Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
583
Reaction score
588
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:
மருகும் மனதின் ரகசிய அறையில்..



முன்னோட்டம்
....




அந்த நேரம் .... மண்டப வாசலில் மங்கை ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். தங்க நிற முழு ஜரிகை நெய்த புடவை மற்றும் அதற்கு பொருத்தமான ரத்த நிற ரவிக்கை அணிந்து கொண்டு. முகத்தில் ஒப்பனையையே
தேவையில்லாத அளவிற்கு அழகில் மிதந்து கொண்டிருந்த வசிகர முகத்தில் சிறிது கண் மையிட்டு... வளைந்த வானவில்லுக்கு நடுவில் சிகப்பு நிற பொட்டிட்டும் வைத்திருந்தாள். உதட்டிற்கு மிதமான சாயம் பூசி இருக்க , காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் மற்றும் அதற்குப் பொருத்தமாக கழுத்தையொட்டியபடி வைரத்தில் ஆன ... பதக்க மாலையும் (நெக்லஸ்), அதற்கு அடுத்தபடியாக மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஆரமும்,

அளவான இடுப்பில் ஒட்டியானம் என உடம்பில் நகைகளால் இரண்டாம் ஆடை பொருத்திக்கொண்டு கர்வமான அலங்கரித்துடன் இருந்தாள். மேலும் கை இரண்டிலும் மருதாணியை புஜம் வரை பூசி இருக்க , பூ அலங்காரத்துக்கு என நீண்ட தலை முடி ஜடை...என்று கல்யாண பெண்ணிற்கு உரிய அனைத்து அலங்காரத்தையும் கொண்டு அன்ன நடை இட்டு மெல்ல மணவறைக்கு நுழைந்தவள் .... அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தேவ் பக்கத்தில் அமர்ந்தாள். ஐயர் சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தவன்... தன் அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால மனைவியை காண பார்வையை திருப்ப.... அங்கே அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டதும் மழை நேரத்தில் சட்டென பெரும் இடையோடு தாக்கும் மின்னலை போல் பல மடங்கு மின்னல் துடித்து வெடித்தது அவனது இதயத்தில்.















"அப்பா எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு . இனிமே இந்த நிறுவனத்தை நானே பாத்துக்குறேன் ன்னு சொன்னேன் தான. அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி... இனிமே என்கிட்ட அவனோட எந்த வித்தையும் செல்லாது. நீங்க தேவையில்லாம கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. இந்த ஒப்பந்தம் போனா என்ன! அடுத்த ஒப்பந்தம் கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும். என் மேல நம்பிக்கை இருந்தா இந்த பேச்ச இதோட விடுங்கள்." என அவனும் தன் தந்தையின் கோபத்தில் சிறிதும் யோசிக்காமல் அக்னி சந்திர தேவ் மேல் முதல் வன்மத்தை வளர்க்க தொடங்கினான். பின்னாளில் இந்த வன்மமே அவன் வாழ்க்கைக்கு பெரிய எதிரியாக மாறப்போவது தெரியாமல்













அவன் கையை தட்டி விட்டவள்.. "ஏய்! இன்னொரு தடவை மேல கை வச்சா அப்புறம் அவ்வளவுதான். என்ன கேட்ட ! யார் நானா? பதில் உன்கிட்டதான் இருக்கு. என்னை வெளியே அனுப்ப உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ என்னை காதலித்தது உண்மை. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி கழட்டி விட்டதும் உண்மை. என்னை இங்க இருந்து அனுப்புனா... உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுவேன். எனக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் உன் வீட்ல இருக்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என்னை ஏமாத்திட்டு நீ வேற எவளுக்காது தாலி கட்டுன அப்புறம் வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் இருப்ப. " என்றவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவாறு மணவறைக்கு சென்று மீண்டும் அமந்து கொண்டு..."சும்மா முறைச்சி கிட்டே இருக்காம... ஒழுங்கா வந்து தாலிய கட்டுற வழியை பாரு. இல்லனா மண்டபத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் உலகத்துக்கே தெரியவரும். ஏற்கனவே இங்க இருந்து போனவங்க உன்னை பத்தி இந்நேரம் சொல்லி இருப்பாங்க. என்னையும் வெளியே அனுப்பிட்டா இருக்க கொஞ்ச மரியாதையும் மொத்தமா போயிரும். உனக்கு வேற வழியே இல்லை." என்றாள்.









"அவன் குடும்பமே எனக்கு பெரிய எதிரி. தொழில்ல எனக்கு அடி மேல அடி கொடுத்துட்டு இப்போ அவன் மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணி வாழலாமா. அவனோட கல்யாணம் நாளைக்கு நடக்கவே கூடாது. அப்படி மட்டும் நடந்துச்சு உன் சாவு என் கையில தான். அவன் கல்யாண மண்டபத்துல அவமானப்பட்டு நிக்கணும். அதைப் பார்த்து அந்த செல்வகுமார் நெஞ்சைப் பிடிச்சுட்டு அங்கேயே விழனும். அதற்கான வேலையை பாரு... "என்று வன்மமாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தார்.







"வாங்க !வாங்க !மிஸ்டர் அக்னி சந்திர தேவ்.அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த முறைப்பு. தாலி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே உங்களுக்கு கற்றேன்."என்று கர்வம் நிறைந்த கண்ணில் கண் சிமிட்டி அவனையே வெற்றிக் களிப்போடு பார்க்க...







"அன்பினி சித்திரை! உன் வாழ்க்கையில இந்த நாள் ல மறந்துடாத. இனி உனக்கு ஒவ்வொரு நாளும் நரகமா தான் இருக்கும். என்னை பழி வாங்க வந்த உன்னை... உன்னோட உயிர் போகிற கடைசி நிமிஷம் வரைக்கும் சித்திரவதை பண்ணுவேன். எதுக்காக இவனோட வாழ்க்கையில வந்தோம்னு தினம் தினமும்.. துடிக்க போற. சிரி ..இதுதான் வாழ்க்கையில நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு." என்றபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு முடித்தவன் குங்குமத்தை கையில் எடுத்து நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்தான்.
 
Last edited:
1. மருகும் மனதின் ரகசிய அறையில்...



நின்றே வானூர்தியை பிடிக்கும் அளவிற்கு நெடுநெடு கட்டிடங்களுக்கு நடுவில் பதின்மூன்று தளங்கள் கொண்ட கண்ணாடி கட்டிடம்... வைர கற்களின் ஒளி போல அருணம்( காலை சூரியன்) உதவியால் அழகாக ... எஸ் ஆர் ஃபேலஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது.

கட்டிடத்தின் நுழைவாயிலில் சென்னை சாலைக்கு சற்றும் பொருந்தாத... ரோல்ஸ் ராய்ஸ் என்ற உயர் வகை ஊர்தி நிற்க, தன் முதலாளியின் வருகையை உணர்ந்த காவலாளி எழுந்து நின்று காலை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டே...நுழைவாயில் கதவை திறந்து விட.... உள்ளிருந்து அவருக்கு தலையசைத்தப்படி தன் வாகனத்தை கட்டிடத்தின் முன்பு நிறுத்தினான் நம் நாயகன். ஊர்தியில் இருந்து சட்டென இறங்காமல் டாஸ் ஃபோர்ட் ல் இருந்த திசு காகிதத்தை ( tissue paper) எடுத்து கைகளை துடைத்து விட்டு , அரைதிண்மக் கரைசலின் (gel) உதவியோடு காகித சுருட்டுப் ( pepper roll) போல் அடங்கி இருந்த தனது தலைமுடியை கைகளால் தொட்டு...ஒரு முறை சரிபார்த்து விட்டு, கம்பீரமாக இறங்கினான்.

இறங்கி நின்றவன் யாரையும் பார்க்காமல், மின்னல் வேகத்தில் மின்தூக்கியின் உதவியோடு... எட்டாம் தளத்தில் இருக்கும் தனது அலுவலக அறைக்கு முன் நிற்க, திரு. அக்னி சந்திர தேவ் (மேனேஜிங் டைரக்டர் இன்
ஆர் எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்) என்ற பெயர் பொருந்திய அறைக்குள் நுழைந்து கொண்டான்.

செல்வகுமார், ராஜேஸ்வரியின் மூத்த மகன் தான் அக்னி சந்திர தேவ். படிப்பை முடித்த கையோடு தனது தந்தையின் தொழிலை கையில் எடுத்தவன்.... நான்கு ஆண்டுகளாக தந்தைக்கு நற்பெயரை தரும் அளவிற்கு தனது நிர்வாகத் திறமையை வளர்த்திருந்தான். பெரும்பாலும் கட்டுமானம் சார்ந்த நிறுவனம் எதுவாக இருந்தாலும் இவன் பார்வைக்கு வந்து தான் மற்றவர் கைக்கு செல்லும். லாபத்தோடு சிறந்த அணுகுமுறையும் இவன் வசம் இருப்பதால்... கடந்த நான்கு ஆண்டுகளில் ஆர்எஸ் கட்டுமான நிறுவனம் உச்ச நிலையில் உள்ளது. அக்னி சந்திர தேவ் என்பவன் வேலையில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஓரிரு வார்த்தையில் பேச்சை முடிக்கும் குணம் கொண்டவன். தேவ்க்கு தொழிலை விட்டால் அதிக விருப்பம்... குடும்பத்தோடு இருப்பது மட்டுமே. அம்மா அப்பா தங்கை என அளவான குடும்பம். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதல் திருமணம் செய்து கொண்ட.... தம்பதிளால் இன்றுவரை குடும்பம் நான்கு உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ளது. செல்வகுமாரு க்கு சொந்தம் என யாரும் இல்லாததால்.... காதலித்துக் கைப்பிடித்த மனைவி மட்டுமே உயிர். மனைவிக்காக உருவாக்கப்பட்டதே இந்த கட்டுமான நிறுவனம். முதலில் பல சரிவுகளை சந்தித்து அனைத்தையும் இழந்து நின்ற செல்வகுமாருக்கு உற்ற துணையாய் நின்று தேற்றியது அவரது மனைவி ராஜேஸ்வரி தான். பின் மெல்ல மெல்ல... தன் பணியினை செய்ய அக்னி சந்திர தேவ் பிறக்கும்பொழுது நல்ல நிலையில் இருந்தனர் இருவரும்.

அறையில் நுழைந்ததிலிருந்து... தன் வேலையில் மும்முறமாக இருந்த தேவ் ஞாபகம் வந்தவனாய் தனது தனிப்பட்ட உதவியாளர் ( personal assistant) ஜீவாவை அலைபேசியில் அழைத்தான். சாவகாசமாக அலுவலகத்திற்குள் அமர்ந்து எதிரில் இருக்கும் ஷாலினியை ரசித்துக்கொண்டிருந்த ஜீவா ..தேவ் அழைப்பில் பதறி மிடுக்காக நிமிர்ந்து நின்று.. "வரேன் சார்" என்று அழைப்பை துண்டிக்கும் முன் தேவ்' வின் அறையில் நின்றான்.
"ஜீவா நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு ?முடிக்கச் சொல்லி ரெண்டு நாள் ஆகுது. எனக்கு இன்னைக்கு ஈவினிங் குள்ள... முடிச்சே ஆகணும். எந்த காரணத்துக்காகவும் இந்த ஒப்பந்தம் அந்த நாகராஜ் கைக்கு மட்டும் போய்டவே கூடாது." என்றவனுக்கு..
"இல்ல சார் .அவர் கைக்கு போக வாய்ப்பே இல்லை. நான் பேச வேண்டியது எல்லாத்தையும் நேத்தே பேசிட்டேன். அவங்களும் நமக்கு முடித்து தருவதா தான் சொல்லி இருக்காங்க. கண்டிப்பா இன்னைக்குள்ள நல்ல நியூஸ் வரும் சார்." என பதிலளித்தான் ஜீவா.

"நமக்கு சாதகமா பேசி இருக்காங்கன்னு சாதாரணமா இருக்காதீங்க ஜீவா. நம்ம கைக்கு கிடைக்கிற வரைக்கும்.. கவனமா இருக்கணும். அப்பா என்னை நம்பி கொடுத்திருக்காங்க. ஒருநாளும் அவங்க வருத்தப்பட்ட மாதிரி நடக்கக் கூடாது. யார்கிட்ட தோத்தாலும்.. அந்த நாகராஜ் கிட்ட மட்டும் தோற்க கூடாது." என தேவ் உறுதியாகக் கூற, "கண்டிப்பா சார். நான் திரும்பவும் பேசிப் பார்க்கிறேன்." என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் ஜீவா.

அலைபேசியின் தொடுதிரையில் மை மாம் என்ற பெயரோடு ராஜேஸ்வரியின் புகைப்படம் வர, முகத்தில் சிரிப்புடன் அழைப்பை ஏற்ற தேவ் "சொல்லுங்கம்மா."
"அப்பு'னு... காலையில தான் சாப்பிடாம போயிட்ட . மதியமாது வீட்டுக்கு வந்துடு. வேலை வேலைனு இருக்காதா அப்புன்னு . கொஞ்சம் உன்னையும் கவனிக்கனும். காலை நேர சாப்பாட்டை தவிர்க்காதன்னு நிறைய தடவை சொல்லிட்டேன். நீ கேக்குற மாதிரி இல்லை அப்பு'னு.
இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவ. கல்யாண மாப்பிள்ளை மாதிரியே இருக்கா அப்பு'னு . உன்னோட வேலை எல்லாத்தையும் இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிடு . கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா வீட்ல இரு அப்பு'னு. உனக்கான சடங்கு எல்லாம் செய்யணும். இந்த மாதிரி நீ வேலை வேலை னு இருந்தா அதெல்லாம் எப்போ செய்யுறது..." என்று செல்ல மகனுக்கு அன்பு கட்டளை இட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி பேச்சில் சிரித்த ..,

அக்னி சந்திர தேவ் தான் " அம்மா போது ம்மா நிறுத்துங்க. வீட்டிலிருந்து கிளம்பும்போதும் இதையே தான சொன்னீங்க. திரும்பவும் இதையே சொல்றீங்க. என்னோட செல்ல அம்மா சொல்லி கேட்காம இருப்பேனா. கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல என்னோட எல்லா வேலையும் முடிச்சிட்டு, உங்க செல்ல பையன் கல்யாண மாப்பிள்ளையா ஜம்முனு வீட்டுல இருப்பான் போதுமா என்றான்."

தன் மகன் தன் பேச்சுக்கு செவி சாய்த்ததை நினைத்து உள்ளுக்குள் சிரித்த ராஜேஸ்வரி... வெளியிலோ, "அப்புனு போதும் போதும் ரொம்ப அம்மாக்கு ஆசை கட்டாத. இதையே தான் ரெண்டு நாளைக்கு முன்னாடியும் சொன்ன. திரும்பவும் சொல்லாம ...செஞ்சு காட்டு. மதியம் மறக்காம சாப்பிட வீட்டுக்கு வா அப்பு'னு" என்றபடி அலைபேசியை வைக்க ,

"செல்ல அம்மா" என அவனும் அலைபேசி வைத்து விட்டு தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

"எப்படி ? தொடர்ந்து அவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் கிடைக்குது. என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல தொடர்ந்து தோல்வியை சந்தித்ததே இல்லை. நான் எங்க யார்கிட்ட தோத்தாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த செல்வகுமர் பையன் கிட்ட மட்டும் தோத்துட்டா அதைவிட அவமானம் எனக்கு வேறு எதுவுமே இல்லை ‌ . செல்வ குமரையே இந்த தொழில் ல நிலைக்க விடாம பல இடைஞ்சலை கொடுத்து ஓடவிட்டிருக்கேன். ஆனா இதுல அனுபவமே இல்லாத ஒரு சின்ன பையன் நாலு வருஷமா தொடர்ந்து எனக்கு தோல்வியை மட்டும்தான் கொடுக்கிறான். இதுக்கு மேலயும் நான் அமைதியா இருந்தா இத்தனை வருஷமா கட்டி காப்பாற்றின இந்த சாம்ராஜ்யம் ஒன்னும் இல்லாம போயிரும். என்னோட தாத்தா, அப்பா, நான் னு மூனு தலைமுறையா நிலைத்திருந்த இந்த தொழில் நாலாவது தலைமுறையா என் பையன் கிட்ட தர போறேன். என் மகன் கிட்ட தரும்பொழுது... இந்த நிறுவனம் லாபத்தோடு இருக்கணும். என் மகன் இந்த சாம்ராஜ்யத்தை ஆளனும். அதுக்கு தடையா இருக்கிறது அந்த அக்னி சந்திர தேவ் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை நம்ம வாங்கி ஆகணும்." என்று தன் அலுவலக பணியாளரிடம் கூறிக்கொண்டிருந்தார் நாகராஜ்.
அந்நேரம் அங்கு வந்த... நாகராஜன் மகன் விக்ரம் தன் தந்தையின் கோபத்தை புரியாது அருகிலிருக்கும் பணியாளரை பார்க்க அவரோ, "எல்லாமே அந்த அக்னி சந்திர தேவ் பற்றி தான் தம்பி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அரசு சார்பாக ஒரு ஒப்பந்தம் ஒன்று வெளியிட்டு இருக்காங்க. அதை மட்டும் நம்ம வாங்கிட்டா நல்ல பேரும் கிடைக்கும் அதை விட அதிக லாபமும் நமக்கு கிடைக்கும் தம்பி. நமக்கு பெரும்பாலும் வேறு யாரும் போட்டியாக வர மாட்டாங்க அந்த அக்னி சந்திர தேவை தவிர. உளவுத்துறை சொன்ன தகவல் படி... அவனுக்கு தான் இந்த ஒப்பந்தம் போகிற நிலைமையில இருக்காம். அதான் அப்பா இவ்வளவு கோவமா இருக்காங்க. இத்தனைக்கும் அவனுக்கும் நமக்கும் ஒப்பந்தத் தொகை நூல் அளவு தான் வித்தியாசம். தொடர்ந்து ஒவ்வொரு ஒப்பந்தம் நடக்கும் பொழுதும் இதேதான் தம்பி நடக்குது. அப்படி என்ன வித்தை தான் அவன் பண்றான்னு புரியல. இத்தன வருஷமா எங்க எந்த ஒப்பந்தம் நடந்தாலும் நமக்கு தான் முதல் முன்னுரிமை கிடைக்கும். சில நேரம் பணி காரணமா நம்மளே நிறைய ஒப்பந்தத்தை வேணாம்னு நிராகரித்து இருக்கோம். அந்த மாதிரி சூழ்நிலையை கையாண்டு இருந்த நமக்கு.... அவன் வந்ததுக்கப்புறம் தலைகீழா மாறிடுச்சு. இப்போலம் ஒப்பந்தம் அவனுக்கு தான் முதல்ல போகுது. அவன் வேணான்னு நிராகரிக்கிற ஒப்பந்தத்தை நம்ம எடுத்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்." என விக்ரமிற்கு கூற, தந்தையையே பார்த்திருந்த விக்ரம்... "அப்பா எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு . இனிமே இந்த நிறுவனத்தை நானே பாத்துக்குறேன் ன்னு சொன்னேன் தான. அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி... இனிமே என்கிட்ட அவனோட எந்த வித்தையும் செல்லாது. நீங்க தேவையில்லாம கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. இந்த ஒப்பந்தம் போனா என்ன! அடுத்த ஒப்பந்தம் கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும். என் மேல நம்பிக்கை இருந்தா இந்த பேச்ச இதோட விடுங்கள். என அவனும் தன் தந்தையின் கோபத்தில் சிறிதும் யோசிக்காமல் அக்னி சந்திர தேவ் மேல் முதல் வன்மத்தை வளர்க்க தொடங்கினான். பின்னாளில் இந்த வன்மமே அவன் வாழ்க்கைக்கு பெரிய எதிரியாக மாறப்போவது தெரியாமல்.

யாருக்கு ஒப்பந்தம் கிடைக்க கூடாது என அக்னி தேவ் நினைத்திருந்தானோ, அந்த நபரான நாகராஜனும் அவனது மகன் விக்ரமும் அக்னி தேவ் க்கு கிடைக்கக்கூடாது என்று நினைத்திருக்க.. இம்மூவரையும் வாழ்நாள் பகையாளியாய் மாற்று பொருட்டு இவர்கள் இடத்திற்கு வந்து கொண்டிருந்தாள் அன்பினி சித்திரை. நம் கதையின் கதாநாயகி
 
2. மருகும் மனதின் ரகசிய அறையில்..


ஒரே நேரத்தில் இலட்சம் மக்கள் அமரும் அளவிற்கு மிகப் பிரம்மாண்ட மண்டபம் ஒன்றில் , இந்த நாள் பூக்களுக்கு பஞ்சம் என்பது போல் உலகில் உள்ள அத்தனை பூக்களையும் ஒன்று திரட்டி .... வானவில்லின் நிறத்தைப் போல் பிரம்மாண்டமாய் அலங்கரிக்க தொடங்கியிருந்தனர் வேளையாட்கள் அந்த மண்டபத்தை. ஒருபுறம் பூவால் அலங்கரிக்கப்பட்டிருக்க மறுபுறம் வண்ண வண்ண விளக்குகளால் நிலவின் தேவை இருக்காது என்பது போல் அழகாக மினு மினுக்க தொடங்கியிருந்தது.
உள்ளே மணமக்கள் வருகைக்காக காத்திருந்த அத்தனை நபர்களும் மேல்தட்டு மக்கள். ஒவ்வொருவரையும் பார்த்தாலே தெரியும்.. அவர்கள் தரையில் கால் படாத முதலாளிகள் என்று. வரும் அத்தனை நபரையும் செல்வகுமார் அன்போடு வரவேற்று கொண்டிருக்க , ராஜேஸ்வரி தன் மகனின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மகள் திவ்யா தான், "அம்மா இதெல்லாம் எதுக்கு நீங்க பாத்துட்டு இருக்கீங்க. அண்ணா'க்கு தெரிஞ்சா சத்தம் போட போறான். பேசாம வரவங்களை வரவேற்கிற வேலைய பாருங்க. இந்த ஏற்பாட்டு எல்லாத்தையும் அண்ணா உதவியாளரே பண்ணிடு வாங்க." என்றாள்.

"என்னதான் மத்தவங்க பார்த்தாலும்.. இது என்னோட மகன் கல்யாணம் . நல்ல படியா நடக்கனும்'னு ஒரு அம்மாவா நினைக்கிறது உனக்கு புரியாது திவ்யா. நானும் உன் அப்பாவும் கல்யாணம் பண்ணும் பொழுது எங்கள் இரண்டு பேரைத் தவிர கூட வேற யாரும் இல்ல. இப்ப வரைக்கும் பிள்ளைங்க உங்களைத் தவிர சொந்தம்'னு யாருமே இல்லை. என் மகனுக்கு வர மருமகள்தான் எனக்கு கிடைக்க போற புது உறவு. அவள் என் வீட்டுக்கு வரும்பொழுது எல்லாமே சரியா இருக்கணும். அது மட்டும் இல்ல உன் அண்ணாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டோம்'னு நல்லாவே தெரியும்... தான திவி. ஏதாச்சும் சின்ன பிரச்சனை வந்தாலும்... அவன் கோபத்தை நிறுத்தி வைக்க முடியாது. அதுக்காக தான் நான் இவ்வளவு மெனக்கெட்டு பார்த்துட்டு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் தானே... விடிஞ்சா கல்யாணம். அதுக்கப்புறம் எனக்கு என்ன வேலை இருக்கு திவி. நல்லபடியா என் மகனையும் மருமகளையும் கவனிக்கிறதை தவிர. நீ உன் அண்ணன் ரெடி ஆகிட்டானானு போய் பாரு." என்று அவர் தன் வேலையை கவனிக்க, திவி தான் "அம்மா மாமியாரா மிரட்டுவிங்கன்னு பார்த்தா வர மருமகளுக்கு இப்பவே கூஜா துக்குறிங்க. இப்படியே போனா என் நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கும் போல...."என அவரை கேலி பேச,

அதில் தன் மகளின் காதைத் திருகிய ராஜேஸ்வரி, "என்ன திவி வாய் ரொம்ப அதிகமா இருக்கு. என் மருமகளை நான் தாங்குறேன். உனக்கு என்ன பொறாமை. உனக்கும் ஒரு மாமியார் வருவார்கள் ல அப்போ பேசிக்கிறேன் உன்னை " என்று அவளது காதை விட,

காதில் கை வைத்து தேய்த்துக்கொண்டே... "இப்பவே கட்சி மாறிட்டியா இரு'ம்மா அண்ணி வரட்டும் நாத்தனார் கொடுமையை நான் காட்டுறேன்" என்று கூறிவிட்டு ராஜேஸ்வரி முறைக்கும் முன் தன் அண்ணன் அறை நோக்கி ஓடினாள்.


அலங்கரித்த மேடையை மேலும் அலங்கரிக்க மணமக்கள் இருவரும் மேடை ஏற்றப்பட்டனர். இருவரையும் வாழ்த்த சொந்தங்கள், நண்பர்கள், தொழில் நண்பர்கள் என வரிசையாக சென்று வாழ்த்தி கொண்டிருந்தனர். வாழ்த்த வருபவர்களை மணமகள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்க, மணமகன் ஆன அக்னி சந்திர தேவோ, யாருக்கோ நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சி போல் செயற்கையான சிரிப்பை சிந்தியவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிக்கப்பட மணமக்கள் இருவரும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிது நேரத்திலே தேவ் அறைக்குள் நுழைந்த திவி.... "அண்ணா அம்மா உனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க" என சிரிப்போடு அவன் முன் நீட்ட..."நீ எதுக்குடா எடுத்துட்டு வந்த. சொல்லியிருந்தா நானே சாப்பிட வந்திருப்பேன் இல்ல." என்று தன் தங்கையிடம் வினவ,

திவி, "அண்ணா இப்போ நீ சாதாரணமான ஆளா என்ன...! மாப்பிள்ளை ண்ணா மாப்பிள்ளை. சும்மா கெத்தா இருக்க வேண்டாமா. அதன் உனக்கு இந்த சேவகம் லா. அது மட்டும் இல்ல அண்ணா... அண்ணி வந்ததும் அவங்கள சமாளிக்கவே உனக்கு நிறைய தெம்பு வேணும் . அதுக்காக தான் இப்பவே நல்லா சாப்பிட சொல்றோம். அண்ணிக்கும் அம்மாக்கும் நடுவுல நீ மாட்டிகிட்டு முழிக்க போறத நினைக்கவே ஆனந்தமா இருக்கு அண்ணா..." என தன் உடன் பிறப்பிடம் மகிழ..

"வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சி திவி. உன் அண்ணி... அந்த மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டா. அப்படியே நடந்தாலும் அதை சமாளிக்க அம்மாக்கு நல்லாவே தெரியும்." என்றான் தேவ்.

"பாருடா. இப்பவே அண்ணிக்கு எவ்வளவு சப்போட்டு'ன்னு. அப்போ எல்லாரு மாதிரியும் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் அன்னிக்கு பயந்து அடிமையா வாழ போற அப்படித்தானே. உன்னோட ஒளிமயமான வருங்காலத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணா." என்றவள் மேலும், "உனக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா மறக்காம என்ன கேளு அண்ணா. அண்ணியை சமாளிப்பது எப்படி'ன்னு உனக்கு நான் நிறைய அட்வைஸ் தரேன்." என மேலும் தன் அண்ணனை வார...

"அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்... திவி. இப்போ இந்தா உன் வாய கொஞ்சம் மூடு" என்றபடி அவளின் வாயில் ஒரு பூரியை முழுதாக அடக்கினான் திவியின் அன்பு அண்ணன்.

ஒருபுறம் நான்கு ஜீவன்கள் ஆனந்தத்தில் மூழ்கி இருக்க... அங்கே நாகராஜோ மிகவும் கொதித்துக் கொண்டிருந்தார். அக்னி சந்திர தேவ் வின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ஒரு நபரை ஏற்பாடு செய்து மண்டபத்திற்கு அனுப்பியிருந்தார். அந்த நபரோ இன்னும் நாகராஜுக்கு எந்த தகவலும் சொல்லாமல் இருக்க ஒருவேளை மாட்டிக் கொண்டானோ, அடுத்து என்ன செய்வது என யோசனையில் இருக்க, அந்த நேரம் அவர் அனுப்பி வைத்த நபர் அழைக்க ஆர்வமாக எடுத்தவர்..."என்ன நடக்குது அங்க. தகவல் சொல்ல இவ்வளவு நேரமா?" என கேட்க

"சார்! இங்க பிரச்சனை பண்ற மாதிரி ஒன்னும் நடக்கல. எல்லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்கு. நானும் ஏதாச்சும் பிரச்சனை பண்ண முடியுமான்னு ரொம்ப நேரமா காத்திருந்தேன் சார். ஆனா ஒன்னும் பண்ண முடியல. இப்போ வரவேற்பு நிகழ்ச்சியும் முடிஞ்சுது. காலையில கல்யாணத்தை எப்படியாவது நான் நிருத்துறேன் சார்..."என்று ரகசியமாக கூறி முடித்தார் அந்த உளவு நபர் செந்தில்.

நாகராஜ், "என்ன பண்ற செந்தில். உன்னை எதுக்காக அனுப்புனேன். அந்த வேலையை பார்க்காம எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுன்னு சொல்ற . இப்படித்தான் நீ சொல்லுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதனாலதான் உன்ன நம்பாம.. நானே ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளைக்கு சரியா தாலி கட்டுற நேரம் அங்க ஒரு பொண்ணு வருவா. நேரா அந்த அக்னி சந்திர தேவ் சட்டையை பிடிச்சு சண்டை போடுவாள். நீ அந்த நேரம் போய்... அந்த பொண்ணுகிட்ட என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் சந்தேகம் வராம கேளு. அவளும் அந்த அக்னி சந்திர தேவ் என்னை காதலிச்சு ஏமாற்றி கை விட்டுட்டான்னு அழுது நாடகம் போடுவாள். நீ அதைக் கேட்டுட்டு கொஞ்சம் கொஞ்சம பெரிசு பண்ணி கல்யாணத்தை நடத்த விடாம நிறுத்து. இந்த திட்டம் எந்த காரணத்துக்காகவும் சொதப்ப கூடாது.

அவன் குடும்பமே எனக்கு பெரிய எதிரி. தொழில்ல எனக்கு அடி மேல அடி கொடுத்துட்டு இப்போ அவன் மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணி வாழலாமா.நானும் ஆரம்பத்துல இருந்து இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன என்னவோ பண்ணிட்டேன். ஒன்னும் நல்லபடியா நடக்கல அவனோட கல்யாணம் நாளைக்கு நடக்கவே கூடாது. அப்படி மட்டும் நடந்துச்சு உன் சாவு என் கையில் தான். அவன் கல்யாண மண்டபத்துல அவமானப்பட்டு நிக்கணும். அதைப் பார்த்து அந்த செல்வகுமார் நெஞ்சைப் பிடிச்சுட்டு அங்கேயே விழனும். அதற்கான வேலையை பாரு... " என்று வன்மமாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தார்.

இவர் என்ன திட்டம் தீட்டினாலும்.. நாளைய தினம் அக்னி சந்திரனுக்கு திருமணம் நடக்கப் போவது உறுதி.

ஆனால், அத்திருமணம் தான்... நாகராஜ் நெஞ்சை இன்னும் எரியச் செய்யும் செயலாக இருக்க போகிறது. நாளைய தினம் ... ஒருத்திக்கு வெற்றியாக, ஒருவனுக்கு அவமானமாக, மற்றொருவனுக்கு தீரா பகையாக ....




அம்மு இளையாள்
 
3. மருகும் மனதின் ரகசிய அறையில்...






விடியற்காலையில் சுபமுகூர்த்த நேரம் நெருங்க மண்டபமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒருபுறம் மணமகள் வெட்கச்சிரிப்போடு தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கதாநாயகனோ அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். மகனின் அறைக்குள் வந்த ராஜேஸ்வரியின் தன் மகன் தயாராக இருப்பதை அறிந்து அவன் முன் சென்றவர் கண்ணில் அன்போடு அக்னி தேவ்க்கு திஷ்டி கழித்து, "அப்புனு உன்ன இந்த மாதிரி மணக்கோலத்துல பாக்கணும்னு அம்மாக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா. இன்னைக்குதான் அந்த ஆசை நிறைவேறி இருக்கு. நீ எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அப்பு'னு..."என கண்ணில் நீரோடு பேசும் தாயைப் பார்த்த ...

அக்னி சந்திர தேவ் தான் , "அம்மா எதுக்காக இப்போ அழுறீங்க . உங்களோட ஆசைக்காக தான் இந்த கல்யாணமே. என் அம்மா எப்பவுமே சந்தோஷமா இருக்கணும். அதுதான் இந்த மகனோட ஆசை" என்றான்.
"அப்போ அம்மாக்காக தான் இந்த கல்யாணமா! உனக்கு என் மருமகளை பிடிக்கலையா அப்பு'னு." என மகாலட்சுமி ஏக்கமாக பார்க்க,


சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவரையே பார்த்து இருந்த தேவ் தன்னை பழைய நினைவுக்குள் அழைத்துச் சென்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு "அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பிடிச்சு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன் போதுமா. இப்போ நீங்க அழாம போங்க. நான் இன்னும் முழுசா தயார் ஆகல " என்று தன் தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் .


ஏசி மாளிகையில் சிறிதாக புகை மூட்டப்பட்ட ஹோம குண்டத்தின் அருகில் ஐயர் அமர்ந்து எதிர்கால வாழ்க்கைக்கான மந்திரங்களை ஓத..., சிறிது நேரத்தில் தேவ் அங்கு வரவழைக்கப்பட்டான். வந்தவன் சபையில் இருக்கும் அனைவருக்கும் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்தபடி, தனக்கான மண மேடையில் அமர.. ஐயர் மன மகனுக்கான மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். மந்திரங்கள் முழுதாக முடிந்திருக்க மணமகளை அழைத்து வரச் சொல்ல....

அந்த நேரம் .... மண்டப வாசலில் மங்கை ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். தங்க நிற முழு ஜரிகை நெய்த புடவை மற்றும் அதற்கு பொருத்தமாக ரத்த நிற ரவிக்கை அணிந்து கொண்டு, முகத்தில் ஒப்பனையையே தேவையில்லாத அளவிற்கு அழகில் மிதந்து கொண்டிருந்த முகத்தில் சிறிது கண் மையிட்டு... வளைந்த வானவில்லுக்கு நடுவில் சிகப்பு நிற பொட்டிட்டு, உதட்டிற்கு மிதமான சாயம் பூசி இருக்க .... காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் மற்றும் அதற்குப் பொருத்தமாக கழுத்தையொட்டியபடி வைரத்தில் ஆன ... பதக்க மாலையும் (நெக்லஸ்), அதற்கு அடுத்தபடியாக மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஆரமும்,
அளவான இடுப்பில் ஒட்டியானம் என உடம்பில் நகைகளால் பொறுத்தி கர்வமான அலங்கரித்துடன் இருந்தாள். மேலும் கை இரண்டிற்கும் மருதாணியை புஜம் வரை பூசி இருக்க , பூ அலங்காரத்துக்கு என நீண்ட தலை முடி ஜடையும் என்று கல்யாண பெண்ணிற்கு உரிய அனைத்து அலங்காரத்தையும் கொண்டு அன்ன நடை இட்டு.... மெல்ல மணவறைக்கு நுழைந்தவள் அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தேவ் பக்கத்தில் அமர்ந்தாள். ஐயர் சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தவன்... தன் அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால மனைவியை காண பார்வையை திருப்ப.... அங்கே அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டதும், மழை நேரத்தில் சட்டென பெரும் சத்தத்துடோடு தாக்கும் மின்னல் போல பல மடங்கு வீரியமான மின்னலை வெடித்தது அவனின் இதயம்.


ஏற்கனவே மணப் பெண்ணைப் போலவே அலங்கரித்து வாசல் வழியில் வந்தவளை அங்கு அமர்ந்திருந்தவர்கள் வித்தியாசமாக பார்க்க, நேராக மணமகன் பக்கத்தில் அமர்ந்ததும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது அங்கிருந்தவர்களுக்கு. அதிலும் பெண் வீட்டாருக்கும் செல்வகுமார், ராஜேஸ்வரி தம்பதியருக்கும் நிலநடுக்கத்தில் நிற்பது போன்ற அதிர்வு. யாருக்கும் ஒன்றும் புரியாமல் நினைவுகளை இழந்து ஸ்தம்பித்து நிற்க, அங்கே கல்யாண மண்டபம் நிலையில்லாத நிலையில் இருந்தது.


முதலில் சூழ் நிலையிலிருந்து மீண்ட பெண் பெற்றோர் வந்தவளிடம்... "யாருமா நீ என் பொண்ணு உட்கார வேண்டிய இடத்தில நீ வந்து உட்கார்ந்து இருக்க. எந்திரிம்மா முதல்ல.." கோபமாக கட்டளையிட்டனர்.


வந்த அல்லி ராணியோ... பக்கத்தில் அமர்ந்திருந்த தன் வருங்காலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பொறுமையாக எழுந்து நின்றவாறு "இங்க பாருங்க இது ஞாயமா எனக்கு நடக்க வேண்டிய கல்யாணம். எனக்கு துரோகம் பண்ணிட்டு.. உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க பாக்குறாரு மிஸ்டர் அக்னி சந்திர தேவ். " என்று பெரும் இடியை செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு கொடுக்க..,


"என்ன சம்பந்தி இதெல்லாம். இந்த பொண்ணு சொல்றது உண்மையா?" என்ற பெண்ணின் பெற்றோருக்கு பதிலளிக்க முடியாமல் செல்வகுமார், ராஜேஸ்வரி இருவரும் தன் மகனை பார்க்க..


"அவனோ அவள் சொன்ன வார்த்தையில் கட்டுக்கடங்காத தீப்பிழம்பு இமயமலை போல் உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தான்.
"அவங்களை என்ன கேட்கிறீங்க. நான் ஒருத்தி இப்படி இருக்கிறது அவங்களுக்கு இப்பதான் தெரியும். என்ன காதலிச்சது இதோ இங்க உட்கார்ந்துட்டு இருக்கானே இவன் தான். கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு என்கூட ஊரு ஊரா சுத்திட்டு... இப்போ நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான். இவனும் நானும் அஞ்சு வருஷத்துக்கு மேல காதலிச்சிட்டு இருக்கோம். என்னை ஏமாத்திட்டு உங்க பொண்ண கல்யாணம் பண்ணா.. அங்க பாருங்க போலீஸ்காரங்க நிக்கிறாங்க. நான் வரும் போது அவங்களையும் சேர்த்து தான் கூட்டிட்டு வந்தேன். என்னை ஏமாத்திட்ட தா இதோ இவன் மேலயும் உங்க பொண்ணு மேலயும் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே தள்ளிடுவேன்."என்றுவிட்டு சாவகாசமாக திரும்பவும் மணவறையில் பெண்ணிற்கான இடத்தில் அமர்ந்து கொண்டாள்.


அவள் சொல்லிய வார்த்தையில் பெண்ணின் பெற்றோர்கள்... செல்வகுமார் இடம் தகாத வார்த்தையில் பிரச்சனை செய்ய அந்த இடம் மொத்தமும் அக்னி சந்திர தேவ்விற்கு எதிராக திரும்பியது. மகனைப் பற்றி நன்கு தெரிந்த பெற்றோர்கள்... இதை பொய்யென நிரூபிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.


நேரம் செல்ல செல்ல... அனைவரின் குற்ற பார்வைக்கு ஆளான தேவ் தன் பெருமை மொத்தத்தையும் இழந்து...
"போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம். தப்பு பண்ணது நான். என்னை பெத்தவங்க கிட்ட கேள்வி கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இங்க நடக்குறது என் தனிப்பட்ட விஷயம். இத தப்பு சரின்னு சொல்ல உங்களுக்கு இடமில்லை." என்றவன்....
அங்கிருந்த பெண்ணின் பெற்றோர்களிடம், "மன்னிச்சிருங்க. இதுக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். உங்க பொண்ண நான் ஏமாத்தல. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்திருந்தா இதோ இவளோட வார்த்தையை நம்பி சண்டை போட்டிருக்க மாட்டீங்க. என்னை நம்பாத உங்களுக்கு பதில் சொல்லணு'ம்னு அவசியமும் எனக்கில்லை . உங்களுக்கு உண்மை ஒரு நாள் தெரியவரும். அது வரைக்கும் உங்க பார்வைல நான் குற்றவாளியாவே இருக்கேன். " என்றான்.


"பாத்தீங்களா உங்க பையன் பேசுறதை. என்ன பையனை வளத்து வச்சிருக்கீங்க. ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் பையன் பண்ற வேலையா இது. எவ்வளவு பெரிய மனுஷனா இருந்துட்டு பிள்ளையை வளர்க்குறது ல இப்படி கோட்டை விட்டுட்டீங்களே. இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் என் பொண்ண உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சா என்ன விட பெரிய முட்டாள் யாரும் இல்லை. இவ்வளவு தூரம் எங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்து அசிங்க படுத்திட்டிங்க. இதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் தருவேன் .என்றவர்கள் அங்கிருந்த அனைத்து சொந்தத்தை யும் கூட்டிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.


அனைவரும் கலைந்து சென்றதும் மீதமிருந்த சொந்தங்களுக்கு மத்தியில்... எதுவும் பேச முடியாமல் செல்வகுமார் ஒரு பக்கமாக சென்று அமர்ந்து கொண்டார். இது செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்த.... தான் செய்த செயலின் தண்டனை இதுவென வருந்தி அமைதி காத்தனர். இவர்கள் அமைதிக்கு மாறாக... அவர்களின் மகன் தான் மணவறையில் அமர்ந்திருந்த அவளின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து கீழே தள்ளி விட்டு,

"யாரடி நீ உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். எப்பவோ நடந்த விஷயத்துக்கு இப்போ பழிவாங்க வந்தியா. ச்சீ !உன்ன மாதிரி பொண்ணலாம் பார்த்தா கூட பாவம். என் அப்பா அம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்க. எதுக்காக அவங்களை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தின. நல்லா ஞாபகம் வச்சுக்கோ இன்னைக்கு நீ பண்ண தப்புக்கான தண்டனைய வாழ்க்கை முழுக்க கொடுத்துகிட்டே இருப்பேன். மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு." என்றதோடு நில்லாமல் கீழே விழுந்தவளை மீண்டும் கைப்பற்றி வாசலை நோக்கி அழைத்துச் செல்ல...,


அவன் கையை தட்டி விட்டவள்.. ஏய்! இன்னொரு தடவை மேல கை வச்சா அப்புறம் அவ்வளவுதான். என்ன கேட்ட ! யார் நானா? பதில் உன்கிட்டதான் இருக்கு. என்ன வெளியே அனுப்ப உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ என்னை காதலித்தது உண்மை. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி கழட்டி விட்டதும் உண்மை. என்னை இங்க இருந்து அனுப்புனா... உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுவேன். எனக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் உன் வீட்ல இருக்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என்னை ஏமாத்திட்டு நீ வேற எவளுக்காது தாலி கட்டுன அப்புறம் வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் இருப்ப. " என்றவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவாறு மணவறைக்கு சென்று மீண்டும் அமந்து கொண்டு..."சும்மா முறைச்சி கிட்டே இருக்காம... ஒழுங்கா வந்து தாலிய கட்டுற வழியை பாரு. இல்லனா மண்டபத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் உலகத்துக்கே தெரியவரும். ஏற்கனவே இங்க இருந்து போனவங்க உன்னை பத்தி இந்நேரம் சொல்லியிருப்பாங்க. என்னையும் வெளியே அனுப்பிட்டா இருக்க கொஞ்ச மரியாதையும் மொத்தமா போயிரும். உனக்கு வேற வழியே இல்லை." என்றாள்.


நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமர்ந்திருந்த செல்வகுமாருக்கு அருகில் சென்ற ராஜேஸ்வரி... "என்னங்க! இப்போ என்ன பண்றது இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம். இந்த பொண்ணு சொல்ற எதுவும் உண்மை இல்லை'ன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என ஒரு தாயாய் தன் மகனுக்கு ஆதரவுக் கரம் நீட்ட..


அதை கேட்டவளோ, "என்ன சொன்னீங்க அத்தை.. உங்க பையன் என்னை காதலிக்கலையா ! நல்ல காமெடி . இதோ என் கையில இருக்க இந்த போட்டோவைப் பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க. " என்று சேலையில் மறைத்து வைத்து இருந்த புகைப்படங்களை அவர்முன் வீச அதில் தேவ்வும் புதிதாக வந்தவளும் சிரித்த முகமாக கண்ணில் காதலோடு காதல் பறவைகளாய் காட்சியளிக்க... தாயின் கண்கள் அதிர்ச்சியோடு தன் மகனை நோக்கியது.

அவனும் அதை எதிர்பார்க்காததால்... மௌனமாக அவரையே பார்த்திருக்க...


"தேவ் .... போய் மண மேடையில உட்காரு. "
என்ற தாயின் வார்த்தையில் உடலில் இருக்கும் ரத்தம் மொத்தமும் உறைந்தவன் போல தன் தாயையே பார்த்திருக்க,


அண்ணனின் நிலை உணர்ந்த திவி
"அம்மா... அண்ணா அப்படி எதுவும் பண்ணி இருக்காது ம்மா. ஒரு போட்டோவ வச்சு அண்ணாவை சந்தேகப்படாத. என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேளு ம்மா." என பேசும் மகளை நிறுத்துமாறு கை அசைத்தவர்,


"இனி ஒரு வார்த்தை பேசினா உன் அம்மா உயிரோட இருக்க கடைசி நாள் இதுவா தான் இருக்கும். உன் அண்ணனை போய் உட்கார சொல்லு. ஐயரே நீங்க ஆக வேண்டியதை பாருங்கள்." என கூறிய ராஜேஸ்வரி தன் கணவன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.


வாங்க! வாங்க ! மிஸ்டர் அக்னி சந்திர தேவ். அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த முறைப்பு. தாலி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே உங்களுக்கு கற்றேன்."என்று கர்வம் நிறைந்த கண்ணில் கண் சிமிட்டி அவனையே வெற்றிக் களிப்போடு பார்க்க...


தன் நிலைமையை நொந்தவாறு அவள் அருகில் இயந்திரமாய் அமர்ந்தான். அடுத்தடுத்து சடங்குகள் செய்து விட்டு .. அய்யர் கொடுத்த மாங்கல்யத்தை கையில் வாங்கியவன் ,


"அன்பினி சித்திரை... உன் வாழ்க்கையில இந்த நாள் ல மறந்துடாத. இனி உனக்கு ஒவ்வொரு நாளும் நரகமா தான் இருக்கும். என்ன பழி வாங்க வந்த உன்னை... உன்னோட உயிர் போகுற கடைசி நிமிஷம் வரைக்கும் சித்திரவதை பண்ணுவேன். எதுக்காக இவனோட வாழ்க்கையில வந்தோம்னு தினம் தினம்.. துடிக்க போற. சிரி இதுதான் வாழ்க்கையில நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு." என்றபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு முடித்தவன் குங்குமத்தை கையில் எடுத்து நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்தான்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom