- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
"நான் இன்னும் உயிரோட தான்டி இருக்கேன்." என்றும் கர்ஜித்தவன்,
"இவ என் அம்முலு. இவளுக்கு யார் காசுலயும் எதுவும் வாங்க அவசியமில்ல." என்றபடியே பால்கனி சென்று புகைக்கத் துவங்கிவிட்டான்.
அனைத்தையும் கண்டு புது தெளிவு கிடைத்த நிம்மதியில், 'இனிமே தான் மாமூ உனக்கு கச்சேரியே இருக்கு' என்று மர்மப் புன்னகை புரிந்தாள் அதிதி.
மறுநாள் காலையில் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அவனுக்குத் தெரியாமல் அவனின் கார் சாவியை எடுத்து ஒளித்து வைத்தாள். அதுவும் குழந்தையின் தொட்டிலுக்குள் ஒளித்து வைத்தாள்.
குழந்தையும் சாவியை தன் கைகளுக்குள் இறுக்கிப் பிடித்துக்கொண்டே வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அலுவலகம் கிளம்பிய விக்ரமன் கார் சாவியை காணாமல் அனைத்து இடங்களிலும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்க, அவனை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தாள் அதிதி.
தன் தந்தை படும் கஷ்டத்தை பொறுக்க முடியாத குழந்தை, "ம்ம்.. ம்ம்.. ங்கா.. ங்கா" என்று சத்தமாகக் கத்தி தன் தந்தையை அழைத்தது.
குழந்தையின் சத்தத்தில் திகைத்தவள், ‘எவ்வளவு நேக்கா அப்பாவை கூப்பிடுறா பாரு? நான் ஒரு பிளான் போட்டா அதை என் வயித்துல பொறந்தவளே கெடுத்துருவா போலயிருக்கே. எப்பவும் வைக்கிற இடத்துல இன்னைக்கு சாவிய காணோம், நீ பார்த்தியானு ஒரு வார்த்தை கேட்கறாரானு பாரு. இதுக்கே நீங்க குளிக்கும் போது தண்ணியில்லாம தவிக்க விடணும் மாமூ’ என மனதில் கழுவி ஊத்திக்கொண்டே குத்துக்கல்லாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
தொட்டிலிலிருந்து சத்தம் வரவும், "என்னடா அம்முலுமா? அப்பாவுக்கு உன் கூட விளையாட நேரமில்லடா. அப்பா ஆஃபிஸ் போகணும்" என தன் போக்கில் பேசிக்கொண்டே சாவியைத் தேடிக் கொண்டிருந்தான் விக்ரமன்.
தேடித்தேடி அலுத்தவன் பதினைந்து நிமிடங்கள் தேடியும் சாவி கிடைக்காமல் போகவும் கோபத்தில் தனது ஷூ காலால் தரையை உதைக்க, அவனின் பதட்டத்தைக் கண்டு திருப்தியடைந்தாள் அதிதி.
மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்தவன் வேறு வழியின்றி மற்றொரு காரில் சென்று விட்டான்.
பனிரெண்டு மணியளவில் அலுவலகத்தில் தன் செகரெட்டரியிடம் மெயில் அனுப்ப வேண்டியவைப் பற்றி கூறிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு திடீரென புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதனை ஏற்று யாரென்று கேட்டான்.
எதிர்புறம் உற்சாகமாய் வந்தது குரல்.
"ஹாய் மாமூ! நான் தான் உங்க அம்முக்குட்டி பேசுறேன். வீட்லயிருந்தே ரொம்ப போர் அடிச்சதா? அதான் நானும் அம்முலுவும் ஷாப்பிங் வந்தோம். உங்க ஆஃபீஸ்க்கு பக்கத்துல இருக்க மாலுக்கு தான் வந்திருக்கோம்" என்றதும் திகைத்தான் அவன்.
இவ்வளவு நாள் தன் மேலிருந்த வெறுப்பில் விலகியே இருந்தவள் தற்போது முன்பு போல் மாமூ என தன்னை அழைப்பதை கேட்டு, ஜில்லென்றிருந்தது விக்ரமனுக்கு. மேலும், தொடர்ந்தாள் அவள்.
"அப்புறம் இது என்னோட நம்பர் தான் மாமூ. உங்க போன்ல சேவ் பண்ணிக்கோங்க. புது ஆப்பிள் ஐபோன் செவென்டின் ப்ளஸ் வாங்கியிருக்கேன். எவ்ளோ தெரியுமா? ஒரு லட்சம் சம்திங். எவ்வளவு நாள் தான் ஜானகியம்மாக்கிட்டயே போன் வாங்கி பேசுறது? அதான் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு புது போன் வாங்கிட்டேன். ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. எனக்கும் பாப்பாவுக்கும் வேண்டியதெல்லாம் வாங்கிட்டு, பில் போட்டு பார்த்தா இருபது லட்சம்னு சொல்றாங்க. ஏன் இவ்வளவுனா நீங்கப் பண்ணின ஃபேசியல், பாடி மசாஜ் ரொம்ப காஸ்ட்லி மேடம்னு சொல்றாங்க. பகல் கொள்ளை பாருங்க.நீங்க வேற நேத்து எல்லாத்தையும் உடைச்சி, பாப்பாவுக்கு ஏதாவது வாங்கினா உங்க காசுல தான் வாங்கனும்னு சொல்லிட்டீங்க. அதான் இவங்கக்கிட்ட என் ஹபி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இதுக்கெல்லாம் செட்டில் பண்ணிடுவாருனு வெயிட் பண்ண சொல்லிருக்கேன். நானும் உங்க ப்ராபெர்ட்டி தானே மாமூ? எனக்கும் நீங்க தானே வாங்கி கொடுக்கணும்? சீக்கிரம் வந்து பில் பே பண்ணுங்க மாமூ" என இறுதியில் கொஞ்சலாகப் பேசினாள் அதிதி.
அவள் தன்னை கதற வைக்கவே இவ்வாறு செய்கிறாளென்று உணர்ந்து கொண்டவனின் முகத்தில் புன்னகையின் சாயல்.
"இவ என் அம்முலு. இவளுக்கு யார் காசுலயும் எதுவும் வாங்க அவசியமில்ல." என்றபடியே பால்கனி சென்று புகைக்கத் துவங்கிவிட்டான்.
அனைத்தையும் கண்டு புது தெளிவு கிடைத்த நிம்மதியில், 'இனிமே தான் மாமூ உனக்கு கச்சேரியே இருக்கு' என்று மர்மப் புன்னகை புரிந்தாள் அதிதி.
மறுநாள் காலையில் அவன் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அவனுக்குத் தெரியாமல் அவனின் கார் சாவியை எடுத்து ஒளித்து வைத்தாள். அதுவும் குழந்தையின் தொட்டிலுக்குள் ஒளித்து வைத்தாள்.
குழந்தையும் சாவியை தன் கைகளுக்குள் இறுக்கிப் பிடித்துக்கொண்டே வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அலுவலகம் கிளம்பிய விக்ரமன் கார் சாவியை காணாமல் அனைத்து இடங்களிலும் குனிந்து குனிந்து தேடிக் கொண்டிருக்க, அவனை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே திருட்டுத்தனமாய் ரசித்துக் கொண்டிருந்தாள் அதிதி.
தன் தந்தை படும் கஷ்டத்தை பொறுக்க முடியாத குழந்தை, "ம்ம்.. ம்ம்.. ங்கா.. ங்கா" என்று சத்தமாகக் கத்தி தன் தந்தையை அழைத்தது.
குழந்தையின் சத்தத்தில் திகைத்தவள், ‘எவ்வளவு நேக்கா அப்பாவை கூப்பிடுறா பாரு? நான் ஒரு பிளான் போட்டா அதை என் வயித்துல பொறந்தவளே கெடுத்துருவா போலயிருக்கே. எப்பவும் வைக்கிற இடத்துல இன்னைக்கு சாவிய காணோம், நீ பார்த்தியானு ஒரு வார்த்தை கேட்கறாரானு பாரு. இதுக்கே நீங்க குளிக்கும் போது தண்ணியில்லாம தவிக்க விடணும் மாமூ’ என மனதில் கழுவி ஊத்திக்கொண்டே குத்துக்கல்லாக அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.
தொட்டிலிலிருந்து சத்தம் வரவும், "என்னடா அம்முலுமா? அப்பாவுக்கு உன் கூட விளையாட நேரமில்லடா. அப்பா ஆஃபிஸ் போகணும்" என தன் போக்கில் பேசிக்கொண்டே சாவியைத் தேடிக் கொண்டிருந்தான் விக்ரமன்.
தேடித்தேடி அலுத்தவன் பதினைந்து நிமிடங்கள் தேடியும் சாவி கிடைக்காமல் போகவும் கோபத்தில் தனது ஷூ காலால் தரையை உதைக்க, அவனின் பதட்டத்தைக் கண்டு திருப்தியடைந்தாள் அதிதி.
மீட்டிங்கிற்கு நேரமாகிவிட்டது என்பதை உணர்ந்தவன் வேறு வழியின்றி மற்றொரு காரில் சென்று விட்டான்.
பனிரெண்டு மணியளவில் அலுவலகத்தில் தன் செகரெட்டரியிடம் மெயில் அனுப்ப வேண்டியவைப் பற்றி கூறிக் கொண்டிருந்த விக்ரமனுக்கு திடீரென புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் அதனை ஏற்று யாரென்று கேட்டான்.
எதிர்புறம் உற்சாகமாய் வந்தது குரல்.
"ஹாய் மாமூ! நான் தான் உங்க அம்முக்குட்டி பேசுறேன். வீட்லயிருந்தே ரொம்ப போர் அடிச்சதா? அதான் நானும் அம்முலுவும் ஷாப்பிங் வந்தோம். உங்க ஆஃபீஸ்க்கு பக்கத்துல இருக்க மாலுக்கு தான் வந்திருக்கோம்" என்றதும் திகைத்தான் அவன்.
இவ்வளவு நாள் தன் மேலிருந்த வெறுப்பில் விலகியே இருந்தவள் தற்போது முன்பு போல் மாமூ என தன்னை அழைப்பதை கேட்டு, ஜில்லென்றிருந்தது விக்ரமனுக்கு. மேலும், தொடர்ந்தாள் அவள்.
"அப்புறம் இது என்னோட நம்பர் தான் மாமூ. உங்க போன்ல சேவ் பண்ணிக்கோங்க. புது ஆப்பிள் ஐபோன் செவென்டின் ப்ளஸ் வாங்கியிருக்கேன். எவ்ளோ தெரியுமா? ஒரு லட்சம் சம்திங். எவ்வளவு நாள் தான் ஜானகியம்மாக்கிட்டயே போன் வாங்கி பேசுறது? அதான் அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்னு புது போன் வாங்கிட்டேன். ஆங்! சொல்ல மறந்துட்டேன் பாருங்க. எனக்கும் பாப்பாவுக்கும் வேண்டியதெல்லாம் வாங்கிட்டு, பில் போட்டு பார்த்தா இருபது லட்சம்னு சொல்றாங்க. ஏன் இவ்வளவுனா நீங்கப் பண்ணின ஃபேசியல், பாடி மசாஜ் ரொம்ப காஸ்ட்லி மேடம்னு சொல்றாங்க. பகல் கொள்ளை பாருங்க.நீங்க வேற நேத்து எல்லாத்தையும் உடைச்சி, பாப்பாவுக்கு ஏதாவது வாங்கினா உங்க காசுல தான் வாங்கனும்னு சொல்லிட்டீங்க. அதான் இவங்கக்கிட்ட என் ஹபி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து இதுக்கெல்லாம் செட்டில் பண்ணிடுவாருனு வெயிட் பண்ண சொல்லிருக்கேன். நானும் உங்க ப்ராபெர்ட்டி தானே மாமூ? எனக்கும் நீங்க தானே வாங்கி கொடுக்கணும்? சீக்கிரம் வந்து பில் பே பண்ணுங்க மாமூ" என இறுதியில் கொஞ்சலாகப் பேசினாள் அதிதி.
அவள் தன்னை கதற வைக்கவே இவ்வாறு செய்கிறாளென்று உணர்ந்து கொண்டவனின் முகத்தில் புன்னகையின் சாயல்.