Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
அவள் 23


ராணாவும் ஆமோதித்து அவளை வீட்டிற்குள் அழைத்திட, உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்.

"இங்கயே நின்னு பேசலாம். நீ என்ன சொல்லணுமோ அத இங்கயே சொல்லு" என்று எரிச்சலை முகத்தில் காட்டி கடுப்புடன் பேசியதை பார்த்து அமைதியாகப் புன்னகைத்தவன் பொறுமையாக,

"நான் உனக்குப் பண்ண கொடுமைக்கு சாதாரணமா மன்னிப்பு கேட்டு முடிக்க விரும்பல. அப்டி கேட்டாலும் அது போதாது. உன்கூட வாழணும். உன்னய சந்தோசமா பாத்துக்கணும். உனக்கு என்னோட காதல புரியவச்சு என்னோட தப்புக்கானப் பிராயிச்சத்தத்தை பண்ணலாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ்...! எனக்கு ஒரு சான்ஸ் கொடு காவி.." என்று வார்த்தைகள் தளர்ந்து, தலை தாழ்த்தி, கண்களில் ஏக்கத்துடன் கேட்கும் ராணாவை பார்க்க காவ்யாவிற்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், தான் பட்ட துன்பங்களும் கஷ்டங்களும் கண்முன் விரிந்திட, இதெல்லாம் அதற்குமுன் சாதாரணமாகத் தெரிந்தது.

அவனை கோபமாகப் பார்த்து," என்ன? நீ என்ன வேணாலும் பண்ணுவ...அப்றம் வந்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சு எல்லாத்தையும் மறந்து உன்கூட வந்து வாழணுமா? என்னய என்ன நினச்சுட்டு இருக்க?..என்னய பாத்தா உனக்கு அவ்ளோ இளக்காரமா தோனுதுல? எப்போ கூப்டாலும் வந்துருவானு நினைக்கிற.." என்று பல்லிடுக்கில் கோபமாகப் பேசிட, அதில் மனம் ரணமாக,

"அப்டி இல்ல அம்மு. நான்தான் உன்னய புரிஞ்சுக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா, நீயும் அதே தப்ப பண்ணாத. ப்ளீஸ்...! நடந்தத நினைச்சுட்டே இருந்தா வாழுற வாழ்க்கையும் நரகமாயிடும். இனியாச்சும் உன்கூட சந்தோசமா வாழ ஆசைப்படுறேன். உனக்கு என்னோட காதல கொடுத்துட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து என்கூட வந்துடு காவி..." என்று உடைந்த குரலில் கேட்டிட,

"இப்பக்கூட நீ உனக்காகத்தான் யோசிக்கிறல்ல...என்னைபத்தி யோசிச்சியா? நீ எனக்குப் பண்ணதக்கூட நான் பொறுத்துகிட்டேன். ஆனா, என் குழந்தைய சாவடிச்சத எப்டி மறக்கமுடியும்? உன்னய எப்டி அதுக்காக மன்னிப்பேன்னு நினச்ச? இந்நேரம் அந்தக் குழந்தை இருந்திருந்தா அதுக்கு ஒரு வயசு இருந்திருக்கும்..." என்று கூறியவள் அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டை அடைக்க அமைதியானாள். அதை கேட்டவனுக்கு முள்ளென தைக்க, இதயம் ரணமாகக் கண்கலங்கியவன்,

"நான்தான் கொன்னுட்டேன். என் கோபத்தாலதான் நம்ம குழந்தைய கொன்னுட்டேன். நான் அன்பு வைக்கிற யாருமே என்கூட இருக்க மாட்டிக்கிறாங்க. என்னயவிட்டுப் போயிடுறாங்க. முதல்ல என் அம்மா அப்பா. அப்றம் நம்ம குழந்தை. என் அம்மாவோ அப்பாவோ நமக்கு குழந்தையா வரப்போறாங்கனு நினச்சு எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? நான் நீ நம்ம குழந்தைனு அழகான குடும்பமா வாழணும்னு எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா..? எல்லாமே கனவாவே போயிடுச்சு..." என்று கலங்கிக் கூறியவன் கீழே மண்டியிட்டு அழுதான்.

இதுவரையிலும் ராணாவை கண்கலங்கியும் பார்த்திராதவள் இன்று அவன் அழுவதை பார்க்கையிலேயே அவன் நண்பர்கள் கூறிய அனைத்தும் உண்மையென கண்கூடாக உணர்ந்தாள். அவன் அழுகை இவள் மனதை பிசைந்தாலும் கல்லென நின்றாள்.

"ப்ளீஸ்...! காவி. நீயும் என்னவிட்டுப் போயிடாத...என்னால தாங்கிக்க முடியாது. என்கூடயே இருந்து என்னய எவ்ளோனாலும் பழி வாங்கு. நான் தாங்கிக்கிறேன். என்னவிட்டு பிரிஞ்சு மட்டும் போயிடாத..." என்று கெஞ்சிக் கதறுபவனை பார்த்தவளின் கண்கள் தானாகக் கலங்கிட, முகத்தில் கோபம்காட்டி,

"இங்கபாரு...உனக்கும் எனக்கும் என்னைக்குமே ஒத்து வராது. நீ பழி வாங்கத்தான என்னய கல்யாணம் பண்ண? நீயும் நினச்சதவிட அதிகமாவே பழி வாங்கிட்ட. இப்ப நீ மாறியிருக்கலாம். ஆனா, நமக்குள்ள எதுவும் மாறாது. நம்ம இரண்டு பேரோட கோபத்தால நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையுமே நாசமாயிட்டு. இதுக்கிடையில ஒரு பச்ச மண்ணோட உயிர வேற பறிச்சிட்டோம். இதுக்குலாம் நானும் ஒருவகையில காரணம்தான். அதனாலதான் சொல்றேன். ப்ளீஸ்....! புரிஞ்சுக்கோ. நம்ம இரண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தது போதும். என்னய விட்டுடு...நீ உனக்கேத்தமாறி வேற நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ...இல்ல என்னவேணா பண்ணிக்கோ...ஆனா என்னய விட்டுடு. ப்ளீஸ்...!" என்று கையெடுத்துக் கும்பிட்டு கூறியவள்,

"டிவோர்ஸ் கொடுத்திடு. உன்னோடான இந்த பந்தம் எனக்கு நீ பண்ண கொடுமைகளைத்தான் நியாபகப்படுத்துது. இதுல உன்கூட சேர்ந்து எப்டி வாழமுடியும்? எல்லாத்தையும் மறந்து வாழ்க்கைய மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறது ரொம்பக் கஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அழுதபடியே சென்றுவிட்டாள். ராணா அவள் செல்வதை பார்த்தவாறு கண்களில் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான்.


சில நாட்களுக்குப் பின்...

காவ்யாவும் ராணாவும் முழுமனதாக விவாகரத்து செய்துவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுடன் அவர்கள் நண்பர்களும் வந்தனர். வெளியே வந்ததும் காவ்யாவை பார்த்து அவளிடம் ராணா வர, அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன்,

"உனக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு உன்னய சந்தோசமா வச்சுக்கணும்னு ஆசப்பட்டேன். முடியாததகூட செய்யணும்னு நினச்சேன். ஆனா, உனக்கு என்னய பிரியறுதுலதான் சந்தோசம் கிடைக்கும்னு தெரிஞ்சப்றமும் எப்டி நான் கொடுக்காம இருப்பேன்? இனியாச்சும் நீ எல்லாத்தையும் மறந்து ஹேப்பியா இருக்கணும். ராணானு ஒரு கேரக்டர் உன் வாழ்க்கையில இருந்ததையே மறந்துடு. உன் பாஸ்ட் லைஃப மறந்து நல்ல ஃப்யூச்சர அமைச்சிக்கோ. இனி உன்னய எந்த விதத்திலயும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். இதுவரைக்கும் பண்ண எல்லாத்துக்குமே மன்னிப்புனு ஒரு வார்த்தையில கேட்டு முடிக்க மனசு வரல. இருந்தாலும் கேட்டுக்குறேன். மன்னிச்சிடு.." என்று உள்ளே உடைந்தாலும் வெளியே மறைத்துச் சாதாரணமாகப் பேசிட, காவ்யா ஏதும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

"ஒரே ஒரு தடவ உன்னய ஹக் பண்ணிகிட்டுமா? ப்ளீஸ்....காவ்யா!" என்று கெஞ்சிக் கேட்பவனுக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல் சம்மதமாகத் தலையசைத்தாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு அவளை அணைத்துக்கொண்டான், ராணா. அந்த அணைப்பில் தாயை நாடும் குழந்தையையே அவள் உணர்ந்து அப்படியே அசையாது நின்றிருக்க, அணைப்பிலிருந்து பிரிந்த ராணா அவன் காதல் அனைத்தையும் திரட்டி ஒற்றை முத்தமாக அவள் நெற்றியில் பதித்தவன் அவளை பார்த்து, "ஐ லவ் யூ அம்மு!" என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.

இதைப் பார்த்த தோழிகளும் நண்பர்களும் என்னவென்று கூற இயலாத மனநிலையில் சிக்கித் தவித்தனர். இருவரின் வாழ்வில் ஒருவருக்கொருவர் எதிராய் இருக்கையில் ஒருவரது மகிழ்ச்சி மற்றொருவரின் மகிழ்ச்சியை பறிக்கையில் இவர்கள் யார்பக்கம் நிற்பது? என்ற சூழ்நிலை வருகையில் நியாயத்தின் பக்கமே அனைவரும் நின்றனர். இருந்தாலும், தன் நண்பனுக்காகத் தாங்கள் எடுத்தச் சிறு முயற்சியும் தோல்வியில் முடிகையில் இதுவே விதியென விட்டுவிட்டனர். இதற்குப் பிறகாவது இருவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் உண்டாகட்டும் என்று எண்ணியவாறே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்பின், ராணா காவ்யாவை பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவள் தோழிகளிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டான். ராணாவுடன் அவனது நண்பர்களும் செல்லப்போக, இவர்களை அவளுடன் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் செல்லும்வரை சிலையென நின்றவள், தோழிகள் தோள்தொட தன்னிலை பெற்றாள். நண்பர்களும் அனுயா மற்றும் சரண்யாவும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட, காவ்யா, தன்யா, ரம்யா மூவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.

வீட்டிற்குள் வந்ததும் காவ்யா வேகமாகச் சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியவர்கள் பின்னே சென்று கதவை தட்ட, கதவு பூட்டாமல் இருந்ததால் திறந்து உள்ளே சென்று பார்த்திட, அங்கே காவ்யா அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

அவளருகில் சென்று அவளை தொட, தோழிகளை கட்டிக்கொண்டாள். சிலநிமிடம் அவளை வருடிக்கொடுத்து ஆறுதல் படுத்திட, அவள் அணைப்பிலிருந்து பிரிந்ததும், "எதுக்காகடி அழுவுற? என்னாச்சு?" என்று தன்யா அக்கறையாகக் கேட்டிட,

"ஆமா! இப்பதான் நீ கேட்ட டிவோர்ஸ்கூட கிடைச்சிருச்சேடி. இனியாச்சும் நீ நிம்மதியா சந்தோசமா இருப்பனு நினச்சா இப்டி அழுதிட்டு இருக்க?" என்று ரம்யா கவலையாகக் கேட்டிட, மௌனமாகவே இருந்தாள்.

"இப்ப என்னனு சொல்லு காவி. அந்த ராணாவ நினச்சுதான் அழுகிறியா? அவர் இப்ப உன் லைஃப்லயே இல்லடா. இனி எதுக்காகவும் வருத்தப்படாத. ஓகேவா?" என்று தன்யா ஆதரவாகக் கூறிட, அதைக் கேட்டு கண்கலங்கியவள்,

"அது எப்டி விடுவான்? என்னய பழி வாங்க நினச்சப்பவும் கோபத்தால டார்ச்சர் பண்ணான். அப்றம் அக்கறை காட்டுறேன்னு டார்ச்சர் பண்ணான். இப்ப அன்பு காட்டுறேன்னு டார்ச்சர் பண்றான். என்னய நிம்மதியாவே இருக்க விடமாட்டான்போல..." என்று ஆதங்கத்துடன் பேசியதை கேட்ட தோழிகள் அதிர்ந்து விழித்தனர்.

"அப்போ...என்ன சொல்ல வர்ற காவி? அவரோட அன்பு எதுக்கு உன்னய பாதிக்குது? அவருதான் போயிட்டாரே...இப்பவும் அவர நினச்சு எதுக்கு ஃபீல் பண்ற?" என்று தன்யா கேட்டிட,

"அப்போ...அவருமேல உனக்கு ஏதோ ஃபீலிங்க்ஸ் இருக்குதா காவி? எதுனாலும் சொல்லுடி மறைக்காம" என்று ரம்யாவும் அழுத்தமாகக் கேட்டிட, பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள்,

"அவன்மேல எனக்கு இருந்த ஃபீலிங்க்ஸ் எப்பவுமே வெறுப்புதான்டி. அவன் எனக்கு பண்ண கொடுமையைக்கூட ஏத்துகிட்டு வாழப் பழகிக்கிட்டேன். ஆனா, என்னோட குழந்தையை......அத மன்னிக்க முடியாது. எனக்குத் தெரியுது அதுக்காக அவனும் நிறைய கஷ்டப்பட்டான்னு..ஆனா, என்னால இந்த உறவ இதுக்குமேலயும் தொடர முடியாதுனு மட்டும் தெளிவா இருக்கேன்டி" என்று தீர்க்கமாகக் கூறிட,

"அப்ப எதுக்குடி அவர் ஹக் பண்ணும்போதும் கிஸ் பண்ணும்போதும் சிலைமாறி நின்ன?" என்று தன்யா கேட்டிட,

"இப்பக்கூட அத நினைச்சுதான அழுகுற? எதுக்காக உன்னோட ஃபீலிங்க்ஸ உனக்குள்ளயே மறைச்சிக்கிற காவி? நீ அத வெளிப்படுத்துறதுல எந்தத் தப்பும் இல்ல.." என்று ரம்யா எடுத்துக்கூறிட,

"எனக்கு அவன மன்னிச்சு ஏத்துக்க முடியாது. அதுவும் கல்யாணம் ஆகிட்டுனு கட்டாயத்துல அவன்கூட வாழமுடியாது. அவன் பண்ண தப்ப அவன் உணர்ந்து எவ்ளோ தண்டனைனாலும் அனுபவிச்சுருக்கலாம். அதுக்காக சிம்பதில லவ் வராது. அது தானா வரணும். அவன்மேல எனக்கு வெறுப்புதான் இருக்கு. அவன் ஹக் பண்ணதுக்கும் கிஸ் பண்ணதுக்கும் ஏன் அழுதேன்னு எனக்கு சொல்லத் தெரியல. அதை யோசிக்கவும் போறதில்ல. என்னோட வாழ்க்கைல இருந்து அவன முழுசா நீக்கிட்டேன். இதுக்கப்றம் அவன் பேச்சே வேணாம். அவ்ளோதான்" என்று உறுதியாகக் கூறி முடித்திட, தோழிகள் இருவரும் ஒன்றும் கூறாமல் அதை ஆமோதித்தனர்.

நீதிமன்றத்தில் இருந்து தன் வீட்டிற்கு வந்த ராணா நேராக காவ்யாவுடன் இருந்த அறைக்குச் சென்றான். அறைக்குள் வந்தவன் அலமாரியை திறந்து அவளது புடவையை எடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான். அதை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவன் கண்ணீர் சிந்தினான். சிறிதுநேரம் அப்படியே இருந்தவன் அதன்பின் ஒரு முடிவெடுத்தவனாய் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

இரண்டு நாட்கள் கழித்து...

ராணா விமான நிலையத்தில் உள்ளே செல்ல காத்திருக்க, அவனை வழியனுப்பிட அவனது நண்பர்கள், பெற்றறோர்கள், அனுயா மற்றும் சரண்யாவும் உடன் வந்திருந்தனர்.

காவ்யாவை பிரிந்து இங்கே இருந்தால் அவளை பார்க்காமல் இருந்திட இயலாமல் இவன் ஏதாவது செய்திட, அது அவள் நிம்மதியை குழைத்துவிடும் என்பதற்காகவும் இங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற காரணத்திற்காகவும் வெளிநாட்டில் இருக்கும் தனது தொழிலை பார்த்துக் கொள்ள கிளம்பிவிட்டான். இவனுக்கு ஒரு மாறுதல் தேவை என்ற காரணத்திற்காகவே அவன் நண்பர்களும் பெற்றோர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.

விமானத்திற்குள் செல்லும் நேரம் வரும்வரை அவன் விழிகள் தன்னிச்சையாக யாருக்காகவோ காத்திருந்ததை மற்றவர்களாலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் காவ்யா இவனிடம் மறுபடியும் வரமாட்டாள் என்பதே நிதர்சனம். அதை அவன் உணர்ந்தாலும் அவன் மனம் உணர மறுத்து அவனை படுத்தும் பாட்டை எண்ணி மற்றவர்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. நேரம் நெருங்கிட, தன் நண்பர்களை ஆரத்தழுவியவன் பெற்றோர்களின் ஆசிகளை பெற்று விமான நிலையத்திற்குள் சென்றான், ராணா.

ஆறு மாதத்திற்குப் பிறகு...

சூரியனின் வெளிச்சம் விரிந்து கிடந்த வானத்தில் சூழ்ந்திருக்கும் வெண்மேகங்களும் அதற்குள் நுழைந்து சிறகடித்துப் பறந்திடும் பறவைக் கூட்டங்களையும் ரசித்தபடி விமானத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தான், ராணா. தனது தாயகம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.

காவ்யாவின் நினைவுகளுடன் வெளிநாடு சென்றவன் அங்கே உள்ள அவன் தொழிலில் கால்பதித்து அவன் முத்திரையை அங்கும் பதித்தான். ஓய்வின்றிச் சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் அவன் இளைப்பாறும் வசந்த காற்றாய் காவ்யாவின் நினைவுகளும் அவள்மீது கொண்ட காதலுமே அவனுக்குத் துணையாய் இருந்தது.

அவளை மறக்கும் முயற்சியில் அவன் தன்னை அறியாமலும் ஈடுபடவில்லை. அவளுடன் இவன் கழித்த அந்தக் குறைந்தகால நினைவை பொக்கிஷமாய் மனதில் தேக்கிவைத்திருந்தான். அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள மனம் துடித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வானே தவிர, அறியாமலும் அவன் நண்பர்களிடத்திலும்கூட கேட்டுக்கொள்ளமாட்டான், அது அவளுக்குத் தெரிந்தால் இன்னும் சங்கடப்படவும் கோபப்படவும் நேரிடும் என்பதற்காக.

காவ்யா எங்கிருந்தாலும் நன்றாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான். இப்போது தனது நண்பனான ராமின் திருமணத்திற்காகச் சென்று கொண்டிருக்கிறான். தனது ஊரில் இருக்கும் விமான நிலையத்தில் வந்து இறங்கியவன் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவனுக்காக கார் காத்திருக்கும் என்று எண்ணியிருந்தவனுக்குத் தனது நண்பர்களே நேரில் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

உற்சாகமாக நால்வரும் வந்து இவனை கட்டிக்கொள்ள, பதிலுக்கு இவனும் அவர்களை அணைத்துக்கொண்டான். அணைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தனர். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டீசர்ட் மற்றும் ஓபன் ஜீன்ஸ் சர்ட் அணிந்து கூலிங் கிளாஸ் மற்றும் ட்ரென்டி ஷூஸ் அணிந்து தோளில் லக்கேஜ் பேக்கை போட்டுக்கொண்டு ஸ்டைலாக நிற்பவனை பார்த்து நால்வரும் அதிர்ச்சியில் வாயை பிழந்தனர்.

"டேய்...! ராணா...! நீதானாடா இது? செம்மயா இருக்கடா!" என்று விஜய் வியந்து கூறிட,

"எப்ப இருந்துடா இப்டி மாறுன? எங்களலாம் அடிச்சு தூக்கிட்டடா இந்த காஸ்ட்யூம்ல...நிஜமாவே கலக்குறடா!" என்று நாகவ்வும் ஆனந்தமாகக் கூறிட,

"அவன் எப்பவுமே அழகுதானடா. ஏதோ இப்ப மட்டும் புதுசா வந்து சொல்லிட்டுருக்க.." என்று ராம் கூறிட, ராணா புன்னகைத்தான். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

"ஆமா! என்னடா இது? புது சேஞ்சோவர்! ஆளே மாறிட்டடா! இப்பதான் இப்டியா? இல்ல பிசினஸ் மீட்டிங்கும் இப்டித்தானாடா?" என்று பிரபவ் கேலியாகக் கேட்டிட, புன்னகைத்த ராணா,

"டேய்..! ரொம்ப ஓட்டாதடா. அதுக்கெல்லாம் நார்மல்தான். மத்த டைம் இப்படித்தான் இனிமே. லைஃப்னா ஒரு சேஞ்ச் வேணும்ல. எனக்கும் இந்த சேஞ்ச் தேவபட்டுச்சுடா. அதான்" என்று கூறிமுடித்திட, மற்றவர்களும் அவனை புரிந்துகொண்டு அமைதியாயினர்.

ஐவரும் பேசியபடியே காரில் ஏறி பயணித்துக் கொண்டிருக்க, "அப்றம்...கல்யாண மாப்ள...! நீ எதுக்குடா ஏர்போர்ட் வந்த?" என்று விசாரித்திட, "உன்னய ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன்ல. அதான் பாசத்துல ஓடி வந்துட்டேன்டா..!" என்று உண்மையை கேலியாகக் கூறிட, "பாசக்கார நண்பேன்டா...நீ!" என்று கூறி அவனை இறுக்கி அணைத்திட,

"அடேய்...! விடுடா..! எலும்ப நொறுக்கிடாத. எனக்குக் கல்யாணம் இருக்குடா. பாவம்டா நானு..." என்று ராணா விளையாட்டாக இறுக்கி அணைத்ததில் ஏற்பட்ட வலியில் பொய்யாக அலறிட, மற்ற நால்வரும் சிரித்தபடியே பயணித்திட, அவர்களது கார் ராமின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.

இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால் ஏற்கனவே அரண்மனைபோல் இருக்கும் வீடு அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமான மாளிகைபோல் காட்சியளித்தது. வீட்டின்முன் உள்ள நடக்கும் பாதைக்கு இரண்டு பக்கமும் உள்ள புதர்ச் செடிகளும்கூட விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த வீடே மிகவும் அழகாகக் காட்சியளித்தது.

அதை ரசித்தவாறே ராணா நண்பர்களுடன் வீட்டிற்குள் செல்ல, அவன் உள்ளே நுழையும்முன் அவனுக்கும் மற்ற நால்வருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார், சீதா அம்மா. நண்பர்கள் அனைவரும் அவர்களது பெற்றோர்களும் இங்குதான் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் ராணா பலமடங்கு உற்சாகமானான். அதன் காரணம், யாவரும் அறிந்ததே..காவ்யாவும் இங்கே இருப்பாள் என்று உறுதியாக நம்பினான். ஆனால், அதை அவன் நண்பர்களிடத்தும் கேட்டுக்கொள்ளவில்லை.

ராணாவா? காவ்யாவா? என்று வந்தால் இவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் காவ்யாவின் பக்கமே நிற்கும் என்பதை இவனும் நன்கு அறிவான். இருப்பினும் அதில் தவறேதும் இல்லை என்றே இவனும் எண்ணுவான். இருந்தாலும் காவ்யாவை பார்ப்பதற்காக இவர்களிடத்தில் பிரச்சினை வேண்டாம் என்றே எண்ணி எதுவும் கேட்கவில்லை.

கண்களை வீடு முழுக்கச் சுழலவிட்டபடியே அவனுக்கான அறைக்குச் சென்றுகொண்டிருந்தான், அவளை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால், அவள் இவன் கண்ணில் படவேயில்லை. சலிப்புடன் தனதறைக்குச் சென்றவன் களைப்பு நீங்க குளித்துவிட்டு அலுப்புத்தீர படுத்தான். அசதியில் கண்ணயர்ந்தவன் நன்றாக உறங்கிப்போனான்.

மதியநேரம், நண்பர்கள் வந்து இவனை எழுப்பி சாப்பிட அழைத்துச் சென்றனர். குடும்பம் மொத்தமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவனது விழிகள் அவனவளை தேடியது. ஆனால், அவளை தவிர மற்ற எல்லாரும் இருந்ததை கண்டு நொந்துபோனான். அப்படியே சென்று சாப்பிட அமர அனைவரும் இவனை நலம் விசாரித்திட, இவனும் அனைவரிடமும் பேசிவிட்டு அமர்ந்தான்.

அனைவரும் ஆனந்தமாகப் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவனது தவிப்பை உணர்ந்தாலும் இவனது நண்பர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தனர்.

பேசிக் கொண்டிருக்கும்போதே நாகவ்வின் தந்தை,"அப்றம்..ஃபங்ஷன்லாம் இங்கயே வச்சுக்கலாம்ல. எதுக்காக அங்க தனியா இங்க தனியானு..பொண்ணையும் இங்கயே கூப்டு வந்துருக்கலாம்" என்று கூறிட,

"அது சரிபட்டு வராது. பொண்ணு அவங்க வீட்ல இருந்துதான் இங்க வரணும். அதனால அங்கயே இருக்கிறதுதான் சரி" என்று லட்சுமி அம்மா கூறிட,

"ஆனா, அவளோட சொந்தம்தான் நாம எல்லாரும் இங்க இருக்கோமே..அப்றம் எதுக்கு அவள அங்க இருக்க சொல்லணும்?" என்று விஜய்யின் தந்தை கூறிட, இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராணா குழம்பினான்.

"அதான் அவ ஃபிரண்ட்ஸ் நாங்க இருக்கோமே அப்பா. நாங்க அங்க கிளம்பிடுவோம். நாங்க அங்க எஞ்சாய் பண்றோம். நீங்க இங்க பண்ணுங்க. ஓகேவா?" என்று சரண்யா உற்சாகமாகக் கூறிட,

"அதான்டா பிரச்சினையே...இங்க செம்ம போரடிக்கும். பேசாம நானும் உங்ககூட அங்க வந்துடுறேன்டா" என்று சீதா அம்மா போலியான சோகத்தில் கூறிட,

"கண்டிப்பாம்மா. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.."என்று அனுயாவும் கூறிட, ராணாவின் குழப்பம் மேலோங்கியது. அவனுக்குள் என்னவென்று கூறமுடியாத பதற்றம் உண்டானது. 'கல்யாணப் பொண்ணு இவங்களுக்கு ஃப்ரண்ட்னா...அப்ப அது...?' என்று சிந்தித்தவனால் அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. சாப்பாட்டில் இருந்து எழுந்தவன் வேகமாக அவனறைக்குச் சென்றுவிட்டான். இவன் செல்வதை அனைவரும் வருத்தமாகப் பார்த்திட, நண்பர்கள் நால்வரும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

அறைக்குள் வந்தவனின் மனம் படபடக்க, ஓரிடத்தில் நிற்க இயலாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். தனது சந்தேகம் மட்டும் உண்மையாகிவிட்டால்....? என்று எண்ணும்போதே அவனது கண்கள் கலங்கின. இருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்பதுதானே தனது விருப்பமும். அப்படியிருக்க, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று சிந்தை கூறினாலும் மனம் வலித்தது. சிந்தனையில் உழன்று தவித்துக்கொண்டிருக்க, திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.





❤வருவாள்❤...
 
💕அவள் 24💕



யாரென்று பார்த்திட, அங்கே அவனது நண்பர்கள்தான் இவனை பார்க்க வந்திருந்தனர். இவனது முகத்தை பார்க்கையிலே அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டவர்கள் அவனை அழைத்துச் சென்று மெத்தையில் அமரவைத்தனர். அவனுடன் அமர்ந்தவர்கள்,

"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் ஒருமாதிரி இருக்க?"

"எதுவும் ப்ராப்ளமா? எதுனாலும் சொல்லுடா"

"சரியா சாப்டக்கூட இல்ல. வந்துட்ட. இங்க வந்து யோசனையில இருக்க"

"சொல்லுடா ராணா. என்ன பிரச்சினை. ஏதோ குழப்பத்துல இருக்கனு மட்டும் தெரியுது. என்னனு சொல்லு. முடிஞ்சா தீர்த்து வைக்கிறோம்" என்று நால்வரும் அக்கறையாக விசாரித்திட, ராணாவும் கேட்டுவிட வேண்டும் என்று தீர்மானித்தவன்,

"அது...அதுவந்து...பொண்ணு யாருன்னு...சொல்லவே இல்லயே...அனுக்கும் சரண்யாக்கும் ஃப்ரண்ட்னா....அது...?" என்று வார்த்தைகள் வராமல் பாதியில் நிற்க, அவனது குழப்பத்தையும் தவிப்பையும் வைத்தே அவனது சந்தேகத்தை புரிந்துகொண்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு வாய்விட்டுச் சிரித்தனர். நால்வரும் சிரிப்பதை குழப்பத்துடன் ராணா பார்த்திட, அவனை பார்த்த நாகவ் சிரித்துக்கொண்டே,

"இப்ப உன்னய பாத்தா யாரும் டாப் பிசினஸ்மேன்னு நம்பமாட்டாங்கடா. எல்லாரையும் நடுங்கவிடுற மிஸ்டர். ராணா தேவ்வோட முகத்துல குழப்பமும் பயமும் எப்டி தாண்டவம் ஆடுது பாரு...!" என்று நகைத்திட,

"ஆமாடா. எப்டிலாம் யோசிக்கிறடா நீ! பிசினஸ்மேனா இருக்கிறதுக்கு நீ கதை எழுதலாம்டா" என்று கூறி விஜய் நமட்டுச் சிரிப்பு சிரித்திட, அனைவரும் இன்னும் சிரித்தனர். ஒன்றும் புரியாத ராணா,

"டேய்..! என்னடா பேசுறீங்க? தெளிவா சொல்லுங்கடா" என்று கூறிட,

"ஹான்...உன்னய நினச்சா சிரிப்புதான்டா வருது. சொல்றதுக்கு வரமாட்டிக்குது" என்று ராமும் கூறி சிரித்திட,

"நான் என்ன சொல்ல வந்தேன்னுகூட முழுசா கேட்காம நீங்கபாட்டுக்கு உலறுறீங்க.." என்று அவன் குழம்பிட,

"அது தெரிஞ்சுதான்டா நாங்க இப்டி சிரிக்கிறோம்" என்று நாகவ் சிரிப்பினிடையில் கூறிட, மொத்தமாகக் குழம்பினான் ராணா.
அவனது முகத்தை பார்த்து அனைவரும் சிரித்தவர்கள் அவன் முகம் சோகமாவதை பார்த்து அமைதியாயினர்.

"இங்க பாருடா. இன்னுமா உனக்குப் புரியல? நீ என்ன நினச்சு பயப்படுறியோ அது எதுவும் நடக்கல. இப்போவாவது புரியுதா?" என்று பிரபவ் கூறிட, புருவம் முடிச்சிட அவனை ஏறிட்டான், ராணா.

"ஆமாடா. நீ காவ்யா அண்ணிதான் கல்யாணப் பொண்ணுனு நினச்சுதான இவ்ளோ பயந்துட்டு இருக்க?" என்று விஜய் கேட்டிட, முதலில் அதிர்ச்சியாகப் பார்த்தவன் ஆம் என தலையசைத்திட,

"எப்படிடா இப்டி நினச்ச? அவங்க என்னோட அண்ணிடா. எனக்கு அம்மா மாதிரி. எனக்கு எவ்ளோ சப்போர்டீவா இருந்துருக்காங்க தெரியுமா? அவங்களாலதான்டா எனக்கு பொண்ணுங்கமேல பெரிய மதிப்பும் மரியாதையும் வந்துச்சு. அதோட அவங்கதான் என்னய மேரேஜ் பண்ணிக்க சொன்னாங்க. பேசி புரிய வச்சாங்க. அதனாலதான் கல்யாணமே வேணாம்னு நினச்ச நான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்" என்று ராம் கூறிட, ராணாவை சங்கடமும் சந்தோசமும் ஒருங்கிணைந்து ஆக்கிரமித்தது.

"சாரிடா ராம்! நான் உன்னய அப்டி நினைக்கலடா. என்னய அறியாம ஒரு பயத்துல அப்டி யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கு எந்தக் காரணமும் சொல்லமுடியாதுடா. நானும் அப்டி நினச்சிருக்கக் கூடாதுடா" என்று ராணா வருத்தப்பட,

"உன் நிலமையும் புரியுதுடா. உனக்கு வந்தது பயம். சந்தேகம் இல்ல. காவ்யா அண்ணிமேல வச்சிருக்க அளவுக்கு அதிகமான லவ்தான் இப்டி யோசிக்க வச்சிருக்கு. வருத்தப்படாத" என்று ராம் கூறி அவனை அணைத்துக்கொள்ள, மற்றவர்களும் சுற்றி அணைத்துக்கொண்டனர். ராணாவும் நிம்மதியுடன் அவர்களை அணைத்துக்கொண்டான்.

சிறிதுநேரம் கழித்து ஒன்றாக அமர்ந்தவர்கள் மீண்டும் சந்தோசமாகப் பேசினர். "ஆமா! அப்போ பொண்ணு யாருடா?" என்று ராணா கேட்டிட,

"தன்யா டா" என்று கூறியதை கேட்டபின்னே இங்கே தன்யாவும் இல்லை என்பது அவன் மூளையில் உரைத்தது. தன் தலையை தட்டிக்கொண்டவன், "அவள நான் யோசிக்கவே இல்ல பாரேன்" என்று கூறிட,

"எப்டிடா யோசிப்ப? சுத்தி என்ன நடக்குதுனு பாத்தாதான தெரியும். யோசிப்ப. இப்பதான் உன் சிந்தனை செயல் எல்லாமே வேற இடத்துல இருக்கேடா.." என்று நாகவ் கேலி செய்திட, ராணா புன்னகைத்து அமைதியானான்.

"சரிடா. அதவிடு.ராம் எப்டிடா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான். அதுவும் நம்ம தன்யாதான் பொண்ணுனா...லவ்வாடா?" என்று ஆர்வமாகக் கேட்டிட,

"இவனாவது லவ் பண்றதாவது. போடா! இவன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதே பெரிய விஷயம். அதுவும் காவ்யா அண்ணி பேசி கம்பல் பண்ணி ஒத்துக்க வச்சாங்க" என்று விஜய் கூறிட,

"அப்றம் இவனுக்கு பொண்ணு பாக்கணும்னு யோசிக்கிறப்ப சீதாம்மாக்கு தன்யா நினைவு வர, அவளையே பேசி முடிச்சுடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க" என்று பிரபவ் கூறிட,

"வீட்ல எல்லாருக்கும் டபுள் ஓகே. எனக்கும் இத்தனநாள் தன்யாகூட பேசிருக்கிறதால அவளபத்தி ஓரளவு தெரியும். பிடிக்கும். அதனால நானும் அவகிட்ட பேசினேன். அவளுக்கும் ஓகே. அதனால நானும் ஓகே சொல்லிட்டேன். " என்று ராமும் கூறிட, மகிழ்ச்சியடைந்தான் ராணா.

"அதோட இவன் கேரக்டருக்கு தன்யாதான் கரெக்டா இருப்பா. இவன் கோபப்பட்டா அவ அதுக்குமேல படுவா. தூக்கிப்போட்டு மிதிப்பா" என்று நாகவ் கூறிட, அனைவரும் சிரித்தனர். இத்தனை மாதங்களில் தோழிகளும் நண்பர்களும்கூட நன்றாகப் பழகி ஒருவரையொருவர் புரிந்து வைத்திருந்தனர்.

"உன்கிட்ட சொல்லலாம்னா நீதான் எப்பவும் பிசி. எப்பயாச்சும் பேசுற. அதுலயும் அதிகமா பேச டைம் இல்லாம ஓடிடுற. அதான் வந்ததும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டோம்டா. உனக்கு எதுவும் கோபம் இல்லயே?" என்று பிரபவ் அக்கறையாக விசாரித்திட, ராணாவும் மறுப்பாகத் தலையசைத்து, "அதெல்லாம் ஒன்னுமில்லடா. உங்களுக்கு நல்லது நடந்தா அது எனக்கு சந்தோசம்தான்டா" என்று முழு மனதாகக் கூறினான்.

"ஆமா! விஜய்! நீ எப்படா கல்யாணம் பண்ணிக்கப்போற? நீதான் ஆல்ரெடி கமிட்டட் ஆச்சே" என்று ராணா கேட்டிட,

"அது...மூத்தவன் இவன் இருக்கும்போது எனக்கு எப்டி பண்ணமுடியும்? அதான் இவனுக்கு முடியட்டும். அப்பதான் நான் பண்ணிப்பேன்னு சொல்லி இவன்பக்கம் டைவர்ட் பண்ணவிட்டதே நான்தான்டா. இல்லன்னா இவன் டிமிக்கி கொடுத்துட்டே போயிருப்பான்" என்று விஜய் உண்மையை கூறிட, ராணா சிரித்தபடி,

"நல்ல காரியம் பண்ணடா. இவன் கல்யாணம் முடிஞ்சதும் உனக்கும் பண்ணிடுவோம் கவலப்படாத" என்று கூறிட விஜய் சந்தோசமாகப் புன்னகைத்தான்.

ராமிற்கு இந்த வீட்டில் வைத்து நலங்கு வைத்திட, தன்யாவுக்கு அவர்கள் இருக்கும் வீட்டில் வைத்தே நடைபெற்றது. தன்யாவின் சொந்தமாக அனுயா, சரண்யாவும் அங்கே சென்றுவிட, அவர்களுடன் நாகவ்வின் தாய் தந்தையும் உடன் சென்றுவிட்டனர்.

சொந்தங்கள் அனைவரும் நலங்கு வைத்தபின் நண்பர்கள் நால்வரும் ராமிற்கு நலங்கு வைக்கிறேன் என்ற பெயரில் முகத்தில் மஞ்சள் முழுவதையும் பூசிவிட்டு ரணகலம் செய்திட, அவனும் பதிலுக்கு இவர்கள்மேல் பூசிகிறேன் என்ற பெயரில் துறத்திட ஐவரும் வீட்டில் ஓடி விளையாடுவதை பார்த்துப் பெரியவர்கள் தலையில் அடித்துச் சிரித்துக்கொண்டனர்.

"ஒவ்வோருத்தனுக்கும் ஏழு கழுத வயசாயிட்டு. இன்னும் இதுங்க திருந்தவே இல்ல" என்று விஜய்யின் தந்தை சலித்துக்கொள்ள,

"விடுடா. ஃபிரண்ட்ஸ் ஒன்னா சேந்தாலே அப்டித்தான. நம்ம பண்ணாததா. அவங்களும் அத அனுபவிக்கட்டும்" என்று கூறிட, அவரும் அதை ஆமோதித்துப் புன்னகைத்தார். இவர்களை பார்க்கையில் தங்களது இளமைப் பருவம் நினைவுவர இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் அணைத்துக்கொண்டர்.

இங்கே, தன்யாவுக்கு முதலில் நாகவ்வின் தாய் தந்தை நலங்கு வைத்திட, அதன்பின் தோழிகளும் நலங்கு வைத்து முகத்தில் பூசிவிட்டனர். அனுயா கற்பம் தரித்து இப்போது பத்தாம் மாதத்தில் இருப்பதால் அதிகம் சிரமப்பட விடாமல் அவளை அமரவைத்தனர். சரண்யாவும் நான்கு மாதம் கருவுற்றிருப்பதால் அவளையும் அமர வைத்திட, ரம்யா பாடல் போட்டுவிட்டு நடனமாடத் தொடங்கினாள்.

காவ்யா அனுயா மற்றும் சரண்யாவுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்திட, அவளையும் இழுத்து ஆடச் சொல்லிட, முதலில் மறுத்தவள் அனைவரும் கூறிட, அவளும் ஆடத் தொடங்கினாள். ரம்யா மற்றும் காவ்யா துள்ளிக் குதித்து ஒருசேர ஆடிட, அவர்களை பார்த்து உற்சாகத்தில் தன்யாவும் அவர்களுடன் வந்து ஆடினாள். இவர்களின் நடனத்தை கண்டு பூரித்துப்போன சீதாம்மாவும் இவர்களுடன் வந்து ஆடிட, அதைப் பார்த்து அனுயா, சரண்யா மற்றும் நாகவ்வின் தந்தையும் ஆச்சரியமாகப் பார்த்தனர். அதன்பின், அந்தாக்ஷரி வைத்து விளையாடிட, ஆடல் பாடல் என்று அவர்கள் கொண்டாடினர்.

மறுநாள், சங்கீத் விழாபோல ஏற்பாடு செய்திருந்தனர். மறுநாள் திருணமும் ராமின் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்ததால் தன்யாவையும் இங்கேயே அழைத்து வந்தனர்.

தன்யாவை தோழிகள் வீட்டிற்குள் அழைத்துவர, காவ்யா வடிவமைத்த அடர்பச்சை நிறத்தில் வெள்ளை கற்கள் பதித்து அழகான எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த லெஹங்கா அணிந்து மிதமான அலங்காரத்தில் ஓவியமாய் நடந்து வரும் தன்யாவின் அழகில் மயங்கி ராம் பார்த்து நிற்க, அதே நிறத்தில் குர்தா அணிந்து ஆணழகனாய் நின்ற ராமையும் தன்யா பெருமிதமாகப் பார்த்தாள்.

நண்பர்கள் மூவரும் இதைப் பார்த்து ராமை கேலி செய்துகொண்டிருந்தனர். ராணாவின் கண்களும் சிந்தையும் தன்யாவுடன் எழிமையாக வடிவமைக்கப்பட்ட இளமஞ்சள் நிற லெஹங்காவில் மிதமான ஒப்பனையில் தேவதையாக வந்த காவ்யாவின்மீதே நிலைத்திருந்தது. அவளைவிட்டு கண்களை அணுவும் நகர்த்தாமல் பார்த்துக்கொண்டிருக்க, தற்செயலாக காவ்யாவும் பார்த்திட, இருவரும் ஒருநொடி தங்களை மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின், அருகில் இருக்கும் தோழர்களின் சத்தத்தில் தன்னிலை பெற்றிட, காவ்யா வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். ராணாவும் சந்தோசமாக நண்பர்களின் கேலியில் இணைந்துகொண்டான்.

ராமும் தன்யாவும் அழகான ஜோடியாய் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க, அருகில் நண்பர்களும் தோழிகளும் ஏற்பாடு செய்ததுபோல் விளக்குகள் அணைக்கப்பட்டு நடுவில் மட்டும் ஒளி பரவிட பாடல் ஒலிக்கப்பட்டு அனைவரும் ஜோடியாக ஆட ஆரம்பித்தனர்.

பிரபவ்வும் அனுயாவும் கைகளை பற்றியவாறு மெதுவாக இசைக்கு ஏற்றபடி அசைந்திட, நாகவ்வும் சரண்யாவும் மெதுவாக ஆடினர். விஜய் ரம்யாவின் கைகளை பற்றி அவளை சுழலவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர். சிறிதுநேரத்தில் விஜய்யும் ரம்யாவும் ராம் மற்றும் தன்யாவையும் அழைத்துவந்து ஆடவைத்திட, அருகில் நின்ற ராணா மற்றும் காவ்யாவையும் இழுத்துவந்தனர்.

ராமும் தன்யாவும் ஒருவரின் விழிகளில் மற்றவர் தொலைந்து ஆடிக்கொண்டிருக்க, காவ்யா ஆடாமல் நின்றிருக்க ரம்யா அவளை பிடித்து ராணாவின்மேல் தள்ளினாள். தடுமாறி அவன்மேல் விழுந்த காவ்யாவை தாங்கிப் பிடித்த ராணா அவளை நிற்க வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டான். தோழிகளும் நண்பர்களும் அவன் செல்வதை அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பார்த்தனர். அதன்பின் அதை மறந்து நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாடினர்.

இரவு, ராணாவை பார்க்க வந்த நண்பர்கள் அவனிடம் நேரடியாகவே கேட்டனர். "ஏன்டா காவ்யா அண்ணிகூட டான்ஸ் ஆடாம போன?" என்று ராம் கேட்டிட, மௌனமாய் இருந்தான்.

"உனக்காகவும் யோசிச்சுதான் நாங்களும் இப்டி ஒரு ஏற்பாடு பண்ணோம்" என்று விஜய் கூறிட, அதிர்ச்சியாகப் பார்த்தான், ராணா.

"ஆமாடா. நீ இப்ப காவ்யாவ எவ்ளோ டீப்பா லவ் பண்றனு எங்களுக்கும் தெரியும். ஆனா, இதுவரை நாங்க அவங்ககிட்ட இதபத்தி எதுவும் பேசினது இல்ல. அவங்கள கஷ்டப்படுத்த வேணாம்னுதான்" என்று பிரபவ்வும் கூறிட,

"இப்ப நீ வந்தப்றம் இன்னைக்கு நீங்க இரண்டுபேரும் பாத்துகிட்டீங்களே...அப்பவே எங்களுக்குப் புரிஞ்சது. அவங்களுக்கும் உன்மேல எதுவோ இருக்குன்னு. அதான் இப்டி ஒரு ஏற்பாடு பண்ணி அதுலயாச்சும் நீங்க சேர முடியுமானு பாத்தோம். ஆனா, நீதான் முறுக்கிக்கிட்டு போயிட்ட" என்று நாகவ் கூறி சலித்துக்கொள்ள,

"அவளுக்கு என்மேல காதலேகூட இருக்கலாம்டா. ஆனா, அத அவளே ஒத்துக்கிட்டு வரணும். இதுக்குமேலயும் அவள எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண விரும்பலடா. நான்தான் இத்தனநாளா என்னயபத்தி மட்டும் யோசிச்சு சுயநலமா இருந்துட்டேன். அவளோட கஷ்டத்தபத்தி யோசிக்கல. அவளுக்கு என்கூட வாழ விருப்பம் இல்லாதப்ப நான் எந்த விதத்திலயும் கட்டாயப்படுத்தமாட்டேன். அவளபத்தி நினச்சே வாழ்ந்துருவேன். அவ சந்தோசமா இருந்தாலே போதும்.
அவளுக்கு நான் எந்த விதத்திலயும் தொந்தரவா இருந்திடக்கூடாதுனு தான்டா நான் உங்களையெல்லாம் விட்டுட்டு ஃபாரின் போனேன். அப்றம் எப்டி நான் அவளுக்கு சங்கடத்த கொடுப்பேன்?" என்று ராணா அமைதியாகக் கூறிட, நண்பர்கள் நால்வரும் அவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

இத்தனை வருடங்களாக, தனக்கு ஒன்று சரியென்று பட்டுவிட்டால் அதை மட்டுமே செய்பவன், பிறரைப் பற்றி யோசித்திடாதவன், கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே தெரியாதவன் இன்று இத்தனை பொறுமையாகப் பேசுவதையும் காவ்யாவின் நிலைபற்றியும் சிந்தித்துப் பேசுபவனை பார்க்கும்போது இவர்களுக்குப் பெருமையாக இருந்தது. அவனது காதலின் ஆழமும் நன்றாகத் தெரிந்தது. கண்கள் கலங்கிட ராணாவை அனைத்துக் கொண்டனர்.

தோழிகள் ஐவரும் ஒரே அறையில் இருக்க, அமைதியாக அமர்ந்திருந்த காவ்யாவை பார்த்தவர்கள், "என்னாச்சுடி? எதுக்காக இப்டி அமைதியா இருக்க" என்று அனுயா கேட்டிட,

"எதுக்காகவா இருக்கும். எல்லாம் ராணா இவளவிட்டு போனாரே.. பங்ஷன்ல. அதுக்காகத்தான காவி?" என்று சரண்யா கூறிட, அவளை காவ்யா திரும்பி முறைத்திட, அவள் அமைதியானாள்.

"அப்றம் எதுக்கு இப்டி இருக்க? என்னாச்சு?" என்று தன்யாவும் கேட்டிட,

"உங்கள நினச்சுதான் இப்டி இருக்கேன்" என்று கூறியதை கேட்டு குழம்பிப்போய் எதுக்கென்று விசாரிக்க,

"நானும் அவனும் சேரணும்னு நீங்க நினைக்கிறீங்களா? சொல்லுங்க..." என்று அவர்களை அழுத்தமாகப் பார்த்துக் கேட்டிட, அதிர்ச்சியடைந்து பார்த்தவர்கள் அமைதியாக இருந்திட,

"சொல்லுங்கடி...நான் அவன்கூட மறுபடியும் சேர்ந்து வாழணும்னு நீங்க நினைக்கிறீங்களா? அதனாலதான் ரம்யா! நீ என்னய அவன்மேல தள்ளிவிட்டியா?" என்று கோபமாகக் கேட்டிட,

"ஆமாடி. உண்மைதான். நீயும் அவரும் சேர்ந்து வாழணும்னு நாங்க ஆசப்படுறோம். அதுக்காகத்தான் நானும் உன்னய அவர்மேல தள்ளிவிட்டேன்" என்று ரம்யாவும் அழுத்தமாகக் கூறிட, காவ்யா அதிர்ந்தாள்.

"அதுவும் உனக்காகத்தான்டி. எதுக்காக உன்னய நீயே ஏமாத்திட்டு இருக்க?" என்று ரம்யா கூறியதை கேட்ட மற்ற தோழிகளும் அதிர்ந்தனர். என்னவென்று விசாரித்திட, ரம்யா ஆறு மாதங்களில் நடந்தவற்றை கூறத் தொடங்கினாள்.

****************************************

ராணாவுக்கும் காவ்யாவுக்கும் விவாகரத்து முடிந்து ராணாவும் வெளிநாடு சென்றுவிட, முதல் சிலநாட்கள் காவ்யா நிம்மதியாக இருந்தாள். அவளது தொழில், தோழிகள், நண்பர்கள், பெற்றோர்கள் என்று மிகவும் ஆனந்தமாகச் சென்றது. அவள் கடந்தகாலத்தை முழுவதும் மறந்திருந்தாள். ஆனால், அவளது குழந்தையின் நினைவு வரும்போதெல்லாம் மனம் பாரமாகும். அந்த நேரங்களில் அவளது சிந்தை அவளிடம் கூறுவது ஒன்றே...

'முதல்ல அந்தக் குழந்தைய நீயே கொல்றதுக்குத்தான இருந்த. இப்போ மட்டும் எதுக்காகக் கவலப்படற? நீ நினச்சமாறி அபார்ட் பண்ணிருந்தாக்கூட இப்போ அந்தக் குழந்தை இருந்திருக்காது. அதேமாறிதான் இப்பவும் இருக்கு. அந்தக் குழந்தை நீ மறக்க நினச்ச உன்னோட கடந்த காலத்தோட அடையாளம். அதான் அதுவே உன்ன கஷ்டப்படுத்தாம போயிடுச்சு. அந்தக் குழந்தைக்காகத்தான அவன பொறுத்துகிட்ட. இப்ப அந்தக் குழந்தையும் இல்ல அவனும் இல்ல உன் வாழ்க்கையில. உன்னோட வாழ்க்கைய புதுசா தொடங்கு' என்று உரைத்திடும் நேரங்களில் அவள்மீதும் அவளுக்கு வெறுப்பு தோன்றியது.

"நான் என்ன பண்ணுவேன்? அவன்மேல இருந்த வெறுப்பும் அந்த சம்பவமும்தான் என்னய அப்டி பண்ண வச்சது" என்று இவள் தனக்குள் கூறிட,

'இப்பவரைக்கும் அதே வெறுப்புத்தான இருக்கு அவன்மேல. அவனோட குழந்தை மட்டும் வேணுமா?' என்று மூளை உரைத்தது.

"அது என்னோட குழந்தையும்தான்" என்று இவள் கூறிட, 'அதை நீ முன்னாடியே நினைச்சிருந்தா அபார்ட் பண்ண யோசிச்சிருப்பியா?' என்று உள்மனம் உரைத்திட, உண்மை வலித்திட கண்கலங்கினாள்.

'அவன் அவனோட கோபத்தால தெரியாம அந்த குழந்தை பலியானது தப்புனா...நீ உன்னோட கோபத்தால தெரிஞ்சே கொல்லப் பார்த்தது தப்பில்லையா?' என்று உள்மனம் கேட்கும் கேள்விக்கு இவளிடம் பதில் இல்லாமல் சிலையாகினாள்.

இவ்வாறு அவளிடம் அவள் மனமே கேட்கும் கேள்விகளால் அவள்பக்கமும் இருக்கும் தவறை உணர்ந்தாள். குழந்தையின் இறப்பிற்கு ராணாவின் மீதே முழு பலியையும் கூறுவதும் நியாயம் இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டாள். அது விதியின் செயல் என்று எண்ணி அவளை தேற்றிக்கொண்டாள்.

ராணா இவளை படுத்திய கொடுமைகளை அவனுடன் இருக்கும்போதே இவள் ஏற்றுக்கொண்டு கடந்து வந்திருக்க, காலங்கள் கடந்து இவளும் முழுவதுமாக மீண்டிருந்தாள். அவனும் விவாகரத்து அளித்துச் சென்றதில் அவன்மீது இருந்த வெறுப்பும் எப்போதோ நீங்கியிருந்தது. நாளடைவில் ராணாவின்மீது அவள் கொண்டிருந்த கோபமும் முழுவதுமாக நீங்கி அவன்மீது எந்த தனிப்பட்ட உணர்வுகளும் இல்லாத நிலைக்கு வந்திருந்தாள். ராணா கூறியதை போலவே ராணா என்ற ஒருவன் அவனது சிந்தையிலும் நினைவுகளிலும் இல்லாமலே போயிருந்தான். அவள் வாழ்க்கை புதிதாகத் தொடங்கியிருந்தது.

ஆனால், அவன் இவளுக்கு அளித்திருந்த உறவுகளின் பந்தத்தைவிட்டு இவள் அகலவில்லை. அடிக்கடி நண்பர்களின் வீட்டிற்குச் சென்று பெரியவர்களை பார்த்துவிட்டு வருவாள். அந்த சமயங்களில்கூட அவளிடம் ராணாவை பற்றி எதுவும் பேசிடமாட்டார்கள். ஆனாலும் எப்போதாவது இவன் நண்பர்கள் அவனிடம் அலைபேசியில் பேசுவதை கேட்டு இவளுக்குச் சிறிதாகக் குற்ற உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது. தன்னால்தானே நண்பர்கள் இவ்வாறு பிரிந்திருக்கின்றனர் என்றும் தன் குடும்பத்தைவிட்டு நாடுகள் கடந்து எங்கோ அவன் சென்றிருக்கிறான் என்றும் தோன்றிட அவளுக்குள் வருத்தம் மேலிட்டது.

காவ்யாவின் மனம் பாரமாக அவளுக்கு நினைவில் அவள் குழந்தையின் கல்லறை நினைவு வந்தது. அங்கே சென்று இருந்து வரலாம் என்று எண்ணியவள் ராணாவின் வீட்டுக்குச் சென்றாள். அங்கே சென்றவள் கல்லறைக்குச் சென்று பார்த்திட, இன்றும் எப்போதும்போல் பராமரிக்கப்பட்டு அழகாக இருந்தது. அதன் அருகில் அமர்ந்தவள் சிறிதுநேரம் ஏனென்று தெரியாமலே அழுது தீர்த்தாள். சிலநிமிடங்கள் கழித்து மனதில் கொஞ்சம் நிம்மதி பரவியது.

அங்கிருந்து எழுந்தவள் வீட்டை பார்த்து உள்ளே செல்ல எத்தனிக்க, அவனுக்கும் தனக்குமே எந்த சம்பந்தமும் இல்லாதபோது வீட்டிற்குள் எதற்காகச் செல்லவேண்டும் என்று உள்மனம் கூறிட, அப்படியே வாசல் நோக்கித் திரும்பிச் சென்றாள். வேலையாளிடம் கடைக்குச் செல்லச்சொல்ல வீட்டு வாசலுக்கு வந்த கமலாம்மா காவ்யா செல்வதை பார்த்து அவளை அழைத்தபடி ஓடிவந்தார்.

சத்தம்கேட்டுத் திரும்பியவள் அவரை பார்த்ததும் சந்தோசமாக அணைத்துக்கொண்டாள். அவள் எவ்வளவு மறுத்தும் அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர் அவளுக்குத் தேனீர் போட்டுக் கொடுத்து வற்புறுத்தி குடிக்க வைத்தார். அவளும் அவர் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து குடித்தவள் சிறிதுநேரம் பேசிவிட்டுக் கிளம்ப எத்தனித்தாள்.

"என்னம்மா? உடனே கிளம்பணும்ங்குற. இது உன் வீடுதானம்மா. இருந்துட்டு போகலாம்ல" என்று கூறிட,

"அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டும்மா. இப்ப அவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. டிவோர்ஸ் வாங்கிட்டோம். உங்களுக்குத் தெரியும்தானம்மா?" என்று பொறுமையாகக் கூறிட,

"நல்லாத் தெரியும்டா. நீ இல்லாதது எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா? ஆனாலும் நீ சந்தோசமா இருக்கங்கற நினைப்புல நானும் என்னய சமாதானப் படுத்திகிட்டேன். ஆனா, நீ இப்ப இங்க வந்திருக்கன்னா நீ ஏதோ கவலைல இருக்கதானமா? என்ன கவலைடா?" என்று அக்கறையாகக் கேட்ட கமலாம்மாவை ஆச்சரியமாகப் பார்த்தாள், காவ்யா.

"நான் கவலைல இருக்கேன்னுதான் இங்க வந்தேன்னு உங்களுக்கு எப்டி தெரியும் கமலாம்மா?" என்று வியந்து கேட்டிட, புன்னகைத்தவர்,

"எல்லாத்தையும் ராணா தம்பிதான் சொன்னாரு. உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சுன்னும் இனிமேல் நீ இங்க வரவே மாட்டனும் சொன்னாரு. நீ சந்தோசமா வேற வாழ்க்கையை அமைச்சிகிட்டு வாழணும்னு அவரும் சொன்னாரு. ஆனா, எப்பயாச்சும் நீ இங்க வந்து பாப்பா கல்லறையை பாத்துட்டுப் போனா அப்ப நீ ஏதோ கவலைல இருப்பனும் அப்ப உன்னய பாத்தா கூப்டு ஆறுதலா பேசி உன்னய சமாதானப்படுத்தணும்னு தம்பி சொன்னாருமா. அதேபோல இத்தன நாளும் இல்லாம இப்ப நீ வந்தியா அதான் எனக்கும் அப்டி தோனி கேட்டேன்மா. எதாச்சும் கவலையாமா?" என்று பொறுமையாகக் கூறிட, காவ்யா அதிர்ச்சியில் விழிவிரித்திட, அவள் கண்களில் நீர் கசிந்தது.

"என்னம்மா சொல்றீங்க? இதுலாம் உண்மையா? இப்படிலாம் அவரு சொன்னாரா உங்ககிட்ட?" என்று கண்கலங்கிட கேட்க,

"ஆமாம்மா. எதுக்காக சொன்னாருனு அப்ப தெரியலமா. இப்ப நீ வந்தத பாக்கும்போதுதான் அன்னைக்கு அவரு சொன்னது எவ்ளோ உண்மைனு தெரியுது. அவருக்கு வெளிநாடு போகவே இஷ்டமில்லமா. விருப்பமே இல்லாமத்தான் போனாரு. போகுறவர பாதிநேரம் பாப்பாவோட தோட்டத்துலதான் இருப்பாரு. சரியா சாப்டல. தூங்கல. அவரு முன்னப்போலயே இப்ப இல்லடாம்மா. அவர இத்தன வருசத்துல இப்டி ஒருநாளும் நான் பாத்ததில்ல. அந்தளவுக்கு மாறிட்டாரு. யார்கிட்டயும் இப்பலாம் கோபப்படறதுகூட கிடையாது" என்று சொல்லிக்கொண்டே போக, காவ்யாவுக்குமே அது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இவளால்தான் ராணா வெளிநாடு சென்றான் என்று அறிந்தே குற்ற உணர்ச்சியில் இருந்தவளுக்கு அவன் விருப்பமில்லாமல் சென்றதாய் கூறியது மேலும் வருத்தத்தை அளித்தது. தன்னால் யாரும் சங்கடப்படுவதோ காயப்படுவதோகூட அவளுக்குப் பிடிக்காது. ஆதலால், இதை எண்ணி வருத்தம் கொண்டாள்.




❤வருவாள்❤...
 
💕அவள் 25💕


காவ்யாவுக்கு ஏனோ அவள் இருந்த அறைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றிட, கமலாம்மாவிடம் கூறிவிட்டு அங்கே சென்றாள். அவள் அறை என்றும்போல் இல்லாமல் சற்று தூசிபடிந்து இருந்தது. அவன் இல்லாமல் யாரும் இங்கு வரக்கூடாது என்ற உத்தரவின் பெயரில் யாரும் இந்தப்பக்கம் கூட வருவதில்லை. ஆதலால், அறை அவன் விட்டுச் சென்றதுபோல் அப்படியே இருந்தது.

இவள் உள்ளே சென்று பார்த்திட, மெத்தையில் அவளது புடவை ஒன்று கிடந்ததை பார்த்தவள் அருகில் சென்று அதை எடுக்க அதிலிருந்து அவள் புகைப்படம் ஒன்று கீழே விழுந்தது. மெத்தையில் இருந்த தலையணை, போர்வை என்று எதுவும் மடிக்கப்படாமல் இருந்ததை வைத்தே அதனுடன் புடவை இருந்தக் காரணத்தையும் அறிந்துகொண்டாள்.

ஏனெனில் ராணா இத்தனை நாட்களும் இவள் புடவையை அணைத்தவாறே தூங்குவான். அதை இவளும் உணர்ந்திட, இத்தனை நாட்கள் அவன் கொண்ட காதல் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அதற்குமேல் அவளால் தாங்க முடியாமல் அமர்ந்து அழுதாள்.

"எதுக்காக நான் உன்னய தப்பா நினச்சேன்? எதுக்காக நமக்குள்ள சண்ட வரணும்? உன்னய அடிக்கணும். நீ எதுக்காக என்னய பழி வாங்கணும்? ஏன் நம்மளோட சந்திப்பு கோபத்துல நடந்துச்சு? எதுக்காக நம்மளோட உறவு வெறுப்புல தொடங்குச்சு? இது எதுவும் நடக்காம இருந்திருந்தா நீயும் நானும் வேறமாதிரி சந்திச்சிருந்தா இப்போ நாம சந்தோசமா இருந்துருக்கலாமே..." என்று கூறியவள் அடக்கமாட்டாமல் அழுது தீர்த்தாள்.

எவ்வளவுநேரம் அழுதாள் என்று அவளே அறியாமல் அழுதவள் அதன்பின் எழுந்து வெளியே வந்தாள். அழுததால் முகம் வீங்கியிருக்க, கமலாம்மாவின் முகத்தைக்கூட சரியாகப் பார்க்காமல் கூறிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் யாரும் இல்லாததால் அவளறைக்குச் சென்று அடைந்துகொண்டாள். அன்று முழுவதும் அறையைவிட்டு வெளியே வரவும் இல்லை. உணவும் உண்ணாமல் படுத்தபடியே கிடந்தாள். அவள் தோழிகளும் விசாரித்திட, அதிக வேலையின் காரணமாக ஏற்பட்ட சோர்வு என்று கூறி சமாளித்தாள். அப்படியே உறங்கியும் போனாள். மறுநாள் காலை நேரமாகியும் எழாமல் இருப்பதை கண்டு தோழிகள் ரம்யா மற்றும் தன்யா வந்து எழுப்பிட, அவளுக்கு காய்ச்சல் இருப்பதை அறிந்து அதிர்ந்தனர்.

தன்யா அவளை சோதித்துப் பார்த்து மருந்து எடுத்து வைத்திட, ரம்யா அவளுக்கு உணவையும் மருந்தையும் கொடுத்து ஓய்வெடுக்க வைத்தனர். அவர்கள் உடன் இருப்பதாய் கூறியதையும் மறுத்து அவர்களை வேலைக்கு அனுப்பி வைத்தாள். சோர்வில் கண்ணயர்ந்தவளின் நினைவுகளில் கடைசியாக ராணா அவளை அணைத்து முத்தமிட்டுச் சென்றது தோன்றிட, படக்கென கண்விழித்து எழுந்தாள். அப்போதே அவன் அணைப்பிலும் தந்த முத்தத்திலும் தெரிந்த காதலை உணர்ந்தாள். அவன் கூறிச் சென்ற "ஐ லவ் யூ" வில் இருந்த அவனது காதலின் ஆழமும் பிரிவின் ஏக்கமும் இப்போது புரிந்திட, கண்கள் கண்ணீரை சிந்தியது.

இரண்டு நாட்கள் கழித்தே காய்ச்சல் குணமாகித் தேறினாள். அதன்பின் ஒவ்வொரு நொடியும் பாரமாக உணர்ந்தாள். நாட்கள் நகர்ந்திட, மனம் எதை நாடுகிறது என்றே தெரியாமல் எதையோ தொலைத்ததுபோல காணப்பட்டாள். இவளது நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்த தன்யாவும் ரம்யாவும் குழம்பினர். இப்போது அவள் அடிக்கடி ராணாவின் வீட்டிற்கும் சென்று வருவதை ரம்யா ஒருநாள் பின்னே சென்று அறிந்துகொண்டாள். அதை அவளிடமே கேட்டும் விட்டாள்.

"எதுக்காக காவ்யா இப்பலாம் அடிக்கடி ராணா வீட்டுக்குப் போற?" என்று ரம்யா அவளை கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, அவளும் அவள் குழந்தையின் கல்லறை பற்றியும் அவள் அங்கே செல்வது பற்றியும் கூறிட, ரம்யாவும் அதிர்ந்தவள் பின் வருந்தினாள்.

"சாரிடி. ஆனா...இத இத்தனநாளும் எங்ககிட்ட சொல்லவே இல்லயேடி" என்று வினவிட,

"அத பாத்துட்டு வந்தப்ப உங்ககிட்ட சொல்ற நிலைமைல நான் இல்ல. அதுக்கப்றம் அத சொல்றதுக்கான அவசியம் ஏற்படல. அப்றம் அத சொல்லி உங்களையும் கஷ்டப்படுத்த வேணானு விட்டுட்டேன். எனக்கு மனசு ரொம்ப பாரமா இருந்தா அங்க போனா சரியாகிடும். அதான் போவேன். அவ்ளோதான்" என்று கூறிட,

"அப்டி என்னடி உனக்கு மனசு பாரமா இருக்குனு இப்பலாம் அடிக்கடி அங்க போற?" என்று ரம்யா சந்தேகமாகக் கேட்டிட, காவ்யா அதிர்ந்து விழித்தாள். அவளை பார்த்தவளுக்கு ஏதோ தவறாகப்பட,

"என்னனு சொல்லு காவி. உனக்கு இப்ப என்னவோ பிரச்சினை இருக்கு. அதனாலதான் இப்பலாம் நீ நார்மலாவே இல்ல. என்னனு சொன்னாத்தான தெரியும். உனக்கும் ரிலாக்ஸா இருக்கும். சொல்லுடி" என்று கேட்டிட, அப்போதும் மௌனமாய் இருப்பதை பார்த்து,

"இப்போ நீ சொல்லப்போறியா? இல்ல நான் நம்ம ஃப்ரண்ட்ஸ கூப்டவா? அவங்க எல்லாரும் கேட்டா நீ சொல்லித்தான ஆகணும்..." என்று வேறு வழியின்றி மிரட்டலாகக் கேட்டிட, அவளும் பதறியவள்,

"வேணாடி. அவங்ககிட்ட சொல்லவேணா. நான் இப்டி இருக்கிறதும் தெரியவேணா. இப்ப அவங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத" என்று கூறிட,

"அப்போ நீ உண்மையை சொல்லு. எதையாச்சும் மறைக்கணும்னு நினச்சாலோ எனக்கு பொய்னு தோனினாலோ நான் அவங்ககிட்ட சொல்லிடுவேன். பாத்துக்கோ" என்று எச்சரிக்கை விடுத்திட, காவ்யாவும் சம்மதித்து முழுவதையும் கூறி முடித்துக் கண்கலங்கி நின்றாள். இவள் கூறியதை கேட்ட ரம்யாவுக்கு அதிர்ச்சி, வியப்பு, வருத்தம், ஆனந்தம், உற்சாகம், இயலாமை என்று அனைத்தும் சேர்ந்து அவளை தாக்கியது.

"என்ன சொல்ற காவ்யா? அப்போ...நீ ராணாவ லவ் பண்றியா...?" என்று நேரடியாகக் கேட்டிட,

"அதெல்லாம் எனக்குத் தெரியலடி. ஆனா, அவன் என்னய எவ்ளோ லவ் பண்றானு புரியுது. என்னய எவ்ளோ மிஸ் பண்றானும் தெரியுதுடி. ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோனு தோனுது..." என்று கூறிட,

"ஆனா...அவருதான் உன் வாழ்க்கைய கெடுத்தவராச்சே...உன்னோட குழந்தை சாகுறதுக்குக்கூட அவர்தான காரணம். அப்டி இருக்கும்போது அவரு கஷ்டப்படுறது உனக்கு வருத்தமா இருக்கா?" என்று பொறுமையாகக் கேட்டிட,

"அவன் எனக்கு பண்ணதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்டி. அவன்கூட இருக்கும்போதே அதுல இருந்து மீண்டு வந்துட்டேன். அவன்மேல எனக்குத் இருந்த கோபத்துக்கான காரணம் குழந்தையோட இறப்புதான். ஆனா, அதுல அவன மட்டும் எப்டி தப்பு சொல்லமுடியும்? நடக்கணும்னு இருக்கிறத யாராலயும் மாத்தமுடியாது. எங்க குழந்தை எங்களவிட்டு போகணும்னு இருந்திருக்கு. அவ்ளோதான். அவனும் அந்தக் குழந்தைமேல எவ்ளோ பாசம் வச்சிருந்தானு எனக்குத் தெரியும். ஆனா, அதுமேல உயிரையே வச்சிருந்தது அவன் ஃப்ரண்ட்ஸ் சொன்னப்றம்தான் தெரிஞ்சுகிட்டேன். அவனும் ரொம்ப கஷ்டப்பட்டுருப்பான்ல..." என்று கூறியவள் கண்கலங்கிட, அதை ரம்யா வியப்பாகப் பார்த்தாள்.


"ஆனா இதெல்லாம் ஏற்கனவே உனக்குத் தெரியுமே...அவரு ஃபாரின் போனப்பக்கூட நீ எந்தக் கவலையும் இல்லாமதானடி இருந்த...இப்ப என்னடி புதுசா வருத்தப்படற? அதான் லவ் பண்றியானு கேக்குறேன்" என்று கேட்டிட,

"எனக்கு அப்பலாம் அவன்மேல ஒரு கோபமும் சின்ன வெறுப்பும் இருந்துச்சு. அதனால எதையுமே யோசிக்கலடி. எனக்கே ஒருநாள் நான் பண்ண தப்பு புரிஞ்சுது. அதுக்கப்றம்தான் அவன் பக்கத்து நியாயமும் வருத்தமும் புரிஞ்சுது. இதுக்குப்பேரு லவ்னு சொல்லவானு தெரியல. லவ்வா இருக்கணும்னு அவசியமும் இல்லடி. நாங்க இரண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தா அது எங்க இரண்டு பேருக்கு மட்டுமில்லாம எங்கள சேந்தவங்களுக்கும் கஷ்டம்" என்று கூறி வருந்திட,

"என்னடி சொல்ற? உங்க லைஃப் நீங்க வாழப்போறீங்க. இதுல என்ன கஷ்டம்?" என்று கேட்டிட,

"நாங்க இரண்டுபேருமே கோபத்துல என்ன பண்ணுவோம்னே தெரியாம நடந்துப்போம். அதனால எங்கள சார்ந்து இருக்கிறவங்களுக்கும் கஷ்டம்தான..இப்பலாம் அவன் அதிகமா கோபப்படறதே இல்லயாம். ஆனா, நான் அப்படி இல்லயே..இன்னும்கூட என்னால கோபத்த கட்டுப்படுத்த முடியல. அதனாலதான நான் அவன அன்னைக்கு அப்டி அடிச்சேன். கோபப்பட்டேன். ஆனாலும் அவன் கொஞ்சம்கூட கோபப்படாம பொறுமையா பேசுனான். நான் விரட்டியும் கோபப்படாம கிளம்பிட்டான். அவன் மாறிட்டான். ஆனா, நான் மாறல.." என்று பழைய நினைவுகளில் வருந்தியபடி கூறிட,

"அப்டிலாம் ஒன்னுமில்ல. நீங்க இரண்டுபேரும் கோபக்காரங்களா இருந்தாக்கூட உங்களுக்கிடையில லவ் இருந்தா எந்தப் பிரச்சினையுமே வந்திருக்காதுடி. இனியும் வராது. இப்பக்கூட நீ மட்டும் கோபக்காரியா இருந்தா என்ன? அவரு உன்னய பொறுத்துப் போகும்போது வாழ்க்கை அழகாத்தான்டி இருக்கும். நீ அதையெல்லாம் யோசிச்சுகிட்டு உன் வாழ்க்கைய கெடுத்துக்காத. உண்மைய சொல்லு. நீ அவர விரும்புறியா? உனக்கு அவர்கூட வாழ ஆசையிருக்காடி?" என்று பொறுமையாகக் கூறி ஆர்வமாகக் கேட்டிட,

"என்னய இப்ப எதுவும் கேட்காதடி. என்னால எந்தத் தெளிவான பதிலும் சொல்லமுடியாது. ஒருவேள அவன நான் இந்த சூழ்நிலையில பாக்காம வேறமாறி பாத்திருந்தா கண்டிப்பா லவ் பண்ணிருப்பேனோனு தோனுது..இப்ப எல்லாமே முடிஞ்சுபோச்சு. இதுக்கப்றம் அத மறுபடியும் ஆரம்பிக்க பயமா இருக்குடி..." என்று வருந்திக் கூறியதை கேட்டவள்,

"அப்போ அவர விடு. நீ உன்னோட புது லைஃப ஆரம்பிடி. அது யார்கூடவா இருந்தாலும் ஓகேதான். நீ கல்யாணம் பண்ணி சந்தோசமா இருந்தாதான்டி எங்களுக்கும் சந்தோசம். எப்ப கல்யாணம் பண்ணிக்கப்போற? இந்தக் கேள்விய நாங்களும் உனக்கு டிவோர்ஸ் ஆன கொஞ்ச நாள்லயே கேட்டோம். நீதான் டைம் கேட்ட. கொடுத்தோம். இப்ப சொல்லு. என்ன முடிவு பண்ற?" என்று தீர்க்கமாகக் கேட்டவளை அதிர்ச்சியாகப் பார்த்தவள்,

"அதான் சொன்னேனே. இப்ப எந்த தெளிவான முடிவும் எடுக்கமுடியாதுனு..." என்று சோர்ந்து கூறிட,

"அப்ப உனக்கு இன்னும் கொஞ்சநாள் டைம் தரேன். அதுக்குள்ள நீ உன் முடிவ சொல்லியே ஆகணும். அப்றமா உனக்கு மாப்ள பாக்க ஸ்டார்ட் பண்ணிடுவோம்" என்று கூறிவிட்டுச் சென்றிட, காவ்யா முழுவதும் சோர்ந்துபோய் அமர்ந்தாள்.

காவ்யாவுக்கு மறுதிருமணம் செய்து கொள்வதை பற்றி எண்ணும்போதே மனம் மறுத்தது. ராணாவின் இடத்தில் வேறொருவரை வைத்துப் பார்க்க அவளுக்குத் துளியும் பிடிக்கவில்லை. ஆனால், இதை காதல் என்று ஏற்றுக்கொள்ளவும் அவள் மறுத்தாள். ஆனால், அவனது அணைப்பும் தந்த முத்தமும் கூறிய காதல் வார்த்தைகளும் அவளுக்கு மகிழ்ச்சியை தந்தது. அதை நினைத்தபடியே நாட்களை உற்சாகமாகக் கழித்தாள்.

****************************************

அனைத்தையும் ரம்யா கூறி முடித்திட, தோழிகள் மூவரும் அதிர்ச்சியில் சிலையென அமர்ந்திருந்தனர். காவ்யா அவர்களை ஏறிட்டும் பார்க்காமல் தலைகவிழ்ந்தபடியே அமர்ந்திருந்தாள். அவளை அதே அதிர்ச்சியுடன் பார்த்தவர்கள்,

"அம்மாடி காவ்யா! தரைய அளந்தது போதும். கொஞ்சம் எங்கள நிமிர்ந்து பாக்கிறியா?" என்று சரண்யா நக்கலாகக் கூறிட, அவளை நிமிர்ந்து அப்பாவியாகப் பார்த்தவளை பார்த்து,

"பால் வடியுதுடி. தொடச்சிக்கோ. இவ்ளோ...நடந்திருக்கு. எங்ககிட்ட எதையும் சொல்லாம மறைச்சிருக்கல்ல. உன்னயலாம்...கடிச்சே சாவடிக்கணும்டி. ஆனா, என் வயித்துல இருக்க புள்ளைக்கு ஆபத்தேனு சும்மா விடுறேன்" என்று சரண்யா கடுப்பாகிக் கூறியதை கேட்டு காவ்யா விழிவிரித்தாள்.

"என்ன முழிக்கிற? நீ எதையோ பறிகொடுத்தமாறி திரிஞ்சப்பவே நான் டவுட் ஆனேன். ஆனா, இப்டி இருக்கும்னு நான் சத்தியமா நினைக்கலடி. அடியே...ரம்மி! உனக்குக்கூட என்கிட்ட சொல்லணும்னு தோனலல. கூடவே இருந்தவள பிரிச்சு வச்சுட்டீங்கல்ல..போங்கடி.." என்று தன்யா கோபித்துக்கொள்ள,

"சாரிடி. இவதான் சொல்லவேணானு சொன்னா. அதான். சாரிடி செல்லம்" என்று ரம்யா கூறி சமாதானப்படுத்தினாள்.

"அப்போ! நீ ராணாவ லவ் பண்றனும் ஒத்துக்க மாட்ட. வேற கல்யாணமும் பண்ணிக்கமாட்ட. அப்டித்தான?" என்று அனுயா கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, காவ்யா மௌனத்தையே பதிலாக அளித்தாள்.

"இப்டித்தான்... எப்ப கேட்டாலும் எதுவும் சொல்லமாட்டா. ஆனா, இவ அவர லவ் பண்றானு எனக்கு நல்லா புரிஞ்சது. அதான், இவளா ஒத்துக்கட்டும்னு கல்யாணத்த பத்தி டைம் முடிஞ்சதும் பேசினேன். ஆனா, அப்பதான் இவ விஜய்க்கும் எனக்கும் பஸ்ட் கல்யாணம் பண்ணி வைக்க
ப்ளான் போட்டுட்டா. அது அப்டியே ராம் பக்கம் திரும்ப இவ எஸ்கேப் ஆயிட்டா. இப்போ..ராணாவ இவ பாத்தப்பக்கூட இவ கண்ணுல லவ்வ பாத்தேன். அதனாலதான் அந்த டான்ஸ்ல இவங்கள நிக்கவச்சு இவள அவருமேல தள்ளிவிட்டேன். ஆனா, அவரு சொதப்பிட்டாரு" என்று ரம்யா கூறி சலித்துக்கொள்ள, மற்றவர்கள் இவ்வளவு நடந்திருக்கிறதா என்று வியந்தனர்.

"அதான் இவளும் சாதாரணமா நின்னாளா? நான்கூட ஆச்சரியப்பட்டேன். கோபமா போகாம நின்னாளேனு. அது கூட்டத்துல அசிங்கப்படுத்த வேணானு நினச்சு நிக்கிறானு நினச்சுட்டேன்டி..." என்று சரண்யா கூறிட,

"அதுக்காகவும்தான். அவன்கூட போய் டான்ஸ் ஆடணும்னு நான் ஒன்னும் நினைக்கல. அவனுக்கும் அது புடிக்கலபோல. அதான் போயிட்டான்" என்று கூறி காவ்யா இதழை சுளித்துக்கொள்ள, அதில் தோழிகள் கடுப்பாகிட,

"அடியே...ஏன்டி? முழு பூசணிக்காய சோத்துல மறைக்க பாக்குற? லவ் பண்ணா லவ் பண்றேன்னு சொல்றதுல உனக்கு என்னடி வந்துச்சு? அவருக்கு புடிக்கலனு உனக்குத் தெரியுமா? சும்மா இருடி.." என்று தன்யா சலித்துக்கொள்ள,

"அவளாவது ஒத்துக்கிறதாவது. நானும் கிட்டதட்ட மூனு மாசமா போராடிட்டேன்டி. அவ வாய தொறந்து சொல்லவே மாட்டிக்கிறா...அதான் நானே களத்துல இறங்கி வேலை செஞ்சேன். அதுவும் ஃபெய்லியர். ஹும்.." என்று சளைத்துக்கொண்டாள், ரம்யா.

"இப்பவும் அதான்டி சொல்றேன். இது லவ்வா இருந்தாலும் பரவால்ல. நாங்க இரண்டுபேருமே ஒருத்தர ஒருத்தர் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம். இதுக்கப்றமும் சேர்ந்து வாழ்ந்து ஹர்ட் பண்ணிக்க விரும்பல. இப்டியே இருந்துடலாம்னு இருக்கேன். விட்டுருங்கடி" என்று கூறிட,

"நீ ஏன்டி முதல்ல இருந்து ஆரம்பிக்கிற? அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன்னு சொன்ன. அப்றம் எதுக்கு அதை இழுக்குற? அத விடு. உன்னால அவரில்லாம வாழ முடியுமா?" என்று சரண்யா கேட்டிட,

"முடியும்டி" என்று தீர்க்கமாகக் கூறியதை கேட்டு நொந்திட, "அப்போ! வேற கல்யாணம் பண்ணிக்கோ. நீ உன் புருசனோட குழந்த பெத்துகிட்டு சந்தோசமா வாழணும். அதான் எங்களுக்கு வேணும். பண்ணிப்பியா?" என்று தன்யா கேட்டிட, உடனடியாக மறுத்தவள்,

"அது முடியாதுடி. என்னால அவனத்தவிர வேற யாரையும் அந்த இடத்துல வச்சு பாக்கமுடியாது. அவன்மேல நான் வெறுப்பா இருந்தப்பவே அவனோட அன்பு என்னய பாதிச்சிருக்கு. இப்ப அவன்மேல எந்த வெறுப்பும் இல்ல. என்னால எப்டி அவன்கூட வாழ முடியாதோ அதேமாறிதான் வேற யாரையும் நினச்சுக்கூட பாக்கமுடியாது" என்று உறுதியாகக் கூறிட,

"இது எல்லாத்துக்கும் அவருதான காரணம். அவரு பண்ண தப்பாலதான உன்னோட வாழ்க்கையே இப்ப கேள்விக்குறி ஆயிட்டு.." என்று அனுயா வேண்டுமென்றே கோபமாகக் கூறிட,

"அப்படி இல்லடி. அவன்மேல வெறுப்பா இருந்தாக்கூட என்னால வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருக்க முடியும். ஆனா, இப்ப அவன்மேல எனக்கு அன்புதான் இருக்கு. இதத் தாண்டி எதைபத்தியும் யோசிக்கமுடியல. இதோட இதை விட்ருங்கடி" என்று கூறி அறையைவிட்டுச் சென்றுவிட்டாள்.

"விடுங்கடி. அவளுக்கு அவர்மேல இருக்க காதல ஒத்துக்கிறதுல எந்த தயக்கமும் இல்ல. ஆனா, ஏதோ ஒன்னு அவள தடுக்குது. அவர்கூட லைஃப ஸ்டார்ட் பண்றதுக்கு அவளுக்கு இன்னும் டைம் தேவைப்படுது. அவளுக்கு நம்பிக்கை வரணும். அவர்கூட வாழ்ந்தா சந்தோசமா இருப்போம்னு. அப்பதான் அவ ஒத்துக்குவானு நினைக்கிறேன். இதுவரை அவர நேர்ல பாக்காம இருந்தா. இப்பதான் அவரே வந்துட்டாரே. சீக்கிரம் புரிஞ்சுப்பா. அவருதான் புரிய வைக்கணும் இவளுக்கு. காலம் இவ்ளோதூரம் மாத்திருக்கு. இனியும் நல்லபடியா மாத்தும்னு நம்புவோம்" என்று அனுயா கூறி ஆறுதல்படுத்திட, மற்றவர்களுக்கும் அதுவே சரியெனப் பட்டு நிம்மதியைடந்தனர்.

வெளியே வந்த காவ்யா மாடிக்குச் சென்றவள் வானின் நிலவை வெறித்துக்கொண்டு நின்றிருந்த ராணாவை பார்த்து தன்னிச்சையாக அவனருகில் சென்றாள். அரவம் கேட்டுத் திரும்பியவன் காவ்யாவை பார்த்ததும் கண்களில் காதல் ததும்ப அவளை பார்த்தவன் அதற்குமேல் அங்கு நின்று அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் செல்ல எத்தனித்தான். அவன் பார்வையில் தெரிந்த காதலை அவளும் நன்றாக உணர்ந்தாள். திரும்பிச் செல்லப் போனவனை காவ்யா அழைத்தாள்.

"தேவ்!" என்று அழைத்திட, அடுத்த அடி வைக்காமல் அங்கேயே நின்றான், ராணா. இவனைத்தான் அழைக்கிறாளா? என்ற சந்தேகத்துடன் திரும்பிப் பார்த்திட,

"தேவ்! உங்ககூட கொஞ்சம் பேசலாமா?" என்று கேட்டவாறு இவனை பார்த்து நின்றவளை கண்டதும் உறுதிசெய்தவனின் மனம் துள்ளிக் குதித்தது. அவளுக்கு சம்மதம் கூறிட, இருவரும் சென்று மாடியின் கைப்பிடிச் சுவரின் பக்கம் நின்றனர். இருவருக்கும் இடையில் ஈரடி தூரம் விட்டு நின்றிருந்தனர். ராணா, எதிர்ப்பார்ப்பு உள்ளே இருந்தாலும் அமைதியாக அவளை பார்த்துக்கொண்டிருக்க, தயங்கி நின்ற காவ்யா மெல்ல,

"தேவ்! சாரி! இன்னைக்கு உங்களுக்குப் பிடிக்காத விசயம் நடந்திருச்சு. பங்ஷன்ல நம்மள டான்ஸ் ஆட சொன்னததான் சொல்றேன். தேவையில்லாம என்னய உங்கமேல தள்ளிவிட்டு.. உங்களுக்கும் அது ரொம்ப சங்கடமாயிருக்கும். சாரி..." என்று அவன் கோபமாகச் சென்றதால் ஏற்பட்ட சந்தேகத்தில் கூறினாள்.

ராணா இவள்மீது கொண்ட காதல் இவள் அறிந்தாலும் காலம் எதையும் மாற்றவல்லது என்பதை நம்புமவள் இந்த ஆறு மாதத்தில் அவன் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவனுக்கு இவள்மீது கோபமும் வந்திருக்கலாம் என்றும் எண்ணினாள். அதனாலேயே இவனிடம் மன்னிப்புக் கேட்டாள். அவன் கண்களில் தெரிந்த காதல் இவளுக்குப் பாதி நம்பிக்கையை கொடுத்தாலும் அவனிடம் கூறிவிடுவது நல்லதென்று படவே பேசிவிட்டாள்.

காவ்யா கூற வருவதை ஆவலோடு பார்த்திருந்தவன் அவள் மன்னிப்புக்
கேட்டதில் முகம் தொங்கிப்போனது. இருந்தாலும் இவனிடம் வந்து பேசியதே பெரிய விசயமாக எண்ணியவன் புன்னகைத்தப்படியே, "யாரு சொன்னா எனக்கு சங்கடமாச்சுனு?" என்று கேட்டிட,

"நீங்கதான் கோபமா போனீங்களே...அப்ப உங்களுக்கு அது புடிக்கலனுதான அர்த்தம்" என்று கேட்டிட, 'உன்னய புடிக்காமதான் உன்னய பாக்குறதுக்காகவே இவ்ளோதூரம் வந்தேனா..? உன் நினப்புலதான் வாழ்ந்துட்டு இருக்கேன் இன்னும். அது உனக்கு எப்ப புரியும்?' என்று எண்ணிக்கொண்டவன் புன்னகைத்தப்படியே,

"அது எனக்குப் பிடிக்காம நான் போகல. உனக்காகத்தான் போனேன். என்னால எந்த விதத்திலயும் நீ சங்கடப்படக்கூடாதுனுதான் அப்டி பண்ணேன்" என்று தெளிவாகக் கூறிட, ஒருநொடி அவனை வியந்து பார்த்தாள். தனக்காகச் சிந்தித்து செயல்பட்டானா? என்று எண்ணும்போதே அவளுக்குள் பெருமிதம் பூத்தது.

"இனி அப்டிலாம் நினைக்கவேணா. உங்களால எனக்கு எந்த சங்கடமும் இல்ல. நீங்க உங்க லைஃப உங்களுக்காக வாழுங்க. என்னயபத்தி யோசிச்சு ஸ்பாய்ல் பண்ணிக்காதீங்க. அது எனக்கும் கஷ்டமா இருக்கும். இனிமேல் நமக்குள்ள எந்த வெறுப்பும் கோபமும் வேணா. பாத்தா சிரிச்சுக்கலாம். பேசிக்கலாம். லெட் பீ எ குட் ஃபிரண்ட்ஸ்" என்று கூறி கை நீட்டிட, ராணாவோ அவளை ஆச்சரியமாகப் பார்த்தான். முடிந்துவிட்டது என்று நினைத்த உறவு இப்போது வேறு உருவில் இவனிடம் திரும்பி வந்திட உள்ளம் மகிழ்ந்தான்.

காவ்யாவின் மாற்றமும் இவனிடம் அவளே வந்து பேசியதும் அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை அளித்திட இறக்கை முளைத்துப் பறந்தான். காவ்யாவும் நீண்ட நாட்களுக்குப்பின் ராணாவை பார்த்துப் பேசியதை எண்ணி மனம் மகிழ கண்கள் கசிய திரும்பிச் சென்றாள்.

இங்கே ராணாவும் நீண்ட இடைவெளிக்குப் பின் காவ்யாவுடன் பேசியதையும் தொடுகையையும் எண்ணி மகிழ்ந்தவாறே அவனறைக்குச் சென்றுவிட்டான்.

அறைக்குள் வந்த ராணாவின் முகத்தில் தெரிந்த உற்சாகத்தை வைத்தே ஏதோ நடந்திருக்கிறது என்றெண்ணி நண்பர்கள் விசாரித்திட, அவன் நடந்தவற்றை கூறிட, மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். காவ்யாவின் மனமொத்து இருவரும் சேரவேண்டும் என்பதே இவர்களின் ஆசையும்கூட. இப்போது அதன் தொடக்கம் ஆரம்பித்திருப்பதை எண்ணி மகிழ்ந்தபடியே உறங்கிப்போயினர்.





❤வருவாள்❤...
 
💕அவள்💕


காலை எழுந்து அனைவரும் தயாராகிட, திருமண நேரமும் நெருங்கியது. மணமேடையில் ராம் மணமகனுக்கான கம்பீரத்துடன் அமர்ந்து மந்திரம் கூறிக்கொண்டிருக்க, ஐயர் அழைத்ததும் மணப்பெண்ணான தன்யாவையும் தோழிகள் அழைத்து வந்து அமரவைத்திட, சுற்றமும் நட்பும் சூழ்ந்து ஆசிர்வதித்திட, ராம் தன்யாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிந்து அவளை தன்னில் பாதியாக்கிக் கொண்டான்.

திருமணம் முடிந்து அனைவரும் சாப்பிடச் செல்ல, அனுயாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. பெரியவர்களையும் நாகவ், சரண்யா, ராம் மற்றும் தன்யாவை வீட்டிலேயே இருக்கக் கூறிவிட்டு பிரபவ்வும் ராணாவும் அனுயாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனை சென்றிட, காவ்யாவும் அவர்களுடன் சென்றாள். லட்சுமி அம்மாவும் ரம்யாவும் தேவையானப் பொருட்களை எடுத்துக்கொண்டு விஜய்யுடன் பின்னே சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுயாவிற்கு சுகப்பிரசவத்தில் அழகானப் பெண்குழந்தை பிறந்தது. அங்கே இருந்தவர்கள் அனைவரும் மகிழ்ந்திட, அந்த நற்செய்தியை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் தெரிவித்தனர். அதன்பின்னரே அவர்கள் ராம் மற்றும் தன்யாவின் திருமணச் சடங்குகளை பார்த்தனர். அடுத்த இரண்டு நாட்களில் அனுயாவை வீட்டிற்கு அழைத்துவந்தனர்.

ராணா வந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகியிருக்க, இத்தனை நாட்களும் காவ்யா இவனுடன் சாதாரணமாகவே பேசினாள். ராணாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தாலும் அதற்குமேல் அவனும் எதையும் சிந்திக்கவில்லை. அவள் எதற்காகப் பேசுகிறாள்? எப்படி மாறினாள்? என்று எதையும் யோசிக்கவும் இல்லை. இப்போது அவள் சந்தோசமாக இருப்பதும் தன்னிடம் பேசுவதுமே போதும் என்று எண்ணிக்கொண்டான். ஆதலால், அவளிடம் அவனாகவே சென்றும்கூட பேசிடமாட்டான்.

காவ்யாவும் இத்தனை நாட்கள் அவன் நினைவுகளிலே வாழ்ந்துவிடலாம் என்றெண்ணியவளுக்கு எப்போது அவனை நேரில் சந்தித்தாளோ அப்போதிருந்தே அவனிடம் இருந்து தள்ளியிருக்கும் எண்ணம் நொறுங்கியது. அவனிடம் பேசவேண்டும், அவனை பார்க்கவேண்டும், அவனுடனே இருந்திட வேண்டும் என்ற எண்ணங்களே அவளை ஆக்கிரமித்திருந்தன. ஆனால், அவனிடம் அந்த தவிப்பேதும் இல்லாததை கண்டு மனம் வருந்தினாள்.

இவர்கள் இருவரின் நிலையையும் தனித்தனியே பார்த்திருந்த நண்பர்கள்தான் நொந்துபோயினர். இருவரின் காதலை பற்றி அறிந்தாலும் அதை அவர்களே புரிந்துகொண்டு சேரவேண்டும் என்று எண்ணிக் காத்திருந்தனர். இருவரையும் முக்கியமாக காவ்யாவை வற்புறுத்திட விரும்பவில்லை.

ராணா வெளிநாடு திரும்பும் நாளும் வந்தது. காலையிலிருந்தே காவ்யா அவளறைக்குள்ளேயே முடங்கினாள். ரம்யாவுக்கும் உண்மை தெரிந்தாலும் எதுவும் பேசிட இயலாமல் அமைதியாக இருந்தாள். இதற்குப் பிறகு ராணா தாயகம் வருவது மிகவும் கடினம் என்பதை அறிந்த காவ்யாவால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அழுது தீர்த்தாள்.

மாலை விமான நிலையம் செல்ல இருந்த ராணா அனைவரிடமும் விடைபெற்றவன் நேராக காவ்யாவின் வீட்டிற்கு வந்தான். கடைசியாக ஒருமுறை அவளை பார்த்துவிட்டுச் செல்லவேண்டும் என்பதற்காக வந்தவன் ரம்யாவிடம் கூறி அவளை அழைத்துவரச் சொல்லிட, அவளும் சென்று காவ்யாவை அழைத்திட, அழுத முகத்தை துடைத்தபடி எழுந்து வெளியே வந்தாள். அவளை பார்த்ததுமே அவளின் வீங்கிய முகத்தை வைத்தே அழுதது தெரிந்திட, மனம் பதைபதைத்திட எழுந்து அவளிடம் சென்றான்.

"என்னாச்சு அம்மு? எதுக்காக அழுதிருக்க? யாராச்சும் எதுவும் சொன்னாங்களா? எதுவும் பிரச்சினையா? சொல்லுமா..." என்று மனம் வலித்துப் பேசியவனை கண்கலங்கிட ஏறிட்டாள். அது அவனுக்கு இன்னும் வலித்திட,

"நான் இங்க வந்ததுதான் உனக்கு கஷ்டம்னா. சாரி அம்மு. நான் கிளம்பிடறேன். இதுக்கப்றம் நான் எப்ப வருவேன்னு தெரியாது. அதான் உன்னய பாத்துட்டுப் போலாம்னு வந்தேன். அதுவும் நீ நார்மலா பேசுவேனுதான் தைரியமா வந்தேன். இல்லன்னா வந்திருக்கக்கூட மாட்டேன்மா. சாரி. நான் கிளம்புறேன். டேக் கேர்.." என்று கூறியவன் கிளம்ப எத்தனிக்க, அதில் உடைந்தவள் கண்ணீருடன் கோபமாக அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள். அதில் அதிர்ந்து குழம்பியவன் இவளை பார்த்திட,

"என்னடா நினச்சுட்டுருக்க உன் மனசுல? என்னய விட்டுட்டு ஒரேடியா போக முடிவு பண்ணிட்டல்ல? அவ்ளோதான் உன்னோட லவ்வா? எல்லாம் வெளிநாடு போனதுல குறைஞ்சு போச்சா?" என்று கோபமாகக் கேட்டவளை ராணாவும் ரம்யாவும் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.

"என்ன பாக்குற? அவ்ளோதான் உன் லவ்ல? அன்னைக்கு அப்டி பாத்துப்பேன் இப்டி பாத்துப்பேன்னு சொன்னதெல்லாம் பொய்தானா?" என்று கேட்டவளை கண்கலங்கிட பார்த்தவன்,

"நான் வாழ்றதுக்குக் காரணமே உன்மேல வச்சிருக்கிற காதல்தான். உன்னோட நினைவுகள்லதான் என் வாழ்க்கையே இருக்கு. உன்னோட சந்தோசம்தான் என்னோட சந்தோசமும். நான் இப்ப போறதுகூட உன் வாழ்க்கைக்கு எந்த விதத்திலயும் தொந்தரவா இருந்திடக்கூடாதுனு தான்..." என்று பொறுமையாகக் கூறியவனை கோபமாகப் பார்த்தவள்,

"மண்ணாங்கட்டி..லவ் பண்ற பொண்ண விட்டுட்டுப் போய் எப்டிடா அவள சந்தோசமா பாத்துப்ப? கூட இருந்து பாத்துக்கத் தெரியாதா? பெரிய தியாகி இவரு...கஷ்டத்த மறைச்சிகிட்டுப் போறாராம்...நீ இல்லாம நான் மட்டும் எப்டிடா சந்தோசமா இருப்பேன்..?" என்று கோபமாகத் தொடங்கியவள் வருத்தமாக முடித்திட, அவளை அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்து நோக்கினான்.

"எ..என்ன..சொன்ன...அம்மு..?" என்று வார்த்தைகள் வராமல் கண்கள் கலங்கிட கூறியவனை பார்த்தவள்,

"நீ இல்லாம என்னாலயும் நிம்மதியா வாழமுடியாது. நானும் உன்னோட நினைவுகள்லயே வாழ்ந்துடலாம்னுதான் நினச்சேன். ஆனா, உன்னய பாத்ததும் எல்லாமே மாறிடுச்சு. உன்னமாறி கல்நெஞ்சக்காரி நான் இல்லப்பா. அதான் என்னால முடியல. ஆனா, நீ என்னய விட்டுட்டுப் போகப் போறேல்ல...? போ..!" என்று கூறி முகத்தை திருப்பிக்கொள்ள, தன் காதுகளையே ராணாவால் நம்பமுடியவில்லை. தான் காண்பது கனவா? நனவா? என்ற சந்தேகமும் சந்தோச மிகுதியில் கண்ணீரும் மேலோங்கிட புன்னகையுடன் அவளை பார்த்து நின்றவன்,

"அம்மு...! நிஜமா சொல்றியா? நான் உன்னய நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன். என்னோட கோபத்தால நிறைய இழந்துருக்கோம். உன்னால எல்லாத்தையும் மறந்துட்டு என்கூட சந்தோசமா வாழமுடியுமாம்மா?" என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்டவனை பார்த்து,

"கஷ்டப்படுத்தின நீதான அந்த கஷ்டத்துல இருந்தும் வெளிவர வச்ச. நம்ம இழந்ததுக்கு உன்னோட கோபத்த மட்டும் காரணமா சொல்லிடமுடியாது. அதோட நானும் கோபக்காரிதான. அப்ப நீ என்கூட சந்தோசமா வாழப் பிடிக்காமதான் போறியா?" என்று பதில் கூறி கேட்டிட, வேகமாக மறுத்துத் தலையசைத்தான்.

"எனக்கும் இதே பயம்லாம் இருந்துச்சு. ஆனா, உன்னய பாத்ததும் எல்லாம் மறந்து நீ மட்டும் வேணும். உன்கூட இருந்தாலே போதும்னு தோனுது. உன்மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. அதவிட உன் காதல்மேல இன்னும் அதிகமா இருக்கு. ஆனா, உனக்கு எதுவும் தோனலபோல..அதான் கிளம்பிட்ட. போடா..போ..! உனக்கு எதுக்காக நான் எக்ஸ்ப்லைன் பண்ணணும்? நீ கிளம்பு. ஃப்லைட்கு டைம் ஆச்சு" என்று கடுப்பாகக் கூறி முடித்தவளை பார்த்துக் கண்ணீருடன் புன்னகைத்தவன்,

"ஐ லவ்யூ டி அம்மு...! நீதான் என்னோட வாழ்க்கையே. என்னோட தொலைஞ்சுபோன சந்தோசம் உன்னாலதான் கிடைச்சது. நீதான் என்னோட உயிர். உன்னயவிட்டு போய் நான் பாக்கறதுக்கும் வாழறதுக்கும் எதுவுமில்ல. என்னய ஏத்துகிட்டு என்கூட வாழ வரியா? மறுபடியும் லைஃப ரீஸ்டார்ட் பண்ணலாம். உன்னய கைல வச்சு தாங்குறேன்டி அம்மு..." என்று அவள்முன் மண்டியிட்டு காதலோடு கேட்டிட,

"நீ இவ்ளோ செண்டிமென்டா பேசாட்டியும் நான் ஓகேதான் சொல்லிருப்பேன்டா. பிகாஸ்..ஐ லவ் யூ டு தேவ்...!" என்று கூறி அவனின் நெத்தியில் இதழ் பதித்து அவனை கட்டிக்கொண்டாள். அவனும் இவள் இடையை சுற்றி வளைத்து அவள் மார்பில் முகம் புதைத்தான்.

இவர்கள் இருவரும் சேர்ந்ததை மகிழ்ச்சியோடு பார்த்திருந்த நண்பர்கள் ஓஓஓ என்று கூச்சலிட, சத்தம் கேட்டுத் திரும்பியவர்கள் அவர்களை இங்கே பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ராணாவும் காவ்யாவும் பேச ஆரம்பித்ததும் ரம்யாவுக்கு விஜய் அழைப்புவிடுத்திட, அதை ஏற்றவள் பேசாமல் இருக்க, இங்கு நடந்தது கேட்டு அவனும் மற்ற நண்பர்களுடன் இங்கே வந்தான். இவர்கள் சேர்ந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தனர் அனைவரும். இருவரின் அருகில் வந்த நண்பர்களும் ராணாவை கட்டிக்கொள்ள, ரம்யா காவ்யாவை அணைத்துக்கொண்டாள்.

"ஒருவழியா லவ் வார் முடிவுக்கு வந்திடுச்சுடா. நீங்க இரண்டுபேரும் ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்றத பாத்துதான் நீங்க சேரணும்னு நாங்களும் நினச்சோம்" என்று ராம் ஆனந்தமாகக் கூறிட,

"உங்களோட லைஃப் இப்ப புதுசா ஆரம்பிச்சிருக்கு. இது முழுக்க முழுக்க லவ்னால தொடங்குன பயணம். அதனால இனிமேல் உங்க லைஃப்ல ஒன்லி ஸ்வீட் மொமண்ட்ஸ்தான் இருக்கும்" என்று பிரபவ்வும் மனநிறைவுடன் கூறிட,

"எப்பவும் இப்படியே ஹேப்பியான லவ்லி கப்பில்ஸா வாழ வாழ்த்துக்கள் ராணா அண்ட் அண்ணி" என்று சந்தோசமாக வாழ்த்தினான் நாகவ்.

"இந்த ஹாப்பி நியூஸ நம்ம ஃபேமிலிக்கு சொல்லணும்டா. ஆனா, ராணா! உனக்குத்தான் ஃப்லைட்கு டைம் ஆச்சேடா. நீ கிளம்பணும்ல. நீ போ. நாங்க சொல்லிக்கிறோம்" என்று விஜய் நக்கலாகக் கூறி முடித்திட,

"நல்லா சொல்லுங்க. அவன் போகட்டும். நம்ம போய் சொல்லிக்கலாம். வா! உன்னய சென்ட் ஆஃப் பண்ணிட்டு நாங்க கிளம்புறோம்" என்று காவ்யா நக்கல் செய்திட, மற்றவர்களும் நமட்டுச் சிரிப்பு சிரித்திட, ராணா அவளை ஒரு கையால் அணைத்துக்கொண்டவன்,

"இதுக்கப்றம் ஒரு செகண்ட்கூட உன்னயவிட்டு எங்கயும் போகமாட்டேன்டா, அம்மு" என்று கூறி கன்னத்தில் முத்தமிட, அதில் வெட்கிக் கன்னங்கள் சிவந்திட தலைகுனிந்தாள். அனைவரும் அதை கண்டு மனமாற மகிழ்ந்தனர்.

"அடியே...காவி..! உன்னயும் கடைசில வெக்கப்பட வச்சிட்டாரே.. மாமா.." என்று ரம்யா கூறி சிரித்திட, அதில் இன்னும் வெட்கியவள் சிரித்தபடியே விஜய்யிடம் கண்காட்ட, அவன் ரம்யாவின் கன்னத்தில் எதிர்பாரா முத்தமொன்றை அளித்திட, அதில் வியந்து முழித்தவள் அதன்பின் அவளும் வெக்கப்பட்டு தலைகுனிந்துகொள்ள, அவளை காவ்யா பார்த்துச் சிரித்தாள்.

"அம்மு..நீ இவ்ளோ சேட்டக்காரியா? இவ சொன்னானு நீயும் இப்டி பண்றியேடா விஜி..." என்று ராணா சிரித்துக்கொண்டே கேட்டிட,

"அப்டி கேளுங்க மாமா..இங்க எல்லாரும் அவளுக்குத்தான் சப்போர்ட் பண்றாங்க...என்னனு கேளுங்க மாமா.." என்று ரம்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,

"அப்டியாடா? ஆனா..நானும் உன் ஃப்ரண்ட் சைடுதான்டா...சாரிடா.." என்று தயங்கியவாறு கூறி புன்னகைத்திட, ரம்யா போலியாகக் கோபித்து முகத்தை திருப்பிக் கொள்ள, அவளை அணைத்துக்கொண்ட காவ்யா,

"சரி..விடுடி செல்லம். நான்தான் உன் சப்போர்ட்டாச்சே.." என்று கூறிட, அவளை கட்டிக்கொண்டு முத்தமிட்டவள், "உனக்கு சப்போர்ட் பண்றதுக்காக நான் கோபிச்சுப்பேனா..யூ ஆர் மை டார்லிங்க்ல செல்லக்குட்டி..!" என்று கூறிட, அனைவரும் வியந்து புன்னகைத்தனர்.

"அம்மு மை டார்லிங்டா. அவளுக்கு நீ மட்டும் முத்தம் கொடுக்குற? நானும் கொடுப்பேன்" என்று கூறி ராணாவும் மறு கன்னத்தில் முத்தமிட, காவ்யா வெட்கத்தில் தலையில் அடித்துக்கொள்ள, அனைவரும் மனமகிழ்ந்து சிரித்தனர்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

மூன்று வருடங்கள் கழித்து...

ராணா பதட்டமாக அமர்ந்திருக்க, அவனருகில் அமர்ந்து ஆறுதல்படுத்தினர் அவன் நண்பர்களான பிரபவ், ராம், நாகவ் மற்றும் விஜய். பெரியவர்களும் கமலாம்மாவும் இறைவனை வேண்டியபடி அமர்ந்திருக்க, அனுயாவின் மூன்று வயது மகளையும் சரண்யாவின் இரண்டரை வயது மகனையும் தன்யாவின் ஒன்றரை வயது மகனையும் ரம்யாவின் ஒரு வயது மகனையும் பார்த்துக்கொண்டவாறு மற்ற இருவரும் வீட்டில் இருந்திட, அனுயா மற்றும் சரண்யா இவர்களுடன் பதட்டமாக நின்றிருந்தனர். உள்ளே காவ்யா பிரசவ வலியில் துடித்திட, ராணாவின் மனம் ஒருநிலையில் இல்லாமல் வலித்திட, கண்ணீர் சிந்தியபடி முகத்தை கைகளால் மூடியபடி அமர்ந்திருந்தான்.

ராம் மற்றும் தன்யாவிற்குத் திருமணம் ஆன அடுத்த இரண்டு மாதங்களில் முதலில் ராணா மற்றும் காவ்யாவிற்கும் அடுத்து விஜய் மற்றும் ரம்யாவிற்கும் மிகப் பிரம்மாண்டமாகத் திருமணம் நடந்தேறியது. நண்பர்களும் தோழிகளும் ஒற்றுமையாக ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவும் பரிமாறியபடி ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.

திருமணமான பின்பு ராணா காவ்யாவை தன் காதல் மழையில் நனையச் செய்தான். தினம்தினம் தன் காதலால் தான் செய்தத் தவறை திருத்திக்கொள்ள முயன்றான். ஆனால், இவனை முழு மனதாக ஏற்றுக்கொண்டவளுக்கு இவனது மன்னிப்பு தேவைப்படவில்லை. ஆனாலும் இவனது காதலில் அவளும் சுகமாகக் கரைந்தாள். ஓராண்டு ஆனபின்னும் காவ்யாவிடம் ராணா நெருங்கிடவில்லை. அவளை இன்னொருமுறை எந்தவிதத்திலும் காயப்படுத்திட அவன் எண்ணவில்லை. அவன் செய்த கொடுமை அவன் கண்முன்னே தோன்றிட, அவளை தீண்டவும் மனம் வலித்தது.

காவ்யாவும் இவனது காதலில் கரைந்தாலும் இவனது ஒதுக்கத்தை எண்ணி வருந்தினாள். இதை அவனிடமே கேட்டு உண்மையை அறிந்துகொண்டவள், "இங்க பாரு தேவ்!" என்று கூறி அவனை தன் கண்களை பார்க்கச் செய்தவள்,

"நான் அந்தப் பழைய நினைவுகள் எல்லாத்தையுமே எப்பவோ மறந்துட்டேன். அதுல இருந்து என்னய நீயும் கமலாம்மாவுமே மீட்டு கொண்டு வந்துட்டீங்க. அதுக்கப்புறம் நம்ம பிரிஞ்சு இருந்தப்பவே நான் அத சாதாரணமா எடுத்துட்டு கடந்து வந்துட்டேன். உன்னோட பாஸ்ட் தெரிஞ்சப்றம் நடந்ததுல உன்னோட தப்பு மட்டும் இல்லனு புரிஞ்சுகிட்டாலும் உன்மேல இருந்த கோபத்துலயும் தப்பான தொடக்கத்துல ஆரம்பிச்ச உறவு வேண்டாம்னுதான் நானும் டிவோர்ஸ் பண்ணேன்.

எப்போ நம்மளோட அந்த உறவு முடிஞ்சதோ அப்பவே நம்ம கடந்தகால வாழ்க்கையும் முடிஞ்சது. அதுக்கப்புறம் நம்ம சேர்ந்தது உன்னோட காதலால மட்டும்தான். உன்னோட உண்மையான காதல்தான் என்னய உன்கிட்ட கொண்டுவந்தது. நம்மள சேர்த்தும் வச்சது. இப்ப நமக்கிடைல இருக்கிறது காதலும் அன்பும் புரிதலும் மட்டும்தான் தேவ்.

இன்னும் நீ பழச நினச்சிட்டே இருக்காதே. உன்னோட பழைய நினைவுகள் உனக்கு குற்ற உணர்ச்சியா இருக்குதா? ஒவ்வொருத்தரோட சந்திப்பும் ஒவ்வொரு விதமா இருக்கும். நம்மளோட சந்திப்ப கடவுள் இப்படி எழுதிருக்காருனு நினச்சுக்கோ. நீயும நானும் சேர்ந்து சந்தோசமா வாழணும் தேவ்..எனக்கு நீ வேணும்" என்று முழுவதும் தெளிவாகக் கூறி அவனை பார்த்திட, ராணா கண்கள் கலங்கிட காதலோடு அவளை அணைத்துக்கொண்டான்.

அதன்பிறகு இருவரும் அவர்களது இல்லற வாழ்வில் இனிமையாய் மூழ்கிட, காலம் காதலில் கரைந்திட, காவ்யாவும் கருவுற்றாள். காதலோடும் அக்கறையோடும் அவளை பார்த்துக்கொண்டவன் அவளது வயிற்றில் வளர்வது இரட்டை குழந்தைகள் என்று தெரிந்தபின் உள்ளங்கையில் வைத்து தாங்கினான். காவ்யாவின்மீது அவனுக்கு உள்ள காதல் நாளுக்குநாள் பெருகியது. காவ்யாவிற்கும் இவன் காட்டும் காதலில் தொலைவது பிடித்தாலும் அவனுக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் மாறி அவனையும் தன் காதலால் அரவணைத்து தொலையச் செய்தாள்.

இன்று காவ்யாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டதால் விரைந்து அவளை மருத்துவனையில் கொண்டுவந்து சேர்த்தான். வலியால் அவள் துடித்திட, தாயும் சேய்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொண்டிருக்க,

'நீங்க மூனுபேரும்தான் என்னோட உயிர். நீங்க என்கிட்ட பத்திரமா வந்திரணும். அம்மு...! உனக்காக நான் காத்துட்டு இருக்கேன். சீக்கிரம் என்கிட்ட வந்துடு...' என்று ராணா தனக்குள் நினைத்தபடி முகத்தைமூடி அமர்ந்திருக்க, வலியால் கதறிய காவ்யா கத்தியபடி அமைதியடைய, குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு வெளியே நின்றிருந்த அனைவரும் பதட்டமும் சந்தோசமும் நிறைந்தபடி ஆவலோடு காத்திருந்தனர்.

சிறிதுநேரம் கழித்து காவ்யாவை வேறு அறைக்கு மாற்றியதும் வெளியே வந்த செவிலியர் இருவரின் கைகளில் இருந்த குழந்தைகளை அனைவரும் மிகவும் சந்தோத்துடன் பார்த்தனர். குழந்தைகள் நலமுடன் வந்த செய்தி அறிந்ததும் வேகமாக எழுந்த ராணா நேராக அறைக்குள் சென்றான். அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்தாலும் அவன் செல்லட்டும் என்று விட்டுவிட்டனர். உள்ளே வந்தவன் துவண்ட கொடியாய் மயக்கத்தில் படுத்திருந்த காவ்யாவை பார்த்தபடி அவளருகில் வந்தமர்ந்து அவள் நெற்றியில் மெலிதாக இதழ் பதித்தவன் அவள் கைகளைப் பற்றி மென்மையாக வருடினான்.

சிலநிமிடங்கள் அங்கேயே அவனிருக்க, காவ்யா மெல்ல தன் கண்களை திறந்தாள். தன் கண்முன் கண்களில் காதலையும் தவிப்பையும் ஏந்தி தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் ராணாவை பார்த்தவள் மெல்ல எழுந்தமர முயற்சிக்க ராணா அவளை அமரவைத்தான். அவனை பார்த்துப் புன்னகைத்தவள், "நம்ம குழந்தைகங்கள பாத்தியா தேவ்?" என்று கேட்டிட, அவன் மறுப்பாகத் தலையசைத்ததை பார்த்துக் குழம்பியவள் ஏன் என்று கேட்டிட,

"என்னோட குழந்தைய முதல்ல பாத்துட்டு அப்றம் நம்ம குழந்தைங்கள பாக்கலாம்னு இருந்தேன்" என்று ராணா அமைதியாகக் கூறியதை கேட்டவள் ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள். அந்தநேரம் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவர்களை பார்த்திட, அங்கே லட்சுமி அம்மாவும் சீதா அம்மாவும் வந்து இருவரிடமும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியோடு குழந்தைகளை தந்துவிட்டு தனிமையளித்துச் சென்றுவிட்டனர்.

தன் கைகளில் ஏந்திய குழந்தைகளை பார்த்ததும் ராணாவின் கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்திட, இரு குழந்தைகளையும் அன்போடு முத்தமிட்டான். காவ்யாவிடம் திரும்பியவன், "அம்மு...! உன்னால என்னோட வாழ்க்கை முழுமை அடைஞ்சிருச்சு. எப்படியோ வாழ்ந்திட்டு இருந்தவன் வாழ்க்கையில வந்து என்னய மாத்தி எனக்கு ஒரு அம்மாவா இருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அளவுக்கதிகமான காதலை கொடுத்த. இப்போ நம்ம குழந்தைங்கள கொடுத்து என் அம்மா அப்பாவ திரும்ப என் வாழ்க்கையில் கொண்டு வந்துட்ட" என்று தன் இரட்டைக் குழந்தைகளான ஆண் பெண் இருவரையும் பார்த்துக் கூறியவன், "ஐ லவ் யூ டி அம்மு...!" என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவள், "ஐ லவ் யூ டூ தேவ்...!" என்று கூறினாள்.

"நீ எனக்கு கொடுத்த எல்லாத்துக்கும் தாங்க்ஸ் அண்ட் நான் உனக்கு கொடுத்த எல்லாத்துக்கும் சாரிமா.." என்று கூறிட, அவன் இதழில் விரல் வைத்தவள், "டேய்..தேங்க்ஸ், சாரிலாம் சொல்லக்கூடாதுனு எத்தனவாட்டி சொல்றது. இனியும் இப்டியே சொல்லிட்டு இருந்த..அப்றம் டிவோர்ஸ்தான். என்ன நினச்சுட்டுருக்க உன் மனசுல? நானும் இத்தன வருசமா சொல்லிட்டே இருக்கேன். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற.." என்று இவனை பார்க்காமல் அவள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்நேரத்தில் ராணா இரு குழந்தைகளையும் தொட்டிலில் கிடத்திவிட்டு வந்து இவளருகில் அமர்ந்தவன் அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தி அவள் இதழை மென்மையாகச் சிறை செய்தான். இவளும் அவன் முத்தத்தில் கரைந்திட, சிலநொடிகள் கழித்து விலகியவன், "எப்பவும் நமக்குள்ள பிரிவு வராது. அது வார்த்தையா இருந்தாலும்கூட.." என்று கூறி அவளை அணைத்துக்கொள்ள, அவளும் இவனை காதலோடு அணைத்துக்கொண்டாள்.

💞சுபம்💞


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

இருளில் தொலைந்த ஒளியானவள் ஜுவாலையாய் மீண்டெழுந்து தன் ஒளியை பரப்பி அந்த இருளையும் வெளிச்சமடையச் செய்து பிரகாசமானாள்.


❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
நட்புக்களே..💕💕

கதை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது...என்னோட முதல் படைப்பு இது..அதை நல்லபடியா முடித்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சி..உங்களோட ஆதரவுக்கு மிக்க நன்றி..😍😍 உங்களோட கமெண்ட்ஸ் படிக்கிறப்பலாம் ரொம்ப சந்தோசமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும்..உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி..உங்களோட நட்புகளுக்கும் இந்தக் கதைய பகிர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..
நட்புக்களே💕💕


இப்படிக்கு,
உங்கள் அன்புத் தோழி,
தமிழுக்கினியாள்✒
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom