Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
பேஸ்புக்கிலும் இங்கும் கமெண்ட் செய்ய மறக்காதீங்க பட்டூஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 14



கொஞ்சம் கொஞ்சமாக சங்கரப்பாண்டியனிடம் நற்பெயர் பெற்று அவரிடமும் நெருங்கிய பிரபு அரசியலில் தடத்தை பதிக்கும் ஆசையை அவரது மனதிலும் வளர்த்து விட்டான்.


அதன்படி அவரும் அவன் விரித்த வலையில் விழுந்தார்.


பதவி மோகத்தை ஏற்படுத்தியவன் அந்த வருடம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என அவரை ஆசைக்காட்டி போட்டியிடுமாறு கட்டாயப்படுத்தினான்.


காலம் தனக்கு வைத்திருக்கும் சோதனையை அறியாமல் மிகப்பெரிய கட்சியில் சேர்ந்து, தேர்தலில் நிற்க முடிவு செய்தார் சங்கரப்பாண்டியன்.


அதிதிக்கு இரண்டு வயதான போது அவளை தன் தாயிடம் ஒப்படைத்துவிட்டு, தன் தந்தை முதன் முதலில் தேர்தலில் நிற்பதால் அவரை வெற்றி பெறச்செய்யும் பொருட்டு தேர்தல் வேலைகளில் மும்முரமானான் உதயச்சந்திரன்.


ஈஸ்வரன் தொழிலை கவனித்துக்கொள்ள, சங்கரப்பாண்டியனும் உதயச்சந்திரனும் மானசாவின் அண்ணன் பிரபுவுடன் சேர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.


ஏற்கனவே தன் மனைவியின் இறப்பில் சோர்ந்திருந்த உதயச்சந்திரனுக்கு தற்போது அதிகபடியான தேர்தல் வேலைகளால் மேலும் களைப்பு உண்டானது.


அவனின் களைப்பைப் போக்குகிறேன் என அவனை குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கினான் பிரபு.


பல பேர் குடியைக் கெடுத்த இந்த மது தன் குடியையும் கெடுக்கப்போவதை அறியாமல் போதையில் மூழ்கித் திளைத்தான் உதயச்சந்திரன்.


வாய்ப்பு கிடைக்கும் போது அவனைத் தீர்த்துக்கட்டி விட்டால் சொத்து முழுவதும் தன் தங்கை கணவன் ஈஸ்வரனுக்கே சென்று விடும் என கணக்கிட்ட பிரபு, உதயச்சந்திரனை அழிக்க கண்கொத்தி பாம்பாக காத்திருந்தான்.


எப்படியாவது சங்கரப்பாண்டியனை தேர்தலில் வெற்றிபெறச் செய்து விட்டால் அவருக்கு பிறகு ஈஸ்வரை பதவியில் ஏற்றிவிடலாம் எனவும், அவன் மூலம் காலம் முழுக்க தான் பணத்தை எரித்து குளிர் காயலாம் எனவும் கோட்டை கட்டி வாயைப் பிளந்திருந்தான்.


சங்கரப்பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்யவிருக்கும் நாளன்று வீடே திருவிழாக்கோலம் பூண்டது.


அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. கட்சியில் உள்ள பெரிய தலைகள் அனைவரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஜெயித்தது போன்ற உணர்வை அப்போதே பெற்றார் சங்கரப்பாண்டியன்.


*


அப்படியே நல்ல விதமாகவே நாட்கள் சென்றிருக்கக்கூடாதா? என நினைத்த சங்கரப் பாண்டியன் தன் கண்களை திறக்க, அவரின் முன் கண்ணீருடன் நின்றிருந்தார் அங்காளப் பரமேஸ்வரி.


உடனே உணர்ச்சிவசப்பட்டு விசாரித்தார் அவர்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"என்னாச்சு அங்காளு?" என்றதற்கு தன் கையிலிருந்த கடிதத்தை கொடுத்தார் அங்காளப் பரமேஸ்வரி.


அதிலிருந்த வரிகள் இவையே.


*


அன்புள்ள அப்பாவுக்கு,


நான் நலம். அங்கே எல்லோரும் நலமா? கொஞ்ச நாட்களாகவே உங்களிடமிருந்து எந்தவொரு கடிதமும் வரவில்லையே, ஏன்பா? ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் என் மகள் அதிதிக்கு நல்லபையனுடன் கல்யாணம் நடந்திருப்பதாக கடிதம் போட்டீர்கள். ஐந்து மாதங்களுக்கு முன்னால் அவளுக்குப் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் சொன்னீர்கள். ஆனால், இரண்டு வாரத்திற்கு முன்னால் வந்த கடிதத்தில் வேறு ஏதோ எழுதியிருக்கிறதேபா? உங்கள் பெயரில் தான் கடிதம் வந்திருந்தது. எழுத்தைப் பார்த்ததும் அதை நீங்கள் எழுதவில்லை என்று கண்டுபிடித்து விட்டேன். எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் அந்த கடிதத்தில் எழுதியிருப்பது உண்மையா? இல்லையா? என்று தான்.


சொல்லுங்கப்பா உங்களை நம்பி தானே என் அதிதியை விட்டுவிட்டு நான் ஜெயிலுக்கு வந்தேன்? ஏன் என் பொண்ணை அந்த வீட்டிற்கு அனுப்புனீர்கள்? என் பொண்ணு அனுபவிக்கிற கஷ்டத்தை கேட்டதிலிருந்தே சோறு தண்ணீர் உள்ளே இறங்க மாட்டேன் என்கிறது. இங்குள்ள சிறை காவலாளி என் நண்பன் கந்தனின் ஆறுதலில் தான் கொஞ்சம் மனம் தேறியிருக்கிறேன். விரைவில் பதில் எழுதி அனுப்புங்கள். இல்லையெனில் உங்கள் உயிருக்குயிரான மகனின் இரங்கல் செய்தி தான் உங்கள் செவியை வந்தடையும்.


இப்படிக்கு,


உதயச்சந்திரன்.


*


அங்காளப் பரமேஸ்வரி மகனுக்காக பரிதவித்தார்.


"என்னங்க? நம்ம சந்திரன் இப்படி எழுதியிருக்கான்? அந்த கந்தன் நாச்சியம்மையோட ஆளுனு நாம அவனுக்கு எழுதின லெட்டர் எல்லாம் அவனைப் போய் சேரலை போலயேங்க? நிச்சயதார்த்தத் தன்னைக்கு அந்த நாச்சியம்மை கந்தன் மூலமா நம்ம சந்திரனை கொலை செஞ்சிடுவேனு மிரட்டினதால தானங்க நம்ம அதிதியை அவங்கக்கூட அனுப்பி வச்சோம்? ஆனா, இப்ப இவன் எழுதியிருக்கறதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க." என பெத்த மனம் துக்கம் தாளாமல் கரைந்தது.


சங்கரப்பாண்டியன் தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தார்.


"நான் ஜெயிலுக்குப் போய் எல்லா உண்மையையும் அவனை நேர்ல பார்த்து சொல்லிடுறேன் அங்காளு. நம்ம மகன் தற்கொலை செஞ்சுக்கற அளவுக்கு கோழை இல்ல. என்ன சொன்னா உடனே வேலையாகுமோ அந்த தந்திரத்தைத் தான் அவன் பயன்படுத்தியிருக்கான்" என ஆறுதல் வார்த்தைகள் உரைத்து தன் மனைவியை சமாதானப்படுத்தினார். அது வேலை செய்தது.


அதிதி தனது தாத்தா பணியாள் ஒருவரின் மூலம் அனுப்பிய பணத்தை ஜானகியம்மாளிடம் கொடுத்து குழந்தைக்கு தேவையான பொருட்களின் பட்டியலையும் தயாரித்து, பக்கத்தில் உள்ள மருந்து கடைகளில் வாங்கி வரச் சொன்னாள்.


சாயுங்காலம் அறைக்கு வந்தவர் தந்த பொருட்களையெல்லாம் சரி பார்த்துவிட்டு கட்டிலில் வைத்தவள், அறையினுள்ளேயே அடைந்து கிடப்பது பிடிக்காமல் குழந்தையை தூக்கிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள்.


பொழுது சாயும் நேரத்தில் குளிர் காற்று வீச, குழந்தையைத் தள்ளு வண்டியில் வைத்து புல் தரையில் வெறும் காலுடன் உருட்டிக்கொண்டே அங்குள்ள பூக்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அப்பொழுது அதிதி என்றொரு குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். வந்திருந்தது கௌதமன்.


அவள் கொதித்துப்போய் விலகப் பார்க்க அவன், "என்னை மன்னிச்சிடு அதிதி. அன்னைக்கு உன்கிட்ட எதையும் விரிவா பேச முடியல. விக்ரமனும் என்னை பேச விடல. உன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உடனே போயிடனும்னு தான் என்கிட்ட சொல்லியிருந்தான். அவன் அன்னைக்கு நம்மளை தள்ளியிருந்து பார்த்துக்கிட்டு இருந்ததால தான் என்னால உன்கிட்ட எதையும் முழுசா சொல்ல முடியல" என புதுக்கதை சொன்னான்.


அவன் கூறுவது புரியாமல் விழித்தவள் புருவங்களை இடுக்கினாள். அவனே அவளுக்கு விளக்கினான்.


"அன்னைக்கு இதே இடத்துல உன்கிட்ட தப்பா பேசினதுக்கப்பறம் விக்ரமன் என்னை போலீஸ்ல மாட்டி விட்டு, என் தொழிலையெல்லாம் முடக்கிட்டான். ஏன்னு கேட்டதுக்கு உங்கிட்ட தப்பா பேசினதை சொல்லி, என்னை மும்பை போகச் சொன்னான். நானும் வேற வழியில்லாம அங்கப் போனேன். ஆனா, விதி தான் என்னை அங்க அழைச்சிட்டுப் போயிருக்குனு நினைக்கறேன் அதிதி" என்றவனின் முகம் இறுதி வாக்கியத்தில் மட்டும் பிரகாசமாக, அவனை விளங்காமல் பார்த்தாள் அதிதி.


"ப்ராமிஸ், அங்க தான் நான் என் தேஜூவைப் பார்த்தேன் அதிதி. அவப் பேரு தேஜஸ்வி. என் ஆஃபீஸ்ல வொர்க் பண்ற பொண்ணு. மிருகமா இருந்த என்னை மனுசனா மாத்தினவ. காதல்னா என்னனு எனக்கு புரிய வச்சவ. அவளை பார்த்தப்பறம் தான் நான் உன்கிட்ட பேசினதெல்லாம் எவ்வளவு தப்பான வார்த்தைகள்னு எனக்கு புரிஞ்சது. நேரா இங்க வந்தவுடனேயே விக்ரமன் கிட்ட மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனா, அவன் என்கிட்ட மன்னிப்பு கேட்க தேவையில்ல. அதிதிக்கிட்ட போய் கேளுனு சொன்னான். கூடவே, நான் தான் உன்னை மும்பை அனுப்பினேனு அவளுக்கு தெரிய வேணாம்னு கேட்டுக்கிட்டான். நானும் சரினு உன்கிட்ட மன்னிப்பு மட்டும் கேட்டேன். அன்னைக்கு நான் உன்கிட்ட ஏதாவது உளறி வச்சிடுவேனோனு பயந்து தான் அவன் குறுக்கப் புகுந்தான். ஆனா, உன் நிச்சயதார்த்தத் தன்னைக்கு நான் தான் உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறதா இருந்தது அதிதி. கடைசில என்னாச்சுன்னா.." என்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நினைவு கூறத் தொடங்கினான் கௌதமன்.


*


நாச்சியம்மை தான் சம்பந்தம் பேச வந்துள்ளதைக் கூறி உதயச்சந்திரனின் உயிருக்கு தான் உலை வைக்கப்போகும் அவர்களின் இக்கட்டான நிலையையும் விவரிக்க, எவ்வாறு தன் பெயர்த்தியை இதிலிருந்து விடுவிப்பது என யோசித்த சங்கரப்பாண்டியன் சமயோஜிதமாய் வார்த்தை அம்புகளை பிரயோகித்தார்.


"நான் இப்போ என் பேத்திக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை குணத்துல ராமன் மாதிரி. அவருக்கு நிகரா உன் வம்சத்துல எவன் இருக்கானோ அவனுக்கு என் பேத்தியைக் கேளு. தர்றேன்" என்று நாச்சியம்மைக்கு கிடுக்குப்பிடி போட்டார்.


அதில் நாச்சியம்மையின் முகம் இருண்டது.


பின், தன்னை சமாளித்துக் கொண்டவர், "நான் என்ன ஜனகன் மக சீதாவையா என் மகனுக்கு பொண்ணுக்கேட்டு வந்திருக்கேன்? அவ அப்பன் ஒரு கொலைகாரன். அவன் இப்ப எங்க இருக்கானு இந்த ஊருக்கேத் தெரியும். சும்மா உளறாம அவளை அனுப்பி விடுங்க" என்றார்.


அச்சூழ்நிலையை எவ்வாறு எதிர்கொள்வதென சங்கரப்பாண்டியன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தான் அம்மாளிகைக்குள் நுழைந்தாள் அதிதி.


இனி நாச்சியம்மையின் முடிவிற்கு அடிபணிவதை தவிர வேறு வழியில்லை என்றவர் அதிதியை அனுப்பி வைக்க முன் வந்த போது தான் ஒரு திருப்பத்தை உண்டாக்கினார் நாச்சியம்மை.


ஆம், விக்ரமனை அனுப்பி அதிதியை அழைத்து வரச்சொன்னார்.


விக்ரமன் அதிதியின் கை பிடிக்கும் போது, என் வம்ச ராமனை பார்த்துக்கொள் என சங்கரப்பாண்டியனை மிதப்பாக பார்த்தார் நாச்சியம்மை. பின், அனைவரையும் கேலியாக பார்த்துவிட்டு தன் காரில் ஏறி அமர்ந்து விட்டார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
*


காட்சி நிரலாக தன் கண் முன் ஓடிய அனைத்து நிகழ்வுகளையும் அதிதியிடம் கூறி முடித்த கௌதமன், "உன்னை எனக்குனு சொல்லிட்டு பின்னாடி இல்லைனு மாத்தினதைத் தான் என்னால ஏத்துக்க முடியல அதிதி. அந்த கோபத்துல தான் முட்டாள் தனமா என்னென்னவோ பண்ணிட்டேன். மொத நீ எனக்கானவனு நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். வாழ்க்கையில பாதி பேர் இப்படித்தான், முதல்ல யாரையோ தனக்கானவன் தனக்கானவள்னு நம்பி வாழ்க்கையில பல அடிகள் பட்டப் பின்னாடி தான், தன் துணையை அடையாளம் காணுறாங்க. அந்த வரிசையில நானும் இப்போ ஒருத்தனாகிட்டேன். என்னை மன்னிச்சிடுமா" எனத் தன் தவறுகள் அனைத்தையும் உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.


அதிதிக்கு அவன் கேட்ட மன்னிப்பு மனதில் பதியவில்லை.


'அப்பாவோட உயிரைக் காப்பாத்தத் தான் தாத்தா என்னை இங்க அனுப்பினாரா? ஆனா, அப்பா எப்படி ரெண்டு பேர் உயிர் போக காரணமானாரு?' என மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தாள்.


பின், கௌதமனின் சொடுக்கு சத்தத்திலேயே நிகழ்காலம் வந்தாள்.


"ஓஹ் சாரி! நீங்க என்ன சொல்லிட்டு இருந்தீங்க?" என்று பேந்த பேந்த விழித்தாள்.


"சரியாப் போச்சு போ! நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேன் அதிதி" என்றவன் சொல்ல,


'மன்னிப்பா? நீங்க பேசின வார்த்தைகளையெல்லாம் என்னால மன்னிக்க முடியாது. ஆனா, மறக்க முயற்சி செய்றேன்" என்றவள் நகரப் பார்க்க கௌதமன் தொடர்ந்தான்.


"எங்கம்மா ஏதோ பழி வாங்கத்தான் உனக்கு விக்ரமனை கல்யாணம் செஞ்சு வச்சாங்கனு எனக்குத் தெரியும். ஆனா, நான் உன்கிட்ட தப்பா பேசினது தெரிஞ்சு விக்ரமன் என்கிட்ட இவ்வளவு கோபப்படுவானு நான் எதிர்பார்க்கல அதிதி. ஐ திங் விக்ரமன் உன்னை விரும்புறான். அவன் இவ்வளவும் செஞ்சதுக்கு காரணம் உன் குடும்பம் செஞ்ச தப்பும், என் அம்மாவோட வார்த்தைகளும் தான். நீ அவன் காதலை வெளிக்கொண்டு வந்தாலே எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும். என்னையே ஒருத்தி தன் காதலால இப்படி மாத்தியிருக்கான்னா உன்னால முடியாதா அதிதி? சீக்கிரமே நீயும் விக்ரமனும் சேர்ந்து தான் நம்ம வீட்டுல பேசி எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கணும். நான் இப்ப மறுபடியும் மும்பை போறேன். திரும்ப வரும் போது உங்க ரெண்டு பேரையும் ஒன்னா தான் பார்க்கணும்" என்றவன் கீழே குனிந்து,


"பெரியப்பா போயிட்டு வரேன்டா ஆராக் குட்டி" என குழந்தையின் பஞ்சுக்கன்னத்தில் முத்தம் பதித்துவிட்டு மும்பை கிளம்பிவிட்டான்.


தன் கணவன் தன்னை சந்தேகிக்கவில்லை என்பதை உறுதியாக அறிந்தவளுக்கு மனம் சற்று ஆறுதலடைந்தது.


ஆனால், தன் மற்றைய கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டிருந்தாள்.


பின், குழந்தையின் சத்தத்தில் கலைந்து அவளை தூக்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.


எப்போதையும் விட இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்பே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்து விட்டிருந்த விக்ரமன், கட்டிலிலிருந்த பொருட்களைக் கண்டு ருத்ரமூர்த்தியானான்.


"ஏய்! என்னடி இது? யார் காசுல வாங்கின?" என்று கோபமாகக் கேட்டவனுக்கு, பதில் அளிக்காமல் தன்போக்கில் அமர்ந்திருந்தாள் அதிதி.


அமைதியாக இருந்தவளைக் கண்டு வந்த ஆத்திரத்தில் அனைத்துப் பொருட்களையும் தூக்கிப்போட்டு சுக்குநூறாக உடைத்தான் விக்ரமன்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom