Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

விறுவிறுப்பான அத்தியாயம் வத்சலா. அந்த குழந்தையின் தந்தை ஏக்கம், தந்தையின் பொறுப்பை உணர்த்தும் அந்த பூக்கடைக்காரர் என்று சஞ்சனாவின் முயற்சிகள் பலன் தந்திருக்குமோ ? சுரேந்தர் மூலமாகவே கௌதம் விருப்பம் நிறைவேறிடுமா ? சஞ்சனா கௌதம்க்கு எதிராக நடக்க முடியாமல் தடுமாறுவது, தாத்தாவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்றைக்கும் மறையாது என்ற உணர்வை கௌதமிற்கு உணர்த்தியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நந்தாவின் இந்த தனிமை அவனின் வெறுப்பை மாற்றியிருக்குமா ? மேலும் தெரிந்து கொள்ள ஆவல். 😍 😍
நந்தாவின் தனிமை அவன் வெறுப்பை மாற்றி இருக்குமா? நல்ல கேள்வி. இன்னைக்கு உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் கிடைச்சிடும் மா. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் கூடவே இருந்து கருத்து சொல்றதுக்கு Thanks a lot Devi srinivasan 😍 😍 😍 😍
 
என்ன சொல்லனு தெரில கௌதமோட மகள் மேலான அன்பை..கண்ணீரோட ரசித்துப் படிச்சேன் இந்த நிறைவுப்பகுதியை..சிஸ் கௌதம் சித்தார்த்,அவன் மகள் அன்பை இன்னும் நிறைய பார்ட் 2வில் எதிர்பார்க்கலமா??பூக்கடைக்காரரையும்,அப்பா இல்லனு சொன்ன குழந்தையையும் எந்த இடத்துல கொண்டுவந்து லிங்க் பண்ணுவீங்கனு பார்த்துட்டே இருந்தேன்..அந்த சீன்ம் வந்துருச்சு..சஞ்சனா சதுரங்க வீரனோட தேவதை தான்..சுரேந்தர்ட நண்பனா இருக்கக் கேட்டது அவ்ளோ புடிச்சது..சுரேந்தர் தகுதியுடையவனே கௌதம் சித்தார்த்தின் நட்பிற்கு..நந்தாவிற்கு சித்துவின் முகிலினத்தோழிகளே தண்டனையை அளித்துவிட்டனவோ..நந்தா நீலகண்டன்,வரலட்சுமியின் அன்பை இப்பொழுதாவது புரிந்து கொண்டான்..தாத்தா செம..சிறந்த நட்பிற்கு சுரேந்தர் என்றால் சிறந்த மகன்,காதலன்,கணவன்,தகப்பனுக்கு நமது சதுரங்க வீரன் கௌதம் சித்தார்த்😎😎😎 😍 😍 😍..வெற்றி பெற வாழ்த்துக்கள் மா💐💐💐💐💐
 
அருமையான முடிவு வத்சலா.. மகள் என்னும் தேவதையின் வரவு, கௌதம் மனதில் இருந்த பழி உணர்ச்சியைக் குறைத்து , நந்தாவின் தப்பிற்கு தண்டனை தராமல் விட விட்டது. ஆழமான நட்பின் இலக்கணம் சுரேந்தர். கௌதம் அப்படி ஒரு நட்பைக் கேட்டுப் பெற்றதில் தவறே இல்லை. சஞ்சனாவின் காதலும், கௌதம் தாய் சரஸ்வதியின் ஆசிகளும், தாத்தாவின் எண்ணங்களும் கௌதமை மாற்றி , அவனின் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே கிடைக்க நிலைக்க வைத்து இருக்கிறது. வத்சலா வின் மேஜிக் வரிகளில் கதையின் சுப முடிவு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் வத்சலா 😍 😍 💐💐💐
 
வாவ் அருமையான முடிவு. என்னதான் தன்னுடைய மகளுக்காக கௌதம் தன் பழி வாங்கும் வெறியிலிருந்து மாறினாலும் செய்த தப்பிற்க்கு
தண்டனையை இயற்கையே நந்தாவிற்கு கொடுத்து விட்டது.
இனியாவது கௌதம் தன் மனைவி
பெண்ணுடன் சந்தோஷமாக வாழவேணடும். வாழ்த்துகள் வத்சலா💐💐💐💐💐
 
வாவ் அருமையா அழகா மன நிறைவா கதை நிறைவு பெற்றது அருமை 👌👌👌👌, எப்படி சொல்ல கெளதம் சித்தார்த் நம் மற்றும் சஞ்சனாவின் சதுரங்க வீரன், காதல்லன் பற்றி அவன் காதலிலும் சரி அம்மா பாசத்திலும் மகள் பாசத்திலும் அவனுக்கு நிகர் அவனே அவன் வாழ்வில் ஒவ்வொரு தரணமும் அவனே செதிக்கி கொண்டது அருமை 👌👌👌, தன் தாய்யை கொன்றவன் நந்தாவை பழி வாங்க துடிப்பதும் அவனை கொன்று புதைக்கவும் தன்னை தானே அழிக்கவும் நினைக்கும் அவன் பழிவெறி தன் காதல் மனைவி சொன்ன போது கேட்காத அவன் மனம் இந்த உலகத்தில் இன்னும் ஜனிக்காத தன் மனைவி கருவில் இருக்கும் தன் தாயே மகளுக்கா சதுரங்க வீரன் தன் தோல்வியை தழுவதும் நந்தாவை பலிவாங்காமல் விடுவதும் அருமை👌👌👌, சதுரங்க வீரன் தோற்கவில்லை இப்பொழுதுதான் அவன் பாசத்தில் வென்றுல்ளான் அவன் முகிழ்யினங்கள் அவன் வெற்றியை மகிழ்கின்றனவோ 😍😍😍,
 

New Threads

Top Bottom