அம்மு இளையாள்
Member
- Messages
- 22
- Reaction score
- 38
- Points
- 13
4. மருகும் மனதின் ரகசிய அறையில்....!
தாலி கட்டி முடித்ததும் தன் அறையை நோக்கி சென்றவனைத் தடுத்த ராஜேஸ்வரி... திருமணச் சடங்குகளை முழுமையாக முடிக்க சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து முடித்தான்.
தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக் கடைப்பிடித்து கொண்டிருந்தாள் .... அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த செந்திலிடம் ஏதோ சைகை செய்ய, அவரும் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தவர், நாகராஜை அழைத்து இங்கு நடந்த அனைத்தையும் தெரிவித்திருந்தார்.
நேற்றிரவு முதல் சிரிப்பு சத்தத்தில் மூழ்கியிருந்த மண்டபம் இன்று முழுவதும் வார்த்தையின்றி மௌனமாக காட்சியளித்தது. மீதமிருந்த சொந்தங்களும் கடமைக்கென வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தனர்.
அன்பினி வந்ததிலிருந்து அமைதியாக இருந்த செல்வகுமார் பணியாட்கள் இடம் திரும்பி "இந்த மண்டபத்திற்கான செட்டில்மென்ட் மத்த விஷயங்கள் எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க. ராஜேஸ்வரியும் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நீ வீட்டுக்குப் போ. நான் கொஞ்சம் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்." என்றவரின் மனநிலையை புரிந்து கொண்ட ராஜேஸ்வரி செல்பவரை தடுக்காது அவரையே பார்த்திருக்க,
மண்டப வாசலிலை நோக்கி சென்றவருக்கு எதிரில் வந்து நின்ற நாகராஜ் , செல்வகுமாரின் சட்டையை பிடித்து... "ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... ரெண்டாவது தடவையா இந்த வேலையை பார்ப்ப. உன்ன மாதிரியே தாண்டா உன் பையனும். பொறுக்கி நாயே இத்தனை வயசாகியும் உன் புத்தி இன்னும் மாறலையா. உன்னால தாண்டா என் குடும்பமே இப்படி ஆகிடுச்சு. அன்னைக்கு என் குடும்ப மானத்தை வாங்குன. இன்னைக்கு என் மனத்தை வாங்கிட்ட. பிச்சக்கார நாயே உன்ன நம்பி என் வீட்டுல விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு ஒவ்வொரு நாளும் உணர்ந்துட்டு இருக்கேன். உன்னாலையும் உன் பையனாலையும் என்னுடைய தொழில் ல கூட பல நஷ்டம். இவ்வளவு பண்ணியும் உன் மனசு நிம்மதி அடையலையா. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சிருப்ப. அதுவும் உன் பையனுக்கு.... உன்னை எல்லாம் சும்மா விட கூடாது. இன்னைக்கு உன்னை கொன்னு என் குடும்ப மானத்தை காப்பாத்தல நான் நாகராஜ் இல்லடா."என்று ஆவேசமாக செல்வகுமாரை தாக்க சென்ற நாகராஜின் கையைபிடித்து தடுத்து நிறுத்திய ராஜேஸ்வரி,
"இங்க பாரு தேவையில்லாம என் புருஷன் மேல கைய வச்ச அப்புறம் நான் அண்ணன் கூட பார்க்க மாட்டேன்."என்றவரின் வார்த்தை தான் தேவ், திவ்யா இருவருக்கும் புதிதாக இருந்தது. இதுவரை தாய் தந்தை குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்தவர்கள் இருவரும். தன் தந்தை அனாதை என்றும்.. தாய்க்கு பெரிய சொந்தம் இல்லை என்றும் கூறியே வளர்க்கப்பட்டவர்கள். திவ்யா இன்னமும் எதுவும் புரியாமல் பார்த்திருக்க,
தொழில்முறையில் நாகராஜ் க்கும் தன் தந்தைக்கும் ஆகாது என்பதை அறிந்தவன் தான் தேவ். அது தொழிலில் சகஜமாக இருக்கும் ஒன்று என்பதால் மேற்கொண்டு ஆராயாமல் தொழில் மூலமாகவே அவரை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
ராஜேஸ்வரியின் சொல்லில் நாகராஜ் தன் தாயின் அண்ணன் என புரிந்து கொண்டான். மேலும் இது அன்பினுக்கு தெரியும் என்பதை அவள் மௌனமாக பார்ப்பதை வைத்து புரிந்து கொண்டவனின் பார்வை தான் உக்கிரமாக அன்பினி சித்திரையை தீண்டியது.
"அட ச்சீ!!! வாய மூடு யாருக்கு யார் அண்ணன். என் தங்கச்சி செத்துப் போயி பல வருஷம் ஆகுது. என்னைக்கு கல்யாண மண்டபத்திலிருந்து இதோ இங்க நிக்கிறானே இவன் கூட ஓடி வந்தாலோ அப்பவே அவ செத்துட்டா. இனி ஒரு வார்த்தை அண்ணன்'னு சொன்ன இவனோடு சேர்ந்து உன்னையும் கொன்னுடுவேன். உன்ன மாதிரி தான் உன் பையனையும் வளர்த்து வச்சிருக்க. உன் புருஷன் உன் மூலமா என் சொத்தை அடைய நினைச்சான் . அது முடியாம போச்சு... அதை இப்போ என் பொண்ணு மூலமா நிறைவேற்ற பார்க்கிறான் அயோக்கிய பையன். அதுக்கு நீயும் உன் பையனும் கூட்டா ..." என்ற நாகராஜின் வார்த்தையில் அக்னியாய் கொதித்த தேவ்.....
"யாரு நாங்க கூட்டா . நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. இதை தொழில் ல காட்டி இருந்தா நீங்க சொன்னீங்களே அந்த நஷ்டம் அது வந்திருக்கிறது. சரி தொழில் ல நஷ்டம் வந்துருச்சு'ன்னு எதாச்சும் காசு கேட்டா தர போறேன். அத விட்டுட்டு இப்படி பொண்ண முன்னாடி அனுப்பிட்டு பின்னாடி வந்து சண்டை போடுறீங்க. என் அப்பா பொறுக்கின்னா .. இவ்வளவு பெரிய மண்டபத்துல அத்தனை பேருக்கும் முன்னாடியும் வந்து மணவறையில் உட்கார்ந்து இல்லாத பொய்யை சொல்லி தாலி கட்டிக்கிட்ட உங்க பொண்ணு யாரு. உங்க வளர்ப்போட லட்சணம் தான் இந்த கல்யாணத்துக்கே காரணம். உங்க பொண்ண கட்டாயப்படுத்தி இங்க யாரும் தாலி கட்டல. உங்க அருமை மக தான் கட்டுனா என்னை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி எனக்கு பார்த்த பொண்ண துரத்தி விட்டுட்டு தாலி கட்டிக்கிட்டா. உங்க புத்தி தான உங்க பொண்ணுக்கும் இருக்கும். பொண்ண விட்டு என் சொத்தையும் தொழிலையும் திருட நினைச்ச மானங்கெட்ட ஜென்மம் நீங்க." என்றதும் அங்கே நின்றிருந்த விக்ரம் தேவ்வின் சட்டையை பிடிக்க,
நக்கல் பார்வையுடன் பிடித்த கையை எடுத்து விட்ட தேவ் "பணத்துக்காக பொண்ணையே அனுப்பி விட்டுட்டு...... என்னா நடிப்புடா சாமி. நீயும் அவன் பையன் தானே... அதான் தங்கச்சி பண்ண காரியத்துக்கு நாலு அரை விடாம அப்பா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நிற்கிற. இந்த லட்சணத்துல ஐயாக்கு கோபம் வேற." என்றான்.
தந்தையுடன் வந்த விக்ரமிற்கு கட்டுக்கடங்காத கோபம் இருந்தது உண்மையே . ஆனால் தன் தந்தையின் வார்த்தையில் இது தொழிலையும் தாண்டி குடும்பப் பிரச்சினை என்பதை உணர்ந்தவன் அமைதியாக இருந்தான். அதையே தன் கோழைத்தனமாக எண்ணிய தேவ்வை முறைத்துக் கொண்டே அடிக்க கையை ஓங்க ,
"விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....."
"என் புருஷன் மேல கைய வச்ச... அப்புறம் இங்க நடக்குறதே வேற சொல்லிட்ட............" என அன்பினி கூற அதில் கடுப்பான விக்ரம் " என்ன டி என்ன நடக்கும். எல்லாமே உன்னால தான். இவன் ஒரு ஆளுன்னு இவன் பின்னாடி வந்திருக்க .. ஆஹான்...!"
"ஒன்னும் நடக்காது. அவன் உன்னை அடிப்பான். நீ அவனை அடிப்ப. அந்த ஆக்ஷன் சீனை பார்க்கவா கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தி நான் கல்யாணம் பண்ணிக் கிட்ட. இங்க பாரு யாரும் என்னை கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணல. நான் அக்னியை விரும்புற. அவன இன்னொருத்திக்கு விட்டுத்தர என்னால முடியாது. அதனால தான் இந்தக் கல்யாணம். மத்தபடி என் மாமனார் பொறுக்கிம் இல்ல. என்னப்பா மானங்கெட்டவரும் இல்ல. நீ நடிக்கவும் இல்லை. புரிஞ்சுதா எல்லாருக்கும். தாலி கட்டிக்கிட்டு தனியா நின்னுட்டு இருக்க... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. கல்யாண நாள் அதுவுமா உங்க பஞ்சாயத்தை பார்க்க எனக்கு நேரமில்லை." என்றுவிட்டு வெளியில் நின்றிருந்த தேவ்வின் காரில் அமர்ந்துகொள்ள....,
தேவ் தான், "இப்போ தெரியுதா யார் பொறுக்கின்னு. பொண்ண ஆம்பளை யாவும்... இதோ இங்க நிற்கிறானே.... இந்த ஆம்பளைய பொண்ணாவும் வளத்து வச்சிருக்க நாகராஜ்." என நக்கலான சிரிப்பை சிரித்து மேலும் அவ்விருவரையும் கடுப்பேற்ற..
அருகிலிருந்த ராஜேஸ்வரி தான்..." போதும் தேவ் . வா நம்ம கிளம்பலாம். "
வீட்டிற்கு வந்த அன்பினியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவளும் அதற்கு வருந்தவும் இல்லை. அப்படி இப்படி என இரவு வேளையும் நெருங்க அதுவரை வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த அன்பினி சித்திரை அங்கிருக்கும் வேலையாட்களை அழைத்து முதலிரவுக்கு தேவையான பூ, பழங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்யச் சொல்ல,
அதை கேட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரி தான் அன்பினியை ஏதோ அரிய வகை விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தார். அப்பார்வை அவளும் உணர்ந்தாலும்..... கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் குளிர்சாதனைப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி அதில் பாதாம் ,பிஸ்தா, முந்திரி, திராட்சை என கையில் கிடைத்த அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து இரவு எடுத்து செல்வதற்காக தனியாக எடுத்துவைத்தாள்.
பின் , "திவ்யா" என சத்தமாக அழைக்க .. அக் குரலில் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யாவிடம்,
"இன்னைக்கு எங்களுக்கு முதலிரவு. அதுக்காக நான் ரெடி ஆகணும். உன் ரூம் தேவைப்படுது நீ கொஞ்ச நேரம் வெளியே இரு." என்றவள் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட....தேவ், 'ஓஹோ ! மேடம்க்கு முதலிரவு கேக்குதோ...... வா ! வா! சிறப்பா கொண்டாடலாம்.' என நினைத்தவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொள்ள.... அவனது அறை முதலிரவுக்கு தயார் படுத்தப்பட்டது.
தன் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அன்பினி, சமையலறைக்குள் நுழைந்து தயார் படுத்தி வைத்திருந்த பாலையும் எடுத்துக் கொண்டு, நேராக ராஜேஸ்வரியிடம் சென்று ,
"அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. " என்றவளை அவர் கோபமாக முறைத்து பார்க்க , அதற்கெல்லாம் அஞ்சும் ரகம் நான் இல்லை என்பது போல்... அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நகர்ந்தாள் அன்பினி சித்திரை.
நடக்க போவதை அறிந்தும் உள்ளே சென்ற அன்பினியை வரவேற்றது என்னமோ அலங்கரித்த ஆள் இல்லாத அறை தான். 'எங்கே அவன்' என தேடியவாறு உள்ளே வந்தவளின் மேல் மாட்டு சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி அன்புடன் வரவேற்றான் அன்பினி சித்திரையின் கணவன் அக்னி சந்திர தேவ்.
தாலி கட்டி முடித்ததும் தன் அறையை நோக்கி சென்றவனைத் தடுத்த ராஜேஸ்வரி... திருமணச் சடங்குகளை முழுமையாக முடிக்க சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து முடித்தான்.
தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக் கடைப்பிடித்து கொண்டிருந்தாள் .... அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த செந்திலிடம் ஏதோ சைகை செய்ய, அவரும் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தவர், நாகராஜை அழைத்து இங்கு நடந்த அனைத்தையும் தெரிவித்திருந்தார்.
நேற்றிரவு முதல் சிரிப்பு சத்தத்தில் மூழ்கியிருந்த மண்டபம் இன்று முழுவதும் வார்த்தையின்றி மௌனமாக காட்சியளித்தது. மீதமிருந்த சொந்தங்களும் கடமைக்கென வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தனர்.
அன்பினி வந்ததிலிருந்து அமைதியாக இருந்த செல்வகுமார் பணியாட்கள் இடம் திரும்பி "இந்த மண்டபத்திற்கான செட்டில்மென்ட் மத்த விஷயங்கள் எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க. ராஜேஸ்வரியும் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நீ வீட்டுக்குப் போ. நான் கொஞ்சம் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்." என்றவரின் மனநிலையை புரிந்து கொண்ட ராஜேஸ்வரி செல்பவரை தடுக்காது அவரையே பார்த்திருக்க,
மண்டப வாசலிலை நோக்கி சென்றவருக்கு எதிரில் வந்து நின்ற நாகராஜ் , செல்வகுமாரின் சட்டையை பிடித்து... "ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... ரெண்டாவது தடவையா இந்த வேலையை பார்ப்ப. உன்ன மாதிரியே தாண்டா உன் பையனும். பொறுக்கி நாயே இத்தனை வயசாகியும் உன் புத்தி இன்னும் மாறலையா. உன்னால தாண்டா என் குடும்பமே இப்படி ஆகிடுச்சு. அன்னைக்கு என் குடும்ப மானத்தை வாங்குன. இன்னைக்கு என் மனத்தை வாங்கிட்ட. பிச்சக்கார நாயே உன்ன நம்பி என் வீட்டுல விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு ஒவ்வொரு நாளும் உணர்ந்துட்டு இருக்கேன். உன்னாலையும் உன் பையனாலையும் என்னுடைய தொழில் ல கூட பல நஷ்டம். இவ்வளவு பண்ணியும் உன் மனசு நிம்மதி அடையலையா. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சிருப்ப. அதுவும் உன் பையனுக்கு.... உன்னை எல்லாம் சும்மா விட கூடாது. இன்னைக்கு உன்னை கொன்னு என் குடும்ப மானத்தை காப்பாத்தல நான் நாகராஜ் இல்லடா."என்று ஆவேசமாக செல்வகுமாரை தாக்க சென்ற நாகராஜின் கையைபிடித்து தடுத்து நிறுத்திய ராஜேஸ்வரி,
"இங்க பாரு தேவையில்லாம என் புருஷன் மேல கைய வச்ச அப்புறம் நான் அண்ணன் கூட பார்க்க மாட்டேன்."என்றவரின் வார்த்தை தான் தேவ், திவ்யா இருவருக்கும் புதிதாக இருந்தது. இதுவரை தாய் தந்தை குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்தவர்கள் இருவரும். தன் தந்தை அனாதை என்றும்.. தாய்க்கு பெரிய சொந்தம் இல்லை என்றும் கூறியே வளர்க்கப்பட்டவர்கள். திவ்யா இன்னமும் எதுவும் புரியாமல் பார்த்திருக்க,
தொழில்முறையில் நாகராஜ் க்கும் தன் தந்தைக்கும் ஆகாது என்பதை அறிந்தவன் தான் தேவ். அது தொழிலில் சகஜமாக இருக்கும் ஒன்று என்பதால் மேற்கொண்டு ஆராயாமல் தொழில் மூலமாகவே அவரை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
ராஜேஸ்வரியின் சொல்லில் நாகராஜ் தன் தாயின் அண்ணன் என புரிந்து கொண்டான். மேலும் இது அன்பினுக்கு தெரியும் என்பதை அவள் மௌனமாக பார்ப்பதை வைத்து புரிந்து கொண்டவனின் பார்வை தான் உக்கிரமாக அன்பினி சித்திரையை தீண்டியது.
"அட ச்சீ!!! வாய மூடு யாருக்கு யார் அண்ணன். என் தங்கச்சி செத்துப் போயி பல வருஷம் ஆகுது. என்னைக்கு கல்யாண மண்டபத்திலிருந்து இதோ இங்க நிக்கிறானே இவன் கூட ஓடி வந்தாலோ அப்பவே அவ செத்துட்டா. இனி ஒரு வார்த்தை அண்ணன்'னு சொன்ன இவனோடு சேர்ந்து உன்னையும் கொன்னுடுவேன். உன்ன மாதிரி தான் உன் பையனையும் வளர்த்து வச்சிருக்க. உன் புருஷன் உன் மூலமா என் சொத்தை அடைய நினைச்சான் . அது முடியாம போச்சு... அதை இப்போ என் பொண்ணு மூலமா நிறைவேற்ற பார்க்கிறான் அயோக்கிய பையன். அதுக்கு நீயும் உன் பையனும் கூட்டா ..." என்ற நாகராஜின் வார்த்தையில் அக்னியாய் கொதித்த தேவ்.....
"யாரு நாங்க கூட்டா . நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. இதை தொழில் ல காட்டி இருந்தா நீங்க சொன்னீங்களே அந்த நஷ்டம் அது வந்திருக்கிறது. சரி தொழில் ல நஷ்டம் வந்துருச்சு'ன்னு எதாச்சும் காசு கேட்டா தர போறேன். அத விட்டுட்டு இப்படி பொண்ண முன்னாடி அனுப்பிட்டு பின்னாடி வந்து சண்டை போடுறீங்க. என் அப்பா பொறுக்கின்னா .. இவ்வளவு பெரிய மண்டபத்துல அத்தனை பேருக்கும் முன்னாடியும் வந்து மணவறையில் உட்கார்ந்து இல்லாத பொய்யை சொல்லி தாலி கட்டிக்கிட்ட உங்க பொண்ணு யாரு. உங்க வளர்ப்போட லட்சணம் தான் இந்த கல்யாணத்துக்கே காரணம். உங்க பொண்ண கட்டாயப்படுத்தி இங்க யாரும் தாலி கட்டல. உங்க அருமை மக தான் கட்டுனா என்னை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி எனக்கு பார்த்த பொண்ண துரத்தி விட்டுட்டு தாலி கட்டிக்கிட்டா. உங்க புத்தி தான உங்க பொண்ணுக்கும் இருக்கும். பொண்ண விட்டு என் சொத்தையும் தொழிலையும் திருட நினைச்ச மானங்கெட்ட ஜென்மம் நீங்க." என்றதும் அங்கே நின்றிருந்த விக்ரம் தேவ்வின் சட்டையை பிடிக்க,
நக்கல் பார்வையுடன் பிடித்த கையை எடுத்து விட்ட தேவ் "பணத்துக்காக பொண்ணையே அனுப்பி விட்டுட்டு...... என்னா நடிப்புடா சாமி. நீயும் அவன் பையன் தானே... அதான் தங்கச்சி பண்ண காரியத்துக்கு நாலு அரை விடாம அப்பா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நிற்கிற. இந்த லட்சணத்துல ஐயாக்கு கோபம் வேற." என்றான்.
தந்தையுடன் வந்த விக்ரமிற்கு கட்டுக்கடங்காத கோபம் இருந்தது உண்மையே . ஆனால் தன் தந்தையின் வார்த்தையில் இது தொழிலையும் தாண்டி குடும்பப் பிரச்சினை என்பதை உணர்ந்தவன் அமைதியாக இருந்தான். அதையே தன் கோழைத்தனமாக எண்ணிய தேவ்வை முறைத்துக் கொண்டே அடிக்க கையை ஓங்க ,
"விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....."
"என் புருஷன் மேல கைய வச்ச... அப்புறம் இங்க நடக்குறதே வேற சொல்லிட்ட............" என அன்பினி கூற அதில் கடுப்பான விக்ரம் " என்ன டி என்ன நடக்கும். எல்லாமே உன்னால தான். இவன் ஒரு ஆளுன்னு இவன் பின்னாடி வந்திருக்க .. ஆஹான்...!"
"ஒன்னும் நடக்காது. அவன் உன்னை அடிப்பான். நீ அவனை அடிப்ப. அந்த ஆக்ஷன் சீனை பார்க்கவா கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தி நான் கல்யாணம் பண்ணிக் கிட்ட. இங்க பாரு யாரும் என்னை கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணல. நான் அக்னியை விரும்புற. அவன இன்னொருத்திக்கு விட்டுத்தர என்னால முடியாது. அதனால தான் இந்தக் கல்யாணம். மத்தபடி என் மாமனார் பொறுக்கிம் இல்ல. என்னப்பா மானங்கெட்டவரும் இல்ல. நீ நடிக்கவும் இல்லை. புரிஞ்சுதா எல்லாருக்கும். தாலி கட்டிக்கிட்டு தனியா நின்னுட்டு இருக்க... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. கல்யாண நாள் அதுவுமா உங்க பஞ்சாயத்தை பார்க்க எனக்கு நேரமில்லை." என்றுவிட்டு வெளியில் நின்றிருந்த தேவ்வின் காரில் அமர்ந்துகொள்ள....,
தேவ் தான், "இப்போ தெரியுதா யார் பொறுக்கின்னு. பொண்ண ஆம்பளை யாவும்... இதோ இங்க நிற்கிறானே.... இந்த ஆம்பளைய பொண்ணாவும் வளத்து வச்சிருக்க நாகராஜ்." என நக்கலான சிரிப்பை சிரித்து மேலும் அவ்விருவரையும் கடுப்பேற்ற..
அருகிலிருந்த ராஜேஸ்வரி தான்..." போதும் தேவ் . வா நம்ம கிளம்பலாம். "
வீட்டிற்கு வந்த அன்பினியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவளும் அதற்கு வருந்தவும் இல்லை. அப்படி இப்படி என இரவு வேளையும் நெருங்க அதுவரை வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த அன்பினி சித்திரை அங்கிருக்கும் வேலையாட்களை அழைத்து முதலிரவுக்கு தேவையான பூ, பழங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்யச் சொல்ல,
அதை கேட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரி தான் அன்பினியை ஏதோ அரிய வகை விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தார். அப்பார்வை அவளும் உணர்ந்தாலும்..... கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் குளிர்சாதனைப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி அதில் பாதாம் ,பிஸ்தா, முந்திரி, திராட்சை என கையில் கிடைத்த அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து இரவு எடுத்து செல்வதற்காக தனியாக எடுத்துவைத்தாள்.
பின் , "திவ்யா" என சத்தமாக அழைக்க .. அக் குரலில் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யாவிடம்,
"இன்னைக்கு எங்களுக்கு முதலிரவு. அதுக்காக நான் ரெடி ஆகணும். உன் ரூம் தேவைப்படுது நீ கொஞ்ச நேரம் வெளியே இரு." என்றவள் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.
திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட....தேவ், 'ஓஹோ ! மேடம்க்கு முதலிரவு கேக்குதோ...... வா ! வா! சிறப்பா கொண்டாடலாம்.' என நினைத்தவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொள்ள.... அவனது அறை முதலிரவுக்கு தயார் படுத்தப்பட்டது.
தன் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அன்பினி, சமையலறைக்குள் நுழைந்து தயார் படுத்தி வைத்திருந்த பாலையும் எடுத்துக் கொண்டு, நேராக ராஜேஸ்வரியிடம் சென்று ,
"அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. " என்றவளை அவர் கோபமாக முறைத்து பார்க்க , அதற்கெல்லாம் அஞ்சும் ரகம் நான் இல்லை என்பது போல்... அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நகர்ந்தாள் அன்பினி சித்திரை.
நடக்க போவதை அறிந்தும் உள்ளே சென்ற அன்பினியை வரவேற்றது என்னமோ அலங்கரித்த ஆள் இல்லாத அறை தான். 'எங்கே அவன்' என தேடியவாறு உள்ளே வந்தவளின் மேல் மாட்டு சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி அன்புடன் வரவேற்றான் அன்பினி சித்திரையின் கணவன் அக்னி சந்திர தேவ்.