Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 33
கோவில் மண்டபத்தில் இருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு காட்டுக்குள் கிளம்பி விட்டனர். இருவரும் அடிக்கடி அரண்மனைக்கு போய் வந்ததால் அவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவேயில்லை. தன் அண்ணனுக்காக உயர்தர மான ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தால் ஆதித்தன். இருவருமே குதிரையில் ஏறிகாட்டை நோக்கி பயணமானார்கள். காட்டின் எல்லையில் அவர்களை வரவேற்க காத்திருந்தான் பளியன் ஒருவன்.
" என்ன நண்பா ? நீ தான் எங்களை அழைத்து செல்ல வந்தவனா?" என்றான் ஆதித்தன்.
"ஆமாம். உங்களை பத்திரமாக அழைத்து வரச் சொல்லி தலைவரின் உத்தரவு. வாருங்கள் போகலாம்" என்றான் அவன்.
மூன்று குதிரைகளும் காட்டு பகுதிக்குள் நடை போட ஆரம்பித்தன. தன் சுற்றுபுறத்தை பார்வையிட்ட அரிஞ்சயன் " இவ்வளவு கடினமான நில பகுதியில் படை நடத்தி வருவது வெகு சிரமம், ஜெயசிம்மன் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான் என்று நினைக்கிறேன்" என்றான் ஆதித்தன்.
வழிகாட்டி அதை கேட்டு புன்னகைத்தான். "சரியாகத் தான் சூழலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். நாம் செல்லும் பாதையில் கூட பாதி வழியில் குதிரையிலிருந்து இறங்கி கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும். ஆனால் மிகப் பெரும் சைன்யம் இதன் வழியாக வரும் போது அத்தனை இயற்கை வளங்களும் சர்வநாசமாகி விடும் என்று நினைக்கும் போது தான் மனம் வருத்தமடைகிறது."
"இங்கேயிருந்து படைகளின் வருகையை நடமாட்டத்தை கண்காணிக்க ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்களா?" என்றான் அரிஞ்சயன்
"இல்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அவ்வளவு பெரிய சைன்யம் இந்த காட்டுக்குள் நுழைவதை இயற்கையே காட்டி கொடுத்து விடும். இங்கே காட்டில் சிறு சலனம் ஏற்பட்டாலும் பறவைகள் பறந்து காட்டி கொடுத்து விடும். அந்நியர்களின் வருகையை கண்டால் கத்தும் ஆட்காட்டி குருவி ஓன்று போதும். ஆட்களில் நடமாட்டத்தை கண்டு கொள்ள "
"இவ்வளவு பெரிய சைன்யம் தனக்கான பெரும் உணவு பொருளோடு தான் இங்கே வரும். அவர்களால் இங்கே கொண்டு வர முடியாத ஒரே பொருள் தண்ணீர் தான். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தாகத்தால் தவிப்பார்கள். சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் உள்ள நீரை உறிஞ்சி விடும். அதனால் அவர்கள் நீர் நிலைகளை தேடி ஓடியாக வேண்டும்"
"நீங்கள் சொல்வது சரிதான். இதை எங்கள் தலைவரும் யோசித்தார்.அதற்காகத்தான் வழியில் உள்ள நீர் நிலைகளில் ?"
"விசத்தை கலந்து விட்டீர்களா? அது மிகப் பெரிய பாவமாயிற்றே?"
"இல்லை. அதுவெல்லாம் குரூர மனம் படைத்த நகரவாசிகளின் வழக்கம். நாங்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கே கண்டிப்பான விதிமுறைகள் வைத்திருக்கிறோம். கர்ப்பமான விலங்குகளை 'குட்டி ஈன்ற தாய் விலங்குகளை நாங்கள் கொல்ல மாட்டோம். ஐந்தறிவு, நான்கறிவு பெற்ற விலங்குகளிடமே கருணை காட்டும் நாங்கள் நீர் நிலைகளில் விசம் கலக்கும் கேவலமான செயலை செய்ய மாட்டோம். இறந்து போன விலங்குகளின் உடல் பாகத்தை அந்த நீர் நிலைகளில் போட்டு வைத்திருக்கிறோம். அழுகிய மாமிசங்களின் நாற்றமடிக்கும் அந்த தண்ணீரை யாராலும் குடிக்க முடியாது"
"பரவாயில்லை. பளியர் இன தலைவனும் வியூகம் வகுப்பதில் வல்லவனாகத்தான் இருக்கிறான். சரியான காரியத்தைத் தான் செய்து வைத்திருக்கிறான். அவனது இந்த செயலை நான் மனதார பாராட்டுகிறேன்." என்றான் அரிஞ்சயன்.
"அந்த பாராட்டை அவரை சந்திக்கும் போது நேரிலேயே சொல்லிவிடுங்கள். இனி குதிரைகள் இந்த வழியில் பயணிக்க முடியாது. நாம் கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும்" என்றான் வழிகாட்டி.
மூவரும் குதிரையிலிருந்து இறங்கி கரடு முரடான வழியற்ற புதர்களின் வழியாகப் பயணிக்க ஆரம்பித்தனர்.
நீண்ட நேர நடை பயணத்திற்கு பிறகு காலியான ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். சற்று நேரத்திற்கு முன்புதான் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காலி காலி செய்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த சூழ்நிலைகளின் மூலமாக எளிதாக புரிந்து கொண்டனர் சகோதரர்கள் இருவரும் .
"இப்போது தான் இடத்தை காலி செய்திருப்பார்கள் போல் தெரிகிறது" என்றான் அரிஞ்சயன்
"ஆமாம். சூரியன் மறைவதற்குள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டும் என்பது தலைவரின் திட்டம். அதோ மேற்கு திசையில் ஆதவன் மறையத் துவங்கி விட்டான். நாம் இனி பிசாசுக்குகையை நோக்கித்தான் பயணிக்க வேண்டும். அங்கே தான் என்னை வரச் சொல்லி உத்தரவு கொடுத்திருக்கிறார். "
"அந்த இடம் அதிக தொலைவோ? இருள் வேறு சூழ ஆரம்பித்து விட்டது.இனி கொடிய விலங்குகளின் நடமாட்டம் வேறு துவங்கி விடும். இனி கவனமாக நாம் பயணம் செய்தாக வேண்டும்"
"கவலைப்படாதீர்கள். பிசாசுக்குகை மிக அண்மையில் தான் இருக்கிறது. அது சமவெளியை ஓட்டியே இருப்பதால் நாம் குதிரைகளில் பயணம் செய்து வெகு எளிதாக அங்கே சென்று சேர்ந்து விடலாம்" என்றான் வழிகாட்டி.
அவன் சொன்னதை போலவே சற்று நேர குதிரை பயணத்தில் பிசாசுக்குகையை வந்தடைந்தனர் மூவரும்.
புற்கள் அடர்ந்த சமவெளியின் ஓரத்தில் பாறைகளின் நடுவே யாரும் எளிதில் காணமுடியாத இடத்தில் இருந்தது அந்த குகை.குகைக்கு மேலிருந்த பாறையில் காவல் பணியில் இருந்தவர்கள் மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். மர்மயோகியும் அவனது சீடனும் பிசாசு குகைக்கு வந்து சேர்ந்து விட்ட செய்தி பளியர் குலத் தலைவனின் காதுகளுக்கு கொண்டு செல்லப் பட்டது.
அவர்களை வரவேற்க பார்த்திபனும், பளியர் குல தலைவனும் குகைவாசலுக்கு விரைந்தனர்.
குதிரையிலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்திபனும் பளியர் தலைவனும் கட்டியணைத்து வரவேற்றனர்.
"மறைந்து கொள்ள சரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்" என்றான் ஆதித்தன்.
" நாளை காலை வரை தான் இது நம்முடைய தங்குமிடம் .நாளை காலை நாம் வேறிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றான் பளியர் தலைவன்.
" ஏன்?"
"ஏனென்றால் அந்த காரணத்தை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் ஆட்களில் சிலர் துரோகிகளாக மாறி ஜெயசிம்மனின் பக்கம் சாய்ந்து விட்டனர்" என்ற பளியர் இன தலைவன் பிங்களனுக்கும் தனக்கும் இடையே நடந்த கருத்து மோதல்களை விவரித்தான்.
அதை முகத்தில் எந்த சலனமும் இன்றி கேட்டு கொண்டிருந்தான் ஆதித்தன்.
" அவன் குலம் கெடுக்கும் கோடாரிகாம்பாக மாறி விட்டான். நாளை ஜெயசிம்மனை அவன் தான் இங்கே அழைத்து வரப்போகிறான். இந்த காட்டின் அத்துணை வழிகளும் அவனுக்கு அத்துபடி. நாம் எங்கே சென்று மறைந்தாலும் அவனால் கண்டுபிடித்து விட முடியும்."
"ஜெயசிம்மனுக்கு பயந்து நாம் பின் வாங்கி ஓடப்போவதில்லை. அவனை எதிர்த்து நாம் யுத்தம் செய்ய போகிறோம். அந்த யுத்தத்தின் முக்கிய பகடைகாய் பிங்களன் தான் "
" என்ன சொல்கிறாய் ஆதித்தா? அவனொரு இனத் துரோகி"
அதை நான் மறுக்கவேயில்லை. ஜெயசிம்மன்பிங்களன் இருக்கும் தைரியத்தில் தான் தன்னுடைய சேனைகளை வழி நடத்தி வருகிறான். அவன் காட்டின் உள்ளே வந்ததும் நாம் யுத்தத்தை தொடங்குவோம்.அதை அவன் எதிர்பார்த்தி ருக்க மாட்டான். நாம் ஓடி ஒளிவோம் என்றே அவன் நினைத்திருப்பான். அந்த சண்டையின் நடுவே பிங்களனை நாம் கொன்று விட்டாலோ இல்லை கடத்தி வந்து விட்டாலோ ஜெயசிம்மன் நிர்கதியாகி விடுவான். வழிகாட்ட ஆள் இல்லாத நிலையில் அவன் திரும்பி நாட்டிற்கு செல்லவே முயற்சிப்பான்."
"எனக்கு இன்னமும் ஒரு விசயம் புரியவில்லை. ஜெயசிம்மன் இப்படி காட்டிற்குள் நுழைந்து பார்த்திபனை தேடுவதை விட ஏதேனும் தந்திரம் செய்து பார்த்திபனை நகரத்திற்கு வரவழைத்து கைது செய்து விடலாமே?"
" அவன் பார்த்திபன் தப்பி சென்ற பதட்டத்தில் இருப்பதால் இப்படியான ஒரு சிந்தனை அவன் மனதில் தோன்றாமல் போயிருக்கலாம்"
"இப்போது மட்டும் பார்த்திபன் நாட்டிற்குள் இருந்தால் மக்களை ஜெயசிம்மனுக்கு எதிராக திருப்பி விடலாம்.அதை தடுத்து நிறுத்த ஜெயசிம்மனும் நாட்டினுள் இல்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் பெண்ணோ பூரண கற்பவதியாக இருக்கிறாள். "
"நல்ல யோசனைதான். இங்கேயிருந்து நாட்டிற்குள் செல்ல குறுக்குவழி ஏதாவது உண்டா?" என்றான் ஆதித்தன்.
"ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதில் அபாயம் அதிகம் உண்டு. அந்த வழியில் பலா மரங்கள் நிறைய இருப்பதால் அவற்றை தின்ன வரும் கரடிகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த இரவு நேரத்தில் அந்த பாதையில் பயணிப்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத செயல்"
"ஒரு நாட்டின் அரசனாக ஆசைப்படுகிறவன் அபாயங்களை சந்தித்துத் தானாகவேண்டும். நீ என்ன சொல்கிறாய் பார்த்திபா? அபாயங்களை சந்திக்க ஆசைப்படுகிறாயா?" என்றான் அரிஞ்சயன்
" என் நண்பர்களை அபாயத்தில் விட்டு விட்டு செல்ல என் மனம் ஒப்பவில்லை. மற்ற படி அந்த கரடிப் பாதையில் பயணிக்க எனக்கு எந்த பயமுமில்லை."
"எங்களைப்பற்றி கவலைப்படாதே பார்த்திபா! இந்த நாட்டு நலனுக்காக எங்கள் இனத்தையே பலி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதோ அரிஞ்சயனும் ஆதித்தனும் எங்களுக்கு பக்கத் துணையாக இருக்கிறார்கள். அவர்களை மீறி எந்த அபாயமும் எங்களை நெருங்கி விடாது. நீ தைரியமாக இங்கிருந்து புறப்படு" என்றான் பளியர் குல தலைவன் -
"எனக்காக பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று எல்லோருடைய உயிரையும் பணயம் வைக்கிறீர்கள் .என் உயிர் உள்ளவரை இந்த நிகழ்வை நான் மறக்க மாட்டேன். வருகிறேன் நண்பர்களே " என்ற பார்த்திபன் தன்னுடைய சில நண்பர்களை அழைத்து கொண்டு உள்ளூர் வழிகாட்டி ஒருவனுடன் அங்கிருந்து கிளம்பினான். இருள் நடுவே சிறு தீப்பந்த ஒளி ஒன்று பிசாசு குகையிலிருந்து வெளியேறியது.
அதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்
கோவில் மண்டபத்தில் இருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு காட்டுக்குள் கிளம்பி விட்டனர். இருவரும் அடிக்கடி அரண்மனைக்கு போய் வந்ததால் அவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவேயில்லை. தன் அண்ணனுக்காக உயர்தர மான ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தால் ஆதித்தன். இருவருமே குதிரையில் ஏறிகாட்டை நோக்கி பயணமானார்கள். காட்டின் எல்லையில் அவர்களை வரவேற்க காத்திருந்தான் பளியன் ஒருவன்.
" என்ன நண்பா ? நீ தான் எங்களை அழைத்து செல்ல வந்தவனா?" என்றான் ஆதித்தன்.
"ஆமாம். உங்களை பத்திரமாக அழைத்து வரச் சொல்லி தலைவரின் உத்தரவு. வாருங்கள் போகலாம்" என்றான் அவன்.
மூன்று குதிரைகளும் காட்டு பகுதிக்குள் நடை போட ஆரம்பித்தன. தன் சுற்றுபுறத்தை பார்வையிட்ட அரிஞ்சயன் " இவ்வளவு கடினமான நில பகுதியில் படை நடத்தி வருவது வெகு சிரமம், ஜெயசிம்மன் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான் என்று நினைக்கிறேன்" என்றான் ஆதித்தன்.
வழிகாட்டி அதை கேட்டு புன்னகைத்தான். "சரியாகத் தான் சூழலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். நாம் செல்லும் பாதையில் கூட பாதி வழியில் குதிரையிலிருந்து இறங்கி கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும். ஆனால் மிகப் பெரும் சைன்யம் இதன் வழியாக வரும் போது அத்தனை இயற்கை வளங்களும் சர்வநாசமாகி விடும் என்று நினைக்கும் போது தான் மனம் வருத்தமடைகிறது."
"இங்கேயிருந்து படைகளின் வருகையை நடமாட்டத்தை கண்காணிக்க ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்களா?" என்றான் அரிஞ்சயன்
"இல்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அவ்வளவு பெரிய சைன்யம் இந்த காட்டுக்குள் நுழைவதை இயற்கையே காட்டி கொடுத்து விடும். இங்கே காட்டில் சிறு சலனம் ஏற்பட்டாலும் பறவைகள் பறந்து காட்டி கொடுத்து விடும். அந்நியர்களின் வருகையை கண்டால் கத்தும் ஆட்காட்டி குருவி ஓன்று போதும். ஆட்களில் நடமாட்டத்தை கண்டு கொள்ள "
"இவ்வளவு பெரிய சைன்யம் தனக்கான பெரும் உணவு பொருளோடு தான் இங்கே வரும். அவர்களால் இங்கே கொண்டு வர முடியாத ஒரே பொருள் தண்ணீர் தான். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தாகத்தால் தவிப்பார்கள். சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் உள்ள நீரை உறிஞ்சி விடும். அதனால் அவர்கள் நீர் நிலைகளை தேடி ஓடியாக வேண்டும்"
"நீங்கள் சொல்வது சரிதான். இதை எங்கள் தலைவரும் யோசித்தார்.அதற்காகத்தான் வழியில் உள்ள நீர் நிலைகளில் ?"
"விசத்தை கலந்து விட்டீர்களா? அது மிகப் பெரிய பாவமாயிற்றே?"
"இல்லை. அதுவெல்லாம் குரூர மனம் படைத்த நகரவாசிகளின் வழக்கம். நாங்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கே கண்டிப்பான விதிமுறைகள் வைத்திருக்கிறோம். கர்ப்பமான விலங்குகளை 'குட்டி ஈன்ற தாய் விலங்குகளை நாங்கள் கொல்ல மாட்டோம். ஐந்தறிவு, நான்கறிவு பெற்ற விலங்குகளிடமே கருணை காட்டும் நாங்கள் நீர் நிலைகளில் விசம் கலக்கும் கேவலமான செயலை செய்ய மாட்டோம். இறந்து போன விலங்குகளின் உடல் பாகத்தை அந்த நீர் நிலைகளில் போட்டு வைத்திருக்கிறோம். அழுகிய மாமிசங்களின் நாற்றமடிக்கும் அந்த தண்ணீரை யாராலும் குடிக்க முடியாது"
"பரவாயில்லை. பளியர் இன தலைவனும் வியூகம் வகுப்பதில் வல்லவனாகத்தான் இருக்கிறான். சரியான காரியத்தைத் தான் செய்து வைத்திருக்கிறான். அவனது இந்த செயலை நான் மனதார பாராட்டுகிறேன்." என்றான் அரிஞ்சயன்.
"அந்த பாராட்டை அவரை சந்திக்கும் போது நேரிலேயே சொல்லிவிடுங்கள். இனி குதிரைகள் இந்த வழியில் பயணிக்க முடியாது. நாம் கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும்" என்றான் வழிகாட்டி.
மூவரும் குதிரையிலிருந்து இறங்கி கரடு முரடான வழியற்ற புதர்களின் வழியாகப் பயணிக்க ஆரம்பித்தனர்.
நீண்ட நேர நடை பயணத்திற்கு பிறகு காலியான ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். சற்று நேரத்திற்கு முன்புதான் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காலி காலி செய்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த சூழ்நிலைகளின் மூலமாக எளிதாக புரிந்து கொண்டனர் சகோதரர்கள் இருவரும் .
"இப்போது தான் இடத்தை காலி செய்திருப்பார்கள் போல் தெரிகிறது" என்றான் அரிஞ்சயன்
"ஆமாம். சூரியன் மறைவதற்குள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டும் என்பது தலைவரின் திட்டம். அதோ மேற்கு திசையில் ஆதவன் மறையத் துவங்கி விட்டான். நாம் இனி பிசாசுக்குகையை நோக்கித்தான் பயணிக்க வேண்டும். அங்கே தான் என்னை வரச் சொல்லி உத்தரவு கொடுத்திருக்கிறார். "
"அந்த இடம் அதிக தொலைவோ? இருள் வேறு சூழ ஆரம்பித்து விட்டது.இனி கொடிய விலங்குகளின் நடமாட்டம் வேறு துவங்கி விடும். இனி கவனமாக நாம் பயணம் செய்தாக வேண்டும்"
"கவலைப்படாதீர்கள். பிசாசுக்குகை மிக அண்மையில் தான் இருக்கிறது. அது சமவெளியை ஓட்டியே இருப்பதால் நாம் குதிரைகளில் பயணம் செய்து வெகு எளிதாக அங்கே சென்று சேர்ந்து விடலாம்" என்றான் வழிகாட்டி.
அவன் சொன்னதை போலவே சற்று நேர குதிரை பயணத்தில் பிசாசுக்குகையை வந்தடைந்தனர் மூவரும்.
புற்கள் அடர்ந்த சமவெளியின் ஓரத்தில் பாறைகளின் நடுவே யாரும் எளிதில் காணமுடியாத இடத்தில் இருந்தது அந்த குகை.குகைக்கு மேலிருந்த பாறையில் காவல் பணியில் இருந்தவர்கள் மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். மர்மயோகியும் அவனது சீடனும் பிசாசு குகைக்கு வந்து சேர்ந்து விட்ட செய்தி பளியர் குலத் தலைவனின் காதுகளுக்கு கொண்டு செல்லப் பட்டது.
அவர்களை வரவேற்க பார்த்திபனும், பளியர் குல தலைவனும் குகைவாசலுக்கு விரைந்தனர்.
குதிரையிலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்திபனும் பளியர் தலைவனும் கட்டியணைத்து வரவேற்றனர்.
"மறைந்து கொள்ள சரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்" என்றான் ஆதித்தன்.
" நாளை காலை வரை தான் இது நம்முடைய தங்குமிடம் .நாளை காலை நாம் வேறிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றான் பளியர் தலைவன்.
" ஏன்?"
"ஏனென்றால் அந்த காரணத்தை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் ஆட்களில் சிலர் துரோகிகளாக மாறி ஜெயசிம்மனின் பக்கம் சாய்ந்து விட்டனர்" என்ற பளியர் இன தலைவன் பிங்களனுக்கும் தனக்கும் இடையே நடந்த கருத்து மோதல்களை விவரித்தான்.
அதை முகத்தில் எந்த சலனமும் இன்றி கேட்டு கொண்டிருந்தான் ஆதித்தன்.
" அவன் குலம் கெடுக்கும் கோடாரிகாம்பாக மாறி விட்டான். நாளை ஜெயசிம்மனை அவன் தான் இங்கே அழைத்து வரப்போகிறான். இந்த காட்டின் அத்துணை வழிகளும் அவனுக்கு அத்துபடி. நாம் எங்கே சென்று மறைந்தாலும் அவனால் கண்டுபிடித்து விட முடியும்."
"ஜெயசிம்மனுக்கு பயந்து நாம் பின் வாங்கி ஓடப்போவதில்லை. அவனை எதிர்த்து நாம் யுத்தம் செய்ய போகிறோம். அந்த யுத்தத்தின் முக்கிய பகடைகாய் பிங்களன் தான் "
" என்ன சொல்கிறாய் ஆதித்தா? அவனொரு இனத் துரோகி"
அதை நான் மறுக்கவேயில்லை. ஜெயசிம்மன்பிங்களன் இருக்கும் தைரியத்தில் தான் தன்னுடைய சேனைகளை வழி நடத்தி வருகிறான். அவன் காட்டின் உள்ளே வந்ததும் நாம் யுத்தத்தை தொடங்குவோம்.அதை அவன் எதிர்பார்த்தி ருக்க மாட்டான். நாம் ஓடி ஒளிவோம் என்றே அவன் நினைத்திருப்பான். அந்த சண்டையின் நடுவே பிங்களனை நாம் கொன்று விட்டாலோ இல்லை கடத்தி வந்து விட்டாலோ ஜெயசிம்மன் நிர்கதியாகி விடுவான். வழிகாட்ட ஆள் இல்லாத நிலையில் அவன் திரும்பி நாட்டிற்கு செல்லவே முயற்சிப்பான்."
"எனக்கு இன்னமும் ஒரு விசயம் புரியவில்லை. ஜெயசிம்மன் இப்படி காட்டிற்குள் நுழைந்து பார்த்திபனை தேடுவதை விட ஏதேனும் தந்திரம் செய்து பார்த்திபனை நகரத்திற்கு வரவழைத்து கைது செய்து விடலாமே?"
" அவன் பார்த்திபன் தப்பி சென்ற பதட்டத்தில் இருப்பதால் இப்படியான ஒரு சிந்தனை அவன் மனதில் தோன்றாமல் போயிருக்கலாம்"
"இப்போது மட்டும் பார்த்திபன் நாட்டிற்குள் இருந்தால் மக்களை ஜெயசிம்மனுக்கு எதிராக திருப்பி விடலாம்.அதை தடுத்து நிறுத்த ஜெயசிம்மனும் நாட்டினுள் இல்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் பெண்ணோ பூரண கற்பவதியாக இருக்கிறாள். "
"நல்ல யோசனைதான். இங்கேயிருந்து நாட்டிற்குள் செல்ல குறுக்குவழி ஏதாவது உண்டா?" என்றான் ஆதித்தன்.
"ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதில் அபாயம் அதிகம் உண்டு. அந்த வழியில் பலா மரங்கள் நிறைய இருப்பதால் அவற்றை தின்ன வரும் கரடிகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த இரவு நேரத்தில் அந்த பாதையில் பயணிப்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத செயல்"
"ஒரு நாட்டின் அரசனாக ஆசைப்படுகிறவன் அபாயங்களை சந்தித்துத் தானாகவேண்டும். நீ என்ன சொல்கிறாய் பார்த்திபா? அபாயங்களை சந்திக்க ஆசைப்படுகிறாயா?" என்றான் அரிஞ்சயன்
" என் நண்பர்களை அபாயத்தில் விட்டு விட்டு செல்ல என் மனம் ஒப்பவில்லை. மற்ற படி அந்த கரடிப் பாதையில் பயணிக்க எனக்கு எந்த பயமுமில்லை."
"எங்களைப்பற்றி கவலைப்படாதே பார்த்திபா! இந்த நாட்டு நலனுக்காக எங்கள் இனத்தையே பலி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதோ அரிஞ்சயனும் ஆதித்தனும் எங்களுக்கு பக்கத் துணையாக இருக்கிறார்கள். அவர்களை மீறி எந்த அபாயமும் எங்களை நெருங்கி விடாது. நீ தைரியமாக இங்கிருந்து புறப்படு" என்றான் பளியர் குல தலைவன் -
"எனக்காக பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று எல்லோருடைய உயிரையும் பணயம் வைக்கிறீர்கள் .என் உயிர் உள்ளவரை இந்த நிகழ்வை நான் மறக்க மாட்டேன். வருகிறேன் நண்பர்களே " என்ற பார்த்திபன் தன்னுடைய சில நண்பர்களை அழைத்து கொண்டு உள்ளூர் வழிகாட்டி ஒருவனுடன் அங்கிருந்து கிளம்பினான். இருள் நடுவே சிறு தீப்பந்த ஒளி ஒன்று பிசாசு குகையிலிருந்து வெளியேறியது.
அதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்