வண்ணங்கள் - கதைகள் முடிக்க வேண்டிய நாட்கள் கெடு நீட்டிப்பு
வணக்கம் வண்ணங்கள் எழுத்தாளர் பெருமக்களே,
எப்படி இருக்கிறீர்கள்? இந்தியாவில் கோவிட் கோர தாண்டவம் எந்த அளவுக்கு கட்டுக்குள் வந்திருக்கிறது என்று தெரியவில்லை. இதில் நம்முடைய எழுத்தாளர்கள் கூட சிலர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். பலரின் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்கள்.
எனவே இந்த க்ரிட்டிக்கலான சூழ்நிலையை மனதில் கொண்டு, பல எழுத்தாளர்களின் வேண்டுதலுக்கு இணங்கி கதை முடிக்க வேண்டிய தேதியை 38 நாட்கள் நீட்டிக்கிறேன். செப்டம்பர் 30-ம் தேதி கண்டிப்பாக திரிகள் க்ளோஸ் செய்யப்படும். இன்னொரு தேதி நீட்டிப்பு இருக்காது. ஒரே ஒரு அத்தியாயம் மீதமிருந்தாலும் அந்த கதை முடிக்கப்படாத கதையாகவே கருதப்படும் தோழமைகளே. எனவே அதிகமாக கிடைத்திருக்கும் இந்த 38 நாட்களை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு வேகமாக எழுதி முடித்துவிடுங்கள்.
வண்ணங்கள் கதாசிரியர்கள் தங்களுடைய நிறைவடைந்த கதையின் இணைப்பை இந்த திரியில் பதிவிடுங்கள், அல்லது உங்களுடைய கதையின் இணைப்பை எனக்கோ அல்லது மீனாவுக்கோ ப்ரைவேட் மெசேஜ் அனுப்புங்கள்.
www.sahaptham.com
ஏற்கனவே முடிவுற்ற கதைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் அப்டேட் செய்கிறோம். அதில் உங்கள் கதை இல்லை என்றால் உங்கள் கதை எண் என்ன என்பதை எனக்கு ஈமெயில் செய்யுங்கள். அல்லது இங்கே தளத்தில் பிரைவேட் மெசேஜில் சொல்லுங்கள்.
மேம் இன்னிக்கு நான் முடிக்க வேண்டியது. ஆனால் லேப்டாப் பவர் பட்டனே ஆன் ஆகல. நான் பன்னறதுனு முழிச்சுட்டு இருந்தேன். சைட் ஓப்பன் செஞ்சா இப்படி ஒரு குட் நீயூஸ்.Thanks a lot Mam❤️❤️❤️
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.