- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
சிறைக்கு தன் மகனை காணச்சென்ற சங்கரப்பாண்டியன் வியப்புடன் அக்கேள்வியை கேட்டார்.
"என்ன சந்திரா சொல்ற? அந்த ஜெயிலர் கந்தன் உண்மையாவே உன் ப்ரெண்டா?" என்றார்.
"ஆமாப்பா, அவன் என் காலேஜ் ப்ரெண்ட். அவன் இங்க வந்த மறுநாளே என்னை கொலை செய்யச் சொல்லி அவனை நாச்சியம்மை அனுப்பினதா சொல்லி, பத்திரமா இருடான்னான். இப்போ வரை எனக்கு உறுதுணையா இருக்கறதும் அவன் தான்பா" எனவும், அவர்களின் உண்மையான நட்பில் மனம் நெகிழ்ந்து நின்றார் சங்கரப்பாண்டியன்.
தான் கடிதத்தில் படித்த அனைத்து நிகழ்வுகளுக்குமான விளக்கத்தையும் தன் தந்தையிடம் கேட்டறிந்த உதயச்சந்திரன், அந்நேரம் பார்த்து அங்கு வந்த கந்தனை தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
வெகுநேரம் சங்கரப்பாண்டியனுடன் பேசிய கந்தன் இடையில், "நீங்க நான் சந்திரனை கொல்ல தான் இங்க வந்திருக்கேனு அவனுக்கு எழுதியிருந்த கடிதத்தை நான் அவனுக்கு காமிக்கல. நாச்சியம்மைக்கு என் மேல நம்பிக்கையை ஏற்படுத்துறதுக்காக அவங்கக்கிட்ட அனுப்பிட்டேன்." என்று சொல்ல, புரிந்தது போல் தலையாட்டிய சங்கரப்பாண்டியன் கிளம்பும் முன் தன் மகளின் வாழ்க்கையை சீர் படுத்துவதற்காக தன் மகன் கேட்ட விக்ரமனின் அலுவலக முகவரியையும் தந்துவிட்டேப் புறப்பட்டார்.
ஒரு வாரத்திற்குப் பின் அலுவலக அறையில் தன் கையிலிருந்த கடிதத்தை ஒரு வரி விடாமல் வாசித்த விக்ரமன் அதனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஜீரணிக்க முயன்றான்.
உடன் தன் துப்பறிவாளரை போனில் தொடர்பு கொண்டு சில ஆலோசனைகளையும் கேட்டான்.
அன்று மதியம் தன் மகளுக்கு கடைந்த பருப்பு சாதத்தை ஊட்ட தலைகீழாக நின்றுக் கொண்டிருந்தாள் அதிதி.
தவழ்ந்து அனைத்துப் பொருட்களையும் வாயில் வைத்து ருசி பார்க்கும் தன் மகளின் கையிலிருக்கும் பொருள்களையெல்லாம் தட்டி தட்டி விட்டவள் ஒரு வாய் சாதம் கொடுக்க, அதனை மட்டும் வாங்க மறுத்து தன் உதட்டை இறுக மூடியிருந்தாள் அம்முலு.
அவளை கீழே தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாக்கரில் அமர வைத்தவள், பூக்களை காண்பித்து சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்.
சாதத்தை வாயில் வாங்கிக் கொண்டு வாக்கரில் அமர்ந்தே எம்பி எம்பி பட்டாம் பூச்சியை பிடிக்கத் தன் பிஞ்சி விரல்களை விரிப்பதும் மடக்குவதுமாகயிருந்தாள் அம்முலு.
இந்த எழில் மிகு காட்சியை தன்னறையின் ஜன்னல் வழியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நாச்சியம்மை.
திடீரென ஒரு பட்டாம்பூச்சி அம்முலுவின் கையில் அகப்பட அதனை மகிழ்ச்சியுடன் தன் வாயில் போடப்போனாள் அந்த இரட்டைச் சுழிக்காரி.
நாச்சியம்மை படபடத்த இதயத்துடன் அதனைப் பார்த்திருக்க தன் மகளின் கையிலிருந்த பூச்சியைப் பார்த்த அதிதி, உடனே அவள் விரல்களை பிரித்து பூச்சியை விடுவித்தாள்.
பின், கோபத்துடன் தன் மகளின் முகத்தருகே குனிந்து மிரட்டவும் செய்தாள்.
"ஒரு வாய் பருப்பு சாதம் சாப்பிடனும்னா வாயவே திறக்க மாட்டேங்குற. பூச்சியை மட்டும் வாயில பிடிச்சிப் போடுறியா? அது சரி, வயித்துல இருக்கும் போதே சிக்கன் வேணும்னு அடம்பிடிச்சவளாச்சே நீ. இந்த பூச்சிய விட்டு வைப்பியா? ஏய் நத்தக்குட்டி! இனி இது மாதிரி ஏதாவது வாயில வச்சிப்பாரு. அம்மா அடிப் பின்னியெடுத்துருவேன். என்ன முறைக்கிற? கண்ணு முழிய நோண்டிருவேன்" என மிரட்டினாள்.
"என்ன சந்திரா சொல்ற? அந்த ஜெயிலர் கந்தன் உண்மையாவே உன் ப்ரெண்டா?" என்றார்.
"ஆமாப்பா, அவன் என் காலேஜ் ப்ரெண்ட். அவன் இங்க வந்த மறுநாளே என்னை கொலை செய்யச் சொல்லி அவனை நாச்சியம்மை அனுப்பினதா சொல்லி, பத்திரமா இருடான்னான். இப்போ வரை எனக்கு உறுதுணையா இருக்கறதும் அவன் தான்பா" எனவும், அவர்களின் உண்மையான நட்பில் மனம் நெகிழ்ந்து நின்றார் சங்கரப்பாண்டியன்.
தான் கடிதத்தில் படித்த அனைத்து நிகழ்வுகளுக்குமான விளக்கத்தையும் தன் தந்தையிடம் கேட்டறிந்த உதயச்சந்திரன், அந்நேரம் பார்த்து அங்கு வந்த கந்தனை தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
வெகுநேரம் சங்கரப்பாண்டியனுடன் பேசிய கந்தன் இடையில், "நீங்க நான் சந்திரனை கொல்ல தான் இங்க வந்திருக்கேனு அவனுக்கு எழுதியிருந்த கடிதத்தை நான் அவனுக்கு காமிக்கல. நாச்சியம்மைக்கு என் மேல நம்பிக்கையை ஏற்படுத்துறதுக்காக அவங்கக்கிட்ட அனுப்பிட்டேன்." என்று சொல்ல, புரிந்தது போல் தலையாட்டிய சங்கரப்பாண்டியன் கிளம்பும் முன் தன் மகளின் வாழ்க்கையை சீர் படுத்துவதற்காக தன் மகன் கேட்ட விக்ரமனின் அலுவலக முகவரியையும் தந்துவிட்டேப் புறப்பட்டார்.
ஒரு வாரத்திற்குப் பின் அலுவலக அறையில் தன் கையிலிருந்த கடிதத்தை ஒரு வரி விடாமல் வாசித்த விக்ரமன் அதனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஜீரணிக்க முயன்றான்.
உடன் தன் துப்பறிவாளரை போனில் தொடர்பு கொண்டு சில ஆலோசனைகளையும் கேட்டான்.
அன்று மதியம் தன் மகளுக்கு கடைந்த பருப்பு சாதத்தை ஊட்ட தலைகீழாக நின்றுக் கொண்டிருந்தாள் அதிதி.
தவழ்ந்து அனைத்துப் பொருட்களையும் வாயில் வைத்து ருசி பார்க்கும் தன் மகளின் கையிலிருக்கும் பொருள்களையெல்லாம் தட்டி தட்டி விட்டவள் ஒரு வாய் சாதம் கொடுக்க, அதனை மட்டும் வாங்க மறுத்து தன் உதட்டை இறுக மூடியிருந்தாள் அம்முலு.
அவளை கீழே தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாக்கரில் அமர வைத்தவள், பூக்களை காண்பித்து சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்.
சாதத்தை வாயில் வாங்கிக் கொண்டு வாக்கரில் அமர்ந்தே எம்பி எம்பி பட்டாம் பூச்சியை பிடிக்கத் தன் பிஞ்சி விரல்களை விரிப்பதும் மடக்குவதுமாகயிருந்தாள் அம்முலு.
இந்த எழில் மிகு காட்சியை தன்னறையின் ஜன்னல் வழியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நாச்சியம்மை.
திடீரென ஒரு பட்டாம்பூச்சி அம்முலுவின் கையில் அகப்பட அதனை மகிழ்ச்சியுடன் தன் வாயில் போடப்போனாள் அந்த இரட்டைச் சுழிக்காரி.
நாச்சியம்மை படபடத்த இதயத்துடன் அதனைப் பார்த்திருக்க தன் மகளின் கையிலிருந்த பூச்சியைப் பார்த்த அதிதி, உடனே அவள் விரல்களை பிரித்து பூச்சியை விடுவித்தாள்.
பின், கோபத்துடன் தன் மகளின் முகத்தருகே குனிந்து மிரட்டவும் செய்தாள்.
"ஒரு வாய் பருப்பு சாதம் சாப்பிடனும்னா வாயவே திறக்க மாட்டேங்குற. பூச்சியை மட்டும் வாயில பிடிச்சிப் போடுறியா? அது சரி, வயித்துல இருக்கும் போதே சிக்கன் வேணும்னு அடம்பிடிச்சவளாச்சே நீ. இந்த பூச்சிய விட்டு வைப்பியா? ஏய் நத்தக்குட்டி! இனி இது மாதிரி ஏதாவது வாயில வச்சிப்பாரு. அம்மா அடிப் பின்னியெடுத்துருவேன். என்ன முறைக்கிற? கண்ணு முழிய நோண்டிருவேன்" என மிரட்டினாள்.