோ ஒரு இடத்தில நல்லா இருக்கட்டும் திருமணம் நல்லபடியாக நடந்தாலே போதும். அதுவே எனக்கு சந்தோஷம்தான் .
யார் யாருக்கு கடவுள் என்ன எழுதி வச்சிருக்கானோ அதன்படிதான் நடக்கும் நம்ம போடற கணக்கு எல்லாம் பலிக்காது ..
இனி என் தலைவிதிப்படி எது நடக்கிறதோ நடக்கட்டும் அவங்களை வற்புறுத்தாதிங்க அண்ணி ..என்று உருக்கமாக சொன்னாள் சந்திரன் .

உடனே பரந்தாமன் கண்களை கசக்கினான் சோகத்தோடு .
ஆனால் கண்களில் ஈரம் இல்லை என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.

சந்திரனின் பேச்சு தீனா மனசை மிகவும் பாதித்தாது..
அண்ணனின் வாழ்க்கையே கேள்விக்குறியாக இருக்கிறது
இனி நம்முடைய வாழ்க்கையும் அப்படி தான் என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

போயிட்டு வருகிறோம் என்று தரையைப் பார்த்து சொன்னபடியே அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள் சற்று சோகத்தோடு. பெண்ணோட அம்மா அப்பா.

உடனே சாந்தி தனது மாமனாரின் அறைக்குச் சென்று அவர் புகைப்படத்தின் முன்னால் நின்று அழுதாள்.

மாமா பார்த்தீங்களா...
நம் குடும்பத்திற்கு வந்திருக்கும் சோதனைகளை.
இனி நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் எனக்கு தெரியவில்லையே என்று கதறி அழுதாள் சாந்தி..


சங்கரின் நண்பர்கள் எல்லாம் ஒன்றுகூடி பேசினார்கள்.

எந்த பிரச்சினையாக இருந்தாலும் நம்ம சங்கர் அதை சமாளித்து விடுவான்.
ஆனால் இப்படி திடீரென அவனும் காணாம போயிட்டான்.. அப்படின்னா அது எவ்ளோ பெரிய பிரச்சினையாக இருக்கும் .
அவனை தேடி போறதுக்கும் பயமா இருக்கு என்னதான் செய்றதுன்னு ஒண்ணுமே புரியல .
பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போறதுக்கு பயமா இருக்கு ...
ஊறவிட்டும் யாரும் போகக்கூடாது என்று முத்தையா அண்ணன் சொல்லிவிட்டூ இறந்துவிட்டார்.. இப்படி இக்கட்டான நிலைமையில் நம்ம ஊரு இருக்குது ..
இப்படியே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துகிட்டு பயந்துகிட்டு இருந்தா சாப்பாட்டுக்கு என்ன செய்யறது . இன்னிக்கி ராத்திரிக்கி ஒரு கூட்டம் போட்டு இதுக்கெல்லாம் ஒரு முடிவு செய்யணும் என்ன நான் சொல்றது என்று ஒரு நண்பன் சொன்னார் ..
அதற்கு மற்றவர்களும் ஆமாம் இதற்கு பேசி தான் முடிவு செய்ய வேண்டும் .. ஒன்னு ஊரைவிட்டு போக வேண்டும்
வேறு எங்கேயாவது பிழைத்துக்கொள்ளலாம்
வேலை செய்து ... அப்படி இல்லை என்றால் பணத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு முத்தையா அண்ணன் சொன்ன மாதிரி பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகணும் .
அதனால ஊர் பெரியவர்களை இன்னைக்கு ராத்திரிக்கு கூட்டம் போட்டு ஒரு முடிவு செய்யலாம்

இவ்வளவு நாளாக நமக்கு வழிகாட்டியாக இருந்த முத்தையா அண்ணன் வீட்டு வாசலில் கூட்டத்தை நடத்தலாம் என்று ஒரு நண்பர் சொன்னார் ...
அதற்கு மற்ற நண்பர்களும் ஆமாம் அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ..அவர் வீட்டு வாசல் தான் கோவில் நமக்கு என்று முடிவு செய்துவிட்டு கிளம்பினார்கள்.

பிறகு அன்று இரவு முத்தையா வாசலில் கூட்டமும் நடந்தது...

வேறு வழி இல்லாமல் ஊர் மக்கள் பயத்தை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள் ...
ஆனால் பம்புசெட்டில் மட்டும் தங்கி வேலை பார்க்கக் கூடாது என்ற முடிவையும் செய்தார்கள்.
அந்த ஊர் மக்களுக்கு வேறு வழியும் இல்லை ஊரை விட்டும் யாரும் போகக்கூடாது என்று முத்தையாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அனைவரும் ஒற்றுமையாக ஊரோடு இருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் லட்சுமி அம்மாள் பித்துப் பிடித்தவள் போல கண்ணிமைக்காமல் கூட்டத்தைப் பார்த்து மௌனமாக இருந்தாள் அவள் மனம் மெல்ல மெல்ல சுய நினைவை இழந்து கொண்டே வருகிறது.
அங்கே இருந்தவர்கள் எல்லாம் லட்சுமி அம்மாளை பார்த்து வருத்தப்பட்டார்கள் ..
எப்படி இருந்த குடும்பம்..
பாவம் மிச்சமிருப்பது இந்த லட்சுமி அம்மாள் மட்டும்தான் என்று பேசி வருத்தப்பட்டார்கள்.


ஊர்மக்கள் கூடி ...பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போகலாம் என்ற முடிவு செய்தது பரந்தாமனுக்கு இந்த விஷயம் தெரிந்தது ....
அவனுக்கு மேலும் சந்தோஷம் பொங்கியது ... அவன் நடை உடை பாவம் எல்லாமே மாறியது
எதற்கும் துணிந்தவனாக மாறிவிட்டான் பரந்தாமன்
2 கொலைகளை செய்து இருக்கிறோம் .. இரண்டு குடும்பத்தை கெடுத்திருக்கிறோம் இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் நமது அப்பாவும் முத்தையாவும் இருந்திருக்கிறார்கள் ..
இப்படி எல்லாம் கெட்ட காரியங்களை செய்து அவன் மனம் பழகிப்போச்சு..
இனி நாம் முன்னேறுவதற்கு எந்த தடை வந்தாலும் அதை சிறிதும் தாமதிக்காமல் அதுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.. இனி நாம் யாருக்கும் பயப்பட கூடாது. ஊர் மக்களுக்கும் இனி எந்த ஒரு செலவையும் செய்யக்கூடாது வேலை செய்தால் கூலி மட்டுமே தர வேண்டும் ..
மற்றபடி துணி இனிப்பு திருமணமானால் சிறிது பணம் நகை போன்ற எந்த ஒரு உதவியும் செய்யக்கூடாது என்று முடிவு செய்தான் பரந்தாமன். இப்படி ஒரு முழுமையான கெட்டவனாக மாறிவிட்டான் பரந்தாமன்.

பொழுது விடிந்தது...

பரந்தாமன் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்..

எங்கெங்கே கிளம்புறீங்க அவசரமா என்றாள் சாந்தி..

தோட்டத்துக்குதான் ....
நம்ம தோட்டத்துக்கு போய் ரொம்ப நாளாச்சு அதனாலதான் சும்மா போயிட்டு வரலாம்னு கிளம்புறேன் ஊர் மக்கள் எல்லாம் வேலைக்கு
வரதா இருக்காங்க அதனால தோட்டம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வரலாம்னு போறேன் என்றான் பரந்தாமன்.

அதெல்லாம் சரிங்க....
ஆனா என்னைக்குமே இல்லாம இன்னைக்கு மட்டும் உங்க தம்பிகளை விட்டுட்டு நீங்க மட்டும் போறீங்க.

அவனுங்கதான் வருத்தமா இருக்கானுங்க. பாவம் சந்திரன் திருமணமும் நின்னு போச்சு இந்த நிலைமையில அவனுங்க எங்க வெளியில் வர போறானுங்க அதனாலதான் நான் மட்டும் போயிட்டு வரலாம் என்று கிளம்புறேன் ..என்றான் பரந்தாமன்.

ஏற்கனவே நான் நொந்து போய் இருக்கேன் . இந்த நிலைமையில நீங்க உங்க தம்பிகளை விட்டுட்டு தனியா போறீங்களே .
இது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு . உங்க அப்பா இருக்கும்போது எப்படி நீங்க மூணு பேரும் ஒற்றுமையாய் இருந்தீங்களோ. அதேபோல இப்போவும் நீங்க மூணு பேரும் எங்க போனாலும் ஒன்னாதாங்க போனோம் ..
தயவுசெய்து உங்க தம்பிகளையும் கூட்டிகிட்டு போங்க என்று சாந்தி உருக்கமாக சொன்னால் பரந்தாமனிடம்.

சரி மா நீ சொல்ற படியே கேட்கிறேன் . போயிட்டு அவங்கள கூட்டிட்டு வா.

பிறகு சாந்தி சந்திரனையும் தீனாவையும் அழைத்து உங்கள் அண்ணன்னுடன் தோட்டத்திற்கு சென்று வாருங்கள் என்று சொல்லி மூவரையும் வழக்கம்போல ஒற்றுமையாக ஒரே பைக்கில் அனுப்பிவைத்தால் சாந்தி தோட்டத்திற்கு.


மூவரும் தோட்டத்திற்கு வந்து ஆறு வாரங்கள் ஆனது..
சங்கரையும் ரேகாவையும் கொலை செய்துவிட்டு சென்றவர்கள் இப்போதுதான் தோட்டத்திற்கு வருகிறார்கள் ..
வழக்கம்போல களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு நடந்து வந்தார்கள் பம்புசெட்டை நோக்கி.


நெற்பயிர் எல்லம் காய்ந்து விட்டது கரும்பு வாழை போன்ற பெரிய பெயர் மட்டும் வதங்கிய நிலையில் காணப்பட்டது.
மற்ற சிறிய வகை பயிர்கள் எல்லாம் காய்ந்து வீணாகப் போனது . இதைப்பார்த்த பரந்தாமனுக்கு மன வருத்தமாக இருந்தது . ஆறு வாரம் பராமரிப்பு இல்லாமல் இப்படி வீணாகி விட்டதே என்று வருத்தப்பட்டான்..
சந்திரனும் தீனாவும் ஏதோ வரக்கூடாது இடத்திற்கு வருவதுபோல தயங்கிக்கொண்டே நடந்து வந்தார்கள் பம்பு சட்டை நோக்கி . பார்க்கும்இடமெல்லாம் பச்சை பசுமையாக இருந்த தோட்டம் இப்படி காஞ்சி வதங்கிப் போய் இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு பம்பு சட்டை நோக்கி மூவரும் நடந்து வந்தார்கள்.

வழக்கம் போல பம்புசெட்டின் அருகில் இருக்கும் மரத்தின் நிழலில் நின்றார்கள் மூன்றுபேரும் அப்போது அவர்களின் மனம் முழுக்க சங்கரையும் ரேகாவையும் கொலை செய்தது தான் ஞாபகத்துக்கு வந்தது..
மூவரும் சிறிது நேரம் பேசிக்கொள்ளாமல் மௌனமாக நினைத்துப் பார்த்தார்கள்

பரந்தாமன் பயத்தால் நடுங்கியதை எல்லாம் நினைத்துப் பார்த்து மீண்டும் அவன் மனதில் பயம் தோன்றியது .

சந்திரனுக்கும் தீனாவுக்கும் ...
ரேகா துடிதுடித்து இறந்ததை நினைத்து பார்த்து சிறிது பயத்தோடு நின்றார்கள்.

அப்போது திடீரென்று கிணற்றில் யாரோ குதித்தது போல சத்தம் கேட்டது மூவரும் பயத்தில் நடுங்கினார்கள் ...
கிணற்றில் என்ன சத்தம் என்று தெரியாமல் குழப்பத்தோடு மெதுவாக நடந்து சென்று கிணற்றை எட்டிப் பார்த்தார்கள்.


தொடரும்.......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
கிணற்றில் யார் குதித்தார்கள் என்று தெரியவில்லையே...
நம் மூன்று பேர் தவிர இங்கு யாருமே இல்லையே அப்படியென்றால் கிணற்றில் சத்தம் கேட்டது என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே மூவரும் பாலத்தில் நடுங்கிக்கொண்டு கிணற்றை எட்டிப் பார்த்தார்கள் மூவரும் .. கிணற்றில் விழுந்தது தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்தது..

மூவருக்கும் சற்று பயம் தெளிந்தது என்னமோ ஏதோ என்று நினைத்து கடைசியில் தேங்காய் விழுந்ததில் பயந்து விட்டோம் என்று மனதை தேற்றிக் கொண்டார்கள்.

உடனே பரந்தாமன் பயப்படாதவன் போல் முகத்தை மாற்றிக் கொண்டு சற்று தைரியத்தோடு தம்பிகளிடம் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து வரும்படி சொன்னான்...

சந்திரனும் தீனாவும் தோட்டத்தை சுற்றிப் பார்க்க கிளம்பியதும் பரந்தாமன் உடனே சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு பம்புசெட்டில் மற்றொரு அறையில் இருக்கும் தனது தாய் படத்தின் முன்பாக நின்று கும்பிட்டான்.

அம்மா என் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்தேன் ஆனால்..
இப்படி எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் என்னை நல்லபடியாக காப்பாற்றி விட்டாய் தாயே...
நான் உன்னிடம் கற்பூர தீபத்தை ஏற்றி வேண்டிக் கொண்டது வீண்போகவில்லை தாயே ..
எனக்கு இனி எல்லாமே நீதான் தாயே .. ஏனென்றால் நான் சாதாரணமான தவறை செய்யவில்லை...
இரண்டு குடும்பங்களை கெடுத்து இருக்கேன். இப்போது இரண்டு கொலையும் பண்ணிருக்கேன்
அது மட்டுமா ..இந்த பிரச்சனையால் அப்பாவும் இறந்து விட்டார் ..
அந்த கிழவன் முத்தையாவும் இறந்துவிட்டான் .இப்படி நான் செய்த சூழ்ச்சியால் இத்தனை பேர் பலியாகி இருக்கிறார்கள் .
ஆனால் நான் இன்னும் யாரிடமும் சிக்கவில்லை ..
ஏன் மனம் விருப்பப்படியே எல்லாமே எனக்கு சாதகமாக அமைகிறது .. இதற்கெல்லாம் காரணம் எனக்கு ஆதரவாக இருக்கும் நீ மட்டும் தான் தாயே நான் செய்த தவறை எல்லாம் மூடிமறைத்து எனக்காக இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் உனக்கு நான் என்றென்றும் உன் காலடியில் கும்பிட்டு வணங்குவேன் தாயே என்று உணர்ச்சி பொங்க பரந்தாமன் தனது தாய் மேல் நம்பிக்கை வைத்து வேண்டிக்கொண்டு கீழே படுத்தபடி கும்பிட்டான் பரந்தாமன் .

பிறகு மெதுவாக எழுந்து படத்தின் பின்பக்கமாக மறைத்து வைத்திருக்கும் பணப்பெட்டியை திறந்து பார்த்தான் முக்கால் பாகம் நிரம்பியிருந்தது அந்த பணப்பெட்டி இன்னும் சிறிது லட்சத்தை போட்டால் நிரம்பிவிடும் ..
அந்த அளவுக்கு பணம் இருந்தது பரந்தாமனுக்கு பணத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது இவ்வளவு பணத்தை இனிமேல் நம் மட்டும் ஆளவேண்டும் இன்னும் அம்பது அறுபது இலட்சம் பணத்தை பெட்டியில் போட்டால் நிரம்பிவிடும் என்று மனக் கணக்குப் போட்டுக்கொண்டு கீழே இறங்கி வந்தான்... பிறகு வழக்கம்போல வெளியே வந்து நின்றான் தம்பிகளும் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள்.

அண்ணே வச்ச வாழை மரம் எல்லாம் வதங்கி காஞ்சி போச்சு கரும்புத் தோட்டம் வீணா போச்சு இப்படி எல்லாம் தண்ணி இல்லாமல் வைக்கோல போச்சி அண்ணே நமக்கு இந்த போகும் எதுவுமே மிஞ்சாது போல் தெரிகிறது எல்லாமே வீணா போச்சு அண்ணே என்று சந்திரன் சற்று வருத்தத்தோடு பரந்தாமனிடம் சொன்னான்.

இந்த முறை நமக்கு எதுவுமே மிஞ்சாது என்று எனக்கு நல்லாவே தெரியும் தம்பி .
இனி புதிதாய் எல்லாவற்றையும் பயிர் செய்ய வேண்டும் அப்போதுதான் மீண்டும் நம்ம தோட்டம் சிறப்பாக இருக்கும் அதற்கு நிறைய பணம் செலவாகும் போல் தெரிகிறது ...
ஏற்கனவே செலவு செய்த பணம் எல்லாம் இந்த 40 நாளில் பராமரிப்பு இல்லாமல் வீணாகிப் போனது இனிமேலாவது நமக்கு நல்ல ஒரு வருமானம் கிடைக்கும் ..
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு அதனால இனி கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை .
இனி நடக்க வேண்டியதை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு மூவரும் அங்கிருந்து கிளம்பினார்கள் வீட்டுக்கு..

தீனா மட்டும் சிறிது பயத்தோடு பம்பு செட்டை திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே சென்றான் சந்தேகத்தோடு...
ஏனென்றால் கிணற்றில் விழுந்த தேங்காய் .நல்ல பச்சை இளநீர்
இது எப்படி அறுந்து கிணற்றில் விழும் என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது ..உண்மையிலே தேங்காய் தானாக விழுந்ததா இல்லை ஏதோ மர்மம் இருக்கிறதா என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டு விட்டது ..சிறிது பயத்தோடு வீட்டுக்குச் சென்றான்.தீனா


மறுநாள் ஊர் மக்கள் அனைவரும் முத்தையாவின் வீட்டு வாசலில் நின்று இரண்டு கைகளால் கும்பிட்டார்கள்.

முத்தையா அண்ணே ....இனி உங்க வீடு தான் எங்களுக்கு கோவில் நாங்கள் தெய்வமாக பார்த்த பண்ணையாரும் இந்த இடத்தில்தான் உயிரை விட்டார் அதனால் நீங்கள் இருவரும் .
இனி இந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு தீங்கும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் .
இந்த ஊரை விட்டு போகாமல் நீங்கள் சொன்னதைப் போல பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்கிறோம் இன்று அதனால் எங்களுக்கு நீங்கள் இருவரும் துணையாக இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் .. என்று வேண்டிக்கொண்டு வாசலில் முட்டி போட்டு கும்பிட்டார்கள் அனைவரும் .
பிறகு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு கிளம்பினார்கள்.


ஊர் மக்கள் வேலைக்கு வருவதை பார்த்த பரந்தாமனுக்கு சந்தோசம் பொங்கியது . இனி மெல்ல மெல்ல பம்புசெட் வேலைக்கும் இவர்களை வர வைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு ஏற்பட்டது ஊர் மக்களிடம் அன்பாகவும் பாசமாகவும் பழகினான் பரந்தாமன் ஆதாயத்திற்காக.

அப்போது எல்லோரும் நிலத்தில் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தார்கள் ..
பம்பு செட் பக்கம் யாருமே போகவில்லை.
இதைப்பார்த்த பரந்தாமனுக்கு சந்திரன் தீனவுக்கும் சற்றுக் குழப்பமாக இருந்தது.

பிறகு சந்திரனும் தினாவும் இருவரும் பம்புசெட்டில் உள்ளே சென்று. தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு .
மண்வெட்டியுடன் வயல் பகுதியில் சென்று வயல்களில் தண்ணீரை நிரப்பினார்கள்.
பரந்தாமன். அவனும் ஒரு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு வயலில் இறங்கி வேலை செய்தான்.

இப்படி பண்ணையார் தோட்டத்தில் விவசாய வேலை சிறப்பாக நடந்தது பிறகு மாலை நேரம் ஆனதும் ஊர் மக்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

இன்னும் நிறைய நிலத்திற்கு தண்ணி போகாமல் இருந்தது அப்போது பரந்தாமன் என்ன செய்வது என்று யோசித்தான்.

இரவு நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் நன்றாக இருக்கும் ஆனால் யாரும் பம்புசெட்டு வேலைக்கு வரமாட்டார்கள் என்று நினைத்து சிறிது வருத்தத்தோடு அங்கிருந்து மூவரும்
கிளம்பினார்கள் வீட்டுக்கு .

ஊர் மக்கள் விருப்பமில்லாமல் வேலை செய்துவிட்டு போகிறார்கள் என்று புரிந்துகொண்டார்கள் சந்திரனும் தீனாவும்.
முத்தையாவின் வார்த்தைக்காக இங்கு வேலைக்கு வருகிறார்கள் இல்லை என்றால் . இவர்கள் இந்த ஊரை விட்டு எங்கேயாவது போயிருப்பார்கள் .. நாம் செய்த தவறினால்
இப்படிப்பட்ட நிலைமைக்கு
இவர்களை ஆளாக்கி விட்டோம் என்று நினைத்து வருத்தப் பட்டார்கள் ...சந்திரனும் தீனாவும்.


அப்போது பரந்தாமன் 2 தொழிலாளிகளை அழைத்தான்.

உங்களுக்கு நான் இரண்டு மடங்கு கூலி கொடுக்கிறேன் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பம்புசெட்டில் வேலை செய்கிறீர்களா என்று பரந்தாமன் சொன்னான்.

ஐயா எந்த வேலையாக இருந்தாலும் நாங்கள் செய்கிறோம் ..
ஆனால் பம்புசெட் வேலைக்கு மட்டும் நாங்கள் வரமாட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் .
பணம் எங்களுக்கு முக்கியமில்லை பண்ணையாருக்காகவும் முத்தையா அண்ணனுக்காகவும் நாங்கள் இங்கு வேலைக்கு வருகிறோம் மற்றபடி எங்களுக்கு இதில் எந்த ஒரு சந்தோஷமே கிடையாது என்று அந்த இரண்டு கூலித் தொழிலாளிகளும் பரந்தாமனிடம் பட்டென்று சொல்லிவிட்டார்கள்.

கூலித்தொழிலாளிகள் சொன்ன வார்த்தை மூவருக்கும் வெட்கமாக இருந்தது.
இப்படி விருப்பமில்லாமல் ஊர் மக்கள் வேலைக்கு வருகிறார்கள் என்று நினைத்து தலை குனிந்து கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்கள்.



குருவே நம்ம தொழில் செஞ்சு ரொம்ப நாள் ஆகுது .
சீக்கிரமா ஏதாச்சும் செய்யணும் குருவே . இல்லேன்னா நமக்கு அடுத்த வேலைக்கு யாரையாவது கையேந்தனும் சாப்பாடிற்துக்கு என்றான் ஒரு சிஷ்யன்.

அவசரப்படாதே சிஷ்யா முத்தையாவும் பண்ணையாரும் இறந்துவிட்டார்கள் .
இந்த ஊருல ரொம்ப ஒய்யாரமா சுத்திகிட்டு இருந்த சங்கரும் அவன் மனைவியும் காணாம போயிட்டாங்க.
இப்படி ஊரே சோகத்துல இருக்காங்க இந்த நேரத்துல நம்ம செல்போனை யார் வீட்டிலாவது ஒலிக்க வச்சு பயமுறுத்தினாலும் அவங்க நம்மகிட்ட வந்து சொல்லுவாங்க .
தயவுசெய்து அந்த பேயை விரட்டனும் சாமின்னு . பேய் விரட்டுவது போல நடிச்சு முடிச்சதும் அவங்க கிட்ட இருந்து நம்ம எதிர்பார்க்கிற பணம் கிடைக்காது

அவங்க சொல்லி ஒருவேளை நம்ம பணம் கொடுத்தால்தான் அந்தப் பேயை ஓட்டுவோம் என்று சொன்னாள் ..
நம் மேலே இருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் குறைந்துவிடும் அதனால ஊர் மக்கள் இப்பதான் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் மறந்துட்டு பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு போய் இருக்காங்க .
இனிமே அவங்க சம்பாதித்து சிறிது பணம் சேர்த்ததும் நம்மளோட வேலையை காட்டலாம் சிஷ்யா இப்போ நம்மளோட வேலை காட்டினாலும் பத்து ரூபா தர மாட்டாங்க தேவையில்லாமல் நம்ம தான் உடம்ப உடைச்சுக்கனும் அதனால இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நிலைமை சரியாகிவிடும் நாமளும் நாலு காசு பார்க்கலாம் என்றார் சாட்டையடி சாமியார்.

இன்னொரு விஷயத்தை கேள்விப்பட்டிங்களா குருவே.

என்ன விஷயம் டா.

பம்புசெட்டில் தங்கி வேலை செஞ்சா பண்ணையார் பசங்க இரண்டு மடங்கு பணம் தருவாங்களாம்.

நானும் கேள்வி பட்டேன் அதுக்குத்தான் ஒரு நல்ல யோசனை செஞ்சு வெச்சிருக்கேன் இதை மட்டும் நம்ம
செஞ்சுட்டோம்மனால் இந்த ஊர்ல நம்மள தட்டிக்க ஆளே கிடையாது சிஷ்ய என்றார் சாட்டையடி சாமியார்.

இருண்டு சிஷ்யர்களுக்கும் சந்தோஷம் பொங்கியது.
குரு நல்ல திட்டத்தை போட்டு வைத்திருக்கிறார் என்று நினைத்து ஆர்வமாக கேட்டார்கள் ..
என்ன திட்டம் குருவே சொல்லுங்கள் என்று.

சொல்கிறேன் நிதானமாக கேளுங்கள் நான் சொல்றபடி நீங்கள் கேட்டால் .
பிறகு நம்முடைய வாழ்க்கை எங்கேயோ போய்விடும் என்றார் சாட்டையடி சாமியார்.

சீக்கிரம் சொல்லுங்கள் குருவே சந்தோசம் எங்களால் தாங்கமுடியவில்லை என்றார்கள் இருவரும்.

பண்ணையார் குடும்பத்திற்கும் இந்த ஊர் மக்களுக்கும் பெரிய பிரச்சனையாக இருப்பது பம்புசெட்டில் தங்கி வேலை செய்பவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள் ..
அதனால் இந்த ஊரே பிதியில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதனால் பண்ணையார் பசங்களுக்கும் பெரிய தலைவலி

அதனால நான் ஒரு யோசனை சொல்கிறேன் கேளுங்கள் ..
நீங்கள் இருவரும் பம்புசெட் வேலைக்கு செல்லுங்கள் .
அங்கு என்ன பிரச்சனை எதனால் அங்கு வேலை செய்பவர்கள் காணாமல் போகிறார்கள் என்ற ரகசியத்தை நீங்கள் இருவரும் கண்டுபிடிக்க வேண்டும் .
அப்படி நீங்கள் கண்டுபிடித்துவிட்டால்
அந்த ரகசியத்தை பயன்படுத்தி பண்ணையார் பசங்களையும் .
இந்த ஊரையும் நம்ம சொல்றபடி ஆட்டிப் படைக்கலாம் .
பிறகு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் எப்படி என்னுடைய யோசனை என்றார் சாட்டையடி சாமியார்.

இரண்டு சிஷ்யர்களும் மவுனமாக தலை குனிந்து கொண்டார்கள்.

என்னப்பா... நான் இவ்வளவு பெரிய திட்டத்தை சொல்லி இருக்கேன் நீங்கள் இருவரும் தலை குனிந்து கொண்டு இருக்கிறீர்களே.

குருவே எங்களை நீங்கள் உங்கள் கையாலே அடித்துக் கொன்று விடுங்கள். நாங்கள் ஏற்கனவே உங்களுக்குத் தெரியாமல் அந்த குடிகாரன் வீட்டில் செல்போனை ஒலிக்க வைத்து விட்டு உங்களிடம் மாட்டிக்கொண்டோம் .
நீங்களும் எங்களை சாட்டையால் அடித்து விட்டு மன்னித்து விட்டீர்கள் என்று நாங்கள் நினைத்தோம் ஆனால் எங்களை இப்படி ஒரே அடியாக சாகஅடிப்பதற்காக திட்டம் போட்டு இருக்கிறீர்கள் .
இதை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப கவலையாக இருக்கு குருவே என்றான் ஒரு சிஷ்யன்.

என்னப்பா சொல்றீங்க.. நான் எங்கே உங்களை சாகடிக்க திட்டம் போட்டேன்.

அந்த பம்பு செட்டு வேலைக்கு போனவங்க இதுவரைக்கும் யாரும் திரும்பினதில்லை .
நாங்க மட்டும் எப்படி குருவே அந்த ரகசியத்தை கண்டுபிடிப்போம் எங்களுக்கும் ஏதாச்சும் நடக்கும் இல்லையா ..என்றான் சிஷ்யன்.

என்னுடைய சிஷ்யனாக இருந்துகொண்டு இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படலாமா சிஷ்யா.

வேணும்னா நம்ம மூணு பேருமே பம்புசெட் வேலைக்கு போலாம் குருவே .
அந்த ரகசியத்தை உங்கள் திறமையால் சீக்கிரமாகவே கண்டுபிடித்துவிடலாம் குருவே.

குரு என்றால் திட்டம் போடுவது தான் ...
சிஷ்யர்கள் என்றால் திட்டத்தை செயல்படுத்துவது தான்
நானே திட்டத்தைப் போட்டு
நானே கண்டுபிடித்து பிறகு உங்களுக்கு பங்கு கொடுக்கணும் இதைத்தானே நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றார் சாட்டையடி சாமியார்.

எங்கு போனாலும் மூன்று பேரும் ஒன்றாகத்தன் போகணும் குருவே.

சரி சரி ஏதோ பம்பு செட்டுக்கு வேலை செய்வது போல சென்று இரகசியத்தை கண்டுபிடிப்பிங்க என்று பார்த்தேன் .
என்ன செய்வது . எனக்கு கிடைத்த சிஷ்யர்கள் இப்படி பயந்தாங்கோலி களாக இருக்கிறார்களே இனி உங்களை நம்பி எந்த விஷயத்தில் இறங்குகிறது என்று சளித்துக் கொண்டே சொன்னார் சாட்டையடி சாமியார்.

நாமே ஒரு சோம்பேறி ..
பம்புசெட் வேலைக்கு இவனுங்கலை ரெண்டு பேரையும் அனுப்பி . நாலு காசு பார்க்கலாமுன்னு பார்த்தா இவனுங்க நமக்கு மேல சோம்பேறிய இருக்கானுங்க.
என்ன பண்றது குரு சோம்பேறி என்றால் .சிஷ்யர்களும் அப்படித்தான் இருப்பானுங்க
என்று மனதில் நினைத்துக் கொண்டார் சாட்டையடி சாமியார்.


வீட்டின் மொட்டைமாடியில் பரந்தாமன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

பல லட்சங்களை செலவு செய்து விதைகளை வாங்கி வந்து இருக்கிறோம் .
அவைகளை பயிர் செய்தால்தான் நாமக்கு நல்ல லாபம் கிடைக்கும் ஆனால் இந்த ஊர் மக்கள் யாரும் பம்புசெட்டு வேலைக்கு வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்கள் நமக்கு எல்லா நிலத்தையும் விவசாயம் செய்ய முடியாது போல் தெரிகிறதே என்று நினைத்து வருத்தப் பட்டான் பரந்தாமன்

எல்லாம் விஷயங்களும் நமக்கு சாதகமாகவே அமைந்து வருகிறது நமக்கும் நல்ல நேரம் வந்துவிட்டது இந்த பம்புசெட்டு வேலைக்கும் நிச்சயம் ஒரு வழி இருக்கும் .
அது என்ன வழி என்று நம்மதான் கண்டுபிடிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே இருந்தான் பரந்தாமன். அப்போது எதிரே சாந்தி நின்றிருப்பதை தற்செயலாக பார்த்துவிட்டான் பரந்தாமன்.

என்னங்க யோசனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க தனியா மொட்டை மாடியில கையாட்டியபடி என்றாள் சாந்தி.

உடனே பரந்தாமன் முகத்தை இயல்பாக மாற்றிக்கொண்டு ஒன்றும் இல்லை சாந்தி.
இனி நிறைய பொறுப்புகள் இருக்கு இதுக்கு முன்னாடி அப்பா நமக்கு யோசனை சொல்லுவாரு .இப்பதான் அவர் இல்லையே அதனால எதை எதையோ நினைத்து யோசனை செஞ்சிருக்கேன் .என்று இயல்பாக சொன்னான் பரந்தாமன்.

நீங்க யோசிக்கிறது இருக்கட்டும் உங்க தம்பிங்க ஏற்கனவே யோசித்து ஒரு முடிவு பண்ணி வச்சிருக்காங்க.
உங்ககிட்ட சொல்லனுமா கீழே வந்து என்னன்னு கேளுங்க என்றாள் சாந்தி.

இவனுங்க என்ன முடிவு செஞ்சு இருக்கானுங்க நமக்கு தெரியாம என்ற குழப்பத்தோடு பரந்தாமன் சாந்தியும் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டுக்குள் சென்றார்கள்.

அண்ணே... நானும் தீனாவும் ஒரு முடிவு பண்ணி இருக்கோம் .
இந்த முடிவுக்கு அண்ணியும் சம்மதம் சொல்லிட்டாங்க. நீங்க ஒரு வார்த்தை சொன்னா .
நாளையிலிருந்து நம்ம தோட்டம் ஒரு அளவுக்கு செயிப்பா வளரும் நம்ம அப்பாவோட ஆத்மாவும் நிம்மதியாக இருக்கும் என்றான் சந்திரன்.

நீ சொல்றது எனக்கு ஒண்ணும் புரியலை சந்திரா என்றான் பரந்தாமன்.

உடனே சாந்தி குறுக்கிட்டு ..
நான் சொல்கிறேன் கேளுங்க .உங்க தம்பிகள் இரண்டு பேரும் இருக்கிற நிலத்தை எல்லாம் ஊர் மக்களுக்கு கொடுத்து விட்டு. அவர்களை விவசாயம் செய்ய சொல்லலாம் ..
பிறகு நிலத்திற்கான குத்தகை பணத்தை நம் வாங்கிக்கொள்ளலாம் அவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் .
நமக்கும் எல்லா நிலங்களிலும் விவசாயம் நடக்கும் என்று உங்கள் தம்பிகள் முடிவு செய்திருக்கிறார்கள் .
இதற்கு உங்க சம்மதத்தை கேட்கணும்னு சொல்றாங்க என்றால் சாந்தி.

பரந்தாமனுக்கு கோபம் தலைக்கு ஏறியது என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தான்.

ஊர் மக்கள் எல்லாம் நம் தோட்டத்திற்கு வேலைக்கு வருவதற்கு தயங்குகிறார்கள் அதுமட்டுமில்ல பம்புசெட்டு வேலைக்கு யாருமே வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்ம ஊர் மக்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்து விட்டால் அவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ஆளுக்கு ஒருநாள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்வார்கள் விவசாயமும் நல்லபடியா நடக்கும் ஊர்மக்களும் நல்லபடியா பிழப்பார்கள் நமக்கும் ஓரளவுக்கு வருமானம் கிடைக்கும் அதனால்தான் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம் அண்ணா
இந்த முடிவுக்கு நீங்களும் சம்மதிக்க வேண்டும் என்றான் தீனா.

உங்களுக்கே ஒரு பிடி மண் கூட கிடையாது .நீங்கள் இருவரும் இந்த ஊருக்கே நிலத்தை பங்கிட்டு தர வேண்டுமா என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் கோபத்தையும் அடக்கிக் கொண்டு நிதானமாக சொன்னான்.

தம்பி நீங்க சொல்றது சரிதான் .
ஊர் மக்களுக்கு நிலத்தை கொடுப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை
அதேபோல நம் அப்பா உங்கள் இருவருக்கும் திருமணத்தை நடத்த வேண்டும் என்று துடியாய் துடித்து இருந்தார் இது உங்களுக்கும் தெரியும் .
இந்த ஊருக்கே தெரியும் இப்படி அவர் ஆசையை நான் நிறைவேற்ற வேண்டாமா .உங்களுக்கு திருமணத்தை முடித்ததும்
உங்கள் மனைவி வந்து என் நிலத்தை ஊர் மக்களுக்கு கொடுத்தீங்க என்று கேள்வி கேட்டால் என்னால் எப்படி பதில் சொல்ல முடியும் என்றான் பரந்தாமன்.

பரந்தாமன் சொன்னது சாந்திக்கு சரியாகப்பட்டது. ஆமாம் உங்கள் அண்ணன் சொல்வதுதான் சரி என்றாள் சாந்தி.

அண்ணே இனி எங்களுக்கு திருமணம் எல்லாம் வேண்டாம் அண்ணா என்று சோகத்தோடு சொன்னான் சந்திரன்.

உங்களுக்கு ஒன்றும் தெரியாது ஊரில் உள்ளவர்கள் என்னை தான் தவறாகப் பேசுவார்கள் பண்ணையார் இருந்திருந்தால் சந்திரனுக்கும் தீனாவுக்கும் திருமணத்தை செய்து இருப்பார் ஆனால் பரந்தாமன் அப்படி செய்யவில்லையே என்று கேவலமாக பேசுவார்கள் .
அதனால் முதலில் உங்கள் திருமணம் முடிந்ததும் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் அதுவரைக்கும் யாரும் கவலைப்பட வேண்டாம் .
நமக்கு நல்ல காலம் இனி வரும் என்று தம்பிகளுக்கு பாசமாக ஆறுதல் சொன்னான் பரந்தாமன்.

பரந்தாமனின் பேச்சில் சாந்தியும் சந்திரனும் தீனாவும் பாசத்தால் பணிந்து போனார்கள் .
பிறகு மூவரும் அவரவர் அறைக்கு சென்றார்கள்.

நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கு திருமணமே கிடையாது என்று மனதில் நினைத்துக் கொண்டு சிரித்தான் பரந்தாமன்.

பிறகு மறுபடியும் பரந்தாமன் யோசிக்க ஆரம்பித்தான்.
அப்போது தீனா சொன்னது அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது ஊர் மக்கள் ஆளுக்கு ஒரு நாள் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து விவசாயத்தை நல்லபடியாக நடத்துவாங்க என்று சொன்ன விஷயம் அவனுக்கு யோசிக்கத் தோன்றியது .
ஆளுக்கு ஒரு நாள் பம்புசெட்டில் தங்கி ஊர் மக்கள் வேலை செய்யும்போது அந்த வேலையை நாம் ஏன் பார்க்கக்கூடாது என்று யோசித்தான் பரந்தாமன்.


பரந்தாமனின் யோசனை கைகூடுமா ...
பொறுத்திருந்து பார்க்கலாம்..


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
தம்பி சொல்வது போல ஒரு நாளைக்கு ஒரு குடும்பம் பம்புசெட்டில் தங்கி வேலை செய்தாள் யாருக்கும் பயம் இருக்காது...
அதேபோல நாம் ஏன் ஒரு நாளைக்கு ஒருவர் என்ற கணக்கில் பம்புசட்டில் வேலை செய்யக்கூடாது என்று யோசித்தான் பரந்தாமன்

அவனுக்கு இந்த யோசனை சரியாகப்பட்டது ..
பம்புசெட்டில் இருக்கும் பணத்தில் பல லட்ச ரூபாயை எடுத்து இதுவரைக்கும் செலவு செய்து விட்டோம் ..
இனி விவசாயம் நன்றாக நடந்தால் தான் . செலவு செய்த பணம் இருமடங்காக நமக்கு கிடைக்கும் அதனால் ஒரு நாளைக்கு. தீனா மற்றொரு நாளைக்கு . சந்திரன் மூன்றாவது நாள்.
நாமே செல்லலாம் பம்புசெட்டில் இரவு முழுக்க இருந்து தண்ணீர் பாய்ச்சினால் விவசாயம் நன்றாக இருக்கும் . இப்படி ஒவ்வொரு நாளைக்கு மூவரும் மாறி மாறி வேலை செய்தால் யாருக்கும் கலைப்பு இருக்காது .
கஷ்டம் தெரியாது என்று பரந்தாமன் யோசித்தான் . இதை தம்பிகளிடம் சமயம் பார்த்து சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தான் பரந்தாமன்.

பிறகு அன்று காலையில் வழக்கம்போல மூவரும் தோட்டத்திற்கு கிளம்பினார்கள் இவர்களுக்கு முன்பாகவே ஊர்மக்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

பிறகு களத்துமேட்டில் பைக்கை நிறுத்திவிட்டு மூவரும் சற்று சுறுசுறுப்பாக நடந்து சென்று பம்புசட்டில் இருக்கும் .
மண்வெட்டிகளை ஆளுக்கு ஒன்றை எடுத்துக்கொண்டு வேலை செய்தார்கள்.

பிறகு மதிய நேரம் ஆனது .,...

களைப்போடு பம்பு செட்டின் மரத்தின் நியல்களில் வந்து மூவரும் ஓய்வெடுத்தார்கள்

அப்போது சந்திரன் சொன்னான் அண்ணே.. தோட்டத்துல வேலை செய்கிறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணே. இவ்வளவு நாளா இந்த மாதிரி நம்ம கஷ்டப்படாம இருந்துவிட்டோம் இந்த ஊர் மக்களோடு மக்களாய் வேலை செய்யறது . நேரம் போறதே தெரியல . சில பேர் பாட்டு பாடிக்கொண்டே வேலை செய்கிறார்கள் . சில பேர் சினிமா கதை பேசிக்கொண்டே வேலை செய்கிறார்கள் .
இப்படி சந்தோசமாக ஒன்றாக வேலை செய்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கு .
கஷ்டமே தெரியல என்று சற்று சிரித்துக்கொண்டே சந்தோஷமாக சொன்னான் சந்திரன் .

ஆமாம்பா ...எனக்கும் இதுபோல கஷ்டப்படுவது ரொம்ப பிடிக்கும் ஊர் மக்கள் எல்லாம் நம்ம தோட்டவேலையை ஆளாளுக்கு பங்குபொட்டு செய்வார்கள் அதனால நம்ம இங்க வேலை செய்யாமல் இருந்தோம் .
அதனால இந்த சந்தோஷத்தை எல்லாம் நம்ம அனுபவிக்க முடியல ஆனா இப்ப நிலைமை அப்படி இல்ல தம்பி .
நாமளும் இனிமே வேலை செஞ்சாதான் நம்ம குடும்பம் முன்னேறும் என்றான் பரந்தாமன் .

என்ன சொல்றீங்க ... நம்ம வேலை செய்வதற்கும் குடும்பம் முன்னேற்றத்துக்கும் என்ன சம்பந்தம் .
நம்ம செய்ற வேலையை தான் ஊர்மக்கள் செய்யப் போறாங்க அப்புறம் எப்படி அண்ணே என்று புரியாமல் சொன்னான் தீனா .

ஊர் மக்கள் எல்லோரும் தோட்டத்தில்தான் வேலை செய்கிறார்கள் .
நாமளும் தோட்டத்தில் தான் வேலை செய்கிறோம் .
நம்ம செய்யவில்லை என்றாலும் அந்த வேலையை ஊர்மக்கள் செய்வார்கள் . ஆனால் ஊர் மக்கள் இப்போது செய்யாத வேலை
நம்ம பம்புசெட்டில் இரவு முழுக்க தங்கி தண்ணீர் பாய்ச்சும் வேலை தான் இப்போதைக்கு அவர்கள் செய்யவில்லை .
அந்த வேலையை நம்ம மூணு பேரும் செய்தால் விவசாயமும் பெருகும் . ஊர் மக்களுக்கும் நிறைய வேலை கிடைக்கும் அவங்களும் சந்தோஷமாக இருப்பார்கள் . நமக்கும் நாலு காசு கிடைக்கும் அதனால்தான் சொல்கிறேன் இனி நாமளும் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்று . இப்போது புரிந்ததா தம்பி என்று தீணாவிடம் பரந்தாமன் சொன்னான்.

அப்போது தீனா சற்று சந்தோஷமாக சொன்னான் .... ஆமாம் அண்ணா இந்த யோசனை எங்களுக்கு வரவில்லையே .
நல்ல யோசனையாக இருக்கிறதே பம்புசெட்டில் தண்ணி பாய்க்கிற வேலையை நம்ம மூணு பேரும் பார்த்துக்கொண்டாள் .
தோட்ட வேலையை இந்த ஊர் மக்கள் பார்த்துக்கொள்வார்கள் பிறகு எந்த பிரச்சினையும் இல்லை என்றான் தீனா .

பிறகு சந்திரனும் நல்ல ஒரு யோசனை அண்ணா .
ஊர் மக்களுக்குத்தான் பம்புசெட்டில் தங்கி வேலைசெய்வதற்கு பயம் ஏனென்றால் .
நம் குடும்பம் காணாமல் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கு உண்டு . ஆனால் நாம் மூன்று பேர் பொரத்தவரை நமக்கு பயம் கிடையாது ஏனென்றால் நடந்த தவறுகள் எல்லாமே நம்ம தான் செய்தோம் அதனால் நமக்கு பயம் கிடையாது இனிமேல் பம்புசெட்டில் ஒரு நாளைக்கு ஒருவர் என்று இரவு முழுக்க தங்கி தண்ணீர் பாய்ச்சலாம் என்று சந்திரனும் சொன்னான் .

பரந்தாமனுக்கு எல்லை இல்லா சந்தோஷம் ...எப்படியோ இனி தம்பிகளை பம்புசெட் வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் நமக்கும் இனிவரும் காலத்தில் வருமானம் நிறைய கிடைக்கும் . பம்பு செட்டில் இருந்து எடுத்த பணத்திற்கு இருமடங்காக போட்டுவிடவேண்டும் அப்போதுதான் இன்னும் சில மாதங்களில் பணப்பெட்டி நிரம்பிவிடும் நம்முடைய ஆசையும் நிறைவேறும் . என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு இயற்கை கத்தை ரசித்து அனுபவித்து தரையில் படுத்துக் கொண்டான் பரந்தாமன் சந்தோசத்தில்.


சிறிது நேரம் ஓய்வு எடுத்த உடனே பரந்தாமன் .
வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளிகளை அழைத்தான்.

நாளை முதல் நீங்கள் முழு நேர வேலை செய்ய வேண்டும் ஏனென்றால் . இன்று இரவு முதல் பம்புசெட் வேலைக்கு நாங்களே செய்யலாம் என்று முடிவு செய்து விட்டோம் .
இன்று இரவு என் தம்பி தீனா பம்புசெட்டில் தங்கி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையை செய்வான் .மறுநாள் சந்திரன் . அதன் பிறகு நான் வருவேன் .
இப்படி மூவரும் .மாறி மாறி பம்புசெட் வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் .
நீங்கள் நாளை முதல் முழு நேர வேலையை செய்யுங்கள் .அதற்கான கூலியும் வாங்கிக் கொள்ளுங்கள் இதில் உங்களுக்கு சந்தோசம் தானே என்றான் பரந்தாமன் .

அப்போது அனைவரும் எங்களுக்கு சந்தோஷம்தான் என்று சொன்னார்கள் .

பிறகு ஒரு தொழிலாளி சொன்னார் ஐயா நீங்கள் எங்கள் மேலே கோபம் ஒன்றும் படவில்லையே என்றார் ..

நான் ஏன் உங்கள் மீது கோபப்பட வேண்டும் என்று பரந்தாமன் சொன்னான்.

நீங்கள் இரண்டு மடங்கு பணம் கொடுக்கிறேன் பம்புசெட்டில் தங்கி வேலை செய்யுங்கள் என்று சொன்னீர்கள் .
ஆனால் எங்களுக்கு பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு பயமாக இருந்தது . ஆனால் இப்போது நீங்களே அந்த வேலை செய்வது எங்களுக்கு மனசு கஷ்டமாக இருக்கிறது . எப்படிப்பட்ட குடும்பம் நீங்கள் .
உங்கள் அப்பா பண்ணையார் எங்களுக்கு தெய்வமாக இருந்தார் அவர் பிள்ளைகளாக இருக்கும் உங்களை நாங்கள் இப்போது கஷ்டப்படுத்தி விட்டோம் என்ற வருத்தம் எங்களுக்கு இருக்கிறது ஐயா எங்களை மன்னித்துவிடுங்கள் வேறுவழியில்லை எங்களுக்கு பம்புசெட்டில் தங்கி வேலை செய்வதற்கு இன்னும் பயமாகத்தான் இருக்கிறது .. இப்போது அந்த வேலையை நீங்கள் செய்வதும் எங்களுக்கு தர்ம சங்கடமாகவும் இருக்கிறது இருந்தாலும் முத்தையாவின் ஆசைப்படி இந்த பண்ணையார் தோட்டம் செழிப்பாக வளர வேண்டும் .
அதனால் நாங்கள் அனைவரும் நாளை முதல் முழு நேர வேலையை செய்து இந்தப் பண்ணையார் தோட்டத்தை மறுபடியும் பசுமையாக மாற்றி விடுவோம் என்று எல்லோரும் சந்தோஷமாக சொன்னார்கள் .

எங்களுக்கு உங்கள் மேல் எந்த வருத்தமும் இல்லை .
உங்கள் பயம் நியாயமானதுதன் யாருக்குமே இந்த பயம் வருவது இயல்பு தான் .
நாங்களும் மக்களோடு மக்களாக இருந்தால் .இந்த முடிவை தான் எடுத்து இருப்போம் அதனால் உங்கள் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை .
இனி நீங்கள் தோட்ட வேலையை மும்மரமாக செய்யுங்கள் .
பம்புசெட் வேலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பரந்தாமன் ஊர் மக்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து மூன்று பேரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.

இரவு நேரம் ஆனது.....


தம்பி பார்த்து நிதானமா வேலை செய் .. இரவு நேரம் பூச்சி புழு சுத்திகிட்டு இருக்கும் .அதனால கவனமா இரு .என்று பரந்தாமன் தீனாவுக்கு சொல்லிக்கொண்டு இருந்தான் .

சாந்தி ...சூடாக இஞ்சி டீ போட்டு அதை ஒரு பிளாஸ்கில் ஊற்றி தீணாவிடம் கொடுத்தாள். தம்பி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஓய்வு எடுத்துக்கொள் .ரொம்ப கஷ்டப் படாதே உங்களுக்கு இது பழக்கமில்லாத வேலை .
அதனால நிதானமா செய்ய தம்பி என்றாள் சாந்தி ..

அப்போது பரந்தாமனின் மகன் இதை பார்த்துக் கொண்டிருந்தான் உடனே ஓடிவந்து சித்தப்பா
இந்த நேரத்துல நீங்க எங்க போறீங்க . எல்லோரும்
பார்த்து போ .பார்த்து போ .பார்த்து வேலை செய் என்று சொல்றாங்களே நீங்க எங்க வேலைக்கு போறீங்க என்று புரியாமல் கேட்டான் .

உடனே தீனா அவனைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டு எங்கும் இல்லடா செல்லம் .
சித்தப்பா நம்ம தோட்டத்திற்கு வேலைக்கு போறேன் .

ஏன் இவ்வளவு நாளா போகாம இருந்தீங்க என்றான் அந்த சிறுவன்

இவ்வளவு நாளா அந்த வேலையையே ஒருத்தர் செஞ்சுக்கிட்டு இருந்தார் அவர் காணாமல் போய்விட்டார் .
அதனால அந்த வேலையை நான் செய்ய போறேன்.

அன்னைக்கு ஒரு தாத்தா செத்து போயிட்டாரே. அதுக்கப்புறம் தாத்தாவும் செத்துப் போயிட்டாரு அதனால தானே.

ஆமாண்டா செல்லம் .. அந்தத் தாத்தா ஒட புள்ள தான் காணாம போயிட்டாரு . அதனால தான் சித்தப்பா அந்த வேலை செய்ய போறேன் என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கீழே இறக்கி விட்டு கிளம்பினான் தீனா... டீ பிளாஷ் எடுத்துக்கொண்டு
டார்ச்லைட்உடன் .

அப்போது பரந்தாமன்... தம்பி பைக் எடுத்துச் சொல் என்றான் .

வேண்டாம் அண்ணா இந்த பைக்கில் எப்போதுமே நம்ம மூன்று பேரும் ஒன்றாக தான் சென்றிருக்கிறோம் .
இந்த பைக்கில் நம் மூன்று பேரில் யாரும் தனியாகவே இதுவரைக்கும் செல்லவில்லை . அதனால் நான் நடந்தே போகிறேன் என்றான் தீனா

இருக்கட்டும் தம்பி இரவு நேரம் தனியாக நடந்து செல்லாதே பைக் எடுத்துக்கொண்டு போ இதில் ஒன்றும் தப்பில்லை என்றால் சந்திரன் ..

வேண்டாம் அண்ணா இருக்கட்டும் நான் நடந்தே செல்கிறேன் என்றான் தீனா ..

உடனே சாந்தி ....உங்கள் அண்ணன் தம்பி பாசத்தை எல்லாம் காலையில பேசிக்கிங்க இப்ப நேரம்மாச்சு அவரை போக விடுங்க என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்

பிறகு தினாவும் சிரித்தபடி தோட்டத்திற்கு நடந்து சென்றான்.


எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தீனா டார்ச் லைட் அடித்தபடி நடந்துச் சென்று இருந்தான் . சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான் அப்போது பார்க்கும் இடமெல்லாம் ஒரே இருட்டாக இருந்தது . வெளிச்சம் ஒரு இடத்தில் கூட இல்லை . அமைதியான சூழல் தோட்டத்தின் மையப்பகுதியில் நின்றுகொண்டு சுற்றும் முற்றும் டார்ச் லைட் அடித்து பார்த்தான். அப்போது அவன் மனம் லேசாக பயப்பட ஆரம்பித்தது .

என்ன இவ்வளவு இருட்டாக இருக்கிறதே ஒரு சத்தம் கூட கேட்கலையே என்று நடந்து சென்று கொண்டிருந்தான் .
அப்போது திடீரென்று ஒரு தவக்களை சத்தம் போட்டது
அந்த அமைதியான சூழலில் அந்த தவக்களை சத்தம் தீனாவுக்கு சற்று திக்கென்று ஆனது .

பிறகு நடந்து செல்ல ஆரம்பித்தான் அப்போது சற்று தூரத்தில் பம்பு செட்டின் மேலே லைட் எரிந்து இருப்பதை கவனித்தான் அதேசமயம் பம்புசெட்டை பார்த்ததும் சங்கர் ரேகாவை கொலை செய்த ஞாபகம் அவனுக்கு வந்துவிட்டது .
மேலும் அவனுக்கு பயம் உண்டானது பிறகு மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு
பம்பு சட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். வயல்வெளிகளில் பூச்சிகள் சத்தம் போட்டது .
அந்த சத்தம் அவனுக்கு மேலும் பயத்தை உண்டாக்கியது ஆரம்பத்தில் தைரயமாக இருந்த தீனா பம்புசெட்டை நோக்கிச் செல்லச் செல்ல பயமும் அதிகமானது .

பைக் நிறுத்தும் களத்துமேடு வந்தது . அந்த இடத்தில் ஒரு கம்பத்தில் லைட் எரிந்து கொண்டிருந்தது . அந்த வெளிச்சம் சற்று அவனுக்கு ஆறுதலாக இருந்தது .அங்கேயே நின்று விட்டான் வெளிச்சத்தில்

அங்கிருந்து பம்புசெட்டு இன்னும் சிறிது தூரம் இருக்கிறது அங்கே செல்வதற்கு தீனாவுக்கு சற்று பயமாகவே இருந்தது .
வேறு வழி இல்லை பம்பு செட்டுக்கு சென்று தண்ணீர் மோட்டாரை ஆன் செய்து தண்ணீர் பாய்ச்சும் வேலையை இன்று இரவு செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு மீண்டும் நடப்பதற்கு தயாரானான் .

அப்போது அவன் நடக்க தொடங்குவதற்கும் களத்துமேட்டில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு வெடித்து சிதறியது. உடனே அதிர்ந்து போனான் தீனா .

அந்த இடத்தில் ஒரே இருட்டாக இருந்தது அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை

இந்த நேரம் பார்த்து லைட் வேடிச்சிடிச்சே என்று எண்ணி பயந்தான் தீனா .
பிறகு மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் பாம்பு செட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அப்போது அவன் பயத்தோடு வரப்பு மேட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் . ஏதோ ஒரு கருப்பு உருவம் வரப்பின் மீது உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்தான் தீணா..


வீடு திரும்புவான தீனா பொறுத்திருந்து பார்க்கலாம்....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
எதிரே வரப்பில் ஏதோ உட்கார்ந்து இருப்பது போல தெரிகிறதே என்ற பயத்தோடு தீனா டார்ச் லைட்டை நன்றாக அடித்தான் அந்த இடத்தில் அப்போது அவன் கண்களுக்கு எந்த உருவமே தெரியவில்லை .
உடனே டார்ச் லைட் ஆப் செய்தான் அப்போது மீண்டும் அதே இடத்தில் ஒரு உருவம் கருப்பாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது ...
உடனே தீனாவுக்கு கை கால் லேசாக உதற ஆரம்பித்தது .
என்ன இது டார்ச் லைட் அடித்து பார்த்தால் எதுவுமே தெரியலை லைட்டை ஆப் செய்தாள் உருவம் தெரிகிறது என்று மனதில் நினைத்துக் கொண்டு மறுபடியும் டார்ச் லைட் ஆன் செய்து .
அந்த வரப்பு மீது அடித்தான் அப்போது உருவம் தெரியவில்லை டார்ச் லைட்டை ஆப் செய்தன் அந்த உருவம் தெரிகிறது ..

என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் அதே இடத்தில் நின்றான தீனா.

பிறகு பயத்தோடு மீண்டும் டார்ச் லைட்டை அடித்தான் .
உருவம் தெரியவில்லை
டார்ச் லைட் அடித்தபடியே அந்த இடத்தை நோக்கி சென்றான்
அந்த இடம் வரும் போது அவன் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை டார்ச் லைட்டை ஆப் செய்யாமல் அடித்துக் கொண்டே வந்தான் .

பிறகு சிறிது தூரம் கடந்து சென்றதும் மீண்டும் திரும்பி
அந்த இடத்தில் பார்த்தான் அப்போது அந்த உருவம் அங்கேயே உட்கார்ந்து இருப்பதை பார்த்ததும் தீனாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே அந்த இடத்தை டார்ச் லைட்டை அடித்தான் உருவம் தென்படவில்லை.
அப்போது அவன் மனதுக்கு உறுதியானது இங்கு ஏதோ ஒரு அசம்பாவித சக்தி இருக்கிறது என்று முடிவு செய்தான் .

பிறகு அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்ல ஆரம்பித்தான் அப்போது வயல்வெளியில் இரண்டு எருமை மாடுகள் மேய்வது போல அவன் கண்ணுக்கு தெரிந்தது உடனே அந்த இடத்தில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான் எருமை மாடுகள் 2 பயிரை பிடுங்கித் தின்று கொண்டிருந்தது .

உடனே அந்த எருமையை சத்தம் போட்டு அதட்டினான் .
அப்போது அவன் குரல் அவனுக்கே பயமாக இருந்தது.
அந்த அமைதியான சூழலில் அவன் அதட்டிய குரல் அவனுக்கு பயமாக இருந்தது . இருந்தாலும் அந்த எருமையை அதட்டிக்கொண்டு வயலில் இறங்கி ஓடினான் .
சிறிது தூரம் ஓடியதும் அந்த இரண்டு எருமை மாடுகளும் கரும்பு தோட்டத்தின அருகே நின்றது தீனாவும் அந்த எருமை மாட்டை மடக்கி வெளியே விரட்டி விடலாம் என்று முடிவு செய்து அருகில் சென்றதும் இரண்டு எருமை மாடுகளும் திடீரென்று அவன் கண்ணுக்கு தென்படவில்லை அப்போது அவனுக்கு மீண்டும் சந்தேகம் வந்தது .
உண்மையாகவே எருமை மாடுகளா இல்லை பேய்யாக இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அதேபோல டார்ச் லைட்டை ஆப் செய்து விட்டு இருட்டில் பார்த்தான் இரண்டு எருமை மாடுகளும் கரும்பு தொட்ட பக்கத்தில் நின்று கொண்டு இருக்கிறது .
அதன் கண்களில் வெளிச்சம் மட்டும் நன்றாக தெரிகிறது தீனாவுக்கு மேலும் பயம் அதிகமானது .
இது எருமை மாடு இல்லை ஏதோ நம்மை பயமுறுத்துகிறது
அதனால் நம் பம்பு செட்டுக்கு போய்விடலாம் என்று நினைத்து திரும்பினான் தீனா .

பிறகு மீண்டும் வரப்பின் மீது பம்புசெட்டை நோக்கி நடந்து கொண்டிருக்கும் பொழுது திடீரென்று கரும்பு தோட்டத்தில் ஒரு குள்ளநரி ஊளை இட்டது .
அந்தக் குள்ள நரியின் சத்தம் தீனாவுக்கு பயம் மேலும் அதிகமானது .
என்ன செய்வது என்று புரியாமல் நின்றான் .
அவன் கால்கள் பம்புசெட்டை நோக்கி செல்வதற்கு தயக்கம் காட்டியது . அவன் மனம் பம்பு செட்டுக்கு சென்று இன்று இரவு வேலை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தது . இப்படி இக்கட்டான நிலைமையில் தீனா மாட்டிக் கொண்டு நின்றிருந்தான் .

அப்போது அவன் பக்கத்தில் பின்னால் யாரோ நின்றிருப்பது போல உணர்ந்தான் .
சட்டென்று திரும்பிப் பார்த்தால் யாருமே இல்லை உடனே கால்வாயில் இருக்கும் தண்ணீரில் யாரோ ஒடுவது போல சத்தம் கேட்கிறது . அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை ஒருபக்கம் குள்ளநரி ஓஹோ என்று சத்தம் பொடுது ஒரு பக்கம் யாரோ தண்ணீரில் ஓடுவது போல சத்தம் கேட்கிறது இன்னொரு பக்கம் கரும்புத் தோட்டத்தில் பக்கத்தில் இரண்டு மாடு இவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இப்படி இக்கட்டான நிலைமையில் எப்படி இங்கு வேலை செய்வது என்று புரியாமல் பயத்தின் உச்சத்திற்கே சென்று விட்டான் தீனா .

பிறகு வேறு வழியில்லாமல் பம்புசெட்டை நோக்கி நடந்து சென்றான .
அப்போது அவன் மனம் சொன்னது பகலில் பச்சை பசுமையாக எங்கு பார்த்தாலும் ரசிக்கும்படியாக இருந்த நமது தோட்டம் .
இந்த இரவில் பார்க்கும் இடமெல்லாம் ஏதோ ஒரு உருவம் தெரிகிறதே என்று நினைத்து பயந்து போனான் தீனா .

பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு பயத்தோடு பம்புசெட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தான் அப்போது லேசாக யாரோ ஒரு பெண் அழுவது போல அவனுக்கு சத்தம் கேட்டது உடனே அதிர்ச்சியில் அப்படியே நின்றுவிட்டான் .
அந்தப் பெண் லேசாக அழுது கொண்டிருக்கிறாள் ஆனால் எங்கிருந்து வருகிறது இந்த சத்தம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை .
திடீரென்று அழுது கொண்டிருந்த பெண் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள் . உடனே தீனா பயத்தில் வரப்பின் மீது இருந்து கீழே விழுந்தான் . அவன் கால்கள் சரியாக நிற்க முடியவில்லை அவன் கைகள் உதறியது இந்த நேரத்தில் இப்படி ஒரு பெண் சிரிக்கிறாள் கண்டிப்பாக இவள் ரேகாதான் என்று முடிவு செய்தான் தீனா

அப்போது அவனுக்கு ரேகாவை கடப்பாரையால் முதுகில் குத்தியதை நினைத்துப்பார்த்தான் அவள் துடிதுடித்து இறந்ததையும் நினைத்துப் பார்த்தான்.
இன்று இரவு நமக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று முடிவு செய்துகொண்டான்
பிறகு இடது கையிலிருந்த டி பிளாஸ்கை கீழே போட்டுவிட்டான் இனி இது தேவைப்படாது என்று நினைத்து.


அப்போது பம்பு செட்டின் அருகில் ஒரு ஆண் குரல் இரும்புவது போல சத்தம் கேட்கிறது . என்ன செய்வது என்று தெரியாமல் தீனா பயத்தில் நடுங்கினான் உடனே வீட்டுக்கு திரும்பி விடலாம் .
இன்று இரவு இங்கு நம்மால் தனியா வேலை செய்ய முடியாது
அதனால் இங்கிருந்து கிளம்பி விடலாம் என்று அவன் உள் மனசு ஒரு பக்கம் சொன்னது .
மறுபக்கம் இந்த விஷயத்தை அண்ணனிடம் சொன்னாள் நம்மை கேவலமாக நினைப்பார் ..
பேய் பிசாசுக்கு பயந்துகொண்டு இப்படி வேலை செய்யாமல் திரும்பி வந்து விட்டானே என்று நம்மை திட்டுவாரே என்று நினைத்து அவன் மனம் கவலைப்பட்டது .

அதனால் மறுபடியும் மனதைத் தேற்றிக்கொண்டு பப்பு செட்டை நோக்கி நடந்து சென்றான் அப்போது அங்கு அந்தப் பெண் குரல் ஒய்யாரமாக சிரித்தது .
அந்தக் குரல் ரேகாவின் குரலா என்று கவனித்தான் தீனா .
பிறகு ஆண் குரலும் சிரிக்க ஆரம்பித்தது இது சங்கரின் குரலா என்று யோசித்தான் தீனா .

இரண்டு குரள்களிலும் . ஒரு வெறி பிடித்தவர்கள் சிரிப்பது போல இருந்தது . அப்போது அவன் முடிவு செய்தான் கண்டிப்பாக இது சங்கரும் ரேகாவும் தான் இன்னைக்கி இவங்க நம்மை சும்மா விடமாட்டார்கள் என்று முடிவு செய்தான் . இருந்தாலும் பம்புசெட்டை திறந்து தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு உடனே வீட்டுக்கு திரும்பி விடலாம் தண்ணீர் ஏதோ ஒரு நிலத்திற்கு பாயட்டும் என்று முடிவு செய்துகொண்டு பம்பு செட்டின் அருகில் சென்று விட்டான் .

பம்பு செட்டின் மேலே எரிந்துகொண்டிருந்த மின்விளக்கு வெளிச்சம் அவனுக்கு சற்று ஆறுதலாக இருந்தது . அப்போது அருகில் இருந்த கிணற்றில் மீண்டும் ஒரு தேங்காய் விழுந்தது அந்த சத்தம் அவனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
இன்று நம் வசமாக மாட்டிக்கொண்டோம் என்று நினைத்தான் தீனா .

பிறகு பம்புசெட்டை உற்றுப் பார்த்தான் எந்த உருவமும் தெரியவில்லை பம்புசெட்டு குள்ளே சங்கரும் ரேகாவும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . அவனுக்கு பம்புசெட்டின் கதவை திறப்பதற்கு பயமாக இருந்தது என்ன செய்வது என்று முழித்தான் அப்போது பம்புசெட்டு மேலே எரிந்துகொண்டிருந்த விளக்கு வெடித்துச் சிதறியது .
அங்கு ஒரே இருள் சூழ்ந்தது என்ன செய்வது என்று பதட்டத்தில் தீனா புலம்ப ஆரம்பித்தான் .
கத்த ஆரம்பித்து விட்டான். என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என்று புலம்பினான் அந்த இருட்டில்

ஆனால் பம்புசெட்டில் உள்ளே ரேகாவும் சங்கரும் சிரிப்பதை நிறுத்தவில்லை அதே நேரத்தில் கிணற்றில் இருந்து புகை கிளம்பியது . இதை பார்த்த தினாவுக்கு எந்தப் பக்கம் ஒடலாம் என்று பயத்தில் திரும்பித் திரும்பிப் பார்த்தான் . அப்போது கிணற்றில் நிறைய புகை கிளம்பியது அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை . ஒரே இருட்டு உடனே கையில் இருந்த டார்ச் லைட்டை ஆன் செய்து பம்பு செட்டின் கதவின் மீது அடித்தான். எப்படியாவது கதவை திறந்து தண்ணீர் மோட்டாரை ஆன் செய்துவிட்டு ஒடிவிடலாம் என்று முடிவு செய்தான் .
ஆனால் அவன் கால்கள் பம்பு செட்டின் அருகில் செல்ல தயங்கியது ஏனென்றால் சங்கரும் ரேகாவும் சிரிப்பை நிறுத்தவில்லை கதவை திறந்தாள் சங்கரும் ரேகாவும் நம்மை சும்மா விடுவார்களா என்று யோசித்தான் தீனா.

இருந்தாலும் எப்படியாவது தண்ணீர் மோட்டாரை ஆன் செய்து விட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் . பிறகு பயத்தோடு டார்ச் லைட் அடித்தபடி பம்பு செட்டின் கதவை திறந்தான். உடனே பம்புசெட்டில் அந்த அறையில் நல்ல இருட்டு அப்போது அவன் கை
உதறியபடியே டார்ச் லைட்டை பம்புசெட் அரையில் அடித்தான்

அப்போது அவன் கண்களுக்கு ஒரு கொடூரமான உருவம் தெரிந்தது உடம்பு முழுக்க முடி இருந்தது முகமெல்லாம் முடி .
பற்கள் கருகருவென்று இருந்தது ஒரு சில பற்கள் ரத்த கரையாக இருந்தது . சங்கரின் உருவத்தைப் பார்த்து மிரண்டு போனான் தீனா சங்கர் கண்கள் தீனாவை உற்று பார்த்தபடி இருந்தால் அப்போது தீனாவின் கையிலிருந்த டார்ச்லைட் வெடித்து சிதறியது . உடனே தீனா டார்ச்சை கீழே போட்டுவிட்டு ஓடத் தொடங்கினான் .அப்போது அவன் சட்டையை பின்பக்கமாக யாரோ பிடிப்பது போல உணர்ந்தான் அவனால் ஓட முடியவில்லை தூக்கி வீசப்பட்டான் தென்னைமரத்தின் மீது.
மறுபடியும் எழுந்து ஓடத் தொடங்கினான் அப்போது சங்கர் ஆக்ரோஷமாக சொன்னான்...எவ்வளவு தைரியம் உனக்கு இங்கே வருவதற்கு
இனி உங்களை நிம்மதியாக இருக்க விட மாட்டேன் உங்களுக்கு ஒரு முடிவு கட்டி விடுவேன் உங்களை இனி வாழ விடமாட்டேன் என்று ஆக்ரோஷ குரலில் சொன்னான் சங்கர் .

அப்போது தீனாவுக்கு மேலும் மரண பயம் ஏற்பட்டது சங்கரின் பேச்சு

மீண்டும் வீட்டுக்கு ஓடத் தொடங்கினான் அப்போது எதிரே இருந்த தென்னைமரத்தின் மட்டை ஒன்று தானாக பிடுங்கிக்கொண்டு தீனாவின் முன்பு நின்றது அப்படியே தீனா அதிர்ந்து போனான் தென்னை மட்டை தானாக எதிரே நிற்பதைப் பார்த்து . உடனே ஓடத் தொடங்கினான் தீனா அப்போது அந்த தென்னை மட்டை தீணாவின் முதுகில் ஓங்கி ஓங்கி அடித்தது தலை மீது அடித்தது . இப்படி சரமாரியாக தென்னை மட்டை தீனாவை வெளுத்து வாங்கியது

அப்போது திடீரென்று பம்புசட்டில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பம்புசெட்டு குள்ளே எரிய ஆரம்பித்தது அப்போது எலக்ட்ரிக்கல் போர்டு எல்லாம் பற்றி எரிந்தது . பிறகு அப்படியே மெல்ல மெல்ல தீ பம்புசெட்டின் மேலே எறிந்து கம்பத்தில் இருக்கும் மின் கம்பி வயர்கள் பற்றி எரிந்தன இப்படி எல்லாம் இடத்திற்கும் பரவி வயல்கள் கரும்பு தோட்டம் இப்படி எல்லா நிலத்திற்கும் தீ பற்றி எரிந்தது .எங்குபர்த்தாலும் ஒரே தீ காடு போல காணப்பட்டது .

அப்போது தீனா என்ன செய்வது என்று தெரியாமல் மிரண்டு போனான்

பிறகு தீனா ஓடும் இடமெல்லாம் சங்கரும் ரேகாவும் சிரிக்கும் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது அப்போது ஒரு கட்டத்தில் தீனா தூக்கி சேற்றில் வீசப்பட்டான். அவன் சேற்றில் விழுந்து புரண்டு பிறகு அவன் வேட்டி சட்டை தலை எல்லாம் சேர் ஆனது. மறுபடியும் அந்த தண்ணீர் நிரம்பிய நிலத்தில் ஓடினான் .

அப்போது அவன் ஓடும் இடமெல்லாம் சங்கர் ரேகாவும் சிரிக்கும் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது .

சங்கர் தீனாவின் கால்களை பிடித்து தலைகீழாக தொங்கியபடி அந்தரத்தில் தொங்க விட்டான் அப்போது தீனா மரண பயத்தில் கத்தினான் . என்னை விட்டு விடுங்கள் என்னை விட்டு விடுங்கள் என்று .
அப்போது தலைகீழாகத் தொங்கியபடி தீனா அந்த சேற்றில் விழுந்தான். அப்போது அவன் உடம்பு முழுக்க பல காயங்கள் உருவானது அவன் சேற்றில் பாதி புதைந்து கொண்டான்.

வலியால் கத்திக்கொண்டே சேற்றிலிருந்து எழுந்து மறுபடியும் ஓடினான் . அப்போது கரும்புத் தோட்டத்தில் இருந்து ஒரு கரும்பு வேரோடு பிடிங்கி கொண்டு வந்து தீனா முன்பாக நின்றது .
அதை பார்த்து மறுபடியும் மிரண்டுபோய் ஓடினான் .
அப்போது அந்த கரும்பு தீனாவை வெளுத்து வாங்கியது இப்படி அவன் உடல் முழுக்க பல காயங்கள் ஆனது .
அவன் விடாமல் ஓடிக் கொண்டே இருந்தான் வலி தாங்க முடியாமல் கத்தி கொண்டு. ஒரு கட்டத்தில் சிரிப்பும் ஓய்ந்தது . தீனா தோட்டத்தை விட்டு ஓடி வந்து விட்டான்.

பிறகு அவன் இதயம் வேகமாக துடித்தது ஒரு கணம் திரும்பி பம்புசெட்டை பார்த்தான் அப்போது பம்புசெட்டு சற்று தூரமாக தெரிந்தது.

பார்க்கும்மிடமெல்லாம் ஒரே நெருப்பு புகை தெரிந்தது.
அவன் மனம் வேதனையால் துடித்தான் இப்படி தோட்டம் எரிவதை பார்த்து அவன் தலையில் அடித்துக்கொண்டு அழுதான் .
இந்த விஷயத்தை எப்படி அண்ணன் தாங்குவார் என்று வேதனையால் அழுதான் .
அப்போது அவன் சற்று கூர்ந்து கவனித்துப் பார்த்தான் தோட்டத்தை பச்சை வாழைத்தோப்பு மளமளவென எரிவதை பார்த்து அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது இனி சங்கரும் ரேகாவும் நம்மை வாழ விடமாட்டார்கள் என்று நினைத்து அங்கேயே மனம்விட்டு அழுதான் .

பிறகு அவனால் நடந்து கூட செல்ல முடியவில்லை எப்படியோ தட்டுத் தடுமாறி கொண்டு வீட்டு வாசலை அடைந்துவிட்டான்.
அப்போது அவன் உடம்பெல்லாம் ஒரே சேர் ரத்தக்கரை தலை முகம் எல்லாம் தெரியாத அளவுக்கு சேர் இருந்தது . உருவம் தெரியாத அளவிற்கு மோசமான நிலையில் தீனா இருந்தான். அப்போது அவனுக்கு லேசாக தலை சுத்தியது அப்படியே மயங்கி கீழே விழுந்து விட்டான் அவன் வீட்டு வாசலில் .

பொழுது விடிந்தது ...
அதிகாலை நேரம்..

சாந்தி.. வழக்கம்போல பக்கெட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கையில் ஒரு துடப்பதோடு வெளியே வந்தாள் ..வந்தவுடன் வாசலில் அலங்கோலமான நிலையில் தீனா விழுந்து இருப்பதை பார்த்து பயந்துபோனாள் .
அவளுக்கு யாரென்று அடையாளம் தெரியவில்லை . பயத்தில் என்னங்க என்று சத்தமாக குரல் கொடுத்தால் பயத்தில்.

சாந்தியின் அலறல் குரல் கேட்டதும் பரந்தாமனும் .சந்திரனும் .சட்டென்று விழித்துக் கொண்டு எழுந்து வெளியே ஓடி வந்தார்கள் . அப்போது சாந்தி பயத்தால் வாசலில் கத்திக்கொண்டு இருந்தாள் . பரந்தாமன் வாசலில் விழிந்திருக்கும் தீனாவை பார்த்தான். அவனுக்கும் அடையாளம் தெரியவில்லை
பிறகு சந்திரன் ஓடிவந்து தீணாவை தூக்கி முகத்தை அருகில் பார்த்தான் அப்போது தம்பி என்று கட்டி அணைத்தபடி அழுதான் சந்திரன் .

உடனே பரந்தாமனும் தீனா வா எப்படி இருக்கான் என்ற அதிர்ச்சியில் ஓடி தம்பி என்று தூக்கினான். அப்போது சாந்தி தீனா வா என்று தெரிந்ததும் அவளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது உடனே அவள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள் .

அந்த சத்ததில் பரந்தாமனின் பத்து வயது மகன் தூங்கிக்
கொண்டிருந்தவன் எழுந்து கொண்டான் . பிறகு அவனும் பயத்தோடு வெளியே வந்து பார்த்தால் எல்லோரும் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து அவனும் அழுதான் .

தீனா மயக்கம் தெளியாமல் அப்படியே இருந்தான்.


இனி சங்கர் ரேகாவின் வேட்டை ஆரம்பம்.....


தொடரும்.....
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
ரத்தமும் ..சேரும். வேட்டி சட்டையிலும் கரையாக பதிந்து இருப்பதை பார்த்து சந்திரனும் பரந்தாமனும் பயந்து போனார்கள்

தம்பிக்கு எப்படி இதுபோல நிலைமை ஆனது என்று குழம்பினார்கள் ..
அப்போது சாந்தி... தம்பி என்ன ஆச்சு என்று தீனாவின் கையை பிடித்து குலுக்கியபடி அழுதாள்

உடனே பரந்தாமன் சந்திரனும் தீனாவை தூக்கிக்கொண்டு உள்ளே பாத்ரூமில் உட்கார வைத்து ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து அவன் தலையில் ஊற்றி உடம்பெல்லாம் சேராக இருப்பதை இருவரும் கழுவினார்கள்.. அப்போது அவன் லேசாக கண்விழித்து பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்து அழுதான் ..அண்ணே அண்ணே என்று சொல்லிக்கொண்டே .
தீனாவின் சட்டையை கழட்டி பார்த்த போது உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள் . அப்போது சந்திரனுக்கு மனம் கலங்கியது . தம்பி உயிர்ப்பிப்பான என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அவன் பாத்ரூமில் அழுவதை கேட்டு வெளியே நின்றிருந்த சாந்திக்கு மேலும் பயம் அதிகமானது ..

தம்பி தம்பி என்று புலம்பிக்கொண்டே அழுதாள் அருகில் அவளுடைய மகனும் அப்பா சித்தப்பா என்று சொல்லிக்கொண்டே அவன் அம்மாவின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தான்

மறுபடியும் தீனா மயங்கி விட்டான்

பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கை கால்கள் நடுங்கியது . அப்போது அவன் மேலும் ஒரு பக்கெட் தண்ணி எடுத்து தீணாவின் தலையில் ஊற்றி உடலை சுத்தம் செய்தான் பிறகு வேட்டி சட்டையை கழட்டி போட்டுவிட்டு அவனை நன்றாக சுத்தம் செய்து . வேறு உடை மாற்றி அவனது அறையில் களத்தினார்கள்

அப்போது தீனா கண்விழித்து பார்த்தபோது அவனை சுற்றி சாந்தி பரந்தாமன் சந்திரன் மற்றும் பரந்தாமனின் மகன் . அழுதபடி நின்று கொண்டிருந்தார்கள்.

சாந்தியை பார்த்தவுடன் தீனா சற்று சுதாரித்துக் கொண்டான் அண்ணியிடம் நடந்ததை சொல்லக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தனது உடல் வலியை தாங்கிக்கொண்டு
வலி இல்லாதவன் போல சற்று பொறுமையாக சொன்னான் ....

அண்ணி அழுவாதிங்க. குழந்தையும் அழுகிறான் பாருங்க என்று பொறுமையாக சொன்னான்

சாந்தி கண்களை துடைத்துக்கொண்டு கேடாள்..
என்ன ஆச்சு தம்பி ஏன் இப்படி உனக்கு அடிபட்டு இருக்கு உடம்பெல்லாம் சேறாக இருந்ததே என்னாச்சு தம்பி என்று அழுத்தமான குரலில் பரிதாபமாக கேட்டாள் சாந்தி.

நான் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல அண்ணி என்னால நம்ம குடும்பத்துக்கு பெரிய நஷ்டம் வந்துடுச்சு அண்ணி என்று சொல்லியபடி தீனா லேசாக கண் கலங்கினான்.

பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
நம் குடும்பத்திற்கு பெரிய நஷ்டம் வந்து விட்டது என்று தம்பி சொல்கிறானே அப்படி என்றால் என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் பரந்தாமன் தீனாவின் தலையை தடவி விட்டபடி பொறுமையாக கேட்டான்.

என்னப்பா சொல்ற... நீ எப்படி நம்ம குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்த முடியும் . எனக்கு புரியலடா என்று சோகத்தோடு கேட்டான் பரந்தாமன்.

அண்ணே ...எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க அண்ணா ..
நான் ராத்திரி பம்பு செட்டுக்கு போயிட்டு தண்ணி மோட்டாரை ஆன் செய்தேன் ..
அது தவறுதலாக வேறு ஒரு பட்டனை ஆன் செய்து விட்டேன் போல் தெரிகிறது .. அப்போது எலக்ட்ரிக்கல் போர்டு பற்றிக்கொண்டது வயர்கள் எரிந்து
உடனே பம்புசெட்டு ஆரை தீப்பிடித்து கொண்டது. அதில் மெல்ல மெல்ல கரும்புத் தோட்டம் பற்றிக்கொண்டது தீயில் . பிறகு ஒவ்வொரு தோட்டமாக பற்றி எரிந்து விட்டது அண்ணே .நம்ம தோட்டம் எல்லாம் மொத்தம் வீணாக பொச்சி அண்ணே.

அங்கிருந்து தீயில் மாட்டிக்கொள்ளாமல் விழுந்து எழுந்து ஓடி வந்துவிட்டேன் அண்ணே . என்று கதறி அழுதான் தீனா .

உடனே சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் .
என் குடும்பத்திற்கு நல்லதே நடக்காதா . நாங்கள் என்ன பாவம் செஞ்சோம் இப்படி எங்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறாய் கடவுளே . என்று அழுதால் சாந்தி

உடனே சந்திரன் சாந்தியை சமாதானம் செய்து
அந்த அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து விட்டான் .

அண்ணி அவனே நொந்து போய் இருக்கான் . அவன் எதிரே இப்படி நீங்கள் அழுதால் அவன் மனம் மேலும் வருத்தப்படாத என்று சொன்னான் சந்திரன் .

என்னால தாங்க முடியலப்பா நம்ம குடும்பத்துக்கு இப்படியெல்லாம் சோதனை வரும் என்று .
யாருக்கும் நம்ம எந்தப் பாவமும் செய்யலையே . கடவுள் நமக்கு மட்டும் இப்படி அடுக்கடுக்காய் சோதனையை கொடுக்கிறாரே என்று புலம்பினாள் சாந்தி..

நாங்கள் செய்த பாவத்திற்கு கடவுள் இப்போதுதான் தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் .
ஒரு பாவமும் செய்யாமல் இருக்கும் உங்களுக்கும் கடவுள் சேர்த்து தண்டிக்கிறார்.. என்று மனதில் நினைத்துக்கொண்டான் சந்திரன்

பிறகு என்னதான் நடந்தது என்று தம்பியிடம் கேட்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரன் தீனாவின் அறைக்குச் சென்றான் .


சந்திரனும் பரந்தாமனும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.
மெதுவாக தீனாவின் அருகில் சென்று வலது புறம் பரந்தாமனும் இடதுபுறம் சந்திரனும் அமர்ந்துகொண்டு தீனாவிடம் மெதுவாக கேட்டார்கள்.
தம்பி நேற்று இரவு என்னதான் நடந்தது உண்மையை சொல் என்று பதட்டத்தோடு கேட்டான் பரந்தாமன்.


அப்போது தீனா படுத்தபடியே பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் .
அண்ணே இனி நம்ம நிம்மதியா வாழ முடியாது அண்ணே என்று கதறிக் கதறி அழுதான் தீனா.

தீனாவின் பேச்சு சந்திரனுக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .

என்னப்பா சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல என்றான் பரந்தாமன் .

அண்ணே நான் பம்புசெட்டுக்கு சென்றதும் அங்கு சங்கரும் ரேகாவும் பேய் யாக வந்து என்னை அடிச்சாங்க .
நான் அங்கிருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன் . அப்போ பம்புசெட்டு
தீ பிடித்து நம்ம தோட்டம் எல்லாம் எரிஞ்சு போச்சு அண்ணா.
இந்த சங்கரும் ரேகாவும் இனிமே நம்மை வாழ விட மாட்டாங்க அண்ணா

சங்கர் சொன்னான் ...உனக்கு எவ்வளவு தைரியம் இங்க வரதுக்கு இனிமேல் உங்களை வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொன்னான் சங்கர் .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பயத்துல அங்கிருந்து ஓடி வந்துட்டேன்

அப்போது நம்ம தோட்டத்துல
பச்சை வாழைத்தோப்பு . நல்லா மளமளவென எரிஞ்சதை நான் பார்த்தேன் அண்ணா . இனிமேல் அந்த சங்கரும் ரேகாவும் நம்மை வாழ விடமாட்டாங்க அண்ணே என்று அழுதுகொண்டே தீனா சொன்னான்.


பரந்தாமனும் சந்திரனும் அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள் சங்கரும் ரேகாவும் பேயாக வருகிறார்களா என்று நினைத்து

அப்போது பரந்தாமன் தீனாவிடம் தயக்கத்தோடு கேட்டான் .
தம்பி பம்பு செட்டுல நம்ம அம்மா படம் இருக்கும் அறையும் எரிஞ்சு போச்சா என்று நடுக்கத்தோடு கேட்டான் .

அம்மா படம் இருக்கும் அரை எரியவில்லை அண்ணா .
பம்பு செட்டு எலக்ட்ரிக்கல் போர்டு இருக்கும் அரை மட்டும் தான் எரிந்தது என்றான் தீனா .

அப்போது பரந்தாமனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது .
நாம் சேர்த்து வைத்த பணத்தை நம்ம அம்மா பாதுகாப்பாக . காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து சற்று ஆறுதல் அடைந்தான் பரந்தாமன்

இருந்தாலும் எல்லாம் தோட்டமே எரிந்துவிட்டதே என்று நினைத்து கவலையில் . கட்டில் மேல் இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டு தலைமிது இரண்டு கைகளை வைத்துக்கொண்டு . சோகத்தில் சாய்ந்துவிட்டான் பரந்தாமன் .

நம்மை இனி கடவுள் சும்மா விடமாட்டான் . சங்கரின் ரூபத்தில் நமக்கு சரியான தண்டனை கிடைக்கப் போகுது என்று நினைத்துக்கொண்டான் சந்திரன்.


அப்போது சாந்தி ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் .

உடனே சந்திரன் கட்டில் மீது இருந்து எழுந்து நின்று கொண்டான் .

சாந்தி சுடுதண்ணி ஒத்தரம் கொடுப்பதற்காக தீனாவை திரும்பி படுக்கச்சொன்னாள் .

தீனாவும் திரும்பி படுத்துக் கொண்டான் .
அப்போது அவன் முதுகில் பட்டை பட்டையாக காயங்கள் இருந்ததை பார்த்து மேலும் சாந்திக்கு மனம் நொந்து போனது .
பிறகு தீனாவுக்கு ஒத்தரம் கொடுத்தால் சாந்தி .

அப்போது மெதுவாக கேட்டாள்...தம்பி உண்மையை சொல் உனக்கு என்ன நடந்தது என்று .நீயும் என் இடம் மறைக்காதே என்றாள் சாந்தி.

பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது சாந்தியின் கேள்வி .

என்ன தம்பி... நான் கேட்கிறது உனக்கு புரியலையா உண்மையை சொல் நேற்று இரவு என்ன நடந்தது என்று மறுபடியும் கேட்டால் சாந்தி.

உடனே பரந்தாமன் குறுக்கிட்டு சொன்னான் ....அவனை தொந்தரவு பண்ணாதே அத்தான் புரியும்படி சொல்லிட்டனே தவறுதலா வேறொரு ஸ்விட்ச் ஆன் செய்ததால் பம்ப் செட்டும் தோட்டமும் தீப்பிடித்து எரிந்து விட்டது என்று .
மேலும் மேலும் அவனை தொந்தரவு செய்யாதே என்று பரந்தாமன் சொன்னான்.


இதையெல்லாம் நம்புவதற்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இவரு ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்து விட்டாராம் . அதனால பம்புசெட்டும் தோட்டமும் எரிஞ்சு போச்சாம் . சரி இதையெல்லாம் கூட நம்பலாம் இவரோட உடம்பை பாருங்க . பட்ட பட்டையாக வீங்கி இருக்கு இது எப்படி ஆச்சு . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நீங்க மூணு பேருமே எதையோ மறைக்கிறீங்க. நம்ம தோட்டத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வரல உங்க அப்பா பாத்துக்கிட்டு இருக்கும்போது . என்னைக்கி நீங்க மூணு பேரும் தோட்டத்தை கவனிச்சீங்களோ அன்னையிலிருந்து நம்ம தோட்டத்துல புது புது பிரச்சனையா வந்துகிட்டு இருக்கு .
ஆனா எந்த பிரச்சனையும் இதுவரைக்கும் வெளிய வரல யாருக்குமே தெரியல .
ஆனால் உங்க மூணு பேருக்கும் இந்த பிரச்சனையின் ரகசியம் தெரியும் . அதை நீங்க மறைக்கிறீங்க நம்ம தோட்டத்துல ஏதோ ஒரு மர்மம் நடக்குது அதை நீங்க மறைக்கிறீங்க இப்ப நடந்து இருக்கிற இந்த விஷயம் எனக்கு ஆணித்தரமா புரியுது அதனால தான் கேட்கிறேன் மறைக்காம நேத்து இரவு என்ன நடந்ததுன்னு சொல்லிடு என்று சாந்தி மனதுக்குள் பட்டதை பளிச்சென்று தைரியமாக கேட்டாள்.


என்ன சாந்தி... யாரு கிட்ட என்ன கேட்கணும்னு தெரிஞ்சுதான் பேசுறியா என்று பரந்தாமன் சற்று எரிச்சலாக கேட்டான்.


ஆமாங்க இனிமேலும் சும்மா இருந்தா நம்ம குடும்பத்துல நிம்மதி இருக்காது . பிரச்சனை என்னன்னு தெரிஞ்சாதன் அதுக்கு ஏத்தமதிரி முடிவு பண்ணனும் .
இல்லன்னா இப்படியே அழுதுகிட்டு தான் இருக்கணும் என்று துணிச்சலாய் சொன்னால் சாந்தி.

கட்டிலுக்கு கீழே உட்கார்ந்திருந்த பரந்தாமன் உடனே ஆவேசமாக எழுந்து நின்றான்.


வாய மூடு எல்லாம் எனக்குத் தெரியும் ...நீ ஒன்னும் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாது . கொஞ்சம் பொறுமையாக இருந்தால் வாய்க்கு வந்தபடி பேசுவியா எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம் அவன் தான் சொல்றானே தவறுதலாய் ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்துவிட்டேன் என்று . அதோடு கம்முனு இரு எல்லாம் தெரிந்தது போல சத்தம்பொட்டு பேசுற இதுக்கு மேல ஏதாவது கேட்டா அதுக்கப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபத்தோடு ஆவேசமாக சாந்தியை முறைத்தபடி சொன்னான் பரந்தாமன் .

அப்போது சாந்தி வாயடைத்துப் போனாள் ... இவ்வளவு நாளா இதுபோல முகத்தை இதுவரைக்கும் இவரிடம் பார்த்ததில்லையே இவ்வளவு கோபக்கார மனிதனாய் இருக்கிறாரே நம் கணவர் .
என்று நினைத்து அதிர்ச்சியாக நின்றால் . ஒரு பக்கம் வேதனையால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அப்போது அவளால் அங்கு நிற்க முடியவில்லை உடனே அழுதுகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் பூஜை அறைக்கு.


இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தோம் .
ஆனால் இப்படி இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொண்டோமே .
நம் மனைவி நம்மை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு பிரச்சனை வளர்ந்துவிட்டதே என்று நினைத்து சோகத்தில் பரந்தாமன் தலை குனிந்து கொண்டான்.


அண்ணி சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் இனி ரகசியத்தை நீண்ட நாள் மறைக்க முடியாது என்று நினைத்து சந்திரனும் தினாவும் என்ன சொல்வது . இனி எப்படி அண்ணி முகத்தை பார்ப்பது என்று நினைத்து சோகத்தில் மூவரும் அமைதியாக இருந்தார்கள் .

அப்போது வீட்டு வாசலில் ஊரே கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டு அழுதார்கள் . உடனே சந்திரனும் பரந்தாமனும் மெதுவாக வெளியே வந்து பார்த்தால் ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் கண் கலங்கி நின்றார்கள் .

அப்போது ஒரு பெரியவர் சொன்னார் ...ஐயா நாளையிலிருந்து முழு நாள் வேலை செய்யுங்கள் என்று சொன்னீங்களே .
இப்படி எல்லாம் தோட்டமே தீயில் எரிந்து வீணாக போச்சே இப்படிப்பட்ட கஷ்டத்தை நீங்கள் எப்படி ஐயா தாங்க கொண்டிங்க எங்களாலே தாங்க முடியலையே என்று ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.


யாரும் வருத்தப்படாதீங்க ஏற்கனவே நீங்க உங்க
முத்தையாவையும் .
பண்ணையாரையும் இழந்துவிட்டு வாடிக்கொண்டு இருக்கீங்க .
இந்த நேரத்துல நம்ம தோட்டமும் எரிஞ்சு போச்சு மேலும் உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும் .
இனி பிழப்பதற்கு என்ன செய்வது என்று நினைத்து கஷ்டப்படாதிர்கள் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு நான் வேலை கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் . என் உயிர் இருக்கும் வரை விவசாயத்தை விட்டு நான் விலக மாட்டேன் . உங்களுக்காக நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .

என் தம்பி தவறுதலாக தண்ணீர் மோட்டாரை ஆன் செய்வதற்கு பதிலாக வேறொரு பட்டனை ஆன் செய்ததில் எலக்ட்ரிக்கல் போர்டு தீப்பிடித்து எரிந்து இப்படி எல்லாம் தோட்டமும் வீணாகப் போனது. கொஞ்சநாள் யாரும் தோட்டத்துக்கு வரவேண்டாம் .
நிலைமை சரியானதும் நானே உங்களை வேலைக்கு வர வைக்கிறேன் அதுவரைக்கும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தைரியமாக செல்லுங்கள் என்று ஊர் மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன்.


பிறகு ஊர் மக்கள் கலைந்து சென்றார்கள் ..பரந்தாமனும் சந்திரனும் சோகத்தோடு வீட்டுக்கு உள்ளே சென்றார்கள்.

அப்போது பரந்தாமனின் மகன் சோகத்தோடு வந்து அப்பா பசிக்குது என்று சொன்னான்.

அப்போதுதான் பரந்தாமனுக்கு நினைவுக்கு வந்தது காலையில் இருந்து யாரும் சாப்பிடவில்லை என்று.



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
........ நாட்கள் நகர்ந்தது .....

பரந்தாமனுக்கு நிம்மதியில்லாமல் சோகத்தில் யாரிடமும் பேசாமல் தனது அறையிலேயே படுத்து கொண்டு இருந்தான்..

எப்படியாவது பம்புசெட்டில் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணப்பெட்டியை நிரப்பி விடலாம் என்று நினைத்தோம் . ஆனால் இந்த சங்கர் ரேகாவை கொலை செய்த நாள் முதல் நமக்கு விவசாயத்தில் நஷ்டம்தான் ஏற்படுகிறது .

எப்படியாவது பணப்பெட்டியை நிரப்பி விடலாம் என்று பார்த்தால் ஏதாவது ஒரு இக்கட்டான நிலைமை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

ஆரம்பத்தில் நன்றாக வருமானம் கிடைத்தது. முதல் பிரச்சனையாக சந்திரன் இருந்தான் .
அவன் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல திட்டங்களைப் போட்டும்
அதிலும் நமக்கு சாதகமாக அமைந்துவிட்டது . தம்பியின் திருமணத்தையும் நிறுத்தி விட்டோம்.

பிறகு அப்பா நமக்கு பிரச்சனையாக இருந்தார் ..... காணாமல் போன இரண்டு குடும்பங்களையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தார் . அதனால் சங்கரை அந்த வேலையில் ஈடுபடுத்தினார் எப்படியோ ஒருவழியாக சங்கரையும் ரேகாவையும் தீர்த்துக்கட்டி விட்டோம் .
இந்த பிரச்சினையில் சங்கரின் அப்பா முத்தையா இறந்துவிட்டார் அவர் இறந்ததாள் நம்முடைய அப்பாவும் இறந்துவிட்டார் .
இப்படி எல்லா பிரச்சனையும் ஓய்ந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டோம் . இனிமேல் பணப்பெட்டியை நிரப்பி விடலாம் நமக்கு எதிரிகளே கிடையாது என்று நினைத்து.

ஆனால் சங்கரும் ரேகாவும் பேயாக வந்து புது பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள் . இதற்கு மூன் எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து வந்துவிட்டோம் . நம் அம்மாவும் நமக்கு உதவியாக துணையாக இருந்தார் .

ஆனால் இப்போது பேயாக இருக்கும் சங்கர் ரேகாவை நம்மால் என்ன செய்ய முடியும் உயிருடன் இருப்பவர்களை ஏதாவது சிக்கலில் மாட்டி விட்டு நம்முடைய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் .
பேயாக இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும் .

பம்பு செட்டுக்கு சென்றாலே மரண அடி அடித்து துரத்துவார்கள் எப்படியோ தம்பி அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான் .இனிமேல் எப்படி பம்பு செட்டுக்கு செல்வது விவசாயத்தை எப்படி நடத்துவது ஊர் மக்களிடம் கண்டிப்பாக விவசாயம் நாடக்கும் என்று சொல்லிவிட்டேன் . இரண்டு வாரம் காலம் ஆகுது இதுவரைக்கும் யாரும் பம்பு செட் பக்கம் போகவில்லை .

இது வரைக்கும் ஊருக்கும் குடும்பத்துக்கும் நல்லவனாக நடித்துவிட்டோம் .

ஆனால் இனிமேல் எப்படி இந்த சங்கருக்கும் ரேகாவுக்கும் ஒரு முடிவு கட்டுவது என்று யோசித்து யோசித்து ....பரந்தாமனுக்கு தலையே வெடித்துச் சிதறுவது போல ஆனது ...மனமும் நொந்து போனது ..இனி நமக்கு நல்ல காலம் என்று நினைத்தோம் இப்படி மோசமாக சிக்கிக் கொண்டோமே என்று நினைத்து பரந்தாமன் கவலையோடு இருந்தான் ..யாரிடமும் பேசாமல் எரிச்சலோடு இருந்தான் ...

மற்றொரு பக்கம் சாந்தி சோகமாக அவளும் யாரிடமும் பேசவில்லை தன் மகனை மட்டும் கவனித்தல் . வீட்டில் உள்ள வேலைகளை செய்துவிட்டு சிறிது சமையலும் செய்து வைப்பாள் ஒரு சில நேரங்களில் சாப்பிடுவாள் . ஒரு சில நேரங்களில் குடும்ப பிரச்சனையை நினைத்து சாப்பிடாமல் படுத்துக் கொள்வாள் .இப்படி சாந்தி மனம் நொந்து போய் காணப்பட்டாள்.

நம் கணவர் நம்மிடம் எதையோ மறைக்கிறார் . நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் இந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருக்கிறது . இந்த பிரச்சனையை இவர்கள்தான் உண்டாக்கினார்களா. இல்லை இந்த பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு மறைக்கிறார்களா... எதற்காக மறைக்க வேண்டும் ஒன்றுமே தெரியவில்லையே ...

பம்புசெட்டு இரவு வேலைக்கு சென்ற தீனா உடம்பு முழுக்க காயங்களோடு திரும்பிவந்து தவறுதலாக சுவிட்ச் ஆன் செய்து விட்டேன் அதனால் தோட்டம் எறிந்து விட்டது என்று பொய் சொல்கிறான் . சம்பந்தமே இல்லாமல் இவன் உடல் முழுக்க பல காலங்கள் இருக்கிறது இப்படி மூவருமே உண்மையை மறைக்கிறார்கள் .இவர்களை நாம் நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் பார்த்தாள் என்ன செய்வது என்றே தெரியவில்லையே

இதுவரைக்கும் ஊரில் உள்ளவர்களும் இவர்களைப் பற்றிய எந்த ஊரு தவறான கருத்தையும் சொல்லவில்லை இவர்கள் தப்பானவர்கள் என்றால் . ஏதாவது ஒரு நாள் எந்த விஷயத்திலாவது மாட்டிக் கொண்டு இருப்பார்கள் .
ஆனால் இதுவரைக்கும் அப்படி நடக்கவில்லை . இவர்களை நம்புவதா இல்லை ஒதுக்குவதா என்ற குழப்பத்தில் சாந்தி கவலையில் இருந்தாள்..

இனி நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்குமா என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது . எது நடந்தாலும் நடக்கட்டும் .இனி இவர்களிடம் நாம் எந்தப் பேச்சையும் பேசக்கூடாது எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வரும் அப்போது தெரியும் இவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்தானா என்று நினைத்துக்கொண்டு .
சாந்தி ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டாள். தனது மகனுக்கு வழக்கம்போல எல்லாம் வேலையும் செய்து கொடுத்தால் அவனை சிறிது சந்தோசமாக பார்த்துக்கொண்டால் சாந்தி...

பிறகு மற்றொரு பக்கம் சந்திரனும் தீனாவும் அவர்களும் சோகத்தோடு இருந்தார்கள் அண்ணி நம்ம மேல ரொம்ப கோபமா இருக்காங்களா அண்ணே என்று தீனா கேட்டான்.

அண்ணி நம்ம மேல மட்டும் இல்ல . அண்ணன் மேலயும் கோவமாதான் இருக்காங்க யாரிடமும் பேசறது இல்ல சாப்பாடும் சரியா சாப்பிடுறது இல்லை .என்றான் சந்திரன்.

நம்ம மூணு பேரும் பொய் சொல்கிறோம் என்று அண்ணி கண்டுபிடிச்சுட்டாங்க அதனாலதான் நம்மிடம் அவங்க பேசல.

ஆமாம் தம்பி ..இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
இப்படி உண்மையை மறைக்கிறான் என்று சந்தேகப் பட்டத்திற்கே நம்மிடம் பேசவில்லை அண்ணி .
நடக்கும் பிரச்சனைக்கு எல்லாம் 3 பேரும்தான் காரணம் என்று தெரிந்தால் . நிச்சயம் அண்ணி உயிரோடு இருக்க மாட்டாங்க ஏனென்றால் நம்மீது அண்ணி நிறைய நம்பிக்கை வச்சிருக்காங்க . அதனால் தான் இந்தச் சின்ன ஏமாற்றத்தை கூட அவங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .
இன்னும் இருக்கிற பிரச்சனை எல்லாம் வெளிவர தொடங்கினாள். அவ்வளவுதான் நம் குடும்பம் ..
என்று சந்திரன் சொன்னான்.

அண்ணனுக்கு விவசாயம் நடக்கவில்லை என்ற கவலையில் இருக்கிறார் . இனிமேல் எப்படி விவசாயத்தை நடத்துவது
நான் சொன்னதைப் போலவே இருக்கிற நிலத்தை இந்த ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுத்து விடலாம் . இந்த ஊர் மக்கள் விவசாயம் செய்தால் சங்கர் ஒன்றும் செய்ய மாட்டான் .
ஊர் மக்களும் பிழப்பார்கள் ஆனால் நம் விவசாயம் செய்தால் நிச்சயம் சங்கர் மறுபடியும் தோட்டத்தை எரித்து விடுவான் அதோடு நம்மையும் கொன்றுவிடுவான் . அதனால் ஊர் மக்களை விவசாயம் செய்யச் சொல்வதுதான் சரி இன்று எனக்கு தெரிகிறது ஆனால் அண்ணன் ஊர் மக்களிடம் நிச்சயம் விவசாயம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் எப்படி இது நடக்கும் அண்ணா ....என்று தீனா கேட்டான்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை தம்பி ..சங்கர் ரேகாவும் பேயாக பம்புசட்டில் இருக்கிறார்கள் அவர்களை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது .
ஆனால் அண்ணன் கண்டிப்பா விவசாயம் நடக்கும் என்று ஊர் மக்களிடம் சொல்லி இருக்கிறார் அண்ணன் என்ன திட்டம் போட்டு இருக்கிறார் என்று தெரியவில்லை . சிறிது காலம் போகட்டும் என்னதான் முடிவு செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் அப்படி விவசாயம் செய்ய முடியவில்லை என்றாள் நீ சொன்னது போலவே இந்த ஊர் மக்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்து விடலாம் அண்ணனிடம் சொல்லி என்று சந்திரன் சொன்னான்.

எனக்கு இப்போது காயங்கள் எல்லாம் ஆறிக்கொண்டே வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் காயங்கள் சரியாகி விடும் . அதன் பிறகு மூன்றுபேரும் பேசி ஒரு முடிவு செய்யலாம் . பாவம் ஊர் மக்கள் நம்மை நம்பி தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம் தோட்டத்தில் வேலை செய்தால்தான் வருமானம் இப்போது இரண்டு வாரம் கடந்துவிட்டது ஊர் மக்கள் வேலை செய்து பாவம் எப்படி சாப்பிடுவார்கள் அதனால் சீக்கிரமாக இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் நிச்சயம் நம்மால் விவசாயம் செய்ய முடியாது . சங்கரும் நம்மை செய்ய விட மாட்டான் அதனால் நிலத்தை பிரித்துக் கொடுக்கும் வேலையை பற்றி பேசலாம் அண்ணனிடம் என்று தீனாவும் சந்திரனும் முடிவு செய்தார்கள்.

........நாட்கள் நகர்ந்தது.....

ரேகாவின் அம்மா....
லட்சுமி அம்மாள் பித்துப் பிடித்தவள் போல எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போல தினமும் முத்தையாவின் வாசலிலே படுத்துக் கொண்டிருப்பாள்

அக்கம்பக்கத்தினரிடம் சென்று நிச்சயம் நாளைக்கு என் மகளும் என் மருமகனும் வருவார்கள் என்று சந்தோசமாக பேசுவார் பிறகு முத்தையாவின் வாசலில் படுத்துக் கொள்வார் .

லட்சுமி அம்மாள் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவர் மனம் போகும் போக்கில் அக்கம்பக்கத்தினரும் பேசுவார்கள் . ஆமாம் அக்கா நாளைக்கு முன் மகளும் மருமகனும் கண்டிப்பா வருவாங்க என்று சொல்வார்கள்அக்கம்பக்கத்தினர்
இலட்சுமி அம்மாளுக்கு தினமும் சிறிது சாதம் கொடுப்பார்கள் அதை சில நேரம் சாப்பிடுவார் சில நேரம் அங்கேயே இருக்கும்

ஒரு சில நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல நடந்து கொள்வார் .. ஒரு சில நேரங்களில் எல்லோரிடம் சென்று நாளைக்கு என் மகள் வரப் போகிறாள் என் மருமகனும் வரப்போகிறான் அவர்களுக்கு நான் மீன் குழம்பு செய்ய வேண்டும் என்று அவசரமாக வீட்டுக்கு வருவாள் . பிறகு சோகத்தில் படுத்துக் கொள்வாள் இப்படியே லட்சுமி அம்மாளின் வாழ்க்கை நகர்ந்தது.

ஊர் மக்கள் எல்லாம் வேலையில்லாததை பற்றி பேசத் தொடங்கினார்கள் . பண்ணையார் நமக்காக இவ்வளவு நாளா கஷ்டமில்லாமல் நமக்கு வேலை கொடுத்து நம்மை காப்பாற்றினார் . அதன்பிறகு அவர் மகன்கள் அவர்களும் நமக்கு வேலை கொடுக்கிறார்கள் ஆனால் என்ன மர்மமோ என்று தெரியவில்லை . பம்புசெட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் காணாமல் போகிறார்கள்

இந்த பிரச்சனையால் பாவம் பண்ணையார் பசங்களும் நொந்து போனார்கள் .அவர்களே ஒரு நாளைக்கு ஒருவர் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து விவசாயத்தை நடத்தலாம் என்று முடிவு செய்து . நமக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு தோட்டத்தில் வேலை கொடுக்கிறார்கள் . அப்படி இருந்தும் இப்போது தோட்டமே தீயில் எரிந்துவிட்டது . இப்படி பண்ணையார் பசங்களுக்கும் பாவம் கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது அவர்களை நாம் குறை சொல்ல முடியாது.

இனிமேல் வேலை இல்லாமல் எத்தனை நாட்கள் தான் இருக்கிறது ஊரைவிட்டு போவதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை முத்தையாவின் வார்த்தைக்காக இந்த ஊரைவிட்டு செல்லமுடியாமல் இங்கேயே இருக்கிறோம் . பண்ணையார் மகன்களும் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு தோட்டத்தில் வேலை கொடுத்தாலும் . அவர்களுக்கு மேலும் கடவுள் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் . இந்த இக்கட்டான நிலைமையில் பாவம் பண்ணையார் மகன்களால் இனிமேல் விவசாயம் செய்ய முடியுமா என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள் .

அப்போது ஒரு பெரியவர் சொன்னார்... நம்ம கொஞ்ச பேர் அவர் வீட்டுக்கு சென்று இனி எப்போது விவசாய வேலை நடக்கும் என்று கேட்கலாம் அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம் ஒருவேளை அவரால் விவசாயம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாள் .
நம் விருப்பமுள்ளவர்கள் இந்த ஊரைவிட்டு போகலாம் மற்றவர்கள் இங்கேயே இருந்து வேறு ஏதாவது தொழில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று ஒரு பெரியவர் சொன்னார்

பிறகு அனைவரும் ஆமாம் இதற்கு ஒரு முடிவு
தெரிந்தால்தான் நம்மால் இங்கு இருக்க முடியும் அதனால் உடனே பெரியவங்க பண்ணையார் வீட்டுக்கு சென்று .பண்ணையார் மகன்களிடம் ஒரு யோசனையை கேட்கலாம் என்று முடிவு செய்தார்கள் ஊர் மக்கள்.


ஊர் பரியவர்கள் கூட்டமாக சென்று பண்ணையார் விட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தார்கள் .அப்போது சாந்தி வெளியே வந்து பார்த்தாள் கூட்டமாக நின்று இருப்பவர்களை பார்த்து கைகூப்பி கும்பிட்டால்
பிறகு அனைவரையும் உள்ளே கூப்பிட்டாள். அனைவரும் உள்ளே வந்து தரையில் உட்கார்ந்து கொண்டார்கள் அனைவருக்கும் சாந்தி தண்ணீர் கொடுத்தாள் அப்போது பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் தனது அறையிலிருந்து வந்து பார்த்தார்கள்.

ஊர் மக்கள் வந்து இருப்பதை பார்த்து மூவரும் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்கள்

அப்போது ஒரு பெரியவர் சொன்னார் நடப்பது எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது இருந்தாலும் எங்களுக்கு ஒரு சின்ன யோசனை சொல்ல வேண்டும் அதனால் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்றார் ....

என்ன விஷயம் சொல்லுங்கள் ஐயா என்று பணிவாக கேட்டான் பரந்தாமன்.

வேறொன்றும் இல்லை ஐயா எங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக உங்கள் அப்பா பண்ணையார் போலவே நீங்கள் எங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் அதனால் எவ்வளவோ இக்கட்டான நிலைமை வந்த போதும் . நீங்கள் தொடர்ந்து விவசாயம் செய்து இந்த ஊர் மக்களை காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள் . ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை உங்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்திருக்கும் . அதனால் உங்கள் மனமும் ரொம்ப நொந்து போயிருக்கும் அதனால்தான் நீங்கள் ஒரு மாதம் காலம் ஆனபோதும் .நீங்கள் யாரும்
பம்பு செட்டு பக்கமே வரவில்லை அந்த அளவுக்கு உங்கள் மனம் நொந்து போய் இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொண்டோம்

ஆனால் எங்கள் மனம் உங்கள் நிலைமையை புரிந்து கொண்டாலும் எங்கள் வயிறு புரிந்துகொள்ள மாட்டேங்குது ஐயா . இப்போது நாங்கள் ஒரு வேளைதான் சாப்பிடுகிறோம் வேலை இல்லாததால் எங்களிடம் பணம் இல்லை அதனால் சரியாக சாப்பிட முடியவில்லை .
இப்படியே நிலைமை நீடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் அதனால் தான் உங்களிடம் ஒரு யோசனை கேட்கலாம் என்று வந்தோம் .

இனி விவசாயம் நடக்குமா இல்லையா என்று நீங்கள்தான் ஒரு முடிவு சொல்ல வேண்டும் நீங்கள் சொல்லும் வார்த்தையில் தான் நாங்கள் இந்த ஊரில் இருப்பதால் இல்லை வேறு எங்கேயாவது போவதா என்று முடிவு செய்ய வேண்டும் நாங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணையாருக்காகவும் முத்தையாவின் வார்த்தைக்காக இந்த ஊரிலே இருக்கிறோம் ஆனால் நிலைமை ரொம்ப மோசமாகி போய்க் கொண்டே இருப்பதால் . எங்களால் அவர் வார்த்தையை இனி காப்பாற்றா முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது அதனால் நீங்கள் ஒரு நல்ல பதிலை எங்களுக்கு சொல்லுங்கள் என்றார் அந்தப் பெரியவர்.

பரந்தாமனுக்கு மேலும் கவலை ஏற்பட்டது . ஊர் மக்கள் எல்லாம் ஊரை விட்டு சென்றுவிட்டாள் நம் விவசாயத்தை நடத்த முடியாது முதலில் ஊர் மக்களை இங்கேயே இருங்கள் என்று சொல்லலாம் பிறகு விவசாயம் செய்ய ஏதாவது ஒரு வழி கிடைக்கிறத என்று பார்க்கலாம் .பிறகு சங்கரும் ரேகாவும் நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்தால் நாம் அப்போது விவசாயத்தை விட்டு விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு பரந்தாமன் அங்கு இருந்த பெரியவர்களிடம் சொன்னான்

ஐயா நீங்கள் ஒருவேளை தான் சாப்பிடுகிறோம் என்று சொன்ன வார்த்தை என்னால் தாங்க முடியவில்லை.
இப்போது உங்களுக்கு சாப்பாடு தயார் செய்வதற்கு நேரம் ஆகும் அதனால் நான் ஊரில் உள்ள அனைவருக்கும் என்னால் முடிந்த சிறிது பணம் கொடுக்கிறேன் அந்த பணத்தை வச்சுகிட்டு நீங்கள் சிறிது நாட்கள் சாப்பிடுங்கள் .பிறகு விவசாயம் எப்படி செய்வது. எப்போது செய்வது என்று நான் சொல்கிறேன் இப்போது நீங்கள் நான் கொடுக்கும் இந்த பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று பரந்தாமன் நல்லவன் போல சொன்னான்.

பரந்தாமனின் பேச்சு ஊர் மக்களுக்கு சரியாக பட்டது
அவர் சொல்வதைப் போல இன்னும் சிறிது காலம் ஊரில் இருக்கலாம் . பிறகு ஒரு நல்ல முடிவு ஏற்படும் பண்ணையாரும் முத்தையாவும் நம்மை கைவிட மாட்டார்கள் என்று பேசிக்கொண்டு பிறகு பரந்தாமனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அனைவரும் சந்தோசமாக புறப்பட்டார்கள் அப்போது எல்லோரும் கிளம்பினார்கள் அதில் ஒரு பெரியவர் மட்டும் அமர்ந்தபடி இருந்தார் ..

அவரை பார்த்து .. உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா ஐயா என்றான் பரந்தாமன்.

எனக்கு எதுவுமே வேண்டாம் ஐயா நீங்கள் இந்த ஊருக்கே இவ்வளவு பணத்தை கொடுத்து இருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும் ... நடக்கும் பிரச்சனைக்கு எல்லாம் ஒரு சரியான தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் எனக்கு ஒரு யோசனை பட்டது நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் நான் அந்த யோசனையை சொல்கிறேன் என்றார் அந்தப் பெரியவர்.

நடந்திருக்கும் பிரச்சனை எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . எங்களாலே ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தன் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் இவர் என்ன யோசனை சொல்ல போகிறார் என்று நினைத்து பரந்தாமன் சற்று சலிப்போடு என்ன யோசனை சொல்லுங்கள் ஐயா என்று கேட்டான் அந்தப் பெரியவரிடம்.

எங்களுக்கெல்லாம் ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் நம்பிக்கையோடு சாட்டையடி சாமியாரிடம் செல்வோம்
அவர் எங்க பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவார்
அது நோயாக இருக்கட்டும் இல்லை கடன் தொல்லையாக இருக்கட்டும் இல்லை பேய் பிசாசு இருக்கட்டும் இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் எங்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி இருக்கிறார் .
இது இந்த ஊருக்கே தெரியும் ஆனால் உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்கள் அவரிடம் சென்று யோசனையை கேளுங்கள் . நிச்சயம் அவர் உங்க பிரச்சனயை தீர்த்து வைப்பார் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

பேய் பிசாசாக இருந்தாலும் அவர் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தை பரந்தாமனுக்கு சற்று சந்தோசமாக இருந்தது
நல்ல யோசனையாக இருக்கிறதே.
ஒரு முறை இந்த சாட்டையடி சாமியாரை சந்திக்கலாமா என்று யோசித்தான் பரந்தாமன்.


தொடரும்.....
 
Top Bottom