அங்கிருந்து மகளுடன் அகன்றவள் தம்பியையும் தங்கையும் கடந்திடும் போது இவள் தலை குனிந்திருந்தாலும், அவள் பார்வை தம்பியையும் தங்கையையும் தழுவ, அவர்கள் பார்வைகளும் இவளை தான் தழுவி விழியின் மீது
தாவியது. ஆனால் குழந்தையின் பார்வையோ தாயின் முகத்தை ஆராய்வதிலேயே ஆர்வமாக இருக்க,திரும்பி பார்க்குதா பாரு ,ரொம்ப தான் உதட்டை சுழித்து தோளில் இடித்துக்கொண்டவள், ', மதுரமொழிவிழியாள்' பேரு மாதிரி அவ கண்ணு பேசற மொழி அவ்வளவு அழகு. ஆனா அந்த கண்ணு நம்ம கிட்ட மட்டும் ஏண்ணே! அதிர்ந்த மொழி பேசுது.இத்தூணுண்டு இருந்துகிட்டு அதுக்கிருக்க ஏத்தத பாருடா. அவ அம்மா மடிய விட்டு இறங்குதா பாரு,என முறைப்பாக வார்த்தைகள் வெளி வந்தாலும் அதன் பின் நிறைந்த ஏக்கமும் தன் அக்காவின் மகளிடம் கொஞ்சி வம்பிழுத்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கமுமே பெருமளவில் எதிரொலிக்க, அந்த
ஏக்கமும் அவனுள்ளும் எதிரொலிக்க,பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன்,தானும் அதையே பிரதிபலித்தாலும், இதை எப்படி மாற்றுவது என்று அவர்களுக்கு புரியவில்லை.ஏனென்றால் நடந்துபோன நிகழ்வுகளின் கணம் அப்படி...அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு சுலபமாமென்ன, தன் தாய் அருகில் வருவதை கவனித்தவர்கள் சூழ்நிலையின் கனத்தை மாற்ற பேச்சை மாற்றி, தங்கையை வம்பிழுத்து , தாயை வம்பிழுத்து அவரது கவனத்தை திசை திருப்பியிருந்தான்.
வெளியே வந்தவள் மனம் கனத்தது தான் போனது அந்த கணம். உடன்பிறப்புகள் உடனிருந்தும் உள்ளத்தில் ஒருவரிடம் ஒருவர் ஒட்டி உறவாட ஆசை அவ்வளவிருந்தும், அந்த சூழலை கடக்க தன் மகளிடம் தன் கவனத்தை திருப்பினாள்.
அம்மாவும் மகளும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்தவாறு, காலை காற்று மென்மையாய் உடலை வருட பனி தாங்கிய பசுமை மனதை கொள்ளையடிக்க,அதில் இருவரும் சுண்டி விளையாடிவாரு தோட்டத்தை நோக்கி நடந்தனர்.
வழியில் இருந்த வேப்பமரத்தில் இளங்கொழுந்தை பறித்து ஆளுக்கு இரண்டு இலையை வாயில் வைக்க முகத்தை அஷ்டகோணலாக மாற்றினாலும் ,அதை சாப்பிடாமல் விடமாட்டாள் என அம்மாவை பற்றி அறிந்ததால் உதட்டை சுளித்து நெளித்தும்,அந்த வயதிற்குரிய பிடித்தமின்மை சேட்டைகள் அனைத்தையும் காட்ட, அதை இரசித்தவள், அவ்விளந் கொழுந்திடம் காட்டினாள் உடனே அது தன் சுட்டி தனத்தை தன்னிடம் காட்டி விடாதா.அதனால் "ம்ம்ம் மென்னுட்டீயா வாயா திற பார்க்கலாம்,இதை சீக்கிரம் சாப்பிடலைனா இன்னும் இரண்டு இத விட பெரிசா பறிச்சு திங்க சொல்வேன்", என பறிப்பதை போல் பாசாங்கு காட்ட, தன் வண்டு கண்களை உருட்டி ,தலையை அப்படியும் இப்படியும் சுழற்றி வேகமாக தன்னிடம் இருக்கும் பால் பற்களை கொண்டு பசுந்தளிரை , உள்ளே தள்ளிய இளந்தளிர் ஒவ்வாமையை ஓரமாகவும் தன் வாயை அகலமாக திறந்து நாக்கை சுழற்றி காண்பித்து கிளுக்கி சிரிக்க,என் சமத்து சக்கரை கட்டி என்று கொஞ்சினாள்.
அந்த சிந்தனையை மாற்றும் பொருட்டு தன் சின்ன வயது கதைகளை கூறிய வண்ணம் தன் வாழ்க்கையின் வண்ணமயமான நாட்களை குழந்தைக்கு சொல்வதை பழக்கமாக்கி வைத்திருந்தாள். தனக்கு சேர்த்து சொல்லி ஞாபகபடுத்தி ,தன்னை நெருக்கும் பிரச்சனைகளையும் கவலைகளையும் கலைந்தெடுத்தாள் அந்த பயணத்தை தன் இனிமையான கலங்களோடு அந்த நடை பாதையி தன் நடையை தொடர்ந்தனர்..
"என்ன தாயி அம்மாவும் மகளும் ,தோட்டத்துக்கா,இந்த தாயி ரோஜா பூவு ...இப்ப தான் எடுத்து கடைக்கு அனுப்பிட்டு வரேன்…"என்றவர் தன் முந்தியில் வீட்டுக்கு எடுத்து போக வைத்திருந்ததில் இரண்டு ரோஜா எடுத்து அவர்களிடம் கொடுத்தார் சுமதி.
அதை வாங்கியவளின் பார்வையென்னவோ சுமதியின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.அந்த சில்வண்டு சிண்டுல வச்சுட்டு நீயும் வச்சுக்கமா என்றவரை, "என்னக்கா இப்படி உழைச்சு என்னத்தை கண்டீங்க,,விடியறதுக்கு முன்னமே ,இன்னும் சரியா சொல்லனும்னா இரண்டு அல்லது மூனு மணிக்கு எழுந்திருக்கீங்க. விளக்க வச்சிக்கிட்டு பூவெடுக்கறீங்க...அது கூட பராவாயில்லை...கையெல்லாம் பாருங்க அங்கங்க முள்ளு கிழிச்சு வச்சிருக்கு.இதோடு போய் இன்னுமும் மீதி வேலை செய்ஞ்சு நீங்க எப்ப ஓய்வெடுக்கறது..இப்படியெல்லாம் உழைச்சீங்கனா உங்க உடம்பு என்னத்துகாகறது" அவரது மெலிந்த உடம்பும், குழி விழுந்த கண்களும்,பார்க்கவே கவலையாக இருந்தது. மிச்சமாயிருக்கற நீயாவது பசங்களுக்கு மிஞ்சனுமில்ல...உன்னவிட்டா அதுங்களுக்கு யாருயிருக்கா...கொஞ்சம் உடம்பையும் பார்த்துக்கோங்க என்றவளை தன்னை விட்டு அவளை ஆராய்ந்தார்.
அதுக்கு கென்னாடா கேடு வந்துட போவுது.எம்புள்ளைகள ஓரளவு கரையேத்திடனும்.அதுவரைக்கும் எனக்கு கல்லால அடிச்சாலும் சாவு வராது. அப்படியே வந்தாலும் உக்காந்து ஓய்வெடுக்கும் வரத்தை வாங்கி வரலை...அதை விடுற,எங்க பொழப்பு என்ன இன்னைக்கு நேத்தா ஆரம்பிச்சது...வருமைக்கு பிறந்துட்டு உழைக்கறது அஞ்சனா முடியுமா...உரலா பிறந்துட்டு உலக்கை இடிக்கு அஞ்சினா எப்படிடா, அதுவில்லாம பொறந்ததிலிருந்து உழைச்சே பழக்கபட்ட ரேகம்(தேகம்) சும்மாகிடனு மனசு சொன்னாலும் உழைச்சி பழகன உடம்பு கெடக்காது", என்றவரின் வார்த்தைகளில் எத்தனை எத்தனை எதார்த்தமான உண்மை.அதற்கான தீர்வு தான், கேள்விகுறியின் உள்ளேயே தன் பதிலை அடக்கி விடுகிறது.
"அடுத்த வேலை சோத்துக்கு அவ்வளவு ஆயசமா இருக்கற எங்கள மாதிரி இருக்கறவங்களே தைரியமா இருக்கறப்ப,உனக்கு என்னத்தாயி ,இராசாத்தி கணக்கா புள்ளை...மகராசன் கணக்கா, நீ தான் உசுருனு வாழற மகராசன் உம்புருஷன் இருக்காரு.ஏதோ போறாத காலம் ,இப்ப பிரிஞ்சு கிடக்கறீங்க. இப்படியேவா காலம் போயிடும். ரெண்டு பேரும் இந்த ஊரே உசந்து பார்க்கற அளவுக்கு சந்தோஷமா வாழ தான் பேறீங்க…"
"இப்படிய உடம்ப வருத்தி வத்தல் கணக்கா இருந்தீயனா...உம்புருசன் வரப்ப, உன்ன பார்க்கறப்ப மடிஞ்சி போய்ட மாட்டாற தாயி..உன்ன இப்படி பார்க்காவ தேசம் விட்டு விட்டு இராபகலா உழைக்கறாங்க...உன் .கவலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அந்த மகராசன் துடிப்ப நெனச்சாச்சும் உடம்பு கவனிச்சக்காத்தா…"
"நானும் தினமும் சொல்லனும் நினைப்பேன்..எனக்கிருக்க வேலைக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஆனா உன்ன பார்த்தா மனசு அடிச்சிக்குது ...உடம்ப பாரு தாயி...உனக்காக இல்லையினாலும் அந்த ரெண்டு உசுருக்காகவேனும்...நீரடிச்சு நீர் விலகனதா கிடையாது".எல்லாம் சரியாயிடும்.
"உனக்கு தெரியாததா,ஏதோ சொல்லனும் தோணுச்சி ...சொல்லிப்புட்டேன் .."
என்றவர் வரேன் தாயி, "இனிமே போய் தான் வீட்டு வேலை பார்க்கனும்", என்றவர் அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
தன்னை குனிந்து பார்த்தவள் ,இனிமே இப்படியிருந்து அடுத்தவர் கவனத்தை கவர கூடாது என நினைத்து கொண்டே
தாயும் மகளுமாக தோட்டத்தை வந்தடைந்தனர்.
"ம்மா...தூக்கு...தூக்கு", என கைகயை தூக்கி அவள் சேலையை இழுக்க...மகளின் சேட்டையில் வாரியணைத்து செல்ல கடியொன்று கன்னத்தில் கடித்து …"வாலு... வாலு...எத்தனை தடவை சொல்றது…..அம்மா சேலையை இழுக்க கூடாதுனு…" என்றவள் மகளை தூக்கியவாரே அந்த வரப்பில் நடந்தாள்..
"ம்மா...ம்மா…"என குழந்தை தாயின் முகத்தை திருப்ப …
"இப்ப என்னடா", எனறாள்….
தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஓரிடத்தில் காண்பிக்க அங்கு வெண்பஞ்சு மேகமாய் பறந்து கொண்டிருந்தது…
ஓ தாத்தாவா(தாத்தா என்றால் மிக மிக மிருதுவான ஒரு வகை தாவரத்தில் தனியே சிதறி வெண்மையாக இருக்கும்… இதனை குழந்தைகள் கையில் பிடித்து ஊதி விளையாடி குதுகளிப்பர்).அதனை கண்டே குழந்தை குதுகளிக்க அங்கே சென்று ஒன்று இரண்டை பிடித்தே விளையாடிவள்….நேரமாவதை உணர்ந்து நாளைக்கு வந்து விளையாடலாம் என சமாதனம் படுத்தி அழைத்து செல்வதற்குள் ஒருவழியாகி விட்டாள்.இப்படி தான் அவளை குழந்தையாய் பார்த்தவன்..அவள் அடத்தையெல்லாம் அழகாக தாங்குபவன்...அவள் முகசுருங்களை பொருக்காதவன்...அவன் பிரிந்த நாளாய் பெரியவாளாகி போனாள்..பொருப்பாய் மாற கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் .இன்றும் வழக்கம் போல் அவன் நினைவலைகள் நெஞ்சில் அலை அலையாய் பொங்க...ஆரம்பத்தில் கண்ணீர் கோடாய் வரும் நினைவுகள்... இப்பொழுதோ பொக்கிஷமாய் தாங்க ...மனம் முழுதும் ஒருவித பரவசம் பரவியது.மெல்லிய மென்னகை ஒன்று சட்டென அவள் இதழில் இடம் பிடிக்க தன் மகளின் மென் கன்னத்தில் பரிசு தடமாய் அது இறங்கியது. அமைதி, ஆழ்ந்த அமைதியிலும் ஒரு குழந்தைத்தனம், அழககுக்கு அழகு சேர்க்கும் அவள் முகத்தில் இப்பொழுதெல்லாம் அதில் ஒரு அழுத்தம்,உறுதி,தெளிவு அவளது சோபையான முகத்திற்கு அதுவும் தனியான அழகை கொடுத்திருந்தது.
தோட்டத்தில் காய்கறி செடிகளின் நடுவில் நின்றிருந்த நடேசனை பார்த்த குழந்தை,"ஹை! தாத்தா தாத்தா", என இடுப்பிலிருந்தப்படியே குதிக்க,குழந்தையின் குரல் கேட்ட பெரியவர் ,அச்சோ,என்ன பெத்த ஆத்தா ,இந்த தாத்தன பார்த்ததும் எம்பூட்டு சந்தோஷம், உம்ம அம்மாவே சொரட்டுக்கோலுக்கு புடவ சுத்தனது போல புடவைய சுத்திக்கிட்டு அலையுது, அது இடுப்புல உட்கார்ந்து குதிச்சினா உடைச்சிக்கினு விழுந்துடும்", உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தின் வலியையும் ஒருங்கே உதித்தார் அந்த அன்புள்ளம் கொண்ட பாசக்காரர்.
அவரிடமே எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொண்டு ….கையோடு கொண்டு வந்திருந்த பையில் இருவரும் காய்களை பறிக்க அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருந்து குழந்தையினத்திற்கே அவமானத்தை தேடி தந்துவிடுவோமா என்ன?
தன் பிஞ்சு கரங்களை கொண்டு கத்திரிக்காயை பறிக்க,எங்கே அது செடியை பிரிய மனம் வரவில்லையா,இல்லை இவளுடன் விளையாட ஆசைகொண்டதோ,செடியை விட்டு வருவேனா என அடம்பிடித்தது. அதன் மல்லுகட்டிவிட்டு முடியாமல், மிரட்ட ஆரம்பித்து அதுவும் முடிந்தால் தானே..
தன் பிஞ்சு கரங்களை ஊதியவாரே "ம்மா,ம்மா" என கத்த…கண்ணீர் தத்தளிக்க நின் மகளை கண்டவள் என்னவோ என பயந்து...
"என்னடா ஏண்டாம்மா அழற, கையில என்ன என கைய விரித்து பார்க்க ,மென்னமையான அந்த கரங்கள் அங்காங்கே திட்டுதிட்டாக சிவந்திருந்தது.
அதை பார்த்தவள், 'அச்சோ காய் பறிச்சதால கை வலிச்சிடுச்சா…" என்று மென்கரங்களில்,ஃபாபூ,ஃப்பூ என ஊத, இங்க ,இங்க என கையை விரித்து காட்டிய அழகில் நாம் மனமும் சொக்கி போகாமல் இருந்தால் அதிசயம். விட்டாள்.
"ம்ம்ம் …!"என்ற குழந்தை கத்திரி செடியையே பார்த்திருக்க…"என்னடா,நீ பறிச்ச காய் எங்க?" என வினவினாள்.
உதட்டை பிதுக்கி,இல்லையென கையை விரித்தது. அந்த பிதுக்கலில் அழகில் நம்ம கை கட்டி வைப்பது என்னவோ அவ்வளவு கஷ்டமாக இருந்தது.பின்ன அதை கிள்ளி வைக்கும் ஆசை ,கண்களில் மிதக்க,ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் அடக்க முடியாமல் இழைய,அதை அடக்கியது என்னவோ ,கட்டை மீசையும் அவர் வேலை செய்ய வச்சிருந்த கத்தியும் சொன்னா நம்பனும்.ஆனாலும் அந்த பலாசுலையை ஒருநாளில்ல ஒருநாள் பிச்சு பார்த்துடனும்.அச்சோ போட்டு கொடுத்திடாதீங்க. நாம இங்க வாண்டு மேல கண்ண வச்சா சுத்தி நடக்கறதே தெரிய மாட்டுது.வாங்க அந்த வண்டின் ரீங்காரத்தை விட்டுடப்போறோம்.
தன் கரங்களோடு அதன் கரங்களை சேர்த்து பிடித்தாள்,காயை எவ்வாறு பறிக்க வேண்டும் என அந்த இலாவகத்தை சொல்லி காயை பறிக்க,அந்த இலாவகம் புரிந்ததோ,இல்லையோ அந்த அழகு சிரிப்பில் எதையோ கற்றுகொண்ட உணர்வும், சாதித்துவிட்ட பெருமையும் அந்த கண்களில் மின்னியது. அதனை இரசித்தவள், என் செல்ல பட்டு என நெட்டு சுற்றியவள்,குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து முத்தம் பதித்தாள்.
கைகளில் காயை எடுத்துக்கொண்டவள் ,நடசேனிடம் வரேன் தாத்தா என விடைப்பெற்று
வழியில் தென்னைமரத்தில் ஓலைகளில் இரண்டு ஈர்க்கை பிய்த்து தனது மகளுக்கு அழகானதொரு கைகடிகாரத்தை செய்தவள் அதனை அந்த மென்பஞ்சு கரங்களில் போட்டு அவளை குதுகளிக்க செய்து பின்பே வீடு திரும்பினர் தாயும் மகளும்.அவன் இல்லாத தனிமையை அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்வானோ ...அதை அவள் மகளுக்கு செய்து தன்னில் தன்னவனையும்...தன் மகளில் அவனையும் கண்டாள். அவளோடு சேர்த்து தன் மகளையும் உணர வைக்க முயற்சித்தாள், அவனது இருப்பை தனது ஒவ்வொரு செயல்களிலும் .
அங்கு வேலைக்கு வந்தவர்கள் இவளையும் குழந்தையும் பார்த்து வாஞ்சையாக சிரித்து," நல்லாயிருக்கியா கண்ணு….உம்மனசுக்கு ஒரு குறையும் வராது..உன் சோதனை காலம் எல்லாம் முடிஞ்சு ...நீயும் உன்ன கட்டன மவராசனும் சேர்ந்து இந்த ஊரே மெச்ச வாயில விரலை வைக்கற மாதிரி வாழறத பார்க்க போறோம்.இன்னைக்கு உன்ன பேசற வாயெல்லாம் ,நாளைக்கு வாயடைச்சி போய் பார்க்க தான் போகுது,என்று மனதார வாழ்த்தி தாயிக்கும் மகளுக்கும் சேர்த்தே திருஷ்டி சுத்தியவர்,எம்பூட்டு கண்ணு உங்க மேல" என மீண்டும் ஒரு முறை திருஷ்டி எடுத்தார்.
பார்க்கும்பொழுதெல்லாம் இவர்கள் வாழ்த்த தவறியதில்லை...என்னவொன்று காலம் தான் நீண்டுகொண்டே சென்றது. இவர்கள் வாக்கு இப்பொழுதாவது பலிக்குமா...என ஏக்கம் நெஞ்சம் நிறைய பெருமூச்சும் நிறைவேறிவிடாதா என்ற ஏக்கமும் தவிற என்று நினைப்பதை தவிற அவளுக்கு வேறு வழியில்லை.
ஆனால் அதன் தாக்கம்,அதனால் உண்டான எண்ணங்கள் கோடைமழையாக நெஞ்சை நிறைக்க, இறைவனிடம் ஒரு மன்றாடல் வேண்டுதலை வைத்துவிட்டு தன் மகளுடன் வீடு திரும்பினாள்.அது தவிற அவளுக்கு வேறு வழியுமில்லை.
வீட்டினுள் நுழைந்தவள் தம்பி மற்றும் தங்கை உணவருந்துவதை கண்டவள் ,அப்பா சாப்படலையே,வெளியே கிளம்பிட்டாரா,அங்கேயே தனது பார்வையை நிலைக்க விட்டவள்,பார்வையை உணர்ந்தார்களோ என்னவோ, தன் அரட்டை கச்சேரிக்கு முற்று புள்ளி வைத்தவர்கள்,தனது உணவினை அதோடு முடித்து கொண்டு எழுந்துக்கொள்ள தயாராக, அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் தனக்குள் கேள்வியை எழுந்த கேள்வியை, தன்னுள்ளேயே அழுத்திக்கொண்டு ,வழக்கம் போல் அந்த கேள்விக்கான பதிலே தேடாமல் ,அவ்விடம் விட்டு அகன்றாள்.
நம் மனதை கேள்வியை தான் கேட்காமல் தவிர்க்க முடியாது, ஆனால் விடை கிடைக்காது என்று தெரிந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமிருந்தாமலும் ,பதில் கிடைக்க வழியில்லையென்றால் அதை அடக்கவும் கற்றிருப்போம்...அவளது நிலையும் அதுவே .அவளது கேள்விகளெல்லாம் அவள் உள்ளத்தினுள்ளே பதிலில்லாமல் ஆவியாக பெருமூச்சொன்று தான் விட முடிந்தது…
காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.
அந்நியரின் வீட்டிற்குள் அத்துமீறி அடைக்கலம் தேடி நுழையும் உணர்வு நெஞ்சை அடைத்தது, பிறந்தது முதல் இந்த வீட்டின் தனது ஒவ்வொரு நிகழ்வுகளையும் அசைபோட்டவள் கண் முன்னே காட்சிகளாய் ஓட,இப்பொழுதும் அடிப்பட்ட நாட்கள்,அதற்காக அம்மா கூறிய சமாதனங்கள்,அதனை காட்டி தம்பி தங்கைகளிடம் கூட நைசாக தனது காரியங்களை சாதித்துக்கொண்டது, விழாக்களின் செய்யும் அட்டகாச கலவரங்கள்,,என சொற்களை வரையறுத்து வடிக்க முடியாத பொக்கிஷ தருணங்கள் ஒவ்வொரு இடத்திலும் அவளுக்கு ஒரு கதையிருக்கும். பிறந்த வீட்டில் வீட்டின் மீதான பெண்களுக்கு பிணைப்பையும் பாசத்தையும் சொல்லிட முடியுமா....ஆனால் இன்று இவையனைத்தும் ஒரு திருமணத்தில் மாறிவிடுமா, இல்லை எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா, இல்லை நடந்தவிட்ட நிகழ்வுகளாலா, என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறி,என் மனதின் தோன்றும் இந்த நினைவுகள் மாறி ,இந்த வீட்டு பெண்ணாக மாறி இங்கு பழைய சந்தோஷத்துடன் இந்த வீட்டில் எல்லோருடனும் பழக முடியுமா, ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வண்டாய் குடைய அந்நிய தன்மையுடன் இன்று அந்த வீட்டில், கடப்பாறையை உள்ளே வைத்து விழுங்கும் உணர்வு, அதை அப்படியே விழுங்கினாள்.
காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.
குழந்தையை குளிக்க வைத்து அவளுக்கு உணவு கொடுத்து, இவ்வளவு நேரம் வயல் ,வரப்பு என அலைந்தது,உண்டதது குழந்தையே தாலாட்ட அது சுகமாக தூக்கத்தை தழுவியது.
குழந்தையை உறங்க வைத்தவள், காலையில் சுமதி சொன்னது மனதில் ஓட, தன்னை சார்ந்தவர்களுக்காகவாவது உணவை விழுங்கியாவது வைக்க வேண்டும் என முடிவெடுத்து அதை செவ்வனே முடித்தவள்,
அன்றாட வேலைகள் அடுக்கு அடுக்காக அடுத்தடுத்து விழுங்க காத்திருக்ங அதனை பார்க்க சென்றாள்.
இதோ அன்பூக்களே அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்...படிச்சுட்டு மறக்காம எப்படியிருக்க சொல்லிட்டு போங்க...போன பதிவு கருத்து தெரிவிச்சா என் அன்பு மக்கா நன்றி நன்றி ❣️❣️❣️🌹🌹🌹
தாவியது. ஆனால் குழந்தையின் பார்வையோ தாயின் முகத்தை ஆராய்வதிலேயே ஆர்வமாக இருக்க,திரும்பி பார்க்குதா பாரு ,ரொம்ப தான் உதட்டை சுழித்து தோளில் இடித்துக்கொண்டவள், ', மதுரமொழிவிழியாள்' பேரு மாதிரி அவ கண்ணு பேசற மொழி அவ்வளவு அழகு. ஆனா அந்த கண்ணு நம்ம கிட்ட மட்டும் ஏண்ணே! அதிர்ந்த மொழி பேசுது.இத்தூணுண்டு இருந்துகிட்டு அதுக்கிருக்க ஏத்தத பாருடா. அவ அம்மா மடிய விட்டு இறங்குதா பாரு,என முறைப்பாக வார்த்தைகள் வெளி வந்தாலும் அதன் பின் நிறைந்த ஏக்கமும் தன் அக்காவின் மகளிடம் கொஞ்சி வம்பிழுத்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கமுமே பெருமளவில் எதிரொலிக்க, அந்த
ஏக்கமும் அவனுள்ளும் எதிரொலிக்க,பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன்,தானும் அதையே பிரதிபலித்தாலும், இதை எப்படி மாற்றுவது என்று அவர்களுக்கு புரியவில்லை.ஏனென்றால் நடந்துபோன நிகழ்வுகளின் கணம் அப்படி...அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு சுலபமாமென்ன, தன் தாய் அருகில் வருவதை கவனித்தவர்கள் சூழ்நிலையின் கனத்தை மாற்ற பேச்சை மாற்றி, தங்கையை வம்பிழுத்து , தாயை வம்பிழுத்து அவரது கவனத்தை திசை திருப்பியிருந்தான்.
வெளியே வந்தவள் மனம் கனத்தது தான் போனது அந்த கணம். உடன்பிறப்புகள் உடனிருந்தும் உள்ளத்தில் ஒருவரிடம் ஒருவர் ஒட்டி உறவாட ஆசை அவ்வளவிருந்தும், அந்த சூழலை கடக்க தன் மகளிடம் தன் கவனத்தை திருப்பினாள்.
அம்மாவும் மகளும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்தவாறு, காலை காற்று மென்மையாய் உடலை வருட பனி தாங்கிய பசுமை மனதை கொள்ளையடிக்க,அதில் இருவரும் சுண்டி விளையாடிவாரு தோட்டத்தை நோக்கி நடந்தனர்.
வழியில் இருந்த வேப்பமரத்தில் இளங்கொழுந்தை பறித்து ஆளுக்கு இரண்டு இலையை வாயில் வைக்க முகத்தை அஷ்டகோணலாக மாற்றினாலும் ,அதை சாப்பிடாமல் விடமாட்டாள் என அம்மாவை பற்றி அறிந்ததால் உதட்டை சுளித்து நெளித்தும்,அந்த வயதிற்குரிய பிடித்தமின்மை சேட்டைகள் அனைத்தையும் காட்ட, அதை இரசித்தவள், அவ்விளந் கொழுந்திடம் காட்டினாள் உடனே அது தன் சுட்டி தனத்தை தன்னிடம் காட்டி விடாதா.அதனால் "ம்ம்ம் மென்னுட்டீயா வாயா திற பார்க்கலாம்,இதை சீக்கிரம் சாப்பிடலைனா இன்னும் இரண்டு இத விட பெரிசா பறிச்சு திங்க சொல்வேன்", என பறிப்பதை போல் பாசாங்கு காட்ட, தன் வண்டு கண்களை உருட்டி ,தலையை அப்படியும் இப்படியும் சுழற்றி வேகமாக தன்னிடம் இருக்கும் பால் பற்களை கொண்டு பசுந்தளிரை , உள்ளே தள்ளிய இளந்தளிர் ஒவ்வாமையை ஓரமாகவும் தன் வாயை அகலமாக திறந்து நாக்கை சுழற்றி காண்பித்து கிளுக்கி சிரிக்க,என் சமத்து சக்கரை கட்டி என்று கொஞ்சினாள்.
அந்த சிந்தனையை மாற்றும் பொருட்டு தன் சின்ன வயது கதைகளை கூறிய வண்ணம் தன் வாழ்க்கையின் வண்ணமயமான நாட்களை குழந்தைக்கு சொல்வதை பழக்கமாக்கி வைத்திருந்தாள். தனக்கு சேர்த்து சொல்லி ஞாபகபடுத்தி ,தன்னை நெருக்கும் பிரச்சனைகளையும் கவலைகளையும் கலைந்தெடுத்தாள் அந்த பயணத்தை தன் இனிமையான கலங்களோடு அந்த நடை பாதையி தன் நடையை தொடர்ந்தனர்..
"என்ன தாயி அம்மாவும் மகளும் ,தோட்டத்துக்கா,இந்த தாயி ரோஜா பூவு ...இப்ப தான் எடுத்து கடைக்கு அனுப்பிட்டு வரேன்…"என்றவர் தன் முந்தியில் வீட்டுக்கு எடுத்து போக வைத்திருந்ததில் இரண்டு ரோஜா எடுத்து அவர்களிடம் கொடுத்தார் சுமதி.
அதை வாங்கியவளின் பார்வையென்னவோ சுமதியின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.அந்த சில்வண்டு சிண்டுல வச்சுட்டு நீயும் வச்சுக்கமா என்றவரை, "என்னக்கா இப்படி உழைச்சு என்னத்தை கண்டீங்க,,விடியறதுக்கு முன்னமே ,இன்னும் சரியா சொல்லனும்னா இரண்டு அல்லது மூனு மணிக்கு எழுந்திருக்கீங்க. விளக்க வச்சிக்கிட்டு பூவெடுக்கறீங்க...அது கூட பராவாயில்லை...கையெல்லாம் பாருங்க அங்கங்க முள்ளு கிழிச்சு வச்சிருக்கு.இதோடு போய் இன்னுமும் மீதி வேலை செய்ஞ்சு நீங்க எப்ப ஓய்வெடுக்கறது..இப்படியெல்லாம் உழைச்சீங்கனா உங்க உடம்பு என்னத்துகாகறது" அவரது மெலிந்த உடம்பும், குழி விழுந்த கண்களும்,பார்க்கவே கவலையாக இருந்தது. மிச்சமாயிருக்கற நீயாவது பசங்களுக்கு மிஞ்சனுமில்ல...உன்னவிட்டா அதுங்களுக்கு யாருயிருக்கா...கொஞ்சம் உடம்பையும் பார்த்துக்கோங்க என்றவளை தன்னை விட்டு அவளை ஆராய்ந்தார்.
அதுக்கு கென்னாடா கேடு வந்துட போவுது.எம்புள்ளைகள ஓரளவு கரையேத்திடனும்.அதுவரைக்கும் எனக்கு கல்லால அடிச்சாலும் சாவு வராது. அப்படியே வந்தாலும் உக்காந்து ஓய்வெடுக்கும் வரத்தை வாங்கி வரலை...அதை விடுற,எங்க பொழப்பு என்ன இன்னைக்கு நேத்தா ஆரம்பிச்சது...வருமைக்கு பிறந்துட்டு உழைக்கறது அஞ்சனா முடியுமா...உரலா பிறந்துட்டு உலக்கை இடிக்கு அஞ்சினா எப்படிடா, அதுவில்லாம பொறந்ததிலிருந்து உழைச்சே பழக்கபட்ட ரேகம்(தேகம்) சும்மாகிடனு மனசு சொன்னாலும் உழைச்சி பழகன உடம்பு கெடக்காது", என்றவரின் வார்த்தைகளில் எத்தனை எத்தனை எதார்த்தமான உண்மை.அதற்கான தீர்வு தான், கேள்விகுறியின் உள்ளேயே தன் பதிலை அடக்கி விடுகிறது.
"அடுத்த வேலை சோத்துக்கு அவ்வளவு ஆயசமா இருக்கற எங்கள மாதிரி இருக்கறவங்களே தைரியமா இருக்கறப்ப,உனக்கு என்னத்தாயி ,இராசாத்தி கணக்கா புள்ளை...மகராசன் கணக்கா, நீ தான் உசுருனு வாழற மகராசன் உம்புருஷன் இருக்காரு.ஏதோ போறாத காலம் ,இப்ப பிரிஞ்சு கிடக்கறீங்க. இப்படியேவா காலம் போயிடும். ரெண்டு பேரும் இந்த ஊரே உசந்து பார்க்கற அளவுக்கு சந்தோஷமா வாழ தான் பேறீங்க…"
"இப்படிய உடம்ப வருத்தி வத்தல் கணக்கா இருந்தீயனா...உம்புருசன் வரப்ப, உன்ன பார்க்கறப்ப மடிஞ்சி போய்ட மாட்டாற தாயி..உன்ன இப்படி பார்க்காவ தேசம் விட்டு விட்டு இராபகலா உழைக்கறாங்க...உன் .கவலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அந்த மகராசன் துடிப்ப நெனச்சாச்சும் உடம்பு கவனிச்சக்காத்தா…"
"நானும் தினமும் சொல்லனும் நினைப்பேன்..எனக்கிருக்க வேலைக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஆனா உன்ன பார்த்தா மனசு அடிச்சிக்குது ...உடம்ப பாரு தாயி...உனக்காக இல்லையினாலும் அந்த ரெண்டு உசுருக்காகவேனும்...நீரடிச்சு நீர் விலகனதா கிடையாது".எல்லாம் சரியாயிடும்.
"உனக்கு தெரியாததா,ஏதோ சொல்லனும் தோணுச்சி ...சொல்லிப்புட்டேன் .."
என்றவர் வரேன் தாயி, "இனிமே போய் தான் வீட்டு வேலை பார்க்கனும்", என்றவர் அவர்களிடமிருந்து விடைபெற்றார்.
தன்னை குனிந்து பார்த்தவள் ,இனிமே இப்படியிருந்து அடுத்தவர் கவனத்தை கவர கூடாது என நினைத்து கொண்டே
தாயும் மகளுமாக தோட்டத்தை வந்தடைந்தனர்.
"ம்மா...தூக்கு...தூக்கு", என கைகயை தூக்கி அவள் சேலையை இழுக்க...மகளின் சேட்டையில் வாரியணைத்து செல்ல கடியொன்று கன்னத்தில் கடித்து …"வாலு... வாலு...எத்தனை தடவை சொல்றது…..அம்மா சேலையை இழுக்க கூடாதுனு…" என்றவள் மகளை தூக்கியவாரே அந்த வரப்பில் நடந்தாள்..
"ம்மா...ம்மா…"என குழந்தை தாயின் முகத்தை திருப்ப …
"இப்ப என்னடா", எனறாள்….
தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஓரிடத்தில் காண்பிக்க அங்கு வெண்பஞ்சு மேகமாய் பறந்து கொண்டிருந்தது…
ஓ தாத்தாவா(தாத்தா என்றால் மிக மிக மிருதுவான ஒரு வகை தாவரத்தில் தனியே சிதறி வெண்மையாக இருக்கும்… இதனை குழந்தைகள் கையில் பிடித்து ஊதி விளையாடி குதுகளிப்பர்).அதனை கண்டே குழந்தை குதுகளிக்க அங்கே சென்று ஒன்று இரண்டை பிடித்தே விளையாடிவள்….நேரமாவதை உணர்ந்து நாளைக்கு வந்து விளையாடலாம் என சமாதனம் படுத்தி அழைத்து செல்வதற்குள் ஒருவழியாகி விட்டாள்.இப்படி தான் அவளை குழந்தையாய் பார்த்தவன்..அவள் அடத்தையெல்லாம் அழகாக தாங்குபவன்...அவள் முகசுருங்களை பொருக்காதவன்...அவன் பிரிந்த நாளாய் பெரியவாளாகி போனாள்..பொருப்பாய் மாற கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் .இன்றும் வழக்கம் போல் அவன் நினைவலைகள் நெஞ்சில் அலை அலையாய் பொங்க...ஆரம்பத்தில் கண்ணீர் கோடாய் வரும் நினைவுகள்... இப்பொழுதோ பொக்கிஷமாய் தாங்க ...மனம் முழுதும் ஒருவித பரவசம் பரவியது.மெல்லிய மென்னகை ஒன்று சட்டென அவள் இதழில் இடம் பிடிக்க தன் மகளின் மென் கன்னத்தில் பரிசு தடமாய் அது இறங்கியது. அமைதி, ஆழ்ந்த அமைதியிலும் ஒரு குழந்தைத்தனம், அழககுக்கு அழகு சேர்க்கும் அவள் முகத்தில் இப்பொழுதெல்லாம் அதில் ஒரு அழுத்தம்,உறுதி,தெளிவு அவளது சோபையான முகத்திற்கு அதுவும் தனியான அழகை கொடுத்திருந்தது.
தோட்டத்தில் காய்கறி செடிகளின் நடுவில் நின்றிருந்த நடேசனை பார்த்த குழந்தை,"ஹை! தாத்தா தாத்தா", என இடுப்பிலிருந்தப்படியே குதிக்க,குழந்தையின் குரல் கேட்ட பெரியவர் ,அச்சோ,என்ன பெத்த ஆத்தா ,இந்த தாத்தன பார்த்ததும் எம்பூட்டு சந்தோஷம், உம்ம அம்மாவே சொரட்டுக்கோலுக்கு புடவ சுத்தனது போல புடவைய சுத்திக்கிட்டு அலையுது, அது இடுப்புல உட்கார்ந்து குதிச்சினா உடைச்சிக்கினு விழுந்துடும்", உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தின் வலியையும் ஒருங்கே உதித்தார் அந்த அன்புள்ளம் கொண்ட பாசக்காரர்.
அவரிடமே எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொண்டு ….கையோடு கொண்டு வந்திருந்த பையில் இருவரும் காய்களை பறிக்க அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருந்து குழந்தையினத்திற்கே அவமானத்தை தேடி தந்துவிடுவோமா என்ன?
தன் பிஞ்சு கரங்களை கொண்டு கத்திரிக்காயை பறிக்க,எங்கே அது செடியை பிரிய மனம் வரவில்லையா,இல்லை இவளுடன் விளையாட ஆசைகொண்டதோ,செடியை விட்டு வருவேனா என அடம்பிடித்தது. அதன் மல்லுகட்டிவிட்டு முடியாமல், மிரட்ட ஆரம்பித்து அதுவும் முடிந்தால் தானே..
தன் பிஞ்சு கரங்களை ஊதியவாரே "ம்மா,ம்மா" என கத்த…கண்ணீர் தத்தளிக்க நின் மகளை கண்டவள் என்னவோ என பயந்து...
"என்னடா ஏண்டாம்மா அழற, கையில என்ன என கைய விரித்து பார்க்க ,மென்னமையான அந்த கரங்கள் அங்காங்கே திட்டுதிட்டாக சிவந்திருந்தது.
அதை பார்த்தவள், 'அச்சோ காய் பறிச்சதால கை வலிச்சிடுச்சா…" என்று மென்கரங்களில்,ஃபாபூ,ஃப்பூ என ஊத, இங்க ,இங்க என கையை விரித்து காட்டிய அழகில் நாம் மனமும் சொக்கி போகாமல் இருந்தால் அதிசயம். விட்டாள்.
"ம்ம்ம் …!"என்ற குழந்தை கத்திரி செடியையே பார்த்திருக்க…"என்னடா,நீ பறிச்ச காய் எங்க?" என வினவினாள்.
உதட்டை பிதுக்கி,இல்லையென கையை விரித்தது. அந்த பிதுக்கலில் அழகில் நம்ம கை கட்டி வைப்பது என்னவோ அவ்வளவு கஷ்டமாக இருந்தது.பின்ன அதை கிள்ளி வைக்கும் ஆசை ,கண்களில் மிதக்க,ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் அடக்க முடியாமல் இழைய,அதை அடக்கியது என்னவோ ,கட்டை மீசையும் அவர் வேலை செய்ய வச்சிருந்த கத்தியும் சொன்னா நம்பனும்.ஆனாலும் அந்த பலாசுலையை ஒருநாளில்ல ஒருநாள் பிச்சு பார்த்துடனும்.அச்சோ போட்டு கொடுத்திடாதீங்க. நாம இங்க வாண்டு மேல கண்ண வச்சா சுத்தி நடக்கறதே தெரிய மாட்டுது.வாங்க அந்த வண்டின் ரீங்காரத்தை விட்டுடப்போறோம்.
தன் கரங்களோடு அதன் கரங்களை சேர்த்து பிடித்தாள்,காயை எவ்வாறு பறிக்க வேண்டும் என அந்த இலாவகத்தை சொல்லி காயை பறிக்க,அந்த இலாவகம் புரிந்ததோ,இல்லையோ அந்த அழகு சிரிப்பில் எதையோ கற்றுகொண்ட உணர்வும், சாதித்துவிட்ட பெருமையும் அந்த கண்களில் மின்னியது. அதனை இரசித்தவள், என் செல்ல பட்டு என நெட்டு சுற்றியவள்,குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து முத்தம் பதித்தாள்.
கைகளில் காயை எடுத்துக்கொண்டவள் ,நடசேனிடம் வரேன் தாத்தா என விடைப்பெற்று
வழியில் தென்னைமரத்தில் ஓலைகளில் இரண்டு ஈர்க்கை பிய்த்து தனது மகளுக்கு அழகானதொரு கைகடிகாரத்தை செய்தவள் அதனை அந்த மென்பஞ்சு கரங்களில் போட்டு அவளை குதுகளிக்க செய்து பின்பே வீடு திரும்பினர் தாயும் மகளும்.அவன் இல்லாத தனிமையை அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்வானோ ...அதை அவள் மகளுக்கு செய்து தன்னில் தன்னவனையும்...தன் மகளில் அவனையும் கண்டாள். அவளோடு சேர்த்து தன் மகளையும் உணர வைக்க முயற்சித்தாள், அவனது இருப்பை தனது ஒவ்வொரு செயல்களிலும் .
அங்கு வேலைக்கு வந்தவர்கள் இவளையும் குழந்தையும் பார்த்து வாஞ்சையாக சிரித்து," நல்லாயிருக்கியா கண்ணு….உம்மனசுக்கு ஒரு குறையும் வராது..உன் சோதனை காலம் எல்லாம் முடிஞ்சு ...நீயும் உன்ன கட்டன மவராசனும் சேர்ந்து இந்த ஊரே மெச்ச வாயில விரலை வைக்கற மாதிரி வாழறத பார்க்க போறோம்.இன்னைக்கு உன்ன பேசற வாயெல்லாம் ,நாளைக்கு வாயடைச்சி போய் பார்க்க தான் போகுது,என்று மனதார வாழ்த்தி தாயிக்கும் மகளுக்கும் சேர்த்தே திருஷ்டி சுத்தியவர்,எம்பூட்டு கண்ணு உங்க மேல" என மீண்டும் ஒரு முறை திருஷ்டி எடுத்தார்.
பார்க்கும்பொழுதெல்லாம் இவர்கள் வாழ்த்த தவறியதில்லை...என்னவொன்று காலம் தான் நீண்டுகொண்டே சென்றது. இவர்கள் வாக்கு இப்பொழுதாவது பலிக்குமா...என ஏக்கம் நெஞ்சம் நிறைய பெருமூச்சும் நிறைவேறிவிடாதா என்ற ஏக்கமும் தவிற என்று நினைப்பதை தவிற அவளுக்கு வேறு வழியில்லை.
ஆனால் அதன் தாக்கம்,அதனால் உண்டான எண்ணங்கள் கோடைமழையாக நெஞ்சை நிறைக்க, இறைவனிடம் ஒரு மன்றாடல் வேண்டுதலை வைத்துவிட்டு தன் மகளுடன் வீடு திரும்பினாள்.அது தவிற அவளுக்கு வேறு வழியுமில்லை.
வீட்டினுள் நுழைந்தவள் தம்பி மற்றும் தங்கை உணவருந்துவதை கண்டவள் ,அப்பா சாப்படலையே,வெளியே கிளம்பிட்டாரா,அங்கேயே தனது பார்வையை நிலைக்க விட்டவள்,பார்வையை உணர்ந்தார்களோ என்னவோ, தன் அரட்டை கச்சேரிக்கு முற்று புள்ளி வைத்தவர்கள்,தனது உணவினை அதோடு முடித்து கொண்டு எழுந்துக்கொள்ள தயாராக, அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் தனக்குள் கேள்வியை எழுந்த கேள்வியை, தன்னுள்ளேயே அழுத்திக்கொண்டு ,வழக்கம் போல் அந்த கேள்விக்கான பதிலே தேடாமல் ,அவ்விடம் விட்டு அகன்றாள்.
நம் மனதை கேள்வியை தான் கேட்காமல் தவிர்க்க முடியாது, ஆனால் விடை கிடைக்காது என்று தெரிந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமிருந்தாமலும் ,பதில் கிடைக்க வழியில்லையென்றால் அதை அடக்கவும் கற்றிருப்போம்...அவளது நிலையும் அதுவே .அவளது கேள்விகளெல்லாம் அவள் உள்ளத்தினுள்ளே பதிலில்லாமல் ஆவியாக பெருமூச்சொன்று தான் விட முடிந்தது…
காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.
அந்நியரின் வீட்டிற்குள் அத்துமீறி அடைக்கலம் தேடி நுழையும் உணர்வு நெஞ்சை அடைத்தது, பிறந்தது முதல் இந்த வீட்டின் தனது ஒவ்வொரு நிகழ்வுகளையும் அசைபோட்டவள் கண் முன்னே காட்சிகளாய் ஓட,இப்பொழுதும் அடிப்பட்ட நாட்கள்,அதற்காக அம்மா கூறிய சமாதனங்கள்,அதனை காட்டி தம்பி தங்கைகளிடம் கூட நைசாக தனது காரியங்களை சாதித்துக்கொண்டது, விழாக்களின் செய்யும் அட்டகாச கலவரங்கள்,,என சொற்களை வரையறுத்து வடிக்க முடியாத பொக்கிஷ தருணங்கள் ஒவ்வொரு இடத்திலும் அவளுக்கு ஒரு கதையிருக்கும். பிறந்த வீட்டில் வீட்டின் மீதான பெண்களுக்கு பிணைப்பையும் பாசத்தையும் சொல்லிட முடியுமா....ஆனால் இன்று இவையனைத்தும் ஒரு திருமணத்தில் மாறிவிடுமா, இல்லை எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா, இல்லை நடந்தவிட்ட நிகழ்வுகளாலா, என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறி,என் மனதின் தோன்றும் இந்த நினைவுகள் மாறி ,இந்த வீட்டு பெண்ணாக மாறி இங்கு பழைய சந்தோஷத்துடன் இந்த வீட்டில் எல்லோருடனும் பழக முடியுமா, ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வண்டாய் குடைய அந்நிய தன்மையுடன் இன்று அந்த வீட்டில், கடப்பாறையை உள்ளே வைத்து விழுங்கும் உணர்வு, அதை அப்படியே விழுங்கினாள்.
காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.
குழந்தையை குளிக்க வைத்து அவளுக்கு உணவு கொடுத்து, இவ்வளவு நேரம் வயல் ,வரப்பு என அலைந்தது,உண்டதது குழந்தையே தாலாட்ட அது சுகமாக தூக்கத்தை தழுவியது.
குழந்தையை உறங்க வைத்தவள், காலையில் சுமதி சொன்னது மனதில் ஓட, தன்னை சார்ந்தவர்களுக்காகவாவது உணவை விழுங்கியாவது வைக்க வேண்டும் என முடிவெடுத்து அதை செவ்வனே முடித்தவள்,
அன்றாட வேலைகள் அடுக்கு அடுக்காக அடுத்தடுத்து விழுங்க காத்திருக்ங அதனை பார்க்க சென்றாள்.
இதோ அன்பூக்களே அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்...படிச்சுட்டு மறக்காம எப்படியிருக்க சொல்லிட்டு போங்க...போன பதிவு கருத்து தெரிவிச்சா என் அன்பு மக்கா நன்றி நன்றி ❣️❣️❣️🌹🌹🌹