Bhagya Lakshmi
Member
- Messages
- 44
- Reaction score
- 18
- Points
- 8
அத்தியாயம் -5
அரக்கு நிறப்புடவையில் அங்காலபரமேஸ்வரி போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள் கயல். ஆனால் துளியளவும் முகத்தில் சிரிப்பு இல்லை. அவளுடைய நிச்சயதார்த்தம் நடைப்பெற இன்னும் சில நிமிடங்களே.
எழிலோ தனக்கு இனி ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று எண்ணி இறக்கை கட்டி பறந்தான் மனதளவில். பெண்ணுக்கு செய்யுற கடமை பாரம் குறைந்துவிட்டது என எண்ணி நெகிழ்ந்தாள் லட்சுமி. தாம்பூலம் மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் போது
"நிறுத்துங்க" என்று கம்பீரமான குரல் ஒன்று வந்தது. எல்லோருடைய பார்வையும் வாசலை நோக்கி இருந்தது....
ரத்தினவேல் பாண்டியன் கம்பீரமாய் நின்றிருந்தான். அவன் முகத்தில் பயம் எதுவும் இல்லை அவனுடைய பார்வையில் ஒரு தெளிவு இருந்தது. அவன் என்ன சொல்ல போகிறான் என்று அனைவரும் கவனித்தனர்.
"டாக்டர் தம்பி என்ன ஆச்சு ஏன் நிச்சயம் நிறுத்தனும் " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டவுடன் அருகில் அடியெடுத்து வைத்தான்
"மன்னிக்கவும், நான் கயலை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். எனக்கு கயல்னா உசுரு. அவளை நான் விட்டுக்கொடுக்க விரும்பல. இந்த நிச்சயம் நடந்தால் நீங்க எல்லாம் சந்தோஷமாக தான் இருப்பீங்க ஆனால் கயலுக்கு அப்படி இல்லை. கயலுக்கு என்னை பிடிக்கும். எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் காதலை சொல்லிக்கிட்டதே இல்லை. அந்த காதலை இப்போது சபைல சொல்ல வேண்டிய கட்டாயம் அதான் இங்கே சொல்றேன்" என்று அவன் சொல்லியவாறு கயல் இருக்கும் திசையை நோக்கினான்.
அவளது முகம் பதற்றத்தில் வியர்த்துக்கொண்டிருந்தது.
"என்னடி இதெல்லாம் " என்று உறவினர்கள் கூச்சலிட ஆரம்பிக்கவும் அவள் மயங்கி சரிந்தாள். உடனே ஓடிச்சென்று ஒரு கரம் அவளை பற்றியது வேறு யாருமில்லை பாண்டியன் தான்.
அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். அவள் கண் திறந்ததும் அவனது முகத்தை நேருக்கு நேராக கண்டாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உறவினர்கள் சிலர் இடத்தை காலி செய்தனர். எழிலோ முறைத்தபடி தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.
"தம்பி இது உங்களுக்கு நல்லாருக்கா ஏன் இப்படி இவள் வாழ்க்கையை கெடுக்குறீங்க இது தான் படிச்சவன் லட்சணம் போலருக்கு" என்று லட்சுமி கடிந்துக்கொண்டாள்.
"அய்யோ மா அப்படி எல்லாம் இல்லை. சொல்லப்போனால் கயலுக்கு இந்த நிச்சயத்துல சம்மதம் இல்லை. உங்களுக்காக தான் ஒத்துக்கிட்டா. ஆனால் அவள் மனசுல எழில் இல்லை" என்றான் தீர்க்கமாக.
"அப்படி னா சரி இனி எனக்கு இவள் தேவையே இல்லை. இந்தாடி நடையை கட்டு இந்த டாக்டர் தம்பியோடவே எங்கே போறியோ போ" என்று அவனிருக்கும் திசையை நோக்கி வழியை காண்பிக்க கயலுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"மா ப்ளீஸ் மா தப்பா எடுத்துக்காத எனக்கு எழில் மாமாவை கட்டிக்க விருப்பம் இல்லை நான் மிஸ்டர் பாண்டியனை விரும்புறேன். ஆனால் அதுக்காக இப்படி போ என்று அனுப்பி வைத்தால் என்ன அர்த்தம்" என்று கெஞ்சிய குரலில் தாயிடம் மன்றாடினாள்.
"அதெல்லாம் தெரியாது இனி நீ இந்த வீட்ல இருக்கக்கூடாது கிளம்பு" என்று பிடிவாதமாக அவள் துணிமணிகளை பையில் திணித்து.
"இந்த என்னென்ன தேவையோ எடுத்துட்டு கிளம்பு சனியன் ஒழிஞ்சிது நினைச்சிக்கிறேன்" என்று தள்ளி விடவும் பாண்டியன் அவளை தாங்கவும் சரியாக இருந்தது.
"கயல் நீ வா நம்ம போலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு அவன் தங்கியிருக்கும் வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
"கயல் நீ லட்சுமி பொண்ணா என்ன சாதிக்கனும் ஆசைப்பட்டியோ அதை மிஸஸ் ரத்தினவேல் பாண்டியனா நீ சாதிக்கலாம் உனக்கு நான் துணை நிற்பேன்" என்று அவள் கரங்களை பற்றியவாறு கூற அவனை கட்டியணைத்தப்படி அழுது தீர்த்தாள்.
"சாரி கயல் இந்த சந்தர்ப்பத்தில் காதலை பற்றி பேசலனா எப்பவும் பேசமுடியாது அதான் சபைல எல்லார் முன்பும் சொன்னேன். உனக்கு இது அவமானம் தான் எனக்கு புரியுது ஆனால்.... எனக்கு நீ கிடைக்கமாட்ட கயல். நிச்சயம் நடந்தாலே இன்னொருவர் பொண்டாட்டி தானே? அதான் தாம்பூலம் மாத்துறதுக்கு முன்னாடி தடுத்து நிறுத்தனும் வந்தேன்" என்றதும்.
"நீங்க வராமல் இருந்தால் தான் தப்பு பாண்டியன். சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன செய்ய போறோம் அடுத்து" என்று தன்னம்பிக்கையுடன் அவள் கேட்பதை பார்த்து அவனுக்கு சந்தோஷம் வந்தது.
"கயல் நீ தப்பா எடுக்கலைனா உன் நெற்றியில் ஒரே ஒரு முத்தம் தரட்டுமா டா" என்று அவன் கேட்டதும் தலையை மட்டும் அசைத்தாள். அவளுடைய நெற்றியில் அவனுடைய முதல் முத்தம் பரிசளித்தான்.
"கயல் இங்கே பாரு இந்த கிராமத்தில் ரொம்ப நாள் நீயும் நானுமாக கல்யாணம் ஆகாமல் ஒன்றாக இருக்க முடியாது. அது நாகரிகமும் இல்லை. அதனால் உடனே நம்ம சென்னைக்கு போய் என் பேரண்ட்ஸ் கிட்ட பேசி கல்யாணம் முடிச்சிட்டு அதுகப்புறம் இங்கே வரலாம் சரியா" என்றதும் அதற்கும் தலையசைத்தாள்.
"ஏன் கயல் எதுவும் பேசமாட்டியா" என்றதும்...
அவள் கண்களிலிருந்து வெள்ளாற்று போல் கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை துடைத்தவனாய் ஆறுதல் சொல்லி அவளை சாப்பிடவைத்தான்.
சென்னை செல்ல டிக்கெட் போடப்பட்டது. இவன் கயலுடன் வருகிறான் என்ற செய்தி அவன் வீட்டில் அவன் சொல்லவில்லை ஆனால் ராதாவிற்கு மட்டும் சொல்லிவைத்தான். ராதாவோ பயத்தில் வீட்டில் எதுவும் சொல்லவில்லை.
சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர் இருவரும். தான் எடுத்தது சரியான முடிவுதான் என்று பாண்டியன் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
இரண்டாதார திருமணத்திலிருந்து அவளை காப்பாற்றிய திருப்தி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தன் தேவதை தனக்கு திரும்ப கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷம் ஒருபக்கம்.
ஆனால் இப்படியொரு சந்தர்ப்பத்திலா என் காதலை கயலிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பே சொல்லியிருந்தால் அவள் முகத்தில் தெரியும் வெட்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.
இப்படியே நினைத்துக்கொண்டு ஜன்னலோரம் சாய்ந்தான் அவன் தோளில் அவளும் சாய்ந்தாள்.
'நான் நினைச்சு கூட பார்க்கல மிஸ்டர் பாண்டியன். நீங்க மட்டும் வரமால் இருந்திருந்தால் அங்கே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கும். கூடவே என் வாழ்க்கையும் தான்' என்று நினைத்தவாறு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இவ்வளவு அருகாமையில் அவனுடைய முகத்தை பார்க்கும் பாக்யம் அவளுக்கு கிட்டியதை நினைத்து பூரித்து போனாள்.
'கோயம்பேடு வந்தாச்சு' என்று நடத்துனர் சொன்னவுடன் கண்விழித்து "என்ன கயல் அவ்வளவு சீக்கிரம் வந்துடுச்சா" என்று கேட்டவாறு தனது பெட்டியை மேலிருந்து இறக்கி தூக்கிக்கொண்டு அவளை அழைத்துக்கொண்டு இறங்கினான்.
இது தான் கயலுக்கு முதன் முறை சென்னை வந்தது. அதுவும் கோயம்பேட்டின் கூட்ட நெரிசலும், சென்னை வெயிலின் தாக்கமும் அவளை ஏதோ செய்தது.
"கயல் என்ன முகமெல்லாம் வாடியிருக்கு. எதாவது சாப்பிடுறீயா" என்று அவன் கேட்டதும் உடனே சரியென்று தலையசைத்தாள்.
எதிரே தெரியும் ஹோட்டலின் வாயலில் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்...
"என்ன சாப்பிடுறீங்க" வெயிட்டர் கேட்டதும். மெனுவை பார்த்து சொன்னவுடனே வெயிட்டர் சென்று ஐந்து நிமிடம் கழித்து கொண்டு வந்தான்.
"கயல் சாப்பிடு" என்று பார்வையால் காண்பித்தான்.
இருவரும் சாப்பிட்டு பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி எழுந்தனர். அடுத்து நேரே வீடு தான். ஆட்டோவை பிடித்து வீடு வந்து இறங்கினான்.
"ஏங்க உங்கள் அப்பா அம்மா ஏத்துப்பாங்களா" என்று பதற்றத்துடன் கயல் கேட்க...
"பொறு என்ன நடக்கிறது பார்ப்போம்" என்று உள்ளே இருவரும் நுழைந்தனர்.
"டேய் பாண்டியா யார் இந்த பொண்ணு. ஆமாம் சொல்லாமல் கொள்ளாமல் வந்துருக்க என்ன ஆச்சு" என்று தந்தை காபியை பருகியவாறு கேட்க.....
"அப்பா, அது வந்து..." என்று என்ன சொல்லி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது தடுமாறினான்.
"அட நீங்க வேற புள்ளைய கேள்வி கேட்டுட்டு. அவனே களைச்சு போய் வந்துருக்கான். அந்த பொண்ணு அவன் தோழி தான் என்கிட்ட முன்பே சொல்லியிருக்கான்" என்று உளர ஆரம்பிக்க ரத்தினவேல் பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"இந்த அம்மா, என்ன சொல்றாங்க. கயலை நான் அறிமுகம் படுத்துனதே இல்லையே. " என்று யோசித்தான்.
"மிஸ்டர் பாண்டியன் இது என்ன புது ட்விஸ்ட்" என்று விழித்தப்படி கேட்டாள் கயல்.
"ஆமாம் ஆமாம்....இருக்கிற பிரச்சனைல ஆபத்பாந்தவனா இருக்காங்களே இவங்க. ஆனால் இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும் அதான் நல்லது அடுத்து என்ன செய்யப்போறோம்னு எனக்கு ஒன்னும் புரியல. புதுசா என்ன கதை ஓட்டுறாங்கனே புரியல" என்றான் நம் கதாநாயகன்.
"எது எப்படியோ பாண்டியன் சுமுகமாக வீட்டுக்குள் நுழைஞ்சாச்சு அது போதும்" என்றாள் கயல்.
"அம்மாடி உன் பேரு மறந்துட்டேன் என்ன உன் பேரு"என்றார் பாண்டியனின் தாய் சிவகாமி.
"என் பேரு கயல்" என்றாள். ஆமாம் நீயும் என் பையனும் ஒன்னா மெடிக்கல் படிச்சவங்க தானே. இப்ப நீ எங்கே ப்ராக்டிஸ் பண்ற என்றதும்.
"அய்யோ...நான் படிச்சிட்டு ப்ராக்டிஸ் பண்ணல...வீட்லயே இருந்துட்டேன்" என்றாள் சற்றும் தயங்காமல் சூழ்நிலைக்கு ஏற்றபடி.
"ஓ...அது சரி...ஆமாம் நீ சென்னைல தானே இருக்க. இது என்னமா பெட்டி படுக்கையோட வந்துருக்க" என்றார் புரியாமல்.
"அது நான் சொல்றேன் மா,அவளுக்கு கட்டாய கல்யாணம் முறைமாமன் கூட பண்ண முயற்சி பண்றாங்க அதான் பயந்துட்டு வந்துட்டா. கொஞ்ச நாள் இங்கே தான் தங்கப்போறாள். நான் உங்கள் கிட்ட பேசி விட்டுட்டு போலாமேனு வந்தேன்" என்றதும்.
"அப்படியா அப்டினா சரி" என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சிவகாமி.
'அச்சோ இந்த அம்மா வந்த விஷயத்தை சொல்ல விடமா பண்ணிடுச்சு. கயலை போய் என்கூட படிச்சவள்னு சொல்றாங்க. காலக்கொடுமை. புதுசா ஒரு ட்ராக்ல போதே நம்ம கதை.' என்று யோசிக்கவும் ராதா அங்கே வரவும் சரியாக இருந்தது.
"டேய் அண்ணா, அம்மா, உன்கூட படிச்ச விமலாவை தான் நினைச்சு பேசிட்டு இருக்கு. நீயும் விமலாவும் ப்ரெண்ட்ஸ் தானே. கிட்டத்தட்ட அந்த பொண்ணு கயல் மாதிரி இருக்கும்ல அதான் கன்பூஷன் ஆயிட்டாங்க போல..." என்று சொல்லி சிரித்து வைத்தாள்.
"ஓ அப்படியா விஷயம். அது சரி. ஆமாம் நீ எதுவும் வீட்ல சொல்லலை தானே " என்று தங்கையிடம் சந்தேகமாய் கேட்க.
"அடியாத்தி...எனக்கு இதான் வேலை பாரு. இதையெல்லாம் பேசுற அளவு நான் ஒன்னும் பெரியமனுஷி இல்லை. உன் விஷயத்தை நீ தான் பேசி சரிபண்ணிக்கனும். சரி சரி நான் ஒரு இன்டர்வியூ போகணும் டைம் ஆகுது பை" என்று விடைப்பெற்றாள் ராதா.
தொடரும்.
அரக்கு நிறப்புடவையில் அங்காலபரமேஸ்வரி போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள் கயல். ஆனால் துளியளவும் முகத்தில் சிரிப்பு இல்லை. அவளுடைய நிச்சயதார்த்தம் நடைப்பெற இன்னும் சில நிமிடங்களே.
எழிலோ தனக்கு இனி ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகிறது என்று எண்ணி இறக்கை கட்டி பறந்தான் மனதளவில். பெண்ணுக்கு செய்யுற கடமை பாரம் குறைந்துவிட்டது என எண்ணி நெகிழ்ந்தாள் லட்சுமி. தாம்பூலம் மாற்றிக்கொள்ள எத்தனிக்கும் போது
"நிறுத்துங்க" என்று கம்பீரமான குரல் ஒன்று வந்தது. எல்லோருடைய பார்வையும் வாசலை நோக்கி இருந்தது....
ரத்தினவேல் பாண்டியன் கம்பீரமாய் நின்றிருந்தான். அவன் முகத்தில் பயம் எதுவும் இல்லை அவனுடைய பார்வையில் ஒரு தெளிவு இருந்தது. அவன் என்ன சொல்ல போகிறான் என்று அனைவரும் கவனித்தனர்.
"டாக்டர் தம்பி என்ன ஆச்சு ஏன் நிச்சயம் நிறுத்தனும் " என்று கூட்டத்தில் ஒருவர் கேட்டவுடன் அருகில் அடியெடுத்து வைத்தான்
"மன்னிக்கவும், நான் கயலை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். எனக்கு கயல்னா உசுரு. அவளை நான் விட்டுக்கொடுக்க விரும்பல. இந்த நிச்சயம் நடந்தால் நீங்க எல்லாம் சந்தோஷமாக தான் இருப்பீங்க ஆனால் கயலுக்கு அப்படி இல்லை. கயலுக்கு என்னை பிடிக்கும். எனக்கு அவளை பிடிக்கும் ஆனால் காதலை சொல்லிக்கிட்டதே இல்லை. அந்த காதலை இப்போது சபைல சொல்ல வேண்டிய கட்டாயம் அதான் இங்கே சொல்றேன்" என்று அவன் சொல்லியவாறு கயல் இருக்கும் திசையை நோக்கினான்.
அவளது முகம் பதற்றத்தில் வியர்த்துக்கொண்டிருந்தது.
"என்னடி இதெல்லாம் " என்று உறவினர்கள் கூச்சலிட ஆரம்பிக்கவும் அவள் மயங்கி சரிந்தாள். உடனே ஓடிச்சென்று ஒரு கரம் அவளை பற்றியது வேறு யாருமில்லை பாண்டியன் தான்.
அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தான். அவள் கண் திறந்ததும் அவனது முகத்தை நேருக்கு நேராக கண்டாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உறவினர்கள் சிலர் இடத்தை காலி செய்தனர். எழிலோ முறைத்தபடி தன் பெற்றோரை அழைத்துக்கொண்டு நகர்ந்தான்.
"தம்பி இது உங்களுக்கு நல்லாருக்கா ஏன் இப்படி இவள் வாழ்க்கையை கெடுக்குறீங்க இது தான் படிச்சவன் லட்சணம் போலருக்கு" என்று லட்சுமி கடிந்துக்கொண்டாள்.
"அய்யோ மா அப்படி எல்லாம் இல்லை. சொல்லப்போனால் கயலுக்கு இந்த நிச்சயத்துல சம்மதம் இல்லை. உங்களுக்காக தான் ஒத்துக்கிட்டா. ஆனால் அவள் மனசுல எழில் இல்லை" என்றான் தீர்க்கமாக.
"அப்படி னா சரி இனி எனக்கு இவள் தேவையே இல்லை. இந்தாடி நடையை கட்டு இந்த டாக்டர் தம்பியோடவே எங்கே போறியோ போ" என்று அவனிருக்கும் திசையை நோக்கி வழியை காண்பிக்க கயலுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"மா ப்ளீஸ் மா தப்பா எடுத்துக்காத எனக்கு எழில் மாமாவை கட்டிக்க விருப்பம் இல்லை நான் மிஸ்டர் பாண்டியனை விரும்புறேன். ஆனால் அதுக்காக இப்படி போ என்று அனுப்பி வைத்தால் என்ன அர்த்தம்" என்று கெஞ்சிய குரலில் தாயிடம் மன்றாடினாள்.
"அதெல்லாம் தெரியாது இனி நீ இந்த வீட்ல இருக்கக்கூடாது கிளம்பு" என்று பிடிவாதமாக அவள் துணிமணிகளை பையில் திணித்து.
"இந்த என்னென்ன தேவையோ எடுத்துட்டு கிளம்பு சனியன் ஒழிஞ்சிது நினைச்சிக்கிறேன்" என்று தள்ளி விடவும் பாண்டியன் அவளை தாங்கவும் சரியாக இருந்தது.
"கயல் நீ வா நம்ம போலாம்" என்று அவளை அழைத்துக்கொண்டு அவன் தங்கியிருக்கும் வீட்டுக்குள் அழைத்து சென்றான்.
"கயல் நீ லட்சுமி பொண்ணா என்ன சாதிக்கனும் ஆசைப்பட்டியோ அதை மிஸஸ் ரத்தினவேல் பாண்டியனா நீ சாதிக்கலாம் உனக்கு நான் துணை நிற்பேன்" என்று அவள் கரங்களை பற்றியவாறு கூற அவனை கட்டியணைத்தப்படி அழுது தீர்த்தாள்.
"சாரி கயல் இந்த சந்தர்ப்பத்தில் காதலை பற்றி பேசலனா எப்பவும் பேசமுடியாது அதான் சபைல எல்லார் முன்பும் சொன்னேன். உனக்கு இது அவமானம் தான் எனக்கு புரியுது ஆனால்.... எனக்கு நீ கிடைக்கமாட்ட கயல். நிச்சயம் நடந்தாலே இன்னொருவர் பொண்டாட்டி தானே? அதான் தாம்பூலம் மாத்துறதுக்கு முன்னாடி தடுத்து நிறுத்தனும் வந்தேன்" என்றதும்.
"நீங்க வராமல் இருந்தால் தான் தப்பு பாண்டியன். சரி அதெல்லாம் இருக்கட்டும் இப்ப என்ன செய்ய போறோம் அடுத்து" என்று தன்னம்பிக்கையுடன் அவள் கேட்பதை பார்த்து அவனுக்கு சந்தோஷம் வந்தது.
"கயல் நீ தப்பா எடுக்கலைனா உன் நெற்றியில் ஒரே ஒரு முத்தம் தரட்டுமா டா" என்று அவன் கேட்டதும் தலையை மட்டும் அசைத்தாள். அவளுடைய நெற்றியில் அவனுடைய முதல் முத்தம் பரிசளித்தான்.
"கயல் இங்கே பாரு இந்த கிராமத்தில் ரொம்ப நாள் நீயும் நானுமாக கல்யாணம் ஆகாமல் ஒன்றாக இருக்க முடியாது. அது நாகரிகமும் இல்லை. அதனால் உடனே நம்ம சென்னைக்கு போய் என் பேரண்ட்ஸ் கிட்ட பேசி கல்யாணம் முடிச்சிட்டு அதுகப்புறம் இங்கே வரலாம் சரியா" என்றதும் அதற்கும் தலையசைத்தாள்.
"ஏன் கயல் எதுவும் பேசமாட்டியா" என்றதும்...
அவள் கண்களிலிருந்து வெள்ளாற்று போல் கண்ணீர் வழிந்தது. அவள் கண்ணீரை துடைத்தவனாய் ஆறுதல் சொல்லி அவளை சாப்பிடவைத்தான்.
சென்னை செல்ல டிக்கெட் போடப்பட்டது. இவன் கயலுடன் வருகிறான் என்ற செய்தி அவன் வீட்டில் அவன் சொல்லவில்லை ஆனால் ராதாவிற்கு மட்டும் சொல்லிவைத்தான். ராதாவோ பயத்தில் வீட்டில் எதுவும் சொல்லவில்லை.
சென்னை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர் இருவரும். தான் எடுத்தது சரியான முடிவுதான் என்று பாண்டியன் தனக்கு தானே சொல்லிக்கொண்டான்.
இரண்டாதார திருமணத்திலிருந்து அவளை காப்பாற்றிய திருப்தி ஒரு பக்கம் இன்னொரு பக்கம் தன் தேவதை தனக்கு திரும்ப கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷம் ஒருபக்கம்.
ஆனால் இப்படியொரு சந்தர்ப்பத்திலா என் காதலை கயலிடம் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றியது. முன்பே சொல்லியிருந்தால் அவள் முகத்தில் தெரியும் வெட்கத்தையும் சந்தோஷத்தையும் பார்த்திருக்கலாமோ என்று தோன்றியது.
இப்படியே நினைத்துக்கொண்டு ஜன்னலோரம் சாய்ந்தான் அவன் தோளில் அவளும் சாய்ந்தாள்.
'நான் நினைச்சு கூட பார்க்கல மிஸ்டர் பாண்டியன். நீங்க மட்டும் வரமால் இருந்திருந்தால் அங்கே எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சிருக்கும். கூடவே என் வாழ்க்கையும் தான்' என்று நினைத்தவாறு அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இவ்வளவு அருகாமையில் அவனுடைய முகத்தை பார்க்கும் பாக்யம் அவளுக்கு கிட்டியதை நினைத்து பூரித்து போனாள்.
'கோயம்பேடு வந்தாச்சு' என்று நடத்துனர் சொன்னவுடன் கண்விழித்து "என்ன கயல் அவ்வளவு சீக்கிரம் வந்துடுச்சா" என்று கேட்டவாறு தனது பெட்டியை மேலிருந்து இறக்கி தூக்கிக்கொண்டு அவளை அழைத்துக்கொண்டு இறங்கினான்.
இது தான் கயலுக்கு முதன் முறை சென்னை வந்தது. அதுவும் கோயம்பேட்டின் கூட்ட நெரிசலும், சென்னை வெயிலின் தாக்கமும் அவளை ஏதோ செய்தது.
"கயல் என்ன முகமெல்லாம் வாடியிருக்கு. எதாவது சாப்பிடுறீயா" என்று அவன் கேட்டதும் உடனே சரியென்று தலையசைத்தாள்.
எதிரே தெரியும் ஹோட்டலின் வாயலில் நுழைந்து ஒரு டேபிளில் அமர்ந்தனர்...
"என்ன சாப்பிடுறீங்க" வெயிட்டர் கேட்டதும். மெனுவை பார்த்து சொன்னவுடனே வெயிட்டர் சென்று ஐந்து நிமிடம் கழித்து கொண்டு வந்தான்.
"கயல் சாப்பிடு" என்று பார்வையால் காண்பித்தான்.
இருவரும் சாப்பிட்டு பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தப்படி எழுந்தனர். அடுத்து நேரே வீடு தான். ஆட்டோவை பிடித்து வீடு வந்து இறங்கினான்.
"ஏங்க உங்கள் அப்பா அம்மா ஏத்துப்பாங்களா" என்று பதற்றத்துடன் கயல் கேட்க...
"பொறு என்ன நடக்கிறது பார்ப்போம்" என்று உள்ளே இருவரும் நுழைந்தனர்.
"டேய் பாண்டியா யார் இந்த பொண்ணு. ஆமாம் சொல்லாமல் கொள்ளாமல் வந்துருக்க என்ன ஆச்சு" என்று தந்தை காபியை பருகியவாறு கேட்க.....
"அப்பா, அது வந்து..." என்று என்ன சொல்லி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாது தடுமாறினான்.
"அட நீங்க வேற புள்ளைய கேள்வி கேட்டுட்டு. அவனே களைச்சு போய் வந்துருக்கான். அந்த பொண்ணு அவன் தோழி தான் என்கிட்ட முன்பே சொல்லியிருக்கான்" என்று உளர ஆரம்பிக்க ரத்தினவேல் பாண்டியனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"இந்த அம்மா, என்ன சொல்றாங்க. கயலை நான் அறிமுகம் படுத்துனதே இல்லையே. " என்று யோசித்தான்.
"மிஸ்டர் பாண்டியன் இது என்ன புது ட்விஸ்ட்" என்று விழித்தப்படி கேட்டாள் கயல்.
"ஆமாம் ஆமாம்....இருக்கிற பிரச்சனைல ஆபத்பாந்தவனா இருக்காங்களே இவங்க. ஆனால் இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும் அதான் நல்லது அடுத்து என்ன செய்யப்போறோம்னு எனக்கு ஒன்னும் புரியல. புதுசா என்ன கதை ஓட்டுறாங்கனே புரியல" என்றான் நம் கதாநாயகன்.
"எது எப்படியோ பாண்டியன் சுமுகமாக வீட்டுக்குள் நுழைஞ்சாச்சு அது போதும்" என்றாள் கயல்.
"அம்மாடி உன் பேரு மறந்துட்டேன் என்ன உன் பேரு"என்றார் பாண்டியனின் தாய் சிவகாமி.
"என் பேரு கயல்" என்றாள். ஆமாம் நீயும் என் பையனும் ஒன்னா மெடிக்கல் படிச்சவங்க தானே. இப்ப நீ எங்கே ப்ராக்டிஸ் பண்ற என்றதும்.
"அய்யோ...நான் படிச்சிட்டு ப்ராக்டிஸ் பண்ணல...வீட்லயே இருந்துட்டேன்" என்றாள் சற்றும் தயங்காமல் சூழ்நிலைக்கு ஏற்றபடி.
"ஓ...அது சரி...ஆமாம் நீ சென்னைல தானே இருக்க. இது என்னமா பெட்டி படுக்கையோட வந்துருக்க" என்றார் புரியாமல்.
"அது நான் சொல்றேன் மா,அவளுக்கு கட்டாய கல்யாணம் முறைமாமன் கூட பண்ண முயற்சி பண்றாங்க அதான் பயந்துட்டு வந்துட்டா. கொஞ்ச நாள் இங்கே தான் தங்கப்போறாள். நான் உங்கள் கிட்ட பேசி விட்டுட்டு போலாமேனு வந்தேன்" என்றதும்.
"அப்படியா அப்டினா சரி" என்று அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் சிவகாமி.
'அச்சோ இந்த அம்மா வந்த விஷயத்தை சொல்ல விடமா பண்ணிடுச்சு. கயலை போய் என்கூட படிச்சவள்னு சொல்றாங்க. காலக்கொடுமை. புதுசா ஒரு ட்ராக்ல போதே நம்ம கதை.' என்று யோசிக்கவும் ராதா அங்கே வரவும் சரியாக இருந்தது.
"டேய் அண்ணா, அம்மா, உன்கூட படிச்ச விமலாவை தான் நினைச்சு பேசிட்டு இருக்கு. நீயும் விமலாவும் ப்ரெண்ட்ஸ் தானே. கிட்டத்தட்ட அந்த பொண்ணு கயல் மாதிரி இருக்கும்ல அதான் கன்பூஷன் ஆயிட்டாங்க போல..." என்று சொல்லி சிரித்து வைத்தாள்.
"ஓ அப்படியா விஷயம். அது சரி. ஆமாம் நீ எதுவும் வீட்ல சொல்லலை தானே " என்று தங்கையிடம் சந்தேகமாய் கேட்க.
"அடியாத்தி...எனக்கு இதான் வேலை பாரு. இதையெல்லாம் பேசுற அளவு நான் ஒன்னும் பெரியமனுஷி இல்லை. உன் விஷயத்தை நீ தான் பேசி சரிபண்ணிக்கனும். சரி சரி நான் ஒரு இன்டர்வியூ போகணும் டைம் ஆகுது பை" என்று விடைப்பெற்றாள் ராதா.
தொடரும்.