Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மூச்சுகாத்து - Tamil Novel

Status
Not open for further replies.
அத்தியாயம் 5 :


"ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்னை பார்க்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில"


மஜ்ஜூர் :


"அன்வித் !!! எங்க இருக்க ?? சீக்கிரம் வா " என அவ்வீட்டின் நடுவில் நின்று கத்தி கொண்டிருந்தான் விக்ரம் .


அவனின் சத்தத்தில் அறையில் இருந்து வெளியில் வந்த மாதுரி அவனை தலை முதல் கால் வரை ஆசையாய் பார்த்தார். தானாய் அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தவர் தன் அருகில் கேட்ட கனைப்பில் எடுத்துவைத்த பாதத்தை மீண்டும் பின்னால் இழுத்துக் கொண்டார்.


பயந்தபடியே அருகே திரும்பியவரை உருத்து விழித்தபடி அங்கு நின்றிருந்தார் ராஜ்பவுத்முண்டேலா . கையிலிருந்த காப்பை ஒருமுறை ஏற்றிவிட்டுக் கொண்டவர் மாதுரியை பார்த்த பார்வையில் இன்றைய இரவு தனக்கு கொடுமையாய் அமையும் என்பதை அவள் தெளிவாய் உணர்ந்ததில் பயத்தில் கைகள் ஜில்லிட்டது.


அதை குரோதமாய் பார்த்த ராஜ்பவுத் முண்டேலா அவரை மேலும் நடுங்க வைக்க அங்கிருந்தே "விக்ரம்" என அமர்த்தலாய் அழைத்தார்.


ஆனால் அவர் பக்கம் திரும்பியவனின் முகத்தில் அவர் எதிர்பார்த்த பயம் இல்லாமல் எப்பொழுதும் போல் உதட்டில் ஒட்டிய சிரிப்புடன் வந்த விக்ரமை பார்த்து நாஜ்பவுத்முண்டேலாவின் புருவம் சுருங்க , மாதுரியோ அவனின் சிரிப்பையே கண்கள் கலங்க பார்த்தார்.


விக்ரம் அருகில் வந்ததில் தன் முகத்தை சிரித்தபடி வைத்த ராஜ்பவுத்,"எங்க தயாராகுற விக்ரம் ??" எனக் கேட்டார்.


"கோவிலுக்கு தான் பைசாப்...!!! அதுவுமில்லாம நான் இன்னும் இந்த உரை முழுசா சுத்தி பார்க்கைலைல அதான் அன்வித் கூட முதல்ல கோவில் போய்ட்டு அப்படியே ஊரை சுத்தி பார்க்கலாம்னு பிளான்".


" கோவில் போய்ட்டு அப்படியே வேற எங்கையும் போக கூடாது கண்ணா !! நீ வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போ " என ராஜ்பவுத்தை மறந்து மாதுரி சட்டென சொல்லிவிட்டார்.


அவர் பக்கம் திரும்பிய விக்ரம் ,"ஓ!! சரிதான் மா ....நான் நீங்க சொன்னமாதிரியே வீட்டுக்கு வந்துட்டு அப்றம் போறேன் " என்று சிரிப்பு மாறாமல் சொல்லியவனின் தாடையை வாஞ்சையாய் பற்றிய மாதுரி அவனின் முகத்தையே ஆசையாய் பார்த்தார்.


"அறிவில்லையாடா உனக்கு " என்ற ராஜ்பவுத்தின் அதட்டலை தொடர்ந்த பட்டென்ற சத்தத்தில் கைகளை பின்இழுத்தபடி நடுங்கியவரின் விழி அங்கு தன்னையே பார்வையால் எரித்தபடி நின்றிருந்தவரை பார்த்தது.


ஆசையாய் முகத்தை தடவியவர் பயந்து பின்வாங்கியதில் , விக்ரம் ராஜ்பவுத்தின் புறம் திரும்ப அத்தனை நேரம் கோபத்தை கக்கிய அவரின் விழிகள் சாந்தத்துடன் அவனை பார்த்தது. அவரின் அருகில் வேலையாள் கன்னத்தில் கைவைத்தபடி நின்றிருந்தான்.


" ஒன்னுமில்ல விக்ரம்....!! அதுங்கதுங்க தன்னோட இடம் என்ன ?? எங்க இருக்கோம்னு புரியாம நடந்துக்குறாங்க ..அப்போஅப்போ இப்படி தட்டுனாதான் அதுங்களுக்கு புரியும் " என்றவரின் பேச்சு விக்ரமிற்க்கு வேலைகாரரை சொல்வது போல் தோன்றினாலும் அவர் நிஜத்தில் சொல்லியது மாதுரிக்கு தான் என்பது அங்கிருந்த மற்ற மூவருக்குமே தெரிந்திருந்தது.


" ஆனா பைசப் !!! அவங்களும் மனுஷங்க தான் அதனால பொறுமையா எடுத்து சொன்னாலே போதும்னு நினைக்கிறேன் " என விக்ரம் அவரின் செயல் பிடிக்கவில்லை என்பதை சிரிப்புடனே மறைமுகமாய் எடுத்துரைத்தான்.


"அச்சோ !!! ஏன் இப்படி பேசுற கண்ணா ??" என மனதிற்க்குள் பயந்த மாதுரி , ராஜ்பவுத் முகத்தை பார்க்க அவரோ விக்ரமிடம் எதையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே இருந்தான்.


"விக்ரம்மைய்யா நீங்க எதுக்காக பைசப் கிட்ட அப்படி பேசுனீங்க ?? இனி அப்படி பண்ணாதீங்க " என அன்வித் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்து கிளம்பி கோவில் வருவதற்க்குள் மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிவிட்டான்.


" அட !!! என்ன அன்வித் நீ ....அவர் செஞ்சது தப்புதான?? அவர் யாரு மத்தவங்களை அடிக்கிறதுக்கு ??இத நான் அப்படியே கேக்க எவ்வளவு நேரம் ஆகும் ? ஆனா நான் எவ்வளவு பொறுமையா சொல்லிட்டு வந்திருக்கேன் அதுக்கே நீ அங்க இருந்து கிளம்புனதுல இருந்து ஏன் அப்படி சொன்னீங்கனு என் காது கிழிற அளவுக்கு பேசி தள்ளுற " என சிரித்தான்.


அவசரமாய் அவனின் வாயை பொத்திய அன்வித்," அச்சோ இனி நான் வாயை பிளாஸ்டர் போட்டாச்சி ஒட்டிக்கிறேன் நீங்க இந்த மாதிரி இனி சத்தமா அவரை பத்தி பேசி வைக்காதீங்க " என்றான்.


"இவங்க எல்லாம் ஏன் இப்படி பைசாப் கிட்ட பயபுட்றாங்க ?? பைசாப் என்னதான் என்கிட்ட சிரிச்சு பேசுனாலும் அதை ஏன் என்னால ஏத்துக்க முடியலை ?? அப்றம் அந்த அம்மா " என மாதுரியை நினைத்தவனின் இதழில் புன்னகை அழகாய் ஒட்டிக் கொண்டது.


அவரை பற்றி அன்வித்திடம் கேட்கலாம் என நினைத்தவனின் விழியில் தென்பட்டாள் அப்பொழுது தான் கோவிலுக்குள் நுழைந்த ஆதிஷா .


இவன் அவளிடம் செல்வதற்க்குள்ளாகவே அவளுடன் வந்த பெண்மணி அவளையும் இழுத்துக்கொண்டு இவனிடம் வந்தார்.


"விக்ரம் பையா !!! இது நம்ப ஆதிஷா , நம்ப ஊர்ல எதோ ஆராய்ச்சினு வந்திருக்காங்க.எங்க வீட்ல தான் தங்கிருக்காங்க " என வாயெல்லாம் பல்லாய் அவனிடம் அவளை பற்றி ஒப்பித்தவள் ," ஆதிமா !! இவர் தான் விக்ரம் பையா ...நம்ப பைசாப் வீட்டுல இருப்பாரு " என அவளுக்கும் அவனை அறிமுக படுத்தினாள்.


அவள் சொல்லியதில் உள்ளுக்குள் அதிர்ந்த ஆதிஷா ," பைசாப் வீட்டுலையா ??? இவர் அவரோட பையனா ??" எனக் கேட்டவள் அருகிலிருந்தவளின் பதிலுக்காய் தொண்டைகுழி ஏறியிறங்க காத்திருந்தாள்.


"இல்லை இல்லை ஆதி !!! இவர் அவரோட பிள்ளையா இருந்தா நம்ப இவர் பக்கத்துல கூட நின்னிருக்க முடியாதே , இவர் நம்ப அம்பரிஷ் ஐயாவோட பையன் சின்னதுல இருந்து அவரோட வளர்ந்தவரு எப்பவாவது தான் இங்க வருவாரு " என்றதில் ஆதிஷாவிற்க்கு அவளையும் அறியாமல் நிம்மதி பெருமூச்சு வந்தது.


அவர்கள் பேசுவதில் குறுக்கிடாமல் ஆதிஷாவையே பார்த்தபடி நின்றிருந்த விக்ரமிற்க்கு , தான் ராஜ்பவுத்தின் மகன் என்றால் இவள் ஏன் பயப்பட வேண்டும் ? இல்லை அம்பரிஷோட மகன்னு சொன்னதுக்கு ஏன் இவ முகம் இப்படி மாறனும் ??" என அவளின் முகபாவனைகளையே பார்த்தான்.


அப்பெண்மணி சொன்னதில் மகிழ்ந்த ஆதிஷா நிமிர்ந்து விக்ரமை பார்த்து அழகாய் புன்னகைக்க, அச்சிரிப்பில் இத்தனை நேரம் தனக்குள் ஓடிய சிந்தனைகளை எங்கையோ சிதறவிட்ட விக்ரம் அவளின் இதழ்களை பார்த்தபடியே தானும் புன்னகைத்தான்.


மூச்சுகாத்து 5 :


"தூதுவிட்ட அலை அட எந்த அலையோ
என்ன வந்து சேரலையே
தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே
வலி வந்தாலும் மொழி சொல்லாம
நான் நின்னேனே ஊமையா"


மீத்பூர் :


அழகின் திருஉருவாய் உணர்வின்றி ஊமையாய் தலைகுனிந்தபடி சபையில் நின்றிருந்த ஜூம்னாவை, ஜீவாவின் வலி மிகுந்த கண்கள் கட்டி இழுத்தது.


நிமிர்ந்து பார்த்தவளின் முன் நின்றிருந்தவனின் விழிகள் இரண்டும் அவளிடம் கேட்ட ,"ஏன் இப்படி ??" என்ற கேள்வியில் அவளின் மனமும் அவளிடம் அதையே தான் கேட்டது. "ஏன் இப்படி ??"


அப்படி ஒரு வலியை அவனின் இருவிழிகள் வெளிபடுத்தியது.அவன் அவளை பார்த்து முழுதாய் ஐந்து நிமிடங்கள் இருக்குமா ?? அதற்க்குள் ஏன் அந்த வலி அவனின் கண்களில் ??


"யார் இவன் ?? இவனின் பார்வை ஏன் என்னை அசைக்கிறது?? சில நிமிடங்கள் முன் இவன் என்னை பார்த்த பார்வையில் எதிர்பாரா அதிர்ச்சியும் , பரவசமும் இருந்ததே அது ஏன் ? இப்பொழுது இவனின் விழிகள் கேட்கும் கேள்வி என் தற்போதைய கோலத்தினாலா..ஆனால் ஏன் ??"


-என ஜீவாவின் "ஏன் " என்ற ஒற்றை பார்வை , ஜூம்னாவின் மனதில் "ஏன் " என்று ஆயிரம்ஆயிரம் கேள்விகளை சரசரவென எழுப்பியது.


தன் நிலை மறந்து ஜீவாவிடம் பார்வையை பதித்திருந்தவளின் உடல் சிறிதாய் தூக்கிபோட்டது திடிரென கேட்ட பெரும் சத்தத்தில்.


என்ன நேர்ந்தது என்றே புரியாமல் நம் தஞ்சைமண்ணின் பிள்ளைகள் தரையில் தெரித்திருந்த ரத்தத்தில் பயந்து தானாய் பின்வாங்கி ஒன்றாய் நின்றனர். அவர்கள் மட்டுமே அப்படி நின்றனர் ,அங்கிருந்த மற்ற ஊரார் அனைவரும் எதுவும் நடக்காதபடி கைகட்டி தலைகுனிந்து நின்றனர்.


அங்கு இத்தனை நேரம் இருந்த கலகலப்பு , ஆராவாரம் அனைத்தும் கலைந்து பேரமைதி இடம்பெற்றிருந்தது
பகத்தூர் பட்டேலை முதலில் வரவேற்ற மனிதர் இப்பொழுது நட்டநடுவில் நடுநெற்றியில் தோட்டா பாய்ந்து இறந்துகிடக்க , அருகில் ஒரு பெண்மணி கழுத்தறுப்பட்டு கிடந்தார்.


ஜூம்னாவிடம் நிலைத்திருந்த ஜீவா , அருகே திரும்பி கதிரை பார்க்க , அவனின் பார்வையோ அங்கு ரௌத்திரத்துடன் நின்றிருந்த பகத்தூர்பட்டேலாவையும், ரதகவ்தீப்பையும் சுட்டியது.


"இவரா ?? ஆனால் எதற்காக ??" என்று ஜீவாவிற்க்குள் தோன்றிய கேள்வி அவனுள்ளே மறித்துபோக வைத்து , அதன் பதிலாய் அவனையே சுட்டியது ஜூம்னாவின் பார்வை.


"நீ தான் ...உன்னால் தான் அனைத்தும் " ஜூம்னாவின் ஈரவிழிகள் ,ஜீவாவின் மேல் பழி சுமத்தி பின் கீழே மடிந்து விழுந்திருந்தவர்களின் புறம் திரும்பியது.


இவர்களின் பார்வை பரிமாற்றம் எவரும் அறியாமல் நடக்க , ஜூம்னாவின் பழிசொல்லுக்கான காரணம் புரியாமல் ஜீவாவின் மனம் குழம்ப , பகத்தூர் பட்டேலா இவர்கள் பக்கம் திரும்பினார்.


"பைசாப் ....!! இவங்க கீழ இந்தியால இருந்து வந்திருக்காங்க, தமிழ்நாட்ல இருந்து எதோ ஆராய்ச்சி படிப்புனு சொல்லி வந்திருக்காங்க " அவரின் பார்வையை புரிந்த ஒருவர் பதிலளித்தார்.


நம் மாணவர்கள் அனைவரையும் தன் ஈட்டி கண்களால் அளவெடுத்தவர்," தமிழ்நாடு ...ம்ம்ம்ம் ...நம்பளை போலவே சடங்கு சம்பிரதாயங்கள் நிறைந்த அருமையான மாநிலம் தான் . இவங்களுக்கான எல்லா ஏற்பாடையும் நல்லபடியா கவனிக்க நம்ப உறையுள்ள (வீடு) இருந்து ஆள வரசொல்றேன் " என்றவர் , தன் ஆட்களுக்கு கண்காட்டி சென்றார்.


அங்கு ஒரு மரணம் நிகழ்ந்ததா என ஐயப்படுவது போல் அவர் இயல்பாய் நகர , அவரின் பின்னே வீட்டின் பெண்மணிகளும் நகர்ந்தனர்.


அவர்கள் அனைவரும் சென்றபின் ராகதீப் பட்டேலா ," யாருடா அங்க...??வந்து இந்த குப்பையை சுத்தம்பண்ணி விடு " என்றவரின் குரலில் திபுதிபுவென நாலைந்துபேர் வந்து இறந்துகிடந்தவர்களின் உடலை அப்புறபடுத்தி அவ்விடத்தை சுத்தபடுத்தினர்.


அமைதியாய் அதை மேற்பார்வையிட்டபடி சுற்றிலும் கவனித்த ராகதீப்பீன் பார்வையில் ஜீவா விழ ,அவனின் கவனம் வாயிற்புறம் இருந்ததில் அவரின் தடித்த புருவங்கள் இரண்டும் சுருங்கியது.


" தன்வீர் !!! "என்று ஒருவரை அழைத்தவர், " நீதான இங்க இவங்களுக்கு எல்லாம் தயார் பண்ணி குடுக்குறது அவங்ககிட்ட நம்ப ஊரை பத்தி சொல்லிவை " என சொன்னவர் , ஜீவாவை உறுத்து விழித்தபடி மாணவர்களின் அருகில் வந்தார்.


"எதோ ஆராய்ச்சி வேலைனு வந்திருக்கீங்க தான, அதை மட்டும் பார்க்கனும் அதை விட்டுட்டு வேற எதையாவது ஆராய்ச்சி பண்ணுறேன்னு ஆரம்பிச்சிங்க உங்க தலையில்லாத முண்டம் மட்டும் தான் தமிழ்நாடு போய்சேரும் ...ஜாக்கிரதை ...உம்ம் " என உறுமினார்.


"அடேய் அந்த பல்லுதேக்காத பால்டப்பாவை அந்தபக்கம் தள்ளிநிக்க சொல்லுடா , உறுமுறேன்ற பேர்ல ஊத்தவாய் எச்சியை எல்லாம் மேலே தெறிக்குறாரு " என்ற கதிரின் பேச்சில் விட்டால் அவனை கடித்து தின்றுவிடுவது போல் முறைத்தாள் அபிலஷ்யா.


அவளுக்கு ராகதீப் பட்டேலாவின் பார்வையில் சற்றுமுன் நடந்த ஜீவாவின் செயல் நியாபகம் வந்து மிரட்ட ,அதற்க்கு ஏதுவாய் அவர் அவ்வளவு ஆக்ரோஷமாய் சொல்லியதில் மிரண்டிருந்தவள் கதிரிடம் அதை கோபமாய் பார்வையில் கடத்தினாள்.


அவர்களிடம் உறுமிய ராகதீப்பட்டேலா கிளம்பியபின் அவர்களை உணவுண்ண அழைத்து சென்ற நேரத்தில் அபிலஷ்யா ," எருமமாடு !! அவர் என்ன சொன்னாருனு தெரியாம நீ பாட்டுக்கு லூசு மாதிரி பேசி வைக்குற " என கதிரை காய்ச்சினாள்.அதன் பின் அவர் மிரட்டியதை அனைவருக்கும் பொதுவாய் சொன்னாலும் அவள் பார்வை ஜீவாவை குற்றம் சாட்டியது.


அதில் ஜீவா தலையை குனிய, நண்பனின் அந்நிலை பொறுக்காத கதிர் ," ப்ச் ...!! அதவிடு...ஆமா எதுக்கு அந்த வெள்ளைதக்காளியை அந்த நெட்டைகொக்கு சுட்டு தள்ளுனான் ..அந்த வெள்ளை தக்காளி பாசமா தான அவரை வரவேற்றார் ?வந்தாங்க கொன்னாங்க கிளம்பிட்டாங்க அப்படி அவங்க என்ன பேசிகிட்டாங்க ?? அத முதல்ல சொல்லு ??" என பேச்சை மாற்றினான்.


"அதுலாம் எனக்கு சரியா தெரியலை அவங்க பேசுனதுல இருந்து யாரையோ காணூம்னு புரிஞ்சிது அது அந்த அவர்தான் காரணும்னு சுட்டுட்டதா பேசுனாங்க ஆனா யாரை காணும்னுலாம் எதுவும் சொல்லலை " என்றாள்.


அவளின் பேச்சில் கவனத்தை வைத்திருந்த ஜீவாவின் மனகண்ணில் , தன் முச்சுகாத்தவளின் மாறுபட்ட வேடங்களே மாறி மாறி தோன்றியது.


அவனுள் தினம் தோன்றி அவனை உயிரோடு சுகமாய் வதைத்த மைவிழிகளும் , செந்சாந்து நெற்றியும் இன்று வெறுமையாய் அவன் உயிர்தீண்ட , அதன் பொருள் தந்த வலியில் திணறியவன் சுவாசம் தடுமாறியதில் தன் மூச்சுகாத்திற்காய் ஏங்கினான்.


- காதல் வித்தியாசமானது...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom