Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கபிலனின் நிலா - அகிலன் மு

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 23



முதல் இரவில் அறைக்குள் நுழைந்த கபிலன் அங்கு அவன் புது மனைவி சங்கவை கலங்கிய கண்களுடன் இருந்ததைக்கண்டு சின்ன அதிர்ச்சியில் அவளை நெருங்கினான்.



செந்நிற பட்டுப்புடவை முந்தானைப் பகுதி பாதிக்குமேல் நனைந்திருந்தது அவளின் கண்ணீரால். அருகில் மேசையில் வைத்திருந்த பாலும், பழமும் மட்டும் கலங்காமல் இருந்தன.



“என்ன சங்கவி, யாரும் எதும் சொன்னாங்கலா”?



“...”



“உனக்கு இஷ்டமில்லாம இந்த கல்யாணம் நடந்துச்சா?”



“...”.



மீண்டும் பதில் சொல்லவில்லை. ஆனால், தலையை மட்டும் வலம் இடமாக இருமுறை அசைத்தாள். கபிலனுக்கு கொஞ்சம் நிம்மதி.



சுற்றிபார்த்தான். அருகில் வைக்கப்பட்டிருந்த பாலை எடுத்தான்.



“சரி, பால் குடி. தூக்கம் வந்தா தூங்கு. நாளைக்குப் பேசலாம்”.



“...”



“நான் தூங்கவா?”



“...”



“சரி.. குட் நைட்”. சொல்லிவிட்டு கட்டிலின் மறுபக்கம் சென்று, தலையணையை சரிசெய்து இடதுபக்கம் சாய்ந்து படுத்தான், கபிலன்.



“உங்கட்ட கொஞ்சம் பேசனும்”



சட்டென்று வலது பக்கம் திரும்பிய கபிலன், சங்கவையைப் பார்த்தான். அவள் அதே இடத்தில் தரையைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள்.



கபிலன் எழுந்து உட்கார்ந்தான்.



“இங்க பார். உன் மனசுல என்ன தோனுதோ அதக்கேளு. மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு, வேற பேசுறது, அழுதுட்டு உக்காந்திருக்குறதெலாம் எனக்கு சுத்தமாப் பிடிக்காது. நானும் சில விசயங்கள உண்ட சொல்லனும். அத ஃபர்ஸ்ட் நைட்லயே பேசனுமானுதான் சும்மா இருந்தேன். இப்ப நீயும் பேசனும்னு சொல்றனால, எல்லாத்தையும் பேசிறலாம். சொல்லு என்ன பேசனும்?”



கபிலன் கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னான். அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.



“உங்களுக்கு லவ் ஃபெயிலியரா” நேரடியாக விசயத்துக்கு வந்தாள்.



“ம்ம்.. சொல்டாங்கெலா”



“மாமாதான் சொன்னாரு”



“மாமா? எங்கப்பாவா?!”



“ம்..”



“ஹ்ம்ம்.. எல்லாம் தெரிஞ்சிக்கிட்டுதான் எதையுமே தெரியாத மாதிரி இருந்தாரா?!..ம்ம்ம்..”



“சரி, என்ன சொன்னார்”



“நீங்க லவ் பண்ணதையும். அப்புறம் அந்த பொண்ணு எதோ பிற்றச்சனையில உங்கட்ட சொல்லிட்டு வேற கல்யாணம் பண்ணிட்டுப்போனதையும்.. நீங்க அப்செட் ஆகாம அத நல்லா ஹேண்டில் பண்ணதையும் சொன்னார். அதோட என்னைய கல்யாணம் பண்ணிக்க முழுமனசா சம்மதிச்சீங்கென்னும் சொன்னார்.”



கபிலன் மேசையிலிருந்த சொம்பிலிருந்து தண்ணீரைக் நன்றாகக் குடித்தான். உதட்டின் கீழ் வழிந்த நீரை, இடது புறங்கையால் துடைத்தவன்,



“ம்ம்.. அப்போ எல்லாத்தையும் டீடெயிலா அப்பாவே சொல்லிட்டாரா..”



“டீடெயிலாலாம் சொல்லல”, சங்கவை சட்டென்று பதில் சொன்னாள்.



“அப்போ உனக்கு இன்னும் அதுல என்ன தெரிஞ்சிக்கனும்னு சொல்லு, நான் சொல்றேன்”. கபிலன் பொறுமையாகக் கேட்டான்.



“தெரிஞ்சுக்க இனி ஒன்னுமில்ல”



“அப்புறம் ஏன் அழுதுட்டு உக்காந்திருந்த?”



“அது.. கல்யாண ஏற்பாடு நடந்ததிலிருந்து முடியுற வரைக்கும் நீங்க நடந்துகிட்டவிதம் கொஞ்சம் புதுசா இருந்துச்சு.”



“புதுசான்னா?”



“நீங்க நீங்கெளா இல்ல. வேற ஆளா இருந்தீங்கெ.”



“வேற ஆளாவா? என்ன உளர்ற. ஒருவேள, கல்யாண சடங்குல கொஞ்சம் வித்தியாசமா நடந்திருக்கலாம். அது ஜஸ்ட் புது விசயம்னால இருந்திருக்கும். எதும் பிடிக்காதனால இல்ல. நீ தப்பா நினைக்காத. எனக்கு முழுசாப் பிடிச்சுதான் உன்ன கல்யாணம்பண்ண சம்மதிச்சேன்.”



“ம்ம்..”. சங்கவை முகத்தில் லேசான புன்னகை. அதில் கபிலன் சொன்ன பதிலை ஆமோதிக்கவும், அவளுக்குள் இன்னுமிருக்கும் ஒரு கேள்வியைத் தானே சரிசெய்துகொள்கிறேன் என்ற எண்ணமும் ஒருசேர பிரதிபலித்தது.



“சரி தூங்கலாமா இப்போ?”



கபிலன் குறும்புப் புன்னகையுடன் கேட்க, சங்கவை புன்முறுவலுடன் தலையசைத்தாள்.

கபிலன் எழுந்து அவளருகே அமர்ந்து அணைத்தான், அறை விளக்கை.

.



மறுநாள் கபிலனை காலையிலேயே கிளம்பச் சொன்னாள், சங்கவை.



“எங்க போறோம்”



“எங்க தாய்மாமா வீட்டுக்கு”



“இன்னைக்கு அங்க சாப்பாடா?” கபிலன் உறுதிப்படுத்திக்கொண்டான்.



“ஆமா. மறுவீடு விருந்து. தாய்மாமா வீட்டுல”.



நண்பகலில் காரில் கபிலனும், சங்கவையும் கிளம்பினர். ட்ரைவர் காரை ஓட்ட, பின் சீட்டில் கபிலனும், சங்கவியும் அமர்ந்திருந்தனர்.



“உங்க மாமா எப்டி நல்ல பேசுவாறா”



“அவருக்கு அதான தொழிலே.. அப்புறம் நல்ல பேசாம எப்டியிருப்பாரு”.



“ஓ அட்வகேட்டா?”



“இல்ல.. சைக்கியாட்ரிஸ்ட்”



“எங்க மாமா, இந்த ஊர்லேயே லீடிங் சைக்கியாட்ரிஸ்ட் தெரியுமா!. ரொம்ப காம்ப்ளிகேட்டட் கேஸ்லாம் கண்டுபிடிச்சு சரி பண்ணிருக்காரு.”



பெருமையாகச் சொன்னாள், சங்கவை.



“ரொம்ப சந்தோஷம்மா.. அதுக்காக எண்ட மொக்கைய போட மாட்டார்னு நெனைக்கிறேன்.” கபிலன் கிண்டலாகச் சிரித்தான்.



“அவருக்கு வேற வேல இல்லனு நெனைச்சீங்கெளா. புதுசா கல்யாணம் ஆயிட்டு விருந்துக்குப் போறனால இன்னைக்கு இருக்காரு. இல்லேனா அவர பாக்குறதே கஷ்டம்.”



“ஓ.. நல்லது.. அப்டியே இருக்கட்டும்.”. மீண்டும் சிரித்தான்.



“யேய்…” சங்கவை ஆள்காட்டி வரலைக் காட்டி சிரித்தபடி மிரட்டினாள்.



“என்ன யேயா…”



“ஆமா உன்னைய வேறெப்படி சொல்வாங்கெ”



“உன்னையவா..?!. என்னடி ரெண்டாவது நாளே மரியாத பறக்குது.



“பெரிய இவரு.. இவர சார்.. சார்னு கூப்டுவாங்கெ”. சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள், சங்கவை.



“அடியே.. உன்னைய ஒரு கண்ணு வச்சுக்கனும்டீ..”



“யேன்ன்.. ரெண்டுகண்ணும் வச்சுக்கோ”



பதிலுக்குப்பதில் பேசிய சங்கவையை ரசித்தான், கபிலன். சங்கவைக்கும் ஒரு நிம்மதி மனதில். மிகவும் அந்நியோன்யமாக உணர்ந்தாள், மனதில். ஆனால் கல்யாண நாளில் கபிலன் நடவடிக்கை தொடர்பாக, தன்னுள் எழுந்த, ஒதுக்கி வைத்திருந்த கேள்வியை அப்படியேதான் வைத்திருந்தாள்.



சங்கவையின் மாமா வீடு வந்து சேர்த்தார், ட்ரைவர்.

.

“வாங்க மாப்ள. வாம்மா”



“வாங்க தம்பி. வாம்மா. உள்ள வாங்க”



மாமாவும், அத்தையும் அந்த விசாலமான வீட்டு முற்றத்தில் வரவேற்றனர்.



“மாப்ளைக்கு வீட சுத்தி காட்டுங்க. நீ வாம்மா லஞ்ச் எடுத்து வைக்கலாம் ரெடியா”

உள்ளே சென்ற சங்கவையை அத்தை கிச்சன் பக்கம் அழைத்துச் சென்றார். தன் கணவனிடம் மாப்பிள்ளை கபிலனை என்கேஜ் பண்ண சொன்னார்.



“சரி வாங்க மாப்ளை. அவுங்களுக்கு சமையல் பரிமாற டைம் வேணும். அதுக்கு நம்மட்ட இப்டி ஒரு பிட்ட போடுறா.” சிரித்துகொண்டே சொன்ன தாய்மாமா, கபிலனை வீட்டின் மறுபக்கம் கூட்டிச்சென்றார்.



மாமவுடன் சென்ற கபிலன் ஓரமாய்த்திரும்பி சஙகவையைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி, உள்ளங்கையை விரித்து, “இப்டி மாட்டி விட்டுட்டியே” என சைகை செய்தான்.



அத்தையுடன் சென்ற சங்கவை “க்ளுக்” என்று அவனைப் பார்த்துச் சிரித்தாள்.



மாமா தன் அலுவல் அறைக்குள் கபிலனைக்கூட்டிச்சென்றார்.



அந்தச் சூழல் ஏகாந்தமாய் இருந்தது. அந்த அறைச் சுவரின் நீல பச்சை வண்ணமும், சுவரில் மாட்டப்பட்டிருந்த வெள்ளைக்குதிரை, முழு உருவ புத்தர், பச்சையும், மஞ்சளும் கலந்த நெடுமரங்களுக்கிடையே கீரல்களாய் சூரியக்கதிரும் என பல படங்களும், நிறங்களும், அங்கே ஒளிர்ந்துகொண்டிருந்த மங்கிய விளக்கொளியும் கபிலனை ஸ்தம்பிக்கச்செய்தன.



“சூப்பரா இருக்கு சித்தப்பா. இங்கதான் உங்க கவுன்சிலிங்லாம் பண்ணுவீங்கெலா”



“இல்ல மாப்ளை. நான் ஸ்டிர்க்டா, வீட்டுல பேஷண்ட்ஸ் பாக்குறதில்ல. மத்த ஷெல்ஃப் ஸ்டடீஸ்க்கு இந்த ரூம் யூஸ் பண்ணுவேன். அதுனால இந்த மூட்ல எனக்கு பிடிச்ச மாதிரி செட் பண்ணேன். இதெல்லாம் உங்களுக்கு போர் அடிக்கிற விசயம். வாங்க சாப்ட போலாம்.”



“சரிங்க சித்தப்பா”



கபிலன் பெருமூச்சுவிட்டான். “அப்பாடா என்னய வச்சு செஞ்சிருவாருன்னு நெனச்சேன். தப்பிச்சேண்டா சாமி…”, மனதுக்குள் மகிழ்ந்தான்.

.

விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. புதுமணத்தம்பதிகள் ஆவலாய், சுவைத்து உண்டனர்.



சிறிது நேரம் பேசிக்கழித்தார்கள். கபிலன் உண்ட மயக்கத்தில் தூங்கவேண்டுமென்றான். மாமா அழைத்துச்சென்றார். சங்கவை அத்தையுடன் அளவளாவிக்கொண்டிருந்தாள்.

.

மாலையில் கபிலனும், சங்கவையும் விடைபெற்றுக் கிளம்பினர். கார் கிளம்பியது.



“நேரம் போனதே தெரியலேல, சங்கவி!”.



“சாப்டு நல்லா குப்புற அடிச்சு தூங்கிட்டு, ஏன் சொல்லமாட்ட”. சங்கவி அவனை கெலி செய்ய இருவரும் சிரித்து மகிழ்ந்தனர்.



“சங்கவி எனக்கொரு ஆசை. செய்வியா?”



“என்ன சொல்லு. கண்டிப்பா உனக்கு பிடிச்சத செய்றேன்”



கபிலன் ஒரு வினாடி காரின் ஜன்னல் வழியே, வெளியே வெகுதொலைவில் பார்க்கிறான்.

அவனுக்கு நிலாவின் ஒருவம் நிழலாடுகிறது. உள்ளே சட்டென திரும்பியவன், நிலாவின் நினைவாக அவள் விருப்பத்தை, அவன் விரும்புவதாகச் சொல்கிறான்,.



“ஒரு குழந்தையை தத்தெடுத்து, முதல் குழந்தையாக வளர்க்கனும்னு ஆசை. உனக்கு ஓகே வா?”



“ரொம்ப பெரிய விசயம்தான். எப்டி செய்ய முடியும்னு தெரியல. ஆனா, உனக்கு பிடிச்சனால செய்றேன்”



சங்கவை சொல்ல, கபிலன் மனநிறைவில், மீண்டும் காரின் வெளியே தூரமாய்ப் பார்த்துப் புன்னகைக்கிறான்.



சங்கவை தன்னுள் நமட்டுச்சிரிப்புச் சிரித்தாள்.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-23
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 24



(இக்கதையின் ஆரம்ப அத்தியாயம் தொடர்கிறது)



2020 மே,. மாலை 4 மணி.



சிகப்பு நிற மகிந்திரா TUV300 சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. சாலையில் கவனமாக இருந்தார் டிரைவர்.



அளவெடுத்து தைத்ததுபோன்ற ரெடிமேட் முழுக்கைச் சட்டையும், ஃபாஸ்டிராக் வாட்சும், அணிந்திருந்தான், பின்சீட்டில் உட்கார்ந்திருந்த, கபிலன். திருத்தமாய் வெட்டிய தாடியும், கறுப்பு நிற ஃப்ரேம் மூக்குக் கண்ணாடியும், கலங்கியிருந்த கண்களை மறைக்கவில்லை.

குறுக்கே கையை நெஞ்சோடு பிணைத்திருந்தான். எகிறிக்கொண்டிருந்த இதயத்துடிப்பை நிலைப்படுத்த முயன்றானோ, என்னவோ. ஆழ்ந்த சிந்தனையில், நிலைகுத்திய பார்வையுடன், வெளியில் வெரித்தபடி இருந்தான், கபிலன்!.




அருகில், அவனுக்கு முற்றிலும் நேரெதிராக, ஆனந்த மனநிலையில் அவன் மனைவி சங்கவை. காட்டன் சல்வாரில், ஜரிகை வேலைப்பாடுடன்கூடிய புத்தாடை அணிந்திருந்தாள். அன்றைக்கு அவள் பெறப்போகும் பேர், அப்படியான பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையில் அவளை வைத்திருந்தது. எதிர்ப்புற ஜன்னல் வழியே கிராம வழிகளை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், அந்தக்கிராமச் சூழல், அந்த தகிக்கும் வெயிலிலும் ரம்மியமாக இருந்தது, சங்கவைக்கு!.

கபிலனின் மனநிலை அவளுக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை.




"தங்ககூண்டு கிராமம் - நாகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்" மங்கிப்போன மஞ்சள் நிற, பெரிய சிமெண்ட் பெயர்ப்பலகை, பெரிதாய் சிதலமடைந்திருந்தாலும், எழுத்துக்கள் பளிச்சென கவனம் ஈர்த்தன. அந்த பெயர்ப்பலகை அந்தக்கிராமச் சாலையோரம், சட்டென்று கடந்துபோனது. அது தன்னுடைய கடந்தகாலத்தை நினைவுபடுத்த, அதில் மூழ்கி, உறங்கிப்போயிருந்த கபிலனை எழுப்பினாள், மனைவி சங்கவை.



தன் முதல் காதல் வாழ்க்கையை மீண்டும் கனவில் வாழ்ந்து திரும்பிய கபிலன், விழித்துப்பார்த்தபோது, அவன் கனவு ஆரம்பித்த அதே குழந்தைகள் காப்பக பெரிய கதவின் முன்பு TUV300 காரை ட்ரைவர் நிறுத்தியிருந்தார்.

.



குழந்தைகள் காப்பகம்



வரவேற்பறையில் கபிலனும், சங்கவையும் காப்பக மேலாளர் வருகைக்காகக் காத்திருந்தனர். வரவேற்பறையின் உட்சுவர் முழுவதும் குழந்தை தத்தெடுப்பதிலுள்ள நெறிமுறைகள், நோக்கத்தின் பயன் என பல குறிப்புகள் எழுத்துக்களாகவும், புகைப்படங்களாகவும் நிறைந்திருந்தன. கபிலனும், சங்கவையும் அந்த நெறிமுறைகளைப் பின்பற்றியே ஒரு வருடங்கள் காத்திருந்து குழந்தையை பெற்றுக்கொள்ள வந்திருந்தனர்.



காப்பகமேலாளர் ராமலிங்கம் வரவேற்பறைக்கு வந்தார்.



“வாங்க கபிலன். நல்ல இருக்கீங்கெளா. வாங்கம்மா”



கபிலனை அடையாளம் தெரிந்து விசாரித்தவர். சங்கவையையும் வரவேற்றுவிட்டு, கபிலன் கண்களை சில வினாடிகள் பார்த்தார். சங்கவைக்கும், கபிலனுக்கும் மாறி மாறி அவர் பார்வை ஓடியது. அதில் நிலாவுடன் அவன் முதன் முதலில் இதே காரணத்துக்காக விசாரிக்க வந்ததும், நிலாவுடன் திருமணம்முடிந்தவுடன் அங்கே வருவதாகச் சொன்னதும் கேள்வியாக ஓடியது.



கபிலன் தலையைக்கவிழ்த்துக்கொண்டான். சில வினாடிகள் மௌனத்திற்குப்பின்,

“இருக்கேன் சார். நீங்கெ எப்டி இருக்கீங்கெ. இங்க குழந்தைகளுக்கெல்லாம் வேண்டியத செய்யமுடியுதா, சார்.” கபிலன் கரிசனையாகக் கேட்டான்.



“உங்கள மாதிரி நல்ல உள்ளங்கள் இருக்குறப்போ எங்களுக்கு என்ன கவலை, கபிலன்”. பணிவாக பதில் சொன்னார், ராமலிங்கம்.



அங்கே இருந்த காப்பக பணியாளரிடம், கபிலன்-சங்கவை தேர்ந்தெடுத்த குழந்தையை செவிலித்தாயிடம் சொல்லி அழைத்துவருமாறு பணித்தார். கபிலனைப் மீண்டும் பார்த்து புன்னகைத்தார்.



கபிலனுக்கு அந்த புன்னகையின் அர்த்தம் விளங்கவில்லை. மனதுக்குள் கேள்விகளுடன் அமர்ந்திருந்தான்.



சிறிதுநேரம் கடந்து காப்பகத்துக்குள்ளிருந்து செவிலித்தாய், ஒரு வயதுப்பெண் குழந்தையுடன் வரவேற்பறைக்குள் வந்தாள்.



இருகைகளையும் கோர்த்து நாடியில் முட்டுக்கொடுத்துச் சிந்தனையுடன், பார்வையைத் தரையில்பதித்து அமர்ந்திருந்த கபிலன், உள்ளே வந்த குழந்தையையும், செவிலியயையும் கவனிக்கவில்லை.



அவன் மனைவி சங்கவிதான் முதலில் கவனித்தாள். கபிலன் தோளில்தட்டி குழந்தைவந்ததை சைகையால் உணர்த்தினாள்.



மெதுவாகத் திரும்பிப்பார்த்தான், கபிலன். பார்த்தகணத்தில் அவன் கண்கள்கலங்கி கண்ணீர் வழியஆரம்பித்தது. புருவங்கள் சுருங்கின. உதடுகள் ஏதோ சொல்லத்துடித்தன. அப்படியே மெதுவாக எழுந்து நகராமல் நின்றான்.



சங்கவியும், கபிலனைப்பார்த்து புன்னகையுடன் கண்கலங்கினாள். அவன் தோளில் அனுசரணையாக உள்ளங்கையால் தடவிக்கொடுத்தாள். கபிலன் கலங்கிய கண்களுடன் சங்கவியை மெதுவாகத்திரும்பிப் பார்த்தான். அவள் அவனுக்குப் பரிவுடன் ஒரு புன்னகையை உதிர்த்து, அவன் விரும்பிய தத்துப்பிள்ளையை போய்த்தூக்குமாறு கண்களால் சொன்னாள்.



குழந்தையைக்கண்டு கபிலன் உணர்ச்சிவசப்படுவதாய் சங்கவி அவனுக்கு ஆறுதல்காட்ட, கபிலன் மீண்டும் குழந்தையின் பக்கம் திரும்பி நடக்கும்பொழுது, அந்தச்செவிலியை கண்ணுக்குக்கண் பார்த்து உதட்டில் பூரிப்பும், கண்களில் ஆனந்தகண்ணீருமாய் நெருங்கினான்.



அங்கே செவிலியாய், கபிலனின் நிலா நின்றிருந்தாள்!.



வெளிர்ச்சந்தனநிற புடவை. அதில் உடல் பாகம் முழுதும் பனையோலைபோன்ற வடிவத்தில் மயில்நீல நிறத்தில் பரவலாக நெய்யப்பட்டிருந்தது. மயில்கழுத்து நிற பார்டர். திருத்தமாய்க்கட்டியிருந்தாள் அந்த காட்டன் புடவையை. தளர்வாகக்கட்டிய ஒற்றைச்சடை பின்னியதலையில், ஒரு ரோஜா ரத்தச்சிவப்பு நிறத்தில். நெற்றியில் புள்ளியாய் ஒரு பொட்டு, கருநீலத்தில். இரு கைகளிலும் அதே மயில்நீல நிற வளையல்கள். மயில்போலவே நின்றிருந்தாள், நிலா.



கபிலனுக்கு எல்லாம் அசையாமல் நின்றதுபோல ஒரு உணர்வு. அங்கே அமர்ந்திருந்த காப்பக மேலாளரைஒ பார்த்தான். பின்னால் சற்று தள்ளி நின்றிருந்த சங்கவையைப் பார்த்தான். தரையைப் பார்த்தான். அடிமேல் அடிவைத்து நிலாவை நெருங்கினான்.



நிலா எந்தவித சலனமும் இன்றி மென்மையாக புன்னகைமுகத்துடன், கபிலனின் கண்களைப் பார்த்துகொண்டேயிருந்தாள்.



அருகே சென்றவன் நிலாவின் இரு கண்களையும் மாறி மாறிப் பார்த்தான். கைகள் பரபரத்தது.



அவள் தலையை இடப்புறமாக மெதுவாகச் சாய்த்து, கைகளை மார்பின் குறுக்காய்க்கட்டி, உதடுகுவித்து, வாய்திறக்காமல் புன்னைத்து, இரு புருவங்களையும் உயர்த்தி, “இது எப்டி இருக்கு”, என்பதுபோல் பார்த்தாள்.



“நீ எப்டிடீ இங்க??”



“எப்டி… டீயா”??



“இவ்ளோநாள் எங்கடீ… இருந்த?”



“பார்றா.. திரும்பவும் டீ..ங்றத. விட்டா கட்டிப்புடிச்சு முத்தம்லாம் குடுப்ப போல”



“பின்னாடி என் வொய்ஃப் மட்டுமில்லேனா கண்டிப்பா கட்டிப்பிடிச்சிருப்பேன்”



“ம்ம்… இன்னும் ல்வ்ஸோடதான் இருக்கபோல”



“நீ இங்க எப்போ வந்த?. உன் ஹஸ்பெண்ட் இங்கதான் இருக்காறா?”



“நான் வந்துரொம்ப நாளாச்சு. இப்ப என் ஹஸ்பெண்ட. இங்கதான் இருக்கார்”.

கபிலனுக்குப் பதில் சொல்லிவிட்டு குறும்பாய்ச் சிரித்தாள்.



அப்படியே கபிலனுக்கு பின்னால் பார்வையைத்திருப்பி தூரத்தில் நின்றிருந்த சங்கவையை ஒருவிநாடி பார்த்தாள். அவர்களுக்கிடையே நிலாவின் புடவையைப்பிடித்தபடி நின்றிருந்த குழந்தை நடப்பதுபுரியாமல் எங்கோ வேடிக்கை பார்த்தபடி இருந்தது.



“நான் உன் ஹஸ்பெண்ட இப்ப பாக்கலாம?”



“நீ நெனச்சா எப்பவும் பாக்கலாம்”



“என்ன சொல்ற, நிலா?”



“நடக்குறதான் சொல்றேன்”



“என்னடி உளர்ற”



“உன் மூஞ்சிய கண்ணாடில பார்த்ததில்லையா?”. கபிலனிடம் சொல்லியவள் மீண்டும் குறும்பாய்ச் சிரித்தாள்.



“என் மூஞ்…”



கேள்வி கேட்க முயன்றவனுக்கு நிலா சொன்னது அப்போதுதான் உரைத்தது. அப்படியே வாயடைத்துப்போனான். சட்டென திரும்பி மேலாளர் ராமலிங்கத்தைப் பார்த்தான்.



அவர் நிலா சொன்னதையும், கபிலன் புரிந்துகொண்டதையும் ஆமோதிக்கும்வண்ணம் கண்ணைமூடி தலையைமேலும் கீழும் அசைத்தார்.



கபிலன் திரும்பி சங்கவையைப் பாத்தான். அவள் அங்கே நடப்பது எதையும் அறியாமல் புன்னகையுடன் நின்றிருந்தாள். கபிலன் மீண்டும் நிலாவைப்பார்த்தான்.



கண்கலங்கியது கபிலனுக்கு. நிலா எந்த கவலையையும் கண்ணில்காட்டாமல் புன்னகைத்தபடியே நின்றாள்.



“என் ஃப்ரெண்ட்ஸ் நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊரவிட்டுப் போனதா, சொன்னாங்கெலே?!”



“அமுதன், மாறனுக்கு அப்படிதான் நான் மெசேஜ் பாஸ் பண்ணேன்”



“ஏன்?”



“ஏன்னா.. உன்மேல கோவம். நீ என் பிரச்சனைய கவனிக்கலனு நெனெச்சேன்.”



“நீ அவசரப்பட்டுட்ட, நிலா”



“ஆமா, முதல்ல நான் அவசரப்பட்டேன். நீ நிதானமா யோசிச்ச. அப்புறம் நான் நிதானமா யோசிச்சேன், நீ அவசரப்பட்டுட்ட”. மீண்டும் கபிலனுக்கு பின்னால் பார்வையைத்திருப்பி தூரத்தில் நின்றிருந்த சங்கவையை பார்த்தாள். சங்கவை வேறெங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்.



“இங்க எதுக்கு வந்த? உன்னோட ஆசப்படி அனாதைகுழந்தைகள பாத்துக்குறதுக்கா?”



“இல்ல.. நம்ம பிள்ளைய வளக்குறதுக்கு”. சொல்லிவிட்டு நிலா தன் அருகே நின்றிருந்த குழந்தையின் தலையை வருடினாள்.



“நம்ம பிள்ளையா?!. கபிலன் நம்பமுடியாமல் முழித்தான்.

.



நாம் கபிலனைத் தொடர்வோம்-24
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 25



“என்னடி சொல்ற. எப்டி நமக்கு குழந்த?!” கபிலன் மீண்டும் கேட்டான்.

“நம்ம லவ் எபிசோட்ல இதுவரைக்கும் நானும் சரி, நீயும் சரி, நாம மிட்பண்ணாம ஒரு வருஷம் இருந்தததான அதிகமா எல்லார்ட்டயும் சொல்லிருப்போம். அதுக்கப்புறம் நாம பைக்ல ஊருக்கு வெளிய சுத்துனத சொல்லிருக்கமாட்டோம். அதுலயும் அன்னைக்கு, எனக்கு மாப்ள பாக்குறாங, நீ எங்க வீட்டுல பேசனும்னு நமக்குள்ள பிரச்சனைவந்து நாம பிரிஞ்சிரலாம்னு சொன்னேன். அன்னைக்கு ஒருதடவ தனியா பேசுவோம்னு பைக் எடுத்துட்டு யாருக்கும் சொல்லாம வெளிலபோனோம். அன்னைக்கு ஹோட்டல்ல தங்குனோம். அதெல்லாம் நாம யார்ட்டயும்சொல்லல. இப்ப இதோ… ஒரு பொண்ணு.. நம்ம பொண்ணு நிக்கிறா.”



கபிலன் செய்வதறியாது சில விநாடிகள் நின்றான். நிதானமாகக் குழந்தையைத் தூக்கினான். குழந்தையை தலைமுதல் கால்வரை பரிவாய்ப் பார்த்தான்.



“அப்டியே உன்ன மாதிரிதான்டா இருக்கா”. நிலா மனம்திறந்து சொன்னாள்.



கலங்கிய கண்களுடன் இருந்த கபிலன். சிறிதாய்ப் புன்னகைத்தான்.



“இப்ப நான் என்ன பண்றது”?



“வந்த வேலையைப் பாரு... ஏதோ ஒரு குழந்தைய தத்தெடுக்கதான வந்த. இப்போ உன் குழந்தையே கிடச்சிருச்சு. சந்தோஷமா தூக்கிட்டு போ”



“நான் இங்க குழந்தைக்காக வருவேன்னு நெனச்சியா?”



“கண்டிப்பா நீ இங்க வருவேன்னு தெரியும். ஆனா நீ கல்யாணமான உடனே முதல் குழந்தைக்கே இங்க வருவனு சத்தியமா எதிர்பாக்கல. நம்ம குழந்த குடுத்துவச்சவ. அவ அம்மா மாதிரி அநாதையா நிக்காம, அப்பா குடும்பத்தோட சீக்கிரமே சேர்ந்துகிட்டா”. மீண்டும் அழகாய்ச் சிரித்தாள், நிலா.



அந்தச் சிரிப்பில் கபிலன் மனம் நொறுங்கிப்போனான். நிலா நிதானமாய்ச் சிரித்தபடியே இருந்தாள்.



“சரி நேரமாச்சு. எல்லா ஃபார்மாலிட்டியையும் முன்னாடியே முடிச்சு வச்சுட்டேன். எதும் இனியிருந்தாலும் அத நானே பாத்துக்குறேன். ராமலிங்கம் சாருக்குதான் நம்மள நல்லா தெரியுமே. நீ குழந்தைய தூக்கிட்டு போ. உன் வொய்ப் ரொம்ப நேரமா தனியா நின்னுட்ருக்காங்க. நான்போய் என் வேலய பாக்குறேன்.”



சொல்லிவிட்டு காப்பகத்தின் உள்ளே செல்லத் திரும்பினாள்.



“நிலா…”



கபிலன் சன்னமான குரலில் கூப்பிட, நிலா அப்படியே நின்றாள் ஒரு கணம். தலை கவிழ்ந்தே இருந்தாள். திரும்பிப்பார்க்கவில்லை. அவள் இரு கைகளின் ஆட்காட்டி விரலும், கட்டை விரலும் சேர்ந்து சேலையின் முந்தானை முனையை சுருட்டிக்கொண்டிருந்தன. மனம் படபடத்தது.



“நிலா… நான் எப்டி போறது?!”



முந்தானை முனையை சுருட்டிக்கொண்டிருந்த நிலாவின் விரல்கள் சட்டென்று நின்றன. திரும்பிய திசையிலேயே தலையைமேலே நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் கலங்க தொடங்கிய தருணம், நீண்ட பெருமூச்சு விட்டு சரிசெய்தாள். மெதுவாகத் திரும்பி, கபிலனின் கண்களைப்பார்த்தாள்.



கபிலன் தலையை கவிழ்த்துக்கொண்டான். குழந்தை அவன் தோள்களில் சாய்ந்துகொண்டு அந்த அறையைச்சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தது. காப்பாளர் ராமலிங்கம் கபிலனையும் நிலாவையும் பார்த்துகொண்டேயிருந்தார்.



“கபிலா, நான் என்ன வேணும்னு நெனக்கிறேனு உனக்கும், நீ என்ன வேணும்னு நெனக்கிறேனு எனக்கும் நல்லாத் தெரியும். ஆனா அதெல்லாம் செய்ற நெலயில இப்ப நாம இல்ல. முக்கியமா உன்னால இப்ப அது முடியாது. அதுக்கும் நாந்தான் முழுக்காரணம். அதனால நீ நம்ம குழந்தைய தூக்கிட்டு நிம்மதியா போ. நான் இங்கயேதான் இருப்பேன். முடிஞ்சா, குழந்த பிறந்தநாள், தீபாவளி, பொங்கல்னு விசேஷ நாள்ல நம்ம குழந்தையோட இங்க வந்துட்டுபோ. நான் எப்பவும் உங்க ரெண்டுபேருக்காகவும் இங்கயே இருப்பேன். நீ கெளம்பு, ரொம்ப டைம் ஆச்சுடா.”



அன்பாகவும், உறுதியாகவும் சொன்ன நிலா திரும்பி விறுவிறு என்று காப்பகத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள். அதுவரை தேக்கிவைத்திருந்த கண்ணீர் முகத்தில் வழிந்தோடியது, நிலாவுக்கு.



கபிலன் காப்பாளரிடம் சொல்லிவிட்டு மனைவியுடன் கிளம்பினான். சங்கவை அவனுக்கு ஆறுதலாய் குழந்தையின் தலையைக்கோதிவிட்டு உடன் நடந்தாள். அவர்கள் வந்த கார் காப்பகத்திலிருந்து புறப்பட்டது.



குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சீட்டில் தலையைச் சாய்த்து, சரிந்து அமர்ந்திருந்த கபிலன், ஏதோ நினைத்தவனாய் சட்டென்று காரின் ஜன்னல்வழியே காப்பகத்தைப் பார்த்தான். அங்கே மொட்டைமாடியில் நின்றிருந்தாள், நிலா.



இருவரின் உருவமும் அவரவர் கண்ணில் கரையும் வரை, கபிலனும், நிலாவும் ஒருவரையொருவர் தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர்.



அந்த நேரத்தில் சங்கவை தங்கள் கல்யாணத்திற்கு மறுநாள் தாய்மாமன் வீட்டிற்கு விருந்திற்கு சென்றதை நினைவுகூர்ந்தாள்.

.



கபிலன்-சங்கவை திருமணம் முடிந்த மறுநாள்...



விருந்திற்காக சங்கவையின் தாய்மாமன் லீடிங் சைக்காலஜிஸ்ட் வீட்டில் கபிலனும், சங்கவையும் சென்றிருந்தனர்.



விருந்து சாப்பாடு பரிமாறப்பட்டது. புதுமணத்தம்பதிகள் ஆவலாய், சுவைத்து உண்டனர்.



சிறிது நேரம் பேசிக்கழித்தார்கள். கபிலன் உண்ட மயக்கத்தில் தூங்கவேண்டுமென்றான். மாமா அழைத்துச்சென்றார். சங்கவை அத்தையுடன் அளவளாவிக்கொண்டிருந்தாள்.



கபிலனை தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்றார். அவனுடன் இயல்பாகப் பேச்சுக்கொடுத்து அவனை ஆழ்ந்ததூக்கத்தில், மன விழிப்புடன் இருக்கச்செய்தார்.



“சொல்லுங்க உங்க பேர் என்ன?” சக்காலஜிஸ்ட் மாமா கேட்டார்.



கண்ணை மூடியிருந்த கபிலன், கேள்வியைக் கேட்டுச் சிரித்தான்.



“தங்கள் மருமகள், இளையபிராட்டி குந்தவையை நான் விரும்புகிறேன் எனத் தெரிந்து, எனக்குக் கைப்பிடித்துக்கொடுத்து, தங்கள் அரண்மனைக்கு விருந்துக்கும் அழைத்து, உண்ட களிப்பில் இருக்கும் இந்த வல்லவன் வந்தியதேவனை சோதிக்கிறீர்களா, சிற்றப்பா?”.



பதில்சொன்ன கபிலன் மீண்டும் பலமாய்ச் சிரித்தான். கண்கள் மூடி அவன் சோழராஜ்ஜியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தான்.



கபிலனின் பதிலை சற்றும் எதிர்பார்க்காத சங்கவையின் மாமா சற்று திகைத்துப்போனார். இப்படி இருவேறு வரலாற்றுக் காலங்களை இணைக்கும் ஒரு நபரை அவருடைய சைக்கிரியாட்டிக் கேஸ்களில் அதுவரை கண்டதில்லை.



சங்கவை மாமா தன்னை சமநிலைப்படுத்திக்கொண்டு மீண்டும் கபிலனுடன் உரையாடலைத் தொடர்ந்தார்.



சைக்கோ டாக்டரிடம் கபிலன் தன்னை வல்லவனாக வெளிப்படுத்தி, நிலாவுடனான நடந்த முதல் காதல்கதை முழுவதையும், சோழநாட்டில் நடந்ததாகச் சொல்லி முடித்தான்.



கபிலன் முகம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பிரகாசமாகவும், தெளிந்தும் இருந்தது. கபிலனை உறங்கச்செய்துவிட்டு வெளியில் வந்தார் மாமா. சங்கவை அறையின் வாயிலிலேயே காத்திருந்தாள்.

.



“என்ன மாமா, அவரு கல்யாண சடங்குளெல்லாம், வேறொரு ஆள் மாதிரி நடந்துக்கிட்டாருன்னு நான் சொன்னனே. அது கரெக்டா? உங்களுக்கு எதாவது தெரிஞ்சுதா?”



“கரெக்ட் மா”. மெலிதாய்ப் புன்னகைத்தார் மாமா.



சங்கவை மனம் கலவரப்பட்டது.



“என்ன மாமா. என்ன சொன்னாரு… நீங்க என்ன கண்டுபுடிச்சீங்கெ?”



“பயப்படுறதுக்கோ, கவலப்படுறதுக்கோ ஒன்னும் இல்லமா.



அவர் மனப்பிறழ்வு ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார், இது பல்வகை ஆளுமை நோய்களில் உலகின் மிகவும் அரிதான மனநோய். இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஒவ்வொரு ஆளுமைக்கும் தனித்த சிந்தனை,தனி அடையாளம் கொண்டிருப்பார்கள். தொடர்பறு அடையாளப் பாதிப்பு (Dissociatiative identity disorder-DID) என்பது இந்த பாதிப்பின் இன்னொரு அம்சம். இந்த ஆளுமை நோய்பாதிப்பு நிலையில் உள்ளவர்கள், பேசும்போது தன்னையே வேறு ஒரு நபர்போலப் பாவித்து பேசுவார். பல விசயங்களை நினைவிலிருந்து மறந்துவிடுவர். காலமறதி ஏற்படும். அதாவது இரண்டு காலகட்டத்திலும் குறிப்பிட்ட சில நாட்களை மறந்துவிடுவார்கள்.

ஆளுமை மாற்றம் நிகழும்போது, புதிய ஆளுமைக்கு ஒரு தனித்துவமான வரலாறு, புதிய அடையாளம் மற்றும் வெவ்வேறு மொழி அல்லது பேச்சுவழக்கில் மாற்றிப் பேசுவர்.


.



என்னோட அனுபவுத்துல, உங்க கல்யாணத்தோட அவருக்கு இருந்த நிராசைகள் எல்லாம் சரியாயிடுச்சு. அதோட என்ட இன்னைக்கு தெளிவா எல்லாத்தையும் சொல்லிட்ட திருப்தில, எந்த மனஅழுத்தமும் இல்லாம அவர் தூங்குனத நான் ஃபீல் பண்ணேன்.



இன்னும் எதாவது அவரோட ஆசைன்னு, யாரும் ஈஸியா யோசிக்காத, செய்யாத விசயத்தை செய்யனும்னு அவர் உன்ட சொன்னா, அது இந்த காலத்துல செய்யமுடியுற காரியம்னா, அதமட்டும் செஞ்சிரு. அப்படி எதுவும் இருந்தா, அத நீங்க செஞ்சுட்டா, அது கபிலன் ஆழ்மனச முழுசா சரிபண்ணிரும். அதுதான் நாம கபிலனுக்கு கொடுக்குற கடைசி மருந்தா இருக்கும்.”



“கண்டிப்பா செய்றேன் மாமா”. சங்கவை மகிழ்ச்சியும், திருப்தியும் கலந்து பதிலளித்தாள்.

.



மாலை வீடு திரும்பும்போது, நேரம் போனதே தெரியவில்லை என கபிலன் சொல்ல மதியஉணவுக்குப்பின் கபிலன் நன்கு தூங்கியதாய்ச் சொல்கிறாள், சங்கவை. அந்த உறக்கம் சைக்கோ டிஸ்கஷனுக்கானது என அவனறியாமல் இருக்க, கபிலன் விருந்துண்ட மயக்கத்தில் உறங்கிப் போனதாய் சங்கவை சொல்ல, இருவரும் சிரிக்கிறார்கள்.

.




கபிலன் வெளிப்படையாகச் சொல்லாமல், ஆனால் நிலா ஆசைப்பட்டதன் நினைவாக, அவள் விருப்பமான, ஒரு குழந்தையை தத்தெடுத்து, முதல் குழந்தையாக வளர்க்கும் ஆசையை சங்கவையிடம் சொல்கிறான்.



சங்கவை அவன் நிலாவை நினைத்துச் சொல்கிறான் என்பதையும், தத்தெடுப்பது நல்ல காரியம் என நினைத்தும், அது கபிலனுக்கு மனதளவில் ஆறுதலாகவும், அவனுடைய பிறழ்மன நோயுக்கு முழுமையான குணமாகவும் அமையும் என டாக்டர் மாமா சொன்னதையும் நினைத்து, நமட்டுச்சிரிப்புடன் அதற்கு இணங்குகிறாள்.

.



குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்த சங்கவை, "பாப்பாக்கு என்ன பெயர் வைக்கலாம்" எனக்கேட்க, கபிலன் "நிலா" என்கிறான்.



கபிலனின் தோள்சாய்ந்து கரம்பற்றி, சங்கவை ஆறுதலாய்ப் புன்னகைக்க, கபிலன் கண்களில் நீர் திரள்கிறது. நெஞ்சில் சாய்ந்திருந்த குழந்தை நிலாவை அரவணைத்தபடி, அப்படியே கார்சீட்டில் சாய்ந்து ஜன்னல் வழியே பார்வையை செலுத்தினான்.



"தங்ககூண்டு கிராமம் - நாகர் கோவில், கன்னியாகுமரி மாவட்டம்" மங்கிப்போன மஞ்சள் நிற, பெரிய சிமெண்ட் பெயர்ப்பலகை, சிதலமடைந்திருந்த எழுத்துக்கள் என்றாலும் கபிலனின் கவனத்தைமட்டும் பளிச்சென ஈர்த்தன. அந்த பெயர்ப்பலகை அந்தக்கிராமச் சாலையோரம், மறுபடியும் அவர்களைக் கடந்துபோனது. நீர்திரண்டிருந்த கபிலனின் கண்கள், கடந்து சென்ற பெயர்ப் பலகையை திரும்பிப்பார்த்தது மீண்டும் ஒருமுறை.

.

அங்கே இருசக்கர வாகனத்தை ஓட்டிய கபிலனும், அவனைக் காதலோடு கட்டியணைத்தபடி வந்திருந்த நிலாவும், அவள் அரவணைப்பில், பரவசமாய் ஓட்டிய வண்டியை, பள்ளம் பார்க்காமல்விட்டதால், அந்த ஊர்ப்பெயர்ப்பலகையில் மோதி தடுமாறி நின்றனர்.

.

கபிலனின் நிலாவுக்கு மட்டும்,

அமாவாசை இல்லை - என்றும்

பௌர்ணமிதான்!

.

நாம் கபிலனுக்கு விடைகொடுப்போம்-25

-வணக்கம்-
 

Latest posts

New Threads

Top Bottom