Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இது நாள் வரை ராதாவே குழந்தையை குளிக்க வைப்பதும் மற்றைய மருந்துகளை அவளை குடிக்க வைப்பதுமாக செய்து கொண்டிருந்ததால், எதையும் சரிவர செய்யத் தெரியாமல் திணறினாள் அதிதி.


அவளின் திணறலை கண்ட விக்ரமன் என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் ஜானகியம்மாளை அவளுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தான். அவளும் அவரது உதவியை ஏற்றுக் கொண்டாள்.


ஒரு வார காலமாக ஜானகியம்மாள் உதவியுடன் குழந்தைக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவள், இன்றைக்கு தானே குழந்தையை குளிக்க வைக்கலாம் என நினைத்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.


அந்நேரம் பார்த்து வீட்டினுள் நுழைந்த விக்ரமன் குளியல் அறையிலிருந்து சத்தம் கேட்கவும் அங்கு சென்று பார்த்தான்.


அங்கு ஒரு சிறிய பலகையில் அமர்ந்து தனது புடவையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு, குழந்தையை கால்களில் குப்புறப் படுக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் உடம்பிற்கு சோப்பு தேய்த்து குளிக்க வைத்துகொண்டே, தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் அதிதி.


அவள் குழந்தையை குளிக்க வைக்கும் அழகை ஓரத்தில் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், சிறிது நேரத்திற்குப் பிறகே அதிதியின் வாழைத்தண்டு கால்களை கவனித்தான்.


மூன்றரை மாதமாக அவளை விட்டு விலகியே நிற்பவனுக்கு திடீரென பழைய நினைவுகள் தோன்றி திக்கு முக்காட வைக்க, காமன் அனுப்பும் அம்புகளை உடைக்க பாடாதபாடு பட்டான்.


திரும்பிச் சென்று விடுவோமா? என நினைத்தவன், மறுபடியும் இந்த தரிசனம் எப்போது கிடைக்குமோ? என மீண்டும் தன் விழிவேட்டையினை தொடர்ந்தான்.


இதுயெதையும் அறியாதவள் குழந்தையை குளிப்பாட்டி முடித்தவுடன், "அவ்வளவு தான். என் அம்முலுமா குளிச்சாச்சு. எங்க பாப்புக்குட்டி குளிச்சாச்சு. என் புஜ்ஜிமா ரொம்ப சமத்து!" என அழாமல் குளித்தக் குழந்தையை கொஞ்சி, துண்டால் துடைத்துக்கொண்டே திரும்பினாள்.


கதவில் சாய்ந்து நின்றிருந்தவனைக் கண்டு முதலில் திகைத்தவள் பின், கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து குழந்தையின் குட்டி நகங்களை சிறிய நகவெட்டியால் மெதுவாக வெட்டினாள்.


முகம் மற்றும் உடலிற்கு பவுடர் போட்டு, நெற்றி, கன்னம், உள்ளங்கால் என அனைத்து இடங்களிலும் கண்மையால் வட்டப் பொட்டு வைத்தவள் பின், தான் கட்டிலில் எடுத்து வைத்திருந்த சிறிய காட்டன் கவுனை அணிவித்து விட்டாள். குழந்தையும் குளித்த சோக்கில் ஃபேன் காற்றில் மயங்கித் தூங்கியது.


இவை அனைத்தையும் சோபாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் பின், தான் தேடி வந்த கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் வெளியே செல்வதைப் பார்த்த ராதா தயங்கிக்கொண்டே அவ்வறைக்குள் நுழைந்தார்.


"அதிதி" என்றழைத்து அவள் அருகிலும் அமர்ந்தார்.


"குழந்தையை குளிப்பாட்டுறதை பெரிய வித்தை மாதிரி காட்டி என் குழந்தையை எங்கிட்டயிருந்து இவ்வளவு நாளா பிரிச்சி வச்சிட்டீங்கல்ல? எந்த முகத்தோட என்னைப் பார்க்க வந்தீங்க?" என அவர் கூற வந்ததை கேட்காமல் வெளியே அனுப்பி கதவைச் சாத்தினாள் அதிதி.


ஒருவேளை விக்ரமனிடம் கேட்டதற்குப் பதில் உயிரிழந்த அந்த இரண்டு ஜீவன்கள் யாரென ராதாவிடம் கேட்டிருந்தால் உண்மை புலப்பட்டிருக்குமோ என்னவோ?


யாருடனும் பேசாமல் முறைத்துக் கொண்டிருந்தவள் அவ்வீட்டின் பூச்செண்டுகளிடம் மட்டும் அன்பான சித்தியாய் நடந்துகொண்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
ஒரு நாள் அம்முலுவுடன் விளையாட வந்திருந்த வாண்டுகள் சிறிது நேரம் விளையாடிவிட்டு, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அதிதியிடம் போய், "சித்தி பாப்பாவை எங்க ரூமுக்கு கொடுக்கறீங்களா? விளையாடிட்டு தர்றோம்" எனக் கேட்க,


கிஷோர், "ஏய் நிஹாக்கா, பாப்பாவை தூக்கிட்டு வா. நாச்சி பாட்டிக்கிட்ட போவோம். அவங்க பாவம். நம்மக்கிட்ட பாப்பாவை பாக்கணும்னு தூக்கிட்டு வர சொன்னாங்கல்ல?" என்று வெகுளியாகக் கூற, அதிதிக்கு உண்மை விளங்கியது.


"ஆளாளுக்கு தூக்கிட்டு போய் விளையாட ஆராதியா பாப்பா என்ன பொம்மையா? ஒழுங்கா இங்க அவக்கூட விளையாடுறதுனா விளையாடுங்க. இல்ல வெளிய கார்டன்ல போய் விளையாடுங்க. பாப்பாவெல்லாம் தர முடியாது" என காட்டமாகப் பேசி அனுப்பி வைத்தாள்.


மாலையில் நாச்சியம்மையை வரவேற்பறையில் பார்த்தவள், "என்ன சின்ன புள்ளைங்களை வச்சி வேவுப் பார்க்கறீங்களா? அதான் என் புள்ளைய தர மாட்டேனு சொல்லிட்டேன்ல? அப்புறம் ஏன் என் பொண்ணு மேலேயே உங்க கண்ணுயிருக்கு? மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது பண்ணுனீங்கன்னா மரியாதை கெட்டு போய்டும் ஜாக்கிரதை" என்று வெடித்தாள்.


அவளின் பேச்சை கேட்க சகியாதவரும் தன் அம்முலுவை விட்டு விலகியே இருந்தார்.


இப்படியே அதிதி யாருடனும் பேசாமல் முறைத்துக்கொண்டும், அடிக்கடி தன் கணவனை சீண்டிக்கொண்டும் இருக்க, குழந்தை பிறந்து ஐந்தாம் மாதமும் தொடங்கியது.


டைனிங் டேபிளில் எப்பொழுதும் போல தனது ஐபோன் ஸ்கிரீனில் குழந்தையை கண்காணித்துக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த அதிதி, திடீரென்று குழந்தையை ஸ்க்ரீனில் பார்த்து தன் விழிகளை விரித்து பின், வேக வேகமாக கையை கழுவி விட்டு எழுந்து அறையை நோக்கி ஓடினாள்.


அவள் ஓடுவதை கண்ட விக்ரமனும் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து அவளின் பின்னேயே ஓடினான்.


இருவரும் ஓடிச்சென்று ஒருசேர அறைக்குள் நுழைந்தனர்.


விக்ரமன் குழந்தையைப் பார்த்துவிட்டு, "ஏய் என்னாச்சுடி? அம்முலு நல்லாத் தானே இருக்கா? எதுக்கு இப்படி ஓடி வந்த?" என சிடுசிடுக்க,


அதிதி அவனைப் பார்த்து மகிழ்ச்சியுடன், "அம்முலு குப்புறப் படுத்துட்டா" என்றவுடன் தான் அவனும் அதனை உணர்ந்தான்.


வாசலில் நின்றிருந்த நாச்சியம்மையும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் அதைக் கண்டு சந்தோசப்பட்டனர். குழந்தையைத் தன் கைகளில் ஏந்த வேண்டுமென்று ஏங்கினார் நாச்சியம்மை. ஆனால், அதிதியின் வாய்க்குப் பயந்தார்.


இரண்டு மூன்று முறை குழந்தையை தூக்க முயற்சி செய்து அதிதி கேட்ட கடுஞ்சொற்களால் ஒரு வாரம் தூங்காமல் இருந்தது அவருக்குத் தானே தெரியும்.


அலமுவை அதிதியிடமிருந்து பிரித்து அவளை வெளியேற்ற நினைத்தார் நாச்சியம்மை. ஆனால், தற்போது அதிதியால் அவரே குழந்தையை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலைமை. இது தான் விதி என்பதோ?


"இன்னைக்கு வீட்டுல ஏதாவது இனிப்பு செய்" என்று மட்டும் ராதாவிடம் கட்டளையிட்டுவிட்டு கீழே சென்றுவிட்டார்.


அதிதி தனது குழந்தையை நெஞ்சோடு அணைத்து முத்தமிட விக்ரமனும் அவள் கையிலிருந்த குழந்தையை நெருங்கி, "அம்முலுமா எப்படா நீங்க நடப்பீங்க?" என அவள் கன்னத்தில் முத்தம் பதிக்க குனிந்தான்.


குழந்தையை முத்தமிட குனிந்தவனின் நாசியில் மெது மெதுவாய் ஏறியது அதிதியின் பால் மேனி வாசம்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"ஹுக்கும்.. ஹுக்கும்.." என இருமி தன்னை நிலைப்படுத்தியவன் வேகமாக லேப்டாப் பையை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.


மதியம் குழந்தையின் துணிகளை அலமாரியில் மடித்து வைத்துக் கொண்டிருந்த அதிதி கதவு தட்டப்படும் சத்தத்தில், "உள்ள வாங்க ஜானகிம்மா" என்றாள்.


உள்ளே வந்தவர் தான் எடுத்து வந்த மதிய உணவினை டேபிளின் மேல் வைத்து விட்டு அதிதியிடம் மனம் கேளாமல், "விக்ரமன் தம்பி ரொம்ப நல்லவருமா" என்றார்.


அவளோ காரமாகப் பேசினாள்.


"அவரைப் பத்தி எதுவும் என்கிட்ட பேசாதீங்க ஜானகிம்மா. மொத்தக் குடும்பமும் எவ்வளவு அழகா என்கிட்ட நடிச்சிருக்கு. நானும் லூசு மாதிரி அதையெல்லாம் உண்மைனு நம்பி ப்ச்! இந்த வீட்டுல நீங்க மட்டும் தான் எங்கிட்ட உண்மையா இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு. அதான் உங்களை மட்டும் என்கிட்ட பேச அனுமதிச்சிருக்கேன். வீணா அவரைப் பத்தி பேசி அதையும் கெடுத்துக்காதீங்க. சரியான போர்ஜரி குடும்பம் இது. ஏற்கனவே என்னைய ஏமாத்தீட்டீங்களே மாமானு ஒருத்தி வந்தா. அவக்கிட்ட என்ன சொல்லி நடிச்சி ஏமாத்துனாருனு தெரியல. இதுல இவர் ரொம்ப நல்லவராம், வல்லவராம். சரியான பொம்பள பொறுக்.." என அவள் கூறி முடிக்கும் முன்,


"நிறுத்துங்கம்மா!" என கொந்தளித்துக் கத்தினார் ஜானகியம்மாள்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாவல் பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ண மறக்காதீங்க டார்லிங்ஸ்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom