Akilan Mu
Saha Writer
- Messages
- 28
- Reaction score
- 1
- Points
- 1
கபிலனின் நிலா - நிகழ்வு: 23
முதல் இரவில் அறைக்குள் நுழைந்த கபிலன் அங்கு அவன் புது மனைவி சங்கவை கலங்கிய கண்களுடன் இருந்ததைக்கண்டு சின்ன அதிர்ச்சியில் அவளை நெருங்கினான்.
செந்நிற பட்டுப்புடவை முந்தானைப் பகுதி பாதிக்குமேல் நனைந்திருந்தது அவளின் கண்ணீரால். அருகில் மேசையில் வைத்திருந்த பாலும், பழமும் மட்டும் கலங்காமல் இருந்தன.
“என்ன சங்கவி, யாரும் எதும் சொன்னாங்கலா”?
“...”
“உனக்கு இஷ்டமில்லாம இந்த கல்யாணம் நடந்துச்சா?”
“...”.
மீண்டும் பதில் சொல்லவில்லை. ஆனால், தலையை மட்டும் வலம் இடமாக இருமுறை அசைத்தாள். கபிலனுக்கு கொஞ்சம் நிம்மதி.
சுற்றிபார்த்தான். அருகில் வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்தான்.
“சரி, பால் குடி. தூக்கம் வந்தா தூங்கு. நாளைக்குப் பேசலாம்”.
“...”
“நான் தூங்கவா?”
“...”
“சரி.. குட் நைட்”. சொல்லிவிட்டு கட்டிலின் மறுபக்கம் சென்று, தலையணையை சரிசெய்து இடதுபக்கம் சாய்ந்து படுத்தான், கபிலன்.
“உங்கட்ட கொஞ்சம் பேசனும்”
சட்டென்று வலது பக்கம் திரும்பிய கபிலன், சங்கவையைப் பார்த்தான். அவள் அதே இடத்தில் தரையைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
கபிலன் எழுந்து உட்கார்ந்தான்.
“இங்க பார். உன் மனசுல என்ன தோனுதோ அதக்கேளு. மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு, வேற பேசுறது, அழுதுட்டு உக்காந்திருக்குறதெலாம் எனக்கு சுத்தமாப் பிடிக்காது. நானும் சில விசயங்கள உண்ட சொல்லனும். அத ஃபர்ஸ்ட் நைட்லயே பேசனுமானுதான் சும்மா இருந்தேன். இப்ப நீயும் பேசனும்னு சொல்றனால, எல்லாத்தையும் பேசிறலாம். சொல்லு என்ன பேசனும்?”
கபிலன் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான். அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“உங்களுக்கு லவ் ஃபெயிலியரா” நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.
“ம்ம்.. சொல்டாங்கெலா”
“மாமாதான் சொன்னாரு”
“மாமா? எங்கப்பாவா?!”
“ம்..”
“ஹ்ம்ம்.. எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் எதையுமே தெரியாத மாதிரி இருந்தாரா?!..ம்ம்ம்..”
“சரி, என்ன சொன்னார்”
“நீங்க லவ் பண்ணதையும். அப்புறம் அந்த பொண்ணு எதோ பிற்றச்சனையில உங்கட்ட சொல்லிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டுப்போனதையும்.. நீங்க அப்செட் ஆகாம அத நல்லா ஹேண்டில் பண்ணதையும் சொன்னார். அதோட என்னைய கல்யாணம் பண்ணிக்க முழுமனசா சம்மதிச்சீங்கென்னும் சொன்னார்.”
கபிலன் மேசையிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீரைக் நன்றாகக் குடித்தான். உதட்டின் கீழ் வழிந்த நீரை, இடது புறங்கையால் துடைத்தவன்,
“ம்ம்.. அப்போ எல்லாத்தையும் டீடெயிலா அப்பாவே சொல்லிட்டாரா..”
“டீடெயிலாலாம் சொல்லல”, சங்கவை சட்டென்று பதில் சொன்னாள்.
“அப்போ உனக்கு இன்னும் அதுல என்ன தெரிஞ்சிக்கனும்னு சொல்லு, நான் சொல்றேன்”. கபிலன் பொறுமையாகக் கேட்டான்.
“தெரிஞ்சுக்க இனி ஒன்னுமில்ல”
“அப்புறம் ஏன் அழுதுட்டு உக்காந்திருந்த?”
“அது.. கல்யாண ஏற்பாடு நடந்ததிலிருந்து முடியுற வரைக்கும் நீங்க நடந்துகிட்டவிதம் கொஞ்சம் புதுசா இருந்துச்சு.”
“புதுசான்னா?”
“நீங்க நீங்கெளா இல்ல. வேற ஆளா இருந்தீங்கெ.”
“வேற ஆளாவா? என்ன உளர்ற. ஒருவேள, கல்யாண சடங்குல கொஞ்சம் வித்தியாசமா நடந்திருக்கலாம். அது ஜஸ்ட் புது விசயம்னால இருந்திருக்கும். எதும் பிடிக்காதனால இல்ல. நீ தப்பா நினைக்காத. எனக்கு முழுசாப் பிடிச்சுதான் உன்ன கல்யாணம்பண்ண சம்மதிச்சேன்.”
“ம்ம்..”. சங்கவை முகத்தில் லேசான புன்னகை. அதில் கபிலன் சொன்ன பதிலை ஆமோதிக்கவும், அவளுக்குள் இன்னுமிருக்கும் ஒரு கேள்வியைத் தானே சரிசெய்துகொள்கிறேன் என்ற எண்ணமும் ஒருசேர பிரதிபலித்தது.
“சரி தூங்கலாமா இப்போ?”
கபிலன் குறும்புப் புன்னகையுடன் கேட்க, சங்கவை புன்முறுவலுடன் தலையசைத்தாள்.
கபிலன் எழுந்து அவளருகே அமர்ந்து அணைத்தான், அறை விளக்கை.
.
மறுநாள் கபிலனை காலையிலேயே கிளம்பச் சொன்னாள், சங்கவை.
“எங்க போறோம்”
“எங்க தாய்மாமா வீட்டுக்கு”
“இன்னைக்கு அங்க சாப்பாடா?” கபிலன் உறுதிப்படுத்திக்கொண்டான்.
“ஆமா. மறுவீடு விருந்து. தாய்மாமா வீட்டுல”.
நண்பகலில் காரில் கபிலனும், சங்கவையும் கிளம்பினர். ட்ரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் கபிலனும், சங்கவியும் அமர்ந்திருந்தனர்.
“உங்க மாமா எப்டி நல்ல பேசுவாறா”
“அவருக்கு அதான தொழிலே.. அப்புறம் நல்ல பேசாம எப்டியிருப்பாரு”.
“ஓ அட்வகேட்டா?”
“இல்ல.. சைக்கியாட்ரிஸ்ட்”
“எங்க மாமா, இந்த ஊர்லேயே லீடிங் சைக்கியாட்ரிஸ்ட் தெரியுமா!. ரொம்ப காம்ப்ளிகேட்டட் கேஸ்லாம் கண்டுபிடிச்சு சரி பண்ணிருக்காரு.”
பெருமையாகச் சொன்னாள், சங்கவை.
“ரொம்ப சந்தோஷம்மா.. அதுக்காக எண்ட மொக்கைய போட மாட்டார்னு நெனைக்கிறேன்.” கபிலன் கிண்டலாகச் சிரித்தான்.
“அவருக்கு வேற வேல இல்லனு நெனைச்சீங்கெளா. புதுசா கல்யாணம் ஆயிட்டு விருந்துக்குப் போறனால இன்னைக்கு இருக்காரு. இல்லேனா அவர பாக்குறதே கஷ்டம்.”
“ஓ.. நல்லது.. அப்டியே இருக்கட்டும்.”. மீண்டும் சிரித்தான்.
“யேய்…” சங்கவை ஆள்காட்டி வரலைக் காட்டி சிரித்தபடி மிரட்டினாள்.
“என்ன யேயா…”
“ஆமா உன்னைய வேறெப்படி சொல்வாங்கெ”
“உன்னையவா..?!. என்னடி ரெண்டாவது நாளே மரியாத பறக்குது.
“பெரிய இவரு.. இவர சார்.. சார்னு கூப்டுவாங்கெ”. சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள், சங்கவை.
“அடியே.. உன்னைய ஒரு கண்ணு வச்சுக்கனும்டீ..”
“யேன்ன்.. ரெண்டுகண்ணும் வச்சுக்கோ”
பதிலுக்குப்பதில் பேசிய சங்கவையை ரசித்தான், கபிலன். சங்கவைக்கும் ஒரு நிம்மதி மனதில். மிகவும் அந்நியோன்யமாக உணர்ந்தாள், மனதில். ஆனால் கல்யாண நாளில் கபிலன் நடவடிக்கை தொடர்பாக, தன்னுள் எழுந்த, ஒதுக்கி வைத்திருந்த கேள்வியை அப்படியேதான் வைத்திருந்தாள்.
சங்கவையின் மாமா வீடு வந்து சேர்த்தார், ட்ரைவர்.
.
“வாங்க மாப்ள. வாம்மா”
“வாங்க தம்பி. வாம்மா. உள்ள வாங்க”
மாமாவும், அத்தையும் அந்த விசாலமான வீட்டு முற்றத்தில் வரவேற்றனர்.
“மாப்ளைக்கு வீட சுத்தி காட்டுங்க. நீ வாம்மா லஞ்ச் எடுத்து வைக்கலாம் ரெடியா”
உள்ளே சென்ற சங்கவையை அத்தை கிச்சன் பக்கம் அழைத்துச் சென்றார். தன் கணவனிடம் மாப்பிள்ளை கபிலனை என்கேஜ் பண்ண சொன்னார்.
“சரி வாங்க மாப்ளை. அவுங்களுக்கு சமையல் பரிமாற டைம் வேணும். அதுக்கு நம்மட்ட இப்டி ஒரு பிட்ட போடுறா.” சிரித்துகொண்டே சொன்ன தாய்மாமா, கபிலனை வீட்டின் மறுபக்கம் கூட்டிச்சென்றார்.
மாமவுடன் சென்ற கபிலன் ஓரமாய்த்திரும்பி சஙகவையைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி, உள்ளங்கையை விரித்து, “இப்டி மாட்டி விட்டுட்டியே” என சைகை செய்தான்.
அத்தையுடன் சென்ற சங்கவை “க்ளுக்” என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
மாமா தன் அலுவல் அறைக்குள் கபிலனைக்கூட்டிச்சென்றார்.
அந்தச் சூழல் ஏகாந்தமாய் இருந்தது. அந்த அறைச் சுவரின் நீல பச்சை வண்ணமும், சுவரில் மாட்டப்பட்டிருந்த வெள்ளைக்குதிரை, முழு உருவ புத்தர், பச்சையும், மஞ்சளும் கலந்த நெடுமரங்களுக்கிடையே கீரல்களாய் சூரியக்கதிரும் என பல படங்களும், நிறங்களும், அங்கே ஒளிர்ந்துகொண்டிருந்த மங்கிய விளக்கொளியும் கபிலனை ஸ்தம்பிக்கச்செய்தன.
“சூப்பரா இருக்கு சித்தப்பா. இங்கதான் உங்க கவுன்சிலிங்லாம் பண்ணுவீங்கெலா”
“இல்ல மாப்ளை. நான் ஸ்டிர்க்டா, வீட்டுல பேஷண்ட்ஸ் பாக்குறதில்ல. மத்த ஷெல்ஃப் ஸ்டடீஸ்க்கு இந்த ரூம் யூஸ் பண்ணுவேன். அதுனால இந்த மூட்ல எனக்கு பிடிச்ச மாதிரி செட் பண்ணேன். இதெல்லாம் உங்களுக்கு போர் அடிக்கிற விசயம். வாங்க சாப்ட போலாம்.”
“சரிங்க சித்தப்பா”
கபிலன் பெருமூச்சுவிட்டான். “அப்பாடா என்னய வச்சு செஞ்சிருவாருன்னு நெனச்சேன். தப்பிச்சேண்டா சாமி…”, மனதுக்குள் மகிழ்ந்தான்.
.
விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. புதுமணத்தம்பதிகள் ஆவலாய், சுவைத்து உண்டனர்.
சிறிது நேரம் பேசிக்கழித்தார்கள். கபிலன் உண்ட மயக்கத்தில் தூங்கவேண்டுமென்றான். மாமா அழைத்துச்சென்றார். சங்கவை அத்தையுடன் அளவளாவிக்கொண்டிருந்தாள்.
.
மாலையில் கபிலனும், சங்கவையும் விடைபெற்றுக் கிளம்பினர். கார் கிளம்பியது.
“நேரம் போனதே தெரியலேல, சங்கவி!”.
“சாப்டு நல்லா குப்புற அடிச்சு தூங்கிட்டு, ஏன் சொல்லமாட்ட”. சங்கவி அவனை கெலி செய்ய இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
“சங்கவி எனக்கொரு ஆசை. செய்வியா?”
“என்ன சொல்லு. கண்டிப்பா உனக்கு பிடிச்சத செய்றேன்”
கபிலன் ஒரு வினாடி காரின் ஜன்னல் வழியே, வெளியே வெகுதொலைவில் பார்க்கிறான்.
அவனுக்கு நிலாவின் ஒருவம் நிழலாடுகிறது. உள்ளே சட்டென திரும்பியவன், நிலாவின் நினைவாக அவள் விருப்பத்தை, அவன் விரும்புவதாகச் சொல்கிறான்,.
“ஒரு குழந்தையை தத்தெடுத்து, முதல் குழந்தையாக வளர்க்கனும்னு ஆசை. உனக்கு ஓகே வா?”
“ரொம்ப பெரிய விசயம்தான். எப்டி செய்ய முடியும்னு தெரியல. ஆனா, உனக்கு பிடிச்சனால செய்றேன்”
சங்கவை சொல்ல, கபிலன் மனநிறைவில், மீண்டும் காரின் வெளியே தூரமாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான்.
சங்கவை தன்னுள் நமட்டுச்சிரிப்புச் சிரித்தாள்.
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-23
முதல் இரவில் அறைக்குள் நுழைந்த கபிலன் அங்கு அவன் புது மனைவி சங்கவை கலங்கிய கண்களுடன் இருந்ததைக்கண்டு சின்ன அதிர்ச்சியில் அவளை நெருங்கினான்.
செந்நிற பட்டுப்புடவை முந்தானைப் பகுதி பாதிக்குமேல் நனைந்திருந்தது அவளின் கண்ணீரால். அருகில் மேசையில் வைத்திருந்த பாலும், பழமும் மட்டும் கலங்காமல் இருந்தன.
“என்ன சங்கவி, யாரும் எதும் சொன்னாங்கலா”?
“...”
“உனக்கு இஷ்டமில்லாம இந்த கல்யாணம் நடந்துச்சா?”
“...”.
மீண்டும் பதில் சொல்லவில்லை. ஆனால், தலையை மட்டும் வலம் இடமாக இருமுறை அசைத்தாள். கபிலனுக்கு கொஞ்சம் நிம்மதி.
சுற்றிபார்த்தான். அருகில் வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்தான்.
“சரி, பால் குடி. தூக்கம் வந்தா தூங்கு. நாளைக்குப் பேசலாம்”.
“...”
“நான் தூங்கவா?”
“...”
“சரி.. குட் நைட்”. சொல்லிவிட்டு கட்டிலின் மறுபக்கம் சென்று, தலையணையை சரிசெய்து இடதுபக்கம் சாய்ந்து படுத்தான், கபிலன்.
“உங்கட்ட கொஞ்சம் பேசனும்”
சட்டென்று வலது பக்கம் திரும்பிய கபிலன், சங்கவையைப் பார்த்தான். அவள் அதே இடத்தில் தரையைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.
கபிலன் எழுந்து உட்கார்ந்தான்.
“இங்க பார். உன் மனசுல என்ன தோனுதோ அதக்கேளு. மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு, வேற பேசுறது, அழுதுட்டு உக்காந்திருக்குறதெலாம் எனக்கு சுத்தமாப் பிடிக்காது. நானும் சில விசயங்கள உண்ட சொல்லனும். அத ஃபர்ஸ்ட் நைட்லயே பேசனுமானுதான் சும்மா இருந்தேன். இப்ப நீயும் பேசனும்னு சொல்றனால, எல்லாத்தையும் பேசிறலாம். சொல்லு என்ன பேசனும்?”
கபிலன் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான். அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“உங்களுக்கு லவ் ஃபெயிலியரா” நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.
“ம்ம்.. சொல்டாங்கெலா”
“மாமாதான் சொன்னாரு”
“மாமா? எங்கப்பாவா?!”
“ம்..”
“ஹ்ம்ம்.. எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் எதையுமே தெரியாத மாதிரி இருந்தாரா?!..ம்ம்ம்..”
“சரி, என்ன சொன்னார்”
“நீங்க லவ் பண்ணதையும். அப்புறம் அந்த பொண்ணு எதோ பிற்றச்சனையில உங்கட்ட சொல்லிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டுப்போனதையும்.. நீங்க அப்செட் ஆகாம அத நல்லா ஹேண்டில் பண்ணதையும் சொன்னார். அதோட என்னைய கல்யாணம் பண்ணிக்க முழுமனசா சம்மதிச்சீங்கென்னும் சொன்னார்.”
கபிலன் மேசையிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீரைக் நன்றாகக் குடித்தான். உதட்டின் கீழ் வழிந்த நீரை, இடது புறங்கையால் துடைத்தவன்,
“ம்ம்.. அப்போ எல்லாத்தையும் டீடெயிலா அப்பாவே சொல்லிட்டாரா..”
“டீடெயிலாலாம் சொல்லல”, சங்கவை சட்டென்று பதில் சொன்னாள்.
“அப்போ உனக்கு இன்னும் அதுல என்ன தெரிஞ்சிக்கனும்னு சொல்லு, நான் சொல்றேன்”. கபிலன் பொறுமையாகக் கேட்டான்.
“தெரிஞ்சுக்க இனி ஒன்னுமில்ல”
“அப்புறம் ஏன் அழுதுட்டு உக்காந்திருந்த?”
“அது.. கல்யாண ஏற்பாடு நடந்ததிலிருந்து முடியுற வரைக்கும் நீங்க நடந்துகிட்டவிதம் கொஞ்சம் புதுசா இருந்துச்சு.”
“புதுசான்னா?”
“நீங்க நீங்கெளா இல்ல. வேற ஆளா இருந்தீங்கெ.”
“வேற ஆளாவா? என்ன உளர்ற. ஒருவேள, கல்யாண சடங்குல கொஞ்சம் வித்தியாசமா நடந்திருக்கலாம். அது ஜஸ்ட் புது விசயம்னால இருந்திருக்கும். எதும் பிடிக்காதனால இல்ல. நீ தப்பா நினைக்காத. எனக்கு முழுசாப் பிடிச்சுதான் உன்ன கல்யாணம்பண்ண சம்மதிச்சேன்.”
“ம்ம்..”. சங்கவை முகத்தில் லேசான புன்னகை. அதில் கபிலன் சொன்ன பதிலை ஆமோதிக்கவும், அவளுக்குள் இன்னுமிருக்கும் ஒரு கேள்வியைத் தானே சரிசெய்துகொள்கிறேன் என்ற எண்ணமும் ஒருசேர பிரதிபலித்தது.
“சரி தூங்கலாமா இப்போ?”
கபிலன் குறும்புப் புன்னகையுடன் கேட்க, சங்கவை புன்முறுவலுடன் தலையசைத்தாள்.
கபிலன் எழுந்து அவளருகே அமர்ந்து அணைத்தான், அறை விளக்கை.
.
மறுநாள் கபிலனை காலையிலேயே கிளம்பச் சொன்னாள், சங்கவை.
“எங்க போறோம்”
“எங்க தாய்மாமா வீட்டுக்கு”
“இன்னைக்கு அங்க சாப்பாடா?” கபிலன் உறுதிப்படுத்திக்கொண்டான்.
“ஆமா. மறுவீடு விருந்து. தாய்மாமா வீட்டுல”.
நண்பகலில் காரில் கபிலனும், சங்கவையும் கிளம்பினர். ட்ரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் கபிலனும், சங்கவியும் அமர்ந்திருந்தனர்.
“உங்க மாமா எப்டி நல்ல பேசுவாறா”
“அவருக்கு அதான தொழிலே.. அப்புறம் நல்ல பேசாம எப்டியிருப்பாரு”.
“ஓ அட்வகேட்டா?”
“இல்ல.. சைக்கியாட்ரிஸ்ட்”
“எங்க மாமா, இந்த ஊர்லேயே லீடிங் சைக்கியாட்ரிஸ்ட் தெரியுமா!. ரொம்ப காம்ப்ளிகேட்டட் கேஸ்லாம் கண்டுபிடிச்சு சரி பண்ணிருக்காரு.”
பெருமையாகச் சொன்னாள், சங்கவை.
“ரொம்ப சந்தோஷம்மா.. அதுக்காக எண்ட மொக்கைய போட மாட்டார்னு நெனைக்கிறேன்.” கபிலன் கிண்டலாகச் சிரித்தான்.
“அவருக்கு வேற வேல இல்லனு நெனைச்சீங்கெளா. புதுசா கல்யாணம் ஆயிட்டு விருந்துக்குப் போறனால இன்னைக்கு இருக்காரு. இல்லேனா அவர பாக்குறதே கஷ்டம்.”
“ஓ.. நல்லது.. அப்டியே இருக்கட்டும்.”. மீண்டும் சிரித்தான்.
“யேய்…” சங்கவை ஆள்காட்டி வரலைக் காட்டி சிரித்தபடி மிரட்டினாள்.
“என்ன யேயா…”
“ஆமா உன்னைய வேறெப்படி சொல்வாங்கெ”
“உன்னையவா..?!. என்னடி ரெண்டாவது நாளே மரியாத பறக்குது.
“பெரிய இவரு.. இவர சார்.. சார்னு கூப்டுவாங்கெ”. சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள், சங்கவை.
“அடியே.. உன்னைய ஒரு கண்ணு வச்சுக்கனும்டீ..”
“யேன்ன்.. ரெண்டுகண்ணும் வச்சுக்கோ”
பதிலுக்குப்பதில் பேசிய சங்கவையை ரசித்தான், கபிலன். சங்கவைக்கும் ஒரு நிம்மதி மனதில். மிகவும் அந்நியோன்யமாக உணர்ந்தாள், மனதில். ஆனால் கல்யாண நாளில் கபிலன் நடவடிக்கை தொடர்பாக, தன்னுள் எழுந்த, ஒதுக்கி வைத்திருந்த கேள்வியை அப்படியேதான் வைத்திருந்தாள்.
சங்கவையின் மாமா வீடு வந்து சேர்த்தார், ட்ரைவர்.
.
“வாங்க மாப்ள. வாம்மா”
“வாங்க தம்பி. வாம்மா. உள்ள வாங்க”
மாமாவும், அத்தையும் அந்த விசாலமான வீட்டு முற்றத்தில் வரவேற்றனர்.
“மாப்ளைக்கு வீட சுத்தி காட்டுங்க. நீ வாம்மா லஞ்ச் எடுத்து வைக்கலாம் ரெடியா”
உள்ளே சென்ற சங்கவையை அத்தை கிச்சன் பக்கம் அழைத்துச் சென்றார். தன் கணவனிடம் மாப்பிள்ளை கபிலனை என்கேஜ் பண்ண சொன்னார்.
“சரி வாங்க மாப்ளை. அவுங்களுக்கு சமையல் பரிமாற டைம் வேணும். அதுக்கு நம்மட்ட இப்டி ஒரு பிட்ட போடுறா.” சிரித்துகொண்டே சொன்ன தாய்மாமா, கபிலனை வீட்டின் மறுபக்கம் கூட்டிச்சென்றார்.
மாமவுடன் சென்ற கபிலன் ஓரமாய்த்திரும்பி சஙகவையைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி, உள்ளங்கையை விரித்து, “இப்டி மாட்டி விட்டுட்டியே” என சைகை செய்தான்.
அத்தையுடன் சென்ற சங்கவை “க்ளுக்” என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
மாமா தன் அலுவல் அறைக்குள் கபிலனைக்கூட்டிச்சென்றார்.
அந்தச் சூழல் ஏகாந்தமாய் இருந்தது. அந்த அறைச் சுவரின் நீல பச்சை வண்ணமும், சுவரில் மாட்டப்பட்டிருந்த வெள்ளைக்குதிரை, முழு உருவ புத்தர், பச்சையும், மஞ்சளும் கலந்த நெடுமரங்களுக்கிடையே கீரல்களாய் சூரியக்கதிரும் என பல படங்களும், நிறங்களும், அங்கே ஒளிர்ந்துகொண்டிருந்த மங்கிய விளக்கொளியும் கபிலனை ஸ்தம்பிக்கச்செய்தன.
“சூப்பரா இருக்கு சித்தப்பா. இங்கதான் உங்க கவுன்சிலிங்லாம் பண்ணுவீங்கெலா”
“இல்ல மாப்ளை. நான் ஸ்டிர்க்டா, வீட்டுல பேஷண்ட்ஸ் பாக்குறதில்ல. மத்த ஷெல்ஃப் ஸ்டடீஸ்க்கு இந்த ரூம் யூஸ் பண்ணுவேன். அதுனால இந்த மூட்ல எனக்கு பிடிச்ச மாதிரி செட் பண்ணேன். இதெல்லாம் உங்களுக்கு போர் அடிக்கிற விசயம். வாங்க சாப்ட போலாம்.”
“சரிங்க சித்தப்பா”
கபிலன் பெருமூச்சுவிட்டான். “அப்பாடா என்னய வச்சு செஞ்சிருவாருன்னு நெனச்சேன். தப்பிச்சேண்டா சாமி…”, மனதுக்குள் மகிழ்ந்தான்.
.
விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. புதுமணத்தம்பதிகள் ஆவலாய், சுவைத்து உண்டனர்.
சிறிது நேரம் பேசிக்கழித்தார்கள். கபிலன் உண்ட மயக்கத்தில் தூங்கவேண்டுமென்றான். மாமா அழைத்துச்சென்றார். சங்கவை அத்தையுடன் அளவளாவிக்கொண்டிருந்தாள்.
.
மாலையில் கபிலனும், சங்கவையும் விடைபெற்றுக் கிளம்பினர். கார் கிளம்பியது.
“நேரம் போனதே தெரியலேல, சங்கவி!”.
“சாப்டு நல்லா குப்புற அடிச்சு தூங்கிட்டு, ஏன் சொல்லமாட்ட”. சங்கவி அவனை கெலி செய்ய இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
“சங்கவி எனக்கொரு ஆசை. செய்வியா?”
“என்ன சொல்லு. கண்டிப்பா உனக்கு பிடிச்சத செய்றேன்”
கபிலன் ஒரு வினாடி காரின் ஜன்னல் வழியே, வெளியே வெகுதொலைவில் பார்க்கிறான்.
அவனுக்கு நிலாவின் ஒருவம் நிழலாடுகிறது. உள்ளே சட்டென திரும்பியவன், நிலாவின் நினைவாக அவள் விருப்பத்தை, அவன் விரும்புவதாகச் சொல்கிறான்,.
“ஒரு குழந்தையை தத்தெடுத்து, முதல் குழந்தையாக வளர்க்கனும்னு ஆசை. உனக்கு ஓகே வா?”
“ரொம்ப பெரிய விசயம்தான். எப்டி செய்ய முடியும்னு தெரியல. ஆனா, உனக்கு பிடிச்சனால செய்றேன்”
சங்கவை சொல்ல, கபிலன் மனநிறைவில், மீண்டும் காரின் வெளியே தூரமாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான்.
சங்கவை தன்னுள் நமட்டுச்சிரிப்புச் சிரித்தாள்.
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-23