உறவின் தேடல் -13.2
கூடவே வாணியின் சொந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள் அவர்கள் உபயோகித்தவற்றை மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். ஆதி விநாயகம் அவர்களது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைத்து, அவற்றையெல்லாம் கொண்டு சென்று பள்ளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரிடம் ஒப்படைக்க சொல்லி இருந்தார்.
இதையும் கூட தாங்கள் தான் செய்ததாக அவளது பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சியிடம் சொன்னார்கள். வேண்டாமென்று மறுத்தவளை வற்புறுத்தி வாங்க வைத்தார்கள். அதிலும் மீனாட்சி மறுக்க முடியாத அளவிற்கு அவர்களது செயல்கள் இருந்ததால் வாணியும் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். மூன்று லெதர் பைகளும், அவளது கரடி பொம்மை, அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் சிலை, சில அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மூட்டை என அனைத்தும் காரில் ஏற்றப்பட்டது. மீனாட்சியால் எதையும் மறுத்து பேச முடியவில்லை.
காரில் வரும் போது மீனாட்சிக்கு ஒரு விஷயம்தான் உறுத்திக் கொண்டே இருந்தது. 'அனைவரிடமும் அவள் சாதாரணமாக பேசினாள், தங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே, ஏன்' என்ற கேள்வி அவரை உறுத்திக் கொண்டே இருக்க வரும் வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினான் அகில். அப்போது அந்த கேள்வியை வாணியிடம் கேட்டு வைத்தார் மீனாட்சி.
“ஏன்டி நான் தான் உன்னை கொடுமைப் படுத்துறேன்னு எல்லாரும் சொல்றாங்களே, அதை ஏன் நீ யார்கிட்டயும் சொல்லலை. சொல்லியிருந்தா மறுபடியும் உன்னை எங்களோட அனுப்பி வச்சுருக்க மாட்டாங்கல்ல.”
“உங்களோட வராம நான் வேற எங்க மேடம் போறது. எனக்குத்தான் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லையே. இந்த உலகத்துல தனியாளா கண்டிப்பா வாழமுடியாது. யாரையாவது சார்ந்து வாழ்ந்தா தான் பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கும். இப்ப வரைக்கும் எனக்கு பாதுகாப்பா நீங்க இருக்கீங்க, தங்க இடம் குடுத்துருக்கீங்க அது வரைக்கும் எனக்கு போதும். பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லித்தானே எங்க அப்பா உங்கக்கிட்ட என்னை நம்பி விட்டுட்டு போனாரு, அதனால தான் என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன் மேடம்” என்று சொல்லி விட்டு அவள் அமைதியாகிவிட. மீனாட்சிக்குத் தான் ஏதோ சுருக்கென்று உள்ளுக்குள் தைத்தது. அவளுக்கு நாம் கொடுமை செய்த போதும், அநீதி இழைத்த போதும், கேவலமாக நடத்திய போதுமே, அதை எல்லாம் மறந்து என்னை தியாகி போல் நினைக்கிறாளே' என்று யோசித்தவருக்கு மனதுக்குள் ஏதோ இடறியது. அவள் சொன்ன வார்த்தை அவரை சற்று அசைத்துப் பார்த்தது. அதன் பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அகில் வந்து காரை எடுத்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்...
மீண்டும் ஒரு மணி நேரம் சென்றிருந்த நிலையில் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். முதலில் இறங்கிய மீனாட்சி விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட, தன் திங்ஸ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வாணியை தடுத்து நிறுத்தினான் அகில்.
“நில்லு” என்றான் அதிகாரமாய்.
முதல் முறை அவனே அழைத்துப் பேசுகிறான் என்றதும் பதற்றத்துடன் அவன் புறம் திரும்பியவள் என்னவென்று நினைப்பது என புரியாமல்,“என்னங்க சார்” என்றே கேட்டிருந்தாள்.
“ஒஒ.. இப்ப மட்டும் சார், ஆனா அங்க மட்டும் வேற மாதிரி சொல்றது, என்ன நடிக்கிறியா. உன்னோட பிரண்ட்ஸ்கிட்ட நீ என்ன சொன்னன்னு நானும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்” என்றதும் வாணிக்கு பயத்தில் கிடுகிடுவென்று கை, கால்கள் ஆட ஆரம்பித்தது.
பயத்துடனே, “நான்...நான் தப்பா எதுவும் சொல்லலைங்களே சார்?” என்றாள். அடுத்த கணம் அவளை அடிப்பதற்கு கையை ஓங்கியவன் தாங்கள் வெளியே நிற்பதை உணர்ந்து கையை கீழே இறக்கி ஒரு உதறு உதறிக் கொண்டவனாய் அடங்காத கோபத்தோடு, “என்ன நடிக்கிறியா, சொல்லுடி நடிக்கிறியாங்குறேன். இங்கே நல்லவ மாதிரி சார் மோருங்க வேண்டியது. அங்க உன் பிரெண்ட்ஸ் கிட்ட, எங்களை கைக்காட்டி அவங்க என்னோட அத்தை, இவர் என்னோட அத்தான் அப்படின்னு சொல்ற, என்ன உறவுமுறையைச் சொல்லி மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாக்குறியா?” என்றதும் அவள் முகம் வெளிறியது...
கையில் இருந்தவற்றை கீழே வைத்தவள் அவன் முன்பு கைகூப்பிய நிலையில் நின்றவாறு,“மன்னிச்சிடுங்க சார், இல்லை இல்லை மன்னிச்சுடுங்க முதலாளி ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டேன். அந்த இடத்துல நீங்க ரெண்டு பேரும் என்னோட முதலாளி, நான் உங்க வீட்ல வேலை செய்யிற வேலைக்காரின்னு சொன்னா நான் இங்க வேலைக்காரியா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும், அப்புறம் மறுபடியும் அதை வெச்சு வேற ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு தான், அப்படி சொல்லலைங்க முதலாளி இல்லேன்னா, இது மாதிரி சொந்த உறவுகள்னு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிச்சிடுங்க இனிமே எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சரி நான் இதையே சொல்லிடுறேன், தயவு செஞ்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க..” என்றவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழுவதைக் கூட பொருட்படுத்தாமல் இறக்கி வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அகிலோ அவள் பேசியதைக் கேட்டு சிறிதும் மனம் இளகவில்லை. அலட்சியமாகக் தோளைக் குலுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவர்கள் பேசுவதை எதேச்சையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஜீவனின் விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தோடியது.
‘பணம் இருந்தால் மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ, சொந்தங்களுக்கு கூட மதிப்புக் கொடுக்க மாட்டாங்களா, எல்லாத்தையும் பணத்தோட அடிப்படையில தான் நிர்ணயம் செய்வாங்களா’என்று நினைத்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ, “இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்தோ, இங்க வந்து கஷ்டப்படுது” என்று புலம்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது. ஆனால் வாணியின் கஷ்டத்திற்கு விடிவு காலம் வரும், அதுவும் தன்னால் தான் வரும் என்பதை அந்த உருவம் நினைத்துக்கூட பார்த்திருக்காது.
அன்றைய நாள் அவ்வாறே கழிந்தது. மறுநாள் விடியலில் ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவருமே சேர்ந்து, “நாங்களே இவளை கல்லூரியில கொண்டு போயி சேர்த்துட்டு வந்துடுறோம். ஏன்னா வீணா உனக்கு அலைச்சல், இன்னைக்கும் நீ சிரமப்பட வேண்டாம்மா, இதை நாங்களே செஞ்சுடுறோம்” என்று சொன்னதும் மீனாட்சியும் தனக்கு அதிக வேலை இருப்பதால் சரியென்று சொல்லி விட்டார்..
முக்கியமான மீட்டிங் இருப்பதால் அகிலும் வரவில்லை என்று சொல்லி விட்டான். அன்று கல்லூரிக்கு தன் பைக்கில் செல்லாமல் காரை எடுத்தான் ஆதவ். முன்பக்கம் தாத்தா ஏறிக்கொள்ள பின்பக்கம் பூங்கோதை நாச்சியாரும் வாணியும் ஏறி அமர்ந்ததும் கார் கரூரை நோக்கி கிளம்பியது.
கொடுமுடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரூர். கரூரில் இருக்கும் கலைக்கல்லூரியில் தான் ஆதவ் படித்து கொண்டிருக்கிறான். ஏனோ மற்ற பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எப்படியும் படித்து முடித்ததும் தந்தையோ, அண்ணனோ பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலைத்தான் தலையில் கட்டப் போகிறார்கள் அதற்கு எதற்கு தேவையில்லாமல் பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்பதாலேயே மேனேஜ்மென்ட் குரூப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருக்கிறான்..
ஒருவழியாக தன் கல்லூரி இருக்கும் ஏரியாவை நெருங்கியதும் ஆதவ் தன் தாத்தாவிடம்,“தாத்தா நான் காலேஜுக்கு லீவு போட்டா தான் ரிட்டன் உங்களோட வரமுடியும், என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க..” என்றான்.
“நீ வரலன்னா வேற யாருடா காரை டிரைவ் பண்ணுவா, இந்த வயசுல என்னைக் கார் ஓட்ட சொல்றியா படவா ராஸ்கல்” என்று சொன்ன தன் தாத்தாவை திரும்பி பார்த்து முறைத்தான் ஆதவ்.
“அதுக்குதான் நான் சொன்ன காலையிலே லீவ் சொல்லிடுறேன்னு, நீங்க தான் எதுவுமே சொல்லலை. லீவ் எதுவும் சொல்லாம நான் பாட்டு காலேஜுக்கு வந்தும் கிளாஸ்கு போகலன்னா என்ன நினைப்பாங்க. அட்மிசன் போட்டு முடிச்சதும் மூணு பேரும், வேணும்னா பஸ் ஏறி வீட்டுக்கு போங்க, நான் காலேஜ் முடிச்சுட்டு கார்ல வந்துடுறேன்” என்றதும் வாணிக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
“பெரியய்யா அவரைக் காலேஜ் போக சொல்லுங்க, நாம திரும்பி கார்லையே வீட்டுக்கு போயிடலாம். நான் கார் ஓட்டுவேன், அவரோட உதவி ஒன்னும் நமக்கு தேவையில்லை. நானே கார் ஓட்டுறேன்” என்று வெடுக்கென்று சொன்னவள் தன் முகத்தை ஜன்னலோரம் திருப்பி வைத்துக் கொண்டாள்.
“என்னது, உனக்கு கார் ஓட்ட தெரியுமா. இது ஒன்னும் பொம்மைக் கார் இல்லை, நெஜக் கார்” என்று ஆதவ் கிண்டல் குரலில் சொன்னதைக் கேட்டதற்கு பிறகும் பதில் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வாணி.
ஆதவும், ஆதி விநாயகரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.
“பாரு உங்க பெரியம்மா பண்ணி வச்ச வேலையால யார் கிட்டையும் அந்த பொண்ணு முன்ன மாதிரி பேசவே மாட்டேங்குது” என்று சொன்ன தன் தாத்தாவை முறைத்த ஆதவ், “உங்கக்கிட்டயாவது ரெண்டு வார்த்தை பேசுறா, என்கிட்ட சுத்தமா பேசவே மாட்டேங்குறா தாத்தா. ஏன் பேசமாட்டேங்குறன்னு கேட்டா, முதலாளி, தொழிலாளி, வேலைக்காரிங்குறா. ஆனா ஒன்னு, கூடிய சீக்கிரம் வீட்ல ஏதாவது பெரிய கலவரம் நடக்கும், அன்னைக்கு எல்லாரையும் இவ வச்சு செய்யப் போகிறா வேணா பாருங்க” என்று சொன்னவனுக்கு தெரியவில்லை அந்த பிரச்சினைக்கு முழுமுதற் காரணமாக தான் தான் இருக்கப் போகிறோம் என்று..
- தேடல் தொடரும்..
https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/
கூடவே வாணியின் சொந்த வீட்டை வாங்கியிருந்தவர்கள் அவர்கள் உபயோகித்தவற்றை மொட்டை மாடியில் இருந்த ஒரு அறையில் போட்டு வைத்திருந்தனர். ஆதி விநாயகம் அவர்களது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அழைத்து, அவற்றையெல்லாம் கொண்டு சென்று பள்ளியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரிடம் ஒப்படைக்க சொல்லி இருந்தார்.
இதையும் கூட தாங்கள் தான் செய்ததாக அவளது பள்ளி ஆசிரியர்கள் மீனாட்சியிடம் சொன்னார்கள். வேண்டாமென்று மறுத்தவளை வற்புறுத்தி வாங்க வைத்தார்கள். அதிலும் மீனாட்சி மறுக்க முடியாத அளவிற்கு அவர்களது செயல்கள் இருந்ததால் வாணியும் அனைத்தையும் வாங்கிக் கொண்டாள். மூன்று லெதர் பைகளும், அவளது கரடி பொம்மை, அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் சிலை, சில அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மூட்டை என அனைத்தும் காரில் ஏற்றப்பட்டது. மீனாட்சியால் எதையும் மறுத்து பேச முடியவில்லை.
காரில் வரும் போது மீனாட்சிக்கு ஒரு விஷயம்தான் உறுத்திக் கொண்டே இருந்தது. 'அனைவரிடமும் அவள் சாதாரணமாக பேசினாள், தங்களைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே, ஏன்' என்ற கேள்வி அவரை உறுத்திக் கொண்டே இருக்க வரும் வழியில் டீ குடிப்பதற்காக வண்டியை நிறுத்தினான் அகில். அப்போது அந்த கேள்வியை வாணியிடம் கேட்டு வைத்தார் மீனாட்சி.
“ஏன்டி நான் தான் உன்னை கொடுமைப் படுத்துறேன்னு எல்லாரும் சொல்றாங்களே, அதை ஏன் நீ யார்கிட்டயும் சொல்லலை. சொல்லியிருந்தா மறுபடியும் உன்னை எங்களோட அனுப்பி வச்சுருக்க மாட்டாங்கல்ல.”
“உங்களோட வராம நான் வேற எங்க மேடம் போறது. எனக்குத்தான் சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லையே. இந்த உலகத்துல தனியாளா கண்டிப்பா வாழமுடியாது. யாரையாவது சார்ந்து வாழ்ந்தா தான் பாதுகாப்பும் நிம்மதியும் கிடைக்கும். இப்ப வரைக்கும் எனக்கு பாதுகாப்பா நீங்க இருக்கீங்க, தங்க இடம் குடுத்துருக்கீங்க அது வரைக்கும் எனக்கு போதும். பாதுகாப்பா இருக்கணும்னு சொல்லித்தானே எங்க அப்பா உங்கக்கிட்ட என்னை நம்பி விட்டுட்டு போனாரு, அதனால தான் என்ன நடந்தாலும், யார் என்ன சொன்னாலும் நான் இங்கிருந்து போக மாட்டேன் மேடம்” என்று சொல்லி விட்டு அவள் அமைதியாகிவிட. மீனாட்சிக்குத் தான் ஏதோ சுருக்கென்று உள்ளுக்குள் தைத்தது. அவளுக்கு நாம் கொடுமை செய்த போதும், அநீதி இழைத்த போதும், கேவலமாக நடத்திய போதுமே, அதை எல்லாம் மறந்து என்னை தியாகி போல் நினைக்கிறாளே' என்று யோசித்தவருக்கு மனதுக்குள் ஏதோ இடறியது. அவள் சொன்ன வார்த்தை அவரை சற்று அசைத்துப் பார்த்தது. அதன் பிறகு அவர் அவளிடம் எதுவும் கேட்கவில்லை அகில் வந்து காரை எடுத்ததும் இருவரும் அமைதியாகி விட்டனர்...
மீண்டும் ஒரு மணி நேரம் சென்றிருந்த நிலையில் மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். முதலில் இறங்கிய மீனாட்சி விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட, தன் திங்ஸ் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வாணியை தடுத்து நிறுத்தினான் அகில்.
“நில்லு” என்றான் அதிகாரமாய்.
முதல் முறை அவனே அழைத்துப் பேசுகிறான் என்றதும் பதற்றத்துடன் அவன் புறம் திரும்பியவள் என்னவென்று நினைப்பது என புரியாமல்,“என்னங்க சார்” என்றே கேட்டிருந்தாள்.
“ஒஒ.. இப்ப மட்டும் சார், ஆனா அங்க மட்டும் வேற மாதிரி சொல்றது, என்ன நடிக்கிறியா. உன்னோட பிரண்ட்ஸ்கிட்ட நீ என்ன சொன்னன்னு நானும் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்” என்றதும் வாணிக்கு பயத்தில் கிடுகிடுவென்று கை, கால்கள் ஆட ஆரம்பித்தது.
பயத்துடனே, “நான்...நான் தப்பா எதுவும் சொல்லலைங்களே சார்?” என்றாள். அடுத்த கணம் அவளை அடிப்பதற்கு கையை ஓங்கியவன் தாங்கள் வெளியே நிற்பதை உணர்ந்து கையை கீழே இறக்கி ஒரு உதறு உதறிக் கொண்டவனாய் அடங்காத கோபத்தோடு, “என்ன நடிக்கிறியா, சொல்லுடி நடிக்கிறியாங்குறேன். இங்கே நல்லவ மாதிரி சார் மோருங்க வேண்டியது. அங்க உன் பிரெண்ட்ஸ் கிட்ட, எங்களை கைக்காட்டி அவங்க என்னோட அத்தை, இவர் என்னோட அத்தான் அப்படின்னு சொல்ற, என்ன உறவுமுறையைச் சொல்லி மயக்கி கைக்குள்ள போட்டுக்கலாம்னு பாக்குறியா?” என்றதும் அவள் முகம் வெளிறியது...
கையில் இருந்தவற்றை கீழே வைத்தவள் அவன் முன்பு கைகூப்பிய நிலையில் நின்றவாறு,“மன்னிச்சிடுங்க சார், இல்லை இல்லை மன்னிச்சுடுங்க முதலாளி ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டேன். அந்த இடத்துல நீங்க ரெண்டு பேரும் என்னோட முதலாளி, நான் உங்க வீட்ல வேலை செய்யிற வேலைக்காரின்னு சொன்னா நான் இங்க வேலைக்காரியா இருக்கேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடும், அப்புறம் மறுபடியும் அதை வெச்சு வேற ஏதாவது பிரச்சினை வந்தா என்ன பண்றதுன்னு தான், அப்படி சொல்லலைங்க முதலாளி இல்லேன்னா, இது மாதிரி சொந்த உறவுகள்னு சொல்லியிருக்க மாட்டேன். மன்னிச்சிடுங்க இனிமே எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சரி நான் இதையே சொல்லிடுறேன், தயவு செஞ்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்க..” என்றவள் தன் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே விழுவதைக் கூட பொருட்படுத்தாமல் இறக்கி வைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அகிலோ அவள் பேசியதைக் கேட்டு சிறிதும் மனம் இளகவில்லை. அலட்சியமாகக் தோளைக் குலுக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டான். ஆனால் அவர்கள் பேசுவதை எதேச்சையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு ஜீவனின் விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழிந்தோடியது.
‘பணம் இருந்தால் மனிதர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களோ, சொந்தங்களுக்கு கூட மதிப்புக் கொடுக்க மாட்டாங்களா, எல்லாத்தையும் பணத்தோட அடிப்படையில தான் நிர்ணயம் செய்வாங்களா’என்று நினைத்த அந்த விழிகளுக்கு சொந்தக்காரரோ, “இந்த பொண்ணுக்கு என்ன தலையெழுத்தோ, இங்க வந்து கஷ்டப்படுது” என்று புலம்பிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது. ஆனால் வாணியின் கஷ்டத்திற்கு விடிவு காலம் வரும், அதுவும் தன்னால் தான் வரும் என்பதை அந்த உருவம் நினைத்துக்கூட பார்த்திருக்காது.
அன்றைய நாள் அவ்வாறே கழிந்தது. மறுநாள் விடியலில் ஆதி விநாயகம், பூங்கோதை நாச்சியார் இருவருமே சேர்ந்து, “நாங்களே இவளை கல்லூரியில கொண்டு போயி சேர்த்துட்டு வந்துடுறோம். ஏன்னா வீணா உனக்கு அலைச்சல், இன்னைக்கும் நீ சிரமப்பட வேண்டாம்மா, இதை நாங்களே செஞ்சுடுறோம்” என்று சொன்னதும் மீனாட்சியும் தனக்கு அதிக வேலை இருப்பதால் சரியென்று சொல்லி விட்டார்..
முக்கியமான மீட்டிங் இருப்பதால் அகிலும் வரவில்லை என்று சொல்லி விட்டான். அன்று கல்லூரிக்கு தன் பைக்கில் செல்லாமல் காரை எடுத்தான் ஆதவ். முன்பக்கம் தாத்தா ஏறிக்கொள்ள பின்பக்கம் பூங்கோதை நாச்சியாரும் வாணியும் ஏறி அமர்ந்ததும் கார் கரூரை நோக்கி கிளம்பியது.
கொடுமுடியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கரூர். கரூரில் இருக்கும் கலைக்கல்லூரியில் தான் ஆதவ் படித்து கொண்டிருக்கிறான். ஏனோ மற்ற பொறியியல் படிப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எப்படியும் படித்து முடித்ததும் தந்தையோ, அண்ணனோ பார்த்துக் கொண்டிருக்கும் தொழிலைத்தான் தலையில் கட்டப் போகிறார்கள் அதற்கு எதற்கு தேவையில்லாமல் பொறியியல் பட்டப்படிப்பை தேர்ந்தெடுத்து லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிக்க வேண்டும் என்பதாலேயே மேனேஜ்மென்ட் குரூப்பை தேர்வு செய்து படித்துக் கொண்டிருக்கிறான்..
ஒருவழியாக தன் கல்லூரி இருக்கும் ஏரியாவை நெருங்கியதும் ஆதவ் தன் தாத்தாவிடம்,“தாத்தா நான் காலேஜுக்கு லீவு போட்டா தான் ரிட்டன் உங்களோட வரமுடியும், என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க..” என்றான்.
“நீ வரலன்னா வேற யாருடா காரை டிரைவ் பண்ணுவா, இந்த வயசுல என்னைக் கார் ஓட்ட சொல்றியா படவா ராஸ்கல்” என்று சொன்ன தன் தாத்தாவை திரும்பி பார்த்து முறைத்தான் ஆதவ்.
“அதுக்குதான் நான் சொன்ன காலையிலே லீவ் சொல்லிடுறேன்னு, நீங்க தான் எதுவுமே சொல்லலை. லீவ் எதுவும் சொல்லாம நான் பாட்டு காலேஜுக்கு வந்தும் கிளாஸ்கு போகலன்னா என்ன நினைப்பாங்க. அட்மிசன் போட்டு முடிச்சதும் மூணு பேரும், வேணும்னா பஸ் ஏறி வீட்டுக்கு போங்க, நான் காலேஜ் முடிச்சுட்டு கார்ல வந்துடுறேன்” என்றதும் வாணிக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
“பெரியய்யா அவரைக் காலேஜ் போக சொல்லுங்க, நாம திரும்பி கார்லையே வீட்டுக்கு போயிடலாம். நான் கார் ஓட்டுவேன், அவரோட உதவி ஒன்னும் நமக்கு தேவையில்லை. நானே கார் ஓட்டுறேன்” என்று வெடுக்கென்று சொன்னவள் தன் முகத்தை ஜன்னலோரம் திருப்பி வைத்துக் கொண்டாள்.
“என்னது, உனக்கு கார் ஓட்ட தெரியுமா. இது ஒன்னும் பொம்மைக் கார் இல்லை, நெஜக் கார்” என்று ஆதவ் கிண்டல் குரலில் சொன்னதைக் கேட்டதற்கு பிறகும் பதில் கூட சொல்லாமல் அமைதியாக இருந்தாள் வாணி.
ஆதவும், ஆதி விநாயகரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் குசுகுசுவென்று தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள்.
“பாரு உங்க பெரியம்மா பண்ணி வச்ச வேலையால யார் கிட்டையும் அந்த பொண்ணு முன்ன மாதிரி பேசவே மாட்டேங்குது” என்று சொன்ன தன் தாத்தாவை முறைத்த ஆதவ், “உங்கக்கிட்டயாவது ரெண்டு வார்த்தை பேசுறா, என்கிட்ட சுத்தமா பேசவே மாட்டேங்குறா தாத்தா. ஏன் பேசமாட்டேங்குறன்னு கேட்டா, முதலாளி, தொழிலாளி, வேலைக்காரிங்குறா. ஆனா ஒன்னு, கூடிய சீக்கிரம் வீட்ல ஏதாவது பெரிய கலவரம் நடக்கும், அன்னைக்கு எல்லாரையும் இவ வச்சு செய்யப் போகிறா வேணா பாருங்க” என்று சொன்னவனுக்கு தெரியவில்லை அந்த பிரச்சினைக்கு முழுமுதற் காரணமாக தான் தான் இருக்கப் போகிறோம் என்று..
- தேடல் தொடரும்..
https://www.sahaptham.com/community/threads/உயிரான-உறவை-தேடி-comments.615/