vani sri
Saha Writer
- Messages
- 17
- Reaction score
- 1
- Points
- 1
மலர் 6:
"ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி! ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு சொல்லுங்க?" என்று அஷ்வின் பதட்டத்துடன் கேட்க,
" சித்துவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும் பா" என்று ஜெயா மறுமுனையில் குமுறினாள்.
"ஐயோ! சித்து விற்கு என்ன? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க ஆன்ட்டி! உடனே வரேன்" என்று அஷ்வின் தவிப்புடன் சொல்லவும்,
"பிரபா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்கு" என்றாள் ஜெயா.
"நான் இப்பவே வரேன் ஆன்ட்டி" என்று ஹாஸ்பிடளுக்கு செல்லும் பாதையில் காரைத் திருப்பினான் அஷ்வின்.
"நீ டென்ஷன் ஆகாம வண்டி ஓட்டு அஷ்வின்", என்று அனு அஷ்வினை நிதானப்படுத்தி ஆறுதலாக உடன் இருக்க, கவனமாகவே காரை ஓட்டிச் சென்றான்.
சில மணி நேரத்தில் அஷ்வினும் அனுவும் மருத்துவமனையை வந்து அடைந்தனர்.
நுழைவாயிலில் இருந்த ரிசப்ஷன் கவுண்டரில்,
"சித்தார்த் அட்மிட் பண்ணிருக்க ரூம் நம்பர் கொஞ்சம் வேண்டும்" என்று அஷ்வின் தகவல் கேட்க,
" ஒன் மினிட் ப்ளீஸ்! செக் பண்ணி சொல்றேன்.." என்று ரிசப்ஷனிஸ்ட் சொல்லவும்,
இருவரும் காத்திருக்க...
"ரூம் நம்பர் 56. டேக் லெஃப்ட் சைடு லிஃப்ட்!" என ரிசப்ஷனிஸ்ட் கூறியதும்,
"ஓகே! தேங்க்ஸ்! என்று லிஃப்ட்-ஐ நோக்கி அஷ்வின் விரைந்து செல்ல, அனு அவனைப் பின் தொடர்ந்தாள்.
மூன்றாவது மாடியில் லிஃப்ட் மூலம் வர, இடப்பக்கம் இரு அறைகள் தாண்டி 56 என்ற எண் கதவில் போட்டிருப்பதை கண்டு இடப்புறம் சென்று சித்து இருக்கும் அறைக் கதவை திறக்க, தலையில் கட்டுடன் படுத்துக் கிடந்தான் சித்தார்த்.
" உள்ள வாங்க!" என்றாள் ஜெயா.
"காலையில கூட என் கிட்ட பேசினானே! அதுக்குள்ள எப்படி இப்படி!" என்று மிகவும் பதட்டத்துடன் ஜெயாவிடம் கேட்டான் அஷ்வின்.
"வீட்டிலிருந்து பைக் எடுத்துட்டு வெளியே போறதுக்காக பைக்கை ரிவர்ஸ் எடுக்கும் போது எதிர்பாராமல் ஒரு கார் வேகமாக வந்து இடிச்சதுல பைக்கிலிருந்து கீழே விழுந்துட்டான். தலையிலிருந்து இரத்தம் வடியவும் உடனே ஆம்புலன்ஸில் கொண்டு வந்து இங்க சேர்த்தோம்" என்று ஜெயா அழுதுக்கொண்டே கூறியதைக் கேட்டு அஷ்வின் மனம் வருந்தினான்.
"இவ்வளவு அஜாக்கிரதையா ஏன் வண்டி எடுக்குறான்? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம..." என்று தன் நண்பன் மீது இருந்த அக்கரை கோபமாக வெளிப்பட,
"அண்ணா!" என்று அஷ்வின் கையை இறுக்கி பிடித்து அவனை கட்டுப்படுத்தினாள் அனு.
"நான் எதுவும் தப்பா நினைக்கலை மா..." என்று ஜெயா கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.
"அழாதீங்க ஆன்ட்டி! நீங்க கொஞ்சம் ரிலாக்சா இருங்க.. வாங்க என்கூட.." என்று வெளியே ஜெயாவை கூட்டிச்சென்றாள் அனு .
"இது எதிர்பாராமல் நடந்த விஷயம் என்று தான் நானும் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இது வேணும்னு திட்டம் போட்டு நடந்த விபத்து" என்று அனுவிடம் ஜெயா தவிப்போடு கூறினாள்.
"என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே! என்று அனு குழப்பத்துடன் கேட்க,
ஹாஸ்பிடல்ல சேர்த்து கொஞ்ச நேரத்தில தனக்கு ஒருத்தர் போன் பண்ணி, "என் விஷயத்துல தலையிட்டால் இனி உன் பையன் உயிர்கூட மிஞ்சாதுனு", சொல்லிட்டு போனை வச்சுட்டதாக ஜெயா சொல்லவும்,
என்ன சொல்வது? என்று தெரியாமல் சில நிமடங்கள் தவித்து போய் மெளனமாய் நின்றாள் அனு.
"என் அண்ணனிடம் சொல்லி இதை பற்றி சித்தார்த்திடமே கேட்க சொல்லலாம் ஆன்ட்டி" என அனு யோசனை சொன்னாள்.
ஜெயாவிற்கும் அதுவே சரி என தோன்றியது.
"சரி மா! அப்படியே செய்யலாம்" என்று ஜெயா தன்னை சமாதானம் செய்துக்கொண்டாள்.
"ஒருவேளை சித்தார்த் எந்த பொண்ணையும் விரும்புகிறானா...? அதனால அந்த பொண்ணு வீட்டில இருந்து மிரட்டினாங்களா? என்ன விஷயம்னு எனக்கு சரியா புரியல... ஆனா உங்க அண்ணனுக்கு கண்டிப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கும்னு தான் அவனை வரச் சொன்னேன்" என்று ஜெயா சொல்லவும்,
"நீங்க அண்ணா கிட்ட இதை பற்றி கேட்டுப் பாருங்க. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா சொல்லுவாங்க" என்றாள் அனு.
சிறிது நேரத்தில் அஷ்வின் வெளியே வர, நடந்த விஷயத்தை எல்லாம் ஜெயா அஷ்னிடம் கூறினாள்.
"என்கிட்ட இதுவரை காதல் விஷயம் எதுவும் சொன்னதே இல்லையே ஆன்ட்டி!! என்கிட்ட சொல்லாம அதிகம் வெளியே போகவும் மாட்டான். என் கூட தான் வெளியே சுத்துவான். அப்படி இருக்கும்போது யாரையும் லவ் பண்ணி இருந்தா என்கிட்ட மறைச்சிருக்க மாட்டானே!" என்று குழப்பத்துடன் அஷ்வின் கூறினான்.
"நீங்க எதுவும் நினைத்து வருத்தப்படாமல் இருங்க ஆன்ட்டி. நான் பிறகு சித்து கிட்ட பொறுமையாக விசாரிச்சு சொல்றேன்" என்று அஷ்வின் நம்பிக்கை ஊட்டினான்.
"ஆன்ட்டி! நீங்க உள்ளே போய் சித்து கூட இருங்க. நான் அவசரத்துல அம்மா கிட்ட கூட விஷயத்தை சொல்லாமல் வந்துட்டேன். இன்னும் எங்க ரெண்டு பேரையும் காணும்னு தேடிட்டு இருப்பாங்க. நான் போன் பண்ணி சொல்லிட்டு வரேன்" என்று அஷ்வின் தன் போனை எடுத்து தள்ளி செல்ல, ஜெயாவும் அறை உள்ளே சென்றாள்.
அம்மாவிற்கு போன் பண்ணி நடந்தவற்றையெல்லாம் அஷ்வின் விளக்கமாக கூற,
" சித்துவை கூட இருந்து பார்த்துக்கோ" என்று கூறினாள் ரேகா.
"சரி அம்மா! நான் வீட்டுக்கு வர எப்படியும் லேட் ஆகிடும், அனுவை மட்டும் இப்ப கொஞ்ச நேரத்தில் அனுப்பி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தான் அஷ்வின்.
மறுபடியும் சித்துவை பார்க்க அவன் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அஷ்வின்.
"அனு! நீ கார் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பு" என்று அஷ்வின் சொல்ல,
"இல்லை அண்ணா! நானும் இங்கயே இருக்கேன்னே ஆன்ட்டிக்கு துணையாக?" என்று அஷ்விடம் அனு அனுமதி கேட்க, அஷ்வினும் சம்மதித்தான்.
கொஞ்ச நேரம் கழிய, சித்தார்த் மயக்கம் தெளிந்து கண் விழித்த பார்க்கவும், அருகில் அம்மாவும் எதிரில் அஷ்வின் மற்றும் அனு நிற்பதையும் கண்டான்.
ஜெயா கண்களில் நீர் வழிய தன் மகனின் தலையை தடவிக் கொடுத்து கையை பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தாள். அம்மாவின் மௌனத்தில் இருக்கும் கவலை சித்துவிற்கு நன்றாகவே புரிந்தது.
"நான் போய் டாக்டரை வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு ஜெயா அறையை விட்டு வெளியேறினாள்.
"எப்படி இருக்கும் உடம்பு"? என்று சித்துவின் அருகில் அமர்ந்து அஷ்வின் கேட்க,
" கொஞ்சம் தலையில் மட்டும் வழி இருக்கு மற்றபடி எல்லாம் நல்லா இருக்கேன்" என்று குரலில் சிரத்தை இல்லாமல் கூறினான் சித்து.
இருவரும் பேசிக் கொண்டிருக்க, டாக்டர் உள்ளே வந்தார்.
"நான் வெளிய வெயிட் பண்றேன்" என்று அனு வெளியே நகர்ந்தாள்.
சித்தார்த்தின் தலையிலிருந்த காயத்தை எல்லாம் செக் பண்ணிவிட்டு சில மருந்து மாத்திரைகளை வாங்கி வரும்படி ப்ரிஸ்கிருப்ஷனை அஷ்வினிடம் கொடுத்தார்.
"இன்றைக்கு இரவே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று டாக்டர் கூறினார்.
"நன்றி டாக்டர்!" என்று ஜெயா டாக்டரிடம் பணிவாக கூறிவிட்டு,
"தலையில வலி சீக்கிரம் குணமாகிடும் தானே டாக்டர்?" என்று மறுபடியும் கவலையுடன் ஜெயா கேட்க,
தாய்ப்பாசம் அவளின் மனதை உருக்குளைப்பதை உணர்ந்து,
"உங்க பையனுக்கு ஒன்னும் இல்லை. சீக்கிரம் குணமாகிடுவான் நீங்க தைரியமாக பையனுக்கு ஆறுதலாக இருங்கள்" என்று அறிவுரை கூறிவிட்டு டாக்டர் சென்றார்.
மருந்து வாங்குவதற்காக அஷ்வின் வெளியே வர, அனுவிடம் யாரோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை நோக்கி நெருங்கி சென்றுக்கொண்டிருக்க, பின்பு அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவனது காதல் தேவதை என்பதை அறிந்தான். அவளது எதிர்பாராத சந்திப்பு மிகவும் சந்தோஷத்தை அஷ்வினுக்கு அளித்தது. இருந்த போதிலும் அனுவிடம் பேசுவதைக் கண்டு அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அனு அருகில் செல்லாமல் ஒரு ஓரமாக நின்று அவர்கள் இருவரின் உரையாடலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்களில் காதல் தேவதையிடம் இருந்து விடைப்பெற்று அனு திரும்பி வரவும்,
"யார் அந்த பொண்ணு? உனக்கு எப்படி தெரியும்? என்ற ஆர்வத்துடன் படப்படவென வழி மறித்து அனுவிடம் அஷ்வின் கேள்விக் கனைகளை தொடுக்க,
அஷ்வினை உற்று உதாசீனமாக பார்த்தாள் அனு.
"அந்த பொண்ணு பற்றி ஏன் விசாரிக்க?" என்று புருவத்தை உயர்த்தி ஏளனமாக அனு கேட்கவும்,
"ப்ளீஸ் சொல்லு அனு.. என்று அவளிடம் அஷ்வின் கெஞ்சினான்.
"எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாது. நான் இங்கே நிக்கிறதைப் பார்த்து, "பார்மசி எங்க இருக்குன்னு?" கேட்க வந்தாங்க. வழி சொல்லி அனுப்பிவிட்டேன். கொஞ்ச நேரத்துல கூட்டமா இருக்குன்னு சொல்லி என்கிட்ட வந்து பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அனு.
"என்ன பேசினாள் உன்கிட்ட? அவளுடைய பெயர் ஏதாவது சொன்னாளா?" என்று அஷ்வின் ஆவலோடு கேட்க,
"அது.... ஏதோ ஒரு பெயர் சொன்னாங்களே!!!" என்று மறந்து போனது போல் முக பாவனை காட்டி அஷ்வினை அனு பரீட்சித்து பார்க்க முயல,
"தயவுசெய்து சொல்லு.. ப்ளீஸ்.. உனக்கு எல்லா விஷயத்தையும் பிறகு விவரமா சொல்றேன்" என்று அஷ்வின் கெஞ்சி கேட்கவும்,
"அந்த பொண்ணு பெயர் 'யாழினி'! இங்க அவங்களுக்கு தெரிஞ்ச யாரையோ பார்க்க வந்ததாக சொன்னாங்க. வேறு எதுவும் அவங்கள பற்றி சொல்லிக்கொள்ளவில்லை" என்று அனு சொன்னாள்.
"யாழினி யா!! அழகான பெயர்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அஷ்வின்.
மறுபடியும் அவளை பார்க்க முயற்சித்து, அவள் சென்ற வழியில் விரைவாக அஷ்வின் தன்னவளைத் தேடிச் செல்ல,
"டேய்! அண்ணா எங்க போற?" என்று அனு கத்தினாள்.
அதெல்லாம் அவன் காதுகளில் விழவில்லை. காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
"என்ன தான் இவனுக்கு ஆயிற்றோ?" என்று புலம்பிக்கொண்டு அனு நின்றாள்.
ஆனால கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடியும் தேவதையை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி வருந்தினான்.
"இன்றும் என் கண்ணில் தோன்றி, அவளை மறுபடியும் காண்பதற்குள் மாயமாய் மறைந்து விட்டாள்!" என்று அஷ்வின் தனக்குள் புலம்பினான்.
"கண்டிப்பாக அவள் இங்கேதான் எங்கேயோ இருக்கணும், அவளை சீக்கிரம் கண்டுபிடிப்பேன்" என்று மனதில் நம்பிக்கை கொண்டு, மருந்து மாத்திரைகளை வாங்க சென்றான் அஷ்வின்.
ஜன்னல் வழியாக காற்றில் மரங்கள் அசைவதையெல்லாம் பார்த்துக் கொண்டே யோசனையில் நின்ற தேன்மொழி, தன் பார்வையை ஜன்னல் ஒரம் திருப்ப, ஒரத்தில் படிந்து இருந்த இரத்தக் கறையைப் பார்த்து மூச்சுத் திணற, "என்ன நடக்குது இந்த வீட்டில? எல்லாமே மாயாஜாலம் போல இருக்குதே!" என்று நினைத்துக்கொண்டு அமுதாவை பார்க்கத் தன் அறையை நோக்கி பயத்தில் ஓடினாள்.
"இந்த வீட்டில அப்படி என்ன ரகசியம் இருக்கிறது? தயவுசெய்து சொல்லு அமுதா!" என்று தேன்மொழி பயத்தில் நடுங்கியவாரு கேட்க,
"எனக்கும் முழுசா எதுவும் தெரியாது அம்மா. ஸ்டோர் ரூமில் ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியும் அதனாலதான் உங்க கிட்ட சொன்னேன்" என்று அமுதா சொல்ல,
அவள் பேச்சில் கள்ளமில்லாததை உணர்ந்தால் தேன்மொழி. சாவி மாறியதையும் அதைத்தேடி யாழினியின் அறையில் சோதனை இட்டபொழுது அவள் பார்த்ததையும் அமுதாவிடம் தேன்மொழி சொல்ல,
"என்னம்மா சொல்றீங்க? நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க எதுக்கும் யாழினி மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க! சின்ன பொன்னு அதனால தான் சொல்றேன்" என்று அமுதா கூறிய வார்த்தைகளை கேட்டு மனம் பதைபதைக்க அவளருகில் உட்கார்ந்திருந்தால் தேன்மொழி.
"சரி நான் போய் சாவியைத் தேடி எடுக்கிறேன். கிடைக்காமல் போனால் பூட்டை உடைத்து விட வேண்டியதுதான்" என்று தேன்மொழி சொல்லிக் கொண்டே வெளியே செல்ல எழுந்திருக்க, அமுதாவின் சேலை நுனியில் ஸ்டோர் ரூம் சாவி முடிப் போட்டு மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட,
" அமுதா! என்று ஆத்திரத்தில் தேன்மொழி சீர,
ஒன்றும் புரியாமல் அமுதா விழித்துப் பார்க்க...
மலரும்....
"ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி! ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு சொல்லுங்க?" என்று அஷ்வின் பதட்டத்துடன் கேட்க,
" சித்துவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும் பா" என்று ஜெயா மறுமுனையில் குமுறினாள்.
"ஐயோ! சித்து விற்கு என்ன? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க ஆன்ட்டி! உடனே வரேன்" என்று அஷ்வின் தவிப்புடன் சொல்லவும்,
"பிரபா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்கு" என்றாள் ஜெயா.
"நான் இப்பவே வரேன் ஆன்ட்டி" என்று ஹாஸ்பிடளுக்கு செல்லும் பாதையில் காரைத் திருப்பினான் அஷ்வின்.
"நீ டென்ஷன் ஆகாம வண்டி ஓட்டு அஷ்வின்", என்று அனு அஷ்வினை நிதானப்படுத்தி ஆறுதலாக உடன் இருக்க, கவனமாகவே காரை ஓட்டிச் சென்றான்.
சில மணி நேரத்தில் அஷ்வினும் அனுவும் மருத்துவமனையை வந்து அடைந்தனர்.
நுழைவாயிலில் இருந்த ரிசப்ஷன் கவுண்டரில்,
"சித்தார்த் அட்மிட் பண்ணிருக்க ரூம் நம்பர் கொஞ்சம் வேண்டும்" என்று அஷ்வின் தகவல் கேட்க,
" ஒன் மினிட் ப்ளீஸ்! செக் பண்ணி சொல்றேன்.." என்று ரிசப்ஷனிஸ்ட் சொல்லவும்,
இருவரும் காத்திருக்க...
"ரூம் நம்பர் 56. டேக் லெஃப்ட் சைடு லிஃப்ட்!" என ரிசப்ஷனிஸ்ட் கூறியதும்,
"ஓகே! தேங்க்ஸ்! என்று லிஃப்ட்-ஐ நோக்கி அஷ்வின் விரைந்து செல்ல, அனு அவனைப் பின் தொடர்ந்தாள்.
மூன்றாவது மாடியில் லிஃப்ட் மூலம் வர, இடப்பக்கம் இரு அறைகள் தாண்டி 56 என்ற எண் கதவில் போட்டிருப்பதை கண்டு இடப்புறம் சென்று சித்து இருக்கும் அறைக் கதவை திறக்க, தலையில் கட்டுடன் படுத்துக் கிடந்தான் சித்தார்த்.
" உள்ள வாங்க!" என்றாள் ஜெயா.
"காலையில கூட என் கிட்ட பேசினானே! அதுக்குள்ள எப்படி இப்படி!" என்று மிகவும் பதட்டத்துடன் ஜெயாவிடம் கேட்டான் அஷ்வின்.
"வீட்டிலிருந்து பைக் எடுத்துட்டு வெளியே போறதுக்காக பைக்கை ரிவர்ஸ் எடுக்கும் போது எதிர்பாராமல் ஒரு கார் வேகமாக வந்து இடிச்சதுல பைக்கிலிருந்து கீழே விழுந்துட்டான். தலையிலிருந்து இரத்தம் வடியவும் உடனே ஆம்புலன்ஸில் கொண்டு வந்து இங்க சேர்த்தோம்" என்று ஜெயா அழுதுக்கொண்டே கூறியதைக் கேட்டு அஷ்வின் மனம் வருந்தினான்.
"இவ்வளவு அஜாக்கிரதையா ஏன் வண்டி எடுக்குறான்? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம..." என்று தன் நண்பன் மீது இருந்த அக்கரை கோபமாக வெளிப்பட,
"அண்ணா!" என்று அஷ்வின் கையை இறுக்கி பிடித்து அவனை கட்டுப்படுத்தினாள் அனு.
"நான் எதுவும் தப்பா நினைக்கலை மா..." என்று ஜெயா கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.
"அழாதீங்க ஆன்ட்டி! நீங்க கொஞ்சம் ரிலாக்சா இருங்க.. வாங்க என்கூட.." என்று வெளியே ஜெயாவை கூட்டிச்சென்றாள் அனு .
"இது எதிர்பாராமல் நடந்த விஷயம் என்று தான் நானும் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இது வேணும்னு திட்டம் போட்டு நடந்த விபத்து" என்று அனுவிடம் ஜெயா தவிப்போடு கூறினாள்.
"என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே! என்று அனு குழப்பத்துடன் கேட்க,
ஹாஸ்பிடல்ல சேர்த்து கொஞ்ச நேரத்தில தனக்கு ஒருத்தர் போன் பண்ணி, "என் விஷயத்துல தலையிட்டால் இனி உன் பையன் உயிர்கூட மிஞ்சாதுனு", சொல்லிட்டு போனை வச்சுட்டதாக ஜெயா சொல்லவும்,
என்ன சொல்வது? என்று தெரியாமல் சில நிமடங்கள் தவித்து போய் மெளனமாய் நின்றாள் அனு.
"என் அண்ணனிடம் சொல்லி இதை பற்றி சித்தார்த்திடமே கேட்க சொல்லலாம் ஆன்ட்டி" என அனு யோசனை சொன்னாள்.
ஜெயாவிற்கும் அதுவே சரி என தோன்றியது.
"சரி மா! அப்படியே செய்யலாம்" என்று ஜெயா தன்னை சமாதானம் செய்துக்கொண்டாள்.
"ஒருவேளை சித்தார்த் எந்த பொண்ணையும் விரும்புகிறானா...? அதனால அந்த பொண்ணு வீட்டில இருந்து மிரட்டினாங்களா? என்ன விஷயம்னு எனக்கு சரியா புரியல... ஆனா உங்க அண்ணனுக்கு கண்டிப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கும்னு தான் அவனை வரச் சொன்னேன்" என்று ஜெயா சொல்லவும்,
"நீங்க அண்ணா கிட்ட இதை பற்றி கேட்டுப் பாருங்க. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா சொல்லுவாங்க" என்றாள் அனு.
சிறிது நேரத்தில் அஷ்வின் வெளியே வர, நடந்த விஷயத்தை எல்லாம் ஜெயா அஷ்னிடம் கூறினாள்.
"என்கிட்ட இதுவரை காதல் விஷயம் எதுவும் சொன்னதே இல்லையே ஆன்ட்டி!! என்கிட்ட சொல்லாம அதிகம் வெளியே போகவும் மாட்டான். என் கூட தான் வெளியே சுத்துவான். அப்படி இருக்கும்போது யாரையும் லவ் பண்ணி இருந்தா என்கிட்ட மறைச்சிருக்க மாட்டானே!" என்று குழப்பத்துடன் அஷ்வின் கூறினான்.
"நீங்க எதுவும் நினைத்து வருத்தப்படாமல் இருங்க ஆன்ட்டி. நான் பிறகு சித்து கிட்ட பொறுமையாக விசாரிச்சு சொல்றேன்" என்று அஷ்வின் நம்பிக்கை ஊட்டினான்.
"ஆன்ட்டி! நீங்க உள்ளே போய் சித்து கூட இருங்க. நான் அவசரத்துல அம்மா கிட்ட கூட விஷயத்தை சொல்லாமல் வந்துட்டேன். இன்னும் எங்க ரெண்டு பேரையும் காணும்னு தேடிட்டு இருப்பாங்க. நான் போன் பண்ணி சொல்லிட்டு வரேன்" என்று அஷ்வின் தன் போனை எடுத்து தள்ளி செல்ல, ஜெயாவும் அறை உள்ளே சென்றாள்.
அம்மாவிற்கு போன் பண்ணி நடந்தவற்றையெல்லாம் அஷ்வின் விளக்கமாக கூற,
" சித்துவை கூட இருந்து பார்த்துக்கோ" என்று கூறினாள் ரேகா.
"சரி அம்மா! நான் வீட்டுக்கு வர எப்படியும் லேட் ஆகிடும், அனுவை மட்டும் இப்ப கொஞ்ச நேரத்தில் அனுப்பி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தான் அஷ்வின்.
மறுபடியும் சித்துவை பார்க்க அவன் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அஷ்வின்.
"அனு! நீ கார் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பு" என்று அஷ்வின் சொல்ல,
"இல்லை அண்ணா! நானும் இங்கயே இருக்கேன்னே ஆன்ட்டிக்கு துணையாக?" என்று அஷ்விடம் அனு அனுமதி கேட்க, அஷ்வினும் சம்மதித்தான்.
கொஞ்ச நேரம் கழிய, சித்தார்த் மயக்கம் தெளிந்து கண் விழித்த பார்க்கவும், அருகில் அம்மாவும் எதிரில் அஷ்வின் மற்றும் அனு நிற்பதையும் கண்டான்.
ஜெயா கண்களில் நீர் வழிய தன் மகனின் தலையை தடவிக் கொடுத்து கையை பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தாள். அம்மாவின் மௌனத்தில் இருக்கும் கவலை சித்துவிற்கு நன்றாகவே புரிந்தது.
"நான் போய் டாக்டரை வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு ஜெயா அறையை விட்டு வெளியேறினாள்.
"எப்படி இருக்கும் உடம்பு"? என்று சித்துவின் அருகில் அமர்ந்து அஷ்வின் கேட்க,
" கொஞ்சம் தலையில் மட்டும் வழி இருக்கு மற்றபடி எல்லாம் நல்லா இருக்கேன்" என்று குரலில் சிரத்தை இல்லாமல் கூறினான் சித்து.
இருவரும் பேசிக் கொண்டிருக்க, டாக்டர் உள்ளே வந்தார்.
"நான் வெளிய வெயிட் பண்றேன்" என்று அனு வெளியே நகர்ந்தாள்.
சித்தார்த்தின் தலையிலிருந்த காயத்தை எல்லாம் செக் பண்ணிவிட்டு சில மருந்து மாத்திரைகளை வாங்கி வரும்படி ப்ரிஸ்கிருப்ஷனை அஷ்வினிடம் கொடுத்தார்.
"இன்றைக்கு இரவே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று டாக்டர் கூறினார்.
"நன்றி டாக்டர்!" என்று ஜெயா டாக்டரிடம் பணிவாக கூறிவிட்டு,
"தலையில வலி சீக்கிரம் குணமாகிடும் தானே டாக்டர்?" என்று மறுபடியும் கவலையுடன் ஜெயா கேட்க,
தாய்ப்பாசம் அவளின் மனதை உருக்குளைப்பதை உணர்ந்து,
"உங்க பையனுக்கு ஒன்னும் இல்லை. சீக்கிரம் குணமாகிடுவான் நீங்க தைரியமாக பையனுக்கு ஆறுதலாக இருங்கள்" என்று அறிவுரை கூறிவிட்டு டாக்டர் சென்றார்.
மருந்து வாங்குவதற்காக அஷ்வின் வெளியே வர, அனுவிடம் யாரோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை நோக்கி நெருங்கி சென்றுக்கொண்டிருக்க, பின்பு அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவனது காதல் தேவதை என்பதை அறிந்தான். அவளது எதிர்பாராத சந்திப்பு மிகவும் சந்தோஷத்தை அஷ்வினுக்கு அளித்தது. இருந்த போதிலும் அனுவிடம் பேசுவதைக் கண்டு அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அனு அருகில் செல்லாமல் ஒரு ஓரமாக நின்று அவர்கள் இருவரின் உரையாடலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்களில் காதல் தேவதையிடம் இருந்து விடைப்பெற்று அனு திரும்பி வரவும்,
"யார் அந்த பொண்ணு? உனக்கு எப்படி தெரியும்? என்ற ஆர்வத்துடன் படப்படவென வழி மறித்து அனுவிடம் அஷ்வின் கேள்விக் கனைகளை தொடுக்க,
அஷ்வினை உற்று உதாசீனமாக பார்த்தாள் அனு.
"அந்த பொண்ணு பற்றி ஏன் விசாரிக்க?" என்று புருவத்தை உயர்த்தி ஏளனமாக அனு கேட்கவும்,
"ப்ளீஸ் சொல்லு அனு.. என்று அவளிடம் அஷ்வின் கெஞ்சினான்.
"எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாது. நான் இங்கே நிக்கிறதைப் பார்த்து, "பார்மசி எங்க இருக்குன்னு?" கேட்க வந்தாங்க. வழி சொல்லி அனுப்பிவிட்டேன். கொஞ்ச நேரத்துல கூட்டமா இருக்குன்னு சொல்லி என்கிட்ட வந்து பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அனு.
"என்ன பேசினாள் உன்கிட்ட? அவளுடைய பெயர் ஏதாவது சொன்னாளா?" என்று அஷ்வின் ஆவலோடு கேட்க,
"அது.... ஏதோ ஒரு பெயர் சொன்னாங்களே!!!" என்று மறந்து போனது போல் முக பாவனை காட்டி அஷ்வினை அனு பரீட்சித்து பார்க்க முயல,
"தயவுசெய்து சொல்லு.. ப்ளீஸ்.. உனக்கு எல்லா விஷயத்தையும் பிறகு விவரமா சொல்றேன்" என்று அஷ்வின் கெஞ்சி கேட்கவும்,
"அந்த பொண்ணு பெயர் 'யாழினி'! இங்க அவங்களுக்கு தெரிஞ்ச யாரையோ பார்க்க வந்ததாக சொன்னாங்க. வேறு எதுவும் அவங்கள பற்றி சொல்லிக்கொள்ளவில்லை" என்று அனு சொன்னாள்.
"யாழினி யா!! அழகான பெயர்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அஷ்வின்.
மறுபடியும் அவளை பார்க்க முயற்சித்து, அவள் சென்ற வழியில் விரைவாக அஷ்வின் தன்னவளைத் தேடிச் செல்ல,
"டேய்! அண்ணா எங்க போற?" என்று அனு கத்தினாள்.
அதெல்லாம் அவன் காதுகளில் விழவில்லை. காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
"என்ன தான் இவனுக்கு ஆயிற்றோ?" என்று புலம்பிக்கொண்டு அனு நின்றாள்.
ஆனால கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடியும் தேவதையை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி வருந்தினான்.
"இன்றும் என் கண்ணில் தோன்றி, அவளை மறுபடியும் காண்பதற்குள் மாயமாய் மறைந்து விட்டாள்!" என்று அஷ்வின் தனக்குள் புலம்பினான்.
"கண்டிப்பாக அவள் இங்கேதான் எங்கேயோ இருக்கணும், அவளை சீக்கிரம் கண்டுபிடிப்பேன்" என்று மனதில் நம்பிக்கை கொண்டு, மருந்து மாத்திரைகளை வாங்க சென்றான் அஷ்வின்.
ஜன்னல் வழியாக காற்றில் மரங்கள் அசைவதையெல்லாம் பார்த்துக் கொண்டே யோசனையில் நின்ற தேன்மொழி, தன் பார்வையை ஜன்னல் ஒரம் திருப்ப, ஒரத்தில் படிந்து இருந்த இரத்தக் கறையைப் பார்த்து மூச்சுத் திணற, "என்ன நடக்குது இந்த வீட்டில? எல்லாமே மாயாஜாலம் போல இருக்குதே!" என்று நினைத்துக்கொண்டு அமுதாவை பார்க்கத் தன் அறையை நோக்கி பயத்தில் ஓடினாள்.
"இந்த வீட்டில அப்படி என்ன ரகசியம் இருக்கிறது? தயவுசெய்து சொல்லு அமுதா!" என்று தேன்மொழி பயத்தில் நடுங்கியவாரு கேட்க,
"எனக்கும் முழுசா எதுவும் தெரியாது அம்மா. ஸ்டோர் ரூமில் ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியும் அதனாலதான் உங்க கிட்ட சொன்னேன்" என்று அமுதா சொல்ல,
அவள் பேச்சில் கள்ளமில்லாததை உணர்ந்தால் தேன்மொழி. சாவி மாறியதையும் அதைத்தேடி யாழினியின் அறையில் சோதனை இட்டபொழுது அவள் பார்த்ததையும் அமுதாவிடம் தேன்மொழி சொல்ல,
"என்னம்மா சொல்றீங்க? நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க எதுக்கும் யாழினி மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க! சின்ன பொன்னு அதனால தான் சொல்றேன்" என்று அமுதா கூறிய வார்த்தைகளை கேட்டு மனம் பதைபதைக்க அவளருகில் உட்கார்ந்திருந்தால் தேன்மொழி.
"சரி நான் போய் சாவியைத் தேடி எடுக்கிறேன். கிடைக்காமல் போனால் பூட்டை உடைத்து விட வேண்டியதுதான்" என்று தேன்மொழி சொல்லிக் கொண்டே வெளியே செல்ல எழுந்திருக்க, அமுதாவின் சேலை நுனியில் ஸ்டோர் ரூம் சாவி முடிப் போட்டு மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட,
" அமுதா! என்று ஆத்திரத்தில் தேன்மொழி சீர,
ஒன்றும் புரியாமல் அமுதா விழித்துப் பார்க்க...
மலரும்....