Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

வாவ் அக்கா மிக அழகான கதை... சொல்லவார்த்தைகளே இல்லை... முதல் பகுதியில மாயவன் நம்ம மனசை எப்படி கவர்ந்தானோ அது கடைசிவரையும் நீடிச்சுது.... சந்தனா ஆரம்பமே பிரம்மிப்பா ஆன்ட்டி ஹீரோயினா நமக்கு அறிமுகம் ஆகுறாள்... சாவித்திரியா அவ கடந்து வந்த வாழ்க்கையும், சினிமா எவ்வளவு அவ வாழ்க்கையை மொத்தமா மாத்துச்சு. வினை பிடித்தவனின் வினையால் வந்த பாதகம்..... ஒவ்வொரு விசயத்தையும் ரொம்ப அழகா செதுக்கிருக்கீங்க அக்கா..... பிற்பகுதியில தனா மனசு தொட்டுட்டா அக்கா.... மாயவன் தனா சந்திப்புல தொடங்கி ஒவ்வொரு இடமும் இருவரது கவிதை பேச்சுக்களும் சரி, இறுதிவரை எப்படி தொடர்ந்தார்களோ அதே நிலை மாறாது ஒரு எண்டிங்க்.... ப்பா வேறலெவல் அக்கா. 😍😍😍😍😍
கடைசி பகுதி படிக்கும் போது, சந்தோசம் வலி பாரம் எல்லாமே கலந்த மிக்ஸ்டு எமோசன்ஸ் இருந்துச்சு😍😍😍😍😍😍😍 நான் முழுவதுமா படிச்ச உங்க கதை இதுதான்.... நந்தினி அக்காவோட வார்த்தை ஜாலத்துல மதி மயங்கி போயிட்டேன் சீரியஸ்லி😍😍😍😍😍😍

மனதில் பதியும்
மாயவனே...
திரையில் மறைந்த
பெண்ணவளின்
பிழைகளை
திருத்தி....
புது உலகத்தை
காட்டிய நீயும்
அவளின் ஆசானே.....

மாயவன்😍 தனா..... ( என்றும் தொடரும் இவர்களின் பந்தம்)
Thank you so much da ma. உனக்கு இந்தக் கதைப் பிடிச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷம். நேரம் ஒதுக்கி ரீட் பண்ணதோட மட்டும் இல்லாம கமெண்ட்ஸூம் போட்டதுக்கு நன்றி டா மா. உனக்கும் வாழ்த்துகள் நல்லபடியா கதையை எழுதி முடி..😍😍❤️❤️
 
23 to இறுதி அத்தியாயம் வரை மிக அருமை. உங்கள் எழுத்துக்கள் எப்பவுமே உணர்வு பூர்வமாகவும், நடை முறை வாழ்க்கையோடு தொடர்புடையதாக தான் இருக்கும். அது போல தான் இந்த கதையும். " பிழையாய் நீ திருத்தமாய் நான் " மிக அருமை. திரைத்துறைக்கு பின் நடக்கும் சில செய்திகள் ஊடகம் மூலம் அறிந்தாலும், சந்தனா போல பல பேர் வாழ்கை அமைந்துள்ளதோ என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.
திரை துறை கனவில் மிதந்து நிதர்சனம் தெரியாமல் வதனி போல கனவில் இருக்கும் இன்றைய தலைமுறைக்கு சிறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த கதை.மாயன் ஒரு மாயாவி தான். அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட மாயக்காரன்.
மொத்தத்தில் மிக அருமை 👌👌👌👌👌போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
Thank you do much prabha ma. இவ்வளவு நாள் கழிச்சு இப்பதான் உங்க பேரே தெரிஞ்சது. எல்லா எபியையும் ரீட் பண்ணி, கமெண்ட் கொடுத்த உங்களோட தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி மா.. கருத்துக்களை பகிர்ந்துக்கிட்டதுல மிக்க மகிழ்ச்சி..😍😍❤️❤️❤️
 
வித்தியாசமான முடிவு...

மாயவன் வித்தியாசமான ஆள் தான்... அவளுக்காக செஞ்சாலும் வளைந்து குடுத்தும் குடுக்காது என அவனோட நிலையில் அழகா நிக்கிறான்... இருவருமkkum இடையில் என்னவோ ஆனால் அழகான பந்தம்... ஒருவருக்கு ஒருவர் துன்பத்திலோ/இன்பத்திலோ, தேவையிலோ தோள் கொடுக்கும் பந்தம்...

அவள் குடும்பத்தோடு சேர்ந்தது சூப்பர்.. அம்மா அப்பா கூட வச்சுட்டு, அவளுக்கான ஒரு வாழ்வை அமைசசுக்கிட்டா.. சூப்பர்...

தவறாக பயன்படுத்தப்பட்ட போதிலும் நிமிர்ந்து நின்னுட்டா... தப்பே செய்த போதிலும் நிமிர்வை விடலை... அந்த தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சு இருக்கா.. that's so nice sis...
Thank you so much for your valuable and lovable comments sis. 😍😍❤️❤️
 
சந்தனா


தவறுகள் இழைக்கப்பட்ட போதும் தடுமாறிடவில்லை
தவறிழைத்த போதும் தயங்கிடவில்லை
துரோகங்கள் சூழ்ந்த போதும்
வீழ்ந்திடவில்லை
சூலே சூழ்ச்சியான போதும்
சுருண்டிடவில்லை
நட்பே நம்பிக்கை கொன்றபோதும்
நடுங்கிடவில்லை
துரோகம் துரத்திட துன்பம் நீக்கிட துணிந்த மனம் துவண்டிடவில்லை
கன்னியவான் கண்ட போதும் கரைந்திடவில்லை
கணமும் மாறா புன்னகையில் கனம் கரைந்த போதும் மயங்கிடவில்லை
நம்பிக்கையற்ற மனம் யாரென்று தெரியாது நம்பியபோதும் கசிந்திடவில்லை
துரோகம் வெல்ல தோள் கொடுத்த துணை விலகிய போதும் கலங்கிடவில்லை
பாதகம் செய்து முகம் காண முன் நின்ற போதும் நீ வெறுத்திடவில்லை
காலம் ஓடி தனிமை தின்ற போதும் தாய் மடி திகட்டிடவில்லை
தந்தையின் வசவுகள் தொடர்ந்த போதும் கசங்கிடவில்லை
கருக்கொலை செய்தும் கருவேந்த யாசித்தபோது நீ யோசித்திடவில்லை
பிழைகளே வாழ்வான போதும் திருத்தும் வரமாய் நீ வந்த போது தயங்கிடவில்லை
மழலையை மடியேந்திய பின் உன் முதல் ஒற்றை நெற்றி முத்தம் 😳அப்போதும் நான் திகத்திடவில்லை😉
வாவ்..😍😍😍. சந்தனாவுக்கான கவி வரிகள். செம சிஸ். ரொம்ப சூப்பரா இருக்கு. Thank you so so much for your lovely words..❤️❤️❤️😍😍😍
 
வாவ் அருமையான கதை.தனா, மாயா அருமையான காரெக்டரஸ். தவறி பிழையான தனாவை திருத்தும் மாயா சூப்பர். கவிதைகள் அருமை. வெற்றி பெற வாழ்த்துகள் மா💐💐💐💐👌👌👌👌
Thank you so so much kothai ma...😍😍❤️❤️❤️
 

New Threads

Top Bottom