Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


On Hold உயிரான உறவை தேடி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

ரொம்ப நன்றி சகி 🥰🥰🥰
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உயிரான உறவைத் தேடி..!

உறவின் தேடல் -01​


நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டு போல
என்னை உறங்க வைக்க நீ இல்லை
தினமும் ஒரு முத்தம் தந்து
காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசி தன்னை
அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை
தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே
இந்தத் தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே
இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

- என்று அலைபேசியில் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை ஒரு வரி விடாமல் கேட்டவனது இதயம் இருமடங்கு வேகமாகத் துடித்து அடங்கியது. அந்தப் பாடலின் வரிகளுக்கு ஏற்ப தன் வாழ்வும் திசைமாறிப் போனதேனோ? இந்தப் பாடலில் வருவது போல் இந்தத் தனிமையும் தன்னைக் கொல்லாமல் கொல்வதேனோ? என்று எண்ணியவனின் எண்ணங்கள் யாவும் அவளே! ... அவள் ஒருவள் மட்டுமே.‌ அவளுக்காக எதையும் செய்யும் இதயம் கொண்டவன் அவளுக்காக அவளையே விட்டுக் கொடுத்துவிட்டு இப்போது தனிமையில் அவளை நினைத்து உருகிக் கொண்டிருக்கிறான்.
யார் இவன்? அவள் யார்? இவனது இந்நிலைக்குக் காரணமென்ன தெரிந்துகொள்ளப் பயணியுங்கள் உயிரான உயிரைத் தேடி.....

நியூயார்க் நகரம்..

இரவு மணி 11..00
ஆங்காங்கே பார்ட்டி நடப்பதற்காக மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தாலும் ஊரில் ஒரு மயான அமைதி தென்பட்டது. அந்த அமைதி, அந்த நகரத்தின் மத்தியில் இருக்கும் ஒரு பிளாட்டின் மொட்டை மாடியில் இருந்து ரசித்துக் கொண்டு இருப்பவனுக்கு இல்லையோ, என்னவோ! அவனது நெஞ்சம் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தது.‌ அவனது பெரும்பாலான தனிமையை இந்த மொட்டைமாடி தான் களவாடிக்கொண்டது. மீண்டும் எனக்கான பரீட்சை ஆரம்பமா? அல்லது ஏற்கனவே எழுதிய தேர்வின் முடிவா? அந்த ஊருக்கு நான் மீண்டும் செல்வதா? அதுவும் அவளைப் பார்க்கக் கூடாதென்ற என் முடிவை மாற்றிக் கொண்டு போகணுமா? அவளுக்காக அவளையே தள்ளி வைத்து விட்டு மீண்டும் அங்கே நான் செல்வதா? அவள் வாழ்விற்காக எல்லாத்தையும் இழந்துவிட்டு அநாதையாக வந்த நான் மீண்டும் அவளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் அந்த ஊருக்கு செல்ல வேண்டுமா? என்று எண்ணியவனுக்கு எவ்வளவு முயன்றும் தன் விழிகளில் இருந்து கண்ணீர் வருவதை அடக்க முடியவில்லை..

ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் கதறியவன் தான் அழும் சத்தம் வெளியே வராதவாறு, கையால் வாயைப் பொத்திக் கொண்டு அழுதான். அழுதழுது ஓய்ந்து போனவன் கைப்பிடி சுவரில் சாய்ந்து அமர்ந்து விட்டான். விழிகளை மூடினாலும் அவள் முகமே! விழிகளைத் திறந்தாலும் அவள் முகமே! கடந்துசென்ற இத்தனை வருடங்களில் ஒரு நொடி கூட அவளை அவன் மறந்தது கிடையாது ஆனால் அவள்? என் பெயரையாவது நினைவில் வைத்திருப்பாளா?

எண்ணங்களிலிருந்து மட்டுமல்ல அவள் வாழ்வில் இருந்தும் என்னை முற்றிலுமாகத் தூக்கி எறிந்து விட்டவளுக்காக மீண்டும் தான் அங்குச் செல்ல வேண்டுமா? உடைக்கப்பட்ட இதயம் மீண்டும் ஒட்டப்படுமா? அல்லது உடைந்து போனதும் உருத்தெரியாமல் அழிந்து போகுமா?

என்ன முடிவெடுப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் முடிவு எடுத்தாக வேண்டிய கட்டாயம் அவனிடத்தில்.. அவன் முடிவை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றத்தின் பிடியில் சிக்கி உறக்கத்தில் இருக்கும் அவன் பெற்றோர்கள். ஒரு ஊரே தன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழ்நிலை. அடுத்து என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறான்.

எவ்வளவு சிந்தித்தும் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தவன் தன்னை அறியாமல் அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்டான். காலையில் பறவைகளின் ரீங்காரத்தையும் மீறி பாட்டுச் சத்தம் செவியைத் துளைக்க உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான் அவன்..

‘யாருடா அது காலையிலையே இப்படிப் பாட்டைச் சத்தமா வச்சு டென்ஷனை ஏத்துறது’ என்று நினைத்தவாறு விழிகளை முழுதாகத் திறந்து எழுந்து நின்றவன், கைகளைக் குவித்துச் சூரியனுக்கு வணக்கம் வைத்து விட்டு உடலை இடது வலதுமாகத் திருப்பி நெட்டி முறித்தான். பின்பு கீழே இறங்கி செல்லலாம் என்று நினைத்து ஓர் அடி எடுத்து வைத்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான்..

சற்று முன்பு வரை அவன் மட்டுமே இங்கு உறங்கி இருப்பதாக எண்ணியிருந்தான். ஆனால் தன் அருகில் படுத்திருந்த நபரை கண்டு அதிர்ந்தவன் மறுநிமிடமே இதழில் புன்னகை தேக்கியவாறு, “அம்முகுட்டி நீங்க எப்ப செல்லம் இங்க வந்து தூங்குனீங்க?” என்று கேட்டவாறு நான்கு வயதே நிரம்பிய பெண் குழந்தையைத் தூக்கி தன் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தவாறே கீழே இறங்கி சென்றான். குழந்தையோ இன்னும் வாகாக அவன் தோளில் சாய்ந்து உறக்கத்தை தொடர்ந்தது. அவன் அறையில் தூங்கிய குழந்தை நடு இரவில் தந்தையைத் தேடி அழவும்,‌அவனது தாய் தான் குழந்தையைக் கொண்டு வந்து மேலே விட்டு விட்டு சென்றிருந்தார்.

அவன் கீழே இறங்கி வருகையில் ஹாலில் அவனது தாய் தந்தையர் அமர்ந்திருக்க, குழந்தையுடன் தனது அறைக்குள் நுழைந்தவன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பிள்ளையையும் விழிக்க வைத்து சுத்தப்படுத்தி வேறு உடை மாற்றி விட்டு தூக்கி கொண்டு வெளியே வந்தான். அவன் முகத்தினை எதிர்பார்ப்புடன் பார்த்தார் தந்தை. அதைக் கவனமுடன் தவிர்த்தவன் கிச்சனுக்குள் நுழைந்து ரெடிமேடாக இருக்கும் காப்பிப் பவுடரை பாலில் கலந்தான்.‌ பிள்ளைக்குப் பாலும், தனக்குக் காபியும் எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தான்..

தன் தந்தை கண் ஜாடையால் தாயிடம் ஏதோ சொல்வது அவனுக்கும் புரிந்தது. இருந்தும் அவர்கள் வாயிலிருந்தே எதுவா இருந்தாலும் வரட்டும் என்று பொறுமை காத்தான்.‌முழு செய்தியும் அவனது செவியை வந்தடையவில்லை. ஆனால் அரசல் புரசலாக அவர்கள் இங்கு வந்திருப்பதற்கான நோக்கம் அவனுக்கும் தெரியும். அவர்கள் மேம்போக்காக விஷயத்தைப் போட்டு உடைத்து விட்டார்களே தவிர முழுமையாக எதையும் சொல்லாதது போலவே அவனுக்குத் தோன்றியது. அதனால் தான் அமைதி காத்தான்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட அவனது தாய் அஞ்சலை,
“கண்ணு..‌ உங்கிட்ட கொஞ்சம் பேசோணும்?” என்றிட.

சடாரென்று நிமிர்ந்து தன் தாயை பார்த்தவன், “இந்த மாதிரி நீங்க கூப்பிடறதுக்கு அஞ்சு வருஷம் ஆகிடுச்சுங்க அம்மா. இம்புட்டு நாளா தெரியலையோ நான் உங்க கண்ணுன்னு. நீங்க பெத்த மகன்னு? இப்பதான் கண்ணுக்கு தெரிஞ்சனாக்கும்?” என்று கேட்டவன் தாயின் வாடிய முகத்தைக் கண்டு தாங்க மாட்டாதவனாய் முயன்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான்.

பின்பு தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தையிடம், “அம்முகுட்டி நீங்க போய் உங்களோட ரூம்ல விளையாடுவீங்களாம். அப்பா, தாத்தா பாட்டிக்கிட்ட எல்லாத்தையும் பேசி முடிச்சுட்டு அப்புறம் வந்து கூப்பிட்டுக்குவனாம் சரியா!”என்று கொஞ்சலாய் சொல்ல.
குழந்தையும் அவன் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, “ஓகே டாடி..” என்று சொல்லி விட்டு அதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த விளையாட்டு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியது.

மறுநிமிடம் விருட்டென்று எழுந்து நின்றவன், “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு எனக்கு முழுசா தெரியாது. ஆனா என்னை உங்களோட கூப்பிடாதீங்க, என்னால மறுபடியும் அந்த ஊருக்கு வர முடியாது. நான் இன்னும் பழசை மறக்கலை. மறுபடியும் அந்த ஊருக்கு வர்ற அளவுக்கு என்னோட உடம்புலையும், மனசுலையும் தெம்பு இல்லை” என்று இறுக்கமான முகபாவனைகளோடு சொன்னான்.

“சின்னப் புள்ளைய வச்சுக்கிட்டு இப்படியே வாழ்க்கை முழுக்கத் தனியாளாவே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டியாடே?’ என்று கடுமையான குரலில் கேட்ட தன் தந்தை சிவசுப்ரமணியத்தைக் கண்டு கடுப்பானான் அவன்‌

“எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே ஏன் என்னைய வற்புறுத்துறீங்க. எந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு என்னைய அங்க கூப்பிடுறீங்க? நான் செத்தாலும் சாவனே தவிர அந்த வீட்டுக்கு மட்டும் இல்ல, அந்த ஊருக்குமே என்னால வர முடியாது. வர முடியாதுன்னா முடியாதுதான் தேவையில்லாம என்ன கூப்பிடாதீங்க? அப்புறம் நான் பேசுற விதமே வேறையா இருக்கும்”

“என்னமோ உனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கிறதுக்குக் கூப்பிடுற மாதிரி எடுத்தெறிஞ்சு பேசாதடே தேவேஷ்வர்? எங்களோட சூழ்நிலை சரியில்லை, அந்த ஒரு காரணத்துக்காகத் தான் இதுவரைக்கும் வராத வீட்டுக்கு, எங்களைக் கூப்பிடாத, உன்னோட வீட்டுக்கு நாங்களா மானங்கெட்டு போய் வந்துருக்கோம்.‌”

“நான் ஒன்னும் உங்களை வாங்கன்னு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கலை”

“நாங்களும் உன்னோட வீட்ல உட்காந்து விருந்து சாப்ட வரலைடே. ஒரு அப்பாவா உன்னை அங்க வாடேன்னு சொல்றது என் கடமை. ஒரு மகனா அப்பனோட சொல்லைக் காப்பாத்த வேண்டியது உன்னோட கடமை, அதை நீ கண்டிப்பா நிறைவேத்தித்தேன் ஆகோணும்”

“நீங்க என்ன சொன்னாலும் சரி இப்ப என்னால ஊருக்கு வர முடியாது. நீங்க ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போறதுனாலும் போலாம், இல்ல இப்பவே கிளம்புறதா இருந்தாலும் கிளம்பலாம்” என்று தேவேஷ்வர் சொல்லி முடிக்கும் முன்பே அவனது தாய் அஞ்சலை நெஞ்சை பிடித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்து விட ஓடிச்சென்று தன் தாயை தாங்கினான்.

பதற்றத்தோடு, “என்னாச்சுங்கம்மா? என்ன பண்ணுது?” என்று கேட்டவாறே அவரைச் சாய்த்து படுக்க வைத்து விட்டு பரபரவென்று அவரைப் பரிசோதிக்க ஆரம்பித்தான்.

தன் அறையில் எப்போதும் அவசரத்திற்கு உதவும் என்று வைத்திருந்த மருத்துவ உபகரணக் கிட்டை எடுத்துக் கொண்டு வந்து தன் தாயின் பிபி-யை பரிசோதித்தான். ரத்த அழுத்தத்தின் காரணமாகத் தான் அவர் மயங்கி சரிந்திருக்கிறார் என்பதை உணர்ந்து அவருக்கு முதல் உதவி செய்து, குடிப்பதற்குச் சற்று சூடாக இனிப்புச் சுவையுடன் கூடிய பழச்சாற்றைக் கொடுத்து அவருக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதற்குப் பிறகே தன்னைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

பின்னர்த் தன் கோபதாபங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு,‌ அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கேட்க முடிவு செய்தவனாய்,
“சொல்லுங்கப்பா எதுக்காக என்னைய ஊருக்கு கூப்பிடுறீங்க? நேத்து நீங்க என்ன சொன்னீங்கங்குறதை என்னால கவனிக்க முடியல. அங்கே ஏதோ பிரச்சனை அப்படின்னு சொன்ன மாதிரிதான் தெரிஞ்சுது.‌ சப்போஸ் நம்ம நிலத்தை எதையாவது விக்கிறதுக்காகத்தேன் என்னைய வர சொல்றீங்களா?” என்று கேட்டான்.

‘இல்லை' என்று சொல்ல வந்த தன் மனைவியைச் சொல்லாதே என்பது போல் விழிகளால் சைகை செய்து தடுத்து நிறுத்திய சிவசுப்ரமணியம், “இங்க பாரு தேவேஷ்வர் நாங்க உன்னைய கட்டாயப்படுத்தல. ஆனா நாங்க வந்த விடயத்தைச் சொல்லிடுறோம். எதுக்காக நீ ஊரை ஒரு விட்டு வந்தேன்னு முழுசா எங்களுக்குத் தெரியாதுடே.‌ ஆனா நடக்க இருந்த பெரிய வீட்டு நல்ல நிகழ்ச்சியை நிறுத்திட்டு வந்துட்டேன்னு மட்டும் தான் எங்களுக்குத் தெரியும்டே.‌ அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு, என்ன ஆச்சுன்னு உனக்குத் தெரியாது. அதே போல நீ எங்க போனன்னு எங்களாலையும் கண்டு பிடிக்க முடியலைடே. ஏன் உன்னைக் கண்டுபிடிக்கிறதுக்கே எங்களுக்குக் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாகிடுச்சு. இதுக்கு மேலையும் எல்லாத்தையும் மறைச்சு வச்சு, எல்லாருக்கும் கஷ்டத்தைக் குடுக்காத தேவ் ‌ ஊரை விட்டு வந்த, இங்கையே கல்யாணம் பண்ணுன, குழந்தை இருக்கு இதெல்லாம் வேற விடயம். உன் புள்ளை பொறந்ததைக் கூட நீ மறைச்சுட்ட அந்தளவுக்கு நாங்க உனக்கு வேண்டாதவங்களா போயிட்டமாடே. சரிவிடு அதெல்லாம் முடிஞ்சு போனது. ஆனா இப்ப நாங்க கேட்குறது ஒன்னே ஒன்னுதேன்.‌ எங்கம்மா, அதான் உங்க அப்பத்தா அங்க சாகக் கெடக்கா. கடைசியா என் பேரன் முகத்தைப் பாக்கோணும், அவனைக் கூட்டியாந்து காட்டுங்கன்னு சொல்லி இழுத்துக்கிட்டு கிடக்கா. அதை ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டு வந்துருடே? அதுக்கப்புறம் நாங்க யாரும் உன்னைய தொந்தரவு பண்ண மாட்டோம். அதுக்கப்புறம் மத்ததை எல்லாம் நாங்களே பாத்துக்கிடுறோம், நீ பாட்டுக்கு உன் பிள்ளையோட மறுபடியும் இங்கையே வந்துடுடே அதை நாங்க தடுக்க மாட்டோம்” என்று சொன்னவர் மனைவியிடம் சைகையால் எதுவும் சொல்லாதே என்று சொன்னார்.

அஞ்சலையோ குழப்பத்துடனே தன் கணவரைப் பார்த்து வைத்தார். தந்தை சொன்னதை வைத்து பார்க்கும் போது தன்னைத் தூக்கி வளர்த்து, தன்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் அப்பத்தா உடம்பு முடியாம கெடக்குறாங்க என்ற செய்தியே அவனை வருத்தியது. அவன் அங்கிருந்து வந்து விட்டாலும் அங்கு நடப்பவற்றை ஒன்றைக் கூட அவன் தெரிந்து கொள்ள இதுவரை முயன்றது கிடையாது. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்‌ முடிந்து விட்டதென்று எண்ணி முடியுரை எழுதியதற்குப் பிறகு, அதற்கு ஏன் மீண்டும் முன்னுரை எழுத ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியதால், அவன் இதுவரை அந்த ஊரைப் பற்றிச் சிந்தித்தது கிடையாது.

ஆனால் கடந்து சென்ற இந்த ஐந்து வருடங்களில் அங்கே என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று நினைத்தவனுக்கு முதலில் வந்து நின்றது அவனவளின் நினைவு தான்.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தவன் சிறிது நேரத்திற்குப் பிறகு, ”உங்களுக்காக இல்லை. என்னை ஆசையா எடுத்து வளர்த்த, என் மேல பாசமா இருக்க என்னோட அப்பத்தாவுக்காக வர்றேன். ஆனா வந்து பார்த்துட்டு அடுத்த நிமிஷமே கிளம்பிடுவேன், என்னை அங்க இருக்கணும்னு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது சொல்லிட்டேன். பாப்பாவ பாத்துக்குங்க, அவ எந்த இடைஞ்சலும் பண்ணமாட்டா. கொஞ்ச நேரத்துல பாப்பாவை பாத்துக்குறவங்க வருவாங்க, அதுக்கப்புறம் அவங்க அவளைப் பார்த்துக்குவாங்க, நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க ஈவினிங் வந்து இதைப் பத்தி பேசலாம்” என்று சொல்லிவிட்டு அவனது நிறுவனத்திற்குக் கிளம்பினான்..

மகன் கிளம்பிய சிறிது நேரத்திலேயே பேத்தி இருந்த அறைக்குள் நுழைந்தனர் பெரியவர்கள் இருவரும். அங்கே தன் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் அம்முக்குட்டி என்று தேவேஷ்வரால் அழைக்கப்பட்ட சுடர்மதி. குழந்தையை நெருங்கிய சிவசுப்ரமணியம்,
“பாப்புக்குட்டி தாத்தாக்கிட்ட வாங்க” என்று கை நீட்டி ஆசையாக அழைத்தார்.

குழந்தையோ நேற்று முதன்முதலாகத் தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை முதலில் மிரட்சியாகப் பார்த்தது. பின்பு தந்தை சொன்னதும் அவர்களிடம் பேசியது. ஆனால் வெளியில் சென்று விட்டு வரும்போது தன் தந்தை வாங்கி வருவதுபோல் தனக்குத் தின்பண்டங்களோ, பொம்மைகளோ வாங்கி வராமல் வெறும் கையோடு வந்த அவர்கள் இருவரையும் முறைத்த குழந்தை தன் மழலை குரலில்,
“நீங்க எனக்கு எதுவுமே வாங்கிட்டு வரல தான பேசாதீங்க போங்க” என்று சொன்னவாறு அவர்களுக்கு முதுகு காண்பித்து அமர்ந்து கொண்டது.
குழந்தையின் பாவனையில் தங்களையும் மீறி இருவரும் வாய்விட்டு சிரித்தனர் வெகு நாளைக்குப் பிறகு..

”சரிடா தங்கம். சாயங்காலம் கடைக்குப் போயி உனக்கு வேண்டியதை வாங்குவோம் சரியா! இப்ப பாட்டிக்கிட்ட வாங்கடி என் பட்டுத்தங்கக் குட்டி” என்று சொல்லியவாறு குழந்தையைத் தூக்கி கொஞ்சினார் அஞ்சலை.

பிறந்ததிலிருந்து தன் தாயைப் பார்த்திடாத அக்குழந்தை தன்னைத் தூக்கி கொஞ்சிய அஞ்சலையின் கழுத்தோடு தன் கரங்களைக் கோர்த்துக் கொண்டு அவரது கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து இழைந்து, “நீங்க இங்கையே இருப்பீங்களா பாட்டி? இப்படித் தினமும் என்னைத் தூக்கி கொஞ்சுவீங்களா? நான் அம்மாவை பார்த்ததே இல்லை, எனக்கு அம்மாவே இல்லை. அப்பா தான் எனக்கு எல்லாமே செய்வாங்க.‌ அப்பா சோ ஸ்வீட் தெரியுமா!. அந்தக் கரண், வினித், ஜோன் , சுஷ்மிக்கு எல்லாம் அம்மா இருக்காங்க. அம்மா தான் சோறு ஊட்டுவாங்க. எனக்கு ஏன் பாட்டி அம்மா இல்லை” என்று தனக்கு ஏன் அம்மா இல்லை என்ற கேள்வியோடு தன் ஏக்கத்தையும் விதைத்துக் கேட்டாள் தனக்குத் தெரிந்த விதத்தில்..

‘சரிடா குட்டி அம்மா இல்லனா என்ன, உனக்குச் சீக்கிரமே புது அம்மா வருவாங்க சரியா!’ என்று சொல்ல துடித்த தன் நாவைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார் அஞ்சலை‌. எங்கே குழந்தையிடம் தான் அதைச் சொன்னால், குழந்தையின் மூலம் தன் மகனின் காதுக்கு அந்தத் தகவல் சென்று விடுமோ? அப்படிச் சென்றால் மீண்டும் அவனை மலையிறக்க பெரும் பாடுபட வேண்டி இருக்குமோ? என்பதாலையே அவர் அந்த வார்த்தைகளைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டார்..

ஆனால் பிள்ளையை சமாதானப்படுத்தும் வகையில்,
“சீக்கிரமே நாமெல்லாம் ஒன்னா இருக்கலாம்டா” என்று சொன்னார் அஞ்சலை. குழந்தையும் அதைக் கேட்டு தலை சாய்த்து அழகாக புன்னகைத்தது.

இவர்கள் இருவரும் குழந்தையாய் மாறி அம்முக்குட்டியுடன் விளையாடி கொண்டிருக்கும் போது சிவசுப்பிரமணியனின் அலைபேசி இசைத்தது. அழைப்பை ஏற்றுக் காதல் பொருத்தினார். அந்தப்பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ கோபத்தில் கொதிக்க ஆரம்பித்து விட்டார்.

“என்னடே சொல்றீங்க நெஜமாவா? அம்புட்டு அவசர அவசரமா அவிங்க அப்புடி பண்றதுக்கு என்னடே அவசியம் வந்துச்சு. ஒருவேளை நாங்க ஊருக்கு வந்த விஷயம் அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா என்னடே?” என்று கேட்க, மீண்டும் அந்தப் பக்கம் ஏதோ சொல்லப்பட்டது.

“ஓகோ அந்தப் பயலுக நல்லது நடக்க விடக்கூடாதுன்னு நினைக்கிறாய்ங்களோ? இந்தச் சிவசுப்ரமணியம் உசுரோட இருக்க வரை அவிங்க நினைக்கறது நடக்காதுடோய். நான் சொல்றதைச் செய். நாளை பொழுது சாயறதுக்குள்ள என்ற மகனோட நான் நம்ம ஊருக்கு வந்தர்றேன்‌. அதுக்குள்ள அவிங்க எதுவும் பண்ணாம பார்த்துக்கிடு. நம்ம ஆளுங்களை எல்லாம் கூட்டிட்டுபோ. தேவைப்பட்டா சின்னவனையும் கூடக் கூட்டிக்கிடு சரியா! சூதானமா பண்ணுங்கடே இதுனால யாருக்கும் எந்தக் கெட்டப்பேரும் வரக்கூடாது அதையும் பார்த்துக்கிடு. நாங்க வார வரைக்கும் அதை அப்படியே ஒத்திப் போட வேண்டியது உன் னோட பொறுப்பு. இல்லையின்னா ஊருக்கு வந்து தோலை உரிச்சு போடுவென் பார்த்துக்க ” என்று கோவத்தோடு சொல்லிவிட்டு அலைபேசியைக் கீழே வைத்தவர்,
“இவிக சொன்னா கேட்க மாட்டானுவ அஞ்சலை. நாம எப்படியாவது நம்ம மவனை ஊருக்கு கூட்டிட்டுப் போனா தான் அம்புட்டும் சரிப்பட்டு வரும். இதுப்பத்தி நான் அவங்கிட்ட பேசுறேன் நீ பாப்பாவுக்குச் சோறு ஊட்டு” என்று சொன்னவாறு வெளியே வந்தார்.
சிவசுப்பிரமணியம்.

பெற்ற மகனைப் பிரிந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.‌இந்த ஐந்து வருடத்தில் எத்தனை நிகழ்வுகளை அவர் கடந்திருப்பார். எத்தனை அவமானங்கள், ஏச்சு பேச்சுகளைச் சந்தித்திருப்பார். அனைத்தையும் தூசு போல் தட்டி விட்டு சென்றவருக்குத் தற்போது நிகழும் நிகழ்வையும், இனி நிகழப் போகும் நிகழ்வையும் எண்ணி நெஞ்சு பதறியது. தான் மறைத்த விடயங்கள் மகனுக்குத் தெரிந்து விடுமோ? என்ற அச்சமே அவரைத் தவிப்புக்கு உள்ளாக்கியிருந்தது.

நேசத்திற்காக
உயிரைக் கொடுப்பது
ஒருவித காதலென்றால்..!
நேசித்தவளுக்காகத் தன் நேசத்தையே விட்டு
கொடுப்பதும் ஒரு வித
காதல் தான்...

- தேடல் தொடரும்.....

 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -02

தனது அலுவலகம் இருக்கும் சாலையில் காரைத் திருப்பினான் தேவேஷ்வர். மனம் ஏனோ தந்தை மற்றும் தாய் சொன்ன நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அந்த ஊருக்கு செல்வது? என்ற நினைவு ஒரு புறம் தாக்கினாலும், மறுபுறம் தேவையற்ற நினைவுகளும் வந்தன. அவை அவனை அலைகடல் போல் பரவி விரிந்த, தவறி விழுந்தால் மீள முடியாத அளவுக்கு ஆழத்தைக் கொண்ட சோகத்தினுள்ளே மீண்டும் தன்னைத் தள்ளுவது போல் தான் உணர்ந்தான். அவனது நினைவுகள் எங்கெங்கோ சுற்றித் திரிந்தாலும் கவனம் முழுவதும் சாலையில் தான் இருந்தது.‌ ஒரு வழியாகத் தன் அலுவலகம் இருக்கும் கட்டிடத்திற்குள் காரை செலுத்தியவன் கதவை திறந்துவிட்டு சல்யூட் வைத்த காவலாளிக்குக் கார் கண்ணாடியை இறக்கி சின்னத் தலையசைப்பைக் கொடுத்து விட்டுப் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தினான்.

வழுவழுவென்று இருந்த தரையையும், அதன் நேர்த்தியும், அழகும்,‌மினுமினுப்பும் அவனது வளர்ச்சியையும், செல்வ செழிப்பையும் பறைசாற்றுவது போலிருந்தது. கார் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கியவன் குனிந்து காரின் உள்ளே இருந்த பைல்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நிமிரும் வேளையில் வியர்க்க விருவிருக்க அவன் முன்னால் நின்றிருந்தாள் அவள்.

பார்ப்பதற்கு மாம்பலத்தில் செய்து வைத்த செப்புச் சிலையென நின்றிருந்தாள். மஞ்சளும், இளஞ்சிவப்பு நிறமும் கலந்த நிறத்தில் உடலை இறுக்கிப் பிடித்திருந்த உடையோடும், மேக்கப்பின் தயவால் மிளிர்ந்த வெள்ளை முகத்துடனும் அவன் முன்னால் நின்றிருந்தாள்.

இதழில் அதிகளவு உதட்டுச்சாயம் பூசப்பட்டிருந்தது. அதன் விளைவு அவளது இதழ்கள் செக்கச் செவேலெனச் செர்ப்பழத்தைப் போல் கண்களுக்கு விருந்தளித்தன. கண்ட கண்ட மாவையும் கன்னத்திலும் முகமெங்கிலும் அப்பியிருந்ததன் விளைவு அவளைப் பனியில் செய்து வைத்துப் பொம்மை போலக் காண்போரின் கண்களுக்கு விருந்தாக்கியது.

அவ்வளவு நெருக்கத்தில் அவள் நிற்பாள் என்று எதிர்பார்த்திடாத தேவ்வோ ஒரு நிமிடம் அதிர்ந்து மறுநிமிடமே ஓரடி பின்னால் நகர்ந்து நின்றவன்,
“என்ன மிஸ். ஆஷ்விதா இப்படித்தான் இடிக்கிற மாதிரி க்ளோசா வந்து நிப்பீங்களா? நான் உங்கக்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன் என்கிட்ட பேசும் போதும் சரி, என்னோட ரூமுக்கு வரும் போதும் சரி நம்ம ரெண்டு பேத்துக்கு இடையில நாலடி டிஸ்டன்ஸ் இருக்கணும்னு. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி வந்து நின்னா என்ன அர்த்தம்? பாக்குறவங்க என்ன நினைப்பாங்க?” என்று சற்றுக் கோபமான குரலில் சொன்னவன்,
“இப்ப எதுக்கு இந்த மாதிரி அவசர அவசரமா வந்து நிக்கிறீங்க?” என்று மீண்டும் எரிந்து விழுந்தான்.

அவளோ அவன் திட்டிய பிறகும் கூட அங்கேயே நின்றிருந்தவள்,
“இல்ல சார் அது வந்து..”என்று எதையோ சொல்ல முடியாமல் மழுப்பலாகப் பேசியவள் வளைந்து குனிந்து நெளிந்திட. அப்பட்டமாக அவள் அவனிடம் வழிவது போலவே அவனுக்குத் தோன்றியது.

‘ ச்சை நீயெல்லாம் ஒரு பொண்ணா?’ என்ற அர்த்தத்தில் ஒரு பார்வையை அவள் புறம் செலுத்தி விட்டு விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்து அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.

டி.எம்.வி சொல்யூஸன்ஸ் என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தவன் எதிர்ப்பட்ட பணியாளர்கள் வணக்கம் வைத்ததை ஏற்றுக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு இன்னும் கோபம் அடங்கிய பாடில்லை.

“இந்த ஆஷ்விதா பொண்ணு வர வர பண்றது கொஞ்சங்கூடச் சரியில்லை. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படிப் பண்றா? பாக்குறவங்க என்னையும் சேர்த்து தானே தப்பா நினைப்பாங்க. அது ஏன் அவளுக்குப் புரிய மாட்டேங்குது” என்று சொல்லி அவன் புலம்பிட.

‘அப்ப தனியா, ரூம்ல உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டா பரவாயில்லையா?’ என்று கேட்ட மனசாட்சியைக் காரித்துப்பித் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டு பியூனை அழைத்து வரச்சொன்னான்.உள்ளே வந்த பியூனிடம் சூடாக ஒரு காஃபி கொண்டு வரசொல்லி விட்டுக் காத்திருக்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் காஃபியும் வந்தது. அதைக் குடித்து விட்டு சற்றே தன் மனநிலையைச் சகஜமாக்க முயன்றான்.

அடுத்தப் பதினைந்து நிமிடத்திற்குள் உள்ளே நுழைந்தாள் ஆஷ்மிதா. அவளது முகத்தில் சற்று முன்பிருந்த மேக்கப் அனைத்தும் துடைக்கப்பட்டிருந்தது. ஏன்? என்று நினைத்தாலும் வேறு எதுவும் அவன் கேட்கவில்லை. அவளோ நேராக அவனிடம் தன் கையிலிருந்த லெட்டரை நீட்டினாள். அவன் அவளை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு,
“என்ன மிஸ் ஆஷ்விதா? என்ன லெட்டர் இது?” என்று அவளிடமே கேட்டான்.

அதற்கு அவளும், “என்னோட ரெசிக்னேஷன் லெட்டர் சார்” என்றாள் அலட்டலின்றி.

“நீங்க வேலையை விட்டு நிக்கிறீங்களா? ஏன்?”

“நான் வந்த நோக்கம் நிறைவேறலை அதனால தான் வேலையை விட்டு நிக்க முடிவு பண்ணிட்டேன் சார்” என்று சொன்னவளைக் குழப்பமான முகத்துடன் பார்த்தவன்,
“என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல. எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லுங்க மிஸ்.ஆஷ்விதா” என்று அவன் கேட்டான்.

அவன் முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பி நின்று கொண்டாள் ஆஷ்விதா. பிறகு,
“நீங்க நினைக்கிற மாதிரி நான் சாதாரணப் பேமிலியை சேர்ந்தவளும் கிடையாது. இங்க சம்பளத்துக்காக வேலைக்கு வரவும் கிடையாது” என்று சொன்னாள்.

“வேற... வேற.. எதுக்காக இங்க வேலைக்கு வந்தீங்க?” என்று கேட்டவனின் பார்வை கூர்மையாக அவளை நோக்கியது.

“அதைச் சொல்றதைப் பத்தி எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல சார். எனக்கு எதையும் மறைச்சுப் பேசுற பழக்கம் கிடையாது” என்றவள் இப்போது அவனை நிமிர்ந்து பார்த்து, அவன் விழிகளை நேருக்கு நேராகச் சந்தித்து,“உங்களைப் பார்த்த முதல் நொடியில இருந்து நான் உங்களை விரும்புறேன் சார்.‌ உங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நெனச்சேன். நான் எப்படி உங்களைப் பார்த்தேன், எங்க பார்த்தேங்குறது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நான் உங்களை முதல் தடவையா பார்க்கும் போது நீங்க இந்தக் கம்பெனியை ஸ்டார்ட் பண்ணவே கிடையாது. அப்ப நான் எப்ப உங்களைப் பார்த்திருப்பேன், எத்தனை வருஷமா உங்களை விரும்புறேங்குறதை நீங்களே கணக்கு போட்டுக்குங்க. ” என்றாள் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக.

“என்ன சொல்றீங்க ஆஷ்விதா?” என்று கேட்டவாறு அதிர்ச்சியோடு எழுந்து நின்றவன், “நீங்க தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க. எனக்கு ஆல்ரெடி மேரேஜ் ஆகி ஒரு குழந்தை இருக்குது” என்றான் அவளுக்குப் புரிய வைத்து விடும் விதமாக.

“எனக்குத் தெரியும் உங்களுக்கு மேரேஜ் ஆகி, உங்க வைஃப் இறந்ததும் எனக்குத் தெரியும். உங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்குறதும் எனக்குத் தெரியும். அது மட்டும் கிடையாது இப்ப உங்க வீட்டுக்கு உங்க அப்பா அம்மா வந்திருக்காங்க அது வரைக்கும் எனக்கு எல்லாத் தகவலும் தெரியும். எப்படித் தெரியும், எதுக்காக இதெல்லாம் நான் சேகரிக்கிறேங்குறதை நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் நீங்க தெரிஞ்சுகிட்டா போதும்” என்றவள் அவன் அதிர்ந்து நின்றிருப்பதைக் கண்டு விட்டு ஒரு நிமிடம் அமைதி காத்தாள்.

பின்பு,‌“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை ஒரு பார்வை பார்த்தீங்க பாத்தீங்களே? அதை என்னால எப்பவும் மறக்கவே முடியாது.நீங்க என்னை அலட்சியமா பாத்துருந்தா கூட நான் இந்தளவுக்கு வருத்தப்பட்ருக்க மாட்டேன். ஆனா மத்த பொண்ணுங்க மாதிரி என்னையும் நெனச்சுட்டீங்கல்ல. இகழ்ச்சியா, அருவருப்பா ஒரு பார்வை பாத்துட்டு உள்ளே போனீங்க பாத்தீங்களா அந்த நிமிஷம் எனக்கு உயிரே போன மாதிரி இருந்துச்சு. உங்களைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே உங்க முகம், இங்கே இந்த நெஞ்சுக்குள்ள வந்துருச்சு. இதுக்கு மேல என்ன நடந்தாலும் அதை என்னால வெளிய கொண்டு வர முடியாது. நான் செத்தாலும் அதுமட்டும் முடியவே முடியாது.

அதே போல நான் நேசிக்கிறவரோட கண்பார்வையில நான் தப்பானவளா தெரியக் கூடாதுன்னு நினைக்கிறேன் அதனால தான் வேலையை ரிசைன் பண்ணிட்டு போறேன். ஆனா இப்ப போயிட்டாலும் திரும்பி வருவேன். எப்பன்னு கேட்குறீர்களா? நீங்க இன்னொரு மேரேஜ் பண்ணிக்க முடிவு பண்ணுவீங்க இல்லையா? அப்ப வந்து உங்க முன்னாடி நிப்பேன். அப்போ உங்களோட பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியாது, ஆனா அப்ப நீங்க எனக்கு என்ன பதில் சொல்றீங்களோ அதை வச்சு தான் என்னோட மீதி வாழ்க்கை எந்தப் பக்கம் போதும்னு நான் முடிவு பண்ணனும். அது வரைக்கும் நான் உங்களுக்காகக் காத்திருப்பேன் பாய்” என்று சொன்னவள் விறுவிறுவென்று அந்த அறையிலிருந்து வெளியேறி சென்று இருந்தாள்.

அவள் சென்ற பின்பும் இவன் தான் பித்துபிடித்தவன்போல நின்றிருந்தான்.
வெகு நேரத்திற்குப் பிறகு அவனுக்கு வந்த அலைபேசி அழைப்பால் தான் தன்னிலை பெற்றவன்.‘கடவுளே இந்தப் பொண்ணு என்னை இப்படிச் சொல்லிட்டு போறா? எனக்கு இன்னொரு கல்யாணமா? ஏற்கனவே ஒருத்தியை மனசில வச்சிகிட்டு வாழவும் முடியாம சாகவும் முடியாம துடியா துடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும் போது இந்தப் பொண்ணு வேற என்னைக் குற்ற உணர்ச்சியில் தள்ளிடுவா போலையே? எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?’ என்று தன்னைப் போலப் புலம்பி கொண்டிருந்தவன். சிறிது நேரத்திற்குப் பிறகே, அடித்து அடித்து ஓய்ந்து போன அலைபேசியை எடுத்து யார் அழைத்ததென்று பார்த்தான்.

அப்போது மீண்டும் அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றுப் பேசினான். அந்தப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ! கடுப்பானவன், “அப்பா சும்மா சும்மா போன் பண்ணி தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு என்ன ஊருக்கு வரணும் அவ்வளவுதானே! சரி ஊருக்கு வர்றேன், நாம ஈவ்னிங் கிளம்பலாம் போதுமா! பிளைட் டிக்கெட் புக் பண்ணிடுறேன் தயவு செஞ்சு போன் பண்ணி தொல்லை பண்ணாதீங்க. எதுக்குத் தான் காலையில என்னோட போன் நம்பரை உங்கக்கிட்ட குடுத்துட்டு வந்தனோ? தெரியலை” என்று கடுப்போடு சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

ஊருக்கு செல்ல முடிவெடுத்திருந்தாலும், அவனுக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது அவனது தந்தை அலைபேசியில் எதை எதையோ சொல்லி அவனைக் கோபப்படுத்தியதால் ஈவ்னிங்கே கிளம்புவதென்று முடிவெடுத்தான்.

தான் அங்குச் சென்றால் வருவதற்கு எப்படியும் நான்கு நாட்களாவது ஆகும் என்பதால் அனைத்து வேலைகளையும் பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தவன் இங்கே தனக்குக் கிடைத்த நண்பனை அலைபேசியில் அழைத்தான். இரண்டு முறையும் அழைப்பு முழுமையாகச் சென்றதே தவிர அழைப்பு ஏற்கப்படவில்லை. அதனால சற்றே கடுப்பானான் தேவ்.

‘கிரகம் புடிச்சவன் போன் பண்ணுனா மட்டும் எப்ப பார்த்தாலும் எடுக்கவே மாட்டான். நைட் எல்லாம் பப்புல போய்க் குடிச்சுட்டு பொண்ணுங்களோட ஆட வேண்டியது. காலையில விடிஞ்சது கூடத் தெரியாம இழுத்து போர்த்திகிட்டு தூங்க வேண்டியது. அப்புறம் லேட்டா எந்திரிச்சு அவசர அவசரமா கிளம்பி ஆஃபீஸ் வர வேண்டியது. ‘ஏன்டா இப்படிப் பண்றன்னு கேட்டா? அதெல்லாம் அப்படித்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் நான் இப்படித்தான் இருப்பேன்னு சொல்லுவான்.‌ இவனை எல்லாம் நண்பேங்குற பேர்ல என்னோட வாழ்க்கைக்குள்ள அனுப்பி கடவுள் என்னை ரொம்பவே சோதிக்குறாரு’ என்று அவன் புலம்பி தள்ளிய போது,“எக்ஸ் கியூஸ் மீ சார் நான் உள்ளே வரலாமா?” என்று கேட்டவாறு உள்ளே வந்தான் ஒருவன்.

அவ்வளவு நேரம் தேவ் எவனுக்கு அழைத்து அழைத்து அழைப்பை ஏற்கவில்லை என்றதும் கடுப்பில் இருந்தானோ அவனே நேரில் வந்து நிற்கவும் வேகமாக எழுந்து சென்று அவன் சட்டையைக் கொத்தாக பற்றி அவனைக் கீழே தள்ளினான் தேவ். அவன் மேல் ஏறியமர்ந்து நெஞ்சு நெஞ்சாக வலிக்காது போல் குத்தியவன்,
“ஏன்டா இப்படிப் பண்ற? உனக்கு எத்தனை தடவ போன் பண்றது? ஏன்டா போனை எடுக்கல” என்று கேட்டவாறு அவனது தலையில் நங்கு நங்கென்று கொட்டினான்.

“எருமமாடு, தடிமாடு, பன்னி கணக்கா வளர்ந்திருக்கடா. இந்தக் கணம் கணக்குற.‌கீழ இறங்கித் தலைடா முதுகெலும்பு உடையிற மாதிரி இருக்கு” என்று அலறியவன் அவனைக் கீழே தள்ளி இப்போது தேவாவின் மீது மெதுவாக ஏறி அமர்ந்து இருந்தான்.

“டிரைவிங்ல இருந்தேன்டா அதனால தான் போனை எடுக்க முடியல. எடுக்காததுக்காக நீ என்னை மனசுக்குள்ள என்னென்ன சொல்லி திட்டியிருப்பன்னு எனக்கு நல்லா தெரியும்டா.”

“திட்டாம தூக்கி கொஞ்சுவனா? நேத்து பப்புக்கு போயிட்டு வந்து லேட்டா தூங்கிருப்ப அதான் எழுந்திரிக்க நேரமாகியிருக்கும் அப்படித் தானே”

“பிசாசே பிசாசே.. சரியான லூசுடா நீ. நான் ஒன்னும் நேத்து பப்புக்கு போகவே இல்லைடா. அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல்லுக்குக் கூட்டிட்டு போயிருந்தேன்..” என்றதும் விளையாட்டைக் கைவிட்ட தேவ்,
“அம்மாவுக்கு என்னாச்சுடா?” என்று கேட்டவாறு அவனை விலக்கி விட்டு எழுந்து அமர்ந்தான்.

“ஒன்னும் இல்லடா அம்மாவுக்கு வீசிங் இருக்குன்னு உனக்கே தெரியும்ல. நேத்து எதையோ நெனச்சுக்கிட்டு கவலப்பட்ருப்பாங்க போல. லைட்டா மூச்சுத் திணறல் வரவும் ஹாஸ்பிடல் கெளம்பி போணோம், வேற ஒன்னும் இல்லடா இப்ப அம்மா நல்லாருக்காங்க. ஆமா உனக்கு என்னாச்சுடா. இன்னைக்கு ஏதோ மாதிரி இருக்க, என்னடா ஆச்சு?” என்று தானும் தன் விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு விட்டு சீரியசாகக் கேட்டான் விஷ்வா, என்று எல்லோராலும் அழைக்கப்படும் விஷ்வ மூர்த்தி.‌

“உன்கிட்ட என்னன்னு சொல்றதுடா. ம்ம்ம் நிறைய விஷயங்களை உங்கிட்ட இருந்து நான் மறைச்சுருக்கேன் விஷ்வா. ஆனா அதையெல்லாம் மறைக்கணும்னு நான் இன்டென்ஷனா எதையும் செய்யலடா. சொன்னா நீ தாங்க மாட்ட அதான் சொல்லலை. அதே போல சில விஷயங்கள் யாருக்கும் தெரியாம இருக்கறது தான் நல்லது சரியா!”

“ம்ம்.. புரியுதுடா.‌நான் அதெல்லாம் பெருசா எடுத்துக்கல விடு‌.‌ ஆமா எதுக்காக எனக்கு இத்தனை தடவ கால் பண்ணுன? எதாவது முக்கியமான விடயமா?”

“ம்ம்ம்.. அர்ஜெண்டா ஊருக்கு போகணும்டா அம்மா, அப்பா வந்திருக்காங்க. அதனால ஒரு ஒன் வீக்குக்குக் கம்பெனியை நீ தான்டா பார்த்துக்கணும்.‌ இதுநாள் வரைக்கும் யாருக்கும் தெரியாத சைலன்ட் பார்ட்னரா எங்கூடத் துணையா இருந்த. இப்ப உண்மையாலுமே உனக்கு அந்த அத்தாரிட்டியை தரப்போறேன். அதுக்குண்டான பேப்பர்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டு வா, நான் சைன் பண்ணிட்டு தர்றேன், அப்படியே நீயும் சைன் பண்ணிடு. எதாவது டவுட் இருந்தா எனக்குக் கூப்பிடு நான் கிளியர் பண்றேன்” என்றான் தேவேஷ்வர்…

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த விஷ்வா,“டேய் என்னடா இது திடீர்னு இப்படிச் சொல்ற? நீ இல்லாம நான் என்னடா செய்யப் போறேன் இங்க? என்னால தனியா எதையும் சமாளிக்க முடியும்னு தோணலடா‌.” என்று பதறியவாறு சொன்னான் விஷ்வா.

அவனை ஒரு அழுத்தமான பார்வை பார்த்த தேவ்,
“ம்ஹூம் நீ சாமாளிச்சு தான் ஆகணும். சில விஷயத்தை விட்டு தள்ளி இருக்கணும்னு நினைச்சேன். ஆனா மறுபடியும் விதி என்னை அதுக்கிட்டையே இழுத்துக்கிட்டு போகுதுடா. ம்ஹ்ம் நடக்குறது நடக்கட்டும். அம்மாவை பத்திரமா பாத்துக்கடா அவங்களை நான் ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவேன். அப்புறம் முக்கியமான விஷயம் ஆஷ்விதா வேலையை விட்டு போயிட்டாங்க. ஏன்னு என்கிட்ட கேக்காத, சில விஷயங்களை உன்கிட்ட சொல்ல முடியலடா.‌ அவ்வளவு தயக்கமா இருக்கு.‌தோணும் போது நானே சொல்றேன் சரியா! நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டேன் அவ்வளவு தான்.‌ சரி இப்ப போ, நான் சொன்னதைச் செய்” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்து விட்டு முக்கியமான பைல்கள் அனைத்தையும் எடுத்து கையொப்பமிட ஆரம்பித்தான் தேவேஷ்வர்.

குழப்பத்தோடு தன் அறைக்கு வந்த விஷ்வாவிற்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது. ‘என்ன திடீர்னு ஊருக்கு போகணும்னு சொல்றான். இதுநாள் வரைக்கும் ஃபேமிலியைப் பத்தி அவன் எதுவுமே சொன்னதில்லை. நானும் கேட்டதில்லை. முதல் தடவை அவனைப் பாக்கும் போது கைக்குழந்தையோட நின்னான். அந்த நிலமையில அவங்கிட்ட எதுவும் கேட்க தோணலை. இப்ப திடீர்னு ஊருக்குப் போறேங்குறான். இவன் இல்லாம நான் எப்படி இருக்குறது, ரொம்பக் கஷ்டமா இருக்குமே’ என்று சிறிது நேரம் யோசித்தான்.

பின்பு, “நண்பனுக்காக இதைக் கூடச் செய்யவில்லை என்றால், நானெல்லாம் என்ன மாதிரியான நண்பன் ஆங்க்க்” என்ற நாடக பாணியில் தனக்குள்ளே சொல்லிக் கொண்டு தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான்.

மதிய உணவு வேளையில் தேவ், விஷ்வா இருவரும் ஒன்றாகவே கேண்டீன் சென்று உணவுண்டு விட்டு வந்தனர். எப்போதும் எதையோ சிந்தித்தவாறே அமர்ந்திருந்த இந்த தேவேஷ்வர் விஷ்வாவுக்குப் புதிது. 5 ஆண்டுகளாக அவன் பார்த்த தேவேஷ்வர் இவன் கிடையாது. ஆனால் அதைப் பற்றி கேட்கவும் விஷ்வாவிற்குத் தயக்கமாகத்தான் இருந்தது.‌ தன்னிடம் சொல்ல வேண்டிய தகவல் என்றால் கண்டிப்பாகத் தன் நண்பன் சொல்லி இருப்பான். மறைக்கிறானென்றால் அதில் ஏதோ ஒன்று ரகசியமாகப் புதைந்து உள்ளது என்பதை உணர்ந்த விஷ்வா எதையும் கேட்கவில்லை.
தேவ் சொன்னதுக்கெல்லாம் சரி சரி என்று மண்டையை மட்டும் ஆட்டிக்கொண்டு இருந்தான்.

அலுவலக வேலைகள் அனைத்தையும் விஷ்வாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டிற்குக் கிளம்பினான் தேவேஷ்வர். அப்போது மீண்டும் ஒருமுறை காரை எடுக்கும் முன் தன் அலுவலகக் கட்டிடத்தைத் திரும்பிப் பார்த்தவன் அதில் மிளிர்ந்த டி.எம்.வி என்ற எழுத்தையே வைத்துக் கண் வாங்காமல் பார்த்தான்.

‘மறுபடியும் உன்னைப் பாக்க போறேன் கண்ணம்மா. என்னமோ மாதிரி ஃபீல் ஆகுதும்மா. நான் உன்னை இப்ப வரைக்கும் மறக்கலம்மா. அதே மாதிரி நீயும் என்னை மறக்காம இருப்பியா கண்ணம்மா’ என்ற தன் மனம் முழுவதும் நிறைந்திருப்பவளிடம் மானசீகமாகக் கேட்டவனுக்குப் பதில் சொல்லத்தான் அவள் இங்கில்லையே! தான் அங்குச் சென்று அளெதிரே நின்றால் அவளிடமிருந்து என்ன மாதிரியான எதிரொளிப்பு வருமோ? என்றெண்ணி இப்போதிருந்தே அவன் உள்ளத்தினுள் பதற்றமும், பதைபதைப்பும் ஏற்பட ஆரம்பித்திருந்தது. மனதில் எத்தனை நினைவுகள், எத்தனை இன்பங்கள், துன்பங்கள், கவலைகள், சோகங்கள், வருத்தங்கள் இருந்தாலும் தன் கண்ணம்மாவைக் காணப்போகிறோம் என்ற மகிழ்வும் ஒருபுறம் இருக்கிறது என்பதை அவன் மனது அறிந்தாலும், அதை அவனது மூளை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

நேசித்தவளுக்காக உன் காதலையே விட்டு விட்டு வந்த பிறகு, மீண்டும் அவளை நினைப்பது உன் தியாகத்திற்கே இழுக்கு என்று மூளை அறிவுறுத்தியது. ஆனால் அவன் மனமோ, ‘அதுக்காக முகத்தைக் கூடப் பார்க்க கூடாதா என்ன?’ என்று முரண்டு பண்ண ஆரம்பித்தது. எது நடந்தாலும் சரி விதிப்படியே நடக்கட்டும் என்று எண்ணியவனாய் நேரமாவதை உணர்ந்து வீட்டிற்க்கு கிளம்பினான் தேவேஷ்வர்..

நீ
வேண்டாமென்று
ஒதுங்கி வரவில்லையடி..
உந்தன் நெடுநாள் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்ற
எண்ணத்தில் தானடி
எந்தன் உயிரான உன்
உறவை முறித்துக்
கொண்டு நெடுந்தொலைவு
வந்து அநாதையாக
நடைபிணம் போல் வாழ்கிறேன்..!

- தேடல் தொடரும்…



 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -03

விஷ்வாவோ தன் அறையின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு விட்டு அலுவலகத்தில் இருந்து சோகமாகச் செல்லும் தேவேஷ்வரையே பார்த்துக் கொண்டிருந்தான். தேவேஷ்வரின் ஏக்க பார்வையும், பல குழப்பங்களைத் தத்தெடுத்த முகமும் அவனுக்கு ஏதோ ஒன்றை புரிய வைக்க முயல்வது போல் இருந்தது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறியவன், 'சீக்கிரமே எதுவா இருந்தாலும் வெளியே வந்துரும். கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும் பாத்துக்கலாம்' என்று நினைத்தவாறு தன் வேலையைக் கவனிக்கச் சென்றான்.

காலையில் வாகனத்தைச் செலுத்தியதை விடத் தற்போது சற்று வேகமாகவே காரை இயக்கினான் தேவ். அவ்வபோது அவனது விழிகள் இடது கரத்திலிருந்த கடிகாரத்தைப் தொட்டு தொட்டு மீண்டது. இடையே இரு முறை அவனுக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பது யார் என்று தெரிந்திருந்ததால் அழைப்பை ஏற்காமல் விரைவாக வீடு வந்து சேர்ந்தான்.

வாசலிலேயே அவனுக்காகக் காத்திருந்தார் அவனது தந்தை. தந்தையைக் கண்டதும் புன்னகைக்க முயன்று தோற்றவனாய்,“எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டீங்களாப்பா” என்று கேட்டவாறு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு படியேறினான்.

அவனோடு படியேறிய சிவசுப்பிரமணியம்,“எடுத்து வச்சுட்டோம்டே‌ ஆனாலும் உம்மவதேன் அப்பா வந்தாதேன் கெளம்புவேன்டு சொல்லிட்டு அடம் பிடிச்சுக்கிட்டு கெடக்கா. என்னதேன் பிள்ளைய வளர்த்து வச்சுருக்கியோ? உம்பேச்சைத் தவிர வேற யாரும் பேச்சையும் அம்புட்டு வெரசா கேட்கமாட்டுறா. இதெல்லாம் நல்லதுக்காடே? என்னமோ போ. அதே மாதிரி பாப்பாவ பாத்துக்க வந்த பொண்ணுக்கிட்ட அம்புட்டையும் சொல்லி அனுப்பிட்டோம்டே” என்று சொன்னவாறு படி ஏறியனார்.

அவருக்கு முன்னே இரண்டு படிகள் ஏறியிருந்தவன் நின்று திரும்பி நிதானமாக அவரைப் பார்த்தவன், “அந்தப் பொண்ணுகிட்ட என்ன சொல்லி அனுப்புனீங்கப்பா?” என்று கேட்டான். நிதானத்தையும் மீறி என்ன சொல்லி வைத்தாரோ என்ற பதற்றமும் அவனிடம் தெரிந்தது.

முதலில் உண்மைதான் செல்ல நினைத்தார்.‌ பின்பு மனைவி சொன்னது நினைவுக்கு வர,
“ஒரு வாரம் அவென் ஊருக்கு போறியான். வாரதுக்குத் தாமசமாகும், வந்ததும் அவனே உங்களைக் கூப்பிட்டுக்கிடுவியான்னுத்தேன் சொன்னேன். வேற எதுவும் சொல்லலைடே நீயேன் அதுக்கு இம்புட்டு பதட்டப்படுறவென்” என்றிட.

“ம்ம்.. வேற எதுவும் சொல்லாத வரைக்கும் சந்தோஷந்தேன்” என்று சொன்னவாறு பெருமூச்சொன்றை வெளியிட்டு விட்டு மேலே ஏறினான். அப்போதுதான் சிவசுப்பிரமணியத்துக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. தாங்கள் செய்து கொண்டிருக்கும் செயல் மகனுக்குத் தெரிந்தால் நிச்சயமாகத் தங்களை மன்னிக்க மாட்டான் வார்த்தைகளால் வதைத்து விடுவான் என்று தெரிந்தும்‍ அவர்கள் ஏடாகூடமாகச் சில காரியங்களைச் செய்து வைத்திருக்கிறார்கள்‌. ஆனால் உண்மை தெரியவரும் போது அவன் கொடுக்கும் தண்டனைகள் எந்த அளவிற்குக் கொடூரமாக இருக்கும் என்பதை அவர்கள் மட்டுமல்ல அவனுமே அறிந்திருக்கவில்லை.

தன்னுடைய பிளாட்டிற்கு வந்தவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய ஊருக்கு செல்வதற்காக உடைமைகள் அனைத்தையும் தயார் படுத்திக் கொண்டிருந்தார் அஞ்சலை. மகனைக் கண்டதும் புன்முறுவல் பூத்தவர்,“காபித் தண்ணி போடவா கண்ணா”, என்று கேட்டார்.

“வேணாம்மா இப்பதான் அங்கன குடிச்சுட்டு வர்றேன்” என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் நுழைந்தவன் அலைபேசியில் கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகளை வாரி எடுத்து அள்ளி அணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டு,
“பாப்பு குட்டி குளிக்கலாமா?” என்று கேட்க.

“பாப்பு குட்டியை குளிக்க வெச்சு பாட்டி ரெடியாக்கிட்டாங்க அப்பா, இப்ப நீங்க தான் ரெடியாகணும், சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க” என்று சொல்லி விட்டு பாட்டியைத் தேடி ஓடி விட்டது குழந்தை. இவனும் குளியல் அறைக்குள் நுழைந்தவன் குளித்து முடித்து, அடுத்த 15 நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.
ஒருமுறை சமையலறைக்குச் சென்று என்னென்ன பொருட்கள் வீணாகிவிடும் நிலையில் உள்ளது, எதையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை ஒருமுறை சரிபார்த்துவிட்டு வெளியே வந்தவன் பின்பு ஏதோ தோன்ற மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தான். கப்போர்டைத் திறந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் உடைகளை விலக்கினான்.

ஐந்து ஆண்டுகளாக எதைப் பார்த்து பார்த்து உயிர் வாழ்ந்தானோ அதை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் விழிகளில் இருந்து கசிந்த இரு துளிக்கண்ணீர் கன்னம் தாண்டி கழுத்தை அடைந்தது.‌ அதைக் கவனமாகப் பெட்டியின் உள்ளே மறைத்துக் கொண்டவன் தன் மகளது விளையாட்டு பொருட்களையும் ஒரு பெட்டியில் எடுத்து அடிக்கிக் கொண்டு முகத்தை அழுந்த துடைத்தவாறு வெளியே வந்தான். அதே நேரம் உடமைகள் அனைத்தையும் கீழே கொண்டு சென்று இருந்தார் சிவசுப்ரமணியம்.

தாயிடம் அவரது உடமைகளை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு தன் மகளையும், தன்னுடைய ஒரு பெட்டியையும் கையில் தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன் பிளாட்டைப் பூட்டி சாவியை, தன் பெட்டியினுள் இருந்த சிறிய பாக்கெட்டுக்குள் போட்டவன் பக்கத்து பிளாட்டின் கதவைத் தட்டினான்.

அதைத் திறந்த ஒரு 45 மதிக்கத்தக்க மனிதரிடம்,
“பிலிப் சார் நான் ஊருக்குப் போறேன்.‌ வர்றதுக்கு எப்படியும் ஒன் வீக்காகும். யாராவது என்னைத் தேடி வந்தாங்கன்னா சொல்லிடுங்க, உடம்பப் பாத்துக்கோங்க, லீனாக்கிட்டையும் சொல்லிடுங்க” என்றான்.

“சரிப்பா சொல்லிடுறேன். நீயும் பாத்துப் பத்திரமா போயிட்டு வா, என்ன மதிக்குட்டியை தான் நாங்க ரொம்ப மிஸ் பண்ணுவோம்” என்று சொல்லி மதியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு விடுவித்தார்.

“ஓகே சார் நாங்க கிளம்புறோம்” என்று சொல்லிவிட்டு கீழே வந்தான். அதேநேரம் விமான நிலையம் செல்வதற்காகத் தயாராகக் காத்திருந்தது வாகனம் ஒன்று. அதைக் கண்டு குழம்பியவன்,
“ஏங்கப்பா நம்பக் கார்லையே போயிருக்கலாமே! எதுக்கு நீங்க டாக்ஸியை புக் பண்ணுனீங்க?” என்று கேட்க.

“நான் ஒன்னும் பண்ணலடே இந்த வண்டி ரோட்டுல போச்சு. எங்க சார் போகணும்னு கேட்டாடே‌. நான் விமான நிலையத்துக்குப் போகணும்னுதேன் சொன்னேன். அவராத்தேதான் இங்கன நிக்கிறாரு” என்றார் சிவசுப்பிரமணியம்.

“சரி தான் என்னோட காரை அங்க பார்க் பண்ணிட்டு, அதுக்கப்புறம் ஒன்வீக்னா ஒன்னும் பண்ண முடியாது. சரி ஏறுங்க இதுவும் வந்தது நல்லதுக்குத்தான்” என்று சொன்னவன் ஒரு முறைக்கு இருமுறையாகத் தன் கார் லாக் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பரிசோதித்து விட்டு பின்புறக் கதவைத் திறந்து கொண்டு ஏறினான். கூடவே அவன் தாயும், தந்தையும் ஏறி அமர்ந்தார்கள்.

அவர்கள் ஏறியதும் அடுத்த 20 நிமிடத்தில் விமான நிலையத்தின் முன்பு சென்று நின்றது வாகனம். கீழே இறங்கிய போது தான் ஏதோ நினைவு வந்தவனாக, “அப்பா ஃப்லைட் டிக்கெட்டை எடுத்துட்டு வந்தீங்களா?” என்று கேட்க.

“அதெல்லாம் உங்க அம்மா பத்திரமா எடுத்து வெச்சிட்டாடே” என்றார்.

“பரவால்லப்பா எடுத்து வெச்சிருந்தா சரிதான். ஆமா யார் கொண்டு வந்து கொடுத்தா” என்று கேட்டான்.

“மத்தியானம் ஒரு தம்பிதேன் கொண்டு வந்து கொடுத்துட்டுப் போனான். நீதேன் வீட்ல கொடுக்கச் சொல்லியிருந்தியாம்” என்றார்.
‘பரவால்யே‌. இனிமே எங்க போறதா இருந்தாலும் இந்த ட்ராவல் ஏஜென்சிலையே டிக்கெட் புக் பண்ணிடலாம் கரெக்ட்டா கொண்டு வந்து கொடுத்துடுறாங்க. சர்வீஸ் நல்லாருக்கு’ என்று நினைத்தவனாய் டாக்ஸிக்கு பணத்தைக் கொடுத்து விட்டு தன் உடமைகளோடு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

அவனைப் பின் தொடர்ந்து அவனது தாய் தந்தையரும் வந்தனர். மகளைக் கையில் வைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் மகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒருவாராகப் பதிலளித்தான்..

குழந்தையோ கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாதவன்,“அம்மு குட்டி நாம புது ஊருக்குப் போகப் போறறோம். புதுப் புது ஆளுங்களைப் பாக்க போறோம். அதனால எப்பவும் அப்பா கூடவே இருக்கணும் சரியா! யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது." என்று குழந்தைக்குப் புரிய வைக்கும் விதமாகச் சொன்னவன் மேலும், “அப்புறம் அங்க வந்து தேவையில்லாம மத்தவங்களைத் தொல்லை பண்ணக் கூடாது. தாத்தா பாட்டியையும் இம்சை பண்ண கூடாது சரியா!” என்றதற்குச் சரி என்று தலையாட்டிய குழந்தையும், “அப்ப நாம திரும்பி இங்க எப்ப வருவோம் ப்பா. என்னோட பிரெண்ட்ஸ்ஸை எல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்”, என்று கொஞ்சும் குரலில் சொன்னாள்.

அதைக்கேட்டு ரசித்தவன்,
“ஒன் வீக் தான்டா செல்லக்குட்டி அதுக்கப்புறம் நாம இங்கையே வந்துடலாம்” என்று சொல்லி மகளைச் சமாதானப்படுத்தினான்‌ . பின்பு செக்கிங் முடித்தவர்கள் தங்களுக்கான அழைப்பு வரும் வரை காத்திருந்தனர்.

பத்து நிமிடத்தில் அவர்கள் செல்லும் விமானத்திற்கான அழைப்பு வரவும் நால்வரும் அனைத்து செக்கிங்களையும் முடித்துக் கொண்டு விமானத்தில் வந்து அமர்ந்தனர்.

தேவேஷ்வரும் அவனது தந்தையும் அருகருகே அமர்ந்திருக்க. அடுத்த இருக்கையில் அஞ்சலை அமர்ந்திருந்தார். மகளைத் தன் மடியில் இருத்திக் கொண்டு, ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் தேவேஷ்வர். ஏனோ அவனது மனம் ஊமையாய் அழுதது.

ஆனால் அதையறியாத குழந்தையோ முதல் முறை விமானப்பயணத்தை எண்ணி கலக்கம் கொள்ளாமல் கீழே தெரிபவற்றைப் பார்த்து விட்டு அவனிடம் கேள்விகளை அடிக்கியது. அவனும் தன் கவலையை ஒத்தி வைத்து விட்டு தன் செல்ல மகளுக்குப் பொறுமையாகப் பதிலுரைத்தான். சிறிது நேரத்தில் விமானம் கிளம்ப இருப்பதால் அனைவரும் சீட் பெல்ட் போட்டுக் கொள்ளுமாறு பணிப்பெண் கூறிவிட்டு செல்ல தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்துச் சீட் பெல்ட்டை அணிவித்துக் கொண்ட தேவ் தன் மகளைத் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தான்.

விமானம் ஓடுதரையில் ஓட ஆரம்பித்தது. இருபுறமும் அகல விரிந்திருந்த, பறவையின் தோற்றத்தை ஒத்த அந்த இயந்திர பறவை வானில் வேகமெடுத்து தன் பயணத்தைச் சீராகத் துவங்கி இருந்தது.

சிறிது நேரத்திலேயே அம்மு குட்டி உறங்கிவிடத் திரும்பித் தன் தந்தையைப் பார்த்தான்.‌ அவரும் உறக்கத்தின் பிடியில் இருப்பதை உறுதி செய்து கொண்டவனது விழிகள் தானாகக் கலங்க ஆரம்பித்தது.‌ ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அவளைப் பார்த்து, இப்போது எப்படி இருப்பாளோ? என்ற நினைவும், கூடவே முதன் முதலில் அவளைப் பார்த்த நினைவும் ஞாபகத்தில் வந்து அவன் நெஞ்சை தாக்க, எச்சிலை கூட்டி விழுங்குவது போல் அந்நினைவுகளையும் விழுங்கி ஒதுக்கித் தள்ள முயன்றான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவனால் அவற்றை ஒதுக்கித் தள்ள முடியவில்லை.‌ அது முடியாததால் கண்மூடி உறங்க முயன்றான் ஆனால் உறக்கமும் வந்தபாடில்லை. மாறாக அவன் நினைவுகள் தான் பின் நோக்கி பயணித்தன.


ஐந்து வருடங்களுக்கு முன்பு....

நேரம்.. அதிகாலை நான்கு..
ஊர்.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொளத்துப்பாளையம்.

கிராமத்திற்கான மணம் ஊரெங்கும் விரவிக் கிடந்தது. காவித் தாயின் கரையோரம் இருப்பதால் காற்றின் ஈரப்பதம் கூட மழைச்சாரலைப் போல் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் இட 5 மணியைத் தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.‌ ஆனால் அந்த வீட்டில் மட்டும் அந்த நேரத்தில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விடிய விடிய தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த அவள் எழுந்து அடர்ந்து நீண்டு இடைவரை வளர்ந்திருந்த தன் முடியை கொண்டை போட்டுக் கொண்டவள் கை,கால்,முகம் கழுவிக்கொண்டு ஒரு வாளி நிறையத் தண்ணீரோடு வாசலுக்கு வந்தாள்.

அதிகாலைக் குளிரானது அவள் உடலை ஊசி போல் குத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் வாளியைக் கீழே வைத்து விட்டு கைகளைப் பரபரவென்று தேய்த்துக் கொண்டாள்.

பின்பு பரபரவென்று தண்ணீரை வாசலில் தெளித்துக் கூட்டி, வாரி குப்பைகளை அள்ளிக் கொட்டியவள் தனக்குத் தெரிந்த அளவில் கோலமிட்டாள். பின்பு
தள்ளி நின்று தான் வரைந்த கோலத்தை ரசித்தாள்.‌
“ம்ம்... இப்ப தான் பாக்குற மாதிரி இருக்குது. இதைப் பார்த்தா பெரியம்மா சர்ப்ரைஸ் ஆவாங்களா?” என்று வாய்விட்டு சொன்னவள் மறுநிமிடமே, ‘அவங்களுக்குத் தான் என்னைப் பிடிக்கலையே அப்புறம் எப்படிச் சர்ப்பிரைஸ் ஆவாங்க. எப்படியும் திட்டத்தான் போறாங்க’ என்று வருத்தத்துடன் நினைத்தவளாய் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு வாளி, விளக்குமாறு என அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். அதை அதன் இடத்தில் வைத்து விட்டு நேராகத் தான் தங்கியிருக்கும் அறைக்குச் சென்றவள் குளித்து முடித்துத் தான் எப்போதும் உரிமையோடு சண்டையிடும், திட்டும், கொஞ்சும் பாலமுருகனுக்குப் பூக்களைப் பறித்துச் சென்று பூஜை செய்தாள். பின்பு ஆரத்தி காட்டியவள் பலத்த வேண்டுதலை வைத்து விட்டு தன் அறையிலிருந்து வெளியறிய அதேநேரம் பால்காரர் பால் கொண்டு வந்து விட்டதை அறிவிப்பதற்காக மிதமான சப்தத்தில் தன் வாகனத்தின் ஹாரனை ஒலிக்க விட்டார்.. அதைக் கேட்டதும் பரபரப்புடன் பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்தவள்,‌“நாலு லிட்டர் பால் ஊத்துக்க அண்ணா” என்றவாறு பாத்திரத்தை நீட்டினாள்.

அவளைக் கூர்மையாகப் பார்த்த பால்காரர் பரமசிவமோ, “என்ன பாப்பா எப்போதும் மூனு லிட்டர் தான வாங்குவ, இன்னைக்கு என்ன ஒரு லிட்டர் சேர்த்து வாங்குற?” என்று எதார்த்தமாகக் கேட்டார்.

“அது ஒன்னுமில்லைங்க அண்ணா பெரியம்மாவுக்கு இன்னைக்குப் பிறந்தநாள் இல்லையா, அதான் அவங்களுக்காகப் பால் பாயசம் வைக்க அனுமதி வாங்கியிருக்கேன். அதுவும் பெரியாத்தா தான் சரின்னாங்க பெரியம்மா எதுவும் சொல்லலை” என்றாள் வெள்ளந்தியாய்.

“கால் லிட்டர் சேர்த்தே ஊத்துறேன் நீ ஒரு டம்ளர் எடுத்து வெச்சுக் குடிம்மா. அத்தனையும் செஞ்சுப்புட்டு நீயேன் பட்டினியா கெடக்கோணும். உனக்காகத் தான் இந்தக் கால் லிட்டர் சரியா!” என்றவர் அப்போது தான் அவளது அதிர்ந்த முகத்தைப் பார்த்தார்.

“என்னமா அப்படிப் பார்க்குற இந்த வீட்டுல என்ன நடக்குதுன்னு வெளிய என்ன பேசிக்கிறாங்களோ அது எனக்குத் தெரியாதுமா. ஆனா எம்பொஞ்சாதி பக்கத்து ஊட்டுக்கு தான் பாத்திரம் தேய்க்க வர்றா. அவ சொன்னதை வெச்சே எனக்குத் தெரிஞ்சுருச்சு கண்ணு நீ நீங்க எப்படி இருக்கன்னு. நான் தெரியாமத்தேன் கேட்குறேன் உன்னைத் தான் இங்க இருக்க யாருக்கும் புடிக்கலையே அப்புறமும் ஏன் கண்ணு நீ இங்கேயே இருக்கணும் பேசாம வேற எங்கேயாவது போயிடலாம் இல்லையா!” என்று கேட்க.

கண்ணில் துளிர்த்த நீரை கீழே சிதறவிடாமல் உள்ளிழுத்துக் கொண்டவள், “ஊர் பேர் தெரியாத இடத்துக்குப் போயி பயந்து பயந்து வாழ்றதை விட, இங்க அவங்க கொடுக்குற கஷ்டத்தைத் தாங்கிக்கிட்டு பயமில்லாம வாழலாம்ல அண்ணா. அதனால தான் இங்கேயே இருக்கேன். சரி அண்ணா எனக்கு வேலை இருக்கு நாளைக்குப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே ஓடினாள் வாணி... மதுரவாணி.

முழுப்பெயர் மதுர வாணி. எல்லாராலும் வாணி என்று அழைக்கப்படுபவள். அவளது தாய் தந்தையரால் மட்டும் மதுரா என்று செல்லமாக அழைக்கப்படுவாள்.. ஆயிரம் பேர் அன்புடன் அழைத்தாலும் பெற்றோர் அழைப்பது போல் வந்திடுமா? செல்வமும், செழிப்பும், வசந்தமாய்த் தழைத்தோங்கி குறைவின்றி இருந்தது அவளது வாழ்வில்..

திடீரென்று வீசிச்சென்ற பெரும் புயலொன்று பூக்கள் நிறைந்த பூந்தோட்டத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி சென்றதைப் போல் சில பல தவிர்க்க முடியாது நிகழ்வுகள் நடக்கும் வரை அவள் வாழ்வும் அப்பூந்தோட்டம் போல் செழிந்தோங்கி தான் இருந்தது.

புதிதாக முளைத்திருக்கும் இறக்கைகள் கொண்டு சிறகடித்து வானில் உயர உயரப் பறந்து செல்லும் குருவியொன்றின் வாழ்வைப் போல் கவலையின்றி மகிழ்வென்ற வானில் பறந்துக் கொண்டிருந்தவளின் வாழ்வு ஒரே நாளில் சிறகொடிந்த பறவையைப் போல் மாறியது. சிறகொடிந்து வலியால் துடிக்கும் பறவையின் சிறகை ஒட்டவைத்து வலியைப் போக்க ஆளில்லை. மீண்டும் உன்னால் பறக்க முடியும் என்று தட்டிக் கொடுத்து ஆறுதலுரைக்க ஆளில்லை. மாறாக முடமான பறவைக்குப் பறக்க வேண்டுமென்ற ஆசை இருக்கக் கூடாதென்று வன்மமாய் சொன்னவர்களாலேயே முடக்கி வைக்கப்பட்டாள் ஒரு மூலையில்.
சொந்தம் என்ற பெயரில் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயநலத்தை அறியாத அப்பாவி பெண்னென்று காண்போர் என்னும் அளவிற்கு அத்தனை வெள்ளந்தியான குணம் கொண்டவள் மதுரவாணி.

ஆனால் அவளைப் பற்றி அவள் மட்டுமே அறிவாள். அந்த வெள்ளந்தி குணத்திற்குள் ஒளிந்திருக்கும் வைராக்கியம், பொறுப்பு, அக்கறை, பாசம், கோபம், ஏக்கம், வெறுப்பு, அன்பு, பிறரை எங்கே வைக்க வேண்டுமென்ற நிதானம் முதலியவற்றை அவளின்றி வேறெவராலும் அறிந்து கொள்ளவும் முடியாது.‌ அவ்வளவு எளிதாக அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் அவள் விடமாட்டாள்.‌‌

எளிமையின் தோற்றம் அவளெனில்..
எரிமலையின் பிம்பமும்
அவளே..!
அன்பின் அமைவிடம்
அவளெனில்..
ஆக்ரோஷ அலையின்
அம்சமும் அவளே..!
அன்பைக் காட்டுவதில்
வெண்மையின்
சாயல் அவளென்றால்..
கோபத்தைக் காட்டுவதில்
காளியின் மறுபிம்பமும்
அவளே..!


- தேடல் தொடரும்…




 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -04

சமையலறைக்குள் சென்றவள் மளமளவென்று சமையல் வேலையை ஆரம்பித்தாள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அப்பளம், வடை, போண்டா, பஜ்ஜி கூடவே கொழுக்கட்டை என அனைத்தையும் செய்து முடித்து விட்டு அவள் அப்பாடா என்று கீழே அமரும் போது மணி எட்டை கடந்திருந்தது.

அவ்வளவு நேரமும் சமையல் அறையை விட்டு வெளியே வரவில்லை. சமைத்து முடித்து வெளியே வரும் போதும் கூட அந்த வீட்டில் வசிப்பவர்கள் யாரும் கீழே வரவும் இல்லை.‌ ஒற்றை ஆளாக அனைத்தையும் சமைத்து முடித்தவளுக்கு எப்போதும் போல் களைப்பாக இருந்தாலும், அதையும் மீறி இவ்வீட்டினர் தன்னிடம் நாலு வார்த்தை பாசமாக பேசி விட மாட்டார்களா? என்ற எண்ணமே அவளை ஏங்க வைத்தது. சமைத்த அனைத்தையும் கொண்டு வந்து ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த உணவு மேஜையில் பரப்பி வைத்தாள்..

அந்த வீடு சின்ன வீடு என்று சொல்ல முடியாது. அதே சமயம் மிகப் பெரிய கோட்டை என்றும் சொல்லிட முடியாது. வெளியில் அந்த வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இருந்தது.‌ அலங்காரமான பெரிய இரும்பு கேட் ஒன்று கார் உள்ளே நுழைவதற்காக பொருத்தப்பட்டிருந்தது. சற்று தள்ளி சிறிய கேட் ஒன்றும் இருந்தது.அந்த கேட்டைத் திறந்தால் சிறிய அளவிலான நடைபாதை வீட்டின் நுழைவாயில் வரை செல்லும்.

அந்நடை பாதையின் இரு புறமும் அழகழகான பூக்கள் தாங்கியிருக்கும் பூச்செடிகளை வைத்திருந்தனர்.‌அவற்றில் மலர்ந்திருந்த அழகான பூக்கள் அழகோடு வாசனையையும் பரப்பிக் கொண்டிருந்தன. அடுத்து வீட்டின் முகப்பில் பனிரெண்டு தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரை போடப்பட்டிருந்தது. அதோடு வீட்டினுள் நுழைவதற்கான நுழைவாயிலின் இருபுறமும்
வருவோர் அமர்வதற்காக திண்ணை அமைக்கப்பட்டிருந்தது.

வீட்டில் நுழைவாயில் தேக்கு மரத்தால் இழைக்கப்பட்டு, கடவுளின் உருவ சிலைகள் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வேலைப்பாடுகளைக் கொண்ட கதவுகளை உடைய வாசல்..‌ அதுவும் இரண்டு கதவுகளைக் கொண்டதாக இருந்தது..

அடுத்து நூறு பேர் ஒன்றாக அமரும் அளவிற்கு பெரிய ஹால். ஹாலின் ஒரு மூலையில் டைனிங் டேபிளும் அதனருகில் கை கழுவுவதற்கான வாஸ்பேஷன் வைக்கப்பட்டிருந்தது. ஹாலின் வலது மூலையில் சமையலறையும் இடது மூலையில் பூஜை அறையும் இருக்க, இடது மூலையை ஒட்டி மேலே செல்லும் படியும், வலது மூலையில் சமையல் அறையை விட்டு சற்று தள்ளி ஒரு பெரிய அறையும் இருந்தது.

மேலே வலது புறம் மூன்று அறையும் இடதுபுறம் மூன்று அறையும் இருக்க. அதே இடது புறத்தில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளும் இருந்தன..
வலது பக்கம் இருந்த அந்த ஒற்றை அறையை ஒட்டி சிறிய சந்தொன்று பின்வாசலுக்கு செல்வதற்காக விடப்பட்டிருக்க அதில் சென்றால் பின்னால் கிணறும் அதையொட்டி துணி துவைப்பதற்கான கல்லும் போடப்பட்டிருந்தன. யாராவது விருந்தினர் வந்தால் உபயோகப் படுத்திக் கொள்வதற்காக பின்னே ஒரு கழிவறையும். குளியலறையும் கட்டப்பட்டிருந்தது. அந்த கழிவறைக்கு சிறிது தூரத்தில் அந்த வீட்டை ஒட்டி வலது ஓரத்திலேயே சிறிய அறை ஒன்றும் இருந்தது. அது உபயோகமில்லாத பழைய சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக இருந்தது. என்று மதுரவாணி இங்கு வந்து சேர்ந்தாளோ அன்றிலிருந்து அதுதான் அவளது அறை..

சமைத்த உணப் பதார்த்தங்கள் அனைத்தையும் உணவு மேஜையில் எடுத்து வைத்து விட்டு அவள் பரிமாறுவதற்காக அங்கேயே நின்று இருந்த வேளையில் அந்த வீட்டின் நபர்கள் ஒவ்வொருத்தராக தங்களது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள்.

முதலில் வந்தது அந்த வீட்டின் பெரிய மனிதரும் அந்த ஊரின் முன்னாள் தலைவருமான ஆதிவிநாயகம். அவரை அடுத்து இறங்கி வந்தது அவரது தர்மபத்தினி பூங்கோதை நாச்சியார்.

அதற்கடுத்து தம்பதி சமேதராக இறங்கி வருவது இவர்களது மூத்த மகன் சுந்தரேசன், அவரது மனைவி மீனாட்சி.
அதற்கடுத்து ஆதிவிநாயகம்
பூங்கோதை நாச்சியாரின் இரண்டாவது மகன் கதிரேசன் அவரது மனைவி ஆனந்தவள்ளி.

ஆறு பேரும் நேராக பூஜை அறையின் முன்பு வந்து நிற்க கடைசி மருமகளான ஆனந்தவள்ளி பூஜையை முடித்து அனைவருக்கும் ஆரத்தி காட்டும் வேளையில் தான் அவர்களது வாரிசுகள் கீழே இறங்கி வந்தனர்.

சுந்தரேசன் - மீனாட்சி தம்பதியரின் மூத்த புதல்வன் அகில் பிரசாத்..
இரண்டாவது பெண் பிள்ளை
ஆஷ்விதா.

கதிரேசன் - ஆனந்தவள்ளி தம்பதியருக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் தான்.
மூத்தவன் - புகழேந்தி
இளையவன் - ஆதவ்..

அகில் தந்தை செய்யும் எக்ஸ்போர்ட் பிசினஸ்ஸைக் கையிலெடுத்து திறம்பட செயலாற்றி கொண்டிருக்கும் ஒரு வளர்ந்துவரும் பிசினஸ்மேன். ஆஷ்விதா லண்டனில் புகழ்பெற்ற கல்லூரியில் தனக்குப் பிடித்த பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்டை முதலாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.

புகழேந்தி- அவனும் தன் அண்ணன் அகிலின் வழிகாட்டுதலின் படி தன் தந்தையோடு சேர்ந்து தங்களது எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் நிறுவனத்தை கவனித்துக் கொண்டே, கற்றுக் கொண்டிருக்கிறான்.

ஆதவ் தற்போது தான் கல்லூரி படிப்பை முடிக்க உள்ளான். அந்த வீட்டின் கடைக்குட்டி ஆஷ்விதா தான்.

ஆஷ்விதா லண்டனில் இருப்பதால் மற்ற அனைவரும் பூஜையறையின் முன்பு கூடி இருந்தார்கள். அன்று மீனாட்சியின் பிறந்தநாள் இதற்காகத்தான் வாணி தேவைக்கு அதிகமாகவே சமைத்து வைத்திருந்தாள். அனைவரும் பூஜையை முடித்துக் கொண்டு நேராக உணவு மேஜையில் வந்து அமர்ந்தார்கள்.

அவர்கள் வருவதைக் கண்டவள் வேகவேகமாக அனைவருக்கும் அவரவர் இருக்கையின் முன்பு தட்டை நகர்த்தி அதன் மீது வாழை இலையைப் பரப்பி வைத்தவள் சமைத்த உணவுகளை பரிமாற ஆரம்பித்தாள்.

அவர்கள் அனைவரும் டேபிளை நெருங்குவதற்குளாகவே பரிமாறி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று மறைய முயன்ற வேளையில், “நில்லுடி..” என்ற மீனாட்சியின் குரல் கேட்டு அப்படியே நின்றாள்.

“இங்கே வாடி” என்று மீண்டும் அதிகாரமாய் ஒலித்தது மீனாட்சியின் குரல்.. மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி சாந்த சொரூபி என்றால், இந்த மீனாட்சி அடிக்கடி கோபத்தில் பத்திரகாளி அவதாரம் எடுப்பவர்.

அவரது குரல் கேட்டு பொங்கி வந்த பயத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவள் தலை நிமிராது இரண்டு அடி எடுத்து வைத்து அவர் அருகில் வந்து நின்றாள்.

“யாரைக் கேட்டுடி நீ இவ்வளவு சமைச்ச?” என்றாள் மீனாட்சி அதிகாரமாய்..

அதற்கு அவளோ மெலிதான குரலில், ”இன்னைக்கு உங்க பிறந்த நாள் அம்மா அதனாலதான்” என்ற வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே அவளது கன்னத்தில் அறை விழுந்திருந்தது. அதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்போதும் அடியை வாங்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் தான் நின்று கொண்டிருந்தாள் வாணி. கண்களில் கண்ணீர் துளிர் விட்டிருந்தது.

“இதெல்லாம் யாரு உங்க அப்பன் சம்பாதிச்சுக் குடுத்ததுன்னு நெனச்சிட்டு இருக்கியா? உன் இஸ்டத்துக்கு கண்டதையும் சமைக்கிறதுக்கு. எப்பவும் யார் என்ன சாப்பிடுவாங்களோ, அதையே நீ சமைக்க வேண்டியது தானே. நீ ஒரு வேலைக்காரி,‌ வேலைக்காரியா தான் இருக்கணுமே தவிர இந்த வீட்டுக்கு எஜமானியாக நினைச்சா இப்படி தான் அவமானப்பட வேண்டி வரும்.. ” என்று சொன்னவள் அகிலின்,
“மாம் எனக்கு லேட் ஆகுது” என்ற குரலில்..

“இதோ வந்துட்டேன் கண்ணா..” என்று அன்பொழுக பேசியவாறு தன் இருக்கையில் சென்று அமர்ந்து அவள் பரிமாறி வைத்த உணவை உண்ண ஆரம்பித்தார். அவர் ஒருப்பிடி உணவை எடுத்து வாயில் வைத்து மறுகணம் மற்றவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள்.

அழுது கொண்டே சமையலறைக்குள் நுழைந்த வாணிக்கு எப்போதும் கிடைக்கும் அதே ஏமாற்றம்..
மனம் முழுமையாக ஏமாந்த வேதனையில் வலித்தது. தன்னைத் தவிக்க விட்டு விட்டு சென்ற பெற்றோர்களை எண்ணி மனம் ஊமையாய் அழுதது. அவர்களோடவே தன்னையும் கூட்டிக் கொண்டு சென்றிருந்தால் தனக்கு இத்தனை இன்னல்களும், வேதனைகளும், வலிகளும் வந்திருக்காதே என்றவள் தினமும் நினைக்காத நிமிடங்கள் கிடையாது.
இப்பவும் அதையே நினைத்தவளுக்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.. ஆனால் அவளுக்கு அந்த குடுப்பினைக் கூட இல்லை. சுதந்திரமாக அழக்கூட முடியவில்லை. அடுத்து அதிகாரமாய் அழைத்தான் அகில்,“ஏய் இதை வந்து எடுத்துட்டு போ” என்று சொல்லி சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விட்டு, அவன் கையை துடைத்தவாறு எழுந்து சென்று விட. இவளோ எதுவும் பேசாமல் இலையை டஸ்ட்பின்னில் போட்டு விட்டு தட்டைக் கொண்டு வந்து பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்தில் வைத்து விட்டு மதிய சமையலுக்கான வேலையை ஆரம்பித்தாள்.

அனைவரும் உணவருந்தி முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருக்க தயக்கத்துடன் ஆரம்பித்தார் பூங்கோதை..
“அம்மா மீனாட்சி இந்த வாணி பனிரெண்டாவது முடிச்சிட்டா ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடலாமா?” என்று கேட்க.

சட்டென்று நிமிர்ந்து தன் மாமியாரை முறைத்தவள்,
“என்ன அத்தை மறந்துட்டீங்களா? அவ அப்பன் யாரு, இவ யாரு எதுக்கு இங்க வந்துருக்கான்னு தெரிஞ்சும் அவளை காலேஜ் படிக்க வைக்கணும்னு சொல்றீங்க. போதும் போதும் ஒரு வீட்டுக்கு வேலைக்காரியா போறதுக்கு அவளுக்கு இந்தப் படிப்பு போதும்” என்றார் சுள்ளென்று.

அதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் முகம் சுருக்கிய சுந்தரேசன் மெதுவாக வாயை திறந்தார்.‌ “என்னமா இது ஆயிரம் இருந்தாலும் அவ உன்னோட அண்ணன் பொண்ணு இல்லையா? அவகிட்ட ஏன் இப்படி நடந்துக்குற. அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா? பாவம் மா சின்ன பொண்ணு” என்றார்.

“அவங்கப்பா செஞ்சதை நான் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் மாமா.‌எதுவும் இவளோட தப்பு கிடையாது தான். ஆனா அவருக்கு பொண்ணா பொறந்துட்டாளே அதான் அவ செஞ்ச தப்பு. அன்னைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு உதவி கேட்க போனதுக்கு, அவர் சொன்ன வார்த்தைகளை என்னால எப்பவுமே மறக்கவே முடியாது மாமா. அவரை மட்டுமில்ல அவரைச் சேர்ந்த யாரையுமே நான் மன்னிக்க மாட்டேன். அப்ப என்ன காரணத்துக்காக இவளை இங்க கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிறீங்களா, கண்டிப்பா அவளை நல்லபடியா பாத்துக்கணும்னு மட்டும் நினைச்சு கூட்டிட்டு வரக் கிடையாது.‌சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்குறதுக்கு மட்டும் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்..

சாகும்போது கூட அவர் செஞ்ச தப்பை உணரலை. என்ன சொல்லிட்டு இறந்து போனாரு தெரியுமா?எனக்கு கடன் நிறைய இருக்கு, சொத்தை வித்து கடனையெல்லாம் கட்டிடு. ஆனா கடைசி வரைக்கும் என் பொண்ண மட்டும் கைவிட்டுடாதமா. உனக்கு நான் செஞ்சதுக்கெல்லாம் நன்றிக்கடனா இதை மட்டும் செய்யின்னு சொல்லிட்டு அவர் செத்துப் போனார். அவர் செஞ்சது நல்லது கிடையாது எனக்கு கெட்டது தான் செஞ்சிருக்காரு. அதான் அதோட பலனை மகளுக்குக் குடுக்குறேன். அவரை பழிவாங்க முடியாது அதான் இவளை கொடுமை பண்றேன். அப்பா செஞ்ச தப்புக்கு மக தண்டனை அனுபவிக்கட்டும். இதைப்பத்தி இனிமே யாரும் பேசாதீங்க. இந்த வீட்டுல நான் யாரையும் மரியாதை குறைவாக நடத்துனது கிடையாது.இந்த விஷயத்துல மட்டும் நீங்க என்னை எதுவும் சொல்லக்கூடாதுன்னு இவளைக் கூட்டிட்டு வந்த அன்னைக்கே சொல்லியிருந்தேன். அதை விட்டுட்டு மறுபடியும் எதுக்கு இந்த பேச்சை எடுக்குறீங்க? அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் புருஞ்சுக்கங்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றவர் அலுவலகம் செல்ல தயாராகி வந்தார்..

ஆம் சுந்தரேசன். மீனாட்சி இருவரும் அலுவலகத்திற்கும் செல்வார்கள். தற்போது அலுவலத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் தன் பிறந்தநாளை முன்னிட்டு புது உடையும், ஒரு மாத சம்பளத்தை போனசாகவும் வழங்க ஏற்பாடு செய்து இருந்ததால் தற்போது கணவரோடு கிளம்புகிறார்.

தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உடையும், பணமும் வழங்க நினைக்கும் மீனாட்சியின் மனதிற்கு சொந்த அண்ணன் மகளுக்கு ஒரு உடை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கிழிந்து போன பழைய உடைகள் தான் அவளுக்கு எப்போதுமே புது ஆடைகள். இதோ இப்போது கூட நைந்து,‌ வெளுத்துப்போன சுடிதார் ஒன்றைத் தான் போட்டிருக்கிறாள்.

மீனாட்சி வேறு எந்த விஷயத்திலும் இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிப்பது கிடையாது. 'அவள் தன் அண்ணன் மகள். தான் பட்ட கஷ்டத்திற்கும், அவமானத்திற்கும் அவளை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படித்தான் நடத்துவேன். நீங்கள் யாரும் என்னைக் கேள்வி கேட்க கூடாது. மீறி கேட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு வாணியை இங்கு அழைத்து வரும்போது சொல்லி இருந்த காரணத்தினால் இதுவரை யாரும் மீனாட்சியை இந்த விஷியத்தில் எதிர்த்து பேசியது கிடையாது.

ஏனோ, இப்போது இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதற்கு முன்பு இவர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அகில், புகழேந்தி இருவரும் கல்லூரி படிக்கும் போது மிகவும் வறுமையான சூழல் தான். அப்போதெல்லாம் உதவி செய்யாத மாமன் மீது அகிலுக்குமே கோபம் இருந்தது. அதனால் தான் அந்த கோபம் அப்படியே அவர்களின் மகள் மீதும் பிரதிபலிக்கிறது.

பெரிதாக அவளிடம் மற்றவர்கள் யாரும் பேசமாட்டார்கள். பெரியவர்கள் கூட ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வார்கள். ஆதவ் மட்டும் தான் அவளிடம் சற்று கலகலப்பாக பேசுவான்.

அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் மதிய உணவினை சமைத்து முடித்து விட்டு பின்புறம் இருக்கும் தன் அறைக்கு செல்லலாம் என்று அவள் நகர முயன்ற வேளையில் அவள் முன்னால் வந்து நின்றான் ஆதவ்.

என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டவளிடம், ”இந்தா..” என்று ஒரு கவரை நீட்டினான் ஆதவ்.

“என்னது இது?“ என்று அவள் கேட்டதும், சுற்றியும் முற்றியும் யாராவது இருக்கிறார்களா என்று விழியால் அலசி ஆராய்ந்து பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “உனக்காக ஒரு சுடிதார் கொண்டு வந்துருக்கேன் போட்டுக்கோ” என்றான்.

“எனக்கா? ஏது? முதலாளியம்மா குடுத்தாங்களா?”என்று ஆர்வம் மின்ன ஒருவித எதிர்பார்ப்போடு அவள் கேட்க.

அவனோ இல்லை என்று தலையை அசைத்தவாறு,
“என்னோட பாக்கெட் மணியில இருந்து மிச்சம் புடிச்சு சேர்த்து வச்சு உனக்காக வாங்கிட்டு வந்தேன். நானும் நீ எங்க வீட்டுக்கு வந்த மூனு மாசமா பார்க்குறேன். நீட்டாவே டிரஸ் பண்ண மாட்டேங்குற. ஏன்னு தெரியாம தலையை பிச்சுக்கிட்டேன்.கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், பெரியம்மா தான் உன்னை வேற டிரஸ் போட விடமாட்டேங்குறாங்கன்னு. அவங்க உன்னை இப்படி நடத்துறது எனக்கு பிடிக்கல வாணி.. உனக்கும் ஆஷ்விக்கும் ஒரே ஏஜ் தான்.‌ அவ லண்டன் போய் காலேஜ் படிக்கிறா, ஆனா நீ இப்படி இருக்க. அதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இதைப் போட்டுக்க, ப்ளீஸ் எனக்காக போட்டுக்க வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத” என்றான் கெஞ்சலாய்.

வேண்டாம் என்று சொல்ல வாய் எடுத்தவள் அவன் பாவனையில்,
“சரி வாங்கிக்கிறேன்.. தேங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அதைக் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். மீண்டும் தன் அறைக்குச் சென்றவள் உடையை வைத்து விட்டு கிணற்றடிக்கு வந்தாள். பின்புறத்திற்கு யாரும் அவ்வளவாக வருவது கிடையாது என்பதால் அவள் விருப்பம் போல் மலர் செடிகளை வளர்க்கிறாள். வளர்க்கிறாளே ஒழிய அவள் பூ வைப்பதற்கு அனுமதி கிடையாது. கிணற்றில் இருந்து நீரை இறைத்து அங்கு இருந்த குளியலறையில் குளித்து முடித்து தன்னறைக்கு வந்து அந்த புது உடையை வெகு மாதங்களுக்கு அணிந்து கொண்டாள். ஈரக்கூந்தலை துவட்டி தளர்வாகப் பின்னியவள் வாங்கி வைத்திருந்த ரவையை வைத்து உப்புமா செய்தாள்.அதை ஒரு டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல தயாரானாள்.

மற்றவர்கள் அனைவருக்கும் அவரவர் அறையிலேயே குளியலறை, கழிவறை உள்ளது. ஆனால் இவள் இங்கிருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் பயன்படுத்த வேண்டும். பின்புறமிருக்கும் கழிவறையைத் தான் பயன்படுத்த வேண்டும்,‌ அங்கிருக்கும் குளியலறையைத் தான் பயன்படுத்த வேண்டும். ஏன் உணவு கூட அவளே தனியாகத் தான் சமைத்து உண்ண வேண்டும். அந்த வீட்டுக்குள் சமைக்கும் உணவை சாப்பிட மட்டுமல்ல, உப்பு, காரம் கூட பார்க்கக் கூடாது என்பது மீனாட்சியின் கட்டளை. ஏனோ வாணி இதுவரை அங்கிருக்கும் யாரையும் எதற்காகவும் எதுர்த்து பேசியதில்லை. மீனாட்சி எது சொன்னாலும் கேட்டுக்கொள்வாள். காரணம் என்ன என்பதை அவள் மட்டுமே அறிவாள்..

தனக்கு இருக்கும் ஒரே சொந்தம் தன் அத்தையும்,அத்தை குடும்பமும் தான் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டுவதற்காகத் தான் இப்போது கோவிலுக்கு செல்கிறாள்.‌ அங்கு தன் வாழ்வை புரட்டிப் போடப் போகும் சம்பவம் நிகழப் போவதை அறியாமல் வீட்டில் இருந்து பறித்த மலர்களை எடுத்துக் கொண்டு நடந்தே கோவிலுக்கு சென்றாள் மதுர வாணி.

மணம் பரப்பும் மலர்களை சூடிடக்கூட மங்கையவளுக்கு அனுமதியில்லையாம்..
ஆனால் விதி செய்த சதியினால்
சிகையை அலங்கரிக்க வேண்டிய மலர்கள் அவள்
குறுங்கழுத்தை அலங்கரிக்க....
மாலை சூட்டிய கரங்களே
பேதையிவளின் மார்பில் உயிருள்ள வரை தவழும் உன்னதப் பொருளையும் உரிமையுடன் சூட்டிடுதே..!

- தேடல் தொடரும்....




கருத்துத்திரி

 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -05

வேகவேகமாக கோயிலுக்கு நடந்து சென்றவள் கோவில் இருக்கும் தெருவில் நுழையும் போது அதன் மூலையில் இருந்த ஒரு கட்டிடத்தில் அமர்ந்திருந்த பெரியவரை நெருங்கினாள். தன் கையிலிருந்த டிபன் பாக்சை அந்த பெரியவரிடம் நீட்ட, அவரும் அதில் இருந்த உப்புமாவை வாங்கி தன்னிடம் இருந்த தட்டில் கொட்டி கொண்டு டிபன் பாக்சை அவளிடமே திருப்பிக் கொடுத்தவர், “நீ நல்லா இருக்கணும் தாயி. இந்த உலகத்துல எத்தனையோ பேரு என்னை மாதிரி இருக்காங்க அவங்களுக்கு எல்லாம் யாருமே, உன்ன மாதிரி உதவி செய்யிறது கிடையாது தாயி. என்னைக் கடந்து எத்தனையோ பேர் போறாங்க. அவங்க எல்லாம் என்னை பரிதாபமா பாப்பாங்க, சிலபேர் கேவலமா பாப்பாங்க, சில பேர் அருவருப்பா பார்ப்பாங்க. ஆனா நீ சக மனுஷனா பார்த்த தாயி. அதுமட்டுமில்லாம மறக்காம இந்த மூனுமாசமா தினமும் எனக்கு சோறு போடுறது நீதான் தாயி.நீ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் தாயி. அந்த சாமி உன்னை நல்லா வெச்சிருக்கணும்னு வேண்டிக்கிறேன் தாயி” என்று சொல்லி அவளைக் கையெடுத்து கும்பிட்டார்.

அவர் கையைப் பிடித்து கீழே இறக்கி விட்டவள், “இங்க யாருக்கும் யாரும் உசந்தவங்க கிடையாது ஐயா. சாமி மட்டும்தான் எல்லாத்தை விட உசந்தது. ஏதோ என்னால முடிஞ்சதை உங்களுக்கு நான் செய்யறேன் அவ்வளவு தான். சரி நீங்க சாப்பிடுங்க ஐயா” என்று சொல்லி விட்டு கோவிலுக்கு திரும்பினாள்.

அவள் அந்த பெரியவரை நெருங்கியதில் இருந்து அங்கு நடந்த அத்தனையும் கண்ட ஒரு ஜோடி விழிகள் ஆச்சரியத்திலும் அதேநேரம் பெருமிதத்திலும் மின்னி மறைந்தது. “என்ன பொண்ணுடா” என்ற வார்த்தையை உச்சரித்தன அந்த உருவத்தின் இதழ்கள் கூடவே அவளைப் பின்பற்றி அவள் பின்னேயே நடந்தது அந்த விழிகளுக்கு சொந்தக்காரரின் பாதங்கள் இரண்டும்...

சுற்றுமுற்றும் விழிகளால் சுற்றுப்புறத்தை அளந்தவாறு கோயிலின் அருகில் வந்தவள் பூக்கடைக்காரப் பெண்மணியிடம் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து அர்ச்சனை தட்டும்,‌மாலையும் வாங்கிக் கொண்டவள் கோயிலின் நுழைவாயிலை நெருங்கி, குனிந்து வாசற்படி நிலையை கைகளால் தொட்டு வணங்கி கண்களில் ஒத்திக் கொண்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள்.‌ அவளைப் பின்பற்றி அவளை கண்காணித்தவாறு பின்தொடர்ந்து வந்த நபரும் அதே போல் செய்தது. கூடவே தன்னையும் தன் உடையையும், மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு ஒரு புன்சிரிப்போடு தானும் கோவிலுக்குள் நுழைந்தது...

உள்ளே நுழைந்த வாணி நேராக கர்ப்பகிரகத்தில் ஒயிலாக வீற்றிருக்கும் அம்மன் சந்நிதிக்கு சென்றவள் அய்யரிடம் அர்ச்சனை தட்டைக் கொடுத்து விட்டு,‌“மீனாட்சி அப்படிங்கற பெயருக்கு அர்ச்சனை பண்ணிடுங்க சாமி”என்றாள் எப்போதும் போல்.

அவள் புறம் திரும்பி புன்னகையொன்றை அவளுக்கு கொடுத்தவர். “நானும் நீ இங்க வந்த இந்த மூணு மாசமா பார்க்குறேன் கண்ணு,‌அந்த குடும்பத்துல இருக்கவங்களுக்காக வேண்டிக்கிறியே தவிர உனக்காக ஒரு நாள் கூட நீ வேண்டியதில்லையே?” என்று கேட்டார்.

“அந்த குடும்பத்துல இருக்கவங்க நல்லா இருந்தா நானும் நல்லா இருப்பேன் சாமி.‌ நீங்க அர்ச்சனையை ஆரம்பிங்க” என்று சொல்லிவிட்டு கண்மூடி கடவுளிடம் தன்னை திட்டிய, தன்னை வெறுக்கும் அத்தையும், அத்தை குடும்பமும் நல்லா இருக்க வேண்டும் என்று மனதார வேண்டினாள் ..

சிறிது தூரம் தள்ளி நின்று அவள் செய்கையை கவனித்துக் கொண்டிருந்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ அவளது செய்கையில் பூரித்து போனார் என்று தான் சொல்ல வேண்டும். “உன்னோட ஒவ்வொரு செய்கையும் என்னை இம்ப்ரஸ் பண்ணுதே! ஓ மை காட் உங்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு பியூட்டி” என்று இதழ் அசைவில் சொல்லி விட்டு புன்னகைத்தது.

அய்யர் அர்ச்சனை தட்டைக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து விட்டு, ஆரத்தித் தட்டையும் அவள் முன்பு நீட்டிட, கைகளால் ஆரத்தியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டாள். பின் தன் கையில் இருந்த இருபது ரூபாய் நோட்டைத் தட்டில் இட்டு விட்டு,
“உங்க குட்டி பாப்பாவை கேட்டேன்னு சொல்லுங்க சாமி கண்ணுலையே பட மாட்டேங்குறா?” என்று சொல்லி விட்டு அர்ச்சனை தட்டை வாங்கிக்கொண்டு பிரகாரத்தைச் சுற்றுவதற்கு சென்றாள்‌ அவள் பின்னே நூல் பிடித்தது போல் அந்த உருவமும் சென்றது...

கையில் இருக்கும் அர்ச்சனை தட்டைக் கெட்டியாக பிடித்துக் கொண்டவள் இரு கைகளை கூப்பி கண் மூடிய நிலையில் அடிமேல் அடிவைத்து கோயில் பிரகாரத்தை சுற்றி வர ஆரம்பித்தாள். அவள் மனதில் தோன்றிய எண்ணங்களும் சரி, வேண்டுதலும் சரி எப்பவும் மீனாட்சியின் குடும்பம் நல்லா இருக்கணும் என்பது பற்றியதாகத்தான் இருந்தது. இப்போதும் இருக்கிறது. 'அவங்க எல்லாரும் நல்லா இருக்கணும், அவங்களுக்கு எந்த கஷ்டத்தையும் தந்துடாத. அதையும் சேர்த்து எனக்கே கொடுத்துரு’ என்பது தான் அவளது ஜெப மந்திரமாகவே இருக்கும்.

இப்போதும் அதையே வேண்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். அதே நேரம் அவளை ரசித்துக் கொண்டிருந்த அந்த உருவமும் அவளைப் பின்பற்றி அடி மேல் அடி வைத்து நடந்தது. அவள் பின்னல் அழகையும், அவள் நடை நளினத்தையும் கண்டு ரசித்த உருவத்தின் மனதில் அப்போது தோன்றிய ஒன்று,

கருநாகப் பாம்பை போல்
பின்னி நெளிந்து
வளைந்து நீண்டு இருக்கும்
உந்தன் கருமைநிற கூந்தலில்
குடி கொள்ள எந்த மலர்கள் புண்ணியம் செய்ததோ?
என்பதுதான்.


அவளைப் பின்பற்றி நடந்த அந்த உருவம் தங்களை அனைவரும் கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. சற்று முன்னே சென்று அவள் கண்மூடி நடந்து செல்லும் உருவத்தை நெஞ்சில் பதிக்க விரும்பிய அந்த உருவம் வேகவேகமாக அவளைக் கடந்து முன்னே சென்று அவள் முகத்தை பார்த்தவாறே நடந்தது. பின்னால் அடிமேல் அடி வைத்து அவளை பார்த்துக்கொண்டே நடந்து கொண்டிருந்த அந்த உருவம் திடீரென்று எதன் மீதோ இடித்து தடுமாறி கீழே விழ சென்ற வேளையில் அதன் கையில் இருந்த மாலை எதிரே வந்து கொண்டிருந்த வாணியின் கழுத்தில் விழுந்தது. அதில் பதறி விழிகளைத் திறந்தாள் வாணி. அவளை விட அதிக பதற்றத்தில் இருந்தான் கீழே விழுந்து கிடந்த தேவேஷ்வர்.

கீழே விழுந்து கிடந்தவனோ எழக்கூட தோன்றாமல் மாலையும் கழுத்துமாக நிற்பவளை தன் விழி வழியே நெஞ்சில் நிறைத்துக் கொண்டிருந்தான். கோவில் மணியோசையில் தன்னிலை பெற்றவன் ஏதோ சொல்ல வருவதற்குள் அவனைத் தேடி வந்த அவனது நண்பன் ஒருவன் கீழே கிடந்த அவனை தூக்கி நிறுத்தி,
“எங்கடா போய் தொலைஞ்ச? ஆமா மாலை எங்கடா?” என்று கேட்டான்.

அதே சமயம் அவர்களது எதிரில் நின்றிருந்த வாணி தன் கழுத்திலிருந்த மாலையையும், தேவேஷ்வரையும் மாறிமாறி பார்த்தவள் குழப்பத்துடன் அதை கழற்ற முயன்ற அதே நேரம் அவனது நண்பனும் அதை பார்த்துவிட்டு, “டேய் மாலை இங்க இருக்கு தாலி எங்கடா?” என்று கேட்க. அவசரமாக அக்கம் பக்கத்தில் தாலியைத் தேடினார்கள். அங்கே எங்கையுமே தாலி இல்லை என்றதும் வேகமாக வாணியை நெருங்கிய தேவேஷ்வர் மாலையைக் கழற்ற முயன்றவளை, மாலையை கழட்டி விடாமல் செய்தவன் அவள் கைகளைத் தட்டி விட்டவாறு கவனமாக அந்த மாலையைத் தூக்கி பார்த்தவன் அதிர்ந்து போனான்.

கீழே விழுந்த வேகத்தில் மாலையில் இரு ஓரத்திலும் பொன் தாலி கோர்க்கப்பட்டிருந்த மஞ்சள் நாணின் இரு முனையும் சொருகி இருந்ததால், சரியாக அந்த தாலி அவளது கழுத்தில் விழுந்திருந்தது. ஆனால் பின்னால் முடிச்சு மட்டும் போடாமல் இருக்க, சரியாக அவள் நெஞ்சு பகுதியில் பொன்னாலான மாங்கல்யம் தொங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்து அதிர்ந்தது தேவேஷ்வரும் அவனது நண்பனும் மட்டுமல்ல வாணியும் தான். தன் மார்பைத் தொட்டு கொண்டிருந்த அந்த பொன் தாலியைக் கண்டு அதிர்ந்து போனாள். அடுத்து அவளால் எதுவும் பேச முடியவில்லை. கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் கசிந்தோடியது.

அவனது நண்பனும், “நாம ஏற்கனவே யாருக்கும் தெரியாம காதல் திருமணம் பண்ணி வைக்க தான் இங்க வந்திருக்கோம்.இப்ப நீ வேற இப்படி ஒரு ஏழறையைக் கூட்டி வைக்கிறியே? ஏன்டா. போனம்மா மாலையை வாங்குனமான்னு வந்துருக்க வேண்டியது தானே. ஏன்டா இப்படி பண்ணி வெச்சுருக்க? அடுத்து என்ன ஆகப்போகுதோ. ஆனா ஒன்னு மட்டும் புரியுதுடா சீக்கிரம் எனக்கு பாடைய கட்டிருவீங்கடா” என்று புலம்பிக்கொண்டே வாணிய நெருங்கியவன்,
“சிஸ்டர் அதை கழட்டிக் கொடுங்க சிஸ்டர். நேரமாகுது எங்களுக்கு வேற வொர்க் இருக்கு” என்றான்.

அவளோ என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கிய விழிகளோடு தேவேஷ்வரை நிமிர்ந்து பார்க்க, அவனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவன் மூன்று முடிச்சுப் போடவில்லை என்றாலும் அவன் கரத்தால் அவள் கழுத்தில் தாலி விழுந்திருக்கிறது எப்படி அதை கழட்டு என்று அவனால் சொல்ல முடியும். என்ன செய்வது? இந்த நிலைமையை எப்படி சமாளிப்பது என்று மூவருக்குமே தெரியவில்லை‌.

ஒரு வழியாக மனதை கல்லாக்கிக்கொண்ட தேவேஷ்வர் தங்களுக்கு நேரமாவதை உணர்ந்து வாணியை நெருங்கியவன், “ப்ளீஸ் அதை கழட்டிக் கொடுங்க” என்றவன் பின் ஏதோ தோன்ற, “இல்ல வேணா விடுங்க நானே கழட்டிக்கிறேன்” என்று சொல்லி விட்டு அவள் கழுத்திலிருந்த மாலையைக் கழற்ற முயன்றான். ஆனால் அது அவளது கழுத்தில் இருந்து வர மறுத்தது. அப்போது தான் கவனித்தான் வாணியின் வலதுகை இறுக்கமாக அந்த மாலையை பற்றியிருந்தது..


அவளது மனநிலை என்ன என்பது தேவேஷ்வருக்கும் புரியாமல் இல்லை. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் இதைப் பார்த்தால் கண்டிப்பாக தன் நண்பனுக்கு திருமணம் நடைபெறாது என்பதால்,
“ப்ளீஸ்ங்க கையை எடுங்க. எங்களுக்கு இந்த மாலையும், தாலியும் தேவை.இது இருந்தா தான் என் நண்பனோட மேரேஜ் நடக்கும். ப்ளீஸ்ங்க” என்று கெஞ்சும் குரலில் சொல்ல. வாணியோ மாலையை விட மறுத்தாள்.

அவளது செய்கை சிறுகுழந்தை தன்னிடமிருந்து மிட்டாயை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்துடன் அதை தன்னுடன் இறுக்கி பிடித்துக் கொண்டு நிற்குமே அப்படி இருந்தது. அவளோ பயம் கலந்த பரிதாபமான முக பாவனையோடு நின்றிருப்பதை உணர்ந்தவன் மென்மையான குரலில்,“ப்ளீஸ்ங்க இது எதார்த்தமா விழுந்தது தானே குடுங்க ப்ளீஸ்” என்று சொன்னவாறு அவளது வலது கையை எடுத்து விட்டவன் வேகமாக மாலையை அவள் கழுத்தில் இருந்து எடுத்தான்.

ஆண்டவனின் நிர்பந்தமோ! அல்லது விதியின் முடிவோ! ஏதோவொன்று அவர்கள் இணைந்தே தீர வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியது. இதுதான் நடக்க வேண்டுமென்று விதி இருக்கிறது போலும். மாலை மட்டுமே அவன் கையோடு வந்தது. ஆனால் தாலி அவள் கழுத்தில் இருந்து வரவில்லை. அவள் சுடிதார் அணிந்து, துப்பட்டாவை இருபுறமும் பின் பண்ணி இருந்ததால், ஒரு புறம் குத்தப்பட்டிருந்த பின்னில் மஞ்சள் கயிற்றின் ஒருபக்கம் மாற்றிக் கொண்டிருக்க, மறுபுறம் கீழே விழச்சென்றது. சட்டென்று அதைத் தன் கையில் பிடித்துக் கொண்டாள் வாணி.

தேவேஷ்வருக்கும் அவனது நண்பனுக்கும் இது இன்னமும் அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.
'என்னடா இது?' என்று போல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

தேவேஷ்வரோ இன்னும் அவளருகில் நெருங்கி நின்றவன், “ப்ளீஸ்ங்க மத்தவங்க யாராவது இதைப் பார்க்கறதுக்கு முன்னாடி தாலியைக் கழட்டி குடுத்துடுங்க” என்று சொல்லி விட்டு தாலியில் கை வைக்கச் சென்றான்.

அதை உணர்ந்து ஈரடி பின்னால் தள்ளி நின்ற வாணி தாலியை தர மறுப்பது போல் தலையை இடவலமாக அசைத்தாள். ‘கடவுளே எல்லாம் நாசமா போச்சு’ என்று நினைத்தவாறு தலையை பிடித்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டான் தேவேஷ்வர்.

‘எல்லாம் என்னை சொல்லணும். பேசாம கடைக்கு போயி மாலை வாங்கி வந்து இருக்கணும். அத விட்டுட்டு ஒரு பொண்ணை சைட் அடிச்சதும் இல்லாம அவ பின்னாலேயே வந்ததுக்கு நல்ல கூலியைக் கொடுத்துட்டாரு ஆண்டவன். கடவுளே இப்ப என்ன பண்றதுன்னு தெரியலையே' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனது மற்ற தோழர்களும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். அனைவரையும் கலக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த தேவேஷ்வர் அப்போதுதான், தாங்கள் யாருக்கு திருமணம் செய்ய இங்கு அழைத்து வந்தோமோ, அவர்களுக்கு திருமணம் முடிந்து இருந்ததைக் கண்டான்.
‘அப்பாடா ஒரு வழியா மேரேஜ் முடிஞ்சுது' என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் சட்டென்று திரும்பி வாணி நின்றிருந்த இடத்தைப் பார்க்க. அந்த இடம் காலியாக இருந்தது.
ஆம் அவன் கீழே அமர்ந்து கையில் தலையை தாங்கிய மறு நிமிடமே அவள் அங்கிருந்து நகர்ந்து சென்று இருந்தாள். அவனது நண்பனும் மற்றவர்களை அழைத்து வரச்சென்றிருந்ததால் அவள் சென்றதைக் கவனிக்கவில்லை.

தேவேஷ்வர் வர தாமதமானதால் வேகமாக வெளியில் சென்ற இன்னொரு நண்பன் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்து கட்டி வாங்கி கொண்டு வந்தான். கூடவே சாதாரண ரோஜா மாலைகளையும் வாங்கிக் கொண்டு வந்ததால் அவர்களுக்கு திருமணம் எளிமையாக முடிந்திருந்தது.. திருமணம் முடிந்து விட்டது என்று நினைத்தவன் அடுத்த நிமிடம் வாணியை தேட அங்கிருந்து நகர்ந்த வேளையில் அந்த மணப் பெண்ணின் வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து இருந்தனர்.

அதே ஊரை சேர்ந்த பண்ணைக்காரர்
சிவசுப்ரமணியம் மற்றும்
அஞ்சலை தம்பதியரின்
மூத்த மகன் தான்- தேவேஷ்வர்..இரண்டாம் மகன்- விக்னேஷ்வர். கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவன்.
கடைக்குட்டி - எழிலரசி. இப்போதுதான் பன்னிரண்டாவது முடித்துவிட்டு கல்லூரியில் முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இளஞ்சிட்டு.


தேவேஷ்வர் ஐடியில் பணிபுரிவதற்கான பட்டப்படிப்பை முடித்துவிட்டு இன்று தான் ஊருக்கு வந்து சேர்ந்தான். வந்து சேரும் போதே பிரச்சினை ஒன்றையும் கையோடு இழுத்துக்கொண்டு வந்து இருந்தான். ஆம் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன் நெருங்கிய நண்பனும் தன் அத்தை மகனுமான கார்த்திக் காதலிக்க, அப்பெண் கல்லூரி படிப்பை முடித்து இருந்ததால் அவளுக்கு வரன் பார்த்து திருமணமும் நிச்சயம் செய்திருந்தனர்.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் கடைசி நேரத்தில் தான் கார்த்திக்குக்கு இந்த விஷயம் தெரிந்தது. அதனால ஊரிலிருந்து நண்பனோடு கிளம்பி வரும் போது தற்கொலை செய்ய முயன்றான் கார்த்திக். தேவேஷ்வர் தான் கஷ்டப்பட்டு அவனைக் காப்பாற்றினான். விஷியத்தை அறிந்தவன் அதன் பிறகு தான் மீதமிருக்கும் தன் நண்பர்கள் அனைவரையும் வரவழைத்தான்.

விடியும் வேளையில் மணப்பெண்ணைத் தூக்கியவர்கள் இந்த கோவிலில் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அனைவரையும் கோயிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு நகைக்கடைக்கு சென்று தாலி வாங்கிக் கொண்ட தேவேஷ்வர் அதை மஞ்சள் கயிற்றில் கோர்த்தான். பின்பு மாலைகளையும் வாங்கிக் கொண்டு வரும் போதுதான் வாணியைக் கண்டான்..
அவளைக் கண்டதும் ஏனோ அவளது செயல் அவனை ஈர்க்க அவள் பின்னாலையே வந்தவன். தான் எதற்கு வந்தோம் என்பதை மறந்து இருந்தான். ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் சத்தியமாக அவனே நினைக்காதவை தான். கனவில் கூட இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று அவன் எதிர்பார்த்தது கிடையாது..

இப்போது இங்கு தான் திருமணம் நடக்கிறதென்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு பெண்ணின் குடும்பத்தார்கள் அடியாட்களுடன் அங்கே கூடிவிட்டார்கள். அதிலும் கார்த்திக் வேறு சமூகத்தை சேர்ந்தவன், அதேபோல் அந்த பெண்ணான தேன்மொழியும் வேறு சமூகத்தை சேர்ந்தவள். இது இரு குடும்பத்துக்கு இடையான பிரச்சினை என்பதையும் மாறி, இப்போது இரு சமூகத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறிப் போனதால் இரு தரப்பினரும் கம்பு கத்திகளுடன் கோயிலை முற்றுகையிட்டனர்..

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தேவேஷ்வர் வாணியைத் தேடுவதை விட்டுவிட்டு அவசரமாக காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தவன் இருதரப்புக்கு இடையே புகுந்து நடுவில் நின்று இரு தரப்பினரிடையேயும் பேச முயற்சித்த வேளையில் கூர்மையான ஆயுதம் ஒன்றை அவன் தலையை தாக்கிட இடதுபுற தலையில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. கூடவே அவனது நெற்றியில் ஏதோ ஒரு கம்பி கடிமாகத் தாக்கியது. அவன் தலையை பிடிப்பதற்குள்ளாகவே பளபளவென மின்னிய கூரிய கத்தியொன்று அவனது வயிற்றின் இடது புறத்தில் அடி ஆழத்தில் இறங்கிய அடுத்த நிமிடம் மூச்சு பேச்சின்றி கீழே சரிந்து விழுந்தான் தேவேஷ்வர். இதை தொலைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வாணியின் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்தது. தன் கழுத்தில் இருக்கும் தாலியை அழுந்தப் பற்றியவள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே தன் கைகள் இரண்டையும் பின்புறம் கொண்டு சென்று தாலிக் கயிற்றை மூன்று முடிச்சிட்டவள், அருகில் தூணின் மீது இருந்த குங்குமத்தை எடுத்து பொன் தாலியின் மீது வைத்துக் கொண்டவள் தாலியை உடைக்குள் மறைத்தாள். கலவரம் அதிகமாவதை உணர்ந்தாலும் அங்கிருந்து நகராமல் கீழே விழுந்து கிடக்கும் தேவேஷ்வரையே பார்த்துக் கொண்டிருந்தாள் வாணி.‌ ஆனால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அர்ச்சகர் வேகமாக அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கோவிலுக்கு பின்புறம் இருந்தப் படிக்கட்டு வழியாக இறங்கத் துவங்கினார்.அவர் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றாலும் அவளது விழிகள் கலங்கிய நிலையில் தேவேஷ்வரின் மீதே நிலைத்திருந்தது.


காட்டாயப்படுத்தி
கட்டவில்லை..
காதலோடும் கட்டவில்லை..
கடமைக்கென்றும் கட்டவில்லை
ஊரறிய கட்டவில்லை.
உரிமையோடும் கட்டவில்லை.
உணர்வின்றியும் கட்டவில்லை.
எதிர்பாராமல் இறைவன் சித்தத்தால் சிரமமின்றி
இவள் கழுத்தத்தை அலங்கரித்த பொன்தாலியானது பூவையவளின் வாழ்வில் வளம் சேர்க்குமா? வலி சேர்க்குமா?

- தேடல் தொடரும்…



 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -6.1

கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருந்த அவனை தட்டி எழுப்பினாள் அம்முக்குட்டி.. குழந்தையின் சிணுங்கலில் விழிகளைத் திறந்தவன் அழுவதற்கு உதடுகளை பிதுக்கி கொண்டு தன் முகத்தை பார்த்திருக்கும் மகளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன்‍, “அச்சச்சோ அம்மு குட்டி எதுக்கு அழுகுறீங்க? என்னடா ஆச்சு செல்லம்? யாரு உங்களை அடிச்சது?” என்று கொஞ்சிக் கேட்டவாறு மகளைச் சமாதானப்படுத்தினான்.

அவனருகில் இருந்த அவன் தந்தையோ, “விமானம் தரையிறங்க போகுது போல அதான் பாப்பா பயந்துட்டா” என்றதும் அதிர்ந்தவன், 'என்ன அதுக்குள்ள வந்துட்டமா?ம்ம்.. அவளை மட்டுமில்ல அவளைப் பத்துன நினைவுகளை நினைச்சுப் பார்த்தா கூட நேரம் போறதே தெரியமாட்டேங்குது’ என்று மனதில் நினைத்தவன் விமானம் தரையிறங்க தயாராவதை உணர்ந்து தன் மகளை இன்னும் அழுத்தமாக தன்னுடன் அணைத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கிட பயணிகள் வெளியே செல்வதற்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டதும் தங்களது அனைத்து உடமைகளையும் எடுத்துக் கொண்டு பறக்கும் அந்த இயந்திர விமானத்தில் இருந்து கீழே இறங்கினார்கள் பயணியர்கள்.

தேவேஷ்வர், சிவசுப்ரமணியம், அஞ்சலை சுடர்மதி நால்வரும் வெவ்வேறான மனநிலையோடு கோவையில் பாதம் பதித்தார்கள். கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் வந்து தரை இறங்கிய அந்த விமானத்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி செக்கிங் முடித்து கொண்டு தங்கள் உடமைகளோடு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள்.

“அப்பா பஸ்ல போலாமா? இல்ல ட்ரெயின்ல போலாமா?” என்று தேவ் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சிவசுப்ரமணியம் அலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான்.

‘ஆமா அப்படியே விஜபிக்கிட்ட பேசப்போறாரு. எப்படியும் ஊராளுங்க யாருக்காவது கூப்டு இங்க வந்ததை சொல்லியிருப்பாரு. பெருமை பீத்திக்கலன்னா இவருக்கெல்லாம் பொழுதே போகாது.. ம்ஹூம் எப்ப தான் இவர் திருந்துவாரோ?' என்று நினைத்தவன் மகளுக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கலாம் என்று அங்கிருந்து நகர்ந்து கடைகள் இருக்கும் பக்கம் சென்றவன் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வந்த போது கார் ஒன்று தன் தாய் தந்தையின் அருகில் நின்றிருக்க, யாரோ ஒருவனிடம் தன் தந்தை பேசிக்கொண்டிப்பதைப் பார்த்தான்.

‘யாராய் இருந்தா நமக்கு என்ன?’ என்று யோசனையோடு அவர்கள் அருகில் வந்தவன் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டான். அங்கே நின்றிருந்தது அவனது தம்பி விக்னேஸ்வர் தான். ஒரு நிமிடம் தம்பியை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தான். ஐந்து வருடத்தில் அவனிடம் ஏற்பட்ட மாற்றங்கள் ஏராளம்.கொஞ்சம் சதை போட்டிருந்தான். முகமெல்லாம் தாடி வைத்து, முகம் முதிர்ந்து பெரிய மனிதன் போல் இருந்தான்‌. சந்தன நிற சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தவன் அவர்களிடம் இருந்து லக்கேஜை வாங்கி காரினுள் வைத்துக் கொண்டே தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தான்.

வேகமாக தம்பியை நெருங்கியவன், “எப்படி இருக்க விக்கி?” என்றான்.

அண்ணனின் குரல் கேட்டு அவசரமாக தேவேஷ்வரின் புறம் திரும்பிய விக்கி, “நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க அண்ணா” என்றான். தன் தம்பியின் அதே குரல் ஆனால் சற்று கணீரென்று ஒலித்தது.‌ அப்போது அவன் கொடுக்கும் மரியாதை இப்போதும் குறையாமல் இருந்ததை உணர்ந்தான்.

“நல்லா இருக்கேண்டா” என்று சொன்னவாறு காரை திறந்து முன்புறம் தன் மகளுடன் ஏறிக்கொள்ள சிவசுப்பிரமணியம் அஞ்சலை இருவரும் பின்னால் ஏறியதும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான் விக்கி. அங்கிருந்து முதலில் ஈரோடு ஈரோட்டில் இருந்து கொளத்துப்பாளையம் செல்ல முடிவெடுத்து கார் கிளம்பியது. எப்போதும் அவர்கள் செல்லும் வழி இதுதான் என்பதால் லாவகமாகக் காரை ஓட்டிய விக்கி மறந்தும் கூட தேவ்வின் புறம் திரும்பவில்லை. அவ்வபோது அலைபேசியில் அலனை யாரோ அழைப்பதும், இவன் அதற்கு கொஞ்சலாகப் பதில் சொல்வதுமாக இருந்தான். அந்த வார்த்தைகள் காதில் விழுந்தாலும் கேள்வி கேட்க மனம் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தான் தேவ். அவனுள்ளேயே ஏகப்பட்ட நினைவுகள். அந்த ஊருக்கு செல்வதற்கு அவனுக்கு பிடிக்கவில்லை என்பதை விட தன்னால மீண்டும் ஏதேனும் பிரச்சினைகள் வந்து விடுமோ? என்று ஒருவித அவஸ்தை உடனே அமர்ந்திருந்தான்.

பாதி வழியில் மகளுக்கு உண்ண திண்பண்டங்கள் கொடுத்தவன் பழச்சாறை அருந்தக் கொடுத்து விட்டு மகளைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான். அதன் பின்பு தன் அலைபேசியில் பாட்டை ஓடவிட்டு விட்டு ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு கண்மூடி அமர்ந்து விட்டான். பழையவற்றையும் நினைக்க மனம் இல்லை. நினைத்தால் அதிலிருந்து மீள முடியாது என்பதால் அதை அவன் நினைக்க விரும்பவில்லை. இப்போது தனக்கு அந்த ஊரில் என்ன காத்திருக்கிறதோ? என்று எண்ணவும் அவனால் முடியவில்லை. ஏனெனில் எதிர்காலம் அவனை அச்சுறுத்தியது. அதனால் இப்போது இருக்கும் இந்த மனநிலை ஒன்றே தனக்கு போதும் என்று எண்ணியவன் பாட்டை கேட்டவாறு அமர்ந்திருந்தவன் தன்னையறியாமல் அயர்ந்து உறங்கி விட்டான்..

அண்ணன் உறங்கி விட்டதை உறுதி செய்து விட்டு பின்னால் அமர்ந்திருந்த தந்தையிடம் பேச்சு கொடுத்தான் விக்கி. “அண்ணங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீங்களாப்பா?”

“ம்ஹூம் உண்மைய சொன்னா உங்க அண்ணன் வருவான்னு நினைச்சியாடே விக்கி. கண்டிப்பா வர மாட்டான்டே. அவங்கிட்ட நாங்க எதையும் சொல்லல, அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லேன்னு மட்டுந்தேன் சொல்லியிருக்கோம். நீங்க யாரும் எதுவும் சொல்ல வேணாம்டே அவனே இங்க வந்துருக்கானுல்ல அவனாவே எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிடட்டும். உண்மைய தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறம் அவந்தேன் நல்ல முடிவா எடுக்கோணும். ஆனா அவன் என்ன முடிவெடுத்தாலும் அவனுக்கு நாம துணையா இருக்கோணும்டே. மறுபடியும் நம்ம வீட்டு பையனை அவ்வளவு தூரத்துக்கு அனுப்பி வெச்சிட்டு நம்மளால இங்கன நிம்மதியா இருக்க முடியாதுடே விக்கி. அதனால யாரும் சட்டுனு கோபப்படாதீயடே பொறுமையா இருங்க எதா இருந்தாலும் பார்த்துக்கலாம்டே” என்றார்.

“சரிங்க அப்பா வீட்டிலையும் நான் இதை சொல்லிதிடுதேன்” என்றவன் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத்தை இணைத்து வீட்டிற்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தவன் இன்னும் வேகமாகக் காரை செலுத்தினான்..

அடுத்த மூன்று மணி நேரத்தில் கொளத்துப்பாளையம் ஊருக்குள் விக்கியின் கார் நுழைந்தது. சரியாக அதே நேரம் கண்திறந்த தேவ் விழிகளால் அவ்வூரை நோட்டம் விட்டான். அவன் செல்லும் போது இருந்த ஊருக்கும் இப்போது இருக்கும் ஊருக்கும் அதிக அளவு மாற்றம் இல்லை என்றே அவன் எண்ணினான். ஆனால் அவனே அறியாத அளவிற்கு பெரும் மாற்றத்தை அந்த ஊர் அடைந்திருக்கிறது என்பதை போகப்போக அவனே அறிய நேரிடும்.

சரியாக அவன் வீடு இருந்த தெருவில் கார் நுழைந்த போது சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தான்.‌ தன் மடியில் உறங்கி கொண்டிருக்கும் மகளை கெட்டியாக பிடித்து கொண்டான். அந்த திசையில் திரும்பக்கூடாது என்று அவசரமாக விழிகளுக்கு கட்டளையிட்டான்.‌ ஆனால் மூளை வெளியிட்ட கட்டளையை ஏற்க மறுத்த அவன் விழிகள் அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அவனது ஒவ்வொரு நடவடிக்கையையும் ஓர விழியால் பார்த்தவாறே தான் மூவரும் அமர்ந்திருந்தனர். ஆனால் அவனைக் கவனிக்காமல் இருப்பது போல் தங்களைக் காட்டிக் கொண்டனர்.


அவர்களின் வீட்டின் முன்பு காரை நிறுத்தினான் விக்கி. காரை நிறுத்தியவன் தன் தாய் தந்தையை பார்த்து தலையசைத்து முதலில் அவர்களை கீழே இறங்க சொன்னான். அவர்களும் பதிலுக்கு தலையசைத்து விட்டு கீழே இறங்கினார்கள். கார் வந்து நின்ற மறுநிமிடம் ஆங்காங்கே நின்றிருந்த ஊர் மக்கள் சட்டென்று கூடிவிட்டார்கள். வீட்டில் இருந்தவர்களும் வெளியே ஓடி வந்தார்கள்.

பெரும் தயக்கத்துடனும் பயத்துடனும் அமர்ந்திருந்தான் தேவ். ஏதோ ஒரு பொருளைத் திருடிக்கொண்டு ஓடிய ஒருவன் மீண்டும் அதே ஊருக்கு திரும்பி வரும் போது எந்த மனநிலையில் இருப்பானோ, அதைவிட அதிகமான பதட்டத்துடனும், பயத்துடனும் இயலாமையோடும் கீழே இறங்கத் தயங்கியவாறு காரிலேயே அமர்ந்திருந்தான் தேவ். ஆனால் இறங்கியே ஆகவேண்டிய கட்டாயத்தையும் உணர்ந்தான். தாய் தந்தை தனக்காக காத்து இருக்கிறார்கள். அதை விட அவனை சீராட்டி பாராட்டி வளர்த்த அப்பத்தா தனக்காக காத்து இருக்கிறார் என்ற உண்மை உரைக்க மெதுவாக கதவை திறந்து கொண்டு மகளை தூக்கியவாறு கீழே இறங்கி நின்றான்.

எவ்வளவு முயன்றும் அவன் விழிகள் கலங்கின. இருந்தும் கடினப்பட்டு கலங்கிய விழிகளை கண்சிமிட்டி சரி செய்தவன் காரை விட்டு நகர்ந்து இரண்டடி முன்னால் தள்ளி நின்றான். விக்கியோ காரை இயக்கி காலியாக இருந்த இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்தான். அங்கே நின்றிருந்த ஊர் மக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை கண்ட போதும் அவர்கள் புறம் திரும்ப விரும்பாமல், தான் சென்ற போது இருந்தது போலில்லாமல் இப்போது பெரிதாக கட்டப்பட்டு இருந்த தன் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். முன்புறம் தாழ்வாரம் வைத்து அழகாக அதேநேரம் பழமை மாறாத விதத்தில் கட்டப்பட்டிருந்தது. கண்டிப்பாக முழுவதும் இடிக்காமல் ஆல்டர்நேசன் தான் செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்து கொண்டான்...

முன்னோக்கிச் செல்ல இரண்டடி எடுத்து வைத்தவன் சட்டென்று பின்புறம் திரும்பி எதிர் வீட்டை பார்த்தான். அவன் விழிகளில் ஏக்கமும் ஆர்வமும் போட்டியிட விழிகள் அந்த வீட்டையே சுற்றி சுற்றி அலைபாய்ந்தது. சுற்றுவட்டாரத்தில் விழிகளால் எதையோ தேடிக் களைத்த அவனது விழிகள் அந்த வீட்டின் மீதே நிலைத்து நின்று விட்டது.

“அண்ணா..” என்ற விக்கியின் அழைப்பில் தன்னிலை மீண்டவன் சடாரென்று முன் புறம் திரும்பி நின்று கொள்ள. ஏதோ பேச வாய் திறந்த விக்கியை கண்களாலேயே வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தார் சிவசுப்ரமணியம்.

பின்பு அவனை மட்டும் தனியே விடாமல் தேவ்வின் ஒருபுறம் விக்கி நடந்து வர மறுபுறம் அவன் தந்தையும் தாயும் இணைந்து நடந்து வர வீட்டின் வாயிலை நோக்கி நடந்தான் தேவேஷ்வர். வீட்டின் முன்புறம் காலியாக இருந்த இடத்தில் கால் பதித்த நேரம் அவனுள் ஏகப்பட்ட மாற்றங்கள். அவனுள்ளம் நிலை கொள்ளாமல் தவிக்க மனதை சமன்படுத்த வழியறியாது தட்டுத்தடுமாறி நின்றிருந்தான். அதேநேரம் ஆரத்தி தட்டோடு உள்ளேயிருந்து வந்தாள் ஒரு பெண்.

அவளை இதுக்கு முன்னால் பார்த்த ஞாபகம் சுத்தமாகவே தேவ்வுக்கு கிடையாது. குழப்பத்துடன் அப்பெண்ணையும் தன்னருகே இருப்பவர்களையும் மாறி மாறி பார்த்தவன் யார் என்று கேட்க வாய் வரை வந்த வார்த்தைகளை கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டான். எதுவா இருந்தாலும் அவர்களே சொல்லட்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக நின்றான்.

அந்த பெண்ணும், தேவ்வையும், அவன் கையில் இருந்த சுடர்மதியையும் சேர்த்து ஆரத்தி எடுத்தாள். இருவரது நெற்றியிலும் திலகமிட்டு விட்டு ஆரத்திக் கரைசலை வாசலில் கொண்டு போய் கொட்டி விட்டு வந்தாள்.

அதேநேரம் தேவேஷ்வரின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் விக்கி.
ஹாலில் அவனது குடும்பத்தார்கள் அனைவரும் அமர்ந்து இருந்தார்கள். கூடவே ஊரின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அமர்ந்து இருப்பதை கண்டாலும் தேவோ யாரைப் பற்றியும் யோசிக்காமல் தன் மகளுடன் நேராக அப்பத்தாவின் அறைக்கு சென்றான். படுத்த படுக்கையாகக் கிடந்தார் அவனது அப்பத்தா இளவஞ்சி..

அப்பத்தாவைக் கண்டதும் அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வேகமாக மதியை கீழே இறக்கி விட்டு விட்டு கட்டிலை நெருங்கினான்.‌ கட்டிலில் வாடிய சருகாய், வதங்கிய கொடியாய் கிடந்தவரை கண்கலங்க பார்த்தான். தரையில் முட்டியிட்டு அமர்ந்து அவரது கைகளில் தன் கைகளை வைத்து அழுத்தமாக பிடித்துக் கொண்டவன், “அப்பத்தா” என்று அழைத்தான் உருகிய குரலில்.

அப்போதும் அவரிடம் எந்த அசைவும் இல்லை. உயிருடன் இருப்பதற்கான எந்த வித வெளிப்புற அசைவுகளும் அவரிடமில்லை. அந்த அறையில்,அவர் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் அருகே பொருத்தப்பட்டிருந்த மருத்துவ உபகரணங்களில் மட்டுமே அவர் உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கண்ணில் வழியும் கண்ணீருடன் அவரது செவியருகே குனிந்தவன், “வஞ்சி... இளவஞ்சி, என்ன கட்டிக்கிறியா? உனக்காகத்தேன் அம்புட்டு தொலவுல இருந்து வந்துருக்கேன்” என்றான் அளவு கடந்த அன்புடன்.

அந்தக் குரலும், அந்த வார்த்தைகளும் அவரது செவியில் நுழைந்து இதயத்தை இதமாக மீட்டியதோ, என்னவோ! அவரது விரல்கள் அசைந்தன. மூடிய விழிகளுக்குள் கருவிழிக்கோளங்கள் இரண்டும் அங்குமிங்கும் அசைவது போல் தெரிந்தது.

அதைக் கண்டு அந்த அறையில் நின்றிருந்த அனைவருக்குமே கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது. ‘பெரும்பாலும் அவர் விழிப்பதற்கு வாய்ப்பில்லை கண்டிப்பாக இறந்துவிடுவார். சொல்ல வேண்டியவர்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி விடுங்கள்’ என்று மூன்று தினங்களுக்கு முன்பு சொல்லி மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர். அதனால் தான் தேவ்வின் தாய் தந்தையர் அவனைத் தேடி சென்றிருந்தார்கள். ஒரு வழியாக அவனை அழைத்தும் வந்தாயிற்று.

ஆனால் இப்போது அவனது குரல் கேட்டதுமே அந்த மூதாட்டியிடம் அசைவு தெரிந்ததும் அனைவரும் மகிழ்வுடன் அவர்களையே பார்த்திருக்க, மெல்ல விழிகளைத் திறந்தார் இளவஞ்சி.
 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -6.2

அவர் விழிகளைத் திறந்து விட்டதை அங்கிருந்த யாராலும் நம்ப முடியவில்லை. அனைவரும் மகிழ்வுடனும், இன்பமான அதிர்வுடனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
தேவ்வோ சட்டென்று தன் அப்பத்தாவின் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டு கண்ணீர் விட்டவன், “அப்பத்தா உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க?” என்றான்.

அதற்குள் தனித்து நின்றிருந்த சுடர்மதி, “அப்பா..” என்று சொன்னவாறு ஓடி வந்து அவன் கால்களை கட்டிக் கொள்ள, பிஞ்சுக் குழந்தையின் அந்த குரல் இன்னும் இளவஞ்சியை எழுந்து அமரத் தூண்டியது...

ஆனால் பல மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்ததால் அவரால் சட்டென்று எழுந்து அமர முடியவில்ல. இருந்தும் விழிகளைத் திருப்பி அச்சிறு குழந்தையைப் பார்த்தார்.
பார்த்தவரது முகமும் அகமும் மலர்ந்தது. ஆனால் அதே நேரம் ஏதோ தோன்ற கேள்வியாக தன் பேரனை திரும்பிப் பார்த்தார்.

அவனோ அவரது கண்களை நேருக்கு நேராக சந்திக்க முடியாமல் விழிகளை வேறு புறம் திரும்பினான். அதிலேயே அவன் எதையோ தன்னிடம் இருந்த மறைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவர்,
“நீயும், உம்புள்ளையும்தேன் வந்துருக்கீக.எங்க உம்பொஞ்சாதி வரலியோ?” என்றார்.

“இல்ல அப்பத்தா பாப்பா பிறந்ததுமே அவ இறந்துட்டா.‌ நானும் பாப்பாவுந்தேன் அங்கன தனியா இருக்கோம்” என்றான்.

“ஒஒஒ.. அப்புறம் ஏன் கண்ணு இம்புட்டு நாளா தனினா இருந்தவென்? இங்கன வந்துருக்கு வேண்டியது தானடே. உனக்கு என்ன சாதி சனம் இல்லையா? இல்ல சொந்தக்காரவுக இல்லையா? இல்ல வீடுவாசல் இல்லையா? நீ நிலபுலன்தேன் இல்லையா? ஏன் ராசா நீ அங்க போயி தனியா அநாதைப்பய மாதிரி இருக்கோணும்.‌ அப்பவே பிள்ளையை தூக்கிக்கிட்டு நீ இங்கன வந்திருக்கலாம்ல. எதுக்கு இம்புட்டு நாளா எங்களைப் பிரிஞ்சு இருக்கோணும். யாருக்கோ நல்லது செய்யப்போயி கடைசியா சொந்த குடும்பத்தைப் பிரிஞ்சு இருக்கியே ராசா, ஏன்டே உனக்கு தலையெழுத்தா. அன்னைக்கே” என்றவர் எதையோ சொல்ல முயல சட்டென்று அவர் கைகளில் அழுத்தம் கொடுத்து 'சொல்லாதே' என்பது போல் விழியால் சைகை செய்தவன்,

“வேணாம் அப்பத்தா முடிஞ்சு போனதைப் பத்தி பேசறது ரொம்ப தப்பு. அதனால எத்தனை பேருடைய வாழ்க்கை அந்தரத்துல நிக்கிமோ? இந்த பாவத்தை நான் எங்க போயி முழுகி எழுந்தாலும் கரைக்க முடியாது அப்பத்தா. அதைப் பத்தி பேசாதீக. இப்ப உங்களுக்கு உடம்புக்கு பரவால்லயா? அப்படி உங்களுக்கு என்ன தான் ஆச்சு அப்பத்தா. நல்லாதானே இருந்தீக, நான் போகும் போது கூட தெம்பா இருந்தீகளே.” என்று கேட்டான்.

“நீங்க இங்கன இருந்து போனது தான் அவுகளை இப்படி படுக்கையில தள்ளிடுச்சு பெரிய தம்பி” என்ற குரல் கேட்டு சடாரென்று வாயிலின் புறம் திரும்பினான்.

அங்கே 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரது கையோ முந்தானையை இறுக்கமாக பற்றியிருக்க, அதை வாயில் வைத்து அடைத்தவாறு அவர் விம்மலையும், கண்ணீரையும் அடக்குவது அவனுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுத்தது.

கண்களை அழுந்த மூடி திறந்து தன்னை சமன் செய்தவன், “எப்படி இருக்கீக மல்லிக்கா” என்றான்.

“நீங்க போனதிலிருந்து இங்க ஆருமே நல்லா இல்ல பெரிய தம்பி. எங்க தம்பி போனீக? யாருக்காகவோ நீங்க” என்று எதையோ சொல்ல வந்த அவரையும் அவசரமாகத் தடுத்தவன், “வேணாக்கா மேக்கொண்டு எதையும் பேசாதீய. இதைப்பத்திதேன் அப்பத்தாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன். பழைசைப் பத்தி பேசாதீக. முடிஞ்சு போனது முடிஞ்சதாவே இருந்துட்டு போகட்டுமே. அதேன் நான் வந்துட்டேன்ல அந்தப் பேச்சை விட்டுடுக. அப்பத்தா கண்ணு முழிச்சிட்டாக யாராவது டாக்டருக்கு போன் பண்ணி வரச் சொல்லுங்க” என்றான்.

அடுத்த நிமிடம் விக்கி மருத்துவரை அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தான்.
மருத்துவர் வந்து இளவஞ்சியைப் பரிசோதித்து பார்த்து விட்டு, “நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எதுக்கும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் தொந்தரவு பண்ணாதீங்க” என்று மற்றவர்களிடம் சொல்லி விட்டு அவருக்கு ஊசி செலுத்தி உறங்க வைத்து விட்டு சென்றார்.
அதன் பின் அனைவரும் ஹாலில் கூடியிருந்தார்கள். ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் மகளை தன் மடியில் இறுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் தேவ்.

அவனது மடியில் அமர்ந்திருந்த அம்மு புதிதாக இருந்தவர்களை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருக்க, கண்மூடி அமர்ந்து இருந்தான் தேவ். கடந்த கால நினைவுகள் அவனை அலைக்கழிக்கிறது என்பதை பார்த்த எவரும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தது அவனது முக பாவனைகள். அதே நேரம் அவன் காலை யாரோ சுரண்டுவது போல் இருக்க கீழே குனிந்து பார்த்தான்.

கொழுக்கு மொழுக்கென்று இருந்த ஒரு ஆண்குழந்தை அவன் காலை சுரண்டி கொண்டிருந்தது.‌ எப்படியும் இரண்டு வயது இருக்கும் அந்த குழந்தைக்கு.‌ அவனை தூக்கச் சொல்லி கைகளை மேலே நீட்டியது. “அம்மு குட்டி தம்பியைத் தூக்கலாமா?” என்றதும் குழந்தை சரி என்று தலையை அசைத்தவாறு தந்தையின் மடியிலிருந்து இறங்கி நிற்க. எழுந்து நின்று அக்குழந்தையை தூக்கினான் தேவ்.

அதே நேரம் அவன் அருகில் வந்த விக்கி ஓரமாக நின்றிருந்த ஒரு பெண்ணைத் தன்னை நோக்கி அழைத்து, “அண்ணா இவ என்னோட மனைவி பிரகதி. உங்க கைல இருக்குறது என்னோட பையன் சத்ய தேவ். எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க அண்ணா” என்று சொன்னவாறு மகனை தன் கையில் வாங்கிக் கொண்டு மனைவியோடு தேவ்வின் காலில் விழ சட்டென பின்னால் நகர்ந்து நின்றான் தேவ்.

“டேய் என்னடா பண்றவென். மொதல்ல எந்திரி விக்கி” என்றான் பதற்றத்துடன்.

“இல்லணே எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. எனக்கு நீயும் அப்பா மாதிரிதேன், பண்ணுன்ணே” என்றான்.

“சரி நல்லாருங்க. மொதல்ல மேல எந்திரிச்சு நில்லுங்க” என்றதும் தான் எழுந்து நின்றனர் இருவரும்.

இப்போது தன் தம்பியின் மகன் என்ற மகிழ்வோடு சத்யதேவ்வை கையில் வாங்கிக் கொண்டு மறு கையால் தன் மகளை தூக்கியவாறு, “அம்மு குட்டி இது யாரு தெரியுமா? தம்பிடா. உனக்கு தம்பி. எங்க சொல்லு தம்பி” என்றான்.

புதிதாக ஒரு உறவு கிடைத்த மகிழ்ச்சியில், “ப்பா நான் தம்பி கூட விளையாடுறேன்” என்று சொல்லி கீழே இறங்க முயன்றாள்.‌ தேவே இருவரையும் இறக்கி விட்டான். இறங்கும் முதன் சத்யதேவ் தேவ்வின் கன்னத்தை எச்சிலால் ஈரமாக்கி இருந்தான்.‌ கீழே இறக்கி விட்டதும் அம்முக்குட்டி சத்யதேவ்வின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அந்த ஹாலின் மற்றொரு மூலையில் சென்று அமர்ந்துவிட்டாள்.

இப்போது அங்கே இருந்த அனைவரது பார்வையும் தேவ்வின் மேல் தான் இருந்தது. எதுவும் பேசாமல் அமைதி காத்தவன் சில நிமிட நேர யோசனைக்குப் பிறகு, “ஏன் போனேன், எதுக்கு போனேங்குறதை யாரும் கேட்க வேண்டாம். இங்க எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல ஆனா இருக்கிற வரைக்கும் யாரும் பழைசை பத்தி பேசாம இருக்கறது நல்லது” என்றவன் விக்கியிடம், “என்னோட ரூம் ரெடியா இருக்கா விக்கி” என்று கேட்க.

“உங்க ரூம் நீங்க போகும் போது எப்படி இருந்துச்சோ இப்பவும் அதே மாதிரி தான் இருக்கு நீங்க மேல போங்கணா. பாப்பாவ நான் பாத்துக்குறேன்” என்றதும் எதுவும் பேசாமல் தனிமையை தேடி தன் அறைக்குள் புகுந்தான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு அவன் இருந்த அதே அறை. அதே பொருட்கள் அதே இடத்தில் சுத்தமாக துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து கதவை தாழிட்டவன் கட்டிலில் விழுந்தான். அவனை அறியாமலேயே அவன் விழிகள் ஜன்னலைத்தான் தேடி ஓடியது. எழுந்து சென்று ஜன்னலைத் திறந்தான்..

நேராக ஜன்னலுக்கு எதிரே நெற்கதிர்களை அடித்து, நெல்மணிகள் தனியாக, பதர் தனியாக பிரிக்கப் பயன்படும் களம் என்று சொல்லப்படும் இடம் இருந்தது. அதன் அருகில் உயரமாக வளர்ந்து இருந்த ஐந்தாறு, வேப்ப மரங்களும் அடுத்தடுத்து வளர்ந்து நின்று அகல விரிந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. அதனருகில் அரசமரம் இரண்டும் இருந்தன. அரசமரத்தின் கீழே பிள்ளையார் சிலை ஒன்று அதைச் சுற்றி சற்று மேடை எழுப்பி அதன் மீது அமர வைக்கப்பட்டிருந்தது.

சிறிது தூரத்தில் வளைந்து நெளிந்து ஓடும் காவிரி ஆற்றின் ஓடை ஒன்றும் கிளைப்பிரிவாக சென்று கொண்டிருந்தது. அதன் வளத்தால் தான் இப்பகுதி எங்கும் செழிப்பாக இருக்கின்றது. சிறுவர் சிறுமிகள் விளையாடுவதற்கு ஏற்றார்போல் சிறுசிறு ஊஞ்சல்களும் அந்த ஆலமரத்தில் கட்டப்பட்டிருந்தன. மீன் பிடிப்பதற்கான இடமாகவும் அந்த ஓடை இருந்தது. எத்தனை நாட்கள் அந்த ஓடையில் அமர்ந்து தன்னவளை எண்ணி கனவு கண்டிருப்பான். எத்தனை நாள் அந்த அரச மரத்தின் மறைவில் நின்று அவளை ரசித்திருப்பான். எத்தனை நாள் அவளுக்கென்று பார்த்து பார்த்து பரிசுப்பொதிகைளை வாங்கிக்கொண்டு காத்திருப்பான். எத்தனை நாள் அதை கொடுக்காமலேயே திரும்பி சென்று இருப்பான். அவளிடம் சொல்ல வேண்டியவற்றை சிந்தித்து எத்தனை முயற்சிகள் எடுத்திருப்பான். அதையெல்லாம் நினைத்தவனுக்கு நீங்காத வலியும் வேதனையும் தான் நெஞ்சில் எழுந்தது. அவனுக்கு அந்த வலி,வேதனையைக் கொடுத்தவள் அதே வலியையும், வேதனையையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவனைச் சார்ந்தவர்கள் அனைவரும் அதை அறிந்திருந்தார்கள்..

நினைவுகளெல்லாம்
நின் பிம்பம் தானடி..
ஏனோ நினைவுகளாய்
என்னுள் நிறைந்தவள்
நிஜத்தில் நிராதரவாய்
எனை நிற்க வைத்ததேனடி..!

- தேடல் தொடரும்…




கருத்துத்திரி

 

Ramys

Active member
Messages
102
Reaction score
233
Points
43
உறவின் தேடல் -07

தேவேஷ்வர் எவ்வளவு நேரம் தன்னிலை மறந்து அந்த ஜன்னலின் அருகிலேயே நின்றிருந்தானோ கதவு திறக்கும் சத்தத்தைத் தொடர்ந்து அப்பா என்று குரல் கொடுத்தவாறு உள்ளே ஓடி வந்த தன் மகளின் குரலில் தன்னிலை பெற்றவன், தன் விழிகளில் இருந்த கண்ணீரை அவசர அவசரமாக துடைத்துக்கொண்டு மகளின் புறம் திரும்பினான்.

ஓடிவந்து தன் தந்தையின் காலை கட்டிக் கொண்ட அந்த அழகுச் செல்லத்தை அள்ளி தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டவனுக்கு 'தான் இன்னும் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் இவள் மட்டும்தான்' என்றே தோன்றியது. இவள் மட்டும் இல்லையென்றால் தன் வாழ்வு என்னவாகி இருக்குமோ? என்று நினைத்தவனுக்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. ஆனால் தான் அழுவதைக் கண்டால் தன் மகள் பயந்து விடுவாள் என்பதால் சட்டென்று தன் முகபாவனைகளை மாற்றியவன்,
“அம்முக்குட்டிக்கு இந்த வீடு பிடிச்சுருக்கா?, இந்த ஊர் பிடிச்சுருக்கா? இங்க இருக்கவங்களை பிடிச்சுருக்கா?” என்று கேட்க.

“இந்த ஊர் எப்படின்னு எனக்கு தெரியலப்பா. ஆனா இந்த வீட்ல இருக்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லாரும் என்கிட்டே ரொம்ப பாசமா பேசுறாங்கப்பா. ஆனா ஒரே ஒரு ஆன்டி மட்டும் என்கிட்ட பேச மாட்டேங்குறாங்கப்பா" என்று தன் தந்தையிடம் புகார் வாசித்தாள் அந்த குட்டி அழகு தேவதை.

மகளின் சொல்லில் தன்னை மீறி இதழில் துளிர்த்தப் புன்னகையை இதழுக்குள்ளேயே ஒளித்து வைத்தவன், “என் தங்க குட்டிக்கிட்ட யாரு பேசமாட்டேன்னு சொன்னது வாங்க அவங்கக்கிட்ட போயி கேள்வி கேட்கலாம். எப்படி உங்கிட்ட அவங்க பேசாம போகலாம் இதையெல்லாம் சும்மா விடக்கூடாது வாங்க செல்லம் போலாம்” என்று சொன்னவாறு அவளை தூக்கி கொண்டு கீழே வந்தான்.

ஹாலில் அமர்ந்து அனைவரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இவனைக் கண்டதும் அனைவரும் அமைதியாகி விட்டனர். இவ்வளவு நேரம் சத்தமாக இருந்த இடம் திடீரென்று ஒரு குண்டூசி கீழே விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக மாறியிருந்தது. அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை.

ஹாலின் மத்தியில் வந்து நின்றவன், “சொல்லுங்க அம்மு குட்டி செல்லம் யாரு உங்க கிட்ட பேச மாட்டேன்னு சொன்னது” என்று கேட்க. அந்த வீட்டின் மூலையில் ஒரு ஓரமாக நின்று சத்யதேவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பெண்ணை கைநீட்டி காட்டினாள் சுடர் மதி.

அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்த்த தேவ் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான். ஆனால் தன் மகளிடம் பேசாததால், தன் செல்ல மகள் குற்றம்சாட்டி விட்டாளே! அவள் வைத்த புகாருக்கு நீதி கேட்க வேண்டுமே என்ற எண்ணத்தில் தன் தங்கை எழிலரசியை நெருங்கினான்

ஐந்து வருடம் கழித்து வீட்டிற்கு வந்த தன் பெரிய அண்ணனிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை. அண்ணன் மகளையும் கண்டு கொள்ளவில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள் எழிலரசி

வந்த நொடியில் இருந்து தன் தங்கையைக் காணாமல் தேடினான் தான். ஆனால் அப்போது அவன் கண்ணில் எழிலரசி படவில்லை. ஆனால் தற்போது தன் கண்ணில் படவும் வேகமாக அவள் அருகே சென்றவன்,“எப்படி இருக்க எழில்?” என்றான்.

அவன் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்த எழிலரசி எதுவும் பேசாமல் மீண்டும் குனிந்து கொண்டவள் நன்றாக மசித்த உருளைக்கிழங்கை சோற்றில் வைத்து பிசைந்து சத்யதேவுக்கு ஊட்டினாள். குழந்தையும் அவள் ஊட்டியதை ஆ காண்பித்து கவனமாக வாங்கிக் கொண்டது. குழந்தைக்கு உணவை ஊட்டி முடித்து விட்டு அங்கிருந்து நகர முற்பட்ட வேளையில் மீண்டும் அவளை வழிமறித்து நின்ற தேவ், “என்கிட்ட ஏன் பேச மாட்டேங்குற எழில்?” என்று கேட்டான்.

மீண்டும் அவனை நிமிர்ந்து பார்த்தவள் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.மீண்டும் அவள் கையை எட்டி பிடித்தவன்,
“அண்ணன் கிட்ட பேச கூட உனக்கு பிடிக்கலையா எழில்” என்றான். பட்டென்று அவன் கையில் இருந்த தன் கையை உதறிக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் எழில்.

அவள் அது போல் செய்தது தேவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே எதோ போல் இருக்க வேகமாக அவனை நெருங்கிய விக்கி, “அண்ணா எழில் வேணும்னே எதையும் பண்ணலண்ணா.‌ நீங்க இங்க இருந்து போனதுக்கப்புறம் எவ்வளவோ நடந்துருச்சுன்ணா. அதுல நம்மளால மாத்த முடியாத ஒரு விஷயம் நம்ம எழிலோடு நாக்கு கட்டாகி அவளால பேச முடியாம போயிருச்சு அண்ணா‘ என்றதும் தேவ் அதிர்ந்தான்.

பின்,‌“அப்படி என்னதான் ஆச்சு விக்கி?” என்று கேட்க.

“வேணாம்னா இந்த அஞ்சு வருஷத்துல எவ்வளவோ நடந்துருச்சு. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டா நீங்க தாங்க மாட்டீங்கண்ணா. நடந்து முடிஞ்சது நடந்ததாவே இருக்கட்டும் இதை இத்தோட விட்டுடுங்க, வாங்க சாப்பிடலாம்” என்று சொல்லி விட்டு அங்கிருந்து விலகி சென்றான்.

தன் அழகு தங்கையின் குரலையும் அவள் இனிமையாகப் பாடும் பாடலையும் இனிமேல் கேட்க முடியாதா? என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் அடைப்பது போலிருந்தது. இருந்தும் தங்கையிடம் ஓரிரு வார்த்தைகள் பேச எண்ணி எழிலரசி இருந்த அறைக்குள் நுழைந்தான்.

கட்டிலில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே தெரியும் வானத்தை விழி வழியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் எழில். அவள் அருகில் சென்று நின்றவன் அவள் தலையைக் கோதியவாறு, “அண்ணனை மன்னிச்சுடு எழில். என்னோட சுயநலம் தான் முக்கியம்னு நான் உன்னை அப்படியே விட்டுட்டு போய் இருக்க கூடாது. அண்ணா மேல இன்னும் கோவமா இருக்கியா?” என்றான்.

தன் தலையில் இருந்த அவன் கையைத் தட்டி விட்டவள் எதுவும் பேசாமல் தலையணைக்கு அடியிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவன் கையில் கொடுத்தவள் எதுவும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினாள். அந்த டைரியின் அட்டையையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்த தேவ், ' நிச்சயமாக இதில் தன் தங்கையின் மனக்குமுறல்கள் இடம் பெற்று இருக்கும்' என்பதை அறிந்தவன் அதை தன் அறையில் கொண்டு சென்று வைத்து விட்டு உணவுண்ண கீழே வந்தான்.

அனைவரும் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க. தன் மகளை மடியில் வைத்தவாறு அமர்ந்திருந்தான் தேவ். அதேநேரம் வீட்டு வாயிலில் இருந்து,“வீட்ல யாருங்க?” என்ற குரல் கேட்டது.

அந்தக் குரலை எங்கயோ கேட்டது போல் இருக்கிறது என்று உணர்ந்தாலும் தன் மகள் அலைபேசியில் விளையாடிக்கொண்டிருக்கும் கேமில் தன் கவனத்தை பதித்தான் தேவ். ஆனால் வேகவேகமாக வீட்டிலிருந்து வெளியே சென்ற பிரகதி,
“என்னடி மலர் இன்னைக்கு என்னமோ நேரமே வந்த மாதிரி தெரியுது. இன்னும் மணி அஞ்சு ஆகலையே?” என்று கேட்க.

“எனக்கு புரியுது அக்கா நான் கொஞ்சம் முன்னாடியே வந்துட்டேன் கா. ஆனா அதுக்கு காரணம் இருக்குக்கா. அவ இனிமே உங்க வீட்டுக்கு என்னை பால் ஊத்த சொல்லிட்டா ஏன்னு தெரியல” என்று தலை குனிந்து கொண்டே சொன்னாள்.

“அவ அப்படி சொன்னதுக்கான காரணம் என்னன்னு எனக்கும் தெரியாம இல்ல மலர். எல்லாம் விதிப்படி தான் நடக்கும். சரி இரு பால் பாத்திரத்தை எடுத்துட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்ற பிரகதி பால் பாத்திரத்தோடு வெளியே வந்தாள். கவனம் தன் மகள் கையிலிருக்கும் அலைபேசியில் இருந்தாலும், தேவ்வின் செவி அந்த சம்பாஷணைகளை கேட்டுக் கொண்டுதான் இருந்தது. அனைவரும் தேவ்வை தான் ஓரவிழியால் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தற்போது மலர் என்ற பெயரை கேட்டதும் அவள் யார் என்பது தெரிந்துவிட சட்டென்று அவனது மனதில் ஒரு மின்னல் தாக்குதல். தனக்கு நெருக்கமான உயிரும் வந்திருக்குமோ என்று எண்ணியவன் எழ முயன்றான். ஆனால் அதற்குள்ளாகவே அவர்கள் பேச்சு வார்த்தையைக் கேட்டிருந்தவன் எழத் தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டான்.

வெளியே வந்த பிரகதியிடம்,
“எப்பவும் போலவே ஊத்தவா இல்ல கொஞ்சம் சேர்த்து ஊத்தவாக்கா?” என்று கேட்டாள் மலர்.

”இல்லை எப்பவும் போல ஊத்துனா பத்தாது ஒரு அரை லிட்டர் சேர்த்து ஊத்து” என்றதும் அவர்கள் கேட்ட பாலை ஊற்றி விட்டு அங்கிருந்து நகர சென்றாள் மலர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மலர்விழி.

அவள் கேட்டை தாண்டி செல்ல முயன்ற வேளையில்,
“அம்மாடி மலர் தங்கச்சி எப்படி இருக்கமா?” என்ற குரல் கேட்டு சட்டென்று அப்படியே நின்றாள். அவளது முகம் அந்த செவ்வானத்தை விட அதிக அளவு கோபத்தில் சிவந்தது. வார்த்தைகள் தாறுமாறாக வெளிவரத் துடித்தது. ஆனால் தான் பேசும் வார்த்தைகள் சென்று சேர்வது இந்த வீட்டின் பையனை மட்டுமின்றி தன் உயிர் தோழியின் நேசமிகு மன்னனையும் தான். தான் பேசிய வார்த்தைகள் தெரிய வந்தால் அவள் தன்னைக் கொன்றாலும் கொன்று விடுவாள் என்பதை நினைத்த மலர் பொறுமையாக தன்னை சமன் செய்து கொண்டு அவனின் புறம் திரும்பிவள், “உங்களுக்கும் பால் வேணுமா சார். எத்தனை லிட்டர் வேணும்?” என்றாள்.

எப்போதும் தான் அழைத்ததும் அண்ணா என்று அழைக்கும் தங்கை, 'சார்' என்றதும் குழம்பியவன், “அம்மாடி மலர்விழி என்னை அடையாளம் தெரியலையாடா. நான் தான் தேவேஷ்வர்” என்று அவன் சொல்ல.

“உங்களை அடையாளம் தெரியுது சார் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும், பால் வேணுமா? உங்க வீட்டாளுங்க தான் பால் வாங்கிட்டாங்களே சார்” என்று சொன்னாள்.

அவள் சொன்னதைக் கேட்டு இன்னும் குழம்பியவன், “ நீ ஏன்மா பால் ஊத்த வர்ற?
இதை உங்க அப்பா தானே செஞ்சுகிட்டு இருந்தாரு, இப்ப ஏன் நீ செய்யிற? இன்னும் படிச்சுக்கிட்டு தான் இருக்கியா, இல்ல கல்யாணம் ஆயிடுச்சா?” என்று அன்பாகக் கேட்டான்.

அவன் கேட்க கேட்க சுறுசுறுவென்று மலர்விழிக்கு கோபம் ஏறியது. இருந்தும் கடினப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவள், “தெரியாதவங்கக்கிட்ட இதெல்லாம் சொல்லணும்னு அவசியம் கிடையாது சார். உங்களுக்கு பால் வேணுமா, வேணாமா சீக்கிரம் சொல்லுங்க எனக்கு வேலை இருக்குது” என்றாள் கடுப்பாக.

“நீ கூட என்னைப் புரிஞ்சிக்காம பேசுற மாதிரி தெரியுதேமா?” என்றான்.

“ நாங்க யாரும் உங்களை புரிஞ்சுக்க வேண்டிய அவசியம் கிடையாது சார். இதுக்கு மேல என்கிட்ட பேச முயற்சி பண்ணாதீங்க. இப்ப கொடுத்த மரியாதை இன்னொரு தடவை பேசும்போது இருக்குமான்னு எனக்கே தெரியல” என்று சொல்லிவிட்டு தன் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் கண்ணிலிருந்து மறையும் வரை நின்றிருந்தவன், ‘இங்க என்னமோ தப்பா இருக்குது’ என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தான்.


அடங்காத கோபத்துடன் தன் இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பகுதியை நோக்கி விரைந்தாள். சற்று தள்ளி தள்ளி நான்கைந்து வீடுகள் இருந்த இடத்திற்கு வந்தாள் மலர். வெளியே பார்ப்பதற்கு குப்பத்து மக்கள் வசிக்கும் இடம் போலவும், சற்று சுத்தம் இல்லாதது போலவும் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இடது புறம் இருந்த மண் ரோட்டில் இருசக்கர வாகனத்தை செலுத்தியவள் வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி தேவ்வைத் திட்டி கொண்டே வந்தாள்..

சரியாக வரிசையாய் மாடுகள் நிற்க வைக்கப்பட்டிருந்த கொட்டகையின் முன்பு வண்டியை நிறுத்தியவள் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி கொட்டகையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த வேலிப்படலின் வேலிக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.‌

அங்கே மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து , “அடியேய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமாடி?” என்று கேட்டாள் மலர்விழி.

“அப்படி என்னடி எனக்கு தெரியாத விடயம்? அப்படி என்ன புதுசா பாத்துட்டன்னு இந்த கத்து கத்துற?” என்று கேட்டவாறு மாடுகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தாள் மதுரவாணி.‌

“உண்மையாலுமே நான் எதைப் பத்தி கேக்க போறேன்னு உனக்கு தெரியாதா வாணி” என்று கேட்ட மலர்விழியின் பார்வை கூர்மையாக வாணியை மொய்த்தது.

“நீ எதைப் பற்றிக் கேட்டாலும் சரிடி நீ எதை கேட்க வரேன்னு தெரிஞ்சா தானே நான் பதில் சொல்ல முடியும். நீ பாட்டுக்கு மொட்டையா எனக்கு ஒரு விஷயம் தெரியும், அதைப்பத்தி கேட்க போறேன், உனக்கு அதைப்பத்தி தெரியுமான்னு கேட்டா எனக்கு என்னடி தெரியும். எதா இருந்தாலும் நேரடியா சொல்லித் தொலையேன் சுத்தி வளைச்சு பேசுனா எனக்கு எப்படிடி தெரியும்” என்று சொன்னவாறு மாட்டுக்கு புண்ணாக்கு கலந்து வைத்துக் கொண்டு இருந்தவள் மெதுவாக மலர்விழியைத் திரும்பிப்பார்த்தாள்.
மலரின் முகம் அனலென தகித்தது.

கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக் கொண்டு வேலைப்படல் தட்டியின் மேல் சாய்ந்து நின்றவள், “தேவேஷ்வர் அண்ணா ஊருக்கு வந்திருக்காருடி” என்றாள் மெல்லிய குரலில்.

நீளமாக இருந்த மாட்டுத் தொட்டியில் தவிடு, கழனி நீர் இரண்டையும் சேர்த்து கலக்கி விட்டு மற்றொரு மாட்டு தொட்டியின் அருகில் சென்ற மதுரவாணி மலர் சொன்னதைக் கேட்டு அப்படியே ஷாக் அடித்தது போல் நின்றாள். அவள் அவ்வாறு நின்றது ஒரு நிமிடம் தான் மறுநிமிடமே எதுவும் நடவாதது போல், தான் எதையும் கேட்கவில்லை என்பது போல் சாதாரணமாக அனைத்து மாடுகளுக்கும் தீவனங்களை வைத்து விட்டு, மீண்டும் மற்றொரு தொட்டியில் தண்ணீரை நிறைத்து விட்டு மாடுகளுக்கு தண்ணீர் காட்டியவள், அவற்றை மறுபடியும் இழுத்து அது அதுக்கு உண்டான இடத்தில் கட்டி விட்டு, அவை மேய்வதற்கு வைக்கோலை அள்ளி போட்டு விட்டு மலர்விழியை நெருங்கினாள்.

முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு நின்றவளை நெருங்கிய வாணி, “யார் வந்தா நமக்கு என்ன, யார் வராட்டி போனா நமக்கென்னடி. நம்ம ஏன் தேவையில்லாம இந்த விஷயத்தை பத்தி பேசணும். முதல்ல மத்தவங்களைப் பத்தி நாம ஏன்டி பேசணும். நமக்கே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் போது நாம ஏன் தேவையில்லாம அந்த டென்ஷன் தலைவலியை ஏத்துக்கணும். நம்ம வேலையை பார்க்கலாம் வா” என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர முயன்றாள்.

“நிஜமாவே உன் மனசுல வேற எதுவும் இல்லையாடி. அவர் மேல கோபம், வருத்தம், இயலாமைன்னு எதுவுமே இல்லையாடி. நெஜமாவே நீ எல்லாத்தையும் மறந்துட்டியா" என்று மனத்தாங்கலுடன் கேட்டாள் மலர்விழி.

திரும்பி மலர்விழியை அனலென முறைத்த வாணி,
“முடிஞ்சுப் போனதை பத்தி மறுபடியும் பேச நினைக்காத மலர் அதுக்கப்புறம் நான் அமைதியா இருக்க மாட்டேன். மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வரலாம்” என்று சொல்லி விட்டு இரண்டு அடி எடுத்து வைத்த அவளின் முன்பு வந்து நின்றார் அவர்.

அவரைக் கண்டதும் இவ்வளவு நேரம் இருந்த கோபம் இன்னும் அதிகரிக்க கோபத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தன் இடது புறம் இருந்த வேலிப்படலை காலால் எட்டி உதைத்தவள் திரும்பி மலரைப் பார்த்து, “வாயிக்காலுக்கு குளிக்க போறேன் நீ வரியா மலர்?” என்றாள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.

மலரும் தங்களின் அருகில் நின்றவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீ போய் ட்ரஸ் எல்லாம் எடுத்துட்டு வாடி நான் வண்டியைத் திருப்பி வெச்சுட்டு நிக்கிறேன்” என்று சொன்னாள்.

தன் எதிரில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார், அவரது கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிகிறது,
அதைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் தன் முகத்தையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார் என்பதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அவரைத் தாண்டி சென்றாள் வாணி. செல்பவளை விழிகளில் வழியும் கண்ணீரோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் மீனாட்சி.

ஆனால் அவர் நிற்பதைக் கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்த வாணி சுற்றிலும் தென்னைங்கீற்றால் படல் அமைக்கப்பட்டு, மேலே மேற்கூரையும் கீற்றால் வேயப்பட்டிருந்த குடிலுக்குள் நுழைந்தவள் தனக்கும் மலருக்கும் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வெளியே திண்ணை போன்று இருந்த இடத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய பிளாஸ்டிக் பேரலை நெருங்கி அதன் மீது இருந்த குளியல் சோப்பையும், துணி துவைக்கும் சோப்பையும் எடுத்துக் கொண்டாள். பிறகு மூங்கில் மூலம் செய்யப்பட்டிருந்த அந்த குடிசையின் தட்டிக் கதவை இழுத்துச் சாத்திப் பூட்டியவள், மாட்டு கொட்டகையையும் பூட்டி விட்டு நகர்ந்தவள் எக்ஸலை இயக்கி விட்டு தயாராக நின்றிருக்கும் மலரின் பின்னால் ஏறி அமர, மலர்விழியும் அங்கிருந்து வண்டியை நகர்த்தினாள். திரும்பி மீனாட்சியை ஒரு பார்வை கூட பார்க்காமல் அவளுடன் சென்றாள் வாணி ...
அந்த வண்டியின் பின்னே அவர்கள் வளர்க்கும் நாய் பிளாக்கியும் ஓடியது.

அவர்கள் செல்வதையே அழுகையோடு பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி அந்த இடம் சுத்தமில்லாத மண்தரை, சகதியோடு இருக்கிறது என்பதை எல்லாம் உணர மறந்தவராய் அங்கேயே மடங்கி அமர்ந்து கதறியழுதிட.. சிறிது நேரத்தில் அவரது தோள்ப்பட்டையில் ஒரு கரம் பதிந்தது.. அழுத விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தவரை தாங்க முடியாத வேதனையுடன் பார்த்தவாறு நின்றிருந்தான் அவரது மூத்த மகன் அகில் பிரசாத்..


தவறிழைத்தவன் நான்..
ஆனால் அதற்கான
தண்டனை மட்டும் எனை ஈன்றவருக்கா?
குப்பையென்று அவளை
ஒதுக்கி தள்ளினேன்..
சாக்கடை என்று பெயரிட்டே
அவள் தோழமையை அசிங்கப்படுத்தி அப்புறப்படுத்தினேன்...

ஆனால் குப்பையென்று எண்ணியவள் இன்று
கோகினூர் வைரத்திற்கு
ஈடாய் மிளிர்கிறாள்..
சாக்கடை என்று அழைக்கப்பட்டவளின்
கடைக்கண் பார்வைக்காக இன்று பரிதவித்து நிற்கிறேன்
அதே சாக்கடை ஓடும்
மண் தரையினில்..!

- தேடல் தொடரும்..



 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom