Lavanya Dhayu
Saha Writer
- Messages
- 56
- Reaction score
- 43
- Points
- 18
யாழ்-9
"உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! "
போனின் ஒலியை கேட்டதும் "ஓகே அண்ணா. போன் வருது யார்னு பொய் பாரு" என்று அண்ணனிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல ஓரடி எடுத்து வைத்தாள் யாழினி. திடீரென திரும்பியவள், "அண்ணா, அந்த பையன் பேர் என்ன?" என கேட்டாள். அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் மாதவன்."வசீகரன்" என்றான். அவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள், "எனக்கு பிடிச்ச பெயர்" என்றாள். "அவரையும் கூடிய சீக்கிரத்தில் உனக்கு பிடிக்கும் " நம்பிக்கையாக சொன்னான் மாதவன். அமைதியாக அவள் அறைக்கு சென்றாள் யாழினி.
தனது மொபைலை எடுத்து பார்த்த மாதவன் முகத்தில் சிரிப்பு வந்தது. வசீகரன் தான் அழைத்து இருந்தான். மறுபடியும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.ஆன் செய்து ஹலோ சொல்வதற்குள் மறுமுனையில் "ஹாய் மாதவன். ஹவ் ஆர் யூ?"என்று உற்சாக குரலில் பேசினான் வசீகரன். "நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. நீங்க எப்படி இருக்கீங்க?"
"இதுவரை படபடப்பா இருந்தேன். நீங்க 'மாபிள்ளை'னு கூப்பிட்டதும் ஹாப்பி ஆகிட்டேன்.உங்க வீட்டுல எல்லாரும் ஓகே சொல்லிட்டங்களா?முக்கியமா உங்க தங்கைக்கு சம்மதமா?" தயக்கமாக கேட்டான் .
"எல்லாருக்கும் ஓகே தாங்க. நீங்க எப்போ வரிங்க எங்க வீட்டுக்கு?"
"எப்போனாலும் நா ரெடி மாதவன்"
"இன்னிக்கி சாயங்காலம் வரீங்களா? யாழிக்கும் லீவ் தான்"
"சூப்பர் மாதவன். அம்மா அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். ஈவ்னிங் பாக்கலாம்" என்று போனில் சொல்லியபடி அவனது அறை சுவற்றில் ஒருபுறம் முழுக்க ஒட்டப்பட்டு இருந்த யாழினியின் புகைப்படத்தை பார்த்து கண் சிமிட்டினான் அந்த கள்வன்.
போனை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டவன் தன் பெற்றோர் அறைக்கு சென்றான். காலிங் பெல்லை அழுத்தியதும் அவனது அப்பா பரந்தாமன் கதவை திறந்தார்.இவனை கண்டு புருவத்தை உயர்த்தியவர், "வா வசீகரா " என்று அழைத்தார். அவன் உள்ளே நுழைகையில் அவன் தாய் பார்வதி சத்துமாவு கஞ்சி கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். பரந்தாமனின் காலை உணவு அது. வசீகரனை கண்டதும் கையில் இருக்கும் கிண்ணத்தை மேசைமேல் வைத்துவிட்டு இறுகிய முகத்துடன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
மெதுவாக தாயிடம் சென்றவன் அவர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான். "அம்மா" என அழைத்தபடி அவரது கைகளை பற்றினான். சிங்கமென கம்பீரமாக நிற்கும் தன் செல்லமகன் தன் முன் மண்டியிட்டு அமர்ந்து, மெதுவான குரலில் 'அம்மா'என்றதும் அவரின் தாய்மை உணர்வு பொங்கியது. இருப்பினும் மௌனமாக அமர்ந்திருந்தார்.கண்கள் கலங்கியது. வசீகரனின் இந்த திடீர் திருமணம் அவருக்கு அதிர்ச்சி. தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற தாயின் ஏக்கம் வலியைத் தந்தது. கோவிலில் இருந்து வந்ததில் இருந்து இப்படி தான் இருக்கிறார். மகனிடம் ஏன் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை, பேசவில்லை. அவனாக பேசப்போனாலும் அறை கதவை மூடி கொண்டு சென்றுவிடுகிறார்.தந்தையிடம் மட்டும் தன் நிலையை விளக்கிவிட்டான். அவரும் அவனை உணர்ந்துக்கொண்டார்.அவனை மன்னிக்கும்படி பார்வதியிடம் பேச முயன்றார். பார்வதி அவரை ஒரு முறைப்பில் தள்ளி நிறுத்திவிட்டார். மகன் பேசினால் தான் மனைவியை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்து இருந்தவர், மகன் தங்கள் அறைக்கு வரவும் உள்ளே அழைத்துவிட்டார்.
வசீகரன் தன் தாயின் முகத்தை நோக்கி,"அம்மா நா பண்ணது தப்புதான்.பட் டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன், எனக்கு எதை பத்தியும் யோசிக்க கூட டைம் இல்ல மா. உங்க கிட்ட பேசி உங்க மூலமா இந்த மேரேஜ் நடக்கனும்னு தான் நா ஆசைப்பட்டேன். ஒன்னு ஞாபகம் இருக்கா மா? ஒரு நாள் உங்க கிட்ட நான் எந்த பொண்ண மேரேஜ் பண்ண ஆசைப்பட்டாலும் ஓகே சொல்லுவிங்களானு கேட்டேன்.நீங்களும் ஆமானு சொன்னிங்க.நான் யாழனியை நெனச்சிதான் அப்போ கேட்டேன் மா.உங்களை யாழினி வீட்டுல பேசவச்சி தான் கல்யாணம் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். பட் அதுக்கு எனக்கு லக் இல்ல.என் மேரேஜ் முடிஞ்சிதான் உங்க மருமகளை உங்களுக்கு அறிமுகம் பண்ற நிலைமை வந்துடுச்சு.யாழினி நா சூஸ் பண்ண பொண்ணுமா . என் முடிவு தப்பா இருக்குமா?உங்க பையன் மேல நம்பிக்கை வச்சி என் மேரேஜ அக்சப்ட் பண்ணுங்க மா" என்று அவர் மடியில் தலைவைத்தான்.அந்த தாயின் உள்ளம் உருகிவிட்டது.கண்களில் கண்ணீருடன் அவன் தலையை வருடியவரை நிமிர்ந்து பார்த்தவன் அவரின் கண்ணீரைத் துடைத்தான்."மன்னிச்சிட்டீங்களாமா?" ஏக்கமாக கேட்டவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவர்,"மன்னிக்கும் அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணல கண்ணா.அம்மாவுக்கு உன் மேல கோபம் இல்ல,வருத்தம் தான். என்கிட்ட சொல்லலையேனு வருத்தம் . மத்தபடி உன் முடிவில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.நீ விரும்பும் வாழ்க்கை உனக்கு அமையனும்னு தான் நானும் ஆசைப்படுறேன்.என் மகன் எப்பவும் எதுலயும் தோற்றுப்போக கூடாது"என்றார். தாயின் இருகரங்களையும் பிடித்து முத்தமிட்டு,"யூ ஆர் மை ஸ்ட்ரென்த் மா" என்றான். மனதில் கர்வமாக உணர்ந்தாள் அந்த தாய்.
அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்த பரந்தாமன்,"எப்படியோ தாயும் மகனும் ஒன்னு சேர்ந்தாச்சா?"என்று அவர்களை பாசப்பிணைப்பில் இருந்து வெளிக்கொண்டுவர முயன்றார்."நானும் என் பிள்ளையும் ஒண்ணானதுல உங்களுக்கு தான் வருத்தமில்ல?என் மகனை விட்டுட்டு உங்களுக்கு ரெண்டுநாளா சேவகம் பண்ணேன். நீங்க மட்டும் என் மகன்கிட்ட பேசுனிங்க.இனி அதெல்லாம் நடக்காதுனு பொறாமையா இருக்குமே" என்றார். இரண்டு நாட்களாக இறுக்கமாக இருந்த மனைவி சிரித்தமுகமாய் கிண்டலடிப்பதை பார்த்து பாசமாக சிரித்தார் பரந்தாமன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
"உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! "
போனின் ஒலியை கேட்டதும் "ஓகே அண்ணா. போன் வருது யார்னு பொய் பாரு" என்று அண்ணனிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு செல்ல ஓரடி எடுத்து வைத்தாள் யாழினி. திடீரென திரும்பியவள், "அண்ணா, அந்த பையன் பேர் என்ன?" என கேட்டாள். அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் மாதவன்."வசீகரன்" என்றான். அவனை பார்த்து விரக்தியாக சிரித்தவள், "எனக்கு பிடிச்ச பெயர்" என்றாள். "அவரையும் கூடிய சீக்கிரத்தில் உனக்கு பிடிக்கும் " நம்பிக்கையாக சொன்னான் மாதவன். அமைதியாக அவள் அறைக்கு சென்றாள் யாழினி.
தனது மொபைலை எடுத்து பார்த்த மாதவன் முகத்தில் சிரிப்பு வந்தது. வசீகரன் தான் அழைத்து இருந்தான். மறுபடியும் அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.ஆன் செய்து ஹலோ சொல்வதற்குள் மறுமுனையில் "ஹாய் மாதவன். ஹவ் ஆர் யூ?"என்று உற்சாக குரலில் பேசினான் வசீகரன். "நல்லா இருக்கேன் மாப்பிள்ளை. நீங்க எப்படி இருக்கீங்க?"
"இதுவரை படபடப்பா இருந்தேன். நீங்க 'மாபிள்ளை'னு கூப்பிட்டதும் ஹாப்பி ஆகிட்டேன்.உங்க வீட்டுல எல்லாரும் ஓகே சொல்லிட்டங்களா?முக்கியமா உங்க தங்கைக்கு சம்மதமா?" தயக்கமாக கேட்டான் .
"எல்லாருக்கும் ஓகே தாங்க. நீங்க எப்போ வரிங்க எங்க வீட்டுக்கு?"
"எப்போனாலும் நா ரெடி மாதவன்"
"இன்னிக்கி சாயங்காலம் வரீங்களா? யாழிக்கும் லீவ் தான்"
"சூப்பர் மாதவன். அம்மா அப்பாகிட்ட பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன். ஈவ்னிங் பாக்கலாம்" என்று போனில் சொல்லியபடி அவனது அறை சுவற்றில் ஒருபுறம் முழுக்க ஒட்டப்பட்டு இருந்த யாழினியின் புகைப்படத்தை பார்த்து கண் சிமிட்டினான் அந்த கள்வன்.
போனை அணைத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டவன் தன் பெற்றோர் அறைக்கு சென்றான். காலிங் பெல்லை அழுத்தியதும் அவனது அப்பா பரந்தாமன் கதவை திறந்தார்.இவனை கண்டு புருவத்தை உயர்த்தியவர், "வா வசீகரா " என்று அழைத்தார். அவன் உள்ளே நுழைகையில் அவன் தாய் பார்வதி சத்துமாவு கஞ்சி கிண்ணத்தை கையில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார். பரந்தாமனின் காலை உணவு அது. வசீகரனை கண்டதும் கையில் இருக்கும் கிண்ணத்தை மேசைமேல் வைத்துவிட்டு இறுகிய முகத்துடன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
மெதுவாக தாயிடம் சென்றவன் அவர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான். "அம்மா" என அழைத்தபடி அவரது கைகளை பற்றினான். சிங்கமென கம்பீரமாக நிற்கும் தன் செல்லமகன் தன் முன் மண்டியிட்டு அமர்ந்து, மெதுவான குரலில் 'அம்மா'என்றதும் அவரின் தாய்மை உணர்வு பொங்கியது. இருப்பினும் மௌனமாக அமர்ந்திருந்தார்.கண்கள் கலங்கியது. வசீகரனின் இந்த திடீர் திருமணம் அவருக்கு அதிர்ச்சி. தன்னிடம் கூட சொல்லவில்லையே என்ற தாயின் ஏக்கம் வலியைத் தந்தது. கோவிலில் இருந்து வந்ததில் இருந்து இப்படி தான் இருக்கிறார். மகனிடம் ஏன் என்று ஒரு கேள்வி கேட்கவில்லை, பேசவில்லை. அவனாக பேசப்போனாலும் அறை கதவை மூடி கொண்டு சென்றுவிடுகிறார்.தந்தையிடம் மட்டும் தன் நிலையை விளக்கிவிட்டான். அவரும் அவனை உணர்ந்துக்கொண்டார்.அவனை மன்னிக்கும்படி பார்வதியிடம் பேச முயன்றார். பார்வதி அவரை ஒரு முறைப்பில் தள்ளி நிறுத்திவிட்டார். மகன் பேசினால் தான் மனைவியை சரி செய்ய முடியும் என்பதை உணர்ந்து இருந்தவர், மகன் தங்கள் அறைக்கு வரவும் உள்ளே அழைத்துவிட்டார்.
வசீகரன் தன் தாயின் முகத்தை நோக்கி,"அம்மா நா பண்ணது தப்புதான்.பட் டிரை டு அண்டர்ஸ்டாண்ட் மை சிச்சுவேஷன், எனக்கு எதை பத்தியும் யோசிக்க கூட டைம் இல்ல மா. உங்க கிட்ட பேசி உங்க மூலமா இந்த மேரேஜ் நடக்கனும்னு தான் நா ஆசைப்பட்டேன். ஒன்னு ஞாபகம் இருக்கா மா? ஒரு நாள் உங்க கிட்ட நான் எந்த பொண்ண மேரேஜ் பண்ண ஆசைப்பட்டாலும் ஓகே சொல்லுவிங்களானு கேட்டேன்.நீங்களும் ஆமானு சொன்னிங்க.நான் யாழனியை நெனச்சிதான் அப்போ கேட்டேன் மா.உங்களை யாழினி வீட்டுல பேசவச்சி தான் கல்யாணம் பண்ணனும் னு ஆசைப்பட்டேன். பட் அதுக்கு எனக்கு லக் இல்ல.என் மேரேஜ் முடிஞ்சிதான் உங்க மருமகளை உங்களுக்கு அறிமுகம் பண்ற நிலைமை வந்துடுச்சு.யாழினி நா சூஸ் பண்ண பொண்ணுமா . என் முடிவு தப்பா இருக்குமா?உங்க பையன் மேல நம்பிக்கை வச்சி என் மேரேஜ அக்சப்ட் பண்ணுங்க மா" என்று அவர் மடியில் தலைவைத்தான்.அந்த தாயின் உள்ளம் உருகிவிட்டது.கண்களில் கண்ணீருடன் அவன் தலையை வருடியவரை நிமிர்ந்து பார்த்தவன் அவரின் கண்ணீரைத் துடைத்தான்."மன்னிச்சிட்டீங்களாமா?" ஏக்கமாக கேட்டவனின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவர்,"மன்னிக்கும் அளவுக்கு நீ எந்த தப்பும் பண்ணல கண்ணா.அம்மாவுக்கு உன் மேல கோபம் இல்ல,வருத்தம் தான். என்கிட்ட சொல்லலையேனு வருத்தம் . மத்தபடி உன் முடிவில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.நீ விரும்பும் வாழ்க்கை உனக்கு அமையனும்னு தான் நானும் ஆசைப்படுறேன்.என் மகன் எப்பவும் எதுலயும் தோற்றுப்போக கூடாது"என்றார். தாயின் இருகரங்களையும் பிடித்து முத்தமிட்டு,"யூ ஆர் மை ஸ்ட்ரென்த் மா" என்றான். மனதில் கர்வமாக உணர்ந்தாள் அந்த தாய்.
அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டு இருந்த பரந்தாமன்,"எப்படியோ தாயும் மகனும் ஒன்னு சேர்ந்தாச்சா?"என்று அவர்களை பாசப்பிணைப்பில் இருந்து வெளிக்கொண்டுவர முயன்றார்."நானும் என் பிள்ளையும் ஒண்ணானதுல உங்களுக்கு தான் வருத்தமில்ல?என் மகனை விட்டுட்டு உங்களுக்கு ரெண்டுநாளா சேவகம் பண்ணேன். நீங்க மட்டும் என் மகன்கிட்ட பேசுனிங்க.இனி அதெல்லாம் நடக்காதுனு பொறாமையா இருக்குமே" என்றார். இரண்டு நாட்களாக இறுக்கமாக இருந்த மனைவி சிரித்தமுகமாய் கிண்டலடிப்பதை பார்த்து பாசமாக சிரித்தார் பரந்தாமன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ