Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 28
தனக்கு முன்னால் அழகோவியமாக வந்து நின்ற நித்ராதேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஜெயசிம்மன் .தனக்கு முன்னால் மேடிட்ட வயிற்றோடு நின்றவளை தலை முதல் கால் வரை பார்த்தான் ஜெயசிம்மன் .என்றும் இல்லாத வழக்கமாக தன் கணவன் தன்னை இப்படி உற்றுப் பார்த்ததில் நித்ராதேவி கூச்சத்தில் நெளிந்தாள். ஏதோ ஒரு வெட்கம் எங்கிருந்தோ வந்து அவளை தழுவியது.
அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாத அவளது கண்கள் நிலத்தை நோக்கி தாழ்ந்தன. " ஏன் என்னை கடித்து தின்பது போல் பார்க்கிறீர்கள்?" என்று சத்தமில்லாத குரலில் வினவினாள் அவள்.
"ஏனோ மற்ற நாட்களை விட இன்று நீ வெகு அழகாக இருப்பது போல் என் கண்களுக்கு தெரிகிறது!" என்றான் ஜெயசிம்மன்
"ஒரு பெண்ணின் பூரண அழகு தாய்மையில் தான் தெரியுமாம். என் வயிற்றில் வளரும் நம் குழந்தை தான் என்னுடைய இந்த அழகிற்கு காரணம் " என்று புன்னகைத்தாள் நித்ராதேவி.
அவளது புன்னகையை ரசித்த ஜெயசிம்மன்" மர்மயோகி நடத்தும் இந்த யாகத்திற்கு நீஅவசியம் வந்தாக வேண்டும் என்று சொல்கிறார் - அதனால் தான் வேண்டா வெறுப்பாக உன்னை அனுப்பி வைக்கிறேன். பத்திரமாக போய் வா நித்ராதேவி" என்றான்.
மர்மயோகியும் அவரது பிரதான சீடனும் கள்வர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அதை வெளியே சொல்ல விரும்பாமல் மவுனமாக நின்றிருந்தாள் நித்ராதேவி. மர்மயோகி திடிரென ஏற்பாடு செய்திருக்கும் இந்த யாகத்தின் பிண்ணனியில் வேறு ஏதோ ஒரு காரணம் மறைந்திருக்க வேண்டும் என்று அவளது உள் மனம் நினைத்தது. ஆனால் அந்த திட்டம் என்னவென்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெயசிம்மன் வேறு அந்த யாகத்தில் அவள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் அவள் வேறு வழியின்றி அதில் கலந்து கொள்ள சம்மதித்திருந்தாள்.
"எனக்கும் அந்த யாகத்தில் கலந்து கொள்ள பூரண விருப்பமில்லை. உங்கள் எதிரிகளை ஒழிக்க நடக்கும் யாகம் என்பதால் உங்களுக்காக இதில் கலந்து கொள்கிறேன். போய் வருகிறேன்" நித்ராதேவி அவனிடம் விடை பெற்று நடந்தாள்.
ஜெயசிம்மன் அவளுடன் அரண்மனையின் முகப்பிற்கு வந்தான். அங்கே சிறு படை ஓன்று பல்லக்குடன் காத்திருந்தது. உப தளபதிகளில் ஒருவன் அந்த படைக்கு தலைமை ஏற்றிருந்தான். அவனை தனியாக அழைத்த ஜெயசிம்மன் " கவனமாக அவளை அழைத்து செல். அவளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் உன் தலை உடலில் இருக்காது" என்று கடுமையாக எச்சரித்தான்.
"கவலைப்படாதீர்கள். அரசியாரை என் கண்ணின் இமை காப்பது போல் காப்பேன்" என்று தன் உயிரை பணயமாக வைத்து உறுதி கூறினான் அவன்.
"கவனமாக இரு." என்று அவனை எச்சரித்து அனுப்பினான் ஜெயசிம்மன் .
நித்ராதேவியை சுமந்து கொண்டு பல்லக்கு ஒன்று அங்கிருந்து கிளம்புவதை பார்த்தபடி நின்றிருந்தான் ஜெயசிம்மன்.
அதே நேரம் கோவில் மண்டபத்தில் வேள்விக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நிலை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான்மர் மயோகி. அவனது மனம்தான் நினைத்தபடியே எல்லா காரியங்களும் நடந்தேற வேண்டுமே என்று தவியாக தவித்து கொண்டிருந்தது.
மண்டபத்தின் பின்புறம் ஆதித்தன் விஜயபாகு வோடும் அவன் அழைத்து வந்திருந்த பார்த்திபனின் நண்பர்களுடனும் தீவிர ஆலோசனையில் இருந்தான்.
"இன்னும் சற்று நேரத்தில் நித்ராதேவி இங்கே வந்து விடுவாள். அவள் பார்வையில் நாங்கள் இருவரும் இருப்பதையே அவள் விரும்புவாள். அதனால் இந்த திட்டத்தின் சூத்ரதாரியான நானோ என் சகோதரனோ இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க முடியும். அதனால் இந்த திட்டத்தில் எந்த இடையூறும் வராமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி ஏதாவது எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டால் அதை நீங்கள் தான் மதியூகத்துடன் சமாளிக்க வேண்டும். உங்கள் உதவிக்கு நாங்கள் வர இயலாது. இதன் பின்னால் நாங்கள் இருப்பதை ஜெயசிம்மன் தெரிந்துகொள்ளவே கூடாது. இந்த திட்டம் எதிர்பாராமல் தோல்வியடைந்து நம் நண்பர்கள் யாராவது அவனிடம் அகப்பட்டு கொண்டு விட்டாலும் கூட எங்களின் பெயரை வெளியே சொல்லி விடக் கூடாது. இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் " என்றான் ஆதித்தன்.
"பார்த்திபனை மீட்க எங்கள் உயிரை கூட கொடுக்க தயார். ஆனால் எங்கள் கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும் உங்கள் பெயரை கூற மாட்டோம். தயவு செய்து எங்களை நம்புங்கள்" என்றான் விஜயபாகு .
"நம்புகிறேன் விஜயபாகு .என்னுடைய நிலைமை தான் உன்னுடையதும். நீயும் வெளிப்படையாக உன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்ய முடியாது. யாகத்திற்கு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் தனவந்தன் நீ, அதற்கு தகுந்தது போல் நடந்து கொள். இதில் அதிகமான இடர்பாடுகளை சந்திக்க போகிறவன் நீதான். கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் திறமை உனக்கு இருக்கிறதா?" என்ற ஆதித்தனின் ஆட்காட்டி விரல் பளியர் குல தலைவனின் மேல் நிலைத்தது.
"இடர்பாடுகளையும் துன்பங்களையும் தினமும் சந்திக்கும் வாழ்க்கை என்னுடையது. ஜெயசிம்மனின் ஆட்சியை அகற்ற எத்தகைய துன்பத்தையும் என் பொருட்டு என் இன மக்கள் ஏற்க தயாராக இருக்கிறார்கள். அடைக்கலமாக வந்தவனை கைவிட்டு விடுவது எங்களின் அறமல்ல" என்றான் பளியர் குல தலைவன்.
"ஜெயசிம்மனை காட்டிற்குள் அழைத்து வருவது தான் எங்களின் நோக்கம். அதற்கான தூண்டில் புழுதான் நீ. உன்னை வைத்து தான் ஜெயசிம்மன் என்னும் பெரிய திமிங்கிலத்தை பிடிக்க போகிறோம். உன் தைரியம் தான் பார்த்திபனை வெளியே கொண்டு வரப்போகிறது. நம் திட்டப் படி பல்லக்கு தயாராக இருக்கிறதா?"
" எல்லாம் தயாராக இருக்கிறது. நித்ராதேவியின் வருகைக்காக காத்திருக்கிறோம்."
"அவள் இங்கே இருக்கும் போது நீங்கள் யாரும் இங்கே இருக்க கூடாது" என்று உத்தரவிட்டான் ஆதித்தன்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.
பல்லக்கில் வந்து கொண்டிருந்த நித்ராதேவியின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. இந்த வேள்வி விசயம் அவளது மனதை அரித்து கொண்டிருந்தது. இந்த விசயத்தை சகோதரி என்று உரிமை கொண்டாடிய இருவரும் தன்னிடம் சொல்லாமல் தன் கணவனிடம் சொன்னதில் அவளுக்கு இருவர் மீதும் லேசான சந்தேகம் எழுந்தது. தன்னை வைத்து வேறு ஏதோ ஒரு விளையாட்டை விளையாட சகோதரர்கள் இருவரும் திட்டமிட்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. அதனால் இருவரையும் தன் கண் பார்வையிலேயே வைத்திருக்க முடிவு செய்திருந்தாள்.
யாகசாலைக்கு பல்லக்கில் வந்து இறங்கிய நித்ராதேவியை சகோதரர்கள் இருவரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.நித்ரா தேவி பல்லக்கை விட்டு இறங்கினாள்.
அதே நேரம் அரண்மனை உபரிகையில் காவல் பணியில் இருந்த வீரன் ஒருவன் " விஸ்" என்ற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டான். அது வில்லிலிருந்து அம்பு பாயும் போது வரும் சத்தம் என்பதை அவனது அனுபவத்தின் மூலமாக அவன் அறிவான். அவனது பார்வை அரண்மனை தூண் மேல் நிலைத்தது. அதில் குத்திட்டு நின்ற அம்பில் ஒரு ஓலை தொங்கியது. அதை தான் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் யாரோ எய்திருக்கிறார்கள் என்று நினைத்தவன் அந்த அம்பை பிடுங்கி பார்த்தான். அதில் இருந்த ஓலையின் மேல் "ஜெயசிம்மனின் கண்களுக்கு மட்டும் " என்று எழுதப்பட்டிருந்தது.
அதை உடனடியாக ஜெயசிம்மனிடம் எடுத்து சென்றான் அவன். காவலன் கொடுத்த ஓலையை பார்த்த ஜெயசிம்மன்" இது எங்கிருந்து வந்தது?" என்றான் முகத்தில் கேள்விகுறியோடு.
"தெரியவில்லை மன்னா! நம் அரண்மனை தூண் ஓன்றை குறிபார்த்து இந்த அம்பு எய்யப்பட்டிருக்கிறது. அதை பார்த்த நான் இங்கே அதை கொண்டு வந்தேன்."
"சரி. நீ போகலாம்" என்ற ஜெயசிம்மன் அந்த ஓலையை பிரிந்தான்.
அதில் "நித்ராதேவி எங்களின் வசம் இருக்கிறாள். பார்த்திபனை உயிரோடு விடுவித்தால் மட்டுமே அவள் உயிரோடு உனக்கு கிடைப்பாள். எங்கள் பிரதிநிதி விரைவில் உன்னை சந்திப்பான். விபரீதத்தை முழுதாக உணர விரும்பினால் அரண்மனை உபரிகைக்கு வரவும் " என்றது ஓலை.
ஜெயசிம்மனின் மனம் திடுக்கிட்டது. இப்படி ஒரு விபரீதத்தை அவன் எதிர்பார்க்கவேயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவன் அரண்மனை உபரிகையை நோக்கி நடந்தான். உபரிகையிலிருந்து அவன் பார்த்த போது சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதியில் நித்ராதேவி பயணம் செய்த பல்லக்கும் அவளுக்கு துணையாக சென்ற காவல் வீரர்களும் பார்த்திபனின் தோழர்களால் வாள்முனையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை பார்த்தான். பார்த்திபனை மீட்க அவனது நண்பர்கள் முயற்சி செய்வார்கள் என்று அவனுக்கு தெரியும்.
ஆனால் பூரண கர்ப்பிணியான தன்னுடைய மனைவியை இப்படி பணயக் கைதியாக பிடித்து வைப்பார்கள் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. இப்போது தன் மனைவியை உயிரோடு மீட்க வேண்டுமென்றால் பார்த்திபனை அவன் விடுவித்தேயாக வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் சிக்கி தவிப்போம் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஜெயசிம்மன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அந்த கும்பலில் இருந்த ஒரு குதிரை வீரன் தன்னுடைய குதிரையின் தாவி ஏறி அரண்மணையை நோக்கி கிளம்பினான். அவனது முகத்தை ஒரு துணியால் மறைத்து முகமூடி போல் மறைத்திருந்தான்.
ஜெயசிம்மன் அவனை சந்திக்க கீழே வந்தான். குதிரையில் வந்தவனை வாயில் காவலர்கள் தடுக்க முனைந்த போது அவனை உள்ளே விடுங்கள்" என்று இடையிட்டு தடுத்தது ஜெயசிம்மனின் குரல்.வெகு அலட்சியமாக காவலர்களை பார்த்த அவன் தன் குதிரையை நடத்தி கொண்டு ஜெயசிம்மனுக்கு முன்பாக வந்தான். குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன் ஜெயசிம்மனை நேருக்கு நேர் பார்த்தான்.
"யார் நீ?" என்றான் ஜெயசிம்மன்
அவன் தன்னுடைய முகமூடியை அகற்றினான். அங்கே பளியர் குலத் தலைவன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
"நீயா?" என்றான் ஜெயசிம்மன் அதிர்ச்சியுடன்
தனக்கு முன்னால் அழகோவியமாக வந்து நின்ற நித்ராதேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஜெயசிம்மன் .தனக்கு முன்னால் மேடிட்ட வயிற்றோடு நின்றவளை தலை முதல் கால் வரை பார்த்தான் ஜெயசிம்மன் .என்றும் இல்லாத வழக்கமாக தன் கணவன் தன்னை இப்படி உற்றுப் பார்த்ததில் நித்ராதேவி கூச்சத்தில் நெளிந்தாள். ஏதோ ஒரு வெட்கம் எங்கிருந்தோ வந்து அவளை தழுவியது.
அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாத அவளது கண்கள் நிலத்தை நோக்கி தாழ்ந்தன. " ஏன் என்னை கடித்து தின்பது போல் பார்க்கிறீர்கள்?" என்று சத்தமில்லாத குரலில் வினவினாள் அவள்.
"ஏனோ மற்ற நாட்களை விட இன்று நீ வெகு அழகாக இருப்பது போல் என் கண்களுக்கு தெரிகிறது!" என்றான் ஜெயசிம்மன்
"ஒரு பெண்ணின் பூரண அழகு தாய்மையில் தான் தெரியுமாம். என் வயிற்றில் வளரும் நம் குழந்தை தான் என்னுடைய இந்த அழகிற்கு காரணம் " என்று புன்னகைத்தாள் நித்ராதேவி.
அவளது புன்னகையை ரசித்த ஜெயசிம்மன்" மர்மயோகி நடத்தும் இந்த யாகத்திற்கு நீஅவசியம் வந்தாக வேண்டும் என்று சொல்கிறார் - அதனால் தான் வேண்டா வெறுப்பாக உன்னை அனுப்பி வைக்கிறேன். பத்திரமாக போய் வா நித்ராதேவி" என்றான்.
மர்மயோகியும் அவரது பிரதான சீடனும் கள்வர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அதை வெளியே சொல்ல விரும்பாமல் மவுனமாக நின்றிருந்தாள் நித்ராதேவி. மர்மயோகி திடிரென ஏற்பாடு செய்திருக்கும் இந்த யாகத்தின் பிண்ணனியில் வேறு ஏதோ ஒரு காரணம் மறைந்திருக்க வேண்டும் என்று அவளது உள் மனம் நினைத்தது. ஆனால் அந்த திட்டம் என்னவென்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெயசிம்மன் வேறு அந்த யாகத்தில் அவள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் அவள் வேறு வழியின்றி அதில் கலந்து கொள்ள சம்மதித்திருந்தாள்.
"எனக்கும் அந்த யாகத்தில் கலந்து கொள்ள பூரண விருப்பமில்லை. உங்கள் எதிரிகளை ஒழிக்க நடக்கும் யாகம் என்பதால் உங்களுக்காக இதில் கலந்து கொள்கிறேன். போய் வருகிறேன்" நித்ராதேவி அவனிடம் விடை பெற்று நடந்தாள்.
ஜெயசிம்மன் அவளுடன் அரண்மனையின் முகப்பிற்கு வந்தான். அங்கே சிறு படை ஓன்று பல்லக்குடன் காத்திருந்தது. உப தளபதிகளில் ஒருவன் அந்த படைக்கு தலைமை ஏற்றிருந்தான். அவனை தனியாக அழைத்த ஜெயசிம்மன் " கவனமாக அவளை அழைத்து செல். அவளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் உன் தலை உடலில் இருக்காது" என்று கடுமையாக எச்சரித்தான்.
"கவலைப்படாதீர்கள். அரசியாரை என் கண்ணின் இமை காப்பது போல் காப்பேன்" என்று தன் உயிரை பணயமாக வைத்து உறுதி கூறினான் அவன்.
"கவனமாக இரு." என்று அவனை எச்சரித்து அனுப்பினான் ஜெயசிம்மன் .
நித்ராதேவியை சுமந்து கொண்டு பல்லக்கு ஒன்று அங்கிருந்து கிளம்புவதை பார்த்தபடி நின்றிருந்தான் ஜெயசிம்மன்.
அதே நேரம் கோவில் மண்டபத்தில் வேள்விக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நிலை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான்மர் மயோகி. அவனது மனம்தான் நினைத்தபடியே எல்லா காரியங்களும் நடந்தேற வேண்டுமே என்று தவியாக தவித்து கொண்டிருந்தது.
மண்டபத்தின் பின்புறம் ஆதித்தன் விஜயபாகு வோடும் அவன் அழைத்து வந்திருந்த பார்த்திபனின் நண்பர்களுடனும் தீவிர ஆலோசனையில் இருந்தான்.
"இன்னும் சற்று நேரத்தில் நித்ராதேவி இங்கே வந்து விடுவாள். அவள் பார்வையில் நாங்கள் இருவரும் இருப்பதையே அவள் விரும்புவாள். அதனால் இந்த திட்டத்தின் சூத்ரதாரியான நானோ என் சகோதரனோ இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க முடியும். அதனால் இந்த திட்டத்தில் எந்த இடையூறும் வராமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி ஏதாவது எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டால் அதை நீங்கள் தான் மதியூகத்துடன் சமாளிக்க வேண்டும். உங்கள் உதவிக்கு நாங்கள் வர இயலாது. இதன் பின்னால் நாங்கள் இருப்பதை ஜெயசிம்மன் தெரிந்துகொள்ளவே கூடாது. இந்த திட்டம் எதிர்பாராமல் தோல்வியடைந்து நம் நண்பர்கள் யாராவது அவனிடம் அகப்பட்டு கொண்டு விட்டாலும் கூட எங்களின் பெயரை வெளியே சொல்லி விடக் கூடாது. இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் " என்றான் ஆதித்தன்.
"பார்த்திபனை மீட்க எங்கள் உயிரை கூட கொடுக்க தயார். ஆனால் எங்கள் கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும் உங்கள் பெயரை கூற மாட்டோம். தயவு செய்து எங்களை நம்புங்கள்" என்றான் விஜயபாகு .
"நம்புகிறேன் விஜயபாகு .என்னுடைய நிலைமை தான் உன்னுடையதும். நீயும் வெளிப்படையாக உன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்ய முடியாது. யாகத்திற்கு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் தனவந்தன் நீ, அதற்கு தகுந்தது போல் நடந்து கொள். இதில் அதிகமான இடர்பாடுகளை சந்திக்க போகிறவன் நீதான். கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் திறமை உனக்கு இருக்கிறதா?" என்ற ஆதித்தனின் ஆட்காட்டி விரல் பளியர் குல தலைவனின் மேல் நிலைத்தது.
"இடர்பாடுகளையும் துன்பங்களையும் தினமும் சந்திக்கும் வாழ்க்கை என்னுடையது. ஜெயசிம்மனின் ஆட்சியை அகற்ற எத்தகைய துன்பத்தையும் என் பொருட்டு என் இன மக்கள் ஏற்க தயாராக இருக்கிறார்கள். அடைக்கலமாக வந்தவனை கைவிட்டு விடுவது எங்களின் அறமல்ல" என்றான் பளியர் குல தலைவன்.
"ஜெயசிம்மனை காட்டிற்குள் அழைத்து வருவது தான் எங்களின் நோக்கம். அதற்கான தூண்டில் புழுதான் நீ. உன்னை வைத்து தான் ஜெயசிம்மன் என்னும் பெரிய திமிங்கிலத்தை பிடிக்க போகிறோம். உன் தைரியம் தான் பார்த்திபனை வெளியே கொண்டு வரப்போகிறது. நம் திட்டப் படி பல்லக்கு தயாராக இருக்கிறதா?"
" எல்லாம் தயாராக இருக்கிறது. நித்ராதேவியின் வருகைக்காக காத்திருக்கிறோம்."
"அவள் இங்கே இருக்கும் போது நீங்கள் யாரும் இங்கே இருக்க கூடாது" என்று உத்தரவிட்டான் ஆதித்தன்.
அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.
பல்லக்கில் வந்து கொண்டிருந்த நித்ராதேவியின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. இந்த வேள்வி விசயம் அவளது மனதை அரித்து கொண்டிருந்தது. இந்த விசயத்தை சகோதரி என்று உரிமை கொண்டாடிய இருவரும் தன்னிடம் சொல்லாமல் தன் கணவனிடம் சொன்னதில் அவளுக்கு இருவர் மீதும் லேசான சந்தேகம் எழுந்தது. தன்னை வைத்து வேறு ஏதோ ஒரு விளையாட்டை விளையாட சகோதரர்கள் இருவரும் திட்டமிட்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. அதனால் இருவரையும் தன் கண் பார்வையிலேயே வைத்திருக்க முடிவு செய்திருந்தாள்.
யாகசாலைக்கு பல்லக்கில் வந்து இறங்கிய நித்ராதேவியை சகோதரர்கள் இருவரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.நித்ரா தேவி பல்லக்கை விட்டு இறங்கினாள்.
அதே நேரம் அரண்மனை உபரிகையில் காவல் பணியில் இருந்த வீரன் ஒருவன் " விஸ்" என்ற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டான். அது வில்லிலிருந்து அம்பு பாயும் போது வரும் சத்தம் என்பதை அவனது அனுபவத்தின் மூலமாக அவன் அறிவான். அவனது பார்வை அரண்மனை தூண் மேல் நிலைத்தது. அதில் குத்திட்டு நின்ற அம்பில் ஒரு ஓலை தொங்கியது. அதை தான் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் யாரோ எய்திருக்கிறார்கள் என்று நினைத்தவன் அந்த அம்பை பிடுங்கி பார்த்தான். அதில் இருந்த ஓலையின் மேல் "ஜெயசிம்மனின் கண்களுக்கு மட்டும் " என்று எழுதப்பட்டிருந்தது.
அதை உடனடியாக ஜெயசிம்மனிடம் எடுத்து சென்றான் அவன். காவலன் கொடுத்த ஓலையை பார்த்த ஜெயசிம்மன்" இது எங்கிருந்து வந்தது?" என்றான் முகத்தில் கேள்விகுறியோடு.
"தெரியவில்லை மன்னா! நம் அரண்மனை தூண் ஓன்றை குறிபார்த்து இந்த அம்பு எய்யப்பட்டிருக்கிறது. அதை பார்த்த நான் இங்கே அதை கொண்டு வந்தேன்."
"சரி. நீ போகலாம்" என்ற ஜெயசிம்மன் அந்த ஓலையை பிரிந்தான்.
அதில் "நித்ராதேவி எங்களின் வசம் இருக்கிறாள். பார்த்திபனை உயிரோடு விடுவித்தால் மட்டுமே அவள் உயிரோடு உனக்கு கிடைப்பாள். எங்கள் பிரதிநிதி விரைவில் உன்னை சந்திப்பான். விபரீதத்தை முழுதாக உணர விரும்பினால் அரண்மனை உபரிகைக்கு வரவும் " என்றது ஓலை.
ஜெயசிம்மனின் மனம் திடுக்கிட்டது. இப்படி ஒரு விபரீதத்தை அவன் எதிர்பார்க்கவேயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவன் அரண்மனை உபரிகையை நோக்கி நடந்தான். உபரிகையிலிருந்து அவன் பார்த்த போது சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதியில் நித்ராதேவி பயணம் செய்த பல்லக்கும் அவளுக்கு துணையாக சென்ற காவல் வீரர்களும் பார்த்திபனின் தோழர்களால் வாள்முனையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை பார்த்தான். பார்த்திபனை மீட்க அவனது நண்பர்கள் முயற்சி செய்வார்கள் என்று அவனுக்கு தெரியும்.
ஆனால் பூரண கர்ப்பிணியான தன்னுடைய மனைவியை இப்படி பணயக் கைதியாக பிடித்து வைப்பார்கள் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. இப்போது தன் மனைவியை உயிரோடு மீட்க வேண்டுமென்றால் பார்த்திபனை அவன் விடுவித்தேயாக வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் சிக்கி தவிப்போம் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஜெயசிம்மன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அந்த கும்பலில் இருந்த ஒரு குதிரை வீரன் தன்னுடைய குதிரையின் தாவி ஏறி அரண்மணையை நோக்கி கிளம்பினான். அவனது முகத்தை ஒரு துணியால் மறைத்து முகமூடி போல் மறைத்திருந்தான்.
ஜெயசிம்மன் அவனை சந்திக்க கீழே வந்தான். குதிரையில் வந்தவனை வாயில் காவலர்கள் தடுக்க முனைந்த போது அவனை உள்ளே விடுங்கள்" என்று இடையிட்டு தடுத்தது ஜெயசிம்மனின் குரல்.வெகு அலட்சியமாக காவலர்களை பார்த்த அவன் தன் குதிரையை நடத்தி கொண்டு ஜெயசிம்மனுக்கு முன்பாக வந்தான். குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன் ஜெயசிம்மனை நேருக்கு நேர் பார்த்தான்.
"யார் நீ?" என்றான் ஜெயசிம்மன்
அவன் தன்னுடைய முகமூடியை அகற்றினான். அங்கே பளியர் குலத் தலைவன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
"நீயா?" என்றான் ஜெயசிம்மன் அதிர்ச்சியுடன்